தமிழ் சினிமாவில் அடிக்கடி வரும் “feel-good entertainer” வகையைச் சேர்ந்த படம் தான் Happy Raj. வாழ்க்கையை லைட்டாக எடுத்துக் கொண்டு சந்தோஷமாக வாழும் ஒரு இளைஞனின் பயணத்தை மையமாக வைத்து, காமெடி, காதல், உணர்ச்சி ஆகியவற்றை கலந்து உருவாக்கப்பட்ட படம்.
பெரிய அளவிலான twist அல்லது experimental storytelling இல்லாமல், ஒரு simple மற்றும் relatable கதையை audience-க்கு கொண்டு செல்லும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.ராஜ் என்ற இளைஞன் வாழ்க்கையில் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், எப்போதும் positive mindset-இல் வாழ்பவன். அவனுடைய இந்த carefree அணுகுமுறை தான் அவனுக்கு நண்பர்களையும், உறவுகளையும், காதலையும் கொண்டு வருகிறது.
ஆனால், வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் அதே அணுகுமுறை அவனுக்கே பிரச்சனையாக மாறுகிறது. முக்கியமான விஷயங்களை கூட லைட்டாக எடுத்துக்கொள்வதால், அவன் எதிர்கொள்ளும் சிக்கல்கள் அதிகரிக்கின்றன.
அதன்பிறகு, வாழ்க்கையை எவ்வாறு balance செய்ய கற்றுக்கொள்கிறான்? “சந்தோஷம்” என்றால் என்ன என்பதைக் கண்டுபிடிக்கிறானா? என்பதே படத்தின் மைய conflict.
கதை புதுசாக இல்லையென்றாலும், execution மூலம் ஈர்க்க முயற்சிக்கிறது.
படத்தின் backbone ஹீரோவின் performance தான். அவர் தனது energetic screen presence மூலம் கதாபாத்திரத்தை உயிர்ப்பித்திருக்கிறார்.
ஹீரோயின் தனது வரம்புக்குள் நல்ல support கொடுக்கிறார். காதல் track subtle-ஆ அமைந்துள்ளது.
காமெடி மற்றும் supporting characters சில இடங்களில் நல்ல சிரிப்பை உருவாக்குகின்றனர். அதே சமயம், சில scenes-ல் overacting feel ஆகும்.
திரைக்கதை & இயக்கம் (Screenplay & Direction)
படத்தின் screenplay மிகவும் safe zone-ல் நகர்கிறது.
First half → லைட் காமெடி, friendship, romance
Second half → emotional shift + message
இந்த tonal shift predictable ஆனாலும், audience connect ஆகும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் commercial elements-ஐ தவிர்க்காமல், அதே சமயம் message-ஐ clarity-ஆ கொண்டு வந்திருக்கிறார். ஆனால், narration-ல் புதுமை இல்லை என்பது ஒரு minus.
🎵 இசை (Music)
படத்தின் இசை overall decent.
Songs → light & catchy
BGM → emotional scenes-ஐ elevate செய்கிறது
பாடல்கள் கதைக்கு தடையாக இல்லாமல், flow-க்கு support செய்கின்றன.
🎥 தொழில்நுட்பம் (Technical Aspects)
Cinematography → Bright visuals, colorful tone
Editing → First half-ல் lag இருக்கிறது
Production Quality → decent presentation
Technically படம் average-க்கு மேலே இல்லை, ஆனால் storyக்கு தேவையான அளவுக்கு இருக்கிறது.
Happy Raj ஒரு simple, feel-good entertainer. இது பெரிய cinematic experience அல்ல, ஆனால் ஒரு நல்ல positive vibe தரும் படம்.
தமிழ் சினிமாவில் ஹாரர் ஜானர் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. ஆனால் எல்லா ஹாரர் படங்களும் ஒரே மாதிரி jump scare-களில் நம்பிக்கை வைக்கும் நிலையில், “Sathan: The Dark” ஒரு வித்தியாசமான முயற்சி. இது வெறும் பயமுறுத்தும் படம் இல்லை — ஒரு இருண்ட, மன உளைச்சல் தரும் அனுபவம்.
கதை British காலத்தில் நடந்த ஒரு தவறான கருப்பு மந்திர சடங்கு (black magic ritual) மூலம் ஆரம்பமாகிறது. அந்த சடங்கு சரியாக நிறைவேறாமல் போனதால், ஒரு தீய சக்தி உருவாகிறது.
அந்த சாபம் ஒரு குறிப்பிட்ட கிராமத்தை தலைமுறைகள் கடந்தும் தாக்கிக்கொண்டே இருக்கும். மக்கள் அங்கு விசித்திரமான மரணங்கள், பயங்கரமான சம்பவங்கள், மற்றும் unexplained incidents-ஐ சந்திக்கிறார்கள்.
Present timeline-ல், ஒரு இளைஞன் இந்த கிராமத்துக்கு வருகிறான். அவன் காதலி இந்த சக்தியால் பாதிக்கப்படும்போது, அவன் அந்த பழைய இரகசியத்தை ஆராய ஆரம்பிக்கிறான்.
அந்தச் சாத்தானிய சக்திகளை எதிர்கொண்ட, தனது காதலியை அந்தப் பரம்பரைச் சாபத்திலிருந்தும், சாத்தானின் பிடியிலிருந்தும் எஃப்.ஜே மீட்டெடுத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
Heroine – பயம், குழப்பம் போன்ற உணர்வுகளை நன்றாக காட்டுகிறார்.
