Breaking
March 27, 2025

Uncategorized

ரசிகர்களின் பாராட்டு மழையில் ‘ஸ்வீட் ஹார்ட் ‘ படக் குழு

‘மாடர்ன் மாஸ்ட்ரோ ‘ யுவன் சங்கர் ராஜாவின் இசை மற்றும் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில், ரியோ ராஜ் – கோபிகா ரமேஷ் நடிப்பில் உருவாகி கடந்த 14 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியான ‘ஸ்வீட் ஹார்ட்’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் பேராதரவு வழங்கி வருகிறார்கள்.

உறவுகள் குறித்த உளவியல் சிக்கலில் தவிக்கும் காதலர்- அவரை காதலிக்கும் காதலி- இந்த ஜோடி எதிர்கொள்ளும் பிரச்சனைகள் ரசனையாகவும், உணர்வுபூர்வமாகவும் விவரிக்கும் படைப்பாக ‘ஸ்வீட் ஹார்ட்’ இருந்ததால்… ரசிகர்கள் திரையரங்கத்திற்கு வருகை தந்து தங்களது ஆதரவினை வழங்கி வருகிறார்கள். அதிலும் யுவன் சங்கர் ராஜாவின் வசீகரிக்கும் பாடல்கள் மற்றும் பின்னணி இசையால் கவரப்பட்ட ரசிகர்கள் மீண்டும் மீண்டும் திரையரங்கத்திற்கு வந்து தங்களின் மகிழ்ச்சியை உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள்.

ரசிகர்களின் வரவேற்பினை கண்டு சந்தோஷமடைந்த படக் குழு, கடந்த 19 ஆம் தேதியன்று ஈரோடு – ஸ்ரீ சக்தி திரையரங்கத்திற்கும், சேலம் – டி என் சி திரையரங்கத்திற்கும், கோவை – பிராட்வே திரையரங்கத்திற்கும், திருப்பூர் – ஸ்ரீ சக்தி திரையரங்கத்திற்கும் நேரடியாக சென்று ரசிகர்களின் வரவேற்பினை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். அத்துடன் படக் குழுவினரை நேரில் சந்தித்த ரசிகர்களும் செல்ஃபி எடுத்துக் கொண்டு, படத்தைப் பற்றிய தங்களுடைய எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து படக்குழு இருபதாம் தேதியன்று மதுரை – வெற்றி திரையரங்கத்திற்கும், திருச்சி – எல்.ஏ சினிமாஸிற்கும் சென்று ரசிகர்களை சந்தித்தனர். இந்நிகழ்வுகளில் ரசிகர்கள் பலரும் கதையின் நாயகனான ரியோ ராஜையும், நாயகி கோபிகா ரமேஷையும் வெகுவாக பாராட்டினார்கள். அதிலும் ஒரு ரசிகை ரியோ ராஜை கண்கலங்க பாராட்டியது அனைவரது கவனத்தையும் கவர்ந்தது.

தமிழக முழுவதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ஸ்வீட் ஹார்ட்’ படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளதால்.. படக்குழு மகிழ்ச்சியடைந்திருக்கிறது.

‘ட்ராமா’ திரைவிமர்சனம்

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு செயற்கை கருவுறுதல் மையங்கள் பற்றி நமக்கு அதிக அளவில் தெரியாது.

ஆனால் இன்று பல இடங்களில் செயற்கை கருவுரு மையங்கள் அதிக அளவில் இருக்கிறது.

இன்னும் பத்து பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு கறுவுரு மையங்களுக்கு சென்றால்தான் குழந்தை பெத்துக்க முடியும் என்ற நிலை உருவாகி விடுமோ?

செயற்கை கருவுறுதல் என்ற விஷயத்திருக்கு பின்னால் இருக்கும் அதிர்ச்சி தரும் க்ரைம் அம்சத்தை சொல்லி இருக்கிறது இந்த ட்ராமா திரைப்படம்.

கதாநாயகன் விவேக் பிரசன்னா, கதாநாயகி சாந்தினி தமிழரசன், இருவரும் திருமணம் நடந்து பல ஆண்டுகள் பிறகு கர்ப்பம் அடையும் நிலையில் மிக சந்தோஷமாக இருக்கும் நேரத்தில், ஒரு மர்ம நபர் ஒருவர் போன் செய்து உனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு தந்தை உன் கணவர் கதாநாயகன் விவேக் பிரசன்னா கிடையாது, என்ற உண்மை கூறி வருவதோடு, அதே போன் கால் மூலம் ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று அனுப்பி 50 லட்சம் பணத்துடன் வரவேண்டும் என அந்த மர்ம நபர் மிரட்டுகிறார்.
ஆட்டோ ஓட்டுநர் மாரிமுத்து மகள் பூர்ணிமா ரவி, தனது காதலன் பிரதோஷ் மூலம் கர்ப்பமடைந்து ஏமாற்றப்பட்டு காதலன் பிரதோஷின உண்மையான முகம் பற்றி தெரிந்து கொண்டு தன் காதலன் பிரதோஷ் உடன் சேர்ந்து வாழவே கூடாது, என்ற முடிவுக்கு வருகிறார்.

இந்த இரண்டு கதைகளிலும் பாதிப்புக்கு உள்ளான பெண்கள் அதில் இருந்து மீண்டார்களா?, மீளவில்லையா?, இந்த இரண்டு பெண்கள் வாழ்க்கையில் நடந்த பாதிப்புக்கு பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதுதான் இந்த ‘ட்ராமா’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘ட்ராமா’ திரைப்படத்தில் கதாநாயகனாக விவேக் பிரசன்னா, நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் விவேக் பிரசன்னா, வழக்கம் போல் எதார்த்தமான நடிப்பை கொடுத்து பல உணர்வுகளை மிக அருமையாக நடித்திருக்கிறார்.

