Breaking
April 27, 2024

ஹனு மான் திரைவிமர்சனம் 

சிறு கிராமத்தில் தன் அக்கா வரலக்ஷ்மியுடன் வாழும் கதாநாயகன் தேஜா சஜ்ஜா ஜாலியான சின்ன சின்ன திருட்டு செயல்களை செய்து கொண்டு எந்த ஊரில் வேலை வெட்டி இல்லாமல் வெட்டியாக ஊரைச் சுற்றி திரிகிறான்.

தலைவரான ராஜ் தீபக் ஷெட்டி கிராமத்து மக்கள் அனைவரிடமும் வரி வாங்கி கொண்டு ஊரை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்கிறார்..

யாராவது கிராமத்து தலைவரான ராஜ் தீபக் ஷெட்டி எதிர்த்து பேசினாலோ அல்லது வரி கட்டவில்லை என்றாலும் மல்யுத்த என்ற போட்டி மூலம் எதிர்ப்பவரை கொல்வது அவர் வழக்கமாக வைத்திருக்கிறார்.

இந்நிலையில் கதாநாயகன் தேஜா சஜ்ஜாவின் பள்ளி பருவ காதலியான கதாநாயகி அமிர்தா நாயர் அந்த கிராமத்துக்கு மருத்துவராக வருகிறார்

ஒரு கட்டத்தில் கதாநாயகி அமிர்தா நாயரை கொள்ளையர்கள் தாக்க அவரை காப்பாற்ற கதாநாயகன் தேஜா சஜ்ஜா கொள்ளையர்களிடம் போராடும் போது கொள்ளையர்கள் தாக்கியதில் மயக்கமான நிலையில் இருக்கும் கதாநாயகன் தேஜா சஜ்ஜாவிடம் ஹனுமானின் ரத்த துளியால் உருவான சக்தி வாய்ந்த கல்லான ருத்ர கல் ஒன்று கதாநாயகன் தேஜா சஜ்ஜா கையில்
கிடைக்கிறது.

சூரிய சக்தியால் அந்த ருத்ர கல்லில் மூலம் மாபெரும் சக்தியில் மிகப்பெரிய பலசாலியாக உருவெடுப்பதோடு மட்டுமல்லாமல் அந்த கிராமத்து தலைவரான ராஜ் தீபக் ஷெட்டியை அடித்து பந்தாடி அந்த கிராமத்து மக்களை கதாநாயகன் தேஜா சஜ்ஜா காப்பாற்றுகிறார் .

இந்த ருத்ர கல்லின் சக்தியை தெரிந்துக்கொள்ளும் வில்லன் வினய். கல்லுடன் சேர்த்து மாபெரும் சக்தியை கைப்பற்ற கதாநாயகன் தேஜா சஜ்ஜாவை இருக்கும் கிராமத்துக்கு தேடி வருகிறார்.

இறுதியில் கதாநாயகன் தேஜா சஜ்ஜாவிடம் ஹனுமானின் சக்திவாய்ந்த ருத்ர கல்கிடைத்ததற்கான காரணம் என்ன ?

கதாநாயகன் தேஜா சஜ்ஜாவிடமிருந்து அந்த ருத்ர கல்லை கைப்பற்ற நினைத்த வில்லன் வினய்யின் சதி திட்டம் பலித்ததா ? பலிக்கவில்லையா ? என்பதுதான் இந்த ‘ஹனு-மான்’. திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘ஹனு-மான்’ திரைப்படத்தில் கதாநாயகனாக தேஜா சஜ்ஜா நடித்திருக்கிறார்.

நாயகனாக நடிக்கும் தேஜா சஜ்ஜா துறுதுறு இளைஞனாக நடிப்பின் மூலம் அசத்தி இருக்கிறார்

ஹனுமந்து கதாபாத்திரத்திரமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் வகையில் சக்தி கொண்ட சூப்பர் ஹீரோவாக நடிப்பில் ஜொலிக்கிறார் 

ருத்ர கல்லின் சக்தி மூலம் அவர் செய்யும் சாகசங்களை காமெடி கலந்த நடிப்பில் தெலுங்கு கதாநாயகர்கள் திரைப்படங்களில் செய்வதை சொல்லும்போது முடிவில் தெலுங்கு ஸ்டார் பாலகிருஷ்ணாவை போல ரயிலை நிறுத்துவதற்காக கிளம்பும் காட்சியில் விசில் சத்தத்தில் தியேட்டரே அதிர்கிறது.

இந்த ஹனு-மான் திரைப்படத்தில் கதாநாயகியாக அமிர்தா ஐயர் நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் அமிர்தா ஐயர் கதைக்கேற்றபடி சிறப்பான நடிப்பை கொடுத்து அசத்தி இருக்கிறார்.

கதாநாயகன் தேஜா சஜ்ஜாவின்அக்காவாக நடிக்கும் வரலட்சுமி சரத்குமார் வழக்கம்போல் மிகவும் அருமையாக அவருடைய கதாபாத்திரத்தை உணர்ந்து மிரட்டி இருக்கிறார்.

ஸ்டைலிஷ் வில்லனாக மிரட்டும் வினய் ராய்,கிராமத்து தலைவராக பயமுறுத்தும் ராஜ் தீபக் ஷெட்டி, சிரிக்க வைக்கும் வெண்ணிலா கிஷோர் ,
சமுத்திரக்கனி என அனைத்து கதாபாத்திரங்களில்  நடித்தவர்களும் மிகவும் இயல்பாக நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவாளர் தாசரதி சிவேந்திரனின் ஒளிப்பதிவு மூலம் கதைக்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறார்

இசையமைப்பாளர்கள் ஹனுதீப் தேவ், கெளரஹரி, கிருஷ்ணா செளரப் ஆகியோரது இசையும், மற்றும் பாடல்கள் பிண்ணனி இசை அனைத்து அருமையாக இருக்கிறது.

படத்தொகுப்பாளர் சாய் பாபு தலாரியின் படதொகுப்பு திரைப்படத்திற்கு பக்க பலமாய் இருக்கின்றது.

ஒரு கிராமத்தில் கதாநாயகனுக்கு சக்தி கிடைத்த பின் அந்த சக்தியினால் சூப்பர் ஹீரோவாக உருமாறி அவர் நிகழ்த்தும் சாகசங்களை கதையாக கொண்டு ஆன்மிகம் கலந்த விறு விறுப்பான திரைக்கதையுடன் குழந்தைகள் முதல் அனைவரும் சிரித்து மகிழ பேசிக்கொண்டே குரங்கு வரும் காட்சிகளும் ஹாலிவுட் திரைப்பட பாணியில் வடிவமைக்கப்பட்ட சிறப்பான காட்சிகளுடன் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் ஆன்மீகம் கலந்த ஃபேண்டஸி திரைப்படமாக திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் பிரசாந்த் வர்மா.

