Breaking
March 6, 2025

Cinema

சிவகார்த்திகேயன் தொடங்கி வைத்த ‘காளிதாஸ் 2’

2019 ஆம் ஆண்டில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், பரத் நடிப்பில் வெளியான ‘காளிதாஸ்’. காளிதாஸ் படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து தற்போது ‘காளிதாஸ் 2’ படத்தின் தொடக்க விழா, பூஜையுடன் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர்கள் லலித் குமார்- செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ, டி. சிவா – அம்மா கிரியேஷன்ஸ், கதிரேசன்- ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ், அருண் விஸ்வா- சாந்தி டாக்கீஸ், அம்பேத்குமார்- ஒலிம்பியா மூவிஸ், சினிஷ்- சோல்ஜர் ஃபேக்டரி, கருணா மூர்த்தி- ஐங்கரன் இன்டர்நேஷனல், குமார்- லார்க் ஸ்டுடியோஸ், தேவராஜு மற்றும் ஃபைவ் ஸ்டார் கல்யாண், விநியோகஸ்தர்கள் அழகர்சாமி, அரவிந்த் – ஆருத்ரா பிலிம்ஸ், ‘டாடா’ பட இயக்குநர் கணேஷ் பாபு, இயக்குநர் கே. கல்யாண், ‘டார்க்’ பட இயக்குநர் ஜெகன், ஒளிப்பதிவாளர்கள் பாலசுப்பிரமணியம், வேல்ராஜ், சக்தி, சண்டை பயிற்சி இயக்குநர் பாண்டியன், இணை இயக்குநர் ஆதிஷ்.. உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

‘காளிதாஸ்’ படத்தை தொடர்ந்து ‘காளிதாஸ் 2’ படத்தையும் இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்குகிறார்.‌ இதில் பரத் மற்றும் அஜய் கார்த்தி நடிக்கிறார்கள். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைக்கிறார். துரைராஜ் கலை இயக்கத்தையும், புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணிகளையும் கவனிக்கிறார்கள். நிர்வாக தயாரிப்பை பழனியப்பன் மேற்கொள்கிறார். இந்த திரைப்படத்தை ஸ்கை பிச்சர்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் செந்தில் மற்றும் தயாரிப்பாளர் யோகேஸ்வரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இவர் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற ‘பார்க்கிங்’, ‘கருடன்’, ‘மகாராஜா’ ஆகிய திரைப்படங்களை தமிழகம் முழுவதும் வெளியிட்டிருக்கிறார். இவர் தயாரிப்பில் ‘காளிதாஸ் 2’ படம் உருவாகுவதால்.. திரைப் பட ரசிகர்களிடையேயும், திரை ஆர்வலர்களிடையேயும், திரையுலக வணிகர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில் படத்தின் தொடக்க விழாவைத் தொடர்ந்து படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என்றும், இப்படத்தில் பணியாற்றும் ஏனைய நட்சத்திர நடிகர்கள், நடிகைகள் பற்றிய விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

“சூர்யா’ஸ் சாட்டர்டே” படத்திலிருந்து, பிரியங்கா மோகனின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது !!

நேச்சுரல் ஸ்டார் நானி, விவேக் ஆத்ரேயா, டி.வி.வி என்டர்டெயின்மென்ட் இணையும் பான் இந்தியா திரைப்படம், “சூர்யா’ஸ் சாட்டர்டே” படத்திலிருந்து, பிரியங்கா மோகனின் கதாப்பாத்திரமான சாருலதா, ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

பான் இந்திய படைப்பாக உருவாகும் நேச்சுரல் ஸ்டார் நானியின் “சூர்யா’ஸ் சாட்டர்டே” படத்தில், நானிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். கேங் லீடருக்குப் பிறகு நானியுடன் அவர் நடித்த இரண்டாவது படம் இது. அதிரடி ஆக்சன் படமாக உருவாகும் இப்படத்திலிருந்து பிரியங்கா மோகனின் கதாப்பாத்திரமான சாருலதா, ஃபர்ஸ்ட் லுக்கை இன்று, தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் பிரியங்கா மோகனின் சாருலதா கதாப்பாத்திரம், அப்பாவி போலீஸ் அதிகாரியாக காட்சியளிக்கிறது. அந்த கதாப்பாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறார். அவரது முகத்தில் ஒரு அழகான புன்னகை மிளிர்கிறது. காக்கி உடையில், தோளில் பையுடன் சாலையில் நடந்து செல்கிறார் பிரியங்கா. இப்படத்தில் பிரியங்காவின் கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

விவேக் ஆத்ரேயா இயக்க, DVV தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோர் DVV என்டர்டெயின்மென்ட் பேனரின் கீழ் மிகச்சிறந்த தொழில்நுட்ப தரத்துடன், இப்படத்தினை பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கின்றனர். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு முரளி ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். கார்த்திகா ஸ்ரீனிவாஸ் எடிட்டிங் செய்கிறார். இந்த பான் இந்திய திரைப்படம் ஆகஸ்ட் 29, 2024 அன்று தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது.

“சூர்யா’ஸ் சாட்டர்டே” படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது.