Supporting characters – சிலர் natural-ஆ இருக்கிறார்கள், சில இடங்களில் acting average feel தருகிறது.
Overall, star value இல்லாததால் realism இருக்கிறது.
இயக்குனர் ஒரு strong concept எடுத்திருக்கிறார்,ஆரம்பம் slow-ஆ build ஆகிறது,screenplay சில இடங்களில் confusing ஆகிறது,second half-ல் clarity இன்னும் better இருந்திருக்கலாம்.
காதல் திருமணம் என்றாலே பிடிக்காத குடும்பத்தை சேர்ந்த சுதர்சன் கோவிந்த் ஐடி கம்பெனியில் வேலை செய்கிறார்.உண்மையான காதலுக்காக ஏங்கும் ஒரு சராசரி மனிதன்.அவர் காதலர்களுக்காக நீ பார் எவர் என்ற ஒரு டேட்டிங் ஆப்பை உருவாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.ஏன் நேரத்தில் அர்ச்சனா ரவி திரைப்படத்தில் ஒரு இயக்குனராக முயற்சி செய்து கொண்டிருக்கிறார் ஒரு காதல் கதையை எடுத்து எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார்.இந்த சூழலில் அவர் ஒரு டேட்டிங் ஆப்பிள் யாராவது ஒருவரை சந்தித்து அவரிடம் காதலிப்பது போல் பழகி அந்த உண்மையான காதலை வைத்து ஒரு திரைக்கதை எழுத முயற்சி செய்கிறார்.அதே நேரத்தில் சுதர்சன் கோவிந்த் தனது ஆப்பிற்காக ஒரு பெண்ணிடம் பழக நினைக்கிறார் இருவரும் ஒரு சூழலில் ஆப் மூலம் பழக இவர்களுக்குள் ஒரு உண்மையான காதல் உருவானதா இல்லை அவர்கள் ஒருவரை ஒருவர் ஏமாற்றி பழகுவது தெரிகிறதா.இறுதியில் அந்த காதல் உண்மையானதாக மாறி வெற்றி பெற்றதா குடும்பத்தினர்கள் ஏற்றுக் கொண்டார்களா? அஜயன் தாத்தா காதலை வெறுக்கும் நிலையில் இந்த காதலை ஏற்றுக் கொள்கிறாரா என்பதுதான் நீ பார் எவர் படத்தின் திரைக்கதை இந்தப் படத்தின் நாயகனாக சுதர்சன் கோவிந்த் நல்ல உயரமான ஒரு உருவம் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் காதலுக்காக ஏங்கும் நிலையை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். அர்ச்சனா ரவி திரைக்கதில் ஒரு முக்கியமான கதாபாத்திரமாக வலம் வரும் நாயகி. நாயகனின் தாத்தாவாக வை ஜி மகேந்திரன் காதலுக்கு எதிரியாக வருகிறார். பொதுவாகவே இந்த மாதிரி திரைப்படத்திற்கு இசை என்பது மிகவும் உறுதுணையாக இருக்கும் இந்த படத்திற்கு ஓரளவுக்கு உறுதுணையாக இருக்கிறது அஸ்வின் ஹேமந்த் இன் இசை. ஒளிப்பதிவு கிராமத்தையும் பொள்ளாச்சியின் பசுமியையும் மிக அழகாக காட்டியுள்ளார்கள் இயக்குனர் அசோக் குமார் கலைவாணி இன்றைய தலைமுறைகளை குறி வைத்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார் அதில் அவர் சென்றடைவார் என்று நம்புவோமாக மொத்தத்தில் நீ பார் எவர் இன்றைய தலைமுறைக்கு எட்டா கணி
CURTAIN RAISER -Andy Weir, who authored The Martian, came up with another best seller, a science fiction novel, Project Hail Mary in 2021! Drew Goddard has adapted it for the big screen, the sc-fi adventure, produced and directed by Phil Lord and Christopher Miller. Premiered at London followed by its release in the U.S., the film is acclaimed both critically and commercially, touted to be one of the highest grosser of 2026, till date!
SYNOPSIS– Much to his shock than surprise, Ryland Grace (Ryan Gosling), a science and a molecular biologist, wakes from coma only to realize that is in a spaceship light years away from his home on Earth and is now in a distant star system! As he regains his memory, he recollects his current mission- to dig deep into the mystery behind an odd substance that aims at the extinction of the Sun by initiating a dimming effect caused by a microorganism, named Astrophage! Grace is actually recruited by Eva Stratt (Sandra Huller) who launches Project Hail Mary to probe into the proceedings and to ensure that the Astrophages are destroyed!
