REFCOLD India 2023: An Optimal Spotlight on India’s INR 4.3 Trillion Cold Chain Potential and Food Waste Solutions

Chennai, October 12th, 2023: REFCOLD India, 2023, South Asia’s leading exhibition and conference dedicated to refrigeration and cold-chain technologies, commenced today at the Chennai Trade Centre, Chennai. Organised in collaboration between the Indian Society of Heating, Refrigerating and Air Conditioning Engineers (ISHRAE) and Informa Markets, REFCOLD India 2023 is set to redefine the industry landscape. This well-reputed event represents a significant step forward in the refrigeration and cold-chain sector, unveiling a vast potential cold-chain market of around INR 4.3 trillion by 2027.

The event’s grand inauguration was spearheaded by a rich array of dignitaries including Guest of Honour – Dr. R Velraj, Vice Chancellor, Anna University; Mr. Raja M Sriraam, Chairman, RECFOLD Chennai, ISHRAE; Mr. Yogesh Thakkar, National President, ISHRAE, Mr. Anoop Ballaney, National President Elect, ISHRAE and Mr Yogesh Mudras, Managing Director, Informa Markets in India.

The 6th gala edition of REFCOLD India brought together top experts, businesses, and thought leaders who are driving the industry’s transformation with over 200 exhibitors, including an impressive lineup of industry giants such as BlueStar, Copeland, Rinac India, Tecumseh, Daikin, K-Flex, Yaskawa, and Danfoss, among others. The show anticipates more than 10,000 visitors, industry leaders, and professionals, for dynamic business opportunities, knowledge-sharing sessions, and networking.

Speaking on the occasion, Mr Yogesh Thakkar, National President ISHRAE said, “The adoption of integrated cold chain solutions has the potential to significantly revolutionize the traditional perishables sector, bringing about substantial changes in the market landscape and overall growth. This is especially important in a country where agriculture employs 60% of the population. To harness the potential of integrated cold chain solutions, there is a need to optimise logistics, enhance value addition facilities, adopt green refrigeration practices, and adopt energy-efficient cooling systems and natural refrigerants ultimately improving efficiency across the supply chain. Similarly, the Indian organized food industry is a vast arena with significant potential. This underscores the substantial room for growth in the food delivery sector, which, when integrated with advanced refrigeration and cold chain solutions, can further enhance food quality, safety, and delivery efficiency.”

“The pandemic acted as a catalyst, propelling India’s online food delivery market to reach approximately $21 billion by 2026, with a remarkable compound annual growth rate (CAGR) of nearly 30%”, he further added.

With the valuable support of MOFPI (Ministry of Food Processing Industries Government of India), other esteemed associations like IIR (International Institute of Refrigeration), NCCD (National Centre for Cold-chain Development), IDA (Indian Dairy Association), IIAR (International Institute of Ammonia Refrigeration) and more, the event successfully bridged the gap between suppliers and buyers.

REFCOLD India offers an enriching programme of Conferences and exhibitions by technical experts of the industry focusing on Industrial Refrigeration along with Cold Chain and Reefer Transportation, Seminars and workshops on pharma, dairy, fishery and hospitality encouraging continuous learning and skill advancement. The expo covered important topics on Heat pump integrated thermal storage for dairy applications, Natural Refrigerants, Innovative Design or Technology for Net Zero Cold Storage Plants, Challenges on Dairy Processing and Storage, Safety Standards and Trouble Shooting of Refrigeration Plants, to name a few.

Commenting on the significance of REFCOLD India 2023, Mr Yogesh Mudras Managing Director, Informa Markets in India said “REFCOLD India provides a transformative journey that unlocks opportunities for fresh horizons and valuable collaborations. The expo offers a plethora of opportunities to connect with industry experts and learn about cutting-edge technologies. Furthermore, the government is also taking proactive steps to boost the refrigeration and cold chain industry by establishing extensive cold storage facilities nationwide. This initiative aims to minimize food wastage, encouraging eco-friendly refrigeration practices, while simultaneously stimulating economic growth. The added attractions including our content-rich conference that aligns with the theme of ‘Preserve through Innovation for a Better Future’ will gather experts, stalwarts, and key organizations and provide the momentum the market truly deserves!”

Distinguished speakers that graced the event included notable figures like Mr. Arvind Surange, Chairman and Managing Director of ACR Project Consultants Pvt Ltd; Dr. Lambert Kuijpers, an Environmental Consultant hailing from Venlo, Netherlands; Mr. C.P. Charles, a Central Executive Committee Member at the Indian Dairy Association; Dr. Alex Pachai, representing Global Consultancy, ApS in Denmark; Dr. Omar Abdulaziz, a Mechanical Engineer affiliated with The American University in Cairo, Egypt; and Mr. Jiju Nair, who holds the position of National Marketing Manager at Honeywell, among others.

Insights on India’s Cold Storage and Refrigeration Technology Market:

Advancements in refrigeration technology have led to energy-efficient systems, particularly beneficial in high-energy industries like chemical manufacturing. These optimized systems and eco-friendly refrigerants not only lower carbon footprints but also reduce emissions and water waste compared to traditional cooling methods like cooling water towers.

Additionally, in India, where agricultural production is vast, but access is limited, the cold chain sector plays a vital role, further driven by the growth of organized food delivery and e-commerce segments.

REFCOLD India gathers experts from the global and Indian refrigeration sectors to drive innovation and combat food waste. It highlights the importance of cold chain management,

Mr. Madhur Sehgal, Head Climate Solutions, Danfoss said, “We are bringing an exciting opportunity to all of you to have an exclusive visit to our lead Platinum Campus on 13th October 2023. This is a unique opportunity to witness the state-of-the-art campus with next-generation R & D and production facilities, an application development center, and a customer experience center showcasing the live working performance of our products in diverse industry applications. We will also be pleased to showcase the use of the latest technologies and specific actions on our campus on HVAC, Renewable Energy, Water, and waste management, leading to faster progress toward our Net Zero Emission goals. Please join us for this exclusive event on 13th October and discover how Danfoss can help you achieve your goals of clean growth and development.”

Mr. M Srinivas Reddy, Vice President, Commercial Refrigeration Business Group, Blue Star stated, “We, at Blue Star, recognise REFCOLD as the perfect platform to showcase various refrigeration solutions. We are confident that it will help us reach our target audience well and we wish REFCOLD a huge success.”

On the sidelines of the expo, Informa Markets in India launched its 4th edition of the Festivity of Business campaign for this year’s high season. As the autumn season blankets India with its diverse array of festivals, the initiative will be a vibrant tribute to India’s economic triumphs and its burgeoning global influence. This year, Informa Markets in India’s initiative encompasses a rich tapestry of over 40 events till year-end, including ten signature Expos, along with distinctive Conferences, Industry Awards, Buyer-Seller Meets, and Training programmes in influential sectors. All these are poised to elevate the nation to new heights.

# Nan Mudhalvan – நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்

சென்னை பூந்தமல்லியில் அமைந்துள்ள ராஜலட்சுமி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில்
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு வழிகாட்டி முகாம் சிறப்பாக நடைபெற்றது

இந்த வேலை வாய்ப்பு முகமானது தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம்,தமிழ்நாடு சி.ஐ.ஐ மற்றும் இசட் எப் ஆகியவை இணைந்து நடத்தினர்

நிதி மற்றும் தொழில்நுட்ப துறை என சுமார் 140 நிறுவனங்களில் இருந்து தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்களை பணியமர்த்த மாணவ மாணவியர்களுக்கு தகுதி தேர்வு நடத்தினர் இதில் சுமார் 15,000 மாணவ மாணவிகள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டனர்

‘அன்பில் அவன்’ செப்டம்பர் 25- முதல், உலகமெங்கும் திரையரங்குகளில் !

முன்னணி இளம் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள காதல் திரைப்படமான ‘அன்பில் அவன்’ வரும் செப்டம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.

ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள, இப்படம் காதல் கதைக்களத்துடன், அழகான உணர்வுகளையும் கலந்து, சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் கதையை ‘போர் தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார்.

இப்படத்தில் அசோக் செல்வனுடன் ப்ரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ஆர்.கே. செல்வா படத்தொகுப்பையும், மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர்.

ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் சார்பில் கே. கருணா மூர்த்தி, அசோக் செல்வன், அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான ‘ஆசை வரமே’ பாடலுக்கு கிடைத்துள்ள வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளதால் ‘அன்பில் அவன்’ படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

வரும் செப்டம்பர் 25ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் காதல் கொண்டாட்டத்தை ரசிகர்கள் கொண்டாடலாம்.

Yamaha Strengthens Presence in Chennai with Three New Blue Square Dealerships


New dealerships offer sales, service and genuine spares support under Yamaha’s
premium Blue Square Showrooms

 India Yamaha Motor (IYM) announces the opening of three new Blue Square dealerships in Chennai: AVI Motors – Redhills, Walters Motohub – Old Washermenpet, and SKY Motors – Thoraipakkam, OMR. The expansion reinforces Yamaha’s commitment to enhancing customer accessibility and strengthening its presence in one of India’s top-priority two-wheeler markets.

Strategically located across key parts of the city, the new dealerships offer Yamaha’s premium range of motorcycles and scooters, along with dedicated service and spares facilities under the Blue Square retail concept. The expansion marks a major boost to Yamaha’s after-sales network in Chennai. With enhanced service infrastructure across the three dealerships, customers can now enjoy faster, more convenient, and more reliable service support throughout their ownership journey. With the inauguration of these three new dealerships, Yamaha now has 28 premium Blue Square showrooms in the Chennai region taking the total network count to 37 touchpoints.

Chennai and the entire Tamil Nadu continue to be a key market for Yamaha, supported by a strong riding culture and growing demand for premium two-wheelers. Yamaha has witnessed consistent growth in the region over the years, and the opening of these three dealerships marks another important step in strengthening its network to support future growth, enhance customer accessibility, and deliver an elevated ownership experience across the market.

Designed to embody Yamaha’s global racing heritage and premium brand values, the Blue Square network continues to serve as a platform for deeper engagement with customers and riding enthusiasts. Through this expansion in Chennai, Yamaha aims to strengthen its relationship with customers in Tamil Nadu while delivering exceptional service, convenience, and world-class customer experiences.

