Cinema Reviews

செல்ல குட்டி திரை விமர்சனம்

 மகேஷ் மற்றும் டாக்டர் டிட்டோ, மற்றும் தீபிக்‌ஷா 1990- காலகட்டங்களில் ஒரே பள்ளியில் 12ஆம் வகுப்பு பிடித்து வருகிறார்கள்.மகேஷ் அப்பா அம்மா இல்லாத காரணத்தால், அவர் மீது தீபிக்‌ஷாவிற்க்கு இரக்கம் காட்டுவதால், தன்னை காதலிக்கிறார் என நினைத்துக் கொண்டு ஒருதலையாக காதலித்து வருகிறார்.

ஆனால், தீபிக்‌ஷா டிட்டோவை ஒருதலையாக காதலித்துக் கொண்டிருக்கிறார். மகேஷ் தீபிக்‌ஷாவிடம் உன்னை காதலிக்கிறேன் என கூற தீபிக்‌ஷா நிராகரித்து விடுகிறார். காதலை மட்டுமே நினைத்துக் கொண்டு ,மகேஷ் 12ம் தேர்வில் தோல்வியடைந்து விடுகிறார்.மகேஷ்டன் படித்த அனைவரும் வாழ்க்கையில் முன்னேறி விடுகிறார்கள்.

ஒரு கட்டத்தில் டிட்டோ விற்கும் சுபிக்ஷாவிற்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகிறது ஆனால் தன் நண்பன் காதலித்த பெண் என்பதால் அந்த திருமணத்தை டிட்டோ நிராகரித்து விடுகிறார்

அதன் பிறகு இவர்களது வாழ்க்கை என்ன ஆனது? என்பதுதான் இந்த செல்ல குட்டி திரைப்படத்தின் கதை.

கதாநாயகர்களாக நடித்திருக்கும் புதுமுக நடிகர்கள் டாக்டர்.டிட்டோ மற்றும் மகேஷ் இருவரும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக கதாபாத்திரத்தை உணர்ந்து நன்றாக நடித்திருக்கிறார்கள்.

கதாநாயகியாக நடித்திருக்கும் தீபிக்‌ஷா குடும்பத்து அழகிய முகத்தோடு, அளவான நடிப்பை கொடுத்து திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை ஈர்க்கிறார்.

மற்றொரு கதாநாயகியாக நடித்திருக்கும் சிம்ரன்

கல்லூரி முதல்வர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மதுமிதாவும், ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார்கள்..

ஒளிப்பதிவாளர் பால் லிவிங்ஸ்டன் மற்றும் பாலா பழனியப்பனின் ஒளிப்பதிவு முலம் கதைக்கு ஏற்றவாறு பயணித்து இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் டி.எஸ். முரளிதரன்

இசையமைப்பாளர் சிற்பியின் பின்னணி இசை கதை  ஓட்டத்திற்கு பயணிக்கிறது.

மெய்யழகன் திரைவிமர்சனம்

கதை இல்லாமல் பணத்திமிரில் இது போன்று படமெடுத்தால் பல மெய்யழகன்களை நாம் சந்திக்க வேண்டியிருக்கும் மக்களே…….


தஞ்சாவூர் பக்க்கத்தில் ஒரு கிராமத்தில் வசிக்கும் ஆசிரியர் ஜெயப்பிரகாஷ் அவரது உறவினர்களால் ஏமாற்றப்பட்டு அனைத்து சொத்துகளையும் இழந்து மனைவி மற்றும் சிறு வயது அரவிந்சாமியுடன் சென்னைக்கு குடி பெயர்கிறார்கள். 22 வருடம் கழித்து அரவிந்த் சுவாமி தன் சித்தி மகள் கல்யாணத்திற்கு கிராமத்திற்கு வருகிறார். அப்படி வரும் அவர் தன் பழைய சொந்தங்கள், நட்புகளை பார்க்கும் உணர்வுபூர்வமான உணர்வுகளை படமாக்க நினைத்த இயக்குனர் இது சூர்யா குடும்பத்தின் சொந்த படம் என்பதால் தான் யோசித்தகதையை குப்பையில் போட்டுவிட்டு கார்த்தியின் நவரசங்களை பிழிந்து ஏன்டா படத்தை பார்க்க வந்தீர்கள் கதற வைத்து அனுப்பி இருக்கிறார்.


படத்தில் இரண்டே காட்சிகள் மட்டும் ரசிக்கும்படி இருக்கிறது அரவிந்த் சுவாமி பேருந்தில் பயணம் செய்யும் காட்சி, மணமேடையில் தங்கைக்கு நகைகள் அணிவிக்கும் காட்சி இதில் அரவிந்த்சுவாமி நன்றாக நடித்திருக்கிறார்.