தன்னால் தன் மனைவிக்கு குழந்தை பாக்கியம் கொடுக்க முடியாது என தன்னிடம் உள்ள குறைபாடு தான் காரணம் என்பது தெரிந்திருந்தாலும், அதை தன் மனைவியிடம் இருந்து மறைப்பது, அதனால் தன் மனைவிக்கு ஏற்படும் மிகப்பெரிய பாதிப்பு ஆகியவற்றை எண்ணி வருந்துவது என தனது நடிப்பின் மூலம் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

இந்த ‘ட்ராமா’ திரைப்படத்தில் கதாநாயகியாக சாந்தினி தமிழரசன், நடித்துள்ளார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் சாந்தினி தமிழரசன், குழந்தை பெற்றுக்கொள்ள ஆர்வம், குழந்தை இல்லாத ஏக்கம், தன் கர்ப்பமடைந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதம், அதன் பிறகு கர்ப்பத்தால் மிகப்பெரிய அளவில் உருவாகும் பிரச்சனை என பல காட்சிகளில் மிக அழுத்தமான நடிப்பு கொடுத்து கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்துள்ளார்.

மற்றொரு இளம் ஜோடி நடித்திருக்கும் பிரதோஷ், அவரது காதலி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பூர்ணிமா ரவி இருவரும் பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, தங்களது கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு மிக அருமையாக நடித்திருக்கிறார்கள்.

கதாநாயகன் விவேக் பிரசன்னாவின் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆனந்த் நாக் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார்.

காவல்துறை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சஞ்ஜீவ் நடிப்பிலும் எந்த ஒரு குறையில்லாமல் நடித்திருக்கிறார்.

மறைந்த மாரிமுத்து, பிரதீப் கே.விஜயன், ரமா என திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் திரைக்கதையோட்டத்திற்கு மிகப்பெரிய அளவில் உதவி இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் அஜித் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவு மிகப்பெரிய அளவில் திரைப்படத்தின் தரத்தை உயர்த்துள்ளது.
இசையமைப்பாளர் ஆர்.எஸ். ராஜ்பிரதாப் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு மிகச்சிறப்பாக பயணித்திருக்கிறார்.

மருத்துவ பின்னணியில் நடக்கும் குற்ற செயல்களை மையமாக கதையை வைத்து திரைக்கதை சுவாரஸ்யமாக அமைத்து, அதை சொல்லிய விதம் விறுவிறுப்பாகவும், வேகமாகவும் இயக்கி இருக்கிறார் இயக்குனர் தம்பிதுரை மாரியப்பன்,

மூன்று கதைகள் மூலம் தான் சொல்ல வந்த கருத்தை மிக வித்தியாசமாகவும் அருமையாகவும் சொல்லி இருக்கிறார் இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன்,

“சங்கராந்திகி வஸ்துனம்” திரைப்படம், மார்ச் 1, 2025 அன்று ஐந்து மொழிகளில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டது!

ZEE5 தளம் மற்றும் ZEE தெலுங்கு தொலைக்காட்சியில், பிரம்மாண்டமான காமெடி டிராமா “சங்கராந்திகி வஸ்துனம்” திரைப்படம், மார்ச் 1, 2025 அன்று ஐந்து மொழிகளில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டது!

~ “சங்கராந்திகி வஸ்துனம்” அனில் ரவிபுடி இயக்கத்தில் உருவான இப்படத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் வெங்கடேஷ் ட‌குபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சௌத்திரி, மற்றும் உபெந்திரா லிமாயே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் ~

~ இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வரவேற்பை குவித்த பிறகு ZEE5 இல் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் உட்பட ஐந்து மொழிகளில் டப்பிங் செய்யப்பட்ட பதிப்புகளுடன் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது. அதே நேரத்தில், ZEE தெலுங்கு தொலைக்காட்சியில் மார்ச் 1, 2025 அன்று மாலை 6 மணிக்கு முதன்முதலில் பிரத்தியேகமாக ஒளிபரப்பப்பட்டது ~

இந்தியா, 1 மார்ச் 2025: ZEE5 மற்றும் ZEE தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான “சங்கராந்திகி வஸ்துனம்” திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது. இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானபோது, அற்புதமான காமெடி, பழைய நினைவுகள், ஞாபகங்கள் மற்றும் குடும்ப உறவுகளை கொண்டாடும் அருமையான கதை ஆகியவற்றிற்காக பெரும் பாராட்டுக்களைக் குவித்தது. இயக்குநர் அனில் ரவிபுடியின் இயக்கத்தில், வெங்கடேஷ் டகுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சௌத்திரி மற்றும் உபெந்திரா லிமாயே ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்கள் பெற்றது.

இந்தத் திரைப்படம் ஒரு குடும்பத்தில் நிகழும் சம்பவங்களை அழுத்தமான காமெடியுடன் பரபரப்பான ரோலர் கோஸ்டராக சொல்லியது. “YD ராஜு” என்ற ஓய்வு பெற்ற காவலர் கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் டகுபதி, “பாக்யலக்ஷ்மி” (ஐஸ்வர்யா ராஜேஷ்) மற்றும் அவரது முந்தைய காதலியாக “மீனாட்சி” (மீனாட்சி சௌத்திரி) கதையின் மைய கதாப்பாத்திரங்களாக நடித்துள்ளனர். ஒரு பிரபல பிஸினஸ்மேன் கடத்தப்படுகிறான், இதனால் ராஜு மீண்டும் தனது கடந்தகால ஆக்சன் அவதாரத்தில் இறங்கி, அந்த பிரச்சனையை எப்படி தீர்க்கிறார் என்பது தான் இப்படத்தின் கதை. குடும்பம், காதல், காமெடி அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்து பரபரப்பான திரைக்கதையுடன் அருமையான என்டர்டெயினராக இப்படம் உருவாகியிருந்தது.

