Breaking
June 5, 2026

Cinema Reviews

“போர்த் ஃப்ளோர்” திரை விமர்சனம்

மும்பையில் வசிக்கும் ஆரிக்கு சென்னையில் இருக்கும் அவரது முன்னாள் காதலியிடம் இருந்து ஒரு போன் வருகிறது அதில் தான் ஒரு பிரச்சனையில் இருப்பதாகவும் நீ சென்னைக்கு உடனடியாக வரவேண்டும் நீ வந்த பிறகு நானே உனக்கு போன் செய்கிறேன் என்று சொல்லி அழைக்கிறாள்.
சென்னை வரும் ஆரி அங்கு உள்ள ஒரு தனிமையில் இருக்கும் ஒரு அப்பார்ட்மெண்டில் தங்குகிறார்.அந்த வீட்டின் மூன்று மாடியில் மட்டுமே புழக்கத்தில் இருக்கும்போது இவருக்கு தவறுதலாக நான்காவது மாடியில்உள்ள அறைக்கு சாவி வழங்கி அங்கே தங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.நேரத்தில் அந்த அப்பார்ட்மெண்டில் ஒரே ஒரு பெண்ணும் வேறு ஒரு பிளாக்கில் ஷார்ட் பிலிம் எடுக்கின்ற பேர்வழிகள் என்று ஒரு சில இளைஞர்களும் இளைஞர்களும் தங்கி இருக்கிறார்கள்.
நிலையில் அந்த அப்பார்ட்மெண்டில் வசிக்கும் ஒரு சிலர் ஆரிய இடம் சில விஷயங்கள் பேசுகிறார்கள்.திடீரென ஏதேதோ மர்மமான கனவுகள் வருகிறது தனது காதலியை நம்பர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருக்க அவரையும் தேடுகிறார் இந்த சூழலில் அந்த மர்ம பங்கு அப்பார்ட்மெண்டில் என்ன நடக்கிறது என்பதை இந்த திரைக்கதை 4th ப்ளோர் என்னும் திரைப்படம் கூறுகிறது.
இந்த போர்த் பார் திரைப்படம் ஆனது ஹாரர் மூவியா பழிவாங்கும் திரைப்படமா க்ரைம் திருவிழா என பல்வேறு குழப்பங்களுக்கிடையில் இயக்கியிருக்கிறார் இயக்குனர்.
காதலியை தேடும் பாரிக்கு காதல் என்னவானால் என்று தெரியவில்லை ஆனால் அதே பங்களாவில் ஒரு அறையில் ஆரியன் மகள் அவருக்கே தெரியாமல் இருக்கும் மகள் ஒரு அறையில் அடைபட்டு இருப்பது அவரை மீட்பது ,மேலும் ரியல் எஸ்டேட் பிசினஸில் ஈடுபடும் ரவுடிசம் என பல்வேறு விஷயங்களை இந்த ஹாரர் மூவிக்குள் கொண்டுவர முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர்.
இந்த படத்தில் ஹீரோவாக ஆரி அவருக்கு நடிப்பு மிகவும் சுமாராகத்தான் வருகிறது அவர் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்க வேண்டும்,இல்லனாக இயக்குனர் சுப்பிரமணியன் சிவா இவர் முழுநேர நடிகராக மாறிக் கொண்டிருக்கிறார்.
பவித்ரா நாயகி யாவும் அவரின் மாமாவாக தலைவாசல் விஜயம் தங்களது தரப்பட்ட கதாபாத்திரங்களை செய்து இருக்கிறார்கள்.

இசை தரண் குமார் திகில் படத்திற்கான இசையில் இன்னும் மெனக்கெட்டு இருக்கலாம் அதே போல் ஒளிப்பதிவும்.
இயக்குனர் எல் ஆர் சுந்தரபாண்டி திரைக்கதையில் இன்னும் மெனக்கட்டு இருந்தால் நிச்சயம் இந்த ஹாரர் மூவி நமக்கு பயம் கொடுத்திருக்கும்

