Breaking
June 5, 2026

Entertainment

“சிறை” திரைப்படம் வரும் ஜனவரி 23 முதல் ZEE5 தமிழில் ஸ்ட்ரீமாகிறது!!

ஜீவா மற்றும் ஆண்ட்ரியா ஜெரமையா நடித்த சமீபத்திய பொங்கல் பிராண்ட் திரைப்படம் உள்ளிட்ட பல வெற்றிகரமான ஒரிஜினல் சீரிஸ்கள் மற்றும் திரைப்படங்களுக்குப் பிறகு, தமிழ் ZEE5 தனது பிராந்திய ரசிகர்களுக்கான பொழுதுபோக்கு உள்ளடக்கங்களைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.

அந்த வரிசையில் பெரும் பாராட்டுகளைக் குவித்த கிரைம் – நீதிமன்ற டிராமா திரைப்படமான “சிறை” திரைப்படம் ஜனவரி 23, 2026 முதல் தமிழ் ZEE5 தளத்தில் பிரீமியர் ஆகிறது. இப்படத்தை இயக்குநர் தமிழ் கதையை மையமாக வைத்து, அவருடன் இணைந்து திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி. Seven Screen Studio சார்பில் S.S. லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்தில், விக்ரம் பிரபு, L.K. அக்ஷய் குமார், அனிஷ்மா அனில்குமார் மற்றும் அனந்தா தம்பிராஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் L.K. அக்ஷய் குமாரின் அறிமுகப் படமாகும். மேலும், தமிழ் இயக்குநராக அறிமுகமான அவரது முந்தைய ‘டாணாக்காரன்’ படத்திற்குப் பிறகு, விக்ரம் பிரபு – தமிழ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ‘சிறை’ திரைப்படம் ஜனவரி 23, 2026 முதல் தமிழ் ZEE5 தளத்தில் பிரீமியர் ஆகிறது.

ஒரு கைதியை கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லும் பணியின் போது, ஒரு காவல் அதிகாரிக்கு ஏற்படும் சிக்கல்கள், அமைப்பு ரீதியான அழுத்தங்கள், மனிதநேய உணர்வுகள் மற்றும் நெறிமுறை முரண்பாடுகள் ஆகியவற்றின் நடுவே சிக்கிக்கொள்ளும் ஒரு நேர்மையான காவல் அதிகாரியின் பயணமே இப்படத்தின் மையக் கதை. அதில் தீவிரமான நீதிமன்ற நாடகமும் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் டிஜிட்டல் வெளியீடு குறித்து விக்ரம் பிரபு கூறியதாவது:

“‘சிறை’ என் நடிப்புப் பயணத்தில் மிகவும் உணர்ச்சிப்பூர்வமான, மனதுக்கு நெருக்கமான திரைப்படங்களில் ஒன்று. என் கதாபாத்திரம் கடமையால் கட்டுப்பட்டவன்; அதே நேரத்தில் அவன் பணியாற்றும் அமைப்பையே கேள்வி கேட்பவன். இந்த படம் தமிழ் ZEE5 வழியாகப் பரந்த ரசிகர்களை அடையப் போவது எனக்கு மிகுந்த உற்சாகம் தருகிறது. எல்லா பிராந்தியங்களிலும் உள்ள பார்வையாளர்கள் இந்தக் கதையை அனுபவிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.”

தன் கதாபாத்திரம் குறித்து L.K. அக்ஷய் குமார் கூறியதாவது:

“இந்த படம் நடிகராக எனக்கு பெரும் சவாலாக இருந்தது. என் கதாபாத்திரம் முழுமையாக நல்லவன் அல்லது கெட்டவன் என வரையறுக்க முடியாதவன். சூழ்நிலைகளும் முடிவுகளும் அவனை உருவாக்குகின்றன. ‘சிறை’ படம் எனக்கு அறிமுகப்படமாக அமைந்தது எனக்குப் பெருமை. இது தமிழ் ZEE5-இல் வெளியாகிறது என்பதில் அளவில்லா மகிழ்ச்சி. வலுவான உள்ளடக்கத்தைக் கொண்ட சினிமாவை மதிக்கும் தளம் அது. இதன் மூலம் அனைவரும் இப்படத்தை ரசிப்பார்கள் என நம்புகிறேன்.”

அழுத்தமான கதை சொல்லல், பரபரப்பான கதாபாத்திரங்கள் மற்றும் சமூக ரீதியான ஆழமான கருத்துகள் ஆகியவற்றுடன், 2026 தொடக்கத்தில் வெளியாகும் ஓடிடி வெளியீடுகளில் முக்கியமான தமிழ்த் திரைப்படங்களில் ஒன்றாக ‘சிறை’ இருக்கும்.

‘சிறை’ திரைப்படம் 23 ஜனவரி 2026 அன்று, தமிழ் ZEE5 தளத்தில் பிரத்தியேகமாக பிரீமியர் ஆகிறது.

ZEE5 பற்றி:

ZEE5 என்பது பாரதத்தின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாகும். ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்தின் ஒரு பகுதியாக செயல்படும் ZEE5, பல மொழிகளில் கதைகளை சொல்லும் தளமாக விளங்குகிறது. 4,071+ திரைப்படங்கள், 1,800+ டிவி நிகழ்ச்சிகள், 422+ வெப் ஒரிஜினல்ஸ், 4,492+ இசை வீடியோக்கள் மற்றும் 1.35 லட்சம் மணிநேரத்திற்கு மேற்பட்ட ஆன்-டிமாண்ட் உள்ளடக்கங்களை கொண்ட விரிவான நூலகத்தை இது வழங்குகிறது. 12 மொழிகளில் – இந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, மலையாளம், கன்னடம், மராத்தி, ஆங்கிலம், ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி – தனிப்பயன் மற்றும் ஹைப்பர்-லோக்கல் சந்தா திட்டங்களுடன் உள்ளடக்கம் வழங்கப்படுகிறது. உலகளாவிய டெக் கூட்டாளிகளுடன் உருவாக்கப்பட்ட வலுவான டீப்-டெக் கட்டமைப்பு, பல சாதனங்கள் மற்றும் இயக்க முறைமைகளில் தடையற்ற பார்வை அனுபவத்தை ZEE5 வழங்க உதவுகிறது.

