Breaking
August 27, 2026

Cinema Reviews

“மக்கள் தலைவா” திரை விமர்சனம்

ஒரு காலத்தில் காமராஜர் வெளியில் செல்லும் பொழுது அங்கு மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் பார்த்து ஏன் படிக்கச் செல்லவில்லை என்று கேட்டதாகவும் மாடு மேய்த்தால் தான் எங்களுக்கு சோறு என்று அந்த மாணவர்கள் கூற அதை கேட்டு அந்த நிமிடத்தில் சத்துணவு திட்டத்தை கொண்டு வந்ததாக ஒரு வரலாறு பேசுவது உண்டு
அந்த வரலாறில் வந்த ஒரு மாணவனாக ராதாரவி காமராஜர் மூலம் படித்து மிகப் பெரிய ஆளாக ஒரு செல்போன் கம்பெனியின் ஓனராக இருக்கிறார்
ஒரு தென்கிராமத்தில் ரவி மரியா தான் பப்ளிசிட்டியாக சின்ன சின்ன போராட்டங்களை செய்து கொண்டு காமெடி என்று கூறிக் கொண்டும் அந்த ஊரில் சுற்றி வரும் ஒரு சில்வண்டு அரசியல்வாதியாக இருக்கிறார் அவருக்கு துணையாக கஞ்சா கருப்புமற்றும் அக்கினி எஸ் வருண் நண்பராகவும் வருகிறார்கள்
45 வயதாகியும் ரவி மரியா திருமணமாகாமல் பெண்கறி கொண்டும் இருக்கிறார் இந்த சூழ்நிலையில் ராதாரவி ஒரு கட்சியை ஆரம்பித்து அதற்கு ரவி மரியாவை தலைவராக போடுகிறார் அந்த நேரத்தில் வரும் தமிழக தேர்தலில் போட்டியிடவும் முடிவு செய்கிறார்
ஆனால் தேர்தலில் எவ்வாறு ஜெயிப்பது என்று யோசித்து புது விதமாக ஒரு முடிவு எடுக்கிறார்கள் அதாவது முதலமைச்சர் யார் என்றால் இவர்களுக்கு ஓட்டு போடும் வாக்காளர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து முதலமைச்சராக தேர்வு செய்யப் போகிறோம் அதுதான் மக்கள் முதலமைச்சர் திட்டம் என்று செய்து மக்களை கவர்ந்து தேர்தலில் வெல்லவும் செய்கிறார்கள் ராதாரவி ஆரம்பித்த கட்சி ஆனால் இதில் ரவி மாரியா மட்டும் போட்டியிடுவதில்லை அவர் எங்கேயோ சென்று செட்டில் ஆகிவிடுகிறார்
இந்த சூழ்நிலையில் மக்கள் முதல்வர் என்று ஒரு அரை லூசை தேர்ந்தெடுக்கிறார் ராதாரவி அதற்கு ஒரு காரணமும் கூறுகிறார் அதாவது காமராஜரை மக்கள் ஒரு காலத்தில் தேர்தலில் தோற்கடிக்கிறார்கள் அவரால் வளர்ந்த மாணவரான ராதாரவியால் அதை தாங்க முடியாமல் இப்பொழுது தமிழக மக்களை பழிவாங்க ஒரு பைத்தியத்தை முதலமைச்சர் ஆகிவிட்டு சென்றுவிடுகிறார் இதுதான் இந்த மக்கள் தலைவன் படத்தில் கதை
இந்த படத்தில் நாயகனாக அதுவும் முதிர் நாயகனாக ரவி மரியா இதுவரை வில்லன் மற்றும் காமெடி கதாபாத்திரங்கள் நடித்து வந்தவர் இது நாயகன் என்ற பெயரில் வலம் வருகிறார் மேலும் இந்த படத்தில் ராதாரவி அக்ஷரா விஜய் கஞ்சா கருப்பு பழ கருப்பையா நாஞ்சில் சம்பத் கவிதாலயா சரவணன் என்று பலரும் நடித்திருக்கிறார்கள் இந்த எழுதி ராம் தேவ் இயக்கியிருக்கிறார்

“Disclosure Day” movie review

Genre: Thriller
Cast: Emily Blunt, Josh O’Connor, Colin Firth, Eve Hewson
and Colman Domingo
Directed by Steven Spielberg
Screenplay by: David Koepp
Story by: Steven Spielberg
Producers: Kristie Macosko Krieger and Steven Spielberg
Executive Producers: Adam Somner and Chris Brigham

If you found out we weren’t alone, if someone showed you, proved it to you, would that frighten you? This summer, the truth belongs to eight billion people.
We are coming close to … Disclosure Day.

