100% வெற்றிச் சாதனை படைத்த மனிதனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! ராஜ்குமார் ஹிரானி “டங்கி” மூலம் மற்றொருமுறை திரையில் மாயாஜாலம் நிகழ்த்தவுள்ளார் !!
இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி, திரை ரசிகர்கள் கொண்டாட அவரது பெயர் மட்டுமே போதும்!! மக்களின் இதயங்களைத் தொடும் அழகான சினிமாவை தொடர்ந்து வழங்கியவர், திரையுலக மாஸ்டர் கதாசிரியர், இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். பார்வையாளர்களின் மனதில் நீங்காத அளவில், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வழங்கி, ப்ளாக்பஸ்டர் வெற்றிச்சாதனையையும் படைத்துள்ளார். ‘சஞ்சு,’ ‘பிகே,’ ‘3 இடியட்ஸ்,’ போன்ற கிளாசிக் படங்கள் மற்றும் அனைவரும் கொண்டாடிய ‘முன்னா பாய்’ என, ஹிரானி அனைத்து வயதினரும் எப்போதும் கொண்டாடும் சினிமா ரத்தினங்களை தொடர்ந்து வழங்கி வந்துள்ளார். இப்போது, ஷாருக்கானுடனான அவரது முதல் முறையாக இணைந்திருக்கும் ‘டங்கி’ மூலம், மீண்டும் திரையில் மாயாஜாலத்தை நிகழ்த்தவுள்ளார். ரசிகர்கள் நகைச்சுவை கலந்த மனம் மயக்கும் ஒரு இனிதான பயணத்திற்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்ளலாம்.
உணர்ச்சிபூர்வமான அம்சங்களுடன் நகைச்சுவை, கலந்து சமூகச் செய்தியை சொல்லும் வகையில் கதைகளை வடிவமைக்கும் ஹிரானியின் தனித்துவமான திறன் தான், அவரது திரைப்படங்களை பொழுதுபோக்கிற்கும் மேலாக ஒரு உன்னத படைப்பாக உருவாக்குகிறது. அவரது படங்கள் கலாச்சார அடையாளமாகவும் அவற்றை நோக்கிய, உரையாடல்களைத் தூண்டுவதாகவும், சமூகத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவரது படங்கள் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கொண்டாடப்படுவதில் ஆச்சரியமில்லை.
ஷாருக்கானுடன், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திரக் குழுவைக் கொண்ட ‘டங்கி’ திரைப்படத்தில் நகைச்சுவை, இதயம் வருடும் அழகான அனுபவம் என மீண்டும் திரையில் ஒரு காவியத்தை காட்டவுள்ளது. மேலும் இது இந்த டிசம்பரில் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை மகிழ்விக்க வருகிறது டங்கி.
இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ள, “டங்கி” திரைப்படம், இந்த டிசம்பர் 2023 இல் வெளியிடப்பட உள்ளது.
வினய் பரத்வாஜ் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, ராஜ் வரதனாக முன்னணி கதாபாத்திரத்திலும், புன்னகை பூ கீதா மேதா வரதனாகவும், யாஷிகா ஆனந்த் மாயா பிள்ளை என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மிஸ்ட்ரி, சஸ்பென்ஸ், எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட இந்தப் படம் வரும் நவம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
இதில் பாடகியும் இந்தப் படத்தின் இசையமைப்பாளருமான தர்ஷனா பேசியதாவது, “பல்லேலக்கா பாடல் மூலம் என்னுடைய சினிமா பயணம் ஆரம்பித்தது. அதன் பிறகு, ‘கருப்பு பேரழகா’, ‘ஆட்டக்காரா’ என கடந்த 17 வருடங்களாக பாடகியாக மட்டுமே இருந்துள்ளேன். இசையமைப்பாளராக ஆவேன் என நினைத்துக் கூட பார்த்ததில்லை. அதை ‘சில நொடிகளில்’ படம் நிறைவேற்றியுள்ளது. அந்த வாய்ப்புக் கொடுத்த வினய்க்கு நன்றி. கணவன், மனைவிக்கு இடையே ஒருவருக்கு மட்டும்தான் காதல் இருக்கிறது. அந்த எமோஷன் வேண்டும் என்று வினய் சொன்னார். இரண்டு பாடல்கள் செய்து கொடுத்தேன். அதில் தொடுவானம் தேர்ந்தெடுத்தார். உங்களுக்கும் அந்தப் பாடல் பிடிக்கும் என நம்புகிறேன்”.
பாடகர் பிஜார்ன், ” இந்த வாய்ப்புக் கொடுத்த வினய்க்கும் என்னுடைய மியூசிக் டீமுக்கும் நன்றி. கண்டிப்பாக படம் எல்லோருக்கும் பிடிக்கும்”.
நடிகை யாஷிகா ஆனந்த், “படத்திற்கு நீங்கள் கொடுத்து வரும் ஆதரவுக்கு நன்றி. நிஜத்தில் நான் எப்படி மாடலிங் செய்கிறேனோ அப்படி தான் இந்தப் படத்திலும் மாடலாக நடித்திருக்கிறேன். ‘துருவங்கள் பதினாறு’ படத்தில் இருந்துதான் என் பயணம் ஆரம்பித்தது. நான் மிகப்பெரிய த்ரில்லர் ஃபேன். அதனால், இந்தப் படமும் பிடித்து நடித்தேன். நான் தல அஜித் சாரின் மிகப்பெரிய ஃபேன். ரிச்சார்ட் சாரிடம் பேசும்போது அஜித் சாருக்கு நான் கொஞ்சம் நெருக்கம் ஆகியுள்ளேன் என்று நினைத்து சந்தோஷப்படுவேன். பாடல்களும் இசையும் எனக்குப் பிடித்துள்ளது. நீங்கள் திரையரங்குகளில் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.
படத்தின் தயாரிப்பாளர், நடிகை ‘புன்னகை பூ’ கீதா பேசியதாவது, “‘சில நொடிகளில்’ படத்திற்கு நீங்கள் கொடுத்த ஆதரவுக்கும் கொடுக்கப் போகும் ஆதரவுக்கும் நன்றி. படம் ஒரு அழகான ஜர்னி. டீமும் அந்த அனுபவத்தைக் கொடுத்தது. வினய் ரொம்பவும் பொறுமையான நபர். ரிச்சர்ட் ப்ளஸன்ட்டானவர். யாஷிகா அவ்வளவு ஒத்துழைப்பு கொடுத்தார். ஒரு காட்சியில் பெட்டிக்குள் அவர் மடங்கி உட்கார வேண்டும். அவர் காலில் ஏற்கனவே பிளேட் உள்ளது. அப்படி உட்காருவது மிகவும் கஷ்டம். ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாது அவ்வளவு நேரம் உட்கார்ந்து இருந்தார். படம் உங்களுக்கும் பிடிக்கும். படத்தில் எனக்கு இருந்த சவால் ‘பட்டாசு பூவே’. அந்த பாடலுக்காக வரவேண்டிய சல்சா டான்ஸருக்கு கடைசி நேரத்தில் விசா கிடைக்காமல் போனது. அதனால் எங்களுக்கு லோக்கலில் கிடைத்தவரை உடனடியாக வரவைத்து ஒன்பதை மணி நேரத்தில் ரிகர்சல் செய்து அந்தப் பாடலை எடுத்தோம். இன்னும் கொஞ்சம் நேரம் கிடைத்திருந்தால் நன்றாக எடுத்து இருக்கலாமோ என்ற ஆதங்கம் இருக்கிறது. அந்த பாடல் சமயத்தில்தான் லண்டனில் எனக்கு கோவிட் வந்தது. அதன் பிறகு தான் தெரிந்தது செட்டில் நிறைய பேருக்கு தெரியாமலே கோவிட் இருந்தது என்று. இதுபோன்று சில சவால்களும் படத்தில் எனக்கு இருந்தது”.
தயாரிப்பாளர் ஜெயக்குமார், “”இந்தப் படம் முழுக்க லண்டனில் படமாக்கினோம். 35 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தினோம். நிறைவான ஒன்றாக இருந்தது. இயக்குநர் வினய் எதையும் திட்டமிட்டு செய்யக் கூடியவர். தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல இயக்குநர் கிடைத்துவிட்டார் என்றுதான் சொல்வேன். கெளதம் மேனனையும் நாங்கள்தான் அறிமுகம் செய்தோம். ரிச்சார்டும் சிறப்பாக நடித்துள்ளார். கீதா மேமுக்கு சினிமா மீது நேசமும் அர்ப்பணிப்பும் அதிகம். யாஷிகாவும் நன்றாக நடித்துள்ளார். இசையும் இந்தப் படத்தில் சிறப்பாக வந்துள்ளது. நன்றி”.
