‘EMI’ (மாத தவணை) திரைவிமர்சனம்

கதாநாயகி சாய் தன்யாவை பார்த்தவுடன்  காதல் கொள்ளும் கதாநாயகன் சதாசிவம் சின்னராஜ் காதலித்து திருமணம் செய்து கொண்டு, இல்லற வாழ்க்கையை மிகவும் சந்தோஷமாக நடத்தி வரும் கதாநாயகன் சதாசிவம் சின்னராஜ், திடீரென செய்து கொண்டிருந்த வேலை போய் விடுகிறது.

தனது காதலிக்காக இருசக்கர வாகனம் தனது தனது காதல் மனைவிக்காக காரும் மாதத் தவணையில் வாங்குகிறார்.

இதனால் செய்து கொண்டிருந்த வேலையும்  வருமானமும் இல்லாததால், தன் காதல் மனைவிக்காக வாங்கிய இருசக்கர வாகனம், கார் உள்ளிட்டவைகளுக்கான மாத தவணை கட்டமுடியாமல் கதாநாயகன் சதாசிவம் சின்னராஜ், அசிங்கப்பட்டு கொண்டிருக்கிறார்.

தன் காதல் மனைவிக்காக வாங்கிய பைக்கும் காரும் கட்ட வேண்டிய மாதத்தவனை கட்ட முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் கதாநாயகன் சதாசிவம் சின்னராஜ் மாதத் தவணை கட்டினாரா? கட்டவில்லையா? என்பதுதான் இந்த EMI மாத தவணை திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த EMI மாதத் தவணை திரைப்படத்தில் சதாசிவம் சின்னராஜ் புதுமுக கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

நடிப்பு என்பது எதார்த்தமாக இருக்க வேண்டும் இந்த திரைப்படத்தில் புதுமுக கதாநாயகனாக நடித்திருக்கும் சதாசிவம் சின்னராஜ் செயற்கை தனமாக நடித்திருக்கிறார்.

இந்த EMI மாதத் தவணை திரைப்படத்தில் கதாநாயகியாக சாய் தான்யா நடித்துள்ளார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் சாய் தன்யாவுக்கு இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு பெரிய அளவில் வாய்ப்பு இல்லை.

கதாநாயகியின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் பேரரசு மொத்தத்தில் சுமாராக நடித்திருக்கிறார்.

கதாநாயகனின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் செந்தி குமாரி வழக்கம் போல் வந்து போகிறார்.

கதாநாயகனின் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிளாக் பாண்டி, மாத தவணை வசூலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சன் டிவி ஆதவன் ஓ.ஏ.கே.சுந்தர், லொள்ளு சபா மனோகர் ஆகியோறும் நடிப்பு ஓகே ரகம்.

ஒளிப்பதிவாளர் பிரான்ஸிஸ் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்தை கலர்புல்லாக காட்சிப்படுத்திருப்பது திரைப்படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.

இசையமைப்பாளர் ஸ்ரீநாத் பிச்சையின் இசையில்,  பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறது.

வங்கியை நம்பி கார் வீடு  இருசக்கர வாகனம் வீட்டு உபயோக பொருள்கள் வரை அனைத்தையும் எளிதில் வாங்க கூடிய மாத தவணை திட்டத்தில் மாட்டிக்கொள்ளும் மக்களை எப்படி எல்லாம் வங்கியில் உள்ளவர்கள் தவணை பசுபிக்கிறேன் என்ற பெயரில் மக்களை சின்ன பின்னமா ஆக்குகிறது என்பதையும் வங்கி கடன் உள்ளிட்டவைகளால் நடுத்தர குடும்பத்தினர் எப்படி கஷ்ட்டப்படுகிறார்கள் என்பதை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சதாசிவம் சின்னராஜ்.

MGM Healthcare Performs World’s First Modified Multi-Visceral Transplant for Rare Intestinal Disorder

Chennai, April 4th, 2025: In a groundbreaking medical achievement, MGM Healthcare has successfully performed the World’s first modified multi-visceral transplant (MMVT) for the treatment of a rare intestinal disorder, saving the life of a 32-year-old patient from Kerala who had been suffering from bloody diarrhea, along with a severe drop in hemoglobin levels, progressive malnutrition, recurrent infections, and abdominal swelling.

His diagnosis, diffuse primary lymphangioma of the intestine, was a non-malignant intestinal condition. It was so extensive that conventional surgical approaches, such as bowel resection, were not viable. To address this, the expert surgical team at MGM Healthcare performed a modified multi-visceral transplant, replacing the stomach, pancreatico-duodenal complex (the pancreas and the first part of the small intestine), small intestine, and large intestine, with innovative modifications to enhance graft function and reduce immunologic risks. The patient is now recovering well, marking a major milestone in transplant medicine and offering new hope for those with complex intestinal disorders.

Before proceeding with the modified multi-visceral transplant (MMVT), the medical team at MGM Healthcare took critical steps to stabilise the patient. Given the severity of gastrointestinal bleeding caused by diffuse primary intestinal lymphangioma, the team performed an emergent subtotal enterectomy, which refers to the surgical removal of a significant portion of the diseased intestine to control the bleeding. The team also initiated total parenteral nutrition (TPN), a method of delivering essential nutrients intravenously, bypassing the digestive system altogether to ensure the patient’s nutritional stability. These interventions optimised the patient’s condition for the complex transplant procedure that followed.

The MMVT surgical intervention was headed by Prof. Dr. Anil Vaidya, M.D., Chair and Director of the Institute of Multi-Visceral and Abdominal Organ Transplant, along with Dr. Senthil Muthuraman, senior Consultant, Multi Visceral and abdominal organ transplant and Dr. Sivakumar Mahalingam, Senior Consultant, Surgical Oncology, Dr. Venkatesh B.S, Consultant Multi Visceral Transplant Program at MGM Healthcare. The anesthesia and intensive care team comprised Dr. Dinesh Babu, and Dr. Nivash Chandrasekaran.

In his comments, Prof. Dr. Anil Vaidya, said that the patient had an exceptionally high disease burden, with extensive involvement of the small intestine, making traditional surgical options like segmental resection ineffective. Given the severity of his condition, we needed an innovative approach to restore his digestive function and overall health. Our team decided to proceed with a modified multi-visceral transplant, replacing the stomach, pancreatico-duodenal complex, small intestine, and large intestine. We also made key modifications to improve graft function and reduce the risk of complications. I am truly delighted that the world’s first MMVT for this rare condition has been a success. The patient has now gone over two months without any signs of graft rejection or major complications, which is a remarkable outcome.”

