Breaking
June 5, 2026

Cinema

சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட கிராமத்து விளையாட்டு திரைப்படமான ‘பெத்தி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பெத்தி’, ஒரு கிராஸ்ஓவர் தடகள வீரரின் ஊக்கமூட்டும் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. கிராமத்து விளையாட்டு பின்னணியுடன் ஆக்ஷன், உணர்வுகள் மற்றும் வெற்றிக்கான போராட்டத்தை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம், ரசிகர்களிடையே ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பான்-இந்தியா அளவில் உருவாகியுள்ள ‘பெத்தி’ திரைப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வரும் ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு தலைமையிலான படக்குழு நாடு முழுவதும் தீவிரமான புரமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சென்னையில் நடைபெற்ற சந்திப்பில், படக்குழுவினர் கலந்து கொண்டு, திரைப்படம் குறித்த பல சுவாரஸ்ய தகவல்கள் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வினில்… ஒளிப்பதிவாளர் ஆர். ரத்னவேலு பேசியதாவது..,

“நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களைச் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி. சேது, வாரணம் ஆயிரம், எந்திரன் போன்ற படங்கள் எனது திரைப்பயணத்தில் முக்கிய மைல்கற்களாக அமைந்தது போல, பெத்தி திரைப்படமும் எனக்கு மிகவும் முக்கியமான படமாக இருக்கும்.

இயக்குநர் புச்சி பாபு இந்தப் படத்திற்காக அற்புதமான திரைக்கதையை எழுதியிருக்கிறார். ஒரு திரைப்படம் காகிதத்தில் எழுதப்படலாம். ஆனால் அதற்கு உயிர் கொடுப்பது இசை, காட்சியமைப்பு மற்றும் சிறந்த நடிப்புதான். பெத்தி படத்தில் இவை அனைத்தும் மிகச் சிறப்பாக ஒன்றிணைந்துள்ளன. இந்தப் படம் நிச்சயமாக ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இது வெறும் படம் பார்த்து வெளியே வரும் அனுபவமாக இருக்காது. திரையரங்கில் முழுமையாக மூழ்கடிக்கும் அனுபவமாக இருக்கும். அதே நேரத்தில், படத்தில் ஒரு வலுவான கருத்தும் இருக்கிறது. படம் முடிந்து வெளியே வந்த பிறகும் அதன் தாக்கம் நீண்ட நாட்கள் உங்கள் மனதில் இருக்கும்.

சிவராஜ் குமார் சார் இந்தப் படத்தில் அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். ஒரு குரு என்ற கதாபாத்திரத்திற்கு அவர் அளித்திருக்கும் வலிமை மிகவும் சிறப்பானது. திவ்யேந்துவும் தனது அனுபவத்தையும் திறமையையும் வெளிப்படுத்தியிருக்கிறார். அவரின் நடிப்பை படம்பிடிக்கும்போது சரியான கோணத்தைத் தேர்வு செய்யவே கேமரா தேடியது என்று சொல்லலாம்.

இந்தப் படத்தின் வெற்றிக்காக எனது உதவி இயக்குநர்கள் முதல் ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரும் தங்களது முழு பங்களிப்பையும் வழங்கியுள்ளனர்.

ராம் சரண் பற்றி குறிப்பாக சொல்ல வேண்டும். இந்தப் படத்திற்காக அவர் முழுமையாக தன்னை அர்ப்பணித்திருக்கிறார். ஒரு தோற்றத்திலிருந்து மற்றொரு தோற்றத்திற்கு மாறுவது என்பது வெறும் உடை மாற்றம் அல்ல. முழுமையான உடல் மாற்றம். கிரிக்கெட் வீரராகத் தோன்ற வேண்டிய கட்டத்தில் இருந்து, பின்னர் மண்ணின் மணம் வீசும் ஒரு கிராமத்து இளைஞனாகவும், அதன் பிறகு உடற்கட்டுடன் கூடிய வேறொரு பரிமாணத்திலும் அவர் தன்னை மாற்றிக் கொண்டார். அதற்காக தினமும் பல மணி நேரங்கள் கடுமையாக பயிற்சி செய்து உழைத்தார். இன்று அனைவரும் அவரது தோற்றத்தைப் பாராட்டுகிறார்கள் என்றால், அதன் பின்னால் மிகப்பெரிய அர்ப்பணிப்பும் ஒழுக்கமும் இருக்கிறது. பின்னர் கதையின் மற்றொரு கட்டத்தில் அவரது வாழ்க்கை கீழிறங்கும் தருணங்களிலும், அதற்கேற்றவாறு தனது தோற்றத்தையும் நடிப்பையும் முழுமையாக மாற்றியுள்ளார். இது ராம் சரணின் மிகச் சிறந்த கதாபாத்திரங்களில் ஒன்றாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஒவ்வொரு விளையாட்டையும் கற்றுக்கொண்டு, அதற்கான ஒழுக்கத்தைப் பின்பற்றி அவர் இந்தக் கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ளார்.

மேலும், இசைப்புயல் A. R. ரஹ்மான் சார் எங்களுடன் மீண்டும் இணைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி. எந்திரன் படத்திற்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் உருவாகியுள்ளது. அவரது இசையும் இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கும்.இந்தப் படத்தை அனைவரும் திரையரங்கில் கண்டு ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.

நடிகர் திவ்யேந்து சர்மா பேசியதாவது..,

“இங்கு இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. குறிப்பாக, பெத்தி திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் நான் அறிமுகமாக இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது.

ஒரு நடிகராக என் கம்ஃபர்ட் ஜோனை விட்டு வெளியே வந்து, புதிதாக ஏதாவது முயற்சி செய்வதற்கான அருமையான வாய்ப்பாக இந்த படம் அமைந்தது. ஒவ்வொரு கலைஞரும் தங்களிடம் இருக்கும் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பை கனவு காண்பார்கள். அந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய படம் தான் பெத்தி.

இந்த பயணம் இயக்குநர் புச்சி பாபு சாருடன் தொடங்கியது. அவர் ஒரு சிறந்த மனிதர், சிறந்த இயக்குநர், அதைவிட சிறந்த நண்பர். இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியதற்கும், கதாபாத்திரத்தை என் பாணியில் வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை அளித்ததற்கும் அவருக்கு மனமார்ந்த நன்றி. அவருடன் பணியாற்றியது மிகவும் அழகான அனுபவமாக இருந்தது.

ராம் சரண் சார், உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. முதல் நாளிலிருந்தே நீங்கள் காட்டிய அன்பும் அரவணைப்பும் என்னை மிகவும் சுதந்திரமாக உணர வைத்தது. அந்த நினைவுகளை நான் எப்போதும் மனதில் வைத்திருப்பேன். ஒரு அற்புதமான மனிதராகவும், இணை நடிகராகவும் இருந்ததற்கு நன்றி.

இசைப்புயல் A. R. ரஹ்மான் சார் குறித்து என்ன சொல்வது? நீங்கள் ஒரு ஜாம்பவான். நீங்கள் இடம்பெற்றுள்ள ஒரு படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு மிகப்பெரிய கௌரவம். என் பெயர் உங்கள் பெயருடன் இணைக்கப்படுவது கூட பெருமையான விஷயமாக கருதுகிறேன்.

மேலும், சிவராஜ்குமார் சாரின் முன்னிலையில் நிற்பதே எனக்கு பெருமையாக இருக்கிறது. அவருடன் காட்சிகளில் இணைந்து நடிக்கவில்லை என்றாலும், அவரது சாதனைகள் மற்றும் ஆளுமை குறித்து நன்கு அறிந்திருக்கிறேன். அவரின் முன்னிலையில் இருப்பது கூட ஒரு கௌரவம்.

ஒளிப்பதிவாளர் ஆர். ரத்னவேலு சார் எனக்கு மிகவும் பிடித்தவர். இதை நான் பல பேட்டிகளிலும் கூறியிருக்கிறேன். ஒரு நடிகராக எனக்கு அவர் கொடுத்த நம்பிக்கையும், சுதந்திரமும் அளவிட முடியாதவை. இவ்வளவு அனுபவம் மிக்க ஒளிப்பதிவாளர் ஒருவருடன் இவ்வளவு எளிதாக பணியாற்ற முடியும் என்று நான் நினைத்ததே இல்லை.

நான் ஏதாவது புதிதாக செய்ய விரும்பினால், அதை எப்படி இன்னும் சிறப்பாக காட்சிப்படுத்தலாம் என்று அவர் யோசிப்பார். ‘இதை இப்படிப் படம்பிடிப்போம், இன்னொரு க்ளோஸ் ஷாட் எடுப்போம்’ என்று அவர் கொடுத்த ஒத்துழைப்பு எனக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருந்தது. அந்த அனுபவம் எப்போதும் எனக்கு மறக்க முடியாததாக இருக்கும்.

இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். அனைவருக்கும் நன்றி.”

இயக்குநர் புச்சி பாபு பேசியதாவது..,

எனக்கு சென்னை என்றால் மிகவும் பிடிக்கும். ஏனென்றால் எனக்கு மிகவும் பிடித்த பல கலைஞர்கள் இங்குதான் இருக்கிறார்கள். ஏ.ஆர். ரஹ்மான் சார், ரத்னவேலு சார், தேவி ஸ்ரீ பிரசாத் சார் என நான் மதிக்கும் பலர் சென்னையில் இருக்கிறார்கள். சென்னை என்பது வெறும் ஒரு நகரம் அல்ல, இங்கே சினிமாவே வாழ்கிறது. மக்கள் சினிமாவை நேசிக்கிறார்கள், சினிமா கலைஞர்களை மதிக்கிறார்கள்.

எனக்கு பிடித்த மூத்த ஆளுமைகள் அனைவரும் சென்னை பற்றிப் பெருமையாகப் பேசுவார்கள். அப்போது எனக்கு அதன் மகத்துவம் முழுமையாகப் புரியவில்லை. ஆனால் இப்போது இங்கு வரும்போதெல்லாம் ஒரு புனிதமான இடத்திற்குச் செல்வது போன்ற உணர்வு வருகிறது.

எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி சாரும் இங்கே இருக்கிறார். என்னுடைய முதல் திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார். எப்போதும் எனக்கு ஆதரவாக இருப்பதற்கும், சென்னை வரும்போதெல்லாம் அன்புடன் வரவேற்பதற்கும் அவருக்கு நன்றி.

பெத்தி பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது மிகவும் உணர்வுப்பூர்வமான படம். பார்வையாளர்களை முழுமையாக ஈர்த்துக் கொள்ளும் ஒரு அனுபவமாக இருக்கும். குறிப்பாக இரண்டாம் பாதியில் ராம் சரண் சார் கொடுத்திருக்கும் நடிப்பு மற்றும் அர்ப்பணிப்பை பார்த்தால் யாராலும் எளிதில் மறக்க முடியாது.