“தடயம்” வெப் தொடர் விமர்சனம்

1995 1999 இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழ்நாடு ஆந்திரா எல்லையில் உள்ள கிராமங்களில் நடந்த தொடர் கொலைகளை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்திருக்கும் தொடர் தான் தடயம்
ஆந்திரா எல்லை வர தமிழக கிராமங்களில் இரவு நேரங்களில் தொடர்ச்சியாக இரட்டை கொலைகள் கணவன் மனைவி இருவரும் கொலை செய்யப்பட்டு அவர்களது தாலி மற்றும் அருணா கயிறு அதை மட்டும் மறுத்துக் கொண்டு செல்கிறார்கள்.இது தொடர்ந்து நடக்க மக்கள் வீதி அடைய இதை விசாரிக்கும் விசாரணை அதிகாரியாக சமுத்திரகனி.அவரது அதிகாரியாக சிவா தான் இன்ஸ்பெக்டராக வருகிறார்.இருவரும் இணைந்து இந்த தொடர் கொலைகளை செய்தவர்களை தேட அது ஆந்திர பிரதேசம் வரை செல்கிறது.அதே நேரத்தில் வழக்கமாக உயர் அதிகாரிகளின் ஒத்துழையாமை போன்றவையும் இந்த வழக்கை சுணக்கப்படுத்துகிறது.இந்த நிலையில் இருவரும் இணைந்து எப்படி இந்த கொலைகளை கண்டுபிடிக்கிறார்கள் அந்த கொலைகளுக்கான காரணம் என்ன என்பதை கண்டறியும் திரைக்கதை தான் தடயம்.
இந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரியாக சமுத்திரகனி ஒரு வித்தியாசமான நடிப்பாகவும் தன்னுடைய பாடி லாங்குவேஜ் மாற்றி புதிதாக ஏதோ தர முயற்சி செய்திருக்கிறார் அதில் ஓரளவு வெற்றியும் கண்டிருக்கிறார்.அவரது முதிர்ச்சியான நடிவம் கூர்நோக்கு பார்வையும் இந்த கொலை வழக்கை எளிமையாக கையாள வைக்கிறது அவருக்கு.
இன்ஸ்பெக்டர் கேரக்டரில் ஷிவதாநடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ள கதாபாத்திரம் அதில் அவர் தன்னை நிரூபித்தும் இருக்கிறார்.
திரைக்கதையில் வரும் பல்வேறு கதாபாத்திரங்கள் மிகவும் அழுத்தமாகவும் தேவையான இடத்திலும் பயன்பட்டு இருக்கிறார்கள்.
முக்கியமாக வில்லன் கதாபாத்திரம் புஷ்பா ஒன்று படத்தில் வில்லனாக வந்த ராஜ் இந்த வெப் சீரிஸில் கொடூரமான சைக்கோ இல்லனாக மிரட்டுகிறார்.
இந்த படத்திற்கான ஒளிப்பதிவும் அந்த காலகட்டமும் ,இசையும் சிறப்பாக பொருந்தி வருகிறது.
இந்தப் படத்தில் பல லாஜிக் மீறல்கள் இருந்தாலும் திரைக்கதை விறுவிறுப்பாக செல்வதால் தொய்வில்லாமல் செல்கிறது.
ஒரு இரட்டைக் கொலையும் அந்த வீட்டில் உள்ள ஒரு கேள்விக்குறி மார்க்கும் அதை தொடர்ந்து செல்லும் 72 கொலைகளும் என இந்த திரை கதையை சிறப்பாக எழுதி இயக்கி இருக்கிறார்நவீன் குமார் பழனிவேல்
தடயம் zee5 ott தளத்திற்கு ஒரு விறுவிறுப்பான க்ரைம் தொடர்

“தெரிஞ்சா காதலிங்க” திரை விமர்சனம்

சென்னையில் ஒரே இடத்தில் வசிக்கும் மூன்று நண்பர்கள் அதில் ஒருவன் ஆன்மீகத்தை நோக்கி செல்ல நினைக்கிறான் மற்ற இருவரும் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க ஜாலியாக இருக்க நினைக்கிறார்கள் இதே நேரத்தில் ஒரு கிராமத்தில் வாழும்ஒரு பெண் தாய் தந்தை இல்லாமல் தனது தாத்தாவுடன் வாழ்ந்து வருகிறார்.
அந்த நேரத்தில் ஆன்மீகத்தை தேடி வரும் நாயகன் அவர்கள் இருக்கும் இடத்தை வரும் பொழுது பசிய மயக்கத்தில் பாறையில் இருந்து விழுந்துதலையில் அடிபட்டு சுயநினைவை இழக்கிறான் அவர்களை காப்பாற்றும் தாத்தாவும் பேத்தியும் அவன் நார்மல் நிலைக்கு வரும் பொழுது அந்த பெண்ணை காதலிக்க தொடங்குகிறான்.ஒரு கட்டத்தில் தாத்தா ஒரு சொத்து பிரச்சனையில் அவர்கள் உறவினர்களாக கொல்லப்பட இந்த பெண்ணையும் கொலை செய்ய தேடுகிறார்கள் இந்த சூழலில் நாயகன் அவர்களை காப்பாற்றி சென்னைக்கு அழைத்து வருகிறான்.சென்னைக்கு வரும் அவன் அந்த பெண்ணின் மேல் உள்ள காதலில் தன் நண்பர்களை சந்தேகப்பட்டு அந்த சந்தேகம் ஒரு கொலையிலும் சென்று முடிகிறது இந்த நிலையில் அந்த இடத்தில் இருந்து வெளியேறும் நாயகி தனது சிறு வயது காதலனை கரம் பிடிக்கிறாள் இதுதான் தெரிஞ்சா காதலியே என்னும் திரைப்படத்தின் கதை.
திரைப்படத்தில்உங்கள் அனைவருமே புதுமுகம் என்பதால் அனைவருக்கும் நடிப்பு சற்று சிரமமாகத்தான் வருகிறது இருந்தாலும் கதைக்கான களம் அந்த கிராமத்து சூழ்நிலை மிகவும் அருமையாக அமைந்துள்ளது ஆனால் அதற்கு ஏற்றார் போல் திரைக்கதை கொஞ்சம் விறுவிறுப்பாக இருந்திருந்தால் நிச்சயம் தெரிஞ்சா காதலுங்க படம் பார்க்கிற மாதிரி இருந்திருக்கும்