In his comments, Dr. Senthil Muthuraman, said, “Primary intestinal lymphangioma is an exceptionally rare condition. The patient developed enteropathy, which led to chronic diarrhea, malabsorption of nutrients, and protein loss. The bloody diarrhea persisted for over a month and hemoglobin dropped to dangerous levels, requiring multiple blood transfusions. The extensive involvement of the small intestine made conventional treatments unfeasible. We first performed a subtotal enterectomy to control the bleeding and placed him on TPN to ensure he remained strong enough for the transplant. It is truly gratifying to see that he has made an excellent recovery, with no signs of graft rejection, resolution of enteropathy, and optimal graft function. This case marks a major breakthrough in transplant surgery, and we are proud to have been part of this life-saving procedure.”

Chennai showcases 56% YoY growth in commercial transaction; residentialsegment clocks 10% YoY growth in Q1 2025: Knight Frank India

Chennai, April 03, 2025: Knight Frank India in its latest report, India Real Estate: Office and Residential
(January – March 2025) Q1 2025 highlighted robust growth in Chennai’s commercial and residential real
estate markets. In Q1 2025, Chennai’s commercial real estate sector recorded transactions totalling 1.8
million square feet (mn sq ft), marking an impressive 56% year-on-year (YoY) growth. The city also
witnessed the completion of 0.2 mn sq ft of new office space during the quarter. Average transacted rents
in the commercial segment increased by 3% YoY, reaching INR 69.2 per sq ft per month, reflecting a steady rise in occupier demand.

End-User Categories
Global Capability Centres (GCCs) remained the key demand drivers in Chennai’s office market, accounting
for 0.9 mn sq ft of transactions. Flex spaces followed closely, recording 0.54 mn sq ft of leasing activity,
signalling a growing preference for agile and cost-efficient workspaces.

Residential Market Update: January – March 2025
The city’s residential market recorded 10% YoY growth in sales, with 4,357 units sold in Q1 2025. New
launches also saw an uptick, with 4,576 units introduced, reflecting 5% YoY growth. The average weighted
residential price increased by 7% YoY, reaching INR 4,854 per sq ft, underscoring rising demand and healthy market sentiment.

The segment with ticket size of INR 5-10mn dominated the residential real estate market of Chennai in Q1
2025 with 1,907 units sold, recording 5% YoY growth.

Srinivas Anikipatti, Executive Director, Tamil Nadu and Kerala, said, “Chennai’s real estate market has
demonstrated steady momentum in Q1 2025, setting a positive tone for the rest of the year. The
commercial sector’s strong leasing activity, particularly from GCCs and flex space operators, reflects the
city’s growing appeal as a strategic business hub. On the residential front, stable demand and rising
property values indicate a resilient market supported by infrastructure development and an expanding
economic base. This sustained growth across asset classes reinforces investor confidence in Chennai’s long-term real estate potential.”

Kauvery Hospital Vadapalani Successfully Performs Paediatric Liver Transplant on a 4-Month-Old Infant

Chennai, 3rd April 2025: Kauvery Hospital, Vadapalani, has successfully performed a complex paediatric liver transplant on a four-month-old baby, completely free of cost under the Tamil Nadu Chief Minister’s Comprehensive Health Insurance Scheme. This procedure was carried out by the hospital’s expert team, making it one of the few centers in Tamil Nadu capable of performing paediatric liver transplants under this initiative.

The infant was diagnosed with a rare genetic disorder that led to liver failure and severe jaundice. The baby, weighing only 3.5 kg, was brought to Kauvery Hospital, Vadapalani, in critical condition. Given the urgency of the case, the hospital swiftly obtained the necessary approvals, including clearance under the Tamil Nadu CM Scheme, and completed the transplant within 10 days.

In an inspiring act of maternal love, the baby’s mother stepped forward as the donor. A portion of her liver, weighing approximately 110 grams, was successfully transplanted into her child. The procedure was performed by Dr. SwaminathanSambandam, Director of Liver & Multi-Organ Transplant Surgery at Kauvery Hospital, Vadapalani, using a laparoscopic-assisted donor surgery for a minimally invasive approach. The mother was discharged just three days after surgery, and both mother and child are now in good health.

The success of such a challenging procedure was made possible by Kauvery Hospital Vadapalani’s highly specialized team, which includes Paediatric Intensive Care Specialists, PaediatricAnaesthesiologists, Liver Transplant Surgeons, PaediatricHepatologists, Radiologists, and Interventional Radiologists. Paediatric liver transplants, especially in infants under 4 kg and 6 months old, pose extreme surgical challenges. The blood vessels in such small infants are extremely tiny, with arteries as small as 2 mm and veins around 3 mm, requiring exceptional precision and expertise. Due to the baby’s small size, even the 110-gram liver graft had to be accommodated with great difficulty. The post-operative period was equally critical, demanding meticulous care from intensivists, anaesthetists, and an expert nursing team to monitor and manage the baby’s recovery under immunosuppressive therapy.

The successful completion of this paediatric liver transplant under the Tamil Nadu Chief Minister’s Scheme highlights Kauvery Hospital Vadapalani’s ability to provide advanced medical care at no cost to families in need. The baby, now active, playful, and on full feeds, was discharged 20 days after surgery an incredible achievement for the entire medical team.

“We are proud to have been able to perform this life-saving procedure for the baby and her family. Paediatric liver transplants require precise surgical techniques and a highly coordinated post-operative care plan. Our team worked tirelessly to make this possible,” said Dr. Swaminathan Sambandam, Director of Liver & Multi-Organ Transplant Surgery at Kauvery Hospital, Vadapalani.

Dr. Aravindan Selvaraj, Co-Founder and Executive Director of Kauvery Group of Hospitals, said, “This case reflects our hospital’s expertise in complex procedures and our focus on making advanced treatments accessible to all. The Tamil Nadu Chief Minister’s Scheme plays a vital role in making sure that families receive the care they need without financial burden.”

Kauvery Hospital Vadapalani is a leading multi-specialty healthcare institution providing cutting-edge medical care with a focus on transplantation, Paediatric critical care, and minimally invasive procedures. Equipped with advanced infrastructure and a team of highly skilled professionals, the hospital continues to set futuristic benchmarks in healthcare excellence.

Bombay Shirt Company open their second outlet in Chennai

Chennai, 3rd April 2025: Apparel brand Bombay Shirt Company has opened a new store at Express Avenue Mall, adding to its existing store at Mylapore. The newest location features all its categories and boasts a level of customer service that is among the best in its category.

Started in 2012 as India’s first-ever online custom-made shirt brand, they have made waves for their very diverse product offering, which now includes custom-made shirts as well as ready-made shirts, tailor-made blazers, dress pants, jeans, chinos, performance pants as well as knitwear such as joggers and hoodies. They source their fabrics from the best mills across the world, and their collection includes everything from refined formal options to fun casual options, different types of linen fabrics in dozens of colours, and lots more.

Bombay Shirt Company is also known for its unique and personalized in-store shopping experience. You can choose the fabric for your tailor-made shirts and then get it fitted from their in-house tailors. The stylists at their stores will help you pick the fabric that best suits your needs, and then help you choose the right customizations such as the cuffs, the collar and more, resulting in a highly personalized product made just for you.

