தமிழ் சினிமாவில் அடிக்கடி வரும் “feel-good entertainer” வகையைச் சேர்ந்த படம் தான் Happy Raj. வாழ்க்கையை லைட்டாக எடுத்துக் கொண்டு சந்தோஷமாக வாழும் ஒரு இளைஞனின் பயணத்தை மையமாக வைத்து, காமெடி, காதல், உணர்ச்சி ஆகியவற்றை கலந்து உருவாக்கப்பட்ட படம்.
பெரிய அளவிலான twist அல்லது experimental storytelling இல்லாமல், ஒரு simple மற்றும் relatable கதையை audience-க்கு கொண்டு செல்லும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.ராஜ் என்ற இளைஞன் வாழ்க்கையில் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், எப்போதும் positive mindset-இல் வாழ்பவன். அவனுடைய இந்த carefree அணுகுமுறை தான் அவனுக்கு நண்பர்களையும், உறவுகளையும், காதலையும் கொண்டு வருகிறது.
ஆனால், வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் அதே அணுகுமுறை அவனுக்கே பிரச்சனையாக மாறுகிறது. முக்கியமான விஷயங்களை கூட லைட்டாக எடுத்துக்கொள்வதால், அவன் எதிர்கொள்ளும் சிக்கல்கள் அதிகரிக்கின்றன.
அதன்பிறகு, வாழ்க்கையை எவ்வாறு balance செய்ய கற்றுக்கொள்கிறான்? “சந்தோஷம்” என்றால் என்ன என்பதைக் கண்டுபிடிக்கிறானா? என்பதே படத்தின் மைய conflict.
கதை புதுசாக இல்லையென்றாலும், execution மூலம் ஈர்க்க முயற்சிக்கிறது.
படத்தின் backbone ஹீரோவின் performance தான். அவர் தனது energetic screen presence மூலம் கதாபாத்திரத்தை உயிர்ப்பித்திருக்கிறார்.
ஹீரோயின் தனது வரம்புக்குள் நல்ல support கொடுக்கிறார். காதல் track subtle-ஆ அமைந்துள்ளது.
காமெடி மற்றும் supporting characters சில இடங்களில் நல்ல சிரிப்பை உருவாக்குகின்றனர். அதே சமயம், சில scenes-ல் overacting feel ஆகும்.
திரைக்கதை & இயக்கம் (Screenplay & Direction)
படத்தின் screenplay மிகவும் safe zone-ல் நகர்கிறது.
First half → லைட் காமெடி, friendship, romance
Second half → emotional shift + message
இந்த tonal shift predictable ஆனாலும், audience connect ஆகும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் commercial elements-ஐ தவிர்க்காமல், அதே சமயம் message-ஐ clarity-ஆ கொண்டு வந்திருக்கிறார். ஆனால், narration-ல் புதுமை இல்லை என்பது ஒரு minus.
🎵 இசை (Music)
படத்தின் இசை overall decent.
Songs → light & catchy
BGM → emotional scenes-ஐ elevate செய்கிறது
பாடல்கள் கதைக்கு தடையாக இல்லாமல், flow-க்கு support செய்கின்றன.
🎥 தொழில்நுட்பம் (Technical Aspects)
Cinematography → Bright visuals, colorful tone
Editing → First half-ல் lag இருக்கிறது
Production Quality → decent presentation
Technically படம் average-க்கு மேலே இல்லை, ஆனால் storyக்கு தேவையான அளவுக்கு இருக்கிறது.
Happy Raj ஒரு simple, feel-good entertainer. இது பெரிய cinematic experience அல்ல, ஆனால் ஒரு நல்ல positive vibe தரும் படம்.
லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்க, ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லீடர்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 3ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை மற்றும் ஆக்ஷன் டீசர் வெளியீடு திரைப் பிரபலங்கள் முன்னிலையில் படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பங்கேற்க சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
பாடலாசிரியர் விவேகா பேசுகையில், “இந்த இசை நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழில் உள்ள முத்தைத்தரு பத்தித் திருநகை பாடல் ஒலித்தவுடன் எனக்கு உடல் எல்லாம் சிலிர்த்து விட்டது. இப்படத்தில் நான் இரண்டு பாடல்களை எழுதி இருக்கிறேன், இரண்டும் அற்புதமான அனுபவங்கள். இப்படத்தின் முன்னோட்டத்தை பார்த்தவுடன் இது அனைவருக்குமான படமாக வரப்போகிறது என்பது தெரிகிறது.
லெஜெண்ட் சரவணன் பற்றி சொல்ல வேண்டும் என்றால், அவர் பேசுவது வைரல் ஆகிறதா, இல்லையென்றால் வைரல் ஆவதை தான் அவர் பேசுகிறாரா என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. சமீபத்தில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட போது அவரிடம் நீங்கள் வியாபாரத்தின் உச்சத்தில் இருப்பதன் காரணம் என்ன என்று கேட்டபோது “எங்க அப்பா ஒன்னு சொல்லி இருக்கிறார், எல்லோருக்கும் முன்னாடி கடைக்கு செல்ல வேண்டும், எல்லோருக்கும் பின்னாடி கடையை விட்டு வெளியில் வரவேண்டும் என்று சொல்லி இருக்கிறார், அதை நான் பின்பற்றுகிறேன், அதுதான் என்னுடைய வெற்றிக்கு காரணம்,” என்றார். இதுதான் வியாபார உலகின் பைபிள். அந்த கருத்தை அவர் சொன்னதும் மிகப் பெரிய அளவில் வைரலானது. அது தான் அவர் வெற்றியின் ரகசியம், இப்படம் மிகப்பெரும் வெற்றி பெற என் வாழ்த்துகள்,” என்றார்.
பாடலாசிரியர் மோகன் ராஜன் பேசுகையில், “நான் இன்று இந்த மேடையில் நிற்கிறேன் என்றால் அதற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் இயக்குநர் துரை செந்தில்குமார் தான் முதன்மையான காரணம். இந்த திரைப்படத்தில் அப்பா-பொண்ணு சம்பந்தப்பட்ட ஒரு பாடலை எழுதி இருக்கிறேன். நான்கு பேர் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கிற, நினைக்கும் ஒவ்வொருவரும் லீடர் தான். ஏற்கனவே லெஜெண்ட் சரவணன் நிஜமான லீடர் தான். நீங்கள் ரியலாக ஒரு லீடராக இருந்து கொண்டு. திரையிலும் லீடராக நீங்கள் தோன்றுவதை நாங்கள் வரவேற்கிறோம், எங்களுக்கு பெருமிதமாக இருக்கிறது.
இதனை மறைந்த வாலி ஐயா பாணியில் வாழ்த்திட வேண்டும் என்றால்.. “உங்களுக்கு யாரும் போட்டதில்லை ஆர்டர், உங்களுக்கு நீங்களே தான் பார்டர், என்றும் சோர்ந்ததில்லை உங்களுடைய ஷோல்டர், ஏனென்றால் நீங்கள் தான் உண்மையான லீடர்…” லீடர் -கண்டிப்பாக வின்னர்,” என்றார்.
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு பேசுகையில், “லெஜெண்ட் சரவணன் நிஜமாகவே லீடர் தான். பல கதைகளை அவர் மனதில் வைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை அவருடன் பழகும் போது தெரிந்து கொண்டேன். பல கதாபாத்திரங்களை உருவாக்கி வைத்திருக்கிறார்… அவர் என்னிடம் புரூஸ்லீயின் கதை ஒன்றை சொன்னார், அந்த கதையில் சிக்ஸ் பேக் வைத்துக் கொள்ளும் அளவிற்கு தயார் படுத்திக் கொள்வேன் என்று சொன்னார். அப்போது அவரை அழைத்துக் கொண்டு மிகப்பெரிய இயக்குநரிடம் சென்று அது போன்ற ஒரு படத்தை உருவாக்குங்கள் என்ற பேச்சுவார்த்தையலும் ஈடுபட்டேன். அவருடைய எண்ணமும் பணியும் பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,” என்றார்.
தயாரிப்பாளர் தியாகராஜன் பேசுகையில், “லெஜெண்ட் சரவணனின் முதல் படத்தை பார்த்தேன், மிக பிரம்மாண்டமானதாக இருந்தது. அவரது அடுத்த படம் என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். எங்கள் நிறுவனத்தில் ‘பட்டாசு’ படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் தான் லீடர் படத்தை இயக்குகிறார், அதில் லெஜெண்ட் சரவணன் நடிக்கிறார் என்று கேள்விப்பட்டதும் மகிழ்ச்சி அடைந்தேன். இந்த படம் மிகப்பெரும் வெற்றியைப் பெறும், வெற்றி விழாவில் சந்திப்போம்,” என்றார்.
இயக்குநர் ஆர் கே செல்வமணி பேசுகையில், “இங்கு வருகை தந்திருக்கும் லெஜெண்ட் சரவணனின் ரசிகர்களை பார்க்கும்போது இந்தத் திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக தான் இருக்கும் என்று தோன்றுகிறது. நான் உதவி இயக்குநராக இருந்தபோது லெஜெண்ட் சரவணனின் தந்தையை 1988ம் ஆண்டில் சந்தித்திருக்கிறேன். அந்த காலத்தில் உதவி இயக்குநர்களாக இருப்பவர்கள் சம்பளம் வாங்காத வேலைக்காரர்களாக இருப்பார்கள். அவருடைய கடைக்கு நாங்கள் அடிக்கடி செல்வோம். நூறு ரூபாய்க்கு கீழ் 99 ரூபாய்க்கு அவர்கள் ஒரு சட்டையை விற்பனை செய்வார்கள். நூறு ரூபாய் கிடைத்தவுடன் அந்த சட்டையை வாங்கலாம் என்பதற்காக அடிக்கடி அந்த கடைக்கு சென்று பார்த்து விட்டு வருவோம், ஒரு முறை தீபாவளி தருணத்தில் 500 ரூபாய் கொடுத்தார்கள், அதை எடுத்துக்கொண்டு சட்டையை எடுக்கலாம் என்று கடைக்கு சென்றோம். அன்றைய காலகட்டத்தில் 500 ரூபாய்க்கு குடும்பத்தினர் அனைவருக்கும் சட்டையை எடுக்க முடியும் என்றால் அது சரவணா ஸ்டோர்ஸில் மட்டும் தான் முடியும். அந்த தருணத்தில் நான் என் அப்பாவுக்கு என் தம்பிக்கு தங்கச்சிக்கு டிரஸ் எடுத்தேன். நான் பார்த்து வைத்திருந்த சட்டையில் விலையில் மாற்றம் இருந்தது. பில் 590 ஆக இருந்தது என்னிடம் ₹500 மட்டும் தான் இருந்தது. அப்போது மீதி பணத்தை எப்போது உங்களிடம் இருக்கிறதோ அப்போது தாருங்கள் என்று சொன்னார். நூறு ரூபாய் சட்டை வாங்குபவர்களுக்கும் அவர் ஒரே மரியாதை தான் வழங்கினார், லட்ச ரூபாய்க்கு சட்டையை வாங்கியவர்களுக்கும் அவர் அதே மரியாதை தான் வழங்கினார், வாடிக்கையாளரை மதித்த முதலாளியாக அவர் இருந்தார். அதுதான் அவருடைய வெற்றிக்கு காரணம் என்று நான் நினைக்கிறேன்.