‘திரெளபதி’ பட இயக்குநர் மோகன்.ஜி. பேசியதாவது, “என்னுடைய ஹீரோ ரிச்சார்ட் சாருடைய படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நான் கலந்து கொள்வது மகிழ்ச்சி. இதுபோன்ற விழா அவருக்கு நடக்க வேண்டும் அதில் நான் கலந்து கொள்ள வேண்டும் என நான் நீண்ட நாள் காத்திருந்தேன். கடினமான ஒரு சமயத்தில் நான் போய் அவரிடம் நின்றபோது எனக்கு உதவுவதற்காக படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். படம் ரிலீஸின் போதும் எதிர்பாராத சில பிரச்சினைகள் வந்தது. அப்போதும் நான் அவரிடம்தான் போனேன். எனக்கு எல்லாவிதத்திலும் பக்கபலமாக நின்றார். அப்படி உருவானதுதான் ‘திரெளபதி’. அவர் இல்லை என்றால் ‘திரெளபதி’ இல்லை. இந்தப் படம் 18 கோடி ரூபாய் தமிழ்நாட்டில் வசூல் செய்தது. அதேபோல, அடுத்த படமான ‘ருத்ரதாண்டவ’மும் 13 கோடி ரூபாய் தமிழ்நாட்டில் வசூல் செய்தது. மூன்றாவது படம் ஒரு கேப் விட்டு பண்ணலாம் என்றார். அதனால்தான் செல்வா சாருடன் ‘பரகாசுரன்’ செய்தேன். நானும் ரிச்சரட் சாரும் மூன்றாவது முறையாக இணைய இருக்கிறோம். அதுகுறித்தான அறிவிப்பு விரைவில் வரும். சினிமாவில் நான் ஐந்து வருடம் பயணித்தது அவரால்தான். திடீரென இவர் யாஷிகாவுடன் ஃபோட்டோ போட்டதும், ‘என்ன சாருக்கு கல்யாணமா?’ என நிறைய பேர் என்னிடமும் கேட்க ஆரம்பித்துவிட்டனர். அவரிடம் நான் கேட்டபோது, சிரித்தார். பின்புதான் படத்திற்கான புரோமோஷன் எனப் புரிந்தது. ரிச்சார்ட் சாரை இது போல திரையில் ஸ்டைலிஷாகப் பார்ப்பது மகிழ்ச்சி. 24ஆம் தேதி படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.
இயக்குநர் வினய் பரத்வாஜ், “நான் இந்தியாவை விட்டு சென்று 18 வருடங்கள் ஆகிவிட்டது. சிங்கப்பூரில் செட்டில்ட். நல்ல பேங்க்கிங் வேலை இருந்தது. எனக்குப் பிரியமான ஒருவரை கேன்சரால் இழந்து விட்டேன். அதனால், புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த யூடியூப்பில் வீடியோக்கள் போட ஆரம்பித்தேன். சென்னையிலும் இது தொடர்பாக பல நிகழ்ச்சிகள் செய்திருக்கிறேன். நல்ல வரவேற்பு இருந்தது. சிங்கப்பூரில் ஸ்டார் விஜய், கலர்ஸ் தமிழுக்காக நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கினேன். அதன் பிறகு குறும்படம் இயக்குவதற்கான வாய்ப்பும் கிடைத்தது. எனக்குள் இருந்த இயக்குநரை அப்போதுதான் உணர்ந்தேன். மீடியா குளோபல் ஒன் நிறுவனம் கோவிட் சமயத்தில் எனக்கு கால் செய்து லண்டனில் செய்வது போன்ற ஒரு கதை இருந்தால் சொல்லுங்கள் எனக் கேட்டார்கள். வழக்கமான த்ரில்லர் கதைகளைப் போல இல்லாமல் வித்தியாசமான ஒன்றாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். த்ரில்லர், மிஸ்ட்ரி, காதல் என எல்லாமே இதில் உண்டு. இசை எனக்குப் பிடிக்கும். அதனால்தான் ஐந்து இசையமைப்பாளர்கள் இந்தப் படத்தில் உள்ளனர். தர்ஷாவின் பாடல் இன்று வெளியாகியுள்ளது. அவர் மிகவும் திறமையானவர். வித்தியாசமான யாஷிகாவை இந்தப் படத்தில் ரசிகர்கள் பார்ப்பார்கள். கீதா மலேசியாவில் பாப்புலரான ஆர்.ஜே. சிறந்த தயாரிப்பாளர் என்றாலும், அவரை நடிகராக எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் படத்தில் ஏற்ற கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளார். படத்தில் வித்தியாசமான கீதாவைப் பார்ப்பீர்கள். படத்தை எடுப்பதை விட அதற்கு நல்ல புரோமோஷன் செய்து டிஸ்டிரிபியூட் செய்வதுதான் பெரிய விஷயம். அது இந்தப் படத்திற்கு சிறப்பாகவே நடந்துள்ளது. மோகன் ஜி படங்களுக்கு நான் பெரிய ரசிகன். எங்கள் படம் பார்த்துவிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள். செலிபிரிட்டி நிகழ்ச்சியின் ஹோஸ்ட்டாக இதற்கு முன்பு பல பிரபலங்களை சந்தித்து இருக்கிறேன். அதில் இருந்து சொல்கிறேன். ரிச்சார்ட் பழகுவதற்கு மிகவும் எளிமையானவர். சிறந்த மனிதர். அவரை இந்தப் படத்தில் வித்தியாசமான நடிகராகப் பார்ப்பீர்கள். இது என்னுடைய முதல் தமிழ்ப் படம். இந்தப் படம் திரையரங்குகளில் நவம்பர் 24 ஆம் தேதி வெளியாகிறது. உங்கள் அன்பும், ஆதரவும் வேண்டும்”.
நடிகர் ரிச்சார்ட் ரிஷி, “படத்தில் ஐந்து அற்புதமான பாடல்களைக் கொடுத்த இசையமைப்பாளர்களுக்கும் நன்றி. இந்தப் படத்தில் நிறைய புது விஷயங்களைச் செய்திருக்கிறோம். உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். கண்டிப்பாக தியேட்டரில் இந்தப் படத்தைப் பாருங்கள். சின்னப் படங்கள் எல்லாம் நிறைய ஜெயித்திருக்கிறது. பெரிய படங்கள் எல்லாம் நிறைய தோற்றிருக்கிறது. அதனால், படங்களுக்கு ஆதரவு கொடுங்கள்” என்றார்.
விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் அருள் நந்து, மாத்யூ அருள் நந்து தயாரிப்பில், ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் நடித்துள்ள ‘ஜோ’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நேற்று நடந்தது.
விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பாளர் டி. அருள் நந்து பேசியதாவது, “15 வருடங்களாக சினிமா செய்ய வேண்டும் என்பது எங்களுடைய கனவு. அதை 2023 செய்யக் காரணம் ஏகன்தான். அவர் எங்களிடம் வந்து ரியோவிடம் ஒரு கதையுள்ளது அதை செய்தால் நன்றாக இருக்கும் எனக் கூறினார். ரியோ கதை சொன்னது மிகவும் பிடித்திருந்தது. உடனே படம் பண்ணலாம் என முடிவெடுத்து விட்டோம். படத்திற்காக அனைவரும் கடுமையாக உழைத்துள்ளனர். படத்தை நான் இதுவரை எட்டு முறை பார்த்துள்ளேன். ஒவ்வொரு முறை பார்க்கும் பொழுதும் புதிதாக உள்ளது. படம் மிகப்பெரிய வெற்றியடையும் என்ற நம்பிக்கையுள்ளது”.
தயாரிப்பாளர் மேத்யூ, ” படம் 2 மணி நேரம் 25 நிமிடங்கள் என்றால் படம் பார்க்கக் கூடியவர்களுக்கு ஏதேனும் ஐந்து, பத்து நிமிடங்கள் தங்களுடன் கனெக்ட் செய்து கொள்ளும்படியான மொமெண்ட் நிச்சயம் இருக்கும். முதல் பாதி முழுவதுமே எனக்கு அப்படித்தான் இருந்தது. எல்லாருமே கடினமான உழைப்பைக் கொடுத்துள்ளனர். படம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்”.
பாடலாசிரியர் விக்னேஷ் ராமகிருஷ்ணன், “இளமை ததும்ப ததும்ப இந்தப் படத்தைக் கொடுத்துள்ளோம். ரியோ நேர்த்தியான நடிப்பைக் கொடுத்துள்ளார். படம் நன்றாக உள்ளது”.
பாடலாசிரியர் கிரண் வரதன், “இந்த வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் ஹரி, ரியோ, தயாரிப்பாளர்களுக்கும் நன்றி” என்றார்.
பாடகர் ஆண்டனி தாசன், “ரியோவுக்காக இரண்டாவது முறை பாடியுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. ரசிகர்களைப் போலவே நானும் இந்தப் பாடலைக் கேட்க ஆர்வமாக உள்ளேன். இந்த வாய்ப்புக் கொடுத்த இசையமைப்பாளர் சித்துகுமாருக்கும், பாடலாசிரியர் கிரண் வரதனுக்கும் நன்றி. ரசிகர்களுக்கும் பாடல் நிச்சயம் பிடிக்கும்”.
கலை இயக்குநர் ஏ.பி.ஆர்., “‘காப்பான்’, ‘பீஸ்ட்’, ‘ஜெயிலர்’ போன்ற பல படங்களில் அசோசியேட்டாக வேலை பார்த்துள்ளேன். ரியோ அண்ணன் இதுபோல புது அணி உள்ளது எங்களுக்கு செய்து தர முடியுமா என்று கேட்டார். அவ்வளவு சந்தோஷமாக இருந்தது இவர்களுடன் வேலை பார்த்தது. சிறப்பான அனுபவம் எனக்கு கொடுத்தது. அடுத்த படமும் ரியோ அண்ணன் எனக்கு வாய்ப்பு கொடுப்பார் என நம்புகிறேன்”.
