Breaking
February 28, 2025

Cinema

ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் 31 ல், 11.25 கோடியை வசூலித்து சாதனை படைத்திருக்கிறது “டங்கி” திரைப்படம் !!

புதிய ஆண்டு பிறந்துவிட்டது. டங்கி பட பாக்ஸ் ஆபிஸ் வசூல் இன்னும் தொடர்கிறது. படம் வெளியான நாளில் 30 கோடியில் ஆரம்பமான இப்பட வசூல், ரசிகர்கள் ஆதரவுடன் உயர்ந்து வருகிறது. ரசிகர்களின் பாசிட்டிவ் வார்த்தையுடன், குடும்ப பார்வையாளர்கள் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களிடமிருந்து அபரிமிதமான அன்பைப் பெற்று வருகிறது இப்படம். இரண்டாவது வாரத்திலும் பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருவதுடன், புத்தாண்டு கொண்டாட்டமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அட்டகாசமான வசூலைக் குவித்துள்ளது.

இந்த ஆண்டின் இறுதி நாளில் இரட்டை இலக்கத்தில் கோடிகளை குவித்துள்ளது இப்படம். இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியின் டங்கி டிசம்பர் 30 சனிக்கிழமை அன்று 9 கோடியை ஈட்டியது.; டிசம்பர் 31 ஞாயிறு அன்று இப்படம் 11.25 கோடி வசூல் செய்தது. இதன் மூலம், இந்தியாவில் படத்தின் உள்நாட்டு மொத்த வசூல் 188.07 கோடியை எட்டியுள்ளது. வார இறுதி நாளில் 38 சதவீதத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் இப்படத்தை கண்டுகளித்துள்ளனர். இந்த விடுமுறை காலத்தை கொண்டாட, குடும்ப பார்வையாளர்களுக்கு ஒரு அருமையான படைப்பாக டங்கி அமைந்திருக்கிறது. உலகளவிலான பாக்ஸ் ஆபிஸ் வசூல் சூப்பர் ஸ்டேடியாக 380.60 கோடியை எட்டியுள்ளது. இப்படம் இந்தியாவில் 200 கோடியையும் உலகளவில் 400 கோடியையும் விரைவில் கடக்கவுள்ளது.

இப்படத்தில் ஷாருக்கானுடன், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திரக் குழு ‘டங்கி’ திரைப்படத்தில் நடித்துள்ளது.

இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ளனர். டங்கி 2023 டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

‘மதிமாறன் ‘திரை விமர்சனம்

கிராமத்தில்v எம் எஸ் பாஸ்கர். தபால்காரராக, இரட்டைக் குழந்தைகள் அதில் ஒருவர் செங்குட்டுவன் மற்றொருவர் இவானா இரண்டு குழந்தைகளும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

அதில் எம் எஸ் பாஸ்கரின் மகன் வளர்ச்சி குறைபாடு உள்ளவராக இருக்கிறார்.

படிப்பு மற்றும் திறமையை, தன் அறிவிலும் தொடர்ந்து நிரூபித்துக் உயர்ந்து கொண்டே இருக்கிறார்.

ஒன்றாக ஒரே வகுப்பில் படிக்கும் கதாநாயகி ஆராத்யாவிற்கும் செங்குட்டுவன் மீது காதல் மலாடுகிறது.

ஒருநாள், இவானா தனது கல்லூரி பணிபுரியும் பேராசிரியரோடு ஓடிவிட்டார் என்ற செய்தியறிந்து வீட்டில் அனைவரும் உறைந்து போகின்றனர்.

இவானா வயிற்றில் குழந்தையோடு கல்லூரி பேராசிரியர் உடன் ஓடிப்போன அவமானம் தாங்க முடியாமல் தூக்கு மாட்டிக் கொண்டு இறந்து விடுகிறார்கள்.

அதன்பின் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து கதாநாயகன் வெங்கட் செங்குட்டவன் கலங்கி நிற்கிறார்.

தனது சகோதரி இவானா மீது உள்ள கோபத்துடன் தன் சகோதரியை சந்திக்க சென்னை பயணப்படுகிறார்.

சென்னைக்கு வந்த கதாநாயகன் வெங்கட் செங்குட்டுவன் தன் சகோதரி இவனா வை சந்தித்தாரா? சந்திக்கவில்லையா?  சென்னையில் நடக்கும் தொடர்ந்து இளம்பெண்கள் கற்பழித்து கொலை செய்து கொண்டிருப்பது யார்? கொலை குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடித்தார்களா கண்டுபிடிக்கவில்லையா என்பதுதான் இந்த மதிமாறன் திரைப்படத்தின் மீதி கதை.

இந்த மதிமாறன் திரைப்படத்தில் கதாநாயகனாக வெங்கட் செங்குட்டுவன் நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் வெங்கட் செங்குட்டுவன், நெடுமாறன் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.

நடிகர் எம் எஸ் பாஸ்கரின் நாளுக்கு நாள் தன் அனுபவ நடிப்பால் அனைவரையும் கவர்ந்து கொண்டே செல்கிறார்

இந்த மதிமாறன் திரைப்படத்தில் இவானா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

நடிகை இவானா 
மிகவும் யதார்த்தமான நடிப்பை இந்த மதிமாறன் திரைப்படத்தில் கொடுத்து அனைவரையும் கவர்ந்திருக்கிறார்குற்ற உணர்ச்சியால் உருக்குலைந்து நின்று அழும் காட்சிகளில் திரையரங்கில் திரைப்படம் பார்க்கும் நம்மையும் அழ வைக்கும் அளவிற்கு நடிப்பைக் கொடுத்துவிட்டார்.

இந்த மதிமாறன் திரைப்படத்தில் கதாநாயகியாக ஆராத்யா நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் ஆராத்யா, கல்லூரியில் இளமையாகவும், காவல்துறை அதிகாரியாக மிடுக்கெனவும் தோன்றி கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்..

காவல்துறை ஆணையாளராக கதாபாத்திரத்தில் வரும் ஆடுகளம் நரேன், வாட்ச்மேன் கதாபாத்திரத்தில் வரும்பவா செல்லதுரை, சுதர்ஷன் கோவிந்த், பிரவீன் குமார் . E இந்த மதிமாறன் திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைவரும் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பர்வேஸ். ஒளிப்பதிவான் மூலம் திரைப்படத்திற்கு மாபெரும் அளவில் தூணாக நிற்கிறது.

இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமையாகவும் 
பின்னணி இசை புதுமையாகவும் திரைப்படத்திற்கு கூடுதல் வலு சேர்த்துள்ளது.

இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் இசை திரைப்படத்தின் தரத்தை பல மடங்கு உயர்த்தியிருக்கிறது.

மிகவும் அழகான ஒரு வாழ்வியலை கொண்டு வந்து கண்முன்னே நிறுத்தி அதில் உயிரோட்டமான திரைக்கதையை அமைத்து நல்ல ஒரு விருந்தாக மதிமாறனை திரைப்படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் மந்திர வீரபாண்டியன்.

2023 ஆம் ஆண்டின் இறுதியில் தமிழ் திரைப்பட உலகில் மிகச்சிறந்த படைப்பைக் கொடுத்து டாப் லிஸ்டில் மட்டுமல்லாமல் ஹிட் லிஸ்டிலும் இயக்குனர் வரிசையில் இணைந்து விட்டார் இயக்குனர் மந்திர வீரபாண்டியன்.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கும் இயக்குனர் மந்த்ரா

வீரபாண்டியன் குறைபாடுள்ள ஒரு மனிதனின் வாழ்க்கையை உணர்வுப்பூர்வமாக சொல்வதோடு, அதனுடன் ஒரு கிரைம் திரில்லர் கதையை சேர்த்து சொல்லிய விதம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறது.

OVER ALL RATTING…………..3/5

ஜீகே மீடியா நிறுவனம் வழங்கும் சென்னையில் சங்கீத உற்சவம் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

ஜீகே மீடியா நிறுவனம் வழங்கும் சென்னையில் சங்கீத உற்சவம் திருவிழா நிகழ்ச்சி-சீசன் 2, பொதுவாகச் சென்னை நகருக்குள் தான் அதிகமான கச்சேரிகள், இசை விழாக்கள் நடைபெறுகிறது. பரந்து விரிந்த சென்னை மக்கள் அனைவருக்கும், இசைக் கச்சேரிகள் போய்ச் சேரும் வகையில், சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில், சென்னை மக்களை மகிழ்விக்கும் விதமாகச் சென்னையில் சங்கீத உற்சவம் நடைபெறவுள்ளது. இந்த சென்னையில் சங்கீத உற்சவம் நிகழ்வினை பற்றிய செய்தியினை ஊடகங்களுக்குத் தெரிவிக்கும் விதமாக, நேற்று பிரபல இசைக் கலைஞர்கள் பாடகர் மஹதி, இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்யா, இசைக் கலைஞர் மாண்டலின் ராஜேஷ், ஜீ கே மீடியா நிர்வாக இயக்குனர், விநாயகா கேட்டரிங் நிர்வாக இயக்குனர், ஆகியோர் இணைந்து பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.

இந்நிகழ்வினில்..

பாடகி மஹதி பேசியதாவது…
பொதுவாகச் சென்னையில் சங்கீத கச்சேரிகள், சென்னையில் உட்புறமான மயிலை, தி நகர் போன்ற இடங்களில் மட்டுமே நடக்கிறது. பரந்து விரிந்துவிட்ட சென்னை நகரின் பல பக்கங்களில் இருக்கும், மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில், ஜீகே மீடியா நிறுவனம் வழங்கும், சென்னையில் சங்கீத உற்சவம் நடைபெறவுள்ளது. இவ்விழா 6 நாட்கள், வெவ்வேறு கலைஞர்கள் கலந்துகொள்ள மிகக் கோலாகலமாக நடைபெறவுள்ளது. நான் 31 ஆம் தேதி இசை நிகழ்வில் கலந்துகொள்கிறேன். இவ்விழா பற்றிய செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்த்து, எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்யா பேசியதாவது…
ஜீகே மீடியா நிறுவனம் வழங்கும் சென்னையில் சங்கீத உற்சவம் சீசன் 2, பல முன்னணி இசைக்கலைஞர்கள் கலந்துகொள்ளக் கோலாகலமாக நடைபெறவுள்ளது. கடந்த சீசனைப் போல, நானும் நண்பர் இசைக் கலைஞர் மாண்டலின் ராஜேஷ் அவர்களும் கலந்துகொள்கிறோம். முதல் சீசன் பிரமாதமாக நடைபெற்றது. இரண்டாவது சீசன் இன்னும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. சென்னையில் கிழக்கு கடற்கரை பகுதியில் நடந்தாலும், இந்நிகழ்ச்சியில் அனைத்து மக்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நானும் இசைக் கலைஞர் மாண்டலின் ராஜேஷ் அவர்களும் இணைந்து 29 ஆம் தேதி நிகழ்ச்சி செய்யவுள்ளோம். உங்கள் ஆதரவைத் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இந்நிகழ்ச்சி சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் R.K Convention Centre உட்புற அரங்கில் , 2000 ஆம் பேர் வரை அமர்ந்து ரசிக்கும் வகையில் /800 கார் பார்க்கிங் உள்ள பிரம்மாண்டமான நடைபெறவுள்ளது.

ஜீகே மீடியா நிறுவனம் வழங்கும் சென்னையில் சங்கீத உற்சவம் மாபெரும் கர்நாடக சங்கீத நிகழ்ச்சி

ஜீகே மீடியா நிறுவனம் சார்பில் சென்னையில் சங்கீத உற்சவம் நிகழ்ச்சி வருகின்ற டிசம்பர் 27 முதல் ஜனவரி 1 வரை, கிழக்கு கடற்கரைச் சாலையில் நீலாங்கரையில் அமைந்துள்ள ஆர் கே கன்வென்சன் செண்டர் அரங்கத்தில், பல முன்னணி பிரபல இசைக்கலைஞர்கள் கலந்துகொள்ளப் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

டிசம்பர் 27 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு திரு கேரளா ஷரத் அவர்களின் நிகழ்ச்சி
டிசம்பர் 28 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு திரு . திரிச்சூர் சகோதரர்கள் அவர்களின் நிகழ்ச்சி
டிசம்பர் 29 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு திரு ராஜேஷ் வைத்யா அவர்களின் நிகழ்ச்சி
டிசம்பர் 30 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு திரு . விக்னேஷ் ஈஸ்வர் திரு.திருவாரூர் பக்தவச்சலம் அவர்களின் நிகழ்ச்சி
டிசம்பர் 31 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு திருமதி பாடகி மஹதி அவர்களின் நிகழ்ச்சி
ஜனவரி 1 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு திரு ராகுல் தேஷ் பாண்டே மற்றும் திரு சந்தீப் நாராயணன் அவர்களின் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