Universal Pictures is proud to release a new original event film created and directed by Steven Spielberg. The film stars SAG winner and Oscar® nominee Emily Blunt (Oppenheimer, A Quiet Place), Emmy and Golden Globe winner Josh O’Connor (Challengers, The Crown), Oscar® winner Colin Firth (The King’s Speech, Kingsman franchise), Eve Hewson (Bad Sisters, The Perfect Couple) and two-time Oscar® nominee Colman Domingo (Sing Sing, Rustin).

Based on a story by Spielberg, the screenplay is by David Koepp, whose previous work with Spielberg includes the scripts for Jurassic Park, The Lost World: Jurassic Park, War of the Worlds and Indiana Jones and the Kingdom of the Crystal Skull. Combined, those films earned more than $3 billion worldwide. Koepp also wrote the script for this 2025’s Jurassic World Rebirth.

Disclosure Day is produced by five-time Academy Award® nominee Kristie Macosko Krieger (The Fabelmans, West Side Story) and by Spielberg for Amblin Entertainment. The executive producers are Adam Somner and Chris Brigham.

Steven Spielberg is one of the industry’s most successful and influential filmmakers. The top-grossing director of all time, Spielberg has helmed such blockbusters as Jaws, E.T. The Extra-Terrestrial, the Indiana Jones franchise and Jurassic Park.

Among his myriad honors, he is a three-time Academy Award® winner, including Oscars® for Best Director and Best Picture for Schindler’s List, which received a total of seven Oscars®, and for Best Director for Saving Private Ryan. His most recent film, The Fabelmans, was released by Universal in 2022 and received seven Academy Award® nominations, including for Directing, Best Original Screenplay, Best Actress and Best Picture.

“எக்ஸாம்” திரைவிமர்சனம்

குரூப் 1, குரூப் 2 போன்ற போட்டித் தேர்வுகளில் நடக்கிற சிலமுறைகேடு
களை மையமாக வைத்து உருவானதுதான் இந்த கதை இது.
“ஒரே ஒரு தேர்வு… ஆனால் பலரின் வாழ்க்கையை மாற்றும் போராட்டம்!”

கல்வி, போட்டித் தேர்வு, பெற்றோரின் எதிர்பார்ப்பு, மாணவர்களின் மனஅழுத்தம் — இவற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள வெப் சீரிஸ் தான் Exam. சாதாரணமாக ஒரு “எக்ஸாம் டிராமா” போல தோன்றினாலும், இதன் பின்னால் இருக்கும் சமூக அழுத்தங்களையும், மாணவர்கள் எதிர்கொள்ளும் மனநிலையையும் மிகவும் நெருக்கமாக காட்டுகிறது.
ஒரு முக்கியமான போட்டித் தேர்வை எழுத தயாராகும் சில மாணவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து கதை நகர்கிறது.
ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு பின்னணி, குடும்ப சூழல், கனவு மற்றும் அழுத்தங்கள் இருக்கின்றன.ஒருவருக்கு குடும்பத்தின் நம்பிக்கை,
மற்றொருவருக்கு வாழ்க்கையை மாற்றும் கடைசி வாய்ப்பு,
இன்னொருவருக்கு சமூக அழுத்தம்.இந்த எல்லா உணர்வுகளும் சேர்ந்து தேர்வு மையத்தில் வெடிக்கும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

துஷாரா விஜயன், அப்பாஸ், அதிதி பாலன் ஆகியோர் இந்த வெப் தொடரில்முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
துஷாரா விஜயன்தனது கதாபாத்திரத்தை நேர்த்தியாக செய்திருக்கிறார்.ஆனால், இந்தக் கதைக்கு அவர் எந்த மிகுந்த அளவிற்கு பொருந்துகிறார்என்ற கேள்வி எழுகின்றது. அதிதி பாலன் போலீஸ் அதிகாரிகதாபாத்திரம் என்றாலும், பாதி தொடர் ஒரு பத்துக்கு பத்து மேற்பட்ட அறைக்குள்ளே கடத்தப்பட்டநிலையில் முடிகின்றது
அப்பாஸ் ஒரு கதாபாத்திரத்தில் இன்னும் ஓரு அழுத்தமாக நடிக்க வைத்தியிருந்தால்.
இன்னும் வலுவாக இருந்திருக்கலாம்.
தேர்வுமுறை
கேடுகளை மட்டும் தெளிவாக பேசியிருந்தால் கதைக்கு சிறப்பாக அமைந்திருக்கும்.