கடந்த சில நாட்களாக நான் சென்னையில் இருந்து படத்தை மீண்டும் மீண்டும் பார்த்து வருகிறேன். அதே நேரத்தில் ஹைதராபாத்திலும் சிறப்புக் காட்சிகள் நடக்கின்றன. படம் பார்த்த அனைவரும் தொலைபேசியில் அழைத்து பாராட்டி வருகிறார்கள். ‘மிகச் சிறந்த படம்’, ‘மிக அழகாக உருவாக்கியிருக்கிறீர்கள்’ என்று கூறுகிறார்கள். அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

இந்தப் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் ராம் சரண் சார் தான். பெத்தி என்றாலே எனக்கு ராம் சரண் தான் நினைவுக்கு வருகிறார். அவர் இந்தக் கதாபாத்திரத்திற்காக கொடுத்த உழைப்பு அளவிட முடியாதது. என்னை நம்பி இந்த வாய்ப்பை வழங்கியதற்காக அவருக்கு மனமார்ந்த நன்றி.

திவ்யேந்து சாரின் நடிப்பைப் பார்த்தபோது, விஜய் சேதுபதி சாரை நினைவுபடுத்தியது. சிறிய சிறிய விஷயங்களில்கூட அவர் காட்டிய நுணுக்கமான நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. இந்தப் படத்தில் இணைந்ததற்காக அவருக்கு நன்றி.

இசைப்புயல் A. R. ரஹ்மான் சார் பற்றி பேச வேண்டுமென்றால், அவரைப் பற்றி ஒரு புத்தகமே எழுதலாம். சிறுவயதிலிருந்தே அவருடைய இசைக்கு நான் மிகப்பெரிய ரசிகன். ஒருநாள் அவருடன் சேர்ந்து பணியாற்றுவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. ஆனால் இன்று அது நனவாகியுள்ளது. இந்தப் படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் அற்புதமாக வந்துள்ளன.

ரத்னவேலு சார் இந்தப் படத்தை உலகத் தரத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார். நான் எழுதிய ஒவ்வொரு காட்சிக்கும் அவர் உயிர் கொடுத்துள்ளார். அவரது ஒளிப்பதிவு இல்லாமல் இந்தப் படம் இப்படியாக உருவாகியிருக்காது.

மேலும், சிவராஜ்குமார் சார் இந்தப் படத்தில் ஒரு உண்மையான குருவாகத் தோன்றுகிறார். குரு-சிஷ்யன் உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்தப் படம் அழகாக வெளிப்படுத்துகிறது. அந்தக் கதாபாத்திரத்திற்கு அவர் அளித்திருக்கும் மதிப்பும், கம்பீரமும் படத்தின் முக்கிய பலமாக இருக்கும்.

இந்தப் படத்தை ரசிகர்கள் அனைவரும் திரையரங்கில் பார்த்து கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி.”

நடிகர் சிவராஜ்குமார் பேசியதாவது..,

முதலில் இயக்குநர் புச்சி பாபுவுக்கு நன்றி. இந்தப் படத்தில் குரு கதாபாத்திரம் பற்றி அவர் என்னிடம் கூறியபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதைவிட, ராம் சரணுடன் இணைந்து நடிக்கப் போகிறேன் என்ற செய்தி எனக்கு இன்னும் மகிழ்ச்சியை அளித்தது.

ராம் சரணையும், அவருடைய குடும்பத்தையும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மீது எனக்கு எப்போதும் ஒரு தனிப்பட்ட அன்பும் மரியாதையும் இருக்கிறது. அதனால் இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் உடனே வந்தது. புச்சி பாபு கதையைச் சொன்னவுடன் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. உடனே ஒப்புக்கொண்டேன்.

ஆனால் அதன் பிறகு எனக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. சிகிச்சைக்காக நான் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனால் இந்தப் படம் என்னால் செய்ய முடியாமல் போய்விடுமோ என்று நினைத்தேன். ஆனால் படக்குழுவினர் எனக்காக காத்திருந்தார்கள். அது என்னை மிகவும் நெகிழச் செய்தது. அதற்காக அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

இசைப்புயல் A. R. ரஹ்மான் சாரை நான் நீண்ட காலமாக அறிவேன். அவர் பின்னணி கலைஞராக இருந்த காலத்திலிருந்தே எனக்கு தெரியும். பின்னர் இசையமைப்பாளராக அவர் இசையை முற்றிலும் புதிய பரிமாணத்தில் கொண்டு சென்றார். பல சிறந்த இசையமைப்பாளர்கள் இருந்தாலும், ரஹ்மான் சார் தனித்துவமான பாணியில் தனி அடையாளத்தை உருவாக்கினார். ஆஸ்கார் விருதை வென்றது இந்திய இசைக்கே பெருமை சேர்த்த தருணம். அவருடைய இசையில் நான் நடித்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

ரத்னவேலு சாருடன் பணியாற்றிய அனுபவமும் சிறப்பானது. படப்பிடிப்பு தளத்தில் அவருடன் தமிழில் பேசிக்கொண்டே இருப்பேன். அவர் காட்டிய அன்பும், மரியாதையும், அர்ப்பணிப்பும் என்னை மிகவும் கவர்ந்தது. எங்களுக்குள் ஒரு சிறப்பு இணைப்பு உருவானது.

தயாரிப்பாளர் மற்றும் முழு படக்குழுவும் மிகச் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். இந்தப் படத்தைப் பார்த்தால் எங்களுக்குள் இருந்த உறவும், ஒற்றுமையும் உங்களுக்குப் புரியும்.

ராம் சரண் சாரின் உழைப்பைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். இந்தக் கதாபாத்திரத்திற்காக அவர் தனது உடலை மாற்றிக்கொண்ட விதம், எடுத்துக்கொண்ட முயற்சி, அர்ப்பணிப்பு அனைத்தும் அசாதாரணமானவை. அவரது நடிப்பும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும்.

இந்தப் படத்தை அனைவரும் விரும்புவார்கள் என்று நம்புகிறேன். பெத்தி படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். ஜூன் 4-ஆம் தேதி படம் வெளியாக இருக்கிறது. நீங்கள் எவ்வளவு ஆவலுடன் காத்திருக்கிறீர்களோ, நானும் அதே அளவு ஆவலுடன் காத்திருக்கிறேன்.நன்றி. வணக்கம்.

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் பேசியதாவது..,

சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு ராம் சரண் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது ஒரு விஷயம் எனக்கு மிகவும் தோன்றியது. ஒரு மிகப் பெரிய ஆலமரமான சிரஞ்சீவி சாரின் மகனாக இருந்து, அதே உயரத்தை எட்ட முடியுமா என்று பலர் கேள்வி எழுப்பியிருக்கலாம். ஆனால் ராம் சரண் அதையும் தாண்டி தன்னுடைய தனித்துவமான இடத்தை உருவாக்கியிருக்கிறார். அவர் இன்னொரு ஆலமரமாக வளர்ந்திருக்கிறார். அப்போது என் மகனும் அங்கே இருந்தான். நான் அவனிடம், ‘நீ என்னைவிட பெரியவனாக வரலாம்’ என்று சொன்னேன். அதற்கான உதாரணமாக ராம் சரணைச் சுட்டிக்காட்டினேன். இளம் தலைமுறைக்கு இப்படிப்பட்ட உதாரணங்கள் மிகவும் முக்கியம்.

ஒரு நாள் சுகுமார் சார் என்னைச் சந்திக்க விரும்புவதாகச் சொன்னார்கள். அதன்பிறகு புச்சி பாபுவை அறிமுகப்படுத்தினார்கள். அவர் இந்தக் கதையைப் பற்றி பேசினார். அந்த நேரத்தில் நான் பரிசோதனை முயற்சிகள் நிறைந்த படங்களிலும், வித்தியாசமான படைப்புகளிலும் அதிக கவனம் செலுத்தி வந்தேன். ஆனால் பெத்தி போன்ற ஒரு திரைப்படம் வந்தபோது அதில் இருக்கும் ஆற்றலும், அர்ப்பணிப்பும் என்னை ஈர்த்தது.

இந்த மாதிரியான பெரிய வர்த்தகப் படங்களில் நடிகர்கள் தங்கள் உயிரையே கொடுத்து உழைக்கிறார்கள். நடிப்பிலும், நடனத்திலும், ஒவ்வொரு காட்சியிலும் மிகப்பெரிய அர்ப்பணிப்பு இருக்கிறது. மேலும் இப்படங்கள் பல மொழிகளில் வெளியாகி உலகம் முழுவதும் சென்று சேர்கின்றன. அதனால் அனைவரின் உழைப்பும் மிகப் பெரிய அளவில் மக்களை சென்றடைகிறது.

ராம் சரண் இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்பட்டிருக்கிறார். ஒவ்வொரு ஃபிரேமிலும் அவரது உழைப்பு தெரியும். இசையும் காலத்திற்கு ஏற்ப தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. ரோஜா காலத்திலிருந்து இன்று வரை இசை மற்றும் திரைப்படத் துறையில் ஏற்பட்ட மாற்றங்களை நான் நேரில் பார்த்திருக்கிறேன். பலர் என்னிடம் இருந்து ஊக்கமடைந்திருக்கலாம். ஆனால் நானும் பலரிடமிருந்து ஊக்கமடைந்திருக்கிறேன்.

தெலுங்குத் திரைப்படத் துறையில் M. M. கீரவாணி, தேவி ஸ்ரீபிரசாத் , தமன் போன்ற திறமையான இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். தெலுங்கு சினிமா கடந்த சில ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. அவர்கள் மிகவும் லட்சியத்துடன் செயல்படுகிறார்கள். திரைப்படத் தயாரிப்பின் தரத்தையும் தொடர்ந்து உயர்த்தி வருகிறார்கள். அந்தத் துறையின் ஒரு பகுதியாக இருப்பதில் எனக்கு பெருமை. பெத்தி படத்தில் பணியாற்றிய அனுபவம் எனக்கு முதல் படம் செய்வது போன்ற புதிய உற்சாகத்தை அளித்தது.

இன்றுக் காலைதான் இந்தப் படத்தின் பின்னணி இசைப் பணிகளை முடித்தோம். முடிந்த பிறகும் ‘இதை இன்னும் சிறப்பாக செய்ய முடியுமா?’, ‘இன்னும் ஏதாவது சேர்க்க வேண்டுமா?’ என்ற ஆர்வம் எங்களுக்குள் இருந்தது. அந்த உற்சாகமே இந்தப் படத்தின் சிறப்பு. சிவராஜ்குமார் சாருக்கும், படக்குழுவில் உள்ள அனைவருக்கும் என் நன்றி. இந்தப் படத்தை உருவாக்கிய அனுபவத்தை நாங்கள் அனைவரும் மிகவும் ரசித்தோம். நீங்கள் அனைவரும் இந்தப் படத்தை விரும்புவீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.”

நடிகர் ராம் சரண் பேசியதாவது..,

“சென்னை பத்திரிகை நண்பர்களுக்கு வணக்கம். உண்மையாகச் சொன்னால், சில நேரங்களில் என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் போய்விடும். இப்போதும் அந்த மாதிரியான ஒரு தருணத்தில்தான் நான் இருக்கிறேன். சென்னை வந்தாலே எனக்கு எப்போதும் இப்படியான உணர்வு ஏற்படும்.

