Chennai, July 31, 2026: In a first-of-its-kind neighbourhood healthcare initiative, SRM Prime Hospital has launched SRM Prime Zone with the aim of making quality medical care much more accessible and affordable for residents living within a 5 km radius of the hospital, through an exclusive card, SRM Prime Card, issued free of cost to each household.
The SRM Prime Zone will benefit residents of Ramapuram, Manapakkam, Porur, Mugalivakkam, Valasaravakkam, KK Nagar, Nesapakkam, and surrounding neighbourhoods, enabling residents to access these healthcare benefits including faster access to advanced medical care, exclusive health privileges, and preventive healthcare services.
The initiative has been inaugurated by the playback singer Mr. Mano, in the presence of Mr. Siva, CEO, Mr. Selva Ramasamy, Vice President, Healthcare Services, Dr. Shrilekha Venkatesan, Assistant Director Medical Services at SRM Prime Hospital, community leaders, and representatives from various Residents’ Welfare Associations.
A major highlight of the initiative is SRM Prime Hospital’s commitment to conduct FREE health screening for 10,000 residents living within the Prime Zone through medical camp. This large-scale preventive healthcare program aims to encourage early diagnosis, improve community health, and promote regular health check-ups.
As part of the launch, SRM Prime has introduced SRM Prime Card, a privilege card with a host of exclusive healthcare benefits, including a limited number of free consultations with specialists across all departments, complimentary diet consultations, 20% discount on blood investigations, and 10% discount on bed charges and pharmacy bills. Cardholders can also benefit from a Buy One, Get One Free offer on the hospital’s Master Health Check-up. They are also eligible for free ambulance pick-up during emergencies if they are located within a 5 km radius of the hospital. In his comments, Mr. Siva said, “At SRM Prime Hospital, Ramapuram, we believe that quality healthcare should be accessible, affordable, preventive, and deeply connected to the community. The launch of SRM Prime Zone and the complimentary SRM Prime Card reflects this commitment by bringing quality healthcare closer to the people we serve. As a key component of our preventive healthcare mission, we are offering FREE health screenings to the first 10,000 residents living within the SRM Prime Zone. In addition, the 10,000 SRM Prime Card holders will enjoy a range of exclusive healthcare benefits, including free specialist consultations, preventive health services, discounts on diagnostics and treatments, and emergency ambulance support. Through this initiative, we hope to encourage families to prioritize preventive care, seek timely medical attention, and adopt healthier lifestyles. Our goal is to build lasting relationships with the community while ensuring that world-class healthcare remains accessible, convenient, and within everyone’s reach.” SRM Prime Hospital is a 300-bed quaternary care multi-specialty hospital committed to delivering world-class healthcare through clinical excellence, cutting-edge technology, and patient-centric care. Equipped with South India’s most advanced MRI system, a state-of-the-art Endoscopy Suite, the da Vinci Xi Robotic surgical system, advanced critical care facilities, and round-the-clock Emergency and Trauma Services, the hospital offers comprehensive, high-quality medical care across a wide range of specialties under one roof.
சசிகுமார் நடிப்பில் பிரைம் வீடியோவின் ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ க்ரைம் இன்வஸ்டிகேசன் திரில்லர் சீரிஸின் டிரெய்லர் வெளியீடு !
ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ள இந்த சீரிஸை வால்வாட்சர் ஃபிலிம்ஸ் சார்பில் புஷ்கர் – காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக தயாரித்துள்ளனர். குற்றவுணர்வு, ரகசியங்கள், வதந்திகள் மற்றும் மீண்டுவரும் உணர்வு ஆகியவற்றை மையமாகக் கொண்ட பரபரப்பான மர்மக் கதையாக வதந்தி சீசன் 2 உருவாகியுள்ளது.
மதுரையை கதைக்களமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த சஸ்பென்ஸ் திரில்லர் சீரிஸில் சசிகுமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் யஷ்வந்த், அனகா மாருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா, அர்ஜுன் நந்தகுமார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
CHENNAI, India—July 31, 2026 — ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும் இந்தி டப்பிங் பதிப்புகளிலும், ஆங்கிலம் உள்ளிட்ட 15 மொழிகளில் சப்டைட்டில்களுடன், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட தனது தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘வதந்தி’யின் அடுத்த அத்தியாயமான ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ யின் விறுவிறுப்பான டிரெய்லரை இன்று வெளியிட்டது.
ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ள இந்த எட்டு எபிசோட்கள் கொண்ட தொடர், புஷ்கர் மற்றும் காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாகவும், வால்வாட்சர் ஃபிலிம்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது. இதில் எம். சசிகுமார் SI மூசா ரஸா கதாபாத்திரத்தில் முன்னணி வேடத்தில் நடித்துள்ளார். அவருடன் யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா மற்றும் அர்ஜுன் நந்தகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ ஆகஸ்ட் 7 முதல் பிரைம் வீடியோவில் தமிழில் வெளியாகிறது. மேலும், தெலுங்கு மற்றும் இந்தி டப்பிங் பதிப்புகளுடனும், ஆங்கிலம் உள்ளிட்ட 15 மொழிகளில் சப்டைட்டில்களுடனும் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படும்.
இந்த டிரெய்லர், ஒரு பதற்றம் நிறைந்த புதிய விசாரணைக்குள் பார்வையாளர்களை அழைத்துச் செல்கிறது. வழக்கின் உண்மையை நெருங்கும் ஒவ்வொரு அடியிலும், அதைவிட இருண்ட மர்மங்கள் வெளிப்படத் தொடங்குகின்றன. மதுரையின் செழுமையான கலாச்சாரப் பின்னணியில், பாரம்பரியமும் புலனாய்வும், ஜல்லிக்கட்டு திருவிழாவின் தீவிரமான சூழலில் கதை நகர்கிறது.
தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணிகள் நடைபெறும் இடத்தில் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்படுவது, நேர்மையும் விடாமுயற்சியும் கொண்ட காவல் அதிகாரியான SI மூசா ரஸாவை, ‘மணி’ என்ற மர்மமான கைதியை பற்றித் தேடும் விசாரணைக்குக் கொண்டு செல்கிறது. ஆரம்பத்தில் சாதாரண கொலை வழக்காகத் தோன்றும் இந்த விசாரணை, பின்னர் பொதுமக்களின் பார்வை, ஊடக பரபரப்பு, அரசியல் மற்றும் மனித பலவீனங்கள் ஆகியவற்றுடன் மோதும் சிக்கலான பயணமாக மாறுகிறது. மூசா உண்மையைத் தேடி ஆழமாகச் செல்லும் போது, புதைக்கப்பட்டிருந்த பல ரகசியங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிப்படுகின்றன. குற்றவுணர்வு, ரகசியங்கள், வதந்திகள் மற்றும் மீட்பு ஆகியவற்றை மையமாகக் கொண்ட இந்த பரபரப்பான கதை, உண்மை என்பது முதலில் தோன்றுவது போல எளிதானதல்ல என்பதை உணர்த்துகிறது.
இந்தத் சீரிஸின், எழுத்தாளர் மற்றும் இயக்குநரான ஆண்ட்ரூ லூயிஸ் கூறுகையில்..
