விஜய் சேதுபதி தன்னுடைய பழைய அடையாளங்களை மறைத்து மக்களோடு மக்களாக புதிய வாழ்க்கை வாழ்வதற்காக மலேசியா செல்கிறார்.யோகி பாபு மூலம் திவ்யா பிள்ளை உணவகத்தில் வேலைக்கு சேருகிறார். ருக்மணி வசந்துடன் விஜய் சேதுபதியுடன் நட்பு ஏற்பட, நாளடைவில் காதலாக மாறுகிறது.இதற்கிடையே ருக்மணி வசந்தக்கு விட்டை உடனடியாக மீட்க பணம் தேவை ஏற்படுகிறது. வீட்டை மீட்க பணம் தேவை என்பதால் கடன் வாங்க சென்ற இடத்தில் சூதாடி, ஒரு கோடி ரூபாய்க்கு விஜய் சேதுபதி கடனாளியாகி விடுகிறார். கடன் பட்ட ஒரு கோடி ரூபாயை திரும்ப செலுத்தவில்லை என்றால் உயிர் போய்விடும் என்ற சூழ்நிலையில், வங்கியில் கொள்ளையடிக்க விஜய் சேதுபதி திட்டம் போடுகிறார்.
போடப்பட்ட திட்டத்தில் வெற்றி பெற்றாரா? வெற்றி பெறவில்லையா? என்பதுதான் கதை.
விஜய் சேதுபதி போல்ட் கண்ணன் என்ற கதாபாத்திரத்தை வழக்கம் போல் நடிப்பின் மூலம் ரசிகர்கள் ரசிக்கும்படி அசத்தியிருக்கிறார்.
கதாநாயகியாக ருக்மணி வசந்த், அழகு மற்றும் நடிப்பு இரண்டிலும் ஸ்கோர் செய்து அசத்துகிறார்.
யோகி பாபுவின் காமெடி காட்சிகள் சிரிப்புக்கு உத்தரவாதம்…..???????????????
திவ்யா பிள்ளை, மற்றும் வில்லன்களாக நடித்திருக்கும் பப்லு பிரித்விராஜ், பி.எஸ்.அவினாஷ், ராஜ்குமார் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக அமைந்திருக்கிறார்கள்.
இதுவரை வந்த திரைப்படங்களில் காட்டப்படாத மலேசியாவில் உள்ள லொக்கேஷன்களை தேடிப்பிடித்து காட்சிப்படுத்தி காட்சிகளை கலர்புல்லாகவும், கமர்ஷியலாகவும் திரைப்படமாக்கியிருக்கிறார்.
இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகர்…………………..??????????????????
இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்-ன் பின்னணி இசை ……………????????????
வங்கி கொள்ளை கதைகள் பல நாம் பார்த்திருந்தாலும், அவற்றில் இருந்து எந்தவிதத்திலும் இந்த படம் ??????????????????????????
சூரி, தனது அக்கா சுவாஷிகா மீது அளவு கடந்த அன்பாக இருக்கிறார்.சுவாசிகாவுக்கு திருமணம் நடந்து பந்து வருடங்களாக குழந்தை இல்லாமல் காத்திருந்த சுவாசிகாவுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. சூரி அக்கா சுவாசிகாவுக்கு பிறந்த ஆண் குழந்தையை தாயைப் போல அனைத்து பணிவிடைகளும் செய்து சீராட்டி வளர்க்கிறார்.ஐஸ்வர்யா லட்சுமி சூரியின் அக்கா பிரசவம் பார்த்து டாக்டராக பணிபுரிந்து வருகிறார். ஐஸ்வர்யா லட்சுமி, சூரிக்கு காதல் மலருகிறது அந்தக் காதல் திருமணத்தில் சென்று முடிகிறது.
ஐஸ்வர்யா லட்சுமி ,. சூரியின் இல்லற வாழ்க்கையில் அக்கா மகன் முதல் இரவில் இருந்து ஆரம்பித்த பிரச்சனை இல்லற வாழ்க்கையில் அக்கா மகன் பாசம் இடையூறாக அமைகிறது. இல்லற வாழ்க்கையில் பிளவு ஏற்பட்டு இருவரும் பரிகிறார்கள்.
இரு குடும்பங்களுக்கு இடையேசிக்கல்களும் பிரச்சனைகள் தீர்ந்ததா?கதாநாயகன் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
எந்த திரைப்படத்திலும் எப்படியப்பட்ட கதாப்பாத்திரமாக இருந்தாலும் எப்படிப்பட்ட கதையாக இருந்தாலும், அதற்கு ஏற்ற நடிகனாக தன்னால் உருவெடுக்க முடியும், என்பதை இந்த திரைப்படம் மூலம் தனது நடிப்பினால் மீண்டும் நிரூபித்திருக்கிறார்.