“சட்டென்று மாறுது வானிலை”திரைவிமர்சனம்

ரேட்டிங்: 3 / 5 ⭐

யாரும் இல்லாமல் தனியாக வளர்ந்த இளைஞன் ஜெய் ஒரு ஐடி கம்பெனியில் வேலை செய்கிறான் ஹீரோயினை சந்திக்கும் ஜெய், திடீரென காதலித்து உடனடியாக திருமணம் செய்து கொள்கிறார்கள் ஆனால் அந்த திருமணத்திற்கு பிறகு இருக்கும் கடன் பண பிரச்சினை ஆகியவை அவர்களது வாழ்க்கையை மாற்றுகிறது. இந்த சூழலில் நாயகியின் அப்பாவோ அரசியல்வாதி, அவர்களின் துரத்தல் ஒரு பக்கம் எதிரிகளின் மிரட்டல் ஒரு பக்கம் இதை சமாளித்து அவர்கள் எப்படி வெளியில் வருகிறார்கள் என்பது படத்தின் கதையாக இருந்தாலும் ,

திரைக்கதையானது பல்வேறு கிளைக் கதைகளை கொண்டு பயணிக்கிறது. முக்கியமாக வில்லன் ஹோட்டலில் ரகசிய கேமரா வைத்து தேனிலவு கொண்டாட வரும் ஜோடிகளின் அந்தரங்க வீடியோக்களை எடுத்து அதை porn சைடில் போட்டு பணம் சம்பாதிக்கும் கொடூரமான வில்லன். இதை சுற்றி ஒரு கதை பயணிக்கிறது,ஒரு அரசியல்வாதி தன் மனைவியை கொலை செய்கிறான் அதை நோக்கியும் பயணப்படுகிறது ஹோட்டலில் எடுக்கப்படும் அந்தரங்க வீடியோ வெளியில் வந்து அதன் மூலம் தற்கொலை செய்து கொள்ளும் இருவரின் கதையை சொல்லுகிறது. இப்படி பல்வேறு திரைக்கதைகளை ஒரு புள்ளியில் இணைக்க இயக்குனர் முயற்சி செய்திருக்கிறார் அந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா என்பது தான் சட்டென்று மாறுது வானிலை படத்தின் திரை கதையாக எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் பாபு விஜய்
இந்தப் படத்தில் ஜெய்யுடன் ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடித்திருக்கிறார் ஜெய் படத்தில் விஜயை பிரதிபலிக்கிறார் ஏற்கனவே நம்ம திடீர்னு தளபதி சிவகார்த்திகேயனும் விஜயை பிரதிபலிக்க இப்பொழுது ஜெயின் இந்த படத்தில் விஜயின் ரசிகராகவே வருகிறார் மீனாட்சி கோவிந்தராஜனின் நடிப்பு அளவாகவும் இயல்பாகவும் இருக்கிறது மேலும் இந்த படத்தில் யோகி பாபு சத்யன் ஸ்ரீமன் ஆதித்யா கதிர் மற்றும் பல நடித்திருக்கிறார்கள் ஸ்ரீமனுக்கு காமெடி கலந்த ஒரு காவல்துறை கேரக்டர்
படத்தின் இசை அமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இவரது இசை ஓரளவுக்கு படத்துடன் ஒத்துப் போகிறது
யோகி பாபு உடன் நடிப்பு ஏனோ படத்துடன் ஒட்டவில்லை ஆதித்யா கதிர் அவரும் பேசிக்கொண்டே இருக்கிறார்
இந்தப் படத்தின் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் உதவி இயக்குனராக இருந்தவர் தனது குருநாதரின் இடத்தை நெருங்க முயற்சி செய்திருக்கிறார் அதில் சற்றே நெருங்கியும்இருக்கிறார்

சட்டென்று மாறுது வானிலை முழுமையாக புதிய அனுபவம் கொடுக்கவில்லை என்றாலும் லைட் ரொமான்டிக் த்ரில்லர் படங்களை ரசிப்பவர்களுக்கும் இது ஒரு முறை பார்க்கக்கூடிய படம்.

ரூம் பாய் சினிமா விமர்சனம்

ரூம் பாய் – சாமானியனின் புத்திசாலித்தனமான பழிவாங்கல்

ஏசிஎம் சினிமாஸ் தயாரிப்பில், ஜெகன் ராயன் இயக்கத்தில் உருவான ரூம் பாய், ஒரு சாதாரண இளைஞன் எப்படி சட்டவிரோத செயல்களையும் அதிகார துஷ்பிரயோகத்தையும் எதிர்கொள்கிறான் என்பதை மையமாகக் கொண்ட த்ரில்லர் படம்.