‘மதிமாறன் ‘திரை விமர்சனம்

கிராமத்தில்v எம் எஸ் பாஸ்கர். தபால்காரராக, இரட்டைக் குழந்தைகள் அதில் ஒருவர் செங்குட்டுவன் மற்றொருவர் இவானா இரண்டு குழந்தைகளும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

அதில் எம் எஸ் பாஸ்கரின் மகன் வளர்ச்சி குறைபாடு உள்ளவராக இருக்கிறார்.

படிப்பு மற்றும் திறமையை, தன் அறிவிலும் தொடர்ந்து நிரூபித்துக் உயர்ந்து கொண்டே இருக்கிறார்.

ஒன்றாக ஒரே வகுப்பில் படிக்கும் கதாநாயகி ஆராத்யாவிற்கும் செங்குட்டுவன் மீது காதல் மலாடுகிறது.

ஒருநாள், இவானா தனது கல்லூரி பணிபுரியும் பேராசிரியரோடு ஓடிவிட்டார் என்ற செய்தியறிந்து வீட்டில் அனைவரும் உறைந்து போகின்றனர்.

இவானா வயிற்றில் குழந்தையோடு கல்லூரி பேராசிரியர் உடன் ஓடிப்போன அவமானம் தாங்க முடியாமல் தூக்கு மாட்டிக் கொண்டு இறந்து விடுகிறார்கள்.

அதன்பின் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து கதாநாயகன் வெங்கட் செங்குட்டவன் கலங்கி நிற்கிறார்.

தனது சகோதரி இவானா மீது உள்ள கோபத்துடன் தன் சகோதரியை சந்திக்க சென்னை பயணப்படுகிறார்.

சென்னைக்கு வந்த கதாநாயகன் வெங்கட் செங்குட்டுவன் தன் சகோதரி இவனா வை சந்தித்தாரா? சந்திக்கவில்லையா?  சென்னையில் நடக்கும் தொடர்ந்து இளம்பெண்கள் கற்பழித்து கொலை செய்து கொண்டிருப்பது யார்? கொலை குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடித்தார்களா கண்டுபிடிக்கவில்லையா என்பதுதான் இந்த மதிமாறன் திரைப்படத்தின் மீதி கதை.

இந்த மதிமாறன் திரைப்படத்தில் கதாநாயகனாக வெங்கட் செங்குட்டுவன் நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் வெங்கட் செங்குட்டுவன், நெடுமாறன் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.

நடிகர் எம் எஸ் பாஸ்கரின் நாளுக்கு நாள் தன் அனுபவ நடிப்பால் அனைவரையும் கவர்ந்து கொண்டே செல்கிறார்

இந்த மதிமாறன் திரைப்படத்தில் இவானா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

நடிகை இவானா 
மிகவும் யதார்த்தமான நடிப்பை இந்த மதிமாறன் திரைப்படத்தில் கொடுத்து அனைவரையும் கவர்ந்திருக்கிறார்குற்ற உணர்ச்சியால் உருக்குலைந்து நின்று அழும் காட்சிகளில் திரையரங்கில் திரைப்படம் பார்க்கும் நம்மையும் அழ வைக்கும் அளவிற்கு நடிப்பைக் கொடுத்துவிட்டார்.

இந்த மதிமாறன் திரைப்படத்தில் கதாநாயகியாக ஆராத்யா நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் ஆராத்யா, கல்லூரியில் இளமையாகவும், காவல்துறை அதிகாரியாக மிடுக்கெனவும் தோன்றி கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்..

காவல்துறை ஆணையாளராக கதாபாத்திரத்தில் வரும் ஆடுகளம் நரேன், வாட்ச்மேன் கதாபாத்திரத்தில் வரும்பவா செல்லதுரை, சுதர்ஷன் கோவிந்த், பிரவீன் குமார் . E இந்த மதிமாறன் திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைவரும் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பர்வேஸ். ஒளிப்பதிவான் மூலம் திரைப்படத்திற்கு மாபெரும் அளவில் தூணாக நிற்கிறது.

இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமையாகவும் 
பின்னணி இசை புதுமையாகவும் திரைப்படத்திற்கு கூடுதல் வலு சேர்த்துள்ளது.

இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் இசை திரைப்படத்தின் தரத்தை பல மடங்கு உயர்த்தியிருக்கிறது.

மிகவும் அழகான ஒரு வாழ்வியலை கொண்டு வந்து கண்முன்னே நிறுத்தி அதில் உயிரோட்டமான திரைக்கதையை அமைத்து நல்ல ஒரு விருந்தாக மதிமாறனை திரைப்படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் மந்திர வீரபாண்டியன்.

2023 ஆம் ஆண்டின் இறுதியில் தமிழ் திரைப்பட உலகில் மிகச்சிறந்த படைப்பைக் கொடுத்து டாப் லிஸ்டில் மட்டுமல்லாமல் ஹிட் லிஸ்டிலும் இயக்குனர் வரிசையில் இணைந்து விட்டார் இயக்குனர் மந்திர வீரபாண்டியன்.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கும் இயக்குனர் மந்த்ரா

வீரபாண்டியன் குறைபாடுள்ள ஒரு மனிதனின் வாழ்க்கையை உணர்வுப்பூர்வமாக சொல்வதோடு, அதனுடன் ஒரு கிரைம் திரில்லர் கதையை சேர்த்து சொல்லிய விதம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறது.

OVER ALL RATTING…………..3/5

சலார் திரைவிமர்சனம்

ஸ்ருதிஹாசன் மற்றும் அவரது
தந்தையை ஏழு வருடமாக ஒரு மிகப்பெரிய கும்பல் தேடிக்கொண்டிருக்கிறது. கதாநாயகி திடீரென்று வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு திரும்புகிறார்.
அப்போது ஸ்ரேயா ரெட்டி தன்னிடமுள்ள ரவுடி கும்பலிடம் வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு வரும் கதாநாயகி ஸ்ருதிஹாசனை எங்கிருந்தாலும் கடத்தி வரச்சொல்கிறார். ஸ்ருதிஹாசனின் தந்தை மைம் கோபிக்கு போன் செய்து தன் மகள் இந்தியா வருவதாகவும் நீங்கள் தயவுசெய்து தன் மகளை காப்பாற்றுமாறு கேட்டுக்கொள்கிறார்.

