Breaking
September 17, 2026

நடிகை ஸ்ருதிஹாசன் பாடிய “பவழ மல்லி”

நடிகை ஸ்ருதிஹாசன் பாடிய “பவழ மல்லி” – சாய் அபயங்கர் உருவாக்கத்தில், கலாச்சாரமும் நவீன இசையும் கலந்த இசை அனுபவம்!!

நடிகை ஸ்ருதிஹாசனின் நடிப்புக்கு மட்டுமல்ல, அவரது இசைத்திறமைக்கும் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்போதைய இளைஞர்கள் பெரிதும் கொண்டாடும் இசையமைப்பாளர் சாய் அபயங்கருடன் இணைந்து அவர் பாடியுள்ள “பவழ மல்லி” பாடல் தற்போது இசை உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

“பவழ மல்லி” பாடல் பாரம்பரியத்தின் மணமும், நவீன இசையின் அதிரடியும் ஒன்றாக கலந்த தனித்துவமான இசை அனுபவமாக உருவாகியுள்ளது. இண்டி இசை உலகில் தனித்துவமான பாணிக்காக அறியப்படும் சாய் அபயங்கர் இந்த பாடலுக்கு இசைமைத்துள்ளார்.

இந்த பாடலின் மிகப்பெரிய சிறப்பாக அமைந்துள்ளது ஸ்ருதிஹாசனின் குரல். அவரது குரல் பாடலுக்கு ஒரு தனித்துவமான கவர்ச்சியையும் ஆழமான உணர்ச்சியையும் அளிக்கிறது. மணமகன்–மணமகள் இடையே நடைபெறும் சுவாரஸ்யமான ஊடலை மையமாகக் கொண்டு, கேள்வி–பதில் பாணியில் இந்த பாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மணமகளின் பதில்கள் ஸ்ருதிஹாசனின் குரலில் இனிமையாக ஒலித்து பாடலுக்கு மேலும் உயிரூட்டுகின்றன.

காதல் வளர வளர, இந்தப் பாடலின் இசையும் பல உணர்வுகளைக் கடக்கிறது. இடையில் ஒரு மயக்க நிலைக்குச் சென்றுவிட்டு, பிறகு கலாச்சாரம் நிறைந்த ஒரு வலிமையான இசைப் பகுதிக்குத் திரும்புகிறது. இந்த இசை மாற்றங்களை ஸ்ருதிஹாசனின் குரல் மேலும் அழகாக இணைக்கிறது.

பாடலின் கவிதைத் தன்மையை உயர்த்தும் வரிகளை கவிஞர் விவேக் எழுதியுள்ளார். அவரது வரிகள் கொண்டாட்டத்தின் உணர்வை நுட்பமாகவும் கவிதை நயத்துடனும் வெளிப்படுத்துகின்றன.

மொத்தத்தில், ஸ்ருதிஹாசன் குரலில் ஒலிக்கும் “பவழ மல்லி” பாடல் பாரம்பரியமும் நவீன இசை முயற்சிகளும் இணையும், கலாச்சார மணம் மிக்க வித்தியாசமான இசை அனுபவமாக உருவாகியுள்ளது.

Kotak Solitaire To Support Coimbatore Affluent Through Entrepreneurial Boom

CHENNAI Kotak Mahindra Bank is presenting its inviteonly affluent programme ‘Solitaire’ to Coimbatore’s founder families and professionals as Tamil Nadu’s growth momentum and Coimbatore’s enterprise economy gather pace. Tamil Nadu has posted strong growth with percapita incomes rising, signalling sustained income gains in one of India’s most industrialised states. Coimbatore, with over 3.23 lakh registered MSMEs and deep industrial clusters, remains a key engine of this growth, with its engineering and pump ecosystem supplying a significant share of India’s motor and pump production—bolstering demand for faster credit, sophisticated treasury solutions and premium wealth services that Kotak aims to support through Solitaire.

Pranav Mishra, President – Head of Distribution, Kotak Mahindra Bank, said:
“Coimbatore’s entrepreneurs represent the best of India’s selfmade success—grounded in enterprise, guided by innovation, and built on family ambition. Across industrial clusters in Peelamedu, SIDCO and Kurichi and the growing innovation corridors in Saravanampatti and Kalapatti, they are driving a new phase of enterpriseled growth. Kotak Solitaire is designed to support that momentum by recognising family relationships, easing access to credit and offering hightouch service for busy business owners. In a globally connected economy, entrepreneurs need flexible credit and unified banking that works seamlessly for both personal and business needs—and Solitaire brings that together in one integrated relationship.”

The Bigger Picture: Rise of Affluence in India

India’s affluent population is expanding rapidly and is expected to touch nearly 100 million affluent individuals by 2027, up from around 60 million in 2023. This surge is visible not only in metros but also in enterpriseled centres like Coimbatore, where expanding MSME activity and entrepreneurial success are reshaping household prosperity. In this environment, Kotak Solitaire is uniquely positioned to serve Coimbatore’s upwardly mobile families, offering an integrated platform that brings together banking, wealth management, credit and lifestyle privileges—aligned to the pace at which the city’s economic and affluent profile is evolving.

Coimbatore’s Shift Toward Modern Enterprise

Coimbatore continues to deepen its position as a highactivity enterprise hub where legacy industries are scaling alongside newage businesses. The city’s industrial clusters—Peelamedu, SIDCO and Kurichi—remain strong anchors for textiles, engineering, motor-and-pump manufacturing and precision production. Alongside this, the Saravanampatti–Kalapatti corridor is expanding Coimbatore’s footprint in IT services and techforward enterprise, complementing the city’s manufacturing depth with new growth engines. Coimbatore’s makers are also expanding into highervalue segments such as aerospace components, medical devices and global ecommerce supply chains. The result is rising prosperity, broader income streams, job creation and increasing demand for relationshipled banking for businesses and their families.

What Sets Solitaire Apart

Solitaire is invitationonly and linked to a household’s Total Relationship Value across deposits, loans, investments, insurance and demat holdings. The programme recognises consolidated family engagement, provides preapproved credit lines of up to ₹8 crore for timecritical decisions, and offers a twolayer service model for strategic needs and daytoday execution.

Customer Focus

Kotak’s research indicates selfemployed customers seek flexible, responsive support as their businesses grow in scale and complexity. Many manage fragmented banking relationships, rigid lending structures and limited recognition despite substantial engagement. Solitaire addresses these issues with a unified, relationshipdriven experience, flexible credit and personalised service for ambitious customers in emerging cities such as Coimbatore.