“சங்கராந்திகி வஸ்துனம்” திரைப்படத்தின் இயக்குநர் அனில் ரவிபுடி கூறுகையில்.., “இந்தப் படத்தை ZEE5 மற்றும் ZEE தெலுங்கு தொலைக்காட்சி, அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்ப்பது, மிகுந்த உற்சாகம் தருகிறது. இந்த படம் ஒரு முழுமையான காமெடி ரோலர்கோஸ்டர் அனுபவத்தை வழங்கும். மிகச் சிறந்த நடிகர்களின் நடிப்பில் இது அருமையான என்டர்டெயினராக இருக்கும். திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாடப்பட்டதைப் போலவே, இந்த டிஜிட்டல் வெளியீட்டிலும் மக்கள் கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்.

வெங்கடேஷ் டகுபதி கூறுகையில்.., “இந்தப் படத்தில் ‘ராஜு’ பாத்திரத்தை செய்தது மிக அற்புதமான அனுபவமாக இருந்தது. குடும்ப சிக்கல்களுக்குள் மாட்டிக்கொண்டு முழிக்கும் நாயகனின் கதை, காதல், காமெடி என பரபரவென பல திருப்பங்களை கொண்டிருந்ததது. இந்த கதாப்பாத்திரத்தை திரையில் கொண்டு வந்தது மிக இனிமையான அனுபவம். ZEE5 மற்றும் ZEE தெலுங்கு தொலைக்காட்சி வெளியீட்டின் மூலம், அனைத்து மக்களும் இப்படத்தை பார்வையிடும் வாய்ப்பைப் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி.”

ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாவது.., “‘பாக்யலக்ஷ்மி’ எனும் கதாபாத்திரம் மிகவும் சுவாரஸ்யமானது. அவள் ஆர்வமுள்ள, இனிமையான ஒரு குடும்பப்பெண். அவளது இன்னொசென்ஸையும், பொஸஸிவ்னெஸையும் திரையில் கொண்டு வந்தது மிக அற்புதமான அனுபவம். குறிப்பாக வெங்கடேஷ் சார் போன்ற ஆளுமையுடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். நடிகர்களின் கெமிஸ்ட்ரி ஒவ்வொரு காட்சியிலும் பெரும் சிரிப்பை வர வைத்தது. இத்திரைப்படம் திரையரங்குகளில் ரசிகர்களிடமிருந்து பெரும் பாராட்டுக்களை குவித்தது. இந்த படத்தை தொலைக்காட்சி மற்றும் ஓடிடி மூலம் அனைத்து ரசிகர்களும் ரசிக்கவுள்ளது பெரும் உற்சாகத்தை தருகிறது. இப்படம் உங்களை சிரிக்க வைக்கும், அழைக்க வைக்கும், மற்றும் படம் முடியும் வரை உங்களை அசைய விடமால் உற்சாகப்படுத்தும் !”

மீனாட்சி சௌத்திரி கூறியதாவது..,
“‘மீனாட்சி’ என்பது பல பரபரப்பான மாற்றங்களை கொண்ட ஒரு வலிமையான, ஆளுமைமிக்க கதாபாத்திரமாகும். அவள், ராஜு மற்றும் பாக்யலக்ஷ்மி ஆகியோருக்கு இடையே உள்ள காட்சிகள், இந்த படத்தில் நகைச்சுவை மிகுந்த மற்றும் எதிர்பாராத தருணங்களை உருவாக்குகின்றன. தியேட்டர் வெளியீட்டுக்குப் பிறகு ரசிகர்களிடமிருந்து கிடைத்த வரவேற்பு, அவர்கள் கதாபாத்திரங்களை எந்தளவு ரசித்தார்கள் என்பதைக் காட்டுகிறது. இந்தப் படம் நகைச்சுவையுடன், மனதை இலகுவாக்கும் ஒரு அற்புதமான படமாகும்!”

கொண்டாட்டத்திற்கு தயாராக இருங்கள், நகைச்சுவையுடன் கூடிய அதிரடி ரோலர்கோஸ்டர் அனுபவத்திற்கு தயாராகுங்கள் —“சங்கராந்திகி வஸ்துனம்” ZEE5 இல் மார்ச் 1, 2025 அன்று மாலை 6 மணிக்கு ஐந்து மொழிகளில் ஒளிபரப்பாகிறது. கொண்டாட்டத்தை தவறவிடாதீர்கள்!

ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பார்வையாளார்களால் கொண்டாடப்பட்ட இயக்குநர் ராமின் ‘பறந்து போ’ திரைப்படம்

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தயாரிப்பில் இயக்குநர் ராமின் அடுத்த படைப்பான ‘பறந்து போ’ திரைப்படத்தின் முதல் உலக ப்ரத்யேக காட்சி 54-வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் நேற்று திரையிடப்பட்டது.
‘பறந்து போ’ திரைப்படத்திற்கு இருக்கும் எதிர்ப்பார்ப்பை உறுதிப்படுத்தும் விதமாய் முதல் காட்சி இருந்தது. ரோட்டர்டாமின் உறையும் குளிரிலும் அரங்கம் நிரம்பியது, மேலும் திரைப்படத்தின் இறுதியில் எழுந்த அரங்கம் அதிர்ந்த கைதட்டல்கள் பார்வையாளர்களின் எதிர்ப்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்ததை உறுதிபடுத்தியது.

இத்திரையிடலை இயக்குநர் ராமுடன், நடிகர் சிவா, டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் தமிழ் தலைமை பொறுப்பாளர் ப்ரதீப் மில்ராய், குழந்தை நட்சத்திரம் மிதுல் ரியான் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நகைச்சுவையை மையமாக கொண்ட எளிமையான கதையமைப்புடன் உருவாகி இருக்கும் ‘பறந்து போ’ திரைப்படம், சர்வதேசப் பார்வையாளர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. படம் நெடுக கைதட்டியும் கரகோஷத்தை எழுப்பியும் உற்சாகத்துடன் பார்வையாளர்கள் இத்திரைப்படத்தை கண்டுகளித்தனர். திரையிடலின் முடிவில் நடைபெற்ற கலந்துரையாடலில் படக்குழுவினரை பார்வையாளர்கள் பாராட்டி மகிழ்ந்தனர்.