ஒளிப்பதிவாளர் கே.ஜி. விக்னேஷ், “படத்திற்கான லொகேஷன் எதுவும் ஏமாற்றாமல் நேரடியாக அங்கு போய் எடுத்து வந்தோம். தயாரிப்பு தரப்பும் அதற்கு எங்களுக்கு முழு ஆதரவு கொடுத்தது. நன்றி”
எடிட்டர் கே.ஜி. வருண், ” இந்த படத்தின் கதையை ஹரி என்னிடம் சொன்னபோது நாஸ்டாலஜியாவாக இருந்தது. நன்றாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தது. படமும் நன்றாகவே வந்திருக்கிறது”.
நடன இயக்குநர் அபு, ” என்ன படத்தில் வேலை பார்க்க வேண்டும் என நாங்களே ஆர்வமாக கேட்டு வந்தோம். வாய்ப்பு கொடுத்த ஹரிக்கு நன்றி.
நடன இயக்குநர் சார்ல்ஸ், “படத்தின் பாடல்களை பெரிய அளவில் நன்றாக செய்ய வாய்ப்பு கொடுத்த ஹரிக்கும் ரியோவுக்கும் நன்றி”.
விஜே ராக்கேஷ், “இந்தப் படத்தில் எல்லாரும் கிட்டத்தட்ட ஒரே வயது என்பதால் படப்பிடிப்புக்கு போகும் போதே ஜாலியாக இருக்கும். இயக்குநரும் எங்களுடன் கூலாக உட்கார்ந்து பேசுவார். ஆனால், வேலை என்று வந்துவிட்டால் சின்சியராக செய்து விடுவார். ரியோ இந்த படம் மூலம் இந்த இடத்திற்கு வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நானும் ரியோவும் இந்த படத்தில் ஸ்கிரீன் ஷேர் செய்துள்ளோம்”.
கவின், “ரியோவின் உழைப்பு இந்த படத்தில் அதிகமாக இருக்கிறது. என்னை நம்பி இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி”.
ஆர்.ஜே. இளங்கோ குமரன், “ஹீரோவுக்கு அப்பா கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்திருக்கிறேன். அன்பிற்காக நான் உள்ளே நுழைந்த படம் இது. ஆனால், படத்திற்குள் வந்த பிறகு தான் தெரிந்தது இந்த படமே அன்பால் ஆனது என்று. அதனால், 24ஆம் தேதி ‘ஜோ’ படம் பார்த்து உங்கள் அன்பைக் கொடுங்கள்”.
இயக்குநர் சீனு ராமசாமி, ” இந்தப் படத்தில் உள்ள கலைஞர்களுக்கும் தயாரிப்பாளருக்கும் எனது வாழ்த்துக்கள். இதில் நடித்த ரியோ, இயக்குநர் ஹரிஹரன் என யாருமே எனக்கு பெரிய அறிமுகம் இல்லை. தயாரிப்பாளர் அருள் நந்து மட்டுமே எனக்கு தெரியும். அவர்தான் இந்த படத்தை என்னை பார்க்க சொல்லி சொன்னார். படம் பார்த்த பின்பு படத்தின் புரோமோஷன்காக ஒரு சாட்சியாக நானும் வந்திருக்கிறேன். அவ்வளவு அருமையான படம் இது. படம் பார்த்த பின்பு எனக்கு 20 வயது குறைந்தது போல உள்ளது. இந்த படம் பார்த்த பின்பு மக்களிடம் கொண்டு போய் சேர்க்க ஏதாவது சொல்ல வேண்டுமென்று என்னை உந்தியது. குடும்பத்தோடு எல்லோரும் இந்த படத்தை நிச்சயம் பார்க்கலாம். சமீபத்தில், மனநிறைவோடு நான் பார்த்த படம் ‘ஜோ’. இளைஞர்களே நம்பி படம் எடுத்த இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் நான் நன்றி சொல்கிறேன். ஒரு மனிதனை காதல் எப்படி தோற்கடிக்கிறது வாழவைக்கிறது என்பதை இந்த படம் சொல்லும். இந்த படம் என்னை பயங்கரமாக தாக்கி அழ வைத்தது. இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இதில் ஒரு பாடல் பாடியுள்ளார். அவரை என் படத்தில் கூட இப்படி நான் பயன்படுத்தவில்லை. அவர் குரல் வரும் போது எல்லாம் மனம் கலங்குகிறது. படம் நல்ல திரையரங்க அனுபவத்தை நிச்சயம் கொடுக்கும்” என்றார்.
நடிகர் தீனா, ” ரியா அண்ணாவின் ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு’ அவருடன் எனக்குப் பழக்கம். அவர் கூப்பிடவில்லை என்றாலும் இந்த நிகழ்வுக்கு நானே வருவேன். இந்த படத்தில் அவர் எப்படி நடித்திருக்கிறார் என்பதை பார்க்க ஆர்வமாக உள்ளேன்” என்றார்.
நடிகர் புகழ், “படத்தில் நடித்தோமோ போனோமோ என்றில்லாமல் உங்கள் பட நிகழ்வுக்கு நீங்களே ஹோஸ்ட் செய்து கொண்டிருப்பது பெரிய விஷயம். உன்னுடைய உழைப்புக்கு நிச்சயம் இந்த படம் மிகப்பெரிய இடத்தை போய் சேரும்”.
சக்தி ஃபிலிம் ஃபேக்டர் சக்திவேலன், “ஒரு படம் பார்ப்பது என்பது ஒரு புத்தகம் படிப்பதற்கு சமம் என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் அருள் நந்து அண்ணன் என்னிடம் சொன்னார். ‘ஜோ’ படத்திற்காக கதாநாயகன் ரியோவில் இருந்து அனைவருமே கடுமையாக மூன்று வருடம் உழைத்துள்ளனர். டிசம்பர் 24 தான் வெளியிட வேண்டும் என அவ்வளவு ஆசையோடு கேட்டார். பிடித்தவர்களுக்காக திருப்தியாக நான் செய்து கொடுக்கும் படம் இது”.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, “இந்த படத்தின் டிரைய்லரை அருள் நந்து போட்டு காண்பித்தபோது நன்றாக இருக்கிறது எனது தோன்றியது. புரமோஷன் பாடலுக்காக யுவன் வந்தபோது படத்தை பார்க்க வேண்டும் என்று எண்ணம் தோன்றியது. தான் கமிட் செய்த புராஜெக்ட்டை மிகவும் விரும்பி, முழு அர்ப்பணிப்பு கொடுத்து அருள் நந்து செய்துள்ளார். அதற்காகவே இந்த படமும் அவருக்கு வெற்றியை கொடுக்க வேண்டும். ‘ஜோ’ படத்தின் கிளைமாக்ஸ் நிச்சயம் உங்களை நெகிழ வைக்கும். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்”.
ஃபைனான்சியர் அன்புச்செழியன், ” படத்தில் எல்லாருமே சிறப்பாக நடித்துள்ளனர். முதல் பாதி ஜாலியாகவும் இரண்டாம் பாதி எமோஷனலாகவும் போனது. ’96’ போல படம் வெற்றிப் பெற வாழ்த்துக்கள்”.
நடிகர் ஏகன், “இந்த படத்தின் கதை கேட்டதில் இருந்தே கதையும் என் கதாபாத்திரமும் மிகவும் பிடித்திருந்தது. படம் உங்களுக்கும் பிடிக்கும்”.
நடிகர் அன்புதாசன், ” கடினமான உழைப்பைக் கொடுத்தால் எந்த ஒரு படமும் வெற்றி பெறும். அப்படியான உழைப்பை ‘ஜோ’ படக்குழுவினர் கொடுத்துள்ளனர். படதின் இயக்குநர், தயாரிப்பாளர், ஹீரோ, ஹீரோயின் எல்லோருக்கும் நன்றி. வாழ்த்துக்கள்!”
நடிகர் கெவின், “‘படத்தில் ஒரு கதாபாத்திரம் இருக்கிறது. நடிக்க முடியாமா?’ என ரியோ கேட்டார். இதற்காக தான் காத்திருக்கிறேன் என்று சொல்லி இந்த படத்தில் நடித்தேன். ரொம்பவே பிரெண்ட்லியான டீமாக தான் இருந்தது. படத்தில் நானும் இருப்பது மகிழ்ச்சி”.
நடிகர் விகே, “இந்தப் படத்தில் நான் நடிப்பேன் என்று நினைக்கவே இல்லை. ஹரி சார் கதை சொன்னதும் எனக்கு பிடித்திருந்தது. வாய்ப்புக்கு நன்றி”.
நடிகர், இணை இயக்குநர் குட்டி ஆனந்த், “இந்தப் படத்திற்கு கோ டைரக்டராக தான் உள்ளே வந்தேன். ஆனால், அந்தப் பணியை நான் ஒழுங்காக செய்யவில்லை என்று ஆர்டிஸ்ட் ஆக்கிவிட்டார்களா என்று தெரியவில்லை. இயக்குநர் ஹரிக்கு நன்றி”.