இதைத்தொடர்ந்து கதாநாயகி ஸ்ருதிஹாசனை காப்பாற்றுவதற்காக கதாநாயகன் பிரபாஸ் களமிறங்குகிறார்.இறுதியில் கதாநாயகி ஸ்ருதிஹாசனை ஸ்ரேயா ரெட்டி கடத்துவதற்கான காரணம் என்ன? மைம் கோபியிடம் கதாநாயகி ஸ்ருதிஹாசனின் தந்தை மைம் கோபியிடம் என்ன சத்தியம் செய்து கொடுத்தார்? என்பதுதான் இந்த சலார் திரைப்படத்தின் மீதிக்கதை.

கதாநாயகன் பிரபாஸ் சண்டை காட்சிகளில் அமர்க்களம் படுத்திருக்கிறார். உயிர் நண்பனுக்காக உருகும் காட்சிகளில் திரைப்படம் பார்க்கும் நம்மையும் கண் கலங்க வைத்துவிட்டார்.

நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிருத்விராஜ் சுகுமாரன் கதாபாத்திரத்தை உணர்ந்து இருக்கிறார்.

மைம் கோபி தனது அனுபவம் நடிப்பை கொடுத்திருக்கிறார்.

மற்றும் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் ஜெகபதி பாபு, பாபி சிம்ஹா, ஈஸ்வரி ராவ், ஸ்ரேயா ரெட்டி, ஜான் விஜய் அனைவரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் புவன் கவுடாவின் ஒளிப்பதிவின் மூலம் திரைப்படத்தை மிரட்டி வைத்திருக்கிறார்.

இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசை மற்றும் பாடல் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

STAR RATTING…………….2.5/5

‘பைட் கிளப்’ திரை விமர்சனம்

ஃபைட் கிளப் மொத்த கதையும் வட சென்னையை மையப்படுத்தி நகர்கிறது.

கதாநாயகன் விஜய்குமார் கால்பந்தாட்டத்தில் மிகவும் ஆர்வமாக இருக்கும் கதாநாயகன் விஜய்குமாரை கால்பந்தாட்டத்தில் மிகப் பெரிய ஆளாக்க வேண்டும் என கார்த்திகேயன் சந்தானம் முயற்சி செய்கிறார்.

அண்ணன் கார்த்தி கேயன் சந்தனம் தன் பகுதி இளைஞர்களை எப்படியாவது கால்பந்தாட்ட வீரர்கள் ஆக்க வேண்டும் என பயிற்சி அளித்து வருகிறார்.

அண்ணன் கார்த்தி கேயன் சந்தனத்தின் தம்பி அவினாஷ் ரகுதேவன் தன் நண்பன் சங்கரதாஸ் இருவரும் சேர்ந்து போதைப்பொருள் மற்றும் கஞ்சா விற்கும் தொழிலாக செய்ய முடிவெடுக்கிறார்கள். தம்பி அவினாஷ் ரகுதேவன் அவருடைய நண்பன் சங்கரதாஸ் இருவரும் சேர்ந்துஆரம்பிக்கும் கஞ்சா விற்பனை செய்யும் தொழிலை அண்ணன் கார்த்தி கேயன் சந்தனம் தடுத்து நிறுத்துகிறார்.ஆத்திரம் அடைந்த அவினாஷ் ரகுதேவன் நண்பன் சங்கரதாஸ் சேர்ந்து கார்த்திகேயன் சந்தானத்தை இருவரும் கொலை செய்து விடுகிறார்கள்.

இந்தக் கொலை விஷயத்தில் உஷாராகும் சங்கரதாஸ் நைசாக அவினாஷ் ரகுதேவனிடம் பேசி சிறைக்கு அனுப்பி வைத்துவிட்டு சங்கரதாஸ் கட்சியில் சேர்ந்து  அரசியல்வாதி ஆகிவிடுகிறார்.கொலை பழியை ஏற்றுக்கொண்டு சிறைக்கு சென்று தண்டனைக் காலம் முடிந்து சிறையிலிருந்து வரும்  அவினாஷ் ரகுதேவன் தன்னை ஏமாற்றி சிறைக்கு அனுப்பிய  சங்கரதாஸ் எப்படியாவது பழிவாங்க வேண்டும் என முடிவு செய்கிறார்.அரசியல்வாதியான சங்கரதாசை நெருங்க முடியாததால் அப்பகுதியில் தன் அண்ணன் மீது மிகப்பெரிய அளவில் மரியாதை வைத்திருக்கும் கதாநாயகன் விஜயகுமார் மற்றும் நண்பர்களிடம் உருக்கமாக பேசி அவினாஷ் ரகுதேவன் தன் வலையில் விழ வைக்கிறார்.

கதாநாயகன் விஜயகுமார் மற்றும் நண்பர்களுக்கு போதை ஏற்றி சங்கரதாஸ்தான் கார்த்திகேயன் சந்தானத்தை கொன்றான் என சொல்லி சங்கரதாஸ் எப்படியாவது பழிக்கு பழி வாங்க வேண்டும் என கதாநாயகன் விஜயகுமாரை உசுப்பி விடுகிறார்.இந்தப் பிரச்சனை இருதரப்பு இரு உள்ளவரிடம் மிகப்பெரிய அளவில் மோதல் ஏற்படுகிறது. இரு தரப்பு கேங் வாரில் இரு தரப்பிலும் உயிர் சேதம் ஏற்படுகிறது.

ஒரு கட்டத்தில் அவினாஷ் ரகுதேவன் சதியை கதாநாயகன் விஜயகுமார் தெரிந்ததா? தெரியவில்லையா? அடுத்து நடக்கும் பயங்கரம் என்ன என்பதுதான் இந்த ஃபைட் கிளப் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ஃபைட் கிளப் திரைப்படத்தில் உறியடி திரைப்படத்தில் நடித்த விஜயகுமார் கதாநாயகனாக நடித்திருக்கிறார்

கதாநாயகன் விஜயகுமார் வடசென்னை  இளைஞனாக மிகவும் நார்மலாக நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக மோனிஷா மோகன் மேனன் ,பெரிதாக இந்த திரைப்படத்தில் வேலை இல்லை ஒரு சில காட்சிகளில் மட்டும் வருகிறார்.

கார்த்திகேயன் சந்தானம் ஒரு ஒரு சில காட்சிகளில் வந்திருந்தாலும் மனதில் பதிகிறார்.

சங்கரதாஸ் கத பத்திரத்தை உணர்ந்து மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.

அவினாஷ் ரகுதேவன் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் சரவணவேல், ஜெயராஜ், வடசென்னை அன்பு, சார்பட்டா சாய் தமிழ், மூர்த்தி, ஆதிரா பாண்டிலட்சுமி, திருநாவுக்கரசு, ஜீவா ரத்தினம், கிரண் பெருமாள், கானா மைக்கேல், ராகுல் குணசேகரன், C.சந்தோஷ் குமார், அரசன், மோகனக்கண்ணன், விக்னேஷ் வடிவேல், நவீன் விக்ரம், அருவி பாலா, அஸ்வின் ஈசன்கொண்டா, அனைத்து கதாபாத்திரங்களும் நடிப்பின் மூலம் பிரதிபலிக்கிறது.