“சீதா பயணம்” திரைவிமர்சனம்……

சென்னையின் மிகப்பெரிய பிசினஸ்மேன் சத்யராஜ் அவரது ஒரே மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் திருமணமே வேண்டாம் என்று இருக்கும் ஐஸ்வர்யா அர்ஜுன் ஒரு நிகழ்வில் கலந்து கொள்ள மதுரைக்கு சாலை வழியே காரில் செல்கிறார் செல்லும் வழியில் நிரஞ்சன் லெஃப்ட் கேட் ஏறிக்கொள்ள இருவரும் பயணப்படுகிறார்கள் வழியில் அவர்கள் பார்க்கும் சம்பவம் நிகழ்வுகள் இந்த நிகழ்வுகளால் அவர் சேர வேண்டிய இடத்திற்கு சில நொடிகள் தாமதமாக செல்ல அந்த தாமதம் அவரது உயிரை காப்பாற்றுகிறது அவர் செல்ல வேண்டிய இடம் வெடித்து அனைவரும் இறந்து விட இவர் அந்த ஒரு சில நொடிகள் தாமதத்தால் தப்பிக்கிறார்
அவ்வாறு தப்பிக்கும் அவர் தான் வந்த வழியில் ஒவ்வொரு இடத்திலும் ஒரு ஒரு சம்பவத்தால் சில நொடிகள் தாமதமாக அந்த தாமதம் தான் தனது உயிரை காப்பாற்றியதாக நினைத்து அவர்களுக்கு நேரில் சென்று நன்றி சொல்ல செல்கிறார் இதற்கு இடையில் நிரஞ்சன் உடன் ஒரு காதல் நிறைந்தவரின் குடும்பத்தாருடன் நெருங்கி பழக அவர்கள் குடும்பத்தையும் பிடித்து போகிறது இவ்வாறு அவர்களது பயணத்தில் அனைவரையும் சென்று நன்றி சொன்னாரா? நிரஞ்சனுக்கும் ஐஸ்வர்யா அர்ஜுனுக்குமான காதல் நிறைவேறியதா என்பதுதான் இந்த சீதா பயணம்.
இந்த சீதாப்பயணம் திரைப்படத்தை ஆக்சன் கிங் அர்ஜுன் கதை திரைக்கதை இயக்கம் செய்திருக்கிறார் தயாரித்தும் இருக்கிறார் தன் மகளுக்காக மேலும் இந்த படத்தில் ஒரு கெஸ்ட் ரோலும் செய்து இருக்கிறார்.
படத்தில் ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் நிரஞ்சனி நடிப்பு ஓரளவுக்கு கதையுடன் பொருந்தி போகிறது மேலும் இந்த படத்தில் குரு சார்ஜா ஒரு கெஸ்ட் ரோலும் பிரகாஷ்ராஜ் நாயகனின் தாத்தாவாகவும் கோவை சரளா ஒரு ஹோட்டல் வைத்திருக்கும் பெண்மணியாகவும் மற்றும் பலரும் நடித்திருக்கிறார்கள் அனைவருக்கும் ஒரு சிறு கதைகளை இயக்குனர் தந்திருக்கிறார் அந்த கதைகள் இந்த படத்தின் திரைக்கதையை இணைக்கிறது.
படத்தின் ஒளிப்பதிவும் இசையும் படத்திற்கு ஏற்றவாறு செல்கிறது.
என்னதான் அர்ஜுன் தன் மகளுக்காக இந்த படத்தை எழுதியிருந்தாலும் முதல் பாதையில் சற்றே தலை தொடங்குகிறது நமக்கு கதையில் விறுவிறுப்பு இல்லாமல் மிகவும் ஸ்லோவாக செல்கிறது இரண்டாம் பாதியில் அதை நிவர்த்தி செய்து வருகிறார்.

