Breaking
March 7, 2026

“போர்த் ஃப்ளோர்” திரை விமர்சனம்

மும்பையில் வசிக்கும் ஆரிக்கு சென்னையில் இருக்கும் அவரது முன்னாள் காதலியிடம் இருந்து ஒரு போன் வருகிறது அதில் தான் ஒரு பிரச்சனையில் இருப்பதாகவும் நீ சென்னைக்கு உடனடியாக வரவேண்டும் நீ வந்த பிறகு நானே உனக்கு போன் செய்கிறேன் என்று சொல்லி அழைக்கிறாள்.
சென்னை வரும் ஆரி அங்கு உள்ள ஒரு தனிமையில் இருக்கும் ஒரு அப்பார்ட்மெண்டில் தங்குகிறார்.அந்த வீட்டின் மூன்று மாடியில் மட்டுமே புழக்கத்தில் இருக்கும்போது இவருக்கு தவறுதலாக நான்காவது மாடியில்உள்ள அறைக்கு சாவி வழங்கி அங்கே தங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.நேரத்தில் அந்த அப்பார்ட்மெண்டில் ஒரே ஒரு பெண்ணும் வேறு ஒரு பிளாக்கில் ஷார்ட் பிலிம் எடுக்கின்ற பேர்வழிகள் என்று ஒரு சில இளைஞர்களும் இளைஞர்களும் தங்கி இருக்கிறார்கள்.
நிலையில் அந்த அப்பார்ட்மெண்டில் வசிக்கும் ஒரு சிலர் ஆரிய இடம் சில விஷயங்கள் பேசுகிறார்கள்.திடீரென ஏதேதோ மர்மமான கனவுகள் வருகிறது தனது காதலியை நம்பர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருக்க அவரையும் தேடுகிறார் இந்த சூழலில் அந்த மர்ம பங்கு அப்பார்ட்மெண்டில் என்ன நடக்கிறது என்பதை இந்த திரைக்கதை 4th ப்ளோர் என்னும் திரைப்படம் கூறுகிறது.
இந்த போர்த் பார் திரைப்படம் ஆனது ஹாரர் மூவியா பழிவாங்கும் திரைப்படமா க்ரைம் திருவிழா என பல்வேறு குழப்பங்களுக்கிடையில் இயக்கியிருக்கிறார் இயக்குனர்.
காதலியை தேடும் பாரிக்கு காதல் என்னவானால் என்று தெரியவில்லை ஆனால் அதே பங்களாவில் ஒரு அறையில் ஆரியன் மகள் அவருக்கே தெரியாமல் இருக்கும் மகள் ஒரு அறையில் அடைபட்டு இருப்பது அவரை மீட்பது ,மேலும் ரியல் எஸ்டேட் பிசினஸில் ஈடுபடும் ரவுடிசம் என பல்வேறு விஷயங்களை இந்த ஹாரர் மூவிக்குள் கொண்டுவர முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர்.
இந்த படத்தில் ஹீரோவாக ஆரி அவருக்கு நடிப்பு மிகவும் சுமாராகத்தான் வருகிறது அவர் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்க வேண்டும்,இல்லனாக இயக்குனர் சுப்பிரமணியன் சிவா இவர் முழுநேர நடிகராக மாறிக் கொண்டிருக்கிறார்.
பவித்ரா நாயகி யாவும் அவரின் மாமாவாக தலைவாசல் விஜயம் தங்களது தரப்பட்ட கதாபாத்திரங்களை செய்து இருக்கிறார்கள்.

