Breaking
February 27, 2025

Cinema

பிரைம் வீடியோ வழங்கும் “தி வில்லேஜ்” சீரிஸின் டிரெய்லர் வெளியீடு.

பிரைம் வீடியோ வழங்கும், ஸ்டுடியோ சக்தி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில், B.S.ராதாகிருஷ்ணன் தயாரிப்பில், இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கத்தில், நடிகர் ஆர்யா நடிப்பில், ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள “தி வில்லேஜ்” தமிழ் ஒரிஜினல் சீரிஸ் நவம்பர் 24 ஆம் தேதி வெளியாகிறது.

தமிழில் முதல் முழுமையான ஹாரர் திகில் ஒரிஜினல் சீரிஸாக, உருவாகியுள்ள “தி வில்லேஜ்” சீரிஸின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவினில்..

பிரைம் வீடியோ இந்தியா & தென்கிழக்கு ஆசியா, தலைவர் அபர்ணா புரோஹித் பேசியதாவது..
பிரைம் வீடியோ மூலம் தி வில்லேஜ் சீரிஸை உங்கள் முன் அறிமுகப்படுத்துவது மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்த சீரிஸ் மூலம் எங்கள் பார்வையாளர்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்ல உள்ளோம். இந்த சீரிஸ் ஒரு மறக்க முடியாத பயணம். மிக உணர்வுப்பூர்வமான பயணம். 4 வருடங்கள் முன் ஆரம்பித்தது. முழுதாக எழுதி முடிக்க 2 வருடங்கள் ஆனது. கோவிடை கடந்து இது முழுதாக உருவாக ஆரம்பித்த தருணத்தில், ஆர்யா சார் ஓகே சொன்ன பிறகு இந்த சீரிஸ் உண்மையிலேயே மிகப்பெரியதாகிவிட்டது. பொதுவாக ஹாரர் சீரிஸ் இங்கு யாரும் பார்த்திருக்க மாட்டீர்கள். அந்த வகையில் இது உங்களுக்கு கண்டிப்பாக மிகப் புதுமையான அனுபவமாக இருக்கும். படக்குழு அனைவரும் கடினமாக உழைத்துள்ளார்கள். அனைவருக்கும் நன்றி.

தயாரிப்பாளர் B.S. ராதாகிருஷ்ணன் பேசியதாவது…
மிக்க மகிழ்ச்சி, நான்கு வருடங்கள் முன்பு மிலிந்த் சார் இதைப்பண்ணலாம் என்றார். அப்போது ஆரம்பித்த பயணம் அபர்ணா மேடம் சொன்னது போல், இந்தக்கதை எழுதவே 2 வருடம் ஆனது. வேறு வேறு இடத்தில் நடக்கும் பல கதைகள், அதை ஒன்றிணைக்கும் மையப்புள்ளி எது, எப்படி என்பது தான் சுவாரஸ்யம். ஆர்யா சார் வந்த பிறகு தான் இது பெரிய படைப்பாக மாறியது. இந்த படைப்பை பொறுத்தவரை, மிலிந்த் மற்றும் எங்களின் பார்வையும், கதையின் மீதான நம்பிக்கையும் தான் இதில் நடிக்க காரணம் என்றார் ஆர்யா, அவருக்கு நன்றி. அமேசான் யூஎஸ் போலவே இங்கேயும், அவர்கள் முழுமையான ஈடுபாட்டோடு, உழைத்தார்கள். பெரும் ஆதரவு தந்தார்கள். எல்லோருக்கும் நன்றி.

இயக்குநர் மிலிந்த் ராவ் பேசியதாவது…
இது தமிழுக்கு மிகவும் புதிது. கிராஃபிக் நாவலை இங்கு யாரும் திரைப்படைப்பாக செய்ததில்லை. ஆர்யா சாருக்கும் மிகப்புதியது. இதை அவர் செய்ய ஒத்துக்கொண்டது பெரிய விசயம். கிராஃபிக் நாவலை தமிழ்நாட்டில், தூத்துக்குடி அருகில் நடக்கும் கதை போல நமக்கு நெருக்கமாக, நம் மொழியில் உருவாக்கியுள்ளோம். முழுக்க நைட் கால் ஷீட் தான் அதனால் எல்லோரும் ரொம்ப கஷ்டபட்டு உழைத்தனர். நடிகர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி. இசை இந்த சீரிஸிற்கு மிக முக்கியம் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் அட்டாகாசமான இசையை தந்துள்ளார். விஷுவலும் நன்றாக வந்துள்ளது ஒளிப்பதிவாளருக்கு நன்றி. தொழில் நுட்பக்குழு மிகப்பெரிய உழைப்பை தந்துள்ளார்கள் அனைவருக்கும் நன்றி.

நடிகர் ஆர்யா பேசியதாவது…
அபர்ணா மேடம் இல்லாமல் அமேசான் ப்ரைமில் எந்த புராஜக்டும் ஓகே ஆகாது. அவர் இதை ஓகே செய்திருக்கிறார் அதுவே பெரிய விசயம். இங்கு நிறைய ஒரிஜினல்ஸ் வர அவர் தான் காரணம் அவருக்கு நன்றி. மிலிந்த் இந்தக்கதையை சொன்ன போது, இதை எடுக்க முடியுமா ? என்று தான் முதலில் கேட்டேன். அவர் எழுதியது மிகப்பெரிய விஷிவல், படத்தை விட பெரிய பட்ஜெட், இதை எல்லாம் இங்கு எடுக்க முடியுமா?, சொல்வதில் 80 சதவீதம் எடுத்தாலே போதும் என்று சொன்னேன். இவ்வளவு பெரிய பட்ஜெட்டை ப்ரைமில் ஒகே செய்தார்கள், மிலிந்த் சொன்ன மாதிரி எடுத்து விட்டார் அதுவே மகிழ்ச்சி. மிலிந்த் ஈஸியாக எந்த ஒரு காட்சிக்கும் ஒகே சொல்ல மாட்டார், இதை எடுப்பது மிகக்கடினம். ப்ராஸ்தடிக் மேக்கப், ஷீட்டிங் லோகேஷன் என எல்லாமே மிக கடினமாக இருந்தது. 3 வருட நீண்ட பயணம். இதை எடுத்து முடித்ததற்கே மிகப்பெரிய பார்டி வைக்க வேண்டும். அவ்வளவு கஷ்டபட்டிருக்கிறோம். மேலும் இது எனக்கு புது எக்ஸ்பீரியன்சாக இருந்தது. இவ்வளவு கோரியான ஹாரர் கதை நடித்ததே இல்லை. இது முழுக்க முழுக்க வித்தியாசமான கான்செப்ட், அதை நம்பித்தான் நான் வேலை செய்தேன். நரேன் சார் அவருடன் சேர்ந்து என் குழந்தையையும், மனைவியையும் தேடுவது தான் கதை. ஆனால் நிறைய சப் பிளாட் இருக்கும். ஒவ்வொரு எபிஸோடும் நீங்கள் அடுத்து என்ன என்று எதிர்பார்ப்பீர்கள். இந்த மாதிரி கதையில் விஷுவல் மற்றும் சவுண்ட் ரொம்ப முக்கியம், அதை மிலிந்த் கொண்டு வந்திருக்கிறார். விஷுவல் எபெஃக்ட்ஸ் எல்லாம் முடித்து, உங்கள் முன் கொண்டு வர இவ்வளவு காலம் தேவைப்பட்டது. இப்போது பார்க்க மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும் நன்றி.

நடிகை பூஜா ராமசந்திரன் பேசியதாவது..
தமிழில் நீண்ட காலம் கழித்து, நான் திரும்ப வந்திருக்கிறேன், மகிழ்ச்சியாக உள்ளது. என்னை எப்படி மிலிந்த் இந்த பாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்தார் என்று ஆச்சர்யமாக இருந்தது, இம்மாதிரி பாத்திரம் செய்ய வேண்டும் என்பது கனவு, எனக்கு இந்த பாத்திரம் வந்தது மிகப்பெரிய மகிழ்ச்சி. நான் கர்பமாகும் முன் வாய்ப்பு வந்தது. நிறைய ஆக்சன் காட்சிகளில் நடித்தேன் மூன்று மாதத்தில் எடுத்து விடுங்கள் என்று டைரக்டரிடம் கேட்டேன், அவர் செய்து தந்தது மகிழ்ச்சி. பொதுவாக நைட் ஷூட் எடுப்பது கஷ்டம் இது அதை விட கஷ்டம் ஆனால் மிலிந்த் சார் செம்ம கூலாக ஹேண்டில் செய்தார். இந்த சீரிஸில் நானும் பங்கு பெற்றது மகிழ்ச்சி. எல்லோரும் கஷ்டப்பட்டுள்ளார்கள் சீரிஸ் மிகச்சிறப்பாக வந்துள்ளது. அனைவருக்கும் நன்றி.

நடிகர் ஜெயப்பிரகாஷ் பேசியதாவது..
இந்த சீரிஸில் ரொம்ப ஈஸியாக இருந்து நடித்தது நான் மட்டும் தான். ஏனென்றால் எல்லாவற்றிற்கும் பிள்ளையார் சுழி போடுவது நான் தான், அதை செய்வது அர்ஜூன். இயக்குநரின் உழைப்பு மிகப்பெரியது. எல்லாவற்றையும் அருமையாக ஒருங்கிணைத்துள்ளார். அமேசான் எங்கள் எல்லோரையும் மிக நன்றாக பார்த்துக் கொண்டார்கள், நான் எல்லாம் ஏசி ரூமில் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் ஷீட் செய்தேன், மற்றவர்கள் காட்டுக்குள் பயங்கர கஷ்டபட்டிருக்கிறார்கள் அதைக்கேட்கும் போது தான் தெரிகிறது. இது தமிழுக்கு மிகப்பெரிய புதுமையான சீரிஸ், உங்களுக்குப் பிடிக்கும்.

நடிகர் அர்ஜூன் சிதம்பரம் பேசியதாவது..
என்னை, நேர்கொண்ட பார்வை, பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் வேறு ரூபத்தில் பார்த்திருப்பீர்கள், இதில் புதுவிதமாக பார்ப்பீர்கள். இது மிகப் புது அனுபவமாக இருந்தது. ஆர்யா கூட ஒரு சீனில் நடித்துள்ளேன் அதிலும் அவர் பின்னிவிட்டார். அது உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன், எனக்கு படத்தில் எந்த வித சிரமமும் இல்லை நடக்க கூட தேவையில்லை, வீல் சேரில் இருப்பேன். என்னுடைய கதாபாத்திரம் அப்படி தான் அமைந்தது , நான் இந்தப் படத்தில் நன்றாக நடித்தாலும் நடிக்காவிட்டாலும் இயக்குநர் தான் பொறுப்பு, அனைத்தும் அவரைத் தான் போய் சேரும், இந்தத் தொடர் வெளியாவதற்காக ஆர்வமாக காத்திருக்கிறேன் நன்றி.

நடிகர் ஜான் கொக்கன் பேசியதாவது..,
எல்லோருக்கும் வணக்கம், என் குரு அஜித்குமாருக்கு வணக்கம், இந்த சீரிஸ் எனக்கு புதுமையான அனுபவம். சர்பாட்டா பரமபரை படத்திற்கு பிறகு ஆர்யா கூட மீண்டும் இதில் நடித்துள்ளேன், இதிலும் சண்டை போட்டிருக்கிறோம். என் பொண்டாட்டி கூட சேர்ந்து நடித்தது மகிழ்ச்சி. இக்கதையில் மியூடண்டாக நடித்தவர்கள் தான் உண்மையான ஹீரோக்கள். அவர்கள் காஸ்ட்யூமே 20 கிலோவுக்கு மேல் இருக்கும், அதில் ப்ராஸ்தடிக் மேக்கப் வேறு போட்டு நடித்தார்கள். சண்டைக்காட்சிகள் பயங்கரமாக உழைத்து எடுத்துள்ளார்கள். நீங்கள் இதுவரை பார்க்காத புதிய அனுபவமாக இந்த சீரிஸ் இருக்கும் நன்றி.

நடிகர் ஆடுகளம் நரேன் பேசியதாவது…
சீரிஸ் பற்றி எல்லோரும் சொல்லிவிட்டார்கள், நிறைய கஷ்டப்பட்டோம் ஆனால் இப்போது பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. நான் இதுவரை நடித்ததில் இது மிகப்புதுசு. இந்தியாவிற்கே இது புதுசாக இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும் நாங்கள் அனைவரும் மிகப்பெரிய அளவில் நம்புகிறோம் அனைவருக்கும் நன்றி.

கைதி புகழ் நடிகர் ஜார்ஜ் மரியான் பேசியதாவது
எல்லோருக்கும் நன்றி. எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநருக்கு நன்றி, இந்த சீரிஸில் கிராமத்தில் இருக்கும் ஒருவராக நடித்துள்ளேன். மிக நல்ல அனுபவம் உடன் நடித்தவர்கள் அனைவருக்கும் நன்றி எல்லோருக்கும் நன்றி.

நடிகர் தலைவாசல் விஜய் பேசியதாவது,
நான் படப்பிடிப்பிற்கு வந்த முதல் நாளே அதிக நேரம் படப்பிடிப்பு நடந்தது, அப்போதே இயக்குநர் குறித்து தெரிந்துவிட்டது. நான் சீனில் நன்றாக பேசி நடித்த பிறகு, மீண்டும் சாதாரணமாக ஒன் மோர் என்று கேட்பார். நான் எனக்கு மட்டும் தான் இப்படி செய்கிறார் என்று தான் நினைத்தேன், ஆனால் அனைத்து நடிகர்களுக்கும் இதே நிலைமைதான், அனைவருமே பல வருடம் அனுபவம் நிறைந்தவர்கள் ஆனால் அனைவரிடமும் இயக்குநர் ஒன் மோர் கேட்பார். திரையில் தனக்கு எது தேவை என்பதில் தெளிவாக இருந்தார், அதை யாரையும் கோபப்படுத்தாமல், மகிழ்ச்சியாக முகத்தை கொண்டு, எங்களிடம் வேலை வாங்கிவிடுவார். மிகத்திறமையான இயக்குநர். இந்த சீரிஸ் புதுசாக இருக்கும், உங்கள் அனைவருக்கும் ஒரு ஆச்சர்யத்தை கொடுக்கும். கண்டிப்பாக உங்களை மகிழ்விக்கும் என்று நம்புகிறேன் நன்றி.

நடிகர் அஸ்வின் குமார் பேசியதாவது
எனக்கு இந்தக்கதாப்பாத்திரம் தந்ததற்கு அமேசான் மற்றும் இயக்குநருக்கு நன்றி. ஆர்யா சாருக்கு மிக்க நன்றி. மிகப்புதுமையான அனுபவம். எல்லோரும் என்னை நன்றாக பார்த்துக்கொண்டனர். எல்லோரும் தாங்கள் கஷ்டப்பட்டதை சொன்னார்கள், கஷ்டம் கண்டிப்பாக இருக்கும் ஆனால் இப்போது பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. செம்ம ஆக்சன் காட்சிகள் நடித்துள்ளோம், வலி எல்லாம் பொருட்டே இல்லை, ஒரு பேஷன் இருந்தால் தான் இதைச் செய்ய முடியும். எல்லோரும் இதில் ஹீரோ தான். எல்லோருக்கும் நன்றி. உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகை கலைராணி பேசியதாவது
என்னோட முதல் வெப் சீரிஸ் அமேசானுக்கும் டைரக்டருக்கும் நன்றி. எல்லோரும் தாங்கள் கஷ்டப்பட்டதை சொன்னார்கள், நான் எல்லோரையும் விட ஃபர்ஸ்ட்டாக போக வேண்டும், லாஸ்ட்டாக வர வேண்டும், மேக்கப் போடவே 2 மணி நேரம் ஆகி விடும். மேக்கப் ஆர்டிஸ்ட் எல்லோரும் என்னை நன்றாக பார்த்துக்கொண்டார்கள், எப்போதும் அருகிலேயே இருப்பார்கள். மிக்கடினமாக உழைத்துள்ளார்கள். இயக்குநர் என்னை நேரில் வந்து பார்த்து, முழுக்கதையும் சொன்னார் அப்போது அவர் இயக்கத்தில் நயன்தாரா படம் வந்திருந்தது, எனக்கு பிடித்த படம், உடனே ஆர்வத்தில் அவரை சந்திந்தேன். எனக்கு கதை பிடித்திருந்தது, நான் எப்படி பேச வேண்டும் என்பதில் ஆரம்பித்து எல்லாவற்றையும் சொல்லித்தாந்தார்கள். நான் இதுவரை நடிக்காத பாத்திரம், இப்படி ஒரு சீரிஸ் பார்த்திருக்க மாட்டீர்கள் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகர் கோகுல் பேசியதாவது..
எனக்கு இந்தப்படத்தில் வாய்ப்பு வந்ததற்கு ஆர்யா சார் தான் காரணம் அவருக்கு நன்றி. சந்தோசம். டைரக்டரிடம் பாத்ரூம் கேட்டால், ரெண்டு மணி நேரம் கழித்து போகலாம் என்பார், மேக்கப் போட்டால் கடைசி வரை கலைக்க முடியாது, ரொம்பவும் கஷ்டபட்டு எடுத்துள்ளோம். ஆனால் சீரிஸ் பார்க்க புதிதாக இருக்கிறது. உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.

குழந்தை நட்சத்திரம் ஆழியா பேசியதாவது
ஆர்யா சார் பொண்ணா நடிச்சிருக்கேன் வில்லேஜ் சீரிஸ், செம்ம அட்வென்ச்சாராக இருக்கும். ஷீட்டிங்கில் தூங்கும்போது ஜோக் சொல்லி எழுப்பி விட்டு விடுவார்கள். ஜாலியாக இருந்தேன் இந்த சீரிஸ் செம்மையாக இருந்தது. உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். ஆர்யா சார் என்னை நன்றாக பார்த்துக்கொண்டார். எல்லோருக்கும் நன்றி.

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் தமிழ் திகில், ஒரிஜினல் வெப்சீரிஸ் தி வில்லேஜ் சீரிஸுக்கு, கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார், பாடல் வரிகளை மதுரை சொல்ஜர் (சியான் சாஹீர், செந்தில் குமார்), ஐக்கி பெர்ரி, சினேகன், குரு அய்யாதுரை மற்றும் ஷில்பா நடராஜன் எழுதியுள்ளனர். முத்து சிற்பி(காளிமுத்து), சிந்துரி விஷால், மதிச்சியம் பாலா(ஜி. முருகன்), குரு அய்யாதுரை, மதுரை சோல்ஜர் (சியான், செந்தில் குமார்), ஐக்கி பெர்ரி, கிரிஷ் கோபாலகிருஷ்ணன், டி.பிரதிமா பிள்ளை, ஷில்பா நடராஜன் ஆகியோர் பாடியுள்ளனர்.

ஸ்டுடியோ சக்தி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில், B.S.ராதாகிருஷ்ணன் தயாரித்துள்ள தி வில்லேஜ் தமிழ் ஒரிஜினல் சீரிஸை இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார், தி வில்லேஜ் சீரிஸ், அஸ்வின் ஸ்ரீவத்சங்கம், விவேக் ரங்காச்சாரி மற்றும் ஷாமிக் தாஸ்குப்தாவின் ஆகியோர் எழுதிய கிராஃபிக் ஹாரர் நாவலிலிருந்து உருவாக்கப்பட்டதாகும். இந்த கிராஃபிக் திகில் நாவல் யாழி ட்ரீம் ஒர்க்ஸ் வெளியீடாக வெளிவந்தது.

தனது குடும்பத்தைக் காப்பாற்றப் போராடும் ஒருவனின் அபாரமான போராட்டக் கதையைச் சொல்வது தான் தி வில்லேஜ் சீரிஸ். ஸ்டுடியோ சக்தி நிறுவனத்தின் சார்பில், இந்தத் தொடரை B.S. ராதாகிருஷ்ணன் தயாரித்துள்ளார். சீரிஸுக்கான திரைக்கதையை மிலிந்த் ராவ், தீரஜ் வைத்தி மற்றும் தீப்தி கோவிந்தராஜன் ஆகியோர் எழுதியுள்ளனர். இந்தத் சீரிஸில், பிரபல தமிழ் நடிகர் ஆர்யா, திவ்யா பிள்ளை, ஆழியா, ஆடுகளம் நரேன், ஜார்ஜ் மாயன், பி.என். சன்னி, முத்துக்குமார் கே., கலைராணி எஸ்.எஸ்., ஜான் கொக்கன், பூஜா, வி.ஜெயபிரகாஷ், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் தலைவாசல் விஜய் ஆகியோருடன் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

தி வில்லேஜ் சீரிஸ் பிரைம் வீடியோவில் நவம்பர் 24 முதல் இந்தியா மற்றும் 240+ நாடுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளுடன், ஆங்கில சப்டைட்டில்களுடன் வெளியாக உள்ளது.

ரியோ ராஜ் நடித்துள்ள படம் ‘ஜோ’!

விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் அருள் நந்து, மாத்யூ அருள் நந்து தயாரிப்பில் ரியோ ராஜ் நடித்துள்ள படம் ‘ஜோ’!

ரியோ ராஜ் நடித்துள்ள ’ஜோ’ திரைப்படம் அதன் அறிவிப்பில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான வைப்பை உருவாக்கி வருகிறது. விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் அருள் நந்து, மாத்யூ அருள் நந்து தயாரிப்பில் ரியோ ராஜ், அன்பு தாசன், மாளவிகா மனோஜ், ஏகன், பவ்யா திரிக்கா நடிப்பில் ஹரிஹரன் ராம் இயக்கி இருக்கும் படம் ’ஜோ’. ’மீசையை முறுக்கு’, ’நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு’ போன்ற படங்களில் இயக்குநர் பிரிவில் பணி புரிந்தவர் ஹரிஹரன் ராம்.

கேரளா தமிழ் நாடு எல்லையில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் சில மாணவ மாணவியரின் பதினேழு வயது முதல் இருபத்தி ஏழு வயது வரையிலான வாழ்க்கையை மூன்று கட்டங்களாக சொல்லும் படம் இது. ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞனுக்கும் கேரளப் பெண்ணுக்கும் வரும் காதலும் அதன் விளைவுகளுமே இந்தப் படம். இந்தப் படத்திற்காக கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் ஒரிஜினலாக தாடி வளர்த்ததாகவும் இதனால் வேறு எந்த பட வாய்ப்புகளையும் ஏற்க முடியவில்லை என்கிறார் ரியோ.

இந்தப் படத்திற்கு ராகுல் கே விக்னேஷ் ஒளிப்பதிவு செய்ய, இசை சித்து குமார், படத் தொகுப்பு கே ஜி வருண். படத்தில் ஒரு கல்லூரி நடனப்பாடல் மற்றும் மிகக் குறைவான இசைக் கருவிகளை வைத்து யதார்த்தமான ஒலிகளோடு அந்தப் பாடல் அமைத்து இருக்கிறோம் என இசையமைப்பாளர் சித்து குமார் கூறியுள்ளார். மேலும் இவரது இசையில் வைசாக் பாடல் வரிகளில் உருவாகியுள்ள ‘ஒரே கனா’ பாடலில் யுவன் ஷங்கர் ராஜா தோன்றியுள்ளது படத்திற்கு பெரும்பலம் எனப் படக்குழு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

இந்தப் படத்தில் ரியோ ராஜ் & பவ்யா திரிகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சித்து குமார் இசையமைக்க, ராகுல் கே.ஜி.விக்னேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வருண் கே.ஜி. (எடிட்டிங்), ஏபிஆர் (கலை), அபு & சால்ஸ் (கோரியோகிராஃபி), பவர் பாண்டியன் (ஆக்‌ஷன்), வைசாக், விக்னேஷ் ராமகிருஷ்ணா (பாடல் வரிகள்), ஸ்ரீதேவி கோபாலகிருஷ்ணன் (ஆடை வடிவமைப்பாளர்), எம். முகமது சுபியர் (காஸ்ட்யூமர்) மற்றும் சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன் (மக்கள் தொடர்பு) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர். ‘ஜோ’ திரைப்படம் உலகம் முழுவதும் நவம்பர் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது.

அரண் இயக்கி, தயாரித்து, நடித்திருக்கும் படம் ‘ஜிகிரி தோஸ்த்’!

பிரதீப் ஜோஸ் தயாரிப்பில், எஸ் பி அர்ஜுன், ஹக்கா இணை தயாரிப்பில் அரண் இயக்கி, தயாரித்து, நடித்திருக்கும் படம் ‘ஜிகிரி தோஸ்த்’!

நண்பர்கள் கதை என்றாலே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு எப்போதும் கொண்டாட்டம்தான். அப்படி ஒரு ஜாலியான நண்பர்கள் பயணம் செல்லும்போது ஏற்படும் திடீர் திருப்பங்களின் கதையாக உருவாகி இருக்கிறது ‘ஜிகிரி தோஸ்த்’. இயக்குநர் ஷங்கரிடம் ’2.0’ படத்தில் பணியாற்றியவரும், ’திறந்த புத்தகம்’, ’கால் நூற்றாண்டுக் காதல்’, ’நீங்க நல்லவரா கெட்டவரா’ ஆகிய குறும்படங்களை இயக்கி, விருது பெற்றவருமான அரண் தயாரித்து , நடித்து எழுதி இயக்கி இருக்கும் படம்தான் ’ஜிகிரி தோஸ்த்’.
ஷாரிக் ஹாசன் அம்மு அபிராமி, வி ஜே ஆஷிக், பவித்ரா லக்ஷ்மி, அனுபமா குமார், கவுதம் சுந்தர்ராஜன் பாடகரும் நடிகருமான சிவம் ஆகியோர் நடித்து இருக்கும் இந்தப் படத்துக்கு ’ஒரு கிடாயின் கருணை மனு’, ’பந்தன்’, ’சத்திய சோதனை’, ’விழித்திரு’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஆர்.வி. சரண் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜி வி பிரகாஷிடம் உதவியாளராக இருந்தவரும், பிரபு தேவா படம் ஒன்றுக்கு இசையமைப்பாளருமான அஸ்வின் விநாயகமூர்த்தி இசை அமைக்கிறார்.

விஞ்ஞானியாக ஆசைப்படும் விக்கி, நடிகனாக ஆசைப்படும் ரிஷி, ஜாலி பேர்வழியான லோகி என்ற மூன்று பால்யகால நண்பர்கள் வாழ்வில் ஒரு நாளில் நடக்கும் கதை இது. விக்கியின் பிறந்த நாளை ஒட்டி நண்பர்கள் மகாபலிபுரம் சொல்ல, வழியில் ஒரு பெண்ணை கேங்ஸ்டர் கூட்டம் ஒன்று காரில் கடத்திக் கொண்டு போவதை இவர்கள் பார்க்கிறார்கள். லோகியைத் தவிர மற்ற இருவரும் அவளைக் காப்பாற்ற முயல, விக்கி கண்டுபிடித்து இருக்கும் டெரரிஸ்ட் ட்ராக்கர் என்ற கருவி மூலம் அவர்கள் அந்தப் பெண்ணை காப்பாற்ற முயல பிறகு என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதை. நண்பர்களின் கலாட்டாவோடு படம் ஜாலியாக இருக்கும் என்கிறார் இயக்குநர். படம் எல்லோரையும் ஈர்க்கும்படி இருக்கும் என்கிறார் இணைத் தயாரிப்பாளர் அர்ஜுனன்.

காட்சியில் இல்லாதவர்களை மனதில் கொண்டு இசை அமைக்கும் சூழல் இந்தப் படத்தில் சவாலாக இருந்தது என்கிறார் இசை அமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி. படம் வெளியாகும் தேதி, டீசர், டிரெய்லர் குறித்தான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

எழுத்தாளர் ‘அஜயன் பாலாவின் மைலாஞ்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.

அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் டாக்டர் அர்ஜுன் வழங்கும், பிரபல எழுத்தாளர் அஜயன் பாலா எழுதி இயக்கும் ‘அஜயன் பாலாவின் மைலாஞ்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

மலைப் பிரதேசத்தின் பின்னணியில் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை பேசும் காதல் கதையான ‘அஜயன் பாலாவின் மைலாஞ்சி’ காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி மாதம் வெளியாகிறது

இசைஞானி இளையராஜா இசையில், செழியன் ஒளிப்பதிவில், ஶ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகும் ‘அஜயன் பாலாவின் மைலாஞ்சி’ திரைப்படத்தில் ஸ்ரீராம் கார்த்திக், கிரிஷா குருப், சிங்கம்புலி முனீஷ்காந்த் மற்றும் தங்கதுரை உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்

அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க டாக்டர் அர்ஜுன் வழங்க பல்வேறு வெற்றிப் படங்களின் திரைக்கதை மற்றும் வசன எழுத்தாளரான அஜயன் பாலா இயக்குநராக அறிமுகம் ஆகும் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ள நிலையில் அதன் தலைப்பான ‘மைலாஞ்சி’, தற்போது ‘அஜயன் பாலாவின் மைலாஞ்சி’ என்று மாற்றப்பட்டுள்ளது.

இப்படத்தின் தலைப்பு மாற்றம் குறித்து பேசிய அஜயன் பாலா, “திரைப்படத் தலைப்புகளின் உரிமையை முறைப்படுத்துவது மிகவும் அவசியம். இந்த நடைமுறையில் உள்ள சில சிக்கல்களில் காரணமாகவே பத்து வருடங்களுக்கு முன் பதிவு செய்திருந்தும் இதே தலைப்பில் வேறு ஒரு படம் திரைக்கு வந்த காரணத்தால் எங்கள் படத்தின் தலைப்பை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது,” என்றார்.

“மலைப் பிரதேசத்தை பின்னணியாக கொண்டு சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பேசும் அழகான காதல் கதையான இதை செய்துள்ளோம். பெரும்பாலான காட்சிகள் ஊட்டியில் படமாக்கப்பட்டன. ஒரே மாதத்தில் படபிடிப்பு நிறைவு செய்யப்பட்டுள்ளது. இத்திரைப்படம் மிகவும் அழகாகவும் உணர்ச்சிபூர்வமான வகையிலும் உருவாகியுள்ளது,” என்று அஜயன் பாலா கூறினார்.

மேலும் பேசிய அவர், “பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளை நாம் உணரத் தொடங்கியுள்ள இந்த காலகட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது மிகவும் அவசியம். இக்கருத்தை வலியுறுத்தும் காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. செழியனின் ஒளிப்பதிவு மிகவும் பேசப்படும்,” என்று கூறினார்.

போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறும் நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி மாதம் ‘அஜயன் பாலாவின் மைலாஞ்சி’ திரையரங்குகளில் வெளியாகிறது.

‘கன்னிமாடம்’ படத்தில் நடித்துள்ள ஸ்ரீராம் கார்த்திக் இயற்கை புகைப்பட கலைஞர் வேடத்தில் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், ‘கோலிசோடா 2’ புகழ் கிரிஷா குருப் நாயகியாக நடிக்கிறார். முனீஷ்காந்த் மற்றும் தங்கதுரை உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படம் முழுவதும் வரும் ஒரு முக்கிய பாத்திரத்தில் சிங்கம்புலி நடிக்கிறார். சிறந்த அறிமுக நடிகருக்கான சைமா (SIIMA) விருதை ஸ்ரீராம் கார்த்திக் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நல்ல கதையின் மீது பெரும் நம்பிக்கை வைத்து தமிழ் சினிமாவின் தரமான கலைஞர்களை கொண்ட கூட்டணி இப்படத்திற்காக பணத்தைக் கருத்தில் கொள்ளாமல் கைகோர்த்துள்ளது. இசைஞானி இளையராஜா இசையமைக்க செழியன் ஒளிப்பதிவை கவனிக்க, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்புக்கு பொறுப்பேற்க, லால்குடி இளையராஜா கலை இயக்கத்தை கையாண்டுள்ளார்.

இப்படத்தின் கதையை பெரிதும் விரும்பி பாராட்டு தெரிவித்த இசைஞானி இளையராஜா, இதில் இடம்பெறும் நான்கு பாடல்களையும் தானே எழுதியுள்ளார். அவரது இசையில் உருவாகியுள்ள ‘அஜயன் பாலாவின் மைலாஞ்சி’ திரைப்பட பாடல்கள் அடுத்த வருடம் முதல் காதலர்களின் தேசிய கீதமாக இருக்கும் என்று இயக்குநர் கூறினார்.

‘பொன்னியின் செல்வன்’, ‘ஆர் ஆர் ஆர்’ உள்ளிட்ட பிரம்மாண்ட திரைப்படங்களுக்கு படத்தொகுப்பு செய்த இந்தியாவின் முதன்மை படத்தொகுப்பாளர் ஶ்ரீகர் பிரசாத் இந்த திரைப்படத்திற்கு படத்தொகுப்பாளராக பங்காற்றுவது கூடுதல் சிறப்பு.

திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா மற்றும் நடிகர் என கடந்த 20 வருடங்களாக தமிழ் திரை உலகில் பல்வேறு பரிமாணங்களில் இயங்கி வரும் அஜயன் பாலா, ‘சித்திரம் பேசுதடி’, ‘பள்ளிக்கூடம்’, ‘மதராசபட்டினம்’, ‘தெய்வத்திருமகள்’, ‘மனிதன்’, ‘சென்னையில் ஒரு நாள்’, ‘லக்ஷ்மி’, ‘தலைவி’, உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய பங்காற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

2017ம் ஆண்டு வெளிவந்த ‘ஆறு அத்தியாயம்’ திரைப்படத்தில் இடம்பெறும் ஆறு கதைகளில் ஒன்றை இயக்கி உள்ள அஜயன் பாலா, தற்போது ‘அஜயன் பாலாவின் மைலாஞ்சி’ திரைப்படத்தின் மூலம் முழு நீள திரைப்படம் ஒன்றை முதல் முறையாக எழுதி இயக்கியுள்ளார்.