தன் குடும்பம் மற்றும் அக்கா மீது காட்டும் அன்பும், அக்கறையும் போல் தனது மனைவியிடம் காட்டவில்லை என்பதை உணர்ந்து கலங்கும் காட்சியில் தாய்மார்களை கண் கலங்க வைக்கும் கதாநாயகன் சூரிக்கு, இனி தமிழக பெண் ரசிகைகள் அதிகரிக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவர் கதாபாத்திரம் , மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி, அன்பு பாசம் நெருக்கம் அனைத்து எதிர்பார்ப்பையும், ஏமாற்றத்தையும் தனது நடிப்பின் மூலம் மிகவும் நேர்த்தியாகவும் அருமையாகவும் நடித்திருக்கிறார்.
ராஜ்கிரணின் கதாபாத்திரமும், அவருடைய மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜி சந்திரசேகர் இருவரும் நடிப்பு திரை இருப்பும் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலமாக அமைந்திருக்கிறது.
‘லப்பர் பந்து’ திரைப்படத்திற்குப் பின் மீண்டும் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் சுவாஷிகா சூரியின் அக்கா கதாபாத்திரத்தில் அவருடைய கண்கள் மூலமாகவே நடிப்பின் மூலம் பல உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார்.
நடன இயக்குனர் பாபா பாஸ்கர், மாஸ்டர் பிரகீத் சிவன், பால சரவணன், ஜெயப்பிரகாஷ், கீதா கைலாசம், சாயா தேவி, நிகிலா சங்கர் என மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் அளவாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவுமிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.
இசையமைப்பாளர் ஹேசம் அப்துல் வாகப் இசையில் பாடல்கள் இனிமை. பின்னணி இசை அதிகம் சத்தம் இல்லாமல் திரைக்கதை ஓட்டத்திற்கு அளவாக சிறப்பு சேர்த்து இருக்கிறார்.
திருமண, காது குத்து, சீமந்தம் நிகழ்ச்சி என்று திரைப்படம் முழுவதும் குடும்ப நிகழ்ச்சிகள் மற்றும் சிறு சிறு பிரச்சனைகளை மிகவும் சுவாரஸ்யமாக, குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ்,
திரையரங்கில் வெளியாகும் திரைப்படங்களை கிஸ்ஸா 47 என்ற பெயரில் யூடியுப் மூலம் விமர்சனம் செய்யும் சந்தானத்திற்கு ஒரு தமிழ் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு உங்களது குடும்பத்துடன் வரவேண்டும் என அழைப்பு வருகிறது.அந்த சிறப்புக் காட்சி அழைப்பின் பேரில் சந்தானத்தின் குடும்பம் அப்பா நிழல் ரவி, தங்கை யாஷிகா ஆனந்த், அம்மா கஸ்தூரி செல்கிறார்கள். சிறப்பு காட்சி நடக்கும் திரையரங்கில் ஆபத்து இருப்பதை உணர்ந்த சந்தானம் தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக செல்கிறார். திரையிடப்படும் சிறப்பு காட்சியில் குடும்பமும், திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்களாக மாறி இந்த திரைப்படத்தின் கதைக்குள் சிக்கிக் கொள்கிறார்கள்.
அந்த பிரச்சனையில் சந்தானம் தன் குடும்பத்தை காப்பாற்றினாரா? காப்பாற்றவில்லையா?, என்பதுதான் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் சந்தானம் தனது வழக்கமான பாணியில் தன்னுடைய அணியினருடன் சேர்ந்து, வழக்கமான காமெடிகளை கொடுத்து திரைப்படத்தை தாங்கி பிடித்திருக்கிறார். சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் கீதிகா திவாரி கதாநாயகி மட்டுமின்றி பேயாகவும், பெயருக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
புதியதாக கூட்டணியில் இணைந்திருக்கும் இயக்குநர்கள் கெளதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன், தந்தையாக நடித்திருக்கும் நிழல்கள் ரவி, தாயாக நடித்திருக்கும் கஸ்தூரி,யாஷிகா ஆனந்த் கூட்டணி மற்றும் மொட்டை ராஜேந்திரன், மாறன், ரெடின் கிங்ஸ்லி என பழைய காமெடி கூட்டணியும் சேர்ந்து திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை சிரிக்க வைப்பதற்கு முயற்சி செய்து இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் தீபக் குமார் பதி கலர்ஃபுல்லாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
இசையமைப்பாளர் ஆப்ரோ இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை எந்த விதத்திலும் ஈர்க்கவில்லை.