CREDITS -Cast-James Ortiz as the voice of the Alien Rocky while Ray Porter & Meryl Streep as the other voices of Rocky ; Priya Kansara as the voice of Mary of Hail Mary Ship
Music- Daniel Pemberton; Cinematography- Greig Fraser
CC Sony Pictures Entertainment India Release in English, Hindi, Tamil & Telugu
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு கிராமம் அந்த கிராமத்தில் குடிதண்ணீருக்கே அல்லல் படும் மக்கள்கள். அந்த ஊரில் கோவில் பூஜாளியாக யோகி பாபு அவர் ஒரு சிலை வடிக்கும் சிற்பியும் கூட அவருக்கு பக்கத்து ஊரை சேர்ந்த லெவலின் சந்திரசேகரை காதலிக்கிறார் இந்த சூழ்நிலையில் ஊர் மக்கள் தண்ணீரைக்காக கலெக்டர் முதற்கொண்டு பலருக்கும் மனு கொடுத்து பல்வேறு முயற்சி செய்கிறார்கள் அதில் கிணறு வெட்ட அரசாங்கம் பணம் ஒதுக்குகிறது அந்த பணத்தை வைத்து நீரூற்றைத் தேட அந்த நீரூற்று யோகி பாபுவின் வீட்டு வாசலில் இருக்க அங்கு போர் போடலாம் என்று முடிவு செய்யும் போது யோகி பாபுவின் தாத்தா, அதெல்லாம் முடியாது எங்க கிணறுதான் வெட்ட வேண்டும் என்று கூறுகிறார். அவ்வாறு கிணறு வெட்ட பூதம் கிளம்பும் கதையாக அந்த கிணற்றுக்குள் ஏதோ ஒரு மிகப்பெரிய மிருகத்தின் எலும்பு படிவம் இருக்கிறது எனவே அந்த இடத்தை தொல்லியல் துறை கைப்பற்றுகிறது அவர்கள் நடத்தும் அராஜகம் அந்த ஊர் மக்களை அடித்து விரட்டி விட்டு அந்த ஊரை முழுவதுமாக தோண்டி எடுக்க முயற்சி செய்ய யோகி பாபு ஊர் மக்களும் போராடுகிறார்கள் அந்த போராட்டத்தில் அவர்கள் வெற்றி பெற்றார்களா? அந்த ஊருக்கு தண்ணீர் வந்ததா என்பது தான் படத்தின் திரைக்கதை வழக்கம்போல யோகி பாபுவை தவிர மற்றவர்கள் எல்லோரும் படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள் யோகிபாபுவுக்கு வழக்கமான நடிப்புதான் அதுவும் போர் அடித்து அந்த நடிப்புதான் ஒரே மாடுலேஷனில் யாரையும் மரியாதை இல்லாமல் பேசுவது இதுதான் அவரது பாடி லாங்குவேஜ். படத்தின் திரைக்கதை காண கதைக்களம் மிகவும் அருமையாக தேர்ந்தெடுத்து இருக்கிறார் இயக்குனர் மேலும் இந்த கதையில் அவர் எடுத்திருக்கும் விதம் என்னதான் நமது வரலாறை உலக கொண்டு வந்தாலும் நிகழ்காலத்தில் வாழும் மனிதர்களின் வாழ்வாரதாரத்தை பாதிக்காமல் அதைத் தேட வேண்டும் என்பதை கூற நினைத்து இருக்கிறார் இயக்குனர் இதில் நடக்கும் தில்லுமுல்லுகளையும் எடுத்துக் கூறியிருக்கிறார். மிகப்பெரிய சோகம் என்னவெனில் இயக்குனர் சுரேஷ் சங்கையாவின் கடைசி படம் படம் முடித்து சில நாட்களிலேயே அவர் இறந்துவிட இந்த படம் இப்பொழுது திரைக்கு வந்திருக்கிறது
படத்தின் கதை ஒரு கிராமத்தில் ஆரம்பிக்கிறது ஒரு வீட்டில் இருந்து ஒரு சின்ன பெண் ஒரு சாப்பாட்டுக்கு கூட எடுத்துக் கொண்டு செல்கிறார் அவரது தந்தை அந்த காட்டு வழியில் போகும் போது பார்த்து பத்திரமாக போ அங்கு தான் சில ரவுடிகள் சேர்ந்து ஒரு பெண்ணை கொலை செய்தார் அதனால் பத்திரமாக சென்று வா என்று கூறுகிறார்.இந்தப் பெண்ணும் சரியென்று கூறிவிட்டு அந்த காட்டு வழியாக செல்ல அங்கே அந்த கொலை செய்யப்பட்ட பெண் பேயாக நின்று கொண்டு மிரட்டுகிறாள் இதைக் கண்டு அலறி ஓடும் அந்த பெண் வீட்டிற்கு ஓடி வருகிறாள் அதே கிராமத்தில் வாழும் கலையரசன் அவரது நிறைமாத கர்ப்பிணி தீபா பாலு அவர்கள் குடும்ப வழக்கத்தின்படி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போது அவரது குலதெய்வமாக இருக்கும் நிறைசூலி கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து அந்த கர்ப்பிணி என் கையால் படையல் போடுவது வழக்கம் எனவே கலையரசன் குடும்பத்தினரும் சகிதமாக நிறைய சொல்லி நிறை சூலி கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து படையல் இட இதே நேரத்தில் தீபா