நேச்சுரல் ஸ்டார் நானி, விவேக் ஆத்ரேயா மற்றும் DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ் இணையும் சூர்யாவின் சனிக்கிழமை

நேச்சுரல் ஸ்டார் நானி, விவேக் ஆத்ரேயா மற்றும் DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ் இணையும் சூர்யாவின் சனிக்கிழமை படத்தின் படப்பிடிப்பு அதிரடியான ஆக்சன் காட்சியுடன் துவங்கியது

நேச்சுரல் ஸ்டார் நானி, விவேக் ஆத்ரேயா மற்றும் DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ் மூவரும் இணையும் இரண்டாவது படைப்பான சூர்யாவின் சனிக்கிழமை திரைப்படம் கடந்த மாதம் பூஜை போடப்பட்டது. நேச்சுரல் ஸ்டார் நானியை தனித்துவமான அதிரடி அவதாரத்தில் காட்டிய இப்படத்தின் அறிமுக அறிவிப்பு வீடியோ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் DVV தனய்யா மற்றும் கல்யாண் தாசரி இருவரும் இப்படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு அதிரடி ஆக்சன் காட்சியுடன் இன்று ஹைதராபாத்தில் தொடங்கியது. ராம்-லக்ஷ்மண் மாஸ்டர்கள் சாகச சண்டைக்காட்சியை வடிவமைக்கிறார்கள். இந்த ஷெட்யூலில் ஆக்ஷனுடன் சில வசன காட்சிகளும் படமாக்கப்படவுள்ளது. இப்படப்பிடிப்பில் நாயகன் நானி மற்றும் படத்தின் முக்கிய கலைஞர்கள் கலந்து கொள்கிறார்கள்.

நடிகை பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடிக்கும் இப்படத்தில், நானி வித்தியாசமான முரட்டுத் தோற்றத்தில் நடிக்கிறார், மேலும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். புகழ்மிகு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்க, முரளி ஜி ஒளிப்பதிவு செய்கிறார். கார்த்திகா ஸ்ரீனிவாஸ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் சூர்யாவின் சனிக்கிழமை திரைப்படம், தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது.

நடிகர்கள்: நானி, பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே.சூர்யா

தொழில்நுட்பக் குழு:
எழுத்தாளர் மற்றும் இயக்குநர்: விவேக் ஆத்ரேயா
தயாரிப்பாளர்கள்: DVV தனய்யா, கல்யாண் தாசரி
பேனர்: DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ்
இசை: ஜேக்ஸ் பிஜாய்
ஒளிப்பதிவு : முரளி ஜி
எடிட்டர்: கார்த்திகா ஸ்ரீநிவாஸ்
சண்டை காட்சிகள் : ராம்-லக்ஷ்மன்
மக்கள் தொடர்பு – யுவராஜ்
மார்க்கெட்டிங்க் : வால்ஸ் அண்ட் டிரெண்ட்ஸ்

பிரசாந்த் வர்மாவின் ஹனு-மான் படத்திலிருந்து , சூப்பர் மேன் கீதமான ஹனு -மான் பாடல் வெளியாகியுள்ளது !!

சூப்பர் மேன் ஹனு-மான் சூப்பரான ஆந்தம் பாடலுடன் வந்துள்ளார் !! இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் ஹனு-மான் படத்திலிருந்து , சூப்பர் மேன் கீதமான ஹனு -மான் பாடல் வெளியாகியுள்ளது !!

சூப்பர் ஹீரோ திரைப்படங்களை ரசிக்கும் இந்திய ரசிகர்கள், நமது மண்ணின் சூப்பர் ஹீரோவான ஹனு-மானை திரையில் தரிசிக்க ஆவலுடன் காத்திருக்கின்றனர் ஆர்வமாக உள்ளனர். திரையுலகின் திறமைமிகு இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில், இளம் ஹீரோ தேஜா சஜ்ஜா நாயகனாக நடித்திருக்கும் இப்படம் திரைக்கு வர இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன. இந்நிலையில் இயக்குநர் பிரசாந்த் வர்மா படம் குறித்தான விளம்பரங்களிலும் தன் தனித்திறமையைக் காட்டி வருகிறார். இப்படத்தின் டீசர் மற்றும் சாலிசா பாடல் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், படக்குழு குழந்தைகள் தினமான இன்று அவர்கள் கொண்டாடும் வகையில், ஹனு மான் சூப்பர் மேன் பாடலை வெளியிட்டுள்ளனர்.

சூப்பர் ஹீரோ ஹனுமானின் இரண்டாவது தனிப்பாடலை வெளியிட, படக்குழு ஏன் குழந்தைகள் தினத்தைத் தேர்ந்தெடுத்தது என்று பலரும் ஆச்சரியப்பட்டனர். ஆனால் இப்பாடலைப் பார்த்தவுடன் அனைவருக்கும் ஒரு தெளிவு கிடைக்கும். சூப்பர் ஹீரோ ஹனுமான் வேடிக்கையானவர், அதே நேரத்தில் சாகசக்காரர். அனுதீப் தேவ் உடைய அற்புத இசையில், மதுரகவி பாடல் வரிகளில், ஆர்.பி.கிரிஷாங், அஹானா பாலாஜி, சாய்வேதா வாக்தேவி குரல்களில், முழுக்க முழுக்க நகைச்சுவையுடன் அனைவரையும் மகிழ்விக்கும் பாடலாக இப்பாடல் வந்துள்ளது. காமிக் வடிவத்தை ஞாபகப்படுத்தி, குழந்தைகளை ஈர்க்கும் வகையில் ஹனு மானின் சாகசங்களை சொல்லும் இப்பாடலை, குழந்தைகள் அனைவரும் விரும்புவார்கள். இந்த சூப்பர் கீதம் வெளியான வேகத்தில் அனைவரும் கொண்டாட பெரும் ஹிட்டடித்துள்ளது.

பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட்டின் K நிரஞ்சன் ரெட்டி இப்படத்தைப் பெருமையுடன் தயாரிக்கிறார், ஸ்ரீமதி சைதன்யா வழங்குகிறார். அஸ்ரின் ரெட்டி நிர்வாக தயாரிப்பாளராகவும், வெங்கட் குமார் ஜெட்டி லைன் தயாரிப்பாளராகவும், குஷால் ரெட்டி இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். இந்த பிரம்மாண்டமான படைப்பின், ஒளிப்பதிவை சிவேந்திரா செய்கிறார், ஸ்ரீநாகேந்திரா தாங்கலா தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.

இப்படத்தில் தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாக அமிர்தா ஐயர் கதாநாயகியாக நடிக்கிறார், இப்படத்தில் வினய் ராய் வில்லனாகவும், வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள்.

பிரசாந்த் வர்மாவின் சினிமாடிக் யுனிவர்ஸின் முதல் படம் ஹனு-மான் ஆகும். இக்கதை அடிப்படையில் “அஞ்சனாத்ரி” என்ற கற்பனை இடத்தில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் கான்செப்ட் உலகளாவியதாக இருப்பதால், உலகம் முழுவதும் சிறப்பாக வரவேற்கப்படும் சாத்தியம் உள்ளது.

ஜனவரி 12, 2024 அன்று தெலுங்கு, இந்தி, மராத்தி, தமிழ், கன்னடம், மலையாளம், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானிய மொழிகள் உட்பட ஹனு- மான் திரைப்படம் பான் வேர்ல்ட் திரைப்படமாக வெளியாகவுள்ளது.

