“ஆர்யன்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, இயக்குநர் பிரவீன் K இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் இணைந்து நடிக்க, இன்வஸ்டிகேடிவ் திரில்லராக, கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “ஆர்யன்”.

விமர்சகர்கள் பாராட்டில் மற்றும் ரசிகர்களின் பெரும் வரவேற்பில், இப்படம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

இதனைத்தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து, அவர்களுடன் உரையாடி, படத்திற்கு ஆதரவளித்ததற்கு நன்றி தெரிவித்தனர்.

இந்நிகழ்வினில்

எடிட்டர் சான் லோகேஷ் பேசியதாவது..,
ஆர்யன் படத்திற்குத் தந்த பாராட்டுக்களுக்கும் நல்ல விமர்சனங்களுக்கும் நன்றி. அனைவருக்கும் நன்றி.

இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசியதாவது..,
ஒரு திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது இப்போதைய நிலையில் மிகவும் முக்கியம். ஆர்யன் படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்ததற்குப் பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி. இப்படத்தில் மியூசிக்கில் ஒரு புதுவிதமான முயற்சி செய்தோம். ஒன்று பாராட்டுவார்கள், இல்லை திட்டுவார்கள் என நினைத்தோம். அனைவரும் புதிய முயற்சியைக் குறிப்பிட்டுப் பாராட்டினீர்கள் நன்றி. இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்த பிரவீனுக்கு நன்றி. விஷ்ணுவைப் பற்றி சொல்ல வேண்டும். அவர் அர்ப்பணிப்பு பிரமிப்பானது. எப்போது கூப்பிட்டாலும் தயாராகவே இருப்பார். சினிமாவை நேசிக்கும் அவருக்கு வாழ்த்துக்கள். அனைவருக்கும் நன்றி.

நடிகை மானசா சௌத்திரி பேசியதாவது..,
மிகப்பெரிய அன்பைத் தந்த பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. அனிதா என் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான ரோல், இந்த வாய்ப்பைத் தந்த பிரவீன் சாருக்கு நன்றி. விஷ்ணு சாருடன் நடித்தது மிகச்சிறந்த அனுபவம் அவருக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.

நடிகை ஷ்ரத்தா ஶ்ரீநாத் பேசியதாவது..,
இப்படத்தின் மீது நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. நம்பிக்கை இருந்தது. இந்த அளவு பாராட்டுக்கள் எதிர்பார்க்கவில்லை. நல்ல கதை ஜெயிக்கும் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டீர்கள். எல்லாவற்றையும் இணைத்த இந்த யுனிவர்ஸுக்கு நன்றி. இந்த மூன்று வருடத்தில் பல தடைகள் வந்தாலும், நாங்கள் நினைத்த திரைப்படத்தை கொண்டுவர முடிந்தது. பிரவீன் முதல் படத்திலேயே தன் திறமையை நிரூபித்துவிட்டார். விஷ்ணு மிகப் பொறுமையாக இருந்து இப்படத்தை உருவாக்கினார். ஆர்யன் படத்திற்கும், டயானா பாத்திரத்திற்காகவும், விஷ்ணுவிற்கு நன்றி. எல்லோருக்கும் நன்றி.

இயக்குநர் பிரவீன் பேசியதாவது..,
இப்படத்தைத் திரையரங்கில் சென்று பார்த்த அனைவருக்கும் நன்றி. இப்படத்திற்கு முழு ஆதரவைத் தந்த பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. இந்த வாய்ப்புக்கும் உடன் இருந்ததற்கும் விஷ்ணுவிற்கு நன்றி. படத்தின் நடிகர்கள் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.

நடிகர், இயக்குநர் செல்வராகவன் பேசியதாவது..,
நல்ல படம் எடு, நாங்கள் கொண்டு போய் சேர்க்கிறோம் என செயல்பட்டு வரும் பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. யாருமே கண்டுகொள்ளாத துள்ளுவதோ இளமை எனும் முதல் படத்திலிருந்து என்னைத் தூக்கிப்பிடித்து, இப்போது வரை ஆதரவளித்து வருகிறீர்கள், அதற்கு நன்றி. விஷ்ணு மற்றும் பிரவீன் அவர்களின் பரந்த மனதிற்கும் அன்பிற்கும் நன்றி.