முதலில், இந்த மேடையில் இத்தனை ஜாம்பவான்கள் இருக்கிறார்கள். அவர்களின் முன்னிலையில் என்ன பேசுவது என்ற எண்ணமே வருகிறது. இருந்தாலும் இங்கு வந்திருக்கும் அனைவருக்கும், குறிப்பாக சென்னை மற்றும் தமிழ்நாடு ஊடக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

சென்னை எனக்கு எப்போதும் ஒரு சிறப்பான இடம். நான் பிறந்து வளர்ந்த நகரம் இது. அதனால் ஆர்.ஆர்.ஆர்., மகதீரா அல்லது வேறு எந்தப் படமாக இருந்தாலும், சென்னைக்கு வந்து புரமோஷன் செய்யும் போது வீட்டிற்கு வந்த உணர்வே கிடைக்கிறது. மேலும், என் அம்மாவும் இங்கு பிறந்தவர். அதனால் சென்னை எனக்கு என் தாயின் ஊர் என்ற பாசமான உணர்வை அளிக்கிறது.

பெத்தி திரைப்படம் குறித்து படக்குழுவினர் அனைவரும் ஏற்கனவே பேசிவிட்டார்கள். இந்தப் படத்தை முடிக்க எங்களுக்கு சுமார் இரண்டரை ஆண்டுகள் ஆனது. அதில் 285 நாட்களுக்கும் மேலாக நாங்கள் உழைத்தோம். ஆனால் எங்களைவிட அதிகமாக உழைத்தவர் இயக்குநர் புச்சி பாபு. கடந்த ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளாக அவர் இந்தப் படத்திற்காக உழைத்திருக்கிறார்.

நாங்கள் கஷ்டப்பட்டோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் இப்படிப்பட்ட சிறந்த கலைஞர்கள் ஒரு படத்தில் இருக்கும்போது அந்தப் பயணம் கஷ்டமாகத் தோன்றாது. இந்தக் கதையை எங்களிடம் கொண்டு வந்த சுகுமார் சாருக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

இசைப்புயல் A. R. ரஹ்மான் சார் இந்தப் படத்தின் மையத் தூண். நாங்கள் அனைவரும் ஒரு வீட்டைத் தாங்கும் தூண்கள் என்றால், அதன் நடுவில் இருக்கும் மிகப்பெரிய ஆதாரத் தூண் அவர் தான். கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக அதிகாலை வரை விழித்திருந்து பின்னணி இசைப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். அவரது அர்ப்பணிப்பு எங்களுக்கு எல்லாம் மிகப்பெரிய உத்வேகமாக இருக்கிறது.

சிவராஜ்குமார் சார் திரையில் தோன்றினாலே ஒரு தீப்பொறி போல ஆற்றல் உருவாகும். ஜெயிலர் படத்தில் அவருடைய கதாபாத்திரத்தை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். காரில் பயணம் செய்யும்போதுகூட அந்த காட்சிகளை மீண்டும் மீண்டும் பார்ப்பேன். குறிப்பாக அவர் மெதுவாக நடந்து வரும் காட்சியும், பீடி பிடிக்கும் அந்த ஸ்டைலும் இன்று ஒரு ஐகானிக் தருணமாக மாறியுள்ளது. அவரது கண்களே ஆயிரம் வார்த்தைகள் பேசும்.

ஒளிப்பதிவாளர் ஆர். ரத்னவேலு சார் பற்றி என்ன சொல்வது? அவருடன் நான் நான்கு திரைப்படங்களில் பணியாற்றியிருக்கிறேன். இரண்டு படங்களை நான் தயாரித்தபோதும் அவர் உடன் இருந்தார். அவர் ஒரு உண்மையான ஜாம்பவான். எந்திரன் படத்தில் அவர் உருவாக்கிய காட்சிகள், குறிப்பாக பிரம்மாண்ட பாடல் காட்சிகள், என்னை மிகவும் கவர்ந்தவை. ‘அந்த மாதிரியான ஒரு காட்சியை எனக்கும் கொடுங்கள் சார்’ என்று நான் எப்போதும் அவரிடம் கேட்பேன்.

ரஜினி சார், கமல் சார், ஷங்கர் சார் போன்ற மகத்தான கலைஞர்களுடன் பணியாற்றிய அனுபவம் அவருக்கு இருக்கிறது. ஆனால் அந்த அனுபவத்தின் பெருமையை அவர் ஒருபோதும் வெளிக்காட்ட மாட்டார். அதுவே அவரது சிறப்பு.

என்னைப்போலவே திவ்யேந்து இந்தப் படத்தில் மிகப்பெரிய உழைப்பை தந்துள்ளார் அவரது காட்சிகளை ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.

இந்தப் படத்தை நான் வெறும் ஒரு நடிகராக செய்யவில்லை. மனதார காதலித்து செய்தேன். ஒவ்வொரு நாள் படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு வந்ததும், என் நண்பர்களிடமும், அம்மாவிடமும், அந்த நாள் ஷூட்டிங் அனுபவங்களைப் பற்றியே தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பேன். ‘போதும், நிறுத்து… நாள் முழுவதும் இதைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறாய்’ என்று அவர்கள் சொல்லும் அளவுக்கு பெத்தி படம் என் மனதில் ஆழமாக பதிந்திருந்தது.

என் வீட்டில் எப்போதும் ஒரு விஷயம் சொல்வார்கள். ‘ஒரு படத்தைப் பற்றி நீ வீட்டிற்கு வந்த பிறகும் தொடர்ந்து பேசினால், அந்த படம் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும்’ என்று. ஆர்.ஆர்.ஆர்., ரங்கஸ்தலம், மகதீரா போன்ற படங்களைப் பற்றியும் நான் அப்படித்தான் பேசினேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் பெத்தி படத்தைப் பற்றியே வீட்டில் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன். அதுவே இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்பதற்கான என் நம்பிக்கை. குடும்பத்தோடு, குறிப்பாக குழந்தைகளோடு வந்து பார்க்க வேண்டிய படம் இது. மிகவும் ஊக்கமளிக்கும், மனதைத் தொடும் திரைப்படமாக இருக்கும்.

என் வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும் ஒரு படத்தை இயக்குநர் புச்சி பாபுவும், சுகுமார் சாரும் எனக்கு கொடுத்திருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

இறுதியாக, முதல்வர் விஜய் அவர்களுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உச்சநிலையிலிருந்த ஒரு திரைப்பட வாழ்க்கையையும், மிகப் பெரிய நட்சத்திர அந்தஸ்தையும் விட்டு விட்டு பொதுச் சேவைக்காக வந்திருப்பது பாராட்டத்தக்க விஷயம். திரைப்படத் துறையைச் சேர்ந்த ஒருவராக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவருக்கும், தமிழ்நாடு மக்களுக்கும் என் வாழ்த்துகள்.

இந்தப் படம் எங்கள் அனைவரின் உழைப்பு . ஜூன் 4-ஆம் தேதி ரசிகர்கள் திரையரங்கில் இந்த அனுபவத்தை கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.”

ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு மற்றும் திவ்யேந்து சர்மா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சென்னை பத்திரிகையாளர் சந்திப்பும் ரசிகர்களிடையே படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் உயர்த்தியுள்ளது.

ஏற்கனவே ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த பாடல்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும், சமீபத்தில் வெளியான டிரெய்லர், ஒரு கிராஸ்ஓவர் தடகள வீரரின் ஊக்கமூட்டும் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பயணத்தை வலுவாக வெளிப்படுத்தி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது.

இப்படம் வரும் ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு மற்றும் அவரது குழு, இந்தியா முழுவதும் தீவிரமான புரமோஷன் திட்டங்களை மேற்கொண்டு, படத்தின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.

நடிகர்கள் :
மெகா பவர் ஸ்டார் ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு, திவ்யேந்து சர்மா

தொழில்நுட்பக் குழு :
இயக்கம், திரைக்கதை: புச்சி பாபு சனா
வழங்குபவர்கள் : மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ்
தயாரிப்பு நிறுவனம்: விருத்தி சினிமாஸ்
தயாரிப்பாளர்: வெங்கட சதீஷ் கிலாரு
இணை தயாரிப்பாளர்: ஈஷான் சக்சேனா
இசை: A.R. ரஹ்மான்
ஒளிப்பதிவு: R. ரத்னவேலு
தயாரிப்பு வடிவமைப்பாளர் : அவினாஷ் கொல்லா
படத்தொகுப்பு: நவீன் நூலி
நிர்வாக தயாரிப்பாளர்: V.Y. பிரவீன் குமார்
மார்க்கெட்டிங்: ஃபர்ஸ்ட் ஷோ
மக்கள் தொடர்பு : யுவராஜ்

SR PRODUCTIONS தயாரிப்பில், “அண்டர் – 18” (Under – 18)

மெட்ராஸ்காரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, SR PRODUCTIONS சார்பில் B. ஜெகதீஸ் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் அவர்களிடம் அசோசியேட் இயக்குநராக பணியாற்றிய இயக்குநர் கார்த்திக் பெருமாள் சாமி இயக்கத்தில், கிச்சா சுதீப், ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படமான “அண்டர் – 18” (Under – 18) படத்தின் பூஜை விழா, படக்குழுவினருடன் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் கலந்துகொள்ள இன்று இனிதே நடைபெற்றது.

இந்நிகழ்வினில்…

தயாரிப்பாளர் ஜெகதீஸ் பேசியதாவது..

SR PRODUCTIONS சார்பில் இரண்டாவது படமான அண்டர் – 18 திரைப்படத்தின் பூஜைக்கு வருகை தந்த பத்திரிகையாளர்கள், ஊடக நண்பர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வணக்கங்கள்.

இந்தப் படத்தின் தொடக்கத்திற்கு முக்கிய காரணமாக இருந்தவர் என் நண்பர் சாய் பரத் தான் எனக்கு இயக்குநரை அறிமுகப்படுத்தினார். கார்த்திக் பெருமாள் சாமி அவர்கள், இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுடன் பொல்லாதவன் முதல் அரசன் வரை முதல் உதவி இயக்குநராகவும், இணை இயக்குநராகவும் பணியாற்றியவர். அதன்பிறகு விக்ராந்த் சார் இந்தப் படத்தில் இணைந்தார். அவர் வந்ததிலிருந்து இந்தப் படத்தை தனது தோள்களில் சுமந்து செல்லும் அளவுக்கு முழுமையாக ஈடுபட்டு, அனைத்து விஷயங்களிலும் பங்களித்து வருகிறார்.
மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் மேடம், கடந்த நான்கு ஆண்டுகளாக எனக்கு மிகவும் நெருக்கமான நண்பராக இருந்து வருகிறார். இந்தப் படம் மூலமாக மீண்டும் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

சுதீப் சார் இந்தப் படத்தில் இணைந்ததற்கு முக்கிய காரணம் விக்ராந்த் சார் தான். அவர் சார் சொன்ன ஒரு வார்த்தைக்காகவே அவர் கதையைக் கேட்க சம்மதித்தார். கதையைக் கேட்டவுடன், “உங்களுக்கு ஓகேவா?” என்று கேட்டார். நான் “ஓகே” என்றதும், “நான் இந்தப் படத்தை செய்கிறேன்” என்று உடனடியாக ஒப்புக்கொண்டார். இன்று அவர் இந்த விழாவில் கலந்துகொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரது மற்றொரு படத்தின் பணிகள் காரணமாக வர முடியாமல் போய்விட்டது. அடுத்த நிகழ்ச்சியில் கண்டிப்பாக அவர் கலந்து கொள்வார்.