Facebook, Instagram, LinkedIn மற்றும் X-ல் ZEE5-ஐ பின்தொடருங்கள்.

ZEE5 தமிழ் 2026-ஐ திகிலான பொழுதுபோக்கு வரிசையுடன் தொடங்குகிறது

ZEE5 தமிழ் 2026-ஐ திகிலான பொழுதுபோக்கு வரிசையுடன் தொடங்குகிறது – ஜீவா & ஆண்ட்ரியா ஜெரமையா ஆகியோருடன் பொங்கல் கொண்டாட்டம் ஆரம்பமானது !!

ZEE5 தமிழ், 2026-ஆம் ஆண்டை மிகச் சிறப்பான முறையில் தொடங்கியுள்ளது. அதிரடியான திகில் நிறைந்த திரில்லர்கள் மற்றும் அதிரடி பொழுதுபோக்குகளை வழங்குவதில் முன்னணியில் உள்ளது. பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் கதைகளுடன், வலுவான திரைப்படங்கள் மற்றும் சீரிஸ்களின் வரிசையை கொண்ட ZEE5 தமிழ், இதுவரை இல்லாத அளவிலான தீவிரமான கதைகள் மற்றும் முழுமையான பார்வை அனுபவங்களை இந்த ஆண்டு வழங்கத் தயாராக உள்ளது.

2026-க்கான ZEE5 தமிழின் வேகம் ஏற்கனவே துவங்கிவிட்டது. தளபதி விஜய்யின் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா, ZEE5 உள்ளடக்கங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு முதல் நாளில் அதிகமான சந்தாதாரர்களை பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து, கவின் நடித்த “மாஸ்க்” திரைப்படம் பெற்ற பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. ZEE5 இந்த ஆண்டில் வலுவான தொடக்கத்தை உறுதி செய்துள்ளது.

இந்த வெற்றியின் தொடர்ச்சியாக, ZEE5 தமிழ், ஜீவா மற்றும் ஆண்ட்ரியா ஜெரமையா நடிப்பில் உருவான சிறப்பு பொங்கல் பிராண்ட் திரைப்படத்தை வெளியிட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு திகில் நிறைந்த பொழுதுபோக்கை வழங்கும் தனது வாக்குறுதியை மேலும் வலுப்படுத்தும் இந்த கொண்டாட்டம், “ZEE5-இல் இந்த பொங்கல் – திகில் பொங்கல்” என்ற விளம்பர வாசகம் மூலம், இந்த விழாக்காலம் முழுவதும் சஸ்பென்ஸ், பரபரப்பு மற்றும் ஈர்க்கும் கதையாக்கம் நிறைந்ததாக இருக்கும் என்பதை உறுதி செய்கிறது.

🔗 – https://youtu.be/9zd7u-vKS9g

பாரம்பரியமான பொங்கல் கொண்டாட்ட பின்னணியில் அமைந்த இந்த பிராண்ட் திரைப்படம், ஒரு மர்ம சம்பவம் நிகழ்வதன் மூலம் எதிர்பாராத திருப்பத்தை எடுக்கிறது. ஜீவா உறுதியான விசாரணை அதிகாரியாக நடிக்க, ஆண்ட்ரியா அந்த மர்மத்தின் மையக் கதாபாத்திரமாக மாறுகிறார். கதைக்களத்தின் உஷ்ணத்தையும், நியோ நாயர் பாணி திகில் சூழலையும் இணைக்கும் இந்த கதை, 2026-க்கான ZEE5 தமிழின் பலவகை திரில்லர் வகை உள்ளடக்க திட்டத்தை பிரதிபலிக்கிறது.

இந்த பொங்கலிலிருந்து, ZEE5 தமிழ் பார்வையாளர்களுக்கு வலுவான திரைப்பட வரிசையையும் வழங்குகிறது. இதில், விக்ரம் பிரபு மற்றும் L.K. அக்ஷய் குமார் நடித்த விமர்சகர்களால் பாராட்டப்பட்ட “சிறை” திரைப்படம் இடம் பெற்றுள்ளது. மற்றும் பிளாக்பஸ்டர் திகில் திரைப்படமான டிமாண்டி காலனி-யின் இரண்டாம் பாகப் படமும் வெளியாகவுள்ளது. இதோடு, சமுத்திரக்கனி நடித்த “பார்த்த ஞாபகம் இல்லையோ” மற்றும் ஒன்ஸ் அப்ஆன் எ டைம் இன் காயம்குளம் ஆகிய ஒரிஜினல் சீரிஸ்களும் இடம்பெறுகின்றன.

ZEE5 தமிழின் 2026 உள்ளடக்கத் திட்டம் குறித்து பேசிய லாய்ட் C. சேவியர்,
பிஸ்னஸ் ஹெட் – தமிழ் & மலையாளம் ZEE5, சீனியர் வைஸ் பிரசிடென்ட் (SVP) – மார்க்கெட்டிங், தென் இந்தியா கூறியதாவது:
“திகில் நிறைந்த, அதிக தாக்கம் கொண்ட பொழுதுபோக்கை வழங்கும் தெளிவான நோக்கத்துடன் ZEE5 தமிழ் 2026-இல் காலடி எடுத்து வைத்துள்ளது. ஜனநாயகன் இசை விழா மற்றும் கவினின் மாஸ்க் படம் ஆகியவற்றிற்கு கிடைத்த பெரும் வரவேற்பு, சக்திவாய்ந்த உள்ளடக்கத்திற்கான பார்வையாளர்களின் விருப்பத்தை வெளிப்படுத்துகிறது. எங்கள் பொங்கல் கொண்டாட்ட திட்டம் மற்றும் பரபரப்பான திரைப்பட, தொடர் வரிசையுடன், தமிழ் ஒடிடி பொழுதுபோக்கில், புதிய உயரங்களை எட்டவும், ஆண்டுதோறும் பார்வையாளர்களை ஈர்க்கவும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.”

