குரூப் 1, குரூப் 2 போன்ற போட்டித் தேர்வுகளில் நடக்கிற சிலமுறைகேடு களை மையமாக வைத்து உருவானதுதான் இந்த கதை இது. “ஒரே ஒரு தேர்வு… ஆனால் பலரின் வாழ்க்கையை மாற்றும் போராட்டம்!”
கல்வி, போட்டித் தேர்வு, பெற்றோரின் எதிர்பார்ப்பு, மாணவர்களின் மனஅழுத்தம் — இவற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள வெப் சீரிஸ் தான் Exam. சாதாரணமாக ஒரு “எக்ஸாம் டிராமா” போல தோன்றினாலும், இதன் பின்னால் இருக்கும் சமூக அழுத்தங்களையும், மாணவர்கள் எதிர்கொள்ளும் மனநிலையையும் மிகவும் நெருக்கமாக காட்டுகிறது. ஒரு முக்கியமான போட்டித் தேர்வை எழுத தயாராகும் சில மாணவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து கதை நகர்கிறது. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு பின்னணி, குடும்ப சூழல், கனவு மற்றும் அழுத்தங்கள் இருக்கின்றன.ஒருவருக்கு குடும்பத்தின் நம்பிக்கை, மற்றொருவருக்கு வாழ்க்கையை மாற்றும் கடைசி வாய்ப்பு, இன்னொருவருக்கு சமூக அழுத்தம்.இந்த எல்லா உணர்வுகளும் சேர்ந்து தேர்வு மையத்தில் வெடிக்கும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
துஷாரா விஜயன், அப்பாஸ், அதிதி பாலன் ஆகியோர் இந்த வெப் தொடரில்முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். துஷாரா விஜயன்தனது கதாபாத்திரத்தை நேர்த்தியாக செய்திருக்கிறார்.ஆனால், இந்தக் கதைக்கு அவர் எந்த மிகுந்த அளவிற்கு பொருந்துகிறார்என்ற கேள்வி எழுகின்றது. அதிதி பாலன் போலீஸ் அதிகாரிகதாபாத்திரம் என்றாலும், பாதி தொடர் ஒரு பத்துக்கு பத்து மேற்பட்ட அறைக்குள்ளே கடத்தப்பட்டநிலையில் முடிகின்றது அப்பாஸ் ஒரு கதாபாத்திரத்தில் இன்னும் ஓரு அழுத்தமாக நடிக்க வைத்தியிருந்தால். இன்னும் வலுவாக இருந்திருக்கலாம். தேர்வுமுறை கேடுகளை மட்டும் தெளிவாக பேசியிருந்தால் கதைக்கு சிறப்பாக அமைந்திருக்கும்.
Chennai, May 06 2026: SRM Institute of Science and Technology, Ramapuram launched the Mission Mausam Urban Testbed and observational facilities, developed by Indian Institute of Tropical Meteorology under the Ministry of Earth Sciences, at its Ramapuram campus in Chennai on Wednesday.
The Urban Testbed, the only such facility in the Chennai region, will monitor aerosols, clouds, precipitation, atmospheric dynamics, and thermodynamic parameters across the city to enhance monsoon prediction, nowcasting, and early warnings of severe weather.
Mission Mausam, an initiative of the Ministry of Earth Sciences, aims to enhance disaster preparedness and strengthen climate services for key sectors such as agriculture, water resources, aviation, and energy, with the goal of making India a weather-ready and climate-smart nation.
The Urban Testbeds, established by IITM (Indian Institute of Tropical Meteorology, (An autonomous Institute under the Ministry of Earth Sciences, Govt. of India) Pune, feature dense surface observations through automatic weather stations, along with volumetric measurements using radars and profilers that track wind, temperature, relative humidity, aerosols, clouds, and precipitation. These datasets enable researchers to better understand atmospheric dynamics, thermodynamics, and physio-chemical processes driving severe weather, while also supporting accurate nowcasting solutions.