“For our second store we chose Express Avenue mall for its vibrant and eclectic scene. Our first store in Mylapore has been around for a while now, and we’re thrilled to be able to expand in this bustling city.”, says Chippy Aditya Mehta, Co-Founder & COO.

Visit their new store here: S132, 1st Floor, Express Avenue No. 49, 50, Whites Road Royapettah, Chennai – 600 014

ZEE5 தளம் வழங்கும் “செருப்புகள் ஜாக்கிரதை” சீரிஸின் முன் திரையிடல் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு !!

இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, தமிழ் ரசிகர்களுக்கென பல பிரத்தியேகமான படைப்புகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. தற்போது தனது அடுத்த ஒரிஜினல் காமெடி சீரிஸான “செருப்புகள் ஜாக்கிரதை” சீரிஸை வெளியிட்டுள்ளது. S Group சார்பில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் தயாரிப்பில், இயக்குநர் ராஜேஷ் சூசைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள, இந்த அதிரடி காமெடி சீரிஸில், சிங்கம்புலி, விவேக் ராஜகோபால், ஐரா அகர்வால், லொள்ளு சபா மனோகர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த சீரிஸின் முன் திரையிடல் பத்திரிகை ஊடக நண்பர்களுக்காகப் பிரத்தியேகமாகத் திரையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிகை ஊடக நண்பர்களை சந்தித்தனர்.

இந்நிகழ்வினில்

ZEE5 நிறுவனம் சார்பில் கௌசிக் நரசிம்மன் பேசியதாவது…
கடந்த அக்டோபரில் ஐந்தாம் வேதம் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஹிட்டானது, அந்த சீரிஸுக்கு நீங்கள் தந்த ஆதரவுக்கு நன்றி. செருப்புகள் ஜாக்கிரதை மிக வித்தியாசமான சீரிஸ், மத்த வெப் சீரிஸ் மாதிரி இல்லாமல் எழுதவே மிகவும் அதிக டைம் எடுத்தது. 2 மணி நேரத்தை ஒரு சீரிஸாக கொடுக்கும் முயற்சி தான் இது. இனி தொடர்ந்து ZEE5 ல் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இந்த மாதிரி சீரிஸ் வரும். அந்த வகையில் செருப்புகள் ஜாக்கிரதை முதல் புராஜக்ட். மிக சிம்பிளான லைன், ஆனால் அதை சுவாரஸ்யாமாக கொடுத்துள்ளோம், ராஜேஷ் சூசைராஜ் ஐந்தாம் வேதம் முதலே தெரியும் மிகத் திறமைசாலி, இந்த சீரிஸை சாத்தியமாக்கிய தயாரிப்பாளர் சிங்காரவேலன் மற்றும் அரவிந்தன், ராஜேஷ் சூசை ராஜ் ஆகியோருக்கு நன்றி. இந்த மாதிரி கதை நீங்கள் தான் நடிக்க வேண்டும், என்றவுடன் உடனே ஓகே சொன்ன சிங்கம்புலி அண்ணாவுக்கு நன்றி. ஐந்தாம் வேதம் சீரிஸில் என்னை ரொம்பவும் இம்ரெஸ் செய்தவர் விவேக் ராஜகோபால், மிக எளிதாக நடிப்பால் நம்மை அவர் பக்கம் ஈர்த்து விடுகிறார். அவருக்கு வாழ்த்துக்கள். ஐரா அகர்வால் மொழி தெரியாமலே டப்பிங் செய்துள்ளார், வாழ்த்துக்கள். தொழில் நுட்ப கலைஞர்கள் மிக அற்புதமாக பணியாற்றியுள்ளனர். நடித்த அனைவருக்கும் நன்றி. வேற வேற ஜானர்களில் ZEE5லிருந்து பல படைப்புகள் வரவுள்ளது. உங்களுக்குப் பிடித்தமாதிரி படைப்புகள் தொடர்ந்து வரும். ஆதரவு தாருங்கள் நன்றி.

தயாரிப்பாளர் சிங்காரவேலன் பேசியதாவது…
முன்னதாக மதில் எனும் ஓடிடி படைப்பைத் தயாரித்துள்ளோம், இப்போது செருப்புகள் ஜாக்கிரதை உருவாக ஆதரவாக இருந்த ZEE5 கௌசிக் நரசிம்மனுக்கு நன்றி. இந்தக் கதை சிறப்பாக வர வேண்டும் என்றால் சிங்கம் புலி தான் வேண்டுமென நினைத்தோம், எங்களை நம்பி வந்த சிங்கம்புலி சாருக்கு நன்றி. இந்த அருமையான கதையைத் தந்த எழுச்சூர் அரவிந்தன் அவர்களுக்கு நன்றி. இந்த கதையைத் திரையில் உயிர்ப்பித்த ஒளிப்பதிவாளர் கங்காதரனுக்கு நன்றி. இயக்குநர் ராஜேஷ் சூசைராஜ் மிக அற்புதமாக இந்த சீரிஸை உருவாக்கியுள்ளார். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

ஒளிப்பதிவாளர் கங்காதரன் பேசியதாவது…
இந்த வாய்ப்பைத் தந்த ராஜேஷுக்கு நன்றி, ராஜேஷ் மிக நெருங்கிய நண்பர், இதை ஒப்புக்கொண்ட கௌஷிக் சார், சிங்கார வேலன் சாருக்கு நன்றி. சிங்கம்புலி அண்ணா முழு ஒத்துழைப்புத் தந்தார், அவருக்கு என் நன்றிகள். இந்த சீரிஸில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. அனைவரும் இந்த சீரிஸ் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

இசையமைப்பாளர்கள் எல் வி முத்து & கணேஷ் பேசியதாவது…
இந்த வெப் சீரிஸ் ZEE5 உடன் இரண்டாவது படைப்பு, அவர்களுக்கு எங்கள் நன்றி. இதில் வாய்ப்புத் தந்த சிங்காரவேலன் சாருக்கு நன்றி. நண்பர் ராஜேஷ் அருமையான காமெடி டைரக்டர். சிங்கம்புலி அண்ணாவைத் திரையில் பார்த்தாலே சிரிப்பு வரும், அருமையாக நடித்துள்ளார். விவேக் ராஜகோபால், ஐரா அகர்வால், லொள்ளு சபா மனோகர் எல்லோருமே அட்டகாசமாக நடித்துள்ளனர். அவர்கள் நடிப்புக்கு இசையமைப்பது எளிதாக இருந்தது. ராஜேஷ் அருமையாக இந்த சீரிஸை உருவாக்கியுள்ளார். இந்த சீரிஸ் வெளியாகியுள்ளது அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