பாலுவின் குடும்பத்தினர் தீபா பாலு செய்த திருமணத்தை எதிர்த்து சாதியை காரணம் காட்டி அவர்களை கொலை செய்ய சதித்திட்டு அந்த காட்டிற்குள் வருகிறார்கள் வருபவர்கள் பொறுமையாக காத்திருந்து படையல் போட்டுவிட்டு குடும்பம் அனைவரும் கர்ப்பிணி பெண்ணை காட்டில் விட்டு விட்டு செல்கிறார்கள் கணவனுடன் மட்டும் மற்றவர்கள் எல்லாம் சென்றுவிட தீபாவளி குடும்பத்தினர் இருவரையும் வெட்டிக்கொண்டு அந்த நிறைசூழியம் காலடியிலேயே போடுகிறார்கள் இதுதான் இந்த கொலை சேவல் படத்தின் திரைக்கதை இந்த படத்தின் இயக்குனர் என்ன கூற வருகிறார் என்பதை தெளிவாகவும் கூறவில்லை இலை மறைமுறையாகவும் கூற முடியாமல் திணறி இருக்கிறார் ஏனென்றால் இந்த படம் பிளாஷ்பேக் ஆட்சியில் செல்கிறதா அல்லது நிகழ்காலத்தில் நடக்கிறதா என்பதை பெரும் குழப்பமாக இருக்கிறது நிச்சயம் சாதி பிரச்சினையை தொடத்தான் இயக்குனர் நினைத்து இருக்கிறார் ஆனால் அதையும் அவரால் தெளிவாக சொல்ல முடியவில்லை இந்த படம் ஒருவொரு காட்சியும் மிக நீளமாக செல்கிறது எதற்காக அவ்வளவு பெரிய காட்சிகள் கோவிலுக்கு பொங்கல் வைக்க செல்பவர்கள் குடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் யாரும் எந்த வேலையும் செய்யவில்லை அதேபோல் அந்த காட்டில் இருந்த கிளம்பும்போது அந்த நிறைமாத கர்ப்பிணி உடல் முடியாது என்று கூறும் போது அனைவரும் நீ உன் பொண்டாட்டியை கூட்டி கொண்டு வா நாங்கள் எல்லாம் டிராக்டரில் செல்கிறோம் என்று அப்படியா அண்ணாமத்தாக விட்டு விட்டு செல்வார்கள் இதெல்லாம் இயக்குனர் கவனத்தில் இருந்தால் கொலை சேவல் ஒரு பீலிங் படமாக இருந்திருக்கும்
இந்தப் படத்தின் தயாரித்திருப்பவர் ஆர்பி பாலா இவர் பெரிய பெரிய மாற்றுமுறை படங்களுக்கு தமிழில் எவ்வளவு பெரிய படங்களுக்கு எழுதிய இவர் இந்த படத்தில் ஏனோ சற்றே தடுமாறி இருக்கிறார் என்று கூறலாம் அறிமுக இயக்குனர் துதிவாணன் படத்தின் மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவு மட்டுமே இசை ஏதோ ஹாரர் படம் பேய் படம் என்பது போல் ஆங்காங்கே காட்டிவிட்டு கடைசி ஜாதி வேட்டையான படமாக இருக்கவே அந்த ஹாரர் மியூசிக் ஒத்து வரவில்லை
ஏழை குடும்பத்தில் பிறந்து அரசு பள்ளியில் படிக்கும் அபர்னதி சிறுவயதிலேயே புகழ் போதையை தலைக்கு ஏற்றிக்கொண்டு இருக்கிறார் அவரது தந்தையாக காளி வெங்கட் தன் மகளின் படிப்பிற்காக எதையும் செய்ய நினைக்கிறார் படிப்பு தான் உன்னை காப்பாற்றும் என்றும் அடிக்கடி கூறிக்கொண்டு வருகிறார் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநிலத்தில் முதலிடம் வரும் அவர் நதி அந்தப் பாராட்டும் கைத்தட்டல்களும் சில நாட்களில் மறந்து விட அதில் மிகவும் பாதிக்கப்படுகிறார் மனதளவில் இதனால் தனக்கு அந்த புகழ்ப்பதை வேண்டும் என்பதற்காக தனது தந்தையை கொலை செய்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்து அனைத்து செய்தித்தாள்களிலும் ஊடகங்களையும் வரும்படி தன்னை காட்டிக் கொள்கிறார் பிறகு படித்து மாவட்ட கலெக்டராகவும் ஆகிறார் மாவட்ட கலெக்டர் ஆகி முதலமைச்சர் உள்துறை அமைச்சர் ஆகியோருடன் இவரது நேர்மை அரசியல் மோதலாக அதிகார மோதலாக மாறுகிறது இந்த சூழ்நிலையில் தனது திறமையான நடத்தியால் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு அரசியல் கட்சிக்கு ஆலோசகராக சேர்ந்து பின்பு அவர்களுக்கும் மிகப்பெரிய பயங்கரமான வெஞ்சன்ஸ்கள் தான் படத்தின் தலைப்பாக வெஞ்சன் என்று வைத்துள்ளார்கள் இந்த வெஞ்சன்ஸில் அவர் யாரையெல்லாம் பழி வாங்கினார் என்ன வானார் எந்த உயரத்திற்கு சென்றார் என்பதுதான் இந்த படத்தின் திரைக்காதை இந்த படத்தில் வேணி என்னும் கதாபாத்திரத்தில் அபர்னதி முழுக்க முழுக்க அதிகாரம் மிக்க தோரணையை மிகவும் அருமையாக உடல் மொழியில் வெளிப்படுத்தி இருக்கிறார் முதலமைச்சராக ஒய் ஜி மகேந்திரன் மேலும் சரவண சுப்பையா லிவிங் ஸ்டண்ட் ஜான் விஜய் மற்றும் பல இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள் கார்த்திக் ராஜா ஒரு நல்ல விறுவிறுப்பான இசையை அளித்திருக்கிறார் இந்த படத்தின் இயக்குனர் எடுத்திருக்கும் கதை ஒரு பெண்ணை ஒரு அதிகாரமிக்க வர்கத்தில் எப்படி வாழ முடியும் அவர் எவ்வளவு அதிகாரமாக இருக்க முடியும் என்பதை கையில் கொண்டு ஒரு கதையாக எழுத முயற்சித்திருக்கிறார் ஆனால் படத்தில் நிறைய சீன்களை தான் எழுதியிருக்கிறார் அதை எல்லாம் தவிர்த்து படத்தின் நீளத்தை குறைத்து இருந்தால் படம் இன்னும் விறுவிறுப்பாக சிறந்த அரசியல் படமாக இருந்திருக்கும்
ஒரு விபத்தில் தனது பெற்றோர்களை பறிகொடுத்த பாவனாவும் அவரது தம்பியும் தனிமையில் வசிக்கிறார்கள் பாவனா ஒரு தடவியில் நிபுணராக வேலை செய்கிறார் ஆனாலும் அவரது தம்பி தனது பெற்றோரின் மரணத்திலிருந்து வெளியில் வர முடியாமல் மனதளவில் பாதிக்கப்பட்டு அதற்கானஉலகில் சிகிச்சையில் இருக்கிறார் இந்த நிலையில் அந்தப் பகுதியில் விசித்திரமான முறையில் பல தற்கொலைகள் நடக்கின்றன, அந்த தற்கொலைகளை தடவியல் நிபுணரான பாவனா அங்கு இருக்கும் நிகழ்வுகளை பார்வையிடுகிறார். அதே நேரத்தில் பாவனாவின் தம்பியும் அதே முறையில் தற்கொலை செய்து கொள்ள அதை விசாரிக்க இறங்குகிறார் பாவனா, அதே நேரத்தில் மற்றொரு பக்கம் காவல்துறை அதிகாரியாக ரகுமான் அவருக்கு காவல்துறையில் ஏதோ ஒரு மன உளைச்சலில் இருந்து சரிவர வேலை செய்யாமல் இருக்கிறார்.இந்த நிலையில் அவரது உயர் அதிகாரிகள் கூப்பிட்டு அவருக்கு நேர கெடு வைத்து இதற்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்கிறார்கள்.
அதே நேரத்தில் பாவனா தனது தம்பியின் மரணத்தில் சந்தேகப்பட்டு நீதிமன்றத்தில் பல தடயங்களை சமர்ப்பித்து எனது தம்பி தற்கொலை செய்து கொள்ளவில்லை கொலை தான் செய்து கொண்டிருக்கிறார் என அது குறித்து விசாரிக்க வேண்டி மனு தாக்கல் செய்கிறார். கோர்ட்டும் காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறது, இந்த நிலையில் ரகுமானும் பாவனாவும் இணைந்து நடந்த அத்தனை தற்கொலைகளும் தற்கொலை அல்ல கொலை தான் என்பதை எவ்வாறு வெளிக்கொண்டு வருகிறார்கள் என்பதை இந்த அனோமி படத்தின் திரைக்கதை.
இந்தப் படத்தின் மிகப்பெரிய வளமை திரைக்கதை தான் அந்த சைக்கோ கொலைகாரன் ஏன் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களை தேர்ந்தெடுத்து கொலை செய்கிறான் அதற்குப் பின்னணி என்ன என்பதை சொல்ல வரும்போது நமக்கே சற்று பயமாக தான் இருக்கிறது ஆனாலும் அந்த விஷயத்தை திரைக்கதையில் இன்னும் ஆழமாக சொல்லி இருந்தால் திரைக்கதை ஒரு முழுமையான ட்ரெயின் திரில்லராக இருந்திருக்கும் அந்த விஷயத்தில் இயக்குனர் சற்று தொய்வடைந்து இருக்கிறார்
படத்தில் பாவனாவின் நடிப்பு அளவாக இருக்கிறது ரகுமானின் நடிப்பை வீணடித்திருக்கிறார்கள் மற்றும் பாவனாவின் தம்பி கொலைகாரர்கள் என அனைவரும் தங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரங்களை செய்திருக்கிறார்கள் இந்த மாதிரியான கிரைம் திரில்லர் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு இசையமை மிகவும் பலமாக இருக்கும் ஆனால் இது அதுவும் சற்றே தொலைவாக தான் இருக்கிறது மேற்கண்ட பல விஷயங்களை இயக்குனர் சிறப்பாக கவனித்து இருந்தால் அனோமி ஒரு உணர்வுபூர்வமான க்ரைம் திரிலராக வந்திருக்கும்
ஊர்வசி, வி.கே. பைஜு,ராஜேஷ் ஷர்மா , ஜெயன் சேர்த்தலா, நோபி மார்கோஸ், அஞ்சலி சத்யநாத்,கலேஷ் ராமானந்த், பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, ஜிபின் கோபிநாத், ரேஷ்மி அனில், ஷைலஜா அம்பு, பி.ஆர். பிரதீப் நடித்துள்ளார் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி உள்ளார் ஷிவாஸ்.