நடிகர்கள்: நானி, பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே. சூர்யா, சாய் குமார்

தொழில்நுட்பக் குழு:
எழுத்து- இயக்கம் : விவேக் ஆத்ரேயா தயாரிப்பாளர்கள்: DVV தனய்யா, கல்யாண் தாசரி
பேனர்: டிவிவி எண்டர்டெயின்மெண்ட்ஸ்
இசை: ஜேக்ஸ் பிஜாய்
ஒளிப்பதிவு : முரளி ஜி
எடிட்டர்: கார்த்திகா ஸ்ரீநிவாஸ்
சண்டைப்பயிற்சி : ராம்-லக்ஷ்மன்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : வால்ஸ் அண்ட் டிரெண்ட்ஸ்

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘சூர்யா’ஸ் சாட்டர்டே’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி – இயக்குநர் விவேக் ஆத்ரேயா – டி வி வி என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படமான ‘சூர்யா’ஸ் சாட்டர்டே’ திரைப்படத்தின் செகண்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் சூர்யா மற்ற கிழமைகளில் தோன்றும் புதிய பரிமாணம் இடம் பிடித்திருக்கிறது.

‘சூர்யா’ஸ் சாட்டர்டே’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள்- இதுவரை வெளியிட்ட விளம்பரங்களில் சூர்யா அல்லது ‘நேச்சுரல் ஸ்டார்’ நானியை ஆக்ரோஷமான இளைஞனாகவே காட்சிப்படுத்தினர்.‌ ஆனால் அவர் சனிக்கிழமைகளில் மட்டுமே வன்முறையாளர். மற்ற நாட்களில் சூர்யாவின் தோற்றத்தை ரசிக்கவும், அவரது புதிய பரிமாணத்தை அனுபவிக்கவும்.. தற்போது அந்த கதாபாத்திரத்தின் செகண்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.‌ இந்த போஸ்டரில் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நம் பக்கத்து வீட்டு பையனின் அவதாரத்தில், வசீகரிக்கும் புன்னகையுடன் தோன்றுகிறார். மேலும் அந்தப் போஸ்டரில் அவர் பைக் ஓட்டுவது போலும் உள்ளது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிளில் சூர்யா எப்படி இருந்தார்? என்பதற்கு நேர் மாறாக அவரது இந்த தோற்றம் உள்ளது. இதன் மூலம் இந்த தனித்துவமான கதாபாத்திரம் வெவ்வேறு வகையான அடுக்குகளை கொண்டிருக்கிறது என்பது தெளிவாகிறது.

இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தைப் பற்றிய புதிய தகவல்களை விரைவில் வழங்கவுள்ளார்கள்.‌

டி வி வி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் டி வி வி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோர் பிரம்மாண்டமான பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தில் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி, பிரியங்கா அருள் மோகன், எஸ். ஜே. சூர்யா, சாய் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். முரளி . ஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார். கார்த்திகா ஸ்ரீனிவாஸ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். இந்தத் திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது.

நடிகர்கள் : நானி, பிரியங்கா அருள் மோகன், எஸ். ஜே. சூர்யா, சாய் குமார் மற்றும் பலர்.

தொழில்நுட்பக் குழு :
எழுத்து & இயக்கம் : விவேக் ஆத்ரேயா
தயாரிப்பாளர்கள் : டி வி வி தனய்யா & கல்யாண் தாசரி
தயாரிப்பு நிறுவனம் : டி வி வி என்டர்டெய்ன்மெண்ட்
இசை : ஜேக்ஸ் பிஜாய்
ஒளிப்பதிவு : முரளி. ஜி
படத்தொகுப்பு : கார்த்திகா ஸ்ரீனிவாஸ்
சண்டை பயிற்சி இயக்குநர் : ராம்- லக்ஷ்மன்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : வால்ஸ் & ட்ரெண்ட்ஸ்- இயக்குநர் விவேக் ஆத்ரேயா – டி வி வி என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படமான ‘சூர்யா’ஸ் சாட்டர்டே’ திரைப்படத்தின் செகண்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் சூர்யா மற்ற கிழமைகளில் தோன்றும் புதிய பரிமாணம் இடம் பிடித்திருக்கிறது.*

‘சூர்யா’ஸ் சாட்டர்டே’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள்- இதுவரை வெளியிட்ட விளம்பரங்களில் சூர்யா அல்லது ‘நேச்சுரல் ஸ்டார்’ நானியை ஆக்ரோஷமான இளைஞனாகவே காட்சிப்படுத்தினர்.‌ ஆனால் அவர் சனிக்கிழமைகளில் மட்டுமே வன்முறையாளர். மற்ற நாட்களில் சூர்யாவின் தோற்றத்தை ரசிக்கவும், அவரது புதிய பரிமாணத்தை அனுபவிக்கவும்.. தற்போது அந்த கதாபாத்திரத்தின் செகண்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.‌ இந்த போஸ்டரில் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நம் பக்கத்து வீட்டு பையனின் அவதாரத்தில், வசீகரிக்கும் புன்னகையுடன் தோன்றுகிறார். மேலும் அந்தப் போஸ்டரில் அவர் பைக் ஓட்டுவது போலும் உள்ளது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிளில் சூர்யா எப்படி இருந்தார்? என்பதற்கு நேர் மாறாக அவரது இந்த தோற்றம் உள்ளது. இதன் மூலம் இந்த தனித்துவமான கதாபாத்திரம் வெவ்வேறு வகையான அடுக்குகளை கொண்டிருக்கிறது என்பது தெளிவாகிறது.

இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தைப் பற்றிய புதிய தகவல்களை விரைவில் வழங்கவுள்ளார்கள்.‌

டி வி வி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் டி வி வி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோர் பிரம்மாண்டமான பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தில் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி, பிரியங்கா அருள் மோகன், எஸ். ஜே. சூர்யா, சாய் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். முரளி . ஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார். கார்த்திகா ஸ்ரீனிவாஸ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். இந்தத் திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது.

நடிகர்கள் : நானி, பிரியங்கா அருள் மோகன், எஸ். ஜே. சூர்யா, சாய் குமார் மற்றும் பலர்.

தொழில்நுட்பக் குழு :
எழுத்து & இயக்கம் : விவேக் ஆத்ரேயா
தயாரிப்பாளர்கள் : டி வி வி தனய்யா & கல்யாண் தாசரி
தயாரிப்பு நிறுவனம் : டி வி வி என்டர்டெய்ன்மெண்ட்
இசை : ஜேக்ஸ் பிஜாய்
ஒளிப்பதிவு : முரளி. ஜி
படத்தொகுப்பு : கார்த்திகா ஸ்ரீனிவாஸ்
சண்டை பயிற்சி இயக்குநர் : ராம்- லக்ஷ்மன்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : வால்ஸ் & ட்ரெண்ட்ஸ்

‘ஃபுட்டேஜ்’ ஆகஸ்ட் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!!

மோலிவுட்டின் முதல் உண்மையான ஃபவுண்ட் ஃபுட்டேஜ் வகையில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படமான ‘ஃபுடேஜ்’ படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த அற்புதமான அதிரடி திரைப்படத்தில் முன்னணி நட்சத்திர நடிகை
மஞ்சு வாரியர் முதன்மைப் பாத்திரத்தில் அட்டகாச நடிப்பை வழங்கியுள்ளார்.

அஞ்சாம் பாதிரா, கும்பலங்கி நைட்ஸ், மகேஷிண்டே பிரதிகாரம் என பல வெற்றிப் படங்களில் பணியாற்றிய புகழ்பெற்ற எடிட்டரான சைஜு ஸ்ரீதரன் இப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார். எடிட்டிங்கில் இருந்து டைரக்டராக சைஜு மாறுவது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் அவரது பன்முகக் கதை சொல்லும் திறமைக்கு சான்றாக ‘ஃபுட்டேஜ்’ அமைந்திருக்கிறது.

மஞ்சு வாரியருடன் நாயர் விசாக் மற்றும் காயத்ரி அசோக் ஆகியோர் இணைந்து அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளனர். மூவி பக்கெட், பேல் ப்ளூ டாட் பிலிம்ஸ் மற்றும் காஸ்ட் என் கோ என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் கீழ் பினீஷ் சந்திரன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இணை தயாரிப்பாளர்களான ராகுல் ராஜீவ் மற்றும் சூரஜ் மேனன் ஆகியோருடன், லைன் புரொடியூசர் அனீஷ் சி சலீம் ஆகியோர் இந்த மாறுபட்ட திரைப்படத்தை உயிர்ப்பிப்பதில் முக்கியப் பங்கு வகித்துள்ளனர்.

ஷப்னா முகமது மற்றும் சைஜு ஸ்ரீதரன் ஆகியோரின் கூட்டு முயற்சியின் மூலம் வடிவமைக்கப்பட்ட திரைக்கதை மற்றும் வசனங்களில் இப்படம் ஒரு அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ளது. சந்தீப் நாராயண் வடிவமைத்த இத்திரைப்படத்தில் அஸ்வெகீப்சர்ச்சிங் இசைக்குழுவின் பாடல்களும், சுஷின் ஷியாமின் பின்னணி இசையும் அற்புதமாக அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் ஷினோஸ் வினோதமான மற்றும் அழுத்தமான காட்சிகளை ஃபவுண்ட் ஃபுட்டேஜ் வகையில் படம்பிடித்துள்ளார், அதே நேரத்தில் கலை இயக்குனர் அப்புண்ணி சாஜன் இந்த பரபரப்பான சவாரிக்கு சரியான கலை இயக்கத்தை அமைத்துள்ளார்.

நிக்சன் ஜார்ஜின் ஒலி வடிவமைப்பு, மைண்ட்ஸ்டின் ஸ்டுடியோவின் VFX மற்றும் சமீரா சனீஷின் ஆடை
வடிவமைப்பு என மிக அட்டகாசமான தொழில்நுட்ப குழு முழு உழைப்பைத் தந்துள்ளது.இந்த அற்புதமான குழுவின் உழைப்பில் மோலிவுட்டில் புதிய கதை சொல்லலை அறிமுகப்படுத்தும், புதுமையான அனுபவத்தை இப்படம் தரும்.

“ஃபுட்டேஜ்” என்பது வழக்கமான படமல்ல, அட்டகாசமான நடிகர்கள், அற்புதமான தொழில் நுட்ப கலைஞர்களின் கைவண்ணத்தில், மிகப்புதுமையான களத்தில், இதுவரையிலான திரையின் கதை சொல்லலை மாற்றி அமைக்கும் புதுமையான படமாக இப்படம் இருக்கும்.

விக்னேஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘ரெட் ஃப்ளவர்’

விஷுவல் எஃபெக்ட்ஸ் நிபுணரான ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில் ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் பேனரில் கே.மாணிக்கம் தயாரிக்கும் ‘ரெட் ஃப்ளவர்’ ஆக்ஷன் திரில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கியுள்ளன.