சென்னையில் இருந்து காலை புறப்பட்டு, மதியம் 2 மணிக்கு தஞ்சாவூரை அடைந்து, மாலை திருமண வரவேற்ப்புக்கு வரும் அரவிந்த்சாமி, அங்கு கார்த்தி அறிமுகமாகி அத்தான் , அத்தான் என்று அவரையே சுற்றி வருகிறார். ஆனால் அரவிந்த் சுவாமிக்கோ அது யாரென்று தெரியாமல் தவிக்குறார். அது மட்டுமல்லாமல் அன்று இரவும் அவரோடு தங்கும் சூழல், சரி படம் பழைய நினைவுகளை நோக்கி செல்லும் என்று பார்த்தால் கார்த்தி பேசுகிறார், பேசுகிறார் விடிய, விடிய பேசுகிறார். அவ்வளவுதான் படம். படத்தில் என்ன கதை வைப்பது என்று தெரியாமல் ஒரு 10 சீனை வைத்து கொண்டு ஒவ்வொரு சீனையும் அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என்று இழுக்கிறார். அதுவும் அரவிந்த் சாமி வீட்டில் இருந்து புறப்படும் அந்த காட்சி 1/2 மணி நேரம். பேருந்து உரையாடல் 20 நிமிடம். திருமண கூடத்தில் எந்தகதையியும் இல்லாமல், முக்கால் மணி நேரம். அவர் ஊருக்கு கிளம்மி,பேருந்தை தவறவிட்டு கார்த்தி வீட்டில் தங்குவதற்கு அரை மணி நேரம் என்று முதல் பாதி முடிந்து அப்பாடா இரண்டாம் பாதியில் கதை ஆரம்பம் என்று உட்கார்ந்தால், இருவரும் குடிக்க ஆரம்பித்து கார்த்தி பேச ஆரம்பித்து உங்க வீட்டு கதை எங்க வீட்டு கதை என்று மணிகணக்கில் பேசி நம்மை கதற வைத்து,

இறுதியில் அரவிந்த்சுவாமி வாயால் மெய்யழகா என்று கூப்பாடு போட்டு, எங்களை ஆளவிடுங்கடா என்று நம்மை கதற வைத்து ஒட வைக்கிறார்கள் தியேட்டரை விட்டு.

இந்த படத்தில் வரும் கதாபாத்திரங்கள் ராஜ்கிரண் ஒரு நாண்கு காட்சியில் வருகிறார் அழுது கொண்டே இருக்கிறார்.
இளவரசு வருகிறார் பஜ்ஜி தருகிறார் கானாமல் போகிறார்.
ஶ்ரீ திவ்யா வீட்டிற்குள் வரும் அட்மாஸ்பியர் 3 காட்சிகள்.
கருணா வருகிறார் விசில் அடிக்கிறார் போகிறார்.
ஜெயபிரகாஷ் அப்பாவாக இதில் யார் அப்பா யார் மகன் என்றே தெரியவில்லை.
இசை ஏதோ வாசித்திருக்கிறார்.
ஒளிப்பதிவு பெரிதாக ஏதும் இல்லை.

இந்த மாதிரி மொக்கை படத்திற்கு நன்றாக இருக்கிறது என்று கூற வைக்க மிகவும் கஷ்ட பட்டிருக்கிறார்கள் பட குழுவினர்.

மெய்யழகன் கதை என்னும் அழகில்லாதவன்.

“கோழிப்பண்ணை செல்லதுரை” திரை விமர்சனம்

சீனுராமசாமி இயக்கத்தில் ஏகன், யோகிபாபு. பிரகிடா மற்றும் பலர் நடித்திருக்கும் திரைபடம் கோழி பண்ணை செல்லதுரை
நாயகனும் அவன் தங்கையும் சிறு வயதாக இருக்கும் போது அவர்ளுடைய தாய் உன் கள்ளகாதலுடன் ஓடிவிட, அப்பாவோ அவள் மேல் உள்ள கோபத்தில் பிள்ளைகளை அனாதையாக விட்டுவிட்டு அவனும் சென்று விட, அதே ஊரில் கோழி பண்ணை வைத்திருக்கும் யோகிபாபு அரவணைப்பில் 12 ஆண்டுகள் பாடுபட்டு வளர்ந்து தன் தங்கைக்கு திருமணம் முடித்து தானும் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று நினைக்கும் போது, ஓடி போன தாய் பைத்தியமாக வந்து நிற்க, அவளை காப்பாற்ற போகும் போது. விட்டு போன தந்தை இரண்டு கிட்னியும் செயலிழந்து ஒற்றை மகளுடன் வந்து நிற்க அவருக்கு தன் ஒரு கிட்னி தந்து காப்பாற்றி நாயகன் தியாகியாகும் கதைதான் இந்த கோழி பண்ணை செல்லதுரை.

நாயகனாக ஏகன் பல வேலைகள் செய்து தங்கையை வளர்க்கும் கதாபாத்திரம்.நிறைய தியாகத் தன்மையோடும் அமைக்கப்பட்டு இருக்கும் கதாபாத்திரம், தங்கையாக சத்யா தேவி அண்ணனே தெய்வம் என வாழ்ந்திருக்கிறார்.
பிரகிடாவிற்கு படத்தில் ஒரே ஒரு வேலைதான நாயகனை காதலிப்பது. யோகி பாபு யாருக்காக, எதற்காக இந்த படத்தில் வந்தார் என்று தெரியவில்லை. கடமைக்கு வருகிறார். நடிப்பில் எந்த மாற்றமும் இல்லை. ஜீவனும் இல்லை.
இயக்கம் சீனுராமசாமி இந்த மாதிரி ஒரு படத்தை நிச்சயம் நாம் அவரிடம் எதிர்பார்க்கவில்லை ஏமாற்றிவிட்டார. படத்தில் உள்ள காதாபாத்திரங்கள் எல்லாம் விட்டிற்கு உள்ளேயே செல்ல மாட்டேங்குது எல்லாம் வெளிலேயே பேசுகிறார்கள். பெண் பார்க்கும் காட்சி கூட வீட்டின் போர்டிகோவில் தான் பேசுகிறார்கள். படம் பயங்கர பட்ஜெட் படம் போல.
தேனி மாவட்டத்தில் நடக்கும் கதை என்று கூறிவிட்டு ஒரு காதாப்பாத்திரம் கூட வட்டார மொழி பேசவில்லை ஏனோ இயக்குநர் அதை கவணிக்கவில்லை.

இசை உயிரோட்டமாக இல்லை.