Dr. M. Ravichandran, Secretary, Ministry of Earth Sciences, inaugurated the facility in the presence of Dr. A. Suryachandra Rao, Director, IITM, Pune; Dr. R. Shivakumar, Chairman, SRMIST, Ramapuram ,Chennai & Trichy ; Dr. Thara Prabhakaran, Project Director, IITM; and Dr. M. Sakthi Ganesh, Dean (E&T), SRMIST, along with directors and heads of partner institutions.
The event also marked the inauguration of SRMIST’s Centre for Atmospheric Sciences Research and Innovation, along with the signing of an MoU between SRMIST and IITM, a premier central government institute engaged in fundamental research in weather, monsoon, and climate sciences. The MoU will facilitate collaboration in research and academic activities in the field of weather and climate sciences.
In his comments, Dr. Shivakumar said, “We are proud to host the Chennai Urban Testbed and an urban aerosol observational facility at SRM Institute of Science and Technology, Ramapuram, and we thank IITM and the Ministry of Earth Sciences for choosing SRMIST for this important national initiative. Our Ramapuram campus is strategically located within Chennai’s urban landscape to document urban aerosol properties.
The Urban Testbed will serve as a representative site, supporting urban weather services and strengthening nowcasting and forecasting, particularly kilometre-scale models. This partnership and the new facilities will significantly enhance research capabilities, foster academic collaboration, and advance understanding of weather and climate, enabling innovative, multidisciplinary applications that will benefit Chennai and beyond.”
Dr. Sakthi Ganesh added, “Urban areas face increasing challenges from severe weather, with greater population exposure and impact across critical service sectors. Mission Mausam seeks to address these challenges by integrating observations, numerical models, Artificial Intelligence and Machine Learning, along with social sciences, within a collaborative ecosystem. The Urban Testbed at SRM Institute of Science and Technology, Ramapuram, will play a vital role by generating high-resolution, location-specific data on key meteorological parameters.
This will significantly improve nowcasting and forecasting, particularly in densely populated urban environments like Chennai, and support better preparedness for extreme weather events. The facilities will also offer valuable opportunities for our students and research scholars to undertake advanced research and academic projects.”
நடிகர் டொவினோ தாமஸ் நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் தமிழ் பதிப்பிற்கான பத்திரிகையாளர் சந்திப்பு
வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் மற்றும் சி கியூப் ப்ரோஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் தயாராகி, ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் தமிழ் பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இப்படத்தில் டொவினோ தாமஸ், கயாடு லோஹர், விஜயராகவன், பாபு ராஜ், அலெக்சாண்டர் பிரசாந்த், சுதீர் கராமனா, டி.ஜி.ரவி,, ஜான் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசைமமைத்திருக்கிறார். 1957ஆம் ஆண்டின் பின்னணியில் கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் மற்றும் சி கியூப் ப்ரோஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் நௌஃபல், பிரிஜீஷ், சானுக்யா – சைதன்யா- சரண் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் சக்ரா பிக்சர்ஸ் வெளியிடுகிறது.
தமிழ்ப் பதிப்பிற்காக சென்னையில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், நடிகர் டொவினோ தாமஸ், நடிகை கயாடு லோஹர், இணை தயாரிப்பாளர் மேகா ஷ்யாம், சக்ரா பிக்சர்ஸ் வெற்றி, தயாரிப்பாளர் சைதன்யா, சரண் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இணை தயாரிப்பாளர் மேகா ஷ்யாம் பேசுகையில்,
”திரையுலகில் 14 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். இப்போதுதான் முதல் முறையாக இணை தயாரிப்பாளர் என்ற முறையில் மேடை ஏறி இருக்கிறேன். இது எனக்கு மறக்க முடியாத தருணம். என்னுடைய சகோதரர்கள் சானுக்யா – சைதன்யா – சரண் ஆகியோரை பாராட்டுகிறேன். படக்குழுவினரை பாராட்டுகிறேன். படத்தைப் பற்றி நான் அதிகம் பேசப் போவதில்லை. இந்தப் படம் எமோஷனல் ஆக்சன் என்டர்டெய்னர். இந்தப் படத்தை உலகம் முழுவதும் வெளியிடுகிறோம். டொவினோ தாமஸ், கயாடு லோஹர் தங்களுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள். இயக்குநரும் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளார் படத்தை அனைவரும் திரையரங்கில் பார்த்து ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
சக்ரா பிக்சர்ஸ் வெற்றி பேசுகையில்,
”இது எங்களுக்கு முதல் திரைப்படம். இந்தத் திரைப்படம் மிகச் சிறப்பாக இருக்கிறது. கன்டென்ட் உள்ள படம். ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தாருங்கள்,” என்றார்.