“‘வதந்தி’ சீரிஸின் மையக் கருத்து எப்போதும் நாம் எதை நம்புகிறோம், எத்தகைய சங்கடமான உண்மைகளை நாம் புறக்கணிக்கிறோம் என்பதைக் கேள்விக்குட்படுத்துவதாகவே இருந்துள்ளது. முதல் சீசனுக்கு கிடைத்த ரசிகர்களின் அன்பும் விமர்சகர்களின் பாராட்டும் மிகவும் மகிழ்ச்சி அளித்தது. அதுவே இந்த அடுத்த அத்தியாயத்தை உருவாக்க வழிவகுத்தது. இரண்டாவது சீசனில், ஒரு குற்றத்தை கண்டுபிடிப்பதைத் தாண்டி, அதிகாரம், மௌனம் மற்றும் ஆழமாக வேரூன்றிய அமைப்புகள் நீதியைப் பற்றிய நமது பார்வையை எவ்வாறு வடிவமைக்கின்றன என்பதை ஆராயும் மர்மக் கதையை உருவாக்க விரும்பினேன். மதுரையை கதைக்களமாகத் தேர்வு செய்தது, கலாச்சார வளமும் உணர்ச்சிப் பூர்வமான சூழலையும் கதைக்கு வழங்கியது. சசிகுமார் மற்றும் திறமையான நடிகர்கள் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் நேர்மையையும் ஆழத்தையும் கொண்டு வந்துள்ளனர். புஷ்கர், காயத்ரி மற்றும் பிரைம் வீடியோவுக்கு அவர்களது உறுதியான ஆதரவுக்கும் இந்தக் கதையில் வைத்த நம்பிக்கைக்கும் மனமார்ந்த நன்றி. இந்த மர்மப் பயணத்தை ரசிப்பதோடு, தொடர் முடிந்த பிறகும் அது எழுப்பும் கேள்விகளை பார்வையாளர்கள் சிந்திப்பார்கள் என்று நம்புகிறேன்.” என்றார்.
SI மூசா ரஸா கதாபாத்திரத்தில் நடித்துள்ள எம். சசிகுமார் கூறுகையில், “மூசா ரஸா கதாபாத்திரத்தில் என்னை மிகவும் ஈர்த்தது அவரது அசைக்க முடியாத நேர்மையே. உண்மையின் அடிப்படையில் அமைந்த நீதியே உண்மையான நீதி என்று நம்பும் மனிதர் அவர். அதற்காக தனிப்பட்ட இழப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்தாலும், உண்மையைத் தேடுவதை அவர் நிறுத்தமாட்டார். காவல்துறை சீருடையின் பின்னால் இருக்கும் மனிதனை—அவரது அமைதியான மன உறுதி, பலவீனங்கள் மற்றும் அவரது நம்பிக்கைகளை சோதிக்கும் ஒழுக்கப் போராட்டங்களை—ஆராய்வதே எனக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. விசாரணையின் ஒவ்வொரு கட்டமும் அவரை கடினமான முடிவுகளை எடுக்க வைக்கிறது. அதனால் இது ஒரு மர்மக் கதையாக மட்டுமல்ல, ஆழமான உணர்ச்சிப் பயணமாகவும் மாறியுள்ளது. ஆண்ட்ரூ லூயிஸ், புஷ்கர், காயத்ரி, பிரைம் வீடியோ மற்றும் இந்த அற்புதமான நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவுடன் பணியாற்றியது மிகவும் அருமையான அனுபவமாக இருந்தது. மூசா ரஸாவின் பயணத்துடன் பார்வையாளர்கள் ஒன்றிணைந்து, அவருடன் சேர்ந்து இந்த மர்மத்தை அவிழ்த்து, இறுதி உண்மை வெளிப்பட்ட பிறகும் அந்தக் கதை அவர்களுடன் நீடிக்கும் என்று நம்புகிறேன்.” என்றார்.
மலையாள திரையுலகில் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ ம் கேம்” (I am Game) திரைப்படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியாகியுள்ளது. துல்கர் சல்மானின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கிய இந்த திரைப்படம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 20, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
துல்கர் சல்மானின் Wayfarer Films நிறுவனம் தயாரித்துள்ள இந்த மெகா பட்ஜெட் ஃபேன்டஸி திரில்லர், அவரது திரைப்பயணத்திலேயே மிகப்பெரிய திரைப்படமாக உருவாகியுள்ளது. நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ள இப்படத்தை துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.
சஜிர் பாபா, இஸ்மாயில் அபூபக்கர், பிலால் மொய்து ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ள நிலையில், வசனங்களை சஜிர் பாபா, ஆதர்ஷ் சுகுமாரன், ஷபாஸ் ரஷீத் ஆகியோர் எழுதியுள்ளனர்.
வெளியான டிரெய்லர் தொடக்கம் முதல் இறுதி வரை ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைக்கும் வகையில் அமைந்துள்ளது. கண்கவர் காட்சியமைப்புகள், பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகள், அதிவேக சேஸ் சீக்வென்ஸ்கள் என இதற்கு முன் மலையாள சினிமாவில் அரிதாகக் காணப்பட்ட ஸ்டைலிஷ் ஃபேன்டஸி திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. மேலும், இதுவரை ரசிகர்கள் பார்த்திராத அளவுக்கு ஸ்டைலிஷ் மற்றும் மாஸ் தோற்றத்தில் துல்கர் சல்மான் தோன்றுவது டிரெய்லரின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.
தென்னிந்தியாவின் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இப்படம், மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெளியீடுகளில் ஒன்றாக அமைய உள்ளது. ஏற்கனவே வெளியான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தன.
இப்படத்தின் இசை உரிமையை ஜீ மியூசிக் கைப்பற்றியுள்ளது. இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இப்படத்தின் பின்னணி இசை டிரெய்லரில் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் ஜிம்ஷி காலித் வழங்கியுள்ள காட்சியமைப்புகளும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கின்றன. அதிரடியான சண்டைக் காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் வடிவமைத்துள்ளனர்.
“லோகா” திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு Wayfarer Films தயாரிக்கும் அடுத்த படைப்பாக உருவாகியுள்ள “ஐ ஆம் கேம்”, துல்கர் சல்மானின் 40-வது திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
துல்கர் சல்மானுடன் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாது லோஹர், கதிர், பார்த் திவாரி, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
“RDX” திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கும் அடுத்த திரைப்படமாகவும் இது அமைந்துள்ளது.
“ஐ அம் கேம்” திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் பான்-இந்தியா திரைப்படமாக ஆகஸ்ட் 20-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
தொழில்நுட்ப குழு விவரங்கள்:
லைன் தயாரிப்பாளர்: பிபின் பெரும்பில்லி ஒளிப்பதிவு: ஜிம்ஷி காலித் இசை: ஜேக்ஸ் பிஜாய் எடிட்டிங்: சமன் சாக்கோ தயாரிப்பு நிர்வாகிகள் : சுஜோய் ஜேம்ஸ், தேவதேவன் தயாரிப்பு வடிவமைப்பு: அஜயன் சாலிசேரி மேக்கப்: ரோனெக்ஸ் சேவியர் உடை வடிவமைப்பு: மஷார் ஹம்சா தயாரிப்பு ஒருங்கிணைப்பு : தீபக் பரமேஸ்வரன் உதவி இயக்குநர் : ரோஹித் சந்திரசேகர் பாடல்வரிகள் : மனு மஞ்சித், விநாயக் சசிகுமார் VFX : தௌஃபீக் (எக்வொயிட்) (Eggwhite) போஸ்டர் வடிவமைப்பு: டென் பாயிண்ட் ஒலி வடிவமைப்பு: சிங்க் சினிமா சவுண்ட் மிக்ஸ்: கண்ணன் கணபதி ஸ்டில்ஸ்: எஸ்.பி.கே மார்க்கெட்டிங் தலைவர் : விஜீத் விஸ்வநாதன் மக்கள் தொடர்பு : யுவராஜ்
இசையமைப்பாளர் சைமன் K. கிங், இசைக்கோர்த்து, தயாரித்துள்ள இந்தப் பாடலை சைமன் மற்றும் யஷ்வந்த் இணைந்து பாடியுள்ளனர். துள்ளலான இசையும், உற்சாகமான தாளமும் கொண்ட இந்தப் பாடல், பெரிதும் எதிர்பார்க்கப்படும் இரண்டாவது சீசனுக்கு மேலும் உற்சாகத்தை சேர்க்கிறது.
‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ ஆகஸ்ட் 7 முதல் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக வெளியாகிறது.
பிரைம் வீடியோ மற்றும் டி-சீரிஸ் இணைந்து, விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் த்ரில்லர் சீரிஸான ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’யிலிருந்து புதிய பாடலான ‘தெய்வா’ பாடலை இன்று வெளியிட்டுள்ளன. சைமன் K. கிங் இசையமைத்து, தயாரித்துள்ள இந்தப் பாடலை, சைமன் மற்றும் யஷ்வந்த் இணைந்து பாடியுள்ளனர். மணி ரோமியோ எழுதியுள்ள கவர்ச்சிகரமான வரிகளும், துள்ளலான இசையும் இணைந்து உருவாகியுள்ள இந்தப் பாடல், ரசிகர்கள் கேட்டவுடன் கவரும் வகையில் அமைந்துள்ளது.
இந்தப் பாடலின் வண்ணமயமான மியூசிக் வீடியோ.., உற்சாகமான நடன அமைப்புகள், கலகலப்பான சூழல் மற்றும் நடிகர்களின் சுறுசுறுப்பான தருணங்கள் மூலம் பாடலின் துள்ளலான உணர்வை உயிர்ப்பிக்கிறது. மேலும், இந்தப் பாடல் உருவான விதத்தைப் பின்னணியில் காட்டும் (Behind-the-scenes) காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. படப்பிடிப்பு தளத்தில் நடிகர்கள் மற்றும் குழுவினருக்கிடையேயான நட்பு, மகிழ்ச்சியான தருணங்கள் ஆகியவற்றையும் இந்த வீடியோ பதிவு செய்கிறது. இதனால், ‘தெய்வா’, ‘வதந்தி சீசன் 2’ உலகத்திற்கு உற்சாகம் சேர்க்கும் இசை அனுபவமாக மாறியுள்ளது.
மதுரையின் செழுமையான கலாச்சாரப் பின்னணியையும், உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு திருவிழாவின் ஆற்றல்மிக்க சூழலையும் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’, புதிரும் பரபரப்பும் நிறைந்த புதிய மர்மக் கதையை மையமாகக் கொண்டுள்ளது. நேர்மையான காவல் அதிகாரியான எஸ்.ஐ. மூசா ரஸா (எம். சசிகுமார்), நெடுஞ்சாலைத் திட்ட தொடக்க விழாவின் போது தோண்டியெடுக்கப்படும் மனித எலும்புக்கூட்டின் மர்மத்தை விசாரிக்கிறார். அந்த விசாரணை, மணி என்ற மர்ம கைதியை நோக்கிச் செல்ல, வதந்திகள், ஏமாற்றங்கள் மற்றும் புதைக்கப்பட்ட ரகசியங்கள் நிறைந்த ஆபத்தான வலையில் அவர் சிக்கிக் கொள்கிறார். சீரிஸின் உள்ளூர் கலாச்சார சுவையை பிரதிபலிக்கும் வகையில், ‘தெய்வா’ பாடலும் அதன் துள்ளலான இசை மற்றும் உற்சாகமான தாளங்கள் மூலம் அந்த உலகத்தை உயிர்ப்பிக்கிறது.
ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ள இந்த சீரிஸை, வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில், புஷ்கர் மற்றும் காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக தயாரித்துள்ளனர். எம். சசிகுமார் எஸ்.ஐ. மூசா ரஸா கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த சீரிஸில், யஷ்வந்த், அனகா மாருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா மற்றும் அர்ஜுன் நந்தகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
எட்டு எபிசோடுகள் கொண்ட இந்த சஸ்பென்ஸ் த்ரில்லர், ஆகஸ்ட் 7 முதல் பிரைம் வீடியோவில் தமிழில் பிரத்யேகமாக வெளியாகிறது. மேலும், தெலுங்கு மற்றும் இந்தி மொழி டப்பிங் பதிப்புகளுடன், ஆங்கிலம் உட்பட 15 மொழிகளில் சப்டைட்டில்களுடன் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பார்வையாளர்களுக்குக் கிடைக்கிறது.
‘தெய்வா’ பாடல் தற்போது வெளியாகி, அனைத்து முக்கிய இசை ஸ்ட்ரீமிங் தளங்களிலும் கேட்கக் கிடைக்கிறது
தமிழ் சினிமாவில் பொழுதுபோக்குடன் சமூகத்திற்கு தேவையான கருத்துகளை எடுத்துரைக்கும் திரைப்படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வரிசையில் மருத்துவ உலகின் மறுபக்கத்தை மனிதநேய பார்வையில் பதிவு செய்து மருத்துவ விழிப்புணர்வு, குடும்ப உறவுகள் மற்றும் சமூகப் பொறுப்பை வலியுறுத்தும் புதிய திரைப்படமாக உருவாகியுள்ளது செய் செய்யாதே.
இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான H. ராஜா சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பது திரைப்படத்திற்கு தனித்துவமான கவனத்தை ஈர்த்துள்ளது. கதையின் முக்கியமான கட்டத்தில் இடம்பெறும் அவரது கதாபாத்திரம் படத்தின் கருத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ் (HARINI SUBBU CINE CREATIONS ) தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த பி.எஸ்.சி. நர்சிங் பட்டதாரி சுப்புலட்சுமி ஜெயராம் (SUBBULAKSHMI JEYARAM ) தயாரித்துள்ளார்.
சமூகத்திற்கு பயனுள்ள கருத்துகளை வணிக அம்சங்களுடன் இணைத்து தரமான திரைப்படமாக வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இவர் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இத்திரைப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தை மருத்துவரும் திரைப்பட இயக்குநருமான டாக்டர். எஸ். ராஜா (Dr. S. RAJA) கவனித்துள்ளார். இந்தியா மற்றும் அமெரிக்காவில் மருத்துவத் துறையில் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவத்தை திரைப்பட மொழியுடன் இணைத்து மருத்துவத்தின் முக்கியத்துவத்தை பொதுமக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் சிந்திக்க வைக்கும் படைப்பாக இந்த திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.
கதாநாயகனாக குரு விஜய் மருத்துவ விழிப்புணர்வு, மனிதநேயம் மற்றும் குடும்ப உறவுகளை மையமாகக் கொண்ட கதையின் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். உணர்வுகளும் பொறுப்புணர்வும் கலந்த அவரது கதாபாத்திரம் திரைப்படத்தின் மையக் கருத்தை இயல்பாக முன்னெடுத்துச் செல்கிறது.