Kotak Solitaire: Key Features

· Flexible Business Banking Lending Solutions with LTV up to 120% of collateral value for working capital and up to 20% ad hoc limit for 120 days/year; Complimentary Business credit Card with limit up to 30 lacs for managing business expenses, preapproved Forward Hedging limits.
· Connected Banking with ERP integration, CMS with up to 500 free NEFT / RTGS transactions p.m. No Installation and Rentals on POS / Soundboxes with preferential MDR on POS.
· Superior variant of Current Account with no AQB requirements and free cheque pickup facility
· ₹8 Crore PreApproved Credit Lines – Seamless access to preapproved secured and unsecured loans, including home loans, Auto Loans, personal loans, and credit cards.
· FamilyLevel Design – banking benefits for up to 15 family members.
· Premium Lifestyle Benefits on Credit Card – Unlimited lounge access, luxury hotel privileges, presale invites to exclusive events and zero forex markup.
· Dedicated Service Model – Duallayered support with a Relationship Manager for financial guidance and a Service RM for operational needs.

ZEE5-ல் பூக்கி திரைப்படம் வரும் மார்ச் 13 முதல்……..

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஸ்ட்ரீமிங் ஆகும்

ZEE5 நிறுவனம் இன்று, இயக்குநராக கணேஷ் சந்திரா அறிமுகமான ரொமான்டிக் காமெடி திரைப்படமான ‘பூக்கி’படத்தின் டிஜிட்டல் வெளியீட்டை அறிவித்துள்ளது. இந்தப் படம் மார்ச் 13 முதல் ZEE5-ல் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் ஆகும்.

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் கீழ் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள இந்த படத்தில் அஜய் திஷான் மற்றும் R.K. தனுஷா நடித்துள்ளனர். மேலும் பாண்டியராஜன், சுனில், லட்சுமி மஞ்சு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் இசை மற்றும் எடிட்டிங்கை விஜய் ஆண்டனி மேற்கொண்டுள்ளார்.

‘பூக்கி’ திரைப்படம், பிரிவை விரும்பும் நிலையில் இருந்தும் ஒருவரை ஒருவர் இன்னும் நேசித்து கொண்டிருப்பதை உணர்ந்து, குழப்பத்தில் சிக்கிக் கொள்ளும் ஒரு காதல் ஜோடியின், நகைச்சுவையுடன் கூடிய உணர்ச்சிப்பூர்வமான பயணத்தை சித்தரிக்கிறது. நவீன உறவுகளின் குழப்பம், பாசம் மற்றும் முரண்பாடுகளை இந்தப் படம் சுவாரஸ்யமாக வெளிப்படுத்துகிறது.

படத்தின் தயாரிப்பாளர், இசையமைப்பாளர் மற்றும் எடிட்டரான விஜய் ஆண்டனி கூறுகையில்,
“‘பூக்கி’ வெளிப்படையாக ஒரு எளிய கதையாக தோன்றினாலும், இன்றைய உறவுகளில் உள்ள உண்மையான உணர்வுகளை பிரதிபலிக்கிறது. இயக்குநர் கணேஷ் சந்திரா இந்த படத்திற்கு புதிய உற்சாகத்தையும் உண்மையான உணர்வுகளையும் கொண்டு வந்துள்ளார். நகைச்சுவையும் உணர்ச்சியும் ஒன்றாக கலந்து, அனைவரும் தொடர்பு கொள்ளக்கூடிய வகையில் இந்த படம் உருவாகியுள்ளது” என்றார்.

நடிகை லட்சுமி மஞ்சு கூறுகையில்,
“‘பூக்கி’ படத்தில் ஒரு அழகான எளிமை இருக்கிறது. காதல் ஜோடிகள் அனுபவிக்கும் சங்கடம், மென்மை மற்றும் எதிர்பாராத தருணங்களை இந்த படம் அழகாக பதிவு செய்கிறது. இந்த படத்தில் நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தமிழ் ZEE5 பார்வையாளர்கள் இந்த படத்தின் உணர்வுகளை நிச்சயம் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

‘பூக்கி’ திரைப்படத்தை மார்ச் 13 முதல் ZEE5-ல் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் காண தவறாதீர்கள்!

விஜய்குமார் – கயல் ஆனந்தி நடிக்கும் “அறிவு”

Movietron Production தயாரிப்பில் இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உறியடி விஜய்குமார் – கயல் ஆனந்தி நடிக்கும் “அறிவு” படம் பூஜையுடன் துவங்கியது !!

Movietron Production நிறுவனத்தின் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், கழுகு படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உறியடி மூலம் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த விஜய்குமார் மற்றும் கயல் ஆனந்தி நாயகன்–நாயகியாக இணையும் புதிய திரைப்படமான அறிவு படத்தின், படப்பிடிப்பு இன்று எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது.

Movietron Production நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் இந்த திரைப்படம், பெண் உரிமைகளை மையமாக கொண்டு வலுவான சமூகச் செய்தியுடன் உருவாகவுள்ளது. சமூக அக்கறையும் விறுவிறுப்பும் கலந்த கதைக்களத்தில் இப்படம் உருவாகிறது.

இந்தப் படத்தில் I. M. விஜயன், சிங்கம்புலி, தீபா சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கதையும், திரைக்கதையும் எழுதி இயக்கும் சத்யசிவா, வலுவான சமூக கருத்துக்களை விறுவிறுப்பான சினிமா மொழியில் சொல்வதில் பெயர் பெற்றவர்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் D.இமான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவை தில் ராஜு மேற்கொள்ள, படத்தொகுப்பை வெற்றி கிருஷ்ணன் கவனிக்கிறார். கலை இயக்குநராக S.K., கிரியேட்டிவ் ஹெட்டாக ராமு M. பணியாற்றுகின்றனர். இணை தயாரிப்பாளர் சாய்பிரபு ஜெயக்குமார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இடுக்கி, தேனி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. இயற்கை அழகும், நகர வாழ்க்கையின் நிஜங்களும் இணையும் வகையில் காட்சிகள் வடிவமைக்கப்படவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

சமூகப் பொறுப்புணர்வும், விறுவிறுப்பும் இணையும் இப்படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

ZEE5 இன் “தடயம்” சீரிஸ் நன்றி அறிவிப்பு விழா !!