நடிகர்கள்: தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர், வரலட்சுமி சரத்குமார், வினய் ராய் மற்றும் பலர்.

தொழில்நுட்பக் குழு:

எழுத்தாளர் மற்றும் இயக்குநர்: பிரசாந்த் வர்மா
தயாரிப்பாளர்: K நிரஞ்சன் ரெட்டி
பேனர்: பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட்
வழங்குபவர்: ஸ்ரீமதி சைதன்யா
திரைக்கதை: ஸ்கிரிப்ட்ஸ்வில்லே (Scriptsville)
ஒளிப்பதிவு: தாசரதி சிவேந்திரா
இசையமைப்பாளர்கள்: அனுதீப் தேவ், ஹரி
கவுரா, ஜெய் கிரிஷ் மற்றும் கிருஷ்ணா சௌரப்
எடிட்டர்: எஸ்.பி.ராஜு தலாரி
நிர்வாக தயாரிப்பாளர்: அஸ்ரின் ரெட்டி வரி
தயாரிப்பாளர்: வெங்கட் குமார் ஜெட்டி
லைன் புரடியூசர்: குஷால் ரெட்டி
தயாரிப்பு வடிவமைப்பாளர்: ஸ்ரீநாகேந்திர தங்காலா
மக்கள் தொடர்பு : யுவராஜ்
ஆடை வடிவமைப்பாளர்:
லங்கா சந்தோஷி

பிரைம் வீடியோவில் தமிழ் திகில் ஒரிஜினல் ​​’தி வில்லேஜ்’

பிரைம் வீடியோவில் வெளிவரவிருக்கும் தமிழ் திகில் ஒரிஜினல் ​​தி வில்லேஜ் சீரிஸின் அசத்தலான இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளது

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் தமிழ் திகில், ஒரிஜினல் வெப்சீரிஸ் ​​தி வில்லேஜ் சீரிஸுக்கு, கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார், பாடல் வரிகளை மதுரை சொல்ஜர் (சியான் சாஹீர், செந்தில் குமார்), ஐக்கி பெர்ரி, சினேகன், குரு அய்யாதுரை மற்றும் ஷில்பா நடராஜன் எழுதியுள்ளனர். முத்து சிற்பி(காளிமுத்து), சிந்துரி விஷால், மதிச்சியம் பாலா(ஜி. முருகன்), குரு அய்யாதுரை, மதுரை சோல்ஜர் (சியான், செந்தில் குமார்), ஐக்கி பெர்ரி, கிரிஷ் கோபாலகிருஷ்ணன், டி.பிரதிமா பிள்ளை, ஷில்பா நடராஜன் ஆகியோர் பாடியுள்ளனர்.

ஸ்டுடியோ சக்தி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில், B.S.ராதாகிருஷ்ணன் தயாரித்துள்ள தி வில்லேஜ் தமிழ் ஒரிஜினல் சீரிஸை இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். நவம்பர் 24 முதல் இந்தியா மற்றும் 240+ நாடுகளிலுள்ள ப்ரைம் உறுப்பினர்கள் இந்த திகில் சீரிஸை ஸ்ட்ரீம் செய்து ரசிக்கலாம்.

மும்பை – நவம்பர் 14, 2023 – இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங்க் தளமான மிகவும் பிரைம் வீடியோ, தங்களின் வரவிருக்கும் தமிழ் ஒரிஜினல் திகில் தொடரான ​​தி வில்லேஜ் சீரிஸின் இசை ஆல்பத்தை இன்று வெளியிட்டது. இந்த ஆல்பத்தில் ஆழமான மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் 11 பாடல்கள் உள்ளன, ஒவ்வொரு பாடல்களும் சமூகத்தின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்த இசை ஆல்பத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை மதுரை சோல்ஜர் (சியான் சாஹீர், செந்தில் குமார்), ஐக்கி பெர்ரி, சினேகன், குரு அய்யாதுரை மற்றும் ஷில்பா நடராஜன் ஆகியோர் எழுதியுள்ளனர். திருவிழாவின் துடிப்பான கொண்டாட்டம் முதல் நினைவு மோரியின் புதுமையான அனுபவங்கள் மற்றும் கண்ணுறங்கு கண்மணியே என்ற மென்மையான தாலாட்டு வரை, இந்த ஆல்பம் காலத்தால் மனித உணர்வுகளான காதல், தியாகம் மற்றும் காலத்தின் அழிக்க முடியாத நினைவுகளை வெளிப்படுத்துகிறது.

ஆல்பத்தின் டிராக்லிஸ்ட் இதோ –

  1. திருவிழா – பாடியவர்: முத்து சிற்பி (காளிமுத்து), சிந்துரி விஷால், மதிச்சியம் பாலா (ஜி.நந்தபாலா முருகன்) ; பாடலாசிரியர்: சினேகன்
  2. தாயி பாடல் (பாரம்பரிய வகை டியூன்) – பாடியவர்: மதிச்சியம் பாலா(ஜி.நந்தபால முருகன்), குரு அய்யாதுரை, சிந்துரி விஷால் ; பாடலாசிரியர்: சினேகன்
  3. தாயி பாடல் (திகில் வகை டியூன்) – பாடியவர்: குரு அய்யாதுரை ; பாடலாசிரியர்: சினேகன்
  4. மெமெண்டோ மோரி – பாடகர் & பாடலாசிரியர்: மதுரை சோல்ஜர் (சியான், செந்தில் குமார்), ஐக்கி பெர்ரி
  5. மியூட்டேசன் தீம் (தி வில்லேஜ் டைட்டில் டிராக்) – பாடியவர்: சிந்துரி விஷால் , குரு அய்யாதுரை ; பாடலாசிரியர்: சினேகன்
  6. கண்ணுறங்கு கண்மணியே (சகோதரியின் மரணப் பாடல்) – பாடியவர்: கிரிஷ் கோபாலகிருஷ்ணன் ; பாடலாசிரியர்: சினேகன்
  7. மண்ண வெட்டி (தொழிலாளர் பாடல்) – பாடியவர்: குரு அய்யாதுரை ; பாடலாசிரியர்: குரு அய்யாதுரை
  8. ஜிகும்-வா – பாடியவர்: டி.பிரதிமா பிள்ளை , ஷில்பா நடராஜன் ; பாடலாசிரியர்: ஷில்பா நடராஜன்
  9. நீல குகை
  10. வேட்டையன் தீம்
  11. தாயி பாடல் (பேய் டுயூன்) – பாடியவர்: கிரிஷ் கோபாலகிருஷ்ணன் ; பாடலாசிரியர்: சினேகன்

இந்த சீரிஸை இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார், தி வில்லேஜ் சீரிஸ், அஸ்வின் ஸ்ரீவத்சங்கம், விவேக் ரங்காச்சாரி மற்றும் ஷாமிக் தாஸ்குப்தாவின் ஆகியோர் எழுதிய கிராஃபிக் ஹாரர் நாவலிலிருந்து உருவாக்கப்பட்டதாகும். இந்த கிராஃபிக் திகில் நாவல் யாழி ட்ரீம் ஒர்க்ஸ் வெளியீடாக வெளிவந்தது.