***

ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

ஸ்மார்ட்டான உள்ளடக்கத் தேடலுடன், மேலும் வளமான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும் வகையில், Zee 5 தனது மறுவடிவமைக்கப்பட்ட தயாரிப்பு அனுபவம், பிரீமியம் ஆங்கில உள்ளடக்கத் தொகுப்பு மற்றும் புதுப்பிக்கப்பட்ட AvoD சேவையான – Free 5-ஐ அறிமுகப்படுத்துகிறது

தேசியம், செப்டம்பர் 9, 2026: பார்வையாளர்கள் முன்பைவிட அதிகமான பொழுதுபோக்கு உள்ளடக்கங்களை அணுகும் நிலையில், அவர்கள் பொழுதுபோக்கைத் தேடும் மற்றும் அனுபவிக்கும் விதத்தை Zee 5 மறுவரையறை செய்கிறது. விரிவுபடுத்தப்பட்ட உள்ளடக்கத் தொகுப்பை அடிப்படையாகக் கொண்டு, மொபைல் மற்றும் Connected TV தளங்களில், ஸ்மார்ட்டான தனிப்பயனாக்கம், AI அடிப்படையிலான உள்ளடக்கத் தேடல், மேம்பட்ட காட்சி வழிசெலுத்தல் மற்றும் தடையற்ற பல்திரை அனுபவம் ஆகியவற்றால் இயக்கப்படும் மிக முக்கியமான மாற்றங்களில் ஒன்றை Zee 5 தற்போது அறிமுகப்படுத்துகிறது. பார்வையாளர்களின் பார்வை பழக்கத்தை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள புதிய Zee 5, Premium Entertainment, Free 5, KidZ, TV மற்றும் Sports என ஐந்து தனித்துவமான உலகங்களுக்கான கதவுகளைத் திறக்கிறது. இதன் மூலம் உள்ளடக்கத்தைத் தேடுவது இயல்பாகவே எளிமையானதாகவும், ஆழமான அனுபவமாகவும், தடையற்றதாகவும் மாறுகிறது. ஏனெனில் இந்தியாவின் பொழுதுபோக்கு பார்வை முறை மாறி வருவதற்கேற்ப, பொழுதுபோக்கைத் தேடும் அனுபவமும் மாறுகிறது.

தனிப்பயனாக்கம் என்பது புதிய அனுபவத்தின் மையமாக உள்ளது. இது பார்வையாளர்களின் ஆர்வங்களுக்கு மிகவும் பொருத்தமான உள்ளடக்கங்களை அவர்கள் கண்டறிய உதவுகிறது. அதேவேளையில், AI அம்சம் Zee 5 தளத்தில் மேலும் புத்திசாலித்தனமான உள்ளடக்கத் தேடலையும், மென்மையான தொடர்பு அனுபவத்தையும் வழங்குகிறது. மொபைல் சாதனங்களுடன் இணைந்த சாதனங்களிலும் பார்வையாளர்கள் அதிகளவில் பொழுதுபோக்கை அனுபவித்து வரும் நிலையில், புதிய அனுபவம் சிறிய திரையிலிருந்து பெரிய திரைக்கு தடையின்றி மாறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை மேலும் எளிதாக்கும் வகையில், அடுத்த தலைமுறை AI தொழில்நுட்பத்தில் இயங்கும் வாடிக்கையாளர் ஆதரவு உதவியாளர் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது சந்தாக்கள், பிளேபேக், அணுகல், உள்ளடக்கம் மற்றும் சாதனங்கள் தொடர்பான கேள்விகளுக்கு புத்திசாலித்தனமான, கிட்டத்தட்ட உடனடி தீர்வுகளை வழங்குகிறது. இவ்வம்சங்களுடன், தரவு தனியுரிமையை மேலும் வலுப்படுத்தும் வகையில் Zee 5 மேம்பட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இதற்காக சிறந்த மற்றும் துறையில் முன்னணியில் உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை அனைத்தும் ஒருங்கிணைந்து, வேகமான, புத்திசாலித்தனமான மற்றும் மிகவும் எளிமையான பொழுதுபோக்கு அனுபவத்திற்கான புதிய அளவுகோலை உருவாக்குகின்றன.

புதிய அனுபவத்தை உருவாக்குவதற்காக, இந்தியா முழுவதும் பார்வையாளர்கள் எவ்வாறு பொழுதுபோக்கை பார்க்கிறார்கள், தேடுகிறார்கள் மற்றும் அதனுடன் ஈடுபடுகிறார்கள் என்பதை Zee 5 ஆழமாகப் புரிந்துகொண்டது. ஏற்கனவே கிடைத்திருந்த செயலி கருத்துகள், பல்வேறு சந்தைகளில் நடத்தப்பட்ட நுகர்வோர் ஆய்வுகள் மற்றும் Focus Group Discussions ஆகியவற்றை ஒருங்கிணைத்து, மொபைல் மற்றும் Connected TV தளங்களில் பார்வையாளர்களின் பயணத்தை இந்த தளம் ஆய்வு செய்தது. பெரிய திரை அனுபவத்தின் வளத்தையும் ஆழத்தையும் பாதிக்காமல், மேலும் எளிமையான மற்றும் உள்ளுணர்வுடன் பயன்படுத்தக்கூடிய அனுபவம் தேவை என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்தியது. இந்த நுண்ணறிவுகளின் அடிப்படையில் மறுவடிவமைப்பு மேற்கொள்ளப்பட்டது. மேலும், வெளியீட்டிற்கு முன் தளத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் கடுமையாகச் சோதித்து, மேம்படுத்தி, நுணுக்கமாகச் செம்மைப்படுத்தும் வகையில், Product, Engineering, Quality Assurance மற்றும் Design துறைகளைச் சேர்ந்த நிபுணர்களை ஒன்றிணைத்து தீவிர Bugathons நடத்தப்பட்டன.

கடந்த காலாண்டில், Zee 5 தனது பல்வேறு வகையான உள்ளடக்கத் தொகுப்பை குறிப்பிடத்தக்க அளவில் விரிவுபடுத்தியுள்ளது. முதலில், உலகளாவிய விளையாட்டு நிகழ்வான FIFA World Cup 2026™ மற்றும் 2030-க்கான ஒளிபரப்பு உரிமைகளைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, ஏழு மொழிகளில் தனது உள்ளடக்கத் தொகுப்பை அறிமுகப்படுத்தியது. இந்த முன்னேற்றத்தின் தொடர்ச்சியாக, இதுவரை இல்லாத அளவிலான பிரீமியம் ஆங்கில பொழுதுபோக்கு உள்ளடக்கத் தொகுப்பை Zee 5 தற்போது அறிமுகப்படுத்துகிறது. இதில் உலகளாவிய திரைப்படங்களும், ஹாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களும் இந்திய பார்வையாளர்களுக்காக இடம்பெறுகின்றனர். PVR INOX PICTURES மற்றும் LIONSGATE PLAY ஆகியவற்றுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள மூலோபாய கூட்டணிகளின் மூலம், இந்த பிரம்மாண்டமான உள்ளடக்கத் தொகுப்பில் Normal திரைப்படம் இடம்பெறுகிறது. இதில் Bob Odenkirk, Henry Winkler மற்றும் Lena Headey நடித்துள்ளனர்; The Invite திரைப்படத்தில் Seth Rogen, Penélope Cruz, Edward Norton மற்றும் Olivia Wilde நடித்துள்ளனர்; Anxious People திரைப்படத்தில் Angelina Jolie மற்றும் Jason Segel நடித்துள்ளனர்; Babies திரைப்படத்தில் Seth Rogen மற்றும் Anna Kendrick நடித்துள்ளனர்; The Wizard of the Kremlin திரைப்படத்தில் Jude Law நடித்துள்ளார்; How to Make a Killing திரைப்படத்தில் Glen Powell மற்றும் Margaret Qualley நடித்துள்ளனர்; Tony திரைப்படத்தில் Dominic Sessa இடம்பெறுகிறார்; மேலும் Paper Tiger திரைப்படத்தில் Adam Driver, Scarlett Johansson மற்றும் Miles Teller நடித்துள்ளனர். முன்னணி நட்சத்திரங்கள், உலகளாவிய கதைகள் மற்றும் பிரீமியம் சினிமா ஆகியவற்றின் இதுவரை இல்லாத அளவிலான தொகுப்புடன், இந்த புதிய உள்ளடக்கத் தொகுப்பு Zee 5-ன் ஆங்கில பொழுதுபோக்கு பிரிவில் ஒரு புதிய, துணிச்சலான அத்தியாயத்தைத் தொடங்குகிறது.

அதே நேரத்தில், Free 5 தனது விரிவான பொழுதுபோக்கு அனுபவங்களில் ஒன்றாக, புதிய துணிச்சலான அடையாளத்துடன் மறுவடிவமைக்கப்படுகிறது. முற்றிலும் புதிய Free 5, Series, Movies, Korean மற்றும் Chinese dramas, anime, news, micro dramas மற்றும் துடிப்பான creator ecosystem என பரந்த அளவிலான பொழுதுபோக்கு உள்ளடக்கங்களை ஒருங்கிணைக்கிறது. இதுவரை இல்லாத அளவில் அதிகமான மொழிகள், வகைகள், வடிவங்கள் மற்றும் குரல்களுடன், புதுப்பிக்கப்பட்ட Free 5 பார்வையாளர்களுக்கு முற்றிலும் இலவசமாக, எந்தவித சந்தாவும் தேவையின்றி, விரிவான பொழுதுபோக்கு உலகத்தைத் தேடி, ஆராய்ந்து, ரசிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. இந்த விரிவுபடுத்தப்பட்ட அனுபவம், Zee 5-ல் பல்வேறு வகையான பார்வையாளர்களை அணுகவும், அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப விளம்பரங்களை வழங்கவும் விளம்பரதாரர்களுக்கு குறிப்பிடத்தக்க புதிய வாய்ப்புகளையும் உருவாக்குகிறது.

Tejkarran Singh Bajaj, Business Head – Zee 5 India and AI & Innovation கூறுகையில்,
“Zee 5-ன் அடுத்த கட்டம் என்பது பொழுதுபோக்கை எளிதாகக் கண்டறியக்கூடியதாகவும், மிகவும் பொருத்தமானதாகவும், மேலும் திருப்திகரமானதாகவும் மாற்றுவதாகும். ஸ்மார்ட்டான தனிப்பயனாக்கம், AI-ன் ஆழமான பயன்பாடு மற்றும் மேலும் உள்ளுணர்வுடன் கூடிய உள்ளடக்கத் தேடல் ஆகியவற்றுடன், மொபைல் மற்றும் Connected TV தளங்களில் தயாரிப்பு அனுபவத்தை நாங்கள் மறுவடிவமைத்துள்ளோம். ஏழு மொழிகளில் பிரீமியம் திரைப்படங்கள் மற்றும் தொடர்கள், வளமான தொலைக்காட்சி உள்ளடக்கம், விளையாட்டுகள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு, Live TV மற்றும் செய்திகள் ஆகியவற்றை ஏற்கனவே வழங்கி வரும் நிலையில், உலகளாவிய சினிமாவை இந்திய பார்வையாளர்களிடம் கொண்டு வரும் ஆங்கில உள்ளடக்கத் தொகுப்புடன் உள்ளடக்கத்தின் ஆழத்தை மேலும் விரிவுபடுத்துகிறோம். அதேபோல், அதிக மொழிகள், வகைகள் மற்றும் creator ecosystem-ஐ உள்ளடக்கிய புதுப்பிக்கப்பட்ட Free 5-ஐ அறிமுகப்படுத்துகிறோம். விளம்பரதாரர்களைப் பொறுத்தவரை, இந்த விரிவான உள்ளடக்கத் தொகுப்பு, மொழிகள், உள்ளடக்க வகைகள் மற்றும் பார்வை நேரங்களின் அடிப்படையில் தனித்துவமான பார்வையாளர் குழுக்களுடன் தொடர்பு கொள்ள வளமான தளத்தை உருவாக்குகிறது. தயாரிப்பு மற்றும் உள்ளடக்கத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பரிணாமம், பார்வையாளர்களுக்கு அதிக தேர்வுகள், அதிக ஆழம் மற்றும் அவர்கள் விரும்புவதை எளிதாகக் கண்டறியும் வழியை வழங்குகிறது.”