இசையமைப்பாளர் சித்துகுமார், “எனக்கும் இயக்குநர் ஹரிக்கும் ஒரு நல்ல நட்பு இருக்கிறது. இருந்தாலும் நாங்கள் படம் முடியும் வேளையில்தான் இன்னும் நெருக்கமானோம். ரியோ அண்ணனோடு ஷார்ட் பிலிம்ஸ் காலத்திலிருந்து பணியாற்றி வருகிறேன். என்னுடன் பணிபுரிந்த அனைவருக்கும், படக்குழுவுக்கும் நன்றி”.
நடிகை மாளவிகா, “நான் ஒரே மலையாளி. இந்தப் படத்தில் என்னை நம்பி மிக முக்கியமான வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர், இயக்குநர் ஹரி இவர்களுக்கு நன்றி. படத்தின் கதை மிகவும் பிடித்து செய்தேன். ரியோ சீனியராக இருந்தாலும் எங்களை மிகவும் நன்றாக நடத்தினார். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.
நடிகை பவ்யா, “தயாரிப்பாளர், இயக்குநர், ரியோ என எல்லாருக்குமே நன்றி. நாங்கள் அனைவரும் முழு மனதை கொடுத்து தான் இந்த படத்தில் வேலை செய்திருக்கிறோம். இந்தப் படத்தில் பணிபுரிந்த எல்லாருமே இப்போது எனக்கு பெஸ்ட் நண்பர்கள். இந்தப் படத்தில் எண்டர்டெயின்மெண்ட், ஆக்ஷன், எமோஷன், லவ் என எல்லாமே இருக்கும். ஒரு உண்மையான காதலை உணர வேண்டும் என்றால் கண்டிப்பாக ‘ஜோ’ படத்தை நீங்கள் பாருங்கள்”.
இயக்குநர் ஹரிஹரன், ” இந்தப் படத்தின் நிகழ்விற்கு வந்து பெரிய வார்த்தைகள் சொன்ன சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நன்றி. நான் இயக்குநராக இந்த இடத்திற்கு வருவதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி. 2015 வாக்கில் இந்த கதையை ரியோ அண்ணனிடம் சொன்னேன். விடிய விடிய படத்தின் கதையை கேட்டுவிட்டு நிச்சயம் இதை நான் செய்கிறோம் என்று சொன்னார். அன்றிலிருந்து இன்று வரை இந்த படத்தை தூக்கி சுமந்து கொண்டு உள்ளார். இப்படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி”.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் எஸ் கதிரேசன் தயாரிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்திருக்கும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ குழுவின் நன்றி தெரிவிப்பு விழா
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், ரெட் ஜெயின்ட் மூவீஸ் வெளியீட்டில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10 அன்று வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்திருக்கும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள் கல் ராமன் எஸ் சோமசேகர், கல்யாண் சுப்பிரமணியம் மற்றும் அலங்கார் பாண்டியன் ஆவர். இப்படத்தின் நன்றி தெரிவிப்பு விழா சென்னையில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 17) நடைபெற்றது. நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
சட்டானி பாத்திரத்தில் நடித்த விது பேசியதாவது…
வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. பத்திரிகையாளர் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி. சீனியர்களுடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. லாரன்ஸ் சார் மற்றும் எஸ் ஜே சூர்யா அவர்களுடன் நடித்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.
எடிட்டர் ஷபிக் முகமது அலி பேசியதாவது…
அனைவருக்கும் நன்றி. ஸ்டோன் பெஞ்ச் குடும்பத்தை சேர்ந்தவன் நான். கார்த்திக் சுப்புராஜ் சாரால் தான் நான் இன்றைக்கு இந்த இடத்தில இருக்கிறேன். பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி, நீங்கள் இந்தப்படத்தை பத்தி பேசியிருக்கவில்லை என்றால் நான் இங்க பேச முடிந்திருக்காது.
நடிகர் நவீன் சந்திரா பேசியதாவது…
பத்திரிகையாளர் நண்பர்களுக்கும் இந்த வெற்றியை கொடுத்த ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனத்திற்கும் மிகப்பெரிய நன்றி. எனக்கே என்னுடைய கேரக்டர் மீது வெறுப்பு வரும் அளவிற்கு கதை இருந்தது. எஸ் ஜே சூர்யா சார் மற்றும் லாரன்ஸ் சாருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். இந்த பாத்திரத்தை எனக்கு கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் சாருக்கு மிக்க நன்றி. ‘ஜிகர்தண்டா’ திரைப்படம் பார்த்தவுடன் கார்த்திக் சுப்புராஜ் சார் திரைப்படத்தில் ஒரு சீன் மட்டுமாவது நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன், இந்த திரைப்படத்தில் மிகப்பெரிய கதாபாத்திரம் கொடுத்ததற்கு மிகவும் நன்றி.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசியதாவது…
திரையுலகில் எந்த மாதிரி படம் செய்ய வேண்டும் என்று தொழில்நுட்ப கலைஞர்கள் இடையில் விவாதம் இருந்து கொண்டே இருக்கும், நாம் ஆசைப்பட்டு செய்ய வந்த படங்கள் சில சமயங்களில் தான் கிடைக்கும், அந்த மாதிரி படம் மக்களுக்கும் பிடித்திருப்பது மகிழ்ச்சி. கார்த்திக் சுப்பராஜ் மாதிரியான இயக்குநர் தொடர்ந்து ஒரே விஷயத்தை செய்யாமல், அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் சினிமாவை செய்வார்கள் அவருடன் நானும் இருப்பது மகிழ்ச்சி. எங்கள் டீமில் இந்தப்படத்தின் இசைக்காக நிறைய உழைத்தோம். கார்த்திக் படம் மீண்டும் தியேட்டரில் எப்போது வரும் என காத்திருந்தோம். இந்தப்படத்தை இப்போது தியேட்டரில் மக்கள் கொண்டாடுவது மகிழ்ச்சி. படத்திற்கு நீங்கள் தந்த ஆதரவுக்கு நன்றி.
தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேசியதாவது…
இங்கு வந்திருக்கும் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு நன்றி. பத்திரிகையாளர் காட்சியிலேயே இப்படத்திற்கு நீங்கள் மனதார பாராட்டு தெரிவித்தீர்கள். ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படத்தை பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டேன். இந்த திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்ததற்கு அனைவருக்கும் நன்றி. ஸ்டோன்பெஞ்ச் பயணத்தில் இது ஒரு முக்கிய மைல்கல். இந்த திரைப்படத்தை பொறுத்தவரை நான் பேசுவதற்கு நிறைய இருக்கிறது. ரெட் ஜெயின்ட்டுக்கு மிக்க நன்றி. கார்த்திக் சுப்பராஜ் அவர்களுக்கு மிகவும் நன்றி. மக்களிடம் இந்த திரைப்படம் மிகப்பரிய அளவில் சென்றடைந்துள்ளது, அனைவரும் ரசிக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.
நடிகர் மற்றும் இயக்குநர் எஸ் ஜே சூர்யா பேசியதாவது…
வெற்றியை பகிர வேண்டிய நேரம் இது. பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றி. மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று தியேட்டர் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கிறது என்று பார்த்தோம். ரசிப்புத் தன்மை தற்போது முன்பை விட மிகவும் அதிகமாகி உள்ளது. ஒரு நகைச்சுவை காட்சிக்கு கைத்தட்டல் வரலாம், ஆனால் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளுக்கு வரும் போது ரொம்ப ரொம்ப சந்தோஷமாக உள்ளது.
இப்படத்தை வெளியிட்ட ரெட் ஜெயின்ட் நிறுவனத்திற்கு மிக்க நன்றி. “நம்ம பேசக்கூடாது, நம்ம படம் பேசனும்” என்று கார்த்திக் சுப்பராஜ் சொல்வார். அதே மாதிரி இந்த படம் பேசுகிறது. லாரன்ஸ் அவர்கள் எனது மிகப்பெரிய நண்பர், நல்ல மனிதர், நல்ல பெயரை அவர் சம்பாதித்திருக்கிறார். தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் அவர்களின் குழுவினர் அனைவருக்கும் நன்றி. இந்த திரைப்படத்தில் எல்லாமே நன்றாக அமைந்தது. அனைவருக்கும் பிடித்த மாதிரி அமைந்திருக்கிறது. நல்ல கதையை இயக்குநர் திரையில் காட்டியிருக்கிறார்.
நடிகர் ராகவா லாரன்ஸ் பேசியதாவது…
பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த படம் எனக்கு பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது. என் உள் மனது சொன்ன மாதிரி இந்த படத்தின் நாயகன் கார்த்திக் சுப்புராஜ் தான். இந்த படத்திற்கு கடவுளின் ஆசிர்வாதம் நிறைய உள்ளது. சட்டானி கதாபாத்திரத்தில் நடித்த விதுவிற்கு மிகப்பெரிய பாராட்டுகள். ரெட் ஜெயின்ட் நிறுவனத்திற்கு மிகவும் நன்றி.