அதே போல் இந்த படம் குறித்த அறிவிப்பை பார்த்தவுடன் நான் இயக்குநர் துரை செந்தில்குமாருக்கு போன் செய்தேன். அவர் என்னுடைய மிக நெருங்கிய நண்பர். அவரிடம் இதை வெற்றிப் படமாக இயக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அதன் பிறகு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை எனக்கு அனுப்பினார் இயக்குநர். அதை பார்த்ததும் பாராட்டினேன்.
நேர்மை, குறைந்த லாபம், நிறைய வாடிக்கையாளர்கள்… இதுதான் லெஜெண்ட் சரவணனின் வெற்றிக்கான தாரக மந்திரம். சினிமாவில் சின்ன பட்ஜெட்டில் நிறைய படங்களை லெஜெண்ட் சரவணன் தயாரிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எங்கள் சினிமாவிற்கு நிறைய தயாரிப்பாளர்கள் தேவைப்படுகிறார்கள், உங்களைப் போல், உங்கள் அப்பா வணிக துறையில் எப்படி சாதனை படைத்தார்களோ அதே போல் நீங்கள் திரைத்துறையிலும் மிகப்பெரிய சாதனையை படைக்க வேண்டும். 50 அல்ல 100 படங்கள் கூட எடுத்திட வேண்டும், தயாரித்திட வேண்டும், சினிமா மற்றும் சினிமா தொழிலாளர்களை வாழ வைக்க வேண்டும்,” என்றார்.
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், “லெஜண்ட் சரவணன் சார், நீங்கள் வணிக உலகத்தில் மட்டும் அல்ல, இப்போது தமிழ் சினிமாவிலும் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறீர்கள் என்று சொல்லலாம். ‘லீடர்’ என்ற தலைப்போடு நீங்கள் வருவது மிகவும் பொருத்தமாக இருக்கிறது. சினிமாவிற்கான ஆர்வமும் அர்ப்பணிப்பும் உங்களிடம் தெளிவாக தெரிகிறது. வணிகத்தில் இவ்வளவு பெரிய சாதனை செய்த நீங்கள், அதே உறுதியுடன் சினிமாவிலும் வெற்றி பெற வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பு. குறிப்பாக, இயக்குநர் துரை செந்தில்குமார் அவர்களுடன் உங்கள் கூட்டணி மிகவும் சிறப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அவருடைய படங்கள் எப்போதும் மக்களுக்கு பிடிக்கும் வகையில் இருக்கும். அதுபோல இந்த ‘லீடர்’ படமும் பெரிய வெற்றி பெறும். இந்தப் படம் உங்கள் வாழ்க்கையில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன். தமிழ்சினிமாவில் அப்பா-மகள் உணர்வுகளை மையமாகக்கொண்ட படங்கள் எப்போதும் மக்களின் மனதைத் தொடும். ‘தெறி’, ‘விஸ்வாசம்’ போன்ற படங்கள் அதற்குச் சிறந்த உதாரணம். அதுபோல, ‘லீடர்’ படமும் உணர்ச்சி மற்றும் ஆக்ஷன் கலந்த ஒரு வெற்றிப்படமாக இருக்கும் என்று நம்புகிறேன். ஜிப்ரான் அவர்களின் இசையும் பின்னணி இசையும் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலம். டிரெய்லரிலேயே அது தெளிவாக தெரிகிறது. மேலும், இந்தப்படத்தின் விளம்பரத்தை சிறப்பாக முன்னெடுத்து வரும் நிகில் முருகன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். சரவணன் சார், உங்கள் சினிமா பயணத்தில் தொடர்ந்து பெரிய பட்ஜெட்டில், தரமான படங்களை வழங்க வேண்டும். தமிழ் சினிமாவிற்கு நீங்கள் தொடர்ந்து வெற்றிப் படங்களைகொடுக்க வேண்டும் என்பதே எங்களின் வாழ்த்து. ‘லீடர்’ படம் கண்டிப்பாக ஒரு மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன், முழு குழுவிற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்,” என்றார்.
நடிகை அறந்தாங்கி நிஷா பேசுகையில், “லீடர் என்கிற வார்த்தை யாருக்கு பொருந்தும் என்றால் எப்போதும் தன்னை மட்டுமே பெருமிதமாக பெருமைப்படுத்தி கொள்ளாமல் உடன் இருக்கும் அனைவரையும் பெருமைப்படுத்தும் மனிதர்கள் தான் லீடர். நான் எப்போது லெஜெண்ட் சரவணனின் கடைக்கு சென்றாலும் எங்களை அமர வைத்து “நிறைய படங்களில் நடிக்க வேண்டும், நன்றாக நடிக்க வேண்டும், நிறைய மேடைகளில் உங்களை பார்க்க வேண்டும்” என்று ஒவ்வொரு முறையும் ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பார். நிறைய கலைஞர்களை எப்போதும் ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பவர் லெஜெண்ட் சரவணன் ஐயா அவர்கள்.
இந்தப் படம் வெளியான பிறகு ஆறு மாதம் வரை சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு செல்ல முடியாது. ஏனெனில் இந்தப் படத்தில் அவரை திட்டுவது போன்ற காட்சியில் நடித்திருக்கிறேன். அதை நானாக சொல்லவில்லை இயக்குநர் எழுதிக் கொடுத்ததை தான் பேசி நடித்தேன். இந்தப் படத்தில் என்னுடைய கணவரும் நடித்திருக்கிறார். வீட்டில் எப்படி அமைதியாக இருப்பாரோ அதேபோல் படத்திலும் அமைதியாக இருக்கிறார்.
உணவுகளை மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யும் மாமனிதர் இவர், இவரை ஏன் நாங்கள் லீடர் என்று சொல்கிறோம் என்றால் அவருடைய பிறந்த ஊருக்கு ஊரில் நடைபெற்ற படப்பிடிப்பிற்கு நாங்கள் எல்லாம் சென்றபோது, அந்த ஊருக்கே அவர் சாப்பாடு போடுகிறார். அங்கு நடைபெற்ற எல்லா படப்பிடிப்பு நாட்களிலும் ஊர் முழுவதும் இவர் விருந்து படைத்தார்,” என்றார்.
பேபி இயல் பேசுகையில், “இப்படத்தில் நான் சிரித்தேன், அழுதேன், கோபமாக இருந்தேன், சென்டிமென்ட் காட்சிகள் எல்லாம் இருந்தது. இதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி. இப்படத்தின் ஒளிப்பதிவாளர் எஸ். வெங்கடேஷ் எங்கள் அப்பா நடித்த ‘டிக் டிக் டிக்’ படத்தில் பணியாற்றியவர். அவரைப் பற்றி என் அப்பா லக்கி கேமராமேன் என சொல்லிக் கொண்டே இருப்பார். அவருடைய ஒளிப்பதிவில் நடித்ததால் நான் என்னை லக்கியாக ஃபீல் செய்கிறேன்.
படப்பிடிப்பின் போது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. நாங்கள் நல்ல மழையில் சிக்கிக்கொள்ளும் போது எங்களை லெஜெண்ட் அங்கிள் காப்பாற்றுவது போல் காட்சி இருந்தது அந்த காட்சி படமாக்கப்படும் போது அவர் கால் இடறி விழுந்துவிட்டார், இருந்தாலும் பேலன்ஸ் செய்து எங்களை காப்பாற்றினார். அந்த ஒரு நொடி எனக்கு மினி ஹார்ட் அட்டாக் வந்தது போல் இருந்தது. அப்போது என் நினைவில் இருந்த டயலாக் எல்லாம் மறந்து விட்டது. அவருடைய பெஸ்ட் ஹார்ட் வொர்க் தான் ட்ரெயினில் நடக்கும் ஃபைட் சீன். ஆனால் இவ்வளவு ரிஸ்க் எடுக்காதீங்க அங்கிள் எனச் சொன்னேன்,” என்றார்.
நடிகர் ஷாம் பேசுகையில், “கருடன் படத்தை பார்த்த பிறகு என் நண்பர்களிடம் இந்தப் படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் படத்தில் நடிக்க வேண்டும் என்ற என் ஆசையை பகிர்ந்து கொண்டேன். அந்தப் படத்தில் எல்லா கேரக்டர்களையும் அவர் சரியாக கையாண்டிருக்கிறார் இதை சொன்ன சில நாட்களில் இயக்குநர் துரை செந்தில் குமாரிடமிருந்து அழைப்பு வந்தது, பிறகு சந்திப்பு நடந்தது. அவரிடம் நான் கதையைக் கேட்கவில்லை, ஏனென்றால் தமிழ் சினிமாவில் மிகவும் பொறுப்புணர்ச்சி மிக்க இயக்குநர் அவர். அவர் இயக்கியிருக்கும் அனைத்து படங்களிலும் ஒரு கமர்ஷியல் வேல்யூவும் இருக்கும், அழகான மெசேஜும் இருக்கும் சினிமா பிளாட்பார்மை மிக தரமாக பயன்படுத்திக் கொள்பவர்களில் துரை செந்தில்குமார் முக்கியமானவர்.
இந்தப் படத்திற்காக டப்பிங் பேசும்போது எல்லா கேரக்டருக்கும் அவரே டப்பிங் பேசி வைத்திருந்தார். இதுதான் எனக்கு வேண்டும் என்பதில் அவ்வளவு தெளிவாக இருந்தார். இதை இங்கு யாரும் செய்ய மாட்டார்கள்.
எல்லோரும் லெஜெண்ட் சரவணனின் மற்றொரு முகத்தை பார்த்திருக்க மாட்டார்கள், படப்பிடிப்பு தளத்தில் நான் அவருடன் பணியாற்றிய காட்சிகளில் அவரின் சிறந்த நகைச்சுவை உணர்வு கலந்த பேச்சை கேட்டு ரசித்திருக்கிறேன். வாழ்க்கையைப் பற்றிய பெரிய கண்ணோட்டத்தை அவர் எப்போதும் வைத்திருக்கிறார். அதை அவர் தொடர்ந்து பின்பற்றுகிறார். அவருக்கு இது இரண்டாவது படம், நிச்சயமாக அவர் சினிமாவில் தொடர்ந்து இருப்பார், நிறைய படங்களில் நடிப்பார். அவருடைய தயாரிப்பு மூலம் நிறைய இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். அவரைப் போன்றதொரு தொலைநோக்கு பார்வை கொண்ட ஒருவர் தமிழ் சினிமாவுக்கு அவசியம் தேவை,” என்றார்.
நடிகர் வி டி வி கணேஷ் பேசுகையில், “லெஜெண்ட் சரவணன் உடன் நடிக்க வேண்டும் என்று இயக்குநர் சொன்னவுடன் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ஏனென்றால் எனக்கு அவரையும் அவருடைய நடிப்பையும் மிகவும் பிடிக்கும். அவர் நிறைய பேரை வசீகரித்திருக்கிறார். அப்போதெல்லாம் இந்த மனிதர் எப்படி இவ்வளவு பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்துகிறார் என வியப்புடன் பார்த்துக் கொண்டே இருப்பேன்.
யாரிடம் வேண்டுமானாலும் பணம் இருக்கலாம் ஆனால் சினிமா மீதான பற்றும் ஆர்வமும் இருந்தால்தான் நடிக்க முடியும். ஏதாவது செய்ய வேண்டும் என்ற வெறி இருந்தால்தான் நடிக்க முடியும் இது எல்லோருக்கும் வராது. அதனால் தான் சொல்கிறேன் சாதனையாளர் என்றால் அது லெஜெண்ட் சரவணன் தான். எனக்குத் தெரிந்து இந்த திரைப்படம் வெளியாகி 500- 600 கோடி வசூலிக்கும். மற்ற மொழிகளிலும் வெற்றி பெற்றால் இந்த படம் ஆயிரம் கோடி ரூபாயை வசூலிக்கும்,” என்றார்.