மேலதிக விவரங்களுக்குத்
திரு மோகன்
9444086136

‘டங்கி’ திரைப்படம், உலகம் முழுவதும் 250 கோடி ரூபாயை வசூலித்து, இந்த ஆண்டின் சிறந்த வசூல் செய்த திரைப்படத்திற்கான பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.‌

ஷாருக்கான் – ராஜ்குமார் ஹிரானி கூட்டணியில் உருவான ‘டங்கி’ திரைப்படம், உலகம் முழுவதும் 250 கோடி ரூபாயை வசூலித்து, இந்த ஆண்டின் சிறந்த வசூல் செய்த திரைப்படத்திற்கான பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.‌

இந்தத் திரைப்படத்தை பார்வையிட்ட பார்வையாளர்களின் வலிமையான வாய்மொழி பரப்புரையால் படத்தின் வசூல் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.‌

இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் உருவான ‘டங்கி’ திரைப்படம், வெளியானதிலிருந்தே குறிப்பிடத்தக்க வகையில் அதன் முத்திரையைப் பதித்துள்ளது. இதயத்தை வருடும் கதையுடன் அனைத்து தரப்பு பார்வையாளர்களின் இதயங்களை வென்றதுடன்.. அனைத்து வயதினரையும் கவரும் படமாகவும் இப்படம் அமைந்துள்ளது. மேலும் இந்தத் திரைப்படம் என் ஆர் ஐ (NRI) பார்வையாளர்களுடன் மிகவும் தொடர்புடையதாக இருப்பதால் அவர்களிடமிருந்தும் அதிக அன்பைப் பெற்றுள்ளது. பார்வையாளர்களின் மனதில் தன் முத்திரையை பதித்தப் பிறகு ‘டங்கி’ திரைப்படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் நுழைந்து, பாக்ஸ் ஆபீசில் தனது இருப்பிடத்தை உறுதி செய்தது. படம் வெளியான நான்கு நாட்களில் இந்தியாவில் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தது. தற்போது அதன் பெருமைக்கு மேலும் மகுடம் சூட்டும் வகையில் இந்த திரைப்படம் 250 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது.

‘பதான்’ மற்றும் ‘ஜவான்’ ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு இந்த ஆண்டில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘டங்கி’ திரைப்படம்- இந்தியாவில் மட்டும் 100 கோடி ரூபாய் கிளப்பில் நுழைந்த மூன்றாவது திரைப்படமாகும். இத் திரைப்படம் சுமார் 29.25 கோடி ரூபாய் முதல் 30.25 கோடி ரூபாய் வரை வசூலித்து, ஞாயிற்றுக்கிழமையன்று அதன் மொத்த வசூல் 102. 50 கோடியாக இருந்தது. இதன் மூலம் நூறு கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த ஷாருக்கானின் பத்தாவது படமாக ‘டங்கி’ இடம்பெற்றது. இந்த திரைப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது இத்திரைப்படம் 250 கோடி ரூபாயை எட்டி, 250 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்திருக்கிறது.

ஷாருக்கானுடன் பொமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட பல திறமையான நடிகர்கள் அவர்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட வண்ணமயமான கதாபாத்திரங்களுடன் ‘டங்கி’யில் இணைந்திருக்கிறார்கள். இப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெய்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி ஃபிலிம்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு அபிஜித் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் சுனில் தில்லான் ஆகியோர் இணைந்து கதை எழுதி இருக்கிறார்கள். இந்த திரைப்படம் டிசம்பர் 21ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

சலார் திரைவிமர்சனம்

ஸ்ருதிஹாசன் மற்றும் அவரது
தந்தையை ஏழு வருடமாக ஒரு மிகப்பெரிய கும்பல் தேடிக்கொண்டிருக்கிறது. கதாநாயகி திடீரென்று வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு திரும்புகிறார்.
அப்போது ஸ்ரேயா ரெட்டி தன்னிடமுள்ள ரவுடி கும்பலிடம் வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு வரும் கதாநாயகி ஸ்ருதிஹாசனை எங்கிருந்தாலும் கடத்தி வரச்சொல்கிறார். ஸ்ருதிஹாசனின் தந்தை மைம் கோபிக்கு போன் செய்து தன் மகள் இந்தியா வருவதாகவும் நீங்கள் தயவுசெய்து தன் மகளை காப்பாற்றுமாறு கேட்டுக்கொள்கிறார்.

இதைத்தொடர்ந்து கதாநாயகி ஸ்ருதிஹாசனை காப்பாற்றுவதற்காக கதாநாயகன் பிரபாஸ் களமிறங்குகிறார்.இறுதியில் கதாநாயகி ஸ்ருதிஹாசனை ஸ்ரேயா ரெட்டி கடத்துவதற்கான காரணம் என்ன? மைம் கோபியிடம் கதாநாயகி ஸ்ருதிஹாசனின் தந்தை மைம் கோபியிடம் என்ன சத்தியம் செய்து கொடுத்தார்? என்பதுதான் இந்த சலார் திரைப்படத்தின் மீதிக்கதை.

கதாநாயகன் பிரபாஸ் சண்டை காட்சிகளில் அமர்க்களம் படுத்திருக்கிறார். உயிர் நண்பனுக்காக உருகும் காட்சிகளில் திரைப்படம் பார்க்கும் நம்மையும் கண் கலங்க வைத்துவிட்டார்.

நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிருத்விராஜ் சுகுமாரன் கதாபாத்திரத்தை உணர்ந்து இருக்கிறார்.

மைம் கோபி தனது அனுபவம் நடிப்பை கொடுத்திருக்கிறார்.

மற்றும் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் ஜெகபதி பாபு, பாபி சிம்ஹா, ஈஸ்வரி ராவ், ஸ்ரேயா ரெட்டி, ஜான் விஜய் அனைவரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் புவன் கவுடாவின் ஒளிப்பதிவின் மூலம் திரைப்படத்தை மிரட்டி வைத்திருக்கிறார்.

இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசை மற்றும் பாடல் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

STAR RATTING…………….2.5/5

ஐ.எம்.டி.பியின் இந்தியாவிற்கான 250 தலைசிறந்த திரைப்படங்கள் பட்டியலில் 2023இல் வெளியான ஐந்து திரைப்படங்கள் இடம் பெற்றுள்ளன


Chennai-20.12.2023-ஐ.எம்.டி.பி (www.imdb.com), திரைப்படங்கள், தொலைக்காட்சித்
தொடர்கள், மற்றும் பிரபலங்கள் ஆகியவை சம்மந்தமான தகவல்களுக்கு மிகவும் பிரபலமானதும் அதிகாரப்பூர்வமானதுமான இந்நிறுவனம், இந்தியாவிற்கான 250 தலைசிறந்த திரைப்படங்களின் பட்டியிலில் 2023 ஆம் ஆண்டு வெளியான ஐந்து திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளது என் தகவலை வெளியிட்டுள்ளது. ஐ.எம்.டி.பியின் 250 தலைசிறந்த திரைப்படங்கள் பட்டியல் என்பது இந்தியத் திரைப்படங்களில் அதிக-தரமதிப்பீடு செய்யப்பட்டவற்றின் ஒரு தொகுப்பாகும், இது அனைத்துக் காலக்கட்டங்களிலும் வெளியான பல்வேறு வகையான மற்றும் பிராந்தியங்களைச்
சேர்ந்த அற்புதமான புதிய திரைப்படங்கள் மற்றும் பழைய திரைப்படங்களையும் கண்டறிந்து அவற்றைப் பார்த்து மகிழும் வாய்ப்பினை ரசிகர்களுக்கு வழங்குகிறது. இந்த பட்டியலில் உள்ள தலைப்புகள் யாவும் தொடர்ச்சியாக ஐ.எம்.டி.பியில் வாக்களிக்கும் அதன் பயனர்கள் வழங்கும் தரமதிப்பீட்டின் அடிப்படையில் முடிவு செய்யப்படுகிறது.

இந்த பட்டியலில் இடம்பெறும் திரைப்படங்களில் உள்ளடங்குபவை: விது வினோத் சோப்ரா அவர்களின் 12த் ஃபெயில் (ஹிந்தி); மனோஜ் பாஜ்பேயி அவர்களின் மிகவும் புகழ்பெற்ற நீதிமன்ற காட்சிகள் நிறைந்த திரைப்படமான சிர்ஃப் எக் பந்தா காஃபி ஹை (ஹிந்தி); குற்றத்- திரில்லர் திரைப்படமான போர் தொழில் (தமிழ்); சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ள ஆக்‌ஷன்-திரைப்படமான விடுதலை பகுதி 1 (தமிழ்); மற்றும் உயிர்வாழப் போராடும்

திரைப்படமா 2018 (மலையாளம்).

டிசம்பர் 20, 2024 இன்படி ஐ.எம்.டி.பி தரமதிப்பீடுகள் மற்றும் பட்டியல் தரநிலைகள்:

  1. 12த் ஃபெயில், 9.2 புள்ளிகளுடன் 20வது இடத்தில் உள்ளது
  2. 2018, 8.4 புள்ளிகளுடன் 104வது இடத்தில் உள்ளது
  3. விடுதலை பகுதி 1 8.3 புள்ளிகளுடன் 139வது இடத்தில் உள்ளது
  4. சிர்ஃப் எக் பந்தா காஃபி ஹை, 7.9 புள்ளிகளுடன் 163வது இடத்தில் உள்ளது
  5. போர் தொழில், 8.0 புள்ளிகளுடன் 193வது இடத்தில் உள்ளது
    இந்த முழு பட்டியலையும் இங்கே பாருங்கள் https://www.imdb.com/india/top-rated-indian-
    movies/. ஐ.எம்.டி.பி பயனர்கள் இவற்றையும் இன்னும் பல திரைப்படங்களையும் இந்த
    இணைப்பில் தங்களது ஐ.எம்.டி.பி வாச்லிஸ்டில் சேர்க்க முடியும் https://www.imdb.com/watchlist.

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டுக்களைக் குவித்த “உடன்பால்” திரைப்படம் !!

டி கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் கே. வி. துரை தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கார்த்திக் சீனிவாசன் இயக்கத்தில், நடிகர் சார்லி நடிப்பில் வெளியான “உடன்பால்” திரைப்படம், 21வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுக்களைக் குவித்துள்ளது. பார்வையாளர்கள் பெரும் கரகோஷம் எழுப்பிப் படக்குழுவினரை வாழ்த்தினர்.

சென்னை சர்வதேச திரைப்பட விழா 20 ஆண்டுகளைக் கடந்து, 21 வது ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. உலகம் முழுவதுமிலிருந்து தரமான பல திரைப்படங்கள் இவ்விழாவில் திரையிடப்பட்டு வருகின்றன. 1000க்கும் மேற்பட்ட திரைப்பட ஆர்வலர்கள் இவ்விழாவைப் பார்வையிட்டு வருகின்றனர்.

இவ்விழாவில் தமிழிலிருந்து சிறந்த படப்போட்டித் தேர்வில் 12 அற்புதமான படைப்புகள் திரையிடப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் நேற்று “உடன்பால்” படம் நேற்று திரையிடப்பட்டது. இந்த திரையிடலில் இயக்குநர் கார்த்திக் சீனிவாசன், நடிகர் சார்லி, நடிகர் லிங்கா, நடிகை காயத்ரி, நடிகை அபர்னதி, விவேக் பிரசன்னா, KPY தீனா, நக்கலைட்ஸ் தனம் ஆகியோருடன், ஒளிப்பதிவாளர் மதன் கிறிஸ்டோபர், இசையமைப்பாளர் சக்தி பாலாஜி உட்படத் தொழில் நுட்ப கலைஞர்களும் கலந்துகொண்டனர்.

குடும்ப பின்னணியில் இன்றைய சமூகத்தில் உறவுகள் பணத்திற்காக எந்த எல்லை வரை செல்கிறார்கள் என்பதை அற்புதமான ப்ளாக் காமெடியில் சொல்லிய இந்த திரைப்படம் திரை ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இத்திரையிடலின் போது ரசிகர்கள் பெரும் கரகோஷத்துடன் எழுந்து நின்று படக்குழுவினரைப் பாராட்டினர், மேலும் படக்குழுவினருடன் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து உற்சாகப்படுத்தினர். படக்குழுவினர் ரசிகர்களுக்கும் விமர்சகர்களுக்கும் நன்றியினை தெரிவித்தனர்.