கதை – வெளிப்படாத இருள்

சிறார் கூர்நோக்கு பள்ளியின் வார்டனான இன்பதுரை திடீரென மாயமாகிறார். அவரது மகள் இனியா காவல்துறையில் புகார் அளிக்கிறார். இதே சமயம், அந்த பள்ளியில் இருந்து வெளியேறும் நிகில், வேலை தேடி ஏலகிரிக்கு வந்து ஹோட்டலில் ‘ரூம் பாய்’ ஆக சேர்கிறான்.

வெளிப்படையாக அமைதியாக இருக்கும் அந்த ஹோட்டல், உண்மையில் மிகவும் ஆபத்தான ரகசியங்களை மறைத்து வைத்திருக்கிறது. இளம் ஜோடிகளை இலக்காகக் கொண்டு, அவர்களை மிரட்டி பணம் பறிப்பது முதல் கொலை வரை நடைபெறும் சட்டவிரோத செயல்கள் அங்கு நடக்கின்றன.

இந்த சூழலில் நிகில் ஒரு அப்பாவி இளைஞன் போல தோன்றினாலும், அவன் பின்னணியில் ஒரு திட்டமிட்ட நோக்கம் இருக்கிறது. காதல், மர்மம், போலீஸ் விசாரணை – அனைத்தும் ஒன்றாக இணையும் போது, அவன் உண்மையான முகமும் நோக்கமும் வெளிப்படுகிறது. இறுதியில், அவன் சட்டத்தின் வழியா அல்லது தனது பாணியிலா நீதியை வழங்குகிறான் என்பதே படத்தின் கிளைமாக்ஸ்.

நடிப்பு

நாயகனாக அறிமுகமான நிகில், இயல்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். ஆரம்பத்தில் அப்பாவியாகவும், பின்னர் திட்டமிட்ட செயல்களில் ஈடுபடும் போது காட்டும் மாற்றமும் நன்றாகப் பதிவாகியுள்ளது.
நாயகி ஹர்ஷா, உணர்ச்சிகரமான காட்சிகளில் நம்பகத்தன்மையை வெளிப்படுத்துகிறார்.

வில்லனாக வரும் பிர்லா போஸ் மற்றும் அருண்ராஜா, கதைக்கு தேவையான அழுத்தத்தை தருகின்றனர். குறிப்பாக ஹோட்டல் மேலாளராக வரும் பிர்லா போஸின் நடிப்பு வில்லத்தனத்தை நன்றாக வெளிப்படுத்துகிறது.

இமான் அண்ணாச்சி மற்றும் காத்துக்கருப்பு கலை ஆகியோர் சில இடங்களில் நகைச்சுவையை சேர்த்து கதையின் தீவிரத்தை சற்றே தணிக்கிறார்கள்.

தொழில்நுட்பம்

படத்தின் மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவு. ஏலகிரி மலைப்பகுதியின் அழகையும், ஹோட்டலின் இருண்ட சூழலையும் சி. பாரதி ராஜன் சிறப்பாக பதிவு செய்துள்ளார்.
வேலன் சகாதேவனின் இசை, குறிப்பாக பின்னணி இசை, த்ரில்லர் உணர்வை வலுப்படுத்துகிறது.

எடிட்டிங் கச்சிதமாக அமைந்துள்ளது; படம் எங்கும் சோர்வடையாமல் நகர்கிறது. ஆக்ஷன் காட்சிகளும் இயல்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இயக்கம்

இயக்குனர் ஜெகன் ராயன், சஸ்பென்ஸ் த்ரில்லருக்கான அடிப்படை கூறுகளை சரியாக கையாள்கிறார். கதையின் திருப்பங்களை இறுதிவரை காக்கும் முயற்சி பாராட்டத்தக்கது. ஒரு அறிமுக இயக்குனருக்கான நம்பிக்கையான முயற்சி இது.

முடிவு

ரூம் பாய் ஒரு சாதாரண கதையுடன் தொடங்கி, பின்னர் பழிவாங்கல் மற்றும் நீதிக்கான போராட்டமாக மாறுகிறது. “ரூம் பாய்” என்பது ஒரு வேலை பெயர் மட்டுமல்ல, அதிகாரத்திற்கு எதிராக எழும் ஒரு சாமானியனின் உருவகமாக படம் காட்டுகிறது.

மொத்தத்தில்: நல்ல தொழில்நுட்பத் தரம், விறுவிறுப்பான திரைக்கதை, மற்றும் ஒரு சுவாரஸ்யமான கிளைமாக்ஸுடன், ரூம் பாய் ஒரு பார்ப்பதற்கான த்ரில்லர் அனுபவம்.