இயக்குனர் பாக்யராஜ் பேசுகையில், “நம்ம லெஜெண்ட் சரவணன் பற்றிப் பலரும் பேசும்விதத்தை நான் கவனித்துக்கொண்டே இருந்தேன். ஒவ்வொருவரும் அவரைப் பற்றி பாராட்டி பேசினார்கள். அதிலிருந்து எனக்கு தெளிவாக புரிந்தது என்னவென்றால், அவர் நினைத்ததை தைரியமாகச் செய்து முடிப்பவர், யாரைப் பற்றியும் கவலைப்படாமல், தன்னம்பிக்கையுடன் முன்னேறுவது அவருடைய தனித்துவம்; அது எனக்கு மிகவும் பிடித்த விஷயம். இந்த அளவுக்கு உற்சாகமாக சினிமாவில் நடிக்க வருவது சாதாரண விஷயம் இல்லை. அது ஒரு பெரிய சாதனை. ‘லெஜெண்ட்’ படத்திற்குப் பிறகு ‘லீடர்’ என்ற தலைப்பில் வருவது மிகவும் பொருத்தமானதும், வலிமையானதுமாக இருக்கிறது. இயக்குநர் துரைசெந்தில்குமார் அவர்களுக்கு இது ஒரு சவாலான முயற்சிதான். ஆனால் அவர் எப்போதும் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களுடன் சேர்ந்து தரமான படங்களை உருவாக்குபவர். இந்தப் படத்திலும் ஜிப்ரான் போன்ற திறமையான கலைஞர்கள் இணைந்துள்ளதால், கண்டிப்பாக இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். டிரெய்லரை பார்த்தபோது மக்கள் அளித்த வரவேற்பு இந்தப் படத்தின் வெற்றியை முன்னரே காட்டுகிறது. படம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை அது உருவாக்கியுள்ளது.
இந்தப் படம் பெரும் செலவில் மட்டும் இல்லாமல், உணர்ச்சிகளும், கதையும், சக்திவாய்ந்த அம்சங்களும் சேர்ந்த ஒரு முழுமையான படமாக இருக்கும் என்று நம்புகிறேன். சரவணன் சினிமாவிற்கு பணம் சம்பாதிக்க மட்டும் வரவில்லை; அவர் நினைத்ததை சாதிக்கவும், சினிமாவிற்கு ஒரு சேவையாகவும் வந்திருக்கிறார். அவர் தொடர்ந்து இந்தத் துறையிலிருந்து, பல நல்ல படங்களை வழங்கி, பலருக்கும் உதவிசெய்ய வேண்டும். அவர் நீண்ட நாள் ஆரோக்கியமாக இருந்து, சினிமாவிற்கு மேலும் பல சேவைகள் செய்யவேண்டும் என்று என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். இந்தப் படத்திற்கு உழைத்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், இயக்குநருக்கும், படக்குழுவினருக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்,” என்றார்.
இசையமைப்பாளர் ஜிப்ரான் வைபோதா பேசுகையில், “முதலில் இந்தப் படத்தில் பணியாற்ற வாய்ப்பு கொடுத்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கும், என்னுடன் உழைத்த அனைத்து குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். குறிப்பாக, இந்தப் படத்திற்காக இரவு பகலாக உழைத்து, பல நாட்கள் தூக்கமே இல்லாமல் பாடுபட்ட படக்குழுவினர் அனைவருக்கும் நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். இந்தப் படத்தில் பாடல்கள் உருவாக்குவது மிகவும் சவாலானதாக இருந்தது. ஆனால் அதேநேரத்தில், ஒரு பெரிய திருப்தியையும் கொடுத்தது. ஒவ்வொரு பாடலும், பின்னணி இசையும் மிகுந்த கவனத்துடன் உருவாக்கப்பட்டது. குறிப்பாக, இயக்குநர் துரை செந்தில்குமார் சார் எப்போதும் சிறிய சிறிய விஷயங்களையும் கவனித்து, தேவையான மாற்றங்களைச் சொல்லி, அந்தப் பாடல்களை இன்னும் சிறப்பாக மாற்றினார். ஒரு சிறிய BGM மாற்றம் கூட எவ்வளவு பெரிய பலன் தரும் என்று இந்தப்படத்தில் நான் தெரிந்து கொண்டேன். துரை சார் பற்றி சொல்லவேண்டுமெனில், அவர் மிகவும் அமைதியானவர், ஆனால் மிகவும் தீவிரமாக வேலை பார்க்கும் ஒரு இயக்குநர். அவர் குழுவை முன்னேற்றும் விதமும், ஒவ்வொரு விஷயத்தையும் சீராக செய்து முடிப்பதும் அவருடைய மிகப்பெரிய பலம். இப்படிப்பட்ட இயக்குநர்களுடன் வேலை செய்வது எங்களுக்கு ஒரு பெரிய அனுபவம்.
லெஜண்ட் சரவணன் சார் பற்றி எல்லோரும் பல விஷயங்கள் சொன்னார்கள். இந்தப் படத்தின் மூலம் அவர் ஒரு புதிய முகத்தை காட்டியிருக்கிறார். ஒரு தயாரிப்பாளர் அல்லது வணிகராக மட்டும் அல்லாமல், முழுமையான அர்ப்பணிப்புடன் உழைக்கும் ஒரு நடிகராக அவர் இந்தப் படத்தில் தன்னை நிரூபித்திருக்கிறார். இந்தப்படம் தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய ஹீரோவை அறிமுகப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். ‘லீடர்’ எனக்கு மிகவும் முக்கியமான படம். இந்தப் படத்தில் நான் செய்த வேலை எனக்கு ஒரு தனி திருப்தியை கொடுத்துள்ளது. இந்தப்படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படக்குழுவில் இருந்த அனைத்து நடிகர்களுக்கும், தொழில்நுட்பகலைஞர்களுக்கும் என் நன்றிகள். ‘லீடர்’ படம் கண்டிப்பாக ஒரு பெரிய வெற்றி பெறும். அனைவரும் திரையரங்கில்சென்று பார்த்து ஆதரிக்க வேண்டும், நன்றி,” என்றார்.
இயக்குநர் துரை செந்தில் குமார் பேசுகையில், “லீடர் எனது ஆறாவது படம். என்னுடன் பணியாற்றிய என் குழுவினர் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றி. கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்களின் கடின உழைப்பே இந்தப் படத்தை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது. வசனங்களில் உதவிய அருண், நடிப்பு பயிற்சியாளர் ராஜேஷ் – உங்களுக்கும் என் நன்றி. இந்தக் குழுவின் ஆதரவு இல்லாமல் இந்தப் படத்தை நான் உருவாக்கியிருக்க முடியாது.
முதலில் இசையமைப்பாளர் ஜிப்ரான் சார் பற்றி சொல்ல வேண்டும். இந்தத் திரைப்படம் ஆரம்பித்தவுடன் நாங்கள் நினைத்த பெயர் ஜிப்ரான் சார் தான். அவருடன் பணியாற்றியது ஒரு தெய்வீகமான அனுபவமாக இருந்தது. சில நேரங்களில் நான் அவருக்கு அழைக்க நினைக்கும் தருணத்திலேயே அவர் என்னை தொடர்பு கொள்வார். எங்களுக்குள் ஒரு ஆன்மீக இணைப்பு போல இருந்தது.
ஒரு ஆக்ஷன் காட்சிக்கு சக்திவாய்ந்த முருகன் பாடல் தேவை என்று நினைத்தேன். நான் ஒரு குறிப்பை காட்டியபோது, அது ஏற்கனவே ஜிப்ரான் சார் உருவாக்கிய ஆன்மிக இசை என்று தெரிய வந்தது. அந்த மாதிரி ஒரு அதிசய ஒத்திசைவு இந்தப் படமெங்கும் இருந்தது. இந்தப் படத்தின் உயர்வுக்கு அவருடைய இசை மிகப் பெரிய காரணம், மிகவும் நன்றி சார்.
என்னுடைய நண்பர்களான ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் மற்றும் கலை இயக்குநர் துரைராஜ் இந்தப் படத்திற்கு 200 சதவீதம் உழைத்துள்ளனர். நல்ல நண்பர்கள் கிடைப்பது ஒரு வரம். கருத்து கேட்கும் போது நேர்மையான பதிலை வழங்குவார்கள் – அது மிகவும் முக்கியம். எடிட்டர் பிரவீன் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர் மகேஷ் மாத்யூ – உங்களுக்கும் என் நன்றி. இயக்குநரின் பார்வையை முழுமையாக புரிந்து கொண்டு அதை திரையில் கொண்டு வரும் கலைஞர்கள் மிகவும் அரிது. அந்த வகையில் நீங்கள் இருவரும் எனக்கு மிகப் பெரிய ஆதரவாக இருந்தீர்கள். பிரவீன் என் எண்ணங்களை திரையில் அழகாக வெளிப்படுத்தினார்.
நடிகர்கள் பற்றி பேச வேண்டும். ஷாம் சார் – உங்கள் வருகை அந்தக் கதாபாத்திரத்தை உயர்த்தியது. சந்தோஷ் சார், பாயல் – ஒரு இயக்குநர் மீது எவ்வளவு நம்பிக்கை வைக்கலாம் என்பதற்கு நீங்கள் எடுத்துக்காட்டு. அது எனக்கு நல்ல பொறுப்புணர்வை அளித்தது. ஆண்ட்ரியா மேடம், விவேகா சார், மோகன் ராஜ் – அனைவருக்கும் என் நன்றி. குறிப்பாக விவேகா சாருடன் பணியாற்ற வேண்டும் என்ற என் ஆசை இந்தப் படத்தில் நிறைவேறியது. இந்தப் படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு துறையினருக்கும் – ஒளிப்பதிவு குழு, எடிட்டிங் குழு, விளக்குப் பணியாளர்கள், தயாரிப்பு குழு – அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. கடைசியாக இயல் நீங்கள் இயற்கையான திறமை கொண்டவர். உங்கள் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கும்.
இறுதியாக… லெஜெண்ட் சார். இந்தப் படம் தொடங்குவதற்கு முன்பு நான் பல சிரமங்களை சந்தித்தேன். பல கதைகள் இருந்தும் அது படமாக மாறவில்லை. அந்த நேரத்தில் தான் லெஜெண்ட் சாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதே நேரத்தில் ‘கருடன்’ வாய்ப்பும் வந்தது. நான் ஒரு திரைப்படத்தை முடித்து விட்டு வருகிறேன் என்று சொன்னபோது, “நான் உங்களுக்காக காத்திருக்கிறேன், இந்தப் படத்தை நாம்தான் செய்யப் போகிறோம்” என்று அவர் கூறினார். அந்த நம்பிக்கையே இந்தப் படத்தின் அடித்தளம். அவரின் ஆற்றல் பற்றி சொல்ல வேண்டும் என்றால் – அது ஒரு துப்பாக்கியிலிருந்து பாயும் குண்டு போல இருக்கும். எந்த நேரத்திலும் அதே உற்சாகம். நேரத்திற்கு முன்பே வந்துவிடுவார்.
