Breaking
September 19, 2026

Cinema

அசோக் செல்வன் நடிக்கும் ‘அன்பில் அவன்’

அசோக் செல்வன் நடிக்கும் ‘அன்பில் அவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியீடு

அசோக் செல்வன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வரும் புதிய திரைப்படத்திற்கு, ‘அன்பில் அவன்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அன்பில் அவன்’ திரைப்படத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் கதையை இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுத, கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.‌ படத்தொகுப்பு பணிகளை ஆர்.கே செல்வா மேற்கொள்ள, மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அழகான காதல் கதையாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கே. கருணா மூர்த்தி- அசோக் செல்வன் – அபிநயா செல்வம்- ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இத்திரைப்படத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் தருணத்தில் இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் அபிநயா செல்வம்- கவிதா பாண்டியன், நடிகர் அசோக் செல்வன், நடிகை ப்ரீத்தி முகுந்தன், இயக்குநர் ஆர். கார்த்திகேயன் உள்ளிட்ட படக் குழுவினர் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் அபிநயா செல்வம் பேசுகையில்,

”ஓ மை கடவுளே படத்திற்குப் பிறகு நல்லதொரு கதைக்காக பொறுமையுடன் காத்திருந்தோம். இயக்குநர் விக்னேஷ் ராஜா இந்தக் கதையை எங்களிடம் சொன்னதும் எங்கள் அனைவருக்கும் பிடித்திருந்தது. அசோக் செல்வனும் எங்களுக்கு முழு நம்பிக்கையும், ஒத்துழைப்பும் அளித்தார்.

இந்தப் படத்தின் அனைத்து பணிகளையும் நிறைவு செய்து செப்டம்பரில் வெளியிடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறோம். இன்று முதல் இப்படத்தினை அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் சென்றடையும் வகையில் விளம்பரப்படுத்தும் பணிகளை முன்னெடுத்து இருக்கிறோம்.

‘ஓ மை கடவுளே’ படத்திற்குப் பிறகு எங்களுடைய தயாரிப்பில் வெளியாகும் இரண்டாவது திரைப்படம் இது. இதனை அனைவரும் ஒன்றிணைந்து கடுமையாக உழைத்து நல்லதொரு படைப்பாக ரசிகர்களிடம் சமர்ப்பிக்கிறோம். அனைவரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

அசோக் செல்வனுக்கு ‘போர் தொழில்’, ‘ப்ளூ ஸ்டார்’ ஆகிய இரண்டு திரைப்படங்களுக்கு பிறகு ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் அதையெல்லாம் தவிர்த்து ‘அன்பில் அவன்’ படத்தை மட்டும் தேர்ந்தெடுத்து முழு அர்ப்பணிப்புடன் ஒத்துழைப்பு வழங்கினார். இப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி” என்றார்.

இயக்குநர் ஆர். கார்த்திகேயன் பேசுகையில்,

” என் மீது நம்பிக்கை வைத்து இப்படத்தை இயக்கும் வாய்ப்பளித்த தயாரிப்பாளர்களுக்கும், நடிகர் அசோக் செல்வனுக்கும் நன்றி.

அன்பில் அவன் – கனவைப் பற்றி பேசும் திரைப்படம். அதிலும் பெண்களின் கனவு -அதற்கான துரத்தல்- அதற்கான மெனக்கடல்- போராட்டம்- சவால்கள்- ஆகியவற்றை பற்றி உணர்வுபூர்வமாகவும், காதலுடனும் பேசுகிறது.

அழகான விஷுவல்ஸ்- அசோக் செல்வன் & பிரீத்தி முகுந்தன் என இரண்டு ஃபிரெஷ்ஷான ஸ்கிரீன் ஃபேர்- திறமை மிகுந்த தொழில்நுட்ப குழுவினர்- இந்த ஆண்டின் சிறந்த மியூசிக் ஆல்பமாக இந்த படத்தின் பாடல்கள் வரும் அளவிற்கு அற்புதமான இசை – ரசிகர்கள் விரும்பும் வகையிலான திரையரங்க அனுபவம்- என பல அம்சங்கள் இந்த படத்தில் இருக்கிறது. இவை அனைத்தும் ரசிகர்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்.

இந்தப் படம் பெண்களுக்கும், பெண்மணிகளுக்கும் பிடிக்கும். ஏனெனில் அவர்களின் கனவு பற்றி பேசுகிறது. இந்தப் படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது ஒவ்வொரு பெண்களும் தனக்கான பாய் பிரண்ட்- ஹஸ்பண்ட் – இப்படித்தான் இருக்க வேண்டும் என சொல்வார்கள் என நான் நம்புகிறேன்” என்றார்.

நடிகை ப்ரீத்தி முகுந்தன் பேசுகையில்,

‘அன்பில் அவன்’ என் இதயத்திற்கு நெருக்கமான படைப்பு. இந்த படத்திற்காக நான் நீண்ட நாட்களாக காத்திருக்கிறேன். இந்த கதாபாத்திரத்திற்காக என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி.

இந்தப் படம் திருமணம் ஆகாத பெண்களுக்கும்… திருமணமான பெண்களுக்கும்… பிடிக்கும். இந்தப் படத்தில் என்னுடன் நடித்த சக நடிகரான அசோக் செல்வனுக்கு நன்றி. சக நடிகைக்கு அதிக அளவில் திரை பங்களிப்பை அளித்து, இப்படத்தை உருவாக்கியதற்காக அவருக்கும் நன்றி” என்றார்.

நடிகர் அசோக் செல்வன் பேசுகையில்,

”என்னுடைய நடிப்பில் ஒரு படத்தை திரைக்கு கொண்டு வருவதற்கு நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படம் வெளியாகி இரண்டரை வருடங்கள் ஆகிவிட்டது.

சினிமா குடும்பத்தின் முன்னோர்களான பாரதிராஜா மற்றும் கே. பாக்யராஜ் அவர்களுக்கு நன்றி.

சில நேரங்களில் சில திரைப்படங்களில் பணியாற்றும் போது அது வெளிவருவதற்காக சிறிது காலம் எடுத்துக் கொள்ளும். அதை நாம் அனுமதிக்கத்தான் வேண்டும்.

ஒவ்வொரு படமும் ஏதேனும் ஒரு வகையில் புதிதாக இருக்க வேண்டும் என நினைப்பவன் நான். அதற்காக ஒரு முயற்சி எடுக்க வேண்டும் என்று உழைப்பவன் நான்.

இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதிய கதை. தற்போது சினிமா மாறிவிட்டதாக நான் கருதுகிறேன். கதையை விட அந்த கதையை சொல்லும் ஸ்டைல்தான் அதாவது ஸ்கிரீன் பிளே தான் முக்கியம் என்று நினைக்கிறேன். அதுவும் அந்த கதை- திரைக்கதை – திரையரங்கத்தில் பார்க்கும்போது ரசிகர்களுக்கு என்ன அனுபவத்தை வழங்கும் என்பதில் மாற்றம் ஏற்பட்டதாக எனக்குள் உணர்ந்தேன்.

இந்தப் படத்தை பொறுத்தவரை கதையாகப் பார்த்தால் இதற்கு முன் இதே போல் நிறைய கதை வெளியாகி இருக்கிறது. ஆனால் அதன் ஸ்க்ரீன் பிளே… அது வழங்கக்கூடிய திரையரங்க அனுபவம்… நிச்சயம் புதிதாக ரசிக்கக் கூடியதாக இருக்கும் என முழு நம்பிக்கையுடன் சொல்கிறேன்.‌

இந்தப் படத்தில் ரசிகர்கள் ரசிக்க கூடிய தியேட்டரிக்கல் மொமென்ட்ஸ் நிறைய உண்டு. அதிலும் குறிப்பாக பெண்கள் ரசிக்கக்கூடிய நிறைய மொமென்ட்ஸ் இந்த படத்தில் இருக்கிறது.