இந்த கொண்டாட்டத்தின் முகமாக இருக்கும் நடிகர் ஜீவா கூறியதாவது:
“ZEE5 தமிழ் உடன் பணியாற்றியது அருமையான அனுபவமாக இருந்தது. பார்வையாளர்களை நேரடியாக இணைக்கும் வகையில் திகில் மற்றும் ரசிகர்களை ஈர்க்கும் கதைகளை வழங்குவதில் இந்த குழு முழு கவனம் செலுத்துகிறது. இந்த பொங்கல் படம், இந்த ஆண்டு ZEE5 தமிழில் பார்வையாளர்கள் எதிர்பார்க்கும் விழாக்கால உற்சாகத்தையும் திகிலையும் சிறப்பாக பிரதிபலிக்கிறது.”

நடிகை ஆண்ட்ரியா ஜெரமையா கூறியதாவது:
“இந்த படத்தில் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். “மாஸ்க்” திரைப்படத்தின் புரமோஷனை க்ரியேட்டிவாக இதில் இணைத்த விதம் எனக்கு மிகவும் பிடித்தது. என் நண்பன் ஜீவாவுடன் இணைந்து பணியாற்றியதும் சந்தோஷம். பார்வையாளர்கள் இதற்கு எப்படி வரவேற்பு தருவார்கள் என்பதை காண ஆவலுடன் இருக்கிறேன்.”

திகில் நிறைந்த திரில்லர்கள், பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் மற்றும் அதிரடியான சீரிஸ்களால் நிரம்பிய கண்டண்ட் வரிசையுடன், ZEE5 தமிழ் தனது பார்வையாளர்களுக்கான விழாக்காலமும் ஆண்டு முழுவதுமான பொழுதுபோக்கையும் புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதுடன், 2026-ஐ தமிழ் ஓடிடி கதைக்களத்தை ஒரு மைல்கல்லாக மாற்ற தயாராக உள்ளது.

ZEE5 பற்றி:
ZEE5 என்பது பாரதத்தின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாகும். ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்தின் ஒரு பகுதியாக செயல்படும் ZEE5, பல மொழிகளில் கதைகளை சொல்லும் தளமாக விளங்குகிறது. 4,071+ திரைப்படங்கள், 1,800+ டிவி நிகழ்ச்சிகள், 422+ வெப் ஒரிஜினல்ஸ், 4,492+ இசை வீடியோக்கள் மற்றும் 1.35 லட்சம் மணிநேரத்திற்கு மேற்பட்ட ஆன்-டிமாண்ட் உள்ளடக்கங்களை கொண்ட விரிவான நூலகத்தை இது வழங்குகிறது.

12 மொழிகளில் – இந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, மலையாளம், கன்னடம், மராத்தி, ஆங்கிலம், ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி – தனிப்பயன் மற்றும் ஹைப்பர்-லோக்கல் சந்தா திட்டங்களுடன் உள்ளடக்கம் வழங்கப்படுகிறது.உலகளாவிய டெக் கூட்டாளிகளுடன் உருவாக்கப்பட்ட வலுவான டீப்-டெக் கட்டமைப்பு, பல சாதனங்கள் மற்றும் இயக்க முறைமைகளில் தடையற்ற பார்வை அனுபவத்தை ZEE5 வழங்க உதவுகிறது.

Facebook, Instagram, LinkedIn மற்றும் X-ல் ZEE5-ஐ பின்தொடருங்கள்

பெங்களூர் மெட்ரோவில் முதன்முறையாக ஒரு நட்சத்திர பிறந்தநாள் கொண்டாட்டம்  – ராக்கிங் ஸ்டார் யாஷ் ரசிகர்களின் வரலாற்றுச் சாதனை !

“பெங்களூர் மெட்ரோவில் பிறந்தநாள் கொண்டாட்ட மரியாதை பெற்ற  முதல் நடிகர் – ராக்கிங் ஸ்டார் யாஷ் !!

பெங்களூர் நகரம் இதுவரை கண்டிராத ஒரு வரலாற்று நிகழ்வை சமீபத்தில் கண்டது. இந்திய சினிமாவின் மிகப்பிரம்மாண்டமான மற்றும் பெரிதும் எதிர்பார்க்கப்படும்  படைப்புகளில் ஒன்றாக உருவாகிக் கொண்டிருக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups)  திரைப்படத்தின் மையமாக திகழும் நடிகர்  யாஷ் உடைய பிறந்த நாளை முன்னிட்டு, ரசிகர்கள் பெங்களூர் மெட்ரோவை முழுமையாக ஒரு பிரம்மாண்டமான கொண்டாட்ட மேடையாக மாற்றியுள்ளனர்.

வரும் ஜனவரி 8 அன்று நடிகர்  யாஷ்  பிறந்தநாளை கொண்டாடவுள்ள நிலையில்,  நகரத்தின் உயிர்நாடியாக விளங்கும் பெங்களூர் மெட்ரோ, முதன்முறையாக ஒரு நடிகருக்கான பிறந்த நாள் களமாக மாறியது. வழக்கமான பயணமாகத் தொடங்கிய ஒரு மெட்ரோ பயணம், அந்த நாளில் ஒரு கலாச்சார நிகழ்வாக மாறி, ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

 மெட்ரோ பெங்களூர் நகரத்தின் மையப்குதிகளைக்  கடந்து செல்லும் போது, அது வெறும் பயணிகளை மட்டுமல்ல — உணர்ச்சி, பெருமை மற்றும் கோடிக்கணக்கான ரசிகர்களின் நேசத்தையும் எடுத்துச் சென்றது. திரையரங்குகளைத் தாண்டி, சமூக-கலாச்சார அடையாளமாக யாஷ் இன்று உருவெடுத்திருப்பதற்கான உறுதியான சான்றாக இந்த நிகழ்வு அமைந்தது.