’காக்கி சர்க்கஸ்’ இணையத் தொடர் விமர்சனம்

துணைச் சிறைச்சாலை கண்காணிப்பாளராக பணியாற்றும் Munishkanth, குற்றவாளிகளை திருத்துவதே சிறைச்சாலையின் முக்கிய நோக்கம் என்ற நம்பிக்கையுடன் செயல்படுகிறார். இதனால், சிறைச்சாலைக்குள் ஒரு சிறிய நூலகத்தை அமைத்து, கைதிகளுக்கு தானே எழுதிய புத்தகங்களை வாசிக்க வழங்குகிறார். மேலும், குற்றச் சம்பவங்களுக்கான தீர்வுகளையும் அவர் படிக்கும் நூல்களில் இருந்து தேடும் தனித்துவமான அணுகுமுறையைக் கொண்டுள்ளார். இவருடன் காவலராக பணியாற்றுபவர் Subash Selvam.

இந்த சூழலில், சிறைச்சாலைக்குள் உள்ள கோவில் உண்டியலில் இருந்த பணம் திருடப்படுகிறது. இந்த சம்பவம் வெளியுலகிற்கு தெரியாமல் இருக்க, அந்த தொகையை மீண்டும் நிரப்ப வேண்டிய கட்டாயத்தில் Subash Selvam சிக்கிக்கொள்கிறார். இதற்காக வங்கியில் கடன் பெற்று, அந்த பணத்தை உண்டியலில் சேர்க்க முடிவு செய்கிறார். ஆனால், அவர் கடன் பெற்று வீட்டில் வைத்திருந்த பணமும் திருடப்பட்டதால், பிரச்சனை மேலும் சிக்கலாகிறது.

கடன் பெற்ற பணத்தையும் இழந்த நிலையில், திருடன் யார் என்பதை Subash Selvam கண்டுபிடித்தாலும், அவரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்த முடியாத நிலை உருவாகிறது. இதனால், ஆதாரங்களுடன் திருடனை பிடித்து பணத்தை மீட்டெடுக்க அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் தான் கதையின் மையமாக அமைகின்றன. இந்த பயணம் எதிர்பாராத திருப்பங்களும் நகைச்சுவை அம்சங்களும் கலந்து விறுவிறுப்பாக சொல்லப்படுகிறது.

Munishkanth, Subash Selvam மற்றும் Rajesh Madhavan ஆகிய மூன்று முக்கிய கதாபாத்திரங்களுடன், சிறைச்சாலை கோவில் உண்டியலும் ஒரு முக்கியமான “கதாபாத்திரமாக” வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தனித்துவமான அணுகுமுறையால், ஒவ்வொரு அத்தியாயமும் சிரிப்பு மற்றும் சுவாரஸ்யம் கலந்து நகர்கிறது; இதனை இயக்குனர் Ameen Barif சிறப்பாக கையாளுகிறார்.

நடிப்பில், Munishkanth தனது வழக்கமான நகைச்சுவை பாணியை விட்டு விலகி, கதாபாத்திரத்திற்கு தேவையான அளவிலேயே உணர்வுகளை வெளிப்படுத்தியிருப்பது சிறப்பு. Subash Selvam காவலராக மிக நன்றாக பொருந்தியுள்ளார்; நகைச்சுவையுடன் சேர்த்து, ஆக்‌ஷன் காட்சிகளிலும் தனது திறமையை காட்டுகிறார். திருடன் கதாபாத்திரத்தில் Rajesh Madhavan, எளிமையான தோற்றத்துடன் இருந்தாலும், பணத்திற்காக அல்லாமல் புகழுக்காக திருடும் தன்மை மூலம் கதைக்கு புதுமையை சேர்க்கிறார்.

மேலும், Vinsu Sham மற்றும் Gauthami உள்ளிட்ட நடிகைகள் தங்களது கதாபாத்திரங்களை குறையின்றி செய்துள்ளனர். சாவித்ரி, அம்ருதா, அப்துல் லீ, மருதுபாண்டியன், ராகேஷ், உசர், விக்னேஷ்வர், அருண்குமார் போன்ற பலர் தங்களது வேடங்களுக்கு ஏற்றவாறு நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப ரீதியாக, ஒளிப்பதிவாளர் நீரஜ் ரவி வழங்கிய visuals, இசையமைப்பாளர் சேவியர் மற்றும் விபின் பாஸ்கரின் இசை, எடிட்டர் அர்ஜுன் பாபுவின் தொகுப்பு ஆகியவை தொடரின் தரத்தை உயர்த்துகின்றன. இயக்குனர் Ameen Barif, எளிய கருவை பல கிளை கதைகளுடன் இணைத்து, கோவில் உண்டியலுக்கே ஒரு பின்னணி உருவாக்கி, ஒவ்வொரு அத்தியாயத்தையும் சுவாரஸ்யமாக நகர்த்துகிறார்.