தயாரிப்பாளர் சரண் பேசுகையில்,
”இந்தப் படம் எங்கள் நிறுவனத்திற்கு முதல் திரைப்படம். நாங்கள் மூன்று சகோதரர்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறோம். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி அன்று இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளை தொடங்கினோம். தற்போது வெளியிடுகிறோம். இந்தத் திரைப்படத்தின் மூலம் நாங்கள் 1950 களில் கேரளாவில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை மறு உருவாக்கம் செய்து சொல்லி இருக்கிறோம். இதுபோன்றதொரு படத்தை நாங்கள் முதலில் தயாரித்ததற்காக பெருமிதம் கொள்கிறோம்,” என்றார்.
நடிகை கயாடு லோஹர் பேசுகையில்,
”இது என்னுடைய மூன்றாவது மலையாள திரைப்படம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தின் மூலம் மலையாளத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தின் கதாபாத்திரம் வித்தியாசமானது. என் இதயத்திற்கு நெருக்கமான கதாபாத்திரமும் கூட. இதுபோன்ற கதாபாத்திரத்தை எனக்கு வழங்கியதற்காக இயக்குநருக்கும் , தயாரிப்பாளருக்கும் நன்றி. நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தது. இந்தப் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். நாங்கள் அனைவரும் கூட்டணியாக இணைந்து கடுமையாக உழைத்து ஃபேமிலி என்டர்டெய்னராகவும் உருவாக்கி இருக்கிறோம். டொவினோ தாமஸ் சிறந்த திறமையுள்ள சக நடிகர் அவருக்கும் நன்றி,” என்றார்.
நடிகர் டொவினோ தாமஸ் பேசுகையில்,
”இப்படத்தின் கதையை நாங்கள் 2018 ஆம் ஆண்டில் விவாதித்தோம். நீண்ட விவாதத்திற்குப் பிறகு திரைக்கதையை சிறப்பாக வடிவமைத்து 2025 ஆம் ஆண்டில் தான் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கினோம். இயக்குநரும், நானும் வேறு படங்களில் பணியாற்றிக் கொண்டிருந்ததால், அவை அனைத்தையும் நிறைவு செய்துவிட்டு இப்படத்தில் இணைந்தோம். அதன் காரணமாகவும் இப்படத்தின் பணிகள் சற்று தாமதமானது. இப்படத்தின் கதாசிரியர் சுரேஷ்பாபு திரைக்கதையை செழுமைப்படுத்தினார். நான் முதன்முதலாக கேட்ட கதை வடிவத்தை விட.. இந்தக் கதை அமைப்பு சிறந்ததாக இருந்தது.
நூறு நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடந்தது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான நடிகர்களுடன் படப்பிடிப்பு நடைபெற்றது. இது எளிதான காரியம் அல்ல. இதற்கு கடின உழைப்பும் தேவை. திட்டமிடலும் தேவை. இது ஒரு பீரியட் மூவி. 1957- 58 கால கட்டத்தை சார்ந்த படம். அந்த காலகட்டத்தில் கேரளாவில் இருந்த சமூக அரசியல் கட்டமைப்பு, பின்னணியில் இடம்பெறும்.
இது உண்மைச் சம்பவம் அல்ல. ஆனால் சில சம்பவங்களை தழுவி நிறைய கற்பனையான கதாபாத்திரங்களுடன் இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் படத்தை தயாரிப்பாளர்கள் பார்த்து விட்டனர். அவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். நான் இந்த படத்தை ரசிகர்களுடன் திரையரங்குகளில் காண்பதற்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். திரையரங்குகளில் ரசிகர்கள் இப்படத்தை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை அவர்களுடன் இருந்து பார்த்து அனுபவிக்க வேண்டும் என்பதற்காக காத்திருக்கிறேன்.
