Breaking
June 6, 2026

Cinema

மாயபிம்பம் : A 2005 Love Story திரைப்படம் ஊடகங்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் இருந்து வலுவான பாராட்டுகளைப் பெற்றுவருகிறது.

சென்னை, 22 ஜனவரி 2026:
மாயபிம்பம் : A 2005 Love Story திரைப்படம் அதன் பல அடுக்குகளைக் கொண்ட கதைக்களம், திரைக்கதை மற்றும் நடிகர்களின் நடிப்புகளுக்காக பத்திரிகைகள், ஊடகங்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் இருந்து வலுவான பாராட்டுகளைப் பெற்றுவருகிறது.

கே. பாக்யராஜ், அமீர், ராம் மற்றும் அகத்தியன் உள்ளிட்ட பல முன்னணி திரையுலகப் பிரமுகர்களிடமிருந்து இப்படம் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. மேலும், ஜனவரி 19, திங்கட்கிழமை பிரசாத் லேப்ஸ்-இல் நடைபெற்ற சிறப்பு பத்திரிகை காட்சி மிகச் சிறப்பான வரவேற்பைப் பெற்றதுடன், பல தரப்புகளில் இருந்து பரவலான நேர்மறை கருத்துகள் கிடைத்துள்ளன.
இப்படத்தைச் சுற்றியுள்ள பரபரப்பிற்கு மிகப்பெரிய ஊக்கமாக அமைந்துள்ளது, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் அவர்களின் ஆதரவு. ஒரு சிறப்பு காட்சியில் திரைப்படத்தைப் பார்த்த பின்னர், இயக்குநர் கே.ஜே. சுரேந்தர் அவர்களின் முதல் திரைப்படம் வெளியாவதற்கும் முன்பே, அவரது அடுத்த திரைப்படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டு, அதற்கான ஒப்பந்தமும் (agreement) இடப்பட்டது, திரையுலகில் மிகவும் அபூர்வமான மற்றும் பாராட்டத்தக்க நிகழ்வாக பார்க்கப்படுகிறது..

பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களுக்கு பகிரப்பட்ட பிரத்யேக வீடியோவில், டாக்டர் ஐசரி கே. கணேஷ் அவர்கள் கூறியதாவது:
“புதிய நடிகர்கள் மற்றும் புதிய தொழில்நுட்ப குழு என்பதால், ஆரம்பத்தில் நான் சற்று சந்தேகத்துடன் இருந்தேன். ஆனால் திரைப்படம் நகர்ந்தபோது, முழுமையாக அதில் ஈடுபட்டு விட்டேன்.”
அவர் மேலும் கூறியதாவது:
“இந்த திரைப்படம் என் இளமை கால நினைவுகளை மீட்டெடுத்தது. நான் திரைப்படங்களைப் பார்க்கும்போது — நான் தயாரித்த திரைப்படங்களிலும் கூட — அரிதாகவே சிரிப்பேன். ஆனால் இந்த திரைப்படத்தின் முதல் பாதியில் பல தருணங்களில் மனதார சிரித்தேன்.”
திரைப்படத்தின் உணர்ச்சி தாக்கத்தை விளக்கி அவர் கூறியதாவது:
“இதற்கு முற்றிலும் மாறாக, இரண்டாம் பாதி மிகப் பெரிய உணர்ச்சி தாக்கத்தை ஏற்படுத்தியது. கிளைமாக்ஸைப் பற்றி நினைத்தாலே இன்னும் உடலில் மயிர்க்கூச்செறி வருகிறது. இதனால் மிகவும் பாதிக்கப்பட்ட நான், வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கீழ், கே.ஜே. சுரேந்தர் அவர்களின் அடுத்த திரைப்படத்தை தயாரிக்க முன்வந்துள்ளேன்.”
முதல் முறையாக திரைப்படம் எழுத, தயாரிக்க மற்றும் இயக்கும் கே.ஜே. சுரேந்தர் அவர்களால் எழுதப்பட்டு, தயாரிக்கப்பட்டு, இயக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு எட்வின் சாகே ஒளிப்பதிவு செய்துள்ளார். இசை அமைத்துள்ளார் நந்தா, எடிட்டிங் செய்துள்ளார் வினோத் சிவகுமார். இப்படத்தில் ஆகாஷ் நாகராஜன், ஜனகி ஸ்ரீநிவாசன், எஸ். ஹரி கிருஷ்ணா, ராஜேஷ் பாலா மற்றும் எம். அருண் குமார் ஆகிய புதிய நடிகர்கள் நடித்துள்ளனர்.
இத்தகைய ஒரு நடவடிக்கை திரையுலகில் மிகவும் அரிதான ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒரு இயக்குநரின் முதல் திரைப்படம் வெளியாவதற்கும் முன்பே, டாக்டர் ஐசரி கே. கணேஷ் போன்ற உயர்ந்த அந்தஸ்துடைய தயாரிப்பாளர் அவரின் அடுத்த திரைப்படத்தை தயாரிக்க முன்வருவது, மாயபிம்பம் : A 2005 Love Story திரைப்படத்தைச் சுற்றியுள்ள எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்தியுள்ளது.

ZEE5-ல் மீண்டும் ஒரு வலுவான கதையுடன் சமுத்திரகனி! “தடயம்” – விரைவில் டிஜிட்டல் வெளியீடு

இந்தியாவின் முன்னணி ஓடிடித் தளமான ZEE5 தமிழின் பிராந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், தனது அடுத்த படைப்பான “தடயம்” படைப்பின் அறிவிப்பை, இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளுக்கும், சமூகப் பார்வை கொண்ட நடிப்புக்கும் பெயர் பெற்ற சமுத்திரகனி, மீண்டும் ZEE5 ஓடிடி தளத்தில் ஒரு முக்கிய படைப்புடன் வருகிறார். “தடயம்” எனும் இந்த புதிய படைப்பு, விரைவில் ZEE5-ல் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நவீன் குமார் பழனிவேல் இயக்கத்தில், அஜய் கிருஷ்ணா தயாரிப்பில் உருவாகியுள்ள “தடயம்”, சமுத்திரகனியின் வலுவான நடிப்புத் திறனை மையமாகக் கொண்டு உருவான ஒரு தீவிரமான கதையம்சம் கொண்ட படைப்பாக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இதற்கு முன்னதாக, சமுத்திரகனி இயக்கி நடித்த “விநோதய சித்தம்” திரைப்படம் ZEE5-ல் வெளியானபோது, விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்தப் படம், வாழ்க்கை–மரணம், நேரம், மனித உறவுகள் போன்ற ஆழமான கருத்துகளை எளிய முறையில், தாக்கம் கொண்ட திரைக்கதையில் சொல்லி, ZEE5-யின் முக்கியமான தமிழ் படைப்புகளில் ஒன்றாக மாறியது.

அந்த வெற்றியின் தொடர்ச்சியாக, “தடயம்” திரைப்படமும் ZEE5 தமிழ் ரசிகர்களுக்கு ஒரு நினைவில் நிற்கும் அனுபவமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாகியுள்ளது. கதையின் விவரங்கள் இன்னும் முழுமையாக வெளியிடப்படாத நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள போஸ்டர் இப்படம் காவல்துறை பின்னணியில் ஒரு அழுத்தமான திரில்லராக இருக்கும் ஆவலைத் தூண்டுகிறது.

தமிழ் ரசிகர்கள் ஒரு புதிய பயணத்திற்கு தயாராகுங்கள். சமுத்திரகனி நடிப்பில் “தடயம்” – விரைவில் ZEE5-ல் மட்டும்.

“காந்தி டாக்ஸ்” டீசர் வெளியீடு: ஜனவரியில் திரையரங்குகளை ஆட்கொள்ளப் போகும் மௌனம் !!

சத்தமாய் பேசும் திரையுலகில் மௌனத்தைத் துணிச்சலுடன் தேர்ந்தெடுத்த Zee Studios “காந்தி டாக்ஸ்” டீசர் வெளியீடு !

அதிரடியான வசனங்களும் சத்தமுள்ள காட்சிகளும் நிரம்பிய இன்றைய திரை உலகில், “காந்தி டாக்ஸ்” படத்தின் டீசர் ஒரு துணிச்சலான மாற்றமாக வந்துள்ளது. ஒரு வசனம் கூட இல்லாமல், முழுக்க முழுக்க மௌனம், உணர்வு மற்றும் தாக்கம் கொண்ட காட்சிகள் மூலம் பார்வையாளரை கட்டிப் போடும், ஒரு வித்தியாசமான அனுபவமாக இந்த டீசர் உருவாகியுள்ளது.

வார்த்தைகள் இல்லாத போதிலும், இந்த டீசர் நம்முள் பல கேள்விகளை எழுப்புகிறது. தீவிரமான காட்சிகளும், மௌன இடைவெளிகளும், நம்முள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, “காந்தி உண்மையில் என்ன பேசப் போகிறார்?” என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது. சொல்லப்படாத விஷயங்களின் பாரம் மௌனத்தின் மூலம் வலுவாக உணர்த்தப்படுகிறது.

நடிகர்கள் விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி, அதிதி ராவ் ஹைதாரி மற்றும் சித்தார்த் ஜாதவ் ஆகிய அபூர்வமான நடிகர் குழு வார்த்தைகள் இன்றியே உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் திறமையை டீசரில் நிரூபித்துள்ளனர்.

கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில், இப்படத்திற்கு, இசை ஜாம்பவான் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இசையே கதையின் குரலாக மாறி, ஒவ்வொரு மௌனத்தையும், பதற்றத்தையும், சொல்லப்படாத எண்ணங்களையும் உணர்ச்சிபூர்வமாக உயர்த்துகிறது.

Zee Studios வழங்க, Kyoorius Digital Pvt Ltd, Pincmoon Meta Studios மற்றும் Movie Mill Entertainment இணைந்து தயாரிக்கும் காந்தி டாக்ஸ், திரை மொழியின் வழக்கமான விதிகளை உடைக்கும், மௌனத்தை ஒரு சக்திவாய்ந்த கதையாக்கமாக மாற்றும் வித்தியாசமான திரையரங்கு அனுபவமாக இருக்கும்.

2026 ஜனவரி 30 அன்று “காந்தி டாக்ஸ்” திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

youtu.be/Dv3qq4-TSv8

சுந்தர் சி, விஷால், ஹிப்ஹாப் தமிழா கூட்டணியில் புதிய கமர்ஷியல் எண்டர்டெயினர் – புருஷன் !

தமிழ் சினிமாவின் வெற்றிகரமான சுந்தர் சி – விஷால் கூட்டணி மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளது. “புருஷன்” என தலைப்பிடப்பட்ட இந்த புதிய கமர்ஷியல் எண்டர்டெயினர் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, தமிழ் திரையுலகிலும் ரசிகர்களிடையிலும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“புருஷன்” திரைப்படத்தை Benzz Media Pvt Ltd சார்பில் A.C.S.அருண்குமார் மற்றும் Avni Cinemax (P) Ltd சார்பில் குஷ்பு சுந்தர் இணைந்து, பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். இப்படத்தை சுந்தர் சி இயக்க, விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், பிரபல இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது, திரைப்பட வர்த்தக வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

இந்த படம், சுந்தர் சி – விஷால் கூட்டணி இணையும் நான்காவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், சுந்தர் சி – விஷால் – ஹிப்ஹாப் தமிழா கூட்டணி, முன்னதாக வெளியான “ஆம்பள” திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் இணைவது, ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. திரைக்கதை மற்றும் வசனம் – வெங்கட் ராகவன்.

சமீபத்தில் வெளியான “புருஷன்” படத்தின் அறிவிப்பு வீடியோ, அதிரடி மற்றும் நகைச்சுவை அம்சங்களுடன் ரசிகர்களை கவர்ந்து, சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. குறுகிய நேர வீடியோவிலேயே, சுந்தர் சி-யின் தனித்துவமான கமர்ஷியல் பாணி வெளிப்பட்டு, படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது.

இப்படத்தில் நாயகியாக தமன்னா நடிக்க, பிரபல நகைச்சுவை நடிகர் யோகிபாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். “கமர்ஷியல் கிங்” சுந்தர் சி-யின் முத்திரையுடன், குடும்பத்தோடு ரசித்து கொண்டாடும் ஒரு முழுமையான கமர்ஷியல் எண்டர்டெயினராக புருஷன் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ள நிலையில், நடிகர்–நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் குழு பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

பாலிவுட்டில் கால் பதித்த இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் (Hesham Abdul Wahab )!!

தென் இந்தியாவிலிருந்து பாலிவுட் வரை –ஹேஷம் அப்துல் வஹாப் (Hesham Abdul Wahab ) இசைப் பயணத்தின் புதிய அத்தியாயம்!!

தென் இந்திய சினிமாவில் தனது தனித்துவமான இசையால் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் (Hesham Abdul Wahab) பாலிவுட் திரையுலகில் கால்பதித்திருக்கிறார். சஞ்சய் லீலா பன்சாலி (Sanjay Leela Bhansali) தயாரிக்கும் “தோ திவானே ஷெகர் மெய்ன்” (Do Deewane Sheher Mein) திரைப்படத்தின் மூலம், ஹேஷாம் இந்தி திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.இது தென் இந்திய திரைப்பட உலகுக்கே பெருமை சேர்க்கும் தருணமாக அமைந்துள்ளது. இசைக்காக அறியப்படும் ஒரு படைப்பாளி, பல மொழித் திரையுலகுகளை வெற்றிகரமாக கடந்து, இந்தியாவின் மிகப்பெரிய சினிமா தளமான பாலிவுட்டில் அறிமுகமாகுவது குறிப்பிடத்தக்கது.

“தோ திவானே ஷெகர் மெய்ன்” Do Deewane Sheher Mein படத்தை ரவி உத்யாவர் Ravi Udyawar இயக்கியுள்ளார். பாலிவுட் பிரபல இசையமைப்பாளர் ஜோடி சச்சின் – ஜிகர் (Sachin–Jigar ) உடன் இணைந்து இப்படத்தில் ஒரு பாடலுக்கு ஹேஷம் இசையமைத்துள்ளார். ஹேஷம் இசையமைத்த பாடலை ஜூபின் நௌடியல் Jubin Nautiyal மற்றும் நீதி மோகன் Neeti Mohan பாடியுள்ளனர்; பாடல் வரிகளை அபிருச்சி Abhiruchi எழுதியுள்ளார்.

இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப், மலையாளம், தெலுங்கு, தமிழ் மொழிகளில் பல வெற்றிப்படங்களைத் தந்தவர். குறிப்பாக தெலுங்கு சினிமாவில், குஷி, ஹாய் நானா வெற்றிப்படங்களைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான கேர்ள்ஃபிரண்ட் திரைப்படத்தின் தனித்துவமான இசை அவருக்கு மகுடம் சூட்டியது. மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் Million Dollar Studios தயாரித்த ஒன்ஸ் மோர் திரைப்படமும் , சூரி நடித்த மாமன் படமும் தமிழ் திரையுலகில் அவருக்கு பெரும் பாராட்டுகளை பெற்றுத்தந்தது.

தற்போது ஹேஷம் அப்துல் வஹாப் பல பிரம்மாண்ட படைப்புகளில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். தெலுங்கில் ஆதித்யா ஹாசன் (Adithya Haasan) இயக்கும் பிரம்மாண்ட படம், ஹாய் நானா இயக்குநர் சௌர்யுவ்(Shouryuv) உடன் ஒரு புதிய படம், மேலும் “ஹிட்” படத்தின் இயக்குநர் சைலேஷ் கோலனு (Sailesh Kolanu) உடன் ஒரு திரைப்படத்திலும் பணியாற்றி வருகிறார். மேலும் தமிழில் அர்ஜூன் தாஸ் நடித்துவரும் சூப்பர்ஹீரோ திரைப்படம் , அவரது அடுத்த தமிழ் வெளியீடாக உருவாகி வருகிறது. இதனுடன், பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகும் மேட் இன் கொரியா (Made in Korea) — Netflix நிறுவனம் தயாரிக்கும் முதல் இந்தோ–கொரியன் முழுநீள திரைப்படம் இது.சர்வதேச அளவில் கவனம் பெறும் ஒரு முக்கியமான இந்தியா–தென் கொரியா கூட்டுத் தயாரிப்பாக இந்த படம் உருவாகி வருகிறது.

இதற்கிடையில், ஹேஷம் கன்னட திரையுலகிலும் அறிமுகமாகியுள்ளார். கணேஷ் (Golden Star Ganesh) நடித்துவரும் படத்திற்கு இசையமைத்துள்ளார். மலையாளத்தில், விரைவில் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் மதுவிது திரைப்படத்திற்கும் ஹேஷம் இசையமைத்துள்ளார்.

ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைக்கும் முதல் பாலிவுட் படமான “தோ திவானே ஷெகர் மெய்ன்” (Do Deewane Sheher Mein) படத்தை, ஜீ ஸ்டூடியோஸ் (Zee Studios),ரேங்க்கார்ப் மீடியா (Rankcorp Media), பன்சாலி புரொடக்‌ஷன்ஸ் (Bhansali Productions), மற்றும் ரவி உத்யாவர் ஃபிலிம்ஸ் (Ravi Udyawar Films ) இணைந்து தயாரித்துளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 20ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது

L. K. அக்ஷய் குமார் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 13 ‘

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் S. S. லலித் குமார் தயாரிப்பில் L. K. அக்ஷய் குமார் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 13 ‘ படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டு, படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது

‘சிறை ‘ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அழுத்தமான அடையாளத்தை பதிவு செய்திருக்கும் நடிகர் L. K. அக்ஷய் குமார் கதையின் நாயகனாக நடிக்கும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் ‘புரொடக்ஷன் நம்பர் 13’ படத்தின் பூஜை சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகி வரும் பெயரிடப்படாத திரைப்படத்தில் L. K . அக்ஷய் குமார், ஜாபர் சாதிக், நோபல் K. ஜேம்ஸ், அருணாச்சலேஸ்வரன் PA , ஷாரீக் ஹாஸன் மற்றும் ‘டியூட்’ படத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள கலை இயக்கத்தை P. S. ஹரிஹரன் கவனிக்கிறார். பிரியா ஆடை வடிவமைப்பாளராகவும், K. அருண் மற்றும் மணிகண்டன் ஆகியோர் நிர்வாக தயாரிப்பாளர்களாகவும் பொறுப்பேற்றிருக்கிறார்கள். அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் ஃபன் என்டர்டெய்னராக (( Fun Entertainment)) தயாராகும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் S. S. லலித் குமார் தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தில் L. K. விஷ்ணு குமார் இணை தயாரிப்பாளராகியிருக்கிறார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் நேரடியாக உருவாகி வரும் இந்த படத்தை எதிர்வரும் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

புதுமுக நடிகர் L. K .அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான, ‘சிறை ‘ திரைப்படம் இதுவரை உலக அளவில் 30 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்து வருகிறது. இதனால் நடிகர் L. K. அக்ஷய் குமார் நடிப்பில் தயாராகி வரும் இப்படத்தினை பற்றிய புதிய அப்டேட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

டோவினோ தாமஸ்  பிறந்த நாளில் “பள்ளிச்சட்டம்பி” (Pallichattambi)  ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!


 
டோவினோ தாமஸ் பிறந்தநாள் சிறப்பு போஸ்டரை வெளியிட்ட “பள்ளிச்சட்டம்பி”  படக்குழு !   ஏப்ரல் 9 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது !!

டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில், டோவினோ தாமஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும், பெரிய பட்ஜெட்டில் உருவாகும் “பள்ளிச்சட்டம்பி” திரைப்படத்தின் மோஷன் போஸ்டர்  வெளியாகி, சமூக வலைதளங்களில் மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்று, அதிக அளவில் கவனம் ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து, டோவினோ தாமஸின் பிறந்தநாளை முன்னிட்டு, பள்ளிச்சட்டம்பி படக்குழு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஒரு சிறப்பு பிறந்தநாள் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, அவரது கதாப்பாத்திரத்தை வெளிப்படுத்தும் வகையில்  வெளியிட்டுள்ளது.

இந்த சிறப்பு போஸ்டர் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. “பள்ளிச்சட்டம்பி” திரைப்படம் உலகம் முழுவதும் ஏப்ரல் 9 முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

டோவினோ தாமஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, டிஜோ ஜோஸ் ஆண்டனி ( Dijo Jose Antony) இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை, வேர்ல்ட்வைட் ஃபிலிம்ஸ் (Worldwide Films banner) சார்பில் நௌஃபல் மற்றும் பிரிஜீஷ் (Noufal and Brijeesh), சி க்யூப் ப்ரோஸ் எண்டர்டெயின்மென்ட்ஸ் ( C Qube Bros Entertainments) சார்பில் சாணுக்கியா சைதன்யா சரண் ஆகியோர் தயாரிக்கின்றனர்.  பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தில் டோவினோ தாமஸ் இதுவரை ரசிகர்கள் காணாத முற்றிலும் புதிய தோற்றத்தில் நடிக்கிறார்.

நாயகியாக கயாடு லோஹர் நடித்துள்ளார். மேலும் விஜயராகவன், சுதீர் கரமண, பாபுராஜ், வினோத் கெடமங்கலம், பிரஷாந்த் அலெக்சாண்டர் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். 1950–60கள் காலகட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

மலையாளம் உட்பட ஐந்து மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் திரைக்கதை எஸ். சுரேஷ் பாபு எழுதியுள்ளார்.

படத்தின் ஒளிப்பதிவை டிஜோ டோமி, இசையமைப்பை ஜேக்ஸ் பிஜாய், எடிட்டிங்கை ஸ்ரீஜித் சரங், கலை வடிவமைப்பை திலீப் நாத் மேற்கொண்டுள்ளனர்.

இணை தயாரிப்பாளர்களாக மேகாஸ்யாம் மற்றும் தண்சீர் பணியாற்றுகின்றனர். உடை வடிவமைப்பை மஞ்சுஷா ராதாகிருஷ்ணன், மேக்கப்பை ரஷீத் அகமது கவனிக்கின்றனர். லைன் புரொட்யூசராக அலெக்ஸ் E. குரியன், நிதிக் கட்டுப்பாட்டாளராக அனில் அம்பல்லூர், தயாரிப்பு கட்டுப்பாட்டாளராக ராஜேஷ் மேனன் பணியாற்றியுள்ளனர்.

முதன்மை இணை இயக்குநர்களாக ரெனிட் ராஜ் மற்றும் கிரண் ரஃபேல் உள்ளனர். சவுண்ட் டிசைன் சிங்க் சினிமா, கலை இயக்கம் ராஜேஷ் மேனன், காஸ்டிங் பினோய் நம்பால, ஸ்டில்ஸ் ரிஷால் உன்னிகிருஷ்ணன். போஸ்டர் வடிவமைப்பு யெல்லோடூத்ஸ், டிஜிட்டல் மார்க்கெட்டிங் அகில் விஷ்ணு வி.எஸ், மக்கள் தொடர்பு  யுவராஜ்.

“பள்ளிச்சட்டம்பி”ஏப்ரல் 9 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது !!

சசிகுமார் நடிக்கும் ‘ மை லார்ட்’ படத்தின் டிரெய்லர்  வெளியீடு

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ மை லார்ட்’ எனும் திரைப்படத்தின் டிரெய்லர்  வெளியிடப்பட்டிருக்கிறது.

முன்னணி இயக்குநரான ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘மை லார்ட் ‘ எனும் திரைப்படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம் , ஆஷா சரத் , இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, பாடலாசிரியர் யுகபாரதி பாடல்களை எழுத,  ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை முனி பால்ராஜ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை சத்யராஜ் நடராஜன் கவனிக்கிறார். டி. ஆர். பூர்ணிமா ஆடை வடிவமைப்பாளராக பணியாற்ற, நடனத்தை  எம். ஷெரீப்பும், சண்டை காட்சிகளை பி. சி. ஸ்டண்ட்டும் அமைக்கிறார்கள்.  உணர்வு பூர்வமான படைப்பாக தயாராகும் இந்த திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிக்கிறார். இதனை அம்பேத்குமார் வழங்குகிறார் .

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் ‘ மை லார்ட் ‘ படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கதையின் நாயகனான சசிகுமார் பேசும் வசனங்களும், விளிம்பு நிலை மக்களுக்கான ஜனநாயக உரிமைகளும் சிறுநீரக திருட்டு தொடர்பான காட்சி அமைப்புகளும் ரசிகர்களை கவனத்தை‌ ஈர்த்திருக்கிறது.  அரசியல் ஆதிக்கத்தில் சிக்கி இருக்கும் எளிய மனிதர்களின் வாழ்வியலை உணர்வு பூர்வமாக விவரிப்பதால் இந்த முன்னோட்டம் அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

தேசிய விருதினை வென்ற படைப்பாளியான ராஜு முருகன் –  தொடர்ந்து வெற்றி படங்களை வழங்கி வரும் சசிகுமார் ஆகிய இருவரும் முதன்முறையாக ‘மை லார்ட்’ படத்தில் ஒன்றிணைந்திருப்பதாலும்…  டிரெய்லர் இடம் பிடித்திருக்கும் உணர்வுபூர்வமான காட்சிகளாலும் இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பும் எகிறி இருக்கிறது.

Link – https://www.youtube.com/watch?v=KR05JMlq8K8

அர்ஜூன் தாஸ், அன்னா பென் மற்றும் யோகிபாபு, வடிவுக்கரசி நடிக்கும் “கான் சிட்டி”(Con City)

அர்ஜூன் தாஸ், அன்னா பென் மற்றும் யோகிபாபு, வடிவுக்கரசி நடிக்கும் “கான் சிட்டி”(Con City) பட டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக்கை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார் !!

தமிழ் சினிமாவில் புதுமையான கதைக்களங்களுடன் ரசிகர்களை கவரும் படைப்புகள் தொடர்ந்து உருவாகி வரும் நிலையில், முழுமையான ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகும் இந்த ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்

இப்படத்தில் முன்னணி இளம் நட்சத்திர நடிகர் அர்ஜூன் தாஸ், மலையாள முன்னணி நடிகை அன்னா பென், நகைச்சுவை நடிகர் யோகிபாபு  ஆகியோருடன் வடிவுக்கரசி மற்றும் குழந்தை நட்சத்திரம் அகிலன் ஆகிய இருவரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படம், Power House Pictures நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்கி வருகிறார். 

‘கான் சிட்டி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பார்த்தவுடன் புன்னகை வரவைக்கும் அதே நேரம்,  ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் எமோஷனல் பக்கத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.  நகரப் பின்னணியில், ஆபிஸ் பேக்குடன் அர்ஜூன் தாஸ் அவரைச் சுற்றி ஹேண்ட் பேக்குடன் அன்னா பென்,  பயணப்பெட்டி பையுடன் யோகிபாபு மற்றும் வடிவுக்கரசி ஆகியோருடன் வீல் சேரில் ஒரு வெற்றிக் கோப்பையுடன் குழந்தை அகிலன் என,  முற்றிலும் வித்தியாசனான  இந்த போஸ்டர்,  படத்தின் கதைக்களம் என்னவாக இருக்கும் எனும் ஆவலைத் தூண்டுகிறது. கான் சிட்டி எனும் தலைப்பு இது முழுமையான கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினர் படம் என்பதை உணர்த்துகிறது.

இதுவரை படப்பிடிப்பு 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், மங்களூர், சென்னை, மும்பை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

புதுமையான டைட்டில் & ஃபர்ஸ்ட்லுக் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது.

தமிழில் தொடர்ந்து வெற்றிப்படங்களைத் தந்து வரும்  இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்  இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என்பதும் ரசிகர்களுக்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

தொழில்நுட்ப குழு

எழுத்து & இயக்கம்: ஹரிஷ் துரைராஜ்
தயாரிப்பு: பவர் ஹவுஸ் பிக்சர்ஸ்
ஒளிப்பதிவு: அரவிந்த் விஸ்வநாதன்
எடிட்டிங்: அருள் மோசஸ்
இசை: ஷான் ரோல்டன்
கலை இயக்கம்: ராஜ் கமல்
உடை வடிவமைப்பு: நவா ராம்போ ராஜ்குமார்
ஸ்டண்ட்: ஆக்ஷன் சந்தோஷ்
மக்கள் தொடர்பு: யுவராஜ்

ஆர்வமும் ஈடுபாடும் : நேதாஜி பிரபு

ஒரு போட்டோ ஷூட்டுக்கு ஓராண்டு உழைப்பு : வியக்க வைக்கும் நேதாஜி பிரபு!

தமிழ்த் திரையுலகில் அறிமுக கதாநாயகனாக, தயாரிப்பாளராக ‘ஒளடதம்’ படத்தின் மூலம் அறிமுகமானார் நேதாஜி பிரபு.மெடிக்கல் மாஃபியாக்களைப் பற்றிப் பேசியது அந்தப் படம். ‘ஒளடதம்’ படத்திற்குப் பிறகு தனது அடுத்த பயணத்தைத் தொடங்கியுள்ளார் நேதாஜி பிரபு.

சிறு இடைவெளிக்குப் பிறகு தமிழ்த் திரையுலகில் மறுபிரவேசம் செய்யும் வகையில் அவர் அட்டகாசமான ஒரு போட்டோ ஷூட் எடுத்துள்ளார்.

தனது தோற்றத்திற்காக உடல் எடையைக் கூட்டி முறுக்கேற்றி,சுமார் ஓர் ஆண்டாக தாடி வளர்த்து, தனது தோற்றத்தை மாற்றியுள்ளார்.இந்த போட்டோ ஷூட்டில் எட்டு விதமான ஸ்டைல்களில் எட்டு விதமான மாறுபட்ட தோற்றங்களில் 15 மணி நேரத்தில் 30 உடைகள் மாற்றி எடுத்துள்ளார்.

இப்படிப்பட்ட தோற்ற மாற்றங்களில்
500-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் எடுத்து இதுவரை யாரும் செய்யத் துணியாத வகையில் இந்த போட்டோ ஷூட்டை நடத்தி முடித்துள்ளார்.

இதன் மூலமாக தமிழ்த் திரையுலகில் தனது அடுத்த கணக்கைத் தொடங்குவதற்கு ஆர்வமாக களம் இறங்கி உள்ளார் நேதாஜி பிரபு.

எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் ஏற்று நடிக்கக் கூடிய வகையில் உடல், உள்ளம், தோற்றம், ஆர்வம், ஈடுபாடு ,அர்ப்பணிப்பு, என அத்தனை கோணங்களிலும் தன்னை முழுத்தகுதியாக்கிக் கொண்டு களத்திற்கு வந்துள்ளார்.

சினிமா என்பது தன்னை நோக்கிக் காதலுடனும் அர்ப்பணிப்புடனும் வருபவர்களைக் கைவிடாது என்பதற்கு உதாரணமாக அவர் இதைச் செய்துள்ளார்.சினிமாவை யாரும் ஏனோ தானோ என்றோ அலட்சியமாகவோ பார்க்கக் கூடாது. தனக்கான தகுதி உள்ளவர்களை அது அணைத்துக் கொள்ளும் என்பதைச் சொல்லும் வகையில் இதைச் செய்துள்ளார் .இதைப் பார்க்கும்போது இது நாள் வரை படை திரட்டி வந்தவர், இப்போது போர் தொடுக்க இருக்கிறார் என்று சொல்லத் தோன்றுகிறது.

நேதாஜி பிரபுவின் இந்த அயராத உழைப்பின், நம்பிக்கையின் வெளிப்பாடாக உருவாகியுள்ள இந்த போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு இங்கே…

காட்சி ஊடகங்கள் அனைத்திலும் முகம் காட்டும் வகையில் நேதாஜி பிரபு ஆர்வமாக இருக்கிறார்.