நடிகர், தயாரிப்பாளர் விஷ்ணு விஷால் பேசியதாவது ..,
ஆர்யன் எனக்கும் மிகவும் ஸ்பெஷலான படம். என்னுடைய மகனின் பெயரில் எடுத்த படம். விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸில் எடுத்த மூன்றாவது தொடர் வெற்றிப்படம் . இது தமிழ் சினிமாவில் மிகவும் அரிது. என் மகனும் படம் பார்த்து மிகவும் சந்தோசப்பட்டார். படம் பார்த்துவிட்டு என்னைக் கட்டிப்பிடித்தார், அது எனக்கு மிகப்பெரிய விருது. 2023 ரிலீஸ் தேதி வைத்துவிட்டு இந்தப்படம் ஆரம்பித்தோம், ஆனால் சில காரணங்களால் அது தள்ளிப்போனது. ஆனால் இந்த இடைவெளியில் முழு உழைப்பைத் தந்து, இயக்குநர் பிரவீன் மிகப்புதுமையான படத்தைத் தந்துள்ளார். இந்தப்படத்தைப் பற்றி சில மாறுபட்ட கருத்துகளும் வந்தது, என்ன கிளைமாக்ஸ் வைப்பது என எங்களுக்குள் நிறைய விவாதங்கள் நடந்தது. அது பற்றிய விமர்சனங்கள் எங்களுக்கு உதவியாக இருந்தது. இனி படம் பார்ப்பவர்கள் புது க்ளைமாக்ஸை பார்ப்பார்கள், அது தான் பிரவீன் வைத்திருந்த கிளைமாக்ஸ். என் படங்கள் திரையரங்கத்தைத் தாண்டி ஓடிடியில் நல்ல வெற்றி பெறுகிறது. இது படத்திற்குப் படம் மாறுபடும். ஆர்யன் படமும் ஓடிடியில் நல்ல வரவேற்பைப் பெறும். தியேட்டரிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. என் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய ஓபனிங் இந்த படம் தான். இந்தப்படத்தில் எடிட்டிங் மிக முக்கியம் அதை சான் லோகேஷ் சிறப்பாக செய்தார். ஜிப்ரான் சார் கடைசியில் தான் வந்தார், இப்போது மாற்றிய க்ளைமாக்ஸுக்கு கூட மீண்டும் சிறப்பாக வேலை செய்து தந்தார். மானசா சௌத்திரி தந்த ஒத்துழைப்புக்கு நன்றி. நான் வேலை பார்த்ததில் என்னுடைய ஃபேவரைட் நடிகை ஷ்ரத்தா. மிக வித்தியாசமானவர். நிறைய சினிமா பற்றிப் பேசுவோம் அவருக்கு நன்றி. செல்வா சார் இப்படத்தில் நடிக்கப்போகிறார் என்பதே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. அவர் நடிப்பு பிரமிப்பைத் தந்தது. சைக்கோவிற்கு இருக்கும் வரைமுறைகளை தன் நடிப்பால் உழைத்துள்ளார். நான் எதிர்பார்த்ததை விட 2000 மடங்கு சிறப்பான உழைப்பத் தந்துள்ளார். இயக்க்குநர்பிரவீனை இவ்வளவு காலம் காக்க வைத்தற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அடுத்த படம் விரைவாகச் செய்ய வாழ்த்துக்கள். கட்டா குஸ்தி 2 விரைவில் வருகிறது. என் தம்பியுடன் ஒரு படம் செய்யவுள்ளேன், இயக்குநர் அருண்ராஜா காமராஜுடன் ஒரு படம் செய்கிறேன். அடுத்தடுத்து உங்களுக்குப் பிடித்த மாதிரி படங்கள் செய்வேன். அனைவருக்கும் நன்றி.

நடிகர் விஷ்ணு விஷால், ராட்சசன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு மீண்டும் போலீஸ் கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். இவருடன் இயக்குநர் செல்வராகவன் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சௌத்திரி முக்கிய பாத்திரத்தில் நடிக்க, உடன் சாய் ரோனக், தாரக் பொன்னப்பா, மாலா பார்வதி, அவினாஷ், அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

புதுமையான திரைக்கதையில் பரபரப்பான ஆக்சன் இன்வடிகேடிவ் திரில்லரான இப்படத்தை இயக்குநர் பிரவீன் K இயக்கியுள்ளார். விஷ்ணு விஷால் நடித்த “எஃப்.ஐ.ஆர்” படத்தை இயக்கிய மனு ஆனந்த், இந்த படத்தில் இணை எழுத்தாளராக பணியாற்றியுள்ளார்.

புதிய கிளைமாக்ஸுடன் ரசிகர்களின் வரவேற்பில் ஆர்யன் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

தொழில்நுட்ப குழு விபரம்
தயாரிப்பு – விஷ்ணு விஷால் (விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்)
எழுத்து இயக்கம் – பிரவீன் K
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

யாழ்ப்பாணத்தில் “மில்லர்” திரைப்பட தொடக்க விழா:

யாழ்ப்பாணத்தில் “மில்லர்” திரைப்பட தொடக்க விழா:
கவிதையால் கர்ஜித்த பொத்துவில் அஸ்மின்; கண்டு ரசித்த கவிப்பேரரசு வைரமுத்து.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற “மில்லர்” திரைப்படத்தின் தொடக்க விழாவில், பிரபல இலங்கைத் தமிழ் கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான பொத்துவில் அஸ்மின், கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் முன்னிலையில் கவிதை ஆற்றிய சிறப்பை பெற்றார்.