எனக்கு முழுமை அடையாத திரைப்படங்களை பார்த்து கணிக்கத் தெரியாது. ரசிகர்களுடன் திரைப்படத்தின் முழு வடிவத்தை திரையரங்குகளில் பார்ப்பது தான் எனக்கு பிடிக்கும். அதனால் இந்த படத்திற்காக நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்தப் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதே போல் படமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறேன். நிச்சயம் இந்த படம் ரசிகர்களை ஏமாற்றாது. ” என்றார்.
‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) (Love Insurance Kompany)– ஏப்ரல் 3 உலகளவில் வெளியாகிறது !
தமிழ் திரையுலகின் நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படம் வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
முன்னதாக வெளியான சிங்கிள் பாடல்களான “தீமா தீமா” , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” பாடல்கள் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. டீசரும் ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது வெளியீட்டு அறிவிப்பு, திரை ரசிகர்களை பெரிதும் உற்சாகப்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படம், சயின்ஸ் பிக்ஷன் அம்சங்களுடன் எதிர்காலத்தில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ளது. ஒரு இளைஞன் தனது காதலை காப்பாற்ற போராடும் இந்த கதைக்களம், காதல் அரிதான ஒன்றாக மாறிய உலகில் புதிய கோணத்தில் சொல்லப்படுகிறது. புதுமையான கான்செப்ட், இளம் தலைமுறையை கவரும் அம்சங்கள் மற்றும் உணர்வுகளை ஆழமாக இணைத்து, தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், கிரித்தி ஷெட்டி , எஸ். ஜே. சூர்யா, யோகி பாபு, கௌரி கிஷன், ஷாரா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சீமான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும், இந்த திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள, கலை இயக்கம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு பணிகளை டி. முத்துராஜ் மேற்கொண்டிருக்கிறார்.
ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் எஸ். எஸ். லலித்குமார், ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் நடிகை நயன்தாரா ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள் .
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 3, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தற்போது பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் வெளியீட்டு அறிவிப்பு போஸ்டரைத் தொடர்ந்து, ட்ரெய்லர், ஸ்னீக் பீக் ஆகியவை அடுத்தடுத்து வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Harikrishnan under the banner of Moment EntertainmentsAfter the success of ‘Iruttu’ and ‘Thalainagaram 2’, Sundar C-Director Dhorai VZ success combo reunitesYogi Babu, leading Bollywood actor and popular Tamil stars to play key characters
Following films such as ‘Mo’, ‘Maayon’, ‘Madras Matinee’ and an upcoming film starring Selvaraghavan, Moment Entertainments is all set to bankroll its fifth venture. Produced by GA Harikrishnan and Durga Devi Harikrishnan, the new movie starring Sundar C in the lead role will be directed by Dhorai VZ
After the successful films ‘Iruttu’ and ‘Thalainagaram 2’, the winning combination of Sundar C and Dhorai VZ reunites once again for this project. Producer GA Harikrishnan states the film will be a gripping horror thriller that will keep audiences on the edge of their seats.
Speaking further about the project, he said, “We are happy to produce a film that brings Sundar C and Dhorai VZ together once again. We are planning to start shooting in the month of May. This film will offer a completely new experience for audiences.”
Yogi Babu, leading Bollywood actor and popular Tamil stars are set to play key characters. Announcement on this will be made soon. Several top-notch technicians are coming on board for the film. Cinematographer C. Ramprasad, who has worked on blockbuster Telugu films such as ‘Bhagavanth Kesari’, ‘Akhanda’, and ‘Akhanda 2’, will handle the cinematography for this project. Leading art director DRK Kiran will take care of the film’s art direction.
Further details regarding the cast and technical crew of the new film starring Sundar C, directed by Dhorai VZ and produced by GA Harikrishnan and Durga Devi Harikrishnan under the banner of Moment Entertainments, will be announced soon.