இசை தரண் குமார் திகில் படத்திற்கான இசையில் இன்னும் மெனக்கெட்டு இருக்கலாம் அதே போல் ஒளிப்பதிவும்.
இயக்குனர் எல் ஆர் சுந்தரபாண்டி திரைக்கதையில் இன்னும் மெனக்கட்டு இருந்தால் நிச்சயம் இந்த ஹாரர் மூவி நமக்கு பயம் கொடுத்திருக்கும்

“தடயம்” வெப் தொடர் விமர்சனம்

1995 1999 இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழ்நாடு ஆந்திரா எல்லையில் உள்ள கிராமங்களில் நடந்த தொடர் கொலைகளை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்திருக்கும் தொடர் தான் தடயம்
ஆந்திரா எல்லை வர தமிழக கிராமங்களில் இரவு நேரங்களில் தொடர்ச்சியாக இரட்டை கொலைகள் கணவன் மனைவி இருவரும் கொலை செய்யப்பட்டு அவர்களது தாலி மற்றும் அருணா கயிறு அதை மட்டும் மறுத்துக் கொண்டு செல்கிறார்கள்.இது தொடர்ந்து நடக்க மக்கள் வீதி அடைய இதை விசாரிக்கும் விசாரணை அதிகாரியாக சமுத்திரகனி.அவரது அதிகாரியாக சிவா தான் இன்ஸ்பெக்டராக வருகிறார்.இருவரும் இணைந்து இந்த தொடர் கொலைகளை செய்தவர்களை தேட அது ஆந்திர பிரதேசம் வரை செல்கிறது.அதே நேரத்தில் வழக்கமாக உயர் அதிகாரிகளின் ஒத்துழையாமை போன்றவையும் இந்த வழக்கை சுணக்கப்படுத்துகிறது.இந்த நிலையில் இருவரும் இணைந்து எப்படி இந்த கொலைகளை கண்டுபிடிக்கிறார்கள் அந்த கொலைகளுக்கான காரணம் என்ன என்பதை கண்டறியும் திரைக்கதை தான் தடயம்.
இந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரியாக சமுத்திரகனி ஒரு வித்தியாசமான நடிப்பாகவும் தன்னுடைய பாடி லாங்குவேஜ் மாற்றி புதிதாக ஏதோ தர முயற்சி செய்திருக்கிறார் அதில் ஓரளவு வெற்றியும் கண்டிருக்கிறார்.அவரது முதிர்ச்சியான நடிவம் கூர்நோக்கு பார்வையும் இந்த கொலை வழக்கை எளிமையாக கையாள வைக்கிறது அவருக்கு.
இன்ஸ்பெக்டர் கேரக்டரில் ஷிவதாநடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ள கதாபாத்திரம் அதில் அவர் தன்னை நிரூபித்தும் இருக்கிறார்.
திரைக்கதையில் வரும் பல்வேறு கதாபாத்திரங்கள் மிகவும் அழுத்தமாகவும் தேவையான இடத்திலும் பயன்பட்டு இருக்கிறார்கள்.
முக்கியமாக வில்லன் கதாபாத்திரம் புஷ்பா ஒன்று படத்தில் வில்லனாக வந்த ராஜ் இந்த வெப் சீரிஸில் கொடூரமான சைக்கோ இல்லனாக மிரட்டுகிறார்.
இந்த படத்திற்கான ஒளிப்பதிவும் அந்த காலகட்டமும் ,இசையும் சிறப்பாக பொருந்தி வருகிறது.
இந்தப் படத்தில் பல லாஜிக் மீறல்கள் இருந்தாலும் திரைக்கதை விறுவிறுப்பாக செல்வதால் தொய்வில்லாமல் செல்கிறது.
ஒரு இரட்டைக் கொலையும் அந்த வீட்டில் உள்ள ஒரு கேள்விக்குறி மார்க்கும் அதை தொடர்ந்து செல்லும் 72 கொலைகளும் என இந்த திரை கதையை சிறப்பாக எழுதி இயக்கி இருக்கிறார்நவீன் குமார் பழனிவேல்
தடயம் zee5 ott தளத்திற்கு ஒரு விறுவிறுப்பான க்ரைம் தொடர்

Green Milk Concepts, the Herbal Division of Apex Laboratories, Launches “Green Cuddle” Baby Care Range

Chennai, February 2026: Green Milk Concepts (GMC), the herbal division of Apex Laboratories, is set to launch Green Milk’s Green Cuddle Baby Care range on 26th February 2026 at 3:00 PM at Hotel Green Park, Chennai. The range is thoughtfully developed with a blend of traditional wisdom and modern scientific principles to gently care for a baby’s soft and sensitive skin.

