Cinema

2K லவ்ஸ்டோரி திரை விமர்சனம்

கதாநாயகன் ஜெகவீர் மற்றும் கதாநாயகி மீனாட்சி கோவிந்தராஜன் சிறு வயது முதல் பள்ளிக்கூடத்தில் இருந்து கல்லூரி வரை இருவரும் ஒன்றாக படித்து வரும் நிலையில் அதன் பிறகு இருவரும் ஒன்றாக இணைந்து வெட்டிங் போட்டோகிராபி கம்பெனி ஒன்றை தொடங்குகிறார்கள்.

கதாநாயகன் ஜெகவீர் மற்றும் கதாநாயகி மீனாட்சி கோவிந்தராஜன் இவர்கள் எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாக இணைந்து செல்வார்கள் இவர்களை பார்க்கும் அனைவரும் இருவரும் காதலர்கள் என கூறுகிறார்கள்.

கதாநாயகன் ஜெகவீர் மற்றும் கதாநாயகி மீனாட்சி கோவிந்தராஜன் ஆனால் இவர்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பு மட்டுமே உள்ளது.

இப்படி உள்ள நிலையில் பவித்ரா என்பவரை கதாநாயகன் ஜெகவீர் காதலிக்க ஆரம்பிக்கிறார்.

கதாநாயகி மீனாட்சி கோவிந்தராஜனிடன் நெருங்கி பழகுவது நட்பு வைத்துக் கொள்வது என்பது பவித்ராவிற்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை.

இதனால் கதாநாயகன் ஜெகவீரிடம் கதாநாயகி மீனாட்சி கோவிந்தராஜனுடன் இருக்கும் நட்பை பவித்ரா விட வேண்டும் என கூறுகிறார்.

கதாநாயகன் ஜெகவீர் கதாநாயகி மீனாட்சி கோவிந்தராஜனுடன் நட்பை தொடரக்கூடாது என பவித்ரா கூற அதை செய்ய மறுக்கிறார்.

நட்புக்கும் காதலுக்கும் என்ன வித்தியாசம் என தெரியாமல் பவித்ரா கூறும் நிலையில் காதலுக்கும் நட்புக்கும் இடையே சிக்கித் தவிக்கிறார் கதாநாயகன் ஜெகவீர்.

இதற்கு அடுத்து என்ன ஆனது? கதாநாயகன் ஜெகவீர் காதலிக்கும் பவித்ராவுடன் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? சேரவில்லையா? கதாநாயகன் ஜெகவீர் காதலுக்கு கை கொடுத்தாரா? இல்லை நட்புக்கு கை கொடுத்தாரா? என்பதுதான் இந்த 2K லவ்ஸ்டோரி திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த 2K லவ் ஸ்டோரி திரைப்படத்தில் ஜெகவீர் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் ஜெகவீர் முடிந்த அளவுக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

கதாநாயகி மீனாட்சி கோவிந்தராஜன் அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.

சிங்கம்புலி, ஜெய பிரகாஷ், நந்தினி, பால சரவணன், ஜி.பி முத்து மற்றும் சிங்கம்புலி, ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி, லத்திகா பாலமுருகன், ஆகியோரின் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஒளிப்பதிவாளர் வி.எஸ் ஆனந்த கிருஷ்ணனின் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

இசையமைப்பாளர் டி இமானின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக அமைந்துள்ளது.

இசையமைப்பாளர் டி இமானின் பின்னணி இசை சுமாராக உள்ளது.

இந்த காலத்தில் உள்ள இளைஞர்களின் காதல், நட்பு அவர்கள் மேற்கொள்ளும் எமோஷனை மையமாக வைத்து திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் சுசீந்திரன்.

நல்ல கதையை கையில் எடுத்த இயக்குனர் திரைக்கதையில இன்னும் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம்.

ZEE5-ல் கிச்சா சுதீப் நடிப்பில், “மேக்ஸ்” படம், 15 பிப்ரவரி 7:30 PM-க்கு வெளியாகிறது, !

ZEE5, 2024 ஆம் ஆண்டின் மிகப்பெரிய கன்னட மாஸ் திரில்லரான “மேக்ஸ்” திரைப் படத்தை, 15 பெப்ரவரி 7:30 PM அன்று டிஜிட்டல் பிரீமியரில் வெளியிடுகிறது! இயக்குநர் விஜய் கார்த்திகேயா இயக்கியுள்ள “மேக்ஸ்” திரைப்படம், பரபர திரைக்கதையுடன், ஆக்சன் ரோலர்கோஸ்டர் அனுபவமாக உருவாகியுள்ளது. பாட்ஷா கிச்சா சுதீப் மிக சக்திவாய்ந்த மாஸ் அவதாரில் நடித்து அசத்தியுள்ளார் !

இந்த கதையானது தனி ஒருவனின் தைரியம், சர்வைவல் மற்றும் பழிவாங்கலைச் சுற்றி ஒரு பரபரப்பான திரை அனுபவத்தைத் தருகிறது. ஒவ்வொரு நொடியும் பரபரக்க வைக்கும், இப்படம் திரையரங்குகளில் பெரும் வெற்றியை பெற்றது. “மேக்ஸ்” படத்தை ZEE5 இல் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில், விரைவில் அனைவரும் கண்டு ரசிக்கலாம்.

பாட்ஷா சுதீப்புடன் இணைந்து, இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், சாம்யுக்தா ஹோர்னாட், ஸுக்ருதா வாகிளே, சுனில் மற்றும் அனிரூத் பட் போன்ற பல பிரபல நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேக்ஸ் படம் 2024 ஆம் ஆண்டின் மிக அதிக வருவாய் ஈட்டிய கன்னடப் படம் எனும் சாதனையை செய்துள்ளது. தற்போது ZEE5 இல் இப்படம் டிஜிட்டல் பிரீமியர் ஆகிறது.