நாட்டார் கதையை மையமாக்கி உருவாகியுள்ள திரைப்படம் ‘தி டார்க் ஹெவன் ‘ ஏப்ரலில் 3 -ல் வருகிறது ‘தி டார்க் ஹெவன் ‘ !
‘ தி டார்க் ஹெவன் ‘ டப்பிங் தொடங்கியது !
மேக்கரை என்ற மலைக் கிராமத்தில் நடக்கும் தொடர் கொலைகளைப் பற்றிய ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம் ஏப்ரல் 3 ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது!
மக்களிடம் மரபு வழியாகப் பரவிச் செல்வாக்கு பெற்ற தொன்மம் சார்ந்த கதைகளுக்கு தனி நிறமுண்டு. அவ்வகையில் சமூகத்தில் நிலவும் ஒரு நாட்டார் கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கியிருக்கும் க்ரைம் த்ரில்லர் திரைப்படமாக ‘தி டார்க் ஹெவன்’ உருவாகியுள்ளது. இந்தப் படம் ஒரு மலைக் கிராமத்தில் ஏழு வருடங்களுக்கு ஒரு முறை வருகிற ஜூலை மாதங்களில் நடக்கும் தொடர் கொலைகளை விசாரிக்கும் ஒரு போலீஸ்காரரைப் பற்றியது.
இப்படம் பற்றி, படத்தைத் தயாரித்து இயக்கும் இயக்குநர் பாலாஜி பேசும் போது,
“இந்த படம், தடயங்களே இல்லாமல் நடக்கும் தொடர் கொலைகளை, காவல் அதிகாரி எப்படிக் கையாள்கிறார் என்பதை மையமாகக் கொண்டது.
இப்படத்தின் கதாநாயகனாக சித்து நடித்துள்ளார்.பிக்பாஸ் புகழ் தர்ஷிகா கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் நிழல்கள் ரவி, வேல ராமமூர்த்தி, ரித்விகா, அருள் ஜோதி, ஜெயகுமார் ஜானகிராமன் போன்றவர்களும் நடித்திருக்கிறார்கள். இதுவரை நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்து வந்த சாப்ளின் பாலு இதில் புதுவிதமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று எடுத்துக் கொண்டால் எனது முதல் படத்தில் பணியாற்றிய மணிகண்டன் பிகே இதிலும் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்திருக்கிறார். அதே போல் எடிட்டிங் ராஜா ஆறுமுகம் செய்துள்ளார்.இசையமைப்பாளராக ‘ஜாக்கி’ படத்தில் பணியாற்றிய சக்தி பாலாஜி பணிபுரிந்துள்ளார்.இவர்கள் அனைவரும் என் நண்பர்கள் .
இதன் படப்பிடிப்பு வண்டிபெரியார், அச்சன் கோவில், தென்மலை, ஏற்காடு, பத்துகாணி, தென்காசி மற்றும் முக்கூடல் போன்ற சவாலான பகுதிகளில் படமாக்கப்பட்டு படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டது.டப்பிங் வேலைகள் தொடங்கிவிட்டன. இறுதிக்கட்ட மெருகேற்றும் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. இப்படம் ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி உலகெங்கும் வெளியாக இருக்கிறது ” இவ்வாறு இயக்குநர் பாலாஜி கூறினார்.
Sri Balaji Vocational & Skill Development Academy marked a historic and socially impactful milestone by successfully organizing a World Record Event at the Anna Centenary Auditorium, Chennai, in association with the World Records Union and the Asia Book of Records.
As part of this grand achievement, 400 Montessori Teacher Training students collectively handcrafted the Montessori Pink Tower and demonstrated 10 different Pink Tower activities within 15 minutes, highlighting exceptional practical skills, creativity, precision, and mastery of Montessori teaching methodology. This remarkable performance set a new benchmark in hands-on learning and early childhood education.
Adding greater social value to the event, the Academy also provided free stalls for Special Children, creating a dedicated platform for them to showcase their talents, creativity, and skills. These special stars received encouragement, visibility, and equal opportunities, reinforcing the belief that every child deserves recognition and empowerment.