‘பறந்து போ’ திரைப்படம் கோடை விடுமறையில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும் எனவும் இத்திரையிடலில் இருந்தது போல திரையரங்குகளில் பெரும் கொண்டாட்டமாக இருக்கும் எனவும் இயக்குநர் ராம் கலைந்துரையாடலின் போது தெரிவித்தார்.

ஒட்டுமொத்தத் திரைப்படக் குழுவினர் அனைவருக்கும் பெருமிதமும், மகிழ்ச்சியும் தந்த தருணமாக ‘பறந்து போ’ திரைப்படத்தின் சர்வதேசத் திரையிடல் நிகழ்ச்சி அமைந்தது.

Kauvery Hospital Vadapalani awarded Gold Seal of Approval by Joint Commission International, World’s First Hospital to Achieve the Latest 8th Edition Standards

Chennai, 31st January 2025: Kauvery Hospital Vadapalani is thrilled to announce that it has received the esteemed Joint Commission International (JCI) accreditation, World’s First Hospital for earning the distinguished Gold Seal of Approval® for its firm resolve towards patient safety, quality healthcare, and continuous improvement in medical practices. This accreditation recognizes the hospital’s dedication to upholding the highest standards of care and operational excellence, setting it apart as one of the leading healthcare providers in the region.

JCI accreditation is widely regarded as a global benchmark for excellence in healthcare. The Gold Seal of Approval®, awarded to healthcare institutions that demonstrate superior performance in patient care, safety, and organizational effectiveness, is an indication of Kauvery Hospital Vadapalani’s ongoing efforts to deliver the best possible outcomes for its patients. The hospital’s achievement of this prestigious recognition is because of its focus on maintaining high-quality care in every aspect of its operations, from patient treatment to administrative practices.

The most recent revision of JCI’s 8th Edition Accreditation Standards for Hospitals, which took effect on January 1, 2025, introduces several significant advancements aimed at addressing the evolving needs of modern healthcare. Among the key updates are the introduction of a new Global Health Impact chapter, which emphasizes on environmental sustainability and the role of healthcare organizations in reducing their ecological footprint. A dedicated Healthcare Technology chapter also addresses critical topics such as the integration of electronic health records, the growing use of telehealth services, and the importance of cybersecurity to protect patient data.

Additionally, the revised standards place a stronger emphasis on Patient Safety, advocating for a non-punitive approach to event reporting that encourages transparency and continuous learning. Other notable improvements include enhanced protocols for organ and tissue transplant programs and strengthened guidelines for the care of vulnerable patient populations, ensuring that healthcare organizations are better equipped to meet the needs of diverse patient groups.

Kauvery Hospital Vadapalani’s achievement of JCI accreditation highlights the promise of meeting these rigorous standards, reinforcing its dedication to providing the highest level of care to patients while also striving for excellence in all areas of healthcare service delivery. This accomplishment highlights the hospital’s focus on improving patient outcomes, advancing medical practices, and adopting the latest technological innovations to enhance overall healthcare quality.

Dr. Aravindan Selvaraj, Co-Founder and Executive Director, Kauvery Group of Hospitals, expressed his pride in the hospital’s achievement, stating, “We are truly honored to receive the JCI Gold Seal of Approval® , which proves that we are providing exceptional, patient-centered care. This accreditation reflects the hard work and expertise of our entire team and strengthens our resolve to continuously improve and meet global standards in healthcare. At Kauvery Hospital Vadapalani, we believe in staying ahead of the curve and delivering care that not only meets but exceeds patient expectations. As we move forward, we will continue to focus on advancing our services to ensure that every patient receives the highest quality of care possible.”

ஜீவிபி100

ஜீவிபி100 எனும் சாதனை பயணத்திற்கு பாதை அமைத்து தந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.

‘வெயில்’ படத்தின் மூலம் தமிழ் திரையிசையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானேன். இப்படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு அளித்த இயக்குநர் வசந்தபாலனுக்கும், தயாரிப்பாளர் ஷங்கருக்கும் முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களுடைய அறிமுகத்திற்கு பிறகு ஏராளமான திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன்.