இந்த நிகழ்வின் நேரம் மிகவும் பொருத்தமானதாக அமைந்துள்ளது.  ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படத்தில் நடிகைகள் மற்றும் அவர்களின் கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகியதிலிருந்து, யாஷின் அடுத்த சினிமா பயணம் குறித்த எதிர்பார்ப்பு உச்சத்தைத் தொட்டுள்ளது. இப்படத்தில் யாஷின் தோற்றம் குறித்த சில வலுவான புகைப்படங்கள் இதுவரை வெளிவந்திருந்தாலும், அவர் ஏற்கும் கதாபாத்திரத்தின் முழுமையான  தன்மை இன்னும் மர்மமாகவே உள்ளது. அந்த மர்மமே ரசிகர்களிடையே தீவிரமான ஊகங்களையும் விவாதங்களையும் கிளப்பியுள்ளது.

நடிகர் யாஷின் பிறந்தநாளில் அந்த பெரும் கதாபாத்திரம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமா என்பதே ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. மிகப் பெரிய அளவில் உருவாகும் இந்த திரைப்படம், ஒரு வரலாற்று காலகட்டப் பின்னணியுடன், தீவிரமும் ஆழமும் நிறைந்த உலகை நமக்கு வாக்குறுதி அளிக்கிறது. நெறிமுறைகளின் எல்லையில் நிற்கும் ஒரு சிக்கலான நாயகன் — அவன் யார்? என்பதை வெளிப்படும் அந்த  தருணத்துக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Instagram Reel: https://www.instagram.com/reels/DTKmQVwkSTG/

(ரசிகர்கள் நடத்திய மெட்ரோ மரியாதை நிகழ்வு)

‘ஜன நாயகன்’ இசை வெளியீட்டு விழா ஜனவரி 4 அன்று ZEE5-தளத்தில் ஒளிபரப்பாகிறது !!

தளபதி விஜய்யின் இறுதி சினிமா மேடை :

தமிழ் ரசிகர்களுக்காக ZEE5 ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தருணத்தை வழங்குகிறது. தளபதி விஜய் நடித்த கடைசித் திரைப்படமான ‘ஜன நாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா, ஜனவரி 4 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு, ZEE தமிழ் தொலைக்காட்சி மற்றும் ZEE5 தளத்தில் பிரத்யேகமாக ஸ்ட்ரீம் ஆகிறது.

H. வினோத் இயக்கத்தில், KVN புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன், அரசியல் பின்னணியுடன் கூடிய ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமாகும். தளபதி விஜய் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தில், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன் மற்றும் பிரியாமணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். KVN நிறுவனத்தின் முதல் தமிழ் தயாரிப்பாக உருவாகியுள்ள இந்தப் படம், நடிகராக விஜய் மேற்கொள்ளும் இறுதி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா, ரசிகர்களின் நினைவில் என்றும் பதியும் வகையில் அமைந்தது. வெளிநாட்டில் நடைபெற்றதால் நேரில் பங்கேற்க முடியாத ரசிகர்களுக்காக, இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்வை ZEE5 நேரடியாக ரசிகர்களின் இல்லங்களுக்கே கொண்டு வருகிறது.

இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டதுடன், தளபதி விஜய் நடிகராக தனது திரை வாழ்க்கையின் இறுதி மேடை உரையை வழங்கி, ரசிகர்களை உருக வைத்தார். அவரது திரைப்பயணத்திற்கு மரியாதையாக, அவரது பிரபலமான பாடல்களும் நடனமும் கூடிய நேரடி மேடை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. மேலும், இயக்குநர்கள் நெல்சன் திலீப்குமார், லோகேஷ் கனகராஜ், அட்லீ உள்ளிட்ட பல முன்னணி திரையுலக பிரபலங்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஒரு உட்ச நட்சத்திரத்தின் விடைபெறும் நிகழ்வு மட்டுமல்ல — தமிழ் சினிமாவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணம்.

‘ஜன நாயகன்’ இசை வெளியீட்டை ஜனவரி 4, மாலை 4.30 மணிக்கு, தமிழ் ZEE5-ல் தளத்திலும் ZEE தமிழ் தொலைக்காட்சியிலும் தவறாமல் காணுங்கள்.

🔗https://youtu.be/SlG3_ABHcJI?si=-nHSNABKR2EKEdvt

நடிகை ஸ்ருதிஹாசன் – விஜய் சேதுபதிக்காக பாடிய “கன்னக்குழிக்காரா

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன், நடிப்புடன் மட்டுமல்லாமல் தன் இசைத் திறமையாலும் ரசிகர்களின் மனதை வென்று வருகிறார். அந்த வரிசையில், மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் டிரைன் திரைப்படத்திற்காக ஸ்ருதிஹாசன் பாடியுள்ள “கன்னக்குழிக்காரா” பாடல், தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் குவித்து வருகிறது.

“கன்னக்குழிக்காரா” பாடல் ஒரு வழக்கமான காதல் பாடல் அல்ல. அதில் கிராமிய வாசனை, மண் மணம், எளிமை, மற்றும் உணர்ச்சி நிறைந்த காதல் வெளிப்பாடு அனைத்தும் கலந்துள்ளன. அந்த உணர்வுகளை திரையில் உயிர்ப்பிக்க, ஸ்ருதிஹாசனின் குரல் மிகப் பெரிய பலமாக மாறுகிறது. ஒரு நடிகை, தன்னுடைய குரலால் மற்றொரு நடிகரின் திரை இமேஜை மேலும் அழகாக வடிவமைப்பது என்பது அரிதான விஷயம். ஆனால் இந்தப் பாடலில் அது இயல்பாக நிகழ்ந்துள்ளது.

விஜய் சேதுபதி என்ற நடிகர், சாதாரண மனிதர்களின் வாழ்க்கை, வலிகள், காதல், நகைச்சுவை என அனைத்தையும் இயல்பாக வெளிப்படுத்துபவர். அவரின் அந்த “ரியலிஸ்டிக்” திரைத் தோற்றத்திற்கு, ஸ்ருதிஹாசனின் குரல் ஒரு மென்மையான ஆன்மாவை சேர்த்தது போல அமைந்துள்ளது. குறிப்பாக, பாடலின் வரிகளில் வரும் சின்ன சின்ன உணர்ச்சிகள், குரலின் ஏற்றத் தாழ்வுகள் மூலம் இன்னும் ஆழமாக மனதில் பதிகின்றது.