இது பெண்களை… அவர்கள் படும் கஷ்டங்களை மட்டும் பேசவில்லை. இதில் ஏராளமான மாஸ் மொமென்ட்ஸ் இருக்கிறது. அதிலும் இந்த படத்திற்கு ஒரு பெண் தயாரிப்பாளர் பக்கபலமாக இருந்து தயாரிக்கும் போது.. அதன் வலிமை இன்னும் அதிகமாக இருக்கும்.‌
நான் உறுதியாக சொல்கிறேன் ‘அன்பில் அவன்’ திரைப்படம் நின்று பேசும்.‌

அன்பில் அவன் – காதலுக்காக ஒருவன் எவ்வளவு தூரம் பயணிக்கிறான் என்பது தான் இப்படத்தின் ஒன் லைன்.

காதல் – புத்திசாலியை முட்டாளாக்கும். சாதாரணமானவனை சாதனையாளராக்கும். இதை பிரதிபலிக்கும் வகையில் தான் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

இப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த படம்- அற்புதமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் அழகான காதல் கதை.

இந்தப் படத்தை இதுவரை பார்த்தவர்கள் அனைவரும் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் ப்ரீத்தி முகுந்தனின் நடிப்பை பாராட்டினார்கள். படம் வெளியான பிறகு ரசிகர்களின் பாராட்டும் அவர்களுக்கு கிடைக்கும்.

இந்த படைப்பு கோவிந்த் வசந்தாவின் கான்ஸர்ட். ’96 ‘படத்திற்கு இணையாக இப்படத்தின் இசையும் பேசப்படும்” என்றார்

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லரை வெளியிட்ட Netflix

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லரை வெளியிட்ட Netflix – வித்தியாசமான ட்விஸ்டுடன் வரும் முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்!

மாப்பிள்ளை மணமகள் வீட்டுக்கு வருகிறார்… காத்திருக்கும் மிகப்பெரிய ட்விஸ்ட்!
திருமணத்துக்குப் பிறகு மணமகள் புகுந்த வீட்டுக்குச் செல்வதுதான் வழக்கம். ஆனால், மணமகளுக்குப் பதிலாக மாப்பிள்ளை தனது பெட்டிகளை எடுத்துக்கொண்டு மணமகள் வீட்டுக்குச் சென்றால் என்ன ஆகும்? இந்த வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் டிரெய்லரை Netflix இன்று வெளியிட்டுள்ளது.

இயக்குநர் இளன் இயக்கி, முதன்முறையாக கதாநாயகனாகவும் அறிமுகமாகும் இப்படம், வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி Netflix-ல் வெளியாகிறது.

டிரெய்லரில், பவி கதாபாத்திரத்தில் சான்வி மேக்னா  நடித்துள்ளார். தன்னம்பிக்கையும் தனித்துவமான சிந்தனையும் கொண்ட பவி, தான் வளர்ந்த வீட்டை விட்டு வெளியேற விரும்பாத ஒரு இன்ஃப்ளூயன்சர்.

இதனால், திருமணத்திற்குப் பிறகு அவரது கணவரான இளன், பவியின் வீட்டிற்கே குடியேறுகிறார். அங்கிருந்து தொடங்குகிறது ஒரு வித்தியாசமான குடும்ப வாழ்க்கை.

புதிய வீட்டில் முதல் சந்திப்பு முதல், குடும்பத்தினருடனான உரசல்கள், எதிர்பாராத சம்பவங்கள், கலகலப்பான தருணங்கள் என ஒவ்வொரு நாளும் புதிய அனுபவமாக மாறுகிறது.

“எப்போதுமே மணமகள்தான் வீட்டை விட்டுச் செல்ல வேண்டும் என்று யார் சொன்னது?” என்ற கேள்வியை மையமாக வைத்து, திருமணம் மற்றும் குடும்ப உறவுகள் குறித்த வழக்கமான எதிர்பார்ப்புகளை இப்படம் சுவாரஸ்யமாக மாற்றிப் பார்க்கிறது.

காதல், நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் என அனைத்தையும் கலந்து, ஒவ்வொருவருக்கும் பொருத்தமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பதே முக்கியம் என்பதைச் சொல்லும் வகையில் ‘பியார் பிரேமா கல்யாணம்’ உருவாகியுள்ளது.

இளன் மற்றும் சான்வி மேகனாவுடன் ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், செந்தில், மாறன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

குடும்பக் காட்சிகளுக்கு கூடுதல் வலு சேர்க்கும் வகையில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இயக்குநரும் கதாநாயகனுமான இளன் கூறுகையில்..,
 “‘பியார் பிரேமா கல்யாணம்’ மூலம் அனைவருக்கும் பரிச்சயமான ஒரு விஷயத்தை, அதே நேரத்தில் புதுமையான கோணத்தில் சொல்ல விரும்பினோம். திருமணம் குறித்த நீண்டகால எதிர்பார்ப்புகளுக்கு சவால் விடுக்கும் ஒரு உறவை இந்த டிரெய்லர் அறிமுகப்படுத்துகிறது.

குடும்பத்தின் தனித்துவத்தையும், அதில் இருக்கும் அன்பு, சிரிப்பு, ஒற்றுமை ஆகியவற்றையும் கொண்டாடும் கதையாக இது இருக்கும். எனது நடிப்பு அறிமுகத்தை எனக்கு மிகவும் நெருக்கமான ஒரு கதையின் மூலம் தொடங்குவது மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் இந்தப் படத்தை Netflix மூலம் ரசிப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.

பவி கதாபாத்திரத்தில் நடித்துள்ள சான்வி மேக்னா கூறுகையில்.., 
“பவி தன்னம்பிக்கையானவள், சுதந்திரமானவள். தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்துடன் இருப்பவள். அதே நேரத்தில் தான் நேசிக்கும் மனிதர்களை ஒருபோதும் விட்டுக்கொடுக்காதவள்.

தனக்கு என்ன வேண்டும் என்பதில் அவள் தெளிவாக இருக்கிறாள். அதுதான் அந்தக் கதாபாத்திரம் என்னை ஈர்த்ததற்கான முக்கிய காரணம். டிரெய்லரில் பவியின் குணத்தை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். காதலும், வாழ்க்கைத்துணை உறவும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு புதிய கோணத்தை பவி காட்டுவதை ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

நடிகை ராதிகா சரத்குமார் கூறுகையில்.., “குடும்ப உறவுகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை எந்தவிதமான அழுத்தமும் இல்லாமல், நகைச்சுவையுடன் இந்தப் படம் பேசுவது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒவ்வொரு தலைமுறையும் திருமணத்தை வெவ்வேறு விதமாகப் பார்க்கிறது.

அந்த வித்தியாசமான பார்வைகள்தான் பல சிரிப்பான, உணர்வுப்பூர்வமான மற்றும் நம் வாழ்க்கையுடன் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய தருணங்களை உருவாக்குகின்றன” என்றார்.

நடிகர் யோகி பாபு கூறுகையில்.., 

“இந்த டிரெய்லர் நாங்கள் படப்பிடிப்பில் அனுபவித்த கலாட்டாவில் ஒரு சிறிய பகுதி மட்டுமே. அன்றாட குடும்ப வாழ்க்கையில் நடக்கும் சாதாரண விஷயங்களிலிருந்துதான் படத்தின் நகைச்சுவை உருவாகிறது. அதனால்தான் அது அனைவருடனும் எளிதாக கனெக்ட் ஆகும்.

ரசிகர்கள் எங்களுடன் சேர்ந்து சிரித்து, குடும்பத்துடன் இந்தப் படத்தை ரசிப்பதைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன்” என்றார்.

ஒரு திருமணம்… இரண்டு குடும்பங்கள்… எண்ணற்ற கலாட்டாக்கள்!

இந்த வீட்டுக்குள் வரப்போகும் புதிய மாப்பிள்ளை, அந்தக் குடும்பத்தின் வாழ்க்கையையே எப்படி மாற்றப் போகிறார் என்பதுதான் ‘பியார் பிரேமா கல்யாணம்’.

‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் Netflix-ல் வெளியாகிறது.