“Max” திரைப்படத்தின் கதை, போலீஸ் இன்ஸ்பெக்டராக உள்ள அர்ஜூன் மகாக்ஷய் (கிச்சா சுதீபா) என்னும் கதாபாத்திரத்தைப் பற்றி பேசுகிறது. அவர் தனது பதவியேற்புக்கு, ஒரு நாள் முன் அந்த ஊருக்கு வருகிறார். சக்திவாய்ந்த அமைச்சர்களின் இரு இளம் பிள்ளைகள், அவர் பதவியேற்கும் காவல் நிலையத்தில் மர்மமாக இறந்துவிட்டதால், அர்ஜூன் தனது சக ஊழியர்களின் உயிரைக் காக்க, அரசியல்வாதிகளுக்கும் கேங்க்ஸ்டர்களுக்கும் எதிராக போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறான். அந்த ஒரு இரவில் நடைபெறும் அதிரடி திருப்பங்கள், பரபர சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை.

ZEE5 சார்பில் கூறப்பட்டதாவது:
“இந்த ஆண்டின் மிகப்பெரும் பிளாக்பஸ்டரான மேக்ஸ் திரைப்படத்தை, ZEE5 இல் பல மொழிகளில் அனைத்து பார்வையாளர்களுக்கும் கொண்டு வருவதில் மிகவும் உற்சாகமாக இருக்கின்றோம். கிச்சா சுதீப் மற்றும் இந்த படத்தின் திறமையான குழுவுடன் இணைந்ததில் பெரும் மகிழ்ச்சி. மேக்ஸ் ஒரு அதிரடி அனுபவத்தை தரும் படம், மேலும் இப்படம் பார்வையாளர்களை அதிரடி ஆக்சன் கதை, பரபர திரைக்கதை, மற்றும் சுதீப்பின் அருமையான நடிப்பு என மயக்குகிறது. திரையரங்குகளில் பெரும் வெற்றியை பெற்றதால், இப்படத்தை கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பார்வையாளர்களுக்கு கொண்டு செல்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்.”

கிச்சா சுதீப் கூறியதாவது..,
“மேக்ஸ் திரைப்படத்தை ZEE5-க்கு கொண்டு வருவது மிகுந்த மகிழ்ச்சி, குறிப்பாக திரையரங்கில் ரசிகர்களின் பேராதரவுக்குப் பிறகு, இப்போது டிஜிட்டலில் அனைவரிடமும் சென்று செருவது மகிழ்ச்சி. போலீஸ் இன்ஸ்பெக்டரான அர்ஜூன் மகாக்ஷய் வேடம் மிக மிக சுவாரஸ்யமாக இருந்தது, இது புத்திசாலித்தனத்துடன் கூடிய உணர்வுப்பூர்வமான கதை. படம் முழுதும் அதிரடியாக, பரபரப்பான தருணங்கள் மற்றும் வலிமையான திருப்பங்களுடன் ஒரு புது அனுபவமாக இருந்தது. ரசிகர்களின் உற்சாகமான வரவேற்பு மிகப்பெரும் மகிழ்ச்சியை தந்தது. இந்த திரைப்படம் ZEE5 மூலம் உலகமெங்கும் பல மொழிகளில் சென்று சேரவுள்ளது பெரு மகிழ்ச்சி.”

இயக்குனர் விஜய் கார்த்திகேயா கூறியதாவது…, “மேக்ஸ் திரைப்படத்தை உருவாக்கியது மிக அற்புதமானதாக இருந்தது, மேலும் இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு, எங்களின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்பதில் நான் பெருமைப்படுகிறேன், நாங்கள் உருவாக்க விரும்பியது, பார்வையாளர்களை அசத்தும் ஒரு பரபரப்பான, அதிரடியான உணர்வுப்பூர்வமான கதை . திரையரங்குகளில் கிடைத்த உற்சாக வரவேற்பைப் பார்த்தபோது, எங்கள் இலக்கை அடைந்ததாக உணர்ந்தோம். கிச்சா சுதீப்பின் அர்ஜூன் வேடம் மிக அசாதாரணமானது, மேலும் இந்த படத்தில் அனைத்து நடிகர்களும் அவர்களின் சிறந்த நடிப்பை தந்து, இந்த படத்தை மறக்க முடியாத அனுபவமாக மாற்றியுள்ளனர். ZEE5 இல் மேக்ஸ் பிரீமியர் மூலம், அனைத்து பார்வையாளர்களுக்கு இந்த திரில்லரின் அனுபவத்தை உணர்வார்கள் என்று நான் எதிர்பார்க்கின்றேன்.”

“மேக்ஸ்” திரைப்படத்தின் அதிரடி மற்றும் பரபரப்பு காட்சிகளை தவறவிடாதீர்கள் – ZEE5 இல் 15 பெப்ரவரி 7:30 PM அன்று வெளியாகும் “மேக்ஸ்”- திரைப்படத்தை கண்டு ரசியுங்கள் !

“இதயம் முரளி” பட டைட்டில் மற்றும் டீசர் வெளியீட்டு விழா!!

Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் 4 வது படைப்பாக, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும், “இதயம் முரளி” படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, தனியார் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் வெகு கோலாகலமாக நடைபெற்றது.

தமிழ் திரையுலகில் பிரம்மாண்டமாக நுழைந்து, முன்னணி நட்சத்திரங்களின் கூட்டணியில், தனுஷின் இட்லி கடை, சிவகார்த்திகேயனின் பராசக்தி, #STR49 படத்தினைத் தொடர்ந்து, 4 வது படைப்பாக, முழுக்க முழுக்க இளைஞர்கள் கொண்டாடும், ரொமான்ஸ் திரைப்படமாக, அதர்வா முரளி நடிப்பில் “இதயம் முரளி” படத்தைத் தயாரிக்கிறது தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures. “இதயம் முரளி” படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்குநராக அறிமுகமாகிறார்.

கல்லூரியில் நடந்த விழாவினில் இப்படத்தின் டைட்டில் டீசர் ஒளிபரப்பட்டபோது, ரசிகர்களின் உற்சாக கூச்சல் விண்ணைப் பிளந்தது.