நிறைய பேர் இந்த படத்தை பாராட்டி உள்ளனர். என்னுடைய குரு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சார் அவர்கள் வாழ்த்தியதற்கு மிகவும் நன்றி. ராகவேந்திரா சுவாமியை நேரில் பார்த்ததில்லை, ரஜினிகாந்த் அவர்களை என்னுடைய ராகவேந்திரா சுவாமியாக நினைக்கிறேன். என் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. என் அம்மா பெயரில் ஒரு பெரிய கல்யாண மண்டபம் கட்டப் போகிறேன். அதற்கு உங்கள் வாழ்த்துகள் தேவை. நன்றி.
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பேசியதாவது…
அனைவருக்கும் வணக்கம், இந்த திரைப்படத்தின் மீது எனக்கு பெரிய நம்பிக்கை இருந்தது, அதே சமயம் பதட்டமும் இருந்தது. உங்கள் அனைவரின் ஆதரவோடும் இன்று ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ மாபெரும் வெற்றி பெற்றிருப்பது மிக்க மகிழ்ச்சி. இந்த படத்தை திரையரங்கில் பார்த்த அனைவருக்கும் நன்றி. படத்தின் தலைப்பை வழங்கிய ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் திரு கதிரேசன் அவர்களுக்கு நன்றி. இதில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம் அவர்களுக்கு நன்றி. லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா, நிமிஷா சிறப்பாக நடித்திருந்தனர். சட்டானி கதாபாத்திரம் அவ்வளவு சுலபம் இல்லை. அந்த வேடத்தில் நடித்த விது மிகவும் கஷ்டப்பட்டு நடித்தார்.
இந்த படத்திற்கு கடவுளின் ஆசிர்வாதம் நிறைய இருக்கிறது. நிறைய விஷயங்கள் நடந்தன. இதன் காட்சிகளை நாங்கள் செதுக்கவில்லை, எல்லாம் கடவுளின் அருளால் தானாக அமைந்தது. ஒன்றரை வருடத்திற்கு முன்னால் இந்த கதையை பற்றி பேசிக்கொண்டு இருந்தோம், இன்று இது திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ், இயக்குநர்கள் ஷங்கர், நெல்சன், மாரி செல்வராஜ் உள்ளிட்ட பலருக்கு நன்றி. என்னுடைய தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் என்னை பாராட்டி உள்ளார். ‘பீட்சா’ மற்றும் ‘மெர்குரி’ படங்களுக்கு பாராட்டிய ஒரே நபர் தலைவர் மட்டும் தான். நன்றி தலைவா. மாபெரும் ஆதரவளித்துள்ள பத்திரிகையாளர்களுக்கு நன்றி. .
பிரைம் வீடியோ வழங்கும், ஸ்டுடியோ சக்தி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில், B.S.ராதாகிருஷ்ணன் தயாரிப்பில், இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கத்தில், நடிகர் ஆர்யா நடிப்பில், ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள “தி வில்லேஜ்” தமிழ் ஒரிஜினல் சீரிஸ் நவம்பர் 24 ஆம் தேதி வெளியாகிறது.
தமிழில் முதல் முழுமையான ஹாரர் திகில் ஒரிஜினல் சீரிஸாக, உருவாகியுள்ள “தி வில்லேஜ்” சீரிஸின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது.
இவ்விழாவினில்..
பிரைம் வீடியோ இந்தியா & தென்கிழக்கு ஆசியா, தலைவர் அபர்ணா புரோஹித் பேசியதாவது.. பிரைம் வீடியோ மூலம் தி வில்லேஜ் சீரிஸை உங்கள் முன் அறிமுகப்படுத்துவது மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்த சீரிஸ் மூலம் எங்கள் பார்வையாளர்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்ல உள்ளோம். இந்த சீரிஸ் ஒரு மறக்க முடியாத பயணம். மிக உணர்வுப்பூர்வமான பயணம். 4 வருடங்கள் முன் ஆரம்பித்தது. முழுதாக எழுதி முடிக்க 2 வருடங்கள் ஆனது. கோவிடை கடந்து இது முழுதாக உருவாக ஆரம்பித்த தருணத்தில், ஆர்யா சார் ஓகே சொன்ன பிறகு இந்த சீரிஸ் உண்மையிலேயே மிகப்பெரியதாகிவிட்டது. பொதுவாக ஹாரர் சீரிஸ் இங்கு யாரும் பார்த்திருக்க மாட்டீர்கள். அந்த வகையில் இது உங்களுக்கு கண்டிப்பாக மிகப் புதுமையான அனுபவமாக இருக்கும். படக்குழு அனைவரும் கடினமாக உழைத்துள்ளார்கள். அனைவருக்கும் நன்றி.
தயாரிப்பாளர் B.S. ராதாகிருஷ்ணன் பேசியதாவது… மிக்க மகிழ்ச்சி, நான்கு வருடங்கள் முன்பு மிலிந்த் சார் இதைப்பண்ணலாம் என்றார். அப்போது ஆரம்பித்த பயணம் அபர்ணா மேடம் சொன்னது போல், இந்தக்கதை எழுதவே 2 வருடம் ஆனது. வேறு வேறு இடத்தில் நடக்கும் பல கதைகள், அதை ஒன்றிணைக்கும் மையப்புள்ளி எது, எப்படி என்பது தான் சுவாரஸ்யம். ஆர்யா சார் வந்த பிறகு தான் இது பெரிய படைப்பாக மாறியது. இந்த படைப்பை பொறுத்தவரை, மிலிந்த் மற்றும் எங்களின் பார்வையும், கதையின் மீதான நம்பிக்கையும் தான் இதில் நடிக்க காரணம் என்றார் ஆர்யா, அவருக்கு நன்றி. அமேசான் யூஎஸ் போலவே இங்கேயும், அவர்கள் முழுமையான ஈடுபாட்டோடு, உழைத்தார்கள். பெரும் ஆதரவு தந்தார்கள். எல்லோருக்கும் நன்றி.
இயக்குநர் மிலிந்த் ராவ் பேசியதாவது… இது தமிழுக்கு மிகவும் புதிது. கிராஃபிக் நாவலை இங்கு யாரும் திரைப்படைப்பாக செய்ததில்லை. ஆர்யா சாருக்கும் மிகப்புதியது. இதை அவர் செய்ய ஒத்துக்கொண்டது பெரிய விசயம். கிராஃபிக் நாவலை தமிழ்நாட்டில், தூத்துக்குடி அருகில் நடக்கும் கதை போல நமக்கு நெருக்கமாக, நம் மொழியில் உருவாக்கியுள்ளோம். முழுக்க நைட் கால் ஷீட் தான் அதனால் எல்லோரும் ரொம்ப கஷ்டபட்டு உழைத்தனர். நடிகர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி. இசை இந்த சீரிஸிற்கு மிக முக்கியம் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் அட்டாகாசமான இசையை தந்துள்ளார். விஷுவலும் நன்றாக வந்துள்ளது ஒளிப்பதிவாளருக்கு நன்றி. தொழில் நுட்பக்குழு மிகப்பெரிய உழைப்பை தந்துள்ளார்கள் அனைவருக்கும் நன்றி.
நடிகர் ஆர்யா பேசியதாவது… அபர்ணா மேடம் இல்லாமல் அமேசான் ப்ரைமில் எந்த புராஜக்டும் ஓகே ஆகாது. அவர் இதை ஓகே செய்திருக்கிறார் அதுவே பெரிய விசயம். இங்கு நிறைய ஒரிஜினல்ஸ் வர அவர் தான் காரணம் அவருக்கு நன்றி. மிலிந்த் இந்தக்கதையை சொன்ன போது, இதை எடுக்க முடியுமா ? என்று தான் முதலில் கேட்டேன். அவர் எழுதியது மிகப்பெரிய விஷிவல், படத்தை விட பெரிய பட்ஜெட், இதை எல்லாம் இங்கு எடுக்க முடியுமா?, சொல்வதில் 80 சதவீதம் எடுத்தாலே போதும் என்று சொன்னேன். இவ்வளவு பெரிய பட்ஜெட்டை ப்ரைமில் ஒகே செய்தார்கள், மிலிந்த் சொன்ன மாதிரி எடுத்து விட்டார் அதுவே மகிழ்ச்சி. மிலிந்த் ஈஸியாக எந்த ஒரு காட்சிக்கும் ஒகே சொல்ல மாட்டார், இதை எடுப்பது மிகக்கடினம். ப்ராஸ்தடிக் மேக்கப், ஷீட்டிங் லோகேஷன் என எல்லாமே மிக கடினமாக இருந்தது. 3 வருட நீண்ட பயணம். இதை எடுத்து முடித்ததற்கே மிகப்பெரிய பார்டி வைக்க வேண்டும். அவ்வளவு கஷ்டபட்டிருக்கிறோம். மேலும் இது எனக்கு புது எக்ஸ்பீரியன்சாக இருந்தது. இவ்வளவு கோரியான ஹாரர் கதை நடித்ததே இல்லை. இது முழுக்க முழுக்க வித்தியாசமான கான்செப்ட், அதை நம்பித்தான் நான் வேலை செய்தேன். நரேன் சார் அவருடன் சேர்ந்து என் குழந்தையையும், மனைவியையும் தேடுவது தான் கதை. ஆனால் நிறைய சப் பிளாட் இருக்கும். ஒவ்வொரு எபிஸோடும் நீங்கள் அடுத்து என்ன என்று எதிர்பார்ப்பீர்கள். இந்த மாதிரி கதையில் விஷுவல் மற்றும் சவுண்ட் ரொம்ப முக்கியம், அதை மிலிந்த் கொண்டு வந்திருக்கிறார். விஷுவல் எபெஃக்ட்ஸ் எல்லாம் முடித்து, உங்கள் முன் கொண்டு வர இவ்வளவு காலம் தேவைப்பட்டது. இப்போது பார்க்க மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும் நன்றி.