இந்தப் பாடலின் இன்னொரு சிறப்பம்சமாக, இயக்குநர் மிஷ்கின் இதற்குத் தானே இசையமைத்துள்ளார். பாடல்வரிகளை கபிலன் எழுதியுள்ளார். இசை, வரிகள், குரல் – மூன்றும் ஒன்றாக இணைந்து, பாடலை ஒரு தனித்த அனுபவமாக மாற்றியுள்ளன.

ஸ்ருதிஹாசனின் மயக்கும் குரலில் “கன்னக்குழிக்காரா” இசை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், இசை தளங்களில் முன்னணி வரிசையில் இடம் பிடித்துள்ளது.

ஒரு பக்கம் ஹாலிவுட் படைப்புகள், சலார் முதலாக பான் இந்திய படங்கள் என நடிகையாக கலக்கி வரும் ஸ்ருதிஹாசன், தனது இசை ரசிகர்களை மகிழ்விக்கவும் தவறுவதில்லை. பெரிதும் எதிர்பார்க்கும் விரைவில் அவரது அடுத்த இசை முயற்சி மற்றும் திரைப்பட அறிவிப்புகள் குறித்த விவரங்கள் ரசிகர்கள் வெளியாகும்.

Moonwalk Mini Cassette

ஒரு திரைப்பட ஆல்பத்திற்காக முதல்முறையாக வெளியான ‘மூன்வாக் மினி கேசட்’ ( ) — ஒரு சிறப்பு இசை அனுபவம் !!

Behindwoods Productions நிறுவனம், மூன்வாக் படத்தின் மினி கேசட்டை யூடுயூபில் வெளியிட்டுள்ளது. இது ஒரு திரைப்படத்திற்காக தமிழ் திரையுலகில் இதுவரை யாரும் செய்திடாத ஒரு தனித்துவமான இசை அனுபவமாகும். மூன்வாக் திரைப்படத்தின் அனைத்து 5 பாடல்களையும் A R ரஹ்மான் பாடியுள்ளார். இது அவரது இசைப் பயணத்தில் ஒரு வரலாற்றுச் சாதனையாகும். மூன்வாக் திரைப்படம் 2026 ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக ஒரு பாடலை A R ரஹ்மான் பாடியிருந்தாலே ரசிகர்கள் கொண்டாடும் நிலையில், மூன்வாக் மினி கேசட் அந்த அனுபவத்தை இன்னும் உயர்த்துகிறது. யூடுயூபில் ஒரே வீடியோவாக, ஆல்பத்தில் உள்ள அனைத்து 5 பாடல்களையும் தலா 1 நிமிட பீட்ஸாக இணைத்து வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரசிகர்கள் முழு ஆல்பத்தையும் தொடர்ச்சியாக, ஒரே அமர்வில் ரசிக்க முடிகிறது. இது இசை ரசிகர்களுக்கு புதுமையான, ஒப்பற்ற மற்றும் முழுமையான இசை அனுபவத்தை வழங்குகிறது.

ஒரு முழுநீள திரைப்படம் இதுபோன்ற ஒரு இசை அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்குவது இதுவே முதல் முறை.

மூன்வாக் திரைப்படத்தில் உள்ள ஒவ்வொரு பாடலும் மிகுந்த சிறப்புடன் கையாளப்பட்டுள்ளது. திரைப்படத்தின் இயக்குநர் மனோஜ் நிர்மலா ஶ்ரீதரன், ஒவ்வொரு பாடலுக்கும் தனித்தனியான போஸ்டர்களை வெளியிட்டு, அந்த பாடலின் தீம் மற்றும் தத்துவத்தை தெளிவாக விளக்கியதோடு, அந்தப் பாடலுடன் தொடர்புடைய பாடலாசிரியர்கள் மற்றும் நடன அமைப்பாளர்களுக்கும் உரிய அங்கீகாரத்தை வழங்கியுள்ளார். இன்றைய திரைப்பட விளம்பரங்களில் அரிதாகக் காணப்படும் ஒரு நடைமுறையாக இது விளங்குகிறது.

ஏ.ஆர். ரஹ்மானின் காலத்தால் அழியாத இசை, பிரபுதேவாவின் நடன மாயாஜாலம் மற்றும் மனோஜின் சினிமா உருவாக்கம் — இவை அனைத்தும் ஒன்றிணைந்து, மூன்வாக் திரைப்படம் அனைத்து தலைமுறையினரையும் கவரக்கூடிய ஒரு முக்கியமான இசை திரைப்படமாக அமைந்துள்ளது.

திரைப்படம் குறித்து மனோஜ் கூறியதாவது:
“மூன்வாக் ஒரு முழுநீள நகைச்சுவை திரைப்படம். ஆனால் அதே சமயம், இதில் இசை, பாடல் உருவாக்கம் மற்றும் நடன அமைப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 29 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய திரைப்படத் துறையின் இரண்டு மிகப் பெரிய ஆளுமைகளை ரசிகர்களுக்காக பிரத்தியேகமாக, மீண்டும் ஒன்றாக இணைத்துள்ளது.”

மினி கேசெட் மூலம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ள நிலையில், மூன்வாக் திரைப்படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா ஜனவரி 4 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது.

🔗https://www.youtube.com/watch?v=lZLQ1oxuS2A&list=RDlZLQ1oxuS2A&start_radio=1

RMV THE KINGMAKER

அருளாளர் திரு.

ஆர். எம். வரப்பன் ீ அய்யாவின்

வாழ்க்கை வரலாறை வெளிப்படுத்தும்

ஆவணப்படம்

சென்னை:

அருளாளர் திரு. ஆர். எம். வரப்பன் ீ அய்யாவின்

வரலாறு, வாழ்க்கைப் பயணம், தமிழக சினிமா

மற்றும் அரசியலுக்கு அவர் செய்த பெரும்

பங்களிப்புகளை பதிவு செய்யும் “RMV The

Kingmaker” ஆவணப்படம் விரைவில்

வெளியாகிறது.

ஆரம்ப காலத்தில் தந்தை பெரியார் மற்றும்

அறிஞர் அண்ணா ஆகியோருடன்

பணியாற்றிய அவர், பின்னர் புரட்சித் தலைவர்

எம்.ஜி.ஆர். அவர்களின் நெருங்கிய துணையாக

இருந்தார்.