சிறைச்சாலைக்குள் நடக்கும் திருட்டு என்ற கேள்வியை மையமாக வைத்து, திருடன் யார் என்பது தெரிந்திருந்தாலும், அவர் எப்படி தப்பிக்கிறார், எப்போது சிக்குவார் என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து பரபரப்பை உருவாக்குகிறது. இதனால், அடுத்தடுத்த அத்தியாயங்களை ஆர்வத்துடன் பார்க்கும் வகையில் கதை நகர்கிறது.

அதே சமயம், புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக Munishkanth கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் வாழ்க்கையை முழுவதும் புத்தகங்களில் மட்டுமே காண முடியாது; சில நேரங்களில் நிஜத்தை நடைமுறையாக அணுக வேண்டும் என்ற கருத்தையும் நகைச்சுவையுடன் படம் தெரிவிக்கிறது.

மொத்தத்தில், Kaaki Circus சிரிப்பும் சஸ்பென்ஸும் கலந்த ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும், சிந்திக்க வைக்கும் entertaining series ஆகும்.

செல்வராகவனின் மனிதன் தெய்வமாகலாம் – திரைப்பட விமர்சனம்

டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில், Selvaraghavan நடித்துள்ள Manithan Theivamagalam திரைப்படத்தில், Kushi Ravi, Mime Gopi, Kausalya மற்றும் Y. G. Mahendran முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வியம் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் விஜயா சதீஷ் தயாரித்த இந்த படம், வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி தற்போது கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது; இந்த நிலையில், பயில்வான் ரங்கநாதனின் விமர்சனத்தை பார்க்கலாம்.

“மனிதன் தெய்வமாகலாம்” திரைப்படம், ஒரு சாதாரண மனிதன் சூழ்நிலைகளின் காரணமாக எவ்வாறு ‘தெய்வம்’ போல் உயர்த்தப்படுகிறான் என்பதைக் கூறும் கதையாக அமைந்துள்ளது. இதில், Selvaraghavan மற்றும் Kushi Ravi காதலித்து திருமணம் செய்து, ஆரம்பத்தில் கூலி தொழிலாளர்களாக இருந்த அவர்கள் கடுமையாக உழைத்து பின்னர் ஒரு தாபா ஹோட்டலின் உரிமையாளர்களாக முன்னேறுகின்றனர். அந்த ஊரில் வசிக்கும் ஒரு முதியவர், சாலை வசதி இல்லாததால் தொடர்ந்து மனுக்கள் அளித்து வருகிறார்; இதையடுத்து அவர் அரசியல்வாதியான Y. G. Mahendran அவர்களை சந்திக்கிறார்.

அதன்பின், Y. G. Mahendran தனது மைத்துனரான Mime Gopiயிடம் சாலை அமைக்கும்படி கூறுகிறார். ஆனால், பொறுப்பில்லாத மற்றும் ஒழுங்கற்ற வாழ்க்கை நடத்தும் Mime Gopi, பெண்களைத் தொடர்ந்து திரியும் கொடூரமான வில்லனாக காட்டப்படுகிறார். ஒருநாள் அவர் Selvaraghavan நடத்தும் ஹோட்டலுக்கு வந்து குடிக்க முயற்சிக்கிறார்; அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது. இதனால் கோபமடைந்த அவர், தனது அடியாட்களை பயன்படுத்தி அந்த தாபாவை சேதப்படுத்துகிறார்.

இதற்குப் பிறகு, அந்த அநியாயத்திற்கு Selvaraghavan எப்படி பதிலடி கொடுக்கிறார், மேலும் அவரது கோபம் எவ்வாறு ‘தெய்வத்தின் தண்டனை’ போல மாறுகிறது என்பதுதான் மீதிக் கதை. தனது கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு Selvaraghavan சிறப்பாக நடித்துள்ளார்; ஒரு சாதாரண மனிதனிலிருந்து மாற்றம் அடையும் உணர்வுகளை நன்றாக வெளிப்படுத்துகிறார். Kushi Ravi அழகாகவும் கதைக்கு ஏற்றவாறும் நடித்துள்ளார். Mime Gopi எதிர்மறை கதாபாத்திரத்தில் சிறப்பாக திகழ்கிறார். மற்ற நடிகர்களும் தங்களுக்கான வேடங்களில் சிறப்பாக நடித்துள்ளனர்.