இயக்குனர் அர்ஜுன் முதல்பாதியில் இன்னும் சிறப்பாக செய்திருந்தால் இரண்டாம் பாதி மனதில் நிச்சயம் நீங்காத பயணமாக அமைந்திருக்கும் இந்த “சீதா பயணம்”

“மைலாஞ்சி” திரைவிமர்சனம்

ஊட்டியில் தாய் தந்தை இல்லாமல் சித்தி சித்தப்பா ஆதரவில் வசித்து வரும் கிருஷா குரூப்.நிறைய சொத்துக்கள் இருக்கும் இவரை சித்தி சொத்திற்காக ஆசைப்பட்டு தனது தம்பிக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கிறார்.குடித்துவிட்டு கும்மாளம் அடித்துக்கொண்டு ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் அவரை பிடிக்காமல் பக்கத்து வீட்டு ஒரு பெரிய மனிதனிடம் ஐடியா கேட்டு யாரையாவது காதலித்து இந்த ஊரை விட்டு ஓடி விட வேண்டும் என்று முடிவு எடுக்கிறார் கிருஷா குரூப்.அவர் தேர்ந்தெடுக்க நம்பர் தன் வீட்டில் தங்கியிருக்கும் ஒரு ஈபி இன்ஜினியரை ஆனால் அவரோ திடீரென்று ஒரு நாள் வீட்டை காலி செய்துவிட்டு சென்னைக்கு சென்று வருகிறார்.சோகமடையும் நாயகி அவர் எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற முயற்சியில் இருக்கிறார்.
இதே நேரத்தில் சென்னையில் வைட் லைஃப் போட்டோகிராபராக இருக்கும் ஸ்ரீராம் கார்த்திக் ஊட்டியில் இருக்கும் ஒரு அரிய வகை பறவையை படம் பிடிக்க வருகிறார் அங்கே நாயகி உடன் நட்பு ஏற்பட அந்த நட்பு அந்த நட்பு பின்பு ஒரு தலை காதலாக மாறுகிறது ஸ்ரீராம் கார்த்திக் இருக்கு.சொல்ல நினைக்கும் வேலையில் நாயகியோ நான் ஒருவனே காதலிக்கிறேன் அவனுடன் என்னை சேர்த்து வை என்று ஸ்ரீராம் கார்த்திக் இடம் உதவி கேட்கிறார்.
உங்களை சேர்த்து வைத்தாரா இல்லை இவர்களது காதல் சேர்ந்ததா என்பது தான் மயிலாஞ்சி படத்தின் திரைக்கதை
இந்த மாதிரியான ஒரு முக்கோண காதல் கதையை எடுத்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் அஜயன் பாலா இவர் ஒரு பிரபல எழுத்தாளர் பல படங்களுக்கு பணிபுரிந்திருக்கும் அஜயன் பாலா தனது படத்திற்கான திரைக்கதையில் கோட்டை விட்டு இருக்கிறார்.
மேலும் இந்த படத்தில் ஸ்ரீராம் கார்த்திகை நடிப்பு மிகவும் செயற்கை தனமாகவே உள்ளது அவர்அவர் நடிப்பு காதலிலும் சரி, சோகத்திலும் சரி எந்த ஒரு ஃபீலிங் இல்லாமல் ஒரே மாதிரியாக உள்ளது நடிப்பில் மெருகேற வேண்டும் ஸ்ரீராம் கார்த்திக்.
கிரிஷா குரூப் இந்த கதாபாத்திரத்தை என குழந்தைத்தனமாகவே வடிவமைத்து இருக்கிறார்.
மேலும் இந்த படத்தில் சிங்கம் புலி முனீஸ் காந்த் இன்னும் நிறைய பேர் வருகிறார்கள் போகிறார்கள் அவ்வளவே
இந்த படத்தில் பணியாற்றிய டெக்னிஷிகள் அனைவரும் மிகவும் அனுபவசாலிகள் ஒளிப்பதிவாளர் செழியன் படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்,இசை இளையராஜா,இப்படி பலர் இருந்தாலும் பல சொதப்பல்கள் தான் இவர்கள் அனைவருமே
மைலாஞ்சி இன்னும் சற்று மைலேஜ் தந்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்

“மைலார்ட்” திரைவிமர்சனம்

சமீபத்தில் தமிழகத்தில் ஒரு பிரபல அரசியல் கட்சியை சேர்ந்த ஒரு ஒரு நபர் முறைகேடான கிட்னி திருட்டில் ஈடுபட்ட சம்பவத்தை மையப்படுத்தி இந்த படத்தை எழுதி இயக்கி இருக்கிறார் எழுத்தாளர் இயக்குனர் ராஜமுருகன்.