IBC நிறுவனரும் முன்னணி தொழில் அதிபருமான திரு. பாஸ்கரன் கந்தையா அவர்கள் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்தின் தொடக்க நிகழ்வு, அண்மையில் யாழ் வலம்புரி ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் தென்னிந்திய திரைப்படத் துறையின் முக்கிய பிரமுகர்களான இயக்குநர் பாண்டிராஜ், “மஹாராஜா” இயக்குநர் நித்திலன், நடிகர் ரஞ்சித், நடிகர் & இயக்குநர் சிங்கம்புலி, தயாரிப்பாளர் பி. எல். தேனப்பன்
ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இலங்கைத் தமிழ் திரைப்படத் துறை, ஊடகத் துறை மற்றும் கலையுலகின் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் தனது கவிதையை ஆற்றிய பொத்துவில் அஸ்மின், “வைரமுத்து என் தாய்” என்ற மகுடத்தில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு சமர்ப்பித்த வாழ்த்துக் கவிதை, பார்வையாளர்களின் மிகுந்த பாராட்டைப் பெற்றது.

இந்நிகழ்வை குறித்து பேசும்போது பொத்துவில் அஸ்மின் தெரிவித்தாவது.

“கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை நேரில் காண வேண்டும் என்பது பலரின் கனவு.
ஆனால் அவர்முன் நின்று கவிதை பாடும் பாக்கியம் — நான் பெற்ற வரம் என்பேன்.

எனது சிறிய வயதில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை முதன் முதலாக நான் புத்தகங்கள், ஊடகங்கள் வழியேதான் சந்தித்தேன். அவரின் ‘இதுவரை நான்’ என்ற சுயசரிதை என் வாழ்வையும் இலக்கியப் பாதையையும் வடிவமைத்த முக்கிய நூல். அதன் பிறகு, 2013-ல் வெளிவந்த ‘பாம்புகள் குளிக்கும் நதி’ என்ற எனது கவிதைத் தொகுப்பிற்கு அவர் வழங்கிய வாழ்த்துரை எனக்கு மிகப்பெரிய அங்கீகாரம்.

கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு அவர் தொகுத்த ‘கலைஞர் 100 – கவிதைகள்100 ’ நூலில் என் ‘திருக்குவளை சூரியன்’ என்ற கவிதை இடம்பெற்றுள்ளது.

நான் நேசித்த மாபெரும் கவிஞரின் முன்னிலையில், அவரை பற்றிய கவிதையைப் பாடும் பாக்கியம் கிடைத்தது — இது என் இலக்கிய வாழ்வின் உச்ச அங்கீகாரம். இலங்கையில் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலும் பல இளம் கவிஞர்கள் கூட இதுவொரு கனவு மாதிரியான வாய்ப்பு என்பதை நான் நன்றாக அறிவேன்.”

விழாவை ஏற்பாடு செய்து இந்த அரிய கலைச் சந்திப்பை உருவாக்கிய IBC நிறுவனரும் தொழில் அதிபருமான திரு. கந்தையா பாஸ்கரன் அவர்களுக்கு என் மனம் நிறைந்ந நன்றிகள்” என அவர் தெரிவித்தார்.

கும்கி 2 படத்தின் முதல் சிங்கிள் “பொத்தி “பொத்தி உன்ன வச்சு”

டாக்டர் ஜெயந்திலால் காடா (பென் ஸ்டுடியோஸ்) வழங்கும், இயக்குநர் பிரபு சாலமனின் – கும்கி 2 படத்தின் முதல் சிங்கிள் பொத்தி பொத்தி உன்ன வச்சு பாடல் வெளியீடு.

டாக்டர் ஜெயந்திலால் காடா (பென் ஸ்டுடியோஸ்) வழங்க, தவல் காடா தயாரிப்பில், இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “கும்கி 2” படத்திலிருந்து, “பொத்தி பொத்தி உன்ன வச்சு” எனும் முதல் சிங்கிள் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில், பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற படம் “கும்கி”. 13 வருடங்களைக் கடந்தும், இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் அப்படத்தின் மையத்தை வைத்து, இயக்குநர் பிரபு சாலமன் மீண்டும் கும்கி 2 படத்தை உருவாக்கி வருகிறார்.

ஒரு இளைஞன் மற்றும் ஓர் அற்புதமான யானை இடையேயான தூய்மையான, நிபந்தனையற்ற நட்பைப் பற்றியும், அன்பை பற்றியும் இப்படம் பேசுகிறது.

இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா மென்மையான மெலடி இசை மற்றும் மயக்கும் குரலில், பாடலாசிரியர் மோகன் ராஜின் அற்புத வரிகளில், நேற்று வெளியான “பொத்தி பொத்தி உன்ன வச்சு” பாடல், ஒரு சிறுவனுக்கும் யானைக்குமான உறவை, அன்பை, அழகாக வெளிப்படுத்துகிறது.