மூன்றாம் உலகப் போருக்குப் பிறகு நடைபெறும் சர்வதேச மாற்றங்களின் பின்னணியில் ஒரு பரபரப்பான கற்பனை கதையை உருவாக்கி அதை ‘ரெட் ஃப்ளவர்’ என்ற பெயரில் ஆக்ஷன் திரைப்படமாக இயக்கியுள்ளார் ஆண்ட்ரூ பாண்டியன். இப்படத்தில் ‘கிழக்கு சீமையிலே’, ‘ராமன் அப்துல்லா’, ‘ஆச்சார்யா’ புகழ் நடிகர் விக்னேஷ் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

திரைப்படம் பற்றி இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் பேசுகையில், “நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப‌ குழுவினரின் அயராத அர்ப்பணிப்பின் காரணமாக மிகச் சிறந்த முறையில் ‘ரெட் ஃப்ளவர்’ உருவாகி வருகிறது. படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை ஆவலுடன் தொடங்கி உள்ளோம்,” என்றார்.

தொடர்ந்து பேசிய ஆண்ட்ரூ பாண்டியன், “துல்லியமான படத்தொகுப்பு, ஒலி வடிவமைப்பு, விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் பின்னணி இசையை இப்படத்திற்கு வழங்கும் பணியில் நாங்கள் தற்போது ஈடுபட்டுள்ளோம். திறமை வாய்ந்த எடிட்டர்கள், சவுண்ட் இன்ஜினியர்கள் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் கலைஞர்களின் குழு இதற்காக‌ கடினமாக உழைத்து வருகிறது. ஒரு குறிப்பிடத்தக்க திரைப்பட அனுபவமாக ‘ரெட் ஃப்ளவர்’ இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்,” என்றார்.

ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் பேனரில் கே.மாணிக்கம் தயாரித்துள்ள இப்படம் செப்டம்பர் முதல் வாரத்தில் திரையரங்குளில் வெளியாகிற‌து. “இக்கதை ரசிக‌ர்களை கவரும் என்று நாங்கள் நம்புகிறோம், உலகத் தரத்தில் படத்தை மெருகேற்றி வருகிறோம்,” என்று இயக்குந‌ர் மேலும் தெரிவித்தார்.

இரட்டை சகோதரர்களான விக்கி மற்றும் மைக்கேலை சுற்றி கதை சுழல்கிறது. இந்திய இராணுவத்தில் சேர்வதில் தீரா ஆர்வமுள்ள இந்த இரண்டு பாத்திரங்களிலும் விக்னேஷ் நடிக்கிறார். மூன்றாம் உலகப் போருக்குப் பின் நடக்கும் கற்பனை கதையாக ‘ரெட் ஃப்ளவர்’ மலரும். இந்த படத்தில் மாறுபட்ட கதாபாத்திரங்களுக்காக தனது எடையை 82 கிலோவிலிருந்து 69 கிலோவாக குறைத்ததாகவும், வெளிநாட்டில் ஸ்டண்ட் மற்றும் பிற பயிற்சிகளை மேற்கொண்டதாகவும் விக்னேஷ் கூறுகிறார்

மனிஷா ஜஷ்னானி நாயகியாக நடிக்க, நாசர், ஒய் ஜி மகேந்திரன், சுரேஷ் மேனன், ஜான் விஜய், அஜய் ரத்னம், லீலா சாம்சன், டி எஸ் கார்த்திக், கோபி கண்ணதாசன், தலைவாசல் விஜய், மோகன் ராம் மற்றும் யோக் ஜேபி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

‘ரெட் ஃப்ளவர்’ படத்திற்கு கே. தேவ சூர்யா ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் ராம் இசை அமைக்க, அரவிந்தன் படத்தொகுப்பை கையாள்கிறார். விஎஃப்எக்ஸ் துறையை பிரபாகரன் கவனிக்க, சண்டைக்காட்சிகளை இடி மின்னல் இளங்கோ வடிவமைத்துள்ளார். பாடல்களை மணி அமுதவன் எழுதுகிறார்.

தயாரிப்பு வடிவமைப்பாளராக கே.கார்த்திக் பங்காற்ற, ஏ.பி.முகமது ஒப்பனையை கவனிக்க, தேனி சீனு ஸ்டில்சுக்கு பொறுப்பேற்க,ஏ.அமல் ராஜ் ஆடைகளை வடிவமைத்துள்ளார்.

விமானம், ராணுவ லாரி, கன்டெய்னர் கப்பல் என 11 சண்டைக்காட்சிகள் பிரமிக்க வைக்கும் வகையில் படத்தில் அமைந்துள்ளன என கூறிய இயக்குநர், ஸ்டண்ட் மாஸ்டர் இடி மின்னல் இளங்கோ ‘ரெட் ஃப்ளவர்’ படத்திற்காக கடினமாக உழைத்துள்ளார் என்றார், “விஎஃப்எக்ஸ் இயக்குந‌ர் பிரபாகரனின் செட் மேற்பார்வை அலாதியானது. ஒவ்வொன்றையும் சிறந்த திட்டமிடலுடன் அவர் செய்ததால் எங்கள் பணி இன்னும் சுவாரசியமாக அமைந்தது,” என அவர் மேலும் கூறினார்.

ஒளிப்பதிவு பற்றி இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் கூறும்போது, “ஒளிப்பதிவாளர் கே தேவசூர்யாவின் உழைப்பு படத்தை புதிய உயரத்திற்கு இட்டு சென்றுள்ளது. படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமையும் அவர் செதுக்கிய விதம் பிரமிப்பூட்டும் வகையில் இருந்தது,” என்றார்.

ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் கே.மாணிக்கம் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ரெட் ஃப்ளவர்’ ஆக்ஷன் திரைப்படம் இது வரை திரையில் சொல்லப்படாத ஒரு விஷயம் குறித்து பேசும் என்று கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் ஆண்ட்ரூ பாண்டியன் தெரிவித்துள்ளார்.

பிருத்வி அம்பரின் புதிய பான் இந்தியா திரைப்படமான “சௌகிதார்” இனிதே துவங்கியது !!

நடிகர் பிருத்வி அம்பர் நடிப்பில் உருவாகவுள்ள, பான் இந்திய திரைப்படமான ‘சௌகிதார்’ படத்தின் படப்பிடிப்பு, பெரும் கொண்டாட்டத்துடன் இனிதே தொடங்கியது. பெங்களூரில் உள்ள பந்தே மகாகாளி கோவிலில், இப்படத்தின் பூஜை படக்குழுவினர் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் தயாரிப்பாளர் கல்லஹள்ளி சந்திரசேகர் கிளாப் அடிக்க, சாய்குமார் ஒளிப்பதிவு செய்து, படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.

‘ரதவரா’ படத்தின் மூலம் புகழ் பெற்ற
இயக்குநர் சந்திரசேகர் பாண்டியப்பா ‘சௌகிதார்’ படத்தினை இயக்குகிறார். ‘டயலாக் கிங்’ என்று அழைக்கப்படும் சாய்குமார் முக்கிய வேடத்தில் நடிக்க, தொட்மனே குடி தன்யாராம் குமார் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் பூஜையைத் தொடர்ந்து படக்குழு படத்தை அறிமுகம் செய்யும் வகையில் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தியது.

படம் குறித்து இயக்குநர் சந்திரசேகர் பாண்டியப்பா கூறுகையில், “பல மொழிகளில் வெளியாகும் எனது ஆறாவது படம் இதுவாகும். கல்லஹள்ளி சந்திரசேகர் ஒரு நல்ல படைப்பை உருவாக்கும் எண்ணத்தில், ரசவாதா படத்தின் வெற்றிக்குப் பிறகு, என்னை அணுகினார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் பிருத்வி நடிக்கிறார். நான் இந்த முறை ஒரு வித்தியாசமான கதையை சொல்ல விரும்பினேன், பிருத்வி அவர் பாத்திரத்திற்காக விரிவாகத் தயாராகி வருகிறார், மேலும் படம் குறித்த அவரது உற்சாகத்தை காண்கையில் பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. சாய்குமார் சார், மற்றும் தர்மா சார் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். பிரபல இசையமைப்பாளர் சச்சின் பஸ்ரூர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

நடிகர் பிருத்வி அம்பர் கூறுகையில்.. ,
இன்று மகிழ்ச்சியான நாள். “சௌகிதார் திரைப்படம் எனது தாயின் ஆசியுடன் இனிதே தொடங்கியது. கதையை முதலில் கேட்டபோதே, இந்த கதாபாத்திரத்திற்காக நான் நிறைய பயிற்சி எடுக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும், இப்படத்திற்கு தயாராக நேரம் கேட்டேன். இப்பட டீசரை ஒரே நாளில் படமாக்கினோம், தலைப்புக்கேற்றவாறே ஒரு அட்டகாசமான அனுபவமாக, உங்களைத் திருப்தி செய்யும் படமாக இருக்கும்.”

சாய்குமார் கூறுகையில், “நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அடுத்த ஆண்டு நடிகராக 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. எனது அப்பா, அம்மாவுக்கு நன்றி. நான் கன்னட படங்களில் நடிக்க வேண்டும் என்று என் அம்மா விரும்பினார். எனது கன்னட பயணமும் 30 வருடங்களை நிறைவு செய்துள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திரைப்பட வேடமும், ஒரு சவாலாகவே உள்ளது. தற்போது, பதினைந்து திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. “சௌகிதாரின் கதை ஒரு எமோஷனல் டிராமா. பிருத்வி ஹீரோவாக நடிக்கும் துளு படத்தில் நானும் நடித்திருக்கிறேன். இது ஒரு நல்ல சப்ஜெக்ட்”. “பிரித்வி அம்பாருக்கும், இயக்குநருக்கும் நான் தான் சௌகிதார். நன்றி.”

நடிகை தன்யா ராம் குமார் கூறுகையில், சௌகிதாரில் எனக்கு வாய்ப்பளித்த சந்திராசர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. நடிகர்கள் தர்மா சார் மற்றும் சாய்குமார் சாருடன் பணியாற்றுவதில் நான் பெருமை கொள்கிறேன்.

வித்யாசேகர் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில், கல்லஹள்ளி சந்திரசேகர்‘சௌகிதார்’ படத்தைத் தயாரிக்கிறார். நாகேந்திர பிரசாத் மற்றும் பிரமோத் மறவந்தே ஆகியோர் பாடலை எழுத, சச்சின் பஸ்ரூரு இசையமைக்கிறார். ‘சௌகிதார்’ பல மொழிகளில் தயாராகிறது. இதுவரை தனது ரொமாண்டிக் ஹீரோவாக பெயர் பெற்ற ப்ரித்வி அம்பர், இப்போது இந்தப் படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் மூலம் பார்வையாளர்களை கவர்வார், இது ஒரு முழுமையான ஃபேமிலி எண்டர்டெயினராக இருக்கும். ‘சௌகிதார்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

புது மாதிரியான ஹாரர் படம் ‘பார்க்’!