இந்த அரசியல் கிட்னி திருட்டு சம்பவத்தை வெளியில் கொண்டு வந்ததற்கு ராஜமுருகனுக்கு ஒரு பாராட்டு அதுவும் இன்றைய அரசியல் சூழலில்…


தமிழகத்தின் தென் பகுதியில் வாழும் சசிகுமார் அவரது மனைவி சைத்ரா இருவரும் இறந்து விட்டதாக போலிச் சான்றிதழ் வந்து அவர்களது ரேஷன் கார்டு உள்ளிட்ட முக்கியமான அரசு ஆவணங்கள் அனைத்தும் பதிவாகிவிட்டது. அதை மீட்க அவர் ஊரெங்கும் போஸ்டர் அடித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு உறுதுணையாக லோக்கல் பத்திரிகையாளராக குரு சோமசுந்தரம்.
லோக்கல் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து லோக்கல் மருத்துவமனையில் அனைவரும் அந்த கவுன்சிலருக்கு உதவுகிறார்கள் கவுன்சிலின் முக்கிய வேலையை ஏழை மக்களை மூளைச்சலவை செய்து அவர்களுக்கே தெரியாமல் அவர்களது உடல் உறுப்புகளை விற்பது தான்.
இந்த சூழலில் மத்திய அமைச்சராக இருக்கும் ஆஷா சரத்திற்கு இரண்டு சிறுநீரகம் செயல் இழந்து விட அதை முறைகேடாக எடுத்து வைக்க ஒரு புரோக்கரை நியமிக்கிறார்கள். அவர் ஒத்துப் போகும் கிட்னி சசிகுமார் மட்டும் தான் இருப்பது என்பதை கண்டறிந்து அவரை எப்படி முறைகேடாக அழைத்துச் சென்று கிட்னியை எடுத்து வைக்க முயற்சி செய்கிறார்கள். இந்த முயற்சியை பயன்படுத்தி சசிக்குமாறும் அவரது நண்பருமான பத்திரிகையாளர் குரு சோமசுந்தரம் இருவரும் இணைந்து சசிகுமாரின் டெத் சர்டிபிகேட்டை கேன்சல் செய்து அவருக்கு ரேஷன் கார்டு முதல் கொண்டு அனைவரையும் வாங்க வைக்கிறார்கள் அரசியல் பலத்தை பயன்படுத்தி,
அதே நேரத்தில் கோபி நயினார் மூலம் இந்த முறைகேடான சம்பவத்தை கோர்ட் மூலம் வெளி கொண்டு வர நினைக்கிறார்கள், இதில் ஆஷா சரத் தண்டனை பெறுகிறாரா? சசிகுமார் என்ன முடிவு செய்கிறார்? என்பதுதான் படத்தின் திரைக்கதை.


சமீபத்தின் தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்ட கிட்னி திருட்டும் அதற்குப் பின்னணியில் இருந்த ஒரு லோக்கல் அரசியல்வாதி என்று பேசப்பட்டார் அவரது பின்புலத்தை பயன்படுத்தி அரசை எதிர்த்து படம் எடுத்திருக்கும் ராஜமுருகனுக்கு உண்மையிலே பாராட்டுகள்.
இந்த படத்தில் முத்து சிற்பியாக சசிகுமார் அவருக்கு வழக்கமான நடிப்பு தான் இது எனவே அதிலேயே நடித்துவிட்டு போகிறார்.
மனைவியாக வரும் சைத்ரா சுசிலா கேரக்டரில் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்
குரு சோமசுந்தரம் தனக்கு வழக்கமான நடிப்புதான்.
மேலும் இந்த படத்தில் நீதிபதியாக ஜெயப்பிரகாஷ் அரசியல்வாதியாக ஆஷா சரத் இப்படி பலரும் அவர்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ப பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

படத்தின் மிகப்பெரிய குறையே படத்தில் வரும் கோர்ட் சீன்களை மிகவும் ஸ்ட்ராங்காக்கி கோபி நாயனார் அவரது கேரக்டரை பலப்படுத்தி இருக்க வேண்டும் அவர் ஏதோ வசனங்களை மனப்பாடம் செய்து ஒப்பிப்பது போல் ஒப்பித்துக் கொண்டிருக்கிறார் இதை மட்டும் சரியாக கையாண்டு இருந்தால் மை லார்ட் என்னும் தலைப்பிற்கு படம் மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும்.

“பூக்கி” திரைவிமர்சனம்

இன்றைய காலகட்டத்தில் இளம் காதலர்கள் தங்களுக்குள் அர்த்தமில்லாமல் ஏதாவது ஒரு பெயரை வைத்து எப்படி செல்லமாக கூப்பிட்டு கொள்வார்களோ அப்படி ஒரு வார்த்தை தான் “பூக்கி”இந்த வார்த்தையை வைத்து வெளி வந்திருக்கும் திரைப்படம் தான் இந்த படம்.
அஜய் திஷன்,ஆர் கே தனுஷா இருவரும் ஆறு வருடங்களாக காதலித்து ஒரு சிறு பிரச்சனையில் சாலையில் ஒருவரை ஒரு அடித்துக் கொண்டு பிரிந்து போகிறார்கள். இதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்ப, அது தீயாக பரவுகிறது இருவரும் தங்கள் காதல்களை மறக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். நாயகன் ஒரு பக்கம் ஜிம்முக்கு செல்வதும், குடிப்பதும் இப்படி பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகிறார். நாயகி ஒருபுறம் ஆன்மீகம், வேலை , வேறு ஒரு லவ் என்ற பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள் .