ஒளிப்பதிவாளர் எம். சுகுமார் அவர்களின் கண்களை குளுமையாக்கும் காட்சிகளும், நிவாஸ் கே பிரசன்னாவின் சொக்க வைக்கும் இசை, யானையோடு விளையாடும் சிறுவனின் கள்ளம் கபடமற்ற அன்பு, இயற்கை எழில் கொஞ்சும் காடு என, இப்பாடல் பார்த்தவுடன் மனதை பறிக்கிறது. வெளியான வேகத்தில் இப்பாடல் இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இப்படத்தில் மதி எனும் அறிமுக நடிகர் நாயகனாக நடித்துள்ளார். காட்டிலும், யானையுடனும் வெகு துணிச்சலாக நடித்து முதல் படத்திலேயே கவர்ந்திழுக்கிறார். அவருடன் இப்படத்தில் ஸ்ரீதா ராவ், ஆண்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ், ஆகாஷ், ஹரீஷ் பெரடி, ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர்.

டாக்டர் ஜெயந்திலால் காடா (பென் ஸ்டுடியோஸ்) வழங்க, தவல் காடா தயாரிப்பில் உருவாகும் கும்கி 2, திரைப்படம் ரசிகர்களையும் புதிய தலைமுறையையும் கவரும் நோக்கில் விரைவில் திரைக்க்கு வரவுள்ளது.

தொழில்நுட்பக் குழு:

இயக்கம் – பிரபு சாலமன்
தயாரிப்பாளர்கள் – டாக்டர் ஜெயந்திலால் காடா, தவல் காடா
இசை – நிவாஸ் கே. பிரசன்னா
ஒளிப்பதிவு – எம். சுகுமார்
எடிட்டிங் – புவன்
கலை இயக்கம் – விஜய் தென்னரசு
சண்டை அமைப்பு – ஸ்டண்ட் சிவா
ஆடை அலங்காரம் – வி.பி. செந்தில் அழகன்
தயாரிப்பு நிர்வாகம் – ஜே. பிரபாகர்
ஸ்டில்ஸ் – சிவா
புரமோஷன் – சினிமாபையன்
மக்கள் தொடர்பு – யுவராஜ்

Link – https://www.youtube.com/watch?v=hqUBThejZk8

ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025 கொண்டாடும், ஆங்கில ஆந்தம் பாடலை பாடியுள்ளார் ஆண்ட்ரியா ஜெரேமியா !!

ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025ற்கான அதிகாரப்பூர்வ கீதமான “ப்ரிங் இட் ஹோம் (Bring It Home)” பாடலின் ஆங்கில பதிப்பை புகழ்பெற்ற இந்திய பின்னணிப் பாடகி, நடிகை மற்றும் கலைஞர் ஆண்ட்ரியா ஜெரேமியா பாடியுள்ளார். வலிமையான குரல், உணர்ச்சிபூர்வமான நடிப்பு மற்றும் பன்மொழி இசை திறமைக்காக பெயர் பெற்ற ஆண்ட்ரியா, இந்த உலகளாவிய கீதத்துக்கு தனது குரல் மூலம், தனித்துவமான ஆன்மீகத் தொனி, உற்சாகம் மற்றும் நவீன மெருகை வழங்கியுள்ளார்.

பெரும் ஆற்றல், அசத்தும் ராகம் மற்றும் உணர்ச்சி கலந்த இந்த “ப்ரிங் இட் ஹோம்” பாடல், உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை ஒருமுகப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இது மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளின் தைரியம், ஆர்வம் மற்றும் விடாமுயற்சியை கொண்டாடுகிறது. பாடலை நகுல் அபயங்கர் (Nakul Abhyankar) இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை ஆண்ட்ரியா ஜெரேமியா மற்றும் நஸீப் முகம்மது எழுதியுள்ளனர். ஆங்கில வரிகளுடன் இணைந்த “தரிகிட்ட தரிகிட்ட தரிகிட்ட தோம்” ( Tarikita Tarikita Tarikita Dhom ) என்ற இந்திய பாணி ஹுக் மற்றும் “தக் தக், வீ ப்ரிங் இட் ஹோம்” (Dhak Dhak, we bring it home) என்ற உருக்கமான பல்லவி இவை அனைத்தும் விளையாட்டின் இதயத் துடிப்பையும், வீராங்கனைகளின் உறுதியையும் பிரதிபலிக்கின்றன.

ஆண்ட்ரியாவின் துடிப்பான குரல் மற்றும் நவீன பாப்-ராக் பாணி, இந்த பாடலுக்கு உலகளாவிய அழகை அளிக்கின்றன, அதேசமயம் இந்திய வேர்களும் வலுவாக இணைந்திருக்கின்றன. அவரது குரலில் கிரிக்கெட்டின் உறுதியும் அழகும் வெளிப்படுகின்றன — விளையாட்டரங்கிலும் அதற்குப் பின்னாலுமான கோடிக்கணக்கான ரசிகர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கின்றன. வெற்றி, நோக்கம் மற்றும் கனவுகளை நனவாக்கும் முயற்சியை கொண்டாடும் பாடல் வரிகள், ஆண்ட்ரியாவின் நுணுக்கமான குரல் ஆற்றலால் மேலும் அழகாகியுள்ளது.