ஒளிப்பதிவு அனில் நாயர், இசை கைலாஷ் மேனன்,பாடல்கள் பி. கே .ஹரி நாராயணன், படத்தொகுப்பு ஷாய்ஜால் பி.வி,கலை இயக்கம் ராஜேஷ் மேனன். எவர் ஸ்டார் இந்தியன் வழங்கும் இந்தப் படத்தைப் பாசில் ஹோல்டிங்ஸ் உடன் இணைந்து ஊர்வசி தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தின் கதை என்ன?
திருமணம் ஆகாத 40 வயதைத் தாண்டிய ஜெகதம்மா பாரத்தூர் என்கிற முன்னேற்றம் எட்டிப் பார்க்காத சிறிய ஊரில் வசித்து வருகிறார். அங்கே உள்ளவர்களுக்குக் குறிப்பாக உழைக்கும் பெண்களிடம் வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்கும் தொழில் செய்கிறார். அத்துடன் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஏஜெண்டாகவும் இருக்கிறார். படப்பிடிப்புகளுக்கு துணை நடிகர்கள் சப்ளை செய்கிறார். அவருக்கு நம்பிக்கைக்குரிய தம்பியைப் போல் அன்வர் என்பவர் கூடவே இருக்கிறார். இப்படிப்பட்ட ஜெகதம்மா சொன்னபடி கேட்பதற்கு அங்கே ஒரு பெண்கள் கூட்டம் இருக்கிறது. அதிகாரிகளின் சட்ட திட்டங்களெல்லாம் அங்கே செல்லுபடி ஆகாது .அப்பகுதிப் பெண்கள் இவர் சொல்வதையே வேதவாக்காக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இது அந்தப் பெண்களின் கணவர்களுக்குப் பிடிப்பதில்லை. இருந்தாலும் இவர் சொல்வதைத்தான் மனைவிகள் நம்புவார்கள்.
இப்படிப்பட்ட சூழலில் அந்த ஊர்ப் பஞ்சாயத்து தலைவர் இறந்து விடுகிறார். அந்த 11 ஆவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு ஜெகதம்மா போட்டியிடும் படி ஒரு சூழல் வருகிறது. அதைப் பயன்படுத்திக் கொண்டு அவர் தேர்தலில் நிற்கிறார். அவரை எதிர்த்து தேசிய கட்சியும் பொதுவுடமை கட்சியும் என இரண்டு பிரதான கட்சிகள் வேட்பாளர்களை களத்தில் நிறுத்துகின்றன.அனுதாப ஓட்டுகளை வைத்து வெற்றி பெறலாம் என்று இறந்த பஞ்சாயத்து தலைவர் மகளை நிறுத்தி ஒரு கட்சியினர் தேர்தல் பணியாற்றுகிறார்கள். இன்னொரு கட்சியான பொதுவுடமைக் கட்சியில் ஒரு பெரிய பணக்காரரை வேட்பாளராக நிறுத்துகிறார்கள்.அவருக்கு வாய்ப்பு கொடுத்ததில் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் முணுமுணுப்புகள் எதிர்ப்புகள் கிளம்புகின்றன. அப்போது அந்த உறுப்பினர்களின் வங்கிக் கணக்கில் ஐம்பதாயிரம் ரூபாய் வந்தவுடன் அவர்கள் எல்லோரும் மனம் மாறி ஒப்புக்கொள்கிறார்கள். இப்படிப்பட்ட இரு பெரிய மலைகள் இடையே ஜெகதம்மா மோதுகிறார். இவரை எதிர்த்து பல்வேறு பிரச்சாரங்கள் செய்கிறார்கள். இந்த அரசியல் விளையாட்டில் தனி ஒரு நபராக ஜெகதம்மா எப்படி ஜெயிப்பார் ? அந்தப் பகுதி மக்களைக் கவர மூன்று வேட்பாளர்களும் விவாதம் செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். சித்தாந்தங்கள் சட்டதிட்டங்கள் பேசும் அவர்கள் மத்தியில் ஜெகதம்மா சில எளிமையான கேள்விகள் கேட்டு அவர்களை மடக்குகிறார் .அது பொதுமக்களிடம் பிரபலமாகிறது. அது மட்டுமல்லாமல் இவர் எளிமையாக ஜோடனை இல்லாமல் பேசுவது வைரலாகிறது. ஜெகதம்மாவுக்கு தான் வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை இல்லாமல் இருக்கிறது .அப்போது அவரே மக்களிடம் அனுதாபம் பெறுவதற்கு ஒரு வேலையைச் செய்கிறார். அத்துடன் இடைவேளை வருகிறது.
அவர் செய்த வேலையால் மக்களிடம் அனுதாப அலையடிக்கிறது.11 வது வார்டு தேர்தலில் ஒரு வழியாக வெற்றி பெற்று விடுகிறார்.எதிர்க்கட்சிகள் வாயடைத்துப் போயிருக்கின்றன .பஞ்சாயத்து தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் இரு பக்கமும் சம பலத்துடன் இருப்பதால் ஒரு சிக்கல் வருகிறது.ஜெகதம்மாவின் ஒற்றை வாக்கு முக்கியமானதாகிறது.இவரைத் துணைப் பஞ்சாயத்து தலைவராக முயற்சி செய்கிறார்கள். தான் தலைவராகத்தான் ஆவேன் என்று பிடிவாதம் பிடித்து அதிலும் வெற்றி பெறுகிறார். இவரைத் தலைவராக்கி தாங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளலாம் என்று நம்பிய அரசியல்வாதிகளுக்கு அவர்கள் எண்ணத்திற்கு எதிராகச் செயல்பட்டு பேரிடியாக மாறுகிறார்.