ஒளிப்பதிவாளர் லியோன் பிரிட்டோ ஒலிப்பதிவு வடசென்னை கண் முன்னே நிறுத்திருக்கிறார்.

இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசை அனைத்தும் திரைப்படத்திற்கு அருமையாக அமைந்துள்ளது.

இந்த பைட் கிளப் திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமே ஒளிப்பதிவு மற்றும் இசை படத்தொகுப்பு இல்லையென்றால் திரைப்படம் சுமாராகத்தான் இருந்திருக்கும்.

பெரும்பாலான கதாபாத்திரங்கள் சிகரெட்,. கஞ்சா புகைப்பதும்  தண்ணியடிப்பதையும்  ரொம்பவே தவிர்த்திருக்கலாம்.

Overall rating———2

படம் முழுவதும் வரும் கஞ்சாவை குறைத்து இருந்தால் இன்னும் ரேட்டிங் அதிகரித்திருக்கலாம்

மொத்தத்தில் இது பைட் கிளப் அல்ல கஞ்சா கிளப்

‘ரூல் நம்பர் 4′ விமர்சனம்

பரபர சம்பவங்களும் விறுவிறு திருப்பங்களும் நிறைந்த படமாக உருவாகி வெளியாகியுள்ளது ‘ரூல் நம்பர் 4.’

நாயகன் ஏகே பிரதீப் கிருஷ்ணா ஏடிஎம் வேன் டிரைவராக பணிபுரிகிறான். அவனுக்கு ஒரு பெண் மீது காதல் உருவாக அதை அவளிடம் சொல்ல அவள் ஏற்க மறுக்கிறாள். ஆனாலும் விடாமல் அவளை துரத்தி தன் காதலை ஏற்க வைக்கிறான். பிறகுதான் தெரிகிறது தான் காதலித்த பெண் தன்னுடன் ஏடிஎம் வேனில் துப்பாக்கி சுமந்து கூடவே வரும் செக்யூரிட்டியின் மகள் என்பது. இப்படி சுவாரஸ்யமாக பயணிக்கும் கதையில்… அந்த பெண்ணின் அப்பாவிடம் விவரத்தை சொல்லி காதலுக்குச் சம்மதம் பெற ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்க நினைக்கிறார்கள். அதற்காக அதன்படி கோடிக்கணக்கான ரூபாயோடு ஏடிஎம் வேன் பயணிக்கும்போது இடையில் அவளை வேனில் ஏற்றிக் கொள்ள திட்டம் வகுக்கிறார்கள். அதன்படி அவளை ஏற்றிக் கொள்கிறார்கள். இப்போது வேனில் வேனை ஓட்டுகிற நாயகன், அவன் காதலிக்கும் பெண், அந்த பெண்ணின் தந்தை, பேங்க் மேனேஜர், கூடவே ஒரு கர்ப்பிணிப் பெண் என ஐந்து பேர் இருக்கிறார்கள். வேன் ஓடிக்கொண்டேயிருக்க, காதல் விவகாரத்தை அந்த அப்பாவிடம் சொல்லி அவருக்கு ஷாக் கொடுக்கிறார்கள்.

வேன் அப்படியே, காட்டிலாக்கா கட்டுப்பாட்டிலுள்ள ஏடிஎம் ஒன்றில் பணத்தை நிரப்புவதற்காக காட்டுப் பாதையில் நுழைகிறது. அந்த சமயத்தில் வேனிலிருக்கும் பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கத்தில் சிலரால் வேன் வழிமறிக்கப்பட்டு, அதிலிருப்பவர்கள் கொடூரமாக தாக்கப்படுகிறார்கள். வேனை பெட்ரோல் ஊற்றி கொளுத்தும் முயற்சியிலும் இறங்குகிறார்கள்.

அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காட்டிலாக்கா உயரதிகாரி பணத்தை தன் வசமாக்கிக்கொள்ள நினைத்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார்.

வேனிலிருப்பவர்கள் அந்த இக்கட்டான சூழலிருந்து தப்பிக்கப் போராடுகிறார்கள். அந்த முயற்சிக்கு பலன் கிடைத்ததா? கொள்ளையர்களின் நோக்கம் நிறைவேறியதா? என்பது கதையோட்டம். இயக்கம் பாஸர்

நாயகன் ஏகே பிரதீப் கிருஷ்ணா இளமையாக லட்சணமாக இருக்கிறார். நாயகியைக் கண்டதும் காதலில் விழுவது, அவளிடம் காதலுக்கு சம்மதம் பெற விதவிதமாக அணுகுவது என எளிமையாக நடித்தால் போதும் என்பது மாதிரியான கதாபாத்திரம். அதை சரியாக செய்திருக்கிறார்.

நாயகி ஸ்ரீகோபிகாவின் தேகத்திலிருக்கும் கேரளத்து வனப்பும் பளீர் புன்னகையும் வசீகரிக்கிறது. ஹீரோவை காதலிக்கும் காதலி என்ற எந்தவிதமான தனித்துவமும் இல்லாத வழக்கமான வேடமாக இருந்தாலும், கிளைமாக்ஸ் நெருங்கும்போது வேறொரு அவதாரமெடுத்து ஆச்சரியப்பட வைக்கிறார்.

நாயகியின் அப்பாவாக மோகன் வைத்யா. மகளின் காதல் விவகாரம் தெரிந்து கொதிப்பது, உயிருக்கு ஆபத்தான சூழலில் மனம் கலங்கித் தவிப்பது என நேர்த்தியான நடிப்பைத் தந்திருக்கிறார்.

காதலுக்கு பாலமாக இருக்க நினைத்து, நினைத்ததை செய்து முடித்து, கொள்ளையர்களால் பரிதாப முடிவை சந்திக்கிற ஜீவா ரவி, வேனில் பயணிக்கிற அந்த கர்ப்பிணிப் பெண், கொள்ளையர்களாக வருகிற முரட்டு ஆசாமிகள் என மற்ற நடிகர்கள் கதைக்கு தேவையான நடிப்பை குறையின்றி வழங்கியிருக்கிறார்கள்.

காட்டிலாக்கா காவல்துறை உயரதிகாரியாக வருகிற பிர்லா போஸின் வில்லத்தனம் கெத்து.

பரந்து விரிந்த கேரள காட்டுப் பகுதியின் செழுமையை அதன் அழகு மாறாமல் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் டேவிட் ஜான்.