கோழி பண்ணை செல்லதுரை கதையில் பறவை காய்ச்சல் வந்தது போல் ஆகிவிட்டது.

“கடைசி உலகப்போர்” திரை விமர்சனம்

ஹிப்பாப் ஆதி தயாரிப்பு மற்றும் கதை, திரைகதை, எழுதி இயக்கி இருக்கும் படம் கடைசி உலக போர்.

கதைக்களம் 2028 ஆம் ஆண்டில் தொடங்குகிறது.தமிழகத்தில் முதலமைச்சராக நாசர் பதிவில் இருந்து வருகிறார்.பினாமியாக, இருக்கும் அவருடைய மச்சான் நட்டி நடராஜ் கூறும் அனைத்து ஐடியாக்களை நம்பி நாசர் செயல் பட்டு வருகிறார்.நட்டி நடராஜ்தான் தமிழக ஆட்சியையே உருவாக்கி இருப்பது போல தன்னை நினைத்து கொள்கிறார்.ரிபப்ளிக் நாடுகள், மற்ற நாடுகள் என இரண்டாக பிரிந்துள்ளது.இந்தியாவை கைபற்ற ரஷிய மற்றும் இதர ரிபப்ளிக் நாடுகள், மற்ற நாடுகள் என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.இந்தியாவை கைபற்ற ரஷிய மற்றும் இதர ரிபப்ளிக் நாடுகள் முயற்சித்து வருகின்றனர்.

இந்த சூழலில் கதாநாயகன் ஹிப் ஹாப் ஆதியை தமிழக முதல்வராக இருக்கும் நாசரின் மகள் காதலித்து வருகிறார்.ரிப்பப்ளிக் நாடுகள் இந்தியா மீது தாக்குதல் நடத்துகின்றனர்.தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் அனைத்து மக்களும் என்ன நடக்கிறது என்று அவதிப்படுகிறார்கள்..சென்னை மாகாணம் மொத்தமும் குண்டுகள் வீசி தரைமட்டமாக அழிக்கப்படுகிறது.

இதற்கு பிறகு என்ன ஆனது? ரிபப்ளிக் நாடு சென்னையை கைப்பற்றியதா? கைப்பற்றவில்லையா? என்பதுதான் இந்த கடைசி உலகப் போர் திரைப்படத்தின் மீதிக்கதை.

கதாநாயகனாக ஹிப் ஹாப் ஆதி அமைதியான முறையில் மிக அருமையாக அரசியல் பேசுகிறார்.காதல் காட்சிகளில் கவனம் செலுத்தாமல் ஆக்சன் காட்சிகள் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தி ரசிகர்களை கவர்கிறார்.

நாயகியாக அனகா கொடுத்த கதாபாத்திரத்தை செய்திருக்கிறார்.

நட்டி நட்ராஜ், தன்னை ஒரு கிங் மேக்கர் என்று சொல்லிக் கொண்டு ஆட்சியாளர்களை ஆட்டுவிக்கும் வேலையை நடிப்பின் மூலம் காண்பித்திருக்கிறார்.வழக்கமான பாணி தான் என்றாலும் கதாபாத்திரம் திரைப்படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.

நாசர் தனது அனுபவ நடிப்பு கொடுத்து திரைப்படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

புலிப்பாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அழகம்பெருமாள், சினிமா நடிகர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஷாரா முனீஷ்காந்த், சிங்கம்புலி, ஹரீஷ் உத்தமன், கல்யாண், தலைவாசல் விஜய், குமரவேல், இளங்கோ குமணன் ஆகியோர் கொடுத்த கதாபாத்திரத்தை மிகவும் சரியாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உடன் இணைந்து திரையில் மிகப்பெரிய அளவில் பிரமாண்டமான ஒளிப்பதிவின் மூலம் மாயாஜாலத்தை நிகழ்த்தி இருக்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம் இசையமைத்து இயக்கி தயாரித்திருக்கும் ஹிப் ஹாப் ஆதி, மிகவும் வித்தியாசமான முயற்சி மட்டும் இன்றி விபரீதமான முயற்சியும் இந்தத் திரைப்படத்தின் மூலம் எடுத்துள்ளார்.

“லப்பர்” பந்து திரைவிமசர்னம்.

சாதியை சாப்பாடாகவும் கதையை ஊருகாயாகவும் வைத்து படம் எடுத்து பணம் சம்பாதிக்கும் இயக்குநர்களுக்கு மத்தியில், சாதியை ஊறுகாயாகவும் நல்ல கதை களத்தை சாப்பாடாகவும் வைத்து பரிமாறி இருக்கிறார் இயக்குநர்.

தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரீஷ் கல்யாண் அவாசிகா, சஞ்சனா மற்றும் பலர் நடத்திருக்கும் படம் லப்பர் பந்து

வேலை வெட்டிக்கு செல்லாமல் கிரிகெட் விளையாடி கொண்டு இருக்கும் ஒரு குடும்ப தலைவனுக்கும். சாதி பாட்டால் திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் , கிடைக்கும் அணிகளில் விளையாடி கொண்டிருக்கும் ஒரு இளந்தாரி பயலுக்கும் இடையே நடக்கும் ஈகோ தான் கதைகளம். படத்தில் சாதி இருந்தாலும் அதை கையாண்டிருக்கும் இயக்குனர் ஒரு நல்ல ஆரோக்கியமான திரைகதை அமைத்து இது வழக்கமான சாதி படமல்ல அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் படம் என்று தைரியமாக இயக்கி இருக்கிறார்.