அட்லி வழங்கும், விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ – அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியீடு!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘பத்தா’.Star Studio18 மற்றும் பிரபல இயக்குநர் அட்லி வழங்கும் இப்படத்தை, A for Apple Studios மற்றும் Cine 1 Studios Production இணைந்து தயாரிக்கிறது இப்படம் வரும் அக்டோபர் 1ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

மூன்றாவது முறையாக இணையும் விஜய் சேதுபதி – பாலாஜி தரணிதரன் கூட்டணி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘பத்தா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநர் பாலாஜி தரணிதரன் மற்றும் விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். ஏற்கனவே இருவரது கூட்டணியில் வெளியான “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” மற்றும் “சீதக்காதி” திரைப்படங்கள் ரசிகர்களிடம் தனித்துவமான வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. விஜய் சேதுபதியின் இயல்பான நடிப்புத் திறனையும், தனித்துவமான கதை சொல்லல் பாணியையும் கொண்ட பாலாஜி தரணிதரனின் இயக்கமும் இணைவதால், ‘பத்தா’ வித்தியாசமான திரைப்பட அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அட்லி – விஜய் சேதுபதி மீண்டும் இணையும் கூட்டணி

இயக்குநர் அட்லி மற்றும் விஜய் சேதுபதி கூட்டணி ஏற்கனவே ‘ஜவான்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. தற்போது ‘பத்தா’ திரைப்படத்தின் மூலம் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். ‘ஜவான்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்த நிலையில், தற்போது அட்லி வழங்கும் தமிழ் திரைப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிப்பது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இருவரின் முந்தைய கூட்டணிக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இந்த புதிய கூட்டணி எப்படி அமையப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

‘ஜெய் பீம்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த லிஜோமோல் ஜோஸ், இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.இப்படத்திற்கு இளைஞர்களின் மனதை கவர்ந்த இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை செல்வகுமார் SK மேற்கொள்ள, படத்தொகுப்பை ஆர். கலைவாணன் கவனித்துள்ளார். படத்தின் தயாரிப்பு வடிவமைப்பாளராக டி. முத்துராஜ் பணியாற்றுகிறார். இப்படத்தின் இணை தயாரிப்பாளராக அஷ்வின் முருகன் பணியாற்றுகிறார்.

முராத் கெதானி, பிரியா அட்லி, அலோக் ஜெயின் மற்றும் அஜித் அந்தாரே ஆகியோர் இணைந்து ‘பத்தா’ திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, இயக்குநர் பாலாஜி தரணிதரன் மற்றும் இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் என பல்வேறு எதிர்பார்ப்புகளை ஒன்றிணைத்துள்ள ‘பத்தா’, வரும் அக்டோபர் 1ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த சுதந்திர தினத்தில், 26/11 பயங்கரவாத தாக்குதலின்போது தைரியமாக நின்று போராடிய பெயரிடப்படாத நாயகர்களின் சொல்லப்படாத கதையை கொண்டுவருகிறது இந்தி ZEE5-இன் பாரத் பாக்ய விதாதா

~ கங்கனா ரணாவத், கிரிஜா ஓக் மற்றும் ஸ்மிதா தாம்பே நடித்துள்ள பாரத் பாக்ய விதாதா, தியாகமும் வீரமும் நிறைந்த ஊக்கமூட்டும் கதையாக அமைந்துள்ளது. இந்த சுதந்திர தினத்தில் தவறாமல் பார்க்க வேண்டிய படைப்பு ~

தேசியம், ஆகஸ்ட் 7, 2026: இந்த சுதந்திர தினத்தில், தைரியம், மனவலிமை மற்றும் தன்னலமற்ற சேவை மனப்பான்மையை கொண்டாடும் வகையில், ஆகஸ்ட் 14 அன்று பாரத் பாக்ய விதாதா திரைப்படத்தின் பிரத்யேக டிஜிட்டல் பிரீமியரை இந்தி ZEE5 பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. இந்தியா முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு துணிச்சலான, ஊக்கமூட்டும் மற்றும் கலாச்சார ரீதியாக ஒத்திசைவான கதைகளை வழங்கும் தனது உறுதிப்பாட்டைத் தொடர்ந்து, நாட்டை வரையறுக்கும் மதிப்புகளை பிரதிபலிக்கும் அசாதாரண வீரச் செயல்களை வெளிப்படுத்திய பெயரிடப்படாத நாயகர்களின் மீது இந்த தளம் ஒளி பாய்ச்சுகிறது. மனோஜ் தபாடியா எழுதி இயக்கியுள்ள இப்படம், PEN Studios, Manikarnika Films மற்றும் Paramhans Creations ஆகிய நிறுவனங்களால், Eunoia Films LLP மற்றும் Floating Rocks Entertainment Pvt Ltd நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளது. பாரத் பாக்ய விதாதா திரைப்படத்தில் கங்கனா ரணாவத், கிரிஜா ஓக், ஸ்மிதா தாம்பே உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

முக்கிய விவரங்கள்:

தலைப்பு: பாரத் பாக்ய விதாதா
மொழி: இந்தி
வகை: த்ரில்லர் / டிராமா
பிரீமியர்: ஆகஸ்ட் 14, 2026
எழுத்தாளர் – இயக்குநர்: மனோஜ் தபாடியா
தயாரிப்பு: PEN Studios, Manikarnika Films மற்றும் Paramhans Creations, Eunoia Films LLP மற்றும் Floating Rocks Entertainment Pvt Ltd நிறுவனங்களுடன் இணைந்து
நடிகர்கள்: கங்கனா ரணாவத், கிரிஜா ஓக், ஸ்மிதா தாம்பே மற்றும் பலர்
ஸ்ட்ரீமிங்: இந்தி ZEE5

பாரத் பாக்ய விதாதா எதைப் பற்றியது?

26/11 மும்பை பயங்கரவாத தாக்குதல்களின் பேரழிவு பின்னணியில் அமைந்துள்ள பாரத் பாக்ய விதாதா, இந்திய வரலாற்றின் மிக இருண்ட அத்தியாயங்களில் ஒன்றை மீண்டும் நினைவூட்டுகிறது. எண்ணற்ற உயிர்களை காப்பாற்றிய பெயரிடப்படாத நாயகர்களின் தைரியத்தையும் தன்னலமற்ற சேவையையும் முன்னிறுத்துகிறது. மும்பையின் காமா மற்றும் ஆல்ப்லெஸ் மருத்துவமனையை மையமாகக் கொண்ட இந்த திரைப்படம், செவிலியர்கள், வார்டு பாய்கள், தூய்மை பணியாளர்கள், பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்களின் அசாதாரண செயல்பாடுகளைப் பின்தொடர்கிறது. அவர்கள் பராமரித்த நோயாளிகளுக்கான முதல் பாதுகாப்பு வரியாக மாறினர்.

தாக்குதலாளர்கள் மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்தபோது, சாதாரண மனிதர்கள் அசாதாரண சூழ்நிலைகளில் உயர்ந்து நின்றனர். தங்களை பாதுகாத்துக்கொள்ள மிகக் குறைந்த வசதிகள் இருந்தபோதிலும், தங்கள் கடமை உணர்வை தளர்த்தாமல், தங்கள் உயிர்களை விட நோயாளிகளின் உயிர்களுக்கு முன்னுரிமை அளித்தனர். அவர்களின் அசாதாரண தைரியம் மற்றும் தன்னலமற்ற செயல்கள் வழியாக, இந்த திரைப்படம் தியாகம், கருணை மற்றும் மனவலிமை போன்ற கருப்பொருட்களை ஆராய்கிறது. கற்பனைக்கெட்டாத சவால்களை எதிர்கொள்ளும் மனித மனத்தின் வலிமையை கொண்டாடுகிறது.

ஏன் பாரத் பாக்ய விதாதா உங்கள் வாட்ச் லிஸ்டில் இருக்க வேண்டும்?

● உண்மை சம்பவங்களால் ஈர்க்கப்பட்டது: இந்தியாவின் மிக முக்கியமான தருணங்களில் ஒன்றை, அசாதாரண தைரியம் வெளிப்படுத்திய மருத்துவப் பணியாளர்களின் பார்வையில் சொல்லும் பரபரப்பான கதை.