சென்னை, சிட்டிக்குள் தொடர்ந்து அடுத்தடுத்து சில நபர்கள் உடல்கள் முழுவதுமாக பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட மர்மமான முறையில் கொலை செய்வது அடிக்கடி நடந்து வருகிறது.மர்மமான முறையில் நடக்கும் கொலை வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரியான ஷாஷாங் விபத்தில் சிக்கிக் கோமாவிற்கு செல்கிறார்.
அதனைத் தொடர்ந்து இந்த கொலை வழக்கை நவீன் சந்திரா விசாரித்து வருகின்றார்.நவீன் சந்திராவிற்க்கு துணையாக துணை ஆய்வாளர் திலீபனும் வருகிறார்.
இந்தத் தொடர் கொலையை செய்து வரும் அந்த கொலைகாரன் யார்? என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதை.
நவீன சந்திரா காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தை தன்னுடைய பார்வையாலும் தனது உடல் மொழியாலும் மிக எளிதாக அரவிந்தன் கதாபாத்திரத்தோடு திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை பயணிக்க வைத்து விட்டார். தனக்கே உரித்தான பாணியில் மிகச் சரியாக தனது கதாபாத்திரத்தை செய்து முடித்திருக்கிறார்.
தொடர்ந்து, காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஷாஷாங் மற்றும் திலீபன் இருவருக்கும் கொடுத்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்திருக்கிறார்கள்.
நடிகை அபிராமி சிறப்புத் தோற்றத்தில் வந்து இருக்கிறார்.
இசையமைப்பாளர் டி இமானின் இசையில் பலம் சேர்த்திருக்கிறார்.
தமிழ் திரைப்பட உலகில் இதுவரை எந்த ஒரு திரைப்படத்திலும் பார்த்திராத ஒரு கதையை மிக கவனமாக கையாண்டு அதை தெளிவாக காட்சிப்படுத்தி அழகான படைப்பாக படைத்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ் அஜ்ல்ஸ்.
பன்முகத் திறமை கொண்ட ராகவ் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகும் புதிய மர்மம் மற்றும் ஃபேன்டஸி கலந்த திரில்லர் திரைப்படம் “நாக் நாக்”. இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. ராகவ்வின் முதல் இயக்க முயற்சியான இந்தப் படம், அதன் வெளியீட்டு தருணத்திலேயே ஒரு முக்கிய வலு சேர்க்கும் விதமாக, தேஜாவு, தருணம் போன்ற தரமான படங்களை இயக்கியவரும், இயக்குநருமான அரவிந்த் ஸ்ரீனிவாசன், தனது “ஆர்கா என்டர்டெய்ன்மெண்ட்ஸ்” நிறுவனம் வாயிலாக வெளியிட உள்ளார்.
ஒரு புதிய சினிமா அனுபவத்தை ‘நாக் நாக்’ திரைப்படம் நிச்சயம் தரும். இந்தப் படத்தின் தனித்துவமான கதைக்கருவும், தரமான உருவாக்கமும் இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் அவர்களை வெகுவாகக் கவர்ந்தது. இதனால் மகிழ்ச்சியடைந்த அவர், இந்தப் படத்துடன் கைகோர்த்துள்ளார்.
இதுகுறித்து அரவிந்த் ஸ்ரீனிவாசன் கூறுகையில், “நான் இந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியதன் நோக்கமே, திறமையான புதிய இயக்குனர்களை அடையாளம் கண்டு, அவர்களின் தரமான கதைகளை பரந்த பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதுதான். ‘நாக் நாக்’ பார்த்தபோது, இது மிகவும் தனித்துவமான, தரமான உள்ளடக்கம் என்று எனக்கு தோன்றியது. அதனால் உடனடியாக இந்த படக் குழுவினருடன் இணைய முடிவு செய்தேன். இப்படி ஒரு படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று தெரிவித்தார்.
