Breaking
June 23, 2026

REFCOLD India 2023: An Optimal Spotlight on India’s INR 4.3 Trillion Cold Chain Potential and Food Waste Solutions

Chennai, October 12th, 2023: REFCOLD India, 2023, South Asia’s leading exhibition and conference dedicated to refrigeration and cold-chain technologies, commenced today at the Chennai Trade Centre, Chennai. Organised in collaboration between the Indian Society of Heating, Refrigerating and Air Conditioning Engineers (ISHRAE) and Informa Markets, REFCOLD India 2023 is set to redefine the industry landscape. This well-reputed event represents a significant step forward in the refrigeration and cold-chain sector, unveiling a vast potential cold-chain market of around INR 4.3 trillion by 2027.

The event’s grand inauguration was spearheaded by a rich array of dignitaries including Guest of Honour – Dr. R Velraj, Vice Chancellor, Anna University; Mr. Raja M Sriraam, Chairman, RECFOLD Chennai, ISHRAE; Mr. Yogesh Thakkar, National President, ISHRAE, Mr. Anoop Ballaney, National President Elect, ISHRAE and Mr Yogesh Mudras, Managing Director, Informa Markets in India.

The 6th gala edition of REFCOLD India brought together top experts, businesses, and thought leaders who are driving the industry’s transformation with over 200 exhibitors, including an impressive lineup of industry giants such as BlueStar, Copeland, Rinac India, Tecumseh, Daikin, K-Flex, Yaskawa, and Danfoss, among others. The show anticipates more than 10,000 visitors, industry leaders, and professionals, for dynamic business opportunities, knowledge-sharing sessions, and networking.

Speaking on the occasion, Mr Yogesh Thakkar, National President ISHRAE said, “The adoption of integrated cold chain solutions has the potential to significantly revolutionize the traditional perishables sector, bringing about substantial changes in the market landscape and overall growth. This is especially important in a country where agriculture employs 60% of the population. To harness the potential of integrated cold chain solutions, there is a need to optimise logistics, enhance value addition facilities, adopt green refrigeration practices, and adopt energy-efficient cooling systems and natural refrigerants ultimately improving efficiency across the supply chain. Similarly, the Indian organized food industry is a vast arena with significant potential. This underscores the substantial room for growth in the food delivery sector, which, when integrated with advanced refrigeration and cold chain solutions, can further enhance food quality, safety, and delivery efficiency.”

“The pandemic acted as a catalyst, propelling India’s online food delivery market to reach approximately $21 billion by 2026, with a remarkable compound annual growth rate (CAGR) of nearly 30%”, he further added.

With the valuable support of MOFPI (Ministry of Food Processing Industries Government of India), other esteemed associations like IIR (International Institute of Refrigeration), NCCD (National Centre for Cold-chain Development), IDA (Indian Dairy Association), IIAR (International Institute of Ammonia Refrigeration) and more, the event successfully bridged the gap between suppliers and buyers.

REFCOLD India offers an enriching programme of Conferences and exhibitions by technical experts of the industry focusing on Industrial Refrigeration along with Cold Chain and Reefer Transportation, Seminars and workshops on pharma, dairy, fishery and hospitality encouraging continuous learning and skill advancement. The expo covered important topics on Heat pump integrated thermal storage for dairy applications, Natural Refrigerants, Innovative Design or Technology for Net Zero Cold Storage Plants, Challenges on Dairy Processing and Storage, Safety Standards and Trouble Shooting of Refrigeration Plants, to name a few.

Commenting on the significance of REFCOLD India 2023, Mr Yogesh Mudras Managing Director, Informa Markets in India said “REFCOLD India provides a transformative journey that unlocks opportunities for fresh horizons and valuable collaborations. The expo offers a plethora of opportunities to connect with industry experts and learn about cutting-edge technologies. Furthermore, the government is also taking proactive steps to boost the refrigeration and cold chain industry by establishing extensive cold storage facilities nationwide. This initiative aims to minimize food wastage, encouraging eco-friendly refrigeration practices, while simultaneously stimulating economic growth. The added attractions including our content-rich conference that aligns with the theme of ‘Preserve through Innovation for a Better Future’ will gather experts, stalwarts, and key organizations and provide the momentum the market truly deserves!”

Distinguished speakers that graced the event included notable figures like Mr. Arvind Surange, Chairman and Managing Director of ACR Project Consultants Pvt Ltd; Dr. Lambert Kuijpers, an Environmental Consultant hailing from Venlo, Netherlands; Mr. C.P. Charles, a Central Executive Committee Member at the Indian Dairy Association; Dr. Alex Pachai, representing Global Consultancy, ApS in Denmark; Dr. Omar Abdulaziz, a Mechanical Engineer affiliated with The American University in Cairo, Egypt; and Mr. Jiju Nair, who holds the position of National Marketing Manager at Honeywell, among others.

Insights on India’s Cold Storage and Refrigeration Technology Market:

Advancements in refrigeration technology have led to energy-efficient systems, particularly beneficial in high-energy industries like chemical manufacturing. These optimized systems and eco-friendly refrigerants not only lower carbon footprints but also reduce emissions and water waste compared to traditional cooling methods like cooling water towers.

Additionally, in India, where agricultural production is vast, but access is limited, the cold chain sector plays a vital role, further driven by the growth of organized food delivery and e-commerce segments.

REFCOLD India gathers experts from the global and Indian refrigeration sectors to drive innovation and combat food waste. It highlights the importance of cold chain management,

Mr. Madhur Sehgal, Head Climate Solutions, Danfoss said, “We are bringing an exciting opportunity to all of you to have an exclusive visit to our lead Platinum Campus on 13th October 2023. This is a unique opportunity to witness the state-of-the-art campus with next-generation R & D and production facilities, an application development center, and a customer experience center showcasing the live working performance of our products in diverse industry applications. We will also be pleased to showcase the use of the latest technologies and specific actions on our campus on HVAC, Renewable Energy, Water, and waste management, leading to faster progress toward our Net Zero Emission goals. Please join us for this exclusive event on 13th October and discover how Danfoss can help you achieve your goals of clean growth and development.”

Mr. M Srinivas Reddy, Vice President, Commercial Refrigeration Business Group, Blue Star stated, “We, at Blue Star, recognise REFCOLD as the perfect platform to showcase various refrigeration solutions. We are confident that it will help us reach our target audience well and we wish REFCOLD a huge success.”

On the sidelines of the expo, Informa Markets in India launched its 4th edition of the Festivity of Business campaign for this year’s high season. As the autumn season blankets India with its diverse array of festivals, the initiative will be a vibrant tribute to India’s economic triumphs and its burgeoning global influence. This year, Informa Markets in India’s initiative encompasses a rich tapestry of over 40 events till year-end, including ten signature Expos, along with distinctive Conferences, Industry Awards, Buyer-Seller Meets, and Training programmes in influential sectors. All these are poised to elevate the nation to new heights.

# Nan Mudhalvan – நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்

சென்னை பூந்தமல்லியில் அமைந்துள்ள ராஜலட்சுமி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில்
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு வழிகாட்டி முகாம் சிறப்பாக நடைபெற்றது

இந்த வேலை வாய்ப்பு முகமானது தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம்,தமிழ்நாடு சி.ஐ.ஐ மற்றும் இசட் எப் ஆகியவை இணைந்து நடத்தினர்

நிதி மற்றும் தொழில்நுட்ப துறை என சுமார் 140 நிறுவனங்களில் இருந்து தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்களை பணியமர்த்த மாணவ மாணவியர்களுக்கு தகுதி தேர்வு நடத்தினர் இதில் சுமார் 15,000 மாணவ மாணவிகள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டனர்

கோபம், வஞ்சம், வெற்றி – மனதின் போராட்டத்தை சொல்லும் “வஞ்சம் தீர்” பாடல்!

புஷ்பநாதன் புரடக்சன்ஸ் மற்றும் அக்ஷயா பிக்சர்ஸ் LLPஇணைந்து தயாரித்திருக்கும்  “வஞ்சம் தீர்” ஆல்பம் பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது!
மனித மனத்தில் ஒளிந்திருக்கும் கோபம், ஏமாற்றம் மற்றும்பழிவாங்கும் உணர்வுகளின் பிரதிபலிப்பாக உருவாகியுள்ள “வஞ்சம் தீர்” ஆல்பம் பாடல் தற்போது யூடியூபில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
 
“ஒவ்வொருவரின் மனதிற்குள்ளிருக்கும் சாத்தான் வேதம் சொன்னால் என்னவாக இருக்குமென்ற?” சிந்தனையை மையக் கருவாக  உருவாகியுள்ள இந்த பாடல், கோபத்தையும்,வஞ்சத்தையும் நேர்மறை சக்தியாக மாற்றி வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும் என்ற உன்னத கருத்தை பொட்டில் அடித்தாற் போல் பேசுகிறது. “வாழ்ந்து காட்டி வஞ்சம் தீர்” என்ற மையக் கருத்து, பாடலின் ஒவ்வொரு காட்சியிலும், வரிகளிலும் வலிமையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

புஷ்பநாதன் ஆறுமுகம் எழுதி, இயக்கியுள்ள இந்த பாடல், வாழ்க்கையில் சந்திக்கும் அவமானங்களும், வலிகளும், நிராகரிப்புகளும் நம்மை பழிவாங்க இயக்குபவையல்ல. மாறாக, வெற்றி பெற்று வாழ்ந்து காட்டுவதுதான் உண்மையான பதில் என்ற வலுவான கருத்தை எடுத்துரைக்கிறது.

முன்னணி இயக்குநர் நிதிலன் சுவாமிநாதனிடம், மகாராஜா திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய புஷ்பநாதன் ஆறுமுகம், தனது தனிப்படைப்பாக இந்த பாடலை எழுதி, தயாரித்து, இயக்கியுள்ளார். தனது வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்கள், போராட்டங்களிலிருந்து பெற்ற புரிதல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த படைப்பை உருவாக்கியுள்ளார்.
 
பிரபல இயக்குநரும், நடிகருமான அருண் ராஜா காமராஜ், இந்த பாடலை பாடியிருப்பதுடன், முற்றிலும் மாறுபட்ட “சாத்தான்” வேடத்தில் நடித்துள்ளார். சிவப்பு நிற உடையுடன், சாத்தானை பிரதிபலிக்கும் வித்தியாசமான தோற்றமானது, பாடலை பார்த்து முடித்த பின் நம் மனதுடன் நாமே பேசும் உணர்வை உருவாக்கியுள்ளது, ரசிகர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

இசையமைப்பாளர் டோனி பிரிட்டோ இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார். பாடலின் கருத்துக்கு ஏற்ற துள்ளல்இசையும், துடிப்பான பின்னணி ஒலிகளும் பாடலின் உணர்வை மேலும் உயர்த்தியுள்ளன.
ஒளிப்பதிவை விஷ்ணு மணி வடிவு, படத்தொகுப்பை தின்சா, கலை இயக்கத்தை எஸ்.ஜி. திவாகர் கவனித்துள்ளனர். நடன அமைப்பை சுரேந்திரன் ஜோ மேற்கொண்டுள்ளார். மாங்கோ போஸ்ட் நிறுவனம் கலர் கோர்ப்பு பணியையும், ரேமேக்ஸ் ஸ்டுடியோ மற்றும் பிக் செல் பேக்டரி நிறுவனம் அனிமேசன் பங்களிப்பை மிகச் சிறப்பாக செய்துள்ளனர். படக்குழுவின் தொழில்நுட்ப பங்களிப்பு பாடலின் உணர்வை உலக தரத்திற்கு உயர்த்தியுள்ளது. ஐஸ்வர்யா ரகுநாத் ஆடை வடிவமைப்பிலும், ரதி ராதிகா சாத்தானாகவே அருண்ராஜா காமராஜை மேக்கப்பின் மூலம் உருவாக்க உழைத்திருப்பது கூடுதல் கவனம் பெறுகிறது.

மொத்தத்தில், “வஞ்சம் தீர்” ஆல்பம் பாடல் பழிவாங்கும் எண்ணத்தை வெற்றியாக மாற்றும் வாழ்க்கைப் பாடத்தை வித்தியாசமான காட்சியமைப்பிலும் சக்திவாய்ந்த இசையிலும், வீரியமிக்க வரிகளிலும் உருவாகியுள்ளது. வெளியான குறுகிய காலத்திலேயே சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இந்த பாடல், இளைஞர்கள் மத்தியில் கவனம் பெற்ற படைப்பாக மாறியுள்ளது.

‘கான் சிட்டி’ திரைப்பட டிரெய்லர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “கான் சிட்டி” திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் படத்தின் டிரெய்லர் பத்திரிகை ஊடக நண்பர்களுக்கு பிரத்யேகமாக திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து படக்குழுவினர் திரைப்படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வினில் 

நடிகர் மதன்  பேசியதாவது..,

 “வணக்கம் நண்பர்களே. ஒரு சில வார்த்தைகள் பேச விரும்புகிறேன். மேடைக்கு வருவதற்கு முன்பே எனக்கு நிறைய பில்ட்அப் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த பில்ட்அப் எல்லாமே இந்தப் படத்திற்குத் தகுதியானதுதான். ஏனென்றால் இது அப்படியொரு நல்ல திரைப்படம்.
இந்தப் படத்தின் கதையிலும், அதில் சொல்லப்படும் கருத்துகளிலும் நிறைய புத்திசாலித்தனமான விஷயங்கள் இருக்கின்றன. டிரைலரையே நீங்கள் பார்த்திருப்பீர்கள். அது எவ்வளவு நகைச்சுவையாகவும் ரசிக்கும்படியாகவும் இருக்கிறது என்பதை அனைவரும் அறிவீர்கள். ஆனால் படம் அதைவிட இன்னும் சிறப்பாகவும், ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமானதாகவும் இருக்கும். சுமாரான படங்களுக்குக் கூட பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் நல்ல ஆதரவு கொடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்கிறீர்கள். இது மிகவும் சிறப்பான திரைப்படம். இந்தப் படத்தையும் மக்களிடம் இன்னும் பிரமாண்டமாக கொண்டு சேர்ப்பீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி 

நடிகர் லல்லு பேசியதாவது..,

“இதுபோன்ற தருணங்கள் எப்போதும் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும். இயக்குநர் ஹரிஷை இன்று இந்த மேடையில் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு புதிய இயக்குநராக சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் பயணத்தைத் தொடங்கியவர். அந்தக் கனவை நனவாக்குவதற்காக அவர் பல ஆண்டுகள் கடினமாக உழைத்துள்ளார். இன்று அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கான் சிட்டி’ திரைப்படம் வெளியாகவிருப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்.அர்ஜூன் தாஸ் ஏற்கனவே ‘கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற முக்கியமான படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அவருடன் இணைந்து பயணித்த அனுபவமும் சிறப்பானது. இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய திரையரங்கு வெற்றியாக அமையும் என்று நம்புகிறேன்.படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களைப் பார்த்தபோது மிகவும் பாஸிடிவான உணர்வு ஏற்பட்டது. குறிப்பாக இது ஒரு சிறந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. இயக்குநர் ஹரிஷ் மிகவும் சுவாரஸ்யமான மற்றும் ரசிக்கக்கூடிய திரைக்கதையை அமைத்திருக்கிறார். பாடல்களும் ஒவ்வொன்றும் தனித்துவமான பாணியில் அமைந்து மனதில் நிற்கின்றன.குடும்பத்துடன் திரையரங்கிற்கு வந்து ரசித்து பார்க்கக்கூடிய திரைப்படமாக ‘கான் சிட்டி’ இருக்கும். எனவே ரசிகர்கள் அனைவரும் திரையரங்குகளில் வந்து படத்தை ஆதரித்து, மிகப்பெரிய தொடக்கத்தையும் வெற்றியையும் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கலை இயக்குநர் ராஜ்கமல் பேசியதாவது:

“வணக்கம். முதலில் இந்தப் படத்தில் பணியாற்றும் வாய்ப்பை எனக்கு வழங்கிய இயக்குநர் ஹரிஷுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.‘கான் சிட்டி’ திரைப்படத்தின் உலகத்தை உருவாக்குவதற்காக நாங்களும் எங்கள் குழுவினரும் மிகுந்த உழைப்பை செலுத்தியுள்ளோம். குறிப்பாக இந்தப் படத்தில் செட் அமைப்புகள் அதிகமாக இருந்ததால், அதற்காக பெரிய அளவில் திட்டமிட்டு வேலை செய்ய வேண்டியிருந்தது. என்னுடைய குழுவினர் அனைவரும் அர்ப்பணிப்புடனும் கடின உழைப்புடனும் பணியாற்றினர். அவர்களுக்கு எனது சிறப்பு நன்றிகள்.இந்தப் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருமே எனக்கு நண்பர்களைப் போன்றவர்கள். ஒவ்வொருவரும் தங்களுடைய துறையில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டனர். அதனால் வேலை மிகவும் சுவாரஸ்யமாகவும் மகிழ்ச்சியாகவும் அமைந்தது. படப்பிடிப்பு காலம் முழுவதும் நாங்கள் ஒரு குடும்பமாக இணைந்து பணியாற்றினோம். ‘கான் சிட்டி’ படத்தில் நாங்கள் உருவாக்கியுள்ள உலகத்தையும், காட்சியமைப்புகளையும் ரசிகர்கள் திரையரங்குகளில் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன். படத்திற்கு உங்கள் ஆதரவையும் வாழ்த்துகளையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.”