தமிழ் சினிமாவில் கோலோச்சிய நடிகர் முரளியின் மறக்கமுடியாத பாத்திரம் இதயம் முரளி, அவரது மகன் அதர்வா நடிக்கும் படத்திற்கு, இதயம் முரளி தலைப்பிடப்பட்டு அறிவிக்கப்பட்டது, ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.

இப்படத்தில் பங்கு பெற்றுள்ள நடிகர்கள் குழு கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் அவர்களுடன் உரையாடி, பாடல்கள் பாடி, படத்தின் தகவல்களை பகிர்ந்து கொண்டு, விழாவை சிறப்பித்தனர்.

இவ்விழாவில் கலந்துகொண்ட

நடிகை மற்றும் தொகுப்பாளணி ஏஞ்சலினா பேசியதாவது…
தொகுப்பாளிணியாக இருப்பதை விட இப்போது நடிப்பது பிடித்திருக்கிறது. இது எனக்கு மிகவும் முக்கியமான படம். இந்த வாய்ப்பைத் தந்த ஆகாஷுக்கு நன்றி. இப்படத்தின் ஷீட்டிங்கிற்கு நானும் அமெரிக்கா செல்கிறேன் என நினைக்கிறேன். இப்போது தான் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த டீசர் அனைவருக்கும் பிடித்துள்ளது என நம்புகிறேன். அதே போல் படமும் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகர் ரக்‌ஷன் பேசியதாவது…
ஆகாஷ் தமிழ் சினிமாவில் புயல் போல நுழைந்து, பெரிய பெரிய படங்கள் செய்து வருகிறார். உண்மையில் அவர் தயாரிப்பாளர் என்பதை விட இயக்குநர் தான். அவர் படத்தில் நானும் இருப்பது மகிழ்ச்சி. இந்த டீசரே கலக்கலாக இருக்கிறது. படத்தில் நானும் அதர்வாவுடன் அமெரிக்கா செல்வேன். இந்தப்படம் இளைஞர்கள் கொண்டாடும் படமாக இருக்கும்.

நடிகை பிரக்யா நாக்ரா பேசியதாவது…
இப்படத்தில் அதர்வா முரளி அவர்களுடன் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவரது அப்பாவின் புகழ்பெற்ற கதாபாத்திரம் இப்படத்தின் தலைப்பாக அமைந்தது மகிழ்ச்சி. என்னை இப்படத்திற்கு தேர்ந்தெடுத்ததற்கு இயக்குநர் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் அவர்களுக்கு நன்றி.

நடிகை கயாது லோஹர் பேசியதாவது…
தமிழ் சினிமா ரசிகர்கள் கொடுத்து வரும் வரவேற்பும், அன்பும், மிகப்பெரிய மகிழ்ச்சியை தருகிறது. இந்த அன்புக்கு பதிலாக, நல்ல படங்கள் மூலம் அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவேன். இது தான் நான் ஒப்பந்தாமகிய முதல் தமிழ்ப்படம், இந்த வாய்ப்பை வழங்கிய ஆகாஷுக்கு நன்றி. இந்தப்படத்திற்காக உங்களைப் போல நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்.

பரிதாபங்கள் புகழ் சுதாகர் மற்றும் டிராவிட் பேசியதாவது…
ஒன் சைட் லவ் இல்லாத ஆளே கிடையாது, சிலருக்கு ஒன் சைட் லவ் கடைசி வரை ஒன் சைடாகவே இருந்து விடும், பலர் அந்த கட்டத்தை தாண்டி விடுவார்கள். ஆனால் அந்த உணர்வு அலாதியானது. நாங்கள் இருவரும் இந்தப்படத்தில் நாயகனின் நண்பர்களாக வருகிறோம். இந்த வாய்ப்பைத் தந்த ஆகாஷ் பிரதருக்கு நன்றி. இந்த ஷீட்டிங் எப்போதும் ஜாலியாக இருக்கும். ஷீட்டிங் எப்போது நடக்கும் என எதிர்பார்ப்போடு இருப்போம். ஆகாஷ் மிகத் திறமையானவர். எங்களுக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

பாடலாசிரியர் விவேக் பேசியதாவது…
இந்த டீம் மிக அற்புதமான டீம். இவர்களுடன் வேலை பார்த்தது மறக்க முடியாத அனுபவம். ஆகாஷ் மிகத் திறமையான இயக்குநர். அவரும் தமனும் சேர்ந்து அட்டகாசமான ஒரு ஆல்பத்தை உருவாக்கியிருக்கிறார்கள். தமன் பிரதர் எனக்கு எப்போதும் அட்டகாசமான பாடல்கள் தந்துள்ளார். அவருக்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். அதர்வாவுடன் வேலை பார்ப்பதை பெருமையாக கருதுகிறேன். இப்படத்தில் நிறைய திறமையாளர்கள் இருக்கிறார்கள், அவர்களுடன் பணியாற்றியது மகிழ்ச்சி. இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

பாடகி, நடிகை ஜொனிடா காந்தி பேசியதாவது…
நான் நடிக்கும் முதல் திரைப்படம் இது. என்னை நடிக்க ஊக்கப்படுத்திய ரசிகர்களுக்கு நன்றி. இப்படத்தின் டீசர், மிக அட்டகாசமாக வந்துள்ளது. எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இயக்குநர் ஆகாஷுடன் வேலை பார்க்க ஆவலாக உள்ளேன். இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகை நிஹாரிகா பேசியதாவது…
இயக்குநர் ஆகாஷுடம் தான், என் நடிப்பு பற்றி கேட்க வேண்டும். டீசர் அனைவருக்கும் பிடித்துள்ளது என நம்புகிறேன். இப்படம் நட்பு, காதல் பற்றியது என் கதாப்பாத்திரம் ரசிகர்களுக்கு பிடிக்கும். இந்த டீமுடன் வேலை பார்ப்பது மிக மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி.