கிரிகெட்டில் கெத்தாக விளையாடி கெத்து காட்டும் கெத்தாக அட்டகத்தி தினேஷ். கிரிகெட்டுக்காக ஊரை சுற்றி அதற்காக மனைவியிடம் திட்டு வாங்கி, பெட்டி பாம்பாக அடங்கும் காதல் கணவனாக, ஒரு அழகான பெண்ணுக்கு, பாசமிகு அப்பா தினேஷ். ஒரு இடத்தில் இவருக்கு எதிராக கிரிக்கெட் விளையாடி அவரது ஈகோவை சம்பாதித்து, தினேஷின் வெறுப்பில் வீழ்ந்து, ஒரு கட்டத்தில் அவருடைய மகளுடன் காதலில் விழுந்து. அவருடனேயே கிரிக்கெட் விளையாடி , காதலில் கரை சேர்வதே கதை.

தன் வயதுக்கு மீறிய நடுத்தர மனிதனாக, நாயகிக்கு அப்பாவாக தினேஷ் நடிப்பில் முத்திரை பதிக்கிறார். மனைவிக்கு பயந்து, அவர் காதலில் வீழ்ந்து மனைவி முன் ஒரு வார்த்தை பேசாமல், உடல் மொழியால் நடிப்பை அருமையாக தந்திருக்கிறார்.

அன்புவாக ஹரீஷ் கல்யாண் காதலில் ஜெயிக்கும் வேகத்தை விட, மாமனாரின் ஈகோவில் இருந்து வெளிவர படும் பாடுகளை . சிறப்பாக வெளிபடுத்தி இருக்கிறார்.

சுவாசிகா தினேஷின் மனைவியாக.பார்வையிலே நடத்திருக்கிறார். அவர் உடல் மொழி அருமையான நடிப்பை வெளிபடுத்துகிறார்.

மகளாக சஞ்சனா அப்பாவின் பாசத்திலும், காதலிலும் சிக்கி அளவான அழகான நடிப்பை வெளிபடுத்தி இருக்கிறார்.

நண்பர்களாக வரும் பால சரவணன், ஜென்சன் நடிப்பு கதையுடன் அழகை ஒன்றி வெளிபட்டிருக்கிறது.

வழக்கமான சாதி கதையாக செல்லாமல் மாமனார்,மருமகனுக்கு இடையேயான கிரிக்கெட் ஈகோவாக திரைக்கதை அமைத்திருப்பது படத்தின் மிக பெரிய பலம். இதனால் இயக்குநருக்கு குடுக்கலாம் ஒரு சபாஷ்.


லப்பர் பந்து நிச்சயம் பெளண்டரி பறக்கும்.

“நந்தன்” திரைவிமர்சனம்

இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார், ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல் மற்றும் பலர் நடித்திருக்கும் திரைபடம் நந்தன்

காலம் காலமாக எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் போட்டியின்றி ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பஞ்சாயத்து தலைவராக இருந்து வரும் வணங்கான் குடி கிராமத்தை திடீரன தனித்தொகுதியாக மாற்ற, ஏற்கனவே தலைவராக இருக்கும் பாலாஜி சக்திவேல் தன் வீட்டில் வேலை செய்யும் தலித்தை சேர்ந்த சசிகுமாரை நிற்க வைத்து தனக்கு அடிமையாக்கி தானே அதிகாரத்தில் இருக்க நினைக்கிறார்.

அது நிறைவேறியதா? இல்லை சசிகுமார் அடிமை தனத்தில் இருந்து வெளியே வந்தாரா? என்பது தான் கதை.
வணங்கான் குடி தலைவராக பாலாஜி சக்திவேல், அவரின் அடிமை கூல் பானையாக சசிகுமார்.
பொது தொகுதியாக இருக்கும் தனது ஊரை தனித்தொகுதியாக மாற்றியதும் கோபப்படும் பாலாஜி சக்திவேல், தனக்கு ஒரு அடிமை தலைவரை தேர்ந்தடுக்க காட்டும் படபடப்பு, அவன் கை மீறும் போது காட்டும் கோபம், அந்த ஊரின் நிரந்தர தலைவர் தான் மட்டுமே என்று நினைக்கும் ஆணவம் என பல்வேறு நடிப்பு பரிமாணத்தில் நிற்கிறார்.
கூல்பாணை அம்பேத்குமாராக சசிகுமார். அந்த கதாபாத்திரமாக மாற அவர் முயற்ச்சி செய்திருந்தாலும் படத்தில் ஒட்டாமலே இருக்கிறது. நடிப்பு மிகையாக தெரிகிறது. அவருடைய கதாபாத்திரம் அறிவாளியாக இல்லாமலும், முட்டாளாக காட்ட முடியாமலும் தினறுகிறார் இயக்குநர். சசிகுமார் தன் நடிப்பை மெருகேற்ற வேண்டும். கூல் பாணை மனைவியாக ஸ்ருதி பெரியசாமி நடிப்பு ஓகே ரகம். சிலகாட்சிகளில் அதிக நடிப்பும், சிலகாட்சிகளில் அளவான நடிப்பும் தந்திருக்கார்.
படத்தில் வரும் ஒரு மாப்பிள்ளை கேரக்டர் கத்திகத்தி பேசுகிறது.
இரா சரவணன் ,, பொது தொகுதி தனி தொகுதியாக மாறிஅங்கு வரும் தலித் தலைவர்களை மற்ற சாதியினர் படுத்தும் அவமானத்தை மையப்படுத்தி எடுத்திருக்கும் கதை களம் நிச்சயம் புரட்சி வெடித்திருக்க வேண்டும். ஆனால் அவர் அமைத்திருக்கும் திரைகதையில் ஒரு சுனக்கம் ஏற்படுகிறது. தலித் மக்களை காட்டினால் அவர்களை கருப்பாகவும், குளிக்கதவர்களாகவும் தான் காட்ட வேண்டும் என்பது கட்டாயமில்லை.