விமர்சகர்கள், ரசிகர்கள், திரை ஆர்வலர்கள் என அனைவரது பாராட்டுக்களைக் குவித்த இப்படம், ஆஹா தமிழ் தளத்தில் ஓடிடித் தளத்தில் பார்க்கக் கிடைக்கிறது.

“மதிமாறன்” திரைப்பட இசை மற்றும் ட்ரைலர் வெளியீடு.

ஜி.எஸ் சினிமா இன்டர்நேஷனல் சார்பில் லெனின் பாபு தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மந்திர வீரபாண்டியன் இயக்கத்தில், இவானா, வெங்கட் செங்குட்டுவன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க , மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “மதிமாறன்”. இம்மாதம் திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.

இவ்விழாவினில்…

தயாரிப்பாளர் நவீன் சீதாராமன் பேசியதாவது…
இது நிஜமா கனவா என அறியமுடியவில்லை. நான் மிகவும் எமோஷனாலாக இருக்கிறேன். நான் ஹாலிவுட்டில் வேலை செய்திருந்தாலும் இங்குத் தமிழ் சினிமாவில் இவ்வளவு பெரிய ஜாம்பவான்கள் இருக்கும் மேடையில் இருப்பது பெருமையாக இருக்கிறது. அண்ணன்கள் தான் தம்பிகளைக் கஷ்டப்பட்டு பெயர் வாங்க வைப்பார்கள். என் அண்ணன் பாலா சீதாராமன், லெனின் இருவருக்கும் நன்றி. இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இப்படத்தில் சம்மதித்து வேலைப்பார்த்தற்காக நன்றி கூறிக்கொள்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த நடிகர் எம்.எஸ் பாஸ்கர். இந்தப்படம் பாருங்கள் கண்டிப்பாக உங்களை அழ வைப்பார். இந்த மேடையில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் என் நன்றிகள். பத்திரிக்கை ஊடக தோழர்களுக்கு நன்றிகள்.

நடிகர் எம் எஸ் பாஸ்கர் பேசியதாவது..,
இது ஒரு நல்ல கதை. நல்ல கேரக்டர். படத்தில் அனைத்து கேரக்டர்களுமே அருமையான பாத்திரங்கள். எனக்கு மந்திரா கதை சொன்னபோதே மிகவும் பிடித்திருந்தது. உணர்வுப்பூர்வமாக மிகவும் எமோஷனலாகத் தான் நிறைய இடத்தில் டயலாக் பேசினேன். என்னை மிகவும் கலங்க வைத்தது இந்தப்படம். தயாரிப்பாளர்கள் மிகச் சிறப்பாக அனைவரையும் உபசரித்தார்கள். ஹீரோ வெங்கட் செங்குட்டுவன் அவ்வளவு அற்புதமாக நடித்துள்ளார். நடித்து விட்டு ஒவ்வொரு ஷாட்டிலும் என்னைக்கேட்டுக்கொண்டே இருப்பார் அவ்வளவு ஆர்வம். உயரத்தில் என்ன இருக்கிறது. எனக்கே முடி கொட்டிய பிறகு தான் வாய்ப்புகள் வந்தது. என்னையும் கிண்டல் செய்துள்ளார்கள். உலகில் சாதனை படைத்த பலர் உருவத்தில் குறைவாக இருந்தவர்கள் தான்.அதற்காகக் கவலையே படக்கூடாது. இவனா என் மகளாக நடித்திருக்கிறார் என் மகள் தான் நன்றாக நடித்துள்ளார் இப்படி ஒரு அற்புதமான படத்தில் நானும் நடித்திருப்பது மகிழ்ச்சி. இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும். அனைவருக்கும் என் நன்றிகள்.

நடிகர் சுதர்ஷன் பேசியதாவது..
மதிமாறன் மிக அர்ப்பணிப்பான நடிகர் அருமையாக நடித்துள்ளார். நான் இந்தப்படத்தில் ஒரு போலீஸ் பாத்திரம் நடித்துள்ளேன். வெளியில் பெருமையாகச் சொல்லிக்கொள்ளும்படியான பாத்திரம். வாய்ப்பு தந்த இயக்குநருக்கு நன்றி. தயாரிப்பாளருக்கு நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நடிகர் பிரவீன் குமார் பேசியதாவது….
8 வருட நட்பு, நாளைய இயக்குநர் குறும்படம் பார்த்து எனக்கு வாய்ப்பு தருகிறேன் என்றார் மந்திர பாண்டியன். பாலா சார் படத்தில் வாய்ப்பு தந்தார் ஆனால் அதில் நடிக்க முடியவில்லை. மீண்டும் இந்தப்படத்தில் வாய்ப்பு தந்தார் என்றென்றும் நன்றிகள். இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியதாவது….
இயக்குநர் தயாரிப்பாளர் இருவரும் எனக்கு நெருக்கமானவர்கள். இயக்குநர் மந்திரா மிகத்திறமையானவர். அவர் திறமை மீது எனக்குப் பெரிய நம்பிக்கை உள்ளது அவரிடம் நிறையக் கதைகள் பேசியுள்ளேன். அவர் கண்டிப்பாக நல்ல படம் செய்திருப்பார். தயாரிப்பாளர் நவீன் என் நண்பர். இந்தப்படத்திற்காக அவருக்கு வாழ்த்துக்கள். எம் எஸ் பாஸ்கர் சமீப காலங்களில் மிகச்சிறப்பான கதாபாத்திரங்களில் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். அவர் இருந்தாலே படம் நன்றாக இருக்கும். கதாபாத்திரங்கள் மீது தான் இந்தப்படம் பயணிக்கிறது. இந்தப்படமும் சிறப்பாக இருக்கும். எப்போதுமே ஒரு கதைக்காகச் செலவு செய்ய வேண்டும் ஹீரோவுக்காக செலவு செய்யக்கூடாது அப்போது தான் படம் சிறப்பாக வரும். தமிழ்த்திரை இசையை உலகிற்கு எடுத்துச் சென்ற இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா மிக அற்புதமான இசையைத் தந்துள்ளார். அவர் தான் இன்றைய நாயகன். இந்தப்படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றி பெறும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் பேசியதாவது..
ஜிஎஸ் பிரதர்ஸ் நவீன் சீதாராமன், பாலா சீதாராமன், லெனின் சீதாராமன் மூவருக்கும் வாழ்த்துக்கள். பாலாவின் பள்ளியிலிருந்து வந்திருக்கும் இயக்குநர் மந்திராவிற்கு வாழ்த்துக்கள் அவருக்கு முதல் பட வாய்ப்பை நம்பித்தந்த தயாரிப்பாளருக்கு என் நன்றிகள். இந்த டைட்டில் பற்றி இயக்குநரிடம் கேட்டேன். படிக்காத பெண் கதாபாத்திரம் நாயகியின் பெயர் மதி, குள்ளமான நாயகன் பெயர் நெடுமாறன், இரண்டையும் இணைத்து வைத்ததாக சொன்னார்.டைட்டிலே இவ்வளவு யோசித்து வைத்துள்ளார், கண்டிப்பாக அவரது படம் நன்றாக இருக்குமென நம்பினேன். உருவகேலியை வைத்து வித்தியாசமான களத்தில் படம் செய்துள்ளார். டிரெய்லர் அற்புதமாக உள்ளது. இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா மிகச்சிறப்பான இசையைத் தந்துள்ளார். வெங்கட், இவானா, ஆராத்தியா மூவரும் நல்ல நடிப்பை தந்துள்ளனர். படம் வெற்றிபெற என் வாழ்த்துக்கள்.