இன்றைய சமூகத்தில் உடல்நலப் பிரச்சினைகளை அலட்சியமாக எடுத்துக்கொள்வது, சுயமாக மருந்துகளை பயன்படுத்துவது, இணையத் தகவல்களை மட்டுமே நம்பி மருத்துவ முடிவுகளை எடுப்பது, போதைப்பொருள் மற்றும் மயக்க மருந்துகளின் தவறான பயன்பாடு போன்ற பல்வேறு சவால்கள் அதிகரித்து வருகின்றன. இவற்றை வெறும் அறிவுரைகளாக அல்லாமல் சுவாரஸ்யமான திரைக்கதையின் மூலம் சிந்திக்க வைக்கும் முயற்சியாக செய் செய்யாதே உருவாகியுள்ளது.
இந்த திரைப்படம் மருத்துவர்களைப் பற்றிய கதை மட்டுமல்ல. ஒரு நோயாளியின் வாழ்க்கையைச் சுற்றி இயங்கும் முழு மருத்துவ அமைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் சமூகப் படைப்பாகவும் அமைகிறது. நோயாளி, மருத்துவர், செவிலியர், தூய்மைப் பணியாளர், மருத்துவமனை நிர்வாகம் மற்றும் அரசு சுகாதார அமைப்பு என ஒவ்வொருவரின் பங்களிப்பும் ஒரு உயிரைக் காப்பாற்றுவதில் எவ்வளவு முக்கியமானது என்பதை படம் உணர்வுப்பூர்வமாக பதிவு செய்கிறது.
மருத்துவம் என்பது சிகிச்சை மட்டுமல்ல. அது மனிதநேயம், நம்பிக்கை, பொறுப்பு, கருணை மற்றும் குழு ஒருங்கிணைப்பின் வெளிப்பாடு என்பதையும் திரைப்படம் வலியுறுத்துகிறது.
படத்தின் காட்சிகள் அனைத்தும் மிகவும் பிரம்மாண்டமாகவும் இயல்பாகவும் படமாக்கப்பட்டுள்ளன. இத்திரைப்படம் திருநெல்வேலி, கொடைக்கானல், மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள இயற்கை எழில் கொஞ்சும் வட்டாரங்களில் முழுவீச்சில் படமாக்கப்பட்டு நிறைவடைந்துள்ளது. மேலும் இத்திரைப்படம் ₹4 கோடி பட்ஜெட்டில் மிகத் தரமான தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்போடு பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.
படத்தில் குரு விஜயின் தந்தையாக டாக்டர். எஸ். ராஜா தோன்றுகிறார். அவருக்கு தாயாராக தர்ஷினி ரெட்டி நடித்துள்ள நிலையில் கதாநாயகிகளாக டபிதா குணரத்தினே மற்றும் மோனிகா ப்ரீத்தி வி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் குரு விஜயின் தங்கையாக குழந்தை நட்சத்திரம் பிரதீக்ஷா மனோ பிரஷாந்த் நடித்துள்ளார்.
திரைப்படத்தின் காட்சியமைப்புக்கு ஒளிப்பதிவாளர் ராம்நாடு. வாசு பி தனது ஒளிப்பதிவின் மூலம் தனித்துவமான காட்சியழகை வழங்கியுள்ளார்.
பருத்திவீரன் திரைப்படத்திற்காக தேசிய திரைப்பட விருது பெற்ற முன்னணி படத்தொகுப்பாளர் ராஜா முகமது படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.
இயக்குநர் டாக்டர். எஸ். ராஜா கூறியது ஒரு மருத்துவராக நான் மருத்துவமனையில் பல வாழ்க்கைகளையும், பல உணர்வுகளையும் நேரில் பார்த்திருக்கிறேன். அந்த அனுபவங்களை வெறும் மருத்துவத் தகவல்களாக அல்லாமல் மக்கள் மனதில் எளிதாகப் பதியும் வகையில் சினிமா மூலம் சொல்ல வேண்டும் என்ற எண்ணம்தான் செய் செய்யாதே திரைப்படத்தை உருவாக்கத் தூண்டியது.
இந்த திரைப்படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும் ஒவ்வொரு பார்வையாளரும் ஆரோக்கியம், மனிதநேயம் மற்றும் சமூகப் பொறுப்பு குறித்து சிந்தித்தால் அதுவே இந்தப் படைப்பின் மிகப்பெரிய வெற்றி.
தயாரிப்பு -ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ் (சுப்புலட்சுமி ஜெயராம்)
கதை, திரைக்கதை, வசனம் & இயக்கம்:டாக்டர். எஸ். ராஜா
நடிப்பு: டாக்டர். எஸ். ராஜா, H. ராஜா (சிறப்புத் தோற்றம்), குரு விஜய், தர்ஷினி ரெட்டி, டபிதா குணரத்தினே, மோனிகா ப்ரீத்தி வி, பிரதீக்ஷா மனோ பிரஷாந்த் மற்றும் பலர்.
சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வழங்கும்
ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே
முன்னுரை –
மார்வெல் காமிக்ஸ் உருவாக்கிய சூப்பர்ஹீரோ ஸ்பைடர்-மேனின் மூச்சடைக்க வைக்கும் சாகசங்களை அடிப்படையாகக் கொண்டது இப்படம். இது மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் ஸ்பைடர்-மேன் தொடரின் 4வது படமாகவும், MCU ஸ்பைடர்-மேன் திரைப்பட தொடரின் 38வது படமாகவும் உள்ளது! பீட்டர் பார்க்கர் ஸ்பைடர்-மேன் என்ற ஹீரோவாக நியூயார்க் நகரை அடையாளம் தெரியாமல் பாதுகாக்கிறார், மேலும் தனது சூப்பர் சக்திகள் ஆச்சரியமான மற்றும் ஆபத்தான பரிணாம மாற்றத்திற்கு உட்படும் நிலையில், ஒரு சக்திவாய்ந்த புதிய அச்சுறுத்தலை விசாரிக்கிறார்.
கதைச்சுருக்கம் –
பீட்டர் பார்க்கருக்கு இது ஒரு புத்தம் புதிய நாள். தன்னை நினைவில் வைத்திராத ஒரு உலகில் ஸ்பைடர்-மேனாக முழு நேர குற்றங்களை எதிர்த்துப் போராடும் பீட்டர், தன் பழைய நண்பர்கள் தன்னைத் தாண்டி வாழ்க்கையில் முன்னேறுவதைப் பார்க்கும் அழுத்தத்தால், தன்னால் கட்டுப்படுத்த முடியாத ஒரு மாற்றத்தை சந்திக்கிறார். ஆனால் அந்த மாற்றமே, நகரத்தையும் அவர் நேசிப்பவர்களையும் அச்சுறுத்தும் – யாராலும் பார்க்க முடியாத ஒரு சக்திவாய்ந்த வில்லனை – எதிர்கொள்ள உதவும் ஒரே வழியாக இருக்கலாம். உலகம் பீட்டர் பார்க்கரை மறந்திருக்கலாம், ஆனால் அவர் அவர்களை மறக்கவில்லை.
இயக்கம் – டெஸ்டின் டேனியல் க்ரெட்டன்
நடிகர்கள் – டாம் ஹாலண்ட் (பீட்டர் பார்க்கர்/ஸ்பைடர்-மேன்), ஜெண்டயா, ஜேக்கப் படலான், ஜான் பெர்ன்தால், சேடி சிங்க், மார்க் ரஃபலோ (புரூஸ் பேனர்/ஹல்க்) மற்றும் பலர்
ஸ்டான் லீ மற்றும் ஸ்டீவ் டிட்கோ உருவாக்கிய ஸ்பைடர்-மேனை அடிப்படையாகக் கொண்டது
ஒளிப்பதிவு – பிரெட் பாவ்லக் இசை – மைக்கேல் ஜியாக்கினோ
ஆடை வடிவமைப்பாளர் – சான்யா மில்கோவிக்
சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வெளியீடு
ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் & மலையாளத்தில்
Based on the breath-taking adventures of the super hero, Spider-Man, a character created by Marvel Comics, this is the 4th film in the Marvel Cinematic Universe’s Spider-Man series and the 38th film in the MCU Spider-Man film series! Peter Parker anonymously protects New York City as the hero Spider-Man and investigates a powerful new threat while his superpowers undergo a surprising and potentially dangerous evolution.