BDO அதிகாரியாக வரும் சமுத்திரகனி, ஊனமுற்ற அதிகாரிகள் தான் நேர்மையாக இருப்பார்கள் என்று காட்டி இருப்பது ஏன்.?


ஜிப்ரானின் இசை படத்திற்கு சற்றே பலம்.


மக்களிடம் சாதி ஒழிந்தாலும் அரசியல் தலைவர்கள் நிச்சயம் அதை ஒழிக்க விடமாட்டார்கள், எத்தனை திரைப்படம் வந்தாலும் மாறாது அதிகாரமும், அரசியலும்.

நந்தன் பெருக்கேற்ற வீரியம் அதிகமாக இருந்திருக்கலாம்.

G.0.A.T. திரைப்பட விமர்சனம்.

தந்தைக்கு வில்லனாகும் மகன், மகனை வென்று (கொன்று) ஜெய்ப்பாரா, ஜெய்க்கிறாரா?

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந், பிரபுதேவா, அஜ்மல் , மைக்மோகன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் G.O.A.T.

இந்தியாவின் ரகசிய உளவாளிகளாக ஜெயராமிற்கு கீழ் வேலை செய்யும் விஜய், பிரசாந், பிரபுதேவா, அஜ்மல் நால்வரும்(முக்கிய விஷயம் இவர்கள் வேலை செய்வது கட்டின பொண்டாகளுக்கே தெரியாதாம் இதை நம்ப வேண்டும்). ஒரு ரகசிய வேலையாக ஒரு தீவிரவாதியை பிடிக்க வெளிநாடு போகிறார்கள். அங்கு தீவிரவாதிகளின் தலைவன் மைக்மோகனை கொன்று நாடுதிரும்புகிறார்கள். அடுத்த வேலைக்காக பாங்காக் செல்ல முடிவெடுக்கும் போது விஜயின் மனைவி சினேகா தொல்லை தாங்க முடியாமல் அவர்களையும் அங்கு அழைத்து செல்ல, அங்கு ஏற்படும் தீவிரவாதிகள் தாக்குதலில் மகனை எதிர்பார்த்தபடியே இழந்து விடுகிறார். அதே நேரத்தில் அவருக்கு பெண் குழந்தை பிறக்கிறது. இந்தியா உளவுத்துறை வேண்டாம் என்று இந்தியன் எம்பசியில் வேலைக்கு சேர்கிறார். கிட்டத்தட்ட 20 வருடம் கழித்து எம்பசி வேலையாக  ரஷ்யா செல்ல அங்கு பாங்காக்கில் தொலைத்த தன் மகனை காண்கிறார். பிரசாந்த் உதவியுடன்இந்திய அழைத்து வந்து குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கிறார்.

ஒரு நாள்ஜெயராமை சந்திக்க செல்ல நினைக்கும் போது அவரை ஒருவன் கொலை செய்ய அவனை பிடிக்க முடியாமல் மீண்டு உளவு வேலைக்கு சேர்கிறார்.

விஜக்கு மற்றும் அவரது டீமிற்கு தான் சஸ்பென்ஸ்., நமக்கு அது விஜயின்  மகன் இன்னொரு விஜய் என்று தெரிந்த உடன் படமே முடிந்து விடுகிறது. இவ்வளவு கதையும் முதல் ஒன்னரைமணி நேரத்தில் முடிந்துவிடுகிறது.. அதுவும் அந்த மகனை பாங்காக்கில் மைக்மோகன் திருடி சென்று வளர்த்து அப்பாவுக்கு எதிராக வளர்த்து பழிவாங்க வருகிறார் என்று தெரிந்தவுடன் எப்படியும் அப்பா மகனை கொன்று ஜெய்ப்பார் என்று தெரிந்து விடுகிறது. அப்புறம் எதற்கு அடுத்த ஒன்னரை மணி நேரம் எடுத்தார்கள் என்று தெரியவில்லை.

போன படத்தில் மகனுக்கு அப்பா வில்லனாக இருந்தார். இந்த படத்தில் அப்பாவுக்கு மகன் வில்லன். தன் மகன் மேல் என்ன பகையோ தெரியவில்லை மகன் பேர் சஞ்சய். நல்ல வேளை மனைவிக்கு சங்கீதா என்று வைக்கவில்லை. அப்பா விஜயின் நடிப்பு ஒரு இடத்தில் பல வருடங்கள் கழித்து மகனை பார்க்கும் இடத்தில் மட்டுமே ரசிக்கும்படி இருக்கிறது. மகன் விஜய் வில்லன். AI டெக்னாலஜி மூலம் சிறு வயதாக காட்டுகிறார். பார்க்க பொம்மை போல் உள்ளது. உதட்டசைவு ஒட்டவே இல்லை, அப்பா மகன் இருவரது ஹேர்ஸ்டைல் மின்சாரம் பாய்ந்த பொமேரியன் நாய் முடி போல் சிலிர்த்து கொண்டு இருக்கிறது.

AI மூலம் விஜய்காந்தை கொண்டு வந்திருக்கிறார்கள். பாவம் இறந்த பிறகு அசிங்கப்படுத்தி இருக்க வேண்டாம்.

பிரசாந்த் நீண்ட நாட்கள் கழித்து எண்ட்ரி அவருக்கு தான் எமோஷனல் நடிப்பு வராது என்று தெரியாதா? அவரின் மகளை கொன்று பிரசாந்தை உருண்டு புரண்டு அழவிட்டு பார்க்கபாவமாக  இருக்கிறது.

அஜ்மல் பலி கொடுப்பதற்காக வளர்க்கப்பட்ட ஆடு,

நான்கு பேர் ஒன்றாக இருந்தால் அதில் ஒரு வில்லன் வேண்டுமல்லவா அது பிரபுதேவா.

மைக் மோகன் பேசாமல் பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம். அதை கொண்டு வந்து பிரித்து போட்டு நாசம் செய்திருக்கிறார்கள். சினேகா வருகிறார் அழுகிறார் போகிறார். லைலா இரண்டு சீனில் அழகாக சிரிக்கிறார்.

பிரசாந்தின மகளாக வரும் மீனாட்சி நடிக்க முயற்சிக்கிறார். ஆனால் மனதில் பதியவில்லை.

மேலும் வெங்கட்பிரபு கூட்டம் படத்தில் ஆங்காங்கே வருகிறது ஒடுகிறது.

படத்தின் ஒளிபதிவு பரவாயில்லை.

இசை யுவனிறகு விஜய் மேல் கோபமா இல்லை, வெங்கட்பிரபு மேல் கோபமா என்று தெரியவில்லை படத்திற்கு இசை அமையவே இல்லை நமக்கெல்லாம் வில்லனாகி விட்டார் யுவன்.

வெங்கட்பிரபு முதல் பாதியிலேயே படத்தை முடித்து விட்டு இரண்டாம் பாதியில் என்ன செய்வது என்று தெரியாமல் , விஜக்கு படத்தின் பட்ஜெட்டில் பாதியை சம்பளமாக தந்ததால் அவரை மட்டுமே சுற்றி ஓடி இருக்கிறார் அவரும் கிளைமாக்ஸ் சண்டையின் நேரத்தை குறைத்து ஏதாவது கதை சொல்லியிருந்தால் பராவாயில்லை.வெறும் விஜய் புராணமாக உள்ளது. இரண்டு மணி நேர படத்திற்கு எக்ஸ்ட்ரா ஒரு மணி நேரம் வேஸ்ட். கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் அல்ல, கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல்டைம் ஒர்ஸ்ட் ஆக ஆனது.

மொத்தத்தில் GOAT என்னும் AGS , வெங்கட்பிரபு என்னும் கசாப் கடை கரானிடம் மாட்டிய பலி ஆடு

“சாலா” திரைவிமர்சனம்

சிறுவயதில் தீரன் ஏரியாவில் தாதாவாக இருக்கும் அருள்தாஸின் உயிரை ஒரு மோதலில் போது காப்பாற்றுகிறார்.உடனே தாதா அருள்தாஸ் தன் வாரிசாக கதாநாயகன் தீரனை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அருள்தாஸின் எதிரி தாதாவான சார்லஸ் வினோத் ஏலத்தில் அருள்தாஸ் நடத்தும் பார்வதி பார் உரிமையை ஏலத்தில் கைப்பற்றுகிறார். இழந்த பார்வதி பாரை மீட்டெடுப்பதே அருள்தாஸின் லட்சியமாக வாழ்ந்து வருகிறார்.கதாநாயகன் தீரன் வளர்ந்து தனது குருவிற்காக அந்த பார்வதி பாரை மீட்டெடுப்பதில் உறுதுணையாக நிற்கிறார்.பலநூறு பார்களை நடத்த வேண்டும் என்று எண்ணத்தில் இருக்கும் கதாநாயகன் தீரன்.
மதுபான கடைகளையும் பார்களையும் மூட வேண்டும் என்று போராட்டம் நடத்தும் நாயகி ரேஷ்மாவுக்கும் தீரனுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட, எதிரும் புதிருமாக இருக்கும் இருவருக்கும் நடக்கும் மோதல் காதலாக மாறுகிறது.இதற்கிடையே இந்த பார்வதி பாரை ஏலம் எடுப்பதில் நாயகன் தரப்புக்கும், வில்லன் தரப்புக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது.
பார்வதி பாரை ஏலம் எடுத்தார்களா? எடுக்கவில்லையா?ரேஷ்மாவுக்கும் தீரனுக்கும் காதல் என்ன ஆனது ஒன்று சேர்ந்தார்களா? என்பதுதான் இந்த சாலா திரைப்படத்தின் மீதிக்கதை.

சாலா திரைப்படத்தில் அறிமுக நாயகனாக தீரன் அறிமுகமாகியிருக்கிறார். ஆறடி உயரம், கட்டுமஸ்தான உடம்பு என்று முரட்டுத்தனமாக இருந்தாலும் அப்பாவித்தனமான தனது நடிப்பால் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.தன் காதலி கதாநாயகி ரேஷ்மா பாதிப்புக்கு ஆளாகும்போது பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்தி திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் மனதில் வரவேற்புப் பெறுகிறார்.
நாயகியாக ரேஷ்மா வெங்கடேஷுக்கு புரட்சிகரமான கதாபாத்திரம், அதை புரிந்து நடித்திருக்கிறார்.
சார்லஸ் வினோத் மற்றும் அருள்தாஸ் வழக்கமான நடிப்பு கொடுத்து கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் மிகவும் அருமையாக நடித்து இருக்கிறார்கள்..
நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரீநாத் , சம்பத் ராம், யோகிராம், பள்ளி மாணவர்களாக நடித்திருக்கும் உள்ளிட்ட அனைவரும் தங்களுக்கு கொடுத்த வேலையை மிகவும் சரியாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ரவீந்திரநாத் குருவின் அற்புதமாகவும் காட்சிப்படுத்துள்ளார்.
இசையமைப்பாளர் தீசன் பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு பயணித்து இருக்கிறார்.
மதுப்பழக்கத்திற்கு மக்கள் எப்படியெல்லாம் அடிமையாகி இருக்கிறார்கள் என்பதை சொல்லியிருக்கும் இயக்குநர் மணிபால் அவர்களுக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்.