இந்த பாடலின் வெளியீடு விளையாட்டு உலகில் ஒரு முக்கியமான கொண்டாட்டக் கணமாக அமைந்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC), 2025 செப்டம்பர் 30 அன்று “ப்ரிங் இட் ஹோம்” பாடலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. நவம்பர் 2, 2025 அன்று நடைபெறவுள்ள மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கான தயாரிப்பில் இது ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்த கீதம் போட்டிக்கும், மேலும் மகளிர் கிரிக்கெட்டின் வளர்ந்து வரும் மரபுக்கும் உலகளாவிய அங்கீகாரத்திற்கும் கௌரவம் சேர்க்கிறது.

இந்த பாடலை பாடியது குறித்து ஆண்ட்ரியா ஜெரேமியா கூறும்போது..,
“இது ஒரு பாடல் மட்டுமல்ல — பெரிய கனவு காணும், கடினமாகப் போராடும், வெற்றியை வீட்டுக்கு கொண்டு வரும் ஒவ்வொரு பெண்ணிற்குமான கொண்டாட்டம்.” என்றார்.

“ப்ரிங் இட் ஹோம்” பாடல் இப்போது கிரிக்கெட்டின் கீதமாக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் -அப்ஸ்’ (A Fairy Tale for Grown-Ups)— முதலில் அறிவித்தபடியே மார்ச் 19, 2026 அன்று திரையரங்குகளில்

அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி! ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும்  ‘டாக்ஸிக்(Toxic): எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் -அப்ஸ்’ (A Fairy Tale for Grown-Ups)— முதலில் அறிவித்தபடியே மார்ச் 19, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது !

அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் அதிரடி-டிராமா திரைப்படமான ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, முதலில் அறிவித்தபடியே. 2026 மார்ச் 19 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக, அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. படத்தின் வெளியீடு தாமதமாகும் என பரவிய வதந்திகளுக்குப் பின்னர், திரைப்பட வர்த்தக நிபுணர் தரண் ஆதர்ஷ் தயாரிப்புக் குழுவிடம் உறுதிப்படுத்திக் கொண்டு,  சமூக வலைதளத்தில் தெளிவான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தயாரிப்பு தரப்புடன் பேசியபின், தரண்..,
படம் திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாகவும், போஸ்ட்-புரடக்சன் மற்றும் VFX பணிகள் ஏப்ரல் மாதமே தொடங்கியதாகவும், அதே சமயத்தில் யாஷ் மும்பையில் ‘ராமாயணா’ படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்ததாகவும் கூறியுள்ளார்.

தற்போது ‘டாக்ஸிக்’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு பெங்களூருவில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 2026 ஜனவரியில் படத்தின் முழு அளவிலான புரமோசன் பணிகள் துவங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ToxicTheMovie — உலகளாவிய வெளியீடு 19-03-2026” என்று பதிவிட்டு வெளியீட்டு தேதியை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இதையடுத்து, தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான KVN Productions, சமூக வலைதளத்தில் “140 நாட்கள் மட்டுமே மீதமிருக்கிறது…
His Untamed Presence,
Is Your Existential Crisis.படம் வெளியாகும் தேதி முக்கியமான பண்டிகை காலமாகும் — குடி பாட்வா(Gudi Padwa), உகாதி (Ugadi) மற்றும் பல பிராந்திய புத்தாண்டு கொண்டாட்டங்களுடன், அதனைத் தொடர்ந்து ஈத்  பண்டிகையும் வருவதால், பாக்ஸ் ஆபிஸில் நான்கு நாள் நீண்ட பண்டிகை வாய்ப்பு உருவாகியுள்ளது. KGF-க்குப் பிறகு யாஷ் மீண்டும் திரைக்கு வருவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை பல மடங்கு ஏற்படுத்தியுள்ளது.
கீத்து மோகன்தாஸ் (Geetu Mohandas) இயக்கத்தில் உருவாகும் இப்படம் ஆங்கிலம் மற்றும் கன்னடம் ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு, இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகவுள்ளது.
வெங்கட் K. நாராயணா மற்றும் யாஷ் இணைந்து KVN Productions மற்றும் Monster Mind Creations நிறுவனங்களின் சார்பில் தயாரிக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, வரவிருக்கும் பண்டிகை சீசனில் தேசிய மற்றும் உலகளாவிய அளவில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கத் தயாராகி வருகிறது.

“ரோஜா மல்லி கனகாம்பரம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

கே.பி.ஜெகன் எழுதி, இயக்கி, நடிக்கும் ரோஜா மல்லி கனகாம்பரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளனர்!

‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’ மற்றும் ‘என் ஆளோட செருப்ப காணோம்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கே. பி. ஜெகன் உண்மை சம்பவத்தை தழுவி எழுதி இயக்கும் ‘ரோஜா மல்லி கனகாம்பரம்’ எனும் திரைப்படத்தில் அவர் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் விஜய் வர்மா, சங்கீதா கல்யாண், பிச்சைக்காரன் மூர்த்தி, தியா, ரஞ்சித் வேலாயுதன், வெற்றிவேல் ராஜா, திண்டுக்கல் அலெக்ஸ், உறியடி ஷங்கர் மற்றும் பலரும் நடிக்கிறார்கள்.