இந்தப் படம் மக்களுக்கு புதுமையான அனுபவத்தை தரக்கூடிய, வித்தியாசமான கதைக்களம் கொண்ட திரைப்படமாக இருக்கும் என்று நம்புகிறேன். கண்டிப்பாக இது ஒரு வெற்றிப் படமாக அமையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அனைவருக்கும் நன்றி.

நடிகை ராதிகா பேசியதாவது..,

மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அண்டர் – 18 படத்தின் தயாரிப்பாளர்கள் ஜெகதீஸ், இயக்குநர் கார்த்திக் பெருமாள் சாமி, நடிகர்கள் ஐஸ்வர்யா, விக்ராந்த், சுதீப் மற்றும் படக்குழுவில் உள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

இன்று இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்ததற்கு முக்கிய காரணம் விக்ராந்த்தான். சிறு வயதிலிருந்தே அவரை எனக்குத் தெரியும். சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வமும், துடிப்பும் அவரிடம் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். அந்த ஏக்கமும் உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். அனைவருக்கும் என் வாழ்த்துகள். நன்றி.

நடிகர் சரத்குமார் பேசியதாவது…

“அண்டர் – 18” எனது வயதை வைத்து வைத்த தலைப்பாக இருக்குமோ என்று இயக்குநரிடம் நகைச்சுவையாக கேட்டேன். ஆனால் அவர் கூறிய கதையின் ஒற்றை வரி மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ஒரு திரைப்படத்தை முதலில் மக்களிடம் கொண்டு சேர்ப்பது ஊடகங்களும் பத்திரிகையாளர்களும்தான். இந்தப் படத்தையும் நீங்கள் மக்களிடம் சிறப்பாக கொண்டு சேர்க்க வேண்டும்.

நடிகர் விக்ராந்தின் ஆர்வம், உழைப்பு மற்றும் சினிமா மீதான அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. எதிர்காலத்தில் அவர் மிகப்பெரிய நட்சத்திரமாக உயர்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ‘அண்டர் – 18’ படக்குழுவினருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

நடிகர் நட்டி பேசியதாவது..,

முதலில் இந்த அண்டர் – 18… இல்லை, கூர்நோக்கு இல்லம் என்று சொல்லலாம். இதை எல்லாரும் கூர்ந்து நோக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

இயக்குநர் கார்த்திக் அவர்களுடன் பல வருடங்களாக பழக்கம். அவர் இயக்குநர் வெற்றிமாறன் சாருடன் பணியாற்றியவர். அதனால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களுடைய சிந்தனை அலைவரிசையும் ஒன்றாக இருக்கும்.தம்பி விக்ராந்துடன் நான் இரண்டு, மூன்று படங்களில் நடித்திருக்கிறேன். முத்துக்கு முத்தாக படத்தில் நாங்கள் இருந்திருக்கிறோம். அந்த இடத்திலிருந்து இன்று வரை நல்ல உறவோடு இருந்து வருகிறோம்.

அடுத்து ஐஸ்வர்யா ராஜேஷ். அவருடன் நான் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் பணியாற்றியிருக்கிறேன். மிகவும் திறமையான நடிகை. விக்ராந்த், உங்களுக்குத்தான் பெரிய ஜாக்பாட் கிடைத்திருக்கிறது. அவ்வளவு பிரமாதமான ஆர்டிஸ்ட் அவர். அவர் உங்களை தூக்கி சாப்பிட்டு விடுவார் ஜாக்கிரதையாக இருங்கள்.

ஜெகதீஸ் சார் இந்தப் படத்தின் தயாரிப்பாளர். அவருடைய முந்தைய படத்தில் நான் நடிக்க வேண்டியிருந்தது. சில காரணங்களால் அந்தப் படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை.
இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன். நன்றி.

தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் பேசியதாவது..,

இன்று இந்த விழாவில் கலந்து கொண்டு வாழ்த்த வந்துள்ள சரத்குமார் சார், ராதிகா மேம் மற்றும் மற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு படத்தின் புரமோஷனுக்கு இதுபோன்ற பிரபலங்கள் வந்து வாழ்த்துவது மிகப்பெரிய ஆதரவாக இருக்கும். அதற்காக அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

கார்த்திக் பற்றி சொல்ல வேண்டுமென்றால், பொல்லாதவன் உள்ளிட்ட இரண்டு, மூன்று படங்களில் அவருடன் பணியாற்றிய அனுபவம் எனக்கு உள்ளது. மிகவும் திறமையான இயக்குநர். இயக்குநர் வெற்றிமாறன் சாருடன் பயணிப்பது சாதாரண விஷயம் அல்ல. அவருடன் பணியாற்றிய அனைவருக்கும் ஒரு பெரிய அனுபவமும், கற்றலும் கிடைக்கும். அந்தப் பயணத்தில் கார்த்திக்கும் மிகப்பெரிய அனுபவம் கிடைத்திருக்கிறது.

வெற்றிமாறன் சார் படங்களில் பணியாற்றிய கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் ஒரு தனி அடையாளம் கிடைத்திருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். அந்த வரிசையில் கார்த்திக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் அவர் ஒரு பெரிய வெற்றியைப் பெறுவார் என்று நம்புகிறேன்.

விக்ராந்த் மிகவும் நேர்மையான மற்றும் அர்ப்பணிப்புள்ள கலைஞர். ஒவ்வொரு படத்திற்கும் தனது உடல் மொழியையும், தோற்றத்தையும் மாற்றி முழு ஈடுபாட்டுடன் உழைத்து வருகிறார். இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தரும் என்று நம்புகிறேன். ஐஸ்வர்யா ராஜேஷ் ஏற்கனவே பல சிறந்த கதாபாத்திரங்களில் நடித்தும், பல விருதுகளை வென்றும் இருக்கிறார். அவருக்கும் இந்தப் படம் மேலும் ஒரு முக்கியமான வெற்றியைத் தரும் என நினைக்கிறேன். படக்குழுவினர் அனைவருக்கும், குறிப்பாக தயாரிப்பாளர் ஜர்விஷ் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.

தயாரிப்பாளர் RK சுரேஷ் பேசியதாவது..,

விக்ராந்த் மிகவும் நேர்மையான மற்றும் கடினமாக உழைக்கும் கலைஞர். பல ஆண்டுகளாக போராடி வந்த அவருக்கு தற்போது நல்ல நேரம் தொடங்கியுள்ளது. நல்ல கதைகளை தேர்வு செய்து தனது வளர்ச்சியை தொடர்ந்து நிரூபித்து வருகிறார்.

இன்று சினிமாவில் கதைகள்தான் வெற்றி பெறுகின்றன. அதுபோல அண்டர் – 18 திரைப்படமும் பெரிய வெற்றி பெற்று, 50 கோடி வசூலைத் தாண்ட வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். இந்தக் கதையை நம்பி தயாரிக்கும் தைரியம் கொண்ட தயாரிப்பாளருக்கும், முழு படக்குழுவினருக்கும் எனது பாராட்டுகள். இயக்குநர் கார்த்திக், வெற்றிமாறன் பள்ளியில் இருந்து வந்தவர் என்பதால் அவரது திறமையும் இந்தப் படத்தில் நிச்சயம் வெளிப்படும். ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

நடிகை ஶ்ரீபிரியா பேசியதாவது..,

விக்ராந்த் அம்மாவை எனக்கு சிறு வயதிலிருந்தே தெரியும். நாங்கள் ஒன்றாக வளர்ந்தவர்கள். அவருடைய குடும்பத்தினருடனும் எனக்கு நீண்டகால நெருக்கம் உள்ளது. மிகவும் அமைதியான, திறமையான மனிதர் அவர். இந்த விழாவிற்கு விக்ராந்தின் அழைப்புக்காகவே தொலைதூரத்திலிருந்து வந்தேன். இங்கு வந்த பிறகுதான் இந்தப் படத்தின் மீதான கலைஞர்களின் அர்ப்பணிப்பையும், சிறப்பான ஏற்பாடுகளையும் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன்.

வாழ்க்கையில் எந்த நேரத்திலும் நல்ல வாய்ப்புகள் வரலாம். தற்போது விக்ராந்துக்கு அப்படிப்பட்ட நல்ல வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன. அவரது குடும்பமும் அவருக்கு மிகப்பெரிய ஆதரவாக இருக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு திறமையான நடிகை. அவருக்கும், முழு படக்குழுவினருக்கும் என் வாழ்த்துகள். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். சினிமாவுக்கு முடிவே கிடையாது; கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து பயணிக்க வேண்டும். படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.

இயக்குநர் S R பிரபாகரன் பேசியதாவது…,

அண்டர் – 18 படத்தின் பூஜை விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சிக்கான முக்கிய காரணம் இயக்குநர் கார்த்திக் பெருமாள்சாமி. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக எனக்கு நண்பராக இருக்கும் அவர், சிறந்த சிந்தனை, அறிவு மற்றும் சினிமா மீதான அர்ப்பணிப்பு கொண்டவர். வெற்றிமாறன் சாருடன் நீண்ட காலம் பயணித்த அனுபவம் அவரை ஒரு சிறந்த இயக்குநராக உருவாக்கியுள்ளது. அவர் மிகப்பெரிய இயக்குநராக வருவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு கதாபாத்திரமாகவே வாழ்ந்து நடிக்கும் அரிய நடிகைகளில் ஒருவர். நல்ல கதைகளுக்காக காத்திருந்து படங்களை தேர்வு செய்வது அவரது சிறப்பு. இந்தப் படம் அவருக்கு மேலும் ஒரு முக்கியமான வெற்றியைத் தரும்.

விக்ராந்த் தனது திறமையை மட்டுமே நம்பி பயணிக்கும் கலைஞர். எந்த பின்னணியையும் பயன்படுத்தாமல் தனது அடையாளத்தை உருவாக்கிக் கொண்டிருப்பது பாராட்டுக்குரியது. கதைகளை தேர்வு செய்வதிலும் அவர் காட்டும் நேர்த்தி தனித்துவமானது. இயக்குநர் கார்த்திக், விக்ராந்த், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் முழு படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். அண்டர் – 18 மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். நன்றி.

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் பேசியதாவது..,

இயக்குநர் கார்த்திக் பெருமாள்சாமிக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகள். அவரது திறமையும் உழைப்பும் இந்தப் படத்தை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. அண்டர் – 18 படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துகள். நன்றி.