ஒரு காலத்தில் வட்டி வசூல் செய்யும் ராணியாக ஜெகதம்மா இருந்திருந்தாலும் அந்தப் பதவிக்கு வரும் போது மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். அங்குள்ள முறைசாரா தொழிலாளர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு உருப்படியாக செய்ய நினைக்கிறார். அங்கே கழிவு மேலாண்மை இல்லாமல் ஊரை அசுத்தப்படுத்துவதைக் தடுக்க நினைக்கிறார். இதற்காக கலெக்டரிடம் மனு கொடுக்கிறார். இது எதிர்க்கட்சிகளுக்குப் பிடிக்கவில்லை .அவருக்கு எதிராகச் சதி செய்கிறார்கள். ஜெகதம்மா எதார்த்தமாக பேசிய பேச்சை வைத்து, கலவரம் செய்கிறார்கள்.கலவரத்தைத் தூண்டினார் என்று பழி போடுகிறார்கள். சிறை செல்கிறார். பிறகு குற்றமற்றவராக விடுதலையாகிறார்.ஜெகதம்மா எதார்த்தமாக பேசிய பல பேச்சுகள் மக்களிடம் தீயாகப் பரவுகிறது. தொழிலாளர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். அவர்களைப் பார்த்து இவர் ’நங்கு பழி’க்கிறார் .அது அவர்களை அவமானப்படுத்தியதாகப் பிரச்சாரம் செய்தாலும் மக்களிடம் அது பிரபலமாகிறது.இப்படி அவருக்கு எதிரான அம்புகள் அனைத்தும் பூ மாலையாக மாறியது போல் அவருக்கு விளம்பரமாகவும் அமைகிறது.செல்வாக்கும் உயர்கிறது. இப்படிப்பட்ட சூழலில் ஜெகதம்மா ஒரு பெரும் சக்தியாக உருவெடுக்கிறார்.’நோட்டா’ தெரியாமல் வெள்ளந்தியாக இருக்கும் ஜெகதம்மா,பஞ்சாயத்து தலைவர் ஆன பிறகு தெருவில் பொறுப்பில்லாமல் குப்பை போடுபவர் வீட்டுக்கு அதை பார்சல் செய்து கொடுத்து விட்டு அபராதத் தொகை செலுத்த பில்லை நீட்டும் போது பொறுப்புள்ள ஊர்த் தலைவராக மாறி இருப்பார். அங்கே முறைசாரா தொழில் செய்து கொண்டு இருந்தவர்களுக்கு மத்திய அரசு 100 கோடி ரூபாய் வழங்குகிறது. அதன் பிறகு அவர் தடையை உடைத்து முன்னேறிய ஒரு தலைவராக உருவெடுக்கிறார். அவரை இழுப்பதற்குப் பல்வேறு கட்சிகள் போட்டி போடுகின்றன. இன்னொரு பக்கம் தனிக்கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள். இத்தனை கட்சிகள் இத்தனை கொடிகள் இருக்கும் போது இன்னொரு கட்சியா? இன்னொரு கொடியா? நமக்கு இருக்கும் ஒரு கொடி போதும் என்று அவர் தேசியக் கொடியைக் காட்டுகிறார் அத்துடன் படம் முடிகிறது.
இந்தப் படத்தில் ஊர்வசி ஜெகதம்மா என்கிற டைட்டில் ரோல் ஏற்றுள்ளார். ஜெகதம்மாவாக ஊர்வசி படம் முழுக்க ஆக்கிரமித்து அனைத்து காட்சிகளிலும் அவரே மேலோங்கி நிற்கிறார்.
அந்த பாத்திரத்தை தக்க வைத்துக் கொண்டு கம்பீரமாக படத்தைத் தூக்கிச் சுமந்து இருக்கிறார். பல்வேறு பாத்திரங்கள் இடையில் ஊடாடி வந்தாலும் எல்லாவற்றையும் விட அவர்தான் மேலோங்கி வெளிப்பட்டுள்ளார். பல்வேறு சந்தர்ப்பங்களில்,விதவிதமான முகபாவனைகள் என்று நடிப்பாற்றல் காட்டுவதற்கான வாய்ப்புகளும் படத்தில் உள்ளன . அதை அவரும் சரியாகப் பயன்படுத்தி உள்ளார். அந்தக் கிராமத்து மனுஷியாகச் சரியாக உடல் மொழி காட்டி உள்ளார். எனவே படம் பார்த்துவிட்டு வெளியே வருகிறபோது ஜெகதம்மா மட்டுமே நினைவில் நிற்கும்படியாக அவர் நடித்துள்ளார்.
