Breaking
October 18, 2024

Disney+ Hotstar is now streaming critically acclaimed film ‘Chithha’

India’s leading streaming platform Disney+ Hotstar is now streaming director S U Arun Kumar’s critically acclaimed film ‘Chithha’, featuring actors Siddharth, Nimisha Sajayan and Sahasra Shree in the lead.

Chithha, which many critics have hailed as the film of the year, is a gripping drama that revolves around the sensitive issues of child trafficking and child sexual abuse.

The film has been lauded for the manner in which it throws light on certain aspects of the sensitive topic that have not been addressed in cinema ever before.

Music is by Dhibu Ninan Thomas and Vishal Chandrashekar and cinematography is by Balaji Subramanyam

Produced by Siddharth himself, the film is a brilliant and gripping masterpiece that is sure to keep viewers hooked on to the screen.

The film is released in five languages — Tamil, Telugu, Hindi, Malayalam, Kannada.

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘ட்ரெயின்’

சமீபகாலமாக வெற்றிப் படங்களை கொடுத்து மகிழ்ச்சியில் இருக்கும் நடிகர் விஜய் சேதுபதி முதன்முறையாக இயக்குனர் மிஷ்கினுடன் கைகோர்த்து உள்ளார். ட்ரெயின் (Train) திரைப்படத்தை தமிழ்த் திரையுலகின் மாபெரும் வெற்றி படங்களை கொடுத்த பிரம்மாண்ட தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணு இந்த ட்ரெயின் (Train) படத்தை தயாரிக்கிறார்.

இந்த கதை ஒரு ரயில் பயணத்தில் நடைபெறும் அதிரடி திகில் நிறைந்த கதை என கூறப்படுகிறது, எனவே ட்ரெயின் (Train) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்காக விஜய் சேதுபதி வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார், மேலும் அவரது தோற்றத்திற்காக நிறைய மாற்றங்களைச் செய்துள்ளார்.டிம்பிள் ஹயாதி அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் .

இப்படத்தில் ஈரா தயானந்த், நாசர், வினய் ராய், பாவனா, சம்பத் ராஜ், பப்லு பிருத்விராஜ், கே.எஸ்.ரவிக்குமார், யூகி சேது, கணேஷ் வெங்கட்ராமன், கனிஹா, தியா சீதிபள்ளி, சிங்கம் புலி, ஸ்ரீரஞ்சனி, அஜய் ரத்னம், திரிகுன் அருண், ராச்சல் ரபேக்கா மற்றும் பலர் நடிக்கிறார்கள் .

தனது இசைத்திறமையை வெளிப்படுத்தி வரும் இயக்குனர் மிஷ்கின் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். பௌசியா பாத்திமா ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீவத்சன் படத்தொகுப்பை கவனிக்க, கலை இயக்கத்தை V.மாயபாண்டி மேற்கொள்கிறார்.

ட்ரெயின் (Train) படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் தொடங்கியது. பூஜையில் இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் சங்கத்தின் தலைவர் நடிகர் நாசர், தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் திரு முரளி ராமசாமி, திரு ராதாகிருஷ்ணன், S கதிரேசன், தயாரிப்பாளர் அண்புச்செழியன் ,
கல்யாணம் (Knack Studios)
ஆகியோர் கலந்து கொண்டனர்.

நடிகர்கள்:
விஜய் சேதுபதி
டிம்பிள் ஹயாதி
ஈரா தயானந்த்
நாசர்
வினய் ராய்
பாவனா
சம்பத் ராஜ்
பப்லு பிருத்விராஜ்
கே.எஸ்.ரவிக்குமார்*
செல்வா சந்திரசேகர்
யூகி சேது
கணேஷ் வெங்கட்ராமன்
கனிஹா
தியா சீதிபள்ளி
சிங்கம் புலி
ஸ்ரீரஞ்சனி
அஜய் ரத்னம்
திரிகுன் அருண்
ராச்சல் ரபேக்கா

தொழில்நுட்ப குழு:

இயக்கம் மற்றும் இசை: மிஷ்கின்
தயாரிப்பாளர்: ‘கலைப்புலி’ எஸ் தாணு
நிர்வாக தயாரிப்பு : எல்.வி.ஸ்ரீகாந்த்
ஒளிப்பதிவு: பௌசியா பாத்திமா
படத் தொகுப்பு: ஸ்ரீவத்சன்
கலை இயக்குனர்: வி.மாயபாண்டி
ஆடை வடிவமைப்பாளர்: ஷைமா அஸ்லாம்
படங்கள்: ஜெ.ஹரிசங்கர்
ஒலி வடிவமைப்பாளர்: ஜெஸ்வின் மேத்யூ
நிர்வாக தயாரிப்பாளர்: ஆர். உதயகுமார்
தயாரிப்பு நிறுவனம்: வி கிரியேஷன்ஸ்
மக்கள் தொடர்பு : ரியாஸ் K அஹ்மத் (V4U மீடியா), சதீஷ் (AIM)