The launch will be graced by distinguished personalities including Ms. S.V. Subashini, Executive Director – GMC; Dr. G. Sivaraman; Dr. Vijeyapall; and Dr. A.V. Ravishankar, Mr. R. Sridhar, VP – Sales & Marketing; Mr. V.P. Raghavan, DGM; Dr. M. Vijayakumar, AGM (Head – R&D); who will preside over the event and share insights on this innovative baby care range.

The Green Cuddle Baby Care range is crafted with natural actives that help nourish, soothe, refresh, and comfort delicate baby skin. All products are dermatologically tested and paediatrician tested, ensuring safety and gentleness for daily use. The range is free from synthetic colours, parabens, synthetic fragrance, mineral oil, and sulphates, and is cruelty-free. The products are manufactured in a GMP-certified facility, ensuring high standards of quality, consistency, and safety.

The daily care range includes: Gentle Baby Wash, Baby Massage Oil, Moisturising Baby Lotion, Baby Rub, Baby Cream

The Green Cuddle range will be available on leading e-commerce platforms, greenmilkconcepts.in Amazon, Flipkart, Myntra, Meesho, Jiomart.

Green Cuddle Baby Care products are priced at Gentle baby wash ₹449, Baby massage oil ₹649, Moisturising baby lotion ₹449, Baby rub ₹349, and Nappy cream ₹399, while the bundle pack is priced at ₹2,295.( with free diaper bag)

Speaking on the occasion, Ms. S.V. Subashini, Executive Director – GMC, said “We are delighted to launch Green Milk’s Green Cuddle Baby Care range. This marks an important milestone in our journey to offer safe, gentle, and effective baby care solutions rooted in nature and backed by science.”

கவிஞருக்குப் பெண் பார்க்கும் கஞ்சா கருப்பு

திரைப்படங்களில் நாம் சிரிப்பதற்காகப் பார்க்கும் கஞ்சா கருப்பு நிஜ வாழ்க்கையில் ஒரு மிகச்சிறந்த நண்பராகத் திகழ்கிறார். அவர் தனது நண்பர் கவிஞர் கிச்சன் மீது வைத்துள்ள பாசம் அளப்பரியது .

கஞ்சா கருப்பு தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகர். கவிஞர் கிச்சன் பல பாடல்களை எழுதிய திறமையான கவிஞர்.”இலக்கிய காதலில் இலக்கண சுருதி “எனும் கவிதை தொகுப்பை தனது தாய் கிராமத்தில் வெளியிட்டுள்ளார். இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாகத் திரையுலகில் இணைபிரியாத நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.கஞ்சா கருப்பு எங்கு சென்றாலும் தனது நண்பர் கிச்சனை உடன் அழைத்துச் செல்வார். நண்பனின் வளர்ச்சியில் அவருக்கு அவ்வளவு மகிழ்ச்சி.

கவிஞர் கிச்சன் ஒரு எளிய பின்புலத்திலிருந்து வந்தவர். மிகவும் திறமைசாலி.ஆனால் அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தனது நண்பன் வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என்பது கஞ்சா கருப்பின் நீண்ட கால ஆசை. தனது நண்பன் கிச்சனுக்கு ஒரு நல்ல பெண்ணைத் தேடித் திருமணம் செய்து வைக்க கஞ்சா கருப்பு மிகத் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்.