கதை வசனகர்த்தா எழுச்சூர் அரவிந்தன் பேசியதாவது…
நண்பர் கௌஷிக்கும் நானும் 22 வருட நண்பர்கள். நல்ல காமெடி கதை வைத்திருக்கிறீர்களா எனத் திடீரென கேட்பார், அடுத்த விவாதத்தில், 2 வாரத்தில் துவங்கி விடும். கே எஸ் ரவிக்குமார் நடிப்பில், மதில் ZEE5 க்காக எழுதினேன், உடனே கே எஸ் ரவிக்குமார் டீமில் எழுத்தாளாராக சேர்ந்து விட்டேன், அடுத்து இந்த சீரிஸில் நடித்த விவேக் ராஜகோபால் நண்பர் படத்தில் இப்போது வேலை செய்கிறேன். இப்படி புதுப்புது வாய்ப்புகள் ZEE5 மூலம் கிடைத்துள்ளது. எப்போதும் எனக்கு உதவும் குணமுள்ளவர் தயாரிப்பாளர் சிங்காரவேலன், என்ன வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் ஒரு போன் செய்தால் செய்து விடுவார். ராஜேஷ் மகா உழைப்பாளி, மிக அருமையாக உழைத்துள்ளார். கங்காதரன் ஒளிப்பதிவு மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். இந்தக்கதையின் முக்கிய தூண் சிங்கம்புலி அண்ணன், அவர் நடிப்பைப் பார்த்தாலே சிரிப்பு வரும். இதில் எல்லோரையும் சிரிக்க வைத்துள்ளார். எல்லா நடிகர்களும் மிக நன்றாக நடித்துள்ளனர். இந்த படைப்பில் பணியாற்றிய கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. ZEE5 ல் இன்னும் தொடர்ந்து நிறையக் கதைகள் செய்ய ஆசைப்படுகிறேன், நன்றி

ஐரா அகர்வால் பேசியதாவது…
மிக மிக மகிழ்ச்சியாக உள்ளது நான் நடித்த வெப் சீரிஸ் வெளியாகியுள்ளது. ZEE5 கௌசிக் நரசிம்மன் சார், தயாரிப்பாளர் சிங்காரவேலன் சாருக்கு நன்றி. வாய்ப்பு தந்த ராஜேஷ் சாருக்கு நன்றி. நான் நடித்ததில் எந்த படத்திலும் இந்தளவு சந்தோஷமாக இருந்ததில்லை, இந்த ஷூட்டிங் ஸ்பாட் வெகு கலகலப்பாக இருந்தது. டைரக்டர் ராஜேஷ் மிகமிக அமைதியானவர், அற்புதமாக உருவாக்கியுள்ளார். சிங்கம் புலி சார் எல்லோரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருப்பார். கங்காதரன் சார் எனக்கு முழு ஆதரவு தந்தார். எல்லோரும் மிக அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளார்கள். உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நடிகர் விவேக் ராஜகோபால் பேசியதாவது…
முதலில் பத்திரிகையாளர்களுக்கு நன்றி, மதில் படைப்புக்கு முழு ஆதரவு தந்தீர்கள், அதனால் தான் இங்கு நான் நிற்கிறேன். செருப்புகள் ஜாக்கிரதை படைப்புக்கும் முழு ஆதரவு தாருங்கள். ZEE5 க்கு நன்றி. முழு ஆதரவு தந்த தயாரிப்பாளர் சிங்காரவேலன் சாருக்கு நன்றி. சிங்கம்புலி சார் அவ்வளவு சேட்டை, லவ்லி ஹியூமன், எல்லோரையும் சிரிக்க வைப்பார் என்ன கேட்டாலும் சொல்லித் தருவார். இயக்குநர் ராஜேஷ் என்னிடம் நிறையக் கதை சொல்லியுள்ளார், எனக்கு வாய்ப்பு வந்தால் உன்னைக் கூப்பிடுவேன் என்றார். மை டார்லிங்க் ராஜேஷ் சாருக்கு நன்றி. இதில் நடித்த அனைவருக்கும் நன்றி. இந்த படைப்பிற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

இயக்குநர் ராஜேஷ் சூசைராஜ் பேசியதாவது…
முதல் நன்றி ZEE5 கௌசிக் நரசிம்மன் சாருக்கு தான், அவர் மூலம் தான் இந்த வாய்ப்பு கிடைத்தது, ஐந்தாம் வேதம் மூலம் தான் அவர் அறிமுகம் கிடைத்தது. அவரது சினிமா அனுபவம் கற்றுக்கொள்ள வேண்டியது, என்ன சந்தேகம் கேட்டாலும் எளிதாகத் தீர்த்து விடுவார். அவருக்கு என் நன்றி. அவர் தான் சிங்காரவேலன் சாரிடம் அனுப்பி வைத்தார், தயாரிப்பைத் தாண்டி மிக நல்ல மனிதர். கௌசிக் சார், சிங்காரவேலன் இருவரால் தான் நான் இயக்குநர் இருவருக்கும் நன்றி. சிங்கம் புலி சார் டாமினேட் செய்வார் என்று சொன்னார்கள், ஆனால் அவர் அப்படிப்பட்டவர் இல்லை, மிக மிக இனிமையான மனிதர், மிக அருமையாக நடித்துள்ளார். ஐரா அகர்வால் துறுதுறுப்பான பெண், ஷூட்டிங்கில், எங்களை விட அவர் நிறைய ரீல்ஸ் எடுத்துள்ளார். டார்லிங்க் விவேக், ஐந்தாம் வேதத்தில் அவர் நடிப்பு பார்த்து பிரமித்திருக்கிறேன். இந்தக்கதை ஒகே ஆனவுடன் அவரைத்தான் அழைத்தேன், நன்றாக நடித்துள்ளார். நான் அசோஷியேட்டாக வேலை பார்த்த போது, கங்காதரனும் அசோஷியேட், நான் இயக்குநர் ஆனால் நீ தான் கேமராமேன் என்றேன் ஆக்கிவிட்டேன். இதில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. இந்த சீரிஸ் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகர் சிங்கம்புலி பேசியதாவது…
ZEE5 நிறுவனத்திற்கு முதல் நன்றி. தயாரிப்பாளார் சிங்காரவேலன் அவர்களுக்கு நன்றி. அரசாங்கம் எல்லோரையும் மொத்தமாகப் பால் வாங்கி வைக்கச் சொன்னார்கள் அல்லவா? அப்போது ஆரம்பித்தது இந்த சீரிஸ். எழுத்தாளர் எழுச்சூர் அரவிந்தன் பேச பேச காமெடியாக இருக்கும் அவரிடம் அத்தனை கதை இருக்கிறது. அவர் இன்னும் உயரம் தொட வேண்டும். தயாரிப்பாளர் இன்னும் அப்பாவியாக இருக்கிறார், கங்காதரன் நான் கருப்பன் செய்யும் போது, அவர் அஸிஸ்டெண்ட், இதில் அவர் ஒளிப்பதிவு எனும் பொது, அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத நல்ல மனிதன். விவேக் ராஜகோபால் மிகப்பெரிய திறமைசாலி. மிக நன்றாக நடித்துள்ளார். ஐரா மிக அழகானவர் மிகத்திறமைசாலி. இந்த சீரிஸில் நடித்த அனைவரும் மிகத் திறமையானவர்கள் நன்றாகச் செய்துள்ளார்கள். ZEE5 எங்கள் எல்லோரையும் மிக நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள். செருப்பு, டெட்பாடி, இரண்டை வைத்து மிக அருமையாக காமிக்கலாக இந்தக்கதையை எழுதியுள்ளார்கள். ராஜேஷ் சூசை அற்புதமாக எடுத்துள்ளார். இந்த சீரிஸில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. இந்த டீமுக்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