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 இல் கடந்த பிப்ரவரி 27 அன்று வெளியான தமிழ் ஒரிஜினல் சீரிஸ் “தடயம்”, வெளியான சில நாட்களிலேயே ரசிகர்களின் பெரும் வரவேற்பில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

தமிழில் உருவாகும் க்ரைம் த்ரில்லர் கதைகளிலிருந்து மாறுபட்டு, உண்மை சம்பவங்களின் பின்னணியுடன் பரபரப்பும் மர்மமும் நிறைந்த அனுபவத்தை வழங்கும் இந்த சீரிஸ், ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வெளியான சில நாட்களுக்குள்ளாகவே 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்துள்ளதும் அதன் வெற்றியை நிரூபிக்கிறது.

இதனைக் கொண்டாடும் வகையில், படக்குழு பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து, விமர்சனங்களுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

இந்நிகழ்வினில்..,

ZEE5 சார்பில் கௌஷிக் நரசிம்மன் பேசியதாவது…,
பொதுவாக ஒரு சீரிஸ் வெளியான பிறகு, அதன் முழு வரவேற்பையும் பல வாரங்கள் கடந்த பிறகுதான் நாம் பார்க்க முடியும். ஆனால் தடயம் சீரிஸில், இன்னும் ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், அதுவும் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களை எட்டியுள்ளது. இது மிகப் பெரிய சாதனை என்று நான் நினைக்கிறேன்.

இதற்கு முன்பு ZEE5 தளத்தில் பல சீரிஸ்கள் வெளியானது. விலங்கு, அயலி போன்ற சீரிஸ்கள் நல்ல வரவேற்பைப் பெற்றவை. ஆனால் அவற்றை ஒப்பிடும்போது மிகக் குறுகிய காலத்திலேயே இந்த அளவிலான பார்வை நிமிடங்களை ‘தடயம்’ எட்டியுள்ளது. ஒரு வாரத்திலேயே இப்படிப்பட்ட சாதனைகள் உருவாகியுள்ளது என்பது மிகப்பெரிய விஷயம். இந்த சாதனைக்கு முக்கிய காரணம் பார்வையாளர்கள்தான். அவர்கள் ஆதரவு இல்லாமல் இது நடந்திருக்காது. அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. அடுத்தடுத்து இன்னும் பல நல்ல படைப்புகள் வரப்போகிறது. அதை நீங்கள் தொடர்ந்து ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

அதே நேரத்தில், இந்த தொடரின் வெற்றிக்கு பங்களித்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தயாரிப்பு குழுவினருக்கும் எனது நன்றி.

Cocktail Cinemas தயாரிப்பாளர் அஜய் கிருஷ்ணா பேசியதாவது..,

இந்த அளவிலான வரவேற்பை ‘தடயம்’ சீரிஸுக்கு கொடுத்ததற்கு அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. நீங்கள் அனைவரும் சேர்ந்து என்னையும், எங்கள் முழு குழுவையும் மிகப் பெரிய கௌரவத்திற்கு கொண்டு வந்துள்ளீர்கள். தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் என அனைவரும் இணைந்து இந்த வெற்றியை உருவாக்கியுள்ளனர். இது எனக்கு தயாரிப்பாளராக முதல் முயற்சி. ஆனால் அந்த முதல் முயற்சியே இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வெற்றி ரசிகர்களின் ஆதரவால் மட்டுமே சாத்தியமானது. நீங்கள் இல்லையென்றால் இன்று நாங்கள் இந்த மேடையில் நிற்க முடியாது.

இந்த படைப்பை என்னால் முடியும் என்று நம்பிக்கை வைத்து, எனக்கு வாய்ப்பு கொடுத்த கௌஷிக் சார் அவர்களுக்கு நான் மிகவும் நன்றி கூற வேண்டும். அவரின் நம்பிக்கையும் ஊக்கமும் இல்லையென்றால் இன்று இந்த தருணம் எனக்கு கிடைத்திருக்காது. அதேபோல் எப்போதும் எனக்கு துணையாக இருந்து, எந்த பிரச்சனை வந்தாலும் தைரியம் கொடுத்து முன்னேற்றிய கனி அண்ணனுக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன். அவரின் ஆதரவும் ஊக்கமும் தான் இன்று நான் இங்கு நிற்க காரணம். இந்த சீரிஸில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் மற்றும் என் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றி. அனைவருக்கும் நன்றி.

இசையமைப்பாளர் விபின் பாஸ்கர் பேசியதாவது..,

எல்லாருக்கும் வணக்கம். இந்த தருணத்தை கொண்டாடுவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த சீரிஸில் வேலை செய்த போது, எங்களுக்கு பல அழுத்தங்கள் இருந்தன. ஆனாலும் நல்லதாக ஒரு படைப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் முழு ஈடுபாட்டோடு வேலை செய்தோம். இன்று அதன் முடிவு ரசிகர்களை சென்றடைந்துள்ளது என்று பார்க்கும்போது, எங்கள் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றியாக இதை உணர்கிறேன். எங்கள் டீம், இயக்குநர், சேனலிலிருந்து கௌஷிக் சார், முகில் சார், தயாரிப்பாளர் சார் ஆகிய அனைவரும் இந்த முழு பணிச்சூழலிலும், குறிப்பாக போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் இசை பணிகளின் போது எங்களுக்கு மிகுந்த ஆதரவாக இருந்தார்கள். அதேபோல் எங்கள் டீம், பாடலாசிரியர்கள், பாடகர்கள், இசைக்கலைஞர்கள் என எங்களுடன் பணியாற்றிய அனைவரும் மிகவும் ஒத்துழைப்பாக இருந்தனர். அவர்களின் ஆதரவும் உழைப்பும் தான் இந்த வெற்றிக்கு காரணம் என்று நான் நினைக்கிறேன். நன்றி.

ஒளிப்பதிவாளர் KK பேசியதாவது..,

இந்த வெற்றி விழா மேடையில் நிற்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது முதல் மேடை அனுபவமே ஒரு வெற்றி விழாவாக அமைந்ததற்கு அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய அஜய் சார், இயக்குநர் ஆகியோருக்கு நான் மிகவும் நன்றிகூற வேண்டும். அவர்களால்தான் இந்த சீரிஸில் நான் இணையும் வாய்ப்பு கிடைத்தது. அதேபோல் இயக்குநரும் முழு குழுவும் எனக்கு மிகுந்த ஆதரவாக இருந்தார்கள். இந்த வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி.