நடிகை பூஜா ராமசந்திரன் பேசியதாவது.. தமிழில் நீண்ட காலம் கழித்து, நான் திரும்ப வந்திருக்கிறேன், மகிழ்ச்சியாக உள்ளது. என்னை எப்படி மிலிந்த் இந்த பாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்தார் என்று ஆச்சர்யமாக இருந்தது, இம்மாதிரி பாத்திரம் செய்ய வேண்டும் என்பது கனவு, எனக்கு இந்த பாத்திரம் வந்தது மிகப்பெரிய மகிழ்ச்சி. நான் கர்பமாகும் முன் வாய்ப்பு வந்தது. நிறைய ஆக்சன் காட்சிகளில் நடித்தேன் மூன்று மாதத்தில் எடுத்து விடுங்கள் என்று டைரக்டரிடம் கேட்டேன், அவர் செய்து தந்தது மகிழ்ச்சி. பொதுவாக நைட் ஷூட் எடுப்பது கஷ்டம் இது அதை விட கஷ்டம் ஆனால் மிலிந்த் சார் செம்ம கூலாக ஹேண்டில் செய்தார். இந்த சீரிஸில் நானும் பங்கு பெற்றது மகிழ்ச்சி. எல்லோரும் கஷ்டப்பட்டுள்ளார்கள் சீரிஸ் மிகச்சிறப்பாக வந்துள்ளது. அனைவருக்கும் நன்றி.
நடிகர் ஜெயப்பிரகாஷ் பேசியதாவது.. இந்த சீரிஸில் ரொம்ப ஈஸியாக இருந்து நடித்தது நான் மட்டும் தான். ஏனென்றால் எல்லாவற்றிற்கும் பிள்ளையார் சுழி போடுவது நான் தான், அதை செய்வது அர்ஜூன். இயக்குநரின் உழைப்பு மிகப்பெரியது. எல்லாவற்றையும் அருமையாக ஒருங்கிணைத்துள்ளார். அமேசான் எங்கள் எல்லோரையும் மிக நன்றாக பார்த்துக் கொண்டார்கள், நான் எல்லாம் ஏசி ரூமில் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் ஷீட் செய்தேன், மற்றவர்கள் காட்டுக்குள் பயங்கர கஷ்டபட்டிருக்கிறார்கள் அதைக்கேட்கும் போது தான் தெரிகிறது. இது தமிழுக்கு மிகப்பெரிய புதுமையான சீரிஸ், உங்களுக்குப் பிடிக்கும்.
நடிகர் அர்ஜூன் சிதம்பரம் பேசியதாவது.. என்னை, நேர்கொண்ட பார்வை, பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் வேறு ரூபத்தில் பார்த்திருப்பீர்கள், இதில் புதுவிதமாக பார்ப்பீர்கள். இது மிகப் புது அனுபவமாக இருந்தது. ஆர்யா கூட ஒரு சீனில் நடித்துள்ளேன் அதிலும் அவர் பின்னிவிட்டார். அது உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன், எனக்கு படத்தில் எந்த வித சிரமமும் இல்லை நடக்க கூட தேவையில்லை, வீல் சேரில் இருப்பேன். என்னுடைய கதாபாத்திரம் அப்படி தான் அமைந்தது , நான் இந்தப் படத்தில் நன்றாக நடித்தாலும் நடிக்காவிட்டாலும் இயக்குநர் தான் பொறுப்பு, அனைத்தும் அவரைத் தான் போய் சேரும், இந்தத் தொடர் வெளியாவதற்காக ஆர்வமாக காத்திருக்கிறேன் நன்றி.
நடிகர் ஜான் கொக்கன் பேசியதாவது.., எல்லோருக்கும் வணக்கம், என் குரு அஜித்குமாருக்கு வணக்கம், இந்த சீரிஸ் எனக்கு புதுமையான அனுபவம். சர்பாட்டா பரமபரை படத்திற்கு பிறகு ஆர்யா கூட மீண்டும் இதில் நடித்துள்ளேன், இதிலும் சண்டை போட்டிருக்கிறோம். என் பொண்டாட்டி கூட சேர்ந்து நடித்தது மகிழ்ச்சி. இக்கதையில் மியூடண்டாக நடித்தவர்கள் தான் உண்மையான ஹீரோக்கள். அவர்கள் காஸ்ட்யூமே 20 கிலோவுக்கு மேல் இருக்கும், அதில் ப்ராஸ்தடிக் மேக்கப் வேறு போட்டு நடித்தார்கள். சண்டைக்காட்சிகள் பயங்கரமாக உழைத்து எடுத்துள்ளார்கள். நீங்கள் இதுவரை பார்க்காத புதிய அனுபவமாக இந்த சீரிஸ் இருக்கும் நன்றி.
நடிகர் ஆடுகளம் நரேன் பேசியதாவது… சீரிஸ் பற்றி எல்லோரும் சொல்லிவிட்டார்கள், நிறைய கஷ்டப்பட்டோம் ஆனால் இப்போது பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. நான் இதுவரை நடித்ததில் இது மிகப்புதுசு. இந்தியாவிற்கே இது புதுசாக இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும் நாங்கள் அனைவரும் மிகப்பெரிய அளவில் நம்புகிறோம் அனைவருக்கும் நன்றி.
கைதி புகழ் நடிகர் ஜார்ஜ் மரியான் பேசியதாவது எல்லோருக்கும் நன்றி. எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநருக்கு நன்றி, இந்த சீரிஸில் கிராமத்தில் இருக்கும் ஒருவராக நடித்துள்ளேன். மிக நல்ல அனுபவம் உடன் நடித்தவர்கள் அனைவருக்கும் நன்றி எல்லோருக்கும் நன்றி.
நடிகர் தலைவாசல் விஜய் பேசியதாவது, நான் படப்பிடிப்பிற்கு வந்த முதல் நாளே அதிக நேரம் படப்பிடிப்பு நடந்தது, அப்போதே இயக்குநர் குறித்து தெரிந்துவிட்டது. நான் சீனில் நன்றாக பேசி நடித்த பிறகு, மீண்டும் சாதாரணமாக ஒன் மோர் என்று கேட்பார். நான் எனக்கு மட்டும் தான் இப்படி செய்கிறார் என்று தான் நினைத்தேன், ஆனால் அனைத்து நடிகர்களுக்கும் இதே நிலைமைதான், அனைவருமே பல வருடம் அனுபவம் நிறைந்தவர்கள் ஆனால் அனைவரிடமும் இயக்குநர் ஒன் மோர் கேட்பார். திரையில் தனக்கு எது தேவை என்பதில் தெளிவாக இருந்தார், அதை யாரையும் கோபப்படுத்தாமல், மகிழ்ச்சியாக முகத்தை கொண்டு, எங்களிடம் வேலை வாங்கிவிடுவார். மிகத்திறமையான இயக்குநர். இந்த சீரிஸ் புதுசாக இருக்கும், உங்கள் அனைவருக்கும் ஒரு ஆச்சர்யத்தை கொடுக்கும். கண்டிப்பாக உங்களை மகிழ்விக்கும் என்று நம்புகிறேன் நன்றி.
நடிகர் அஸ்வின் குமார் பேசியதாவது எனக்கு இந்தக்கதாப்பாத்திரம் தந்ததற்கு அமேசான் மற்றும் இயக்குநருக்கு நன்றி. ஆர்யா சாருக்கு மிக்க நன்றி. மிகப்புதுமையான அனுபவம். எல்லோரும் என்னை நன்றாக பார்த்துக்கொண்டனர். எல்லோரும் தாங்கள் கஷ்டப்பட்டதை சொன்னார்கள், கஷ்டம் கண்டிப்பாக இருக்கும் ஆனால் இப்போது பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. செம்ம ஆக்சன் காட்சிகள் நடித்துள்ளோம், வலி எல்லாம் பொருட்டே இல்லை, ஒரு பேஷன் இருந்தால் தான் இதைச் செய்ய முடியும். எல்லோரும் இதில் ஹீரோ தான். எல்லோருக்கும் நன்றி. உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.