தனது குடும்பத்தைக் காப்பாற்றப் போராடும் ஒருவனின் அபாரமான போராட்டக் கதையைச் சொல்வது தான் தி வில்லேஜ் சீரிஸ்.
ஸ்டுடியோ சக்தி நிறுவனத்தின் சார்பில், இந்தத் தொடரை B.S. ராதாகிருஷ்ணன் தயாரித்துள்ளார். சீரிஸுக்கான திரைக்கதயை மிலிந்த் ராவ், தீரஜ் வைத்தி மற்றும் தீப்தி கோவிந்தராஜன் ஆகியோர் எழுதியுள்ளனர். இந்தத் சீரிஸில், பிரபல தமிழ் நடிகர் ஆர்யா, திவ்யா பிள்ளை, ஆழியா, ஆடுகளம் நரேன், ஜார்ஜ் மாயன், பி.என். சன்னி, முத்துக்குமார் கே., கலைராணி எஸ்.எஸ்., ஜான் கொக்கன், பூஜா, வி.ஜெயபிரகாஷ், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் தலைவாசல் விஜய் ஆகியோருடன் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

தி வில்லேஜ் சீரிஸ் பிரைம் வீடியோவில் நவம்பர் 24 முதல் இந்தியா மற்றும் 240+ நாடுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளுடன், ஆங்கில சப்டைட்டில்களுடன் திரையிடப்பட உள்ளது.

“லூசிஃபர்” பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் மோகன்லாலின் ‘எம்புரான்’ (லூசிபர் 2) ஃபர்ஸ்ட் லுக்

லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் மற்றும் ஆசீர்வாத் சினிமாஸ் ஆண்டனி பெரும்பாவூர்ஆகியோர் இணைந்து தயாரிக்க, பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில், மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் நடிப்பில், ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமான ‘எம்புரான்’ படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான பிருத்விராஜ் சுகுமாறன் முதன்முறையாக இயக்க, மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான மோகன் லால் நடிப்பில், வெளியான திரைப்படம் ‘லூசிபர்’. இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றி, தென்னிந்தியாவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்ற, இப்படத்தின் அடுத்த பாகம் தற்போது எம்புரான் என்ற பெயரில் உருவாகியுள்ளது.

மிகப்பெரிய பொருட்செலவில், லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் – ஆசீர்வாத் சினிமாஸ் ஆண்டனி பெரும்பாவூர் – இணைந்து இப்படத்தை பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளனர்.

இந்த ஆண்டில், மலையாளத்தில் மட்டுமல்லாது தென்னிந்தியா முழுக்க, மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மோகன்லாலின் அதிரடியான தோற்றம் அவரது ரசிகர்களுக்கு தீபாவளிப் பரிசாக, பெரும் கொண்டாட்டமாக அமைந்துள்ளது. இணையம் முழுக்க இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வைரலாக பரவி வருகிறது.

ஜி.கே.எம் தமிழ் குமரன் லைக்காவின் தலைமை பொறுப்பு வகிக்க, இப்படத்தின் திரைக்கதையை முரளி கோபி எழுத, சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்ய, தீபக் தேவ் இசையமைக்கிறார்.சுரேஷ் பாலாஜி மற்றும் ஜார்ஜ் ஃபயஸ் நிர்வாக தயாரிப்பாளர்களாக பணியாற்றுகிறார்கள். இந்த திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் தயாராகிறது.

மோகன் லால் ‌- பிருத்விராஜ் சுகுமாறன் என முன்னணி திரை ஆளுமைகளின் கூட்டணியில் தயாராகும் ‘எம்புரான்’ திரைப்படம், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘ரெபல்’ படத்தின் டீசர்.

தேசிய விருதை வென்ற இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ரெபல்’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா அவருடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறார். வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ‘ரெபல்’ படத்தின் டீசர் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.

அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில் தயாராகும் திரைப்படம் ‘ரெபல்’. இதில் ஜீ. வி. பிரகாஷ் குமார், மமிதா பைஜூ, கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி., ஆதித்யா பாஸ்கர், ‘கல்லூரி’ வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை உதயா கவனிக்க, பட தொகுப்பு பணிகளை வெற்றி கிருஷ்ணன் கையாண்டிருக்கிறார். உண்மை சம்பவங்களை தழுவி அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. டீசரில் கதையின் நாயகனான ஜீ.வி. பிரகாஷ் குமாரின் தோற்றமும், ஆவேசமான கதாபாத்திர குணாதிசயமும் ரசனையுடன் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதால் ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருக்கிறது. இதன் காரணமாக ‘ரெபல்’ படத்தின் டீசர் குறுகிய கால அவகாசத்திற்குள் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இத்திரைப்படம் வெகு விரைவில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

Marvel Studios presents ‘THE MARVELS’

CURTAIN RAISER –The Marvels (2023) is a super-hero film which is the 33rd instalment of the Marvel Cinematic Universe (MCU). It is based on Marvel Comics featuring the characters Carol Danvers / Captain Marvel, Monica Rambeau, and Kamala Khan / Ms. Marvel. It stars Brie Larson as Carol Danvers, Teyonah Parris as Monica Rambeau, and ImanVellani as Kamala Khan,

SYNOPSIS – The Marvels is the next big-ticket action film from Marvel Studios- all set to shine bright on the big screens this Diwali! Three powerful superheroes will unite against a mighty intergalactic threat in an exchange of superpowers inflicted by the villain. The Marvels will be released in theatres across India in Tamil, Telugu, English and Hindi

The Marvels is the sequel to Captain Marvel (2019) which introduced audiences worldwide to an all-new adventure starring Brie Larson as Carol Danvers, the MCU’s first  stand-alone, female-franchise title character.

Carol Danvers’ heroism inspired Nick Fury to create the Avengers initiative and set him out to find heroes like her who could watch over Earth, which then became the Avengers. Now, in “The Marvels,” Carol Danvers aka Captain Marvel has reclaimed her identity from the tyrannical Kree and taken revenge on the Supreme Intelligence. But unintended consequences see Carol shouldering the burden of a destabilized universe. When her duties send her to an anomalous wormhole linked to a Kree revolutionary, her powers become entangled with that of Jersey City super-fan, Kamala Khan aka Ms. Marvel, and Carol’s estranged niece, now S.A.B.E.R. astronaut, Captain Monica Rambeau. Together, this unlikely trio must team-up and learn to work in concert to save the universe as The Marvels.

CREDITS -The cast includes Samuel L. Jackson, Mohan Kapur and Saagar Shaikh

Directed by- Nia Da Costa 

Cinematography- Sean Bobbitt    Music- Laura Karpman  

At theatres from November 10th in English, Tamil, Telugu and Hindi