Pramod Prakash, Chief Technology Officer, Zee Entertainment Enterprises Ltd., கூறுகையில்,
“ஒரு ஸ்ட்ரீமிங் தளம் நூற்றுக்கணக்கான சிறிய தொடர்புகளின் மூலம் அனுபவிக்கப்படுகிறது. அந்த ஒவ்வொரு தொடர்பும் பார்வையாளர்கள் சேவையைப் பற்றி உணரும் விதத்தை உருவாக்குகிறது. எனவே, தனித்தனி அம்சங்களை மட்டும் கருத்தில் கொள்ளாமல், முழுமையான அனுபவத்தையும் மறுபரிசீலனை செய்வதே எங்களின் நோக்கமாக இருந்தது. பயணத்தின் எந்த இடங்களில் பயனருக்கு அனுபவம் மேலும் இயல்பாகவும், விரைவாகச் செயல்படக்கூடியதாகவும், குறைந்த சிரமத்துடனும் இருக்க முடியும் என்பதை நாங்கள் கண்டறிந்தோம். இதன் மையத்தில், குடும்பத்தின் ஒவ்வொரு தலைமுறையினரும் தாங்கள் விரும்பும் பொழுதுபோக்கை எளிதாக அணுகக்கூடிய உள்ளுணர்வுடன் பயன்படுத்தக்கூடிய செயலி உள்ளது. தொழில்நுட்பம் பயனருக்கான சிரமங்களை அமைதியாக நீக்கி, பொழுதுபோக்கை மையமாக்க வேண்டும் என்பதே இந்த மறுவடிவமைப்பின் எளிய தயாரிப்பு தத்துவமாகும். பல்வேறு சாதனங்கள், வடிவங்கள் மற்றும் சூழல்களில் பார்வை அனுபவம் தொடர்ந்து பரவி வரும் நிலையில், எதிர்காலத்தில் பார்வையாளர்கள் பொழுதுபோக்கை அனுபவிக்கும் விதத்திற்கு ஏற்ப மேலும் தகவமைத்துக்கொள்ளக்கூடிய, நம்பகமான மற்றும் தயாராக இருக்கும் வகையில் Zee 5-ஐ உருவாக்கி வருகிறோம்.”

Zee 5 பற்றி:

Zee 5 என்பது இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாகவும், தெற்காசிய உள்ளடக்கங்களுக்கான உலகளாவிய சாளரமாகவும் திகழ்கிறது. 190-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள பார்வையாளர்களை இது சென்றடைகிறது. Zee Entertainment Enterprises Ltd.-ன் டிஜிட்டல் பொழுதுபோக்கு தளமான Zee 5, மொழிக்கு முன்னுரிமை அளிக்கும் தள அனுபவம், hyper-local உள்ளடக்கம், மொழி சார்ந்த தொகுப்புகள் மற்றும் ஏழு மொழிகளில் ஆழமான தனிப்பயனாக்கப்பட்ட அனுபவங்கள் என்ற கொள்கையின் அடிப்படையில் இயங்குகிறது. அவை Hindi, Tamil, Telugu, Bengali, Malayalam, Kannada மற்றும் Marathi ஆகிய மொழிகளாகும். மேலும், பல்வேறு மொழிகள் மற்றும் வகைகளில் துணிச்சலான கதைகள், தனித்துவமான படைப்பாளர்களின் குரல்கள், பிரபலமான Franchise-கள் மற்றும் தனித்துவமான கதைசொல்லல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, இந்தியாவின் துணிச்சலான கதைகளுக்கான தளமாக Zee 5 விளங்குகிறது.

Movies, Series, Live Sports, AI-powered storytelling, Animation மற்றும் Kids’ Entertainment என விரிவான உள்ளடக்க நூலகத்துடன், Zee 5 பல்வேறு மொழிகளில் அமைந்த பொழுதுபோக்கு மற்றும் FIFA World Cup 2026™ மற்றும் 2030, Bundesliga, Serie A மற்றும் Coppa Italia போன்ற நேரடி விளையாட்டு அனுபவங்களுக்கான தளமாகத் திகழ்கிறது.

விநோத உலகத்தை அறிமுகப்படுத்தும் “ட்ரோன்ஸ்”

GM Morgan Films நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் R. ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகி வரும் வித்தியாசமான சர்ரியலிஸ்ட் ஃபேண்டஸி திரைப்படம் “ட்ரோன்ஸ்”. இப்படத்தின் மூன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் தற்போது வெளியாகி, ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

வித்தியாசமான கற்பனை உலகம், ஹாரர் மற்றும் ஃபேண்டஸி அம்சங்கள் கலந்த கதைக்களம் ஆகியவை “ட்ரோன்ஸ்” படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

கனவுகளில் மட்டுமே நிகழக்கூடிய விசித்திரமான சம்பவங்கள் நிஜ உலகில் நடந்தால் எப்படி இருக்கும் என்ற சுவாரஸ்யமான கேள்வியை மையமாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மேட் சயின்டிஸ்ட், டிடெக்டிவ், ஏஞ்சல், சூனியக்காரி மற்றும் பல புதிரான சம்பவங்கள் நிறைந்த கற்பனை உலகில் பயணிக்கும் வகையில், தமிழ் சினிமாவில் அரிதாக முயற்சிக்கப்படும் சர்ரியலிஸ்ட் ஃபேண்டஸி பாணியில் இப்படம் உருவாகியுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள மூன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் படத்தின் விநோதமான உலகத்தை அறிமுகப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. முதல் போஸ்டரில், அடர்ந்த காடு, முழுநிலவு, மர்மமான கோட்டை, வௌவால்கள் மற்றும் தேவதை போன்ற உருவங்களுக்கு நடுவே கதாநாயகி காட்சியளிப்பதன் மூலம் ஒரு மாயாஜால ஃபேண்டஸி உலகம் உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டாவது போஸ்டரில், படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் ஒன்றாக இடம்பெற, அருகில் ட்ரோன், மர்மமான வயதான பெண், வித்தியாசமான சாதனங்கள் என சயின்ஸ் ஃபிக்ஷன் மற்றும் ஃபேண்டஸி கலந்த உலகை வெளிப்படுத்துகிறது. மூன்றாவது போஸ்டரில், எண்ணற்ற பொம்மைகள் சூழ்ந்த இருண்ட அறையில் ஆக்ரோஷமான தோற்றத்தில் ஒரு சூனியக்காரி இடம்பெற்றிருப்பது படத்தின் ஹாரர் மற்றும் திகில் அம்சங்களை மிரட்டலாக எடுத்துக்காட்டுகிறது. மூன்று போஸ்டர்களிலும் மூன்று விதமான மனநிலைகளையும், கதையின் பல அடுக்குகளையும் காட்சிப்படுத்தி படக்குழு ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது.

இப்படத்தில் முன்னணி நடிகைகளான சித்தி இத்னானி, அஞ்சலி நாயர் ஆகியோருடன் தேவதர்ஷினி, பரிதாபங்கள் புகழ் டிராவிட் செல்வம், விஜய் டிவி புகழ் குரேஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ் மற்றும் இப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகும் ஆர்ஜே தீபக் உள்ளிட்டோர் கதையின் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ஒளிப்பதிவை ஜெயந்த் சேது மாதவன் மேற்கொண்டுள்ளார். ஹரி S.R. இசையமைக்க, சதீஷ் சூர்யா படத்தொகுப்பை கவனித்துள்ளார். R. கிஷோர் கலை இயக்கத்தையும், ஹர்ஷிகா ரமேஷ் ஆடை வடிவமைப்பையும் மேற்கொண்டுள்ளனர். மேலும், தொழில்நுட்ப ரீதியாகவும் பல புதிய முயற்சிகளுடன் படம் உருவாகி வருகிறது.

இதற்கிடையில், முன்னணி தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான ஃபைவ் ஸ்டார் நிறுவனத்தின் தயாரிப்பாளர் செந்தில், “ட்ரோன்ஸ்” திரைப்படத்தை தன் குடும்பத்துடன் பார்த்து மிகவும் ரசித்ததையடுத்து, உடனடியாக இப்படத்தின் முழு உரிமையை வாங்கியுள்ளார். இதன்மூலம் ஃபைவ் ஸ்டார் நிறுவனம் சார்பில் இப்படத்தை இந்தியாவெங்கும் பல மொழிகளில் வெளியிடுகிறார். வித்தியாசமான கதைக்களம் கொண்ட இப்படத்தின் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கை, “ட்ரோன்ஸ்” படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், “ட்ரோன்ஸ்” படத்தின் இசை மற்றும் டிரெய்லர் விரைவில் வெளியாகவுள்ளது. ஃபேண்டஸி, சயின்ஸ் ஃபிக்ஷன், ஹாரர் என பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைத்து உருவாகி வரும் இப்படம், வித்தியாசமான திரையனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கண்டு ரசிக்கலாம்.

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் ‘சண்டக்காரி’!

‘த்ரிஷ்யம்’ இயக்குநர் ஜீத்து ஜோசப் கதையில் உருவாகியுள்ள நகைச்சுவை கலந்த ரொமான்டிக் காமெடி குடும்பத் திரைப்படம் ‘சண்டக்காரி’. பிரபல இயக்குநர் ஆர். மாதேஷ் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள இப்படம், முன்னணி சினிமா தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்புடன் உருவாகியுள்ளது.