ஜீ.வி. பிரகாஷ் குமார் வெளியிட்ட ‘பார்க்’ படத்தின் பர்ஸ்ட் லுக் !

சஸ்பென்ஸ் இணைந்த ஹாரர் திரைப்படம் ‘பார்க்’!

இன்றைய திரையுலகச் சூழலில் ஹாரர் படங்களுக்கு ஒரு குறைந்தபட்ச வணிக உத்திரவாதம் உண்டு. அந்த வகை நம்பிக்கையில் ‘பார்க்’ என்கிற திரைப்படம் உருவாகி இருக்கிறது.

இப்படத்தை E.K.முருகன் இயக்கியுள்ளார் .இவர் இயக்குநர் ஏ. வெங்கடேஷிடம் உதவி இயக்குநராக இருந்து சினிமா கற்றவர்.அக்ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பாக லயன் E.நடராஜ் பார்க் படத்தைத் தயாரித்துள்ளார்.இவர் தயாரிக்கும் முதல் படம்
இது .சினிமா மீதான காதல்தான் அவரை ஒரு தயாரிப்பாளராக்கியுள்ளது.

இப்படத்தில் கதாநாயகனாகச் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஒரு நொடி’ படத்தின் கதாநாயகன் தமன் குமார் நடித்துள்ளார். கதாநாயகியாக ஸ்வேதா டோரதி நடித்துள்ளார். பிரதான வில்லனாக யோகிராம் நடித்துள்ளார்.கதாநாயகியின் தந்தையாகத் தயாரிப்பாளர் லயன் ஈ.நடராஜ் நடித்துள்ளார்.இவர்களைத் தவிர காமெடியில் கலக்கி கொண்டிருக்கும் பிளாக் பாண்டி, ரஞ்சனா நாச்சியார், கராத்தே ராஜா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

திருவண்ணாமலையில் ஒரு பார்க் அதாவது ஒரு பூங்காவில் நடைபெறும் கதையாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான படப்பிடிப்பு திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுப்புற ஊர்களில் நடந்துள்ளது.

படம் பற்றி இயக்குநர் ஈ.கே. முருகன் பேசும்போது,
“இது ஒரு சஸ்பென்ஸ் ஹாரர் காமெடி கலந்த திரில்லர் என்ற வகையில் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தின் கதையைத் தயாரிப்பாளரிடம் கூறிய போது நான் சொன்னேன். படத்தின் முதல் பாதி வயிறு வலிக்கச் சிரிக்க வைக்கும்; இரண்டாவது பாதி இதயம் வலிக்கப் பயமுறுத்தும் என்றேன்.அதன்படி கதையையும் சொன்னேன் அவருக்குப் பிடித்திருந்தது.
அவருக்கு சினிமா மீது காதல் உண்டு. எனவே இந்தப் படத்தைத் தயாரிக்க முன் வந்தார். சரியாகத் திட்டமிட்டு 36 நாட்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்து, படத்தை நிறைவு செய்திருக்கிறோம்.

எத்தனையோ பேய்ப் படங்களைப் பார்த்திருக்கிறோம். அதில் பேயை ஓட்டுவதற்கு ஏதாவது ஒரு மதத்தைச் சார்ந்த சாமியார்கள் வருவது போல் தான் காட்டுவார்கள். ஆனால் இந்தப் படத்தில்தான் எந்த மதத்தைச் சார்ந்தவரும் பேய் ஓட்ட வரவில்லை .வேறொரு முறையில் அந்தப் பேயை ஓட்டுவதாகக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இது வேறு எந்தப் படத்திலும் யாரும் சிந்திக்காதது என்று நான் சொல்வேன்.

அண்மையில் வெற்றி பெற்ற ஒரு நொடி படத்தில் நடித்துள்ள தமன்குமார் இதில் நாயகனாக நடித்திருக்கிறார். மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார் .அதேபோல் சமீபத்தில் வெளிவந்த லாந்தர் படத்தில் நாயகியாக நடித்த ஸ்வேதா டோரத்தி நாயகியாக நடித்துள்ளார்.அதேபோல் அண்மை வெற்றிப் படமான கருடன் படத்தில் வில்லனாக நடித்த யோகிராம் இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இப்படத்தில் பாடகி சுசித்ரா பாடிய பாடலுக்கு ராபர்ட் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார்.இப்படி அண்மைக் காலங்களில் பல வெற்றிப் படங்களில் இடம் பெற்றவர்கள் ,ரசிகர்கள் மத்தியில் முகமறிந்தவர்களாகப் பரிச்சயப்பட்டவர்களை நடிக்க வைத்திருக்கிறோம்.

ஹாரர் படங்களுக்கு என்றும் வரவேற்பு இருக்கும். முதலீடு செய்யும் தயாரிப்பாளரையும் காப்பாற்றி விடும்.எனவே இந்த வகைப் படத்தை எடுக்கத் தீர்மானித்து முடித்தோம்.

இப்படம் நிச்சயம் ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம். ஆகஸ்டில் இப்படத்தை வெளியிடுவதாகத் திட்டமிட்டு இருக்கிறோம்” என்றார்.

படத்திற்கு ஒளிப்பதிவு பாண்டியன் குப்பன். இவர் ஒளிப்பதிவாளர் வெற்றியின் உதவியாளர். இசை ஹமரா சி.வி,படத்தொகுப்பு குரு சூர்யா, நடனம் ராபர்ட் மாஸ்டர் மற்றும் சுரேஷ் சித், கலை இயக்கம் ஆர் வெங்கடேஷ், பாடல்கள் நா. ராசா, ஸ்டண்ட் எஸ் .ஆர் .ஹரி முருகன், தயாரிப்பு நிர்வாகி கே. எஸ் சங்கர், உடைகள் ஜி. வீரபாபு, ஒப்பனை ஷேக் பாட்ஷா, நிர்வாகத் தயாரிப்பாளர் எம். அருள் ,இணைத் தயாரிப்பாளர் நா .ராசா., தயாரிப்பு லயன் ஈ. நடராஜ்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளரும் நடிகருமான ஜீ.வி. பிரகாஷ் குமார் வெளியிட்டார். படத்தின் பர்ஸ்ட் லுக் !பார்த்து படக் குழுவினரை வாழ்த்தினார்.

மாறுபட்ட ஹாரர் திரை அனுபவத்தைப் பெற ஆகஸ்ட் வரை காத்திருங்கள்.

How SRI-Bangalore Collaborated with Samsung R&D Centres & Local Partners to Democratize Galaxy AI in India


• SRI-B developed the Hindi language for Galaxy AI, ensuring 20 regional dialects were covered for best results
Chennai – July 1, 2024: The development of Galaxy AI involved multiple R&D teams working across cultures and borders. SRI-Bangalore, Samsung’s largest R&D centre outside Korea, collaborated with teams around the world to develop AI language models for British, Indian and Australian English as well as Thai, Vietnamese and Indonesian.
Recently, core engineers from other Samsung Research centers visited Bangalore, India — where the SRI-B team helped ramp up the technology to bring Vietnamese, Thai and Indonesian to Galaxy AI.
SRI-B also developed the Hindi language for Galaxy AI. Developing the Hindi AI model wasn’t simple. The team had to ensure more than 20 regional dialects, tonal inflections, punctuation and colloquialisms were covered. Additionally, it is common for Hindi speakers to mix English words in their conversations. This required the team to carry out multiple rounds of AI model training with a combination of translated and transliterated data.
“Every language has its challenges,” said Giridhar Jakki, Head of Language AI at Samsung R&D Institute India – Bangalore (SRI-B). “But when you consider the end goal of bringing people the ability to communicate in other languages, it’s worth every ounce of effort. We couldn’t wait to bring Hindi to Galaxy AI.”
“Hindi has a complex phonetic structure that includes retroflex sounds — sounds made by curling the tongue back in the mouth — which are not present in many other languages,” said Jakki. “To build the speech synthesis element of the AI solution, we carefully reviewed data with native linguists to understand all the unique sounds and created a special set of phenomes to support specific dialects of the language.”
Collaborative efforts between Samsung and academic partners were instrumental in developing the AI language model that reflected the cultural nuances of the India’s regions. The Vellore Institute of Technology helped secure almost a million lines of segmented and curated audio data on conversational speech, words and commands. Data was a crucial component for a task as critical as incorporating the fourth most spoken language in the world into Galaxy AI. Working with universities ensured Samsung was using the highest quality data.
Galaxy AI now supports 16 languages, so more people can expand their language capabilities, even when offline, thanks to on-device translation in features such as Live Translate, Interpreter, Note Assist and Browsing Assist.
This project perfectly encapsulates Samsung’s philosophy of open collaboration and the company’s belief that sharing expertise and perspectives ensures meaningful innovation. In the case of SRI-B, this not only includes working with academia but also sharing insights and best practices with other Samsung research centers around the world.
“I’m extremely proud of what we’ve achieved with the help of our partners,” said Jakki. “AI innovation through collaboration is a big part of what we do. We will continue to better understand, collect and analyze language data so more people can have access to AI tools in the future.”

‘தி இந்தியா ஹவுஸ்’ படத்தின் தொடக்க விழா………..

‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண் & விக்ரம் ரெட்டியின் வி மெகா பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், நிகில் சித்தார்த்தா நடிப்பில், ராம் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ‘தி இந்தியா ஹவுஸ்’ படத்தின் தொடக்க விழா ஹம்பியில் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது.

உலகளாவிய நட்சத்திர நடிகரான ராம் சரண் திரையரங்குகளுக்கு வருகை தரும் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் வகையில் திரைப்படங்களை தயாரிக்க திட்டமிட்டு, திரைப்பட தயாரிப்பில் களமிறங்கி இருக்கிறார். வி மெகா பிச்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாராகும் இந்த திரைப்படத்தை, யு வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு பங்குதாரரான விக்ரம் ரெட்டி – ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ , ‘கார்த்திகேயா 2’ ஆகிய வெற்றி பெற்ற திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பு நிறுவனமான அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். இதில் அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனம் தற்போது ‘தி டெல்லி ஃபைல்ஸ்’ எனும் படத்தையும் தயாரித்து வருகிறது. இவர்களுடன் இளமையான மற்றும் திறமையான நட்சத்திர நடிகரான நிகில் சித்தார்த்தா இணைந்திருக்கிறார். இவர் ஏற்கனவே ‘கார்த்திகேயா 2’ படத்திற்காக தொலைநோக்கு தயாரிப்பாளர் என புகழப்படும் அபிஷேக் அகர்வாலுடன் பணியாற்றியிருக்கிறார். தற்போது உலக அளவில் அறியப்பட்ட.. . இந்தியாவை பெருமைப்படுத்திய ராம்சரணுடன் இணைந்திருக்கிறார்.