தனது சொந்தத் தம்பிக்கு எப்படிப் பெண் பார்ப்பாரோ அதே அக்கறையுடன் ஊர் ஊராகச் சென்று கிச்சனுக்குப் பெண் பார்த்து வருகிறார்.என் நண்பன் ஒரு கவிஞன். அவன் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்பதே கஞ்சா கருப்பின் ஒரே நோக்கம்.கஞ்சா கருப்பு ஒரு சாதிய வட்டத்தில் சுருங்காமல் சாதித்த பெண்ணை தேடுகிறார் ஆணின் தகுதிக்கு பெண் தகுதி… ஆண் பெண் பொருத்தம் மட்டும்தான்….தொழிலை வைத்து தான் சாதி பிறந்தது. சாதி மத பேதமின்றி பெண் தேடுகிறார்

யாஷின் ‘டாக்ஸிக் : எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்’

யாஷின் ‘டாக்ஸிக் : எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்’ ( Toxic: A Fairy tale for Grown Ups) திரைப்படத்தின் தமிழக வர்த்தகம் மிகப்பெரிய ஒப்பந்தத்தின் மூலம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது

‘ராக்கிங் ஸ்டார்’ யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்’ ( Toxic A Fairy Tale for Grown Ups) திரைப்படத்தின் தமிழக விநியோகம் கமிஷன் அடிப்படையில் 63 கோடி ரூபாய் முன் பணமாக பெறப்பட்டுள்ளது. இது சமீபத்திய ஆண்டுகளில் தமிழக திரைப்பட வணிகத்தில் ஏற்பட்ட மிக முக்கியமான ஒப்பந்தங்களில் ஒன்றாகும். இதன் மூலம் இந்த படத்தை பற்றி மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அத்துடன் தமிழகத்தில் வெளியாகும் மிகப்பெரிய திரைப்பட வெளியீடுகளில் ஒன்றாக இது இருப்பதையும் உறுதிப்படுத்துகிறது.

அதிகபட்சமான அணுகுமுறை மற்றும் பிராந்திய வலிமையை உறுதி செய்வதற்காக தமிழ்நாடு முழுவதும் இப்படத்தின் வெளியீடு- சக்தி வாய்ந்த பல விநியோகஸ்தர்களுடனான உத்தி மூலம் செயல்படுத்தப்படும்.

அந்த வகையில் சென்னை மாநகரத்தை ஸ்வரூப் ரெட்டியின் கீழ் இயங்கும் திங்க் ஸ்டுடியோஸ் கையாளுகிறது. செங்கல்பட்டு பகுதியை டிரைடண்ட் ரவி தலைமையிலான ஒயிட் நைட்ஸ் விநியோகிக்கும். கோயம்புத்தூர், வடக்கு மற்றும் தென் ஆற்காடு, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளை எஸ் பிக்சர்ஸ் சீனிவாசன் மேற்பார்வையிடுவார். அதனைத் தொடர்ந்து மதுரை- ராமநாதபுரம்- திருச்சி- தஞ்சாவூர் -சேலம் ஆகிய முக்கிய பகுதிகளை ஃபைவ் ஸ்டார் செந்தில் நிர்வகிப்பார். இது போன்று கட்டமைக்கப்பட்ட பிராந்திய விநியோக முறை- மாநிலம் முழுவதும் உள்ள சிங்கிள் ஸ்கிரீன் மற்றும் மல்டிஃபிளக்ஸ் ஸ்கிரீன்ஸ் ஆகிய இரண்டிலும் வலுவான திரையிடலை பெறுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஒத்துழைப்பு குறித்து தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்திய தமிழ்நாடு விநியோகஸ்தர்கள்,

” டாக்ஸிக் : எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்’ ( Toxic: A Fairy Tale for Grown Ups) சமீபத்திய காலங்களில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பான் இந்திய அளவிலான படங்களில் ஒன்றாகும். மேலும் தமிழ்நாட்டில் ஏற்கனவே யாஷ் மீது இருக்கும் அன்பும் , ஆதரவும் சிறப்பானது. இங்குள்ள பார்வையாளர்கள் யாஷை ஏற்றுக்கொண்ட விதம் உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தது. இந்த அளவிலான லட்சியம் கொண்ட ஒரு படத்திற்கான விநியோகத்தில் நாங்கள் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். இது எங்களுக்கு ஒரு பெரிய வெளியீடு மட்டுமல்ல.. இன்று இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றுடன் இணைந்திருப்பதும் உற்சாகமான ஒன்றாகும் ” என்றனர்.