● அன்றாட நாயகர்களுக்கான சக்திவாய்ந்த அஞ்சலி: செய்தித் தலைப்புகளில் பெரிதாக இடம்பெறாத செவிலியர்கள், வார்டு பாய்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்களின் வீரத்தை கொண்டாடுகிறது.

● புதிய தோற்றத்தில் கங்கனா ரணாவத்: கிரிஜா ஓக் மற்றும் ஸ்மிதா தாம்பே ஆகியோருடன் இணைந்து உணர்ச்சிமிக்க கதையில் நட்சத்திர அணியை வழிநடத்துகிறார்.

● பயத்தை விட தைரியத்தின் கதை: வெறும் த்ரில்லர் அல்ல; மனவலிமை, தியாகம் மற்றும் நிலைத்த மனித உணர்வின் நினைவூட்டல்.

● இந்த சுதந்திர தினத்திற்கான சிறந்த பார்வை அனுபவம்.

அதிகாரப்பூர்வ கருத்துகள்:

இந்தி ZEE5 வணிகத் தலைவர் மற்றும் &TV தலைமை சேனல் அதிகாரி காவேரி தாஸ் கூறுகையில், “ஒவ்வொரு சக்திவாய்ந்த கதையின் மையத்திலும், அதை வித்தியாசமாகச் சொல்லும் தைரியம் உள்ளது. பாரத் பாக்ய விதாதா அந்த உணர்வை பிரதிபலிக்கிறது. இது இந்தி ZEE5-இன் துணிச்சலான மற்றும் அர்த்தமுள்ள கதைகளின் பட்டியலில் முக்கியமான சேர்க்கையாகும். 26/11 சம்பவங்கள் பல கோணங்களில் சொல்லப்பட்டிருந்தாலும், இந்த திரைப்படம் காமா மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள், வார்டு பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் அசாதாரண தைரியத்தை வெளிச்சம் போடுகிறது. அவர்கள் தங்களை விட மனிதநேயத்தையும், பயத்தை விட கடமையையும் உயர்வாகக் கருதினர். அவர்களின் அமைதியான வீரச் செயல்கள் மனவலிமை, கருணை மற்றும் தன்னலமற்ற சேவையின் வலுவான சான்றாக உள்ளன. சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்த ஊக்கமூட்டும் கதையை இந்தி ZEE5-இல் பார்வையாளர்களிடம் கொண்டு வருவதில் பெருமை கொள்கிறோம். உண்மையான வீரத் தன்மை போர்க்களங்களில் மட்டுமல்ல, மனிதர்களின் அன்றாட செயல்களிலும் இருப்பதை நினைவூட்டிய பெயரிடப்படாத நாயகர்களை கௌரவிக்கிறோம்” என்றார்.

நடிகையும் தயாரிப்பாளருமான கங்கனா ரணாவத் கூறுகையில், “சில கதைகள் சொல்லப்பட வேண்டியவை என்பதால் உங்களைத் தேர்ந்தெடுக்கின்றன. பாரத் பாக்ய விதாதா அப்படிப்பட்ட ஒரு திரைப்படம். நடிகையாகவும் தயாரிப்பாளராகவும், 26/11 தாக்குதலின்போது பயங்கரவாதத்திற்கும் மனிதநேயத்திற்கும் இடையில் அச்சமின்றி நின்ற சுகாதாரப் பணியாளர்களின் சொல்லப்படாத கதைகளை உயிர்ப்பிப்பது எனக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. அவர்களின் தைரியம் அங்கீகாரத்தால் இயக்கப்படவில்லை; அசைக்க முடியாத கடமை உணர்வும் கருணையும் தான் அதற்கு காரணம். சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த திரைப்படம் வெளியாகிறது என்பது அதன் செய்தியை மேலும் அர்த்தமுள்ளதாக மாற்றுகிறது. இந்தியாவின் ஆன்மா, எல்லைப் பாதுகாப்பில் நிற்பவர்களால் மட்டுமல்ல, நெருக்கடியான தருணங்களில் அசாதாரண சவால்களை எதிர்கொள்ளும் சாதாரண குடிமக்களாலும் வரையறுக்கப்படுகிறது என்பதை இது நினைவூட்டுகிறது. இந்தி ZEE5-இல் இந்த திரைப்படத்தை பார்க்கும் பார்வையாளர்கள், அவர்களின் தியாகங்களுடன் இணைந்து, இந்த கதைக்கு ஊக்கமளித்த எண்ணற்ற உண்மையான நாயகர்களை நினைவுகூருவார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

எழுத்தாளர் – இயக்குநர் மனோஜ் தபாடியா கூறுகையில், “ஆரம்பத்திலிருந்தே, 26/11 கதையை இதுவரை ஆராயப்படாத ஒரு கோணத்தில் சொல்ல வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். நாடு முழுவதும் பாதுகாப்புப் படைகளின் வீரத்தை நினைவுகூரும் நிலையில், அந்த இரவு காமா மருத்துவமனைக்குள் சம அளவிலான அசாதாரண வீரச் செயல்களும் நடைபெற்றன. மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள், தங்களைச் சுற்றியிருந்த பெரும் ஆபத்துகளுக்கு மத்தியிலும் நோயாளிகளை தொடர்ந்து பராமரித்தனர். பாரத் பாக்ய விதாதா அவர்கள் காட்டிய மனவலிமை, மனிதநேயம் மற்றும் அமைதியான வீரத்திற்கான எங்கள் அஞ்சலியாகும். இந்த சுதந்திர தினத்தில் இந்தி ZEE5 வழியாக இந்த திரைப்படம் நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களை சென்றடைவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

பாரத் பாக்ய விதாதா திரைப்படம் ஆகஸ்ட் 14, 2026 அன்று இந்தி ZEE5-இல் பிரத்யேகமாக பிரீமியர் ஆகிறது.

ஆகஸ்ட் 7 முதல் தமிழிலும் கிடைக்கும் ZEE5-இல் பிரம்மாண்ட டிஜிட்டல் பிரீமியருக்கு தயாராகும் ‘லெனின்’

அகில் அக்கினேனியின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய பிளாக்பஸ்டராக உருவெடுத்து, திரையரங்குகளில் மாபெரும் வெற்றிப் பயணம் கண்டுள்ள ‘லெனின்’ திரைப்படம், தற்போது அதன் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் டிஜிட்டல் பிரீமியருக்குத் தயாராகி வருகிறது. இந்த அதிரடி நிறைந்த கிராமப்புற பொழுதுபோக்கு திரைப்படம் ஆகஸ்ட் 7 முதல் தெலுங்கு ZEE5-இல் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் ஆகத் தொடங்குகிறது. மேலும், தமிழிலும் கிடைக்கவுள்ளது. இதன் மூலம், இந்த ஆண்டின் மிகப்பெரிய தெலுங்கு வெற்றிப் படங்களில் ஒன்றை, பார்வையாளர்கள் தங்கள் இல்லங்களிலிருந்தே மீண்டும் அனுபவிக்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.

முரளி கிஷோர் அப்பூரு இயக்கியுள்ள ‘லெனின்’ திரைப்படத்தில், அகில் அக்கினேனி தனது திரை வாழ்க்கையை வரையறுக்கும் வகையிலான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் பாக்யஸ்ரீ போர்ஸே இணைந்து நடித்துள்ளார். மேலும், சிவாஜி, சுனில், ஈஸ்வரி ராவ், பிரம்மாஜி, கெட்டப் ஸ்ரீனு, ராம்கி, பிரமோத் பஞ்சு மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நாகார்ஜுனா அக்கினேனி மற்றும் சூர்யதேவரா நாக வம்சி ஆகியோர் மனம் எண்டர்பிரைசஸ் மற்றும் சிதாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனங்களின் கீழ் இப்படத்தை தயாரித்துள்ளனர். தமன் எஸ். இசையமைத்துள்ள இப்படத்திற்கு லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவும், நவீன் நூலி படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

ஆந்திரப் பிரதேசத்தின் கிராமப்புற பின்னணியில் அமைந்துள்ள ‘லெனின்’, அச்சமற்ற இளைஞன் ஒருவரின் கதையைச் சொல்கிறது. அவரது தனிப்பட்ட பயணம், பின்னர் அநீதிக்கு எதிரான மிகப்பெரிய போராட்டமாக மாறுகிறது. ஒரு உணர்ச்சிப்பூர்வமான காதல் கதையாகத் தொடங்கும் இந்த பயணம், குடும்ப பந்தங்கள், அதிகாரப் போட்டிகள் மற்றும் தன் மக்களை பாதுகாக்கும் உறுதியை மையமாகக் கொண்ட தீவிரமான மோதலாக விரிகிறது. அதிரடி, உணர்ச்சி, காதல், நகைச்சுவை மற்றும் வலுவான வணிகத் திரைப்பட அம்சங்களை ஒருங்கிணைக்கும் இப்படம், அனைத்து வயதினரையும் கவரும் முழுமையான திரை அனுபவத்தை வழங்குகிறது.