இயக்குநர் எம் ராஜேஷ் பேசியதாவது…
புதிய இளமையான டீம், செருப்புகள் ஜாக்கிரதை டைட்டிலே மிக அழகாக இருக்கிறது. ZEE5 அடுத்தடுத்து நிறைய புராஜக்ட் செய்யப்போவதாக கௌஷிக் சொன்னார், அது நிறைய புது முகங்களுக்கு வாய்ப்பைத் தரும் அதற்காக அவருக்கு நன்றி. சிங்காரவேலன் என் நெருங்கிய நண்பர், அவருக்கு வாழ்த்துக்கள். சிங்கம்புலி அண்ணாவுடன் கடவுள் இருக்கான் குமாரு வேலை பார்த்தேன், ஆனால் மாகாராஜா பார்த்து அவர் மீது பயமே வந்து விட்டது, அவர் வந்து பேசியபிறகு தான், நம்ம அண்ணன் என்ற உணர்வு வந்தது, இப்படி ஒரு கேரக்டர் அவருக்கு கிடைத்தது அருமை, அவர் திறமை பெரிது. அவருக்கு வாழ்த்துக்கள். விவேக் ராஜகோபால் நன்றாக நடிக்கிறார். இந்த சீரிஸில் வேலை பார்த்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். சீரிஸ் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் நன்றி.

ரசிகர்களை முழுமையாக மகிழ்விக்கும் வகையில், முற்றிலும் நகைச்சுவையை மையமாக வைத்து, ரசிகர்கள் குலுங்கி சிரித்து மகிழும் வகையிலான காமெடி சீரிஸாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.

இந்த சீரிஸில் முதன்மைப் பாத்திரத்தில் நடிகர் சிங்கம்புலி நடித்திருக்கிறார். இவருடன் விவேக் ராஜகோபால், இரா அகர்வால், லொள்ளு சபா மனோகர், இந்திரஜித், மாப்ள கணேஷ், உசேன், சபிதா, உடுமலை ரவி, பழனி, சேவல் ராம், டாக்டர் பிரபாகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

28 மார்ச் முதல் ZEE5 ல், செருப்புகள் ஜாக்கிரதை சீரிஸை பார்த்து மகிழுங்கள்!!

பஹத் பாசில் – வடிவேலு இணைந்து மிரட்டும் ‘மாரீசன்’

நடிகர்கள் பஹத் பாசில் – வடிவேலு இருவரும் இணைந்திருக்கும் ‘மாரீசன்’ எனும் திரைப்படத்தின் வெளியீடு குறித்த புதிய தகவலை படக் குழுவினர் பிரத்யேக போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாரீசன்’ எனும் திரைப்படத்தில் பகத் பாசில், வடிவேலு, விவேக் பிரசன்னா, ரேணுகா, சித்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர். வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பு பணிகளை ஸ்ரீஜித் சாரங் மேற்கொள்ள, மகேந்திரன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். டிராவலிங் திரில்லராக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் வெளியாகும் என படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 98 ஆவது திரைப்படம் இது என்பதும், ‘மாமன்னன்’ படத்திற்குப் பிறகு வடிவேலு – பகத் பாசில் மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் இது என்பதும் , இதுவே ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும், பான் இந்தியத் திரைப்படம் !!

பூரி ஜெகன்நாத், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சார்மி கௌர்,பூரி கனெக்ட்ஸ் இணையும்,பான் இந்திய பிரம்மாண்டத் திரைப்படம்
ஜூனில் படப்பிடிப்பு தொடக்கம்!!

பூரி ஜெகன்நாத் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோரின் மரண மாஸ் காம்பினேஷனில், புதிதாக உருவாகவிருக்கும், புதிய படம், வித்தியாசமான களத்தில் பிரம்மாண்ட படைப்பாக உருவாகவுள்ளது. கதாநாயகர்களை மாஸ் அவதாரத்தில், கமர்ஷியல் கொண்டாட்டமாக உருவாக்கும், இயக்குநர் பூரி ஜெகன்நாத் கைவண்ணத்தில், விஜய் சேதுபதி இதுவரை பார்த்திராத கோணத்தில் இப்படத்தில் தோன்றவுள்ளார். இப்படம் ஒரு மிகப்பெரிய பான் இந்தியா திருவிழாவாக இருக்கும்.

இப்படத்தை பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கௌர் இணைந்து, பூரி கனெக்ட்ஸ் பட நிறுவத்தின் கீழ், பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளனர். இந்த அற்புதமான படம் இன்று உகாதி தினத்தன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்காக இயக்குநர் பூரி ஜெகன்நாத் மிகவும் தனித்துவமான ஒரு கதையை எழுதியுள்ளார். இதில் விஜய் சேதுபதி இதுவரை எவரும் பார்த்திராத ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் விஜய் சேதுபதியின் புதிய அடையாளத்தை திரையுலகிற்கு வெளிப்படுத்துவதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்த மாபெரும் கனவு திரைப்படத்தை அறிவிக்கும் வகையில், விஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கௌர் ஆகியோர் புன்னகையுடன் இணைந்திருக்கும் அழகான போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் ஆரம்பகட்டப் பணிகள் துவக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்திய வெளியீடாக வெளியாகவுள்ளது.

நடிகர்கள் :
விஜய் சேதுபதி

தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்குநர் : பூரி ஜெகன்நாத்
தயாரிப்பாளர்கள்: பூரி ஜெகன்நாத், சார்மி கௌர்
தயாரிப்பு நிறுவனம் : பூரி கனெக்ட்ஸ்
CEO : விசு ரெட்டி
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெடிங் : ஹேஷ்டேக் மீடியா

டேனியல் பாலாஜி நடித்த கடைசி படமான ‘ஆர் பி எம் (RPM) ‘ படத்தின் டிரெய்லரை அவரது தாயார் வெளியிட்டார்

நடிகர் டேனியல் பாலாஜி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஆர் பி எம் – RPM ‘படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. நடிகர் டேனியல் பாலாஜி மறைந்து ஓராண்டு நிறைவு பெறுவதால்.. அவருக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.