நடிகை ப்ரீத்தி முகுந்தன் பேசியதாவது…
ரசிகர்கள் எனக்கு தந்து வரும் அன்புக்கு நன்றி. இப்படத்தின் கதை பற்றி இப்போது சொல்ல மாட்டேன், உங்களுக்கு நிறைய ஆச்சரியம் உள்ளது. நம்முடைய கல்லூரி காலங்களில் நாம் நிறைய பேரை சந்திப்போம், பல அனுபவங்கள் இருக்கும், அதை ஞாபகப்படுத்தும் படமாக இப்படம் இருக்கும். இந்த டீம் ஃபேமிலி மாதிரி, ஷூட்டிங் மிக ஜாலியாக இருக்கிறது. படம் மிக நன்றாக இருக்கும் நன்றி.

இசையமைப்பாளர் தமன் பேசியதாவது,..
நான் நடிப்பேன் என நினைக்கவில்லை, எனக்கு ஜோடி நிஹாரிகா என சொல்லி என்னை இம்ப்ரெஸ் பண்ணி விட்டார் ஆகாஷ். கௌதம் மேனன், ஜீவா கலந்த கலவையாக ஆகாஷ் உள்ளார். கண்டிப்பாக ஜாலியான படமாக இருக்கும். ரொம்ப நல்ல லவ் ஸ்டோரி. உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். நன்றி.

இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் பேசியதாவது…,
தயாரிப்பபை விட இயக்கம் தான் ஈஸி, சின்ன வயதிலிருந்து எனக்கு இயக்குநராகும் ஐடியா இருந்தது. ரசிகர்களை உற்சாகப்படுத்த வேண்டுமென உருவாக்கிய திரைக்கதை இது. இப்படம் நம் காதல், நட்பை ஞாபகப்படுத்தும். இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட அனைவருக்கும் நன்றி. ஒரு அழகான காதல் படமாக இருக்கும் நன்றி.

நடிகர் அதர்வா பேசியதாவது…,
ஒன் சைட் லவ் எப்போதும் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம், என் அப்பாவின் கொண்டாடப்பட்ட டைட்டில் இதயம் முரளி, என்னுள்ளும் ஒரு இதயம் முரளி இருக்கிறான், எல்லோருக்குள்ளும் ஒரு இதயம் முரளி இருக்கிறான், அதைக் கொண்டாடும் வகையில் மிக அழகான காதல் படமாக இருக்கும். இயக்குநர் ஆகாஷுக்கு நன்றி. இதயம் முரளி என்பது மிகவும் உணர்வுப்பூர்வமான விசயம், ஆகாஷ் மிகப்பெரிய தயாரிப்பாளர், அவரை ஒரு இயக்குநராகத் தான் தெரியும். இந்தக்கதையை 2017ல் சொன்னார், அப்போது அது நடக்கவில்லை, பின்பு தயாரிப்பாளராக மாறிவிட்டார், அதன் பிறகு இப்போது இந்தப்படம் செய்யலாம் என்றார். மிக மகிழ்ச்சியாக இருந்தது. கண்டிப்பாக இப்படம் ஒரு நல்ல படமாக இருக்கும் நன்றி.

காதலின் மெல்லிய உணர்வுகளை கொண்டாடும் ஒரு படைப்பாக உருவாகி வரும் இப்படத்தின் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது.

நடிகர்கள் : அதர்வா , பிரீத்தி முகுந்தன் , கயாது லோஹர் , நட்டி , தமன் ,நிஹாரிகா , ரக்சன் , திராவிட் , ஏஞ்சலின் , பிரக்யா நாக்ரா , சுதாகர் , யாஷஸ்ரீ

தொழில்நுட்பக் குழு:

தயாரிப்பாளர், இயக்குனர் – ஆகாஷ் பாஸ்கரன்
இசை – தமன் S
ஒளிப்பதிவாளர் – CH சாய்
படத்தொகுப்பாளர் – பிரதீப் இ ராகவ்
தயாரிப்பு வடிவமைப்பாளர் – எம்.ஆர்.கார்த்திக் ராஜ்குமார்
வசனங்கள் – ரமணகிரிவாசன், ஆகாஷ் பாஸ்கரன், திராவிடச் செல்வம்
பாடல் வரிகள் – விவேக்
நடன இயக்குனர் – ஷோபி
ஆடை வடிவமைப்பாளர் – பல்லவி சிங்
ஸ்டில்ஸ் – ஜெய்குமார் வைரவன்
போஸ்ட் புரொடக்‌ஷன் மேற்பார்வையாளர் – குணசேகர் எம்
விளம்பர வடிவமைப்பாளர் – கபிலன்

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி நடித்திருக்கும் ‘வா வாத்தியார்’ எனும் படத்தில் இடம்பெற்ற ‘உயிர் பத்திக்காம..’ எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘வா வாத்தியார்’ எனும் படத்தில் கார்த்தி, சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஜி. எம். சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.‌ கலை இயக்கத்தை டி. ஆர். கே. கிரண் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை வெற்றி கையாண்டிருக்கிறார். அனல் அரசு சண்டை காட்சிகளை அமைத்திருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் டீஸர் வெளியாகி ஏழு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்தது. இந்நிலையில் ‘வா வாத்தியார்’ படத்தில் இடம்பெற்ற ‘ உயிர் பத்திக்காம..’ எனத் தொடங்கும் முதல் பாடலும் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத பின்னணி பாடகர் விஜய் நாராயண்- பின்னணி பாடகி ஆதித்யா ரவீந்திரன் – பின்னணி பாடகரும், இசையமைப்பாளருமான சந்தோஷ் நாராயணன் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். தமிழ் திரையிசையுலகின் ட்ரெண்ட்செட்டரான சந்தோஷ் நாராயணனின் வசீகரிக்கும் இசையில் உருவான இந்த பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.

பிரபாஸ் படத்தில் இணைந்த அனுபம் கேர்…..