திரையரங்குகளில் வெளியானவுடன், இப்படம் உடனடியாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தது. அகில் அக்கினேனியின் வலிமையான திரைநிலை, முரளி கிஷோர் அப்பூருவின் மண்ணின் மணம் வீசும் கதை சொல்லல், தமன் எஸ். வழங்கிய சக்திவாய்ந்த பின்னணி இசை மற்றும் உணர்ச்சிமிக்க கதை அமைப்பு ஆகியவை பரவலான பாராட்டைப் பெற்றன. மறக்க முடியாத உயர்வுகள், பரபரப்பான அதிரடி காட்சிகள் மற்றும் மனதைத் தொடும் உணர்ச்சிமிக்க தருணங்களால் நிரம்பிய ‘லெனின்’, அகில் அக்கினேனியின் அதிக வசூல் செய்த திரைப்படமாக உருவெடுத்து, இந்த ஆண்டின் முக்கியமான தெலுங்கு பிளாக்பஸ்டர்களில் ஒன்றாக தன்னை உறுதியாக நிலைநிறுத்திக் கொண்டது.

பிளாக்பஸ்டர் திரைப்படங்கள், பாராட்டுப் பெற்ற ஒரிஜினல் படைப்புகள் மற்றும் பிராந்திய மக்களின் விருப்பமான பொழுதுபோக்கு உள்ளடக்கங்களால் நிரம்பிய நூலகத்துடன், ZEE5 பல மொழிகளில் தரமான உள்ளடக்கங்களை வழங்கும் முன்னணி தளங்களில் ஒன்றாக தனது நிலையை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்கள், அதிரடி நாடகங்கள் முதல் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற ஒரிஜினல்கள் வரை, பல்வேறு வகையான கதைகளை தொடர்ந்து பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கிறது. இதன் மூலம், பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் பார்வையாளர்களை சென்றடைகின்றன. தமிழிலும் கிடைக்கும் ‘லெனின்’ திரைப்படத்தின் வருகை, ZEE5-இன் வலுவான உள்ளடக்க பட்டியலை மேலும் செழுமையாக்குகிறது. இதன் மூலம், தமிழ்நாட்டு பார்வையாளர்களும் திரையரங்குகளில் வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தை தளத்தில் அனுபவிக்கும் மேலும் ஒரு வாய்ப்பைப் பெறுகின்றனர்.

“அய்யாகாரு” உங்கள் திரைகளுக்கு வரத் தயாராக இருக்கிறார்!

ஆகஸ்ட் 7 முதல் தெலுங்கு ZEE5-இல் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் ஆகும் ‘லெனின்’ திரைப்படத்தின் டிஜிட்டல் பிரீமியரை தவறவிடாதீர்கள். இது தமிழிலும் கிடைக்கும்.

துல்கர் சல்மானின் ‘ஐ ம் கேம்- I Am Game’ திரைப்படத்தின் முதல் பாடல்

துல்கர் சல்மானின் ‘ஐ ம் கேம்- I Am Game’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் !

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் ‘ ஐ ம் கேம்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது. ‘அருகே அருகே’ ( Arugey Arugey..) என பெயரிடப்பட்டுள்ள இப்பாடலுக்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். பாடலை பாடலாசிரியர் விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுத, பின்னணி பாடகர் அர்மான் மாலிக் பாடியுள்ளார். இந்தப் பாடல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. மலையாள பதிப்பிற்கு பாடலாசிரியர் ஷார்பு எழுத, பின்னணி பாடகர் அர்மான் மாலிக் பாடியிருக்கிறார். தெலுங்கு பதிப்பின் பாடலை சனாரே எழுத, அர்மான் மாலிக் பாடியுள்ளார். இந்தி பதிப்பின் பாடலை நுமன் கோகர் எழுத, அர்மான் மாலிக் பாடியுள்ளார். கன்னட பதிப்பின் பாடலை ஹிருதயா சிவா எழுத, பாடகர் அனிருத் சுஸ்வரம் பாடியுள்ளார்.

ரசிகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள :ஐ அம் கேம்’ திரைப்படம் – ஆகஸ்ட் 20ஆம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. துல்கர் சல்மானின் வேஃபரர் ஃபிலிம்ஸ் – Wayfarer Films தயாரிப்பில் உருவாகும் இந்த பிரம்மாண்டமான ஃபேண்டஸி திரில்லர் திரைப்படம்-  துல்கரின் திரை பயணத்திலேயே மிக பெரிய படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை நஹாஸ் ஹிதாயத் இயக்குகிறார். வேஃபரர் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு சஜீல் பாபா – இஸ்மாயில் அபுபக்கர் மற்றும் பிலால் மொய்து ஆகியோர் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். வசனங்களை சஜீல் பாபா – ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் ஷபாஸ் ரஷீத் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.

‘அருகே அருகே..’ எனத் தொடங்கும் இந்த பாடல் வெளியான உடனேயே ரசிகர்களின் மனதை கவர்ந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அத்துடன் இப்படம் குறித்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்பாடல் மேலும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.‌ முன்னதாக இப்படத்தின் ட்ரெய்லர் பார்வையாளர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் வெளியான இந்த ட்ரெய்லர் இந்தியா முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்தது.

அற்புதமான காட்சிகள் – பிரமிக்க வைக்கும் சண்டைக் காட்சிகள்-  விறுவிறுப்பான சேசிங் காட்சிகள்-  என படத்தின் ட்ரெய்லர் ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கு வரவழைக்கும் வகையில் அமைந்திருந்தது. தமிழ் மற்றும் மலையாள திரையுலக ரசிகர்கள் இதுவரை கண்டிராத வகையில் ஒரு ஸ்டைலான ஃபேண்டஸி திரில்லர் படமாக இது அமையும் என்றும்  உறுதியளிக்கப்படுகிறது. இதில் துல்கர் சல்மான் மிகவும் ஸ்டைலான மற்றும் மாஸான தோற்றத்தில் தோன்றுகிறார். இது ரசிகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களின் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. தென்னிந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ள ‘ ஐ அம் கேம்’ மலையாள திரையுலகின் மிகப்பெரிய வெளியீடுகளில் ஒன்றாக அமைய உள்ளது. இப்படத்தின் ஸ்டைலான போஸ்டர்களுக்கும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

துல்கர் சல்மானின் 40 வது திரைப்படமாக உருவாகும் இந்த பிரம்மாண்ட பட்ஜெட்டிலான ஃபேண்டஸி திரில்லர் திரைப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த் திவாரி, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை உரிமையை ஜீ மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் புதிதாக வெளியான பாடல் ஆகியவை ஜேக்ஸ் பிஜாயின் இசை – ஜிம்ஷி காலீத்தின் ஒளிப்பதிவு மற்றும் அன்பறிவ் மாஸ்டர்களின் சண்டைக் காட்சிகள் – ஆகியவை படத்தின் முக்கிய சிறப்பம்சங்களாக அமையும் என்பதை உணர்த்துகின்றன.