“நமக்காக நூறு பேர் வேலை செய்கிறார்கள்; நாம் தாமதிக்கக் கூடாது” என்று அவர் சொல்வார். அது எனக்கு ஒரு பெரிய பாடமாக இருந்தது. மகாபாரதத்தில் அர்ஜுனன் பறவையின் கண் மட்டுமே பார்க்கிறான் என்று சொல்வார்கள். அதுபோல வெற்றி மட்டுமே அவரின் இலக்கு. அவரின் ஆற்றல் ஒரு தீ போல. அந்த ஆற்றலை அவர் தனது ரசிகர்களிடமும் பரப்பியிருக்கிறார். அனைவருக்கும் இப்படம் கண்டிப்பாக பிடிக்கும், நன்றி,” என்றார்.
லெஜெண்ட் சரவணன் பேசுகையில், “இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் ஆகியோருக்கு நன்றி. இன்றைய சூழலில் போர் மேகங்கள் சூழ்ந்து மக்களுக்கு ஒரு பாதுகாப்பாற்ற தன்மை நிலவிக் கொண்டிருக்கிறது இந்தப் போர் விரைவில் நிறுத்தப்பட்டு மக்கள் அனைவரும் மீண்டும் மகிழ்ச்சியாக சந்தோஷமான, பாதுகாப்பான, ஒரு அன்பான வாழ்க்கையை வாழ உங்களுடன் சேர்ந்து இறைவனிடம் நானும் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.
‘லெஜெண்ட்’ படத்திற்குப் பிறகு என்னுடைய இரண்டாவது படம் ‘லீடர்’. இப்படம் வரும் ஏப்ரல் மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் கதை என்னவென்றால் ஒரு அப்பாவியான அப்பாவும் பிள்ளையும், மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். திடீரென்று அவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய கேங்ஸ்டர் கும்பல் ஒன்று நுழைகிறது, அதற்கு பிறகு நடக்கும் விஷயங்களை இயக்குநர் துரை செந்தில்குமார் இன்றைய இளைய தலைமுறையினருக்கு பிடிக்கும் வகையில் நேர்த்தியாகவும், அழகாகவும் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் அவர் தன்னை முழுதாக அர்ப்பணித்துக் கொண்டார். எவர் ஒருவர் வேலையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு வேலை செய்கிறார்களோ அந்த வேலை அற்புதமாக அமையும், இந்த படமும் மிகப் பிரம்மாண்டமாக இருக்கிறது.
இந்த படத்தில் குத்துப் பாடல்கள் கிடையாது. ஆனால் இந்த படத்தில் கதையுடன் பயணப்படுவது போல் பாடல்கள் இருக்கின்றன, அதற்கான வரிகளும் இருக்கின்றன. இசையமைப்பாளர் ஜிப்ரான் மிகப் பிரமாதமாக இசையமைத்திருக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா, ஜெய்ப்பூர், ஊட்டி, தூத்துக்குடி, சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றது. கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை ஒரு டிரெயினில் படமாக்கிக் கொண்டிருந்தோம். குறுகலான இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு சண்டை கலைஞர்களுடனும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுடனும் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது என்னுடைய தயாரிப்பு நிர்வாகியை அழைத்து இங்கு எத்தனை ஆம்புலன்ஸ் இருக்கிறது என்று கேட்டேன், ஒன்றுதான் என்றார். உடனடியாக மேலும் இரண்டு அல்லது மூன்று ஆம்புலன்ஸ்களை வரவையுங்கள், ஏனென்றால் இங்கு யாருக்கு எப்படி எங்கு அடிப்படும் என்று தெரியவில்லை. எனக்கு கூட அடிபடலாம் அதனால் தயாராக இருக்க வேண்டும் என்று சொன்னேன், ஆனால் கடவுள் அருளால் அந்த கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் யாருக்கும் பெரிதாக அடிபடவில்லை. பத்தாவது நாளில் எனக்கு காலில் லேசாக அடிபட்டது, தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தலாமா, வேண்டாமா, என்ற நிலை ஏற்பட்டது. என்னுடன் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை மனதில் வைத்து அவர்களை காத்திருக்க வைக்க வேண்டாம், கூடாது என்பதற்காக உடனடியாக முதலுதவி நிவாரண சிகிச்சையை எடுத்துக்கொண்டு படப்பிடிப்பில் தொடர்ந்து கலந்து கொண்டேன். இதற்கான ஆற்றல் கடவுளின் ஆசீர்வாதத்தாலும் இயக்குநர் உள்ளிட்ட குழுவினர் கொடுத்த உற்சாகத்தாலும் வந்தது. இதற்காக அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர், ஆர்ட் டைரக்டர், ஸ்டண்ட் மாஸ்டர், நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
படபிடிப்பு தளத்தில் அறந்தாங்கி நிஷா, பேபி இயல், ஜார்ஜ் மரியன், பாகுபலி பிரபாகர், சந்தோஷ் பிரதாப், ஷாம், லால், அமிர்தா ஐயர், ஐஸ்வர்யா லட்சுமி, ஆண்ட்ரியா, பாயல் ராஜ்புத் ஆகியோருடன் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. இந்தப் படத்தை பார்த்த தனுஷ், வெற்றிமாறன் போன்றோர் படம் பிரம்மாண்டமானதாக இருக்கிறது என்று பாராட்டு தெரிவித்தார்கள்.
இந்தத் திரைப்படம் ‘ஜெயிலர்’ போன்றோ அல்லது ‘விக்ரம்’ போன்றோ, ‘லியோ’ போன்ற மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது, ஏனெனில் அதற்குண்டான தகுதி அனைத்தும் ‘லீடர்’ படத்தில் இருக்கிறது. ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். வரும் குட் ஃப்ரைடே அன்று இப்படம் ரிலீஸ் ஆகிறது, குடும்பத்துடன் அனைவரும் தியேட்டருக்கு வந்து படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள், உங்களுக்கு 100% இந்த திரைப்படம் திருப்தி அளிக்கும்.
இந்த படத்தின் மீது நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை உங்கள் மீது நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும் என்பது எங்களுடைய நம்பிக்கை. கோடைகால விடுமுறையை ‘லீடர்’ உடன் கொண்டாடுங்கள்.
“கடவுள் எந்த உதவியையும் நேரடியாக செய்வது இல்லை, எல்லா நல்லதும் நல்ல மனிதர்கள் மூலமாக தான் நடக்கும். நாம அவங்கள தான் நம்பணும். நீங்க என்னை நம்புங்க” என இந்தப் படத்தில் ஒரு வசனம் இடம் பிடித்திருக்கிறது, அது எனக்கு மிகவும் பிடித்த வசனம். இந்தப்படம் கண்டிப்பாக உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்,” என்றார்.
‘லீடர்’ திரைப்படத்தில் பாயல் ராஜ்புத் கதாநாயகியாக நடிக்கிறார். ஷாம், ஆண்ட்ரியா ஜெரேமியா, லால், பிரபாகர், அம்ரிதா ஐயர், விடிவி கணேஷ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தூத்துக்குடி, ஜெய்ப்பூர், ஊட்டி, ஜார்ஜியா மற்றும் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது.
ஜிப்ரான் வைபோதாவின் இதயம் தொடும் இசை, ஒளிப்பதிவாளர் எஸ். வெங்கடேஷின் அற்புதமான கேமரா கோணங்கள், பிரதீப் இ. ராகவின் விறுவிறு படத்தொகுப்பு மற்றும் மகேஷ் மேத்யூவின் பரபரப்பான சண்டை காட்சிகளுடன், ஆக்ஷன், சஸ்பென்ஸ் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த முழுமையான படமாக, ‘லீடர்’ உருவாகியுள்ளது.
இப்படத்தை லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. வரும். ஏப்ரல் 3ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது
கலகலப்பான பொலிடிகல் காமெடி கமர்ஷியல் படமான “TN 2026” வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது!!
KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி தயாரிப்பில், உமாபதி ராமையா இயக்கத்தில், நட்டி நாயகனாக நடிக்க, பரபரப்பான பொலிடிகல் காமெடி கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “TN 2026”. இப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
அரசியல் பகடி கலந்து, சமூக அக்கறை மிக்க கருத்துக்களுடன் அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
தற்போது வெளியாகியிருக்கும் போஸ்டரில், நட்டி நடுநாயகமாக மேடையின் மீது கையை உயர்த்தி நிற்க, அருகில் முக்கிய கதாப்பாத்திரங்கள் கோஷமிட, சுற்றிலும் பெரும் கூட்டம் கொடிகள் மற்றும் பகடியான வசன பதாகைகளுடன் சூழ்ந்து நிற்கிறது. பார்த்தவுடன் ஈர்க்கும் இந்த போஸ்டர் இணையம் முழுவதும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
தம்பி ராமையா கதை எழுதியுள்ள இப்படத்தை திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் உமாபதி ராமையா. தமிழ் திரையுலகில் தரமான வெற்றிப் படங்களை தொடர்ந்து வழங்கி வரும் KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி இப்படத்தை தயாரித்துள்ளனர்.
நட்டி நட்ராஜ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், சிருத்தா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த் நாயகிகளாக நடித்துள்ளனர். எம். எஸ். பாஸ்கர், இளவரசு, தம்பி ராமையா ஆகியோர் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர். மேலும் ரெடின் கிங்ஸ்லி, லொள்ளு சபா மாறன், பிக்பாஸ் முத்துக்குமரன், ஆதித்யா கதிர், சித்ரா லட்சுமணன், தலைவாசல் விஜய், வையாபுரி, வடிவுக்கரசி, விஜி சந்திரசேகர், ஸ்ரீஜா ரவி, இந்திரஜா ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். சாண்டி கேமியோ கதாப்பாத்திரத்தில் தோன்றியுள்ளார்.
இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
தொழில்நுட்பக் குழு:
திரைக்கதை & இயக்கம் – உமாபதி ராமையா கதை – தம்பி ராமையா இசை – தர்புகா சிவா ஒளிப்பதிவு – பி. ஜி. முத்தையா எடிட்டிங் – அரள் R. தங்கம் கலை – NK ராகுல் ஸ்டண்ட் – மகேஷ் மேத்யூ நடனம் – சாண்டி, பிரவீன் தயாரிப்பு மேற்பார்வை – ஶ்ரீநாத் விஸ்வநாதன் தயாரிப்பு – கண்ணன் ரவி, தீபக் ரவி மக்கள் தொடர்பு – AIM சதீஷ்
தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவான ZEE5 ஒரிஜினல் சீரிஸ் ‘காக்கி சர்கஸ்’ ஏப்ரல் 10 முதல் ஸ்ட்ரீமிங்காகிறது!
குற்றத்திற்கு எல்லைகளும் இல்லை, மொழி தடைகளும் இல்லை; அந்த உண்மையை எதிர்பாராத வகையில் உயிர்ப்பிக்கிறது ‘காக்கி சர்கஸ்’ –
தமிழ் மற்றும் மலையாள ZEE5 இன்று தங்களது அடுத்த ஒரிஜினல் சீரிஸான ‘காக்கி சர்கஸ்’ ஐ அறிவித்துள்ளது. வித்தியாசமான நகைச்சுவை, அதிரடி, கற்பனை மற்றும் திரில்லர் அம்சங்கள் கலந்த இந்த ஏழு எபிசோடுகள் கொண்ட சீரிஸ், ஒரு சப்-ஜெயிலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. தயாரிப்பு நிலையில் ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காயம்குளம் ( ‘Once Upon a Time in Kayamkulam’ ) என்ற பெயரில் உருவான இந்த சீரிஸ், தற்போது ‘காக்கி சர்கஸ்’ என்ற புதிய பெயரில் பார்வையாளர்களை சந்திக்க வருகிறது. இந்த சீரிஸின் தனித்துவமான நகைச்சுவை, விசித்திரமான கதாபாத்திரங்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிரம்பிய உலகத்தை இந்த தலைப்பு அழகாக பிரதிபலிக்கிறது.