எடிட்டர் தினேஷ் குமார் பேசியதாவது..,
இந்த சீரிஸில் நாங்கள் பணியை தொடங்கிய போது, இயக்குநர் நவீன் அண்ணா ஸ்கிரிப்டை கொடுத்து முதலில் படிக்கச் சொன்னார். அப்போது படித்தவுடன் இது ரசிகர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நாங்கள் உணர்ந்தோம். நாங்கள் நினைத்ததுபோலவே இந்த சீரிஸ் பெரிய வரவேற்பைப் பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வாய்ப்பை அளித்த நவீன் அண்ணாவுக்கு நன்றி. பெரிய வாய்ப்புகள் வந்தபோதும் தனியாக செல்லாமல், எங்களையும் கூட சேர்த்துக்கொண்டு சென்றதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றி. அதேபோல் இந்த சீரிஸில் ஆதரவாக இருந்த அஜய் சார், சரவணன் சார், எங்கள் உதவி இயக்குநர்கள் மற்றும் முழு டீமுக்கும் என் நன்றியை தெரிவிக்கிறேன். நன்றி.

இயக்குநர் நவீன்குமார் பழனிவேல் பேசியதாவது..,
இந்த வெற்றிக்கு பலரின் ஆதரவு காரணமாக இருந்தது. குறிப்பாக கௌஷிக் சார் ஆரம்பத்திலிருந்தே எங்களுக்கு மிகுந்த ஆதரவாக இருந்தார். எந்த நேரமாக இருந்தாலும் — இரவு நேரங்களிலும் கூட — எப்போதும் தொடர்பில் இருந்து ஆலோசனைகள் வழங்கி, இந்த படைப்பை இந்த அளவுக்கு கொண்டு வர முக்கிய பங்கு வகித்தார். இந்த வெற்றியின் முக்கிய காரணங்களில் ஒருவர் கௌஷிக் சார் தான். அதேபோல் ZEE5 அணியில் இருந்து முகில் சார் உள்ளிட்ட அனைவரும் தொடர்ந்து ஆதரவாக இருந்தனர். மேலும் கனி அண்ணா மிகவும் ஆதரவாக இருந்து இந்த படைப்பு வெற்றியாக அமைய முக்கிய காரணமாக இருந்தார்.

என்னுடன் பணியாற்றிய என் முழு குழுவினருக்கும் நன்றி. குறிப்பாக மியூசிக் டைரக்டர், KK சார் இருவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சீரிஸில் பல முக்கிய தருணங்களில் இசை மிகவும் பெரிய பலமாக இருந்தது. அதேபோல் எங்களுடன் பணியாற்றிய அனைத்து துணை நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் என் டீம் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. குறைந்த காலக்கெடுவில் — சுமார் 20 நாட்களுக்குள் — இந்த பணியை முடிக்க வேண்டிய சூழல் இருந்தது. அதனால் சில நேரங்களில் நான் கடுமையாக நடந்துகொண்டிருக்கலாம். அதற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இருந்தாலும் நீங்கள் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் இந்த படைப்பை முடித்ததற்கு நன்றி. சில குறைகள் இருந்தால் அதை அடுத்த படைப்புகளில் சரி செய்து இன்னும் சிறப்பாக செயல்பட முயற்சி செய்வேன். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

நடிகர் ராஜ்கிரண் தாஸ் பேசியதாவது..,
எல்லாருக்கும் வணக்கம். இந்த அளவிலான வரவேற்பு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உண்மையில் இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. இந்த சீரிஸில் பங்கெடுத்த கௌஷிக் சார், நவீன், அஜய் சர்மா, கனி சார் உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பாராட்டு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. மேலும் இந்த சீரிஸை தொடர்ந்து ஆதரித்து வரும் மீடியா நண்பர்களுக்கும், சமூக வலைதளங்களில் அதை மக்களிடம் கொண்டு சென்ற அனைத்து ரசிகர்களுக்கும் என் நன்றி.

எழுத்தாளர், நடிகை கொற்றவை பேசியதாவது..,
‘தடயம்’ வெப் சீரிஸ் எனக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. அந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் நவீன் குமார் அவர்களுக்கும், ZEE5 நிறுவனத்திற்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய நிறமும் தோற்றமும் காரணமாக பல தடைகளை சந்தித்திருக்கிறேன். ஆனால் இந்த கதாபாத்திரம் எனக்கு ஒரு பெரிய நம்பிக்கையை அளித்தது. இந்த வேடத்தில் ஒரு வித்தியாசமான மாற்றத்துடன் நடிக்க வாய்ப்பு கொடுத்த நவீன் குமார் அவர்களுக்கு என் சிறப்பு நன்றி. என் நடிப்பின் மீது அவர் வைத்த நம்பிக்கை எனக்கும் ஒரு பெரிய தைரியத்தை கொடுத்துள்ளது. என்னாலுமே நன்றாக நடிக்க முடியும் என்ற நம்பிக்கையை இந்த வாய்ப்பு எனக்கு தந்துள்ளது. இங்கு வந்திருக்கும் அனைத்து ஊடக நண்பர்களுக்கும் நன்றி.

திரு அழகன் தமிழ்மணி பேசியதாவது..,
என் அருமை சகோதரர், சகோதரி பத்திரிகையாளர்களே… நான் உங்களின் ஒருவன். என் வாழ்க்கை உங்களோடு தான் தொடங்கியது. ஆரம்ப காலத்தில் என்னோடு பணியாற்றிய பலர் இன்று கூட சகோதரர்களாகவே இருக்கிறார்கள். என் வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே ஆதரவாக இருந்த உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்.