இவர்களது முயற்சி வெற்றி பெற்று இருவரும் பிரிந்தார்களா? இல்லை தங்கள் பழைய காதலை மறக்க முடியாமல் ஒன்று சேர்ந்தார்களா? என்பது தான் படத்தின் திரைக்கதை

இந்தப் படத்தின் கதை கரு சிறியதாக இருந்தாலும் ஆனால் இதற்காக இவர்கள் வடிவமைத்திருக்கும் திரைக்கதை,இன்றைய இன்ஸ்டாகிராம் ,பேஸ்புக், யூடியூப் போன்றவற்றில் வரும் ரீல்களை வைத்து அதை திரை கதையில் கொண்டு வந்திருப்பது இன்றைய இளைய தலைமுறை பசங்களை ரசிக்க வைக்குமாறு எடுத்திருக்கிறார் இயக்குனர் அது அவருக்கு வெற்றியும் கூட தரும்.

அஜய் திஷன் இது இவருக்கு இரண்டாவது படமாக இருந்தாலும் தனது நடிப்பில் மிக பலமாக நிற்கிறார் எதார்த்தமாகவும் நடித்திருக்கிறார். நாயகியும் அவருக்கு ஈடாகவே நடித்து இருக்கிறார்
படத்தில் பாண்டியராஜன், சுனில்,லட்சுமி மஞ்சு, மற்றும் விவேக் பிரசன்னா பலர் காட்சிகளை நகர்த்த ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இந்த படத்தின் தயாரிப்பு மற்றும் இசை விஜய் ஆண்டனி விஜய் ஆண்டனி இசை அவரது ஸ்டைலயே உள்ளது படத்தில் பெரும்பான்மையான பாடல்களை அவரே பாடியுள்ளார்
இயக்குனர் இன்றைய இளைய தலைமுறை இளைஞர்களை மனதில் வைத்து களம் இறங்கி அதில் வெற்றியும் காண முயற்சித்திருக்கிறார்.


“பூக்கி”சமூக வலைத்தளங்களில் இருந்து மொத்த பூக்களையும் எடுத்து தொடுத்த ஒரு பூ மாலை

“வித் லவ்” திரைவிமர்சனம்

படித்து முடித்துவிட்டு வேலையில் இருக்கும் இளைஞன் அபிஷன், அவனது சகோதரி திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறார். அவர் பார்க்கும் பெண் அனஸ்வரராஜன். இருவரும் ஒரு ஹோட்டலில் சந்தித்து பேச இருவரும் ஒரே பள்ளியில் படித்தது தெரிய வருகிறது. அதன் பிறகு அவர்களது பேச்சு அந்தப் பள்ளியில் படித்த காலகட்டத்தை நோக்கி பின் நோக்கி நகர்கிறது அப்பொழுது அபிஷேணின் காதலும், காதலை சொல்ல முடியாமல் தவிப்பதும் இந்த மாதிரியான அவனது கதையில் முடிய . அனஸ்வர ராஜனும் அவருடைய பிளாஷ்பேக்கை சொல்கிறார், அதில் அவர் ஒரு பையனை காதலிப்பதும் அந்த காதலை சொல்ல முடியாமல் விடுவதும் இருவரும் பேசி ஒரு விபரீத முடிவு எடுக்கிறார்கள்.