நடிகர் தங்கதுரை பேசியதாவது..,

கார்த்திக் பெருமாள்சாமி எனக்கு நீண்டகால நண்பர். வெற்றிமாறன் சாரின் உதவி இயக்குநராக இருந்த காலத்திலிருந்தே அவரை அறிவேன். எப்போதும் மற்றவர்களின் படைப்புகளை பாராட்டும் நல்ல மனம் கொண்டவர். இந்தப் படத்தில் என்னையும் ஒரு நல்ல கதாபாத்திரத்திற்காக அழைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.

விக்ராந்த் மிகவும் திறமையான, அர்ப்பணிப்புடன் உழைக்கும் கலைஞர். எப்போதும் பாஸிடிவாக இருப்பார். அவருடன் பணியாற்றுவது மகிழ்ச்சி. ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு சிறந்த நடிகை. அவருடன் இணைந்து நடிப்பதும் மகிழ்ச்சியான அனுபவம். இந்த விழாவில் கலந்து கொண்ட அனைத்து மூத்த கலைஞர்கள் மற்றும் நண்பர்களையும் சந்தித்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
அண்டர் – 18 படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும்.நன்றி.

எழுத்தாளர் பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் பேசியதாவது..,

அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்.
இது எனக்கு மிகவும் உணர்வுபூர்வமான தருணம். கார்த்திக் என் பதினைந்து ஆண்டுகால நண்பர். அவர் ஒரு படம் இயக்க வேண்டும் என்பது எங்கள் நீண்டநாள் கனவு. அது இன்று நனவாகியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்தக் கதையை கார்த்திக் ஏழு ஆண்டுகளுக்கு முன்பே எங்களிடம் கூறியிருந்தார். அப்போதே இது ஒரு சிறப்பான கதை என்று நாங்கள் நம்பினோம். அந்தக் கதையை இத்தனை ஆண்டுகள் மனதில் சுமந்து வந்து, இன்று தயாரிப்பாளர் ஜெகதீஸ், விக்ராந்த், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலரின் ஒத்துழைப்புடன் படமாக்கியிருக்கிறார்.

சமூகத்திற்கு தேவையான ஒரு ஆழமான கருத்தை பேசும் இந்த திரைப்படம், இந்த ஆண்டின் முக்கிய வெற்றிப் படங்களில் ஒன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. கார்த்திக் மற்றும் முழு படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.நன்றி.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது..,

விழாவிற்கு வந்துள்ள பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. நீண்ட நாட்களாக ஒரு நல்ல கதைக்காக காத்திருந்தேன். அந்தக் காத்திருப்புக்கு பதிலாக அண்டர் – 18 திரைப்படம் அமைந்துள்ளது. இந்தப் படத்தின் மூலம் ரசிகர்களுக்கு ஒரு நல்ல படைப்பை வழங்க நாங்கள் அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் உழைப்போம்.

தயாரிப்பாளர் வெற்றி பெற்றால்தான் கலைஞர்கள், இயக்குநர்கள் மற்றும் சினிமா துறை முழுவதும் வளர்ச்சி அடையும். அதனால் இந்தப் பட தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய வெற்றியையும், நல்ல வசூலையும் பெற்றுத் தர வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். கார்த்திக் மற்றும் முழு படக்குழுவினருடன் இணைந்து ஒரு சிறந்த படத்தை வழங்குவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.அனைவருக்கும் நன்றி.

நடிகர் விக்ராந்த் பேசியதாவது..,

எங்களை வாழ்த்த வந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இந்தப் படம் யாருக்காக வெற்றி பெறுகிறதோ இல்லையோ, தயாரிப்பாளருக்காக கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறேன். இன்றைய சூழலில் நல்ல தயாரிப்பாளர்களை சினிமா துறை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. தயாரிப்பாளருக்காகவும், இந்தப் படத்திற்காகவும் நாங்கள் அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் உழைப்போம் என்று உறுதியளிக்கிறோம்.

இயக்குநர் கார்த்திக் மிகவும் திறமையானவர். அவர் மிகப்பெரிய உயரத்தை அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். மேலும், ஒரு முக்கிய கதாபாத்திரத்திற்காக அழைத்த உடனே கதையை நம்பி இணைந்த சுதீப் சாருக்கு சிறப்பு நன்றி. அதேபோல் ராதிகா மேம், சரத் சார் மற்றும் இந்த விழாவிற்கு வந்த அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் எங்களது நன்றிகள். உங்களது ஆதரவு எங்களுக்கு மிகவும் முக்கியம். நன்றி.

இயக்குநர் கார்த்திக் பெருமாள் சாமி பேசியதாவது..,

இந்தப் படம் இன்று இந்த நிலைக்கு வந்ததற்கு முதல் காரணம் சாய் பரத். அவர்தான் தயாரிப்பாளர் ஜெகதீஸ் சார், விக்ராந்த் சார் உள்ளிட்ட அனைவரையும் எனக்கு அறிமுகப்படுத்தினார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி. அதேபோல், என் குரு இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவரிடமிருந்து கற்ற அனுபவம்தான் இன்று என்னை இந்த மேடையில் நிற்க வைத்திருக்கிறது.

இந்தக் கதையை நம்பி, வணிகக் கணக்குகளைப் பார்க்காமல் தயாரிக்க முன்வந்த தயாரிப்பாளர் ஜெகதீஸ் சாருக்கு என் நன்றி. அதேபோல், ஆரம்பம் முதல் உறுதுணையாக இருந்த விக்ராந்த் சாருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

கதையைக் கேட்டவுடன் நம்பிக்கை வைத்து இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ் மேடம், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட சுதீப் சார், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் சார், இசையமைப்பாளர் சாம் மற்றும் கலை இயக்குநர் ராஜா ஆகியோருக்கும் என் நன்றிகள். நான் இன்னும் அறிமுக இயக்குநர்தான். இந்தப் பயணத்தில் என்னை ஆதரித்து வரும் பத்திரிகை, ஊடக நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

என் அம்மாவின் நீண்ட நாள் கனவான “என் மகன் இயக்குநராக வேண்டும்” என்ற ஆசை இன்று நிறைவேறியுள்ளது. அதற்குக் காரணமான அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்திற்காக என்னுடைய முழு உழைப்பையும் கொடுப்பேன் என்று உறுதியளிக்கிறேன். நன்றி.

மெட்ராஸ்காரன் போன்ற தனித்துவமான படைப்பின் வெற்றிக்குப் பிறகு, SR PRODUCTIONS சார்பில், சமூகத்தின் அடித்தள உண்மைகளை பேசும் இன்னொரு முக்கியமான முயற்சியாக “அண்டர் – 18” (Under – 18) உருவாகவுள்ளது. புதிய தலைமுறை பார்வையுடன், நிஜத்தன்மை மிக்க கதைக்களத்தை தேர்வு செய்துள்ள தயாரிப்பாளர் ஜெகதீஸ், தரமான உள்ளடக்கமுள்ள படங்களை தொடர்ந்து வழங்க வேண்டும் என்ற நோக்கில் இந்த படத்தை தயாரிக்கிறார்.

மருத்துவ கனவுகளோடு வாழும் ஒரு அப்பாவி இளைஞன் எதிர்பாராத விதமாக ஒரு திட்டமிடப்பட்ட க்ரைம் நெட்வொர்க்கில் சிக்கிக்கொள்ள, அவனை மீட்க அவன் தந்தையும், தாயும் எடுக்கும் போராட்டமே “அண்டர் – 18” (Under – 18) படத்தின் மையக் கதை. குற்ற உலகின் கொடூர முகத்தையும், அதனால் பாதிக்கப்படும் ஒரு குடும்பத்தின் உணர்வுகளையும், எமோஷனல் டிராமாவாக இப்படம் சொல்லவுள்ளது.

இயக்குநர் கார்த்திக் பெருமாள் சாமி, தமிழகத்தின் அறியப்படாத க்ரைம் பின்னணிகளை நேரில் ஆய்வு செய்து, உண்மை சம்பவங்களின் தாக்கத்துடன் கூடிய ஒரு உணர்வுப்பூர்வமான கதையாக இந்த படத்தை அவர் உருவாக்கி வருகிறார். சமூக யதார்த்தமும், குடும்ப உணர்வுகளும் கலந்து உருவாகும் இந்த படைப்பு, ரசிகர்களை ஆழமாகத் தொடும் வகையில் உருவாகவுள்ளது.

இப்படத்தில் கிச்சா சுதீப், விக்ராந்த், ஐஸ்வர்யா ராஜேஷ், மற்றும் கிஷோர் சேத்தன் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்களும் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணையவுள்ளனர்.

“Under – 18” படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. ஓசுர், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. உண்மையான இடங்கள், நிஜமான சூழல் மற்றும் இயல்பான காட்சியமைப்பு ஆகியவற்றுடன் இப்படம் உருவாக இருப்பதாக படக்குழு தெரிவிக்கிறது.

தொழில்நுட்ப குழு

தயாரிப்பு : SR PRODUCTIONS
தயாரிப்பாளர் : ஜெகதீஸ்
இயக்கம் : கார்த்திக் பெருமாள் சாமி
ஒளிப்பதிவு (DOP) : வேல்ராஜ்
இசை : சாம் சி.எஸ்
பாடல்வரிகள் : இளங்கோ கிருஷ்ணன், கார்த்திக் நேத்தா
பப்ளிசிட்டி டிசைன் : V.M. சிவகுமார்
புரடக்சன் எக்ஸிக்யூட்டிவ் : வே.கி. துரைசாமி
எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் : விஷ்ணு சக்ரவர்த்தி, அகல்யா வெங்கடேசன்
புரமோசன்ஸ் : யோகேஷ் கிருஷ்ணா
PRO – சதீஷ் (AIM)

இந்திய கிராமங்களின் ஆன்மாவை கொண்டாடும் படம் “பெத்தி” – ராம் சரண் !!

இந்திய கிராமங்களின் திறமைகளையும், உண்மையான இந்திய ஆன்மாவையும் மிகப்பெரிய திரையில் கொண்டாடும் படம் தான் ‘பெத்தி’ – டெல்லி பத்திரிகையாளர் சந்திப்பில் ராம் சரண் பேச்சு

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ள கிராமத்து விளையாட்டு பின்னணியிலான பிரம்மாண்ட திரைப்படம் ‘பெத்தி’ நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புச்சி பாபு சனா இயக்கத்தில், வெங்கட சதீஷ் கிலாரு மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படம் வரும் ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்த பாடல்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும், சமீபத்தில் வெளியான டிரெய்லர், ஒரு கிராஸ் ஓவர் தடகள வீரரின் ஊக்கமூட்டும் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பயணத்தை வலுவாக வெளிப்படுத்தி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது.