தேசிய விருது பெற்ற எம் எஸ் பாஸ்கர் முக்கியமான பாத்திரத்தில் தோன்றியிருக்கிறார்.

இப்படத்தை பற்றி இயக்குனர் கே பி ஜெகன் கூறியதாவது :

ரோஜா மல்லி கனகாம்பரம் படத்தில் மூன்று கதைகள் ஓர் நேர்கோட்டில் பயணிப்பது தான் திரைக்கதையின் சுவாரஸ்யம். ஒவ்வொரு கதை களத்திற்கும், ஒரு பாடல் என்ற விதத்தில் மூன்று பாடல்களும், மூன்று கதைகளையும் இணைக்கும் இடத்தில் நான்காவதாக ஒரு பாடலும் இடம் பெறுகிறது. பாடல்களுக்கும், பின்னணி இசைக்கும் முக்கியத்துவம் நிறைந்த படமாக இது இருக்கும்.

பிக் பாஸ் சீசன் 7ல் பங்கேற்ற போட்டியாளரில் ஒருவரான விஜய் வர்மா இப்படத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சங்கீதா கல்யாண் நடிக்கிறார். இவர் வடம் படத்தில் விமலுக்கு ஜோடியாக நடிக்கிறார். மூன்று கதைகளில் ஒரு கதையில் இவர்கள் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு, திருச்செந்தூர், தூத்துக்குடி, மணப்பாடு மற்றும் குலசேகரப்பட்டணம் ஆகிய இடங்களில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டது. இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நவம்பர் மாதத்தில் நிறைவு பெறும்.

மாயாண்டி குடும்பத்தார் என்ற காலத்தால் அழியாத சிறந்த படத்தை தயாரித்த யுனைடெட் நிறுவனம், தனது இரண்டாவது படைப்பாக இப்படத்தை பெருமையுடன் தயாரிக்கிறது.

மேலும், ரோஜா மல்லி கனகாம்பரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு நிறுவனம் – யுனைடெட் ஆர்ட்ஸ்
தயாரிப்பு – எஸ். கே. செல்வகுமார் B. E.,
எழுத்து & இயக்கம் – கே. பி. ஜெகன்
ஒளிப்பதிவு (DOP) – சுகசெல்வம்
இசையமைப்பாளர் – ஸ்ரீகாந்த் தேவா
படத்தொகுப்பு – மணிகண்டன் சிவகுமார்
கலை இயக்கம் – வீரசமர்.
பாடல் வரிகள் – கார்த்திக் நேத்தா,
திரை வண்ணன், சக்தி (USA)
நடன அமைப்பாளர் – ரிஷி
உடை வடிவமைப்பாளர் – கே. நடராஜ்
தயாரிப்பு நிர்வாகி – பாஸ்கர்
தயாரிப்பு கட்டுப்பாட்டாளர் – ராமதாஸ்
நிர்வாக தயாரிப்பாளர் – சாமுவேல் சிவராஜ்
மக்கள் தொடர்பு – யுவராஜ்

SRM Prime Opens GI and Liver Institute with South India’s Most Advanced Endoscopy Unit

Chennai, November 03, 2025: SRM Prime Hospital, Ramapuram, a leading multispecialty hospital in the city, has launched the SRM Prime Institute of Gastrointestinal and Liver Diseases, an exclusive centre featuring South India’s most advanced endoscopy unit to offers comprehensive gastroenterology services and precision-driven digestive care for patients across all age groups.

Tamil film actor R. Parthiban inaugurated the institute in the presence of Mr. P. Siva, Chief Executive Officer, Dr. Arulprakash, Clinical Lead & Senior Consultant – Gastroenterology and Hepatology, Dr. Tharun J George, Senior Consultant – Gastroenterology and Hepatology, SRM Prime Hospital, Ramapuram, Chennai.

Led by a team of expert gastroenterologists, the newly launched institute features cutting-edge equipment such as the Arietta 750 and EP-8000 endoscopic ultrasound systems, offering high-resolution imaging with the Olympus X1 platform. These advanced systems enable precision-guided, minimally invasive procedures for gastrointestinal and liver diseases. The introduction of the Slim Therapeutic Endoscope EG-840TP further enhances procedural manoeuvrability, ensuring accurate diagnosis, effective treatment, and faster recovery.

Speaking on the occasion, Mr. P. Siva said: “At SRM Prime Hospital, our vision is to deliver comprehensive digestive care under one roof—combining world-class technology with a highly skilled team of gastroenterologists and trained nursing staff. With this new institute, we reinforce our position as a centre of excellence in gastroenterology. From advanced imaging and minimally invasive procedures to 24/7 emergency care for GI bleeds and foreign body removals, we remain committed to providing precise, high-quality, and patient-friendly digestive care that meets global standards.”