‘ரெபல் ஸ்டார்’ பிரபாஸ் – இயக்குநர் ஹனு ராகவபுடி – மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படத்தில் இணைந்த பாலிவுட் ஜாம்பவான் அனுபம் கேர்

ப்ளாக் பஸ்டர் ஹிட் திரைப்படங்களான சலார் மற்றும் கல்கி 2898 கிபி ஆகிய படங்களின் மூலம் வெற்றியின் உச்சத்தில் இருக்கும் ‘ரெபல் ஸ்டார் ‘ பிரபாஸ் தற்போது படைப்பாற்றல் மிக்க இயக்குநரான ஹனு ராகவபுடி இயக்கும் பான் இந்திய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்திய அளவில் புகழ்பெற்ற பட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படம்- வாழ்க்கையை விட மிகப்பெரிய கூறுகள் நிறைந்த பிரம்மாண்டமான படைப்பாக இருக்கும் என உறுதி அளிக்கிறது.

இந்த திரைப்படத்தில் பாலிவுட் ஜாம்பவான் அனுபம் கேர் ஒரு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.‌ இதனை நடிகரே பகிர்ந்து கொண்டுள்ளார். தான் ஏற்று நடிக்கும் கேரக்டர்களை கவனமாக தேர்வு செய்யும் அனுபம் கேர், இந்த படத்தின் ஸ்கிரிப்ட்டை படித்துவிட்டு ‘அற்புதம்!’ எனக் கூறியிருக்கிறார். அத்துடன் பிரபாஸுடன் திரையை பகிர்ந்து கொள்வதில் உற்சாகமாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இயக்குநர் ஹனு ராகவபுடியின் திறமையையும் அவர் பாராட்டினார். இதைவிட வாழ்க்கையில் வேறு என்ன கேட்க முடியும்? என்றும் அனுபம் கேர் கேட்டிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில்..
” அறிவிப்பு : இந்திய சினிமாவின் #பாகுபலியுடன் எனது 544 வது பெயரிடப்படாத படத்தில் இணைந்திருப்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரே ஒரு #பிரபாஸ், நம்ப முடியாத திறமை மிக்க ஹனு ராகவபுடி இப்படத்தை இயக்கியுள்ளார். அத்துடன் மைத்ரி மூவி மேக்கர்ஸின் அற்புதமான குழுவினரால் தயாரிக்கப்பட்டுள்ளது. எனது அருமை நண்பரும், புத்திசாலியுமான ஒளிப்பதிவாளர் #சுதீப் சாட்டர்ஜி தான் இதில் பணியாற்றுகிறார். ‘இது ஒரு அற்புதமான கதை. வாழ்க்கையில் வேறு என்ன வேண்டும்? நண்பர்களே! வெற்றி பெறுங்கள்! ஜெய் ஹோ!” என பதிவிட்டிருக்கிறார்.

‘ரெபல் ஸ்டார்’ பிரபாஸ்- ஹனு ராகவபுடி – மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் உருவாகும் முதல் படம் இது.

1940களில் பின்னணியில் அமைக்கப்பட்ட இந்த வரலாற்று புனைவு கதை / மாற்று வரலாறு. போர் மட்டும் தான்…உலகத்திலிருந்து மறைக்கப்பட்ட மற்றும் புதைக்கப்பட்ட அநீதிகளுக்கும், மறக்கப்பட்ட உண்மைகளுக்கும் ஒரே தீர்வு என்று நம்பிய சமூகத்திலிருந்து… அதன் நிழல்களிலிருந்து… எழுந்த ஒரு போர் வீரனின் கதை.‌

இப்படத்தில் பிரபாஸுற்கு ஜோடியாக நடிகை இமான்வி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் முன்னாள் பிரபல நடிகர்கள் மிதுன் சக்கரவர்த்தி- ஜெயப்பிரதா ஆகியோரும் முக்கியமான வேடங்களில் நடிக்கின்றனர். சர்வதேச தரத்திலான தயாரிப்பு மற்றும் உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்துடன் அதிக பொருட் செலவில் இப்படம் தயாராகிறது.

நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் ஆகியோர் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறார்கள். சுதீப் சட்டர்ஜி ISC ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் கவனிக்க, தயாரிப்பு வடிவமைப்பை அனில் விலாஸ் ஜாதவ் கையாளுகிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

நடிகர்கள் :
பிரபாஸ் , இமான்வி, மிதுன் சக்கரவர்த்தி, ஜெயப்பிரதா மற்றும் பலர்

தொழில்நுட்ப குழு :

எழுத்து & இயக்கம் : ஹனு ராகவபுடி
தயாரிப்பு நிறுவனம் : மைத்ரி மூவி மேக்கர்ஸ்
தயாரிப்பாளர்கள் : நவீன் யெர்னேனி – ஒய். ரவிசங்கர்
ஒளிப்பதிவு : சுதீப் சட்டர்ஜி ISC
இசை : விஷால் சந்திரசேகர்
தயாரிப்பு வடிவமைப்பு : அனில் விலாஸ் ஜாதவ்
படத்தொகுப்பு : கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ்
பாடலாசிரியர் : கிருஷ்ண காந்த்
ஆடை வடிவமைப்பாளர்கள் : ஷீத்தல் இக்பால் சர்மா – டி . விஜய் பாஸ்கர்
விளம்பர வடிவமைப்பு : அனில் – பானு
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் “ரெட்ரோ”

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் “ரெட்ரோ” படத்தின் “கண்ணாடி பூவே” ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது

முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா நடிப்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் “ரெட்ரோ” படத்திலிருந்து, அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்நிலையில் ரசிகர்களை மனங்களை கொள்ளை கொள்ளும் அழகான மெலோடி பாடலாக “கண்ணாடி பூவே” ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

இப்பாடலை, பாடலாசிரியர் விவேக்கின் அற்புதமான வரிகளில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து பாடியுள்ளார். இப்பாடல் வெளியானவுடனே, இசை ரசிகர்களின் இதயங்களை கவர்ந்து பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

சூர்யா நாயகனாக நடிக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமிழ், பிரேம்குமார், ரம்யா சுரேஷ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஷபிக் முஹம்மத் அலி மேற்கொண்டிருக்கிறார்.