“போகுமிடம் வெகு தூரம் இல்லை” திரை விமர்சனம்….

விமல் கருணாஸ் மற்றும் பல நடிப்பில் மைக்கேல் கே ராஜா இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் போகுமிடம் வெகு தூரம் இல்லை

அமரர் ஊர்தி ஓட்டுனரான விமல், நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் மனைவியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனது தாத்தாவை துணைக்கு வைத்து விட்டு மருத்துவ செலவிற்காக -சென்னையில் இறந்தவரின் சடலத்தை ஏற்றுக் கொண்டு திருநெல்வேலிக்கு பயணிக்கிறார்.வழியில் கூத்து கலைஞர் கருணாஸ் தன்னை செல்லும் வழியில் இறங்கி விடுமாறு கேட்க, மனதளவில் பிடிக்காமல் துணைக்காக ஏற்றுக்கொள்கிறார்.
இருவரும் பயணிக்க வழியில் ஒரு காதல் ஜோடியும் வண்டியை நிறுத்தி ஏறிக்கொள்ள இந்த இருவர் மற்றும் கருணாஸ்னால் பல விதத்தில் பல பிரச்சனைகள் கதாநாயகன் விமலுக்கு வருகிறது.
இந்த காதல் ஜோடிகளால் வந்த பிரச்சனை என்ன? அமரர் ஊர்தியில் உள்ள சடலத்தை ஒப்படைத்தாரா? ஒப்படைக்கவில்லையா? என்பதுதான் போகுமிடம் வெகு தூரம் இல்லை திரைப்படத்தின் மீதிக்கதை.
அமரர் ஊர்தி ஓட்டுனர் குமார் கதாபாத்திரத்தில் மிகவும் கனத்த முகத்துடனும் தன்னுடன் பயணித்த கருணாஸ் இறந்த பிறகு மிகவும் நினைத்து வேதனைப்படும் காட்சிகளிலும் அருமையாக தன்னை மறந்து நடித்துள்ளார்.எப்பொழுதும் பார்க்கும் விமலாக இல்லாமல் புது மாதிரியான விமலாக நடித்திருக்கிறார்.
மற்றொரு கதையின் நாயகனாக கருணாஸ் நடித்துள்ளார்.
கூத்துக் கலைஞர் கதாபாத்திரத்தில் மிகவும் அருமையாகவும் கூத்துக் கலைஞரின் நடை உடை பாவனை அனைத்தையும் ஏற்று கதாபாத்திரத்தை உணர்ந்து மிகவும் அற்புதமாக நடித்து இருக்கிறார்.
நம்மளால் ஏற்பட்ட தவறுக்கு நாம் தான் பரிகாரம் செய்ய வேண்டும் என கருணாஸ் எடுக்க முடிவு திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை தூக்கி வாரி போட்டு விட்டது.
விமல் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மேரி ரிக்கெட்ஸ், அருமையாக நடித்துள்ளார்.
தீபா சங்கர், ஆடுகளம் நரேன், பவன், சார்லஸ் வினோத், அருள்தாஸ், வேல ராமமூர்த்தி, மனோஜ்குமார் அனைத்து கதாபாத்திரங்களும் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் டெமில் சேவியர் எட்வர்ட்ஸ். மிகச்சிறந்த ஒளிப்பதிவை கொடுத்து இருக்கிறார்.
இசையமைப்பாளர் என்.ஆர். ரகுநந்தன் இசை மற்றும் பாடல்கள் பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு இசை உயிரோட்டமாக உள்ளது.
ஒரு அமரர் ஊர்தி ஓட்டுனரின் ஒரு நாள் வாழ்க்கையை வைத்து, அதை சுற்றிய பல சுவாரஸ்யமான காட்சிகளும் அந்த ஒரு நாள் வாழ்க்கையின் அனுபவங்களையும் படமாக்க முயற்சி செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் மைக்கேல் கே ராஜா. இந்த அமரர் ஊர்தியில் பயணிக்கும் இரண்டு கதாபாத்திரங்களை மையமாக வைத்து யோசித்த கதை அருமை, அதன் திரை கதையை இன்னும் கொஞ்சம் மெனக்கட்டு சுவாரஸ்யமாக அமைத்திருந்தால், அந்த மனிதர்களின் வாழ்க்கையை சுவாரசியமாக கொடுத்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்
மொத்தத்தில் போகும் இடம் வெகு தூரம் இல்லை விமலின் திரை வாழ்க்கைக்கு நிச்சயம் ஒரு மயில் கல்லாக இருக்கும்

“தங்கலான்” திரை விமர்சனம்

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் பலர் நடித்து இருக்கும் திரைப்படம் “தங்கலான்”விக்ரமின் நடிப்பை மட்டுமே நம்பி…………..