SYNOPSIS –
It’s a BRAND NEW DAY for Peter Parker. Fighting crime full-time as Spider-Man in a world that doesn’t remember him—and the pressure of seeing his old friends move on without him—sparks a change in Peter he may not have the power to control. But that transformation might also be the only thing that can stop a shocking new threat to the city and those he loves – a powerful villain no one can even see. The world may have forgotten Peter Parker, but he hasn’t forgotten them.
CREDITS –
Directed by – Destin Daniel Cretton
Cast – Tom Holland as Peter Parker/Spider-Man, Zendaya, Jacob Batalon, Jon Bernthal, Sadie Sink, Mark Ruffalo as Bruce Banner/Hulk etc.
Based on Spider-Man by Stan Lee and Steve Ditko
Cinematography- Brett Pawlak Music –Michael GiacchinoCostume Designer –Sanja Milkovic
வெள்ளித்திரை -சின்னத்திரை- தமிழ் திரை விருதுகள் இனி ஆண்டுதோறும் வழங்கப்படும்’ – அமைச்சர் ராஜ்மோகன்
தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் 2026-28 ஆம் ஆண்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக பள்ளிக் கல்வி துறை – தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் செய்தி துறை அமைச்சரான திரு.ராஜ்மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
தயாரிப்பு நிறுவனம் – தயாரிப்பாளர் – திரைப்படம் – நட்சத்திர கலைஞர்கள் – தொழில்நுட்ப கலைஞர்கள் – விளம்பரங்கள் – பத்திரிகையாளர்கள் – ஊடகவியலாளர்கள் – திரையரங்குகள் – ரசிகர்கள்- திரை ஆர்வலர்கள் – என ஒரு திரைப்படத்தின் பணிகள் தொடங்கிய தருணத்திலிருந்து அத்திரைப்படம் முழுவதுமாக தயாராகி, அது தொடர்பான தகவல்களை ஊடகங்கள் மூலமாக மக்களுக்கும், ரசிகர்களுக்கும் சென்றடையச் செய்வதுடன்.. அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அதனை முறையாக ஆவணப்படுத்தும் வரலாறு வரை தங்களுடைய பணிகளை செழுமையாக முழுமையான அர்ப்பணிப்புடன் முன்னெடுப்பவர்கள் தான் திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள். சமூக வலைதளங்களின் ஆதிக்கம் அதிகமாகியுள்ள இந்தத் தருணத்திலும் பத்திரிக்கை தொடர்பாளர்கள் டிஜிட்டல் தளத்தில் வெளியாக வேண்டிய செய்திகளையும்… சமூக வலைதளங்களில் வெளியாகும் எதிர்மறையான விமர்சனங்களுக்கு விளக்கங்கள் வெளியிடும் பொறுப்பினையும்.. ஏற்று அயராது உழைக்கும் பத்திரிகை தொடர்பாளர்களின் நலன்களுக்காக இயங்கும் சங்கத்திற்கு புதிதாக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பி யுவராஜ் தலைவராகவும், என். விஜய முரளி செயலாளராகவும், வீ. கே. சுந்தர் பொருளாளராகவும், எஸ். புவனேந்திரன் மற்றும் எஸ். சதீஷ்குமார் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், பாலன் என்கிற ஜி. பாலசுப்பிரமணியன் மற்றும் ஆர். உதயகுமார் ஆகியோர் இணை செயலாளராகவும் பதவி ஏற்று கொண்டனர். இந்த நிகழ்வில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் – தமிழ் திரைப்படத்தின் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் – தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கம்- தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம்- தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம்- நடிகர்கள் அர்ஜுன் தாஸ் -அசோக் செல்வன்- தயாரிப்பாளரும், இயக்குநருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் – தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பஸ்லியான் – தயாரிப்பாளர் ஜே. எம். பஷீர் உள்ளிட்ட ஏராளமான தமிழ் திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டு, புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
தயாரிப்பாளர் சங்க தலைவர் ஜி கே எம் தமிழ் குமரன் பேசுகையில், ” திரைப்படத் துறையில் முக்கியமான சங்கம்- தவிர்க்க முடியாத சங்கம்- பி.ஆர்.ஓ சங்கம். எண்ணற்ற சங்கங்கள் இருந்தாலும்… இந்த சங்கம் முக்கியமானது. தேர்தல் நடைபெற்று ,தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்புரை நிகழ்த்த வருகை தந்திருக்கும் மாண்புமிகு அமைச்சர் ராஜ் மோகன் அவர்களுக்கு நன்றி. யுவராஜ் ஒரு துடிப்பான இளைஞர். அவரது தலைமையில் இந்த சங்கம் சிறப்பாக செயல்படும். இதற்கு நான் சார்ந்த தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் திரைப்படத் துறையில் எல்லா சங்கங்களுக்கும் ஒரு அலுவலகம் சொந்தமாக இருக்கிறது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு என எந்த அலுவலகமும் இல்லை. இந்த அலுவலகம் வாடகையில் தான் இயங்கி வருகிறது. புதிதாக அலுவலகம் கட்டுவதற்கான இடத்தை தமிழக அரசு வழங்கினால்.. நாங்கள் கட்டடத்தை கட்டிக் கொள்கிறோம். இதனை வழங்கினால் சிஎம்முக்கும் , அமைச்சருக்கும் காலத்திற்கும் அழியாத நற்பெயர் கிடைக்கும். பெருமையாகவும் இருக்கும்.
2015 ஆம் ஆண்டில் இருந்து 2022 ஆம் ஆண்டு வரையில் சிறிய முதலீட்டு திரைப்படங்களுக்கான தமிழக அரசின் சார்பில் வழங்க வேண்டிய மானியங்கள் வழங்கப்படவில்லை. அதனை விரைவில் வழங்க வேண்டும் என தமிழக அரசை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்றார் .
அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், ” இந்த உலகத்துடன் ஒரு உறவு பாலமாய் தமிழ் சினிமாவை- இந்த கலைத்துறையை- இணைக்கக் கூடிய அத்தனை சினிமா பத்திரிக்கையாளர்கள் மற்றும் பத்திரிக்கை தொடர்பாளர்களுக்கும் நான் நெஞ்சார தலை வணங்குகிறேன் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். நீங்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்.
இங்கு பணியாற்றும் அனைத்து பிஆர்ஓக்களிடமும் நான் எஃப் எம்மில் பணியாற்றிய போதும்…. சோசியல் மீடியாவில் பணியாற்றிய போதும்… தனியாக யூட்யூப் சேனலை தொடங்கிய போதும்…. திட்டு வாங்கிய ஒருவன் என்றால், அது நான் தான். கடந்த காலங்களில் இத்துறையில் பத்திரிகைகளுக்கும், வெப்சைட்களுக்கும் என பத்திரிக்கையாளர் சந்திப்புகளில் அனுமதிப்பது தொடர்பான சிக்கல்கள் உருவானது. அப்போதும் பொறுமையாக இருந்து விளக்கமும், ஆதரவும் அளித்தனர். அதன் பிறகு கால மாற்றத்தை -தொழில்நுட்ப மாற்றத்தை- உணர்ந்து ஆதரவை வழங்கத் தொடங்கினார்.