படத்தின் கரு நல்லதாக இருந்தாலும், திரைக்கதையில் சுவாரஸ்யம் குறைவாக இருப்பது ஒரு குறையாகும். முக்கிய திருப்பங்கள் முன்கூட்டியே கணிக்கப்படுவதால், படத்தின் ஈர்ப்பு குறைகிறது; கிளைமாக்ஸும் எதிர்பார்த்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மொத்தத்தில், திரைக்கதையில் மேலும் கவனம் செலுத்தியிருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று பயில்வான் ரங்கநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.

Love Insurance Kompany (LIK)- விமர்சனம்

தமிழ் சினிமாவில் காதல் கதைகள் பல வந்தாலும், அதை ஒரு technology-driven concept-ஆக மாற்றி, “insurance” என்ற corporate idea-வுடன் mix பண்ணி சொல்லும் முயற்சிதான் Love Insurance Kompany (LIK).

இயக்குனர் Vignesh Shivan இந்த படத்தின் மூலம் modern relationships எப்படி data, prediction, control ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறது என்பதை explore செய்ய முயற்சிக்கிறார்.

Love Insurance Kompany (LIK) என்பது தமிழ் சினிமாவில் காதலை ஒரு புதிய கோணத்தில் அணுக முயற்சிக்கும் ஒரு concept-driven திரைப்படம். இயக்குனர் Vignesh Shivan, modern relationships மற்றும் technology influence ஆகியவற்றை இணைத்து, “love can be predicted and controlled” என்ற கருத்தை மையமாக வைத்து கதையை உருவாக்குகிறார். காதலில் தோல்வி அடைந்த ஒரு இளைஞன், மீண்டும் heartbreak அனுபவிக்காமல் இருக்க “Love Insurance” என்ற futuristic system-ஐ பயன்படுத்துகிறான். இந்த system relationship future-ஐ analyse செய்து, risk factors identify செய்து, breakup avoid செய்ய வழிகளை suggest செய்கிறது. ஆனால் காதல் என்பது algorithm அல்லது data மூலம் முழுமையாக கட்டுப்படுத்த முடியாத ஒன்று என்பதை படம் மெதுவாக வெளிப்படுத்துகிறது.

இந்த படத்தில் Pradeep Ranganathan தனது இயல்பான நடிப்பால் கதையை முன்னெடுத்து செல்கிறார். அவரது dialogue delivery மற்றும் screen presence youth audience-க்கு நெருக்கமாக connect ஆகிறது. குறிப்பாக emotional scenes-ல் அவர் காட்டும் maturity இந்த படத்தில் ஒரு முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. அவருடன் இணைந்து நடித்துள்ள Krithi Shetty தனது charming performance மற்றும் balanced emotional expressions மூலம் கதைக்கு தேவையான softness-ஐ வழங்குகிறார். இவர்களுடைய chemistry சில இடங்களில் நன்றாக வேலை செய்கிறது, ஆனால் முழு depth-ஐ அடையாமல் போகிறது.

இயக்குனர் Vignesh Shivan தனது stylish narration மற்றும் urban காதல் tone மூலம் படத்தை visually appealing-ஆக அமைத்துள்ளார். முதல் பாதி concept build-up மற்றும் engaging screenplay மூலம் கவனம் ஈர்க்கிறது. ஆனால் இரண்டாம் பாதியில் pacing சற்று குறைந்து, emotional intensity தளர்வதாக உணரப்படுகிறது. படம் எடுத்துக்கொண்டுள்ள bold idea பாராட்டத்தக்கது என்றாலும், அதன் execution முழுமையாக consistent ஆக இல்லை. Technical-ஆக பார்க்கும்போது cinematography clean மற்றும் modern look-ஐ வழங்குகிறது; music மற்றும் background score கதைக்கு support கொடுத்தாலும், memorable impact அளிக்கவில்லை; editing முதல் பாதியில் crisp-ஆ இருந்தாலும், இரண்டாம் பாதியில் lag தெளிவாக தெரிகிறது.

Love Insurance Kompany படத்தின் முக்கிய பலம் அதன் unique concept மற்றும் contemporary relationship issues-ஐ பிரதிபலிக்கும் முயற்சி. இன்றைய generation-க்கு social media, data, predictability ஆகியவை எப்படி காதலை influence செய்கின்றன என்பதை படம் நன்றாக touch செய்கிறது. அதே நேரத்தில், concept clarity மற்றும் emotional depth குறைவு, predictable moments மற்றும் slow second half ஆகியவை படத்தின் பலவீனங்களாகும். படத்தின் core message மிகவும் தெளிவானது: காதல் ஒரு “calculated system” அல்ல; அதை control பண்ண முயற்சிப்பது அதன் இயல்பை itself பாதிக்கும்.