உடை வடிவமைப்பாளர் நவா பேசியதாவது.., 

“அனைவருக்கும் வணக்கம். முதலில் இந்தப் படத்தில் பணியாற்றும் வாய்ப்பை எனக்கு வழங்கிய தயாரிப்பாளருக்கும், இயக்குநர் ஹரிஷுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று இந்த மேடையில் நிற்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. இந்த வாய்ப்பிற்காகவும், தொடர்ந்து எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.

அர்ஜூன் தாஸ் அண்ணாவுடன் மீண்டும் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார். அதற்காக அவருக்கு எனது சிறப்பு நன்றிகள். அதேபோல் வடிவுக்கரசி அம்மாவுடன் பணியாற்றியது இந்தப் படத்தில் எனக்கு மிகவும் சிறப்பான அனுபவமாக அமைந்தது. அவருடன் பணியாற்றிய தருணங்கள் மறக்க முடியாதவை. இந்தப் படத்தில் நடித்துள்ள அனைத்து கலைஞர்களுடனும் இணைந்து பணியாற்றியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். பல்வேறு கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு நிறைய உடை வடிவமைப்புகள் மற்றும் பல்வேறு தோற்றங்களை உருவாக்கியுள்ளோம். ரசிகர்கள் அதை திரையரங்குகளில் பார்த்து ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்.என்னுடைய முழு காஸ்ட்யூம் குழுவும் எனக்கு ஒரு குடும்பம் போன்றது. பல ஆண்டுகளாக என்னுடன் பயணித்து வரும் அவர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் இந்தப் படத்தில் பிரதிபலித்திருக்கிறது. அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.இப்படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் மிகச் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், கலை இயக்குநர் ராஜ்கமல், ஒளிப்பதிவாளர் அரவிந்த், ஸ்டண்ட் மாஸ்டர் சந்தோஷ் உள்ளிட்ட ஒவ்வொருவரும் தங்களது சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர். படக்குழுவின் சார்பாக ரசிகர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவரிடமும் ஒரு வேண்டுகோள். திரையரங்குகளுக்கு வந்து ‘கான் சிட்டி’ திரைப்படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவையும் ஆசீர்வாதத்தையும் வழங்குங்கள்.

இறுதியாக, என்னுடைய உதவியாளர்கள் மற்றும் காஸ்ட்யூம் குழுவினருக்கு சிறப்பு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் ஆதரவு இல்லாமல் இந்தப் பயணம் சாத்தியமாகியிருக்காது. அனைவருக்கும் நன்றி.”

நடன இயக்குநர் சந்தோஷ் பேசியதாவது:

“அனைவருக்கும் வணக்கம். ‘கான் சிட்டி’ திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவம் மிகவும் சிறப்பானதாக இருந்தது. சமீபத்தில் வெளியான பாடல்களை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். அந்தப் பாடல்களின் காட்சியமைப்புகள் மற்றும் நடன வடிவமைப்புகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இயக்குநர் ஹரிஷ் ஒவ்வொரு பாடலுக்கும் தனித்துவமான ஐடியாக்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறிய அணுகுமுறை மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. அதனை அடிப்படையாகக் கொண்டு பாடல்களை உருவாக்கிய அனுபவம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

இந்தப் படத்தின் பாடல்களில் ஏராளமான நடனக் கலைஞர்கள் பங்கேற்றனர். அவர்களுடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்தனர்.

இயக்குநர் ஹரிஷின் மிகப்பெரிய பலம் அவரது பாஸிடிவான அணுகுமுறை. அவர் எப்போதும் உற்சாகத்துடனும் தெளிவான பார்வையுடனும் செயல்படுவார். படத்திற்கு என்ன தேவை என்பதை மிகவும் தெளிவாக அறிந்து அதற்கேற்ப குழுவை வழிநடத்தினார். அந்த நம்பிக்கையும் ஆற்றலும் முழுக் குழுவுக்கும் உற்சாகத்தை அளித்தது.

அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட அனைத்து கலைஞர்களும் மிகுந்த உழைப்பை தந்தனர். படப்பிடிப்பின் போது சோர்வு இருந்தாலும், ஒவ்வொருவரும் தங்களுடைய சிறந்த பங்களிப்பை வழங்கினர். இயக்குநர் குழு, ஒளிப்பதிவுக் குழு உள்ளிட்ட அனைவரும் மிகவும் ஒத்துழைப்புடன் செயல்பட்டனர்.

வடிவுக்கரசி அம்மாவுடன் பணியாற்றிய அனுபவமும் மிகவும் இனிமையானது. அவருடைய அனுபவமும் அர்ப்பணிப்பும் அனைவருக்கும் ஒரு ஊக்கமாக இருந்தது. குறிப்பாக பாடல்களில் வரும் சிறிய அசைவுகள் மற்றும் லிப்-சிங்க் காட்சிகளைக் கூட மிகவும் துல்லியமாகச் செய்தது அவரது அனுபவத்தை வெளிப்படுத்தியது.

இந்தப் படத்தின் அனைத்து பாடல்களும் தனித்தனி பாணியில் உருவாகியுள்ளன. ஒவ்வொரு பாடலிலும் ஒரு புதிய அனுபவமும் வித்தியாசமான உணர்வும் இருக்கும். ரசிகர்கள் திரையரங்குகளில் அதை ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்.

இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் ஹரிஷ், தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி.”
எடிட்டர் அருள் மோசஸ் பேசியதாவது:

“அனைவருக்கும் வணக்கம். முதலில் இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய இயக்குநர் ஹரிஷ் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘கான் சிட்டி’ திரைப்படம் அனைவரின் வாழ்க்கையுடனும் எளிதாக தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய ஒரு கதையை பேசுகிறது. அதனால்தான் இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறேன்.

இந்தப் படத்தில் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததற்கு முக்கிய காரணமாக இருந்த விஜய் அண்ணாவுக்கு நன்றி சொல்ல வேண்டும். அவருடைய நம்பிக்கையும் ஆதரவும்தான் என்னை இந்தப் பயணத்திற்கு அழைத்து வந்தது.

அதேபோல் என்னுடைய முக்கியமான வழிகாட்டியும், மென்டருமான செல்வா அண்ணாவையும் இந்த நேரத்தில் நினைவுகூர விரும்புகிறேன். இன்று நான் இந்த மேடையில் நிற்பதற்கும், இந்தப் படத்தில் பணியாற்றியதற்கும் அவருடைய பங்கு மிகவும் முக்கியமானது.இந்தப் படம் திரையரங்கில் வெளியாகும் என்னுடைய முதல் படைப்பாக இருப்பதால், இது எனக்கு மிகவும் சிறப்பானதாகும். படக்குழுவினர் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார்கள். ரசிகர்கள் அனைவரும் திரையரங்குகளில் படம் பார்த்து உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்கள் ஆதரவும் அன்பும் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. அனைவருக்கும் நன்றி.”

ஒளிப்பதிவாளர் அரவிந்த் விஸ்வநாதன் பேசியதாவது:

“அனைவருக்கும் வணக்கம். இந்த மேடையில் நிற்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முதலில் இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய இயக்குநர் ஹரிஷ் அண்ணாவுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நம்மைப் போன்ற மிடில் கிளாஸ் பின்னணியில் இருந்து வந்து, இன்று ஒரு இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் ஹரிஷ் அண்ணா இந்த நிலையை அடைந்திருப்பதை பார்க்கும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது. அவருடைய பயணத்தை நெருக்கமாக பார்த்தவன் என்பதால், இந்தப் படம் எனக்கு மிகவும் தனிப்பட்ட மற்றும் உணர்வுபூர்வமான படைப்பாக இருக்கிறது.

இந்தப் படத்தின் மூலம் அர்ஜூன் தாஸ், யோகி பாபு, அன்னா பென் உள்ளிட்ட திறமையான கலைஞர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களுடன் இணைந்து வேலை செய்த அனுபவம் மிகவும் சிறப்பானது.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் சார் படத்திற்கு அற்புதமான இசையை வழங்கியுள்ளார். சமீபத்தில் வெளியான பாடல்கள் மற்றும் இசைத்துணுக்குகளைப் பார்த்தபோது, படத்தின் உலகம் இன்னும் அழகாக உயிர்பெற்றிருப்பதை உணர முடிந்தது.படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக இணைந்து பணியாற்றினோம். கலை இயக்குநர் ராஜ்கமல், உடை வடிவமைப்பாளர் நவா, எடிட்டர் அருள் மோசஸ், நடன இயக்குநர் சந்தோஷ் உள்ளிட்ட அனைவரின் பங்களிப்பும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

குறிப்பாக உதவி இயக்குநர்கள், கேமரா குழுவினர் மற்றும் பின்னணியில் உழைத்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல மணி நேரங்கள் இடைவிடாமல் உழைத்து இந்தப் படத்தை சிறப்பாக உருவாக்கியுள்ளனர்.

‘கான் சிட்டி’ திரைப்படம் எங்கள் அனைவரின் உழைப்பின் வெளிப்பாடு. ரசிகர்கள் அனைவரும் திரையரங்குகளில் வந்து படத்தைப் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.”

பாடலாசிரியர் மோகன் ராஜன் பேசியதாவது..,

“அனைவருக்கும் வணக்கம். குறிப்பாக பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள். இந்தப் படம் எனக்கு மிகவும் முக்கியமானது. இந்தப் படத்தின் வெற்றிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். அதற்கான முக்கிய காரணம் இயக்குநர் ஹரிஷ்.

ஹரிஷ் முதன்முதலில் இந்தக் கதையை என்னிடம் கூறிய தருணத்திலிருந்தே அந்தக் கதையுடன் நான் பயணிக்கத் தொடங்கிவிட்டேன். ஒரு தேநீர் கடை பெஞ்சில் அமர்ந்து, இந்தப் படத்தில் யார் யார் நடிக்கப் போகிறார்கள், எப்படி உருவாகப் போகிறது என்று கனவுகளோடு பேசிய நாட்கள் இன்று நினைவுக்கு வருகின்றன.

அர்ஜூன் தாஸ் சார், நீங்கள் இந்தக் கதையைக் கேட்டவுடன் சொன்ன முதல் ‘ஓகே’தான் இன்று இந்தப் படம் இந்த மேடையில் நிற்பதற்குக் காரணம். அதற்காக உங்களுக்கு மனமார்ந்த நன்றி. ஹரிஷ் சார்பாகவும் ஒரு பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கதையை எழுதிய நாள் முதல், இந்தக் கதாபாத்திரத்திற்கு அவர் நினைத்த ஒரே நடிகர் நீங்கள் மட்டும்தான். அந்த அளவுக்கு உங்கள் மீது அவருக்கு நம்பிக்கை இருந்தது.
இந்தப் படம் உங்களுக்கு ஒரு கதாநாயகனாக மிகப்பெரிய வெற்றியைத் தரும் என்று நம்புகிறேன். நான் இந்தப் படத்தை பல முறை பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் புதிதாக ஏதோ ஒரு ஆச்சரியத்தை அளித்திருக்கிறது.

யோகி பாபு அண்ணா இந்தப் படத்தில் அசத்தலான நடிப்பை வழங்கியிருக்கிறார். அவருடைய கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெறும். ஷான் ரோல்டன் எனக்கு மிகவும் சிறப்பானவர். அவருடன் இணைந்து பணியாற்றிய பிறகுதான் ஒரு பாடலாசிரியராக எனது பெயர் பரவலாக கவனிக்கப்பட்டது என்று நான் நம்புகிறேன். எங்களது கூட்டணியில் உருவான பல பாடல்கள் மற்றும் படைப்புகள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

‘கான் சிட்டி’ திரைப்படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள் உள்ளன. அவை கதையோடு இயல்பாக இணைந்து பயணிக்கும். குறிப்பாக சில பாடல்களை பழைய தமிழ் தத்துவப் பாடல்களின் உணர்வில் உருவாக்கியுள்ளோம். அதற்கான ஐடியாவை வழங்கிய ஹரிஷுக்கு நன்றி. அவர் மிகவும் நம்பிக்கையுடன் செயல்படும் படைப்பாளி. அவருடைய அடுத்தடுத்த படங்களிலும் தொடர்ந்து இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.
வடிவுக்கரசி அம்மாவும், யோகி பாபு அண்ணாவும் இணைந்த காட்சிகள் ரசிகர்களை மிகவும் கவரும். வடிவுக்கரசி அம்மாவின் நடிப்பு எங்களை ஆச்சரியப்படுத்தியது. ஏற்கனவே அவருடைய ரசிகனாக இருந்த நான், இந்தப் படத்திற்குப் பிறகு இன்னும் பெரிய ரசிகனாக மாறிவிட்டேன்.இந்தப் படத்தின் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் மிகச் சிறப்பாக உழைத்துள்ளனர். எங்கள் முழு குழுவும் ஒரு குடும்பம் போல இணைந்து பணியாற்றியது இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம். இந்தப் படம் வெற்றி பெற்று, ஹரிஷின் முகத்தில் அந்த மகிழ்ச்சியைப் பார்ப்பதற்காக காத்திருக்கிறேன். ஒரு அண்ணன் தனது தம்பி வெற்றி பெறுவதைப் பார்ப்பது போல அந்த மகிழ்ச்சி இருக்கும்.அனைவருக்கும் எனது நன்றிகள். இந்தப் படம் வெற்றி பெற்று, வெற்றி விழாவில் மீண்டும் அனைவரையும் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன். நன்றி.”

நடிகர் VTV கணேஷ் பேசியதாவது.., 

“அனைவருக்கும் வணக்கம். குறிப்பாக பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்களுக்கு என் அன்பான வணக்கங்கள்.‘கான் சிட்டி’ எனக்கு மிகவும் வித்தியாசமான அனுபவமாக அமைந்த படம். இதற்கு முன்பு இதுபோன்ற கதைக்களத்தில் நான் நடித்ததில்லை. இயக்குநர் ஹரிஷ் என்னை அணுகிய விதமே மிகவும் தனித்துவமாக இருந்தது. பொதுவாக புதிய இயக்குநர்களுக்கு நான் எப்போதும் முன்னுரிமை கொடுப்பேன். ஏனெனில் அவர்களிடம் புதிய சிந்தனைகளும் புதிய பார்வைகளும் இருக்கும்.

ஹரிஷ் கதையை சொல்ல வந்தபோது, முதலில் நான் கேட்டது ‘தயாரிப்பாளர் யார்?’ என்பதுதான். இன்று ஒரு படத்தை ஆரம்பிப்பது எளிது. ஆனால் அதை முடித்து, திரையரங்குகளுக்கு கொண்டு வந்து சேர்ப்பது மிகப் பெரிய விஷயம். அந்த நம்பிக்கை இருக்கிறதா என்பதுதான் முக்கியம். ஹரிஷ் அந்த நம்பிக்கையையும் தைரியத்தையும் எனக்கு கொடுத்தார்.

அர்ஜூன் தாஸ், யோகி பாபு உள்ளிட்ட பல திறமையான கலைஞர்கள் படத்தில் இருப்பதாக சொன்னபோது மேலும் நம்பிக்கை ஏற்பட்டது. படத்தின் தயாரிப்பிலும், திட்டமிடலிலும் எந்த சமரசமும் இல்லாமல் செயல்பட்டார்கள். அதுவே என்னை இந்தப் படத்தில் இணைத்தது.

இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் ஹரிஷின் தெளிவான பார்வை. அவருக்கு என்ன வேண்டும் என்பது தெளிவாக தெரியும். தேவையில்லாத விஷயங்களைச் செய்யாமல், காட்சிகளைத் துல்லியமாக திட்டமிட்டு எடுத்தார். ஒரு நாள் முன்னதாகவே என் பணிகளை முடித்து அனுப்பிய அளவுக்கு திட்டமிடல் இருந்தது.

படத்தில் உருவாக்கப்பட்டுள்ள ‘கான் சிட்டி’ உலகம் மிகவும் சுவாரஸ்யமானது. அது சாதாரண நகரம் அல்ல. அதன் உள்ளே என்ன நடக்கிறது, அங்கே இருக்கும் மனிதர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதைக் கற்பனை மற்றும் நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர். சில உண்மை சம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்டு அந்த உலகத்தை உருவாக்கியிருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் அரவிந்த் விஸ்வநாதனின் பணியை நான் குறிப்பாக பாராட்ட விரும்புகிறேன். அவருடைய அணுகுமுறை, காட்சிகளைப் பார்க்கும் விதம் மற்றும் படத்தின் தோற்றத்தை உருவாக்கிய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. இன்றைய தலைமுறையின் திறமையான ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக அவர் வளர்வார் என்று நம்புகிறேன்.
அதேபோல் எடிட்டர் அருள் மோசஸ் முதல் படமென்று சொல்ல முடியாத அளவுக்கு அற்புதமாக பணியாற்றியிருக்கிறார். அவரது படத்தொகுப்பு மிகுந்த தரத்துடன் உள்ளது. படத்தின் வேகத்தையும், சுவாரஸ்யத்தையும் அவர் சிறப்பாக கையாண்டிருக்கிறார்.

அர்ஜூன் தாஸ் ஒரு நடிகராக தொடர்ந்து புதிய உயரங்களை அடைந்து வருகிறார். இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தரும். யோகி பாபு, வடிவுக்கரசி அம்மா மற்றும் மற்ற அனைத்து நடிகர்களும் தங்களுடைய கதாபாத்திரங்களை சிறப்பாக உயிர்ப்பித்துள்ளனர்.
இன்று ஒரு திரைப்படத்தை உருவாக்குவதைக் காட்டிலும் அதை திரையரங்குகளில் வெளியிடுவது மிகப்பெரிய சவாலாக உள்ளது. அந்த சவாலை வென்று ‘கான் சிட்டி’ இன்று ரசிகர்களை சந்திக்க வருகிறது. அதற்காக ஹரிஷையும் படக்குழுவினரையும் மனதார பாராட்டுகிறேன்.

இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, படக்குழுவினரின் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும். ரசிகர்கள் அனைவரும் திரையரங்குகளில் வந்து படம் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். அனைவருக்கும் நன்றி.”

நடிகர் அருள்தாஸ் பேசியதாவது:

“அனைவருக்கும் வணக்கம். ‘கான் சிட்டி’ படக்குழுவுடன் பணியாற்றிய அனுபவம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியானதாக இருந்தது. இந்தக் குழுவில் பெரும்பாலானோர் இளம் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். வெளியிலிருந்து பார்க்கும்போது ஒரு கல்லூரி ஆண்டு விழா குழுவைப் போல தோன்றலாம். ஆனால் அவர்கள் அனைவரும் அனுபவம் மிக்க, திறமையான தொழில்முறை கலைஞர்கள். அதுதான் இந்தக் குழுவின் மிகப்பெரிய பலம்.
இயக்குநர் ஹரிஷைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், அவருக்கு என்ன தேவை என்பது மிகவும் தெளிவாகத் தெரியும். தேவையற்ற காட்சிகளை எடுக்காமல், கதைக்கு அவசியமானவற்றை மட்டும் துல்லியமாக படமாக்குவார். அதனால் படப்பிடிப்பு மிகவும் சீராகவும், கலைஞர்களுக்கு சோர்வில்லாமலும் நடைபெற்றது.

இன்றைய டிஜிட்டல் காலத்தில் ஒரே காட்சியை பல கோணங்களில் படமாக்குவது வழக்கமாகிவிட்டது. ஆனால் ஹரிஷ் அப்படியில்லை. கதைக்குத் தேவையானதை மட்டும் எடுத்து, நேரத்தை வீணாக்காமல் பணியாற்றினார். அதுதான் அவருடைய பலம்.
ஒளிப்பதிவாளர் அரவிந்த் விஸ்வநாதன், உடை வடிவமைப்பாளர் நவா மற்றும் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தங்களது பணியை மிகச் சிறப்பாகச் செய்துள்ளனர். ஒவ்வொருவரும் படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளனர்.

அர்ஜூன் தாஸுடன் இது எனது முதல் படம் அல்ல. ஏற்கனவே அவருடன் பணியாற்றிய அனுபவம் உள்ளது. இந்தப் படத்திலும் அவர் மிகுந்த அர்ப்பணிப்புடன் நடித்திருக்கிறார். ஹரிஷ் பல நல்ல திரைப்படங்களில் பணியாற்றி அனுபவம் பெற்றவர். அந்த அனுபவம் இந்தப் படத்தில் தெளிவாக வெளிப்பட்டிருக்கிறது.படப்பிடிப்பு மிகவும் ஒழுங்காக நடந்தது. திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டன. டப்பிங் உள்ளிட்ட பணிகளும் விரைவாக நிறைவடைந்தன. படத்தைப் பார்த்தபோது எனக்கு முழுமையான திருப்தி கிடைத்தது.நான் எந்தப் படத்தில் நடித்தாலும், கதாபாத்திரம் பெரியதா, சிறியதா என்பதைப் பார்ப்பதில்லை. அந்தக் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கிறதா என்பதைத்தான் பார்க்கிறேன். இந்தப் படத்தில் நான் ஒரு மின்வாரிய அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அது மிகவும் சுவாரஸ்யமான மற்றும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரமாக அமைந்துள்ளது.இந்தக் குழு தமிழ் சினிமாவின் எதிர்காலத்தில் முக்கியமான இடத்தைப் பிடிக்கும் என்று நம்புகிறேன். புதிய படைப்பாளிகளும், புதிய தொழில்நுட்பக் கலைஞர்களும் தொடர்ந்து வருவதால்தான் நம் சினிமா வளர்கிறது. ‘கான் சிட்டி’ திரைப்படம் அந்த வகையில் பல திறமைகளை வெளிக்கொண்டு வரும்.ஷான் ரோல்டன் மற்றும் மோகன் ராஜன் ஆகியோரின் கூட்டணி தொடர்ந்து சிறந்த படைப்புகளை வழங்கி வருகிறது. இந்தப் படத்திலும் அவர்கள் மிகச் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர்.இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்று, இயக்குநர் ஹரிஷுக்கு தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் பெரிய அங்கீகாரத்தை பெற்றுத் தர வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். அனைவருக்கும் நன்றி.”

இமான் அண்ணாச்சி பேசியதாவது:

“அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கங்கள். ‘கான் சிட்டி’ திரைப்படத்தில் நானும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அந்தக் கதாபாத்திரத்திற்கு என்னைத் தேர்வு செய்த இயக்குநர் ஹரிஷுக்கு முதலில் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

படப்பிடிப்பு தளத்திற்கு முதன்முதலில் வந்தபோது, இளம் தலைமுறையினரின் ஆற்றல் நிறைந்த ஒரு சூழல் அங்கே இருந்தது. கேமராமேன் முதல் உதவி இயக்குநர்கள் வரை அனைவரும் மிகுந்த உற்சாகத்துடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். அந்த சூழலைப் பார்த்தபோது, ஒரு கல்லூரி வளாகத்தில் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் இயக்குநரிடமே நான் கேட்டேன், ‘இந்தக் கதாபாத்திரத்திற்கு என்னைத் தேர்வு செய்தது சரியான முடிவா?’ என்று. அதற்கு அவர், ‘இந்தக் கதாபாத்திரத்தை எழுதும்போதே உங்களை மனதில் வைத்துத்தான் எழுதியிருக்கிறேன்’ என்று சொன்னார். அந்த வார்த்தை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளித்தது.

அர்ஜூன் தாஸ் இந்தப் படத்திற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார். குறிப்பிட்ட சில காட்சிகளுக்காக அவர் எடுத்துக்கொண்ட முயற்சியும் பொறுமையும் பாராட்டத்தக்கது. எந்தவொரு தோற்றத்தையும், எந்தவொரு கதாபாத்திரத்தையும் முழுமையாக ஏற்று நடிப்பவர். இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தரும் என்று நம்புகிறேன்.

வடிவுக்கரசி அம்மா, யோகி பாபு மற்றும் மற்ற அனைத்து நடிகர்களுடனும் இணைந்து பணியாற்றிய அனுபவம் மிகவும் மகிழ்ச்சியானது. படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் ஒரு குடும்ப உணர்வு இருந்தது.

இந்தப் படத்தின் தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் கடினமாக உழைத்துள்ளனர். அவர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தெரியும். குறிப்பாக இயக்குநர் ஹரிஷின் முயற்சியும், இந்தப் படத்தை உருவாக்க அவர் எடுத்த உழைப்பும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

‘கான் சிட்டி’ திரைப்படம் ஒரு பவர்ஃபுல் எண்டர்டெயினராக ரசிகர்களை கவரும். மக்கள் அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து படத்தைப் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்று, படக்குழுவினரின் உழைப்புக்கு உரிய பலனைப் பெற்றுத்தர வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். அனைவருக்கும் நன்றி.”

நடிகர் சதானந்த் பேசியதாவது..,

“அனைவருக்கும் மாலை வணக்கம். என் பெயர் சதானந்த். இது எனது முதல் திரைப்படம், முதல் மேடை அனுபவம். முதலில் டிரைலரைப் பார்த்து ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி.

இந்த வாய்ப்புக்காக நான் முதலில் நன்றி சொல்ல வேண்டியவர் இயக்குநர் ஹரிஷ். கடந்த மூன்றரை ஆண்டுகளாக அவரை எனக்குத் தெரியும். இந்தக் கதையின் பயணமும் ஆரம்பத்திலிருந்தே அவருடன் இருந்திருக்கிறது. ஒரு நாள் திடீரென்று என்னை அழைத்து, ‘இந்த ஸ்கிரிப்ட்டில் ஒரு கதாபாத்திரம் இருக்கிறது, நீ நடிக்கிறாயா?’ என்று கேட்டார். நான் உடனே சம்மதித்தேன். அப்படித்தான் இந்தப் படத்தில் என் பயணம் தொடங்கியது.

நடிப்பில் எனக்கு உதவியாக ஒரு தனிப்பட்ட பயிற்சியாளர் இருந்தார். படப்பிடிப்புக்கு முன்பு ஒரு வார காலம் வசனங்களைப் பயிற்சி செய்து, மனப்பாடம் செய்து தயாரானேன். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் சில நேரங்களில் புதிதாக வசனங்கள் கொடுக்கப்பட்டன. சில நிமிடங்களிலேயே அதை மனப்பாடம் செய்து நடிக்க வேண்டிய சூழல் இருந்தது. அது எனக்கு சவாலாக இருந்தாலும், மிகச் சிறந்த அனுபவமாக அமைந்தது.

அர்ஜூன் தாஸ் சார் என்னுடன் நடித்தபோது மிகவும் ஆதரவாக இருந்தார். ஒரு புதிய நடிகராக நான் வசதியாக உணரும்படி சூழலை உருவாக்கிக் கொடுத்தார். அதற்காக அவருக்கு என் நன்றிகள்.

இமான் அண்ணாச்சி சார், யோகி பாபு அண்ணா உள்ளிட்ட மூத்த கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியதும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. யோகி பாபு அண்ணா எப்போதும் அன்பாகவும் ஊக்கமாகவும் பழகினார். அது எனக்கு தன்னம்பிக்கையை அதிகரித்தது.

இந்தப் படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு நாளும் எனக்கு ஒரு புதிய பாடமாக இருந்தது. இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் ஹரிஷ் மற்றும் முழு படக்குழுவினருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

டிரைலருக்கு நீங்கள் கொடுத்த ஆதரவைப் போலவே, திரைப்படத்தையும் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பத்திரிகையாளர்கள், ஊடக நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் என் நன்றிகள். நன்றி.”

குழந்தை நட்சத்திரம் அகிலன் பேசியதாவது:

“அனைவருக்கும் வணக்கம். என் பெயர் அகிலன். ‘கான் சிட்டி’ திரைப்படத்தில் நான் ஒரு மிகவும் சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அந்தக் கதாபாத்திரம் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். படத்தைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்.

இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய இயக்குநர் ஹரிஷ் அங்கிளுக்கு என் மனமார்ந்த நன்றிகள். அதேபோல் இந்தப் படத்தில் நடித்த அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். படத்தை திரையரங்குகளில் பார்த்து ஆதரவு அளிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.”

Maali & Manvi Movie Makers  தயாரிப்பாளர் சித்து நாயர் பேசியதாவது..,

“அனைவருக்கும் இனிய மாலை வணக்கம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் முதலில் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று பலரும் இந்தப் படம் தங்களுடைய முதல் அனுபவம் என்று கூறினார்கள். அதுபோல, ஒரு இணைத் தயாரிப்பாளராக இது எனக்கும் முதல் திரைப்பட அனுபவம். எங்கள் நிறுவனம் திரைப்படத் துறையில் இருந்தாலும், ஒரு திரைப்படத்தின் திரைக்கதையை நேரடியாகக் கேட்டு அதில் முதலீடு செய்வது எனக்கு இதுவே முதல் முறை.

ஒரு நாள் எனது குழுவினர் மூலமாக இயக்குநர் ஹரிஷைப் பற்றி கேள்விப்பட்டேன். அவர் ஒரு திரைப்படம் உருவாக்கிக் கொண்டிருக்கிறார், ஒரு இணைத் தயாரிப்பாளரைத் தேடுகிறார் என்று கூறினார்கள். அதன்பிறகு அவரைச் சந்திக்கச் சென்றேன். வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு திரைக்கதையை முழுமையாகக் கேட்கப் போகிறேன் என்ற அனுபவம் அது.

இரவு நேரத்தில் அவரது அலுவலகத்திற்கு சென்றோம். ஹரிஷ் கதையை விவரிக்கத் தொடங்கினார். முதல் பாதி கதையைச் சொல்லவே சுமார் 45 நிமிடங்கள் எடுத்துக்கொண்டார். நான் அப்போது அவரிடம், ‘பட்ஜெட் மற்றும் நிதி விஷயங்களைப் பற்றி பேசலாமா?’ என்று கேட்டேன். ஆனால் அவர், ‘இன்னும் இரண்டாம் பாதி இருக்கிறது. அதையும் கேட்ட பிறகு பேசலாம்’ என்றார்.

பொதுவாக பேச்சுவார்த்தைகளில் ஒருவருடைய ஆர்வத்தை வெளிப்படுத்தக்கூடாது என்று சொல்வார்கள். ஆனால் அந்தக் கதையை கேட்டபோது நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். அது எனது முதல் திரைக்கதை அனுபவமாக இருந்தாலும், அந்தக் கதையில் இருந்த ஆழத்தை என்னால் உணர முடிந்தது. ஹரிஷின் சிந்தனையின் தெளிவும், கதையின் மீதான நம்பிக்கையும் என்னை மிகவும் கவர்ந்தது.

குறிப்பாக, இயக்குநராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் அவர் இந்தப் படத்தில் ஈடுபட்டிருந்தது, தனது படைப்பின் மீது அவருக்கு இருந்த நம்பிக்கையை வெளிப்படுத்தியது. அதுவே எனக்கும் தைரியம் கொடுத்தது. அந்த இரவு நாங்கள் கைகுலுக்கி, இந்தப் பயணத்தை ஒன்றாகத் தொடங்க முடிவு செய்தோம்.

அதன்பிறகு ஒரு கேள்வி எனக்குள் இருந்தது. ‘கதையை இவ்வளவு நன்றாகச் சொல்கிறார். ஆனால் அதையே திரையில் வெற்றிகரமாக கொண்டு வர முடியுமா?’ என்பதுதான் அது. ஆனால் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றபோது அந்த சந்தேகம் முற்றிலும் நீங்கிவிட்டது. அங்கே இருந்த ஆற்றல், ஒழுங்கு, அர்ப்பணிப்பு மற்றும் தொழில்முறை அணுகுமுறை எனக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்தது.

அந்த தருணத்திலேயே இந்தப் படம் வெற்றி பெறும் என்று உறுதியாக நம்பினேன். பின்னர் படத்தின் முன்னோட்ட காட்சியை பார்த்தபோது நான் உண்மையிலேயே ஆச்சரியமடைந்தேன். படம் என்னுடைய எதிர்பார்ப்புகளைத் தாண்டி இருந்தது.

இந்தப் படம் ஒரு சிறந்த உள்ளடக்கத்துடன் உருவாகியிருக்கிறது. இதுபோன்ற திரைப்படங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. ஒரு திரைப்படத்தின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் நீங்கள் மிகப்பெரிய சக்தியாக இருக்கிறீர்கள். எனவே இந்தப் படத்தைப் பார்த்து, அதன் தரத்தை மக்களிடம் கொண்டு சேர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ரசிகர்கள் அனைவரும் இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்த்து மகிழ்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.”

Klout Studios தயாரிப்பாளர் அருண் பிரஜித் மனோகரன்  பேசியதாவது:

“அனைவருக்கும் வணக்கம். பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் பலருக்கும் என்னை ஏற்கனவே தெரியும். கடந்த பல ஆண்டுகளாக திரைப்படங்களில் Executive Producer ஆகவும், தயாரிப்பு நிர்வாகப் பொறுப்புகளிலும் பணியாற்றி வருகிறேன். நடிகர்கள் மற்றும் தயாரிப்பு தொடர்பான பல பணிகளில் இருந்த அனுபவம் எனக்கு உள்ளது.

நீண்ட நாட்களாக ஒரு திரைப்படத்தைத் தயாரிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அப்படியொரு நேரத்தில் ஒரு நாள் இரவு ஹரிஷ் என்னை தொடர்புகொண்டு சந்திக்க வேண்டும் என்றார். முதலில் கதை கேட்கும் மனநிலையில் நான் இல்லை. ‘நான் கதை கேட்க மாட்டேன், கதையை மட்டும் படிக்க கொடு’ என்று சொன்னேன். ஆனால் அந்த சந்திப்பே இந்தப் படத்தின் தொடக்கமாக மாறியது.

ஹரிஷ் கதையை முழுமையாகச் சொன்ன பிறகு, நான் திட்டமிட்டு வைத்திருந்த பல விஷயங்களை மறந்துவிட்டு உடனடியாக ‘நான் இந்தப் படத்தில் இருக்கிறேன்’ என்று கூறிவிட்டேன். அந்த அளவுக்கு அந்தக் கதை என்னை ஈர்த்தது.

இந்தக் கதையின் மிகப்பெரிய பலம், அது அனைவருடைய வாழ்க்கையுடனும் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடியதாக இருப்பதுதான். பணம் என்ற விஷயம் மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்று. அதைப் பற்றியே படம் மிகவும் சுவாரஸ்யமாக பேசுகிறது. அதனால் இந்தக் கதை அனைவரையும் எளிதில் சென்றடையும் என்று நம்புகிறேன்.

படப்பிடிப்பு காலத்தில் நான் அடிக்கடி செட்டுக்குச் செல்லவே இல்லை. ஹரிஷ் மீது எனக்கு அந்த அளவுக்கு நம்பிக்கை இருந்தது. படத்தின் முன்னோட்டக் காட்சியை பார்த்த பிறகு அந்த நம்பிக்கை இன்னும் பல மடங்கு அதிகரித்தது. இந்தப் படம் நிச்சயமாக பெரிய வெற்றி பெறும் என்ற உறுதி எனக்கு ஏற்பட்டது.

அர்ஜூன் தாஸும் நானும் சுமார் பன்னிரண்டு ஆண்டுகளாக நண்பர்கள். கைதி படத்திற்கு முன்பே நாங்கள் சந்தித்து, நல்ல படங்கள் செய்ய வேண்டும் என்று கனவு கண்டவர்கள். அந்தப் பயணத்தில் இன்று ‘கான் சிட்டி’ போன்ற ஒரு படத்தில் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படம் அர்ஜூன் தாஸின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான மைல்கல்லாக இருக்கும். இதுவரை பார்த்திராத ஒரு புதிய அர்ஜூன் தாஸை ரசிகர்கள் இதில் காண்பார்கள். இந்தப் படம் அவருக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியைத் தரும் என்று நம்புகிறேன்.

வடிவுக்கரசி அம்மா, அகிலன், அருள்தாஸ், சதானந்த் மற்றும் மற்ற அனைத்து நடிகர்களும் அசத்தலான நடிப்பை வழங்கியுள்ளனர். ஒளிப்பதிவாளர் அரவிந்த் விஸ்வநாதன், கலை இயக்குநர் ராஜ்கமல், எடிட்டர் அருள் மோசஸ் உள்ளிட்ட தொழில்நுட்பக் குழுவினரின் உழைப்பு படத்தின் தரத்தை மேலும் உயர்த்தியுள்ளது.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் மற்றும் பாடலாசிரியர் மோகன் ராஜன் இணைந்து அற்புதமான பாடல்களை வழங்கியுள்ளனர். ஒவ்வொரு பாடலும் தனித்துவமாகவும் மனதில் நிற்கக்கூடிய வகையிலும் அமைந்துள்ளது.

‘கான் சிட்டி’ ஒரு குடும்பத்தோடு அமர்ந்து ரசிக்கக்கூடிய பொழுதுபோக்கு திரைப்படம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கக்கூடிய அம்சங்கள் இதில் இருக்கின்றன. மேலும், இன்றைய சமூகத்தில் நடக்கும் பல விஷயங்களோடு இந்தக் கதை மக்களை எளிதில் இணைத்துக்கொள்ளும்.

நல்ல உள்ளடக்கம் கொண்ட படங்களுக்கு நீங்கள் எப்போதும் ஆதரவு அளித்து வருகிறீர்கள். அதேபோல் இந்தப் படத்தையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ஜூன் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் ‘கான் சிட்டி’ திரைப்படத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி.”

டெல்டா ஸ்டுடியோஸ் முத்துக்குமார் ஐயப்பன் பேசியதாவது:

“அனைவருக்கும் வணக்கம். முதலில் இயக்குநர் ஹரிஷுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். படத்தைப் பார்த்த பிறகு எங்களுக்கு மிகவும் நம்பிக்கை ஏற்பட்டது. குறிப்பாக பிரிவியூ காட்சி பார்த்த மறுநாள் காலையிலேயே இந்தப் படத்தின் மீது முழு நம்பிக்கை உறுதியானது.

ஹரிஷின் உழைப்பும், படத்தின் தரமும் எங்களை மிகவும் கவர்ந்தது. இந்தப் படத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி.”

இது இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசிய உரை.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது:

அனைவருக்கும் வணக்கம். பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவரையும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. ‘கான் சிட்டி’ பற்றி பேசுவதற்கு முன், முதலில் இயக்குநர் ஹரிஷைப் பற்றி பேச வேண்டும் என்று நினைக்கிறேன்.

பொதுவாக நான் மிகவும் டென்ஷன் ஆகும் மனிதன். ஒரு படத்தின் வெளியீடு என்றாலே எனக்கு அதிகமான பதற்றம் இருக்கும். ஆனால் ‘கான் சிட்டி’ குறித்து ஹரிஷ் முதன் முதலில் என்னிடம் பேசியபோது, எல்லோருக்கும் இருந்த சந்தேகங்களே எனக்கும் இருந்தன. ‘இதை உண்மையில் செய்ய முடியுமா? இவ்வளவு பெரிய கனவை நிறைவேற்ற முடியுமா?’ என்ற கேள்விகள் இருந்தன.

ஆனால் நான் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு இயக்குநரை சந்தித்தேன்; அவர் கதை சொன்னபோது எந்த அளவுக்கு நம்பிக்கையுடன் பேசினாரோ, இறுதியில் படத்தைப் பார்த்தபோது அதே விஷயம் ஒரு அங்குலம் கூட மாறாமல் திரையில் இருந்தது. அவர் சொன்னதை அப்படியே நிறைவேற்றியிருந்தார். அதற்காக ஹரிஷை நான் மனதார பாராட்டுகிறேன்.

இயக்குநராக மட்டுமல்ல, தனது சொந்த கனவுக்காக தனது சொந்த முதலீட்டுடன் களம் இறங்கியவர் ஹரிஷ். ஒரு கனவு காண்பது எளிது. ஆனால் அந்தக் கனவுக்காக தனது பணத்தையும், வாழ்க்கையையும், நேரத்தையும் பணயம் வைத்து போராடுவது மிகவும் கடினம். அந்த தைரியம் எனக்கு மிகவும் ஊக்கமளித்தது. ஹரிஷ் எனக்கு ஒரு நண்பரைத் தாண்டி ஒரு இன்ஸ்பிரேஷன்.

இந்தப் படத்தின் பயணத்தை ஆரம்பம் முதல் பார்த்திருக்கிறேன். இந்த மேடையில் நிற்கும்போது, டிரைலரைப் பார்க்கும்போது கூட எனக்கு உணர்ச்சிவசப்பட வைத்தது. ஏனெனில் அந்த சிரிப்பின் பின்னால் எத்தனை தூக்கமில்லா இரவுகள், எத்தனை போராட்டங்கள் இருக்கின்றன என்பது எனக்கு தெரியும்.

இந்தப் படம் இந்த அளவுக்கு உருவாகியதற்கு அர்ஜூன் தாஸ் மிக முக்கிய காரணம். இந்தக் கதைக்கு தேவையான பாரமும், ஆளுமையும் அவரிடம் இயல்பாகவே இருக்கிறது. நான் அவருடன் பணியாற்றியபோது ஒரு விஷயத்தை உணர்ந்தேன். இந்தத் துறையில் திறமைசாலிகள் பலர் இருக்கிறார்கள். ஆனால் சிலருக்கே ஒரு தனி இடம் கிடைக்கிறது. அதற்கு காரணம் அவர்களுடைய மனசாட்சியும் நேர்மையும். அர்ஜூனிடம் அந்தத் தூய்மை இருக்கிறது. இந்தப் படம் அவருக்கான அந்த அடுத்த கட்டத்தை உறுதிப்படுத்தும் என்று நம்புகிறேன்.

அன்னா பென் ஒரு அற்புதமான கலைஞர். வடிவுக்கரசி அம்மா ஒரு லெஜண்ட். 80களின் தமிழ் சினிமாவை நேசிக்கும் ஒருவராக, அவருடன் பணியாற்றியது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. திரையில் அவர் தோன்றும் ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு தனி எடை இருக்கிறது.

யோகி பாபு பற்றி சொல்ல வேண்டுமென்றால், அவரிடம் ஒரு தெய்வீகமான வரம் இருக்கிறது என்று நான் நம்புகிறேன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, யார் அவரைப் பார்த்தாலும் முகத்தில் சிரிப்பு வந்து விடுகிறது. அது சாதாரண விஷயம் அல்ல. அவர் இந்த இடத்தை அடைய எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பதை அவரிடமிருந்தே கேட்டிருக்கிறேன். அந்தப் பயணம் மிகவும் ஊக்கமளிக்கிறது.

இந்தப் படத்தில் நடித்த ஒவ்வொருவரும், சிறிய குழந்தை முதல் அருள்தாஸ் சார், இமான் அண்ணாச்சி, சதானந்த் என அனைவரும் தங்களுடைய முழு ஆற்றலையும் கொடுத்திருக்கிறார்கள். அந்த அர்ப்பணிப்பால்தான் இந்த இசையும், இந்த உலகமும் உயிர் பெற்றிருக்கிறது.

பாடலாசிரியர் மோகன் ராஜனுடன் சேர்ந்து இந்தப் படத்தில் பணியாற்றியது மிகப்பெரிய அனுபவம். இன்னும் வெளியாகாத இரண்டு பாடல்கள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். பழைய தமிழ் சினிமாவின் தத்துவப் பாடல்களின் ஆன்மாவை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற ஆசை எங்களுக்குள் இருந்தது. அந்த எண்ணத்தை ஹரிஷ் முன்வைத்தார். அதன் அடிப்படையில் உருவான அந்த இரண்டு பாடல்கள் எனது இசைப் பயணத்தில் மிகவும் முக்கியமானவை.

பதின்மூன்று ஆண்டுகளாக நான் தமிழ் சினிமாவில் இசையமைத்து வருகிறேன். ஆனால் இந்த இரண்டு பாடல்கள் குறித்து எனக்கு ஒரு தனிப்பட்ட பெருமை இருக்கிறது. அந்த பெருமையில் பாதி பங்கு மோகன் ராஜனுக்கும், பாதி பங்கு ஹரிஷுக்கும் சொந்தமானது.

“விஜய் பற்றி குறிப்பாக சொல்ல வேண்டும். அவர் ஒரு தனித்துவமான மனிதர். தனக்காக செய்யக்கூடிய விஷயங்களைத் தாண்டி, இன்று முழு சினிமா துறைக்காகவே பல நல்ல விஷயங்களைச் செய்ய முன்வந்திருக்கிறார். அவர் எங்கு இருந்தாலும் மகிழ்ச்சியையும் நேர்மறை எண்ணங்களையும் பரப்பக்கூடியவர். மிகவும் தூய்மையான மனம் கொண்டவர். நல்ல நோக்கங்களோடு செயல்படுபவர். அவருடன் இணைந்து பணியாற்றியது எனக்கு மகிழ்ச்சியான அனுபவம். மீண்டும் அவருடன் பணியாற்றப் போவதிலும் சந்தோஷமாக இருக்கிறேன்.

‘கான் சிட்டி’ ரசிகர்களுக்கு சிரிப்பையும், மகிழ்ச்சியையும், திருப்தியையும் தரும். அதே நேரத்தில் நாம் வாழும் சமூகத்தைப் பற்றியும் ஒரு சிந்தனையை ஏற்படுத்தும். பொழுதுபோக்குடன் ஒரு கருத்தையும் சொல்லக்கூடிய திரைப்படமாக இது இருக்கும்.  ‘கான் சிட்டி’ ஒரு சாதாரண திரைப்படம் அல்ல. இது பலருடைய கனவுகள், உழைப்பு, நம்பிக்கை ஆகியவற்றின் விளைவு. ஜூன் 26ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகிறது. அனைவரும் குடும்பத்துடன் வந்து படத்தைப் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். நன்றி.”

நடிகை வடிவுக்கரசி பேசியதாவது..,

“பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள். நீங்கள் அனைவரும் இந்தப் படத்திற்காக இங்கே வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ‘கான் சிட்டி’ என்ற விளக்கை ஏற்றி வைத்திருப்பது படக்குழு என்றால், அதை மக்களிடம் பிரகாசமாக கொண்டு சேர்க்கும் பொறுப்பு ஊடகங்களுக்கே சொந்தமானது. அந்தப் பொறுப்பை நீங்கள் சிறப்பாக செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இந்தப் படத்தில் நடிக்க என்னை அணுகியபோது இயக்குநர் ஹரிஷ் மிகவும் நேர்மையாகப் பேசினார். ‘இந்தக் கதாபாத்திரத்தை உங்களை மனதில் வைத்து எழுதவில்லை, ஆனால் இப்போது நீங்கள் இதைச் செய்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்’ என்று வெளிப்படையாகச் சொன்னார். அந்த நேர்மை எனக்கு மிகவும் பிடித்தது.

அதன்பிறகு அவரது அலுவலகத்தில் அமர்ந்து முழுக் கதையையும் கேட்டேன். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அவர் மிகுந்த ஆர்வத்துடனும் உணர்வுடனும் கதையை விவரித்தார். கதையை கேட்டவுடன் இந்தப் படத்தில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவரும் இளம் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். ஆனால் அவர்கள் அனைவரிடமும் ஒரு அர்ப்பணிப்பும் தொழில்முறை அணுகுமுறையும் இருந்தது. அதனால் படப்பிடிப்பு மிகவும் மகிழ்ச்சியாக நடந்தது. புதிய தலைமுறை திரைப்படக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

யோகி பாபு, அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட அனைவருடனும் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். குறிப்பாக அர்ஜூன் தாஸின் அர்ப்பணிப்பும் உழைப்பும் என்னை மிகவும் கவர்ந்தது. அவர் இந்தப் படத்தின் மூலம் இன்னும் பெரிய உயரத்தை அடைவார் என்று நம்புகிறேன்.

இயக்குநர் ஹரிஷ் படப்பிடிப்பு முழுவதும் மிகவும் தெளிவாகவும் திட்டமிட்டும் செயல்பட்டார். அவருடைய நம்பிக்கையும் உறுதியும் இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம். இந்தப் படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு நாளும் எனக்கு ஒரு இனிய அனுபவமாக இருந்தது. முழுக் குழுவும் ஒரு குடும்பம் போல இணைந்து உழைத்தது. அதனால்தான் இந்தப் படம் இவ்வளவு சிறப்பாக வந்திருக்கிறது என்று நான் நம்புகிறேன்.

எனக்கு உடல்நலப் பிரச்சினைகள் இருந்தபோதும் இந்தப் படத்தில் நடித்தேன். படப்பிடிப்பு முடிந்த மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் அந்தக் காலகட்டத்திலும் படக்குழுவினர் என்மீது காட்டிய அக்கறையை நான் மறக்க முடியாது.

அர்ஜூன் தாஸ், யோகி பாபு மற்றும் படக்குழுவில் இருந்த இளம் கலைஞர்கள் அனைவரும் மிகவும் அன்பாகவும் மரியாதையுடனும் நடந்துகொண்டார்கள். குறிப்பாக அர்ஜூன் தாஸ் எப்போதும் எனக்கு தேவையான உதவிகளை செய்து, மிகவும் அக்கறையுடன் பார்த்துக் கொண்டார்.

இந்தப் படத்தில் நடித்த ஒவ்வொருவரும் கடினமாக உழைத்திருக்கிறார்கள். வெளியில் இருந்து பார்க்கும்போது எல்லாமே எளிதாகத் தோன்றலாம். ஆனால் திரைக்குப் பின்னால் நிறைய உழைப்பும் அர்ப்பணிப்பும் இருக்கிறது. அந்த உழைப்பின் பலனை ரசிகர்கள் திரையில் பார்க்கப் போகிறார்கள்.

இயக்குநர் ஹரிஷ் மற்றும் அவரது சகோதரர் பரத் இருவரும் பல வருட அனுபவத்தை கொண்டவர்கள். பல்வேறு தயாரிப்பு நிறுவனங்களில் பணியாற்றி கற்றுக்கொண்ட அனுபவத்தை இந்தப் படத்தில் முழுமையாக பயன்படுத்தியிருக்கிறார்கள். அதனால்தான் படம் மிகவும் திட்டமிட்ட முறையில் உருவாகியுள்ளது.

கதை கேட்ட நாளிலிருந்தே இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த இரண்டு மணி நேரக் கதை சொல்லும் அனுபவமே என்னை முழுவதுமாக ஈர்த்துவிட்டது. அதே உணர்வை ரசிகர்களும் திரையரங்குகளில் அனுபவிப்பார்கள் என்று நம்புகிறேன்.

‘கான் சிட்டி’ வெறும் பொழுதுபோக்கு திரைப்படம் மட்டுமல்ல. மக்களை சிரிக்கவும் மகிழ்ச்சியாக இருக்கவும் வைக்கும் அதே நேரத்தில் ஒரு நல்ல கருத்தையும், சமூக விழிப்புணர்வையும் சொல்லும் படம். வாழ்க்கையில் பணம், ஆசை, முடிவுகள் ஆகியவற்றைப் பற்றி சிந்திக்க வைக்கும் அம்சங்களும் இதில் உள்ளன.

இந்தப் படத்தைப் பார்த்து ரசிகர்கள் இரண்டு மணி நேரம் தங்களுடைய கவலைகளை மறந்து மகிழ்ச்சியாக இருப்பார்கள். அதே சமயம் ஒரு நல்ல செய்தியையும் எடுத்துச் செல்வார்கள். இயக்குநர் ஹரிஷ் மற்றும் முழுப் படக்குழுவினரின் உழைப்புக்கு இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைத் தர வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். நன்றி.”

நடிகர் யோகி பாபு பேசியதாவது..,

“அனைவருக்கும் வணக்கம். இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்த இயக்குநர் ஹரிஷ், தயாரிப்பாளர்கள் மற்றும் முழுப் படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அர்ஜூன் தாஸுடன் எனக்கு நல்ல நட்பு இருக்கிறது. தொடர்ந்து அவருடன் படங்களில் பணியாற்றி வருகிறேன். ஒரு ஹீரோவுக்கு நல்ல நண்பன் இருந்தாலே போதும், ஹீரோயின் கூட தேவையில்லை என்று நான் அடிக்கடி நகைச்சுவையாக சொல்வேன். அந்த அளவுக்கு எங்களுடைய நட்பு நெருக்கமானது.

ஹரிஷை நான் இன்றல்ல, பல வருடங்களாக அறிவேன். பல படங்களில் பணியாற்றிய காலத்திலிருந்தே அவருடைய உழைப்பையும், சினிமா மீதான அர்ப்பணிப்பையும் பார்த்திருக்கிறேன். அவர் இயக்குநராக வேண்டும் என்ற ஆசையை பல ஆண்டுகளாகவே வெளிப்படுத்தியிருந்தார். அப்போது கூட நான் அவரிடம், ‘நீ கண்டிப்பாக இயக்குநராக வேண்டும்’ என்று சொன்னவன்.

இன்று அவர் இயக்குநராக உருவாகி, அவரைப் பற்றி அனைவரும் இவ்வளவு பாராட்டிப் பேசுவதைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது ஆரம்பம் மட்டுமே. இதைத் தொடர்ந்து பெரிய நடிகர்களுடன், பெரிய படங்களை இயக்கி இன்னும் உயரங்களுக்கு செல்ல வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.

அர்ஜூன் தாஸ் இந்தப் படத்திற்காக மிகுந்த உழைப்பை செலுத்தியிருக்கிறார். அவரது அர்ப்பணிப்பும், தொழில்முறை அணுகுமுறையும் எப்போதும் என்னை கவர்கிறது. அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம்.

இந்தப் படத்தின் முழுக் குழுவும் ஒரு குடும்பம் போல இணைந்து பணியாற்றியது. படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்து, படம் சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக கடினமாக உழைத்தனர். அந்த ஒற்றுமை இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம்.

ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், கலை இயக்குநர், உடை வடிவமைப்பாளர், உதவி இயக்குநர்கள் என அனைவரும் தங்களுடைய சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர். அவர்களுடைய உழைப்பின் பலன் திரையில் தெளிவாகத் தெரியும்.

இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று நான் மனதார வேண்டிக்கொள்கிறேன். ‘கான் சிட்டி’ திரைப்படம் ரசிகர்களை மகிழ்விக்கும், குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய ஒரு சிறந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும். அனைவரும் திரையரங்குகளில் வந்து ஆதரவு அளிக்க வேண்டும்.

இந்தப் படத்திற்காக உழைத்த அனைத்து கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி. ‘கான் சிட்டி’ மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். நன்றி.”

நடிகை அன்னா பென் பேசியதாவது..,

“அனைவருக்கும் வணக்கம். நான் தமிழ் பேச முயற்சி செய்கிறேன். ஏதேனும் தவறு இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். முதலில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ‘கான் சிட்டி’ திரைப்படத்திற்கு ஆதரவு அளிக்கும் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது எனது இரண்டாவது தமிழ் திரைப்படம். ‘கொட்டுக்காளி’ படத்தில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்தபோது நீங்கள் கொடுத்த அன்பும் பாராட்டும் எனக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருந்தது. அந்த மீனா கதாபாத்திரத்திற்கு முற்றிலும் எதிர்மாறான ஒரு வேடத்தில் தான் ‘கான் சிட்டி’ படத்தில் நடித்திருக்கிறேன்.

இயக்குநர் ஹரிஷ் முதன்முதலில் இந்தக் கதாபாத்திரத்தை என்னிடம் கூறியபோது எனக்கு மிகவும் பதற்றமாக இருந்தது. இதுவரை நான் நடித்திராத ஒரு புதிய பரிமாணத்தில் இருக்கும் கதாபாத்திரம் அது. நடிப்பு பாணியும், வெளிப்பாடும், கதாபாத்திரத்தின் அளவும் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. அதனால் அது எனக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது.

பல கமர்ஷியல் கதைகளை நான் இதற்கு முன் கேட்டிருந்தாலும், அந்த உலகத்தில் நான் எப்படி பொருந்துவேன் என்ற தயக்கம் இருந்தது. ஆனால் ஹரிஷ் என்மீது முழு நம்பிக்கை வைத்தார். ‘நீங்கள் இதைச் செய்ய முடியும். இது வித்தியாசமாகவும், யாரும் எதிர்பார்க்காத வகையிலும் இருக்கும்’ என்று தொடர்ந்து ஊக்கப்படுத்தினார். அந்த நம்பிக்கையே இந்தக் கதாபாத்திரத்தை செய்ய எனக்கு தைரியம் கொடுத்தது.

ஹரிஷிடம் நான் மிகவும் ரசித்த விஷயம் அவரது உறுதியான நம்பிக்கை. படப்பிடிப்பு தளத்தில் எந்த சவால் வந்தாலும், எந்த சந்தேகம் எழுந்தாலும், அவர் எப்போதும் அமைதியாகவும் நம்பிக்கையுடனும் அதை எதிர்கொண்டார். சினிமா மீதான அவரது காதலும் அர்ப்பணிப்பும் என்னை மிகவும் கவர்ந்தது.

இந்தப் படத்தை உருவாக்க அவர் எடுத்த உழைப்பு அளவிட முடியாதது. படம் தொடங்கிய நாளிலிருந்து ஜூன் 26 வெளியீடு வரை, ஒவ்வொரு கட்டத்திலும் சிறந்ததை கொடுக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். பாடல்கள், விளம்பரங்கள், புரமோஷன்கள், வெளியீடு என அனைத்திலும் அவர் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டார். அதற்காக அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும்.

அர்ஜூன் தாஸுடன் பலமுறை இணைந்து பணியாற்ற முயற்சி செய்திருந்தேன். இந்தப் படத்தின் மூலம் அது நிறைவேறியுள்ளது. ஒரு நடிகராக அவர் திறமையானவர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் ஒரு மனிதராகவும் அவர் மிகவும் எளிமையானவர், அன்பானவர். படப்பிடிப்பு தளத்தில் அனைவரையும் சமமாக மதித்து, மிகவும் ஒத்துழைப்புடன் பணியாற்றினார்.

வடிவுக்கரசி மேம் ஒரு லெஜெண்ட். அவருடன் பணியாற்றியது எனக்கு ஒரு கனவு நிறைவேறிய அனுபவம். மூத்த கலைஞர்களுடன் பணியாற்றும்போது அவர்கள் பகிரும் அனுபவங்கள் எனக்கு எப்போதும் மிகப்பெரிய பாடமாக இருக்கும். இந்தப் படப்பிடிப்பின் போது அவர் என்னுடன் நிறைய நேரம் செலவிட்டு, தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். தமிழ் வசனங்களைப் பேசுவதில் எனக்கு ஆரம்பத்தில் இருந்த பயத்தை போக்கவும் உதவினார்.

யோகி பாபு சார் பற்றி சொல்ல வேண்டுமென்றால், அவர் என்னுடைய ஆயுளை பத்து வருடம் அதிகரித்திருப்பார் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர் எப்போதும் அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பார். காட்சிக்கு நடுவிலும், கேமரா பின்னாலும் அவர் சொல்வதெல்லாம் நம்மை சிரிக்க வைக்கும். அவருடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம்.

அகிலன் திரையில்  எனது மகன். மிகவும் திறமையான மற்றும் அன்பான சிறுவன். ஃபாக்ஸி மற்றும் மற்ற கலைஞர்களுடன் பணியாற்றிய அனுபவமும் மிகவும் இனிமையானது. இந்தப் படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரும் எனக்கு மிகுந்த ஆதரவாக இருந்தனர்.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் இசை இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. மேலும், இந்தப் படத்தில்தான் நான் முதன்முறையாக நடனமாடியிருக்கிறேன். அதற்காக சந்தோஷ் மாஸ்டருக்கு சிறப்பு நன்றி. சவாலான நடன அசைவுகளை நம்பிக்கையுடன் கற்றுக்கொடுத்து என்னை ஊக்கப்படுத்தினார்.

‘கான் சிட்டி’ திரைப்படத்தை அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த நிகழ்ச்சிக்கு வந்ததற்கும், தொடர்ந்து ஆதரவு அளிப்பதற்கும் அனைவருக்கும் நன்றி.”

நடிகர் அர்ஜூன் தாஸ் பேசியதாவது..,

“அனைவருக்கும் வணக்கம். முதலில் இயக்குநர் ஹரிஷுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆரம்பத்திலிருந்தே மிகத் தெளிவான திட்டமிடலுடன், முழு நம்பிக்கையுடனும், உறுதியுடனும் இந்தப் படத்தை முன்னெடுத்து வந்திருக்கிறார். ஒரு இயக்குநராக அவர் காட்டிய அர்ப்பணிப்பும், உழைப்பும், தன்னம்பிக்கையும் மிகவும் பாராட்டத்தக்கது.

இந்தப் படத்தை இவ்வளவு பெரிய அளவில் மக்களிடம் கொண்டு சேர்க்க தயாரிப்பாளர்கள் எடுத்த முயற்சி மிகப் பெரியது. நகரம் முழுவதும் போஸ்டர்கள், பேனர்கள், விளம்பரங்கள் என இப்படத்திற்காக அவர்கள் செய்துள்ள புரமோஷன் என்னை மிகவும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அதற்காக அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல் வெளியீட்டில் இணைந்துள்ள அபிஹிம்சா பிலிம்ஸ், டெல்டா ஸ்டுடியோஸ் மற்றும் படத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. படத்தைப் பார்த்து பாராட்டியவர்களுக்கும் எனது நன்றிகள்.

‘கான் சிட்டி’ ஒரு குடும்பத்துடன், நண்பர்களுடன், உறவினர்களுடன் சேர்ந்து ரசிக்கக்கூடிய திரைப்படம். இதில் உணர்ச்சிகளும் இருக்கின்றன, நகைச்சுவையும் இருக்கிறது, அதே நேரத்தில் மனதைத் தொடும் ஒரு அழகான கதையும் இருக்கிறது.

இந்தப் படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு நடிகரும் தங்களது சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். அன்னா பென், வடிவுக்கரசி அம்மா, யோகி பாபு, அருள்தாஸ் மற்றும் மற்ற அனைத்து கலைஞர்களின் பங்களிப்பும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் அற்புதமான இசையை வழங்கியுள்ளார். தொழில்நுட்பக் குழுவின் உழைப்பும் படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளது.

இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நம்பிக்கையுடன் திரையரங்குகளுக்கு வாருங்கள். படம் பார்த்துவிட்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்புவீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.இந்தப் படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய அனைத்து மூத்த கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் முழு படக்குழுவினருக்கும் மீண்டும் ஒருமுறை என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘கான் சிட்டி’ திரைப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தொடர்ந்து வழங்குங்கள். அனைவருக்கும் நன்றி.”

இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் பேசியதாவது..,

“அனைவருக்கும் வணக்கம். முதலில் இந்த மேடையில் நான் நன்றி சொல்ல வேண்டிய மிக முக்கியமான இரண்டு பேர் உள்ளனர். குனா ப்ரோ போஸ்ட் ஆபீஸ் மற்றும் விஜய் ப்ரோ (சில்வர் ட்ரீ ஸ்டுடியோஸ்). இவர்கள் இருவரும் இல்லையென்றால் ‘பவர்ஹவுஸ் பிக்சர்ஸ்’ என்ற நிறுவனமும், ‘கான் சிட்டி’ திரைப்படமும் உருவாகியிருக்காது. ஆரம்பம் முதல் இன்று வரை என்னுடன் நின்று உறுதுணையாக இருந்திருக்கிறார்கள்.

சினிமாவில் நான் எப்போதும் கடவுளிடம் வேண்டுவது நல்ல மனிதர்கள் என்னுடன் இருக்க வேண்டும் என்பதைத்தான். அந்த வகையில் எனது தயாரிப்பாளர்கள், பங்குதாரர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தின் இணைத் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், ஆடியோ உரிமையை பெற்றவர்கள், ஓடிடி உரிமையாளர்கள் என அனைவரும் இந்தப் படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களின் ஆதரவு இல்லாமல் இந்தப் பயணம் சாத்தியமாகியிருக்காது.

என்னுடைய தொழில்நுட்பக் குழுவுக்கு நான் தனிப்பட்ட முறையில் நன்றி சொல்ல வேண்டும். ஒளிப்பதிவாளர் ஃபாக்ஸி, எடிட்டர் அருள் மோசஸ், கலை இயக்குநர் ராஜ், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், நடன இயக்குநர் சந்தோஷ் மற்றும் முழு தொழில்நுட்பக் குழுவும் இந்தப் படத்தின் முதுகெலும்பாக இருந்துள்ளனர். வெறும் 55 நாட்களில் இந்தப் படத்தை முடிக்க அவர்களின் உழைப்பே காரணம்.

பாடலாசிரியர் மோகன் ராஜன் மற்றும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ஆகியோரின் கூட்டணி இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள ஏழு பாடல்களும் எனக்கு மிகவும் சிறப்பானவை. குறிப்பாக இன்னும் வெளியாகாத பாடல்களையும் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்.

நடிகர், நடிகைகள் பற்றி பேச வேண்டுமென்றால், ஒவ்வொருவரும் தங்களின் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளனர். வடிவுக்கரசி அம்மாவின் நடிப்பு படம் பார்த்த அனைவராலும் பாராட்டப்படுகிறது. இந்தக் கதாபாத்திரத்தில் அவரை தேர்வு செய்தது எனது வாழ்க்கையின் மிகச் சரியான முடிவுகளில் ஒன்று என்று சொல்லலாம்.

அன்னா பென் இந்தப் படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். அவருடைய கதாபாத்திரம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும். அதேபோல் யோகி பாபு அண்ணா எனக்கு மிகவும் தனிப்பட்ட ஆதரவாக இருந்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் படம் இயக்க வேண்டும் என்று தொடர்ந்து ஊக்கப்படுத்தியவர் அவர்தான். இந்தப் படத்திற்காக அவர் அளித்த ஒத்துழைப்பை நான் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்.

அதேபோல் அர்ஜுன் தாஸ் சார் இந்தப் படத்திற்கு சம்மதம் சொல்லவில்லை என்றால் ‘கான் சிட்டி’ உருவாகியிருக்காது. மிகுந்த அர்ப்பணிப்புடனும் நேர்த்தியுடனும் நடித்துள்ளார். இந்தப் படம் அவரது திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமையும் என்று நான் நம்புகிறேன்.

இறுதியாக என் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் நன்றி. குறிப்பாக என் மனைவிக்கு நான் சிறப்பு நன்றி சொல்ல வேண்டும். நான் மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிய காலத்திலேயே என்னை நம்பி திருமணம் செய்து கொண்டார். கடந்த ஐந்து ஆண்டுகளாக என்னுடைய கனவுக்காக என்னுடன் இருந்து அனைத்து கஷ்டங்களையும் தாங்கி வந்திருக்கிறார். இன்று இந்த மேடையில் நான் நிற்பதற்கு அவருடைய ஆதரவும் ஒரு முக்கிய காரணம்.

ஜூன் 26ஆம் தேதி ‘கான் சிட்டி’ திரைப்படம் வெளியாகிறது. இந்தப் படத்தை குடும்பத்துடன் திரையரங்குகளில் பார்த்து ஆதரிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி.”

பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு குடும்பத்தின் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக ஒரு பணம் அச்சிடும் மெஷின் கிடைப்பதை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், அதன்பிறகு நடக்கும் சம்பவங்களை நகைச்சுவை மற்றும் பரபரப்புடன் சொல்லும் படமாக அமைந்துள்ளது.

மங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை Netflix நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வரும் நிலையில், ஜூன் 26ஆம் தேதி வெளியாகும் “கான் சிட்டி” திரைப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

தொழில்நுட்ப குழு:

இயக்கம்: ஹரிஷ் துரைராஜ்
தயாரிப்பு: Power House Pictures
நடிப்பு: அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி
ஒளிப்பதிவு: அரவிந்த் விஸ்வநாதன்
எடிட்டிங்: அருள் மோசஸ்
இசை: ஷான் ரோல்டன்
கலை இயக்கம்: ராஜ் கமல்
உடை வடிவமைப்பு: நவா ராம்போ ராஜ்குமார்
ஸ்டண்ட்: ஆக்ஷன் சந்தோஷ்
மக்கள் தொடர்பு: யுவராஜ்

சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!

சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக சசிகுமார் நடிப்பில் வெளியான ‘நந்தன்’ படத்தைத் தேர்ந்தெடுத்து கௌரவித்திருக்கிறது டெல்லி தமிழ்ச் சங்கம். 2024ல் இரா.சரவணன் இயக்கத்தில் வெளியான படம் ‘நந்தன்’. தலித் பஞ்சாயத்து தலைவர்கள் பதவிக்கு வந்தும் உரிய அங்கீகாரத்தை அடைய முடியாமல் போராடும் நிஜத்தை ‘நந்தன்’ படத்தில் கதையாக்கி இருந்தார்கள். படத்தின் க்ளைமாக்ஸில் தமிழ்நாட்டில் உள்ள தலித் பஞ்சாயத்து தலைவர்கள் பலரும் தங்களின் வேதனையான நிலையை வாக்குமூலமாக வெளியிட்டிருந்தார்கள். இது படம் வெளியான போது தமிழகம் முழுக்க பரபரப்பைக் கிளப்பியது. ‘நந்தன்’ படத்தின் சமூக நீதிக் கருத்தை இயக்குநர் பாரதிராஜா, பாக்யராஜ், நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட திரைத்துறையினரும் திருமாவளவன், அண்ணாமலை, சீமான், அன்புமணி ராமதாஸ், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்று இருந்தார்கள். படம் வெளியான பிறகு தமிழகம் முழுக்க தலித் பஞ்சாயத்து தலைவர்கள் சுதந்திரமாகக் கொடியேற்றவும், உரிய அதிகாரங்களை அடையவும் அதிரடியாக உத்தரவிட்டது தமிழக அரசு. கடந்த வருட குடியரசு தினத்தில் இதுகாலம் வரை நடக்காத அதிசயமாகத் தமிழ்நாட்டில் உள்ள தலித் பஞ்சாயத்து தலைவர்கள் அனைவரும் கொடியேற்றினர். “நந்தன் திரைப்படம் உருவாக்கிய சமூக புரட்சி இது” என சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அதனை வரவேற்று இருந்தார்கள். இந்நிலையில், சமூக மாற்றத்தை நிகழ்த்திய திரைப்படமாக ‘நந்தன்’ படத்தைத் தேர்ந்தெடுத்து நடிகர் சசிகுமார், இயக்குநர் இரா.சரவணன் இருவருக்கும் பாராட்டு விழா நடத்தி இருக்கிறது டெல்லி தமிழ்ச் சங்கம்.

கடந்த 20.6.26 அன்று மாலை டெல்லி தமிழ்ச் சங்கம் நடத்திய பாராட்டு விழாவில் இந்திய கலாச்சார அமைச்சகத்தின் இயக்குநர் Shah Faesal IAS சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். டெல்லி தமிழ் சங்கத்தின் பொதுச் செயலாளர் சத்யா அசோகன், இணைத் தலைவர் மகேந்திரன், தயாரிப்பாளர் சிவா மற்றும் டெல்லி தமிழ்ச் சங்க நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். “தமிழ்த் திரைப்படங்கள் மகத்தான உணர்வைக் கொடுக்கின்றன. சமூகத்தைச் சரியாகப் பிரதிபலிக்கின்றன. நல்ல படங்களைக் கொண்டாடுவதுதான் சமூகம் சிறக்க உதவும்”  என இந்திய கலாச்சார அமைச்சகத்தின் இயக்குநர் Shah Faesal IAS பேசினார். இணைத் தலைவர் மகேந்திரன், “நந்தன் மாதிரியான படத்தில் நடிக்க ஹீரோக்களுக்கு தனி தைரியம் தேவை. சசிகுமார் அதனை சமூக அக்கறையோடு செய்திருக்கிறார். வாயில் வெற்றிலை எச்சில் ஒழுக அவர் நடித்த காட்சிகளைப் பார்த்தபோது திகைத்துப் போய்விட்டேன். கமலுக்கு சப்பாணி என்றால், சசிகுமாருக்கு நந்தன். அந்தளவுக்கு அடி உதை வாங்கி தலித் பஞ்சாயத்து தலைவராக தன்னை அப்படியே காட்டி இருக்கிறார் சசிகுமார். டெல்லி தமிழ்ச் சங்கத்தின் அங்கீகாரம் மட்டுமல்ல, இன்னும் பல விருதுகள் ‘நந்தன்’ படத்திற்கு வந்து சேரும். சமூகத்தை வலிமைப்படுத்தும் இத்தகைய படைப்புகள்தான் இன்றைய தலைமுறையின் அவசிய தேவை…” என்றார். நிகழ்வில் நடிகர் சசிகுமாரும் இயக்குநர் இரா.சரவணனும் திரண்டிருந்த தமிழ்ச் சங்க நிர்வாகிகளின் கேள்விகளுக்குப் பதில் அளித்தனர். “படத்தில் நான் பட்ட சிரமங்கள் யாவும் டெல்லி மக்களின் பாராட்டில் சரியாகிவிட்டன. ‘நந்தன்’ படம் வெளியான பிறகு எங்களுக்கு விடிவு பிறந்திருப்பதாக ஒரு பெண் பஞ்சாயத்து தலைவர் என் கைகளைப் பிடித்து அழுதார். அந்தக் கண்ணீர் தேசிய விருதுக்கு நிகரானது” என்றார் சசிகுமார். “எப்போதுமே சினிமா தமிழ் மக்களின் ரத்தத்துடன் கலந்தது. அதனால்தான் முதலமைச்சரையே தமிழ் மக்கள் சினிமாவில் இருந்து தேர்ந்தெடுக்கிறார்கள். ‘நந்தன்’ படத்திற்குக் கிடைத்திருக்கும் இந்தப் பாராட்டு அடுத்தடுத்த படைப்புகளை இன்னும் பொறுப்போடு செய்ய வைக்கும்” என்றார் இயக்குநர் இரா.சரவணன்.

சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்ந்தெடுக்கப்பட்டு சசிகுமார், இரா.சரவணன் இருவருக்கும் விருது கொடுக்கப்பட்டது. ஜென்ஸி தலைமுறையினரும் இத்தகைய சமூக அக்கறையான படங்களைப் பார்க்க வேண்டும் என்பதால் வரும் வாரத்தில் ‘நந்தன்’ படத்தை பிரத்யேகமாகத் திரையிடவும் டெல்லி தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்து வருகிறது.

“டாக்ஸிக்” திரைப்படம் உலகளவில் ஆகஸ்ட் 26, 2026 வெளியாகிறது !!

ராகிங் ஸ்டார் யாஷின் ‘டாக்ஸிக்’ திரைப்படம், உலகளவில் ஆகஸ்ட் 26, 2026 வெளியீடு புதிய போஸ்டருடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

ராகிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் இந்த ஆண்டின் மிகப்பெரிய திரை அனுபவங்களில் ஒன்றாக உருவாகி வரும் ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ திரைப்படம், உலகம் முழுவதும் 2026 ஆகஸ்ட் 26, புதன்கிழமை வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்புடன் வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர், யாஷ்ஷின் இரட்டை அவதாரங்களான ராயா (Raya) மற்றும் டிக்கெட் (Ticket) ஆகிய கதாபாத்திரங்களை முன்னிறுத்தி, படத்தின் இருண்ட, ஆழமான மற்றும் பல அடுக்குகள் கொண்ட உலகத்தை ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு முறை அறிமுகப்படுத்துகிறது.

வழக்கமான தந்தை-மகன் உறவை கொண்டாடும் போஸ்டராக இல்லாமல், இந்த போஸ்டர் பதற்றம், அதிகாரம் மற்றும் உணர்ச்சி ரீதியான சிக்கல்களால் நிரம்பிய ஒரு உறவை சுட்டிக்காட்டுகிறது. சாதாரண ரிலீஸ் தேதி அறிவிப்பாக இல்லாமல், முரண்பட்ட உணர்வுகள், மறைந்திருக்கும் ரகசியங்கள் மற்றும் ‘டாக்ஸிக்’ உருவாக்கி வரும் பிரம்மாண்டமான உலகத்தை இது உணர்த்துகிறது. இதனால், ஏற்கனவே மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் குறித்த ஆர்வம் மேலும் அதிகரித்துள்ளது.

2026 ஆம் ஆண்டின் முக்கிய பண்டிகைக் காலத்தை குறிவைத்து டாக்ஸிக் திரைப்படம் வெளியிடப்படுகிறது. வரமகாலட்சுமி விரதம், ஓணம், ஈத் மற்றும் ரக்ஷா பந்தன் ஆகிய பண்டிகைகளை உள்ளடக்கிய நீண்ட விடுமுறை காலத்தில் படம் வெளியாக இருப்பதால், இந்தியா மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

புதன்கிழமை வெளியீடு என்பதால், நீண்ட விடுமுறை வாரத்தை முழுமையாக பயன்படுத்தி, அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. பல்வேறு மொழிகள், பிராந்தியங்கள் மற்றும் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் இந்த வெளியீடு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை வெளியிடப்பட்ட ஒவ்வொரு அப்டேட்டும், டாக்ஸிக் திரைப்படம் மிகப்பெரிய கனவு, பிரம்மாண்டம் மற்றும் தனித்துவமான படைப்பாற்றலுடன் உருவாகி வருவதை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த திரைப்படம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட இயக்குநர் கீது மோகன்தாஸ் மற்றும் ராகிங் ஸ்டார் யஷ் ஆகியோரின் முதல் கூட்டணியாகும். KVN Productions மற்றும் யாஷின் Monster Mind Creations இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படம், இந்திய சினிமாவின் மிகவும் பிரம்மாண்டமான முயற்சிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள டாக்ஸிக், இந்திய சினிமாவுக்கு புதிய தரத்தை அமைக்கும் நோக்கத்துடன் உருவாகியுள்ளது. மேலும், கன்னடம், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரைப்படம் வெளியாகிறது.

இந்த பிரம்மாண்ட முயற்சிக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, ருக்மிணி வசந்த் மற்றும் தாரா சுதாரியா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வெளியீட்டு கவுண்ட்டவுன் தொடங்கியுள்ள நிலையில், தற்போது அனைவரது கவனமும் டாக்ஸிக் திரைப்படத்தின் மீதும் அதன் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டு திட்டத்தின் மீதும் திரும்பியுள்ளது. பண்டிகை காலத்தை குறிவைத்த வெளியீடு, நாடு முழுவதும் ரசிகர்களை கவரும் வலிமை, சர்வதேச அளவில் அதிகரித்து வரும் ஆர்வம் மற்றும் ஒவ்வொரு அறிவிப்பின் மூலமும் விரிவடைந்து வரும் படத்தின் உலகம் ஆகியவை டாக்ஸிக் திரைப்படத்தை 2026 ஆம் ஆண்டின் மிக முக்கியமான திரையரங்கு வெளியீடுகளில் ஒன்றாக மாற்றியுள்ளது.

KVN Productions மற்றும் Monster Mind Creations தயாரிப்பில் உருவாகும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ ( ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ ) திரைப்படம், 2026 ஆகஸ்ட் 26, புதன்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது

அபிஷேக் நாமாவின் ‘நாகபந்தம்- (Nagabhandham) ‘ திரைப்படம் ஜூலை 3ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது

அபிஷேக் நாமாவின் இயக்கத்தில் உருவான ‘நாகபந்தம் ‘( Nagabhandham) திரைப்படம் வெளியாவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் படக் குழுவினர் இந்தியா முழுவதும் படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

விராட் கர்ணா( Virat Karna) நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இது படத்தின் கதைக்களம் மற்றும் அதன் விவரிக்கும் உலகத்தை விரிவாக அறிமுகப்படுத்துகிறது.

இந்த முன்னோட்டத்தின் தொடக்கத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள புனிதமான அனந்தபத்மநாப சுவாமி கோயில் இடம் பிடித்திருக்கிறது. அங்கு அனைவராலும் போற்றப்படும் ‘பிரம்ம கமலம்’ என்பது சாதாரண தங்க தாமரை மலர் மட்டுமல்ல என்பதை ஒரு பூசாரி வெளிப்படுத்துகிறார்.

பல நூற்றாண்டுகளாக படையெடுப்பாளர்கள் மற்றும் புதையல் வேட்டையர்களின் எண்ணற்ற தொடர் முயற்சிகள் இருந்த போதிலும்… அந்த தெய்வீக பொருள் ஒருபோதும் திருடப்படவில்லை.

கற்பனைக்கு எட்டாத-  கற்பனை செய்து பார்த்திட இயலாத-  சக்திகளை பெறுவதற்காக ஒரு வலிமை வாய்ந்த தீய சக்தி அதை கைப்பற்ற முயலும் போது, சிவபெருமான் அங்கு தோன்றி அதை பாதுகாக்க நாக சாதுக்களுடன் கைகோர்க்கிறார்.

கோயிலை பாதுகாக்கும் மர்மமான ‘நாக பந்தம்’ பற்றிய குறிப்புடன் இப்படத்தின் முன்னோட்டம் நிறைவடைகிறது. இது தெய்வீக சக்திக்கும், தீமைக்கும் இடையிலான ஒரு காவிய மோதலுக்கான களத்தை அமைக்கிறது.

இந்திய புராணங்கள் வரலாறு மற்றும் கோயில் சார்ந்த மரபுகள் குறித்து இயக்குநர் அபிஷேக் நாமா மேற்கொண்ட விரிவான ஆய்வுகள்… இந்த முன்னோட்டம் முழுவதும் வெளிப்படுகிறது.

சுவாரசியமான விவரங்கள் மற்றும் மெய்சிலிர்க்க வைக்கும் தருணங்கள் நிறைந்த இது… பல காலகட்டங்களை உள்ளடக்கிய ஒரு கதைக்களத்தை முன்னிறுத்துகிறது.

புராணம்- வரலாறு- மர்மம் மற்றும் சாகசம் -ஆகியவற்றை ஒரே சினிமா அனுபவத்துடன் இணைக்கும் வகையில் இதன் கதை சொல்லும் விதம் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது.

மிகப்பெரிய அளவில் உருவாக்கப்பட்டுள்ள’ நாக பந்தம்’ தனது பிரம்மாண்டமான விஷுவல்கள் மூலம்  பார்வையாளர்களை கவர்கிறது.

படத்தின் பிரம்மாண்டமான கதைக்களம் ஒவ்வொரு காட்சியிலும் பிரதிபலிக்கிறது. தயாரிப்பு வடிவமைப்பாளர் அசோக் குமார் பிரம்மாண்டமான மற்றும் நுட்பமான விவரங்களுடன் கூடிய அரங்குகளை உருவாக்கியுள்ளார்.

அனந்த பத்மநாப சுவாமி கோயில் மற்றும் அதன் கம்பீரமான மூலவர் சிலை ஆகியவை மீண்டும் உருவாக்கப்பட்டுள்ள விதம்…. படத்தின் முதன்மையான சிறப்பம்சங்களில் ஒன்றாக திகழ்கிறது.

ஒளிப்பதிவாளர் எஸ். சௌந்தர்ராஜன் படத்தின் ஆன்மீக சாராம்சத்தையும், பிரம்மாண்ட அளவையும் அழகாக நேர்த்தியுடன் படம்பிடித்து பிரமிக்க வைக்கும் காட்சிகளுடன் கதையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறார்.

காட்சிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் இசையமைப்பாளர்கள் ஜூனைத் கான் மற்றும் அபே ( Abhe) ஆகியோரின் இசை அமைந்துள்ளது. இவர்களின் பின்னணி இசை-  கதையின் பக்தி உணர்வையும், உணர்வுபூர்வமான ஆழத்தையும் ஒரு சேர மேம்படுத்துகிறது.

படத்தின் சண்டைக் காட்சிகளும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

இத்தகைய பிரம்மாண்டமான மற்றும் லட்சியமிக்க படைப்பிற்காக சமரசமற்ற தயாரிப்பு தரத்துடன் படைப்பை வழங்கிய என் ஐ கே ஸ்டுடியோவின் ( NIK Studio)   தயாரிப்பாளர்கள் கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகி ரெட்டி ஆகியோர் பாராட்டுக்கு உரியவர்கள். குறிப்பாக இதில் இடம் பிடித்துள்ள வி எஃப் எக்ஸ் VFX பணிகள் சர்வதேச தரத்தில் அமைந்துள்ளன.

இப்படத்தில் விராட் கர்ணா கதாநாயகனாக நடிக்கிறார். ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்திருந்தாலும் அவர் தனது குறிப்பிடத்தக்க திரை தோற்றத்தையும் ,வசீகரத்தையும் வெளிப்படுத்துகிறார்.

சாதாரணமான மனிதனாகவும் … சிவபெருமானாகவும்… என இரண்டு வித தோற்றங்களைக் கொண்ட கதாபாத்திரத்தில் விராட் கர்ணா தோன்றுகிறார் என முன்னோட்டம் தெரிவிக்கிறது. அவரது உடல் மாற்றம்,  கம்பீரமான தோற்றம் மற்றும் கதாபாத்திரத்தின் மீதான அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு ஆகியவை படம் முழுவதும் தெளிவாக தெரிகிறது.

மேலும் கதையில் முக்கிய பங்குவகிக்கவிருக்கும் ஒரு வலுவான நட்சத்திரக் கூட்டத்தையும் குறிக்கும் வகையில் பல முக்கிய துணை கதாபாத்திரங்களின் தோற்றத்தையும் இந்த ட்ரெய்லர் வழங்குகிறது.

மொத்தத்தில் பழங்கால புராணங்கள் – மறைக்கப்பட்ட புதையல்கள் – தெய்வீக மர்மங்கள் – ஆகியவை அடங்கிய கண்களுக்கு விருந்தளிக்கும் ஒரு புராண சாகச படமாக ‘நாகபந்தம் ‘ இருக்கும் என ட்ரெய்லர் உறுதிப்படுத்துகிறது.

POGO Launches ‘Tamil Thiruvizha’ School Contact Programme across Tamil Nadu to celebrate Culture, Community and Play

● Engaging over 1 lakh kids across 200 schools in Chennai, Coimbatore and Madurai
through immersive cultural experiences inspired by Tamil traditions
● With Britannia Milk Bikis as presenting sponsor, the initiative is co-powered by Arun
Icecreams and Glucovita Glucose Lollipop along with Pothys apparels and ACT II popcorn

as associate sponsors

Watch here the promo for Tamil Thiruvizha

Chennai, 22nd June: POGO has launched a special edition of its School Contact Programme (SCP) in
Tamil Nadu, bringing the state’s rich traditions and vibrant culture directly to school kids through an
engaging, interactive on-ground initiative. Designed to celebrate Tamil heritage through participation
rather than observation, the programme aims to reach over 1 lakh students across 200 schools across
Chennai, Coimbatore and Madurai.

As childhood experiences increasingly shift towards digital screens, opportunities for children to actively
engage with local traditions, community games and cultural practices have become limited. Through this
unique initiative, POGO seeks to bridge that gap by creating immersive experiences with its beloved
characters Chhota Bheem and Little Singham, along with the newest entrant to the POGO universe –
Sampat Champat, allowing children to connect with Tamil culture in a fun, relatable and memorable
way.

Speaking about the initiative, Tanaz Mehta, Head of Advertising Revenues, South Asia, Warner Bros.
Discovery, said, “At POGO, we believe meaningful learning happens through participation and shared
experiences. Tamil Nadu has a rich cultural heritage that deserves to be experienced, celebrated, and
passed on to younger generations in engaging ways. This special School Contact Programme creates
opportunities for children to connect with their traditions through play, teamwork, and cultural discovery
alongside their favourite POGO characters. This initiative also provides our brand partners a significant
platform to build authentic connections with POGO fans, families and consumers across the state. We
are excited to bring this unique celebration of Tamil culture to schools and inspire children to take pride
in their roots.”
Sharing her thoughts, Janhavi Vyas, Head of Marketing, South Asia, Warner Bros. Discovery, said,
“With Tamil Thiruvizha, our endeavour is to present an immersive experience where children are not
merely observing but actively participating in the vibrant culture the state has to offer. We want to take
them beyond the screens and give them a chance to connect with their favourite characters in a fun and
unforgettable manner. From games, races to contests and interactive engagements, every activity is
planned keeping Tamil Nadu’s rich traditions at the heart of it. We look forward to interacting with the
kids across schools, further building a strong community of POGO fans.”
Titled POGO Tamil Thiruvizha, the activation sees POGO’s beloved characters, Chhota Bheem and Little
Singham, embark on a cultural journey across Tamil Nadu, inviting children to experience the state’s
colours, traditions, games, and everyday customs through a series of high-energy activities.
The programme features a range of specially designed interactive experiences inspired by Tamil culture,
including Little Singham Solraan Kelu, a Tamil-themed take on the classic Simon Says game; Bheem
Chutki Aattam Pattam Dress-Up, a fun-filled costume relay race; Filter Kaapi Ready-aa with Sampat

Champat, a fun splashy race to see which teacher can have the most “filter coffee” cups ready in record
time; and Bheem-oda Thiruvizha Quiz, a trivia competition testing children’s knowledge of Tamil food,
festivals, cinema and traditions.


Warner Bros. Discovery Kids  
Warner Bros. Discovery (NASDAQ: WBD) is a leading global media and entertainment company that
creates and distributes the world’s most differentiated and complete portfolio of content and brands
across television, film, and streaming. Warner Bros. Discovery’s kids’ network combines a rich legacy of
characters with a deep roster of creatives and unique brands of storytelling. 
In India, Warner Bros. Discovery’s kids’ network comprises Cartoon Network, POGO and Discovery Kids,
available in Hindi, Tamil, Telugu, Malayalam, and Kannada, with POGO also available in Marathi.
Together, the portfolio includes best in original animated content including, multi-award-winning locals
‘Chhota Bheem’ and ‘Little Singham’ and global hits like ‘Ben 10’, ‘Teen Titans Go!’, ‘Dragon Ball’, as well
as iconic chase comedy show ‘Tom and Jerry’. For more information, please visit www.wbd.com.

Yamaha Hosts its Hybrid Mileage Challenge in Chennai

India Yamaha Motor (IYM) Pvt. Ltd. hosted its Hybrid Mileage Challenge in Chennai. The initiative aimed
to showcase the impressive fuel efficiency enabled by Yamaha’s Hybrid Technology, featuring the Smart
Motor Generator (SMG) system, while educating customers on its real-world benefits. Organized on 21st
June 2026 in collaboration with authorized dealerships Samukh Bikes, Vardhaman Motors, and
Namokkar Byke Zone, the event saw enthusiastic participation from customers and their families,
showcasing Yamaha’s FZ-S Fi Hybrid motorcycle as well as 125cc Hybrid scooters – the RayZR and
Fascino.
The Smart Motor Generator (SMG) and Stop & Start System (SSS) work in tandem to optimize fuel
efficiency while reducing emissions. These technologies ensure quieter starts, provide electric-assisted
torque for smooth acceleration, and automatically shut off the engine during idling to conserve fuel.
Together, they enhance the riding experience by delivering better mileage, improved performance, and
a lower environmental footprint – making them ideal for riders seeking both efficiency and excitement.
The challenge featured a curated route of approximately 50 kms for motorcycles and 30 kms for
scooters covering a mix of city roads, urban traffic, and open stretches. This allowed participants to
experience their vehicle across varied riding conditions, evaluating aspects such as suspension,
manoeuvrability, braking, acceleration, and initial pick-up. To ensure accurate mileage measurement, all
scooters and bikes were refuelled to a consistent level before and after the ride, with fuel consumption
carefully recorded.
Beyond the ride, Yamaha experts engaged with participants, sharing practical tips on riding techniques
and maintenance practices to help maximize fuel efficiency. As a token of appreciation, all participants
received exclusive souvenirs along with a complimentary wash. Yamaha further reinforced its
commitment to customer satisfaction with a comprehensive 10-point inspection, ensuring optimal
performance and safety for all participating vehicles.
Given below are the top 3 winners who were presented with trophies and certificates in appreciation of
their accomplishments:
Motorcycle:
Winner Customer Name Mileage
Achieved
1 Mr. Thulsidass 97.60 kmpl
2 Mr. Niranjan 96.40 kmpl
3 Mr. Sarathkumar 96.86 kmpl

Scooter:
Winner Customer Name Mileage
Achieved
1 Mr. M. Sakthivel 91.93 kmpl
2 Mr. R. Balamurugan 90.47 kmpl
3 Ms. A. Lavanya 88.88 kmpl

நூறு சாமி விமர்சனம்

“உறவுகளின் வலியையும், மனித உணர்வுகளின் மதிப்பையும் பேசும் மனதைத் தொடும் குடும்ப நாடகம்.”

குடும்ப உறவுகள், சமூக பார்வைகள் மற்றும் மனிதர்களின் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “நூறு சாமி”. வழக்கமான வணிகத் திரைப்படங்களிலிருந்து விலகி, உணர்வுகளுக்கும் உறவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அமைக்கப்பட்டுள்ள இந்த படம், பார்வையாளர்களிடம் ஒரு அமைதியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

கதை

பல ஆண்டுகளாக குடும்பத்திற்காக வாழ்ந்து, தனது பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிய ஒரு பெண், தனது வாழ்க்கையை மீண்டும் தனது விருப்பப்படி வாழ முடிவு செய்கிறார். ஆனால் அவரது அந்த முடிவு குடும்பத்தினரிடமும், சமூகத்திடமும் பல்வேறு கேள்விகளையும் எதிர்ப்புகளையும் உருவாக்குகிறது.

தனது வாழ்க்கைக்கான உரிமையை நிலைநாட்ட முயலும் ஒரு பெண்ணின் போராட்டம், குடும்ப உறவுகளின் சிக்கல்கள், சமூகத்தின் பார்வை மற்றும் மனிதர்களின் உணர்வுகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு படம் நகர்கிறது.

நடிப்பு

படத்தின் மிகப்பெரிய பலம் நடிகர்களின் இயல்பான நடிப்பு. கதாபாத்திரங்களின் உணர்வுகளை மிகைப்படுத்தாமல், யதார்த்தமாக வெளிப்படுத்தியுள்ளனர்.

குறிப்பாக கதாநாயகியின் நடிப்பு படத்தின் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளுக்கு கூடுதல் வலிமை சேர்க்கிறது. குடும்ப உறவுகளில் ஏற்படும் மனக்கசப்புகள், ஏமாற்றங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளை நடிகர்கள் மிகவும் நம்பகத்தன்மையுடன் வெளிப்படுத்தியுள்ளனர்.

இயக்கம்

இயக்குநர் சமூகத்தில் அதிகம் பேசப்படாத ஒரு விஷயத்தை மிகவும் நிதானமாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் கையாண்டுள்ளார். எந்தக் கதாபாத்திரத்தையும் முழுமையாக நல்லவராகவோ கெட்டவராகவோ காட்டாமல், ஒவ்வொருவரின் பார்வையையும் பதிவு செய்ய முயற்சித்திருக்கிறார்.

வசனங்கள் பல இடங்களில் மனதைத் தொடுகின்றன. குறிப்பாக குடும்ப உறவுகள் தொடர்பான காட்சிகள் பார்வையாளர்களை சிந்திக்க வைக்கின்றன.

தொழில்நுட்ப அம்சங்கள்

பின்னணி இசை காட்சிகளின் உணர்வுகளை அழகாக உயர்த்துகிறது. ஒளிப்பதிவு இயல்பான காட்சிகளால் கதைக்கு தேவையான நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. பாடல்கள் குறைவாக இருந்தாலும், கதையின் ஓட்டத்தை பாதிக்காமல் அமைந்துள்ளன.

குறைகள்

படத்தின் முதல் பாதியில் சில காட்சிகள் மெதுவாக நகர்வதாக தோன்றலாம். வணிக திரைப்படங்களில் இருக்கும் மாஸ் காட்சிகள், அதிரடி அல்லது நகைச்சுவை அம்சங்களை எதிர்பார்த்து வருபவர்களுக்கு படம் சற்று மெதுவாக உணரப்படலாம்.

சில காட்சிகள் இன்னும் சுருக்கமாக இருந்திருக்கலாம் என்ற எண்ணமும் ஏற்படுகிறது.

இறுதி அலசல்

“நூறு சாமி” வெறும் குடும்பக் கதையாக இல்லாமல், சமூகத்தின் பழைய பார்வைகளையும், தனிமனித சுதந்திரத்தையும் பற்றி பேசும் ஒரு உணர்வுப்பூர்வமான திரைப்படமாக அமைந்துள்ளது. அமைதியான திரைக்கதை, இயல்பான நடிப்பு மற்றும் மனதைத் தொடும் தருணங்கள் இந்த படத்தின் பலமாக அமைகின்றன.

மாஸ் திரைப்படங்களை விட உள்ளடக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பார்வையாளர்களுக்கு இந்த படம் ஒரு நல்ல அனுபவமாக இருக்கும்.

எங்கள் தங்கம் – (Maa Inti Bangaaram) – விமர்சனம்

கதை

ஸ்வர்ணா (சமந்தா) ஒரு அமைதியான குடும்ப வாழ்க்கையை விரும்பும் பெண். ஆனால் அவரது கடந்த காலத்தில் மறைந்து கிடக்கும் ரகசியங்கள், பழைய எதிரிகள் மற்றும் வன்முறையான சூழ்நிலைகள் மீண்டும் அவரது வாழ்க்கைக்குள் நுழைகின்றன. தனது குடும்பத்தையும், தன்னுடைய அடையாளத்தையும் காப்பாற்ற அவர் போராட வேண்டிய சூழல் உருவாகிறது.

சமந்தாவின் நடிப்பு

இந்தப் படம் முழுவதும் சமந்தாவின் தோள்களில் பயணிக்கிறது. நகைச்சுவை, குடும்ப உணர்வு, ஆக்ஷன் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகள் என அனைத்திலும் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். குறிப்பாக சண்டைக் காட்சிகள் படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளன. பல விமர்சகர்கள் இதை சமந்தாவின் சிறந்த நடிப்புகளில் ஒன்றாகக் குறிப்பிடுகின்றனர்.

இயக்கம் மற்றும் திரைக்கதை

இயக்குனர் நந்தினி ரெட்டி, வழக்கமான கமர்ஷியல் கதையை பெண் மையக் கதாபாத்திரத்துடன் புதிய கோணத்தில் சொல்ல முயற்சித்துள்ளார். ஆனால் சில இடங்களில் திரைக்கதை மிகவும் கணிக்கக்கூடியதாக மாறுகிறது. இரண்டாம் பாதியில் சில காட்சிகள் நீளமாக உணரப்படுகின்றன.

இசை மற்றும் தொழில்நுட்பம்

சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை ஆக்ஷன் காட்சிகளுக்கு பெரிய பலமாக உள்ளது. ஒளிப்பதிவும் கிராமப்புற சூழலையும் காட்சிப்படுத்தும் விதமும் படத்திற்கு அழகை சேர்க்கின்றன.

பலம்

  • சமந்தாவின் வலுவான நடிப்பு
  • சிறப்பான ஆக்ஷன் காட்சிகள்
  • குடும்ப உணர்வுகள்
  • பின்னணி இசை
  • பெண் மைய கமர்ஷியல் திரைப்படம்

பலவீனம்

  • கணிக்கக்கூடிய கதை
  • சில இடங்களில் நீளமான திரைக்கதை
  • வில்லன் கதாபாத்திரம் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை

ஒரு புதுமையான கதை அல்ல. ஆனால் ஒரு பெண் கதாநாயகியை மையமாக வைத்து முழுமையான கமர்ஷியல் திரைப்படத்தை உருவாக்கியிருப்பது இதன் மிகப்பெரிய வெற்றி. சமந்தாவின் ரசிகர்களுக்கு இது கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். குடும்பம், ஆக்ஷன் மற்றும் உணர்வுகள் கலந்த ஒரு பொழுதுபோக்கு திரைப்படமாக இது செயல்படுகிறது.

இறுதி மதிப்பெண்: 3.5/5 — சமந்தாவின் நடிப்புக்காகவும், ஆக்ஷன் காட்சிகளுக்காகவும் கண்டிப்பாக பார்க்கலாம்.

இந்தியாவில் ‘ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே’ (Spider-Man: Brand New Day) படத்திற்கான முன்பதிவு தொடங்கியது

இந்தியாவில் ‘ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே’ (Spider-Man: Brand New Day) படத்திற்கான முன்பதிவு தொடங்கியது; ரசிகர்கள் பிரீமியம் பெரிய திரை வடிவங்களில் (Premium Large Format) படத்தைப் பார்க்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர்

‘ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே’ படத்திற்கான முன்பதிவு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது! டாம் ஹாலண்ட் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம், ஜூலை 30 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தியாவில் வெளியாகிறது.

நீண்ட காத்திருப்பு முடிவுக்கு வந்தது! இந்தியா முழுவதும் ‘ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே’ படத்திற்கான முன்பதிவு இப்போது அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் டாம் ஹாலண்ட் நடித்த இப்படத்தை, சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா நிறுவனம் ஜூலை 30 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிடுகிறது. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்டமான வெளியீடான ‘ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே’, மறக்க முடியாத ஒரு பெரிய திரை சாகச அனுபவத்தை உறுதியளிக்கிறது. இந்த அனுபவத்தை முன்னெப்போதையும் விட பிரம்மாண்டமாகவும், சிறப்பானதாகவும் மற்றும் முழுமையான ஈடுபாட்டைத் தரும் வகையிலும் மாற்ற, சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா இப்படத்தை பல்வேறு பிரீமியம் பெரிய திரை வடிவங்களில் (Premium Large Formats) வெளியிடுகிறது. இதன் மூலம் ரசிகர்கள் ஒவ்வொரு ‘ஸ்விங்’ (swing) அசைவு, சண்டைக்காட்சி மற்றும் பிரம்மாண்டமான காட்சிகளைப் பெரிய அளவில் அனுபவிக்க முடியும்.

P[XL], Big Pix, Screen X, ICE, 4DX மற்றும் MX4D உள்ளிட்ட பிரீமியம் பெரிய திரை வடிவங்களில் ‘ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே’ படத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ளதாக சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா அறிவித்துள்ளது. இது ரசிகர்களுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய மற்றும் மிகச்சிறந்த திரையரங்கு அனுபவத்தை வழங்கும் திரைகளில் இப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பை அளிக்கிறது.

வெளியீட்டை உறுதிப்படுத்தும் வகையில், சோனி பிக்சர்ஸ் ரிலீசிங் இன்டர்நேஷனல் (SPRI) இந்தியாவின் பொது மேலாளரும் தலைவருமான ஷோனி பஞ்சிகரன் பேசுகையில், ஸ்பைடர்-மேனின் பெரிய திரை வருகையை ஒரு பிரம்மாண்டமான நிகழ்வாக மாற்றவே இந்த பிரீமியம் பெரிய திரை வடிவ வெளியீடு மேற்கொள்ளப்படுவதாகக் கூறினார். “இந்திய ரசிகர்களின் இதயங்களில் ஸ்பைடர்-மேன் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளார்; ஒவ்வொரு புதிய பாகமும் பல தலைமுறை ரசிகர்களுக்கு ஒரு கூட்டு கொண்டாட்டமாக அமைகிறது. ‘ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே’ படத்தின் மூலம், அந்த உற்சாகத்திற்கு ஈடு இணையான மிகச்சிறந்த திரையரங்கு அனுபவத்தை வழங்க விரும்பினோம். அதே வேளையில், ரசிகர்கள் முன்கூட்டியே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, படத்தின் அதிரடி, உணர்ச்சிகள் மற்றும் பிரம்மாண்டமான காட்சிகளைப் பிரீமியம் பெரிய திரை வடிவங்களில் அனுபவிக்கும் வாய்ப்பையும் நாங்கள் வழங்குகிறோம்,” என்று அவர் கூறினார். “‘Spider-Man: Brand New Day’ திரைப்படத்தைச் சுற்றியுள்ள உற்சாகம், இன்றைய காலக்கட்டத்தில் ரசிகர்கள் பிரம்மாண்டமான திரைப்படங்களை (blockbuster cinema) எவ்வாறு அனுபவிக்க விரும்புகிறார்கள் என்பதைப் பிரதிபலிக்கிறது. மிகப்பெரிய திரைப்படங்கள் மக்களை ஒன்றிணைக்கும் கலாச்சார நிகழ்வுகளாக மாறியுள்ளன; இது திரையரங்க அனுபவத்தை முன்னெப்போதையும் விட மிக முக்கியமானதாக மாற்றியுள்ளது. ‘Spider-Man’ உலகின் மிகவும் விரும்பப்படும் திரைப்படத் தொடர்களில் ஒன்றாகும், மேலும் இதன் ஒவ்வொரு புதிய பாகத்தையும் பல தலைமுறை ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தப் பட வெளியீட்டிற்காக ‘Sony Pictures Entertainment India’-வுடன் இணைவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ரசிகர்கள் இந்தப் படத்தை அதற்கென உருவாக்கப்பட்ட சூழலில் – அதாவது பெரிய திரையில், சக ரசிகர்களுடன் இணைந்து – அனுபவிக்க ‘PVR INOX’ திரையரங்குகளுக்கு வருகை தருவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்; அங்கு ஒவ்வொரு தருணமும் பிரம்மாண்டமாகவும், ஆழ்ந்த அனுபவத்தைத் தருவதாகவும், உண்மையிலேயே மறக்க முடியாததாகவும் அமையும்,” என்று ‘PVR INOX Limited’-ன் வருவாய் மற்றும் செயல்பாட்டுப் பிரிவு தலைமை நிர்வாக அதிகாரி (CEO) திரு. கௌதம் தத்தா கூறுகிறார்.

டெஸ்டின் டேனியல் கிரெட்டன் (Destin Daniel Cretton) இயக்கும் ‘Spider-Man: Brand New Day’ திரைப்படத்தில், பீட்டர் பார்க்கர்/ஸ்பைடர்-மேனாக டாம் ஹாலண்ட் (Tom Holland) நடிக்கிறார்; இவருடன் ஜெண்டயா (Zendaya), ஜேக்கப் பட்டலோன் (Jacob Batalon), ஜான் பெர்ன்தால் (Jon Bernthal) மற்றும் சேடி சிங்க் (Sadie Sink) ஆகியோரும் நடிக்கின்றனர்.

‘Sony Pictures Entertainment India’ நிறுவனம் ‘Spider-Man: Brand New Day’ திரைப்படத்தை 2026 ஜூலை 30 அன்று திரையரங்குகளில் வெளியிடுகிறது. இப்படம் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில், 2D மற்றும் 3D வடிவங்களிலும், அனைத்து பிரீமியம் பெரிய திரை வடிவங்களிலும் (premium large formats) வெளியிடப்படும்.

‘Spider-Man: Brand New Day’ பற்றிய குறிப்பு: பீட்டர் பார்க்கருக்கு இது ஒரு முற்றிலும் புதிய நாள் (Brand New Day). தன்னை நினைவில் கொள்ளாத உலகில் ஸ்பைடர்-மேனாக முழுநேரமும் குற்றங்களுக்கு எதிராகப் போராடுவது மற்றும் தன்னை விட்டுவிட்டுத் தங்கள் வாழ்க்கையைத் தொடரும் பழைய நண்பர்களைப் பார்க்கும் சூழல் ஆகியவை பீட்டரிடம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகின்றன; அந்த மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் அவனிடம் இல்லாமல் போகலாம். ஆனால், அந்த மாற்றமே நகரத்திற்கும் அவன் நேசிப்பவர்களுக்கும் ஏற்படவிருக்கும் அதிர்ச்சியூட்டும் புதிய அச்சுறுத்தலைத் தடுப்பதற்கான ஒரே வழியாகவும் அமையலாம் – அந்த அச்சுறுத்தல் யாராலும் பார்க்க முடியாத ஒரு சக்திவாய்ந்த வில்லனிடமிருந்து வருகிறது. உலகம் பீட்டர் பார்க்கரை மறந்திருக்கலாம், ஆனால் அவன் அவர்களை மறக்கவில்லை.

Sony Pictures Entertainment பற்றிய குறிப்பு: ‘Sony Pictures Entertainment’ (SPE) என்பது டோக்கியோவை மையமாகக் கொண்ட ‘Sony Group Corporation’-ன் துணை நிறுவனமாகும். SPE-யின் உலகளாவிய செயல்பாடுகளில் திரைப்படத் தயாரிப்பு, கையகப்படுத்தல் மற்றும் விநியோகம்; தொலைக்காட்சித் தயாரிப்பு, கையகப்படுத்தல் மற்றும் விநியோகம்; தொலைக்காட்சி நெட்வொர்க்குகள்; டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கம் மற்றும் விநியோகம்; ஸ்டுடியோ வசதிகளை நிர்வகித்தல்; மற்றும் புதிய பொழுதுபோக்கு தயாரிப்புகள், சேவைகள் மற்றும் தொழில்நுட்பங்களின் மேம்பாடு ஆகியவை அடங்கும். ‘Sony Pictures Television’ உலகம் முழுவதும் டஜன் கணக்கான முழு உரிமையுள்ள அல்லது கூட்டு முயற்சியிலான தயாரிப்பு நிறுவனங்களை இயக்கி வருகிறது. SPE-யின் மோஷன் பிக்சர் குழுமத்தின் (Motion Picture Group) தயாரிப்பு நிறுவனங்களில் Columbia Pictures, Screen Gems, TriStar Pictures, 3000 Pictures, Sony Pictures Animation, Stage 6 Films, AFFIRM Films, Sony Pictures International Productions மற்றும் Sony Pictures Classics ஆகியவை அடங்கும். கூடுதல் தகவல்களுக்கு, http://www.sonypictures.com/corp/divisions.html என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.