காதல், காமெடி, மோதல், குடும்ப உணர்வுகள் என அனைத்து அம்சங்களையும் சரியான அளவில் கலந்து உருவாகியுள்ள ‘சண்டக்காரி’, ரசிகர்களுக்கு ஒரு முழுமையான என்டர்டெயின்மென்ட் விருந்தாக அமையும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

லண்டனில் இயங்கி வரும் முன்னணி சாப்ட்வேர் நிறுவனத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை நகர்கிறது. ‘சிவாஜி’ படப் புகழ் ஸ்ரேயா, அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரியாக நடித்துள்ளார். அதே நிறுவனத்தில் பணிபுரியும் சாப்ட்வேர் ஊழியராக விமல் நடித்துள்ளார்.

அதிகாரி – ஊழியர் என இருவரும் எதிரெதிர் துருவங்களில் இருக்கும் நிலையில், இவர்களுக்கு இடையே உருவாகும் சம்பவங்களும், மோதல்களும், எதிர்பாராத திருப்பங்களும் கதையை சுவாரஸ்யமான பாதையில் நகர்த்துகின்றன. காதல், கோபம், ஈகோ என இருவருக்கும் இடையேயான ‘சண்டை’தான் படத்தின் மிகப்பெரிய சுவாரஸ்யமாக அமைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

இந்த இருவருக்கும் இடையில் மாட்டிக்கொண்டு தவிக்கும் கதாபாத்திரத்தில் சத்யன் நடித்துள்ளார். ஒவ்வொரு சூழ்நிலையிலும் விமல் – ஸ்ரேயா இடையேயான மோதலில் சிக்கிக்கொள்ளும் அவரது கதாபாத்திரம், படத்தின் காமெடி ஹைலைட்டுகளில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விமல் – ஸ்ரேயா – சத்யன் கூட்டணி திரையில் மிகப்பெரிய காமெடி கலாட்டாவை உருவாக்கியுள்ளதாக படக்குழுவினர் கூறுகின்றனர்.

மேலும், பிரபு குணச்சித்திர வேடத்தில் சிறப்பாக நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கே.ஆர். விஜயா மற்றும் புன்னகை பூ கீதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, படத்திற்கு கூடுதல் சிறப்பை சேர்த்துள்ளார். கிரேன் மனோகர் நகைச்சுவை வேடத்தில் கலக்கியுள்ளார்.

இவர்களுடன் ‘கடலோர கவிதைகள்’ புகழ் ரேகா, ‘மஹதீரா’ வில்லன் நடிகர் தேவ் கில், உமா பத்மநாபன், மகாநதி சங்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

படத்தின் தொழில்நுட்பக் குழுவிலும் முன்னணி கலைஞர்கள் இணைந்துள்ளனர். பிரபல இசையமைப்பாளர் அம்ரீஷ் இசையமைத்துள்ளார். குருதேவ் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பையும், ஐய்யப்பன் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். சண்டைக்காட்சிகளுக்கு கணல் கண்ணன் சண்டைப்பயிற்சி அமைத்துள்ளார். ஹபீப் நடனங்களை வடிவமைத்துள்ளார்.

காதலில் ஆரம்பித்து… சண்டையில் சிக்கி… காமெடியில் கலக்கும் ‘சண்டக்காரி’!

விமல் – ஸ்ரேயா இணைந்து நடிக்கும் இந்த புதிய கூட்டணி, ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய கலகலப்பான ரொமான்டிக் காமெடி படமாக உருவாகியுள்ள ‘சண்டக்காரி’, விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது.

‘கட்டா குஸ்தி 2’ வெற்றியை கொண்டாடிய படக்குழு… 50வது நாள் நன்றி அறிவிப்பு விழா!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள, விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவான ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் ஆதரவுடன் 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவான இப்படத்தின் இந்த சாதனையை கொண்டாடும் வகையில், படக்குழுவினர் 50வது நாள் வெற்றி விழா மற்றும் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.

இந்த நிகழ்வில் படக்குழுவினர் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை நேரில் சந்தித்து, திரைப்படத்திற்கு அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தனர். படத்தின் வெற்றிக்காக உழைத்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவைச் சேர்ந்தவர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு நினைவுப் பரிசுகளாக சீல்டுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினர், ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தின் பயணம் மற்றும் அதன் வெற்றியைப் பற்றிய தங்களது அனுபவங்களையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வினில் இயக்குநர் செல்லா அய்யாவு பேசுகையில், “கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ஆம் தேதி ‘கட்டா குஸ்தி 2’ படத்திற்குப் பூஜை போட்டு படப்பிடிப்பைத் தொடங்கினோம். இன்று செப்டம்பர் 3-ஆம் தேதி, படம் வெளியாகி 50 நாட்கள் ஓடிய வெற்றியைக் கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. தற்போதைய காலகட்டத்தில் ஒரு படம் தொடங்கி, ஒரு ஆண்டுக்குள் வெளியாகி, 50 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் ஓடுவது பெரிய விஷயம். இந்த வெற்றியை வழங்கிய ரசிகர்களுக்கும், படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். முன்பெல்லாம் 100, 175, 200 நாட்கள் ஓடிய படங்களின் விளம்பரங்களைப் பத்திரிகைகளில் பார்ப்பது வழக்கம். காலப்போக்கில் திரையரங்கு வெளியீட்டு முறைகளும், ரசிகர்கள் படம் பார்க்கும் தளங்களும் மாறிவிட்ட நிலையில், ‘கட்டா குஸ்தி 2’ 50 நாட்களைக் கடந்துள்ளது எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது,”

மேலும், “இந்த வெற்றியை நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருடனும் இணைந்து கொண்டாடி, அவர்களுக்கு சீல்டு வழங்குவது எனக்கு மிகவும் நெகிழ்ச்சியான தருணம். எனது உதவி இயக்குநர் காலத்தில் ஒரு படத்தின் வெற்றிக்காக எனக்குக் கிடைத்த நினைவுப் பரிசை புகைப்படத்துடன் சேர்த்து வீட்டில் வைத்திருந்தேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநராக நான் உருவாக்கிய படம் 50 நாட்கள் ஓடி, மீண்டும் ஒரு வெற்றிக்கான நினைவுப் பரிசைப் பெறுவது தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த சீல்டை எனது வீட்டிற்கு எடுத்துச் சென்று, அந்த பழைய நினைவுப் பரிசுக்கு அருகில் வைக்கப் போகிறேன். அதனால்தான் இந்த தருணம் எனக்கு மிகவும் சிறப்பானதாகவும் உணர்வுபூர்வமானதாகவும் இருக்கிறது,”

“இந்தப் படத்தின் மீது ஆரம்பம் முதலே விஷ்ணு விஷால் மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருந்தார். கதை எழுதுவதிலிருந்து நடிகர், தொழில்நுட்பக் கலைஞர்களைத் தேர்வு செய்வது, படப்பிடிப்பு, தயாரிப்பு, வெளியீடு மற்றும் விளம்பரப் பணிகள் என ஒவ்வொரு கட்டத்திலும் அவர் தீவிரமாக செயல்பட்டார். ஒரு நடிகராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் இந்தப் படத்தை வெற்றிபெறச் செய்ய முழுமையான ஈடுபாட்டுடன் உழைத்தார். இந்தப் படம் இன்று பெற்றுள்ள வெற்றியில் அவருடைய பங்கு மிக முக்கியமானது. அவருக்கு எனது சிறப்பு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், ‘கட்டா குஸ்தி’ ஒரு பிராண்டாக உருவாக முக்கியமான அடையாளமாக இருக்கும் ஐஸ்வர்யா லட்சுமியின் பங்களிப்பும் மிகப்பெரியது,” இப்படத்திற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி.

தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம். ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தின் 50வது நாள் வெற்றிக் கொண்டாட்டத்தை இன்று சிறப்பாக நடத்துகிறோம். இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள் மற்றும் அனைத்துத் துறைகளைச் சேர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் இங்கு வந்திருக்கிறார்கள். அவர்களைக் கௌரவிக்கும் வகையில் சீல்டு வழங்குவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கலைஞர்களுக்கு சீல்டுகளை வழங்குவதற்காக வந்துள்ள அருமை சகோதரர் அமைச்சர் ராஜ்மோகன் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், தொடர்ச்சியாக அமெரிக்கா மற்றும் கனடாவில் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு இன்று காலை சென்னை வந்த பத்மஸ்ரீ பிரபுதேவா அவர்கள், ஓய்வெடுக்கக்கூட நேரமில்லாமல் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளார். எங்களது நட்பின் காரணமாக அவர் வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் உள்ளது,” என்றார்.

“இந்தப் படத்தின் நடிகரும் தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால், இந்தப் படம் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பதற்காக மிகக் கடினமாக உழைத்தார். தயாரிப்பிலிருந்து படத்தின் வெளியீடு மற்றும் விளம்பரப் பணிகள் வரை அனைத்திலும் அவரது பங்களிப்பு மிகப்பெரியது. இன்றைய காலகட்டத்தில் ஒரு படம் ஒரு வாரம் திரையரங்குகளில் ஓடினாலே வெற்றியாகக் கருதப்படும் சூழ்நிலை உள்ளது. ஆனால், ‘கட்டா குஸ்தி 2’ 50 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் ஓடி வருகிறது. முன்பெல்லாம் 100 நாள், 175 நாள், 200 நாள் என திரைப்படங்களின் வெற்றியைக் கொண்டாடுவார்கள். தற்போது அதுபோன்ற கொண்டாட்டங்களுக்கு வாய்ப்பு குறைந்துவிட்ட நிலையில், இந்த 50வது நாள் விழாவை நடத்தும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த விஷ்ணு விஷாலுக்கு எனது மனமார்ந்த நன்றி. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் இன்னும் சிறப்பாக அமைய வேண்டும் என்று நான் விரும்பினேன்; அதேபோல் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது,” என்றார்.

“இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமான இயக்குநர் செல்லா அய்யாவுக்கு எனது மனமார்ந்த நன்றி. படத்தின் தொடக்கத்திலேயே அவர் உருவாக்கிய புரோமோ பெரிய வரவேற்பைப் பெற்றது; அப்போதே இந்தப் படம் நிச்சயம் வெற்றியடையும் என்ற நம்பிக்கை எனக்கு வந்தது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் பல திரைப்படங்களைத் தயாரித்து வருகிறோம்; அடுத்தடுத்த மாதங்களில் எங்களது புதிய படங்களும் வெளியாக உள்ளன. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ரம்யா கிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றி. படத்தின் கிளைமாக்ஸை சிறப்பாக்கியவர், இந்த 50வது நாள் விழாவிலும் கலந்து கொண்டு கொண்டாட்டத்தை நிறைவு செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படத்தின் வெற்றியை உலகம் முழுவதும் கொண்டு சென்ற பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் இல்லாமல் இந்த வெற்றி சாத்தியமாகியிருக்காது. அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி,” என்றார்.