‘கே ஜி எஃப் :பார்ட் 2 ‘ படத்தின் அற்புதமான வெற்றி மற்றும் தமிழ்நாட்டில் யாஷ் மீதான பரவலான புகழ் மற்றும் வரவேற்பு ஆகியவையே இந்த ஒப்பந்தத்தின் அளவிற்கான காரணம் என வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர். தமிழ் பார்வையாளர்கள் யாஷ் மீது மிகுந்த அன்பைப் பொழிந்து.. அவரது திரை ஆதிக்கத்தையும், தனித்துவமான புகழையும் கொண்டாடி, அவரை தங்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டுள்ளனர். இது எல்லையைத் தாண்டிய அரிய பிணைப்பு. அதனால் இந்த ஒப்பந்தம் வலுவான நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.

63 கோடி ரூபாய் முன் பண ஒப்பந்தம் மற்றும் வலுவான பிராந்திய நெட்வொர்க்குடன் ‘டாக்ஸிக் : எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்’ ( Toxic :A Fairy Tale for Grown Ups) தமிழ்நாட்டின் மிகப்பெரிய வெளியீடுகளில் ஒன்றாக இருக்கிறது. அத்துடன் மாநிலம் முழுவதும் பிரம்மாண்டமான மற்றும் விரிவான வெளியீட்டிற்கும் தயாராக உள்ளது.

யாஷ் மற்றும் கீது மோகன் தாஸ் எழுதி, கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள ‘ டாக்ஸிக் : எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ்’ ( Toxic: A Fairy Tale for Grown Ups) திரைப்படம் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே தருணத்தில் படமாக்கப்பட்டுள்ளது. தமிழ் ,தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் இதன் டப்பிங் பதிப்புகள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளன. கே வி என் புரொடக்ஷன்ஸ் (KVN Productions) மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் (Monster Mind Creations) தயாரித்த ‘டாக்ஸிக்’ திரைப்படம் மார்ச் 19 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி , ருக்மணி வசந்த் மற்றும் தாரா சுதாரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.‌

நடிகர் கார்த்தி வெளியிட்ட ஜி.வி. பிரகாஷ் குமாரின் ‘மென்டல் மனதில் ‘ (Mental Manadhil) படத்தின் ‘உயிரே உயிரே’ (Uyire Uyire )ஃபர்ஸ்ட் சிங்கிள்

செல்வராகவன் வரிகளில் ஜி.வி. பிரகாஷின் இசையில் கார்த்தி வெளியிட்ட ‘மென்டல் மனதில்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்

தேசிய விருதைப் பெற்ற இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜி வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்கும் ‘மென்டல் மனதில்’ படத்தில் இடம்பெற்ற ‘உயிரே உயிரே’ முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், உருவாகி வரும் ‘மென்டல் மனதில்’ திரைப்படத்தில் ஜி வி பிரகாஷ் குமார் – மாதுரி ஜெயின் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் நடிகை சீதா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அருண் ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பாலாஜி கவனிக்க, கலை இயக்கத்தை ஆர்.கே. விஜய் முருகன் மேற்கொள்கிறார். தினேஷ் குணா நிர்வாக தயாரிப்பாளராக பொறுப்பேற்றிருக்கும் இந்தத் திரைப்படத்தை பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் (Parallel Universe Pictures) நிறுவனம் சார்பில் ஜி.வி. பிரகாஷ் குமார் தயாரிக்கிறார்.

இப்படத்தின் இசை ஆல்பம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் ‘உயிரே உயிரே’ முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடல், இயக்குநர் செல்வராகவன் வரிகளில், ஜி வி. பிரகாஷ் இசையில்,பின்னணி பாடகர் கபில் கபிலன் பாடியிருக்கிறார். இந்த பாடலில் வரிகள் – வசீகர குரல் – இசை கோர்வை – என அனைத்து அம்சங்களும் சர்வதேச தரத்தில் உள்ளதாலும் , காதல் உணர்வை துல்லியமாக பிரதிபலிப்பதாலும், இசை ரசிகர்களிடத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது.

‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘மயக்கம் என்ன’ படத்தைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்துள்ள செல்வராகவன் – ஜி வி. பிரகாஷ் குமார் கூட்டணி- ‘மென்டல் மனதில்’ படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

LINK : https://www.youtube.com/watch?v=qPaPA3AQ4JI

அனிருத் வெளியிட்ட   ‘அன்பே டயானா’ (Anbe Diana) பட டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் !!

‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் ‘அன்பே டயானா’ (Anbe Diana) பட டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை ராக்ஸ்டார் அனிருத் வெளியிட்டார் !!

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios) மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் (Neo Castle Creations ) இணைந்து தயாரித்துள்ள  ‘அன்பே டயானா’ படத்தின் அசத்தலான டைட்டில் ஃபர்ஸ்ட் லுக்கை,   முன்னணி இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் வெளியிட்டுள்ளார். 

யுவராஜ் கணேசன், சத்யா கரிகாலன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்தில், ‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் கதாநாயகனாக நடிக்க,  ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக் களங்களைத் தொடர்ந்து வழங்கி வரும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios), ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ உள்ளிட்ட தொடர் வெற்றிப் படங்களுக்குப் பிறகு, தனது 7-வது தயாரிப்பாக இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

‘ஜமா’ படத்தின் வெற்றியின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த பாரி இளவழகன், இப்படத்தில் கதை மற்றும் திரைக்கதை எழுதி இயக்குவதுடன், கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன், இதில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக், முதல் பார்வையிலேயே கவனத்தை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நடுவில், ரத்தக் கறைகள் படிந்த உடையுடன் மணமகன் கோலத்தில் நிற்கும் பாரி இளவழகன், அதற்கு நேரெதிராக வெள்ளை உடையில் கையில் மலர்க்கொத்து ஏந்தி புன்னகையுடன் மணகமகள்  கோலத்தில் நிற்கும் ரம்யா ரங்கநாதன்,  என இருவரும் கல்யாண கோலத்தில் இருக்க, அவர்களைச்  சுற்றியுள்ள கதாபாத்திரங்கள் காட்டும் பலவிதமான முக பாவனைகள், பறக்கும் பல பொருட்கள் என எல்லாம் இணைந்து, இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் ஜாலியான ஃபேமிலி என்டர்டெயினர் என்பதை உறுதி செய்கின்றன.

படத்தின் முக்கிய சிறப்பம்சமாக, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ரோஜா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு முழுநீள கதாபாத்திரத்தில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். சேத்தன், வைரல் யூடியூபர் பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி, செல் முருகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

‘மண்டேலா’, ‘மாவீரன்’ புகழ் இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையமைத்திருக்க, ‘அருவி’, ‘சக்தி திருமகன்’ படங்களின் ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தொகுப்பை பார்த்தா மேற்கொண்டிருக்க, கலை இயக்கத்தை மகேந்திரன் கையாண்டிருக்கிறார். பாடல்களை மோகன்ராஜன், முத்தமிழ், பாக்கியம் சங்கர் ஆகியோர் எழுதியிருக்கின்றனர். மக்கள் தொடர்பை யுவராஜ் கையாள்கிறார்.

சென்னையின் பெரம்பூர் பகுதியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துள்ள நிலையில், சம்மர் வெளியீட்டுக்காக தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் இசை, டிரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதி தொடர்பான அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 வெகு சமீபத்தில் தொடங்கிய படப்பிடிப்பை குறுகிய காலத்திலேயே முழுமையாக முடித்து அசத்திய படக்குழு, தற்போது டைட்டில் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’

முன்னணி இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ படத்தின் அசத்தலான டிரெய்லர் வெளியாகியுள்ளது!!

மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் (Maali Manvi Movie Makers), டி-ஸ்டுடியோஸ் (D Studios), சன்னி டென்வி (Sunny Denvi) டென்வி புரொடக்ஷன் (Denvi Productions) ஆகியோர் தயாரிப்பில், பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பில், முன்னணி இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ திரைப்படத்தின் டிரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான டீசரும், முன்னணி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான பாடல்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர், புதுமையான களத்தில் உருவாகியுள்ள வித்தியாசமான ரொமான்ஸ் படமாக இப்படம் இருக்குமென்பதை உறுதிப்படுத்துகிறது.