ரஜினிகாந்த் – அஜித் – விஜய் – விக்ரம் – சூர்யா – தனுஷ்- சிலம்பரசன் டி. ஆர்.- பிரபாஸ் – ரவி தேஜா – சித்தார்த் – கார்த்தி – ஆர்யா- விஷால் – ஜெயம் ரவி- சிவ கார்த்திகேயன் – துல்கர் சல்மான் – ராம் பொத்தனேனி – அதர்வா- ராகவா லாரன்ஸ் – அருண் விஜய் – பரத் – பசுபதி- என திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடித்திருக்கும் பல திரைப்படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பினையும் பெற்றேன். இதற்காக இப்படத்தினை இயக்கிய இயக்குநர்கள் வசந்த பாலன், ஏ.எல். விஜய், புஷ்கர்- காயத்ரி, பி. வாசு, வெற்றி மாறன், செல்வராகவன், தனுஷ் – சுதா கொங்காரா – பாரதிராஜா, அட்லீ, ஹரி, சிம்புதேவன், பாலா, சேரன், சமுத்திரக்கனி, முத்தையா , ஆதிக் ரவிச்சந்திரன், மணிகண்டன், சாம் ஆண்டன், பா. ரஞ்சித், எம். ராஜேஷ், மித்ரன் ஆர் ஜவஹர் , தங்கர் பச்சன், ஏ. கருணாகரன், வெங்கி அட்லூரி , அருண் மாதேஸ்வரன், ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்ட ஏராளமான இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்கள் K. பாலசந்தர், கலைப்புலி எஸ். தாணு, ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ் அகோரம் , ஃபைவ் ஸ்டார் கதிரேசன், சுரேஷ் பாலாஜி, பிரகாஷ்ராஜ், ஆஸ்கார் வி. ரவிச்சந்திரன், ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா, அருண் பாண்டியன், கருணா மூர்த்தி, புஷ்பா கந்தசாமி, ஆர். ரவீந்திரன், ஏ. ஆர். முருகதாஸ், எஸ். ஆர். பிரபு, டி. சிவா, எஸ். மைக்கேல் ராயப்பன், டி. ஜி. தியாகராஜன்- பி வி எஸ் என் பிரசாத், சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் நாக வம்சி, மைத்திரி மூவி மேக்கர்ஸ் ரவி – நவீன், அபிஷேக் அகர்வால், லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன், ஆர். சந்திர பிரகாஷ் ஜெயின், ஆர். சரத்குமார்- திருமதி ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பல தயாரிப்பாளர்களுக்கும், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், இயக்குநர் & நடிகர் அனுராக் காஷ்யப் மற்றும் உடன் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் , இசை கலைஞர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நடிகர் கமல்ஹாசன் சார் நடிக்கும் திரைப்படத்திற்கு இசையமைப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கும் தருணத்தில்.
அவரது தயாரிப்பில் உருவான ‘அமரன்’ படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தின் பாடல்களையும், இசையையும் கேட்டு கமல்ஹாசன் சார் பாராட்டியது எனக்கு மேலும் உற்சாகமூட்டியது.

இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் பின்னணி பாடகராகவும் பல பாடல்களை பாடி இருக்கிறேன். இதற்கு வாய்ப்பளித்த இசையமைப்பாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும், சக இசை கலைஞர்களுக்கும், இந்தப் பாடல்களை வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

2005 ஆம் ஆண்டில் தொடங்கிய இசைப் பயணம் 2024 ஆம் ஆண்டில் நூறாவது திரைப்படத்திற்கு இசையமைக்கும் நல்ல வாய்ப்பினை பெற்றிருக்கிறேன். ‘சூரரைப் போற்று’ எனும் திரைப்படத்தின் மூலம் தேசிய விருதினை வெல்வதற்கு காரணமாக இருந்த இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்திற்கு இசையமைப்பதன் மூலம் நூறாவது திரைப்படம் என்ற எண்ணிக்கையை தொட்டிருக்கிறேன். 19 ஆண்டுகளுக்கும் மேலான தொடர்ச்சியான இந்த பயணத்தில் எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் ,முன்னணி நட்சத்திர நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ,இசைக்கலைஞர்கள், பாடகர்கள், பாடகிகள், பாடலாசிரியர்கள், தற்போது வரை தொடர்ந்து ஆதரவும், ஊக்கமும் அளித்து வரும் பத்திரிகையாளர்கள் ஆகிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடர்ந்து திரைப்படங்களுக்கு இசையமைப்பதிலும்.. நடிப்பதிலும். பின்னணி பாடல்களை பாடுவதிலும் கடுமையாக உழைக்க திட்டமிட்டிருக்கிறேன். இதற்கு ஆதரவு அளித்து வரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இந்த தருணத்தில் என் இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்

ஜீ. வி. பிரகாஷ் குமார்.

“Currency”Kanavugal’ book launched in Chennai

Chennai, 19 Dec. 2024

In Chennai, the first copy of the book ‘Currency Kanavugal’, written by Motivational Author Mr. Ramkumar Singaram and published by Yaa Publications, was released by Dr. N. Arul, Director of the Tamil Development Department, TN Govt, and received by Film lyricist and Poet Mr. Nellai Jayantha. The event was attended by Mr. A. Madhivanan, Retd Jt Director of the College Education Department, and Mr. S.P. Annamalai, owner of Yaa Publications.

This is the ninth Tamil book written by Journalist, Author and CEO of Catalyst PR Mr. Ramkumar Singaram. The book contains 60 articles focused on self-motivation.

This book will be very useful for young people striving for growth and enthusiastic middle-aged individuals. Mr. Ramkumar Singaram has shared his thoughts in a simple writing style through various practical examples, stories, and incidents.

The book, consisting of 144 pages, is priced at Rs. 200. For enquiries, contact: 98409 96745.

“மெட்ராஸ்காரன்” திரைப்பட இரண்டாவது சிங்கிள் “காதல் சடுகுடு”

SR PRODUCTIONS சார்பில் B.ஜகதீஸ் தயாரிப்பில், ரங்கோலி பட இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகாம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், புதுமையான ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “மெட்ராஸ்காரன்”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் “காதல் சடுகுடு” பாடல் வெளியீட்டு விழா, தனியார் மாலில், மக்கள் முன்னிலையில் படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, சிறப்பாக நடைபெற்றது.

ஆடல், பாடல், நடனம் மற்றும் மேஜிக் ஷோ என மக்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்ற இந்நிகழ்வினில்…

இயக்குநர் வாலி மோகன் தாஸ் பேசியதாவது…
மிக மிகச் சந்தோசமாக இருக்கிறது. படம் ஆரம்பித்து இவ்வளவு தூரம் வந்துவிட்டது. விரைவில் உங்களை மகிழ்விக்கத் திரையில் இப்படத்தைக் கொண்டு வருகிறோம். இந்தப்படம் ஆரம்பமாக மிக முக்கிய காரணமாக இருந்த ஐஸ்வர்யா தத்தாவுக்கு நன்றி. சதீஷ் மாஸ்டர், அருமையாக வேலை பார்த்துத் தந்ததற்கு நன்றி. எடிட்டர் வசந்த் பார்க்க சின்னப்பையன் போல இருப்பார், ஆனால் அருமையாக வேலை பார்த்துள்ளார். ஷேன் நிகாம், நிஹாரிகா இருவரும் பெரும் ஒத்துழைப்பு தந்தனர், இருவருக்கும் நன்றிகள். தயாரிப்பாளர் ஜகதீஸ் என் மீது நம்பிக்கை வைத்து முழுதாக கதை கேட்காமல் தயாரித்தார் அவருக்கு நன்றி. படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும் அனைவருக்கும் நன்றி.