‘என்ன கொன்னுபுட்டியே வெச்சு செஞ்சுபுட்டியே’, ‘சஸ்பென்ஸு ஓப்பன் ஆனதே’ பாடல்களில் தென்றலின் குளுமையைத் தந்திருக்கிற தீரஜ் சுகுமாறன், பின்னணி இசையில் காட்சிகளின் எதிர்பார்ப்பை முடிந்தவரை பூர்த்தி செய்திருக்கிறார்.

வேன் கடத்தல்காரர்களால் தாக்கப்பட்டு, உடன் வந்த ஒருவர் கொலை செய்யப்பட்ட பின்னரும், நாயகன் எதையும் செய்யாமல் வேனில் அமர்ந்தபடியே திருதிருவென விழித்துக் கொண்டிருப்பதை,

கையில் துப்பாக்கி இருந்தும் அதை பயன்படுத்தாமல் பயந்து சாகிற செக்யூரிட்டியின் நிலைப்பாட்டை துளியும் ஜீரணிக்க முடியவில்லை.

கொள்ளையர்கள் ஏடிஎம் வேனை மணிக்கணக்காக தாக்கிக் கொண்டேயிருப்பது சலிப்பு தருகிறது.

உருவாக்கத்தில் ஆங்காங்கே குறைகள் இருந்தாலும் வேன் கடத்தப்படுவதிலிருக்கும் பரபரப்பு, அழகிய கவிதையாய் கடந்தோடும் காதல் காட்சிகள் படத்தின் கவனம் ஈர்க்கும் சங்கதிகளாக அமைந்திருக்கின்றன.

‘மார்கழி திங்கள்’ திரைவிமர்சனம்

பாரதிராஜா, ரக்ஷனா மற்றும் ஷியாம் செல்வம் அறிமுகத்தில் சுசீந்திரனின் திரைக்கதையில்,மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் இளையராஜாவின் இசையில் வெளிவந்திருக்கும் படம் மார்கழி திங்கள்.


கதை சுருக்கம்,

திண்டுக்கல் மாவட்டம் நெய்க்காரன்பட்டியில் நடக்கும் கதை. பெற்றோரை இழந்து தாத்தாவின் அரவணைப்பில் வாழும் கவிதா. பத்தாம் வகுப்பு படிக்கும் இவருக்கும் அவருடன் படிக்கும் மாணவரான வினோத்திற்கும் படிப்பில், போட்டி வந்து, அந்த போட்டியே காதலாக மாறி நிற்கிறது ,தாத்தாவிற்கு தான் தான் உலகம் என்று நினைக்கும் கவிதா, தாத்தாவிடம் தன் காதலை சொல்ல அந்த காதலை தாத்தா சேர்த்து வைத்தாரா, அல்லது அல்லது தன் சமூகத்தின் மீதான பயத்தில் என்ன முடிவு எடுக்கிறார் என்பதை படத்தின் திரை கதை.
தாத்தாவாக பாரதிராஜா, வயது முதிர்ந்த தனது தளர்ந்த உடலாலும், குரலாலும் அந்த தாத்தாவின் கதாபாத்திரத்திற்கு அழகாக உயிரூட்டி இருக்கிறார். படத்தின் மிகப்பெரிய பலம் பாரதிராஜா. பேதியாக வரும் நடிகை ரக்ஷனா, கவிதாவாக வாழ முயற்சி செய்திருக்கிறார். தனக்கு அளிக்கப்பட்ட கதாபாத்திரத்தை நிறைவாக வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறார். அந்த வயதிற்கே உரிய காதல் ஏமாற்றம் இயலாமை ஆகியவற்றை தன் நடிப்பால் வெளிப்படுத்தி இருக்கிறார். காதலனாக வரும் ஷியாம் செல்வம் எனும் மனதில் நிற்க மறுக்கிறார், காதல் காட்சிகளிலும் உயிரோட்டம் இல்லாமல் இருக்கிறது. இயக்குனர் சுசீந்திரன் தன்னை படத்தில் வில்லனாக காட்டிக் கொள்ள மிகவும் மெணக்கெடுக்கிறார் .,ஆனால் அவர் வில்லன் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை அவருக்கு அந்த கதாபாத்திரம் ஒட்டவில்லை.
அப்புகுட்டி படம் முழுவதும் வருகிறார் ஒரு சில வசனங்கள் மட்டும் பேசுகிறார் இன்னும் அவரை ஆழமாக அழுத்தமாகவும் காட்டி இருந்தால் அவரது நடிப்பு படத்திற்கு பலமாக இருந்திருக்கும்.


கவிதாவின் தோழியாக வரும் நக்க்ஷா படம் முழுவதும் வருகிறார் அனைவரையும் கவனிக்க வைக்கிறார்.
வாஞ்சிநாதன் முருகேசனின் ஒளிப்பதிவு படத்திற்கு இன்னும் அழகு ஊட்டி இருக்கலாம். கிராமத்தின் அழகை எடுத்துக் காட்டி இருக்கலாம். படத்தொகுப்பு இன்னும் விறுவிறுப்பாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
இசை இளையராஜா ஆனால் இளையராஜாவை இசை நமக்கு ஞாபகப்படுத்தவில்லை.

படத்தின் மிகப்பெரிய பலம் கதை நடக்கும் களம் அந்த கதைகளத்தை மிகவும் கவனமாக கையாண்டு இருக்கிறார்கள் திரைக்கதையில். ஒரு சில காட்சிகள் நாடக பாணியில் இருப்பதை தவிர்த்து இருக்கலாம் அந்த காட்சிகள் படத்திற்கு தொய்வை ஏற்படுத்துகிறது. மேலும் ஒரு கிராமத்தின் சூழலை கையில் எடுத்த இயக்குனர் அந்த கிராம மக்களின் வாழ்க்கையை காட்டி இருக்கலாம் அந்த கிராமத்தில் கதாபாத்திரங்கள் மட்டுமே இருப்பதாக காட்டி இருப்பது சற்று நெருடலாக உள்ளது.
கடைசியில் வரும் 20 நிமிட படத்திற்காக அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதை இன்னும் விறுவிறுப்பாக அமைத்திருந்தால் படம் நிச்சயம் நம் மனதை விட்டு நீங்காமல் இருந்திருக்கும் கண்கலங்க வைத்திருக்கும்.
படத்தின் கிளைமாக்ஸ் காட்சி யாரும் எதிர்பாராத ஒன்று மிகவும் வலியான ஒன்று.

மார்கழி திங்கள் காதலுக்கும் சாதிக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் காதல் நெஞ்சங்கள்

OVEREALL RATTING——–3/5

படத்தின் கடைசி 20 நிமிட காட்சிகளுக்காக மட்டுமே இந்த மதிப்பெண்

‘லியோ’ திரை விமர்சனம்

லியோ திரையில் ஒரே குய்யோ முய்யோ தான்.