மாபெரும் வெற்றி படமான லோகா ( Lokah) படத்தை தொடர்ந்து வேஃபரர் பிலிம்ஸ் ( Wayfarer Films) தயாரிக்கும் அடுத்த படம் இதுவாகும். அதே போல் பிளாக் பஸ்டர் ஹிட் படமான ‘RDX -ஆர் டி எக்ஸ்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கும் அடுத்த படமாகவும் இது அமைந்துள்ளது. இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

லைன் புரொடியூசர் : பிபின் பெரும்பில்லி
ஒளிப்பதிவு : ஜிம்ஷி காலீத்
இசை : ஜேக்ஸ் பிஜாய்
படத்தொகுப்பு : சமன் சாக்கோ
தயாரிப்பு வடிவமைப்பு : அஜயன் சாலிசேரி
தயாரிப்பு கட்டுப்பாட்டாளர் : தீபக் பரமேஸ்வரன்
VFX : தௌஃபீக் ( Eggwhite)
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் ஹெட் : விஜித் விஸ்வநாதன்

“டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்  ”  ( Don’t Trouble the Trouble )  மின்னல் வேக ஃபர்ஸ்ட் சிங்கிள் “கேக்கு வாக்கு” ( Cakeu Walku )  இசை வீடியோ வெளியாகியுள்ளது.

அர்கா மீடியா ஒர்க்ஸ் மற்றும் ஷோயிங் பிசினஸ் நிறுவனங்களின் “டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்  ”  ( Don’t Trouble the Trouble )  மின்னல் வேக ஃபர்ஸ்ட் சிங்கிள் “கேக்கு வாக்கு” ( Cakeu Walku )  இசை வீடியோ வெளியாகியுள்ளது.

பன்முகரி திறமை கொண்ட நடிகர் ஃபஹத் பாசில், ‘பாகுபலி’ போன்ற மாபெரும் வெற்றிப் படங்களை உருவாக்கிய தயாரிப்பு நிறுவனமான அர்கா மீடியா ஒர்க்ஸ் மற்றும் தொலைநோக்கு படைப்பாளி  இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி ஆகியோரின் கூட்டணி இணையும் போது, ‘Don’t Trouble the Trouble’ போன்ற ஒரு மாயாஜாலமான படைப்பு உருவாகிறது.

ஷோயிங் பிசினஸ் பேனரின் கீழ் தனது முதல் விநியோக முயற்சியான ‘பிரேமலு’ மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற தயாரிப்பாளர் எஸ்.எஸ். கார்த்திகேயா, தற்போது இந்தியாவின் பெருமைக்குரிய ‘பாகுபலி’ திரைப்படத் தொடரைத் தயாரித்த புகழ்பெற்ற அர்கா மீடியா ஒர்க்ஸ் இணைந்து இந்த பிரம்மாண்டமான படைப்பை உருவாக்கி வருகிறார்.

“டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்”  ( Don’t Trouble the Trouble ) எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் ஷஷாங்க் எலெட்டி இயக்குகிறார். ஃபஹத் பாசில் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். பாராட்டுகளைப் பெற்ற தயாரிப்பாளர்களான ஷோபு யர்லகட்டா மற்றும் பிரசாத் தேவினேனி, எஸ்.எஸ். கார்த்திகேயாவுடன் இணைந்து இந்த சுவாரஸ்யமான படைப்பை தயாரிக்கின்றனர். ரசிகர்களிடையே எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்திய டீசரைத் தொடர்ந்து, தற்போது “கேக்கு வாக்கு” ( Cakeu Walku )  வீடியோ பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

கால பைரவா இசையமைத்துள்ள இந்தப் பாடல், சூரி கதாபாத்திரத்தையும் அவரது வித்தியாசமான பைத்தியக்காரத்தனத்தையும் ஒரு தனித்துவமான பின்னணியில் அறிமுகப்படுத்துகிறது.

கால பைரவா, ஃபஹத் பாசில்  மற்றும் சாரா ஆகியோர் இடம் பெறும் சிறப்பு இசை வீடியோவை படக்குழுவினர் உருவாக்கியுள்ளனர். ஆரம்பத்தில் கூலான பாடலாகத் தொடங்கும் இது, கால பைரவா தனது துள்ளல் நிறைந்த இசையுடன் களமிறங்கியதும் முழுக்க முழுக்க வித்தியாசமான உற்சாகமான அனுபவமாக மாறுகிறது. இளம் இசையமைப்பாளரின் மின்னல் வேக இசையமைப்பும், அவரது நடன அசைவுகளும் ரசிகர்களை கவர்கின்றன.

கால பைரவா மற்றும் வாசி இணைந்து இந்தப் பாடலுக்கான கவர்ச்சிகரமான வரிகளை எழுதியுள்ளனர். சூரியின் துணிச்சலான தன்மையையும், எந்தவொரு சவாலான பணியாக இருந்தாலும் அது அவருக்கு மிகவும் எளிதானது என்பதையும் பாடல் வரிகள் எடுத்துக்காட்டுகின்றன. இவர்களே பாடலையும் மிகுந்த உற்சாகத்துடன் பாடியுள்ளனர். பகத் பாசிலின் எனர்ஜியும், அவரது வைப்பும் ‘ஆவேசம்’ படத்தின் ரங்கா சேட்டாவை அனைவருக்கும் நினைவூட்டுகிறது. அவரது அழகான நடன அசைவுகள், அனைவரையும் கவரும் புன்னகை மற்றும் வசீகரம் ஆகியவை பார்ப்பதற்கு விருந்தாக அமைந்துள்ளன. சாராவும் இந்த வேடிக்கையான இசை வீடியோவில் இணைந்து, பாடலை மேலும் சிறப்பாக்குகிறார்.

மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ஆல்பத்தின் தொடக்கமே ஒரு சார்ட்பஸ்டர் வெற்றியாக அமைந்துள்ளது. “டோன்ட் டிரபிள் த டிரபிள்”  ( Don’t Trouble the Trouble )  திரைப்படம் ஒரு வித்தியாசமான ஃபேண்டஸி என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. இப்படம் 2026 செப்டம்பர் 11ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகத் தயாராகி வருகிறது.

நடிகர்கள்:

ஃபஹத் பாசில் , சாரா, சௌரப் சச்தேவா மற்றும் பலர்

தொழில்நுட்பக் குழு:

இயக்கம்: ஷஷாங்க் எலெட்டி
பேனர்கள்: Arka Mediaworks & Showing Business
தயாரிப்பாளர்கள்: ஷோபு யர்லகட்டா, பிரசாத் தேவினேனி, எஸ்.எஸ். கார்த்திகேயா
இசை: கால பைரவா

‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தில் நடிகை தபுவின் ‘கேரக்டர் கிளிம்ப்ஸ்’ வெளியீடு

இப்படத்தில் சக்தி வாய்ந்த அதிகாரி கௌரி ஹெக்டேவாக நடிக்கும் நடிகை தபு கதாபாத்திரத்தை, சுவராசியமான பிரத்யேக முன்னோட்டத்தின் மூலம் படக்குழு அறிமுகப்படுத்தி இருக்கிறது.

துடிப்பான திரைப்பட இயக்குநர் பூரி ஜெகன்நாத்தையும், புகழ் பெற்ற நடிகரான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியையும் முதல் முறையாக ஒன்றிணைத்துள்ள பான் இந்திய ஆக்சன் என்டர்டெய்னர் படமான ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படம் – உண்மையான உணர்ச்சிகள் – அதிரடியான சண்டைக் காட்சிகள்-  புதிரான மர்மம்-  ஆகியவற்றின் கலவை என உறுதியளிக்கிறது.

கௌரி ஹெக்டேவாக நடிக்கும் தபுவின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட பிறகு, படக் குழுவினர் தற்போது அவரது ஆளுமை மிக்க கதாபாத்திரத்தை மேலும் விவரிக்கும் வகையில்… ஒரு ஆற்றல் பெற்ற பிரத்யேக முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளனர்.