அத்துடன் அனைத்து பிஆர்ஓக்களுக்கும்… நல்ல தமிழில் குறைவான சம்பளத்தில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கூடிய தொகுப்பாளர் ஒருவர் தேவை என்றால்… உடனடியாக அவர்களுக்கு நினைவுக்கு வருவது நான் தான். மலிவு விலை தொகுப்பாளர் என்றால் ராஜ்மோகன் தான். அது நான்தான் என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை கொடுத்தால் அது விருது அல்ல. விருது என்றால் ஆண்டுதோறும் வழங்கப்பட வேண்டும். மாண்புமிகு தமிழக முதல்வரின் அனுமதியை பெற்று வெள்ளித்திரை- சின்னத்திரை- தமிழ் திரை- விருதுகள் இனி ஆண்டுதோறும் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நல்ல படைப்புகள் தான் நமக்கு ஆக்சிஜன். தமிழ் சினிமாவில் தன் தலையை உண்மையிலேயே அடமானம் வைத்து முதலீடு செய்யும் முதலாளிகள் என்றால் … அது நம்முடைய தயாரிப்பாளர்கள் தான்.
தயாரிப்பாளர்களால் சில தருணங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஊதியங்களை தர இயலாத போது.. அவர்களுக்கு பட வாய்ப்பையே வழங்கியுள்ளனர். அத்தகைய தாயுள்ளம் கொண்டவர்கள் தான் தயாரிப்பாளர்கள். தயாரிப்பாளர்கள் சங்கம் இல்லை என்றால் நாம் யாரும் இங்கில்லை.
தமிழ் சினிமாவில் கைகளாக இருப்பவர்கள் தான் பாடலாசிரியர்கள்- பாடகர்கள்- பாடகிகள்- இசையமைப்பாளர்கள்-. படத்திற்காக ஓடியதா? இளையராஜாவின் இசைக்காக ஓடியதா? என தெரியாத பல வொண்டர்ஃபுல் மேஜிக் தமிழ் சினிமாவில் உள்ளது. அவர்கள் இல்லை என்றால் நாம் இல்லை.
தமிழ் சினிமாவை தாங்கிக் கொண்டு ஓடக்கூடிய கால்கள் என்றால்… ஃபைட் மாஸ்டர்ஸ் மற்றும் டான்ஸ் மாஸ்டர்ஸ் தான். இவர்கள் ரத்தத்தை வியர்வையாக கொட்டி ஓடி ஓடி உழைத்துக் கொண்டே இருப்பார்கள்.
தமிழ் சினிமாவின் வயிறாக திகழ்பவர்கள் புரொடக்ஷன். அஞ்சு பேர் இருந்தால்.. கேரவனில் சாப்பாடு. 50 பேர் இருந்தால் கேரவன் அருகே சாப்பாடு. 500 பேர் இருந்தால் சாப்பாட்டை எப்படியாவது வழங்கி விடுவார்கள். ‘காந்தி’ திரைப்படத்திற்காக கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு லட்சம் பேர் படப்பிடிப்பில் கலந்து கொண்டனராம். இந்தியாவில் படப்பிடிப்பு நடைபெற்று இருக்கிறது. அதில் கலந்து கொண்டவர்களுக்கு காலை உணவு மதிய உணவு எப்படி கொடுத்திருப்பார்கள்? எப்போது உணவு இடைவேளை வழங்கப்பட்டிருக்கும்? என்பதையெல்லாம் யோசித்துப் பார்க்கவே முடியாது.
இந்த சினிமாவின் நாடி நரம்புகளாக ஓடிக்கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின் முகம் தெரியாத நாயகர்களாக இருப்பவர்கள்… ரத்தமாக இருப்பவர்கள்… யார் என்றால் பி ஆர் ஓக்கள் ஆகிய நீங்கள் தான். நீங்கள் ஓடி ஓடி அங்கு செல்ல வேண்டும்…. இங்கு செல்ல வேண்டும்.. படத்தை விளம்பரப்படுத்த வேண்டும்…. என ஓடிக்கொண்டே இருப்பீர்கள்.
அப்படி என்றால் சினிமாவில் இதயம் யார்? உண்மையிலேயே தன்னுடைய இதயத்தை பற்றி கவலைப்படாத இயக்குநர்கள் தான். அவர்கள் தான் தங்களுடைய இதயத்தை பற்றி கவலைப்படாமல் எப்படியாவது ஒரு நல்ல படத்தை எடுத்து விட மாட்டோமா…! எடுத்து விட முடியாதா..! என 40 ஆண்டுகளுக்கும் மேலாக சாலிகிராமத்தின் காவேரி கார்னர் பகுதியில் சுற்றிக் கொண்டிருக்கும் ஏராளமான அண்ணன்களை நான் அறிவேன். இந்த மொத்த சினிமாவின் உடலுக்கும் ஒரு அழகான ஸ்கின் வேண்டுமல்லவா.. அது நம்முடைய மேக்கப் டிபார்ட்மெண்ட். இப்படி எல்லாமே இருக்கும் சினிமாவில் ஆக்சிஜன் யார்? என்றால் துணை இயக்குநர்கள் தான் . இயக்குநர்கள் இல்லாமல் கூட இரண்டு மணி நேரங்களில் ஏதேனும் சில ஷாட்களை படமாக்கலாம். துணை இயக்குநர்கள் இல்லாமல் ஒரு ஷாட்டை கூட படமாக்க முடியாது. இவர்களும் முகம் தெரியாத ஹீரோக்கள் தான். இப்படி எத்தனையோ முகம் தெரியாத ஹீரோக்கள் சினிமாவில் இருக்கிறார்கள். இப்படி அத்தனை நபர்களிடமும் பாரபட்சம் இல்லாமல் பழகக் கூடியவர்கள் இந்த பிஆர்ஓ க்கள்.
அண்ணன் செல்வமணி பேசுகையில் பேமெண்ட் பென்டிங் பற்றி குறிப்பிட்டார். அது என்ன? என்பதை நான் கூறுகிறேன். கடந்த காலத்தில் எல்லா சங்கங்களும் சேர்ந்து முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கு நூற்றாண்டு விழாவை கொண்டாடினர். அந்த விழாவில் தொகுப்பாளராக பணியாற்றுவதற்காக இயக்குநர் லிங்குசாமி -பாண்டிராஜ் -என பலரிடமிருந்து போன் கால்ஸ் வந்து கொண்டே இருந்தது. அப்போது எனக்கு இந்த நிகழ்ச்சிக்கான ஊதியம் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற சந்தேகம் இருந்தது. அதனால் நான் சமாளித்துக் கொண்டே பதில் அளித்தேன். அதன் பிறகு ஒரு பிஆர்ஓ போன் செய்து, ‘ஒரு நிமிடம் ஆர் கே செல்வமணி உங்களிடம் பேச வேண்டும்’ என்றார். அவர் போன் செய்தவுடன், ‘நான் வந்து கொண்டிருக்கிறேன்’ என சொல்லிவிட்டேன். அன்றிலிருந்து ஒரு மாதம் வரை எனக்குத் தெரிந்து யாரும் தூங்க கூடவில்லை. தொடர்ந்து அதற்காக உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஏராளமான ஸ்கிரிப்டுகளை எழுதி எழுதி அதனை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – கமல்ஹாசன் என தமிழ் சினிமாவின் மொத்த பேரும் வருகை தந்திருந்தனர். இப்படிப்பட்ட மனித உழைப்பு எனக்குத் தெரிந்து இதுவரை இல்லை என்றே சொல்லலாம். இப்படிப்பட்ட நேர்மையான உழைப்பை வழங்குவது திரை உலகம் தான். இவர்கள் அனைவரும் நடமாடும் உழைப்பாளர்கள் சிலைகள் தான். அப்படி இருக்கும்போது நீங்கள் உங்களுடைய கோரிக்கைகளை உரிமையுடன் கேட்கலாம்.