மேலும் இந்தப் படத்தில் பொதுவுடைமை கட்சி வேட்பாளர், தேசியக் கட்சித் தலைவர்கள்,ஊர்வசியுடன் எப்போதும் துணை நிற்கும் அன்வர் என்கிற வாலிபன்,தொலைக்காட்சி நேர்காணல் செய்பவர், லோக்கல் யூடியூப் சேனல் காரர் என்று பல்வேறு முகங்கள் மனதில் பதிகிறார்கள்.
எப்போதுமே ஏதாவது ஒரு ஸ்லோகத்தை சொல்லிக்கொண்டு இருக்கும் ஒரு பாத்திரம் நினைவில் இருக்கும். எளிமையான காட்சிகள் மூலம் கதாபாத்திரங்களின் தன்மையை உணர்த்தும் வகையில் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.அதற்கேற்ற வகையில் ஒளிப்பதிவாளர் அனில் நாயரின் ஒளிப்பதிவு அமைந்துள்ளது. இசையமைப்பாளர் கைலாஷ்மேனனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக உள்ளன.
அரசியல் கட்சிகள் செய்யும் அன்றாடச் செயல்பாடுகளை எல்லாம் காட்சிகள் ஆக்கி விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறார்கள். அரசியல் விளையாட்டில் எதுவும் சகஜம் என்று இருக்கும் கட்சிகளின் போக்கையும் காட்சிகள் ஆக்கியிருக்கிறார்கள்.
ஏழாம் வகுப்பு படித்த ஒரு பெண்,ஸ்டேட் ஃபர்ஸ்ட் என்று கூறும் அளவிற்கு எப்படி மாநிலத்தில் முதலாவதாகப் பார்க்கக்கூடிய பெண்ணாக உயர்கிறாள் என்பதுதான் இந்தக் கதை.
ஓர் எளிமையான கதையை எடுத்துக் கொண்டு கலகலப்பான காட்சிகளைக் கொண்டு வலிமையான கருத்தை சுவாரஸ்யமான திரைக்கதை அமைப்பில் வெற்றிகரமான படமாக உருவாக்கி இருக்கிறார்கள்.இப்படம் மலையாளத்தில் வந்திருந்தாலும் காட்சிகள் மொழித் தடைகளை தாண்டி ரசிக்க வைக்கின்றன.
கன்னியாகுமரி பகுதியில் வசிக்கும் சரத்குமார் வெளியில் படகு மெக்கானிக் ஆகவும் முழு நேர தொழிலாக போதை கடத்தல் ஆயுத கடத்தலில் ஈடுபடும் ஒரு மிகப்பெரிய தாதாவாகவும் இருக்கிறார் அவருக்கு ஒரு மகள் இன்னொருஇன்னொரு பக்கம் ஒரு ஏழை குடும்பத்தில் வசிக்கும் இந்திரஜித் அவருக்கும் சரத்குமாரின் மகள் தேவிகாவுக்கும் காதல்.இதை அறிந்த சரத்குமார் அந்தப் பையனை ஒரு படகில் கட்டி நடுக்கடலில் தூக்கிக்கொண்டு சித்தரவதை செய்து கொலை செய்ய முயற்சிக்கிறார் இந்த சம்பவத்தில் சரத்குமார் அந்த பையனை கொலை செய்கிறாரா?சரத்குமாரை கொலை செய்கிறானா ?அல்லது இருவருக்கும் ஏதாவது ஏற்பட்டு மூவர் இருவரும் தப்பித்தார்களா என்பது தான் இந்த படத்தின் திரைக்கதை. இந்தப் படத்தில் இந்த இரண்டு கதாபாத்திரங்கள் தவிர வேறு எதுவும் இல்லாததால் கதை அந்த ஒரு இடத்தில் மட்டுமே அந்த படகில் மட்டுமே நடைபெறுகிறது.இந்த திரைப்படத்தின் ஸ்பெஷல் என்னவென்றால் ஆஸ்கார் விருது பெற்ற சவுண்ட் இன்ஜினியர்ரசூல் பூக்கூட்டி இந்த படத்திற்கு சவுண்ட் இன்ஜினியராக பணியாற்றி இருக்கிறார் அது மட்டுமே இந்த திரைப்படத்தின் ஸ்பெஷல் சரத்குமார் வரும் முரட்டுத்தனமாக நடிப்பிற்கு அந்த ஒட்டு தாடி ஏனோ ஒட்டாமலே இருக்கிறது அது இல்லாமலே அவர் வெள்ளத்தனம் காட்டி இருக்கலாம் ரசிக்கும் படியாக இருந்திருக்கும். அவர் வில்லன் கடத்தல் மணி என்று காட்டுவதற்காக ஒரே ஒரு சீன் மட்டும் வைத்திருக்கிறார்கள் அதுவும் அவர் வெளிநாடு தனத்தை காட்டவில்லை ஏதோ வந்தோம் போனோம் என்று தான் இருக்கிறது. அறிமுக நாயகனாக இந்திரஜித் தேவிகா சதீஷ் இருவரும் தங்களது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள் இந்திரஜித் நடிப்பு சரத்குமாரின் அடி வாங்கும் போது மிகவும் நன்றாக நடித்திருக்கிறார். மாத ராமதாசன் எழுதி இயக்கியுள்ள ஆழி இந்த திரைப்படம் கடலின் ஆழத்தை காட்டி நம்மை பயமுறுத்தும் என்று நினைத்தால் நினைத்தால் தான்