OVERALL RATTING——2.5/5

விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன் மற்றும் பலர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் மேற்பார்வையில் , சண்டை இயக்குனர் அன்பறிவு இயக்கத்தில் ,அனிருத் இசையில் வெளிவந்திருக்கும் திரைப்படம் லியோ.

கதைச்சுருக்கம்,

மிகப்பெரிய போதைப் பொருள் கடத்தல் காரரான சஞ்சய் தத் அவருடைய தம்பி அர்ஜுன் இவர்களின் கடத்தல்களுக்கு உறுதுணையாக இருப்பது சஞ்சய் தத்தின் இரட்டை பிள்ளைகளான விஜயும் மடோனா செபாஸ்டினும், செய்யும் கடத்தலுக்கு கண்மூடித்தனமாக பல கொலைகளை செய்து அவர்கள் கடத்தலுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்.மூடநம்பிக்கையில் மூழ்கி போன சஞ்சய்தத் ஒரு கட்டத்தில் தன் மகளையும் மகனையோ நரபலி கொடுத்தால் தனது கடத்தல் தொழில் மேலும் மேலும் வளரும் என்று நம்பி,யோசித்து மகளை நரபலி கொடுக்க முடிவு செய்கிறார் இதற்கு அர்ஜுனும் துணை போகிறார், இந்நிலையில் ஏற்கனவே பல கொலைகளை கண்மூடி தனமாக செய்யும் விஜய்யும் மடோனாவும் இதற்கு பயப்படுகிறார்கள். விஜய் எவ்வளவோ முயற்சி செய்தும் மடோனா கொல்லப்படுகிறார்.இதனால் அந்த ஒரு நிமிடத்தில் வாழ்க்கையே வெறுத்துப் போன விஜய் அந்த நிமிடத்தில் இருந்து திருந்தி நல்லவனாக வாழ முடிவு செய்து அந்த போதைப் பொருள் குடோனையே கொளுத்தி விட்டு தானும் இறந்துவிட்டதாக நாடகமாடி, திரிஷாவை கல்யாணம் செய்து கொண்டு காஷ்மீரில் ஒரு டீக்கடை வைத்து தான் உண்டு தன் இரண்டு குழந்தைகள் உண்டு என்று வாழ்ந்து வருகிறார். இவர் உயிருடன் இருப்பதை தெரிந்து அப்பாவும் சித்தப்பாவும் அவரை மீண்டும் கடத்தல் தொழில் இழுக்க நினைக்க, மீண்டும் ஒரு அவதாரம் எடுத்து அவர்களை அழிக்கிறார் இதுதான் படத்தின் கதை.

காஷ்மீரில் வசிக்கும் விஜய் அங்கு ஒரு பள்ளியில் வெறிபிடித்த ஹைனா ஒன்று
நுழைந்து விட அதை காவலர்கள் சுட்டுக்கொன்றுவிட பார்க்க விஜய் லாவகமாக அதை பிடித்து தத்து எடுத்து வளர்க்கிறார் அதற்கு சுப்பிரமணி என்று பெயர் வைத்து பெயர் வைத்து இந்த ஒரு காட்சி மட்டுமே படத்தின் ஆரம்பத்தில் கிட்டத்தட்ட கால் மணி நேரத்திற்கு வருகிறது ஏன்டா இதற்கு எவ்வளவு நேரம் வருகிறது என்று பார்த்தால் கிளைமாக்ஸில் மீண்டும் ஒரு ஐந்து நிமிடம் வந்து விஜய்க்கு உதவி செய்கிறதாம் அந்த ஹைனா.
படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வசனம் பேசி நடிக்கிறார் விஜய். படம் முழுவதும் கும்பல் கும்பலாக வருகிறார்கள் விஜயிடம் குத்தப்பட்டு செத்துப் போகிறார்கள். ஒரு சண்டையில் திடீரென துப்பாக்கி எடுத்து விஜய் ஐந்து பேரை மிக சரியாக சுட்டு கொன்று விடுகிறார். ஆனால் கோர்ட்டில் அது சென்று மேலும் அவர்கள் ஒரு கொள்ளையர்கள் என்றும் கூறி அசால்டாக விடுதலை செய்து விடுகிறார்கள். சரி படம் எப்பொழுதாவது ஆரம்பித்து விடும் என்று நினைத்தால் அதன்பிறகு கும்பல் கும்பலாக வருகிறார்கள் வெறும் சண்டை காட்சிகளாகவே உள்ளது படத்தில் ஒரு சில சீன்களில் மட்டும் விஜய் நடிக்க செய்கிறார்.


திரிஷா இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக இருந்தாலும் வயது ஆக ஆக இளமை கூடிக் கொண்டே செல்கிறது திரையில் அவ்வளவு அழகாக.


சஞ்சய் தத் மெயின் வில்லன், அர்ஜுன் தம்பி வில்லன் அவர்களின் காட்சிகள் மிகவும் அழுத்தமாகவும் கொடூரமாகவும் இருக்கும் என்று எதிர்பார்த்தால், ஏதோ சிரிப்புதான்.

விஜயின் நண்பராக ,பாரஸ்ட் ரேஞ்சராக வரும் கௌதம் வாசுதேவன் இவ்வளவு மக்கு போலீசாக இருப்பார் என்று எதிர்பார்க்கவே இல்லை எதிர் பார்க்கவே இல்லை


மன்சூர் அலிகான் அலிகான் அவர் அவராகவே வருகிறார் அவரது நடிப்பு வழக்கம் போலவே.
கைதி படத்தில் பிரமோஷன் வாங்கின கான்ஸ்டபிள் இங்கு விஜய் வீட்டுக்கு காவலாளியாக மாற்றலாகி‌ வருகிறார்.
அனுராக் காஷ்யப் இரண்டு நிமிடங்கள் வந்து விஜய் கையால் சுடப்பட்டு செத்துப் போகிறார் .
படத்தில் மேலும் ஏகப்பட்ட நடிகர்களை போட்டு அவர்களின் என்ன சீன் வைப்பது என்று தெரியாமல் குழம்பி ஏதோ செய்து விட்டார் லோகேஷ் கனகராஜ்.


அனிருத்தின் இசை வழக்கம் போல காட்டு கத்தலுடன் வருகிறது.


ஒளிப்பதிவு ஒளிப்பதிவு நிறைய காட்சிகளுக்கு சிஜி தேவை என்று தெரிந்தும் ஏனோ ஒளிப்பதிவில் சொதப்பி இருக்கிறார்கள் சிஜி காட்சிகளும் சொதப்பி இருக்கிறார்கள்.