‘தவமாய் தவமிருந்து’ படத்தில் இடம்பெறும் ஒரு காட்சிக்காக இயக்குநர் சேரனுக்கு தேசிய விருதுகளை கொட்டிக் கொடுக்க வேண்டும். அப்படி ஒரு காத்திரமான படைப்பு. நாங்கள்தான் உங்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். உங்களுக்கு என்னென்ன தேவையோ…! அவை அனைத்தையும் மாண்புமிகு தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்.
முதல் சந்திப்பில் தமிழக முதல்வர் என்னை அழைத்து, ‘மானியத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் படங்கள் எதுவும் பெண்டிங் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அரசு சார்பில் வழங்கப்படும் மானியங்களை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைவு படுத்துங்கள் ‘ என சொன்னார். இதற்காக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு காலத்தில் தமிழ்நாடு தான் சினிமாவில் கேப்பிட்டல் ஆக இருந்தது. இங்கு தான் அனைத்து படப்பிடிப்புகளும் நடைபெறும். கொஞ்சம் கொஞ்சமாக வெவ்வேறு மாநிலங்கள் சென்றது. அதற்கு பலதரப்பட்ட காரணங்கள். அவற்றையெல்லாம் பகுப்பாய்வு செய்வதுதான் எங்களுடைய வேலை.
சூட்டிங் ஸ்பாட்டில் மேனேஜரோ… பி ஆர் ஓக்களோ… பர்மிஷனுக்காக பலருக்கு காசு கொடுக்க வேண்டியதிருந்தது. அதற்கு தற்போது ‘நோ ‘ சொல்லப்பட்டிருக்கிறது. யார் கேட்டாலும் ஒரு ரூபாய் கூட கொடுக்க வேண்டாம். உங்களுடன் சிஎம் இருக்கிறார். புரொடக்ஷன் மற்றும் ஆர்டிஸ்டிகளுக்கு என்ன தேவையோ… அதை மட்டுமே பார்த்துக் கொள்ளுங்கள்.
உலகத்தில் வேலையை செய்வதற்காக யாரும் பாராட்ட மாட்டார்கள் ஏனெனில் நம்முடைய சிஸ்டம் அப்படி மாறிவிட்டது நாம் வேலையை செய்து கொண்டிருக்கிறோம். அதை சிறப்பாக செய்து கொண்டு இருக்கிறோம். அதை உண்மையாக செய்து கொண்டிருக்கிறோம். ஒளிவு மறைவு இல்லாமல்… வெளிப்படை தன்மையுடன் இயங்குவதற்கான ஒரு முயற்சிதான். ஏனெனில் சினிமா துறையில் தான் கருவாகி… உருவாகி… இன்று ஒரு மாமனிதர் முதலமைச்சர் ஆக கிடைத்திருக்கிறார்.
இந்த மேடையில் எங்களுடைய அண்ணன்கள் எதையெல்லாம் வேண்டுமென கேட்டார்களோ… அதை எல்லாம் செய்வதற்கு ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
முத்துக்காளை மனைவிக்கு ஒரு பிரச்சனை என்று போது.. என்னை அழைக்கவில்லை என்றாலும்.. நானாக சென்று, ‘அவர்களை நடிகராக பார்க்காதீர்கள். ஒரு கல்வியாளராக பாருங்கள் ‘என்று அறிவுறுத்தி முழுமையான மருத்துவ சிகிச்சையை கிடைக்கச் செய்தோம்.
பாவா லக்ஷ்மணன் அண்ணனுடன் நான் ஒரு படத்தில் கூட இணைந்து பணியாற்றியதில்லை. இருப்பினும் எம்எல்ஏ ஹாஸ்டலில் அவருக்கு இடம் கொடுத்துவிட்டேன். கேப்டன் இல்லையென்றால் என்ன…. கேப்டனின் படங்களை பார்த்து தான் நாங்கள் அனைவரும் வளர்ந்திருக்கிறோம். நீங்கள் வாருங்கள் என்று அவரை அன்புடன் அழைத்து அந்த விடுதி அறையை கொடுத்தேன்.
பாரதிராஜா- பாக்யராஜ்- மறைந்த போது ஓடோடி சென்று முழு அரசு மரியாதை வழங்கியது. அது எங்களுடைய கடமை. அவர்களுக்கு செய்யாமல் நாங்கள் வேறு யாருக்கு செய்யப் போகிறோம்.
நான் பள்ளி கல்வித்துறை அமைச்சராகவும் இருக்கிறேன். அரசு பள்ளியில் படிக்கும் ஆட்டிசம் குழந்தைகள்.. என்னுடைய அறைக்கு வந்தவுடன்.. அவர்களை ஒரு குட்டி நாற்காலியில் அமர வைப்பேன். சாக்லேட் தருவேன். அவர்களிடம் நீண்ட நேரம் உரையாடுவேன். அவர்களின் பெற்றோர்கள் தான் பதட்டமடைவார்கள். ஆனால் அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்காமல் வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருப்பார்கள். இந்த நிலையை பார்த்து அவர்களுடைய பெற்றோர் கண்ணீர் சிந்துவார்கள். அப்போது ஒரு அதிகாரி நல்லதொரு ஐடியாவை கொடுத்தார். அதன்படி சென்னை பிலிம் இன்ஸ்டிடியூட்டில் உள்ள தியேட்டரில் சென்னையில் அரசு பள்ளியில் படிக்கும் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளை தேர்வு செய்து, அவர்களுக்கு உலக சினிமாவை திரையிட்டோம். அந்த பிள்ளைகள் அந்த சினிமாவை பார்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதை பார்த்தவுடன் இத்தகைய முயற்சிகள் இனி மாதம் தோறும் மேற்கொள்ள வேண்டும் என முடிவெடுத்து அதை தொடங்கி விட்டோம்.
நாங்கள் பேசும்போது எங்களுடன் பேசாத அந்த குழந்தைகள்…. திரையில் தெரியும் மீனுடன் பேசுகிறது. மானுடன் பேசுகிறது. சிரித்து விளையாடினர். படத்தின் இடைவேளையின் போது குழந்தைகளுக்கு மட்டும் அல்ல அவர்களின் பெற்றோர்களும் தங்களுடைய பிள்ளைகளின் உற்சாகத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.