Toyota Kirloskar Motor Initiates Health Check drive for over 10,000 School Children in Ramanagara

Chennai, 29 th November 2023:

Building on the success of prior healthcare initiatives such
as, A Behavioural Change Demonstration (ABCD) and Community Health Centre (CHC),
Toyota Kirloskar Motor (TKM) today announced the continued success of the Toyota Shaale
Arogya Program (TSAP) in Ramanagara district, with special focus on child health and
community well-being. Initially launched in 2019, TSAP has evolved as an important initiative
in TKM’s comprehensive approach to healthcare and hygiene awareness among
government school students, considering children are country’s future.
Under TSAP, the students undergo comprehensive medical checkups with focus on early
detection and resolution of health issues. The initiative addresses concerns such as
anemia, malnutrition, visual and hearing impairments among school students, and
depending on the diagnosis, they are provided with appropriate corrective measures like
spectacles, hearing aids, healthcare supplements, or referred to a tertiary healthcare center.
In addition, the program has health and hygiene awareness sessions, aimed at equipping
students with the knowledge necessary for maintaining good health. So far, this program has
reached over 10,000 children in more the 180 schools within Ramanagara district.
Furthermore, TSAP program is also extended to the community through the Health camps.
These camps provide an array of medical checks like random blood sugar tests, vision and
dental examinations, ECGs, along with the distribution of essential medicines. This program
provides health care facilities to the villages making it accessible for all community members.
In this current year, TKM has conducted health camps in 18 villages and positively impacting
more than 1100 individuals.
Speaking on the initiative, Mr. Vikram Gulati, Country Head and Executive Vice
President, Toyota Kirloskar Motor said, “In line with our commitment for community well-
being, the Toyota Shaale Arogya Program, alongside our other healthcare endeavors like
Community Health Centre and Water Purifications Units reflects our dedication to making a
meaningful difference in the lives of community members, especially focusing on the well-
being of children, fostering a brighter future. As we navigate the path ahead, our pledge to
create a healthier society and nation, remains resolute as we are driven by the belief that
sustainable progress begins with the well-being of our children and communities.”
Demonstrating a broader dedication to healthcare, TKM goes beyond the realms of TSAP.
Some of the recent initiatives include a Community Health Centre in Bidadi, Karnataka with
exclusive oxygen-generating plant, delivering specialized care. Additionally, school-based
health and hygiene programs like ABCD, and installation of water purification units, have
significantly enhanced the health outcomes within the community. In the fiscal year 2022-23
alone, TKM made a positive impact of over 65,000 individuals, contributing to a cumulative
outreach of more than 11,16,365 individuals.

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் வழங்கும் விஜய்குமாரின் ‘ஃபைட் கிளப்’

திரைப்பட இயக்குநரும், நடிகருமான விஜய் குமார் ‘ஃபைட் கிளப்’ படத்தில் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கிறார், அதன் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. ரீல் குட் பிலிம்ஸ் ஆதித்யா தயாரித்துள்ள இப்படத்தை திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வழங்குகிறார், அவர் சமீபத்தில் தனது ‘ஜி ஸ்குவாட்’ தயாரிப்பு நிறுவனத்தை அறிவித்தார் என்பது குறிப்பிடதக்கது.

இயக்குநர் அப்பாஸ் ஏ. ரஹ்மத் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் ‘ஃபைட் கிளப்’. இதில் விஜய் குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மோனிஷா மோகன் மேனன் நடித்திருக்கிறார். இவர்களுடன் கார்த்திகேயன் சந்தானம், சங்கர் தாஸ், அவினாஷ் ரகுதேவன் , சரவணன் வேல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கதையை சசி அவர்கள் அமைத்திருக்கிறார். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏழுமலை ஆதிகேசவன் கவனிக்க படத்தொகுப்பு பணிகளை கிருபாகரன் மேற்கொண்டிருக்கிறார். சண்டைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு விக்கி மற்றும் அம்ரீன் – அபுபக்கர் ஆகியோர் இணைந்து ஆக்ஷன் காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். கிரியேட்டிவ் புரடியூசராக விஜய் குமார் பணியாற்றியுள்ளார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை, ரீல் குட் ஃபிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் கதாநாயகனான விஜய் குமாரின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களையும், பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.

இதனிடையே இப்படத்தினை நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ் அவர் சொந்தமாக தொடங்கி இருக்கும் ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் சார்பில் முதல் படைப்பாக வழங்குகிறார் என்பதும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ‘ஃபைட் கிளப்’புடன் கரம் கோர்த்திருப்பதால் படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சென்னை மெட்ரோவை கைப்பற்றி, பயணிகளுக்கு ஆச்சர்ய ஹாரர் விருந்தளித்த, பிரைம் வீடியோவின் தி வில்லேஜ் சீரிஸ் !!