நகரின் சேரி பகுதிகளை பின்னணியாகக் கொண்ட இந்த முன்னோட்டம்.. படத்தின் கடினமான உலகத்தை நிலை நிறுத்த தொடங்கி, பின்னர் தபுவை ஒரு குறிப்பிடத்தக்க விதத்தில் அறிமுகப்படுத்துகிறது. அவர் ஒரு காரில் வந்து சிகரெட்டை பற்ற வைத்து.. உடனடியாக நிலைமையை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருகிறார். ஒரு உள்ளூர் ரவுடிக்கு அவர் விடுத்த கடுமையான எச்சரிக்கையும்… அதைத் தொடர்ந்து அவர் கொடுத்த ‘பளார்’ என்ற அறையும்… கௌரி ஹெக்டே அதிகாரத்தைத் தேடுபவர் அல்ல… அதை கோருபவள் என்பதை உடனடியாக பிரதிபலிக்கிறது.

அந்த கதாபாத்திரம் – ஒரு சக்தி வாய்ந்த அதிகாரியாக மட்டுமல்லாமல் முற்றிலும் அச்சம் ஏதும் இல்லாத மற்றும் சமரசம் ஏதும் இல்லாத ஒருவராகவும் காட்சிப்படுத்தப்படுகிறார். கௌரி ஹெக்டே – தெருக்களின் நடுவில் விரோத மனப்பான்மை கொண்ட உள்ளூர் மக்களையும், ரவுடிகளையும் எதிர்கொள்கிறார். அவர்களை உடல் ரீதியாக தாக்கி சூழலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர ஒரு மரத்தடியை பயன்படுத்துகிறார். காவல்துறையினரும், கூட்டமும் அவரை சூழ்ந்து இருந்தாலும்… அவர் சற்றும் கலங்காமல் தனது அதிகாரத்தை எதிர்ப்பவர்களை ஆக்ரோஷமாக அடக்குகிறார்.

அந்தக் காட்சி முழுவதும் மின்னும் ‘ஒரு அச்சமற்ற பெண்’, ‘சக்தி வாய்ந்த அதிகாரி’, ‘இரக்கமற்றவர் ‘, ‘கருணையற்றவர்’, ‘துறையின் பிசாசு’ போன்ற வார்த்தைகள் அவரது கதாபாத்திரத்தின் தன்மையை தெளிவாக உணர்த்துகின்றன. இறுதியில் அவர் தன்னை முழு அதிகாரத்துடன் அறிமுகப்படுத்திக் கொள்ளும் போது தான் இதன் உச்சக்கட்டம் வெளிப்படுகிறது. ‘கௌரி ஹெக்டே, துணை ஆணையர், வருமான வரித்துறை’ எனும் அந்த அறிமுகம்… ஒரு மிகச்சிறந்த பூரி ஜெகன்நாத் பிரத்யேகமாக வடிவமைக்கும் கதாபாத்திரத்திற்கே உரிய வீரியத்தையும், கம்பீரத்தையும் கொண்டுள்ளது. இந்த முன்னோட்டத்தில் விஜய் சேதுபதியின் சில காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

தபு கம்பீரமாகவும், மிடுக்காகவும் தோன்றுகிறார். தனது திரை தோற்றத்தில் அந்த கதாபாத்திரத்தை முழுமையாக தனதாக்கிக் கொள்கிறார். அவர் கௌரி ஹெக்டே கதாபாத்திரத்திற்கு ஒரு தனித்துவமான அதிகாரத்தையும், அச்சுறுத்தலையும் கொண்டு வருகிறார். இது அந்த கதாபாத்திரத்தை உடனடியாக காண வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுவதாக மாற்றுகிறது. பூரி ஜெகன்நாத் – மறக்க முடியாத கதாபாத்திரங்களை வடிவமைத்து அவற்றை தாக்கத்தை ஏற்படுத்து வகையில் அறிமுகப்படுத்துவதில் எப்போதுமே ஒரு தனித்துவமான திறமை கொண்டவர். மேலும் கௌரி ஹெக்டே-  அவரின் மற்றொரு வசீகரிக்கும் புதிய வரவாக தோன்றுகிறார்.

இந்த படத்திற்கான நடிகர் குழுவும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. சம்யுக்தா நாயகியாக நடிக்க, துனியா விஜய் வில்லனாக நடிக்கிறார். பிரம்ஹாஜீ மற்றும் விடிவி கணேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.‌

இப்படத்தின் இருண்ட மற்றும் யதார்த்தமான கதைக் களத்திற்கு ( Dark & Gritty World) தொழில்நுட்பக் குழுவினர் மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கி உள்ளனர்.  சாம் கே. நாயுடு ஒளிப்பதிவையும், ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைப்பையும், சந்தோஷ் நூஜில்லா படத்தொகுப்பையும் மேற்கொள்கின்றனர்.

‘ஸ்லம்டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தை பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோர், ஜே பி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான ஜே பி நாராயண ராவ் கொண்ட்ரோல்லாவுடன் இணைந்து தயாரிக்கின்றனர்.

டைட்டில் லுக்- ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்-  டீசர் – தற்போது வெளியாகி கவனம் ஈர்க்கக்கூடிய கிளிம்ப்ஸ்- ஆகியவற்றின் மூலம் இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கதாபாத்திரங்கள் மற்றும் அவற்றின் உலகம் குறித்த ஆர்வத்தை இவை மேலும் தூண்டுகிறது.

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய இந்திய மொழிகளில் இந்தியா முழுவதும் பான் இந்திய திரைப்படமாக வெளியாக தயாராகி வருகிறது.

நடிகர்கள் :

விஜய் சேதுபதி, சம்யுக்தா, தபு, துனியா விஜய் குமார்,பிரம்ஹாஜீ,விடிவி கணேஷ் .

தொழில்நுட்பக் குழு :

எழுத்து & இயக்கம் : பூரி ஜெகன்நாத்
தயாரிப்பாளர்கள் : பூரி ஜெகன்நாத் – சார்மி கவுர் & ஜே பி நாராயணன் ராவ் கொண்ட்ரோல்லா
வழங்குபவர் : சார்மி கவுர்
தயாரிப்பு நிறுவனம்: பூரி கனெக்ட்ஸ்
CEO :  விஷ்ணு ரெட்டி
இசை:  ஹர்ஷவர்தன் ராமேஸ்வர்
ஒளிப்பதிவு : சாம் கே. நாயுடு
படத்தொகுப்பு : சந்தோஷ் நூஜில்லா
 VFX : அனில் பாடூரி
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஹாஷ்டாக் மீடியா

நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்டேட்டை வெளியிட்ட ‘வாரணாசி- #VARANASI’ படக் குழு

நடிகர் மகேஷ் பாபுவின் பிறந்த நாளை முன்னிட்டு ‘வாரணாசி- #VARANASI”- ‘ருத்ரா’வின் இரண்டு பிரத்யேக புகைப்படங்களை வெளியிட்ட படக்குழு

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் பிறந்த நாளை முன்னிட்டு, பெரிதும் எதிர்பார்க்கப்படும் காவிய திரைப்படமான ‘வாரணாசி’ படக்குழு – ‘ருத்ரா’வின் கதாபாத்திரத்தை உலகுக்கு முதன்முறையாக அறிமுகப்படுத்தும் வகையில் இரண்டு பிரத்யேக புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

முதல் புகைப்படம்- அடர்ந்த வனப்பகுதியின் நடுவே மூங்கில் தெப்பத்தில் ஓய்வெடுக்கும் ருத்ராவை காண்பிக்கிறது. இதில் அவர் இயல்பான கம்பீரத்துடனும், கவனம் ஈர்க்கும் தன்மையுடனும் தனது கதாபாத்திரத்திற்கே உரித்தான அமைதியான தோற்றத்துடனும் காட்சியளிக்கிறார்.

இரண்டாவது புகைப்படம்- நம்மை கென்யாவின் மாசாய் மாரா ( Maasai Mara) சமவெளிகளுக்கு அழைத்துச் செல்கிறது. அங்கு ஒட்டகச்சிவிங்கிகள் மற்றும் வைல்ட்பீஸ்ட் ( Wildebeest) விலங்குகளுக்கு நடுவே நிற்கும் ருத்ரா மறுக்க முடியாத – அதிகார தோரணையில் பின்னோக்கி பார்க்கிறார்.

இந்த இரண்டு புகைப்படங்களும் வாரணாசி- #VARANASI படத்தின் ஆன்மாவை நமக்கு உணர்த்துகின்றன. இது உலகம் முழுவதும் பயணிக்கும்… ஒரு நூற்றாண்டு காலத்தை உள்ளடக்கிய காவியமாகும். இதில் ஒரு மனிதனின் அசாதாரணமான பயணம் – அவரை இந்தியாவின் புனித நீர் நிலைகளில் இருந்து பூமியின் மிகவும் காட்டுமிராண்டித்தனமான மற்றும் அடர்ந்த வனப்பகுதிகளுக்கு அழைத்துச் செல்கிறது.

இது தொடர்பாக இயக்குநர் எஸ். எஸ். ராஜமவுலி குறிப்பிடுகையில்.., ”தன்னைவிட பெரியதொரு நோக்கத்தை நிறைவேற்றவே ருத்ரா பிறந்தான். அவன் தான் கோராத ஒரு விதியை சுமந்து கொண்டிருக்கிறான். அவன் நகைச்சுவை உணர்வு மிக்கவன். அதே தருணத்தில் மென்மையானவனும் கூட. அத்துடன் அவன் மிகக் கடுமையானவனும் ஆவான். அந்த பரிமாணங்களை தான் மகேஷ் பாபு அக்கதாபாத்திரத்திற்குள் கொண்டு வந்தார். யாராலும் கடுமையான தோற்றத்தை வெளிப்படுத்த முடியும். ஆனால் ஒரே தருணத்தில் கடுமையையும்… மென்மையையும்… வெளிப்படுத்தக் கூடியவர்கள் மிகச் சிலரே.

இந்த காட்சிகள் எங்களின் ஆப்பிரிக்க படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்டவை. எந்த ஒரு செயற்கையாக அமைக்கப்பட்ட அரங்கங்களாலும் தர இயலாத ஒன்றை… அந்த நில பரப்பு எங்களுக்கு வழங்கியது. கிளிமஞ்சாரோ மற்றும் மாசாய் மாரா சமவெளி பகுதிகளில் படப்பிடிப்பு நடத்திய போது… நான் வியந்து போனேன். காலை நேரங்களில் எங்கள் கண்முன் விரிந்து கிடந்த காட்சிகளை 1:43:1 ஐமேக்ஸ் ( IMAX) திரையால் கூட முழுமையாக உள்வாங்க முடியாது என்று நான் உணர்ந்தேன்” என்றார் .

எஸ். எஸ். ராஜமவுலி இயக்கத்தில் எம். எம். கீரவாணியின் இசையில் உருவாகும் ‘வாரணாசி-#VARANASI’ திரைப்படத்தை ஸ்ரீ துர்கா ஆர்ட்ஸ் ( Sri Durga Arts) மற்றும் ஷோயிங் பிசினஸ் ( Showing Business) ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்த திரைப்படம் 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஏழாம் தேதி முதல் உலகம் முழுவதும் ஐமேக்ஸ் ( IMAX) தொழில்நுட்பத்தில் வெளியாகிறது.

‘ராக்கிங் ஸ்டார்’ யாஷின் ‘டாக்ஸிக்’ டிரெய்லர் வெளியானது!  ஆக்‌ஷன், மீட்சி, அழிவு என  பிரம்மாண்ட உலகத்தை அறிமுகப்படுத்துகிறது!

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ‘டாக்ஸிக்’  ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. கட்டுப்பாடற்ற இரண்டு சக்திகள் மோதும் பிரம்மாண்டமான உலகம், சோதிக்கப்படும் விசுவாசங்கள் மற்றும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பின்னால் இருக்கும் தனித்துவமான கதை என, இப்படத்தின் உலகத்தை முதன்முறையாக இந்த டிரெய்லர் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.

‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் கதையின் மையக் கதாபாத்திரமாக நடிக்கும் இப்படத்தின் டிரெய்லர், பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் மிகப்பெரிய திரை அனுபவத்துடன், காதல், அதிகாரத்தின் மீதான பேராசை, துரோகம் மற்றும் மீட்சி ஆகியவற்றை மையமாகக் கொண்ட உணர்வுபூர்வமான கதையையும் இணைக்கும் பிரம்மாண்ட படைப்பாக ‘டாக்ஸிக்’ திரைப்படத்தை வெளிப்படுத்துகிறது. கண்கவர் காட்சிகள், வெடிக்கும் ஆக்‌ஷன் காட்சிகள், பல அடுக்குகளைக் கொண்ட கதாபாத்திரங்கள் மற்றும் தீவிரமான உறவுகள் என, இந்த டிரெய்லர் உணர்வுபூர்வமான அதே நேரத்தில் பிரம்மாண்டமான கேங்ஸ்டர் கதையை எதிர்பார்க்க வைக்கிறது.

‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் மையத்தில், ராயா மற்றும் அவரது மகன் டிக்கெட் ஆகியோருக்கு இடையிலான சிக்கலான உறவு இடம்பெற்றுள்ளது. இது பிரம்மாண்டமான கேங்ஸ்டர் உலகிற்கு ஒரு வலுவான உணர்வுபூர்வமான அடித்தளத்தை வழங்குகிறது. அதேபோல், நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த் மற்றும் ஹுமா குரேஷி ஆகியோரின் கதாபாத்திரங்களைச் சுற்றியுள்ள உறவுகள் மற்றும் மோதல்களின் வலையையும் டிரெய்லர் அறிமுகப்படுத்துகிறது. ஒவ்வொரு நடிகரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு தனித்துவமான பரிமாணத்தையும் தீவிரத்தையும் வழங்கியிருப்பது டிரெய்லரில் அழுத்தமாகத் தெரிகிறது.

விருது பெற்ற திரைப்பட இயக்குநர் கீது மோகன்தாஸ், தனது தனித்துவமான கதை சொல்லல் மற்றும் காட்சி அணுகுமுறையின் மூலம் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தில் ஒரு ஆழமான மற்றும் கணிக்க முடியாத உலகத்தை உருவாக்கியுள்ளார். டிரெய்லரில் ‘Yash vs Yash’ என்ற மோதல் முக்கியமாக இடம்பெறுகிறது. யாஷ், ராயா மற்றும் டிக்கெட் என இரு கதாபாத்திரங்களில் நடிக்கிறார். தந்தை மற்றும் மகன் என இருவரும் எதிரெதிர் அணிகளில் நிற்கும் நிலையில், அவர்களுக்கு இடையிலான வெடிக்கும் மோதலே கதையின் முக்கிய அம்சமாக அமைகிறது.

இந்த மைய மோதலைத் தாண்டி, அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள், பரபரப்பான காட்சித் தொடர்கள், பிரம்மாண்டமான கலை இயக்கம் மற்றும் சூழலை உணர வைக்கும் காட்சியமைப்புகள் மூலம் ‘டாக்ஸிக்’ திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள மிகப்பெரிய உலகத்தையும் டிரெய்லர் வெளிப்படுத்துகிறது. ஒளிப்பதிவு, இருண்ட மற்றும் அடர்த்தியான உலகத்தை மேலும் வலுப்படுத்துவதுடன், கண்களைக் கவரும் வகையிலும் அமைந்துள்ளது. ஆக்‌ஷன், உணர்வு மற்றும் சிக்கலான கதாபாத்திர உறவுகளை ஒன்றிணைத்து, கீது மோகன்தாஸ் ஒரு பிரம்மாண்டமான சினிமா அனுபவத்தை உருவாக்கியிருப்பது டிரெய்லர் மூலம் தெரியவருகிறது.

ஆங்கிலம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள ‘டாக்ஸிக்’, இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும் வெளியாகவுள்ளது. இதன் மூலம் ஆக்‌ஷன், பரபரப்பு மற்றும் பிரம்மாண்டமான கதை சொல்லல் நிறைந்த இப்படத்தின் உலகம் பல்வேறு மொழி ரசிகர்களையும் சென்றடைய உள்ளது.

கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள “டாக்ஸிக்” ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ திரைப்படத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த் மற்றும் ஹுமா குரேஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். KVN Productions மற்றும் Monster Mind Creations நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படம், ஆகஸ்ட் 26, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.