விஷ்ணு விஷால் பேசுகையில், “அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பல படங்களுக்கு கிடைக்காத ஒரு வாய்ப்பு, நமது ‘கட்டா குஸ்தி 2’ படத்திற்கு கிடைத்திருப்பது சந்தோஷம். இந்த வெற்றிக்கு உழைத்த ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது நன்றி. ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகவும் எனது நன்றியைத் தெரிவிப்பேன். என்னைப் பொறுத்தவரை ரசிகர்கள்தான் ஒரு படத்தின் வெற்றியை தீர்மானிக்கும் முக்கியமான சக்தி. அவர்களுக்குப் படம் பிடித்துவிட்டால் அதை எந்த உயரத்திற்குக் கொண்டு செல்வார்கள் என்பதற்கு ‘கட்டா குஸ்தி’ ஒரு சிறந்த உதாரணம். படத்திற்கு ஆதரவளித்த ஊடக நண்பர்களுக்கும் நன்றி. படத்திற்கு மட்டுமல்லாமல், எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும், திரைப்பயணத்திலும் நீங்கள் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கு எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன். இந்த விழாவில் கலந்து கொண்ட ரம்யா கிருஷ்ணன் மேடத்திற்கும் எனது சிறப்பு நன்றி. 15 நிமிட சிறப்புத் தோற்றம் என்று முதலில் அவரிடம் கூறினேன். காட்சிகளை அனுப்பிப் படிக்கச் சொன்னபோதும், என் மீதான அன்புக்காகவே அவர் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்தார். அவரது கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெற்ற வரவேற்பு எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார்.

“இந்தப் படத்தின் உயிர்நாடியாக இருந்த ஜாராவை ரசிகர்கள் திரையரங்குகளில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினார்கள். அவரும் இந்த வெற்றியின் முக்கியமான பகுதியாக இருக்கிறார். இந்த வெற்றியைக் கொண்டாட அனைவரும் ஒன்றாக இருப்பது கூடுதல் மகிழ்ச்சி. ஐசரி கணேஷ் சாருக்கு எனது மனமார்ந்த நன்றி. இந்த வெற்றியை 50வது நாளில் கொண்டாடுவோம் என்று நான் அவரிடம் உறுதியளித்திருந்தேன். தொடர்ந்து எங்களுக்கு அளித்து வரும் ஆதரவுக்கும், ஒவ்வொரு நிகழ்ச்சியையும் சிறப்பாக நடத்தி இந்த வெற்றியைக் கொண்டாடுவதற்காக எடுக்கும் முயற்சிக்கும் நன்றி. சினிமாவில் வெற்றி கிடைப்பது எளிதான விஷயம் அல்ல; அது அரிதாகக் கிடைக்கும் ஒன்று. அப்படி ஒரு வெற்றி கிடைக்கும்போது அதை முழுமையாகக் கொண்டாட வேண்டும் என்பதே என் எண்ணம். இந்த வெற்றியை மிகச் சிறப்பாகக் கொண்டாடும் ஐசரி சாருக்கு மீண்டும் நன்றி. இந்த நிகழ்வை சிறப்பிக்க வந்த ராஜ்மோகன் சாருக்கும் நன்றி. அதேபோல், பிரபுதேவா சார் சிறுவயதில் இருந்தே எனது மனதின் மிகப்பெரிய இடத்தில் இருப்பவர். ‘சிக்கு புக்கு’ பாடலுக்கு நடனமாடி பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கிறேன். ஒரு காலத்தில் நடனக் கலைஞராக வேண்டும் என்பதே எனது ஆசை. கால் காயம் காரணமாக அந்தப் பயணத்தைத் தொடர முடியவில்லை என்றாலும், பிரபுதேவா சார் எனது சிறுவயது முன்னுதாரணமாக இருந்தார். அவரது பாடல்களையும் நடனங்களையும் பின்பற்றி வளர்ந்தவன் நான், இன்று அவர் இந்த விழாவில் கலந்து கொண்டது மிகப்பெரிய மகிழ்ச்சி,”.

“செல்லா எனக்கு எப்போதுமே மிகவும் ஸ்பெஷலான இயக்குநர். எனது திரைப்பயணத்தில் ஒரு இயக்குநருடன் நீண்ட பயணம் அமைந்தது என்றால் அது செல்லாவுடன்தான். அவரது வளர்ச்சி மிகவும் இயல்பாகவும் அழகாகவும் அமைந்து வருகிறது. அவர் இன்னும் நீண்ட காலம் இதேபோன்று சிறப்பான வெற்றிகளைப் பெற வேண்டும் என்று விரும்புகிறேன். குறிப்பாக குடும்ப ரசிகர்களை திரையரங்குகளுக்கு அழைத்து வரும் இதுபோன்ற படங்களை தொடர்ந்து உருவாக்க வேண்டும். இப்படிப்பட்ட இயக்குநர்கள் தற்போது மிகவும் குறைவாக இருக்கிறார்கள். நல்ல குடும்பப் படங்களை தொடர்ந்து கொடுங்கள். ‘கட்டா குஸ்தி 3’ படத்தையும் விரைவில் உருவாக்கலாம். வேல்ஸ் நிறுவனம் சார்பில் தொடர்ந்து கிடைத்து வரும் ஆதரவுக்கும் குஷ்மிதாவுக்கும் எனது நன்றி. இந்த வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை மனமார்ந்த நன்றி,” என்றார்.

தயாரிப்பாளர் குஷ்மிதா கணேஷ் பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம். இன்று ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் 50வது நாள் கொண்டாட்டத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி. இந்த நிகழ்வில் எங்களது சிறப்பு விருந்தினராக மாண்புமிகு அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் கலந்து கொண்டுள்ளார். அதேபோல், சிறப்பு விருந்தினராக பத்மஸ்ரீ பிரபுதேவா சாரும் கலந்து கொண்டுள்ளார். ஒரு படம் வெளியாகி முதல் வாரத்தில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறுவது ஒரு விஷயம். ஆனால், அந்தப் படம் திரையரங்குகளில் 50 நாட்கள் ஓடுவது மிகவும் சிறப்பான விஷயம். திரையரங்கு வெளியீட்டைத் தொடர்ந்து, ஜூலை 31-ஆம் தேதி ஓடிடியிலும் வெளியான இப்படம் இந்திய அளவில் டாப் 10 பட்டியலில் தொடர்ந்து டிரெண்டாகி வருவது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார்.

“இந்த வெற்றிக்குப் பின்னால் இருக்கும் ஒவ்வொருவரையும் கொண்டாட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிகழ்வை நடத்துகிறோம். ஒரு வெற்றிப் படத்தின் 50வது நாள் கொண்டாட்டத்தில் வழங்கப்படும் இந்த விருது வெறும் நினைவுப் பரிசு மட்டுமல்ல; படத்திற்காக உழைத்த ஒவ்வொருவருக்கும் பெருமையையும் அங்கீகாரத்தையும் அளிக்கும் ஒரு தருணமாகும். வெற்றி விழா நடைபெற்ற நாளிலேயே, படத்தில் பங்காற்றிய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரையும் ஒன்றாக அழைத்து கௌரவிக்க வேண்டும் என்று என் தந்தை முடிவு செய்திருந்தார். அந்த எண்ணம் இன்று இந்த விழாவின் மூலம் நிறைவேறுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது,” என்றார்.

“‘கட்டா குஸ்தி 2’ படத்தின் வெற்றிக்காக உழைத்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. உங்கள் ஒவ்வொருவரின் அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் இந்த வெற்றியின் பின்னால் இருக்கிறது. இன்று வழங்கப்படும் இந்த அங்கீகாரம் உங்களுக்குப் பெருமையான தருணமாக அமையும் என்று நம்புகிறோம். இது ஒரு வெற்றியின் கொண்டாட்டமாக மட்டுமல்லாமல், இனிவரும் பல வெற்றிகளுக்கான அழகான தொடக்கமாகவும் அமைய வேண்டும். அனைவருக்கும் நன்றி, வணக்கம்,” என்றார்.

நடிகை ரம்யா கிருஷ்ணன் பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம். ரொம்ப நாட்களுக்குப் பிறகு இதுபோன்ற ஒரு வெற்றி விழாவில் கலந்து கொள்கிறேன். விஷ்ணு விஷால், செல்லா அய்யாவு மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துகள். முதல் பாகம் வெற்றி பெற்ற பிறகு, அதை விட சிறப்பாக இரண்டாம் பாகத்தில் என்ன செய்யப் போகிறார்கள் என்ற ஆவல் எனக்கு இருந்தது. இந்தப் படம் சிறப்பாக அமைய வேண்டும் என்றும், அதில் நானும் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்றும் விரும்பினேன். இன்று படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, படக்குழுவினர் அனைவருக்கும் நல்ல பெயரைப் பெற்றுத் தந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி. இந்தக் காலகட்டத்தில் ஒரு படம் 50 நாட்கள் ஓடுவது என்பது மிகவும் அரிதான விஷயம்,” என்றார்.

“ஐசரி கணேஷ் சாருக்கு ஒரு மிடாஸ் டச் இருக்கிறது; அவர் தொடும் விஷயங்கள் எல்லாம் வெற்றியாக மாறுகின்றன. அந்த அதிர்ஷ்டம் இந்தப் படத்திற்கும் கிடைத்திருப்பது மகிழ்ச்சி. இந்தப் படக்குழுவின் ஒரு பகுதியாக இருந்ததை மிகவும் ரசித்தேன். செல்லா அய்யாவுவின் எழுத்தில் இயல்பாகவே நகைச்சுவை கலந்த ஒரு தனித்தன்மை இருக்கும். இந்தப் படத்தில் பணியாற்றியது மிகவும் ஜாலியான அனுபவமாக இருந்தது. படத்திற்கு இவ்வளவு பெரிய ஆதரவு அளித்த ரசிகர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. ‘கட்டா குஸ்தி 3’ படத்திலும் விரைவில் சந்திப்போம்,” என்றார்.

நடிகர் பிரபுதேவா பேசுகையில், “அனைவருக்கும் எனது வணக்கம். அமைச்சர் அவர்களுக்கும், என் அண்ணன் போன்ற ஐசரி கணேஷ் சாருக்கும், விஷ்ணு விஷால், இயக்குநர் செல்லா அய்யாவு, குஷ்மிதா உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள். வெளிநாட்டில் இருந்தபோது கணேஷ் சார் என்னை அழைத்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கூறினார். எந்த நேரமாக இருந்தாலும் அவரது அழைப்புக்காக வந்துவிடுவேன் என்று சொன்னேன். அந்த அளவுக்கு எங்களுக்குள் ஒரு அண்ணன்-தம்பி போன்ற உறவு இருக்கிறது. விஷ்ணு விஷாலின் நலனில் அக்கறை கொண்டவர்களில் நானும் ஒருவன். இந்தப் படத்திற்கு மட்டுமல்லாமல், தனது ஒவ்வொரு படத்திற்கும் அவர் இதே உழைப்பையும், 200 சதவீத அர்ப்பணிப்பையும் கொடுத்து வருகிறார். அவர் இன்னும் பெரிய உயரங்களை அடைய வேண்டும் என்பது எனது விருப்பம். அவரது மனைவி ஜ்வாலா கட்டாவின் மிகப்பெரிய ரசிகன் நான். அவர் உலகத் தரம் வாய்ந்த பேட்மிண்டன் வீராங்கனை,” என்றார்.