பிரைம் வீடியோ தமிழ் திகில் தொடரான ​​தி வில்லேஜ் சீரிஸை விளம்பரப்படுத்தும் விதமாக , சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ஆச்சர்ய ஹாரர் விருந்தளித்தது. இந்நிகழ்வு ஆர்யாவின் தீவிர ரசிகர்கள் மற்றும் திகில் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மெட்ரோ பயணிகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ஒரு ஆச்சரிய நிகழ்வை பிரைம் வீடியோ நடத்தியது. தி வில்லேஜ் சீரிஸில் வரும் ஹாரர் நிகழ்வை, அந்த சீரிஸில் நடித்த நடிகர்களைக் கூட்டி வந்து மெட்ரோ ரெயிலுக்குள் நடத்தி, பயணிகளை எதிர்பாராத ஆச்சர்யத்தில் மூழ்கடித்தது தி வில்லேஜ் படக்குழு. இக்குழுவில் தி வில்லேஜ் நாயகன் முன்னணி திரைப்பட நடிகர் ஆர்யா கலந்து கொள்ள பயணிகள் உற்சாகத்தில் கூச்சலிட்டனர். இயக்குநர் மிலிந்த் ராவ் அவர்களும் இந்த குழுவில் கலந்துகொண்டார். கிராஃபிக் நாவலின் திகில் அனுபவத்தை திரையில் கொண்டு வந்த படக்குழு, ரீலில் இருந்து நிஜத்திற்குக் கொண்டு வந்தது, நிச்சயமாக மெட்ரோ பயணிகளுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.

வீடியோவை இங்கே பாருங்கள்: XX
https://x.com/PrimeVideoIN/status/1729449366426124299?s=20

இந்தத் சீரிஸை, இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார்.ஸ்டுடியோ சக்தி நிறுவனத்தின் சார்பில், இந்தத் தொடரை B.S. ராதாகிருஷ்ணன் தயாரித்துள்ளார். பிரபல தமிழ் நடிகர் ஆர்யா, திவ்யா பிள்ளை, ஆழியா, ஆடுகளம் நரேன், ஜார்ஜ் மாயன், பி.என். சன்னி, முத்துக்குமார் கே., கலைராணி எஸ்.எஸ்., ஜான் கொக்கன், பூஜா, வி.ஜெயபிரகாஷ், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் தலைவாசல் விஜய் ஆகியோருடன் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர் ரிவான்

கார்டிங் ரேஸ் போட்டிகளில் இந்திய அளவிலான போட்டிகளில் சாதனை படைத்தவரும், பஹ்ரைனில் உள்ள சாகிர் இன்டர்நேஷனல் எஃப்1 சர்க்யூட்டில் நடைபெறும் உலக கார்டிங் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நாட்டின் சார்பில் கலந்துகொள்ளவுள்ள விளையாட்டு வீரர், மரியாதை நிமித்தமாக தமிழகவிளையாட்டுத்துறை அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

7 முறை தேசிய சாம்பியனான ப்ரீதம் தேவ் மோசஸின் மகன் ரிவான் தேவ் ப்ரீதம் 2022 ஆம் ஆண்டு FMCSI தேசிய கார்டிங் சாம்பியன்ஷிப்பில் ஒரு புதிய வீரராக கார்டிங்கைத் தொடங்கினார்.

2023 ஆம் ஆண்டில், பெங்களூர் கார்டோபியா சர்க்யூட்டில் நடைபெற்ற 3 சுற்று சாம்பியன்ஷிப் போட்டியான மெக்கோ மெரிட்டஸ் கோப்பை போட்டியில் 10 வயது சிறுவனான ரிவான் கலந்துகொண்டார்.

ரிவான் 6 பந்தயங்களில் 3ல் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார். பிறகு சமீபத்தில் முடிவடைந்த MECO-FMSCI தேசிய கார்டிங் சாம்பியன்ஷிப் 2023 இல் ரிவான் பங்கேற்றார். இது இந்தியா முழுவதும் உள்ள பங்கேற்பாளர்களுக்காக நடத்தப்படும் 5 சுற்று தேசிய சாம்பியன்ஷிப் ஆகும். மைக்ரோ மேக்ஸ் எனப்படும் 13 வயதுக்குட்பட்ட பிரிவில் 16 பேர் கலந்துகொண்டனர். ரிவான் 10 பந்தயங்களில் 3ல் வென்றார் . கடந்த அக்டோபர் 28ஆம் தேதி நடைபெற்ற கடைசி பந்தயத்தில் 3வது இடத்தைப் பிடித்தார், மேலும் 2023ஆம் ஆண்டுக்கான தேசிய சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.

தேசிய கார்டிங் சாம்பியன்ஷிப் வரலாற்றில் இதைச் சாதித்த இளம் வயதினரில் ரிவான் ஒருவர். இந்தியாவில் நம்பர்-1 ஆனதற்கான ஒரு பெரிய பரிசாக, ரிவான் இந்த டிசம்பரில் பஹ்ரைனில் உள்ள சாகிர் இன்டர்நேஷனல் எஃப்1 சர்க்யூட்டில் நடைபெறும் உலக கார்டிங் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஃபார்முலா ஒன் உலக சாம்பியன்ஷிப்பில் பந்தயத்தில் பங்கேற்பதே ரிவானின் இலக்கு..

’பார்க்கிங்’ பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

’பார்க்கிங்’ பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலருடைய நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக உருவாகியுள்ள ’பார்க்கிங்’ படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரித்துள்ளது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று நடந்தது.

சோல்ஜர்ஸ் ஃபேக்டரி ஸ்ரீனீஸ், “நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு என் செலவுகளை கவனித்து வந்த என் பள்ளி நண்பர்களுக்கு நன்றி. என் ஸ்கூல்மேட் தான் இயக்குநர் நெல்சன். அவரை டார்ச்சர் செய்துதான் அவரிடம் உதவி இயக்குநராக சேர்ந்தேன். அவருக்கு நன்றி. நான் தனியாக படம் எடுக்க வேண்டும் என நினைத்தபோது உதவிய அருண் பாலாஜி, நந்தகுமார் இரண்டு பேருக்கும் நன்றி. நான் செய்த ‘பலூன்’ திரைப்படம் எனக்கு திருப்தியாக இல்லை. அந்த சமயத்தில் விஜய்சேதுபதி, திலீப் சுப்பராயன் என்னை தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்க ஊக்குவித்தார்கள். அதன் பிறகு என்னை நம்பி யாருமே பணம் தரவில்லை. கேஜேஆர் சாரிடம் போய் படம் செய்யலாம் என்று சொன்னதும் அவர் உடனே சரி என்றார். அந்தப் படம்தான் ‘டிக்கிலோனா’. ஞானவேல் சாருக்கும் நன்றி. சந்தீப் கிஷன், அஞ்சலிக்கும் நன்றி. என் நண்பர்கள், குடும்பம், மனைவிக்கும் நன்றி. ‘டிக்கிலோனா’ முடித்தப் பிறகு எனது அசிஸ்டெண்ட் ராம் வைத்து படம் செய்யலாம் என முடிவெடுத்தோம். ஹரிஷ் இந்தப் படத்திற்குள் வந்த பிறகுதான் இது பெரிய படமாக மாறியது. படத்தின் தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் நன்றி”.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “இந்தப் படம் நான் முன்பே பார்த்துவிட்டேன். பார்க்கிங் என்ற விஷயத்தை வைத்து எவ்வளவு பெரிய பிரச்சினையைப் படம் பேச இருக்கிறது என்பதைப் பார்க்கப் போகிறீர்கள். ‘மாநாகரம்’ படத்தை ஸ்ரீனிஸ்தான் முதலில் தயாரிப்பதாக இருந்தது. இரண்டு கதாபாத்திரங்களின் ஈகோ கிளாஷ்தான் இந்தப் படமாக இருக்கும். எம்.எஸ். பாஸ்கர் சாருடன் வொர்க் பண்ண வேண்டும் என்பது என் விருப்பம். அது கூடிய சீக்கிரம் நடக்கும் என நம்புகிறேன். எல்லோருமே நன்றாக நடித்துள்ளார்கள். வாழ்த்துகள்”.

நடிகர் எம்.எஸ். பாஸ்கர், “இந்தப் படத்திற்கு 100ஆவது நாள் விழா நடக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. இந்தப் படத்தில் நான் நடிக்க வேண்டும் எனக் கேட்ட இயக்குநர் ராம், சுதன் சார், ஸ்ரீனிஸ் அனைவருக்கும் நன்றி. இரண்டு வீடு ஒரு பார்க்கிங், இரண்டு வீட்டிலும் கார் இருக்கிறது எனும்போது நடக்கும் பிரச்சினைகள்தான் படம். அதை ரசிக்கும்விதமாக சொல்லியிருக்கும் ராம்குமார் பாலகிருஷ்ணனை பாராட்டுகிறேன். படத்தின் நாயகன் ஹரிஷ், இந்துஜா, பிரார்த்தனா மற்றும் அனைவருக்கும் வாழ்த்துகள்”.

இயக்குநர் அருண்ராஜ் காமராஜா, “படத்திற்கான ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் என்பதையும் தாண்டி நண்பர்கள் ரீ யூனியன் போல இது உள்ளது. புது திறமைகளை கொண்டு வரும் ஸ்ரீனிஸூக்கு நன்றி. இந்தப் படம் நான் பார்த்துவிட்டேன். இரண்டு பேருக்கும் இடையிலான ஈகோ கிளாஷ்தான் படம். எம்.எஸ். பாஸ்கர் சார் படத்தில் ஈவிலாக இருப்பார். ஹரிஷ் கல்யாண் வயலண்ட்டாக நடித்துள்ளார். எல்லோருக்கும் முன்பு இந்தப் படம் பார்த்ததில் மகிழ்ச்சி. எல்லோரும் சிறப்பாக நடித்துள்ளனர். வாழ்த்துகள்”.