இப்படத்தில் ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளதுடன், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், திவ்யேந்து சர்மா, ஜகபதி பாபு மற்றும் போமன் இரானி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் வெளியீட்டை முன்னிட்டு ‘பெத்தி’ படக்குழு நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரசிகர்களை சந்தித்து வருகிறது. போபாலில் நடைபெற்ற மிகப்பெரிய விழாவிற்கு பிறகு, தற்போது டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்து படத்தை பற்றி பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய போமன் இரானி, “இந்திய கிராமங்களில் மறைந்து கிடக்கும் உண்மையான திறமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் படம் தான் ‘பெத்தி’. இந்த படத்தை பார்த்த பிறகு ஒவ்வொரு இளைஞரும் ‘பெத்தி’ போல ஆக வேண்டும் என்ற ஊக்கத்தை பெறுவார்கள். இந்திய விளையாட்டுத் துறையில் மறைந்து கிடக்கும் திறமைகளுக்கு சரியான வாய்ப்புகள், பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தை இந்த படம் உருவாக்கும்,” என்றார். மேலும், இந்த படம் இந்திய சினிமா வரலாற்றில் இடம்பிடிக்கும் என்றும் கூறினார்.

திவ்யேந்து சர்மா பேசுகையில், “இவ்வளவு திறமையான கலைஞர்களுடன் ஒரே படத்தில் இணைந்து நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ராம் சரண் உடன் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. ‘பெத்தி’ என்பது அடையாளத்திற்கான போராட்டத்தை சொல்லும் உயிர்ப்புடன் கூடிய ஒரு சர்வைவல் கதையாக இருக்கும்,” என்றார்.

தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு, “என் முதல் தயாரிப்பாக இப்படம் உருவாகுவது பெருமையாக உள்ளது. இந்திய கலாச்சார வேர்களை கொண்ட ஒரு உணர்ச்சிப்பூர்வமான மற்றும் அதேசமயம் விறுவிறுப்பான கதையாக ‘பெத்தி’ இருக்கும். குடும்பத்துடன் குழந்தைகளையும் திரையரங்கிற்கு அழைத்து வந்து இந்த படத்தை பார்க்க வேண்டும்,” என்று தெரிவித்தார்.

நாயகி ஜான்வி கபூர், டெல்லியின் வெப்பத்தை பற்றி நகைச்சுவையாக பேசிக்கொண்டே, தனது கதாபாத்திரம் இயக்குநர் புச்சி பாபு சனாவின் தனித்துவமான அணுகுமுறையால் ஈர்க்கப்பட்டதாக கூறினார். ராம் சரண் இன் அர்ப்பணிப்பு குறித்து பேசுகையில், “கேமரா ஆஃப் ஆனதும் அமைதியாக இருப்பார். ஆனால் ஷாட் ஆரம்பித்தவுடன் திரையே வெடிக்கும் அளவிற்கு ஆற்றலை வெளிப்படுத்துவார்,” என்று பாராட்டினார்.

மேலும், “இந்த படம் இந்தியாவின் புறக்கணிக்கப்பட்ட மக்களின் அடையாளப் போராட்டத்தை பேசும் ஒரு மாஸ் என்டர்டெய்னர். இந்த படம் உண்மையான உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் நல்ல நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது,” என்றும் கூறினார்.

ராம் சரண் பேசுகையில், “கடந்த இரண்டரை ஆண்டுகளாக நாங்கள் இந்த படத்திற்காக உண்மையுடன் உழைத்துள்ளோம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை திரையரங்கிற்கு அழைத்து வந்து இந்த படத்தை பார்க்க வேண்டும். இந்திய மண்ணின் வாசனையுடன் உருவாகும் கதைகளே உலகளவில் கொண்டாடப்படுகின்றன. ‘பெத்தி’ அப்படிப்பட்ட ஒரு கதை,” என்றார்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி யை சந்தித்த அனுபவத்தையும் அவர் பகிர்ந்துகொண்டார். மேற்கு வங்கத்தை சேர்ந்த முகம்மது என்ற இளைஞர், தனது கிராமத்திலிருந்து மேலும் 80 பேரை இந்தியாவுக்காக விளையாட ஊக்குவித்த சம்பவத்தை பிரதமர் கூறியதாக தெரிவித்தார். “அப்படிப்பட்ட உண்மையான இந்திய ஆன்மாவையும், கிராமத்து மக்களின் உறுதியையும் ‘பெத்தி’ படம் கொண்டாடுகிறது,” என்றார்.

தனது மாறுபட்ட தோற்றங்கள் குறித்து பேசுகையில், “ஒவ்வொரு கதாபாத்திர மாற்றமும் சவாலானதே. குறிப்பாக மல்யுத்த வீரர் தோற்றம் மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் நான் கதையின் தேவையை மட்டுமே பின்பற்றினேன்,” என்றார்.

இறுதியாக, “உண்மையான இந்திய ஆன்மாவையும், போராட்ட மனப்பாங்கையும் கொண்ட ‘பெத்தி’ படத்தை உலகம் முழுவதும் ரசிகர்கள் திரையரங்குகளில் பார்த்து அனுபவிக்க வேண்டும்,” என்று ராம் சரண் அழைப்பு விடுத்தார்.

“பெத்தி” படம் வரும் ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது !!

சூர்யா மற்றும் வெங்கி அட்லூரி ( Venky Atluri) கூட்டணியில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. குடும்ப உணர்வுகள், நகைச்சுவை மற்றும் மனதை வருடும் தருணங்கள் நிறைந்த முழுமையான ஃபேமிலி என்டர்டெய்னராக இப்படம் உருவாகியுள்ளது.

பிளாக்பஸ்டர் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இப்படத்தை சூர்யதேவர நாக வம்ஷீ மற்றும் சாயி சௌஜன்யா தயாரித்துள்ளனர். டீசர் மற்றும் டைட்டில் அறிவிப்பு வெளியான தருணத்திலிருந்தே ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

குறிப்பாக, சூர்யா ஒரு குழந்தையுடன் இடம்பெற்றிருந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், நடிகர் சூர்யாவின் பழைய வசீகரமிக்க நடிப்பு பாணியை மீண்டும் நினைவூட்டியதுடன் குடும்ப ரசிகர்களிடையே உடனடி வரவேற்பைப் பெற்றது.

‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து இயக்குநர் வெங்கி அட்லூரி, இந்தப் படத்தின் மூலம் குடும்ப உறவுகள், உணர்ச்சி மிக்க கதை சொல்லல் மற்றும் மனதை கவரும் தருணங்களுடன் ஒரு ஃபீல் குட் எண்டர்டெய்னரை வழங்க உள்ளார்.

இப்படத்தில் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். நவீன் நூலி படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ள நிலையில், பங்களன் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இந்த ஆண்டின் மிகவும் நேசிக்கப்படும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்களில் ஒன்றாக ‘விஸ்வநாத் & சன்ஸ்’ உருவாகும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் இப்படத்தை திங்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் படத்திற்கு வலுவான திரையரங்கு வெளியீடு கிடைக்க உள்ளது.

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தை ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் கொண்டாடலாம்.

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகாஷ் முரளி நடிக்கும் புதிய திரைப்படம்

தமிழக பள்ளிக்கல்வித் துறை, தமிழ் வளர்ச்சித் துறை, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ் மோகன் துவங்கி வைத்த ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் புதிய படம் !!

தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வெற்றிப் படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பு சிறப்பான பூஜையுடன் துவங்கியது. ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ராகுல் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் ஆகாஷ் முரளி கதாநாயகனாக நடிக்கிறார். அறிமுக இயக்குநர் ஹர்ஷவரதன் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தின் துவக்க விழாவில் தமிழக பள்ளிக்கல்வித் துறை, தமிழ் வளர்ச்சித் துறை, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ் மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், படத்தை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார். குறிப்பிடத்தக்க வகையில், அமைச்சர் ராஜ் மோகன் தனது முதல் இயக்குநர் முயற்சியான “பாபா பிளாக் ஷீப்” திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்கியிருந்தார். தற்போது அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அவர், அதே நிறுவனத்தின் புதிய திரைப்படத்தை துவக்கி வைத்தது நிகழ்வுக்கு மேலும் சிறப்புச் சேர்த்தது.

மேலும், முன்னணி இயக்குநர் ஹெச். வினோத் மற்றும் நடிகர் ரவி மோகன் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இயக்குநர் ஹெச். வினோத் அவர்களிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ஹர்ஷவரதன், இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

1970-களின் தொடக்க காலத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படம், குதிரைப் பந்தய உலகை மையமாகக் கொண்டு நேர்மையும் உயர்ந்த லட்சியங்களும் கொண்ட ஒரு இளைஞனின் போராட்டம், கனவுகள் மற்றும் வெற்றிப் பயணத்தை சுவாரஸ்யமாகச் சொல்லும் கதையாக உருவாகவுள்ளது.

1970-களின் சென்னையை திரையில் உயிர்ப்பிக்க, படக்குழு தற்போது தீவிரமான முன்தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்தக் காலகட்டத்தின் வாழ்க்கை முறை, கலாச்சாரம் மற்றும் நகரின் தனித்துவமான சூழலை மிக நுணுக்கமாக திரையில் பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களையும், வணிக ரீதியான வெற்றிகளையும் தொடர்ந்து வழங்கி வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம், இந்த திரைப்படத்தையும் மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

மலையாள ZEE5, பேட்ரியாட் திரைப்படத்தின் டிஜிட்டல் பிரீமியரை ஜூன் 5 அன்று அறிவித்துள்ளது

இந்தியா, 22 மே 2026: மலையாள ZEE5, புகழ்பெற்ற இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கிய பரபரப்பான அரசியல் திரில்லர் திரைப்படமான பேட்ரியாட் -ஐ ஜூன் 5 அன்று வெளியிடத் தயாராக உள்ளது. இப்படம் மலையாளம், இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகும்.

18 ஆண்டுகளுக்குப் பிறகு மலையாள திரையுலகின் இரு மிகப்பெரிய நட்சத்திரங்களான மம்முட்டி மற்றும் மோகன்லாலை மீண்டும் ஒன்றிணைக்கும் இந்தப் படத்தில், நயன்தாரா, ஃபஹத் ஃபாசில் மற்றும் குஞ்சாக்கோ போபன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

உளவு, அரசியல், தொழில்நுட்பம் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான நாடக அம்சங்களை இணைக்கும் பேட்ரியாட், ரகசியமும் அதிகாரமும் நிறைந்த ஒரு அமைப்பில் கட்டுப்பாடற்ற கண்காணிப்பின் ஆபத்தான விளைவுகளை ஆராய்கிறது.

இந்தக் கதையின் மையத்தில், நாட்டைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் ஒரு அதிநவீன அரசு கண்காணிப்பு திட்டத்தை உருவாக்க உதவிய மனிதர் ஒருவர் உள்ளார். ஆனால், அந்த அமைப்பு குற்றமற்ற குடிமக்களுக்கு எதிராக சூழ்ச்சி, மிரட்டல் மற்றும் கட்டுப்பாட்டின் மூலம் ஆயுதமாக பயன்படுத்தப்படுவதை அவர் கண்டறியும் போது, அவர் நம்பிய அனைத்தையும் கேள்வி கேட்கத் தள்ளப்படுகிறார்.