Sri Balaji Vocational & Skill Development Academy has been a strong pillar of women empowerment, having trained and empowered over 7,000 women through vocational education, skill development, and self-reliance programs. The institution continues its mission to uplift women, special children, and marginalized communities through inclusive education and practical training.
This combined initiative of world record achievement, special children empowerment, and women skill development reflects the Academy’s deep commitment to social responsibility, inclusive growth, and nation-building through education.
The Academy congratulates all participants and special children for being part of this remarkable and inspiring event, which stands as a symbol of excellence, empowerment, and hope.
Chennai, January 08, 2026: For the first time in Tamil Nadu, Kauvery Hospital, Vadapalani, has launched an advanced electroanatomical mapping technology, to provide cutting-edge cardiac electrophysiology treatments for complex heart rhythm disorders, including atrial fibrillation of the upper chambers and the dangerously fast ventricular tachycardia of the lower chambers.
The system along with a range of advanced cardiac electrophysiology technologies, that enable precise detection and targeted treatment of abnormal heart rhythm sources was launched in the presence of Actor R. Sarathkumar along with Dr. Aravindan Selvaraj, Co-Founder and Executive Director of Kauvery Group of Hospitals and, Dr. Deep Chandh Raja, Senior Consultant & Director of Cardiac Electrophysiology at Kauvery Hospital, Vadapalani
The CARTO™️ 3 system allows doctors to create high-resolution, 3D maps of the heart’s electrical activity, helping them precisely locate and treat the sources of abnormal rhythms. The newly introduced CARTOSOUND®️ technology provides real-time imaging of the heart during procedures. Kauvery Hospital has also launched the QDOT®️ catheter, which delivers high-power, short-duration energy for faster and more controlled treatment of atrial fibrillation, along with the nGEN®️ radiofrequency system for ablation, which safely destroys the heart tissue responsible for irregular signals.
In his comments, Mr. Sarathkumar, said, “I am happy that Kauvery Hospital, Vadapalani is pioneering advanced approaches in the treatment of arrhythmias, helping patients lead healthier lives. Heart health is truly the foundation of overall well-being, and it is important for everyone to take care of it. Simple steps such as maintaining a proper diet, practicing discipline in daily routines, exercising regularly, and leading a stress-free life can make a huge difference in keeping the heart strong and healthy.”
Dr. Aravindan Selvaraj, Co-Founder and Executive Director of Kauvery Group of Hospitals, added, “These advanced technologies enable us to perform procedures with higher safety and success rates, even in challenging cases. This initiative positions Chennai on the global map for advanced arrhythmia care and marks a major milestone in cardiac treatment at Kauvery Hospital. By bringing globally established technologies to Tamil Nadu for the first time, we are ensuring patients can access world-class care closer to home.”
Talking about the new technologies, Dr. Deep Chandh Raja, Senior Consultant & Director of Cardiac Electrophysiology at Kauvery Hospital, Vadapalani, said, “Heart rhythm disorders, or arrhythmias, occur when new short circuits develop in the heart’s electrical system. Patients may experience palpitations, dizziness, breathlessness, or fainting. These electrical issues are evaluated using an Electrophysiology Study, and many can be safely treated with radiofrequency ablation. However, complex arrhythmias like atrial fibrillation and ventricular tachycardia require advanced technology and specialised expertise for safe and effective treatment. With these new launches, we are making some of the most sophisticated treatments for heart rhythm disorders available in Tamil Nadu, and in some cases in India, for the first time.”
அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் “வித் லவ் ( With Love )” திரைப்படம் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகிறது
Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, “வித் லவ் ( With Love )” திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
நவீன இளைஞர்களின் வாழ்வை மையப்படுத்தி வெளியான படம் டீசர், சிங்கிள் பெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, ரசிகர்கள் இப்படத்தின் வெளியீட்டை எதிர்நோக்கி காத்திருந்த நிலையில், அசத்தலான போஸ்டர் ஒன்றை வெளியிட்டு திரையரங்கு வெளியீட்டை அறிவித்துள்ளது படக்குழு.