ஆக்சன் கலந்த ரொமாண்டிக் என்டர்டெய்னராக தயாராகியுள்ள இந்த திரைப்படத்தை 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோதிகா – சூர்யா ஆகியோருடன் ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் மற்றும் கார்த்திகேயன் சந்தானம் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அந்தமான் ,ஊட்டி, கேரளா, சென்னை ஆகிய இடங்களில் நான்கு கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இப்படம் உலகமெங்கும் வரும் மே 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

விக்ரம் பிரபு நடிக்கும் ‘லவ் மேரேஜ்’

அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லவ் மேரேஜ்’ எனும் திரைப்படத்தில் விக்ரம் பிரபு, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்முட்டி படப் புகழ் நடிகை சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜ ராஜ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சத்யராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

தமிழ் திரை இசையின் கரண்ட் சென்சேஷன் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கும் இந்த திரைப்படத்திற்கு மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் . படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, தயாரிப்பு வடிவமைப்பை எம். முரளி கவனிக்கிறார். கிராமிய பின்னணியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய இந்த திரைப்படத்தை கடந்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘ஸ்டார்’ படத்தை தயாரித்த ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் ( Rise East Entertainment) நிறுவனம் – அஸ்யூர் பிலிம்ஸ் ( Assure Films) நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கிறது. இந்த திரைப்படம் எதிர்வரும் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது.

இயக்குநர் சண்முக பிரியன் – ‘நோட்டா’, ‘ எனிமி ‘ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஆனந்த் ஷங்கரிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர். மற்றும் இயக்குனர் ரா. கார்த்திக் இயக்கத்தில் உருவான நித்தம் ஒரு வானம் திரைப்படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

இப்படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” கிராம பின்னணியில் அனைவரது மனதையும் கவரும் வகையில் குடும்ப பொழுதுபோக்கு படமாக ‘லவ் மேரேஜ்’ தயாராகிறது. தாமதமான திருமணம் என்ற சூழலில் போராடும் ஆண்களின் நகைச்சுவையான மற்றும் பார்வையாளர்களுடன் எளிதில் தொடர்பு கொள்ளக்கூடிய சம்பவங்களை மையமாகக் கொண்டு படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது”என்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கதையின் நாயகன்- நாயகி மற்றும் கேரக்டர்களின் தோற்றம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.‌

ஃபேண்டஸி ஹாரர் காமெடி திரைப்படம் “ஹவுஸ் மேட்ஸ்” ஃபர்ஸ்ட் லுக்…..

அனைத்து தரப்பும் ரசிக்கும் படியான
புதிய ஃபேண்டஸி ஹாரர் காமெடி திரைப்படம் “ஹவுஸ் மேட்ஸ் “

உலகம் முழுவதும் ஃபேண்டஸி ஹாரர் காமெடி திரைப்படங்களுக்கு அனைத்து தரப்பு ரசிகர்களும் விரும்பி திரையரங்குகளுக்கு குடும்பத்துடன் விசிட் அடிப்பது வழக்கம். அதற்கு கடந்த சில வருடங்களில் வந்து வெற்றி பெற்ற படங்களை நாம் வரிசையாக கூறலாம் , அவ்வரிசையில் இப்போது முற்றிலும் புதிய களத்துடன் திரைக்கு வர இருக்கும் திரைப்படம் “ஹவுஸ் மேட்ஸ்” (HOUSE MATES).

இத்திரைப்படத்தில் கதையின் நாயகனாக தர்ஷன் நடிக்கிறார் , இவர் ஏற்கனவே கனா , தும்பா போன்ற படங்களில் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்தவர் . விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பெரும்பான்மையாக அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது . இவருடன் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் காளி வெங்கட் அவர்களும் நடித்திருக்கிறார். இவர்களுடன் இணைந்து அர்ஷா சாந்தினி பைஜூ , வினோதினி , தீனா , அப்துல் லீ , மாஸ்டர் ஹென்ரிக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

இத்திரைப்படத்தை T. ராஜவேல் எழுதி , இயக்கி இருக்கிறார். இவர் இயக்குனர் அஜய் ஞானமுத்து அவர்களிடம் இணை இயக்குனர் ஆகவும் , சமீபத்தில் வந்து பெரும் வெற்றி பெற்ற “DEMONTE COLONY 2 “ படத்தின் எழுத்தாளர் குழுவில் பணியாற்றி இருந்தார் என்பதும் குறிப்படத்தக்கது . இத்திரைப்படத்தை PLAYSMITH STUDIOS நிறுவனம் சார்பில் S.விஜய பிரகாஷ் அவர்கள் தயாரித்து உள்ளார் .இவருடன் இணைந்து இயக்குனர் S.P.சக்திவேல் (SOUTH STUDIOS ) அவர்கள் படைப்பு தயாரிப்பாளராக களம் கண்டுள்ளார். M.S.சதீஷ் அவர்கள் ஒளிப்பதிவு இயக்குனராக பணியாற்றிஉள்ளார் . நேரம் , பிரேமம் படங்களுக்கு இசையமைத்த ராஜேஷ் முருகேசன் இத்திரைப்படத்துக்கு இசையமைத்துள்ளார் .

படத்தின் மையக்கரு ஒரு அபார்ட்மெண்டை சுற்றிலும் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பாகவும் , மிடில் கிளாஸ் குடும்பங்களின் அன்றாட உணர்வுகளை பிரதி பலிக்கும் வகையிலும் , *படம் முழுக்க முழுக்க ஃபேண்டஸி, ஹாரர் என அனைவரும் விரும்பி பார்க்கும் வகையிலும் , குடும்பமாக சென்று ரசிக்கும் வகையிலும் *படமாக்கப்பட்டுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது.