இன்று இந்த மேடையில் என் மகனைப் பார்க்கும்போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவனை நேரடியாக தயாரிப்பாளராக உருவாக்கவில்லை. ஆரம்பத்திலிருந்து சினிமாவின் அடிமட்டத்தில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்து, முதலில் என் சீரியல்களில் நடிக்க வைத்தேன். அதன் பிறகுதான் தயாரிப்பாளராக வர வேண்டும் என்று சொல்லி வளர்த்தேன். இன்று எந்த உதவியும் இல்லாமல் தனது முயற்சியால் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கும் என் மகன் அஜய் கிருஷ்ணாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

‘தடயம்’ சீரிஸை நான் வீட்டில் உட்கார்ந்து பார்க்கும்போது, அது ஒரு வெப் சீரிஸ் போலவே எனக்குத் தோன்றவில்லை. ஒரு திரைப்படம் போலவே உணர்ந்தேன். அடுத்தது என்ன நடக்கப் போகிறது என்ற ஆர்வத்தில், முடிவுவரை பார்த்து முடித்த பிறகுதான் எழுந்தேன். அந்த அளவுக்கு இயக்குநரின் கைவண்ணமும், ஒளிப்பதிவாளரின் பணியும், எடிட்டரின் வேலையும் மிகவும் சிறப்பாக இருந்தது. இந்த சீரிஸை திரைப்பட தரத்தில் உருவாக்கிய முழு குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்.

நான் சின்னத்திரைக்கு புதிதானவன் அல்ல. 1999ஆம் ஆண்டிலேயே ‘மங்கை’ என்ற தொடர் மூலம் மதிய நேர மெகா தொடரை தொடங்கியவர்களில் ஒருவன் என்ற பெருமை எனக்கு உள்ளது. சின்னத்திரை தான் என்னை வளர்த்தது. நான் சின்னத்திரையில் சம்பாதித்ததால்தான் பெரியத்திரையில் ஏற்பட்ட கடன்களை கூட அடைக்க முடிந்தது. அந்த சின்னத்திரையையே நான் வாழ்நாள் முழுவதும் கடன்பட்டவனாக நினைக்கிறேன். அதே பாதையில் என் மகனையும் அனுப்பியிருக்கிறேன். அவருடைய பயணத்திலும் நீங்கள் அனைவரும் பங்கெடுத்து, அவருக்கு ஆதரவும் ஊக்கமும் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

நடிகர் பிரேம் பேசியதாவது..,
இந்த சீரிஸில் பணியாற்றிய அனுபவம் எனக்கு மிகவும் நிறைவாக இருக்கிறது. இது எனக்கு ஒரு பெரிய வாய்ப்பாக அமைந்தது. அந்த வாய்ப்பை அளித்த அஜய் சார், நவீன் சார், அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த சீரிஸில் பணியாற்றும் போது அவர்கள் என்னை ஒரு கலைஞராக மட்டும் அல்லாமல், தங்களுடைய சகோதரனைப் போலவே பார்த்துக்கொண்டார்கள். அதற்கு நான் மிகவும் நன்றி கூறுகிறேன். அதேபோல் என்னுடன் நடித்த அண்ணன் கனி, அண்ணன் ராஜா உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றியை தெரிவிக்கிறேன். இந்த குழு இனியும் பல நல்ல படைப்புகளை உருவாக்கும் என்று நம்புகிறேன். நன்றி.

நடிகர் சமுத்திரகனி பேசியதாவது..,
ஒவ்வொரு மனசும் ஒரு நிறைவைத் தேடி ஏங்கிக்கொண்டே இருக்கும். ‘தடயம்’ அந்த நிறைவை மிகவும் ஆழமாக மனசுக்குள் கொண்டு வந்து பல விஷயங்களை சரி செய்த மாதிரி உணர்வைத் தருகிறது. அதுதான் இந்த வெற்றியின் மகிழ்ச்சி. நான் சின்னத்திரையில் கிட்டத்தட்ட 3000 எபிசோடுகள் இயக்கியிருக்கிறேன். ஆனால் அந்த பயணத்தில் இவ்வளவு நேர்மையாக பாராட்டுகளை கேட்கும் வாய்ப்பு அரிது. இன்று அந்த அங்கீகாரம் கிடைத்திருப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

இந்த படைப்பு முழுவதும் கௌஷிக் மீது வைத்த நம்பிக்கையில்தான் உருவானது. அவரும், அஜய், நவீன், KK சார் உள்ளிட்ட பலர் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கிறார்கள். அனைவரின் உழைப்பும் சேர்ந்து தான் இந்த வெற்றியை கொடுத்திருக்கிறது. ஒரு அப்பாவிடம் இருந்து பிள்ளைக்கு கிடைக்கும் அங்கீகாரம் மிகப் பெரிய விஷயம். அந்த அங்கீகாரம் அஜய்க்கு இவ்வளவு சீக்கிரம் கிடைத்திருப்பது எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

இந்த வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. இந்த வெற்றி இங்கேயே நிற்காமல் இன்னும் பல தூரம் எங்களை அழைத்து செல்லும் என்று நம்புகிறேன். இன்னும் பல வெற்றிகளை சேர்த்து மீண்டும் மீண்டும் சந்தித்து இந்த மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்வோம். நன்றி.

இயக்குநர் நவீன்குமார் பழனிவேல் எழுதி இயக்கியுள்ள இந்த சீரிஸில் சமுத்திரகனி, சிவாதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 1990களின் இறுதிக் கால தென்னிந்திய கிராமப்புற பின்னணியில் அமைந்துள்ள இந்த சீரிஸ், தொடர் கொலைகளுக்குப் பின்னால் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்க முயலும் காவல் அதிகாரியின் விசாரணையை மையமாகக் கொண்டது.

மார்ச் 13 முதல் பிரைம் வீடியோவில் ‘லோக்கல் டைம்ஸ்’

மார்ச் 13 முதல் பிரைம் வீடியோவில் ‘லோக்கல் டைம்ஸ்’ தமிழ் காமெடி-டிராமா தொடர் உலகளாவிய வெளியீடு — கலகலப்பான டிரெய்லருடன் அறிவிப்பு

ரிஷிகாந்த், அப்தூல் லீ, மௌரிஷ் தாஸ், அத்விதா அறுமுகம், R.பாண்டியராஜன், சின்னி ஜெயந்த், ரினி மற்றும் நந்திதா ஸ்ரீகுமார் நடித்துள்ள ஏழு எபிசோடுகள் கொண்ட இந்த சீரிஸை, நவீன் ஜார்ஜ் தாமஸ் இயக்கத்தில், Fanboy Production நிறுவனத்தின் சார்பில் ஜித்தின் துரை தயாரித்துள்ளார்.

இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் மார்ச் 13 அன்று வெளியாகும் ‘லோக்கல் டைம்ஸ்’, பிரவீன் முத்துரங்கன் எழுதியுள்ளார், அபிநவ் கஸ்தூரா, பிரவீன் முத்துரங்கன், சாத்விக் கதே,தாமஸ் மானுவல் மற்றும் விஷ்வக் சென் பி. ஆகியோரால் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, தனது தமிழ் ஒரிஜினல் காமெடி-டிராமா தொடர் ‘லோக்கல் டைம்ஸ்’ சீரிஸின் உலகளாவிய வெளியீட்டை மார்ச் 13 அன்று அறிவித்துள்ளது. சிரிக்க வைக்கும் அதே சமயம் மனதை தொடும் டிரெய்லருடன் வெளியிடப்பட்ட இந்த ஏழு எபிசோடுகள் கொண்ட சீரிஸ், வேகமாக மாறிவரும் டிஜிட்டல் செய்தி சூழலில் தன் மரபை காக்கப் போராடும் ஒரு உள்ளூர் வார இதழைப் பின்னணியாகக் கொண்டது. Anekdotes உருவாக்கிய இந்த தொடரை நவீன் ஜார்ஜ் தாமஸ் இயக்கியுள்ளார்; Fanboy Production நிறுவனத்தின் சார்பில் ஜித்தின் துரை தயாரித்துள்ளார். ரிஷிகாந்த், அப்தூல் லீ, மௌரிஷ் தாஸ், அத்விதா அறுமுகம், R.பாண்டியராஜன், சின்னி ஜெயந்த், ரினி மற்றும் நந்திதா ஸ்ரீகுமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரவீன் முத்துரங்கன் எழுதிய இந்த சீரிஸை அபிநவ் கஸ்தூரா, பிரவீன் முத்துரங்கன், சாத்விக் கதே, தாமஸ் மானுவல் மற்றும் விஷ்வக் சென் பி. இணைந்து உருவாக்கியுள்ளனர். ‘லோக்கல் டைம்ஸ்’ மார்ச் 13 முதல் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில், தமிழ் மொழியில் ஆங்கில சப் டைட்டில்களுடன், பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக வெளியாகிறது.

ஏழ்மையில் இருந்தாலும் அளவற்ற நம்பிக்கையுடன் வாழும் நான்கு நண்பர்கள் வீரா, அழகு, வள்ளி மற்றும் முத்து. வீராவின் தாத்தாவுக்கு சொந்தமான, ஒரு காலத்தில் பெருமை பெற்ற பிராந்திய பத்திரிகையான ‘நம்ம செய்தி’ பத்திரிகையை காப்பாற்ற நால்வரும் போராடுகின்றனர். இந்த நால்வரின் குழப்பமான வாழ்க்கை, நகைச்சுவையான சாகசங்கள், உணர்ச்சிப் போராட்டங்கள் மற்றும் அவர்களை வீழ்த்தத் துடிக்கும் ஒரு பலமான எதிரி ஆகியவற்றைச் சுற்றி இத்தொடரின் கதை நகர்கிறது.பிரைம் வீடியோ இந்தியா ஒரிஜினல்ஸ் தலைவர் நிகில் மதோக் கூறுகையில்..,
“லோக்கல் டைம்ஸ் என்பது உணர்ச்சி ரீதியாக மனதைத் தொடும் கதை. ஒரு உள்ளூர் வார இதழின் செய்தியை மையமாகக் கொண்டிருந்தாலும், இதன் மைய கருக்கள் நட்பு மற்றும் உறுதியான மனப்பாங்கு என்பதால் அவை உலகளவில் அனைவரும் உணரக்கூடியவை. திறமையான நடிகர்கள் மற்றும் படைப்பாற்றல் கொண்ட குழுவுடன் உருவாகியுள்ள இந்த சீரிஸ், இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் பார்வையாளர்களைக் கவரும் பிராந்திய கதைகளை வழங்கும் எங்கள் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது,” என்றார்.

தயாரிப்பாளர் ஜித்தின் துரை கூறுகையில்..,

“லோக்கல் டைம்ஸ் மூலம், நம்பிக்கையை காப்பாற்ற முயலும் சாதாரண மனிதர்களின் எளிய மற்றும் இலகுவான வாழ்க்கை கதையை சொல்ல நினைத்தோம். ஒரு உள்ளூர் பத்திரிகை அமைப்பு நமக்கு பரிச்சயமான உலகை கொடுத்தாலும், இந்த சீரிஸின் உண்மையான இதயம் இந்த நான்கு கதாபாத்திரங்களின் நட்பே. டிரெய்லர் அவர்கள் பயணத்தின் ஒரு சின்ன முன்னோட்டம் மட்டுமே. இந்த சீரிஸ் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’க்கு பிறகு பிரைம் வீடியோவுடன் மீண்டும் இணைவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது,” என்றார்.

படைப்பாளர்களான அபிநவ் மற்றும் பிரவீன் கூறுகையில்..,

“ஆரம்பத்திலிருந்தே தமிழ் பார்வையாளர்களுக்காக இலகுவான, மகிழ்ச்சியான ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. லோக்கல் டைம்ஸ் ஒரு எளிமையான, மனநிறைவு தரும் சீரிஸ். சிறிய அலுவலகம், பெரிய கனவுகள், மற்றும் ஈகோ மோதல்களுக்கு இடையே நடக்கும் ஒரு கலகலப்பான பயணம், இவை அனைத்தும் இதில் இடம் பெற்றுள்ளன. இது டிராமா காமெடி என இரண்டையும் இணைத்து சொல்லும், எளிமையான இதயம் தொடும் சீரிஸ். இதைப் பார்வையாளர்கள் கொண்டாடுவார்கள் என நம்புகிறோம்.

இயக்குநராக அறிமுகமாகும் நவீன் ஜார்ஜ் தாமஸ் கூறுகையில்..,

“லோக்கல் டைம்ஸ் கதை, தங்கள் கனவுகளை துரத்திக்கொண்டு நிற்கும் யாருடைய கதையாகவும் இருக்கலாம். நமது கதாநாயகர்கள் வழக்கமான ஹீரோக்கள் அல்ல, அவர்கள் குறைகளுடன் இருப்பவர்கள், பிடிவாதம் கொண்டவர்கள், சில நேரங்களில் முட்டாள்களாக கூட இருக்கலாம். ஆனால் அவர்கள் ஆழமான அன்பை கொண்டவர்கள். அவர்களின் அவசர குடுக்கைத் தனம் காமெடியாக இருக்கும். ஆனால் அவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் இருப்பது உணர்வுப்பூர்வமாக இருக்கும். இந்த சீரிஸ் இயக்குநராக என் முதல் படைப்பு. இந்த சீரிஸ் பிரைம் வீடியோவில் வெளியாவது பெரும் மகிழ்ச்சி என்றார்.”