இந்த சீரிஸை அமீன் பாரிஃப் எழுதி இயக்கியுள்ளார். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ளார். மேலும், முனிஷ்காந்த், சுபாஷ் செல்வம், ராஜேஷ் மாதவன், கவுதமி நாயர், வின்சு ரேச், சவித்திரி, அம்ருதா, அப்துல் லீ, மருதுபாண்டியன், ராகேஷ் உஷார், விக்னேஷ்வர், அருண்குமார் பவும்பா மற்றும் சித்திரசேனன் உள்ளிட்ட பல திறமையான நடிகர்கள் இதில் நடித்துள்ளனர்.
தமிழ் டிரெய்லர் லிங்க் – https://www.youtube.com/watch?v=OAAEON0n5wE
அமைதியான ஒரு கடற்கரை நகரத்தில் நடைபெறும் விசித்திரமான குற்றச் சம்பவம், ஒரு சப்-ஜெயிலை முழுமையான குழப்பத்தில் ஆழ்த்துகிறது. காரணம், யாரோ ஒருவர் சிறையிலிருந்து தப்பிச் செல்லாமல், தடைகளை உடைத்து அதற்குள் நுழைகிறார் ! புத்தகங்களில் மூழ்கியிருக்கும் ஒரு ஜெயிலரும், அளவுக்கு மீறிய ஆர்வமுள்ள ஒரு கான்ஸ்டபிளும் இந்த புதிரை புரிந்துகொள்ள போராடும் நிலையில், மர்மமான திருடன் பல அடிகள் முன்னிலையில் இருந்து, தான் உருவாக்கிய இந்த குழப்பங்களை ரசித்தபடி இருக்கிறான். சாதாரண ஊர்மக்கள், தங்களைத் தாங்களே டிடெக்டிவ்களாக நினைக்கும் சிலர், தெரியாமலே இதற்குள் சிக்கிக்கொள்ளும் கைதிகள் — இவர்கள் அனைவரும் சூழ்நிலையை இன்னும் வினோதமாக மாற்ற, இந்த வழக்கு எதிர்பாராத திருப்பங்களுடன் கூடிய பரபரப்பான வேட்டையாக மாறுகிறது. இங்கே எதுவுமே எளிதல்ல, ஒவ்வொன்றும் இன்னும் பல விசித்திரமான உண்மையை மறைத்து வைத்திருக்கிறது.
இயக்குநர் அமீன் பாரிஃப் கூறுகையில்…, “இந்த கதை என்னை மிகவும் கவர்ந்தது. ஏனெனில் இது நமக்குத் புதுமையான கதைக்களத்தில் விளையாடும் ஒரு அரிய வாய்ப்பை இது தந்தது — ஒரு பக்கம் நகைச்சுவை, ஒரு பக்கம் திரில்லர், இன்னொரு பக்கம் வித்தியாசமான கற்பனை, ஆனால் அதே சமயம் ஒரு சிறிய நகரத்தின் இயல்பான உண்மைத்தன்மையையும் இழக்காமல் கதை சொல்ல முடிந்தது. தயாரிப்பின் ஆரம்ப நிலையில் இருந்தபோதே, இந்த சீரிஸின் மையம் அதன் கதாபாத்திரங்கள்தான் என்பதை நாங்கள் உணர்ந்தோம். குழப்பத்தின் மத்தியில் அவர்கள் வெளிப்படுத்தும் விசித்திரமான, நகைச்சுவையான, மனித மனதின் இயல்பான குறைகளுடன் கூடிய உணர்வுகளே இக்கதையின் இதயம். இந்த கதையை அதன் அனைத்து தனிச்சிறப்புகளுடனும் சொல்ல ZEE5 எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்தது. நாங்கள் உருவாக்கிய இந்த ‘சர்க்கஸ்’ உலகத்தை பார்வையாளர்கள் ரசிப்பதைக் காண நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என்றார்.
நடிகர் முனிஷ்காந்த் கூறுகையில், “நான் இதுவரை நடித்தவற்றில் இருந்து முற்றிலும் வேறுபட்ட அனுபவமாக இருந்தது ‘காக்கி சர்கஸ்’. இது கணிக்க முடியாத, வேகமாக நகரும், அதே நேரத்தில் நகைச்சுவையுடனும், நிஜத்தன்மையுடனும் நிறைந்த கதாபாத்திரங்களை கொண்ட ஒரு சீரிஸ். இதில் எனக்கு மிகவும் பிடித்தது — நகைச்சுவைக்கும் பதற்றத்துக்கும் இடையிலான அசாதாரண சமநிலை. ஒவ்வொரு காட்சியும் எந்த விதமாகவும் மாறிவிடும் என்ற உணர்வு இருக்கும். இது புதுமையானது, நம் மண்ணின் வாசனையுடன் கூடிய கதை, மிகவும் வேடிக்கையானதும் கூட. இப்படிப்பட்ட கதைகளுக்கு ZEE5 போன்ற தளம் கிடைப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.” என்றார்.
பார்வையாளர்களுக்கு எதிர்பாராத சுவாரஸ்யங்களும், பரபரப்பும், வித்தியாசமான நகைச்சுவையும் கலந்த ஒரு விருந்தாக அமைய உள்ள ‘காக்கி சர்கஸ்’, தமிழ் மற்றும் மலையாள ZEE5 தளங்களில் ஏப்ரல் 10 முதல் ஒளிபரப்பாகவுள்ளது.
ZEE5 பற்றி: ZEE5 என்பது பாரதத்தின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாகும். ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்தின் ஒரு பகுதியாக செயல்படும் ZEE5, பல மொழிகளில் கதைகளை சொல்லும் தளமாக விளங்குகிறது. 4,071+ திரைப்படங்கள், 1,800+ டிவி நிகழ்ச்சிகள், 422+ வெப் ஒரிஜினல்ஸ், 4,492+ இசை வீடியோக்கள் மற்றும் 1.35 லட்சம் மணிநேரத்திற்கு மேற்பட்ட ஆன்-டிமாண்ட் உள்ளடக்கங்களை கொண்ட விரிவான நூலகத்தை இது வழங்குகிறது. 12 மொழிகளில் – இந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, மலையாளம், கன்னடம், மராத்தி, ஆங்கிலம், ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி – தனிப்பயன் மற்றும் ஹைப்பர்-லோக்கல் சந்தா திட்டங்களுடன் உள்ளடக்கம் வழங்கப்படுகிறது. உலகளாவிய டெக் கூட்டாளிகளுடன் உருவாக்கப்பட்ட வலுவான டீப்-டெக் கட்டமைப்பு, பல சாதனங்கள் மற்றும் இயக்க முறைமைகளில் தடையற்ற பார்வை அனுபவத்தை ZEE5 வழங்க உதவுகிறது.
Yearly orders grew from 91 in 2019 to over 33,247 in 2025
Brand now spans 10+ restaurants and 20+ food trucks across Coimbatore, Trichy, Erode, and Palakkad
Coimbatore, 27 March 2026: Street Arabiya, a popular Mediterranean food destination from Coimbatore, has recorded a ~365x growth in yearly order volumes since onboarding on Zomato in 2019. What started as a single food truck has now grown into a widely loved regional brand, bringing Mediterranean flavours with a South Indian twist to customers across multiple cities.
Speaking about the journey, Ahamed Shahabath said, “When we started Street Arabiya with a single food truck, our goal was to introduce authentic Mediterranean and Arabic cuisine while adapting the flavours to suit South Indian tastes. Over the years, the response from customers has been incredible. What began as a small experiment has now grown into a multi-city brand, and Zomato has played a key role in helping us reach a wider audience while scaling our operations.”
Aditya Mangla, CEO, Zomato, said, “The trust customers place in Street Arabiya has been built plate by plate over the years. We’re glad to be part of their journey by supporting them with aggregated insights and platform connections that help them grow further.”
Founded by three engineers- Ahamed Shahabath N, Yasar Arafath, and Jansa Mohammed in 2017, Street Arabiya began its journey with a single food truck in Podanur, Coimbatore, with the aim of making Mediterranean food more accessible. Over the years, the brand has steadily expanded and today operates 10+ restaurants and 20+ food trucks across Coimbatore, Trichy, Erode and Palakkad.
The restaurant offers more than 20 varieties of shawarmas, along with popular dishes such as Alfahams, Kebabs, Mandhi, and other Mediterranean specialties. With a clear focus on quality, hygiene and innovation over the years, Street Arabiya has balanced authentic Arabic flavours with local preferences and successfully built a loyal customer base across the region.
Since onboarding on Zomato, the brand has:
Achieved 365x growth in yearly order volumes over six years, increasing from 91 in 2019 to 33247 in 2025
The brand generated ₹8 lakh in commissionable value last year. Owing to the positive impact and improved performance, the restaurant increased the investment and take a more aggressive growth approach. As a result, within four months, it reached ₹20 lakh in commissionable value driven by the following factors:Advertisement servicesMenu EngineeringPromo Codes Business insights via the RP (Restaurant Partner) app
To help small restaurants scale quickly, Zomato has introduced several initiatives in recent years. These include a DIY onboarding tool that helps restaurants get listed on the platform in just 15 minutes, and access to the Restaurant Services Hub, a curated marketplace of verified vendors offering licensing, staffing, and hygiene audit services. In select cities, new restaurants also benefit from 0% commission for the first 30 days, along with credits for ads and Hyperpure services. As of Q3 FY26, Zomato has an average of 336,000 monthly active food ordering and delivery restaurant partners on the platform.
Chennai , March 27, 2026: India doesn’t have a ‘pause’ button and neither do the people driving it forward. At TECNO, we believe technology should keep up with that pace. The TECNO SPARK 50 5G is built for the unpredictable flow of Indian life – where long days, constant movement and real-world challenges are the norm. From long commutes to dust, drops and sudden monsoon showers, the device is designed to keep up, bringing together style, endurance and everyday toughness so your digital life moves as consistently as you do.
This idea of resilience extends beyond everyday life and onto the cricket field. TECNO’s association with Chennai Super Kings is rooted in the same belief – consistency under pressure and unwavering support. With the #TECNOGotYourBack campaign, TECNO stands firmly behind both the team and the millions of fans who continue to show up, no matter the conditions.
Commenting on the launch and partnership, Mr. Arijeet Talapatra, CEO, TECNO Mobile India, said: “In a market as fast-moving as India, people aren’t just looking for a list of specs; they’re looking for a partner that can actually keep up with their day. With the TECNO SPARK 50 5G, we’ve moved beyond jargon to focus on what truly matters in the real world – dependability, endurance and performance that keeps up through long, demanding days and unpredictable conditions.
At TECNO, we don’t aim to be the trophy in your hand, we aim to be the spine that helps you stand tall enough to reach for it, which is the thought behind #TECNOGotYourBack – our commitment to being the ‘Backbone of Bharat.’ This belief also reflects in our association with Chennai Super Kings, where consistency under pressure defines true champions and by placing our logo on the back of the CSK helmet, we are making a clear statement – we are right there, backing those who inspire millions, both on and off the field.”