Dr. Arulprakash added: “The institute offers complete gastroenterology and liver care, addressing diseases of the esophagus, stomach, intestine, gallbladder, pancreas, and liver. Our state-of-the-art endoscopy suites ensure safe and painless procedures using gentle sedation, performed by expert gastroenterologists. We specialise in advanced, minimally invasive endoscopic treatments that eliminate the need for major surgeries and enable faster recovery. Our advanced endoscopic ultrasound, the first of its kind in Tamil Nadu, enables detailed imaging and targeted interventions for complex pancreatic and biliary conditions. Our team also specialises in small bowel endoscopy and GERD endoscopic treatment. Using cutting-edge technology, we are equipped to detect early GI cancers and perform non-surgical removals through advanced techniques such as ESD, EMR, and EFTRD.”

The SRM Prime Institute of Gastrointestinal and Liver Diseases provides advanced, minimally invasive solutions for digestive health—including early gut cancer treatment, swallowing therapy, acid reflux management, and advanced ERCP & Endoscopic Ultrasound–guided interventions for liver and pancreas disorders. It is equipped for the treatment of bile duct and pancreatic stones using advanced cholangioscopy and laser stone fragmentation. The institute also offers bariatric endoscopy options such as Endoscopic Sleeve Gastroplasty (ESG) and Intragastric Balloon therapy for obese patients.

SRM Prime houses a range of specialised clinics, including the Acid Reflux Clinic, Constipation & GI Motility Clinic, Pancreas Clinic, Liver Clinic, Obesity & Metabolic Endoscopy Clinic, and the IBD (Crohn’s & Ulcerative Colitis) Clinic. The institute provides 24/7 gastrointestinal emergency and critical care, handling urgent cases such as GI bleeding, foreign body removal, acute pancreatitis, and liver-related emergencies—ensuring rapid, expert intervention whenever needed.

“45 தி மூவி” — “ஆஃப்ரோ தபாங்” (Afro Tapang) பாடல்

அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த “45 தி மூவி” — “ஆஃப்ரோ தபாங்” (Afro Tapang) பாடல்

“45 தி மூவி” — கருநாட சக்கரவர்த்தி டாக்டர் சிவராஜ்குமார், ரியல் ஸ்டார் உபேந்திரா, மற்றும் இராஜ் பி ஷெட்டி நடிப்பில், அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்டமான திரைப்படம். சுரஜ் புரொடக்‌ஷன்ஸ் பேனரில் திருமதி உமா ரமேஷ் ரெட்டி மற்றும் எம். ரமேஷ் ரெட்டி ஆகியோர் தயாரித்துள்ள இந்த படம், அதன் போஸ்டர்கள் மற்றும் க்ளிம்ப்ஸ்கள் வெளியாகியதிலிருந்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், படக்குழு வெளியிட்ட தனித்துவமான, அதிரடி நடனப்பாடல் “ஆஃப்ரோ தபாங்” (Afro Tapang) ரசிகர்களிடையே இன்னும் அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாடல் ஒரு காடு சூழலில்தான் தொடங்குகிறது — இதில் ராஜ் பி ஷெட்டி மீது நாய்கள் தாக்குதல் நடத்துகின்றன, அவர் ஒரு பள்ளத்தில் விழுகிறார். பின்னர் சில ஆப்பிரிக்க பழங்குடி சிறார்கள் அவருக்கு உதவுகிறார்கள்; அவருடைய உடையை மாற்றி மர்மமாக மறைந்து விடுகிறார்கள். இதற்கிடையில் சிவராஜ்குமார் மற்றும் உபேந்திரா அந்த இடத்துக்குச் செல்கிறார்கள்.

இந்த பாடலுக்கான வரிகள் மற்றும் பாடல் குரல் தமிழ் கானா கலைஞர் கானா காதர் அவர்களால் வழங்கப்பட்டுள்ளன. உற்சாகமான காட்சிகளுடன் இணைந்த ஜானி மாஸ்டர் (Jaani Master) அவர்களின் மின்னல் நடன அமைப்புகள் திரையில் மயக்கும் ஆற்றலை அளிக்கின்றன. சிவராஜ்குமார், உபேந்திரா, மற்றும் ராஜ் பி ஷெட்டியின் அபாரமான திரை முன்னிலை மற்றும் உற்சாகமான ஆட்டம் பாடலை இன்னும் உயர்த்துகிறது.

இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா, இன்றைய இளைய தலைமுறையுடன் ஒத்திசைவாகச் செல்லும் தனித்துவமான, அடிமைபடுத்தும் ரிதமுடன் கூடிய இசையை வழங்கியுள்ளார்.

“45 தி மூவி” படத்தின் அனைத்து பணிகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன, படம் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் சிறப்பு வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.