டிரெய்லரில், விபத்தில் நினைவுகளை இழந்த நாயகி ஒவ்வொரு நாளையும் புதிதாக ஆரம்பிக்கிறாள். ஆனால் அவளுக்கு இரண்டு காதல்கள் இருப்பதாகக் கூறி, இரண்டு நாயகர்கள் அவளைச் சுற்றி வருகிறார்கள். கலகலப்பான நகைச்சுவையும், மனம் முழுவதையும் நெகிழ வைக்கும் அழகிய காதலோடும், இப்படம் ஒரு அசத்தலான கமர்ஷியல் எண்டர்டெயினராக இருக்கும் என்பதை டிரெய்லர் அழுத்தமாக உணர்த்துகிறது. இந்த டிரெய்லர் வெளியான வேகத்திலேயே ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

இத்திரைப்படத்தில் மதும்கேஷ், ஜியா சங்கர் ஜோடியாக நடித்துள்ள நிலையில், மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரமான அர்ஜுன் அசோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் எம்.எஸ். பாஸ்கர், ஜெயபிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். குறிப்பாக, பல புதுமுக திறமைகளை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தி வரும் இயக்குநர் விஜய், இத்திரைப்படத்தின் மூலம் மதும்கேஷ் – ஜியா சங்கர் ஜோடியை அறிமுகப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், காதலும் உணர்ச்சியும்,கலந்த இசை,ரசிகர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா காட்சிகளுக்கு அழகிய காட்சித் தன்மையை வழங்கியிருக்கிறார். ஆண்டனி படத்தொகுப்பை மேற்கொண்டிருக்க, கலை இயக்கத்தை சரவணன் வசந்த் கவனித்துள்ளார். சண்டை இயக்கத்தை மனோகர் வர்மா, உடை வடிவமைப்பை ருச்சி முனோத் மேற்கொண்டுள்ளனர். பாடல் வரிகளை வைரமுத்து, கார்கி, ஆர்கஸ் ஆர்யன் ஆகியோர் எழுதியுள்ளனர். இப்படத்தின் இசை உரிமையை T-Series நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

வரும் மார்ச் 6 அன்று ‘காதல் ரீசெட் ரிபீட்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை தமிழகமெங்கும் (ரோமியோ பிக்சர்ஸ்) Romeo Pictures நிறுவனம் வெளியிடுகிறது

LINK : https://www.youtube.com/watch?v=vzu95IcA32g

MGM Healthcare Launches ‘Swayam’, Chennai’s First Comprehensive Geriatric Program with a Dedicated Helpline Support for Seniors

Chennai, February 26, 2026: Setting a new benchmark in geriatric healthcare, MGM Healthcare has launched Swayam, Chennai’s first comprehensive, multidisciplinary geriatric programme built on a structured continuity-of-care model with a strong focus on restoring and sustaining quality of life. The programme is supported by a dedicated senior helpline (044-42004222) to assist elderly patients and their families.

The programme integrates outpatient services, dedicated in-patient wards including senior-friendly ICUs, and hospital-to-home care through direct visits, remote monitoring, and follow-up services for patients at home or in assisted-living facilities.

The programme was inaugurated by Col. K. Prabhakar Hebbar (Retd.), Mrs. Joseph Marita, Branch Head and Mrs. Kirshnaveni, Deputy Manager, Dignity Foundation and in the presence of Dr. Senathi Nanda Kishore, Clinical Director & Senior Consultant & Clinical Lead – Anaesthesiology and Surgical ICU, MGM Healthcare, and Dr. P. Sivaraj, Senior Consultant, Department of Internal Medicine, who heads Swayam.