முழுக்க முழுக்க நவீன கால இளைஞர்களை கவரும், அருமையான காதல் கதையாக உருவாகிவரும் “வித் லவ் ( With Love )” படத்தில், டூரிஸ்ட் ஃபேமிலி படம் மூலம் கவனம் ஈர்த்த அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கிறார். “லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி” படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் இப்படத்தை இயக்கி உள்ளார்
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களில், தொடர் வெற்றிப் படங்களை வழங்கி வரும் MRP Entertainment நிறுவனம், குட் நைட், லவ்வர் மற்றும் இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிப்படமான டுரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்தை தயாரிக்கிறது. Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தை இணைந்து வழங்குகிறார்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். K.சுரேஷ் குமார் எடிட்டிங் பணிகளை செய்கிறார். ராஜ்கமல் கலை இயக்கம் செய்துள்ளார். உடை வடிவமைப்பாளராக ப்ரியா ரவி பணியாற்றியுள்ளார்.
விரைவில் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
பிரமாண்ட உருவாகி வரும் 45 – திரைப்படம் வரும் 2026 ஜனவரி 1 ஆம் தேதி வெளியாகிறது !!
கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள மெகா பட்ஜெட் திரைப்படமான ‘45’ படம் வரும் 2026 ஜனவரி 1 ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் பெங்களூருவில் நடந்த விழாவில் வெளியிடப்பட்டது.
சுராஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரமேஷ் ரெட்டி தயாரித்துள்ள இந்த எதிர்பார்ப்பு நிறைந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில், கருநாட சக்ரவர்த்தி டாக்டர் சிவராஜ்குமார், ரியல் ஸ்டார் உபேந்திரா, ராஜ் B. ஷெட்டி, இசையமைப்பாளராக புகழ்பெற்று தற்போது இப்படம் மூலம், இயக்குநராக அறிமுகமாகும் அர்ஜுன் ஜான்யா, நடிகை சுதாராணி, நடிகர் பிரமோத் ஷெட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பெங்களூரு நகர காவல் ஆணையர் சீமந்த் குமார் சிங் அவர்கள், ‘45’ படத்தின் டிரெய்லரை வெளியிட்டு, படக்குழுவுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்திய திரை ரசிகர்கள் இதுவரை திரையில் பார்திராத பிரம்மாண்ட காட்சிகளுடன் ஃபேண்டஸி உலகிற்குள் அழைத்து செல்லும் டிரெய்லர், கதாப்பாத்திரங்களின் அசத்தலான அறிமுகங்களுடன், எம் ஜி ஆரின் ராஜாவின் பார்வையில் ராணியின் பக்கம் எனும் பாடலுடன் ரசிகர்களை அசத்துகிறது.
டிரெய்லரை வெளியிட்ட காவல் ஆணையர் சீமந்த் குமார் சிங் பேசுகையில், “‘45’ திரைப்படம் காவல் துறைக்கு நல்ல செய்தியைக் கூறுகிறது. சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் B. ஷெட்டி போன்ற முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளதால், படம் வசூலில் மாபெரும் வெற்றி பெறும்” என்றார்.
தயாரிப்பாளர் ரமேஷ் ரெட்டி, விழாவிற்கு வந்த அனைவரையும் வரவேற்று, “‘45’ படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன். இந்த படம் எனக்கு மிகப்பெரிய அனுபவத்தை கொடுத்தது. ‘45’ அனைவராலும் கொண்டாடப்படும்” என்று தனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்.
இயக்குநர் அர்ஜுன் ஜான்யா பேசுகையில், “சிவண்ணா (சிவராஜ்குமார்) என்னை இயக்குநராக முயற்சி செய்ய ஊக்குவிக்கவில்லை என்றால், இன்று நான் இங்கே நிற்க முடியாது. உபேந்திரா ஒரு இயக்குநர் ஐகான்; அவரது நிழலில் வளர்ந்து நான் பலவற்றை கற்றுக்கொண்டேன். இன்றைய காலத்தில் நாம் மறந்துவிடப்பட்ட சில உண்மையான மதிப்புமிக்க விஷயங்களை இந்தப் படம் அழுத்தமாக பேசுகிறது. அவற்றை உணர்ந்தால் நம் ஒவ்வொரு இல்லமும் ஒளிரும். இந்த படத்தில் மூன்று ஹீரோக்களுடன் சேர்த்து, நான்காவது ஹீரோ தயாரிப்பாளர்தான். அவரின் முழு ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியமில்லை” என்றார்.