Design shouldn’t just look good on a shelf, it should reflect the energy of the person holding it. Inspired by the premium shades of nature, the TECNO SPARK 50 5G comes in Fantasy Purple, Mint Green, Champagne Gold and Ink Black, balancing style with a build that’s ready for everyday life, reinforced with Military Grade MIL STD-810H Protection and IP64 Pro protection. Beyond the design, the 6500mAh battery keeps you going through long days, while FreeLink 2.0 technology helps you stay connected even in no-network zones. Combined with 5G+ carrier aggregation, it ensures a stable, reliable experience across environments.
On the software front, the device integrates features like Segment 1st All Scenario Active Noise Cancellation, AI WhatsApp Assistant, Ella Alarm Announcement, AI Writing Assistant, AI Eraser 2.0, AI Image Extender and Ella-powered tools, along with a 120Hz display for smoother, more responsive interactions.
The TECNO SPARK 50 5G is priced at ₹16,999 for the 4GB + 128GB variant and ₹18,999 for the 6GB + 128GB variant. The device will be available starting April 3rd across online and offline retail channels, along with no-cost EMI options for up to 8 months.
With the TECNO SPARK 50 5G, the brand continues to focus on delivering practical, reliable smartphones tailored for India’s fast-moving consumers.
தமிழ் சினிமாவில் ஹாரர் ஜானர் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. ஆனால் எல்லா ஹாரர் படங்களும் ஒரே மாதிரி jump scare-களில் நம்பிக்கை வைக்கும் நிலையில், “Sathan: The Dark” ஒரு வித்தியாசமான முயற்சி. இது வெறும் பயமுறுத்தும் படம் இல்லை — ஒரு இருண்ட, மன உளைச்சல் தரும் அனுபவம்.
கதை British காலத்தில் நடந்த ஒரு தவறான கருப்பு மந்திர சடங்கு (black magic ritual) மூலம் ஆரம்பமாகிறது. அந்த சடங்கு சரியாக நிறைவேறாமல் போனதால், ஒரு தீய சக்தி உருவாகிறது.
அந்த சாபம் ஒரு குறிப்பிட்ட கிராமத்தை தலைமுறைகள் கடந்தும் தாக்கிக்கொண்டே இருக்கும். மக்கள் அங்கு விசித்திரமான மரணங்கள், பயங்கரமான சம்பவங்கள், மற்றும் unexplained incidents-ஐ சந்திக்கிறார்கள்.
Present timeline-ல், ஒரு இளைஞன் இந்த கிராமத்துக்கு வருகிறான். அவன் காதலி இந்த சக்தியால் பாதிக்கப்படும்போது, அவன் அந்த பழைய இரகசியத்தை ஆராய ஆரம்பிக்கிறான்.
அந்தச் சாத்தானிய சக்திகளை எதிர்கொண்ட, தனது காதலியை அந்தப் பரம்பரைச் சாபத்திலிருந்தும், சாத்தானின் பிடியிலிருந்தும் எஃப்.ஜே மீட்டெடுத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
Heroine – பயம், குழப்பம் போன்ற உணர்வுகளை நன்றாக காட்டுகிறார்.
Supporting characters – சிலர் natural-ஆ இருக்கிறார்கள், சில இடங்களில் acting average feel தருகிறது.
Overall, star value இல்லாததால் realism இருக்கிறது.
இயக்குனர் ஒரு strong concept எடுத்திருக்கிறார்,ஆரம்பம் slow-ஆ build ஆகிறது,screenplay சில இடங்களில் confusing ஆகிறது,second half-ல் clarity இன்னும் better இருந்திருக்கலாம்.
காதல் திருமணம் என்றாலே பிடிக்காத குடும்பத்தை சேர்ந்த சுதர்சன் கோவிந்த் ஐடி கம்பெனியில் வேலை செய்கிறார்.உண்மையான காதலுக்காக ஏங்கும் ஒரு சராசரி மனிதன்.அவர் காதலர்களுக்காக நீ பார் எவர் என்ற ஒரு டேட்டிங் ஆப்பை உருவாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.ஏன் நேரத்தில் அர்ச்சனா ரவி திரைப்படத்தில் ஒரு இயக்குனராக முயற்சி செய்து கொண்டிருக்கிறார் ஒரு காதல் கதையை எடுத்து எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார்.இந்த சூழலில் அவர் ஒரு டேட்டிங் ஆப்பிள் யாராவது ஒருவரை சந்தித்து அவரிடம் காதலிப்பது போல் பழகி அந்த உண்மையான காதலை வைத்து ஒரு திரைக்கதை எழுத முயற்சி செய்கிறார்.அதே நேரத்தில் சுதர்சன் கோவிந்த் தனது ஆப்பிற்காக ஒரு பெண்ணிடம் பழக நினைக்கிறார் இருவரும் ஒரு சூழலில் ஆப் மூலம் பழக இவர்களுக்குள் ஒரு உண்மையான காதல் உருவானதா இல்லை அவர்கள் ஒருவரை ஒருவர் ஏமாற்றி பழகுவது தெரிகிறதா.இறுதியில் அந்த காதல் உண்மையானதாக மாறி வெற்றி பெற்றதா குடும்பத்தினர்கள் ஏற்றுக் கொண்டார்களா? அஜயன் தாத்தா காதலை வெறுக்கும் நிலையில் இந்த காதலை ஏற்றுக் கொள்கிறாரா என்பதுதான் நீ பார் எவர் படத்தின் திரைக்கதை இந்தப் படத்தின் நாயகனாக சுதர்சன் கோவிந்த் நல்ல உயரமான ஒரு உருவம் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் காதலுக்காக ஏங்கும் நிலையை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். அர்ச்சனா ரவி திரைக்கதில் ஒரு முக்கியமான கதாபாத்திரமாக வலம் வரும் நாயகி. நாயகனின் தாத்தாவாக வை ஜி மகேந்திரன் காதலுக்கு எதிரியாக வருகிறார். பொதுவாகவே இந்த மாதிரி திரைப்படத்திற்கு இசை என்பது மிகவும் உறுதுணையாக இருக்கும் இந்த படத்திற்கு ஓரளவுக்கு உறுதுணையாக இருக்கிறது அஸ்வின் ஹேமந்த் இன் இசை. ஒளிப்பதிவு கிராமத்தையும் பொள்ளாச்சியின் பசுமியையும் மிக அழகாக காட்டியுள்ளார்கள் இயக்குனர் அசோக் குமார் கலைவாணி இன்றைய தலைமுறைகளை குறி வைத்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார் அதில் அவர் சென்றடைவார் என்று நம்புவோமாக மொத்தத்தில் நீ பார் எவர் இன்றைய தலைமுறைக்கு எட்டா கணி
ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘முத்து என்கிற காட்டான்’ இணையத் தொடருக்கான பத்திரிகையாளர் சந்திப்பு
‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் மணிகண்டன் – பி. அஜித் குமார் இயக்கத்தில் ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் மார்ச் மாதம் 27 ஆம் தேதி முதல் வெளியாகும் ‘முத்து என்கிற காட்டான்’ பத்து அத்தியாயங்கள் கொண்ட இணையத் தொடரை விளம்பரப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
தேசிய விருது வென்ற படைப்பாளியான இயக்குநர் மணிகண்டன் மற்றும் இயக்குநரும், படத்தொகுப்பாளருமான பி. அஜித் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘முத்து என்கிற காட்டான்’ இணையத் தொடரில் விஜய் சேதுபதி, மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், முத்துக்குமார், சிங்கம் புலி, கலைவாணி பாஸ்கர், வி ஜே பார்வதி, ரிஷா ஜேக்கப், வடிவேல் முருகன், அபி நட்சத்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். மது நீலகண்டன் மற்றும் சண்முகசுந்தரம் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த இணையத் தொடருக்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார். ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்திற்காக இந்த இணையத் தொடரை விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் விஜய் சேதுபதி தயாரித்திருக்கிறார்.
மார்ச் 27 ஆம் தேதி முதல் ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் இந்த இணையத் தொடரை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் இணையத் தொடர் குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் ஜியோ ஹாட் ஸ்டார் நிறுவனத்தின் தென்னிந்திய பிரிவிற்கான தலைவர் கிருஷ்ணன் குட்டி பேசுகையில், ” முத்து என்கிற காட்டான் இணைய தொடரை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம். கடந்த மூன்று ஆண்டுகளில் ஜியோ ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியான 40 நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பேற்று இருக்கிறேன். அதில் முத்து என்கிற காட்டான் சீரிஸ் சிறப்பானது. இந்த முயற்சி ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தின் அடுத்த கட்ட நகர்விற்கான முயற்சி என நம்புகிறோம். இதில் விஜய் சேதுபதியின் பங்களிப்பு மிகவும் ஸ்பெஷலானது. கதையின் முதல் அத்தியாயத்தில் ஹீரோவின் தலை மட்டும்தான் இடம்பெறும். இது வித்தியாசமானது.
இந்த குழுவினருடனான பயணம் மிகவும் நீண்டது. கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டு காலம் இவர்களுடன் பயணித்திருக்கிறோம். பயணம் முழுவதும் அன்பால் நிறைந்திருந்தது. விஜய் சேதுபதியின் தயாரிப்பு நிறுவனத்துடன் நாங்கள் முதல்முறையாக இணைந்திருக்கிறோம். விஜய் சேதுபதியுடன் ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இணைந்து பணியாற்றிருக்கிறோம். இதற்காக விஜய் சேதுபதிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த இணையத் தொடரை முன்னின்று இயக்கிய இயக்குநர் மணிகண்டனுக்கும் நன்றி. அவர்தான் இந்த இணைய தொடருக்கு முதுகெலும்பாக திகழ்ந்தார். இயக்குநர் அஜித்குமார், கதாசிரியர் ராஜ்குமாருக்குநன்றி. நடித்த நடிகர்கள் நடிகைகள் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த இணைய தொடர் நாடு கடந்து அனைத்து ரசிகர்களையும் சென்றடைந்து வெற்றி பெறும் ” என்றார்.
ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தின் கன்டென்ட் பிரிவின் மூத்த துணைத் தலைவர் பிரதீப் பேசுகையில், ” இந்த ப்ராஜெக்டை இயக்குநர் மணிகண்டன் எங்களிடம் முதன் முதலாக சொன்ன போது எங்கள் அனைவருக்கும் பிடித்திருந்தது. அதன் பிறகு விஜய் சேதுபதியை சந்தித்தோம். அப்போது அவர் இந்த கதையை நான் ஆத்மார்த்தமாக செய்கிறேன். எனக்கு இதைப் பற்றி நன்றாகத் தெரியும். இதை குறிப்பிட்ட நாளில் நிறைவு செய்ய இயலாது. இந்தப் ப்ராஜெக்ட் எத்தனை நாட்கள் நடைபெற்றாலும் நான் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவேன் என வாக்குறுதி அளித்தார். ஒரு நட்சத்திர நடிகரிடம் இருந்து இப்படி ஒரு வாக்குறுதி கிடைப்பது பெரிய விசயம். அந்த நம்பிக்கை எங்களை ஊக்கப்படுத்தியது. நாங்கள் இதுவரை தயாரித்த தயாரிப்புகளில் இதுதான் மிகப்பெரிய பட்ஜெட்.
பணிகளை தொடங்கினோம். ஆனால் தடங்கல் வேறு வடிவத்தில் வந்தது. இதன் படப்பிடிப்பு 20 நாட்கள் வரை நடந்த பிறகு பட்ஜெட் காரணமாக தயாரிப்பாளர்கள் பலரும் பின் வாங்கினர். இதனால் இந்த ப்ராஜெக்ட் நின்று விடுமோ..! என்ற நிலை ஏற்பட்டபோது.. நான் விஜய் சேதுபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினேன். இந்த ப்ராஜெக்ட்டை நீங்கள் தயாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டேன். சிறிது நேரம் யோசித்து விட்டு பிறகு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் மாறினார்.