நடிகை பிரார்த்தனா, “எம்.எஸ். பாஸ்கர் சார் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமான சிறப்பான நடிப்பைக் கொடுத்திருப்பார். அவருடன் சேர்ந்து நடிக்கப் போகிறேன் என்று சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்தது. படத்தில் அவருடைய மகளாக நிறைய கற்றுக் கொண்டேன். ஹரிஷ் கல்யாண், இந்துஜா, இயக்குநர் ராம் என அனைவருக்கும் நன்றி”.

நடிகர் சுரேஷ், “இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்காக ஸ்ரீனிஸ் கேட்டபோது எனக்கு குழப்பாகவே இருந்தது. ஆனால், என்னுடைய நண்பர்கள் கொடுத்த ஊக்கத்தில்தான் நடிக்க ஒப்புக் கொண்டேன். நடிப்புக்கு புதிது என்பதால் கொஞ்சம் பதட்டமாக இருந்தது. ஆனால், இயக்குநர் ராம் நிறைய ஊக்கம் கொடுத்தார். எனக்கு படத்தில் உதவிய அனைவருக்கும் நன்றி”.

நடிகர் ராகுல் மணி, “2013ல் நான் ஒரு படம் ஹீரோவாக நடித்தேன். பத்து வருடம் கேப் வந்துவிட்டது. ஆனால், எனக்கு ஊக்கம் கொடுத்து கூப்பிட்ட இயக்குநருக்கு நன்றி. ஹரிஷ், இந்து என அனைவருக்கும் நன்றி. படம் நிச்சயம் உங்களை ஏமாற்றாது”.

இயக்குநர் ரவிக்குமார், “இந்தப் படத்தை நான் பார்த்துவிட்டேன். இந்த வருடத்தின் ஹிட் படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும். பல இடங்களில் விறுவிறுப்பாகவும் சூடாகவும் இருக்கும். இயக்குநரின் முதல் படம் போல இருக்காது. நிச்சயம் நன்றாக இருக்கும். வாழ்த்துகள்”

இயக்குநர் ரத்னகுமார், “தயாரிப்பாளரின் ஸ்ரீனிஸின் பிறந்தநாள் இன்று கிடையாது. டிசம்பர் 1தான். இயக்குநர் ராமும் நன்றாக செய்துள்ளார். இந்த படத்தின் டீமோடு எனக்கு வேலை பார்க்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஹரிஷ், பிரார்த்தனா, இந்துஜா எல்லாரும் சிறப்பாக நடித்துள்ளனர். ரூபாய் நோட்டில் உள்ள எல்லா மொழியிலும் இந்தப் படம் ரீமேக் ஆகும் என்ற நம்பிக்கை உள்ளது. படம் வெளியான பின்பே உங்களுக்கேத் தெரியும்”.

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி, “பக்கத்துவீட்டுக்காரர்களுக்குள் நடக்கும் சண்டைதான் இந்தப் படம். ரொம்ப எளிமையான கதை என்பதை விட சாமானியர்களின் பிரச்சினையைப் பேசும் படம். ‘குட்நைட்’ படத்தைப் போல எளிய கதையாக இருக்கும். ஹரிஷ், இந்துஜா என அனைவருமே சின்சியரான திறமையான நடிகர்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்”.

இயக்குநர் கார்த்திக் யோகி, “இந்தப் படம் பார்த்துவிட்டேன். இயக்குநர் ராமுக்கு நல்ல காமெடி சென்ஸ் உள்ளது. ஹரிஷின் திறமை சிறப்பாக இதில் வெளிப்பட்டுள்ளது. இந்துஜா, பிரார்த்தனா, தொழில்நுட்பக் குழு அனைவருக்கும் நன்றி”.

கலை இயக்குநர் ராகுல், “’லவ் டுடே’ படம் போல, இந்தப் படமும் எனக்கு மிகப்பெரிய ஹிட் கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. டீமும் நிறைய சப்போர்ட் கொடுத்தார்கள். சந்தோஷமாக இருந்தது. இந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட்டாக இது இருக்கும்”.

ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் காசி, “சினிமாவில் நிறைய இயக்குநர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். இயக்குநர் ராம் சிறப்பாகக் கொடுத்துள்ளார். அனைவருக்கும் நன்றி”.

எடிட்டர் பிலோமின்ராஜ், “படத்தின் டிரெய்லர் போலவே படமும் சிறப்பாக இருக்கும். உங்களைப் போலவே நானும் படத்திற்கு ஆவலாக உள்ளேன்”.

இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்., “இந்தப் பிரச்சினைக்களுக்காக எல்லாம் படம் எடுப்பீர்களா என நிறைய கமெண்ட்ஸ் இதன் டீசரில் பார்த்தேன். ஈகோதான் இங்கு பெரிய பிரச்சினை. படத்தில் வில்லன் பெரிதாக இருந்தால் படம் ஹிட்டாகும். அதுபோல, இந்தப் படத்தில் வில்லன் பெரிதாக இருக்கும். எளிய கதையை படம் முழுக்கக் கொண்டு போயிருக்கிறார்கள். இந்தப் படம் ஹிட் ஆகும் என்ற நம்பிக்கை உள்ளது. இயக்குநருக்கு முதல் படத்தை விட இரண்டாவது படம் முக்கியமானது. அதனால், இயக்குநர் ராம் இரண்டாவது படத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஹரிஷ், எம்.எஸ். பாஸ்கர் என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். படம் நிச்சயம் வெற்றிப் பெறும். உங்களை படம் ஏமாற்றாது” என்றார்.

நடிகை இந்துஜா, “இந்த அழகான படத்தைக் கொடுத்த இயக்குநர் ராமுக்கு நன்றி. எல்லோருடைய கதாபாத்திரங்களும் படம் பார்க்கும் உங்களுக்கு நிச்சயம் கனெக்ட் ஆகும். கர்ப்பமாக இருக்கும் மனைவி என்ற போது ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமா என்ற குழப்பம் இருந்தது. ஆனால், கதை கேட்டதும் இதில் நடிக்க வேண்டும் என முடிவு செய்து விட்டேன். இதில் ஹரிஷ்- எம்.எஸ். பாஸ்கருடைய ஈகோ பிரச்சினை மட்டுமல்ல. பெண்களின் பார்வையிலும் இந்தப் படம் எப்படி இருக்கிறது என்பதை காட்டும். படம் வெளிவருவதற்கு முன்பே படம் குறித்தான பாசிடிவ் டாக் ஆரம்பித்து விட்டது. ஹரிஷ் எப்போதும் பாசிட்டிவான நபர். இந்த நல்ல குணத்திற்காகவே அவர் பெரிய இடத்திற்குப் போக வேண்டும். அதற்கான ஆரம்பமாக ‘பார்க்கிங்’ அமைய வேண்டும். எம்.எஸ். பாஸ்கர் சார் லெஜெண்ட். அவருடன் நடிப்பது எனக்குப் பெருமை. நிறைய விஷயங்கள் அவரிடம் கற்றுக் கொண்டேன். செட்டில் கதைகள் எல்லாம் சொன்னார். பிரார்த்தனா, ரமா அம்மா என எல்லோருமே இயல்பாக நடித்துள்ளனர். பிலோமின்ராஜ், சாம் சி.எஸ். என அனைவருமே சிறப்பான வேலையைக் கொடுத்துள்ளனர். இந்த நேர்த்தியான படத்தைக் காண்பிக்க ராமின் எழுத்து உதவியது. இந்த லைனை வைத்து ஒரு முழுநீளப் படம் கொடுத்ததற்கு நன்றி ராம். அவருடைய தெளிவினால்தான் நாங்களும் நம்பிக்கையோடு நடித்தோம். நல்ல படம் நடித்த நிறைவு உள்ளது. நன்றி”.

இயக்குநர் ராம், “எனது குடும்பத்திற்கு நன்றி. இந்த வாய்ப்புக் கொடுத்த ஸ்ரீனிஸ் சாருக்கும் என் மேல் அவர் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் நன்றி. அவர் எனது அண்ணன் போல. முதலில் இந்தப் படத்தின் கதை கேட்டதும் சுதன் சாருக்குப் பிடித்திருந்தது. இந்தப் படத்திற்காக என்னுடன் ஆரம்பத்தில் இருந்தே பயணித்த அனைவருக்கும் நன்றி. நம் எல்லோருக்கும் எதாவது ஒரு பேஷன் இருக்கும். அதை நோக்கிதான் பயணித்துக் கொண்டிருப்போம். அதையும் நம் குடும்பத்தையும் உடைக்கும்படி ஒரு பிரச்சினை வரும்போது நிச்சயம் நாம் கோபப்படுவோம். முதல் படத்தில் முடிந்தளவு பார்வையாளர்களுடன் இணைந்து இருக்கும்படியான கதை வேண்டும் என்பதால்தான் இதை எடுத்தேன். ஹீரோவாக இந்தக் கதையில் இருக்கும் முக்கியத்துவம் இன்னொரு கதாபாத்திரத்திற்கும் இருக்கும். அதை அப்படியே ஒத்துக் கொண்ட ஹரிஷ் அண்ணாவுக்கு நன்றி. எம்.எஸ். பாஸ்கர் போன்ற லெஜெண்ட்ரி நடிகரோடு வேலைப் பார்த்தது பெருமை. நிறைய விஷயங்களை எங்களுக்கும் சொல்லிக் கொடுத்தார். இந்துஜா, பிரார்த்தனா, ரமா என அனைவரும் அவர்களது கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்துள்ளனர். பிலோமின், சாம் சி.எஸ். என இந்தப் படத்தில் அமைந்த தொழில்நுட்ப அணி எனக்கு மிகப்பெரிய பலம். குடும்பத்தோடு பாருங்கள். பார்க்கிங் என்ற விஷயத்தில் இருந்து ஈகோ எப்படி வெடிக்கிறது என்பதைப் பார்ப்பீர்கள்” என்றார்.