டாக்டர் சிவராஜ்குமார் பேசுகையில், “‘45’ என் 129வது படம். என் முதல் படமான ‘ஆனந்த்’ செய்தபோது இருந்த அதே பயமும் பக்தியும் இந்தப் படத்திலும் எனக்கு இருந்தது. அர்ஜுன் ஜான்யா கதையை சொன்னபோது எப்படி இப்படி ஒரு கதையை உருவாக்கினார் என மிகவும் ஆச்சரியப்பட்டேன். ‘45’ என்பது ஒரு நாள், ஒரு நிமிடம், ஒரு விநாடி என எதுவாகவும் இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக உங்களை ஆச்சரியப்படுத்தும். இது ஒரே மனிதனின் கதை அல்ல, அனைவரையும் இணைக்கும் படம். கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்கியபோது, நான் கீமோதெரபியில் இருந்தேன். ஒரு இயக்குநர் உருவாக்கியதை கலைஞன் முழுமையாக செய்தால்தான் அதற்கு மதிப்பு கிடைக்கும் – அது டூயட் பாடலாக இருந்தாலும், கழிவறை சுத்தம் செய்வதாக இருந்தாலும்”. நாங்கள் இயக்குநரின் கனவை முழுமையாக்கியுள்ளோம். இப்படம் கண்டிப்பாக அனைத்து ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் என்றார்.
நடிகர் உபேந்திரா பேசுகையில்.., “இந்த படத்திற்கு திரைக்குப் பின்னால் மூன்று ஹீரோக்கள் இருக்கிறார்கள். முதலாவது தயாரிப்பாளர் ரமேஷ் ரெட்டி, இரண்டாவது இயக்குநர் அர்ஜுன் ஜான்யா, மூன்றாவது ஒளிப்பதிவாளர் சத்யா ஹெக்டே. சிவராஜ்குமார் மற்றும் அவரது குடும்பத்துடன் எனக்கு மிக நெருக்கமான உறவு உள்ளது. ‘ரசிகர்களே கடவுள்’ என்று கூறிய டாக்டர் ராஜ்குமாரை நினைவுகூர வேண்டிய தருணம் இது. டாக்டர் குவெம்பு எழுத்தில் கடவுளைக் கண்டுள்ளார். டாக்டர் சிவராம கரந்த் இயற்கையில் கடவுளைக் கண்டுள்ளார்” என்றார்.
ராஜ் B. ஷெட்டி பேசுகையில், “நான் சிவராஜ்குமார் மற்றும் உப்பேந்திராவின் ரசிகன். என் சமீபத்திய படம் ‘சு ஃப்ரம் ஸோ’ மூலம் லாபமாக பெற்ற முதல் ஆயிரம் ரூபாயை, இயக்குநர் அர்ஜுன் ஜான்யா மற்றும் தயாரிப்பாளர் ரமேஷ் ரெட்டி ஆகியோருக்கு தலா 500 ரூபாய் வீதம் வழங்கினேன். ‘45’ படத்திற்கு எனது வாழ்த்துகள்” என்று தெரிவித்தார்.
நடிகை சுதாராணி, சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் இப்படத்தில் நடித்ததில் மிகுந்த மகிழ்ச்சி எனக் கூறினார்.
நடிகர் பிரமோத் ஷெட்டி, “என் வாழ்க்கையில் இப்படிப்பட்ட ஒரு படத்தில் நடிப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை” என்றார்.
ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காணக் காத்திருக்கும் ‘45’ திரைப்படம், 01-01-2026 அன்று, திரையரங்குகளில் வெளியாகிறது.