இந்த சீரிஸ் மார்ச் 13 முதல் இந்தியா மற்றும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்திய பிரதேசங்களில் பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக ஒளிபரப்பாகும்.

அர்ஜூன் தாஸ், அன்னா பென் நடிக்கும் “கான் சிட்டி” பட டைட்டில் டீசர் வெளியானது !!

கொட்டும் பண மழை, கொண்டாடும் குடும்பம், “கான் சிட்டி” (Con City)பட அதிரடி டைட்டில் டீசர் வெளியானது!!

புதுமையான கதைக்களத்தில், கொண்டாட்டமான ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி வரும் ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் ஏற்கனவே ஆர்வத்தை தூண்டியிருந்த இந்த படம், தற்போது வெளியான டைட்டில் டீசர் மூலம் மேலும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

நகர வாழ்க்கையில் கடனில் போராடும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் வாழ்க்கையோடு ஆரம்பிக்கும் டைட்டில் டீசர், அடுத்தடுத்து ஆச்சரியம் தரும் காட்சிகளால் அதிர வைக்கிறது. அவர்களுக்கு கிடைக்கும் ஒரு பண மிஷின், பட்டன் தட்டினால் கொட்டும் பணம் என கண்கள் விரிய ஒரு புதுமையான கதைக்களத்திற்குள் நம்மை இழுத்து செல்கிறது. உணர்வுப்பூர்வமாக ஆரம்பிக்கும் இந்த டைட்டில் டீசர் காமெடி டிராக்கில் மாறி, வெகு சுவாரஸ்யமாக நிறைவு பெறுகிறது.

இந்த படத்தில் முன்னணி இளம் நடிகர் அர்ஜூன் தாஸ், மலையாளத்தின் பிரபல நடிகை அன்னா பென், நகைச்சுவை நடிகர் யோகி பாபு, மூத்த நடிகை வடிவுக்கரசி மற்றும் குழந்தை நட்சத்திரம் அகிலன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் (Power House Pictures) தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்கியுள்ளார். படப்பிடிப்பு மங்களூர், சென்னை மற்றும் மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் நடைபெற்றதாக படக்குழு தெரிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து தனித்துவமான இசையால் ரசிகர்களை கவர்ந்து வரும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்திருப்பது ரசிகர்களுக்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப உணர்வுகள், நகைச்சுவை மற்றும் நகர வாழ்க்கையின் நிஜங்களை இணைத்து உருவாகும் ‘கான் சிட்டி’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தற்போது வெளியாகியுள்ள டைட்டில் டீசர் , இந்த படம் ஒரு முழுமையான கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினர் ஆக இருக்கும் எனும் நம்பிக்கையை ரசிகர்களிடையே உருவாக்கியுள்ளது.

தொழில்நுட்ப குழு

இயக்கம்: ஹரிஷ் துரைராஜ்
தயாரிப்பு: Power House Pictures
ஒளிப்பதிவு: அரவிந்த் விஸ்வநாதன்
எடிட்டிங்: அருள் மோசஸ்
இசை: ஷான் ரோல்டன்
கலை இயக்கம்: ராஜ் கமல்
உடை வடிவமைப்பு: நவா ராம்போ ராஜ்குமார்
ஸ்டண்ட்: ஆக்ஷன் சந்தோஷ்
மக்கள் தொடர்பு: யுவராஜ்

“அனோமி” திரைவிமர்சனம்

ஒரு விபத்தில் தனது பெற்றோர்களை பறிகொடுத்த பாவனாவும் அவரது தம்பியும் தனிமையில் வசிக்கிறார்கள் பாவனா ஒரு தடவியில் நிபுணராக வேலை செய்கிறார் ஆனாலும் அவரது தம்பி தனது பெற்றோரின் மரணத்திலிருந்து வெளியில் வர முடியாமல் மனதளவில் பாதிக்கப்பட்டு அதற்கானஉலகில் சிகிச்சையில் இருக்கிறார்
இந்த நிலையில் அந்தப் பகுதியில் விசித்திரமான முறையில் பல தற்கொலைகள் நடக்கின்றன, அந்த தற்கொலைகளை தடவியல் நிபுணரான பாவனா அங்கு இருக்கும் நிகழ்வுகளை பார்வையிடுகிறார். அதே நேரத்தில் பாவனாவின் தம்பியும் அதே முறையில் தற்கொலை செய்து கொள்ள அதை விசாரிக்க இறங்குகிறார் பாவனா,
அதே நேரத்தில் மற்றொரு பக்கம் காவல்துறை அதிகாரியாக ரகுமான் அவருக்கு காவல்துறையில் ஏதோ ஒரு மன உளைச்சலில் இருந்து சரிவர வேலை செய்யாமல் இருக்கிறார்.இந்த நிலையில் அவரது உயர் அதிகாரிகள் கூப்பிட்டு அவருக்கு நேர கெடு வைத்து இதற்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்கிறார்கள்.

அதே நேரத்தில் பாவனா தனது தம்பியின் மரணத்தில் சந்தேகப்பட்டு நீதிமன்றத்தில் பல தடயங்களை சமர்ப்பித்து எனது தம்பி தற்கொலை செய்து கொள்ளவில்லை கொலை தான் செய்து கொண்டிருக்கிறார் என அது குறித்து விசாரிக்க வேண்டி மனு தாக்கல் செய்கிறார். கோர்ட்டும் காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறது, இந்த நிலையில் ரகுமானும் பாவனாவும் இணைந்து நடந்த அத்தனை தற்கொலைகளும் தற்கொலை அல்ல கொலை தான் என்பதை எவ்வாறு வெளிக்கொண்டு வருகிறார்கள் என்பதை இந்த அனோமி படத்தின் திரைக்கதை.