தற்போது படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன .கோடை விடுமுறையில் படம் திரைக்கு வரும் என படக்குழு தெரிவித்துள்ளது .

கல்யாண் K ஜெகன் இயக்கத்தில், “டார்க்”

டாடா புகழ் இயக்குநர் கணேஷ் K பாபு கதையில், இயக்குநர் கல்யாண் K ஜெகன் இயக்கத்தில், “டார்க்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது !!

MG STUDIOS & FiveStar தயாரிப்பில், டாடா இயக்குநர் கணேஷ் K பாபு கதையில் உருவாகியுள்ள “டார்க்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது !!

MG STUDIOS சார்பில் தயாரிப்பாளர் APV. மாறன் மற்றும் FiveStar நிறுவனம் சார்பில் செந்தில் ஆகியோருடன் இணைந்து டாடா புகழ் இயக்குநர் கணேஷ் K பாபு, கதை எழுதி தயாரிக்க, இயக்குநர் கல்யாண் K ஜெகன் திரைக்கதை, இயக்கத்தில், அறிமுக நடிகர் அஜய் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள “டார்க்” திரைப்படத்தின், அதிரடியான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.

இளைஞன் ஒருவனுக்கு ஏற்படும் அமானுஷ்ய விசயங்களும் அதைத்தொடர்ந்து நடக்கும் சம்பவங்களும் தான் இப்படத்தின் கதை.

ரசிகர்களை இருக்கை நுனியில் இருத்தி வைக்கும், அதிரடி திருப்பங்களுடன் கூடிய சைக்கலாஜிகல் ஹாரர் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது.

காமெடி பேய்ப்படங்களுக்கு மத்தியில், மாறுபட்ட களத்தில், ஒரு அதிரடியான அனுபவம் தரும் படமாக, இப்படத்தை உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் கல்யாண் K ஜெகன்.

அஜய் கார்த்திக் நாயகனாக அறிமுகமாகியுள்ள இப்படத்தில், நடிகர் நேத்திரன் மகள் அஞ்சனா நாயகியாக நடித்துள்ளார். நட்டி நட்ராஜ் , இயக்குநர் கே. பாக்யராஜ் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் VTV கணேஷ், இந்துமதி, சிபி ஜெயக்குமார், அர்விந்த் ஜானகிராமன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

பெரும் பொருட்செலவில் புதுமையான படைப்பாக, பல வெற்றிப்படங்களைத் தந்த FiveStar நிறுவனம் சார்பில் MG STUDIOS APV. மாறன் டாடா புகழ் இயக்குநர் கணேஷ் K பாபு இணைந்து தயாரித்துள்ளனர்.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில், இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், படத்தினை திரைக்கு கொண்டு வரும் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் நிலையில், விரைவில் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.

தொழிழ் நுட்ப குழு விபரம்

தயாரிப்பு நிறுவனம் – MG STUDIOS
தயாரிப்பு – APV. மாறன், கணேஷ் K பாபு.
இயக்கம் – கல்யாண் K ஜெகன்
கதை – கணேஷ் K பாபு.
ஒளிப்பதிவு – ரவி சக்தி
இசை அமைப்பாளர் – மனு ரமீசன்
எடிட்டர் – கதிரேஷ் அழகேசன்
கலை இயக்கம் – சண்முக ராஜா
நிர்வாக தயாரிப்பு – மீனா அருணேஷ்
ஒலி வடிவமைப்பு – அருணாசலம் சிவலிங்கம்
ஸ்டன்ட் – நைஃப் நரேன்
டிசைன்ஸ் – விக்ராந்த்
மேக்கப் – முகம்மத்
ஸ்டில்ஸ் – குமரேசன்
சிஜி – NxGen Media
மக்கள் தொடர்பு – நிகில் முருகன் & திருமுருகன்

‘டிராகன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தயாராகி, வரும் 21ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘டிராகன்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.

‘ஓ மை கடவுளே’ புகழ் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘டிராகன்’ திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கே. எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், வி ஜே சித்து, ஹர்ஷத் கான், மரியம் ஜார்ஜ், இந்துமதி மணிகண்டன், தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருக்கிறார். இன்றைய இளைய தலைமுறையினரின் வாழ்வியலை மையப்படுத்திய இத்திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். அர்ச்சனா கல்பாத்தி கிரியேட்டிவ் புரொடியூசராக பணியாற்றியிருக்கிறார்.

படத்தின் முன்னோட்டம் வெளியானதை தொடர்ந்து சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் கிரியேட்டிவ் புரொடியூசர் அர்ச்சனா கல்பாத்தி, இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, இயக்குநர்-நடிகர் பிரதீப் ரங்கநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். வருகை தந்திருந்த பத்திரிகையாளர்களை ஏஜிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரங்கராஜ் வரவேற்றார்.

இதனைத் தொடர்ந்து கிரியேட்டிவ் புரொடியூசர் அர்ச்சனா கல்பாத்தி பேசுகையில், ”எங்கள் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘திருட்டுப்பயலே’ படத்திலிருந்து தற்போது உருவாகி இருக்கும் ‘டிராகன்’ திரைப்படம் வரை தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து ஊடகங்களுக்கும், முதலில் எங்களின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ‘டிராகன்’ எங்களுக்கு ஒரு முக்கியமான படம். என்னுடைய ஃபேவரைட்டான படமும் கூட என்று சொல்லலாம். இந்தப் பயணம் முழுவதும் மகிழ்ச்சியாக இருந்தது. பிரதீப் ரங்கநாதனுடன் இரண்டாவது முறையாக இணைந்திருக்கிறோம். இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவுடன் முதல் முறையாக பணியாற்றி இருக்கிறோம். நல்லதொரு உள்ளுணர்வுடன் டிராகனை தயாரித்திருக்கிறோம். படத்தின் முன்னோட்டத்தை பார்த்திருப்பீர்கள். இதைவிட படத்தில் நிறைய நல்ல அம்சங்கள் இருக்கின்றன. படத்தைப் பார்த்து அனைவரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து பேசுகையில், ”தமிழில் இது என்னுடைய இரண்டாவது படம். ஓ மை கடவுளே படத்திற்குப் பிறகு ஐந்தாண்டுகள் கழித்து மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறேன்.