அது
இருவரும் தங்கள் படித்த பள்ளிக்கு சென்று தங்கள் இருவரும் காதலித்த அந்த நபர்களை தேடி கண்டுபிடித்து ,அவர்களிடம் தங்கள் காதலை கூற வேண்டும் அவர்களது திருமணம் ஆகி இருந்தாலும் சரி, ஆக இல்லாமல் இருந்தாலும் சரி என்று முடிவு செய்து அவர்களை தேடி பயணப்படுகிறார்கள். அந்தப் பயணம் அவர்கள் இருவரும் அவர்கள் காதலை அந்த பழைய காதலன், காதலர்களிடம் கூறினார்களா என்பது தான்.
படம் முதல் பாதியில் செல்லும் கதை பள்ளியில் நடக்கும் கதைகளையும் மாணவர்களின் விளையாட்டு தனத்தையும் இந்த மாதிரியான விஷயங்களையே கொடுத்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர் என்னடா இது என்று இடைவளை வரை சென்றாலும், இடைவேளைக்கு பிறகு இரண்டாம் பாதியில் நமக்குள் இருக்கும் நினைவுகளையும் தூண்டி எடுக்கிறார் இயக்குனர். அந்த நினைவுகளும் அந்த ஒரு முயற்சியும் கண்டிப்பாக இயக்குனருக்கு ஒரு பாராட்டாக தான் அமையும்
அதேபோல் இந்த கதை சொன்ன விதமும் எந்த நெருடலும் இல்லாமல் எந்த விரசமும் இல்லாமல் சமீபத்தில் வந்த பல படங்கள் கத்திக்கொண்டு ஒரு நார்மல் மனிதனாக நடந்து கொள்ளாத ஹீரோக்களுக்கு மத்தியில் ஒரு சாதாரண ஹீரோவாக நிற்கிறார் அபிஷன்.
அதேபோல் நாயகியும் தன் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்துகிறார்
படத்தில் வரும் அந்த முஸ்லிம் பெண் கேரக்டர் ஆகட்டும் அந்த காதலன் கேரக்டரனைப்படி கதாபாத்திரங்கள் நம்மை கடந்து செல்கின்றன நம் கடந்த நினைவுகளையும் கடந்து செல்கின்றன
படத்தின் இசையும் இந்த படத்தின் கதைக்கேற்றவாறு காலகட்டத்திற்கு ஏற்றவாறு சான்றோல்டன் தர முயற்சி செய்திருக்கிறார் அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்
நிச்சயம் இந்த வித் லவ் திரைப்படம் இந்த காலை இளைஞர்கள் மட்டும் இல்லாமல் அனைவரது மனதையும் பழைய நினைவுகளை தோண்டி விடும் என்பதில் சந்தேகம் இல்லை

மொத்தத்தில் வித் லவ் எல்லோர் மனதிலும் விட்டுப் போன லவ்வை தோண்டி எடுக்கும்

“க்ராணி” திரைவிமர்சனம்

வெளிநாட்டில் இருந்து மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் ஒரு கிராமத்தில் பழைய வீட்டினை ஒன்றை வாங்கி அங்கு செட்டிலாக நினைக்கிறார் நாயகன் அப்பொழுது அந்த வீட்டிற்கு வரும் அந்த ஊர் பெரியவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு வயதான பாட்டி நடக்க முடியாமல் அந்த வீட்டிலே வந்து விழுகிறார் அவரை காப்பாற்ற நினைக்கும் நாயகன் அதே நேரத்தில் அந்த கிராமத்தில் நடக்கும் ஒரு மர்ம கொலை ஒம்போது வயது குழந்தையின் இதயத்தை மட்டும் அறுத்து எடுத்துச் சென்றிருக்கிறார்கள் அதை விசாரிக்க வரும் திலீப் பணம் சிங்கம் புலியும் காவல் அதிகாரிகளாக பயணப்படுகிறார்கள்
அந்த கொலையை விசாரிக்க அதை செய்தது ஒச்சாயி என்னும் கிழவியும் அவருடைய சூனிய தந்திரமும் தான் என்று சொல்கிறார்கள் முதல் இதை கேட்க நம்ப மறுக்கும் அவர்கள் அதன் உண்மையை தெரிந்து அந்த கிழவியை தேடி வர அந்த வீட்டில் உள்ள அந்த கிழவி அந்த இரண்டு மேல் குழந்தைகளையும் கொண்டு இதயத்தை எடுத்தாரா தனது சூனியத்தை சாதித்தாரா அந்த சூனியக்கார கிழவி யார் அந்த சூனியத்தின் பின்னணியில் நடப்பது என்ன அந்த கதையின் பின்புறம் என்ன என்பதும், அவர்கள் எவ்வாறு அந்த கிழவியின் சூனியத்திலிருந்து தப்பித்தார்கள் என்பதை படத்தின் திரைக்கதை.
இந்த மாதிரி திரைப்படங்கள் எல்லாம் பேய் படமாக தான் வரும் ஆனால் இது பேய் படம் இல்லை இது ஒரு மந்திர தந்திரங்களை பற்றிய ஒரு படமாக எடுக்க நினைத்திருக்கிறார்கள் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் சூனியக்கார கிழவியாக வடிவுக்கரசி முழுவதும் ஆக்கிரமிப்பாக அவர் மட்டுமே

காவல் அதிகாரியாக வரும் திலீபன் சிங்கம்புலி சிங்கம் புலியின் காட்சிகள் வழக்கமான காமெடி கலந்த காட்சிகள் திலீபன் சீரியஸான காவல் அதிகாரி ஆகும் நடித்திருக்கிறார்கள் அவ்வளவே
இரண்டு குழந்தைகள் காது கேட்க முடியாமல் வாய் பேச முடியாமல் அவர்கள் நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது
படத்தின் மிகப்பெரிய காமெடி ஊர் தலைவராக வரும் கஜராஜா கத்தியை தூக்கிக்கொண்டு ஓடுகிறார் ஏதேதோ கதை சொல்லுகிறார் ஆனால் எதற்கும் பெரிதாக பயன்படவில்லை
பொதுவாக இந்த மாதிரி திரைப்படங்களுக்கு பின்னணி இசை என்பது திகிலூட்டும் படமாகவும் பார்ப்பவர்களை பயமுறுத்துவம் செய்ய வேண்டும் அது ஏனோ இந்த படத்தில் மிஸ் ஆகிறது ஒளிப்பதிவும் நம்மை மிரட்டவில்லை