“இன்றைய காலகட்டத்தில் ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கி, அதையும் வெற்றிப் படமாக மாற்றுவது மிகவும் கடினமான விஷயம். அந்த சவாலை இயக்குநர் செல்லா அய்யாவு சிறப்பாகச் செய்திருக்கிறார். முதல் பாகத்தைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்திலும் வெற்றி பெற்றிருப்பது பாராட்டுக்குரியது. ரம்யா கிருஷ்ணன் மேடம் தனது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தில் நடித்த மற்ற கலைஞர்கள் அனைவரும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். இசையமைப்பாளர் ஷான் ரோல்டனுக்கும் எனது வாழ்த்துகள். ‘கட்டா குஸ்தி 2’ படக்குழுவினர் அனைவரும் தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற வேண்டும்,”.

“குஷ்மிதாவை சிறு வயதில் இருந்தே பார்த்திருக்கிறேன். இன்று அவர் நிறுவனத்தின் பொறுப்புகளை ஏற்று அடுத்த தலைமுறையாக வளர்ந்து வருவதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் இந்த நிறுவனத்தை இன்னும் சிறப்பாக வழிநடத்த வேண்டும் என்பது எனது வாழ்த்து. நீண்ட நாட்களுக்குப் பிறகு இதுபோன்ற வெற்றி விழாவிலும், கலைஞர்களுக்கு சீல்டு வழங்கும் நிகழ்விலும் கலந்து கொள்வது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. குறிப்பாக ஒரு முக்கியமான இடத்தில் இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்தி, படத்தின் வெற்றியை அனைவருடனும் பகிர்ந்து கொள்வது மிகவும் சிறப்பு. என்னை அழைத்த ஐசரி கணேஷ் சாருக்கு நன்றி. ‘கட்டா குஸ்தி 2’ படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்,” என்றார்.

அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், “அனைவருக்கும் மாலை வணக்கம். தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவுக்கே ஒரு சகாப்தமானவர், இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று அனைவராலும் கொண்டாடப்படும் பத்மஸ்ரீ பிரபுதேவா மாஸ்டர் இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி. அவருடன் பணியாற்றியபோது பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. படப்பிடிப்பு தளத்தில் அவர் அமைதியாக இருப்பார். ஆனால், கேமரா முன்பு நின்றுவிட்டால் அந்தக் கதாபாத்திரமாகவே முழுமையாக மாறிவிடுவார். இடைவேளையின்போது கூட செல்போனை பயன்படுத்தாமல், புத்தகம் படிப்பது, செஸ் விளையாடுவது என தனது நேரத்தைப் பயன்படுத்துவார். அவரது தொழில்முறை அர்ப்பணிப்பும் ஒழுக்கமும் அனைவருக்கும் ஒரு பாடமாகும். வேல்ஸ் நிறுவனம் சார்பில் அவருக்கு வழங்கப்படும் இந்த கௌரவம், அவர்மீது வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடாகும்.

“எங்கள் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அண்ணன் ஒரு உண்மையான சினிமா காதலர். அவருக்குள் எப்போதும் ஒரு குழந்தைத்தனம் இருக்கும். யாராவது உதவி கேட்டால் உடனடியாக அதை நிறைவேற்ற வேண்டும் என்று நினைக்கும் பெரிய மனம் கொண்டவர். சினிமா மற்றும் கல்வித் துறை என இரண்டிலும் தொடர்ந்து பல சேவைகளை செய்து வருகிறார். ‘கட்டா குஸ்தி 2’ 50 நாட்களைக் கடந்து ஓடுவது இந்தக் காலகட்டத்தில் மிகப்பெரிய சாதனை. இன்றைக்கு ஐந்து நாட்கள், ஏன் ஒரு நாளில் ஐந்து காட்சிகள் வெற்றிகரமாக ஓடுவதே சவாலான சூழ்நிலையில், 50 நாட்கள் என்பது படக்குழுவுக்கு கிடைத்த பெரிய மணிமகுடம். இப்படிப்பட்ட வெற்றிக்கு விஷ்ணு விஷால் போன்ற கடின உழைப்பாளியும், படத்தின் மீது முழுமையான நம்பிக்கை கொண்ட நடிகரும் தேவை. தனது நடிப்புக்கு இணையாக சக நடிகர், நடிகைகள் சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் அவரது மனதை நான் பாராட்டுகிறேன். படத்தின் ஒவ்வொரு விஷயத்திலும், குறிப்பாக விளம்பரப் பணிகளிலும் அவர் காட்டிய அர்ப்பணிப்பு அபாரமானது.

“ஐஸ்வர்யா லட்சுமி இந்தப் படத்தில் மிகச்சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். அவருடன் சிறுமி ஜாராவின் பங்களிப்பும் படத்திற்கு பெரிய பலமாக அமைந்தது. இவ்வளவு திறமையான கலைஞர்கள் மத்தியில் அவர் காட்டிய தன்னம்பிக்கையும் நடிப்பும் பாராட்டுக்குரியது. படத்தில் நடித்த அனைத்து கலைஞர்களும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர். அதேபோல், திரையில் தெரியாத தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பும் இந்த வெற்றிக்கு மிக முக்கியமானது. இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் இசை, மல்யுத்தக் காட்சிகளை சிறப்பாக உருவாக்கிய ஸ்டண்ட் குழு, அதை தத்ரூபமாகப் பதிவு செய்த ஒளிப்பதிவாளர், சிறப்பாக வடிவமைத்த எடிட்டர் என ஒவ்வொருவரின் உழைப்பும் படத்தின் பலமாக அமைந்துள்ளது. அந்த அனைவரையும் மேடைக்கு அழைத்து கௌரவிக்க வேண்டும் என்று நினைத்து இந்த விழாவை நடத்தும் தயாரிப்பு நிறுவனம் மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஆகியோருக்கும் என் வாழ்த்துகள். என் அண்ணன் நம் தமிழக முதல்வர் மாண்புமிகு C. ஜோசப் விஜய் அவர்களின் ஆட்சியில் திரைத்துறைக்கு தேவையான அனைத்து உதவிகளும் கோரிக்கைகளும் செயல்படுத்தப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன் நன்றி” என்றார்.

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம். ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் 50வது நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் இந்த தருணம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை இவ்வளவு அழகாக அமைத்து, இந்த மகிழ்ச்சியான தருணத்தை எனக்குக் கொடுத்த அனைவருக்கும் நன்றி. விஷ்ணு விஷால் எனக்கு ஒரு அற்புதமான சக நடிகர். படம் வெளியான பிறகு, அவரை ஒரு தயாரிப்பாளராகவும் இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு நடிகராகவும், தயாரிப்பாளராகவும் அவர் மீது வைத்திருக்கும் மரியாதை மேலும் அதிகரித்துள்ளது. இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்ததற்கு நன்றி. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜ்மோகன் அவர்களுக்கும், சிறுவயதில் இருந்தே பாடல்கள் மூலம் பார்த்து ரசித்த பிரபுதேவா சாருக்கும் எனது நன்றி. நடனமாட வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருந்தது. நடனக் கலைஞர்களின் திறமையை எப்போதும் வியப்புடன் ரசிப்பேன். இந்த விழாவில் பிரபுதேவா சார் கலந்து கொண்டது மிகவும் சிறப்பானது,”.

“செல்லா சார், ‘கட்டா குஸ்தி’ படத்தில் கீர்த்தி கதாபாத்திரத்திற்காக என்னைத் தேர்வு செய்ததற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. நான் எத்தனை படங்களில் நடித்தாலும், கீர்த்தி கதாபாத்திரத்திற்கு கிடைக்கும் வரவேற்பும், அந்தக் கதாபாத்திரம் மூலம் மக்களிடம் நான் பெற்ற அன்பும் எப்போதும் எனக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். நீங்கள் நான் பணியாற்றிய மிகவும் அன்பான இயக்குநர்களில் ஒருவர். குஷ்மிதா, நீங்கள் எனக்கு ஒரு நல்ல ஆதரவாக இருந்திருக்கிறீர்கள். தயாரிப்புத் தரப்பில் ஒரு பெண்ணாக எனக்கு நல்ல நண்பராகவும் ஆதரவாகவும் நீங்கள் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் சிறப்பான திரைப்படங்களைத் தயாரிக்க வேண்டும்; நாம் இன்னும் பல படங்களில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன். இந்தப் படத்தின் வெற்றிக்காக 100 சதவீதம் உழைத்த எனது ஒட்டுமொத்த குழுவினருக்கும் நன்றி. நீங்கள் அனைவரும் உங்கள் பணியை சிறப்பாகச் செய்ததால்தான் இன்று இந்த 50வது நாள் கொண்டாட்டத்தில் நாம் இருக்கிறோம்.

“என்னை அழகாகத் திரையில் காட்டியவர்கள், கீர்த்தி கதாபாத்திரத்தை சிறப்பாக உருவாக்கியவர்கள், சண்டைக் காட்சிகளை அற்புதமாக அமைத்தவர்கள் என ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. ரூச்சி, ஸ்ரவந்தி, பரத், பாஸ்கர் சார், என் அன்புக்குரிய ஜாரா மற்றும் மீனு மிஸ் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.

நடிகை மோக்ஷா பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம். தமிழ் மக்களின் அன்புக்கும், தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கும் எனது மனமார்ந்த நன்றி. உங்கள் அன்பும் ஆதரவும்தான் ‘கட்டா குஸ்தி 2’ படத்தை இவ்வளவு பெரிய வெற்றியாக மாற்றியுள்ளது. இனியும் இதேபோன்ற ஆதரவு எனக்குத் தேவை. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இவ்வளவு பெரிய தயாரிப்பு நிறுவனத்தின் ஒரு பகுதியாக நடிப்பேன் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஒரு சிறிய எதிர்பார்ப்புடன் வந்த எனக்கு, இன்று வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவான படத்தில் இடம்பெற்றிருப்பது இன்னும் கனவு போலவே இருக்கிறது. இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்த ஐசரி கணேஷ் சார், விஷ்ணு விஷால் சார் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது நன்றி,” என்றார்.

“‘மீனாட்சி’ கதாபாத்திரத்திற்காக என்னைத் தேர்வு செய்த இயக்குநர் செல்லா சாருக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இந்தக் கதாபாத்திரம் மக்களிடம் எந்த அளவுக்கு சென்றடைந்துள்ளது என்பதைப் பார்க்கும்போது இன்னும் நம்ப முடியவில்லை. தற்போது என்னைப் பார்க்கும் பலரும் ‘மீனாட்சி’ என்றே அழைக்கிறார்கள். தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல், ஓடிடி வெளியீட்டுக்குப் பிறகு பிற மொழி ரசிகர்களும் அந்தக் கதாபாத்திரத்தை அடையாளப்படுத்துவது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. நான் உண்மையில் மீனாட்சி போல நீண்ட தலைமுடியுடன் இருப்பவள் அல்ல; நான் மோக்ஷா என்பதை மக்களுக்கு நம்ப வைப்பதே இப்போது சற்று சவாலாக இருக்கிறது. அந்த அளவுக்கு அந்தக் கதாபாத்திரத்தை மக்கள் ஏற்றுக்கொண்டதற்குக் காரணம், இயக்குநர் என் மீது வைத்த நம்பிக்கையே,‘மீனாட்சி’ கதாபாத்திரம் தனித்துவமான ஒரு அடையாளத்தை வழங்கியுள்ளது. நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜ்மோகன் அவர்களுக்கும், நான் விரும்பும் மிகப்பெரிய நடிகர்களில் ஒருவரான பிரபுதேவா சாருக்கும் நன்றி. வேல்ஸ் குடும்பம், ஒட்டுமொத்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், ஊடக நண்பர்கள் மற்றும் தமிழ் ரசிகர்கள் என அனைவருக்கும் எனது அன்பும் நன்றியும்,” என்றார்.

குழந்தை நட்சத்திரம் ஜாரா பேசுகையில்..,
“இந்த சீல்டைப் பெறுவதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்தில் என்னைத் தேர்வு செய்த எனது பெற்றோர், இயக்குநர், தயாரிப்பாளர், விஷ்ணு விஷால் சார் மற்றும் ஐஸ்வர்யா மேம் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றி. படப்பிடிப்பு தளத்தில் என்னை அன்பாகவும், வசதியாகவும் உணர வைத்த எனது சக நடிகைகளான மோக்ஷா மேம், ஐஸ்வர்யா மேம் மற்றும் ரித்தி மேம் ஆகியோருக்கும் நன்றி. இந்த வாய்ப்பையும் அன்பையும் அளித்த அனைவருக்கும் என் நன்றி,” என்றார்.

நடிகர் யோகி பாபு பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம். இயக்குநர் செல்லா அய்யாவுவுடன் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தில் இருந்து தொடர்ந்து பயணித்து வருகிறேன். அந்தப் படத்தில் எனக்கு முழு நீளக் கதாபாத்திரம் கொடுத்தவர், இந்தப் படத்தில் சிறிய பகுதியாக இருந்தாலும் முக்கியமான ஒரு இடத்தில் என்னை பயன்படுத்தியிருக்கிறார். ‘கட்டா குஸ்தி’ முதல் மற்றும் இரண்டாம் பாகத்துடன் முடிந்துவிடும் என்று நினைத்திருந்த நிலையில், மூன்றாம் பாகத்திற்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் இறுதியில் அந்த வசனத்தை வைத்தது செல்லா சாரின் திட்டம்தான். அதற்காக அவருக்கு எனது நன்றி,”.

“50வது நாள் வெற்றியைக் கொண்டாடுவது தற்போது மிகவும் அரிதாகிவிட்டது. இந்தப் படத்திற்காக 50வது நாள் விழாவை நடத்தி, கலைஞர்களைக் கௌரவிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோல் 100வது நாள் விழாவையும் கொண்டாடும் வாய்ப்பு கிடைக்க வேண்டும். அனைத்து தயாரிப்பாளர்களும் தங்கள் வெற்றிப் படங்களுக்காக இதுபோன்ற விழாக்களை நடத்தி கலைஞர்களை அழைத்துக் கொண்டாடினால் மகிழ்ச்சியாக இருக்கும். படப்பிடிப்பிலிருந்து நேரம் ஒதுக்கி இதுபோன்ற வெற்றி விழாக்களுக்கு வருவதும் எங்களுக்கு ஒரு மகிழ்ச்சிதான். அமைச்சர் ராஜ்மோகன், பிரபுதேவா மாஸ்டர், ஐசரி கணேஷ் சார் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி,” என்றார்.

முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திற்கும் கிடைத்துள்ள வரவேற்பு படக்குழுவினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. சுப்ரா, ஆர்யன் ரமேஷ் மற்றும் இஷான் சக்சேனா ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ள இப்படத்தின் 50வது நாள் கொண்டாட்டம், படக்குழுவினரின் நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் சிறப்பான நிகழ்வாக அமைந்தது.

Minister Launches Balaji Seshadri’s Books on Belief Systems andHuman Resource Management

Chennai: Thiru. P. Venkataramanan, Hon’ble Minister for Food & Civil Supplies,
Government of Tamil Nadu, launched Author Balaji Seshadri’s books Mindful Mondays
(English) and Thingalum Thelivum (Tamil) at a grand ceremony in Chennai. The first copies
of the books were received by prominent industry leaders, including Mr. GR
Radhakrishnan (Managing Director, GRT Group), Mr. K.T. Srinivasa Raja (Managing
Director, A2B Group), Mr. Johnson Asaria (CMD, Sathya Agencies), Mr. Murali
Srinivasan (MD, Techno Products), Mr. Guru Prasad Makam (Partner, Guru & Jana), Mr.
R. Boomee Naathan (Chairman, Chennais Amirta Group), and Mr. A.R. Seshadri.
Speaking on the occasion, Minister Venkataramanan emphasized that effective human
resource management is vital for entrepreneurial success and sustainable corporate growth.
He praised Balaji Seshadri for offering practical, actionable solutions tailored for young
professionals, business leaders, and organizations aiming to build robust operational
frameworks.
Mr. Balaji Seshadri, Founder and Chief Belief Officer of Belief Systems, outlined the core
intent behind the publications. He highlighted how the books address crucial workplace
dynamics, promoting employer-employee relations while establishing consistency,
accountability, operational excellence, delegation, development, and value creation. He
remarked that Tamil Nadu’s thriving ecosystem reflects the strong entrepreneurial spirit of its
people, particularly across industrial and manufacturing sectors.
What began as strategic advisory conversations between Mr. Seshadri and executive leaders
has now culminated into these twin volumes. The content serves as a guide for startups,
enterprise founders, and business owners looking to navigate organizational challenges,
rebuild momentum, and achieve sustainable growth.
About Belief Systems: Belief Systems is a premium people and organizational
transformation firm connected with a network of over 350+ organizations across industries.
The firm specializes in strengthening leadership capabilities, resolving structural challenges,
and driving long-term clarity for business owners.

‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ – திரைப்பட விமர்சனம்

காதல் என்பது எப்போதும் ஒரே மாதிரியான மனிதர்களுக்குள் மட்டுமே உருவாக வேண்டியதில்லை. எதிர்பாராத ஒரு சந்திப்பு, இரு வாழ்க்கைகளையும் எப்படி மாற்றுகிறது என்பதைக் கொஞ்சம் யதார்த்தமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் சொல்ல முயற்சிக்கும் படம் ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’. டி. ஆண்டனி எழுதி, இயக்கி, எடிட் செய்து, கதாநாயகனாகவும் நடித்துள்ள இப்படத்தில் மதுமிதா தாஸ் கதாநாயகியாக நடித்துள்ளார்.

கார்த்திக் வாழ்க்கையில் ஒரு வெறுமையுடன், மதுப்பழக்கத்தில் சிக்கித் தவிக்கும் இளைஞன். தனிமையைப் போக்குவதற்காக பாலியல் தொழிலில் இருக்கும் மதுவை சந்திக்கிறான். ஆனால் அவர்களுக்கிடையிலான உறவு எதிர்பார்த்த பாதையில் செல்லாமல், மெல்ல ஒரு உண்மையான புரிதலாகவும் காதலாகவும் மாறுகிறது. உடல் சார்ந்த உறவைத் தாண்டி இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக மாறும் விதம்தான் படத்தின் மையம்.

மதுவின் வருகைக்குப் பிறகு கார்த்திக்கின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் படத்தின் முக்கியமான பகுதி. ஒரு கட்டத்தில் இருவரும் ஒன்றாக வாழத் தொடங்குகின்றனர். திருமணத்தை நோக்கி அவர்களது உறவு நகரும் நிலையில், கார்த்திக்கின் குடிப்பழக்கமும் கோபமும் அவர்களுக்கிடையே பிரிவை ஏற்படுத்துகிறது. அதன் பிறகு இந்த உறவு எந்த முடிவை நோக்கிச் செல்கிறது என்பதே இரண்டாம் பாதியின் உணர்வுப்பூர்வமான பயணம்.

டி. ஆண்டனி கார்த்திக் கதாபாத்திரத்தில் இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். குறிப்பாக தனிமை, காதல், குற்ற உணர்வு, இழப்பு போன்ற உணர்வுகளை அதிகப்படியான நாடகத்தன்மையின்றி வெளிப்படுத்த முயற்சித்திருக்கிறார். மதுமிதா தாஸ் படத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒருவர். மதுவின் வலி, எதிர்பார்ப்பு, காதல், ஏமாற்றம் ஆகியவற்றை கண்களிலும் உடல்மொழியிலும் வெளிப்படுத்தியிருப்பது கவனம் பெறுகிறது. இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரிதான் படத்தின் உணர்வுப்பூர்வமான மையமாக இருக்கிறது.

படத்தின் இன்னொரு சிறப்பு உரையாடல்கள். மிகப்பெரிய வசனங்களைக் காட்டிலும் சாதாரண மனிதர்கள் பேசுவது போன்ற இயல்பான உரையாடல்கள் கதாபாத்திரங்களின் உறவை நம்பும்படி செய்கின்றன. சிறிய சம்பவங்களின் மூலமாகவே கதாபாத்திரங்களின் மனநிலையைச் சொல்லும் முயற்சி பாராட்டுக்குரியது.

பியட்ரோ வில்லானியின் ஒளிப்பதிவு படத்திற்கு அழகான காட்சி மொழியை வழங்குகிறது. அமைதியான காட்சிகளில்கூட கதாபாத்திரங்களின் மனநிலையை பிரதிபலிக்கும் விதத்தில் காட்சிகள் அமைந்துள்ளன. ஜோயி ரெடாவின் பின்னணி இசையும், ஜெய்கர் ஹரிநாத் மற்றும் அசோக் ஸ்ரீதரனின் பாடல்களும் கதையின் உணர்வுகளுக்கு பொருத்தமாக அமைந்துள்ளன.