டான்ஸ் மாஸ்டர் சதீஷ் பேசியதாவது…
மிக மகிழ்ச்சியாக உள்ளது. எப்போதும் கோரியோகிராஃபராக என் வேலை கேமராவுக்கு பின்னால் முடிந்து விடும். பல வருடங்களுக்குப் பிறகு, கோரியோகிராஃபராக மேடை ஏறியுள்ளேன். மெட்ராஸ்காரன் படக்குழுவிற்கு நன்றி. காதல் சடுகுடு பாடல் இனிமையான அனுபவம். இந்தப் பாடலுக்கு கல்லூரி காலத்தில் நடனமாடியுள்ளேன், இந்த பாடலை ரீமேக் செய்ய வேண்டும் என சொன்ன போது, மகிழ்ச்சியாக இருந்தது. ஷேன் நிகாம் ரசிகன் நான், மனிதர் எப்படி இப்படியெல்லாம் நடிக்கிறார் என வியந்திருக்கிறேன். அவர் இந்தப்பாடலில் இருக்கிறார் என்பது மகிழ்ச்சி. நிஹாரிகாவும் மிக அருமையாக ஒத்துழைத்தார். என்னிடம் இருந்த ஐடியாவை பிரசன்னா மிக அட்டகாசமாக எடுத்து தந்தார். பாடல் பார்த்து எல்லோரும் பாராட்டுகிறார்கள். இயக்குநர் மிகவும் ஆதரவாக இருந்தார். தயாரிப்பாளர் ஜகதீஸ் பட்ஜெட்டை மீறி இப்பாடலுக்காகச் செலவு செய்தார். பிருந்தா மாஸ்டர், மணிரத்னம் சார் என ஜாம்பவான்கள் செய்த பாடல், அவர்களுக்கு அர்ப்பணிப்பாக இந்த பாடல் செய்துள்ளோம். எனக்குப் பெரிய சம்பளம் தந்துள்ளார் தயாரிப்பாளர். இந்தப்படத்தை மிகவும் நம்புகிறார். கண்டிப்பாக இந்தப்படம் பெரிய வெற்றி பெறும் அனைவருக்கும் நன்றிகள்.

நடிகர் கலையரசன் பேசியதாவது…
இங்குள்ள ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. நாம் எல்லாப்படத்திலும் உண்மையாக அர்ப்பணிப்போடு உழைப்போம், ரசிகர்கள் தரும் ஆதரவு தான் நாம் நடிகர்களாக வெற்றி பெறுகிறோம். தயாரிப்பாளர் ஜகதீஸ் நல்ல மனசுக்காரர், அவருக்காக இந்தப்படம் ஜெயிக்க வேண்டும். ஷேன் டார்லிங், நிஹாரிகா சூப்பராக நடித்துள்ளனர். ஐஸு இந்தப்படத்தில் வித்தியாசமான ரோல் செய்துள்ளார். டைரக்டர் வாலிக்கு நன்றி. இந்தப்படத்தில் எல்லோரும் சின்சியராக உழைத்துள்ளனர். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் இப்படம் பிடிக்கும் நன்றி.

நடிகை ஐஸ்வர்யா தத்தா பேசியதாவது…
SR PRODUCTIONS என்னுடைய புரடக்சன் மாதிரி தான். இந்த புரடக்சன் ஆரம்பித்த நாட்களிலிருந்து உடன் இருந்துள்ளேன். ஜகதீஸ் மிகப்பெரிய உழைப்பைத் தந்துள்ளார். அவரது மனதுக்கு இந்தப்படம் ஜெயிக்க வேண்டும். கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும் என நம்புகிறேன். நான் ஒரு நல்ல நடிகையாகப் பெயரெடுக்க, வாலி ஒரு நல்ல வாய்ப்பை தந்துள்ளார். ஷேன் நிகாம் அவருக்கு இங்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. நிஹாரிகாவுக்கு வாழ்த்துக்கள். வாலி மிகப்பெரிய டைரக்டராக வர வாழ்த்துக்கள். அலைபாயுதே என் ஃபேவரைட் ஃபிலிம், இந்தப்பாடலைத் தந்த மணிரத்னம் சார், ஏ ஆர் ரஹ்மான் சார், சரிகமாவிற்கு நன்றி. இந்தப்பாடல் எங்களுக்குக் கிடைத்தது மகிழ்ச்சி. இந்தப்படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி.

நடிகை நிஹாரிகா பேசியதாவது…
எல்லோருக்கும் நன்றி. படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது. எனது கனவு நனவாகியிருக்கிறது. மணி சார் மாதிரி ஜாம்பவான் செய்த பாடல் எங்களுக்குக் கிடைத்தது வரம். என்னை ஆட வைத்த சதீஷுக்கு நன்றி. பாடல் அழகாக வரக் காரணம் ஜகதீஸ் சார் தான் அவருக்கு நன்றி. வாலி சார் இந்தப்படத்தை என்னை நம்பி தந்ததற்கு நன்றி. எனக்குக் கொஞ்சம் பயமாக இருந்தது, ஆனால் பாடல் பார்த்து பாராட்டுக்கள் வருவது மகிழ்ச்சியாக உள்ளது. விரைவில் படம் உங்களை மகிழ்விக்கும் நன்றி.