இயக்குநர் பிரசாத் பிரபாகர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஆர் பி எம் ‘ ( R P M) எனும் திரைப்படத்தில் நடிகர் டேனியல் பாலாஜி, கோவை சரளா, ஒய் ஜி மகேந்திரன், இளவரசு, தேவதர்ஷினி , சுனில் சுகதா, ஈஸ்வர் கிருஷ்ணா, தயா பிரசாத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அனியன் சித்திரசாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜெ. செபாஸ்டியன் ரோஸாரியோ இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி மேற்கொள்ள சண்டை காட்சிகளை ஸ்டன்னர் சாம் அமைத்திருக்கிறார். கிரைம் வித் சஸ்பென்ஸ் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கோல்டன் ரீல் இண்டர்நேஷனல் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கல்பனா ராகவேந்தர் தயாரித்திருக்கிறார். பிரசாத் பிரபாகர் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரசாத் பிரபாகர் இணை தயாரிப்பாளராக பொறுப்பேற்றிருக்கிறார். இந்தத் திரைப்படத்தை உலகம் முழுவதும் சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் வழங்குகிறது

எதிர்வரும் கோடை விடுமுறையில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினருடன் டேனியல் பாலாஜியின் தாயார் திருமதி. ராஜலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவர்களுடன் கிரியா டெக் நிறுவனர்- தொழிலதிபர் பாஸ்கரன், ‘எம் ஆர் டி மியூசிக்’ முருகன், ‘சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல்’ சிவா, நடிகர் சாருகேஷ், நடிகர் ஈஸ்வர் கார்த்திக், பாடலாசிரியர் கிரிதர் வெங்கட், இயக்குநர் பிரசாத் பிரபாகர், தயாரிப்பாளர் கல்பனா ராகவேந்தர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் கல்பனா ராகவேந்தர் பேசுகையில், ” இந்த நாளில் எங்களுடைய ஆர் பி எம் படத்தின் முன்னோட்டத்தை வெளியிடுவதற்கு சிறந்த நாளாக கருதுகிறோம். நடிகர் டேனியல் பாலாஜி மறைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. அவருடைய தாயார் ராஜலட்சுமி அம்மா அவர்கள் இங்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்திருக்கிறார். இவரை விட வேறு யாரையும் சிறப்பு விருந்தினராக அழைக்க தோன்றவில்லை. அவர் இங்கு வருகை தந்து சிறப்பித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

படத்தின் இயக்குநர் பிரசாத் பிரபாகர் நடிகர் டேனியல் பாலாஜியை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி, படத்தின் பணிகள் தொடங்கிய நிலையில்.. எங்களுடைய தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்ததற்காக நன்றி தெரிவிப்பதற்காக டேனியல் பாலாஜியை காணொளி மூலம் சந்தித்தேன். அந்த சந்திப்பில் உங்களை நான் இதற்கு முன் மேடையில் பாடகியாக சந்தித்திருக்கிறேன் என்றார். அந்த சந்திப்பின்போது, ‘நான் விரும்பும் பாடலை பாடுவீர்களா?’ என கேட்டார். அந்தப் பாடலைக் கேளுங்கள். தெரிந்தால் கண்டிப்பாக உடனடியாக பாடுகிறேன் என்று சொன்னேன். ‘தண்ணீர் தண்ணீர் ‘ எனும் திரைப்படத்தில் எம். எஸ். விஸ்வநாதன் இசையில் பி. சுசிலா அம்மா பாடிய ‘கண்ணான பூ மகனே கண்ணுறங்கு சூரியனே..’ என்ற பாடலை பாடுமாறு கேட்டுக் கொண்டார். அந்தப் பாடலை கேட்டிருக்கிறேன். ஆனால் போதிய பயிற்சி இல்லாததால் அந்தத் தருணத்தில் பாட இயலாததற்கு மன்னிக்கவும் எனக் கேட்டுக் கொண்டேன். அதன் பிறகு பயிற்சி பெற்று அந்த பாடலை நேரில் வந்து பாடுகிறேன் என்றும் சொன்னேன்.

‘சிங்கார வேலனே’ என்ற பாடலை பாட இயலுமா! என கேட்டார். அந்தப் பாடலை உடனடியாக அந்த காணொளி மூலமாக பாடி காண்பித்தேன்.

அவர் மிகுந்த திறமைசாலி. இதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. சினிமா நுணுக்கங்களை பற்றியும்… நடிப்பு திறன்களை பற்றியும் .. திரை தோன்றலை எப்படி சக நடிகர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும், திரை தோற்றத்தின் போது ரசிகர்களை நடிப்பால் ஆக்கிரமிப்பது எப்படி? என்ற நுட்பத்தையும் அறிந்தவர்.
அவர் பெரும்பாலும் நெகடிவ் கேரக்டரில் தான் நடித்திருக்கிறார். அதற்கு அவருடைய கண்கள் பிளஸ்ஸாக இருக்கும்.

மிகப்பெரிய நடிகராக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் எளிமையாக இருந்தார். இது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை அளித்தது.

அதன் பிறகு அவர் கேட்ட விருப்பமான பாடலை பயிற்சி பெற்று பாடி, அதனை வாய்ஸ் மெசேஜாக அனுப்பினேன்.‌ அந்தப் பாடலை இங்கு நான் பாட விரும்புகிறேன். இந்த பாடலுக்கான வரிகள் நம்மிடமிருந்து மறைந்த அந்த ஆத்மாவிற்கு பொருத்தமாக இருக்கும்.

மக்களுடைய மனதில் இடம் பிடித்த டேனியல் பாலாஜி போன்ற கலைஞர்களின் மறைவு என்பது பேரிழப்பாகும். அவர் எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் அதில் தன்னுடைய சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தி இருப்பார்.

இந்த படத்தில் நடிக்கும் போது அவருடன் நடித்த சக நடிகர்களான ஈஸ்வர் கார்த்திக், சாருகேஷ், பாபு , முத்து ஆகியோருடன் நிறைய நேரம் பேசி இருக்கிறார். அவர்களிடத்தில் இதுதான் என்னுடைய கடைசி படமாக இருக்கும். இதன் பிறகு நான் ஆன்மீகத்தில் முழுமையாக ஈடுபட போகிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

அவரைப் பற்றி குறிப்பிடுவதற்கு இரண்டு விசயங்கள் உண்டு. நான் சின்ன வயதில் ஓரிரு திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். பாட்டின் மீதிருந்த காதல் காரணமாக பாடகியாகி, பாட்டு பாடுவதில் தான் கவனம் செலுத்தினேன். இந்தப் படத்தில் நான் நடிக்கும் போது எனக்கு நம்பிக்கையில்லை. முதல் நாள் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்த உடன் டேனியல் பாலாஜியை சந்தித்து உங்களிடம் ஒரு கோரிக்கை. நீங்கள் நடிப்பதை பார்ப்பதற்கு அனுமதி தர வேண்டும் என கேட்டேன். சரி என்று ஒப்புக் கொண்டார். இயக்குநர் ‘ஆக்சன்’ என்று சொன்னவுடன், அவர் கேரக்டராக மாறி பெர்ஃபார்மன்ஸ் செய்வதை பார்க்கும்போது வியந்து போனேன்.