திரு. ஆர். எம். வரப்பன் ீ அய்யாவின் சேவை,

ஒழுக்கம், தலைமைக் குணம் மற்றும் தமிழுக்கு

அவர் செய்த அர்ப்பணிப்பு இந்த படத்தில்

விரிவாக காட்டப்பட்டுள்ளது.

அரிய காட்சிகள், முக்கிய நபர்களின் பேட்டிகள்

மற்றும் வரலாற்றுத் தகவல்களின் மூலம் இந்த

ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.தயாரிப்பு நிறுவனங்கள்

இந்த ஆவணப்படம் சத்யா மூவிஸ் மற்றும் தி

கோல்டன் கிங் ஸ்டுடியோஸ் இணைந்து

தயாரித்துள்ளது.

அருளாளர் ஆர். எம். வரப்பன் ீ அய்யா சினிமா

வளர்ச்சிக்கும், தமிழ் வரலாறு மற்றும்

கலாச்சாரத்திற்கும் ஆற்றிய பங்களிப்புகளை

அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல

வேண்டும் என்பதே இந்த தயாரிப்பு

நிறுவனங்களின் நோக்கம்.

தயாரிப்பாளர்

அருளாளர் ஆர். எம். வரப்பன் ீ அய்யாவின் மகன்

தங்கராஜ் வரப்பன் ீ , தந்தையின் பாரம்பரியம்,

பண்புகள் மற்றும் சமூகப் பணிகளை மிகுந்த

அன்பும் மரியாதையும்கொண்டு இந்த

ஆவணப்படத்தில் பதிவு செய்துள்ளார்.

இது தந்தைக்கு அவர் செலுத்தும் மனமார்ந்த

அஞ்சலி.

இயக்குநர்

ஆவணப்பட இயக்குநர் பினு சுப்பிரமணியம்,

உண்மை மற்றும் வரலாற்றை எளிமையாகவும்ஆழமாகவும் பதிவு செய்யும் வகையில் இந்த

படத்தை வடிவமைத்துள்ளார்.

அவரின் ஆராய்ச்சி, கதை சொல்லும் திறன்,

மற்றும் காட்சிகளை நுணுக்கமாக உருவாக்கும்

நடை இந்த ஆவணப்படத்தின் முக்கிய

பலமாகும்.

ஆய்வுப் பணியின் ஒரு பகுதியாக, எங்கள் குழு

அருளாளர் வரப்பன் ீ அய்யா பிறந்த

கிராமத்திற்குச் சென்று அங்குள்ள மக்களுடன்

நேரடியாக உரையாடி பல முக்கிய

தகவல்களை சேகரித்தது.

மேலும் சினிமா, அரசியல், இலக்கியம்,

ஆன்மீகம், ISRO விஞ்ஞானிகள், மற்றும்

வரலாற்றாளர்கள் உள்ளிட்ட பல துறைகளின்

நிபுணர்களை சந்தித்து விரிவான ஆய்வுகள்

மேற்கொள்ளப்பட்டன.

படத்தில் இடம்பெ ற்றுள்ள முக்கிய நபர்கள்

● தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.

ஸ்டாலின்

● சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த்

● திரு. ஆர். கண்ணன்● திரு. ஆர். சரத்குமார்

● திரு. சத்யராஜ்

● கவிஞர் திரு. வைரமுத்து

● ISRO விஞ்ஞானி திரு. நம்பி நாராயணன்

மேலும் பல முக்கிய ஆளுமைகள்…

ஆவணப்படம் பற்றி

“RMV The Kingmaker” என்பது ஒரு வாழ்க்கை

வரலாறு மட்டுமல்ல;

தமிழகத்தின் சினிமா மற்றும் அரசியல்

வரலாற்றில் முக்கிய பங்காற்றிய அருளாளர்

ஆர். எம். வரப்பன் ீ அய்யாவின் அரிய

பயணத்தை பதிவு செய்யும் வரலாற்று

ஆவணப்படம்.

அவரின் தலைமைக் குணம், நம்பிக்கை,

திறமை மற்றும் தமிழ்ப்பண்பாட்டுக்கு அவர்

செய்த பங்களிப்புக்கான ஒரு மரியாதை இது.

திரைக்குரல் First frame- 2025 குறும்பட போட்டியின் விருது வழங்கும் விழா பிரசாத் Lab அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.

தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு, இயக்குநர் K பாக்யராஜ், ஓவியர் டிராட்ஸ்கி மருது, இயக்குநர் அரவிந்த்ராஜ், இயக்குநர் பாண்டிராஜ், நடிகர் மணிகண்டன், நடிகர் பகவதி பெருமாள், இயக்குநர் குட்டி ரேவதி, Gembrio pictures MD சுகுமார் பாலகிருஷ்ணன், விகடன் K ராஜசேகரன், இயக்குநர் ராகவ் மிர்தாத், இயக்குநர் சுகுமார் அழகர்சாமி, இயக்குநர் பாலமுருகன், ஊடகவியலாளர் உமாபதி கிருஷ்ணன் ஆகியோர் விருது விழாவில் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்

நிகழ்வின் துவக்கத்தில் ” தமிழ் பிலிம் பேக்டரி ” திரைப்பட தயாரிப்பு & மேலாண்மை நிறுவனம் அறிமுகப்படுத்தப்பட்டது. Tamil film factory Logoவை திரு. கலைப்புலி S தாணு அவர்கள், இயக்குநர் k பாக்யராஜ் அவர்கள் வெளியிட இயக்குநர் பாண்டிராஜ், நடிகர் மணிகண்டன் ஆகியோர் பெற்றுகொண்டனர். நிறுவனத்தின் இயக்குநர்கள் திருமதி கருணா விலாசினி, திருமதி சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பதிவு செய்யப்பட்ட 48 குறும்படங்களில் துணை, ஆலம்நாட், அரைவேக்காடு, Coffee with Avanthika, shadow, Lowgun, கடல்கொண்டான், Love Lust retro, காஞ்சனா, மீண்டும் மழை ஆகிய சிறந்த 10 குறும்படங்கள் திரையிடப்பட்டன.