நடிகர் ஷேன் நிகாம் பேசியதாவது…
தயாரிப்பாளர் ஜகதீஸுக்கு நன்றி. மலையாளத்தில் நிறையத் தயாரிப்பாளர்களுடன் வேலை பார்த்துள்ளேன். ஆனால் யாரும் இவர் அளவு ஒத்துழைப்பு தந்ததில்லை நன்றி. சதீஷ் , என்னை ஆட வைத்ததற்கு நன்றி. நிஹாரிகா நல்ல ஒத்துழைப்பு தந்தார். வாலி மோகன் தாஸ் இந்தப்படம் தந்ததற்கு நன்றி. தமிழ்ப் படங்களின் ரசிகன் நான், என் முதல் தமிழ்ப்படம் இது, கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் இந்தப்படம் பிடிக்கும் நன்றி.

தயாரிப்பாளர் B.ஜகதீஸ் பேசியதாவது…
என் தாய் தந்தைக்கு முதல் நன்றி. பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. எங்களுக்கு இந்த பாடலைத் தந்த ஏ ஆர் ரஹ்மான் சார், மணிரத்னம் சார், சரிகமா நிறுவனத்திற்கு நன்றி. இந்தப்பாடலுக்கு யாரை டான்ஸ் மாஸ்டராக போடலாம் என்ற போது சதீஷ் தவிர யாரும் ஞாபகத்திற்கு வரவில்லை. அவர் பாடல் கேட்டு விட்டு இந்தப்பாடல் பயங்கர ஹிட்டாகும் நானே செய்கிறேன் என்றார். நான் சொன்ன பட்ஜெட்டை விட அதிகமாகச் செய்தார், ஆனால் அவர் செய்த விஷுவல் பார்த்த போது ஏன் இந்த பட்ஜெட் வந்தது எனத் தெரிந்தது. பிரசன்னா அவரும் அருமையான விஷுவல் தந்துள்ளார். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். ஷேன் நிகாம் தயாரிப்பாளரிடம் இவ்வளவு நெருக்கமாக ஒரு ஆக்டர் இருப்பாரா எனத் தெரியவில்லை, நான் எப்போது கொஞ்சம் சோகமாக இருந்தாலும் உடனே உற்சாகப்படுத்துவார். இந்தப்படம் வந்த பிறகு தமிழில் மிக முக்கியமான நடிகராக இருப்பார். கலை பிரதர் உரிமையாகப் பழகுவார். மெட்ராஸ் அன்பு மாதிரிதான் நிஜத்திலும், நிறையக் கஷ்டப்பட்டிருக்கிறார். இப்படத்தில் துரை சிங்கமாகக் கலக்குவார். நிஹாரிகா மேடம் பெரிய புரடியூசர் ஆகிவிட்டார். மிகவும் அன்பானவர். இந்தளவு டான்ஸ் ஆடுவார் என எதிர்பார்க்கவில்லை. மிக நன்றாக நடித்துள்ளார். ஐஸ்வர்யா மிகச்சிறந்த நண்பர், நான் வெற்றி பெற வேண்டுமென மனதார நினைப்பவர். எனக்கா நிறைய உழைத்துள்ளார். வாலி மோகன் தாஸ் கதை சொன்ன போதே பிடித்தது. மிகப்பெரிய உழைப்பைத் தந்துள்ளார். இந்தப்படம் உங்களுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தரும். பல தடைகளைக் கடந்து தான் தயாரிப்பாளர் ஆகியிருக்கிறேன். இதே மவுண்ட் ரோட்டில் டீ வித்திருக்கிறேன். இப்போது தயாரிப்பாளராக மாறியுள்ளேன். கண்டிப்பாக இந்தப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

மலையாளத்தில் புகழ்பெற்ற கும்பளாங்கி நைட்ஸ், ஆர் டி எக்ஸ், இஷ்க் படப்புகழ் நடிகர் ஷேன் நிகாம், இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக தெலுங்குத் திரையுலகின் மிகப்பெரும் நட்சத்திரக்குடும்பமான சிரஞ்சீவி குடும்பத்திலிருந்து முன்னணி நடிகை நிஹாரிகா நடிக்கிறார். இவர்களுடன் நடிகர் கலையரசன் முதன்மைப் பாத்திரத்தில் இணைந்து நடிக்கிறார்.

ஒரு சிறு ஈகோ, ஒருவனின் வாழ்வை எந்த எல்லைக்கு கூட்டிச்செல்லும் என்பதே இப்படத்தின் மையம். ரங்கோலி படம் மூலம், பள்ளிச் சிறுவர்களின் வாழ்வியலை வண்ணங்களாக தீட்டிய, இயக்குநர் வாலி மோகன் தாஸ், இப்படத்தில் ஒரு சிறு சம்பவம் பெரும் பிரச்சனையாக, இருவர் வாழ்க்கையை புரட்டி எடுப்பதை, பரபரப்பான திரைக்கதையாக படைத்துள்ளார். இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் சாம் CS இசையமைக்கிறார்.

பெரும் பொருட்செலவில், உயர்தர தொழில் நுட்ப கலைஞர்களுடன் தரமானதொரு படைப்பாக SR PRODUCTIONS சார்பில் B. ஜகதீஸ் இப்படத்தை தயாரித்துள்ளார்.

Royal Brunei Airlines Launches Direct Flight to Chennai,Strengthening Ties Between Brunei and India

Chennai, 6th November 2024—Royal Brunei Airlines (RB) proudly announced the official launch of its new direct flight route between Bandar Seri Begawan and Chennai, India. RB’s Airbus A320neo landed at Chennai International Airport on the 5th of November 2024 at approximately 22:50LT and was greeted by a water cannon salute. This new connection signifies a significant expansion in RB’s global network. It marks a historic step in strengthening the cultural, economic, and people-to-people ties between Brunei Darussalam and India.