மொத்தத்தில், Love Insurance Kompany (LIK) ஒரு bold மற்றும் experimental முயற்சி. இது ஒரு strong concept கொண்டு audience-ஐ ஈர்க்கிறது, ஆனால் execution limitations காரணமாக முழு impact-ஐ அடைய முடியவில்லை. Urban love stories மற்றும் new-age romantic concepts விரும்புகிறவர்களுக்கு இது ஒரு decent one-time watch.

Star Rating : 3/5⭐⭐⭐

“கார்மேனி செல்வம்” திரை விமர்சனம்

சென்னையில் கார் ஓட்டுநராக வேலை செய்யும் சமுத்திரக்கனி, அளவான குடும்பம்,வருமானத்திற்கு ஏற்ற வாழ்க்கை, என்று மகிழ்ச்சியாக
இருப்பினும், சொந்த வீடு மற்றும் சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்ற தனது ஆசையை நிறைவேற்றும் முயற்சியில் கடனாளியாகி விடுகிறார். அவசரத்திற்கு கடன்
வாங்க தொடங்கும் சமுத்திரக்கனி, அதையே தனது ஆசையை நிறைவேற்றுவதற்கான வழியாக மாற்றிக் கொள்ளும் போது, அவரை பெரும் சிக்கல் சூழ்ந்து கொள்கின்றனது.
அதுல இருந்து அவர் மீண்டாரா? இல்லையா? என்பதை, பல்வேறு ஆசைகளை வளர்த்துக்கொண்டு அதன் மூலம் நிறைவேற்ற என்று அதுல அவதிப்படும் நடுத்தர குடும்பங்களின்
வாழ்வியலாக சொல்வது தான்
“கார்மேனி செல்வம்”.
திரைப்பட கதைக்களம். இருப்பதை வைத்து நிறைவாக வாழாமல், நிறைவை தேடி…தேடி… சென்று வாழ்க்கையை தொலைத்து விடக்கூடாது, என்ற மெசஜை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். இயக்குநர் ராம் சக்ரி.

சமுத்திரக்கனி, செல்வம் என்ற கதாபாத்திரத்தில்,அவரது மனைவியாக

நடித்திருக்கிறார் லக்‌ஷ்மி பிரியா, முதலாளியாக நடித்திருக்கிறார். கெளதம் வாசுதேவ் மேனன், அவரது

மனைவியாக நடித்திருக்கிறார். அபிநயா, சமுத்திரக்கனியின் மகனாக நடித்திருக்கிறார்

சிறுவன் கரண் சக்கரவர்த்தி

“நீளிரா” திரை விமர்சனம்

1988-ம் ஆண்டு இலங்கை உள்நாட்டு போரின் பின்னணியில் அமைந்த கதை.
ஒரு சாதாரண தமிழ் குடும்பத்தில் நடக்கும் திருமண விழா – சிரிப்பு, உறவு, மகிழ்ச்சி…

ஆனால் சில மணி நேரங்களில் அந்த இடம்:
திடீரென போரின் மையமாக மாறுகிறது. இந்திய அமைதிப்படை மற்றும் போராளிகள் இடையே சிக்கிக் கொள்கிற குடும்பம் என்ன ஆகிறது என்பதே கதை.

ஆக மாறுகிறது.

Indian Peace Keeping Force (IPKF) மற்றும் ஆயுதப்படைகள் இடையே நடக்கும் மோதலில் சிக்கிக் கொள்கிற குடும்பத்தின் நிலை – இதுதான் core narrative.

படம் “யார் நல்லவன் / கெட்டவன்?” என்று தீர்ப்பளிக்காது
“போரில் சிக்கிய மனிதர்கள் எப்படி உடைந்து போகிறார்கள்?” என்பதையே காட்டுகிறது

நவீன் சந்திரா வலுவான performance
மிக இயல்பான காட்சிகள், உண்மை சம்பவம் போல feel
எந்த பக்கம் bias இல்லாமல் சொல்லியிருப்பது பெரிய plus

War பாதிப்பு, குடும்பத்தின் பயம், helplessness நல்லா காட்டப்பட்டுள்ளது
படம் முடிந்த பிறகும் மனதில் இருக்கும் வகை Cinematography & Music:
இரவு காட்சிகள், tension atmosphere super