தான் உருவாக்க உதவிய அதே அமைப்புக்கு எதிராக அவர் திரும்பும் போது, பேட்ரியாட், தேசபக்திக்கும் துரோகத்திற்கும் இடையிலான மங்கலான கோட்டைப் பற்றி பேசுவதுடன், உண்மையை வெளிப்படுத்துவது ஒருவரை துரோகியா அல்லது உண்மையான தேசபக்தரா ஆக்குகிறது என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

இந்திய சமூக-அரசியல் பின்னணியில் அமைந்திருந்தாலும், கண்காணிப்பு மற்றும் தனியுரிமை குறித்த உலகளாவிய கவலைகளை மையமாகக் கொண்ட பேட்ரியாட், மிகப்பெரிய சதித் திட்டத்தை உணர்ச்சிப்பூர்வமான சினிமா அனுபவமாக மாற்றுகிறது.

மகேஷ் நாராயணனின் கூர்மையான கதை சொல்லலும், மம்முட்டி, மோகன்லால், நயன்தாரா, ஃபஹத் ஃபாசில் மற்றும் குஞ்சாக்கோ போபன் ஆகியோரின் சக்திவாய்ந்த திரைநிகழ்வும் இணைந்து, இப்படம் தீவிரமான மற்றும் சிந்திக்க வைக்கும் அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தில் ரேவதி, ராஜீவ் மேனன், தர்ஷனா ராஜேந்திரன் மற்றும் ஸரின் ஷிஹாப் உள்ளிட்ட பலரும் முக்கிய துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

இயக்குநர் மகேஷ் நாராயணன் கூறியதாவது:

“பேட்ரியாட் என்பது நாம் இன்று வாழும் காலத்தின் அச்சங்களை பிரதிபலிக்கும் ஒரு கதை. மக்களை பாதுகாக்க உருவாக்கப்பட்ட தொழில்நுட்பமே, பயமும் கட்டுப்பாடும் ஏற்படுத்தும் கருவியாக மாறும் உலகை இது பேசுகிறது. இந்தக் கதையில் என்னை அதிகமாக ஈர்த்தது அதன் மையத்தில் இருக்கும் உணர்ச்சிப்பூர்வமான மோதல் — ஒருகாலத்தில் முழுமையாக நம்பிய ஒன்றின் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் ஒரு மனிதனின் பயணம். நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்கள் பேட்ரியாட் திரைப்படத்தை மலையாள ZEE5-ல் அனுபவிப்பதை நான் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.”

மம்முட்டி கூறியதாவது:

“பேட்ரியாட் திரைப்படத்தை வலுவானதாக மாற்றுவது, அதன் பிரம்மாண்ட அளவுக்கும் அரசியல் பதற்றத்திற்கும் அடியில், இது மனசாட்சி, பொறுப்பு மற்றும் தைரியம் பற்றிய மிகவும் ஆழமான மனிதக் கதையாக இருப்பதுதான். இந்தப் படம் கடினமான கேள்விகளை எழுப்புவதோடு உணர்ச்சிப்பூர்வமாகவும் நெருக்கமாகவும் இருக்கும். மலையாள ZEE5-ல் பார்வையாளர்கள் இதைப் பார்க்கவிருப்பதை நான் எதிர்பார்க்கிறேன்.”

மோகன்லால் கூறியதாவது:

“பேட்ரியாட் நாம் இன்று வாழும் உலகைப் பற்றி பேசுகிறது, அங்கு உண்மையும் அதிகாரமும் தொடர்ந்து மோதிக்கொண்டே இருக்கின்றன. சினிமாத்தன்மையும் ஆழமான பொருத்தத்தையும் கொண்ட ஒரு படத்தின் பகுதியாக இருப்பது மிகவும் உற்சாகமாக இருந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு மம்முட்டியுடன் இப்படிப்பட்ட கதைக்காக மீண்டும் இணைந்தது இந்த அனுபவத்தை இன்னும் சிறப்பாக மாற்றியது.”

மலையாளம், இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகும் பேட்ரியாட் திரைப்படத்தை ஜூன் 5 முதல் மலையாள ZEE5-ல் தவறவிடாமல் பாருங்கள்!

ZEE5 பற்றி

ZEE5 என்பது இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாகும். இது கோடிக்கணக்கான பொழுதுபோக்கு ரசிகர்களுக்கான பன்மொழி கதை சொல்லும் தளமாக விளங்குகிறது. உலகளாவிய உள்ளடக்க சக்தியாக விளங்கும் ZEE Entertainment Enterprises Limited நிறுவனத்தின் ஒரு பகுதியாக ZEE5 செயல்படுகிறது.

வீடியோ-ஆன்-டிமாண்ட் தளங்களில் முன்னணி தேர்வாக விளங்கும் ZEE5, 4,071+ திரைப்படங்கள், 1,800+ டிவி நிகழ்ச்சிகள், 422+ வெப் ஒரிஜினல்கள், 4,492+ இசை வீடியோக்கள் மற்றும் 1.35 லட்சம் மணிநேரங்களுக்கு மேற்பட்ட ஆன்-டிமாண்ட் உள்ளடக்கங்களைக் கொண்ட விரிவான நூலகத்தை வழங்குகிறது.

இந்த தளம் இந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, மலையாளம், கன்னடம், மராத்தி, ஆங்கிலம், ஒடியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி உள்ளிட்ட 12 மொழிகளில் 7 தனிப்பயன் மற்றும் ஹைப்பர்-லோக்கல் சந்தா தொகுப்புகளை வழங்குகிறது. இதில் ஒரிஜினல் தொடர்கள், இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான உள்ளடக்கம், செய்திகள் மற்றும் Live TV ஆகியவை அடங்கும்.

உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் வலுவான டீப்-டெக் அமைப்பின் மூலம், ZEE5 பல்வேறு சாதனங்கள், சூழல்கள் மற்றும் இயக்க முறைமைகளில் இடையறாத அனுபவத்தை வழங்குகிறது.

Facebook, Instagram, LinkedIn மற்றும் X தளங்களில் ZEE5-ஐ பின்தொடருங்கள்.

“தத் த்வம் அஸி” (2026) படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது!!

ஆன்மீகம், பக்தி மற்றும் ஆக்சன் கலந்த பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாகும் “தத் த்வம் அஸி” (2026) படத்தின் படப்பிடிப்பு நேற்று (மே 26) இனிதே துவங்கியுள்ளது. தந்த்ரா ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படம், அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில், சரியாக மூன்று மாதங்களுக்குள் அனைத்து திட்டமிடல்களும் நிறைவு செய்யப்பட்டு இன்று படப்பிடிப்பு துவங்கியுள்ளது. திரைப்பட உலகில் இத்தகைய துல்லியமான திட்டமிடல் படக்குழுவின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.

படப்பிடிப்பு துவக்க நிகழ்வில் இயக்குநர் வெங்கட் பிரபு கிளாப் அடிக்க, இயக்குநர் பொன்ராம் கேமராவை ஆன் செய்து படக்குழுவை வாழ்த்தினார். ஆன்மீக சூழலில் நடைபெற்ற இந்த தொடக்க விழா படக்குழுவிற்கு சிறப்பான தொடக்கமாக அமைந்தது.

மலையாளத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற “மாளிகப்புரம்” படத்தின் இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இந்த திரைப்படத்தை இயக்குகிறார். ஆன்மீக கதைகளை உணர்வுபூர்வமாக காட்சிப்படுத்தும் அவரது அனுபவம், “தத் த்வம் அஸி” திரைப்படத்திற்கு பெரிய பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் வைபவ் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் அரவிந்த் ஆகாஷ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர்.

பக்தி, நம்பிக்கை மற்றும் ஆன்மீக உணர்வுகளை மையமாகக் கொண்டு, அதனுடன் ஆக்சன் மற்றும் உணர்ச்சி கலந்த பொழுதுபோக்கு அம்சங்களையும் சேர்த்து இந்த திரைப்படம் உருவாக்கப்படவுள்ளது. குடும்ப ரசிகர்களையும் இளைஞர்களையும் ஒருசேர கவரும் வகையில் இப்படத்தின் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தை JK சரவணா மற்றும் JK சதீஷ் தயாரிக்கின்றனர். இசையை பிரேம் ஜி அமரன் அமைக்கிறார். ஒளிப்பதிவை யுவன் செல்வா கவனிக்க, படத்தொகுப்பை பிரவீன் KL மேற்கொள்கிறார். கலை இயக்குநராக சூர்யா ராஜிவன் பணியாற்றுகிறார். சண்டைக் காட்சிகளை சக்தி சரவணன் வடிவமைக்கிறார்.

எழுத்தாளர்களாக ஆதித்யா தங்கீராலா, நந்தகுமார் தமிழ்செல்வன் மற்றும் ப்ருத்வி ஆதித்யா இணைந்துள்ளனர்.

மேலும், தந்த்ரா ஃபிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ள மற்றொரு முக்கியமான திரைப்படமான “ஆர்ய கேரள வர்மன்” படமும் வரலாறு மற்றும் ஆன்மீக பின்னணியில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த வருடம் ஐயப்ப மண்டல காலத்தை முன்னிட்டு “தத் த்வம் அஸி” திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆன்மீக உணர்வுகளுடன் மாஸ் அம்சங்களும் கலந்த இந்த படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராம் சரணுக்கு தேசிய விருது வாங்கித்தரும் படமாக உருவாகும் “ பெத்தி  ” – சிவராஜ்குமார் நம்பிக்கை!!

*கிளைமாக்ஸ் முதல் கதாபாத்திரங்கள் வரை “பெத்தி” படத்தில் பல ஆச்சரியங்கள்  காத்திருக்கிறது – சிவராஜ்குமார் !!*

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள “பெத்தி” திரைப்படம் குறித்து அவர் பகிர்ந்துள்ள கருத்துகள் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள இந்த கிராமத்து ஆக்ஷன் திரைப்படத்தை இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் வழங்கும் இப்படத்தை, விருத்தி சினிமாஸ் நிறுவனம் சார்பில் வெங்கட சதீஷ் கிலாரு மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். ஏற்கனவே வெளியான பாடல்கள் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் படம் வெளியாகிறது.

இந்த படத்தில் “கௌர்நாயுடு” என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள சிவராஜ்குமார், இப்படத்தின் கதை தான் தன்னை மிகவும் கவர்ந்ததாக தெரிவித்துள்ளார். குறிப்பாக தனது கதாபாத்திரத்திற்கு தெளிவான நோக்கம் மற்றும் வலுவான உணர்வுப்பூர்வமான பின்னணி இருப்பதால், இப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைந்ததாக கூறியுள்ளார். மேலும், பெத்தி மற்றும் கௌர்நாயுடு இடையிலான பாசமும் உணர்ச்சி பந்தமும் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேபோல், ராம் சரண் நடித்த விதம் குறித்து அவர் மிகவும் பெருமையாக பேசியுள்ளார். இந்த படத்திற்காக ராம் சரண் தேசிய விருது வெல்வார் என்ற நம்பிக்கை தனக்குள்ளதாகவும், அவரது உடல் மாற்றம் மற்றும் அர்ப்பணிப்பு அளவிட முடியாதது என்றும் கூறியுள்ளார். இரண்டு ஆண்டுகளாக முழுமையான ஈடுபாட்டுடன் அந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளார் என்றும், மிக நேர்மையாக நடித்துள்ளார் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.

இயக்குநர் புச்சி பாபு சனா  பற்றி பேசுகையில், கதைக்கு தேவையான அனைத்தையும் மிகச் சிறப்பாக திரையில் கொண்டு வந்துள்ளார் என்றும், அவரது கதை சொல்லும் பாணி மற்றும் மேக்கிங் தரம் அசத்தலாக இருப்பதாகவும் சிவராஜ்குமார் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜகபதி பாபு  உட்பட அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், ஒளிப்பதிவாளர் R. ரத்னவேலு உருவாக்கிய காட்சிகள் ரசிகர்களை மெய்மறக்கச் செய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.

பல விளையாட்டுகளை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில், ஒவ்வொரு விளையாட்டும் கதையுடன் நெருக்கமாக இணைந்திருப்பதாகவும், குறிப்பாக கிளைமாக்ஸ் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். “பெத்தியின் பயணம் மிகவும் விசேஷமானது; அதை திரையரங்கில் அனுபவிக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தயாரிப்பாளர் சதீஷ் குறித்து பேசுகையில், மிகுந்த ஆர்வத்துடன் உயர்ந்த தயாரிப்பு தரத்தில் இப்படத்தை உருவாக்கியுள்ளார் என்றும் பாராட்டியுள்ளார். தற்போது ஜெயிலர் 2 மற்றும் “கும்மடி நரசய்யா ” உள்ளிட்ட படங்களில் நடித்து வருவதாக தெரிவித்த சிவராஜ்குமார், நல்ல கதைகள் கிடைத்தால் மேலும் தெலுங்கு படங்களில் நடிக்க விருப்பம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

பெத்தி படம் குறித்து அவர் பகிர்ந்துள்ள  தகவல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை வெகுவாக அதிகரித்துள்ளது.

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே நடிக்கும் #DQ41 படத்தின் முக்கியமான படப்பிடிப்பு கட்டம் kநிறைவடைந்துள்ளது !!*

*துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே நடிக்கும் #DQ41 படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது!!* 

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே, ரவி நேலகுதிடி, சுதாகர் செருகூரி, எஸ்எல்வி சினிமாஸ் ( SLV Cinemas ) தயாரிப்பில் உருவாகும் பான் இந்தியா திரைப்படமான #DQ41, #SLV10 படத்தின் முக்கியமான படப்பிடிப்பு கட்டம் நிறைவடைந்தது. கவர்ச்சிகரமான படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகியுள்ளது !

பன்முகத் திறமை கொண்ட நட்சத்திரமான துல்கர் சல்மான் தற்போது தனது புதிய திரைப்படமான #DQ41 படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் ரவி நேலகுதிடி இயக்குகிறார். வெற்றி தயாரிப்பாளர் சுதாகர் செருகூரி தலைமையிலான எஸ்எல்வி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தத் திரைப்படம், அந்த நிறுவனத்தின் 10வது தயாரிப்பாக #SLV10 என உருவாகி வருகிறது. தற்போது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தில், பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மனித உணர்வுகளும் காதலும் கலந்த இனிமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இது உருவாகி வருகிறது.

பனிமூட்டம் சூழ்ந்த மலைப்பகுதிகளில் நடைபெற்ற முக்கியமான  படப்பிடிப்பின் ஒரு கட்டத்தை  படக்குழு வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. அங்கிருந்து வெளியான புகைப்படங்கள் மனதை கவரும் விதமாக அமைந்துள்ளன. குளிர்கால உடைகளில் தோன்றும் துல்கர் சல்மான் தனது இயல்பான கவர்ச்சியால் அனைவரையும் ஈர்க்க, ஹாட் லுக்  உடைகளில் அழகாக தோன்றும் பூஜா ஹெக்டே தனது இயல்பான ஸ்டைலில் கவனம் பெற்றுள்ளார்.

வெளியான புகைப்படங்கள் வழக்கமான போஸ் ஸ்டில்களாக இல்லாமல், படப்பிடிப்பு தளத்தின் இயல்பான தருணங்களை பதிவு செய்கின்றன. ஒரு புகைப்படத்தில், மழைத்தூறலில் குடைகளை பிடித்தபடி சுற்றியுள்ள படக்குழுவினருடன் இணைந்து சிரித்துக்கொண்டிருக்கும் துல்கர் மற்றும் பூஜா காணப்படுகின்றனர். மற்றொரு புகைப்படத்தில் பயணப் பைகள், தொலைவில் தெரியும் கயிற்று பாலம் மற்றும் காற்றில் பறக்கும் மலைப்பகுதி பிரார்த்தனை கொடிகள் சேர்ந்து ஒரு பயணத்தின் உணர்வை தருகின்றன. மேலும், அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ள கோவிலின் முன் முழு படக்குழுவும் ஒன்றாக நிற்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது. துல்கர் சல்மான் மற்றும் பூஜா ஹெக்டே முதல் முறையாக இணைந்து நடிக்கும் நிலையில், இருவருக்குமிடையேயான இயல்பான நெருக்கம் படத்தின் உணர்வை ஏற்கனவே வெளிப்படுத்துகிறது.

ஒளிப்பதிவாளர் அனய் ஓம் கோஸ்வாமி இயற்கை வெளிச்சத்தை அழகாக பதிவு செய்துள்ளதுடன், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையும், அவினாஷ் கொல்லா உருவாக்கிய காட்சியமைப்பும் சேர்ந்து நெருக்கமான, அழகான மற்றும் உணர்வுப்பூர்வமான ஒரு உலகத்தை உருவாக்குகின்றன.

பிரம்மாண்டமான பான் இந்தியா வெளியீடாக உருவாகும் இந்த திரைப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

*நடிகர்கள்* 

துல்கர் சல்மான்

பூஜா ஹெக்டே

*தொழில்நுட்பக் குழு*

கதை, இயக்கம் – ரவி நேலகுதிடி

தயாரிப்பு –சுதாகர் செருகூரி

தயாரிப்பு நிறுவனம் – எஸ்எல்வி சினிமாஸ்

இணை தயாரிப்பாளர் – கோபிச்சந்த் இன்னமூரி

தலைமை நிர்வாக அதிகாரி – விஜய் குமார் சாகண்டி

இசை – ஜி.வி. பிரகாஷ் குமார்

ஒளிப்பதிவு – அனய் ஓம் கோஸ்வாமி

தயாரிப்பு வடிவமைப்பு – அவினாஷ் கொல்லா

மக்கள் தொடர்பு – யுவராஜ்

நடிகர் சத்ய தேவ் நடிக்கும் ‘சமவர்த்தி’

Screenshot

நடிகர் சத்ய தேவ் நடிக்கும் 16வது படமான ‘சமவர்த்தி’ பரபரப்பான ஆக்சன் திரில்லராக தயாராகிறது

நடிகர் சத்ய தேவ் நடிக்கும் ‘சமவர்த்தி’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

பல்வேறு கதாபாத்திரங்களை தேர்வு செய்து ஒரு கதாநாயகனாக தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியதற்காக ரசிகர்களால் பாராட்டப்படும் திறமையான இளம் நடிகர் சத்யதேவ் கஞ்சரானா – புதிதாக நடிக்கும் திரைப்படத்திற்கு, ‘சமவர்த்தி’ என பெயரிட்டு, அதன் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். அவரது திரை பயணத்தில் கதாநாயகனாக நடிக்கும் 16ஆவது திரைப்படம் இதுவாகும்.‌

ருத்ரா பிக்சர்ஸ் மற்றும் பஞ்சபூதா புரொடக்ஷன்ஸ் நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் சிவசரண் ரெட்டி – ஜக்கிடி மற்றும் சசிதர் ரெட்டி படமடி ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள். இந்த திரைப்படத்தை அஜய் நாக் வி இயக்குகிறார். ‘சமவர்த்தி’ ஒரு சூழலியல் சார்ந்த ஆக்சன் திரில்லராக உருவாக்கி, தமிழ்- தெலுங்கு- கன்னடம்- மலையாளம்- ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.‌

சமவர்த்தியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பார்வையாளர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் கோடாரிகள் மற்றும் கத்திகளுடன் ஆயுதம் ஏந்திய பல நபர்கள் அவரை நோக்கி பாய்ந்து வரும் போது.. சத்ய தேவ் தனது ஹெட் போனில் அமைதியாக இசையை கேட்டுக் கொண்டிருப்பதை போல் தோன்றுகிறார்.

இயற்கை மற்றும் வனத்தின் சாராம்சம் நிறைந்த ப்ரீ லுக் போஸ்டரை தொடர்ந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பின்னணியில் உள்ள புலி ஆகியவை.. ஆர்வத்தை தூண்டும் வகையில் இயற்கையின் நுட்பமான குறிப்புகளை பிரதிபலிக்கிறது.

இப்படத்தின் தலைப்பும், போஸ்டரும் சத்ய தேவின் திரை வாழ்க்கையில் மிகவும் தீவிரமான – அதிரடியான திரைப்படங்களில் ஒன்றாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்கனவே உருவாக்கியுள்ளது.

சுற்றுச்சூழல் அதிரடி திரில்லர் என்ற ஜானரில் புதிய உருவாக்கம் என்பதால்.. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.

சத்யதேவ் இந்த படத்தின் மூலம் முற்றிலும் புதிய தளத்திற்குள் அடி எடுத்து வைக்கிறார். தனது உடல் வலிமையையும், அதன் தோற்றத்தையும் அதிகரிக்கும் ஒரு முழுமையான அதிரடி ஆக்சன் களத்திற்குள் அவர் திட்டமிட்டு நுழைகிறார்.

இயற்கையின் கட்டுக்கடங்காத சக்திகளின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் படைப்பு .. சுற்றுச்சூழலுக்கு எதிராக நிகழும் அதிக ஆபத்துக்கள் நிறைந்த விசயங்களுடன் ஆழமாக பின்னிப் பிணைந்திருக்கும் ஒரு வகையான சுற்றுச்சூழல் அதிரடி திரில்லராக தயாராகிறது.

தொழில்நுட்பக் குழு :

கலை இயக்குநர் : மன்ட்ரூ ரவிக்குமார்
ஆடை வடிவமைப்பாளர் : பிரியங்கா ரெபாக்கா ஸ்ரீநிவாஸ்
தயாரிப்பு வடிவமைப்பாளர்: உல்லாஸ் ஹைதுர்
படத்தொகுப்பு : ஆதித்யா திவாரி
ஒளிப்பதிவு : ஹர்ஷா மல்லிகார்ஜுன் – தேவ் தீப் காந்திகுண்டு
இசை : சிஞ்சித் யெர்மில்லி
கிரியேட்டிவ் புரொடியூசர் : வினய் ரெட்டி மமிடி.
நிர்வாகத் தயாரிப்பு : உஜ்வல் பி. எம்.
தயாரிப்பாளர்கள் : சிவசரண் ரெட்டி – ஜக்கிடி – சசிதர் ரெட்டி படமடி
இயக்கம் : அஜய் நாக் வி
மக்கள் தொடர்பு : யுவராஜ்.

i