நடிகை கலைராணி பேசியதாவது என்னோட முதல் வெப் சீரிஸ் அமேசானுக்கும் டைரக்டருக்கும் நன்றி. எல்லோரும் தாங்கள் கஷ்டப்பட்டதை சொன்னார்கள், நான் எல்லோரையும் விட ஃபர்ஸ்ட்டாக போக வேண்டும், லாஸ்ட்டாக வர வேண்டும், மேக்கப் போடவே 2 மணி நேரம் ஆகி விடும். மேக்கப் ஆர்டிஸ்ட் எல்லோரும் என்னை நன்றாக பார்த்துக்கொண்டார்கள், எப்போதும் அருகிலேயே இருப்பார்கள். மிக்கடினமாக உழைத்துள்ளார்கள். இயக்குநர் என்னை நேரில் வந்து பார்த்து, முழுக்கதையும் சொன்னார் அப்போது அவர் இயக்கத்தில் நயன்தாரா படம் வந்திருந்தது, எனக்கு பிடித்த படம், உடனே ஆர்வத்தில் அவரை சந்திந்தேன். எனக்கு கதை பிடித்திருந்தது, நான் எப்படி பேச வேண்டும் என்பதில் ஆரம்பித்து எல்லாவற்றையும் சொல்லித்தாந்தார்கள். நான் இதுவரை நடிக்காத பாத்திரம், இப்படி ஒரு சீரிஸ் பார்த்திருக்க மாட்டீர்கள் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
நடிகர் கோகுல் பேசியதாவது.. எனக்கு இந்தப்படத்தில் வாய்ப்பு வந்ததற்கு ஆர்யா சார் தான் காரணம் அவருக்கு நன்றி. சந்தோசம். டைரக்டரிடம் பாத்ரூம் கேட்டால், ரெண்டு மணி நேரம் கழித்து போகலாம் என்பார், மேக்கப் போட்டால் கடைசி வரை கலைக்க முடியாது, ரொம்பவும் கஷ்டபட்டு எடுத்துள்ளோம். ஆனால் சீரிஸ் பார்க்க புதிதாக இருக்கிறது. உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.
குழந்தை நட்சத்திரம் ஆழியா பேசியதாவது ஆர்யா சார் பொண்ணா நடிச்சிருக்கேன் வில்லேஜ் சீரிஸ், செம்ம அட்வென்ச்சாராக இருக்கும். ஷீட்டிங்கில் தூங்கும்போது ஜோக் சொல்லி எழுப்பி விட்டு விடுவார்கள். ஜாலியாக இருந்தேன் இந்த சீரிஸ் செம்மையாக இருந்தது. உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். ஆர்யா சார் என்னை நன்றாக பார்த்துக்கொண்டார். எல்லோருக்கும் நன்றி.
பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் தமிழ் திகில், ஒரிஜினல் வெப்சீரிஸ் தி வில்லேஜ் சீரிஸுக்கு, கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார், பாடல் வரிகளை மதுரை சொல்ஜர் (சியான் சாஹீர், செந்தில் குமார்), ஐக்கி பெர்ரி, சினேகன், குரு அய்யாதுரை மற்றும் ஷில்பா நடராஜன் எழுதியுள்ளனர். முத்து சிற்பி(காளிமுத்து), சிந்துரி விஷால், மதிச்சியம் பாலா(ஜி. முருகன்), குரு அய்யாதுரை, மதுரை சோல்ஜர் (சியான், செந்தில் குமார்), ஐக்கி பெர்ரி, கிரிஷ் கோபாலகிருஷ்ணன், டி.பிரதிமா பிள்ளை, ஷில்பா நடராஜன் ஆகியோர் பாடியுள்ளனர்.
ஸ்டுடியோ சக்தி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில், B.S.ராதாகிருஷ்ணன் தயாரித்துள்ள தி வில்லேஜ் தமிழ் ஒரிஜினல் சீரிஸை இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார், தி வில்லேஜ் சீரிஸ், அஸ்வின் ஸ்ரீவத்சங்கம், விவேக் ரங்காச்சாரி மற்றும் ஷாமிக் தாஸ்குப்தாவின் ஆகியோர் எழுதிய கிராஃபிக் ஹாரர் நாவலிலிருந்து உருவாக்கப்பட்டதாகும். இந்த கிராஃபிக் திகில் நாவல் யாழி ட்ரீம் ஒர்க்ஸ் வெளியீடாக வெளிவந்தது.
தனது குடும்பத்தைக் காப்பாற்றப் போராடும் ஒருவனின் அபாரமான போராட்டக் கதையைச் சொல்வது தான் தி வில்லேஜ் சீரிஸ். ஸ்டுடியோ சக்தி நிறுவனத்தின் சார்பில், இந்தத் தொடரை B.S. ராதாகிருஷ்ணன் தயாரித்துள்ளார். சீரிஸுக்கான திரைக்கதையை மிலிந்த் ராவ், தீரஜ் வைத்தி மற்றும் தீப்தி கோவிந்தராஜன் ஆகியோர் எழுதியுள்ளனர். இந்தத் சீரிஸில், பிரபல தமிழ் நடிகர் ஆர்யா, திவ்யா பிள்ளை, ஆழியா, ஆடுகளம் நரேன், ஜார்ஜ் மாயன், பி.என். சன்னி, முத்துக்குமார் கே., கலைராணி எஸ்.எஸ்., ஜான் கொக்கன், பூஜா, வி.ஜெயபிரகாஷ், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் தலைவாசல் விஜய் ஆகியோருடன் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
தி வில்லேஜ் சீரிஸ் பிரைம் வீடியோவில் நவம்பர் 24 முதல் இந்தியா மற்றும் 240+ நாடுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளுடன், ஆங்கில சப்டைட்டில்களுடன் வெளியாக உள்ளது.
~ Thiru CV Ganesan, Minister of Labour Welfare, GoTN flagged off the Hope Run ~ Chennai, 19th November 2023: CREDAI, Chennai in association with the Extra Mile Foundation is proud to have organized the much-awaited first edition of Premiethon 2023: The Hope Run today in Chennai. The Marathon was flagged off by Thiru CV Ganesan, Minister of Labour Welfare, Population, Employment and Training, Census, Urban and Rural Employment. Around 1000 participants including children above 5 years of age ran for different race categories, of 10 KM, 5 KM & 3 KM run commenced from Olcott Memorial Higher Secondary School, Besant Nagar, and it passed through Besant Nagar Beach and ended at Olcott Memorial School.
The event promised to be bigger and better than ever before, attracting children’s participants from all walks of life to come together to save premature and sick newborns. Regardless of fitness level or experience, there was a suitable distance for everyone to join in the excitement.
Commenting on the event, Mr. Sivagurunathan, President, CREDAI Chennai said, “We are excited to be associated with The Extra Mile Foundation for this event. CREDAI Chennai believes in making a difference in society, and this commitment is deeply embedded in every aspect of our work. The determination and selflessness of these young marathon runners as they go the extra mile to make a difference in the lives of babies is simply inspiring. We are grateful to witness that marathons like these, will not only benefit society but will also encourage fitness at an early age. We will support more of such endeavors in the future, paving the way for a healthy and vibrant young India.”
“CREDAI has been a strong believer in giving back to the society. And when it comes to saving the lives of future generations, this event has added more value to our purpose. It is very heartening to see young runners running for themselves but also for the tiniest lives in our community. They remind us that no act of kindness, no matter how small, is ever wasted”, Said Mr Rajkumar, Co-Ordinator, CREDAI Youth Wing
Participants had registered by contributing an amount for the charitable cause of providing the best of medical amenities to premature and sick newborns. By combining a passion for running with philanthropy, participants can make a positive impact on the community while pursuing their fitness goals
Chennai, 18th November 2023: Kauvery Hospital Alwarpet announced the setting up of Heart Institute on the inauguration of the ‘Kauvery International Cardiology Conclave 2023,’ held at ITC Grand Chola on November 18th and 19th. The Institute was unveiled by Padmashree Dr K. M Cherian, underscoring its unyielding commitment to advancing and promoting awareness in cardiac sciences, the Kauvery Heart Institute to set new benchmarks in world-class healthcare delivery.
The ‘Kauvery International Cardiology Conclave 2023 Marked by its distinguished setting and impactful discourse showcased ground-breaking developments in the field. Renowned speakers, cutting edge research presentations and discussions on the latest advancements in cardiac care that marked the two-day event. The response from over 250 delegates was overwhelmingly positive, reflecting the conclaves pivotal role in fostering collaboration and disseminating crucial knowledge in the pursuit improved health care outcomes.
Eminent national speakers from India and from across the globe further enriched the diversity of perspectives and expertise shared during the event. The topics covered ranged from Coronary Artery Disease, Structural Heart Disease, PCI & Cardiogenic Shock, Cardiac Electrophysiology, to Heart & Lung Transplant, offering attendees a comprehensive understanding of the latest developments in the field.
Kauvery Hospital during the conclave honored Dr A R Raghuram for his exemplary contribution in the field of Cardiothoracic surgery, Dr Mullasari Ajit S for his exemplary contribution in the field of Interventional Cardiology, Dr Raghavan Subramaniyam for his exemplary contribution in the field of Paediatric Cardiology & Dr T R Muralidharan for his exemplary contribution in the field of Interventional Cardiology and Electrophysiology.