Swayam distinguishes itself from conventional geriatric care by offering structured, assessment-driven services that integrate medical, psychological, functional, nutritional, sensory, dental, and home-based monitoring within one coordinated framework — ensuring clinical cohesion across specialties.

The team has expertise in comprehensive geriatric assessment; chronic disease management including diabetes, hypertension, and cardiovascular risk; polypharmacy review and medication rationalisation; preventive health and risk stratification; memory and cognitive evaluation; rehabilitation support; metabolic and renal disorder management; infection care; functional and mobility assessment; and frailty and fall-risk evaluation.

In his comments, Dr. Senathi Nanda Kishore said, “India is ageing rapidly, yet structured geriatric medicine remains underdeveloped. Ageing is often normalised as decline – chronic pain, loneliness, reduced mobility, polypharmacy, and sensory deterioration are accepted as ‘natural’. Swayam challenges this narrative. We are not merely a treatment clinic; we represent a proactive, preventive, and restorative ecosystem for senior wellbeing. We are not managing old age – we are optimising healthy ageing.”

Dr. Sivaraj said, “Current geriatric care is often fragmented across specialties – reactive rather than preventive, with limited psychological and social assessment. Medication management is seldom well integrated, and follow-up rarely extends into structured home-based care. In contrast, we offer Chennai’s most structured multidisciplinary geriatric programme, built on a true continuity-of-care model spanning outpatient, inpatient, and home care. The emphasis is on longitudinal monitoring rather than episodic intervention – reframing ageing from inevitable decline to a manageable, optimisable transition”.

Swayam follows an appointment-based model, limiting consultations to just five patients per day to ensure comprehensive, unhurried evaluations. Each visit offers multidisciplinary screening under one roof, including psychological assessments for loneliness and depression. The Hospital-to-Home continuity comprises quarterly Mobile Health Services, where a doctor, nurse, and physiotherapist visit patients’ homes for structured monitoring and ongoing care.

ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் ஜோடி சேர்ந்த புதிய படம்!படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றிருக்கிறது

Million Dollar Studios மற்றும் Neo Castle Creations இணைந்து தயாரித்துள்ள புதிய திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் இனிதே வெற்றிகரமாக நிறைவு பெற்றிருக்கிறது.

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக்களங்களை தொடர்ந்து வழங்கி வரும் Million Dollar Studios, ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ உள்ளிட்ட தொடர் வெற்றிப்படங்களுக்குப் பிறகு தனது 7-வது தயாரிப்பாக இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறது.

Neo Castle Creations-இன் சத்யா கரிகாலன், Million Dollar Studios-ன் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில், ‘ஜமா’ வெற்றியின் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாரி இளவழகன் கதை மற்றும் திரைக்கதை எழுதி இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கிறார். தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

படத்தின் மிக முக்கிய சிறப்பம்சமாக, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ரோஜா நீண்ட இடைவெளிக்குப் பிறகு முழுநீள பாத்திரத்தில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். இவருடன் சேத்தன், வைரல் யூடியூபர் பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

‘மண்டேலா’, ‘மாவீரன்’ புகழ் இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையமைத்திருக்க, ‘அருவி’, ‘சக்தி திருமகன்’ பட ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தொகுப்பை பார்த்தா மேற்கொண்டிருக்க, கலை இயக்கத்தை மகேந்திரன் கையாண்டிருக்கிறார். பாடல்களை மோகன்ராஜன், முத்தமிழ், பாக்கியம் சங்கர் ஆகியோர் எழுதியிருக்கின்றனர். மக்கள் தொடர்பை யுவராஜ் கவனித்திருக்கிறார்.

சென்னையின் பெரம்பூர் பகுதியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படைப்பு, அனைத்து வயதினரும் குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான ஜாலியான பேமிலி என்டர்டெயினராக உருவாகியிருக்கிறது.

படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வெற்றிகரமாக நிறைவு பெற்றிருக்கும் நிலையில், இப்படம் வரும் சம்மர் 2026-ல் உலகம் முழுவதும் ரசிகர்களை சந்திக்க உள்ளது. வெளியீட்டு தேதியும் படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.