நடிகர் ஹரிஷ் கல்யாண், “ஒரு படம் ஜெயிப்பதும் தோற்பதும் மக்கள் கையில்தான் உள்ளது. ஆனால், அதற்கு முன்பு அப்படியான நல்ல படத்தை தவற விட்டிருந்தால் நிச்சயம் நான் வருத்தப்பட்டிருப்பேன். அப்படியான நல்ல கதையை எனக்குக் கொடுத்ததற்கு இயக்குநருக்கு நன்றி. உங்களுடைய படம் போல நினைத்து இந்தப் படம் மேல் நம்பிக்கை வைத்து மேடையில் பாராட்டிய இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி. எனக்கு நெகட்டிவ் ஷேட் செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் அவர்களுக்குள் ஒரு வில்லத்தனம் இருக்கும். அந்த வில்லத்தனத்திற்கு ஒரு ஹீரோயிசம் கொடுத்துதான் இயக்குநர் எழுதி இருக்கிறார். இந்த கேரக்டர் எனக்கு கிடைத்ததற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ’அபூர்வ ராகங்கள்’ ரஜினி சார், கமல் சாருடைய பல படங்கள், விஜய் சாருடைய ‘ப்ரியமுடன்’, அஜித் சாருடைய ‘வாலி’ போன்ற படங்களை ரசிகர்கள் கொண்டாடி ஹிட் கொடுத்துள்ளனர். அது ஏன் என்றால் அந்த கதாபாத்திரங்களில் உண்மை இருந்தது. எல்லோருக்குள்ளும் ஒரு ஈகோ, வில்லத்தனம் இருக்கும். அது எப்படி, எந்த சூழலில் வெளிப்படுகிறது என்பதுதான் முக்கியம். அந்த ஸ்பேஸ் எனக்குக் கொடுத்த இயக்குநருக்கு நன்றி. எம்.எஸ். பாஸ்கர், ரமா, பிரார்த்தனா, இந்துஜா என அனைவரும் நன்றாக நடித்துள்ளனர். படத்தில் நிறைய பாடல்கள் இல்லை. ஆனால், அதற்கும் சேர்த்து சாம் நல்ல பின்னணி இசை கொடுத்துள்ளார். நல்ல கதை கொடுத்துள்ளோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

பான் இந்தியா ஆக்ஷன் படமாக கவனம் ஈர்க்கும் ஹரோம் ஹரா

முன்னணி நட்சத்திரங்கள் வெளியிட்ட ஹரோம் ஹரா டீசர்

ஸ்ரீ சுப்ரமண்யேஷ்வரா சினிமாஸ் சார்பில் எஸ்.எஸ்.சி. தயாரித்திருக்கும் படம் ஹரோம் ஹரா. இந்த படத்தின் கதாநாயகனமாக சுதீர் பாபு நடிக்கிறார். ஞானசேகர் துவாராக இயக்கும் ஹரோம் ஹரா திரைப்படத்தின் டீசரை பிரபாஸ், மம்மூட்டி, டைகர் ஷெராஃப், விஜய் சேதுபதி மற்றும் கிச்சா சுதீப் ஆகியோர் தெலுங்கு, மலையாளம், இந்தி, தமிழ் மற்றும் கன்னடா மொழிகளில் வெளியிட்டனர்.

டீசர் முழுக்க அதிரடி ஆக்ஷன் காட்சிகளும், மாஸ் சம்பவங்களும் இடம்பெற்று உள்ளன. 1980 காலக்கட்டத்தில் நடைபெறுவது போன்ற கதையம்சம் கொண்ட ஹரோம் ஹரா படத்தை இயக்குனர் ஞானசேகர் துவாரகா ஒவ்வொரு காட்சியிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் படி கதையை தேர்வு செய்திருக்கிறார். இவற்றுக்கு பக்கபலமாக இருக்கும் வகையில், வசனங்களும் பட்டையை கிளப்பும் வகையில் உள்ளன.