இப்படி பல வெட்டு குத்துகள் பல கொலைகள் என்று படம் முடிந்ததும் கமலஹாசனின் குரலில் விக்ரம் படத்தின் தொடரச்சியாக இந்த படம் இருக்கும் என்று அவரது குரலில் ஒரு வசனத்தை போட்டு நம்மை தியேட்டரை விட்டு கிளம்ப வைக்கிறார்கள்.


லியோ திரையில் ஒரே குய்யோ முய்யோ தான்.

OVERALL RATTING——2.5/5

புது வேதம் திரைவிமர்சனம்

காக்கா முட்டை விக்னேஷ் ரமேஷ் இமான் அண்ணாச்சி மற்றும் பலர் நடிப்பில் ராசா விக்ரம் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் புது வேதம்.

கதைச்சுருக்கம்,
தந்தையை இழந்த விக்னேஷ் மற்றும் அவரது தாய் பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்து வாழ்க்கையை தருகிறார்கள் அந்த நேரத்தில் விக்னேஷின் தாயை பாலியல் வன்புணர்வு செய்ய சிலர் முயற்சிக்கும் பொழுது ஒருவர் அவர்களை காப்பாற்றுகிறார் , மேலும் அவர் விக்னேஷின் தாயாரிடம் உன் மகனை நீ இங்கேயே விட்டு விட்டு வந்துவிடு நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூற அந்த தாயும் பெற்ற மகன் என்று பாராமல் அந்த பேருந்து நிலையத்திலேயே அனாதையாக விட்டுவிட்டு அந்த நபருடன் கிளம்பிச் சென்று. அதன் பின்பு சாப்பாட்டிற்கு வழியில்லாமல் அலையும் பொழுது ரமேஷ் நட்பு கிடைக்க, இரண்டு கால்களையும் இழந்த அவன் குப்பை மேட்டில் குப்பைகளை பொறுக்கி வாழ்ந்து கொண்டிருக்கிறான் அவனுடன் சேர்ந்து விக்னேஷும் அங்கு மேலும் பலரும் அந்த குப்பைகளை பொறுக்கி வளர்கிறார்கள். இவர்களுக்கு இடையே ஏற்படும் பந்தங்களும் பாசங்களும் அவர்கள் வாழ்க்கை எவ்வாறு பயணப்படுகிறது என்பதையும் இயக்குனர் ராசா விக்ரம் குப்பை மேட்டு கதையாக இருந்தாலும் ஒரு நேர்மையாக எடுத்திருக்கிறார் இயக்குனர்.


குப்பைகளை எடுத்துக் கொண்டு வருபவர்களும் அதை வாங்கி விற்று பெரும் பணக்காரராக மாறும் இமான் அண்ணாச்சி குப்பைகளில் கிடக்கும் காலாவதியான மருந்துகளை மெடிக்கல் ஷாப்பில் ரீலேபிள் செய்து விற்று கோட்டீஸ்வரராக பல கோடிகளில் வியாபாரம் செய்கிறார்.
அந்த குப்பை மேட்டில் வரும் ஒரு பாட்டி மற்றும் வயதுக்கு வந்த ஒரு பேத்தி அந்த பேதின் மேல் விக்னேஷ் ஒருதலையாக காதல் கொண்டு வருகிறார் ஆனால் அவள் வேறு ஒரு லாரி டிரைவரை நம்பி ஏமாந்து வயிற்றில் பிள்ளையை சுமந்து கொண்டு வருகிறார் அவருக்கு அரணாக வருகிறார் விக்னேஷ் அந்த நிலையிலும் அவர் மேல் கொள்ளும் காதல் விக்னேஷ் தன் மனிதநேயத்தை வெளிப்படுத்தி.
ஊரிலிருந்து வேலை தேடி வந்து சிசர் மனோகர் தன் பணத்தை இழந்து அவரும் இவருடன் சேர்ந்து குப்பை பொறுக்கும் கதாபாத்திரமாக வாழ்ந்து இருக்கிறார் அவருடைய மகளின் கல்யாணத்தின் பொழுது பணத்திற்காக தடுமாறும் பொழுது ஒரு தந்தையாக கண்முன் நிற்கிறார்.
மேலும் வரும் பல கதாபாத்திரம் அவர்களுக்கு அளிக்கப்பட்ட கதை பத்திரங்களை சிறப்பாக அளித்திருக்கிறார்கள்.
படத்தின் கிளைமாக்ஸ் நிச்சயம் யாரும் எதிர்பாராத முடிவு அதை இயக்குனர் அழகாக அளித்திருக்கிறார்.
சென்னை போன்ற பெரு நகரங்களில் பெற்றவர்களை இழந்து பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்டு தவறான வழிகளில் பிறந்து அனாதைகளாக எந்த வாழ்வாதாரமும் இல்லாமல் சுற்றி தெரியும் பலர் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு நம்மால் கொட்டப்படும் குப்பை மேடுகள் நமக்கு அது குப்பைகளாக இருக்கலாம் ஆனால் அது அவர்களின் வாழ்வாதாரம் என்பதை அங்கேயே, அந்த சாக்கடை அந்த துர்நாற்றம் ஆகியவற்றை சகித்துக் கொண்டு அங்கேயே வாழ்ந்து இந்த படத்தை எடுத்த இயக்குனருக்கும் நடிகர்களுக்கும் நிச்சயம் கைத்தட்டல் தந்தே ஆக வேண்டும் .

அந்த குப்பை மேட்டின் வாழ்க்கையை எதார்த்தமாக படம் பிடித்த கேவி ராஜன், ரவி தேவேந்திரன் இசை படத்திற்கு பலமாக.


புது வேதம் குப்பை மேட்டில் வாழும் ஒரு நேர்மை.

‘தி ரோடு’திரை விமர்சனம்

திரிஷா,டான்சிங் ரோஸ்,சபீர் சந்தோஷ் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் தி ரோடு