கதை சுருக்கம்,
வடாற்காடு மாவட்டம் வேப்பூர் கிராமத்தில் வசிக்கும் அடிமை மக்களை சுற்றி கதை ஆரம்பித்து அவர்கள் தங்க சுரங்கத்தை தேடிச் செல்லும் ஆங்கிலேயர்கள் காலத்து கதைக்களத்தை கையில் எடுத்து இருக்கிறார் இயக்குனர்.
வடாற்காடு மாவட்டம் வேப்பூர் என்னும் கிராமத்தில் வசிக்கும் மக்கள் அந்த ஊரில் உள்ள ஒரு ஜமீன்தாருக்கு அடிமைகளாக வாழ்ந்து வருகின்றனர், அவர்களது நிலங்களை எல்லாம் அந்த ஜமீன்தார் அபகரித்து அவர்களை அடிமையாக வைத்திருக்கிறார். ஆனால் அதே ஊரில் வசிக்கும் விக்ரம் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறார், இவ்வாறு வாழ்ந்து வரும் விக்ரமுக்கு ஒரு கனவு வந்து செல்கிறது, அந்த கனவில் அவர் ஒரு தங்க சுரங்கத்தை தேடிச் செல்வதாகவும், அந்த தங்க சுரங்கத்தை ஒரு சூனியக்காரி பாதுகாத்து வருவதாகவும், அந்த சூனியக்காரியை கொன்று அந்த தங்கத்தை எடுத்து, அதன் மூலம் நிலத்தை தன் முன்னோர்கள் வாங்கியதாக அவருக்கு அடிக்கடி கனவு வருகிறது.

இந்நிலையில் விவசாயம் முடிந்து அறுவடை செய்து வைத்திருக்கும் நெல்களை ஜமீன்தார் ஆட்கள் கொளுத்தி விட, அதனால் அவரால் வெள்ளையர்களுக்கு வரி கட்ட முடியாமல் போகிறது. அந்த வரியை ஜமீன்தார் கட்டி விக்ரமையும் அடிமைப்படுத்திக் கொள்கிறார்.இந்த நேரத்தில் அந்த ஊருக்கு வரும் ஒரு ஆங்கிலேயர் இவர்களைக் கொண்டு ஒரு தங்கச் சுரங்கத்தை கண்டுபிடிக்க, விக்ரம் மற்றும் அந்த மக்களை அழைத்துச் செல்கிறார் .அவ்வாறு செல்லும் விக்ரக்கு நம் கனவில் வரும் அந்த இடம் தான் தங்கச் சுரங்கம் என்று கூறி அழைத்துச் செல்கிறார்.

அந்த இடத்தில் உண்மையிலேயே தங்கச்சுரகம் இருந்ததா?

அந்த இடத்தை அந்த சூனியக்காரி தான் காவல் காத்து வருகிறாரா?

அந்த சூனியக்காரிடமிருந்து தங்கத்தை எடுக்கிறார்களா?

என்பதை சுற்றி திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.

இந்த படத்தில் முதன்மை பாத்திரத்தில் விக்ரம் தங்கலானாக தன் உடலை வருத்தி நடித்திருக்கிறார்.இந்த தங்கலானுக்கு படத்தில் கிட்டத்தட்ட 13 கெட்டப்புகள் ,இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமாக விக்ரமின் நடிப்பு மட்டுமே.
விக்ரமின் மனைவியாக வரும் பார்வதி மூன்று பிள்ளைகளுக்கு தாயாக வாழ்ந்திருக்கிறார், பசுபதியின் கதாபாத்திரம் சிறப்பாக நடித்திருந்தாலும் அது திரைக்கதையில் திணித்தது போல் இருக்கிறது அவரது கதாபாத்திரம்.
மாளவிகாவின் கேரக்டர் படம் முழுவதும் கத்திக்கொண்டே இருக்கிறது. அவளை சூனியக்காரியாக காட்ட அவ்வாறு கத்த வைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.
படத்தில் வில்லனாக வரும் ஆங்கிலேய நடிகர் தன் வில்லன் கதாபாத்திரத்தை தந்திருக்கிறார்.
இந்தப் படத்தை இயக்கியிருக்கும் ரஞ்சித் அவர்கள் திரைக்கதையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். இந்த படத்தில் விக்ரம் மட்டுமே மிகவும் மெனக்கட்டு தன் உடம்பை வருத்தி சிக்ஸ் பேக் எல்லாம் வைத்துக் இருப்பது போல் கதாபாத்திரத்தை வடிவமைத்துவிட்டு மற்றவர்களை அனைவரும் தொந்தியும் தொப்பையுமாக இருப்பது போல் வடிவமைத்திருக்கிறார் இது விக்ரமிற்கு இடைஞ்சலாக தான் உள்ளது அதை கவனித்திருக்கலாம். மேலும் இயக்குனர் தனக்கே உரிய குறியீடுகளை ஆங்காங்கே திணித்திருக்கிறார் ராமானுஜர், திப்பு சுல்தான், ஆங்கிலேயர்கள், பண்ணையார்கள் என்று பலரை திரைக்கதை வம்படியாக புகுத்தியிருக்கிறார்.ஒருவேளை கோலார் தங்க சுரங்கத்தில் சிக்கி பலர் உயிரிழந்த, அதை தோண்டி எடுக்க அவர்கள் பட்ட அவஸ்தையை ஆராய்ந்து எடுத்து அதை அப்படியே திரைக்கதை அமைத்திருந்தால் படம் நிச்சயமாக ரசிக்கும்படி இருந்திருக்கலாம்.
படத்தின் இரண்டாவது மிகப் பெரிய பலம் ஜிவி பிரகாஷ் இசை
படத்தின் மிகப்பெரிய மைனஸ் படத்தில் வரும் கிராபிக்ஸ் காட்சிகள் கிராபிக்ஸ் டெக்னாலஜிகள் எவ்வளவோ வளர்ந்து இருக்கும் நிலையில் கிட்டத்தட்ட 10,15 ஆண்டுகளுக்கு முன்பு வந்தது போல் உள்ளது.

தங்கலான் தூக்கம் வரவிடாமல் தவிர்த்திருக்கலாம்!!!!!