‘ஓ மை கடவுளே’ படத்திற்கு ஊடகங்கள் வழங்கிய ஆதரவு காரணமாக அந்த படம் வசூல் ரீதியாக வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்திற்குப் பிறகு நான் தெலுங்கு திரையுலகில் பணி புரிந்தேன். மீண்டும் இங்கு வந்து இப்படத்தை இயக்கி இருக்கிறேன்.

‘ஓ மை கடவுளே’ படத்தில் சமூக பொறுப்புடன் கூடிய விஷயங்கள் இருந்தது போலவே, சமூக பொறுப்புடன் ‘டிராகன்’ திரைப்படத்திலும் பல விஷயங்களை சொல்லி இருக்கிறோம். ஒரு இயக்குநராக ‘டிராகன்’ படத்தில் என்ன சொல்ல வந்திருக்கிறோம் என்பதில் பத்து சதவீதம் தான் முன்னோட்டத்தில் இடம் பிடித்திருக்கிறது. திரையரங்கத்திற்கு வருகை தரும் ரசிகர்களுக்கு எதிர்பாராத வகையில் நல்லதொரு அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதற்காக ஏனையவற்றை மறைத்திருக்கிறோம்.

நான் சொன்ன கதையை நம்பி ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் கிரியேட்டிவ் புரொடியூசர் அர்ச்சனா மேடம் ஆகியோர் வாய்ப்பளித்திருக்கிறார்கள். அதற்காக முதலில் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌ இந்த படத்தை உருவாக்குவதற்கு எனக்கு முழு சுதந்திரத்தை வழங்கினார்கள். நான் சொல்ல நினைத்ததை திரையில் உருவாக்குவதற்கு ஆதரவளித்த அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

படத்தின் நாயகனான பிரதீப் ரங்கநாதனுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் இருவரும் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்கள் என்று அனைவருக்கும் தெரியும். இந்த படத்திற்கான அடித்தளத்தை பத்தாண்டுகளுக்கு முன் நாங்கள் பேசி இருக்கிறோம். அதன் பிறகு அது குறித்து நிறைய கனவு கண்டோம். இன்று அதனை திரையில் கொண்டு வந்திருக்கிறோம் இதற்காக நாங்கள் எங்களை தகுதிப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

பிரதீப் ரங்கநாதன் எனும் என்னுடைய நண்பனை இந்த திரைப்படத்தில் நான் இயக்கவில்லை. ‘லவ் டுடே’ எனும் நூறு கோடி ரூபாய் வசூல் செய்த நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதனை தான் நான் இயக்கியிருக்கிறேன். இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்று நம்புகிறேன். இருவரும் நண்பர்கள் என்ற எல்லையை கடந்து தொழில் ரீதியாக நேர்த்தியாக உழைத்திருக்கிறோம். அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் என உறுதியாக நம்புகிறேன். ரசிகர்களுடன் திரையரங்கத்தில் சந்திப்போம்,” என்றார்.

இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் பேசுகையில், ”திரையுலகில் ஊடகங்களும் மக்களும் எனக்கு வழங்கியிருக்கும் இந்த இடத்தை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். இதற்காக ஊடகத்தினருக்கும் மக்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

‘லவ் டுடே’ படத்திற்குப் பிறகு என்ன மாதிரியான கதைகளை தேர்வு செய்வது என்பதில் குழப்பம் இருந்தது. ஏனெனில் என் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதுபோன்ற தருணத்தில் தான் எனக்கு ‘டிராகன்’ படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஏஜிஎஸ் நிறுவனத்துடன் இரண்டாவது முறையாக இணைந்து பணியாற்றுகிறேன். ‘லவ் டுடே’ படத்தின் மூலம் என்னை கதையின் நாயகனாக ஏஜிஎஸ் நிறுவனம் தான் அறிமுகப்படுத்தியது. அதற்காக அந்த நிறுவனத்திற்கு நான் என்றென்றும் நன்றியை தெரிவித்துக் கொண்டே இருப்பேன்.

‘ஓ மை கடவுளே’ எனும் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணைந்து, அவருடைய இரண்டாவது படத்தில் பணியாற்றியது மகிழ்ச்சியை அளிக்கிறது. இதற்கு பிறகு தான் என்னுடைய 10 ஆண்டுகால நண்பரின் இயக்கத்தில் நடிக்கிறேன் என சொல்லலாம்.

நாங்கள் இருவரும் நட்பையும், தொழிலையும் தனித்தனியாக பிரித்து வைத்து தான் பழகுகிறோம். அதனால் நட்பு என்றால் நட்பு …! வேலை என்றால் வேலை..! இதில் எந்த குறுக்கீடும் இருக்காது. இந்தப் படம் அற்புதமாக வந்திருக்கிறது. தொடர்ந்து அனைத்து தரப்பினரின் ஆதரவும் கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன்,” என்றார்.

‘டிராகன் ‘ படத்தின் முன்னோட்டத்தில் இடம்பெறும் காட்சிகளில் இளமை குறும்பு – கல்லூரியில் சீனியர் மாணவர்களின் அட்ராசிட்டி – நாயகனின் கெத்து – கௌதம் வாசுதேவ் மேனனின் நடனம்- மிஷ்கினின் நடிப்பு- அனுபமா பரமேஸ்வரனின் கவர்ச்சி – கயாடு லோஹரின் காதல் பேசும் கண்கள்- என ரசிக்கும் படியான காட்சிகள் ரசனையுடன் இடம் பிடித்திருப்பதால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது. அத்துடன் 21ம் தேதியன்று வெளியாகும் இந்த திரைப்படத்தினை ‘முதல் நாள் முதல் காட்சி’யிலேயே பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.