In commemorating the successful finale of the ‘Kauvery International Cardiology Conclave 2023,’ Dr. Aravindan Selvaraj, Co-Founder & Executive Director of Kauvery Group of Hospitals said, “This International Conclave will enable the clinical talent to collaborate with international Doctors by embracing and leveraging the strengths of international colleagues to create an environment that benefits better clinical outcomes for our patients”
“Kauvery Hospital has been in the forefront of performing many first of its kind in the country and high-end cardiac surgeries like Complex Coronary Angioplasty, Impella, Hybrid Bypass Surgeries & Heart Transplants. Kauvery Heart Institute comprises internationally trained cardiologists, cardiac surgeons, technicians and Anesthetists to provide comprehensive care” He further added
Chennai, 15th November 2023: “Spell for Beginners” book was launched by Magick of healing in Chennai through Mr. Pariraj, Executive Engineer TANGEDCO and Mr. Prakash Sharma, Founder Director and Author of Bija Training Pvt. Ltd were the chief guests for the Book Launch and released the Book “Spell for Beginners”.
Magick of Healing is a Spiritual Organisation and our foundation rests on the belief that healing is a holistic process, touching not only the physical body but also the mind and spirit. Magick of Healing is not just a company; it’s a sanctuary where individuals can embark on a journey of self-discovery and restoration. Our practitioners, each a master in their own right, bring forth a wealth of knowledge from diverse traditions, creating a space where the mystical and the scientific converge.
Magick of Healing is more than a service provider; it’s a community, a gathering of like-minded individuals who share a common vision for a healthier, more balanced world. Our workshops, events, and online resources aim to foster connection and education, creating a space where knowledge can be shared and collective healing can take place.
● The certification has been launched with an aim to drive and facilitate an integrated approach to help India achieve Net Zero Carbon Emission goals. ● As part of this, IGBC also unveiled the significant aspects of its upcoming three-day Green Building Congress 2023 in Chennai ● Supported by the Government of Tamil Nadu and the World Green Building Council, India Green Building Congress 2023 for the first time, will provide a platform for all Indian construction industry stakeholders to attend and learn the benefits of migrating to green building.
Chennai, 15th November 2023: In a move to fast-track India’s journey towards its 2070 net zero goal, CII’s Indian Green Building Council (IGBC) today unveiled and introduced in Tamil Nadu its pioneering initiative – IGBC Nest – for the individual housing sector ahead of its flagship conference IGBC Green Building Congress 2023. After having transformed the commercial and industrial real estate sector with several green initiatives and certifications, IGBC has brought to foray a framework specifically developed for individual homeowners to build futuristic, green homes that help control and limit carbon emissions. The initiative was unveiled and introduced in a press conference today in the presence of Mr Ajit Kumar Chordia, Chairman, IGBC Chennai Chapter, Co Chair – Green Building Congress 2023, Mr Mahesh Anand, Co- Chairman, IGBC Chennai Chapter and Mr M Anand, Deputy Executive Director, CII – IGBC. IGBC Nest is a first-of-its-kind, Eco-friendly Self-developed Tenements framework and certification that aims to bring awareness and drive the individual owners to build a sustainable home with no or meager additional cost. The initiative encourages the owners to adopt green measures that are simple and have profound impacts in addressing resource efficiency and occupant’s health and wellbeing. The framework throws light on building envelopes, water & energy efficiency and harnessing solar energy. Since 2001, IGBC has garnered significant support from stakeholders in the Indian construction industry, leading to a noteworthy positive
impact on government, corporate, commercial, residential, industrial buildings, and the broader built environment. The press conference also witnessed the kick-start of IGBC’s Green Building Congress 2023, the only event in India that is supported by The World Green Building Council (World GBC), and 20 different countries’ Green Building Councils across the world. The flagship event is set to take place in the city after ten years from 23rd November 2023 to 25th November 2023 with the theme Advancing Net Zero Through Decarbonization. Through this, IGBC will provide a platform that brings together eminent industry leaders, policy makers and technology providers to exchange insights and vision on sustainable building practices. The conclave will also showcase 500+ innovative green products, materials, and technologies as part of a dedicated expo space over the course of the three days. Supported by the Government of Tamil Nadu, India Green Building Congress 2023 for the first time, will provide a platform for home-owners and residents to attend, network, learn and get inspired to foster green building practices in all facets of life. In addition to this, IGBC will also showcase some of the leading concepts and initiatives at the conference to secure a healthy lifestyle along with better savings. Sharing his insights on the initiative and conference, Mr. Ajit Kumar Chordia, Chairman, IGBC Chennai Chapter, Co Chair – Green Building Congress 2023, said “Our mission is to ensure every building in India is a green building that will not only uplift the economic status of every homeowner but also increase life expectancy with better health benefits. IGBC’s Nest Framework and Certification has been developed specifically for the individual homeowners to help them reduce energy cost by 20-30% and reduce water requirements by 30-50%. We foresee this initiative playing a significant role in building a green India not for this generation but for future generations as well. The IGBC Green Building Congress will lay a foundation for more such meaningful innovations to be launched for greening India’s building sector.” Adding to this, Mr Mahesh Anand, Co- Chairman, IGBC Chennai Chapter, said “The Green Building Congress acts as a pivotal platform, uniting government officials, real estate developers, architects, and construction industry players with the shared objective of fostering a green future for India. After nearly a decade, we are happy to be bringing back our flagship Green Building Congress to Chennai once again. In the last ten years, Tamil Nadu as a state has become a role model for most of the other states due to a significant green building adoption
not just in the capital city, Chennai, but also in major urban centres like Coimbatore, Madurai, Trichy, Kanchipuram, Tirupur, and Tuticorin, among many others; with every typology of buildings going green with IGBC, across the state. We express our gratitude to the state government for proactively supporting green building initiatives through incentives and subsidies.” The upcoming Green Building Congress 2023 is poised to feature a distinguished roster of 150+ national and international speakers, offering in-depth sessions on a range of topics, including Green Homes, Green and Low Carbon Materials, Decarbonizing Technologies, RE Electrification, Carbon-Neutral Cities, and Soft Tools and Services. Following these enlightening discussions, the event will conclude with the prestigious IGBC awards ceremony, recognizing industry leaders who have directed their efforts towards net zero and sustainability, making this event even more valuable to look forward to.
விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் அருள் நந்து, மாத்யூ அருள் நந்து தயாரிப்பில் ரியோ ராஜ் நடித்துள்ள படம் ‘ஜோ’!
ரியோ ராஜ் நடித்துள்ள ’ஜோ’ திரைப்படம் அதன் அறிவிப்பில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான வைப்பை உருவாக்கி வருகிறது. விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் அருள் நந்து, மாத்யூ அருள் நந்து தயாரிப்பில் ரியோ ராஜ், அன்பு தாசன், மாளவிகா மனோஜ், ஏகன், பவ்யா திரிக்கா நடிப்பில் ஹரிஹரன் ராம் இயக்கி இருக்கும் படம் ’ஜோ’. ’மீசையை முறுக்கு’, ’நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு’ போன்ற படங்களில் இயக்குநர் பிரிவில் பணி புரிந்தவர் ஹரிஹரன் ராம்.
கேரளா தமிழ் நாடு எல்லையில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் சில மாணவ மாணவியரின் பதினேழு வயது முதல் இருபத்தி ஏழு வயது வரையிலான வாழ்க்கையை மூன்று கட்டங்களாக சொல்லும் படம் இது. ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞனுக்கும் கேரளப் பெண்ணுக்கும் வரும் காதலும் அதன் விளைவுகளுமே இந்தப் படம். இந்தப் படத்திற்காக கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் ஒரிஜினலாக தாடி வளர்த்ததாகவும் இதனால் வேறு எந்த பட வாய்ப்புகளையும் ஏற்க முடியவில்லை என்கிறார் ரியோ.
இந்தப் படத்திற்கு ராகுல் கே விக்னேஷ் ஒளிப்பதிவு செய்ய, இசை சித்து குமார், படத் தொகுப்பு கே ஜி வருண். படத்தில் ஒரு கல்லூரி நடனப்பாடல் மற்றும் மிகக் குறைவான இசைக் கருவிகளை வைத்து யதார்த்தமான ஒலிகளோடு அந்தப் பாடல் அமைத்து இருக்கிறோம் என இசையமைப்பாளர் சித்து குமார் கூறியுள்ளார். மேலும் இவரது இசையில் வைசாக் பாடல் வரிகளில் உருவாகியுள்ள ‘ஒரே கனா’ பாடலில் யுவன் ஷங்கர் ராஜா தோன்றியுள்ளது படத்திற்கு பெரும்பலம் எனப் படக்குழு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
இந்தப் படத்தில் ரியோ ராஜ் & பவ்யா திரிகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சித்து குமார் இசையமைக்க, ராகுல் கே.ஜி.விக்னேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வருண் கே.ஜி. (எடிட்டிங்), ஏபிஆர் (கலை), அபு & சால்ஸ் (கோரியோகிராஃபி), பவர் பாண்டியன் (ஆக்ஷன்), வைசாக், விக்னேஷ் ராமகிருஷ்ணா (பாடல் வரிகள்), ஸ்ரீதேவி கோபாலகிருஷ்ணன் (ஆடை வடிவமைப்பாளர்), எம். முகமது சுபியர் (காஸ்ட்யூமர்) மற்றும் சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன் (மக்கள் தொடர்பு) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர். ‘ஜோ’ திரைப்படம் உலகம் முழுவதும் நவம்பர் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது.