Breaking
August 31, 2026

REFCOLD India 2023: An Optimal Spotlight on India’s INR 4.3 Trillion Cold Chain Potential and Food Waste Solutions

Chennai, October 12th, 2023: REFCOLD India, 2023, South Asia’s leading exhibition and conference dedicated to refrigeration and cold-chain technologies, commenced today at the Chennai Trade Centre, Chennai. Organised in collaboration between the Indian Society of Heating, Refrigerating and Air Conditioning Engineers (ISHRAE) and Informa Markets, REFCOLD India 2023 is set to redefine the industry landscape. This well-reputed event represents a significant step forward in the refrigeration and cold-chain sector, unveiling a vast potential cold-chain market of around INR 4.3 trillion by 2027.

The event’s grand inauguration was spearheaded by a rich array of dignitaries including Guest of Honour – Dr. R Velraj, Vice Chancellor, Anna University; Mr. Raja M Sriraam, Chairman, RECFOLD Chennai, ISHRAE; Mr. Yogesh Thakkar, National President, ISHRAE, Mr. Anoop Ballaney, National President Elect, ISHRAE and Mr Yogesh Mudras, Managing Director, Informa Markets in India.

The 6th gala edition of REFCOLD India brought together top experts, businesses, and thought leaders who are driving the industry’s transformation with over 200 exhibitors, including an impressive lineup of industry giants such as BlueStar, Copeland, Rinac India, Tecumseh, Daikin, K-Flex, Yaskawa, and Danfoss, among others. The show anticipates more than 10,000 visitors, industry leaders, and professionals, for dynamic business opportunities, knowledge-sharing sessions, and networking.

Speaking on the occasion, Mr Yogesh Thakkar, National President ISHRAE said, “The adoption of integrated cold chain solutions has the potential to significantly revolutionize the traditional perishables sector, bringing about substantial changes in the market landscape and overall growth. This is especially important in a country where agriculture employs 60% of the population. To harness the potential of integrated cold chain solutions, there is a need to optimise logistics, enhance value addition facilities, adopt green refrigeration practices, and adopt energy-efficient cooling systems and natural refrigerants ultimately improving efficiency across the supply chain. Similarly, the Indian organized food industry is a vast arena with significant potential. This underscores the substantial room for growth in the food delivery sector, which, when integrated with advanced refrigeration and cold chain solutions, can further enhance food quality, safety, and delivery efficiency.”

“The pandemic acted as a catalyst, propelling India’s online food delivery market to reach approximately $21 billion by 2026, with a remarkable compound annual growth rate (CAGR) of nearly 30%”, he further added.

With the valuable support of MOFPI (Ministry of Food Processing Industries Government of India), other esteemed associations like IIR (International Institute of Refrigeration), NCCD (National Centre for Cold-chain Development), IDA (Indian Dairy Association), IIAR (International Institute of Ammonia Refrigeration) and more, the event successfully bridged the gap between suppliers and buyers.

REFCOLD India offers an enriching programme of Conferences and exhibitions by technical experts of the industry focusing on Industrial Refrigeration along with Cold Chain and Reefer Transportation, Seminars and workshops on pharma, dairy, fishery and hospitality encouraging continuous learning and skill advancement. The expo covered important topics on Heat pump integrated thermal storage for dairy applications, Natural Refrigerants, Innovative Design or Technology for Net Zero Cold Storage Plants, Challenges on Dairy Processing and Storage, Safety Standards and Trouble Shooting of Refrigeration Plants, to name a few.

Commenting on the significance of REFCOLD India 2023, Mr Yogesh Mudras Managing Director, Informa Markets in India said “REFCOLD India provides a transformative journey that unlocks opportunities for fresh horizons and valuable collaborations. The expo offers a plethora of opportunities to connect with industry experts and learn about cutting-edge technologies. Furthermore, the government is also taking proactive steps to boost the refrigeration and cold chain industry by establishing extensive cold storage facilities nationwide. This initiative aims to minimize food wastage, encouraging eco-friendly refrigeration practices, while simultaneously stimulating economic growth. The added attractions including our content-rich conference that aligns with the theme of ‘Preserve through Innovation for a Better Future’ will gather experts, stalwarts, and key organizations and provide the momentum the market truly deserves!”

Distinguished speakers that graced the event included notable figures like Mr. Arvind Surange, Chairman and Managing Director of ACR Project Consultants Pvt Ltd; Dr. Lambert Kuijpers, an Environmental Consultant hailing from Venlo, Netherlands; Mr. C.P. Charles, a Central Executive Committee Member at the Indian Dairy Association; Dr. Alex Pachai, representing Global Consultancy, ApS in Denmark; Dr. Omar Abdulaziz, a Mechanical Engineer affiliated with The American University in Cairo, Egypt; and Mr. Jiju Nair, who holds the position of National Marketing Manager at Honeywell, among others.

Insights on India’s Cold Storage and Refrigeration Technology Market:

Advancements in refrigeration technology have led to energy-efficient systems, particularly beneficial in high-energy industries like chemical manufacturing. These optimized systems and eco-friendly refrigerants not only lower carbon footprints but also reduce emissions and water waste compared to traditional cooling methods like cooling water towers.

Additionally, in India, where agricultural production is vast, but access is limited, the cold chain sector plays a vital role, further driven by the growth of organized food delivery and e-commerce segments.

REFCOLD India gathers experts from the global and Indian refrigeration sectors to drive innovation and combat food waste. It highlights the importance of cold chain management,

Mr. Madhur Sehgal, Head Climate Solutions, Danfoss said, “We are bringing an exciting opportunity to all of you to have an exclusive visit to our lead Platinum Campus on 13th October 2023. This is a unique opportunity to witness the state-of-the-art campus with next-generation R & D and production facilities, an application development center, and a customer experience center showcasing the live working performance of our products in diverse industry applications. We will also be pleased to showcase the use of the latest technologies and specific actions on our campus on HVAC, Renewable Energy, Water, and waste management, leading to faster progress toward our Net Zero Emission goals. Please join us for this exclusive event on 13th October and discover how Danfoss can help you achieve your goals of clean growth and development.”

Mr. M Srinivas Reddy, Vice President, Commercial Refrigeration Business Group, Blue Star stated, “We, at Blue Star, recognise REFCOLD as the perfect platform to showcase various refrigeration solutions. We are confident that it will help us reach our target audience well and we wish REFCOLD a huge success.”

On the sidelines of the expo, Informa Markets in India launched its 4th edition of the Festivity of Business campaign for this year’s high season. As the autumn season blankets India with its diverse array of festivals, the initiative will be a vibrant tribute to India’s economic triumphs and its burgeoning global influence. This year, Informa Markets in India’s initiative encompasses a rich tapestry of over 40 events till year-end, including ten signature Expos, along with distinctive Conferences, Industry Awards, Buyer-Seller Meets, and Training programmes in influential sectors. All these are poised to elevate the nation to new heights.

# Nan Mudhalvan – நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்

சென்னை பூந்தமல்லியில் அமைந்துள்ள ராஜலட்சுமி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில்
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு வழிகாட்டி முகாம் சிறப்பாக நடைபெற்றது

இந்த வேலை வாய்ப்பு முகமானது தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம்,தமிழ்நாடு சி.ஐ.ஐ மற்றும் இசட் எப் ஆகியவை இணைந்து நடத்தினர்

நிதி மற்றும் தொழில்நுட்ப துறை என சுமார் 140 நிறுவனங்களில் இருந்து தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்களை பணியமர்த்த மாணவ மாணவியர்களுக்கு தகுதி தேர்வு நடத்தினர் இதில் சுமார் 15,000 மாணவ மாணவிகள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டனர்

இந்துஸ்தான் கலை & அறிவியல் கல்லூரி : ஆசிரியர் தினம் – முதலாண்டு மாணவர் வரவேற்பு விழா – HCAS இன்ஃப்ளுயன்சர் பாடத்திட்ட அறிமுகம்

சென்னை ஆகஸ்ட் 30 2026: சென்னையைச் சார்ந்த இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி – HCAS , (2026 ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி) வளாகத்தில் நேற்று ஆசிரியர் தின கொண்டாட்டம்- 2026 முதலாம் ஆண்டு மாணவர் வரவேற்பு விழா- (Fresher’s Day ) மற்றும் HCAS இன்ஃப்ளூயன்சர் எனும் புதிய பாடத்திட்டத்தின் தொடக்க விழா ஆகியவற்றை உள்ளடக்கிய முப்பெரும் விழா நடைபெற்றது.

ஆசிரியர் தின கொண்டாட்டம் காலை பத்து மணியளவில் எம் ஜி ஆர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பள்ளிக்கரணை மாவட்ட காவல் உதவி ஆணையர் திரு. எஸ். ஜான் விக்டர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். HCAS இன் இயக்குநர் டாக்டர். சூசன் வர்கீஸ், இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். இவருடன் கல்லூரி நிர்வாகம் மற்றும் உயர் கல்வித் துறையைச் சார்ந்த முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக HCAS இன் முப்பது ஆண்டுகால பயணத்தை விவரிக்கும் வகையில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. அத்துடன் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்பை பாராட்டும் வகையில் விருதுகளும் வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவர் வரவேற்பு விழாவும், HCAS இன்ஃப்ளூயன்சர் எனும் புதிய பாடத்திட்டத்தின் தொடக்க விழாவும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாணவ மாணவிகள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள்- முதலாம் ஆண்டு மாணவகளுக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் HCAS இன் துணை இயக்குநர் திரு. டேவிட் ரயன் வரவேற்புரையை நிகழ்த்தினார்.

மாணவர்கள், தங்கள் படைப்பாற்றல் – தகவல் தொடர்பு திறன்- டிஜிட்டல் திறமைகள் – ஆகியவற்றை வெளிப்படுத்துவதற்கான ஒரு தனித்துவமான தளத்தை வழங்கும் நோக்கத்தில் HCAS இன்ஃப்ளூயன்சர் எனும் புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. சமூக ஊடகங்கள் வாயிலாக கல்லூரி.. சமூகத்துடன் தீவிரமாக ஈடுபடுவதற்கும், HCAS இன் துடிப்பான வளாக கலாச்சாரத்தை முன்னிறுத்துவதற்கும்… மாணவர்களை இன்ஃப்ளூயன்சர்களாக வலிமைப்படுத்துவது தான் இந்த பாடத்திட்டத்தின் நோக்கமாகும்.

இந்த கொண்டாட்டங்கள் அனைத்தும் உயர்கல்வி – மாணவர் திறமை- படைப்பாற்றல்- தலைமைத்துவம்- வளர்ந்து வரும் டிஜிட்டல் திறன்கள்- ஆகியவற்றின் மீது HCAS கொண்டுள்ள எல்லைகளற்ற ஈடுபாட்டை பிரதிபலிக்கின்றன.

ஒரிஜினல் மான்ஸ்டர்: மும்பையில் நட்சத்திரங்கள் பங்கேற்ற பிரம்மாண்ட நிகழ்வில் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் வெளியீடு

மும்பை, ஆகஸ்ட் 28, 2026:

மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகி வரும் ஒரிஜினல் மான்ஸ்டர் திரைப்படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர், ஆகஸ்ட் 28 அன்று மும்பையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் வெளியிடப்பட்டது. இதன் மூலம், தனது தாய்த் திரையுலகைத் தாண்டி பார்வையாளர்களுக்கு இப்படம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டதுடன், பான் இந்தியா பயணத்திற்கான எதிர்பார்ப்பும் தொடங்கியுள்ளது.

இந்நிகழ்வில் படத்தின் முக்கிய உறுப்பினர்கள் மட்டுமின்றி, இந்திய திரையுலகின் மிகவும் மதிக்கப்படும் பல முன்னணி பிரபலங்களும் கலந்து கொண்டனர். இயக்குநர் ஆர். சந்துரு, புகழ்பெற்ற தயாரிப்பாளரும் வழங்குநருமான திரு. ஆனந்த் பண்டிட், பான் இந்தியா சூப்பர் ஸ்டார் டாக்டர். சிவராஜ்குமார், திருமதி. கீதா சிவராஜ்குமார், பிரபல நடிகர் சுனில், இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் மற்றும் ஒளிப்பதிவாளர் ஏ.ஜே. ஷெட்டி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு, ஒரிஜினல் மான்ஸ்டர் படக்குழுவிற்கு இந்த மாலை நேரத்தை மறக்க முடியாததாக மாற்றினர்.

மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த மோஷன் போஸ்டர், டாக்டர். சிவராஜ்குமார், ஆர். சந்துரு, ஆனந்த் பண்டிட், கீதா சிவராஜ்குமார் மற்றும் படத்தின் முக்கியக் குழுவினரின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இதன் மூலம், ஒரிஜினல் மான்ஸ்டர் என்ற தலைப்பு முதன்முறையாக பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த வெளியீட்டிற்கு அங்கு கூடியிருந்தவர்களிடையே உற்சாகமான வரவேற்பு கிடைத்தது. இப்படத்தின் சிறப்பான கூட்டணி மற்றும் படைப்பாற்றல் பார்வையின் கொண்டாட்டமாக இந்த நிகழ்வு அமைந்தது. சுனில், அஜனீஷ் லோக்நாத் மற்றும் ஏ.ஜே. ஷெட்டி போன்ற பாராட்டுக்குரிய திறமையாளர்களின் பங்கேற்பு, இப்படத்தின் பின்னணியில் உள்ள பல்வேறு திறமைகளைக் கொண்ட சிறப்பான படைப்புக் குழுவையும் எடுத்துக்காட்டியது.

மும்பையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டருக்கு ஊடகங்கள், விருந்தினர்கள் மற்றும் நிகழ்வில் கலந்து கொண்ட திரையுலகைச் சேர்ந்தவர்களிடமிருந்து சிறப்பான வரவேற்பு கிடைத்த நிலையில், மிகுந்த உற்சாகமான சூழலில் நிறைவடைந்தது.

தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஒரிஜினல் மான்ஸ்டர் திரைப்படம் தனது அடுத்தகட்ட விளம்பரப் பயணத்தைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள பார்வையாளர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மும்பை வெளியீட்டு நிகழ்வு, பான் இந்தியா அளவில் தனது இருப்பை நிலைநிறுத்தும் நோக்கில் இப்படம் எடுத்து வைக்கும் முதல் முக்கியமான அடியாக அமைந்துள்ளது.

ஒன்ஸ் மோர் (Once More) – திரைப்பட விமர்சனம்

“முதல் பாதியில் காதல்… இரண்டாம் பாதியில் கொஞ்சம் சலிப்பு!”

விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர், சோனா ஒலிக்கல் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஒன்ஸ் மோர்’, காதல், பிரிவு, மனக்காயம் மற்றும் மீண்டும் காதலிக்கத் துணியும் மனநிலையை மையமாகக் கொண்ட ரொமான்டிக் டிராமா. ஆகஸ்ட் 28, 2026 அன்று வெளியான இப்படத்தின் மையக்கரு, கடந்த காதலின் வலியிலிருந்து மீண்டு புதிய வாழ்க்கையைத் தொடங்கும் ஒருவரின் பயணம்.

முதல் காதலில் ஏற்பட்ட காயத்தால் காதலையே வெறுக்கும் ரகுவின் வாழ்க்கையில் அஞ்சலி நுழைகிறார். ரகுவின் மனதை மாற்றி, மீண்டும் காதலை உணர வைக்க அஞ்சலி மேற்கொள்ளும் முயற்சிகள்தான் படத்தின் முதல் பாதியை சுவாரஸ்யமாக்குகின்றன. எளிமையான இந்தக் கதையை அழகான காதல் காட்சிகள் மற்றும் நகைச்சுவையுடன் நகர்த்தியிருப்பது ரசிக்க வைக்கிறது.

அர்ஜுன் தாஸ் வழக்கமான மாஸ் ஹீரோ இமேஜிலிருந்து விலகி, மனதுக்குள் காதல் வலியை சுமந்து செல்லும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது இயல்பான நடிப்பும், அமைதியான உடல்மொழியும் ரகுவின் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கிறது. அதிதி ஷங்கர் படத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒருவர். துறுதுறுப்பான நடிப்பாலும், புன்னகையாலும் அஞ்சலி கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கிறார்.

ஹேஷம் அப்துல் வஹாபின் இசை படத்தின் காதல் உணர்வுகளுக்கு நல்ல துணையாக அமைந்துள்ளது. குறிப்பாக முதல் பாதியின் இலகுவான மனநிலையை இசை மேலும் அழகாக்குகிறது. ஒளிப்பதிவும் காதல் காட்சிகளுக்கு தேவையான மென்மையான தோற்றத்தை வழங்குகிறது.

ஆனால் இரண்டாம் பாதியில்தான் படம் தடுமாறுகிறது. ரகுவின் கடந்தகால காதல் தொடர்பான பகுதிகள் கதையின் வேகத்தை குறைக்கின்றன. அந்தக் காதல் மற்றும் அதற்கான பிரச்சினை பார்வையாளர்களிடம் எதிர்பார்த்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஏற்கனவே பார்த்த பல காதல் திரைப்படங்களின் சாயல் சில இடங்களில் தெரிகிறது என்றும் விமர்சனங்கள் குறிப்பிடுகின்றன.

திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் புதுமையும் அழுத்தமான மோதலும் இருந்திருந்தால் படம் சிறப்பாக அமைந்திருக்கும். குறிப்பாக இரண்டாம் பாதியின் பிரச்சினையை வலுவாக எழுதி, கிளைமாக்ஸை இன்னும் உணர்ச்சிப்பூர்வமாக அமைத்திருந்தால் ‘ஒன்ஸ் மோர்’ நல்ல காதல் படமாக உயர்ந்திருக்கும்.

இருப்பினும், காதல் தோல்விக்குப் பிறகு மீண்டும் காதலிக்க மனதைத் திறப்பது, கடந்த காலத்தை விட்டுவிட்டு முன்னேறுவது போன்ற உணர்வுகளை படம் அழகாகப் பேசுகிறது. இதனால் காதல் திரைப்படங்களை விரும்புபவர்களுக்கு படம் ஒரு முறை பார்க்கக்கூடிய அனுபவமாக இருக்கும்.

மொத்தத்தில், ‘ஒன்ஸ் மோர்’ புதுமையான காதல் கதையை சொல்லவில்லை என்றாலும், அதிதி ஷங்கரின் துறுதுறுப்பான நடிப்பும் அர்ஜுன் தாஸின் இயல்பான நடிப்பும் முதல் பாதியை ரசிக்க வைக்கின்றன. ஆனால் பலவீனமான ஃப்ளாஷ்பேக் மற்றும் இரண்டாம் பாதி திரைக்கதை படத்தின் வேகத்தை குறைக்கிறது.

மதிப்பீடு: 3/5

“காதல் மீண்டும் வரலாம்… ஆனால் இந்த ‘ஒன்ஸ் மோர்’ இன்னும் கொஞ்சம் வலுவாக இருந்திருக்கலாம்!”

ஹாய் (Hi) – திரைப்பட விமர்சனம்

“காதல், காமெடி, குடும்ப உணர்வு… மனதை லேசாக்கும் ‘ஹாய்’!”

கவின், நயன்தாரா முதல் முறையாக இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’, பாடலாசிரியர் விஷ்ணு எடவன் இயக்குநராக அறிமுகமாகியுள்ள காதல் மற்றும் நகைச்சுவை கலந்த குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படம். ஆகஸ்ட் 28, 2026 அன்று திரையரங்குகளில் வெளியான இப்படம், பெரிய திருப்பங்கள் இல்லாமல் எளிமையான காதல் கதையை சொல்ல முயற்சிக்கிறது.

திருமணம் மற்றும் காதல் தொடர்பான குழப்பங்களுக்குள் சிக்கிக் கொள்ளும் கதாபாத்திரங்களை மையமாக வைத்து கதை நகர்கிறது. கவின்–நயன்தாரா இடையிலான சந்திப்பு, அவர்களுக்குள் உருவாகும் நட்பு, பின்னர் அது காதலாக மாறும் விதம் என முதல் பாதி இலகுவாக நகர்கிறது. கதையை சீரியஸாக எடுத்துச் செல்லாமல், நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளுடன் அணுகியிருப்பது படத்தின் முக்கியமான பலம்.

கவின் தனது இயல்பான நடிப்பாலும் முகபாவனைகளாலும் கதாபாத்திரத்தை எளிதாக நம்முடன் இணைக்கிறார். குறிப்பாக காமெடி காட்சிகளில் அவரது டைமிங் நன்றாக வேலை செய்கிறது. நயன்தாராவும் தேவயானி கதாபாத்திரத்தில் அழகாகவும் இயல்பாகவும் நடித்துள்ளார். இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரிதான் படத்தின் மிகப்பெரிய பலம் என்று சொல்லலாம்.

பிரபு, ராதிகா சரத்குமார், கே.பாக்யராஜ் உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த நடிகர்கள் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறார்கள். குறிப்பாக கே.பாக்யராஜின் வசன உச்சரிப்பும் நகைச்சுவை பாணியும் சில காட்சிகளில் பழைய தமிழ் சினிமாவின் சுவையை நினைவுபடுத்துகிறது.

ஜென் மார்ட்டினின் இசையும் படத்தின் இலகுவான மனநிலைக்கு பொருத்தமாக அமைந்துள்ளது. ‘ரசகுல்லா’ உள்ளிட்ட பாடல்கள் கவனம் ஈர்க்கின்றன. ஒளிப்பதிவும் படத்தின் காதல் மற்றும் குடும்பக் காட்சிகளுக்கு அழகான தோற்றத்தை கொடுக்கிறது.

ஆனால் படத்தின் குறைகளும் இல்லாமல் இல்லை. கதை மிகவும் எளிமையானதாக இருப்பதால், சில இடங்களில் அடுத்து என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடிகிறது. குறிப்பாக இரண்டாம் பாதியில் சில துணைக்கதைகள் கதையின் வேகத்தை குறைக்கின்றன. கதையில் சுவாரஸ்யமான சில அம்சங்களை இன்னும் ஆழமாக கையாண்டிருந்தால், படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

இருப்பினும், ‘ஹாய்’ மிகப்பெரிய புதுமையான காதல் கதையை சொல்லும் திரைப்படம் அல்ல. அதே நேரத்தில், அதை எதிர்பார்க்காமல் சென்றால் கவின்–நயன்தாராவின் கெமிஸ்ட்ரி, இயல்பான நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் மற்றும் மென்மையான காதல் ஆகியவற்றால் ரசிக்க முடிகிறது.

மொத்தத்தில், ‘ஹாய்’ என்பது பெரிய சினிமா அனுபவத்தை தரும் படம் அல்ல; ஆனால் இரண்டு மணி நேரம் மனதை லேசாக்கி, குடும்பத்துடன் ரசித்து வெளியே வரக்கூடிய ஒரு அழகான ஃபீல்-குட் காதல் படம்.

‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ் ‘ 

Toxic: A Fairy Tale for Grown-Ups இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில், யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி உள்ளிட்டோர் நடித்துள்ள கேங்ஸ்டர் ஆக்‌ஷன் திரைப்படம். 2026 ஆகஸ்ட் 26 அன்று வெளியான இப்படம், யஷ் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

1947-ம் ஆண்டு கோவாவை பின்னணியாகக் கொண்டு தொடங்கும் கதை, பல ஆண்டுகளைக் கடந்து செல்லும் கேங்ஸ்டர் உலகத்தைச் சுற்றி நகர்கிறது. யஷ் ராயா மற்றும் டிக்கெட் என இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். தந்தை–மகன் உறவு, அதிகாரம், பழிவாங்குதல், வன்முறை என பல அடுக்குகளை கதை கொண்டிருந்தாலும், அதன் மையத்தில் ராயா கதாபாத்திரமே முழுமையாக ஆதிக்கம் செலுத்துகிறது.

யஷ் வழக்கம்போல் தனது ஸ்கிரீன் பிரசன்ஸால் படத்தைத் தாங்குகிறார். குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளிலும் மாஸ் தருணங்களிலும் அவரது உடல்மொழியும் நடிப்பும் ரசிகர்களை கவரக்கூடியதாக இருக்கிறது. பல விமர்சனங்களிலும் யஷின் நடிப்பும், ஆக்‌ஷன் காட்சிகளும் படத்தின் முக்கிய பலமாக குறிப்பிடப்பட்டுள்ளன.

படத்தின் மற்றொரு பலம் அதன் விஷுவல் ட்ரீட்மென்ட். இருண்ட நிறங்கள், பிரம்மாண்டமான செட்கள், கேங்ஸ்டர் உலகத்தின் வடிவமைப்பு மற்றும் ஆக்‌ஷன் காட்சிகள் ஆகியவை பெரிய திரையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கீது மோகன்தாஸ் தனது தனித்துவமான இயக்குநர் பாணியை ஒரு பெரிய கமர்ஷியல் படத்துக்குள் கொண்டு வர முயன்றிருக்கிறார்.

ஆனால் இங்குதான் படத்தின் மிகப்பெரிய பிரச்சினையும் வருகிறது. பிரம்மாண்டமான காட்சிகளுக்கும் கதையின் ஆழத்துக்கும் இடையே சமநிலை இல்லை. கதை பல இடங்களில் மெதுவாக நகர்கிறது. 3 மணி நேரத்துக்கும் மேலான நீளம் சில காட்சிகளில் சோர்வை ஏற்படுத்துகிறது. கதாபாத்திரங்களின் உணர்வுகளை ஆழமாக பதிவு செய்யாமல், அதிகப்படியான வன்முறை மற்றும் ஸ்டைலிஷ் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதாக விமர்சனங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

பெண் கதாபாத்திரங்களும் எதிர்பார்த்த அளவுக்கு வலுவாக எழுதப்படவில்லை என்ற விமர்சனமும் உள்ளது. குறிப்பாக இத்தனை பெரிய நடிகர்கள் இடம்பெற்றிருந்தும், அவர்களது கதாபாத்திரங்களுக்கான உணர்ச்சிப்பூர்வமான அழுத்தம் குறைவாக இருப்பது படத்தின் குறையாக தெரிகிறது.

Toxic-ன் மிகப்பெரிய சிக்கல் என்னவென்றால், கதை சொல்ல வேண்டிய இடத்தில் ஸ்டைலும், உணர்ச்சியை உருவாக்க வேண்டிய இடத்தில் வன்முறையும் முன்னிலைக்கு வந்துவிடுகிறது. அதனால் ஒரு வித்தியாசமான கேங்ஸ்டர் கதையாக உருவாகியிருக்க வேண்டிய படம், சில நேரங்களில் நீண்ட மாஸ் ஆக்‌ஷன் காட்சிகளின் தொகுப்பாக மாறுகிறது. விமர்சகர்களிடையே படத்திற்கு கலவையான வரவேற்பு கிடைத்திருப்பதற்கும் இதுவே முக்கிய காரணம்.

இருப்பினும், வழக்கமான கமர்ஷியல் சினிமாவைத் தாண்டி ஒரு வித்தியாசமான உலகத்தை உருவாக்க முயன்றிருப்பது பாராட்டுக்குரியது. கீது மோகன்தாஸின் பார்வையும், யஷின் திரை ஆளுமையும் இணைந்திருப்பது படத்தை தனித்துவமாக்குகிறது.

மொத்தத்தில், Toxic ஒரு பிரம்மாண்டமான ஆக்‌ஷன் அனுபவத்தை கொடுக்கிறது. ஆனால் அந்த பிரம்மாண்டத்திற்கு இணையான வலுவான திரைக்கதை இல்லாததால், எதிர்பார்த்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தத் தவறுகிறது.

இளைய திலகம் பிரபு, விஜய் வர்மா நடிப்பில் புதிய திரைப்படம்

Romeo Pictures ராகுல் – Aviate Pictures கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்கும் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கும் புதிய திரைப்படம் – இளைய திலகம் பிரபு, விஜய் வர்மா நடிப்பில் பூஜை நடைபெற்றது

Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்க, ‘ரைட்டர்’ பட இயக்குநரும் ‘DC’ படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில், இளைய திலகம் பிரபு மற்றும் புது வரவான பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்ற விஜய் வர்மா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் பா. ரஞ்சித், அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

டார்க் ஹியூமர் ஜானரில், வித்தியாசமான கதைக்களத்தில் திரில்லர் – காமெடி திரைப்படமாக உருவாகவுள்ள இப்படத்தில் நடிகர் விஜய் வர்மாவுடன் பிரபல நடிகை நாயகியாக நடிக்கவுள்ளார். Romeo Pictures ராகுல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

இவர்களுடன் முத்து குமார், ரமேஷ் திலக், திலீப் சுப்பராயன், தீனா, அருண் மாதேஸ்வரன், கவிதா பாரதி மற்றும் அவினாஷ் ரகுதேவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா G.K படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். P.C. ஸ்டன்ட்ஸ் சண்டைப் பயிற்சியைக் கவனிக்க, யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். நவ்ஷாத் அகமது ஆடை வடிவமைப்பையும், சக்தி வெங்கட்ராஜ் M கலை இயக்கத்தையும் மேற்கொள்கின்றனர். வான்கோ போஸ்டர் வடிவமைப்பை மேற்கொண்டுள்ளார். மேலும் இப்படத்தில் DC படத்தில் பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்றவுள்ளனர்.

இந்நிகழ்வில் இளைய திலகம் பிரபு பேசியதாவது:

“ஃபிராங்க்ளின் தம்பி ‘ரைட்டர்’ படத்தின் இயக்குநர். அவர் ஒரு அருமையான கதையைச் சொன்னார். இப்படியொரு வித்தியாசமான படத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது.

இப்படத்தில் பணியாற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பான கலைஞர்கள். குறிப்பாக, புதிய தலைமுறையினரை ஊக்குவிக்கும் வகையில் இயக்குநர் ரஞ்சித், அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட பலரும் இங்கு வந்து கலந்துகொண்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்தை உருவாக்கும் தயாரிப்பாளர்களுக்கும், இசையமைப்பாளர் யுவனுக்கும், படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துகள். ராகுல் ஒரு சிறப்பான திரைப்படத் தயாரிப்பாளர். ஒரு படத்தை உருவாக்கும் திறமை அவரிடம் இருக்கிறது. இந்தக் கதைக்கு ஏற்ற வகையில் என்னையும் இப்படத்தில் இணைத்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படம் சிறப்பாக உருவாகி, அனைவருக்கும் நல்ல அனுபவத்தைத் தரும் என்று நம்புகிறேன். நன்றி.”

நடிகர் விஜய் வர்மா பேசியதாவது:

“இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. படக்குழுவினர் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றி வருகிறார்கள்.

இந்தப் படத்திற்காக நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் மற்றும் பணிகள் பற்றி எனக்குத் தெரியும். கடந்த சில ஆண்டுகளாக இந்த ப்ராஜெக்ட் தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பயணத்தில் நானும் ஒரு பகுதியாக இருந்திருக்கிறேன். இப்போது இந்தப் படம் உருவாகும் நிலையில் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். இந்தப் படம் சிறப்பாக உருவாக வேண்டும் என்று விரும்புகிறேன். என்னை இந்தப் பயணத்தில் இணைத்துக்கொண்ட ஃபிராங்க்ளின் அண்ணா மற்றும் அனைவருக்கும் நன்றி. இங்கு வந்து ஆதரவு அளித்த அனைவருக்கும் மிக்க நன்றி.”

இயக்குநர் பா. ரஞ்சித் பேசியதாவது:

“ஃபிராங்க்ளின் என்னுடைய இணை இயக்குநர். இது இன்னொரு திரைப்படம் என்ற அளவில் மட்டும் பார்க்கக்கூடிய படமாக இருக்காது. இந்தப் படத்தின் கதை மற்றும் உருவாக்கத்தில் ஒரு வித்தியாசமான அணுகுமுறை இருக்கிறது.

குறிப்பாக, இளம் தலைமுறையைச் சேர்ந்த படைப்பாளிகள் தங்களுக்கான தனித்துவமான கதைகளையும் புதிய களங்களையும் உருவாக்க வேண்டும். அந்த வகையில் இப்படத்தின் முயற்சி மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இப்படத்தின் இயக்குநர் ஃபிராங்க்ளின் ஜேக்கப் மற்றும் படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகள். ‘டிசி’ படத்தில் பணியாற்றிய குழு அப்படியே இதிலும் பணியாற்றுகிறார்கள். ஃபிராங்க்ளின் ‘டிசி’ படத்திற்கு வசனம் எழுதினார். ‘வேட்டுவம்’ படத்திற்கும் எழுதியுள்ளார். ‘டிசி’ போல இந்தப் படமும் வெற்றி பெறட்டும். எனக்கு ‘ரைட்டர்’ படம் மிகவும் பிடிக்கும். ஃபிராங்க்ளினுக்கு தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இடம் உள்ளது. அது இப்படத்தின் மூலம் நடக்கும் என்று நம்புகிறேன்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பது இப்படத்தின் மிகப்பெரும் பலம். இளைய திலகம் பிரபு சார் போன்ற மிகப்பெரிய நடிகர் இந்தப் படத்தில் இணைந்திருப்பது படத்திற்கு கூடுதல் பலம். அவரைப் போன்ற அனுபவம் வாய்ந்த கலைஞருடன் புதிய தலைமுறை படைப்பாளிகள் இணைந்து பணியாற்றுவது நல்ல விஷயம். இந்தப் படம் சிறப்பாக உருவாகி அனைவரின் கவனத்தையும் ஈர்க்க வேண்டும். படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.”

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் பேசியதாவது:

“ராகுல் பிரதர் எனக்கு கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளாகத் தெரியும். அவருடைய வளர்ச்சியை நான் நேரில் பார்த்திருக்கிறேன். இந்தப் புதிய முயற்சிக்காக அவருக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பிரபு சார், உங்களை நான் ஏற்கனவே சந்தித்திருக்கிறேன். ‘ராக்கி’ படத்தில் நீங்கள் நடிக்க வேண்டியிருந்தது. ஆனால் அது அப்போது நடக்கவில்லை. ஃபிராங்க்ளினுடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் ஒரு நல்ல திறமைசாலி. அவருடைய படைப்பில் ஒரு தனித்துவமான அணுகுமுறை இருக்கிறது. என்னுடைய முதல் படமும் ஃபிராங்க்ளினுடைய முதல் படமும் ஒரே நாளில் வெளியானவை. அதன்பிறகு நாங்கள் நண்பர்களாகிவிட்டோம். அவருடைய கதைகள் எனக்குத் தெரியும்; என்னுடைய கதைகள் அவருக்குத் தெரியும். இந்தப் படத்தின் கதையும் எனக்குத் தெரியும். இது மிகவும் நல்ல கதை.

ஒரு நல்ல இயக்குநருக்கு படம் அமையாமல் இருப்பதை மிகப்பெரும் வன்முறையாகக் கருதுகிறேன். இப்போது அவருக்கு இந்தப் படம் அமைந்திருப்பது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்தக் கதையில் பிரபு சார் நடிக்கிறார் என்று சொன்னபோது, அது எனக்கு மிகவும் ஆச்சரியமான, எதிர்பாராத தேர்வாக இருந்தது. ஆனால் அந்தக் கூட்டணி மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. யுவன் சங்கர் ராஜாவின் இசை தனித்துவமானது. அவர் இப்படத்தில் இணைந்திருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம். பிரபு சார் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும். அனைவருக்கும் ஆல் தி பெஸ்ட். நன்றி.”

இயக்குநர் ஃபிராங்க்ளின் ஜேக்கப் பேசியதாவது:

“முதலில் இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் வரவேற்பும் நன்றியும்.

ராகுல் என்னிடம் இந்த ப்ராஜெக்ட் குறித்து பேசியபோது, அவரிடம் நான் சொன்ன ஐடியா அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தக் கதையை நாமே செய்யலாம் என முடிவு செய்தோம். இப்போது அந்தப் படத்தை சிறப்பாக டேக்-ஆஃப் செய்திருக்கிறோம். இனி இதை இன்னும் சிறப்பாக எடுத்துச் செல்ல வேண்டும். பிரபு சாரை இப்படத்தில் நடிக்க வைக்கலாம் என்று ராகுல்தான் முதலில் சொன்னார். எனக்கும் அதில் மிகப்பெரிய நம்பிக்கை இருந்தது.

தமிழ் சினிமாவில் அவருக்கென்று இருக்கும் தனித்துவமான நடிப்பு பாணியை வைத்து, இதுவரை பார்க்காத ஒரு வித்தியாசமான அணுகுமுறையில் அவரை இந்தப் படத்தில் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். இந்தக் கதையை அவரிடம் சொன்னபோது, அவர் மிகவும் ஆர்வமாகக் கேட்டு ரசித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. கதை சொல்லிக்கொண்டிருக்கும்போதே அதை ரசித்து, ‘இந்தப் படம் பண்ணலாம்’ என்று சொன்னது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது.

இந்தக் கதையில் பிரபு சார் நடிக்க ஒப்புக்கொண்டது எங்களுக்கு மிகப்பெரிய பலம். அவருடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்தப் படத்தின் தொடக்க நிகழ்வுக்கு வந்து எங்களை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. குறிப்பாக பா. ரஞ்சித் அண்ணன், அருண் மாதேஸ்வரன் சார், நீங்கள் வந்ததற்கு மிக்க நன்றி. இந்தப் படக்குழுவினர் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அனைவரின் ஆதரவுடனும் இந்தப் படத்தை சிறப்பாக உருவாக்குவோம். அனைவருக்கும் நன்றி.”

நடிகர் ரமேஷ் திலக் பேசியதாவது:

“இந்தப் படத்தில் பணியாற்றும் அனைவரும் என்னுடைய மிகவும் நெருக்கமான நண்பர்கள். அவர்களைப் பல ஆண்டுகளாக எனக்குத் தெரியும். இப்படத்தின் கதை மிகவும் சிறப்பானது. என்னுடைய நண்பரான இயக்குநர் ஃபிராங்க்ளின் ஜேக்கப்புடன் இணைந்து பணியாற்றுவதைவிட, இளைய திலகம் பிரபு அவர்களுடன் பணியாற்றுவதில் நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு. அந்தக் கனவு இந்தப் படத்தின் மூலம் நிறைவேறியதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இப்படம் கண்டிப்பாக அவருக்குப் பிடித்தமான படமாக அமையும். அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி.”

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் சென்னையில் தொடங்குகிறது.

படத்தின் தலைப்பு மற்றும் இதர தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

ஜெயராம் – சிம்ரன் நடிக்கும் புதிய ஃபேமிலி ரோம் காம் திரைப்படம்

ஜெயராம் மற்றும் சிம்ரன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை சென்னையில் படக்குழுவினர் மற்றும் திரைப் பிரபலங்களின் பங்கேற்புடன் கோலாகலமாக நடைபெற்றது.

தேஜாவு, வித்தைகாரன் படங்களை தயாரித்த White Carpet Films சார்பில் K. விஜய் பாண்டி மற்றும் Redacted Studios சார்பில் Shanjan G. ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். The Show People சார்பில் ஆர்யா இப்படத்தை வழங்குகிறார்.

‘ராட்சசி’, ‘கழுவேத்தி மூர்க்கன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய SY கௌதம்ராஜ் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.

ஃபேமிலி ரோம் காம் எண்டர்டெயினராக உருவாகும் இப்படம், Gen Z தலைமுறை, 2K தலைமுறை மற்றும் 90-களில் வளர்ந்த தலைமுறை ஆகியோருக்கு இடையிலான உறவுகளையும், அவர்களின் வாழ்க்கையில் நடைபெறும் சுவாரஸ்யமான சம்பவங்களையும் மையமாகக் கொண்டு கலகலப்பான திரைக்கதையில் உருவாகிறது.

பல்வேறு தலைமுறைகளின் வாழ்க்கை முறை, எண்ணங்கள், உறவுகள் மற்றும் அவர்களுக்கிடையேயான புரிதல் ஆகியவற்றை நகைச்சுவையுடன் பதிவு செய்யும் வகையில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான பொழுதுபோக்கு திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தில் ஜெயராம், சிம்ரன் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க வாழை படத்தில் குழந்தை நட்சத்திரமாக கலக்கிய பொன்வேல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் தேவிகா சதீஷ், பகவதி பெருமாள் (பக்ஸ்) உள்ளிட்டோர் முக்கிய இணைந்து நடிக்கின்றனர்.

படத்தின் ஒளிப்பதிவை தீபக் மேற்கொள்கிறார். அச்சு ராஜாமணி இசையமைக்கிறார். அருள் E. சித்தார்த் படத்தொகுப்பை கவனிக்கிறார். மகேந்திரன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். பாடல்களுக்கு கார்த்திக் நேதா வரிகள் எழுதுகிறார். அனுஷா விஸ்வநாதன் நடன இயக்குநராக பணியாற்றுகிறார்.

M. முகமது சுபியர் ஆடை வடிவமைப்பையும், ஷயத் மாலிக் S ஒப்பனைப் பணிகளையும் கவனிக்கின்றனர். SN அஸ்ரஃப் தயாரிப்பு கட்டுப்பாட்டாளராகவும், D. உதயகுமார் தயாரிப்பு நிர்வாகியாகவும் பணியாற்றுகின்றனர். சரவணகுமார் கிரியேட்டிவ் தயாரிப்பாளராகவும், சாய்ராம் எக்ஸிகியூட்டிவ் தயாரிப்பாளராகவும் உள்ளனர். விஜய் வெங்கடராமன் தயாரிப்பு ஒருங்கிணைப்பாளராக பணியாற்றுகிறார்.

கன்னதாசன் DKD விளம்பர வடிவமைப்பை மேற்கொள்கிறார். ஜெய்குமார் வைரவன் ஸ்டில்ஸ் பணிகளை கவனிக்கிறார். சதீஷ் (AIM) மக்கள் தொடர்புப் பணிகளை மேற்கொள்கிறார். ராஜ். கதிர்ஹாசன் இணை இயக்குநராக பணியாற்றுகிறார்.

படக்குழுவினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில், இப்படத்தின் பூஜை விழா உற்சாகமாக நடைபெற்றது. இப்படம் தொடர்பான மேலும் பல முக்கிய அறிவிப்புகள் மற்றும் தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

தந்தை, மகன் உறவை பேசும் ஆழமான உணர்வுப்பூர்வ பயணம் ‘ஃபாதர்’

தந்தை, மகன் உறவை பேசும் ஆழமான உணர்வுப்பூர்வ பயணம் ‘ஃபாதர்’ திரைப்பட டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு!

பிரபல இயக்குநர் R. சந்துரு தயாரிப்பில் உருவாகியுள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம் ‘ஃபாதர்’. இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது. தந்தை – மகன் இடையேயான ஆழமானதும், பல நேரங்களில் வார்த்தைகளால் வெளிப்படுத்தப்படாததுமான உறவை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் டீசர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

டார்லிங் கிருஷ்ணா மற்றும் பன்முகத் திறமை கொண்ட திரை ஆளுமை பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை ராஜ்மோகன் இயக்கியுள்ளார். டீசர், படத்தின் உணர்வுப்பூர்வமான உலகத்தைப் பற்றிய சுவாரஸ்யமான பார்வையை வழங்குவதோடு, கதையின் மையமாக இருக்கும் தந்தை – மகன் உறவு குறித்த ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

டீசர் படத்தின் முழுக் கதையையும் வெளிப்படுத்தாமல், அதன் உணர்வுப்பூர்வமான களத்தையும், முன்னணி நடிகர்களின் வலுவான நடிப்பையும் மட்டும் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் படத்தின் மையக்கருவான தந்தை – மகன் உறவு குறித்த விவாதங்கள் தொடங்கியுள்ளன. தனது இயல்பான நடிப்பாலும், நுணுக்கமான உணர்வுகளை வெளிப்படுத்தும் திறனாலும் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வரும் பிரகாஷ் ராஜ், ‘ஃபாதர்’ டீசரிலும் தனது திரை இருப்பால் கவனம் ஈர்த்துள்ளார். அவரது பார்வை, முகபாவனைகள் மற்றும் நடிப்பில் வெளிப்படும் உணர்வுகள் படத்தின் மைய உணர்வுக்கு முக்கியத்துவம் சேர்ப்பதாக அமைந்துள்ளன. மேலும், பிரகாஷ் ராஜ் – டார்லிங் கிருஷ்ணா இருவருக்கும் இடையேயான திரை உறவு குறித்தும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

‘ஃபாதர்’ படத்தின் மையத்தில் இருப்பது ஒவ்வொரு குடும்பத்தினரும் எளிதில் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய தந்தை – மகன் உறவு. ஒரு தந்தை தனது அன்பை எப்போதும் வார்த்தைகளால் வெளிப்படுத்துவதில்லை. பொறுப்பு, கண்டிப்பு, தியாகம், பாதுகாப்பு என குடும்பத்திற்காக அவர் அமைதியாகச் செய்யும் எண்ணற்ற செயல்களிலேயே அந்த அன்பு வெளிப்படும். அதே நேரத்தில், வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் ஒரு மகன் தனது தந்தையை வெவ்வேறு விதமாகப் புரிந்துகொள்ளக்கூடும். இந்த இருவருக்கும் இடையே அன்பு, புரிதலின்மை, எதிர்பார்ப்புகள், கருத்து வேறுபாடுகள் என பல உணர்வுகள் இருந்தாலும், அவற்றையெல்லாம் தாண்டி ஆழமான பாசப்பிணைப்பு இருக்கும். இந்த உணர்வுப்பூர்வமான இடத்தையே ‘ஃபாதர்’ திரைப்படம் ஆராய்கிறது.

குடும்பம், உறவுகள் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்டுள்ள இப்படம், ரசிகர்களுக்கு மனதைத் தொடும் திரைப்பட அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொழி, நாடு, கலாச்சாரம் என எல்லைகளைக் கடந்தும் பெற்றோர் – பிள்ளைகள் இடையேயான உறவு அனைவராலும் உணரக்கூடியது என்பதால், இப்படத்தின் கதைக்கரு பொதுவான ரசிகர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

‘ஃபாதர்’ குறித்து R. சந்துரு

“‘ஃபாதர்’ எனக்கு மிகவும் முக்கியமான திரைப்படம். இந்தக் கதையை கேட்ட அந்த நொடியிலேயே, இதன் மைய உணர்வு ஒவ்வொரு குடும்பத்துடனும் தொடர்புபடுத்தக்கூடியது என்று உணர்ந்தேன். தந்தை – மகன் உறவு மிகவும் தனித்துவமானது. அவர்களுக்குள் அன்பு, எதிர்பார்ப்புகள், புரிதலின்மை, கருத்து வேறுபாடுகள் என அனைத்தும் இருக்கலாம். ஆனால் இறுதியில் அவர்களை இணைப்பது ஆழமான உணர்வுப்பூர்வமான பிணைப்பு. இந்தக் கதையில் என்னை மிகவும் கவர்ந்தது, இந்த உணர்வுகள் அணுகப்பட்ட விதம்தான். ‘ஃபாதர்’ ஒரு உறவைப் பற்றி மட்டுமே பேசவில்லை. குடும்பம், அன்பு, பொறுப்பு, தியாகம் மற்றும் பல நேரங்களில் சொல்லப்படாமல் போகும் உணர்வுகளைப் பற்றியும் பேசுகிறது.

இந்தக் கதை மொழிகளைக் கடந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடையும் திறன் கொண்டது என்று நான் உறுதியாக நம்பினேன். மிகுந்த நேர்மையுடனும் உணர்வுப்பூர்வமான அணுகுமுறையுடனும் இப்படத்தை உருவாக்கியுள்ளோம். டீசருக்கு கிடைத்து வரும் வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளிக்கிறது. பார்வையாளர்கள் ஏற்கனவே படத்தின் மீது ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். முழுத் திரைப்படம் அவர்களுக்கு இன்னும் ஆழமான உணர்வுப்பூர்வமான அனுபவத்தை வழங்கும் என்று நம்புகிறேன்.

டார்லிங் கிருஷ்ணா தனது கதாபாத்திரத்தை மிகுந்த நேர்மையுடன் நடித்துள்ளார். பிரகாஷ் ராஜ் சார் ஒரு அசாத்தியமான நடிகர். அவரது இருப்பு படத்தின் உணர்வுப்பூர்வமான உலகத்திற்கு மிகப்பெரிய ஆழத்தை சேர்த்துள்ளது. இருவரின் கூட்டணி இப்படத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று. என்னைப் பொறுத்தவரை சினிமா என்பது இறுதியில் உணர்வுகளைப் பற்றியது. ஒரு கதை பார்வையாளர்களை ஏதோ ஒரு வகையில் உணர வைத்தால், அது அவர்களுடன் நீண்ட காலம் பயணிக்கும். ‘ஃபாதர்’ படத்திலும் அந்த பலத்தை நான் பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

‘ஃபாதர்’ குறித்து இயக்குனர் ராஜ்மோகன்

‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’, ‘வானவராயன் வல்லவராயன்’, ‘அட்ரஸ்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜ்மோகன், ‘ஃபாதர்’ மூலம் தந்தை – மகன் உறவின் ஆழமான உணர்வுகளைப் பதிவு செய்துள்ளார்.

“என்னைப் பொறுத்தவரை ‘ஃபாதர்’ ஒரு உணர்வுப்பூர்வமான பயணம். தந்தை – மகன் உறவு என்பது நிஜ வாழ்க்கைக்கு மிகவும் நெருக்கமானது. பல குடும்பங்களில் தந்தைகள் தங்களது அன்பை வெளிப்படையாகக் காட்டுவதில்லை. பொறுப்பு, அக்கறை, கண்டிப்பு அல்லது அவர்கள் செய்யும் தியாகங்கள் மூலமாகவே அந்த அன்பை வெளிப்படுத்துகிறார்கள். அந்த உணர்வுகளை ஒரு மகன் சரியான நேரத்தில் புரிந்துகொள்ளாமல் போகலாம். இந்த உணர்வுப்பூர்வமான இடத்தையே படம் ஆராய்கிறது.

அன்பால் இணைக்கப்பட்டிருந்தாலும், அந்த அன்பை ஒருவருக்கொருவர் வெளிப்படுத்தத் தெரியாத இரண்டு மனிதர்களின் பயணம்தான் இந்தப் படம். பார்வையாளர்கள் தங்களது வாழ்க்கையில் பார்த்த அல்லது அனுபவித்த ஏதோ ஒன்றை இந்தக் கதையில் உணர வேண்டும் என்பதே எனது நோக்கம். டார்லிங் கிருஷ்ணா தனது கதாபாத்திரத்தில் முழுத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். பிரகாஷ் ராஜ் சார் அசாத்தியமான ஆழத்தையும் உணர்வையும் கொண்டு வந்துள்ளார். இவர்களின் உறவுதான் படத்தின் மையம்.

டீசருக்கு கிடைத்துள்ள வரவேற்பு மிகவும் உற்சாகமளிக்கிறது. ஆனால் டீசர் என்பது ஒரு சிறிய பார்வை மட்டுமே. ‘ஃபாதர்’ படத்தின் முழுமையான பயணம் இன்னும் வலுவான உணர்வுப்பூர்வமான அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும்” என்று ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

டீசருக்கு கிடைத்துள்ள நேர்மறையான வரவேற்பு படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், படத்தைப் பார்த்து கவரப்பட்ட Macis Productions, ‘ஃபாதர்’ திரைப்படத்தின் விநியோக உரிமையை கைப்பற்றியுள்ளது. இப்படத்தின் உள்ளடக்கம் மற்றும் ரசிகர்களிடம் அது ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தின் மீது விநியோக நிறுவனத்திற்கு இருக்கும் நம்பிக்கையை இது வெளிப்படுத்துகிறது. R. சந்துருவின் தயாரிப்பு, ராஜ்மோகனின் இயக்கம், டார்லிங் கிருஷ்ணாவின் உணர்வுப்பூர்வமான நடிப்பு மற்றும் பிரகாஷ் ராஜின் வலுவான திரை இருப்பு ஆகியவற்றுடன் ‘ஃபாதர்’ ஒரு அர்த்தமுள்ள உணர்வுப்பூர்வமான திரைப்பட அனுபவமாக உருவாகி வருகிறது.

விரைவில் திரையரங்குகளில்!

First ever Yamaha YZF-R2 Makes its Global Debut in India; 

Unveils the Next Chapter of the R-Series

  • YZF-R2 launched in India at INR 2,30,500 ; Available in 3 variants and 5 exciting colors
  • Delivers segment-leading performance with a lightweight chassis
  • Features segment first Bi-Directional Quick Shifter

Chennai, 27th August 2026: India Yamaha Motor (IYM) Pvt. Ltd. today announced the launch of the all-new globally first YZF-R2 in India, further strengthening the company’s iconic R-series portfolio in the country. Priced from INR 2,30,500 (ex-showroom, Delhi), the YZF-R2 underscores Yamaha’s commitment to expanding its premium motorcycle lineup and offering products that cater to the evolving aspirations of Indian riders.

The all-new YZF-R2 is Yamaha’s first offering in the highly competitive 200cc segment, developed for a new generation of riders seeking pure super sport performance, advanced technology, and everyday versatility. Built on an all-new platform and powered by a newly developed engine made and engineered in Japan with seamless collaboration with its Indian counterparts. the YZF-R2 combines responsive performance, confidence-inspiring handling, and Yamaha’s race-bred engineering.

                                                                                                               All-New YZF- R2

India’s premium motorcycle market continues to evolve, fuelled by rising aspirations, evolving lifestyles, and a growing preference for premium mobility solutions. The 200cc segment has emerged as one of the fastest-growing categories, attracting riders who are looking to step up to higher levels of performance and ownership experience. This shift presents a significant opportunity for Yamaha to strengthen its overall motorcycle business and further expand its presence in one of the country’s most promising market segments. Purpose-developed for this evolving category, the YZF-R2 strikes the ideal balance between power, agility, and everyday rideability, making it equally capable on the track, highways and on daily commutes. 

The all-new YZF-R2 will be offered in three variants across five distinctive colour options, allowing riders to choose a motorcycle that best suits their riding style and personality. The YZF-R2 base variant will be available in Metallic Black & Dark Bluish Gray, featuring all-black front and rear wheels along with a matte-finished seat for a clean and decisive appearance. Stepping up, the second variant in YZF-R2 features segment first 3rd generation bi-directional Quick Shifter and is offered in Matte White Pearl & Racing Blue colour options. It also features body coloured alloy wheels, model-specific graphics, and premium material finishes that further accentuate its sporty character.

The range-topping variant, YZF-R2M is available in an exclusive Metallic Gray colour and is designed for riders seeking the ultimate super sport experience. In addition to the Quick Shifter, it features a premium 3D embossed emblem, a faux suede-finished seat, a silver-finished swingarm, and a shot-blasted muffler end cap drawing parallels from the high-gloss finish of Yamaha’s flagship R1. The M variant also comes equipped with adjustable front fork, rear shockers, clutch lever and brake lever, offering greater personalization and enhanced riding dynamics.

Across all the variants, the YZF-R2 comes equipped with a comprehensive suite of performance and safety technologies, including 17-inch wheels, Traction Control System (TCS), an Assist & Slipper Clutch, Yamaha Ride Control (YRC) with selectable riding modes, 37 mm upside-down (USD) front forks, and dual-channel ABS as standard.

Race-Inspired Styling

Drawing inspiration from Yamaha’s latest global R-series motorcycles, the all-new YZF-R2 features a sharp, aerodynamic design with distinctive super sport styling. Every surface has been sculpted to express speed, agility, and precision, giving the motorcycle a purposeful stance even at a standstill.

The front fascia is defined by a compact bi-functional LED headlight flanked by dual LED position lights, creating a distinctive face that immediately connects the YZF-R2 to Yamaha’s iconic R-series lineage. Inspired by the aerodynamic of the R9, the sculpted front fairing and tightly wrapped bodywork have been designed to efficiently managing airflow to enhance high-speed stability. At the rear, a distinctive block-style LED taillight drawing cues from the YZF-R1 and a MotoGP-enthused swingarm reinforcing the motorcycle’s premium sporty character and unmistakable Yamaha identity.

All-New Platform Engineered for Agility

Developed on an all-new platform, the YZF-R2 has been engineered to deliver lightweight agility, confidence-inspiring handling, and an engaging ride experience. At its core is a newly developed high-tensile steel tube diamond frame that strikes an ideal balance between rigidity and low weight, contributing to an overall kerb weight of just 149 kg making it lightest in its segment. 

Inspired by the chassis dimensions of Yamaha’s legendary YZF-R6, the new frame geometry has been optimized to provide natural and intuitive handling across a wide range of rider skill levels and riding conditions. The chassis employs a four-point engine mounting system with an additional mounting point, helping to reduce flex between the frame and engine while improving overall chassis stability, feedback, and cornering performance.

All-New 204cc Engine Built for Performance

Powering the all-new YZF-R2 is a newly developed 204cc, liquid-cooled, 4-stroke, DOHC, single-cylinder, 4-valve, fuel-injected engine, engineered to deliver an engaging blend of performance and everyday rideability. The new powertrain produces segment leading 26.5 PS of power and 19.1 Nm of peak torque, offering strong acceleration, smooth power delivery, and an exhilarating high-revving character. At its core is finger follower rocker arm, valvetrain with    Diamond-Like Carbon (DLC) coating, a technology derived from Yamaha’s flagship R1. This innovative system reduces friction and reciprocating mass, contributing to lower valvetrain weight, improved efficiency, enhanced durability, and the responsive, free-revving performance that defines Yamaha’s sporting DNA.

Lightweight Chassis and Confidence-Inspiring Suspension

Engineered for agility and control, the YZF-R2 features a lightweight steel frame weighing just 14 kg. The optimized frame construction enhances rigidity while reducing overall weight, contributing to improved handling, sharper cornering, and greater rider confidence.

Complementing the chassis is a premium suspension setup comprising 37 mm upside-down (USD) front forks and a rear monoshock, tuned to deliver excellent road-holding performance across varied riding conditions. Designed to effectively absorb bumps and uneven road surfaces, the suspension offers an ideal balance of chassis stability, precise handling, and ride comfort, ensuring a confident and engaging riding experience on both urban roads and spirited weekend rides.


Smart Connectivity & Riding modes

The YZF-R2 is equipped with a host of advanced technologies designed to enhance convenience, connectivity, and rider engagement. A vibrant 5-inch full-colour TFT display provides clear access to essential ride and navigation information, while the Smart Key System (available on the M variant) offers seamless keyless operation for added convenience. The motorcycle also features three riding modes thanks to Yamaha Ride Control (YRC). YRC offers the riders to choose from Street, Sport and Rain modes allowing riders to tailor the motorcycle’s performance to suit different road conditions and riding preferences.

Commenting on the launch, Mr. Hajime Aota, Chairman, Yamaha Motor India Group, said:The launch of the YZF-R2 marks a significant milestone in Yamaha’s long-term growth strategy. The YZF-R2 is not an entry into a new segment; it is a motorcycle created for riders who are committed to the spirit of Yamaha R-series. Combining the authentic R-series DNA with lightweight performance and excellent fuel efficiency, it offers an exciting and accessible gateway to our supersport world. Inspired by the global R-Series flagship motorcycles and built on an all-new platform, the YZF-R2 reflects our confidence in India’s engineering expertise and its growing role in Yamaha’s global product strategy.

We are deeply grateful to our R-series customers in India for their unwavering trust and passion, which have helped make the R-series one of Yamaha’s most iconic motorcycle families in the country. Today, with over one million R-series motorcycles on Indian roads, this enduring relationship continues to inspire us to push the boundaries of innovation and performance. We are confident the YZF-R2 will build on this legacy, set a new benchmark in its segment, and inspire the next generation of Yamaha riders.

The all-new YZF-R2 will be available across all Blue Square (BSQ) dealerships in India from Mid- September 2026. 

*

Prices and Colour Options

YZF-R2 variant wise pricing & colour options
Sl. NoVariantPrice (ex-showroom, Delhi)Colours
1YZF-R2 INR 2,30,500Metallic Black & Dark Bluish Gray
2YZF-R2 (Quick Shifter)INR 2,39,500Matte White Pearl & Racing Blue
3YZF-R2 MINR 2,53,000Metallic Gray

About Yamaha Motor India Group of Companies

Yamaha Motor made its initial foray into India in 1985 as a joint venture. In August 2001, it became a 100% subsidiary of Yamaha Motor Co., Ltd, Japan (YMC). In 2008, Mitsui & Co., Ltd. entered into an agreement with YMC to become a joint investor in India Yamaha Motor Private Limited (IYM). In 2013, YMC established Yamaha Motor Research & Development India Pvt. Ltd. (YMRI) to provide R&D and Product development services to IYM for its domestic as well as export markets. IYM’s manufacturing facilities comprise State-of-the-art plants at Surajpur (Uttar Pradesh) and Kanchipuram (Tamil Nadu). The infrastructure at these plants supports the production of motorcycles and parts for domestic as well as overseas markets. Presently, its India product portfolio includes XSR155 (155cc), YZF-R15 V4 (155cc), YZF-R15S V3 (155cc), MT-15 V2 (155cc); FZS-Fi Hybrid (149cc), FZS-Fi (149cc), FZ Rave (149cc), FZ-X Hybrid (149cc), FZ-X (149cc), AEROX Version S (155cc); Hybrid Scooters like Fascino 125 FI Hybrid (125cc), Ray ZR 125 FI Hybrid (125cc), Ray ZR Street Rally 125 FI Hybrid (125cc) and EV Scooters including EC-06, Aerox E along with FZ-Blue Flex alternate fuel vehicle.

‘ஒன்ஸ்மோர்’ – திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா!

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில், நடிகர் அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், காதல், உணர்வுகள் மற்றும் பொழுதுபோக்கை மையமாகக் கொண்ட படைப்பாக உருவாகியுள்ளது. இதில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் ஆகியோருடன், பிரபல மாடல் சோனா ஒலிக்கல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில் இயக்குநர் தயாரிப்பாளர் இரா சரவணன் பேசியதாவது..,

“ஆகஸ்ட் 28ஆம் தேதி ‘அன்பே டயானா’ ஓடிடியிலும், ‘ஒன்ஸ்மோர்’ திரையரங்குகளிலும் வெளியாகிறது. இந்த நாள் என் நண்பர் தயாரிப்பாளர் யுவராஜுக்கு மிக முக்கியமான நாள்.‘அன்பே டயானா’ படத்தில் என்னுடைய பணி எதுவும் இல்லாவிட்டாலும் என்னையும் தயாரிப்பாளராக இணைத்துக்கொண்ட அவரது அன்பை நான் எப்போதும் மதிக்கிறேன். ‘ஒன்ஸ்மோர்’ படத்தைப் பார்த்தபோது, கவிதை போல அவ்வளவு அழகாக இருந்ததால் எங்கேயாவது என் பெயரைப் போட்டுவிடுங்கள் என்று அவரிடம் கெஞ்சினேன்.

அர்ஜுன் தாஸ் வில்லனாக நடித்தாலே எனக்கு பிடிக்கும். ஆனால் இந்தப் படத்தில் கதாநாயகனாக, ஹீரோவாக அவர் கலக்கியிருக்கிறார். . அவருடைய அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. அதிதி ஷங்கர் எனக்கு மிகவும் பிடித்த நடிகை. இயக்குநர் ஷங்கரின் மகள் நடிக்க வருகிறார் என்று தெரிந்தபோது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டது. அவர் அறிமுகமாகும்போது சிவகார்த்திகேயனிடம் பேசி, அவருடன் இணைந்து அறிமுகமானால் நன்றாக இருக்கும் என்று சொன்னேன். பின்னர் அவர் சிவகார்த்திகேயன் படத்தில் அறிமுகமாகி நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் படத்திலும் அதிதி மிக அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

தயாரிப்பாளர் யுவராஜ் எனக்கு மிகச் சிறந்த நண்பராக மாறியிருக்கிறார். அவருடைய நட்பு கிடைத்த பிறகு என்னுடைய மற்ற நண்பர்கள் எல்லாம் மறைந்துவிட்டார்கள் என்று சொல்லும் அளவுக்கு அத்தனை நெருக்கமான நண்பராகிவிட்டார்.

ரசிகர்கள் திரையரங்கில் ‘ஒன்ஸ்மோர்’ என்று கேட்கும் அளவுக்கு இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும். என் நெருங்கிய நண்பர் யுவராஜுக்கு இப்படம் மிகப்பெரிய வெற்றியைத் தர வேண்டும்.”

நடிகை கலா பேசியதாவது..,

“‘ஒன்ஸ்மோர்’ திரைப்படம் எனக்கு என்னுடைய கல்லூரி நாட்களை நினைவுபடுத்தியது. ‘என்னுடைய கல்லூரி நாட்களும் இப்படி இருந்திருக்கலாமே’ என்று ஏங்க வைக்கும் அளவுக்கு இப்படம் பல நினைவுகளை ஏற்படுத்தியது. ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படம் என்றும் மறக்க முடியாத கல்லூரி நினைவுகளைப் போல இருக்கிறது. இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் அதை மிகச் சிறப்பாக இயக்கியிருக்கிறார்.

அர்ஜுன் தாஸை வில்லனாகப் பார்த்தாலே எனக்கு பிடிக்கும். இந்தப் படத்தில் அவர் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அதிதி எனக்கு மிகவும் பிடித்த நடிகைகளில் ஒருவர். அவரும் அழகாக நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய நன்றிகள்.

இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் பேசியதாவது..,

“மலையாளத்தில் ‘ஹிருதயம்’ திரைப்படத்திற்குப் பிறகு, தமிழில் நான் மிகவும் எஞ்சாய் செய்து பணியாற்றிய திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’. தமிழில் என் முதல் படம், இப்படத்தின் ஆல்பம் முழுவதிலும் மிகுந்த கொண்டாட்டத்துடன் உழைத்தோம்.அனைவரும் எளிதில் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய ஒரு அழகான கதையை இயக்குநர் மிகச் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார். படத்தில் பணியாற்றிய அனைவருமே மிகச் சிறப்பாக உழைத்திருக்கிறார்கள்.
என்னுடன் பணியாற்றிய இசைக்கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. பாடல்களை எழுதிய கவிஞர் ஸ்ரீகாந்துக்கும் எனது நன்றிகள். இப்படத்தின் பாடல்களை ரசிகர்கள் ஏற்கனவே கொண்டாடி வருகின்றனர். இந்தப் பாடல்கள் காலம் கடந்தும் ரசிகர்களால் ரசிக்கப்படும் என்று நம்புகிறேன். நன்றி.”

நடிகை சோனா பேசியதாவது..,

“இன்று எனக்கு மிகவும் முக்கியமான நாள். ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படத்திற்காக நான் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தேன். இப்படத்தில் எனக்கு மிகவும் முக்கியமான இந்திரா கதாபாத்திரத்தை வழங்கிய இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் மற்றும் தயாரிப்பாளர் யுவராஜ் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
அர்ஜுன் தாஸ் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். நிறைய சாப்பாடு கொடுத்து என்னை சந்தோஷப்படுத்தினார். அதேபோல் அதிதியும் படப்பிடிப்பின் முதல் நாளிலிருந்தே எனக்கு மிகச் சிறந்த தோழியாக இருந்தார். அவருக்கும் எனது நன்றிகள். இப்படத்தில் உழைத்த அனைத்து நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.உங்கள் அனைவரையும் போலவே நானும் ஆகஸ்ட் 28ஆம் தேதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். கண்டிப்பாக இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி.”

தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் பேசியதாவது..,

“இந்த மேடைக்காக நான் பல காலமாக காத்திருக்கிறேன். நானும் இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்தும் இதற்காகத்தான் காத்துக் கொண்டிருந்தோம். இப்படத்திற்கு பல வெளியீட்டுத் தேதிகளைத் நிர்ணயித்தும், சில காரணங்களால் அது சரியாக அமையாமல் போனது. ஆனால் இம்முறை ஆகஸ்ட் 28ஆம் தேதி படம் திரைக்கு வருவது உறுதியாகிவிட்டது.
இயக்குநர் கதை சொன்ன நொடியில் இருந்து, ஒவ்வொரு காட்சியிலும் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற துடிப்புடன் பணியாற்றினார். அவரது திறமைக்கு இப்படம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும், அவருக்கு ஒரு முக்கியமான அடையாளமாகவும் இருக்கும்.

இது ஒரு மியூசிக்கல் படம் என்பதால் இசையமைப்பாளர் குறித்து பலருடன் விவாதித்தோம். இறுதியில் ‘ஹிருதயம்’ படத்தின் இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாபை சந்தித்து இப்படத்தை ஒப்புக்கொள்ளச் சொன்னோம். அவர் நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிகச் சிறப்பான இசையை வழங்கியிருக்கிறார். அவரது இசையை ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள்.அதிதி ஷங்கர் இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ‘மாவீரன்’ படத்தைப் பார்த்த பிறகு அவரை அணுகினோம். அந்தப் படத்தில் அவர் பெற்ற சம்பளத்துடன் ஒப்பிடும்போது, இப்படத்திற்காக மிகவும் குறைவான சம்பளத்தில் நடித்து, எங்களுக்கு மிகச் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கினார். அவருக்கு எனது நன்றிகள்.

அதேபோல் அர்ஜுன் தாஸ் இல்லாமல் இந்தப் படமே இல்லை. அவருடைய அர்ப்பணிப்பும் ஆதரவும் இப்படத்தின் மிகப்பெரிய பலம். இது அவருக்கு மிகவும் முக்கியமான பிடித்தமான படம். அவரும் இப்படத்தை மிகவும் ரசித்து நடித்திருக்கிறார். கால்ஷீட் உள்ளிட்ட எதைப் பற்றியும் கவலைப்படாமல், நாங்கள் அழைத்தபோதெல்லாம் வந்து முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்.

இவர்கள் அனைவரின் அர்ப்பணிப்பும் உழைப்பும்தான் ‘ஒன்ஸ்மோர்’ படத்தின் பலம். எனக்கு ஆதரவாக இருந்த இயக்குநரும் தயாரிப்பாளருமான இரா சரவணன் அவர்களுக்கும், என்னுடன் இருந்து உழைத்த என்னுடைய குழுவினர் அனைவருக்கும் எனது நன்றிகள். வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி இப்படத்தை திரையரங்குகளில் கண்டுகளியுங்கள். அனைவருக்கும் நன்றி!”

இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் பேசியதாவது..,

“இந்த நாளுக்காக நான் பல காலமாகக் காத்திருந்தேன். அழுவதற்கு காலம் வந்தால் மகிழ்ச்சியாக இருக்கவும் ஒரு காலம் வரும். அந்த மகிழ்ச்சியான காலம் இதுதான். ஆகஸ்ட் 28ஆம் தேதி ‘ஒன்ஸ்மோர்’ திரைக்கு வருகிறது.
இந்தத் திரைப்படத்தை இயக்குநர் மணிரத்னம் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். அவருடைய படங்களைப் பார்த்துதான் நான் இயக்குநராக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அவருக்கான என்னுடைய லவ் லெட்டர்தான் இந்தத் திரைப்படம். இப்படத்திற்காக ஆதரவு அளித்த என்னுடைய அப்பா, அம்மா, உறவினர்கள், திரைத்துறை நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. என்னுடன் பயணித்து இப்படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.

இப்படத்தை எழுத ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே என் மனதில் இருந்த ஒரே நடிகர் அர்ஜுன் தாஸ். ரகு கதாபாத்திரமாக அவரை மனதில் வைத்துதான் எழுதினேன். அவர் இப்படத்தில் ரகுவாக முழுமையாக வாழ்ந்திருக்கிறார். நான் எதிர்பார்த்ததைவிட எடிட்டிங்கில் அவருடைய நடிப்பு இன்னும் புதிதாகவும் அற்புதமாகவும் இருந்தது. அதேபோல் அதிதி ஷங்கர் அவர்களுக்கும் நன்றி. படப்பிடிப்பில் பல சிரமங்களுக்கு இடையிலும் எங்களுடன் இணைந்து முழு ஆதரவு கொடுத்து மிக அற்புதமாக நடித்துக் கொடுத்தார். இந்திரா கதாபாத்திரத்தில் நடித்துள்ள சோனாவுக்கும் நன்றி. அவருக்கும் எனக்கும் இதுதான் அறிமுகத் திரைப்படம். பல காலமாக நாங்கள் இருவரும் இந்த நாளுக்காகக் காத்திருந்தோம். இறுதியாக அந்த நாள் வந்ததில் மகிழ்ச்சி.

இப்படத்தின் இசை மிகவும் முக்கியமானது. ‘ஹிருதயம்’ படத்தின் இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அவரது இசை படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது. காட்சிகளையும் இசையையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு அழகாக ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கிறது. ஒளிப்பதிவாளர், எடிட்டர் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், என்னுடைய உதவி இயக்குநர்களுக்கும் நன்றி.

இது என்னுடைய முதல் திரைப்படம். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். ஆகஸ்ட் 28ஆம் தேதி திரையரங்குகளில் ‘ஒன்ஸ்மோர்’ படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவைத் தாருங்கள். நன்றி!”

நடிகை அதிதி ஷங்கர் பேசியதாவது..,

“முதலில் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். ‘ஒன்ஸ்மோர்’ போன்ற ஒரு திரைப்படத்தை திரையில் கொண்டு வந்ததற்கும், விக்னேஷ் ஸ்ரீகாந்த் போன்ற ஒரு திறமையான இயக்குநரை அறிமுகப்படுத்தியதற்கும் அவருக்கு நன்றி.

நான் வாழ்க்கையில் மிகவும் கடினமான காலகட்டத்தில் இருந்தபோது இந்தத் திரைப்படம் எனக்கு கிடைத்தது. அந்த நேரத்தில் படப்பிடிப்புக்கு வந்து அஞ்சலியாக வாழ்ந்த ஒவ்வொரு நாளும் என்னை மனதளவில் மருந்தாக அமைந்து உற்சாகப்படுத்தியது. எனக்கு மிகப்பெரிய உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. அதனால் இந்தப் படம் எனக்கும் மிகவும் முக்கியமானது.

இப்படத்தின் இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப், ‘ஹிருதயம்’ படத்தின் மூலம் எனக்கு மிகவும் பிடித்தவர். இந்தப் படத்தில் எனக்காக ஒரு அழகான பாடலைக் கொடுத்திருக்கிறார். அந்தப் பாடல் என் மனதிற்கு மிகவும் பிடித்த பாடல்.இப்படத்தில் நடித்திருக்கும் சோனா மிகவும் அற்புதமான நடிகை. அவருடைய நடிப்பை நான் மிகவும் ரசித்தேன். அவருக்கு இன்னும் பல நல்ல வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
அர்ஜுன் தாஸை முதன்முதலில் அனிருத் கான்சர்ட்டில் பார்த்தபோது, ரசிகையாக அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். அப்போது அவர் என்னைப் பார்த்து சிரித்தார். இப்போது அவருடன் இணைந்து நடித்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அவர் எனக்கு மிகச் சிறந்த நண்பராகிவிட்டார். அர்ஜுன் தாஸை வித்தியாசமான கதாபாத்திரத்தில் அனைவரும் ரசித்திருப்பீர்கள். இந்தப் படத்தில் அவரை லவர் பாயாகவும் கண்டிப்பாக கொண்டாடுங்கள். அவர் நிச்சயம் உங்கள் அனைவரையும் கவருவார். ‘ஒன்ஸ்மோர்’ ஒரு அழகான டிராமா. அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும் என்று நம்புகிறேன்.!”

நடிகர் அர்ஜுன் தாஸ் பேசியதாவது..,

“விக்னேஷ் ஸ்ரீகாந்த் என்னிடம் கதை சொல்ல வந்தபோது, முதலில் ஒன்லைனை மட்டும் சொன்னார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன்பிறகு முழு திரைக்கதையையும் தயார் செய்துவிட்டு வருவதாகக் கூறினார்.
ஆனால் அவர் சொல்லாமல் விட்ட ஒரு விஷயம் இருக்கிறது. திரைக்கதையைத் தயார் செய்த பிறகு பல நிறுவனங்களிடம் இந்தக் கதையைப் பிட்ச் செய்திருக்கிறார். அப்போது பலரும், ‘அர்ஜுன் தாஸ் ஹீரோவாக வேண்டாமே, வேறு ஹீரோவை வைத்து செய்யலாமே’ என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் விக்னேஷ், ‘அர்ஜுன் தாஸ் மட்டும்தான் இந்தக் கதையில் ரகுவாக நடிக்க முடியும். அவரை வைத்துதான் இந்தப் படத்தை எடுப்பேன்’ என்று எனக்காக உறுதியாக நின்றிருக்கிறார்.

என்னை முழுமையாக நம்பி இந்தப் படத்திற்காக நின்ற இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்துக்கு எனது நன்றி. ரகு கதாபாத்திரத்தை என்னால் செய்ய முடியும் என்று நான் கூட சில நேரங்களில் நினைக்கவில்லை. ஆனால் அவர் என்னை முழுமையாக நம்பினார்.

அவருக்கு இந்தத் திரைப்படம் எவ்வளவு முக்கியம் என்பது எனக்குத் தெரியும். நாங்கள் அனைவரும் படத்தை முடித்துவிட்டு அடுத்தடுத்த படங்களுக்குச் சென்றுவிட்டோம். ஆனால் இன்றுவரை அவர் இந்தப் படத்திற்காக தொடர்ந்து நின்றுகொண்டிருக்கிறார். இது அவருடைய அறிமுகப் படம். ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியாகும் இப்படம், அவருடைய திறமையை நிச்சயம் சொல்லும்.

இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப், ‘ஹிருதயம்’ படம் பார்த்து, அவருடைய இசை எனக்கு மிகவும் பிடித்ததால் அவருக்கு போன் செய்து பாராட்டினேன். அப்போது விரைவில் இணைந்து ஒரு படம் செய்யலாம் என்று பேசினோம். விக்னேஷ் இந்தக் கதையைச் சொன்னபோது, இது ஒரு மியூசிக்கல் படம் என்பதால் இசைக்கு முக்கியத்துவம் அதிகம் என்பதால் ஹேஷாமிடம் கேட்கலாம் என்று கூறினேன். அவர் கதையைக் கேட்டவுடன் உடனே ஒப்புக்கொண்டு, இப்படத்திற்கு மிக அற்புதமான இசையைத் தந்திருக்கிறார். அவருக்கு எனது நன்றிகள்.”
இந்திரா கதாபாத்திரத்தில் நடித்த சோனாவைப் பற்றி விக்னேஷ் பல்வேறு விதமாகக் கற்பனை செய்து சொல்லிக்கொண்டே இருந்தார். இறுதியாக சோனா இந்திராவாக வந்தார். மிக அற்புதமாக நடித்திருக்கிறார். ஒரு சிறந்த தோழியாகவும் மாறிவிட்டார். இந்தத் திரைப்படம் அவருக்கு மிகச் சிறந்த அடையாளமாக இருக்கும்.
அதேபோல் அதிதி ஷங்கர் இந்தப் படத்திற்கு தேவையான அந்த எனர்ஜியை அற்புதமாகக் கொண்டு வந்திருக்கிறார். படப்பிடிப்பின் முதல் நாளில் ‘வாங்க சார்’ என்று அழைத்தவர், அடுத்த நாளிலிருந்தே ‘வாடி’ என்று அழைக்கும் அளவுக்கு நெருக்கமான தோழியாகிவிட்டார். அவருடைய நட்பு கிடைத்தது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.
பல பிரச்சனைகளைச் சந்தித்தபோதும், இப்படத்தை முழுமையாக முடிக்க வேண்டும் என்ற உறுதியுடன் நின்ற தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் அவர்களுக்கும், மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கும் நன்றி. இந்தப் படம் அந்த நிறுவனத்தின் வெற்றிச் சரித்திரத்தில் இடம்பெற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். யுவராஜ் கணேசன் அவர்களுக்கு இப்படம் மிகப்பெரிய வெற்றியைத் தரட்டும்.‘ஒன்ஸ்மோர்’ அழகான காதலைச் சொல்லும் ஒரு உண்மையான டிராமா. எனக்கு மிகவும் நெருக்கமான திரைப்படம். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். நன்றி!”பான் இந்திய அளவில் தனது இசையால் ரசிகர்களை கவர்ந்த ஹேஷாம் அப்துல் வஹாப், ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்திற்கு ராஜ்கமல் கலை இயக்கத்தை கவனித்துள்ளார். நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ள நிலையில், மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் சார்பில் யுவராஜ் கணேசன் தயாரித்துள்ளார்.பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் 28 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.