அரைவேக்காடு, கடல்கொண்டான், காஞ்சனா, நீயே யாவுமாகி ஆகிய படங்களில் நடித்த குழந்தை நட்சத்திரங்களுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரங்களுக்கான விருது வழங்கப்பட்டது

சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த editor, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதை, சிறந்த திரைக்கதை, சிறந்த வசனம், சமுக விழிப்புணர்வு, சமுக உணர்வு, சிறப்பு நடுவர் விருது ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன

ஆலம்நாட் குறும்படத்திற்கு மூன்றாம் பரிசு ரூ 25000 வழங்கப்பட்டது, Love Lust retro- கடல்கொண்டான் படங்களுக்கு இரண்டாம் பரிசு வழங்கப்பட்டது. பரிசுத்தொகை தலா 25000 வழங்கப்பட்டது
மீண்டும் மழை படத்திற்கு முதல் இடத்திற்கான விருதும், பரிசுத்தொகை ரூ 1 லட்சமும் வழங்கப்பட்டது. பரிசுகள் அறிவிக்கப்பட்ட நேரத்தில் வெற்றி பெற்றவர்களுடன் அனைவரும் இணைந்து கொண்டாடியது மகிழ்வான தருணமாக இருந்தது.

Firstframe- 2025 விருது விழாவில் முதல் பரிசு வாங்கும் அணியுடன் இணைந்து திரைப்படம் தயாரிக்கவுள்ளதாக Gembrio pictures MD திரு சுகுமார் பாலகிருஷ்ணன் அறிவித்தது மிகவும் முத்தாயப்பான விஷயமாக இருந்தது. அரைவேக்காடு படத்தையும் தயாரிக்க விரும்புகிறோம் என்று ஒரு தயாரிப்பாளர் அறிவித்தார். தயாரிப்பாளர் இமயம் கலைப்புலி S தாணு அவர்களும் படங்களை பார்த்துவிட்டு திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதாக பேசினார்.

இயக்குநர் K பாக்யராஜ் பேசும் போது Firstframe- 2025 இளம் இயக்குனர்களுக்கும், கலைஞர்களும் மிகவும் அருமையான ஒரு மேடையை அமைத்து கொடுத்திருக்கிறது. அதேபோல் மிகவும் திறமையான இயக்குநர்கள், நடிகர்கள், திரைக்கலைஞர்களை காணமுடிகிறது. இந்நிகழ்வு மூலமாக இவர்கள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்

இயக்குநர் அரவிந்தராஜ், இயக்குநர் பாண்டிராஜ், நடிகர் மணிகண்டன், நடிகர் பகவதிபெருமாள், இயக்குநர் குட்டிரேவதி, இயக்குநர் ராகவ் மிர்தாத் ஆகியோர் தங்களது அனுபவங்களை பகிர்ந்ததோடு இயக்குனர்களை உற்சாகப்படுத்தி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

திரைக்குரலின் Editor-in-chief ஆதவன் UK, அறம் மீடியாவின் நிர்வாக செயல் அதிகாரி சுகுமார் K ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து சிறப்பாக வழிநடத்தினார்கள்.

பார்வதி நாயரின் ‘உன் பார்வையில்’

பார்வதி நாயரின் ‘உன் பார்வையில்’ படத்தை – Sun NXT-இல், டிசம்பர் 19 முதல் கண்டுகளியுங்கள்

பார்வதி நாயரின் ‘உன் பார்வையில்’ – Sun NXT-இல் டிசம்பர் 19 முதல் நேரடியாக ஸ்ட்ரீமிங் ஆகிறது !

தென் இந்தியாவின் முன்னணி OTT தளமான Sun NXT, தனது பிரபலமான Direct-to-Sun NXT பிரீமியர் பட்டியலில் அடுத்ததாக ஒரு அதிரடியான திரில்லரை சேர்த்துள்ளது. டிசம்பர் 19, வெள்ளிக்கிழமை முதல், நடிகை பார்வதி நாயர் நடிப்பில், திரில்லர் ஜானரில் உருவான ‘உன் பார்வையில்’ படத்தை, Sun NXT-இல் மட்டும் நேரடியாக கண்டுகளிக்கலாம்.

இப்படத்தில் பார்வையற்ற பெண்ணாக அழுத்தமிக்க உணர்ச்சிகரமான பாத்திரத்தில், நடிகை பார்வதி நாயர் அசத்தியுள்ளார். கணவர் மற்றும் இரட்டை சகோதரியின் மர்மமான திடீர் மரணங்களைத் தொடர்ந்து, உண்மையை தேடும் அவரது பயணம், ரகசியங்களும் திருப்பங்களும் நிரம்பிய ஒரு மர்ம உலகுக்குள் நம்மை இழுத்துச் செல்கிறது.

தன்னுடைய வலுவான நடிப்பால் படத்தை முழுவதுமாக தாங்கிச் செல்லும் பார்வதி நாயரின் நடிப்பு, படத்திற்குப் பெரும் பலமாக அமைந்துள்ளது. திரைக்கதையின் மர்ம மரணங்களின் விசாரணை பக்கத்தில், முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் கதாப்பாத்திரத்தில் மகேந்திரன் நடித்துள்ளார். மேலும், கணேஷ் வெங்கட்ராமன் மற்றும் நிழல்கல் ரவி ஆகியோரின் வலுவான நடிப்பு ‘உன் பார்வையில்’ படத்தின் ஈர்க்கும் அம்சமாக திகழ்கிறது.

நடிகை பார்வதி நாயர் கூறியதாவது..,
“பார்வையற்ற பெண்ணாக நடிப்பது சவாலானதும், அதே நேரத்தில் மிகவும் நெகிழ்ச்சியான அனுபவமாகவும் இருந்தது. டிசம்பர் 19 அன்று ‘உன் பார்வையில்’ படத்தை Sun NXT-இல் நேரடியாக நீங்கள் அனைவரும் பார்த்து மகிழ்வதைக் காண, ஆவலுடன் காத்திருக்கிறேன்.”

மேலும், Sun NXT-இன் புதிய எக்ஸ்குளூசிவ் இன்வெஸ்டிகேட்டிவ் திரில்லர் ‘தீயவர் குலை நடுங்க’ படத்தையும் தவறாமல் கண்டுகளியுங்கள். ஆக்சன் கிங் அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ், அபிராமி வெங்கடாச்சலம் நடித்துள்ள இந்தப் படம், ஒரு முக்கியமான சமூக பிரச்சனையை துறுதுறு விசாரணையின் மூலம் வெளிக்கொண்டு வருகிறது. திரில்லர் ரசிகர்களுக்கு இது மிகச்சிறந்த விருந்தாக இருக்கும்.

7+ மொழிகளில் 4000+ தலைப்புகள், 44+ நேரடி சேனல்கள் ஆகியவற்றுடன், அனைத்து வயதினருக்கும் மற்றும் அனைத்து பிராந்தியங்களின் பார்வையாளர்களுக்கும் Sun NXT தொடர்ந்து முன்னணி OTT தளமாக திகழ்கிறது.

ZEE5 அடுத்த அதிரடி சீரிஸ் – ‘ஹார்டிலே பேட்டரி’ டிசம்பர் 16 முதல் தமிழில் ஸ்ட்ரீமிங் ஆகிறது!

தமிழ் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக, விஞ்ஞானமும் உணர்வுகளும் கலந்த சயின்ஸ் பிக்சன் ரொமான்ஸ் டிராமாவான ‘ஹார்டிலே பேட்டரி’ என்ற புதிய ஓரிஜினல் சீரிஸை ZEE5 வழங்குகிறது. நவீன காதலை புதிய கோணத்தில் ஆராய்கிறது—தர்க்கத்துக்கும் உணர்வுக்கும் இடையிலான எல்லைகளைத் தொட்டுப் பார்க்கும் இந்த சீரிஸை சதாசிவம் செந்தில் ராஜன் எழுதி இயக்கியுள்ளார்.குரு லக்ஷ்மன் ‘சித்’ ஆகவும், பாதினி குமார் ‘சோஃபியா’வாகவும் நடித்துள்ளனர்.

Link – https://www.youtube.com/watch?v=vTEzXB8cyGs

‘ஹார்டிலே பேட்டரி’ சோஃபியா என்ற புத்திசாலி விஞ்ஞான ஆர்வலர் பற்றிய கதை. காதல் என்பது உயிரியல் மற்றும் வேதியியல் கலவையே தவிர வேறெதுவுமில்லை என்று எப்போதும் நம்புகிறவள். தனது பெற்றோர் உட்படப் பலர் அனுபவித்த தோல்வியுற்ற உறவுகளைப் பார்த்த பிறகு, காதலில் இருக்கும் குழப்பத்தை நீக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறாள்.தனது 16 வயதில், காதலின் உண்மைத்தன்மையை அறிவியல் ரீதியாக அளவிடும் ஒரு கருவியை உருவாக்க வேண்டும் என்ற கனவை ஆரம்பிக்கிறாள்.
24-வயதில், அந்த கனவை நனவாக்குகிறாள் —ஆனால் அப்போது அவள் சந்திப்பது சித் என்ற காமிக் ரைட்டரை. சோஃபியாவின் கண்டுபிடிப்பு முற்றிலும் அர்த்தமற்றது என்று நினைக்கும் மனிதன் அவன். அறிவியல் இதயத்தைப் புரிந்துகொள்ள முடியுமா? காதலின் மொழியை அறிவியல் மொழிபெயர்க்க முடியுமா? என்பதைக் கேட்கும் ஒரு இனிமையான, சுவாரஸ்யமான பயணம் இதுவாகும்.

நடிகர் குரு லக்ஷ்மன் கூறியதாவது..,
“சித் கதாப்பாத்திரம் உணர்வுகள், உள்ளுணர்வு, காதலின் மாயாஜாலம் போன்றவற்றில் ஆழமான நம்பிக்கை கொண்ட இளைஞன். இந்த கதாபாத்திரம் எனக்குள் உள்ள நகைச்சுவையும் நெகிழ்வையும் வெளிக்கொணர உதவியது. ‘ஹார்டிலி பேட்டரி’ ஒரு சாதாரண காதல் கதை அல்ல; மனது உண்மையில் என்ன விரும்புகிறது என்பதை ஆராயும் ஒரு பயணம். ரசிகர்கள் இதைப் பார்த்து ரசிப்பதைக் காண ஆவலாக இருக்கிறேன்.”

பாதினி குமார் கூறியதாவது..,
“சோஃபியா ஒரு அற்புதமான கதாபாத்திரம்—தன்னம்பிக்கை மிக்க, புத்திசாலி, காதலை அறிவியலால் புரிந்துகொள்ளலாம் என்று நம்பும் பெண். ஆனால் அவளின் உள்ளுக்குள் உணர்வுகளுக்குள் சிக்கித் தவிப்பவள். இந்த கதாபாத்திரத்தை நடித்தது சவாலானதாகவும் நிறைவானதாகவும் இருந்தது.”

ZEE5 தமிழ் மற்றும் மலையாளம் பிசினஸ் ஹெட் மற்றும் SVP மார்க்கெட்டிங் சவுத் லாய்டு சி சேவியர் கூறியதாவது..,
‘ஹார்டிலே பேட்டரி’ அறிவியல் மற்றும் உணர்வுகளுக்கு இடையேயான மோதலையும் ஒற்றுமையையும் அழகாகப் படம் பிடித்துள்ளது. புதிய கதைக்களங்களையும் உணர்ச்சிமிக்க காட்சிப்படுத்தல்களையும் தமிழ் ரசிகர்கள் எப்போதும் வரவேற்றுள்ளனர். இந்த சீரிஸில் இருக்கும் புதுமையும், உணர்வுகளும் ஒருங்கிணைந்து, இதயத்தைத் தொடும் ஒரு அனுபவத்தை வழங்கும்.”

டிசம்பர் 16 முதல் ZEE5-ல் ‘ஹார்டிலே பேட்டரி’ சீரிஸை ரசிக்கத் தவறாதீர்கள்!