கணவர் மற்றும் மகன் மூன்று மாத கர்ப்பமாக வாழ்ந்து வரும் திரிஷா, இவர்கள் வாழ்க்கையில் திடீரென ஒரு விபத்து, அந்த விபத்தில் கணவர் மற்றும் குழந்தையை பறிகொடுத்து விடுகிறார். அவர்கள் இறந்த இடத்தில் அஞ்சலி செலுத்த வரும் திரிஷா, அங்கு நடக்கும் தொடர் விபத்துகளை கண்டு அதிர்ச்சி அடைகிறார். தனி ஒரு ஆளாக அந்த விபத்துக்கள் ஏன் நடக்கிறது என்று துப்பறிய இறங்குகிறார். இறுதியில் என்ன நடக்கிறது என்ற கதையை திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் அருண் வசீகரன்.
திரிஷா எப்பொழுதும் போல் இளமையாக, ஒரு குழந்தைக்கு தாயாக, கணவருக்கு காதல் மனைவியாக,ஒரு அழகான குடும்பத் தலைவியாக,வாழ்ந்து, பின்பு துப்பறியும் பணியில் இறங்கி காவல்துறை அதிகாரிகளை தூக்கி சாப்பிடும் தோரணையில் வலம் வருகிறார்.
டான்சிங் ரோஸ் சபீர் பெண்கள் கல்லூரியில் பேராசிரியராக வந்து அமைதியான அப்பாவியாக இருக்கும் பொழுதும், அங்கு தன்னிடம் படிக்கும் பெண்ணின் ஒரு தலை காதலை ஏற்க மறுத்து இந்தப் பெண்ணால் துரோகத்துக்கு ஆளாகி அவமானப் படும் பொழுது, அந்த அவமானத்திலிருந்து மீள அவர் தேர்ந்து எடுக்கும் வழி சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை நினைவுபடுத்தும் விதமாக அமைக்கப்பட்டிருக்கிறது அவரது கதாபாத்திரம்.
தந்தையாக வேலராமமூர்த்தி எப்பொழுதும் முரட்டுத்தனமாகவே நடிக்கும் இவருக்கு இந்த படத்தில் ஒரு பாசமான அப்பாவாக கண்கலங்க வைக்கிறார்.
தோழியாக வரும் மியா ஜார்ஜ் துப்பறியும் புலிக்கு அசிஸ்டன்ட் புலியாக வருகிறார்.
காவல்துறை இன்ஸ்பெக்டராக வரும் எம் எஸ் பாஸ்கர் அவருக்கு வழக்கமான நடிப்பு அதை திறம்பட வழங்கி இருக்கிறார்.
செம்மலர் அன்னம் வித்தியாசமான வேடம் அதை திறம்பட வழங்க தன்னால் முடிந்த வரை முயற்சி செய்து இருக்கிறார்.
சாம் சி எஸ் இன் இசையும் படத்திற்கு பலம் சேர்க்கிறது கே ஜி வெங்கடேசன் ஒளிப்பதிவு ஹைவே ரோடு வேகத்திற்கு செல்கிறது.
படத்தில் ஹைவே வில் வரும் ஏகப்பட்ட திருப்பங்களை போல் காட்சிக்கு காட்சி திருப்பங்கள் வந்தாலும் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமலே, சீரான வேகத்தில் படம் ஓடவில்லை

தி ரோடு ஏகப்பட்ட குண்டு குழிகளுடன் பயணம் செய்யலாம்.

OVER ALL RATTING———2/5

‘இந்தக் கிரைம் தப்பில்லை’ திரைவிமர்சனம்

ஊட்டியில் இருந்து சென்னை வரும் கதாநாயகி மேக்னா மொபைல் விற்பனை செய்யும் கடையில் பணியில் சேர்கிறார்.

அந்த மொபைல் கடைக்கு வரும் மூன்று இளைஞர்களை வேறு வேறு பெயரில் காதலிப்பது போல் நடித்து தனது பின்னால் சுற்ற வைக்கிறார் கதாநாயகி மேக்னா.

ரிட்டையர்ட் ராணுவ வீரரான ஆடுகளம் நரேன் தலைமையில் சைலண்டாக பாண்டி கமல் மற்றும் இவரது கூட்டாளிகள் சேர்ந்து இன்ஸ்பெக்டர் ,வக்கீல் என அடுத்தடுத்து ஆப்ரேஷன் ஒன்றிற்கு ப்ளான் செய்து வருகிறார்.

கதாநாயகி மேக்னா எதற்காக அந்த மூன்று இளைஞர்களை தன் பின்னால் சுற்ற வைக்க வேண்டும்.? ஆடுகளம் நரேன் ஆப்ரேஷன் ஒன்றிற்கு ப்ளான் எதற்காக செய்து வருகிறார்.

ரிட்டையர்ட் ராணுவ வீரரான ஆடுகளம் நரேன் யாரை டார்கெட் செய்கிறார் என்பதுதான் இந்த இந்தக் கிரைம் தப்பில்லை திரைப்படத்தின் மீதி கதை.

முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆடுகளம் நரேன் நடித்திருக்கிறார்.

ஆடுகளம் நரேன் எதார்த்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் நாயகி மேக்னா கொடுத்த வேலையை மிகவும் சரியாக செய்திருக்கிறார்.

சின்னத்திரை நடிக்கும் நடிகர் பாண்டி கமல் முதல் முறையாக வெள்ளித்திரையில் இந்து திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் பாண்டி கமல் முடித்தவரை தனது கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு என்ன தேவையோ அதை மிகவும் சரியாக செய்திருக்கிறார்.

இந்தத் திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கொடுத்த வேலையை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் AMM. கார்த்திகேயன் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றவாறு பக்க பலமாக அமைந்திருக்கிறது.

இசையமைப்பாளர் பரிமளவாசன் இசையில் பாடல்கள் கதை ஓட்டத்திற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது.

பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய பக்க பலமாக இருக்கிறது.

பாலியல் குற்றங்கள் பற்றி நிறைய படங்கள் வந்திருந்த்தாலும் இந்த திரைப்படத்தில் பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு என்ன மாதிரியான தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை மிகவும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் தேவகுமார்.

இந்த கதையை யோசித்த இயக்குனர் தேவகுமார் திரைக்கதையில் இன்னும் அதிகளவில் கவனம் செலுத்தி இருந்திருக்கலாம்.

இந்த கிரைம் தப்பில்லை திரைப்படத்தில் பல குறைகள் இருக்கத்தான் செய்கின்றன.

குறைகளை தவிர்த்து திரைப்படத்தை பார்த்தால் இது ஒரு நல்ல திரைப்படம்.

இந்த திரைப்படத்தில் அனைத்து விஷயங்களிலும் கவனம் செலுத்தி இருந்தால் இந்த திரைப்படம் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அமைந்திருக்கும்.

நடிகர் & நடிகைகள் :- ஆடுகளம் நரேன், பாண்டி கமல், மேக்னா ஏலன், முத்துக்காளை, வெங்கட் ராவ், கிரேசி கோபால், காயத்ரி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- தேவகுமார்.

ஒளிப்பதிவாளர் :- AMM. கார்த்திகேயன்.

படத்தொகுப்பு :- ராஜேஷ்.

இசையமைப்பாளர் :- பரிமளவாசன்.

தயாரிப்பு நிறுவனம் :- மதுரியா புரொடக்ஷன்ஸ்.

தயாரிப்பாளர் :- மனோஜ் கிருஷ்ணசாமி.

ரேட்டிங் :- 2./ 5.