பல எதிரிகள் தனது வீழ்ச்சிக்காக காத்திருக்கும் சூழலில், சாதாரண மனிதனாக இருந்து, நகரின் சக்திவாய்ந்த நபர்களில் ஒருவராக உருவெடுக்கும் வகையில் சுப்ரமணியம் என்ற கதாபாத்திரத்தில் சுதீர் பாபு நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மாள்விகா ஷர்மா நடித்துள்ளார். மேலும் லக்கி லக்ஷமன், ரவி கலே மற்றும் அர்ஜூன் கௌடா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் ஆக்ஷன் காட்சிகள் அனைத்தையும் ஒளிப்பதிவாளர் அரவிந்த் விஸ்வநாதன் பிரமாண்டமாக படமாக்கி இருக்கிறார். இவருடன் ஒவ்வொரு காட்சியிலும் வலுப்படுத்தும் வகையில், சைத்தன் பரத்வாஜ் பின்னணி இசையில் மிரட்டி உள்ளார். தயாரிப்பு மேற்பார்வையிலும் சிறப்பான பணி மேற்கொள்ளப்பட்டு இருப்பது டீசரில் அம்பலமாகி இருக்கிறது.

ஹரோம் ஹரா படத்தின் டீசர் படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அடுத்த ஆண்டு துவக்கத்தில் படம் தெலுங்கு, தமிழ், கன்னடா, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியிடப்பட இருக்கிறது.

நடிகர்கள் விவரம்: சுதீர் பாபு, மாள்விகா ஷர்மா, சுனில், ஜெ.பி. அக்ஷரா கௌடா, லக்கி லக்ஷமன், ரவி கலே மற்றும் அர்ஜூன் கௌடா.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:

எழுத்து, இயக்கம் – ஞானசேகர் துவாரகா
தயாரிப்பாளர் – சுமந்த் ஜி நாயுடு
இசை – சைத்தன் பரத்வாஜ்
ஒளிப்பதிவு – அரவிந்த் விஸ்வநாதன்
படத்தொகுப்பு – ரவிதேஜா கிரிஜலா
தயாரிப்பு நிறுவனம் – ஸ்ரீ சுப்ரமண்யேஷ்வரா சினிமாஸ்
மக்கள் தொடர்பு – சதிஸ் குமார்.

Harom Hara Teaser

AskSrk: Shah Rukh Khan explains the meaning of the title, Dunki

AskSrk: Shah Rukh Khan explains the meaning of the title, Dunki, says, “Dunki is a way of describing an illegal journey across borders.”

Describing the meaning of the title “Dunki.

When fan asked, “Srk Sir movie ka naam Dunki rhkne kaa wajah bata skte hai 😁😁”

Srk replied to this by saying, “Dunki is a way of describing an illegal journey across borders. It is pronounced डंकि. Its pronounced like Funky…Hunky….or yeah Monkey!!!”

With Dunki Drop 1 and its posters, the audience witnessed a sneak peek into the immensely heartwarming world of Rajkumar Hirani that he is about to bring with Dunki. This has indeed piqued the excitement to witness more from this endearing tale and without much delay the makers dropped the first song Dunki Drop 2 Lutt Putt Gaya. While this has kick-started the musical journey of this comedy entertainer, the madness was witnessed in the #AskSrk session where the fans couldn’t control but were seen asking questions about the film while they received amazing answers from the superstar.

Dunki features an ensemble cast, with colourful characters portrayed by exceptionally talented actors, Boman Irani, Taapsee Pannu, Vicky Kaushal, Vikram Kochhar, Anil Grover, starring along with Shah Rukh Khan. A JIO Studios, Red Chillies Entertainment, and Rajkumar Hirani Films presentation, produced by Rajkumar Hirani and Gauri Khan. Written by Abhijat Joshi, Rajkumar Hirani, and Kanika Dhillon, Dunki is a Christmas release, hitting theatres on the 21st of December 2023.

ஜி ஸ்குவாட் படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ் சொந்தமாக திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை அவர் வெளியிட்டிருக்கிறார்.

‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ என தொடர்ந்து பிளாக் பஸ்டர் வெற்றிப் படங்களை வழங்கி தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநராக உயர்ந்தவர் லோகேஷ் கனகராஜ்.‌ இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகும் ‘தலைவர் 171’ படத்தை இயக்குவதற்கான பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். இந்நிலையில் இவர் தற்போது ஜி ஸ்குவாட் எனும் பெயரில் சொந்தமாக பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார்.‌

இது தொடர்பாக அவர் குறிப்பிடுகையில், ” என்னுடைய நண்பர்களுக்கும், என்னுடன் பணியாற்றிய உதவியாளர்களுக்கும் அவர்களின் திறமையை வெளிப்படுத்தும் வகையிலும், புதிய பாணிலான திரைப்பட அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் வகையிலும் படங்களை தயாரிக்கவே ஜி ஸ்குவாட் எனும் பட நிறுவனத்தை தொடங்கி இருக்கிறேன். என்னுடைய படைப்புகளுக்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவளித்து வருவதைப் போல்.. என்னுடைய பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாராகும் திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

அவருடைய பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாராகும் முதல் திரைப்படத்தைப் பற்றிய புதிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இதனிடையே இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சொந்தமாக பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருப்பதை நட்சத்திர நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும், திரையுலகினரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.‌