The airline celebrated the launch in Chennai through a series of events in collaboration with the Brunei High Commission in India, the Brunei Economic and Development Board (BEDB), and Brunei Tourism (BT) at the ITC Grand Chola in Chennai, aimed at strengthening partnerships, promoting Brunei as a unique destination, and showcasing investment opportunities for Indian businesses.

RB’s CEO, Chief Commercial Officer, STIC Travel Group (RB’s agent in India) and Brunei Tourism representatives held a press conference, where they introduced Brunei and the new route and spoke on the broader significance of this connection for both nations.

In collaboration with BEDB, an investment seminar was organised for Indian business leaders. BEDB representatives presented Brunei’s attractive investment landscape, which includes a stable political environment, modern infrastructure, and strategic access to the ASEAN market. This session fostered connections between Indian businesses and Bruneian representatives, promoting partnerships in crucial trade, technology, and tourism sectors.

The highlight of the celebrations, Brunei Night, showcased Brunei’s rich culture and hospitality with traditional Bruneian performances and a special address from H.E. Dato Paduka Hj Alaihuddin Mohd Taha, the High Commissioner of Brunei Darussalam to India. The occasion commemorated the 40th anniversary of formal diplomatic relations between Brunei and India, reflecting on decades of mutual friendship and partnership that have fostered growth and understanding across both nations.

The Chief Guest for the event was The Honorable Dr T.R.B. Rajaa, Minister of Industries, Investment Promotion and Commerce, Tamil Nadu whereas the Guest of Honour was His Excellency Shri S Vijayakumar, Head of the Ministry of External Affairs Branch in Chennai. Also in attendance was Shri B. Krishnamoorthy, IOFS, Project Director, Tamil Nadu Industrial Development Corporation, as the Special Guest.

Captain Sabirin bin Hj Abdul Hamid, CEO of Royal Brunei Airlines, remarked during the celebrations “Launching this new route is more than just a flight connection; it is a bridge between two nations. We are excited to open new opportunities for tourism, trade, and cultural exchange between Brunei and India. This route connects Bruneians and our international guests to the vibrant city of Chennai and the many experiences it has to offer, and it enhances travel options for those from India wishing to explore the peaceful beauty of Brunei Darussalam.”

Royal Brunei Airlines’ new route offers three weekly flights on Tuesdays, Thursdays, and Saturdays, providing seamless travel for leisure and business passengers. Passengers will travel aboard the modern Airbus A320neo, known for its quiet and fuel-efficient performance. With the strategic codeshare agreement with Air India, passengers flying to and from Chennai can easily connect to other major destinations in RB’s network, including Melbourne, Hong Kong, Jakarta, Singapore, Seoul, Manila, and Taipei.

Since formal diplomatic ties were established in 1984, India and Brunei have enjoyed a lasting partnership enriched by a shared heritage and a commitment to development. This new route launch aligns with India’s Prime Minister Modi’s vision for an ASEAN-India Tourism Year in 2025 and supports increased travel, business exchanges, and cultural interactions.

Captain Haji Sabirin noted, “This new route exemplifies our support for Brunei’s Wawasan 2035 vision to create a dynamic and globally connected economy. We are delighted to be part of this journey, promoting Brunei as a hidden gem for Indian travellers who wish to experience tranquillity, natural beauty, and a unique cultural heritage.

Royal Brunei Airlines remains committed to its mission of connecting Brunei with the world, delivering exceptional travel experiences and fostering international partnerships. The Chennai route is a promising step toward stronger regional ties and underscores RB’s commitment to expanding its presence in the Indian market. RB’s Airbus A320neo aircraft will serve the route and ensure passengers enjoy the latest comfort, technology, and efficiency with RB’s world-renowned cabin crew offering the signature Bruneian hospitality that RB is known for globally.

SIMS Hospital Join hands with Former Indian Cricketer Dinesh Karthik to Strike a Powerful Blow Against Stroke

Chennai, October 29th, 2024 – In a powerful display of support for stroke awareness, former Indian cricketer Dinesh Karthik joined forces with SIMS Hospitals to commemorate World Stroke Day. The event brought together a diverse group of individuals, including stroke survivors, healthcare professionals, and corporate teams, all united by a common goal: to raise awareness about stroke and inspire hope for recovery.

The highlight of the event was the thrilling ‘Strike Against Stroke’ cricket match, which saw corporate teams and healthcare professionals face off in a friendly yet competitive match. The “Strike Against Stroke” match was won by Tata Consultancy Services (TCS), while Equitas Small Finance Bank and Brakes India came in first runner-up and second runner-up, respectively. The winner of the match was Tata Consultancy Services (TCS).This unique initiative aimed to promote physical activity and a healthy lifestyle, while also highlighting the importance of being active and physically fit to prevent stroke.

“It’s an honor to be a part of this initiative,” said Dinesh Karthik.“Stroke can have devastating consequences, but stroke can be avoided by maintaining a healthy level of physical activity and fitness. I urge everyone to adopt a healthy lifestyle and seek medical attention immediately if they experience any symptoms of stroke.”

Dr. Ravi Pachamuthu, Chairman, SRM Group, emphasized the hospital’s commitment to providing world-class care to stroke patients. “At SIMS Hospitals, we are dedicated to help stroke survivors regain their independence and quality of life,” he said. “We are grateful to Dinesh Karthik for his support and inspiring hope in the hearts of stroke survivors.”

One of the stroke survivors who participated in the cricket match expressed their gratitude, saying, “This event has given me hope and motivation. It’s inspiring to see so many people come together to support this cause.”

Dr. Suresh Bapu, Director & Senior Consultant, Institute of Neuroscience stated, “By adopting a healthy lifestyle, including regular exercise, a balanced diet, and avoiding smoking and excessive alcohol consumption, you can significantly reduce your risk of stroke”.