அதேநேரத்தில், இது வேகமான திரைக்கதை கொண்ட காதல் படமல்ல. Slice-of-life பாணியில் மெதுவாக நகரும் கதை என்பதால் சில இடங்களில் பொறுமை தேவைப்படுகிறது. குறிப்பாக பெரிய திருப்பங்கள் அல்லது வழக்கமான commercial moments-ஐ எதிர்பார்ப்பவர்களுக்கு படத்தின் மெதுவான அணுகுமுறை சற்று சலிப்பை ஏற்படுத்தலாம்.

ஆனால் படத்தின் நோக்கம் அதுவல்ல. இரண்டு குறைபாடுள்ள மனிதர்கள் ஒருவருக்கொருவர் எப்படி ஆறுதலாக மாறுகிறார்கள், காதல் ஒருவரின் வாழ்க்கையை எப்படி மாற்ற முடியும் என்பதையே படம் மையமாகக் கொண்டுள்ளது. அந்த வகையில், உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட ஒரு நேர்மையான காதல் கதையாக ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ கவனம் பெறுகிறது.

பெத்லகேம் குடும்ப யூனிட் – திரைப்பட விமர்சனம்

நிவின் பாலி – மமிதா பைஜு கூட்டணியில், ‘பிரேமலு’ புகழ் கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் வெளியாகியிருக்கும் காதல் கலந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’. வயது வித்தியாசம் கொண்ட காதலை மையமாக வைத்திருந்தாலும், அதைச் சுற்றியுள்ள குடும்பம், நண்பர்கள், அக்கம் பக்கத்தினர் என ஒரு முழுமையான உலகத்தை உருவாக்கியிருப்பது படத்தின் முக்கியமான பலம்.

முண்டக்கயம் பகுதியில் தனது குடும்பத்துடன் வசிக்கும் ஆஷ்லி, கருகுட்டிக்கு குடிபெயர்கிறார். அங்கு அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜஸ்டினுடன் அறிமுகம் ஏற்படுகிறது. ஜஸ்டினுக்கும் ஆஷ்லிக்கும் இடையே உருவாகும் எதிர்பாராத காதல், அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வாழ்க்கையிலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

படத்தின் மிகப்பெரிய பலம் கதையை விட கதாபாத்திரங்கள். ஜஸ்டின், ஆஷ்லி மட்டுமல்லாமல் அவர்களைச் சுற்றியுள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்துவமான குணத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன. அக்கம் பக்கத்து மனிதர்களின் இயல்பான பேச்சு, சிறு சிறு சண்டைகள், கிண்டல்கள், எதிர்பாராத காமெடி என பல காட்சிகள் நம்முடைய சொந்த ஊர் அல்லது தெருவில் நடப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன.

நிவின் பாலி ஜஸ்டின் கதாபாத்திரத்தில் மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார். வயது வந்தும் திருமணம் ஆகாமல் இருக்கும் ஒரு சாதாரண மனிதனின் மனநிலை, காதல் வந்த பிறகு ஏற்படும் தயக்கம், எதிர்பார்ப்பு ஆகியவற்றை அழகாக வெளிப்படுத்துகிறார். மமிதா பைஜு ஆஷ்லியாக தனது வழக்கமான இயல்பான நடிப்பால் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கிறார். இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி படத்தின் முக்கியமான ஈர்ப்பு.

குறிப்பாக, வயது வித்தியாசம் கொண்ட காதலை ஆபாசமாகவோ அல்லது செயற்கையாகவோ காட்டாமல், முதிர்ச்சியுடனும் நகைச்சுவையுடனும் கையாண்டிருப்பது இயக்குநர் கிரிஷ் ஏ.டியின் சிறப்பு.

காமெடி படத்தின் இன்னொரு பெரிய பலம். ரோஷன் ஷனவாஸ், சங்கீத் பிரதாப், ஷ்யாம் மோகன் உள்ளிட்ட துணை நடிகர்கள் பல இடங்களில் இயல்பான காமெடியை உருவாக்குகிறார்கள். குறிப்பாக கதாபாத்திரங்களின் குணாதிசயங்களில் இருந்தே காமெடி உருவாவதால், பெரும்பாலான நகைச்சுவைக் காட்சிகள் திணிக்கப்பட்டதாக தெரியவில்லை.

அஜ்மல் சாபுவின் ஒளிப்பதிவு கேரளாவின் இயற்கை அழகையும் அந்தப் பகுதியின் வாழ்க்கை முறையையும் அழகாக பதிவு செய்கிறது. விஷ்ணு விஜய்யின் இசை படத்தின் காதல் மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்களுக்கு கூடுதல் அழகு சேர்க்கிறது.

படத்தில் பெரிய திருப்பங்களையோ, பரபரப்பான சம்பவங்களையோ எதிர்பார்த்துச் சென்றால் ஏமாற்றம் ஏற்படலாம். ஏனெனில் இது மிகப்பெரிய கதையை சொல்ல முயற்சிப்பதைவிட சாதாரண மனிதர்களின் வாழ்க்கையில் இருக்கும் சிறிய சந்தோஷங்கள், காதல், குடும்ப உறவுகள் மற்றும் அன்றாட நிகழ்வுகளை ரசிக்க வைக்கும் படமாக இருக்கிறது. சில இடங்களில் கதை மெதுவாக நகர்வதும், இறுதிப்பகுதியில் சில விஷயங்கள் சற்று அவசரமாக முடிக்கப்படுவதும் குறையாகத் தெரிகிறது.

மொத்தத்தில், ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ என்பது மிகப்பெரிய புதுமையான காதல் கதை அல்ல; ஆனால் அதை சொல்லும் விதத்தில் இருக்கும் இயல்பும், கதாபாத்திரங்களின் நெருக்கமும், நகைச்சுவையும் படத்தை ரசிக்க வைக்கின்றன. குடும்பத்துடன் அமர்ந்து சிரித்து, காதலை ரசித்து, தியேட்டரை விட்டு மனதை லேசாக எடுத்துச் செல்லக்கூடிய ஒரு feel-good திரைப்படம்.

‘4 இடியட்ஸ்’ – திரைப்பட விமர்சனம்

கொரோனா லாக்டவுன் காலத்தை பின்னணியாகக் கொண்டு, நான்கு நண்பர்களின் திருட்டு முயற்சி எப்படி ஒரு பயங்கரமான சிக்கலில் மாட்டிக்கொள்கிறது என்பதைக் காமெடி, கிரைம், த்ரில்லர் கலந்து சொல்லும் படமாக உருவாகியுள்ளது ‘4 இடியட்ஸ்’. சஜோ சுந்தர் முருகேசன் இயக்கத்தில் புகழ், பிரக்யா நயன், கும்கி அஷ்வின், ரவி மரியா, வின்சென்ட் அசோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கால் வருமானம் இல்லாமல் தவிக்கும் நான்கு நண்பர்கள், கடைசியாக ஒரு பெரிய திருட்டை செய்துவிட்டு வாழ்க்கையை மாற்றிக்கொள்ள முடிவு செய்கிறார்கள். அப்போது ஒரு பங்களாவில் பெருமளவு பணம் இருப்பதாக கிடைக்கும் தகவல் அவர்களுக்கு ஆசையை ஏற்படுத்துகிறது. பணத்தை கொள்ளையடிக்க பங்களாவுக்குள் நுழையும் நால்வரும், அங்கு சிக்கிக்கொண்ட பிறகுதான் தாங்கள் எதிர்பாராத ஒரு பெரிய ஆபத்தில் மாட்டிக்கொண்டிருப்பதை உணர்கிறார்கள்.

பங்களாவுக்குள் நுழைந்ததும் கதை சாதாரண கொள்ளைக் கதையாக இல்லாமல் survival thriller ஆக மாறுகிறது. அங்கிருக்கும் காவலாளி ரவி மரியா கதாபாத்திரம், நான்கு பேருக்கும் தொடர்ந்து சிக்கல்களை ஏற்படுத்துவது படத்தின் முக்கியமான சுவாரஸ்யம். வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கும் நால்வரும் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் அடுத்தடுத்த காட்சிகளின் மையம்.

புகழ் வழக்கமான தனது காமெடி பாணியை சற்று குறைத்து, கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையில் இயல்பாக நடித்திருப்பது பாராட்டுக்குரியது. கும்கி அஷ்வின், இந்திரன் மற்றும் திடியன் ஆகியோரும் தேவையான இடங்களில் சிரிக்க வைக்கிறார்கள். குறிப்பாக நான்கு நண்பர்களுக்கிடையேயான காட்சிகள் படத்தின் முதல் பாதிக்கு கலகலப்பை கொடுக்கின்றன.

ரவி மரியா மற்றும் வின்சென்ட் அசோகன் வில்லத்தனமான கதாபாத்திரங்களில் கவனம் பெறுகிறார்கள். குறிப்பாக ரவி மரியாவின் கதாபாத்திரம் படம் முழுவதும் இருப்பதால், அவரைச் சுற்றி உருவாகும் மர்மமும் பதற்றமும் கதைக்கு வலு சேர்க்கிறது.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஒரே வீட்டுக்குள் நடப்பதால், ஒளிப்பதிவாளருக்கு சவாலான களமாக அமைந்திருக்கிறது. அந்த இடத்தையே பல்வேறு கோணங்களில் காட்டி சலிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முயற்சி செய்திருக்கிறார்கள்.

ஆனால் படத்தின் முக்கியமான குறை திரைக்கதையின் வேகத்திலும் காமெடியின் consistency-யிலும் இருக்கிறது. சில காமெடி காட்சிகள் நன்றாக வேலை செய்தாலும், சில இடங்களில் அவை செயற்கையாகத் தோன்றுகின்றன. குறிப்பாக இரண்டாம் பாதியில் காமெடியை விட survival மற்றும் குற்றப் பின்னணி அதிகமாகும்போது, ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட எதிர்பார்ப்பு சற்று குறைகிறது.

அதேபோல், கதாபாத்திரங்களுக்கு இன்னும் கொஞ்சம் ஆழம் கொடுத்திருந்தால், அவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்து மீது பார்வையாளர்களுக்கு அதிகமான உணர்வுப்பூர்வமான ஈடுபாடு ஏற்பட்டிருக்கும்.

இருப்பினும், காமெடியுடன் தொடங்கி கிரைம் த்ரில்லராக மாறும் வித்தியாசமான களமும், பங்களாவுக்குள் சிக்கிக்கொள்ளும் நான்கு பேரின் போராட்டமும் படத்தை முழுமையாக ரசிக்க வைக்கின்றன. இறுதியில் படம் சொல்ல வரும் கருத்தும் கவனிக்கத்தக்கதாக இருக்கிறது.