கிட்டத்தட்ட நானும் அப்படித்தான்.. கிடைத்த வேலைகளை செய்து, எப்படியாவது ஒரு நிலைக்கு உயர்ந்திட வேண்டும் என உழைத்துக் கொண்டே இருந்தேன். இன்று இந்த இடத்திற்கு வந்து நிற்கிறேன் என்றால் ..இவை அனைத்தும் திரைக்கலை தந்த ஒரு வலிமை. இதயத்தை தொடக்கூடிய ஒரு உணர்வு. நல்ல படைப்புகளை பார்த்து… படித்து… கேட்டு… வளர்ந்தது. இதையெல்லாம் …இப்படி எல்லாம் … செய்ய வேண்டும் என்று நினைத்து, எனக்கு மாண்புமிகு முதல்வர் கொடுக்க நல்லதொரு வாய்ப்பு இது. அவர் என் மீது வைத்த நம்பிக்கை. என் மீது இங்கு உள்ள எல்லோரும் வைத்திருக்கும் நம்பிக்கை. இதனை நான் நிச்சயமாக காப்பாற்றுவேன். கடைசி மூச்சு வரை நேர்மையாக வேலை செய்து, உங்கள் அத்தனை பேரின் கோரிக்கையையும் மாண்புமிகு தமிழக முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, அவரின் ஆலோசனையும், அனுமதியும் பெற்று… என்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்வேன் என உறுதி அளிப்பதுடன்..வாழ்த்தி, வணங்கி விடைபெறுகிறேன்” என்றார்.
நடிகர் துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு ஏ ஒ டி – AOT திரைப்படக் குழுவினர் – அப்படத்தில் இடம்பெறும் முதல் பாடலான ‘மிட்டாய் மழை- Mittai Mazhai’ யை வெளியிட்டுள்ளனர்.
ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள ‘மிட்டாய் மழை’ பாடல் கதையின் உணர்வு பூர்வமான சாராம்சத்தை அழகாக வெளிப்படுத்தும் ஒரு இனிமையான மெல்லிசை பாடல் ஆகும். கதாநாயகியின் பார்வையில் அமைக்கப்பட்ட இந்தப் பாடல்… நட்சத்திரங்களை தொடும் அவளது கனவையும், அவளை முன்னேற்ற தூண்டும் ஆணின் அமைதியான ஊக்கத்தையும் சித்தரிக்கிறது. காதலுக்கான வழக்கமான வரையறைகளை கடந்த ஒரு தனித்துவமான பிணைப்பிற்கு இது ஒரு நெகிழ்ச்சியான சமர்ப்பணமாக அமைந்துள்ளது.
பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபாலின் வரிகளில்… பின்னணி பாடகி ரம்யா பெஹாரா பாடியுள்ள இந்தப் பாடல்… விடா முயற்சி- நம்பிக்கை மற்றும் ஒவ்வொரு கனவையும் முன்னெடுத்துச் செல்லும் அமைதியான ஆற்றல் – ஆகியவற்றை உணர்த்தும் கவித்துவமான உவமைகளால் மெருகூட்டப்பட்டுள்ளது.
துல்கர் சல்மான், சாத்விகா வீரவள்ளி, ஸ்ருதிஹாசன் ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்துள்ள ‘ஆகாசம்லோ ஒக தாரா- Aakasamlo Oka Thara- AOT’ திரைப்படத்தை பவன் சடினேனி இயக்கியுள்ளார். லைட் பாக்ஸ் மீடியா ( Lightbox Media) நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் சந்தீப் குன்னம் மற்றும் ரம்யா குன்னம் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். ஸ்வப்னா சினிமா மற்றும் கீதா ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை வழங்குகின்றன.
உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களிலிருந்து சக்திவாய்ந்த நடிகர்கள் வரை, ‘தி பிரைடு ஆஃப் பாரத்: சத்ரபதி சிவாஜி மகாராஜ்’ படத்தில் பெலவாடி மல்லம்மாவாக இணைந்தார் பூமி சதீஷ் பெட்னேக்கர்
தி பிரைடு ஆஃப் பாரத்: சத்ரபதி சிவாஜி மகாராஜ் திரைப்படத்தின் நட்சத்திர பட்டியல் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. இந்திய சினிமாவின் மிகப் பிரம்மாண்டமான வரலாற்றுத் திரைப்படங்களில் ஒன்றாக உருவாகி வரும் இந்தப் படத்தில், பாராட்டப்பட்ட நடிகர்களிலிருந்து உலகளவில் அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை பலர் தொடர்ந்து இணைந்து வருகின்றனர்.
இந்த சக்திவாய்ந்த நட்சத்திர அணியில் தற்போது நடிகை பூமி சதீஷ் பெட்னேக்கர் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். இந்த பிரம்மாண்டமான படைப்பில், அச்சமற்ற வீர ராணியாகவும், தனது துணிச்சல் மற்றும் அசைக்க முடியாத மன உறுதியால் நினைவுகூரப்படும் பெலவாடி மல்லம்மா என்ற கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார் என்பதை நாங்கள் பிரத்தியேகமாக அறிந்துள்ளோம். அவரது வருகை, புகழ்பெற்ற வீர மன்னர் சத்ரபதி சிவாஜி மகாராஜாக ரிஷப் ஷெட்டி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த நட்சத்திர அணியை மேலும் வலுப்படுத்துகிறது. மேலும் அர்ஜுன் ராம்பால், விவேக் ஓபராய் மற்றும் பல முன்னணி நடிகர்களும் இதில் இடம்பெற்றுள்ளனர்.
இந்தப் படத்தில் இணைந்திருப்பது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பூமி சதீஷ் பெட்னேக்கர் கூறியதாவது: “மகத்தான மராத்தா வீர மன்னர் சத்ரபதி சிவாஜி மகாராஜின் வாழ்க்கை மற்றும் பாரம்பரியத்தை மையமாகக் கொண்டு, இதுபோன்ற அளவில் உருவாகும் முதல் இந்திய திரை பிரம்மாண்டத்தின் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு மிகுந்த பெருமையாக உள்ளது. கர்நாடகத்தின் வீர ராணியான பெலவாடி மல்லம்மா கதாபாத்திரத்தில் நடித்து, அவரை திரையில் உயிர்ப்பிப்பது எனக்கு ஒரு பெரும் பாக்கியம். நான் காந்தாரா திரைப்படத்தின் மிகப்பெரிய ரசிகை. அதில் ரிஷப் ஷெட்டியின் அசத்தலான நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. அதனால், சந்தீப் இந்தக் கதையை என்னிடம் கூறிய தருணத்திலேயே என்னுள் இருக்கும் நடிகை உடனடியாக ‘ஆம்’ என்று கூறிவிட்டது. இதற்கு முன் நான் செய்த எந்தக் கதாபாத்திரத்தையும் போல இல்லாத ஒரு அனுபவம் இது. என்னை முற்றிலும் புதிய கோணத்தில் பார்த்து இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்களுக்கு நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.”
சந்தீப் சிங் இயக்கி தயாரிக்கும் தி பிரைடு ஆஃப் பாரத்: சத்ரபதி சிவாஜி மகாராஜ் திரைப்படம் மிகப் பிரம்மாண்டமான அளவில் உருவாக்கப்பட்டு வருகிறது. புகழ்பெற்ற மராத்தா வீர மன்னரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகும் மிகப் பெரிய திரை பிரம்மாண்டங்களில் ஒன்றாக இது உருவாக்கப்பட உள்ளது.
இரண்டு பாகங்களாகத் திட்டமிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்திற்கு ரிஷி விர்மானி திரைக்கதை எழுதியுள்ளார். அமித் திரிவேதி இசையமைக்க, தேசிய விருது பெற்ற பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி பாடல் வரிகளை எழுதியுள்ளார். தொடர்ந்து விரிவடைந்து வரும் முன்னணி நடிகர்கள் மற்றும் உலகளவில் அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்பக் கலைஞர்களின் அணியுடன் உருவாகும் இந்த பிரம்மாண்ட திரைப்படம், இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பைத் தொடங்க உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க படைப்பை உயிர்ப்பிக்க விரிவான முன்தயாரிப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.