‘தி இந்தியா ஹவுஸ்’ படத்தை ராம் வம்சி கிருஷ்ணா எழுதி, இயக்குகிறார். நிகில் சித்தார்த்தா கதாநாயகனாகவும், சாயீ மஞ்சரேக்கர் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். அனுபம் கேர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

சர்வதேச தரத்துடன் தயாராகும் ‘தி இந்தியா ஹவுஸ்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியதை தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர். காதல் மற்றும் புரட்சியின் மூலத்தை ஆராயும் இந்த 1905 ஆண்டு காலகட்டத்திய படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஹம்பியில் உள்ள விருபாக்ஷா ஆலயத்தில் படக் குழுவினர் முன்னிலையில் பிரம்மாண்டமான முறையில் பூஜையுடன் தொடங்கியது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது.

புரட்சியின் உக்கிரமான உணர்வுடன் காதலையும் கலந்து தயாராகும் இந்த திரைப்படம் வழங்கும் புதிய சினிமா அனுபவத்தை கொண்டாட எங்களுடன் இணைந்திருங்கள்.

இந்த திரைப்படத்தில் அனுபவம் வாய்ந்த தொழில் நுட்ப வல்லுநர்கள் ஒன்றிணைந்து பணியாற்றுகிறார்கள். கேமரோன் பிரைசன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு கலை இயக்குநராகவும், தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் விஷால் அபானி பணியாற்றுகிறார்.

இந்த காவிய கதையின் கூடுதல் தகவல்களுக்காக ஆர்வத்துடன் காத்திருங்கள்.

நடிகர்கள் : நிகில் சித்தார்த்தா, சாயீ மஞ்சரேக்கர் அனுபம் கேர் மற்றும் பலர்.

தொழில்நுட்பக் குழு :

வழங்குபவர் : ராம் சரண்
தயாரிப்பாளர்கள் : அபிஷேக் அகர்வால் & விக்ரம் ரெட்டி
எழுத்து & இயக்கம் : ராம் வம்சி கிருஷ்ணா
தயாரிப்பு நிறுவனம் : அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் & வி மெகா பிக்சர்ஸ்
இணை தயாரிப்பு : மயங்க் சிங்கானியா
ஒளிப்பதிவு : கேமரோன் பிரைசன்
கலை இயக்கம் & தயாரிப்பு வடிவமைப்பு: விஷால் அபானி
ஆடை வடிவமைப்பு : ரஜினி
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

ஜேம்ஸ் கார்த்திக், இனியா , சோனியா அகர்வால்  நடிக்தகும் திரைப்படம்  விரைவில்……

ஜேம்ஸ் கார்த்திக், M.நியாஸ் தயாரிப்பில்,  அறிமுக இயக்குநர் துரை K முருகன் இயக்கத்தில், ஜேம்ஸ் கார்த்திக் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் “சீரன்”. சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளையும், மனிதனுக்கான சம உரிமைகளை உரக்கப்பேசும் ஒரு அழகான கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் விரைவில் திரைக்கு வரவுள்ளது. 

தன் வாழ்வில் சந்தித்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில்,  இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியுள்ளார் ஜேம்ஸ் கார்த்திக். மேலும் இப்படத்தை தயாரித்து, நாயகனாக நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் துரை K முருகன் இப்படத்தை  இயக்கியுள்ளார். 

 நம் சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை மையம் தான் கதை. ஜாதி மாறி திருமணம் செய்து கொண்ட தம்பதியின் மகன் மறுக்கப்பட்ட தன் தந்தையின் உரிமைக்காக போராடுவது தான் கதை. அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான அம்சங்களுடன், அருமையான கருத்தை பேசும் சமூக அக்கறை கொண்ட படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. 

ஜேம்ஸ் கார்த்திக்  நாயகனாக நடிக்க,  இனியா , சோனியா அகர்வால்  , ஆடுகளம் நரேன் , ஆஜித் (சூப்பர் சிங்கர்) , க்ரிஷா குரூப் , சென்ட்ராயன் , ஆர்யன் , அருந்ததி நாயர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இப்படத்தின் படப்பிடிப்பு வேலூர், காஞ்சிபுரம், செய்யாரு கிராமப்புற பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 

படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், படக்குழுவினர் படத்தின் விரைவில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு வருகின்றனர். விரைவில் படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.  

தொழில் நுட்ப குழுவினர் விபரம் 

தயாரிப்பாளர்கள்: ஜேம்ஸ் கார்த்திக், M.நியாஸ் இயக்குநர்: துரை கே முருகன் 

ஒளிப்பதிவு : பாஸ்கர் ஆறுமுகம் 

இசை அமைப்பாளர்: அரவிந்த் ஜெரால்ட் & AK சசிதரன் 

பின்னணி இசை: ஜூபின் 

எடிட்டர்: A.ரஞ்சித் குமார் 

கலை இயக்குனர்: S.அய்யப்பன் 

பாடலாசிரியர்: சினேகன், கு.கார்த்திக் 

நடன இயக்குனர்: பாபா பாஸ்கர் சண்டைக்காட்சி : டி.ரமேஷ்