நடிப்பு: சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் பி ஷெட்டி மற்றும் பலர்

தொழில்நுட்ப குழு:

தயாரிப்பு நிறுவனம்: சுரஜ் புரொடக்‌ஷன்ஸ்
தயாரிப்பாளர்கள்: திருமதி உமா ரமேஷ் ரெட்டி, எம். ரமேஷ் ரெட்டி
கதை, இசை, இயக்கம்: அர்ஜுன் ஜன்யா
ஒளிப்பதிவாளர்: சத்யா ஹெக்டே
எடிட்டர்: கே. எம். பிரகாஷ்
பாடகர்: கானா காதர்
பாடல் வரிகள்: கானா காதர்
ஸ்டண்ட் மாஸ்டர்கள்: டாக்டர் கே. ரவி வர்மா, ஜாலி பாஸ்டியன், டிஃபரென்ட் டேனி, சேதன் டி’சூசா
நடன அமைப்பாளர்: ஜானை பாஷா
உரையாடல்: அனில் குமார்
பிஆர்ஓ: சதீஷ் (AIM)

Song Link 🔗 https://youtu.be/FZNHXXwL0CE

Over 1,000 Participants Come Together for MGM Cancer Institute’s Walkathon for Breast Cancer Awareness

Chennai, November 2, 2025: MGM Cancer Institute hosted “Walk in Pink”, a walkathon to raise breast cancer awareness, attracting over a thousand participants, including hospital staff, healthcare professionals, and students from across the city.

The walkathon began at MGM Cancer Institute on Nelson Manickam Road and concluded at Tower Park, Anna Nagar. Surgeon Commander Mohan Telkatwar, Officers In charge Medical Services, Headquarters, Tamil Nadu & Puducherry Indian Navy Area was among the guests who took part in the event.

Speaking on the occasion, Dr. M A Raja, Director & Senior Consultant-Medical Oncology, MGM Cancer Institute said, “We are committed to promote the need for early detection, preventive care, and the promotion of breast health. We hope that community events like Walk in Pink will go a long way in raising awareness about breast cancer, and its early detection. In India, breast cancer accounts for nearly 30% of all cancers among women. In Tamil Nadu, the age-standardised rate of breast cancer in Chennai is the highest in India. Generally, over 50% of the cases are diagnosed in advanced stages. In this context, there is an urgent need to spread awareness about the early detection of breast cancer and promotion of healthy lifestyle. When detected early, survival rates can exceed 90%.”

He added that as a nation, India has made remarkable progress in the fight against breast cancer, with widespread adoption of advanced screening and diagnostic technologies, and awareness programs reaching millions of women. MGM Cancer Institute has been striving to provide accessible, world-class care for every woman.

In her comments,Dr. Veda Padma Priya, Clinical Lead and Senior Consultant – Breast Oncology, MGM Cancer Institute, said, “Cancer prevention begins with the small choices we make every day. Staying active through simple habits like walking, eating a balanced diet, managing stress, and avoiding polluted environments can go a long way in reducing cancer risk. Each of us has the power to take action within our means, and by doing our bit consistently, we can build healthier lifestyles and stronger communities.”

“ஆரியன்”திரை விமர்சனம்……..

தனியார் டிவி நிருபரான ஷரத்தா ஸ்ரீநாத் தொகுத்து வழங்கும் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், பார்வையாளர்கள் பக்கத்தில் அமர்ந்திருக்கும் செல்வராகவன், திடீரென்று எழுந்து துப்பாக்கி முனையில் அனைவரையும் பிணைக் கைதிகளாக்கி அதிரடியாக அதிர்ச்சியளிக்கிறார்.அவருக்கு என்ன வேண்டும் ? என்று அவரிடம் கேட்டால்,அடுத்த ஐந்து நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒருவர் என்று ஐந்து பேரை கொலை செய்யப் போகிறேன்,என்றும் முடிந்தால் என்னை தடுத்துக் கொள்ளுங்கள், என்று தைரியமா சொல்கிறார்.பிணைக் கைதிகளை காப்பாற்றி விட்டு, செல்வராகவன் மிரட்டல் குறித்து விசாரிக்கும்காவல்துறை, தொடர் கொலைகளை தடுக்க விஷ்ணு விஷால்தலைமையில் குழு ஒன்றை அமைக்கப் படுகிறது. அந்த கொலையாளி செல்வராகவனை பிடிப்பதை விட்டுவிட்டு, அவர்செய்ய இருக்கும் கொலைகளை தடுக்க விஷ்ணு விஷால் முயற்சிக்கிறார். அது

ஏன் ? என்பதை இதுவரை சொல்லப்படாத கோணம்  தான் ‘ இந்த ஆரியன்’.திரைப்படக்
கதைக்களம்.

காவல்துறை சீருடையில் மிடுக்கான தோற்றத்துடன் விஷ்ணு விஷால், முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்திருக்
கிறார்

செல்வராகவன், சைக்கோ கொலையாளியாக பயமுறுத்தவில்லை. தொலைக்காட்சி நிருபராக நடித்துள்ளார். ஷ்ரத்தா ஸ்ரீநாத், விஷ்ணு விஷாலின் மனைவியாக நடித்திருக்கும் மானசா செளத்ரி, கருணாகரன், அவினாஷ் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்

இயக்குநர் பிரவீன்.கே, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, என அனைவரும்

பார்க்க கூடிய ஒரு சைக்கோ திரில்லர் படமாகவும் நமக்கு கொடுத்திருக்கிறார்.

RATTING——-3/5