தயாரிப்பாளர் கே ராஜன் பேசியதாவது…
ஒரு அற்புதமான கதைக்களம். நாயகனுக்காகக் கதை எழுதும் காலத்தில் கதாபாத்திரத்திற்காக நாயகனைத் தேர்வு செய்திருக்கும் இயக்குநர் மந்திராவுக்கு வாழ்த்துக்கள். பாலாவின் உதவியாளர் மிக தைரியசாலியாக இருக்கும் அவருக்கு வாழ்த்துக்கள். நாயகன் வெங்கட் உயரம் தான் குறைவு உள்ளம் உயரமானது. உயர்ந்த உள்ளம் கொண்டிருக்கிறார். உயரமாய் இருந்து என்ன பிரயோஜனம், ஒன்றுமில்லை. நம் தமிழ் நாட்டை வளப்படுத்திய அண்ணா உயரம் குன்றியவர். உலகம் போற்றிய அப்துல் கலாம் உயரம் குன்றியவர் தான். அழகென்பது உடலில் அல்ல, அவன் செய்யும் செயலில் இருக்கிறது. படத்தில் டயலாக் எல்லாம் அற்புதம். வாழ்வுக்கு நம்பிக்கையூட்டும் வார்த்தைகள். இந்தப்படத்தைத் தயாரித்திருக்கும் ஜிஎஸ் பிரதர்ஸ் நவீன் சீதாராமன், பாலா சீதாராமன், லெனின் சீதாராமன் மூவருக்கும் என் வாழ்த்துக்கள். இவர்கள் தமிழ் சினிமாவை வாழ வைக்க வந்துள்ளார்கள் அற்புதமான படைப்பைத் தந்துள்ளார்கள் படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

இயக்குநர் ரத்ன சிவா பேசியதாவது…
மந்திரா என்னிடம் வேலைபார்த்தவர் ஏற்கனவே 7 வருடங்களுக்கு முன்பே ஒரு படம் எடுத்து அது நின்றுவிட்டது. பின் பாலாவிடம் உதவியாளராக வேலை பார்த்தான், இரண்டாவது படம் கிடைக்கும் போது, யாராக இருந்தாலும் கர்ஷியல் படம் தான் எடுப்பார்கள் ஆனால் இப்படி ஒரு கதைக்களத்தில் படம் செய்திருக்கும் மந்திராவிற்கு வாழ்த்துக்கள். இந்த வாய்ப்பை தந்து இப்படி ஒரு படத்தை எடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

பாடலாசிரியர் சினேகன் பேசியதாவது…
மிகப்பெரிய போராட்டத்திற்குப் பிறகு மந்திரா இப்படம் செய்துள்ளார். தயாரிப்பாளர் என் நண்பர் இப்படி ஒரு படத்திற்கு ஆதரவு தந்துள்ளார்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள். இப்படி படம் தான் பலருக்குக் கதவைத் திறந்து விடும். இன்றைய நாயகன் கார்த்திக் ராஜா அவருக்கு இதுவரை ஒரு சரியான களம் கிடைக்கவில்லை என்கிற வருத்தம் எனக்கு இருக்கிறது இந்தப்படம் அதை மாற்றும். இப்போதைய சினிமா ஏதாவது ஒரு கருத்தைப்பேச ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சி. உருவக் கேலியை விமர்சிக்கும் அருமையான போராளிகளின் நல்ல படைப்பு இது வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இயக்குநர் மந்திர பாண்டியன் பேசியதாவது…
மாதா பிதா பாலா சார் பாபு சார் எல்லோருக்கும் நன்றிகள். 11 வருட உழைப்பு, கனவு, சின்ன சின்னதாகப் பல வருடம் உழைத்த பிறகு, ஒரு படம் கமிட்டாகி நின்ற பிறகு, எங்கோ வேறு ஒருவருக்குக் கதை சொன்ன போது, அந்தக்கதையைக் கேட்டு எனக்காக மட்டுமே இந்தப்படத்தைச் செய்த பாபு சாருக்கு நன்றி. எனக்காக மட்டும் கதையே முரசாகக் கேட்காமல் இந்தப்படத்தைச் செய்த பாபு சார் எனக்குக் கடவுள் தான். இப்படத்தை வெளியிடும் பாப்பின்ஸ் நிறுவனம் வரும் காலத்தில் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நிறுவனமாக இருக்கும். நான் கிராமத்திலிருந்து வந்தவன், என்னை என் உருவத்தை வைத்துத் தான் எடை போடுகிறார்கள். Don’t judge book by its cover அது தான் உண்மை ஒருவரின் திறமை அவரது உருவத்தில் இல்லை. அதைச் சொல்ல வேண்டும் என்று நினைத்துத் தான் இப்படம் எடுத்தேன். இந்தப்படத்தை நிஜத்திற்கு நெருக்கமாக, கமர்ஷியல் அம்சத்துடன் அனைவரும் ரசிக்கும்படி எடுத்துள்ளோம். இந்தப்படம் உங்களைத் திருப்திப்படுத்தும் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள். இவானா நாச்சியார் படத்தில் மூலம் அறிமுகம், அப்போது 10 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். அப்போது கிடைத்த அறிமுகம், நான் இந்தக்கதை சொன்ன போது அம்மாவுடன் சென்னை வந்து கேட்டார். கதை கேட்கும்போதே அவரது அம்மா அழுது விட்டார். இந்தப்படத்தில் வருவது போல் இவானாக்கு நிஜத்தில் டிவின், லியோ எனும் தம்பி அவருக்கு இருக்கிறார். இதில் அக்காவுக்கும் தம்பிக்குமான உறவு தான் கதை. அதனால் எமோஷனலாக கமிட்டாகிவிட்டார். நான் தான் கண்டிப்பாக செய்வேன் என்றார். சிலர் நல்ல அறிமுகமான நடிகையைப் போடலாமே என்றார்கள் படம் வரும் போது மிகப்பெரிய நடிகையாவார் என்றேன் எங்கள் படம் வருவதற்கு முன்னே ஸ்டாராகிவிட்டார். என் தங்கை தான் இவானா, அவர் ஸ்டாரானது எனக்கு மகிழ்ச்சி. வெங்கட் ஒரு வீடியோவில் டான்ஸ் ஆடியதைப் பார்த்துத் தான் அவரைத் தேர்ந்தெடுத்தேன், அயலான் படத்தில் ஏலியன் உடம்பில் அவர் தான் நடித்துள்ளார். முகம் தெரியவிட்டாலும் பரவாயில்லை என்று திறமையைக் காட்ட நினைத்தவர் தான் வெங்கட். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகனாக மாறுவார். சுதர்ஷன் ஒரு ஹீரோயிக் ரோல் செய்துள்ளார் நன்றாக நடித்துள்ளார். பர்வேஸ் அழகான ஒளிப்பதிவைத் தந்துள்ளார். சதீஸ் சூர்யா பாலா சார் படங்கள் செய்தவர் எனக்காக எடிட் செய்தார் அவருக்கு என் நன்றிகள். தொழில் நுட்ப குழுவில் எனக்காக உழைத்த அனைவருக்கும் நன்றிகள். எம் எஸ் பாஸ்கர் சார் அவர் என் அப்பா அவ்வளவு தான். கார்த்திக் ராஜா சாருக்கு ஈகோ அதிகம் அவர் வேண்டாம் என்று நிறையப் பேர் சொன்னார்கள் அவரிடம் பழகும் வரை நானே அப்படித்தான் இருந்தேன், அவரது சவுண்டிங் எனக்கு அவ்வளவு பிடிக்கும். படம் மொத்தமாக முடித்துவிட்டு ஹார்ட்டிஸ்க்கில் படத்தை எடுத்துக் கொண்டு போய் தான் அவரைப்பார்த்தேன். அவர் என்னை வித்தியாசமாகப் பார்த்தார், எனக்குப் பிடித்தால் இசையமைக்கிறேன் இல்லாவிட்டால் வேறு நல்ல இசையமைப்பாளர் சொல்கிறேன் என்றார். ஆனால் படம் பார்த்துவிட்டு என்னுடைய கம்பேக் படமாக இப்படம் இருக்கும், நீங்கள் நினைத்ததைக் கொண்டு வர முயற்சிக்கிறேன் என்றார். மிக மிக அற்புதமான இசையைத் தந்துள்ளார் அவருக்கு நன்றிகள். படத்திற்கு ஆதரவைத் தாருங்கள் நன்றி.

தயாரிப்பாளர் நந்தகோபால் பேசியதாவது…
பாடல்கள் டிரெய்லர் வசனங்கள் எல்லாமே அருமையாக உள்ளது. படம் குறித்து அனைவரும் பேசிவிட்டார்கள். ஜிஎஸ் பிரதர்ஸ் நவீன் சீதாராமன், பாலா சீதாராமன், லெனின் சீதாராமன் மற்றும் இயக்குநர் மந்திரா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா பேசியதாவது…
எனக்கு இந்தப்படம் நன்றாக வரும் என்று நம்பிக்கை இருக்கிறது. ஓதுவார் திருவண்ணாமலையில் தினமும் கடவுள் முன் பாடுபவர், என்னைப்பார்க்க வந்தவர் இங்கு வந்து கடவுள் வாழ்த்து பாடினார் அதுவே இப்படத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய வாழ்த்து, இந்தப்படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றி பெறும். நன்றி.

நடிகை இவானா பேசியதாவது…
என்னோட டீம் எல்லோரும் சந்தோஷமாக இருப்பார்கள். 3 வருடமாகச் செய்த படம். இப்போது வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டது. மந்திரா அண்ணாவை நாச்சியார் டைமில் இருந்து தெரியும் அப்போது தொடங்கிய நட்பு, இண்டஸ்ட்ரி பத்தி எனக்கு நிறையச் சொல்லித் தந்தார். என் குடும்பத்திற்கும் நெருக்கமானவர். இந்தக்கதை சொன்னபோது எனக்காக எழுதியதாகச் சொன்னார். இந்தப்படம் பாடிஷேமிங் பத்தி பேசியுள்ளது. தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். படம் நன்றாக வந்துள்ளது. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நடிகர் வெங்கட் செங்குட்டுவன் பேசியதாவது..,
எனக்கு என் மேல் நம்பிக்கை இருப்பதை விட நான் ஜெயிப்பேன் என நிறையப் பேர் என்னை நம்பினார்கள், என் அப்பா அம்மா முதல் என்னை நம்பிய அனைவருக்கும் நன்றி. என்னை ஹீரோவாக போட்டு படம் எடுக்கலாம் என நம்பிய இயக்குநருக்கு, தயாரிப்பாளருக்கு, என் நன்றிகள். எல்லோரும் கஷ்டப்பட்டு இப்படம் எடுத்துள்ளோம் உங்களுக்குப் பிடிக்கும் ஆதரவு தாருங்கள் நன்றி.

இப்படத்தில் நாச்சியார், லவ் டுடே புகழ் இவானா முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க குள்ளக் கதாப்பாத்திரத்தில் வெங்கட் செங்குட்டுவன் நாயகனாக நடித்துள்ளார். இவர்களுடன் ஆராத்யா, எம்.எஸ்.பாஸ்கர், ‘ஆடுகளம்’ நரேன், பாவா செல்லதுரை, E.பிரவீன் குமார், சுதர்சன் கோவிந்த் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப குழு விபரம்
இயக்கம் – மந்திர வீரபாண்டியன்
தயாரிப்பு – லெனின் பாபு
தயாரிப்பு நிறுவனம் – ஜிஎஸ் சினிமா இன்டர்நேஷனல்
TN திரையரங்கு வெளியீடு – பாபின்ஸ் ஸ்டுடியோஸ்
இசையமைப்பாளர் – கார்த்திக் ராஜா
ஒளிப்பதிவு – பர்வேஸ் K
எடிட்டர் – சதீஷ் சூர்யா
கலை இயக்குனர் – V.மாயபாண்டி சண்டைக்காட்சி – சுரேஷ் குமார்
ஆடை வடிவமைப்பாளர் – கடலூர் M ரமேஷ், ஷேர் அலி N (வெங்கட் செங்குட்டுவன்) ஒப்பனை – என்.சக்திவேல்
மக்கள் தொடர்பு – யுவராஜ்.

ஹோம்பாலே ஃபிலிம்ஸ்- ‘பஹீரா’ படத்தின் டீசரை.. அப்படத்தின் நாயகனான ஸ்ரீ முரளியின் பிறந்த நாளில் வெளியிடுகிறது..!

ஹோம்பாலே ஃபிலிம்ஸ் – ‘கே ஜி எஃப்’ சீரிஸ், ‘காந்தாரா’ மற்றும் ‘சலார்’ போன்ற பிரம்மாண்டமான சினிமா அனுபவங்களை வழங்கிய முன்னணி தயாரிப்பு நிறுவனம். இந்நிறுவனத்தின் அண்மைய தயாரிப்பான ‘பஹீரா’ படத்தின் டீசரை பெருமையுடன் வழங்குகிறது.‌ ‘டைனமிக் ரோரிங் ஸ்டார்’ ஸ்ரீ முரளி நடித்திருக்கும் இப்படத்தின் டீசரை.. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு ஹோம்பாலே ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது. இப்படத்தின் டீசர் ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை பார்வையாளர்கள் கண்டு ரசிக்கலாம்.

இந்த திரைப்படத்தை புகழ்பெற்ற இயக்குநர் சூரி இயக்கியிருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தில் திறமையான நடிகர் பிரகாஷ்ராஜ் முக்கியமான வேடத்தில் நடித்திருக்க, ‘எஸ். எஸ். இ’ புகழ் ருக்மணி வசந்த் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இப்படத்திற்கு அஜ்னீஷ் இசையமைத்திருக்கிறார். அவரது இசை கோர்வை – கதை களத்திற்கு ஏற்ப நுட்பமாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் காட்சிக்கு கூடுதல் ஆழத்தை வழங்கும் என உறுதியளிக்கிறது.

2024 ஆம் ஆண்டில் இந்த ‘பஹீரா’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ‘பஹீரா’ திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக தயாராகியிருக்கிறது. ஹோம்பாலே ஃபிலிம்ஸின் படைப்புகளுக்கு இணையான கதை சொல்லும் திறமை மற்றும் தயாரிப்பு வடிவமைப்பை இத்திரைப்படம் கொண்டிருக்கிறது. தொலைநோக்கு சிந்தனை உடைய படைப்பாளியான விஜய் கிரகந்தூர் இப்படத்தினை தயாரித்துள்ளார். ‘பஹீரா’ நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களின் இதயங்களில் ஒரு அழிக்க இயலாத அடையாளத்தை ஏற்படுத்தவுள்ளது.

ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான யூடியூப் சேனலில் பஹீரா படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. நடிகர் ஸ்ரீ முரளியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக வெளியிடப்பட்டிருக்கும் இந்த டீசர்.. 2024 ஆம் ஆண்டில் வெளியாகவிருக்கும் முக்கியமான சினிமா அனுபவமாகவும் திகழும்.‌

ஷாருக்கானின் ‘டங்கி’ திரைப்படத்திற்கான முன்பதிவு தொடங்கி இருக்கிறது.

உங்களின் அன்புக்குரியவர்களுடன் இணைந்து, இந்த ஆண்டின் மிகவும் மனதைக் கவரும் திரைப்படம் ஒன்றை காண தயாராகுங்கள்…!

ராஜ்குமார் ஹிரானியின் ‘டங்கி’ திரைப்படத்தின் வெளியீடு நெருங்கி வரும் தருணத்தில்… இப்படத்தை காண்பதற்கான ரசிகர்களின் உற்சாகம் தொடர்ந்து உச்சத்தை எட்டி வருகிறது.‌ இப்படத்தில் இடம்பெற்ற மெல்லிசை பாடல்கள்…பாராட்டினைப் பெற்றிருக்கும் முன்னோட்டம்… ராஜ்குமார் ஹிரானி உருவாக்கிய இதயத்தை தூண்டும் உலகத்தைப் பற்றிய பரந்த பார்வையை வழங்கியதால்… இது தொடர்பாக பார்வையாளர்களிடமிருந்து அபிரிமிதமான அன்பை.. ‘டங்கி’ பெற்றிருக்கிறது.‌

உலகம் முழுவதும் இந்த படைப்பை காண்பதற்கான முன்பதிவுகள் நிரம்பி வழிவதை காண முடிகிறது. மேலும் அட்வான்ஸ் புக்கிங் மூலம் பார்வையாளர்களின் பேரன்பும் வெளிப்பட தொடங்கியுள்ளது.

‘டங்கி’ படத்தின் முன்பதிவுகள் வெளிநாடுகளில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு சாதனை படைத்து வருகிறது. இதன் காரணமாக ஷாருக்கானின் ‘பதான்’ பின் தங்கியுள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு மீண்டும் ‘கிங்கான்’ ஷாருக் கான் Vs ஷாருக் கான் தான் என்பது உறுதியாகிறது.

ஷாருக்கானுடன் பொமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர். உள்ளிட்ட திறமையான நடிகர்கள் அவர்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட வண்ணமயமான கதாபாத்திரங்களுடன் ‘டங்கி’யில் இணைந்திருக்கிறார்கள். இப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு அபிஜித் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் சுனில் தில்லான் ஆகியோர் கதை எழுதி இருக்கிறார்கள். இந்த திரைப்படம் டிசம்பர் 21ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.