“காந்தி டாக்ஸ்” திரை விமர்சனம்

மும்பையின் ஒரு குடிசைப் பகுதியில் வாழும் வேலை இல்லாமல் ஒருவேளை சாப்பாட்டுக்காக கஷ்டப்படும் விஜய் சேதுபதி, உடல் நலம் சரியில்லாத தனது தாயாரை பார்க்க மிகவும் சிரமப்படுகிறார். அதே நேரத்தில் இன்னொரு பக்கம் மிகப்பெரிய கன்ஸ்ட்ரக்ஷன் அதிபர் அரவிந்த்சாமி தொழிலில் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டு, கோர்ட் மூலமாக அனைத்து சொத்துகளையும் இழந்தவர், இவர்கள் இருவரும் தங்கள் நிலையை காத்துக் கொள்ள தங்கள் நிலையிலிருந்து வெளியில் வர என்ன செய்கிறார்கள், இவர்கள் இருவரும் ஒரே நேர்கோட்டில் எப்பொழுது சந்திக்கிறார்கள், அதன் பிறகு என்ன நடக்கிறது? என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை.
பணம் பத்தும் செய்யும்
பணம் தான் இந்த உலகில் எல்லாவற்றையும் நினைக்கிறது, நீதியை உட்பட நியாயத்தை உட்பட என்பதை நறுக்கென்று சொல்லி இருக்கிறார் இயக்குனர் அந்த பணத்தை பாதுகாக்க பணக்காரன் எப்படி போராடுகிறான், அந்த பணத்தை சம்பாதிக்க ஒரு ஏழை எப்படி கஷ்டப்படுகிறான், என்பதை “காந்தி டாக்ஸ்” என்னும் திரைப்படத்தின் மூலம் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
இந்த படத்தின் மிகப்பெரிய பலமே இந்த படத்தில் எந்தவிதமான வசனங்களும் கிடையாது உடல் மொழி மூலம் மட்டுமே நடிப்பையும் அந்த நடிப்பின் மூலம் கதையையும் சொல்ல இயக்குனர், அதற்கு இரண்டு மிக சிறந்த நடிகர்களை களத்தில் இறக்கி இருக்கிறார்கள் அவர்கள் வேறு யாரும் இல்லை ,விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி இருவரும் தங்களது கதாபாத்திரத்தில் தங்களுடைய முகபாவனைகள் மூலமும் அவ்வளவு அருமையாக எடுத்து சொல்கிறார்கள். இவர்களை தவிர இந்த திரைப்படத்திற்கு வேறு யாரும் சரியாக புரிந்து இருக்க மாட்டார்கள் என்று தான் படம் பார்க்கும் நமக்கு தோன்றுகிறது.
கதாநாயகியாக அதிதி ராவ் இவருடைய நடிப்பும் மிகவும் அருமையாக உள்ளது.
இந்த மாதிரி சிக்கலான திரைக்கதையில் நகைச்சுவையையும் நகைச்சுவை கதாபாத்திரங்களும் இணைத்து இருப்பது மிகப்பெரிய பலம் காட்சி. அமைப்புகள் அதற்கு ஏற்றார் போல் மிகவும் அருமையாக ஒவ்வொரு இடத்தையும் அந்த சூழலுக்கு ஏற்ப மிகவும் அருமையாக வைத்திருக்கிறார்கள்.
இந்த மாதிரியான படத்தின் மிகப்பெரிய பலம் இசை அந்த இசை ஏ ஆர் ரகுமானை தவிர வேறு யாராலும் தந்திருக்க முடியாது இசை தான் இந்த படத்தை அனைத்தையும் பேச வைக்கிறது.
இந்தப் படத்தின் இயக்குனர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் கிட்டத்தட்ட இரண்டு மணி நேர திரைப்படத்திற்கு எந்த வசனமும் இல்லாமல் திரைக்கதையில் விறுவிறுப்பை கொடுத்திருக்கிறார் இயக்குனர் அவரது முயற்சி மிகப் பெரிய சபாஷ்.


காந்தி டாக்ஸ் அதாவது காந்தி படம் போட்ட பேப்பர் நம்மிடையே கிடைக்க எவ்வளவு போராட்டமோ அந்த போராட்டத்தை காந்தி டாக்ஸ் மூலம் எடுத்துக் கூறியிருக்கிறார்