இதை நான் ஏன் பகிர்ந்து கொள்கிறேன் என்றால் நாங்கள் கர்ப்பரேட் உலகத்தில் உள்ளவர்கள். அங்கு கோடு போட்ட இடத்தில் கையெழுத்து போட்டுவிட்டால் அதன் பிறகு எதுவும் செய்ய முடியாது. இந்த சூழலை புரிந்து கொண்டு எங்களுக்கு இறுதி வரை உறுதுணையாக நின்றார் விஜய் சேதுபதி. இதற்காக அவருக்கு மீண்டும் ஒரு முறை நன்றியை சொல்கிறேன்.
தமிழில் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகி வெளியான இணைய தொடர் இதுதான் என்பதை எங்களால் உறுதியாக சொல்ல முடியும். இந்த கதை தொடங்கும் போது பார்வையாளராக பார்ப்பது கதையின் நாயகனுடைய வெட்டப்பட்ட தலை மட்டும்தான். இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் எந்த துறையிலும் மிகப்பெரிய நட்சத்திர நடிகர் இது போன்றதொரு கதைக்கு ஆம் என்று சொல்லவே மாட்டார்கள். அதை சொல்லும் தைரியம் விஜய் சேதுபதிக்கு மட்டும்தான் இருக்கிறது. அதுதான் இந்த இணைய தொடரின் பிரம்மாண்டம். அந்த வெட்டுப்பட்ட தலையை பார்த்த பிறகு இந்த கதையை யாராலும் முழுமையாக பார்க்காமல் இருக்க முடியாது.
அத்துடன் இந்த இணையத் தொடரில் தமிழகத்திலிருந்து மட்டுமல்லாமல் கேரளாவில் இருந்தும் மும்பையில் இருந்தும் நிறைய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அதனால் இது பான் இந்திய அளவிலான ப்ராஜெக்ட் தான் ” என்றார்.
இயக்குநர் – படத்தொகுப்பாளர் பி. அஜித் குமார் பேசுகையில், ” விஜய் சேதுபதி- இயக்குநர் மணிகண்டன் -ஜியோ ஹாட்ஸ்டார் ஆகியோருக்கு முதலில் நன்றி. நான் முதலில் பட தொகுப்பாளராகத்தான் பணியாற்றினேன். முதல் கட்ட படப்பிடிப்பிற்கு பிறகு.. இயக்குநருடனான கதை விவாதம் தொடர்ந்து நடைபெற்றது. பிரதீப் குறிப்பிட்டதை போல் இதற்கு தடங்கல் ஏற்பட்ட போது நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் எங்களுக்கு உறுதுணையாக ஆதரவளித்தார்கள். ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் எங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்கியது. அதிலும் குறிப்பாக படைப்பு தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக விஜய் சேதுபதி தயாரிப்பு நிறுவனம் முழுமையான பங்களிப்பை வழங்கியது.
இணைந்து பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் ஒவ்வொரு வரும் திறமைசாலிகள். ஒவ்வொரு வரும் கடுமையாக உழைத்தனர். இதில் இடம்பெறும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்கள் கூட தங்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை வழங்கினர். இந்த இணைய தொடருக்கான மணிகண்டனின் ஐடியா மிகவும் அருமையானதாக இருந்தது. இதனை நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து பேசி இன்று அனைவரும் பார்த்து ரசிக்கும் வகையிலான படைப்பாக வழங்கி இருக்கிறோம். இதற்காக உழைத்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இணையத் தொடர் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்” என்றார்.
நடிகர் மிலிந்த் சோமன் பேசுகையில், ” இந்த மேடையில் நிற்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழில் தயாராகும் இணைய தொடரில்,இதில் தான் முதன் முதலாக நடித்திருக்கிறேன். இதற்காக விஜய் சேதுபதி மணிகண்டன் ஜியோ ஹாட் ஸ்டார் அடங்கிய இந்த குழுவினருக்கு என் முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதிலும் குறிப்பாக இந்த கதையின் தொடக்கம் முன்னணி நட்சத்திர நடிகர் ஒருவரின் வெட்டப்பட்ட தலையில் இருந்து தொடங்குகிறது. இதுவே எனக்கு ஆச்சரியத்தை தந்தது. இந்தப் படத்தில் இடம்பெற்ற அந்த கதாபாத்திரத்திற்கு நான் ஏன்? என்ற கேள்வியை இயக்குநரிடம் கேட்டபோது , அவர் அதற்கான விளக்கத்தை முழுமையாகவும், நேர்த்தியாகவும் அளித்தார். என் மீது நம்பிக்கை வைத்து அந்த கதாபாத்திரத்தை வழங்கியதற்காக இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
என் கதாபாத்திரம் மட்டுமல்ல இந்த தொடரில் பணியாற்றிய அனைவரும் ஒன்றிணைந்து குழுவாக பணியாற்றினார்கள். அதுவும் என்னை கவர்ந்தது. இதற்காகவும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
ஒளிப்பதிவாளர் சண்முகசுந்தரம் பேசுகையில், ” விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றும் மூன்றாவது படைப்பு இது. மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் பணியாற்றினேன். அதன் பிறகு விஜய் சேதுபதி நடித்த’ 96 ‘படத்தில் பணியாற்றினேன். இந்த ரெண்டு படமும் ஹிட். தற்போது மூன்றாவது முறையாக இணைந்து இருக்கிறோம். இதுவும் வெற்றி பெறும்.
இதுபோன்ற திரைக்கதைகளை மணிகண்டனால் தான் கையாள முடியும். காக்கா முட்டை படத்திற்கு முன் வின்ட் ( Wind) என்றொரு குறும்படத்தை அவர் இயக்கி இருந்தார். அதில் இரண்டே கதாபாத்திரங்கள் தான். ஒன்று சடலம் . மற்றொன்று விஜய் சேதுபதி. அது ஒரு குறும்படம் போல் இருக்காது. திரைப்படம் போல் இருக்கும். அதைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன்.
‘கடைசி விவசாயி’ படத்தை பார்த்துவிட்டு விஜய்யிடம் பேசினேன். ஒவ்வொரு பிரேமையும் உங்கள் இருவரது உழைப்பையும் பார்த்து ரசித்தேன் என்றேன். இந்த இணையத் தொடரில் விஜய் சேதுபதி ஆக்சன் திரில்லர் ஜானரில் நடித்திருக்கிறார். இதில் மிகப்பெரிய ஆக்சன் காட்சிகள் இருக்கிறது. அது அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்” என்றார்.
ஒளிப்பதிவாளர் மது நீலகண்டன் பேசுகையில், ” திறமையான நட்சத்திரங்களுடனும் அற்புதமான தொழில்நுட்ப கலைஞர்களுடனும் இணைந்து பணியாற்றிய இந்த படைப்பில் என்னுடைய பங்களிப்பும் இருந்ததை பெருமிதமாக நினைக்கிறேன்” என்றார்.
இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் பேசுகையில், ” இந்த குழுவினருடன் இணைந்து பயணித்த அனுபவம் மகிழ்ச்சியானதாக இருந்தது. மணிகண்டன் கதையை சொன்ன தருணத்திலிருந்து இதில் வேலை செய்தது மறக்க முடியாத அளவிற்கு திரில்லிங்காக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்த நடிகரான விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றுவதும் சந்தோஷமாக இருந்தது. முதலில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் குட்டி குட்டியான பாடல்களை இடம்பெற வைக்கலாம் என்றுதான் விவாதித்தோம். ஆனால் திரைக்கதை நிறைவாகும் போது மூன்று பாடல்கள் மட்டுமே இடம்பெற்றது. அதில் ஒரு பாடலுக்கான மெட்டை உருவாக்கியது விஜய் சேதுபதி தான். படப்பிடிப்பு தளத்தில் அவர் அந்த சூழலில் உச்சரித்தது எனக்கு பிடித்திருந்தது. அதையே மெருகேற்றி பாடலாக உருவாக்கினோம்” என்றார்.
கதாசிரியர் ஆர். ராஜ்குமார் பேசுகையில், ” இதில் இயக்குநர் மணிகண்டனுடன் இணைந்து திரைக்கதை உருவாக்கத்தில் பங்கு பெற்றேன். அந்த அனுபவம் சிறப்பானதாக இருந்தது. இயக்குநர் மணிகண்டன் சிறந்த நண்பர். காக்கா முட்டை படத்திற்கு முன்பிருந்தே பழக்கம். ஒரு பத்து பதினைந்து ஆண்டு கால நண்பர். அந்த தருணத்தில் இருந்து என்னுடைய திரைக்கதைக்கு அவர் உதவி செய்வார். அவருடைய திரைக்கதைக்கு நான் உதவி செய்வேன்.
இந்த இணைய தொடருக்காக மணிகண்டனின் ஐடியா ஸ்பெஷல் ஆக இருந்தது. இது மணிகண்டனின் அப்பாவின் வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவம். அதை விவாதித்து விரிவு படுத்தலாம் என பேசத் தொடங்கினோம். மாதக்கணக்கில் விவாதித்தோம். தலை கிடைத்து விட்டது முண்டம் எங்கே? அவன் நல்லவனா? கெட்டவனா? கொலைகாரனா ?கொள்ளைக்காரனா? என விசாரிப்பது போல் ஏராளமான கிளை கதைகளை உருவாக்கி, சுவாரசியமான புதிய எதிர்பாராத திருப்பங்களுடன் இதனை உருவாக்கினோம். இது ஒரு வகையான புது முயற்சி. இதற்கு வாய்ப்பளித்த மணிகண்டனுக்கு நன்றி.
நாங்கள் இருவரும் பேசிய விசயங்களை வைத்து இன்னும் இரண்டு இணைய தொடர்களை உருவாக்கலாம். அந்த அளவிற்கு கதாபாத்திரங்களை பற்றி பேசி இருக்கிறோம்.
இந்த கதையை விஜய் சேதுபதி தேர்வு செய்தது மிகப்பெரிய விசயம். எந்த ஒரு மாஸ் ஹீரோவும் இதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனால் விஜய் சேதுபதி இந்த ஸ்கிரிப்டை பெரிதாக நம்பினார். இதற்காக அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த இணைய தொடர் ஒரு புது முயற்சி புது முயற்சியை எப்போதும் தமிழ் ரசிகர்கள் கொண்டாடுவார்கள்” என்றார்.
நடிகை அபி நட்சத்திரா பேசுகையில், ” இந்த படைப்பில் ஒரு பகுதியாக இருந்ததற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தக் குழு மிகப் பெரியது. இந்த படைப்பும் பிரம்மாண்டமானது. நான் மிகவும் துறுதுறுவென இருக்கும் சிட்டு எனும் கேரக்டரில் நடித்திருக்கிறேன். இந்த கேரக்டர் அனைவருக்கும் பிடிக்கும். விஜய் சேதுபதி சார் எனக்கு நிறைய முறை மோட்டிவேஷன் கொடுத்திருக்கிறார். இந்த இணைய தொடர் ரசிகர்களின் ஆதரவுடன் பெரிய அளவில் வெற்றி பெறும்” என்றார்.