இந்த திரைப்படத்தில் நடிக்கும் நடிகர் ஈஸ்வர் கார்த்திக் – நடிகை தயா பிரசாத் பிரபாகர் ஆகிய இருவருக்கும் இதுதான் முதல் படம். இருவரும் முதல் நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது டேனியல் பாலாஜியை பார்த்தவுடன் பதட்டமடைந்தார்கள். அப்போது அவர்களிடம் நடிக்கும் போது பயப்படக்கூடாது. இங்கு நடிக்கும் போது நான் டேனியல் பாலாஜி கிடையாது. அந்த கதாபாத்திரம் மட்டும்தான் என்று சொல்லி நம்பிக்கை ஊட்டி நடிக்க வைத்தார். புதுமுக கலைஞர்களுக்கு அவர் கொடுத்த உற்சாகம் எனக்கும் நம்பிக்கை அளிப்பதாகவே இருந்தது.

ஆர் பி எம் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம். இயக்குநர் பிரசாத் பிரபாகர் மற்றும் ஒட்டுமொத்த பட குழுவினரும் பரிபூரணமாக உழைத்து உருவாக்கியிருக்கிறோம். இந்தத் திரைப்படத்திற்கு அனைவருடைய ஆதரவும் வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் ” என்றார்.

டேனியல் பாலாஜியின் தாயார் ராஜலட்சுமி பேசுகையில், ” டேனியல் பாலாஜி சின்ன குழந்தையாக இருக்கும்போதே ரொம்ப பக்தி. மூன்று வயதில் இருந்தே அவனுக்கு பக்தி அதிகம். ஸ்கூலில் இருந்து வீட்டுக்கு திரும்பி வரும்போது தேங்காய் பழம் பூ என இந்த பொருளை வாங்கிட்டு நடந்து வருவான். பஸ்ஸில் வரமாட்டான்.
காலேஜ் சென்ற பிறகும் அவனுக்கு இந்தப் பழக்கம் இருந்தது. அவன் சம்பாதித்த பணத்தைக் கூட கோயிலுக்காகச் செலவு செய்தான்.

அவன் நடிச்ச படம். இதனை எல்லாரும் பார்த்து அவனை ஆசீர்வதிக்க வேண்டும்.

கௌதம் மேனன், பாலாஜி இவர்களெல்லாம் ஒன்றாக படித்தவர்கள். ஆரம்பத்தில் அவனுக்கு நடிப்பதில் விருப்பமில்லை. பிறகுதான் வந்தது. முதலில் அவர்கள் அப்பா வேண்டாம் என்று தான் சொன்னார். பிறகு ‘வேட்டையாடு விளையாடு ‘ படத்தை பார்த்துவிட்டு அவர் சந்தோஷம் அடைந்தார். எப்போதும் அவன் …அவன் இஷ்டப்படி தான் இருப்பான்.

கடைசி அஞ்சு நாளைக்கு முன்னாடி அவனுடைய பிராப்பர்ட்டி எல்லாம் தம்பிக்கு தான் என்று சொல்லிவிட்டார். கடைசி கட்டத்தில் அவன் பேசிய பேச்சுகளை கவனித்தேன். அவரிடம் பேச்சு கொடுத்த போது, ‘நான் இருக்க மாட்டேனே!!’ என்று சொன்னான். நான் இன்னும் இருக்கும்போது… அவன் இல்லையே!! என்ற குறை இப்போது என் மனதில் இருக்கிறது ” என்றார்.

கல்வியாளர் – ஆராய்ச்சியாளர் – தொழிலதிபர் பாஸ்கரன் பேசுகையில், ” கல்லூரியில் படிக்கும் போது வாரம் இரண்டு திரைப்படங்களை பார்ப்பேன். அதன் பிறகு வேலை நிமித்தம் வெளிநாடுகளுக்கு பயணிக்கும் போது கிடைத்த ஓய்வு நேரத்தில் திரைப்படங்களை பார்ப்பேன். தொழில் தொடங்கிய பிறகு சினிமா பார்ப்பது என்பது அரிதாகிவிட்டது. ஆனால் வெளிநாடுகளுக்கு சென்று அங்குள்ள தமிழர்களிடம் பேசும் போது தான் சினிமாவின் வீரியம் எனக்கு புரிந்தது.

மலேசியா, சிங்கப்பூர் போன்ற ஆசிய நாடுகளில் தமிழ் மொழி பேசுகிறார்கள் என்றால் அதற்கு முழு முதல் காரணம் சினிமா தான். ஏனென்றால் அங்கு பள்ளி படிப்பில் தமிழ் கிடையாது.

அமெரிக்காவில் கூட கடந்த 20 ஆண்டுகளாக தான் நம்மவர்கள் தமிழில் படிக்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு வெளியே இருக்கும் தமிழர்கள் இன்று தமிழ் பேசுகிறார்கள் என்றால் அது திரைப்படங்களை பார்த்து தான். புத்தகத்தை வாசித்து தமிழ் தெரிந்து கொள்வதில்லை. ஆப்பிரிக்காவின் என்னுடைய நண்பர்களை சந்திக்கும் போது அவர்கள் தமிழ் பேசுவார்கள்.
நான் இது இதை ஏன் சொல்ல வருகிறேன் என்றால்.. தமிழ் திரைப்படத்தில் ஒரு பக்கம் கான்ட்ரவர்ஸியல் பேசினாலும்.. மற்றொரு பக்கம் சமூகத்திற்கு என்ன செய்து கொண்டிருக்கிறது என்றால் தமிழை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

இந்தோனேசியாவில் ஒரு ஆலயத்தில் ஒரு சின்ன பெண் முருகனின் பாடலை அற்புதமாக பாடினார். அந்தப் பெண் அந்த நாட்டை சேர்ந்த ஐந்தாம் தலைமுறை பெண். அந்தப் பெண்ணிற்கு தமிழ் தெரியவில்லை. ஆனால் தமிழில் அற்புதமாக பாடுகிறார். அந்தப் பாட்டின் பொருள் தெரியவில்லை. ஆனால் தலைமுறை தலைமுறையாக அந்தப் பாடலை அவருக்கு சொல்லி கொடுத்திருக்கிறார்கள்.

மொழி மீது ஆர்வம் ஏற்பட வேண்டும் என்பதற்காகவே சினிமாவை பார்க்க வேண்டும். புத்தகத்தை வாசிக்குமாறு கேட்டால் மறுத்து விடுவார்கள்.

அதில் தருணத்தில் சினிமாக்காரர்களிடம் ஒரு தாழ்மையான வேண்டுகோளை முன் வைக்கிறேன். உங்களுடைய படத்தின் வன்முறையை சற்று குறைத்துக் கொள்ளுங்கள்.

தமிழர்கள் உலகம் முழுவதும் 70, 80 நாடுகளில் இருக்கிறார்கள். அவர்கள் தமிழ்நாட்டில் தயாராகும் திரைப்படங்களை பார்த்து தான் மொழியை பேசுகிறார்கள்.

இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். அனைவரது ஆசீர்வாதமும், ஆதரவும் இந்தத் திரைப்படத்திற்கு வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் ” என்றார்.

இயக்குநர் பிரசாத் பிரபாகர் பேசுகையில், ” அமரன் போன்ற வெற்றி படத்தை வெளியிட்ட சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த ஆர் பி எம் படத்தை பான் இந்திய திரைப்படமாக வெளியிடுகிறார்கள். இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

டேனியல் பாலாஜி நடித்த திரைப்படம் வெளியாகி ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அவரை இந்தப் படத்தில் மிகவும் ஷட்டிலாக நடிக்க வைத்திருக்கிறேன்.
அவருக்குள் ஒரு டைரக்டர் இருக்கிறார். அவருக்குள் ஒரு ரைட்டர் இருக்கிறார். அவருக்குள் ஒரு புரொடக்ஷன் கண்ட்ரோலர் இருக்கிறார். அவருக்குள் ஒரு சினிமாவுக்கான எல்லாம் இருக்கிறது. அவரை ஏமாற்றவே முடியாது. ஒவ்வொரு காட்சியில் நடிக்கும் போதும் அந்த காட்சிக்கான முழு பின்னணியையும் கேட்டு தெரிந்து கொள்வார். குறிப்பிட்ட காட்சியில் நடிக்கும் போது நான் என்ன மனநிலையில் இருக்க வேண்டும் என்பதனை கேட்டு தெரிந்து கொள்வார். அப்போதுதான் அந்த கதாபாத்திரத்தின் உணர்வை உள்வாங்கி நடிப்பதற்கு உதவியாக இருக்கும் என்பார். அவருடன் பணியாற்றிய ஒவ்வொரு நிமிடங்களும் மறக்க முடியாதவை.

சில பேருடைய அன் பிரசன்ஸ் ( Unpresense) தான் நமக்கு பிரசன்ஸ் ஆக இருக்கும். அவர் இல்லாமல் இருக்கும்போது தான் அவரை பற்றி நிறைய பேசுவோம். அந்த மாதிரி ஒரு மனிதர்தான் டேனியல் பாலாஜி.

அவர் நடித்த இந்தப் படம் நன்றாக வந்திருக்கிறது. அவருடைய ஆசி இந்த படத்திற்கு இருக்கும். ரசிகர்களும் இந்த படத்தை ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் ” என்றார்.

‘வீர தீர சூரன் பாகம் 02’ திரை விமர்சனம்

மதுரையில் தன் மனைவி கதாநாயகி துஷாரா விஜயன் மற்றும் தாய் மகள் மகனுடன் கதாநாயகன் விக்ரம் மளிகை கடை நடத்தி கொண்டு வாழ்ந்து வருகிறார்இவர் இதற்கு முன் கதாநாயகன் விக்ரம் பெரிய ரவுடியான ரவுடி ப்ருத்வி கேங்கில் முக்கிய நபராக இருந்து வெட்டுக்குத்து ரவுடிசம் வேண்டாம் என தனது குடும்பத்துடன் மளிகை கடை நடத்தி வருகிறார்.காவல்துறை அதிகாரியான எஸ்.ஜே சூர்யா கேங்ஸ்டராக இருக்கும் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் அவரது தந்தை மாருதி பிரகாஷ் ராஜ் என்கவுண்டர் செய்வதற்காக முயற்சித்து வருகிறார்

இந்நிலையில் என்கவுண்டரில் இருந்து மகன சுராஜ் வெஞ்சரமூடு காப்பாற்றுவதற்காக காவல்துறை அதிகாரியான எஸ்.ஜே சூர்யாவை காலி செய்வதற்காக மாருதி பிரகாஷ் ராஜ் கதாநாயகன் விக்ரமின் உதவியை நாடுகிறார்.ஆனால் காவல்துறை அதிகாரியான எஸ்.ஜே சூர்யாவை கொலை செய்வதற்கு கதாநாயகன் விக்ரம் இதற்கு ஒத்துக்கொள்ள மறுக்கிறார்.அதன் பின் மாருதி பிரகாஷ் ராஜ் கதாநாயகன் விக்ரம் காலில் விழுந்து கெஞ்சி கேட்டப்பிறகு காவல்துறை அதிகாரியான எஸ்.ஜே சூர்யாவை கொலை செய்வதற்கு சம்மதிக்கிறார்.ஒரே இரவில் கதாநாயகன் விக்ரம் காவல்துறை அதிகாரியான எஸ்.ஜே சூர்யாவை தீர்த்து கட்டுவதற்கு திட்டம் போட.. சுராஜ் வெஞ்சரமுடூ காவல்துறை அதிகாரியான எஸ்.ஜே சூர்யா என்கவுண்டரில் கொல்வதற்கு திட்டம் போட.. அதற்குப் பின் என்ன ஆனது?

கதாநாயகன் விக்ரம் யார்? கதாநாயகன் விக்ரமின் பின்னணி என்ன? காவல்துறை அதிகாரியான எஸ்.ஜே சூர்யாவிற்கும் சுராஜ் வெஞ்சரமுடூ என்ன பகை? என்பதுதான் இந்த வீர தீர சூரன் திரைப்படத்தின் மீதிக்கதை. விக்ரம் நேச்சுரலான நடிப்பை கொடுத்து மிகவும் ரசிக்கும்படியாக நடித்துள்ளார்.ஆக்ஷன் காட்சிகளில் ஸ்கோர் செய்துள்ளார்.

எஸ். ஜே சூர்யா அவரது வில்லத்தனத்தை காட்டி மிக அருமையாக மிரட்டியுள்ளார்.இந்த வீர தீர சூரன் திரைப்படத்தில் துஷாரா விஜயன் கதாநாயகியாக கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தை மிகவும் நேர்த்தியாக கையாண்டுள்ளார்.

மலையாள நடிகரான சுராஜ் வெஞ்சரமூடு அவருடைய பாணியில் நடித்திருக்கிறார்.

திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் மாருதி பிரகாஷ் ராஜ், பாலாஜி, ரமேஷ் இந்திரா, மாலா பார்வதி, ஸ்ரீஜா ரவி, அனைவரும் திரைக்கதை ஓட்டத்திற்கு மிக அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்

ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் இரவில் நடப்பதால் மிகவும் தத்ரூபமாக காட்சிப்படுத்திருக்கிறார்

இசையமைப்பாளர் வி பிரகாஷின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். சியான் விக்ரமின் பீஜியத்திற்கு மிகப்பெரிய அளவில் திரையரங்குகளில் அதிருகிறது.

ஒரே இரவில் நடக்கும் முன்னாள் பகையை பழி தீர்க்கும் கொள்ளும் கதையை கையில் எடுத்து மிக அருமையான திரை கதையை கொடுத்து மிகச் சிறப்பான திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் எஸ்.யூ அருண்குமார்.