இந்தப் படத்தின் மிகப்பெரிய வளமை திரைக்கதை தான் அந்த சைக்கோ கொலைகாரன் ஏன் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களை தேர்ந்தெடுத்து கொலை செய்கிறான் அதற்குப் பின்னணி என்ன என்பதை சொல்ல வரும்போது நமக்கே சற்று பயமாக தான் இருக்கிறது ஆனாலும் அந்த விஷயத்தை திரைக்கதையில் இன்னும் ஆழமாக சொல்லி இருந்தால் திரைக்கதை ஒரு முழுமையான ட்ரெயின் திரில்லராக இருந்திருக்கும் அந்த விஷயத்தில் இயக்குனர் சற்று தொய்வடைந்து இருக்கிறார்

படத்தில் பாவனாவின் நடிப்பு அளவாக இருக்கிறது ரகுமானின் நடிப்பை வீணடித்திருக்கிறார்கள் மற்றும் பாவனாவின் தம்பி கொலைகாரர்கள் என அனைவரும் தங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரங்களை செய்திருக்கிறார்கள்
இந்த மாதிரியான கிரைம் திரில்லர் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு இசையமை மிகவும் பலமாக இருக்கும் ஆனால் இது அதுவும் சற்றே தொலைவாக தான் இருக்கிறது மேற்கண்ட பல விஷயங்களை இயக்குனர் சிறப்பாக கவனித்து இருந்தால் அனோமி ஒரு உணர்வுபூர்வமான க்ரைம் திரிலராக வந்திருக்கும்

‘லீடர்’ படத்தின் டீசர் வெளியீடு…..

‘லீடர்’ டீசருக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பிற்கு இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் ரசிகர்களுக்கு நன்றி; படம் ஏப்ரலில் வெளியாகி அனைவரையும் பிரமிக்க வைக்கும் என்று உறுதி

லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘லீடர்’ படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம் சென்னை கமலா திரையங்கில் வியாழக்கிழமை படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பங்கேற்க விமரிசையாக நடைபெற்றது. சமூக ஊடக தளங்களில் டீசர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிரபல இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வரும் ஏப்ரல் மாதம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ‘லீடர்’ வெளியாகிறது.

ஒரு நிமிடம் 21 நொடிகள் ஓடும் டீசரில் இடம் பெற்றுள்ள லெஜெண்ட் சரவணனின் அதிரடி சண்டைக்காட்சிகள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளதோடு, சமூக ஊடக தளங்களில் பலத்த பாராட்டுகளை குவித்துள்ளன. படத்தின் மீதான எதிர்பார்ப்பை டீசர் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

படத்தைப் பற்றிப் பேசிய இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார், “அசாதாரண சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் ஒரு சாதாரண மனிதனின் உணர்ச்சிப் பயணம் தான் லீடர். தனது மகளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் துணியும் ஒரு தந்தையை சுற்றி கதை சுழல்கிறது. இன்றைய பார்வையாளர்களை மனதில் கொண்டு, சிலிர்ப்பூட்டும் உணர்ச்சிபூர்வமான படமாக இதை உருவாக்கி உள்ளோம். டீசர் ஒரு சாம்பிள் மட்டுமே; படத்தில் இன்னும் நிறைய இருக்கிறது. முதல் பார்வை மற்றும் கிளிம்ப்சுக்கு கிடைத்த அமோக வரவேற்பளித்த ரசிகர்கள் டீசரையும் பாராட்டி வருகிறார்கள், அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. ‘லீடர்’ அனைவரையும் கவரும் என்று நம்புகிறேன்,” என்றார்.

இந்தப் படத்தில் பாயல் ராஜ்புத் கதாநாயகியாக நடிக்கிறார், ஷாம், ஆண்ட்ரியா ஜெரேமியா, லால், பிரபாகர், அம்ரிதா ஐயர், விடிவி கணேஷ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ஜிப்ரான் வைபோதாவின் இதயம் தொடும் இசை, ஒளிப்பதிவாளர் எஸ். வெங்கடேஷின் அற்புதமான கேமரா கோணங்கள், பிரதீப் இ. ராகவின் விறுவிறு படத்தொகுப்பு மற்றும் மகேஷ் மேத்யூவின் பரபரப்பான சண்டை காட்சிகளுடன், ஆக்‌ஷன், சஸ்பென்ஸ் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த முழுமையான படமாக, ‘லீடர்’ இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

தூத்துக்குடி, ஜெய்ப்பூர், ஊட்டி, ஜார்ஜியா மற்றும் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் படமாக்கப்பட்ட ‘லீடர்’ ஏப்ரல் மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும்.

Dr. Mohan’s Diabetes Specialities Centre Launches Genomic Lifestyle Counselling (GLC) – Marking a New Era in Precision Medicine

Chennai, March 7, 2026: Dr. Mohan’s Diabetes Specialities Centre, one of Asia’s largest and most respected diabetes care networks today announced the launch of its Genomic Lifestyle Counselling (GLC) program, a pioneering initiative designed to integrate genetic insights with personalized lifestyle interventions for the prevention and management of metabolic diseases.

Speaking at the launch, Dr. V. Mohan, Chairman emphasized that healthcare is rapidly transitioning from a generalized approach to precision-based care. He stated that genomic science now enables clinicians to understand individual susceptibility to conditions such as Type 2 diabetes, obesity, and cardiovascular disease. By leveraging genetic profiling, interventions can be tailored with greater accuracy, improving outcomes and long-term disease prevention.

Dr. Mohan highlighted that India faces a significant and growing burden of diabetes and obesity. Innovative strategies like Genomic Lifestyle Counselling represent a critical step towards predictive, preventive and personalized healthcare.

Dr. R. M. Anjana, Managing Director elaborated on the scientific framework of the GLC program. She explained that the model combines genomic risk assessment with structured lifestyle modification plans, including diet optimization, physical activity recommendations, and behavioural guidance. The goal is to provide patients with actionable, evidence-based strategies aligned with their genetic predispositions.

Dr. Anjana noted that this approach strengthens early risk identification and empowers individuals to make informed decisions to delay or prevent the onset of metabolic disorders.

Dr. Geeta Dharmatti, Nutrigenomic Counsellor detailed the practical implementation of GLC. She explained how nutrigenomics enables customized dietary planning based on gene–nutrient interactions, ensuring that nutrition advice is scientifically aligned with an individual’s metabolic profile. The program also integrates continuous counselling support to enhance adherence and measurable health outcomes.

The launch of Genomic Lifestyle Counselling reinforces Dr. Mohan’s Diabetes Specialities Centre’s commitment for over 35 years to research-driven innovation and comprehensive diabetes care. By embedding precision medicine principles into routine clinical practice, the institution aims to redefine preventive healthcare standards in India.

For more details, call 8939110000 or visit www.drmohans.com