நடிகை வி ஜே பார்வதி பேசுகையில், ” இந்த நாளிற்காக நிறைய ஆண்டுகள் காத்திருந்தேன். இயக்குநர் மணிகண்டனின் குழுவில் இருந்து பேசிய போது நான் முதலில் நம்பவில்லை. அதன் பிறகு மணிகண்டனுடன் இணைய வழியிலான சந்திப்பிற்குப் பிறகு நம்பிக்கை வந்தது. ஏனெனில் அவருடைய படைப்புகளை பார்த்து தான் நான் வளர்ந்திருக்கிறேன். உசிலம்பட்டிக்கு வர சொன்னார்கள், நான் நவீன உடையில் சென்றிருந்தேன். அங்கு சென்ற பிறகு காஸ்டியூம் டிசைனர் எனக்கு மதுரை பெண் கதாபாத்திரத்திற்கான ஆடையை வழங்கினார். எந்தவித மேக்கப்பும் இல்லாமல் அந்த டிரஸ்ஸை அணிந்து போட்டோ சூட்டுக்காக நின்ற போதுதான் நான் லலிதா எனும் கதாபாத்திரமாகவே தெரிந்தேன். அதை நான் என்னுடைய பாக்கியமாகவும், எனக்கு கிடைத்த ஆசீர்வாதமாகவும் கருதுகிறேன். விஜய் சேதுபதி – மணிகண்டன் கூட்டணி என்றால் எல்லோருக்கும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். இதில் லலிதாவாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. நிச்சயம் என்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும்” என்றார்.
நடிகை ரிஷா ஜேக்கப் பேசுகையில், ” கொஞ்சம் பதற்றமாக இருக்கிறது. நிறைய மேடைகளில் பேசி இருக்கிறேன். ஆனால் இந்த மேடை எனக்கு மிகவும் புதிதாக இருக்கிறது. மிகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். கலவையான உணர்விலும் இருக்கிறேன். இந்தப் படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு அளித்ததற்காக விஜய் சேதுபதி சார்க்கும் இந்த இணைய தொடரின் படப்பிடிப்பில் கலந்து கொண்டதன் மூலம் நான் நிறைய விசயங்களை கற்றுக் கொண்டேன். எதை… எதுவரை செய்யலாம்… எதை செய்யக்கூடாது… என்பதை எல்லாம் இதில் கற்றுக் கொண்டேன். என்னுடன் இணைந்து பணியாற்றிய ஒட்டுமொத்த குழுவினருக்கும் நன்றி” என்றார்.
நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில், ” முத்து என்கிற காட்டான் இந்த வெப்சீரிசை தொடங்கியதிலிருந்து இந்த தருணம் வரை இதற்கு பின்னால் நடைபெற்ற விசயங்களை வைத்து இரண்டு மூன்று தொடர்களை உருவாக்கலாம். அனைத்தையும் கடந்து இன்று இந்த இணைய தொடர் வெளியாவதற்க்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. குறிப்பாக ஜியோ ஹாட் ஸ்டார் நிறுவனத்திற்கு பெரிய நன்றி.
நான் அவர்களுக்கு ஆதரவளித்ததாக அவர்கள் சொல்லலாம். ஆனால் அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கை தான் இதற்கு முக்கிய காரணம். நான் இங்கு வந்த பிறகுதான் தெரிந்து கொண்டேன். தமிழில் உருவான மிகப்பெரிய வெப் சீரிஸ் இதுதான் என்று. இந்த அனுபவத்தில் என்னுடன் இருந்த பிரதீப்பிற்கு மிக்க நன்றி. பிக் பாஸ் ஆக இருந்தாலும் இந்த இணைய தொடராக இருந்தாலும் அவரின் பங்களிப்பு சிறப்பானது.
ஒரு நாள் நான் அலுவலகத்தில் இருந்தேன் பிரதீப் வந்தார். சோபாவில் சாய்ந்து அமர்ந்தார். என்னையும் சாய்ந்து அமரும்படி சொன்னார். நானும் சாய்ந்து அமர்ந்தேன். நான் உங்களிடம் ஒன்று கேட்பேன் அதற்கு நீங்கள் மறுப்பு தெரிவிக்க கூடாது என்று பேசத் தொடங்கினார். அது எனக்கு மேரேஜ் ப்ரோபோசல் போலிருந்தது. அவர் என்ன கேட்பார் ? என்பது குறித்து யோசித்துக் கொண்டே இருந்தேன். அவர் பிக் பாஸில் நீங்கள் தான் தொகுப்பாளராக பணியாற்ற வேண்டும் என சொன்னார். சொன்னவுடன் நான் என்ன சார் அதில் பெரிதாக செய்யப் போகிறேன். அதை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் அதை பார்த்தது கூட கிடையாது. சிம்பு அல்லது சூர்யாவிடம் கேட்டுப் பாருங்கள் சிம்புவுக்கு இதில் ஏற்கனவே அனுபவம் இருக்கிறது என்று சொன்னேன். ஆனால் பிரதீப் நீங்கள் செய்யுங்கள் என்று கேட்டார்.
இதுபோல் பல சமயங்களில்… இன்று நான் வாழ்க்கையில் ஓரளவிற்கு இந்த நிலையில் இருக்கிறேன் என்றால் நான் பெரிதாக அனுபவம் இல்லாத ..அறிமுகம் இல்லாத.. ஏதோ ஒரு காரணத்தால் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைதான் என்னை முன்னால் அழைத்துச் சென்று இருக்கிறது. என் மீது எனக்கு பெரிதாக நம்பிக்கை இருந்ததில்லை.
ஒரு வேலை செய்து அதை மற்றவர்கள் பார்த்து பாராட்டும் போது தான் எனக்கு தெரியவரும் ‘ஓ இந்த வேலையை என்னால் சிறப்பாக செய்ய முடியும்’ என்று. அதற்கு முன் எனக்குத் தெரியாது. ஆனால் அதற்கு முன் என் மீது நம்பிக்கை வைக்கும் மனிதர்கள் இருக்கிறார்கள். இதுதான் எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம். இதில் மணிகண்டனும் அப்படித்தான் இருந்தார். இப்படி பலர் என் வாழ்க்கையில் இருந்திருக்கிறார்கள். என் மேல் நம்பிக்கை வைத்து நண்பர்கள் இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். இதுபோல் பலர் என்னை நம்பியதால் தான் நான் என்னை நம்பத் தொடங்கினேன். அந்த வகையில் என் மீது நம்பிக்கை வைத்த பிரதீப் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.
மணிகண்டனுக்கும் எனக்குமான அறிமுகமும் நட்பும் எதேச்சையாக ஒரு நாள் நடந்தது. அவருடைய நண்பர் வினோத் என்பவர் மூலமாக மணிகண்டனின் குறும்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அது இன்று இங்கு வரை அழைத்து வந்திருக்கிறது.
மணிகண்டனின் அறிவு எனக்கு எப்போதும் ஆச்சரியத்தை தரும். ஒவ்வொரு விசயத்தையும் அவர் பார்க்கும் கோணங்கள் வித்தியாசமாக இருக்கும். இங்கு அவருடன் பணியாற்றியவர்கள் அனைவருக்கும் தெரியும் ..அவர் ஒரு விசயத்தை பார்த்தவுடன் மிக விரைவாக புரிந்து கொள்வார். அவர் நடிகர்களிடமிருந்து மிக எளிதாக நடிப்புத் திறனை வாங்கி விடுவார். சில சமயங்களில் நடித்து முடித்த பிறகு தான் அவர் அந்த காட்சியில் அவ்வளவு விசயங்களை யோசித்து வைத்திருக்கிறார் என்பது புரியும். அப்படி என்னை எப்போதும் ஆச்சரியப்படுத்தும் மனிதர்தான் அவர்.
2008 முதல் இப்போது வரை அவரை எனக்குத் தெரியும். அவர் எழுதுவது எல்லாம் சுவாரசியமாக இருக்கும். ஆச்சரியமாகவும் இருக்கும். இந்த வெப் சீரிஸ் உள்பட பல அற்புதமான படங்களை வழங்கி இருக்கிறார் அற்புதமான பாடல்களையும் அளித்திருக்கிறார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மணிகண்டனால் தொடர்ந்து பணியாற்ற முடியாத ஒரு சூழல் வந்த போது எடிட்டராக பணியாற்றிய அஜித்குமார் இயக்கினார். இந்த வெப் சீரிஸ் எப்படி செல்லும் என்ற ஒரு கேள்வி எனக்குள் இருந்தபோது.. அஜித் அதை அழகாக அவருடைய கையில் எடுத்துக்கொண்டு தெளிவாக நிறைவு செய்தார். இதற்காக அவருக்கும் நன்றி.
ஒரு கட்டத்தில் மணிகண்டன் இல்லாத போது அஜித் குமார் இதை இயக்கும்போது நான்தான் அவருக்கு உதவியாக இருக்கும் என்று ‘உடன் பால்’ படத்தினை இயக்கிய இயக்குநர் கார்த்திக்கை அழைத்து இதில் பணியாற்றுமாறு கேட்டுக் கொண்டேன். நம்ம ஊரைப்பற்றி உணர்வுபூர்வமாக தெரிந்தவர் என்பதால் அவரிடம் உரிமையுடன் கேட்டேன். என் அழைப்பை ஏற்று இதில் பணியாற்றியதற்காக அவருக்கும் நன்றி.
இதில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர், நடிகர்கள், நடிகைகள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. முத்து என்கிற காட்டான் இணைய தொடர் மார்ச் 27 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் இல் வெளியாகிறது. எல்லோருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்
Chennai, 27 March 2026: Indian Institute of Technology Madras (IIT Madras) today announced a generous commitment from IIT alumnus Arvind Raghunathan to the Centre for Theoretical Computer Science. The newly established centre, named the Arvind Raghunathan Centre for Theoretical Computer Science (ARtCS), will advance the mathematical foundation of computer science through deep, curiosity-driven research and provide an enduring intellectual home for long-term theoretical inquiries.
Prof. V. Kamakoti, Director of IIT Madras, expressed his gratitude saying, “The generosity of Mr. Raghunathan and his continued commitment to the students of IIT Madras through ARtCS will advance innovative research in the field of computational science at an exciting time in this field.”
Mr. Raghunathan said, “My transformative five years at IIT Madras fostered an unrelenting curiosity in me, and I hope that ARtCS will provide future generations with access to world-class professors and research in their intellectual pursuits in theoretical subjects.”
ARtCS will strengthen IIT and India’s representation in theoretical computer science, a field that forms the bedrock of all computational innovation, by fostering foundational research and nurturing students at the bachelor’s, master’s, doctoral, and postdoctoral levels. It will promote foundational research in cryptography, computational complexity, algorithms, graph theory logic and databases, theoretical machine learning, quantum computing and privacy in AI.
After earning a degree in electrical engineering from IIT Madras, Mr. Raghunathan went on to obtain his Ph.D. in computer science from the University of California, Berkeley. A brief stint in academia was then followed by a successful career in equity proprietary trading at Credit Suisse and Deutsche Bank, after which Mr. Raghunathan went on to found a number of businesses, including a large hedge fund, and, most recently two companies in the fintech / investment management and AI space.
About Roc360:
Roc360 is a vertically integrated financial services and investment platform focused on the residential real estate investor market. The company leveraged AI and data-driven analytics to provide end-to-end solutions to real estate investors, spanning loan origination, underwriting, servicing, asset management, insurance, and valuation.
About HouseIQ:
House IQ is a leading technology company that enhances the entire homeownership experience. It delivers AI guidance throughout the home lifecycle, from search and purchase to improvement, management, and resale. The company’s mission is to create thoughtful technology that makes finding and managing a home simpler and more joyful, encapsulated in its commitment to delivering “Your Home. One Intelligent App.”