இயக்குநர் ராகவ் ரங்கநாதன் நெகிழ்ச்சியுடன் தனது திரைப்பயணம் மற்றும் இந்தப் படம் பற்றி கூறியதாவது. “இது எனக்கு ஒரு முக்கியமான தருணம்… மிகவும் தனிப்பட்ட பயணத்தின் ஒரு பகுதி. இத்தனை காலமாக நீங்கள் என்னை ஒரு நடிகர், நடனக் கலைஞர், இசையமைப்பாளராகப் பார்த்திருக்கிறீர்கள். ஆனால், இன்று முதல்முறையாக ஒரு இயக்குநராக உங்கள் முன் நிற்கிறேன்,” என்று ராகவ் ரங்கநாதன் கூறினார். “இயக்கம் என்பது எனக்குள் எப்போதும் ஒரு அமைதியான கனவாக இருந்தது. சொல்லப்போனால், அது ஒரு தொடர்ச்சியான தட்டல். இப்போது… நாக் நாக் மூலம் அந்தக் கனவு நனவாகியுள்ளது.”
படத்தில் தனது கதாபாத்திரம் பற்றி அவர் தொடர்ந்து கூறியதாவது: “ஆம், நான் இந்தப் படத்தை எனக்காக எழுதினேன் – ஆனால் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இது வழக்கமான ஹீரோவை மட்டுமே மையப்படுத்திய கதை அல்ல. பெரிய பட்ஜெட்டில் ஹீரோ பறக்கும் காட்சிகளோ, மெதுவாக நடக்கும் காட்சிகளோ (அப்படி செய்ய எங்களிடம் பட்ஜெட்டும் இல்லை 😄) இந்தப் படத்தில் இருக்காது. ‘நாக் நாக்’கில், நான் கதாநாயகனாக இருக்கலாம். ஆனால் நான் ஹீரோ கிடையாது. கதையேதான் ஹீரோ.”
அவர் தொடர்ந்து பேசுகையில், “அந்தக் கதை எனக்கு மட்டும் சொந்தமானது அல்ல. திரையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் சொந்தமானது. கே.பாலச்சந்தர் போன்ற ஆரம்பகால இயக்குநர்களின் படைப்புகளில் நான் பெரிதும் ரசித்தது, துணைக் கதாபாத்திரங்களின் ஆழம்தான். ‘எதிர்நீச்சல்’ போன்ற படங்களில் ஒவ்வொரு கதாபாத்திரமும் மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கும். எனது படத்திலும், ஒவ்வொரு கதாபாத்திரமும் உயிர் துடிப்புடன் இருக்க வேண்டும், முக்கியத்துவம் பெற வேண்டும், படம் முடிந்த பிறகும் உங்கள் மனதில் நிற்க வேண்டும் என்று விரும்பினேன். அப்படி ஒரு படத்தைத் தான் நான் உருவாக்க முயன்றேன்.”
தனது இயக்கம் மற்றும் கதை சொல்லும் ஆர்வம் எங்கிருந்து தொடங்கியது என்பதைப் பற்றி ராகவ் விளக்கினார்: “இதெல்லாம் எங்கிருந்து தொடங்கியது? நடன ரியாலிட்டி ஷோக்களில் என் மனைவியையும் என்னையும் சிலர் பார்த்திருக்கலாம். நாங்கள் சில போட்டிகளில் வென்றதும் உண்டு. அப்போது எனக்கு கிடைத்த பாராட்டுகளில் நான் மிகவும் பொக்கிஷமாக கருதியது, ‘நீங்கள் வெறும் நடனமாடவில்லை – ஒரு கதையைச் சொல்கிறீர்கள்’ என்பதுதான். அது எனக்கு பெரிய அர்த்தம் தந்தது. ஏனெனில் அந்த நடனங்களுக்கான பெரும்பாலான கதைகள் – கருத்துக்கள் – என்னிடமிருந்து உருவானவைதான். அந்த நடன ஒத்திகை அறைகளில்தான் எனக்குள் படைப்பாற்றல் இருப்பதை உணர்ந்தேன். சொல்லப்போனால், மானாட மயிலாட நிகழ்ச்சியில் எங்கள் பெர்ஃபாமென்ஸ்களுக்கு பிறகு, என் தலைக்குள் ஒரு நல்ல இயக்குனர் இருக்கிறார் என்று கலா மாஸ்டர் சொல்வார்கள். அப்படித்தான் எனக்குள் இருந்த கதைசொல்லி பிறந்தான்.”
‘நாக் நாக்’ அதனுடைய ஒரு நீட்சிதான் என்று கூறிய அவர், “நான் இதற்கு முன்பு பார்த்திராத, யாரும் ஆராயாத ஒரு கதைக்கருவை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. இது புதியது, பரபரப்பானது, மேலும்… உணர்வுபூர்வமானது. இந்தப் படத்தை நீங்கள் அனுபவிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.”
தனது முதல் பட இயக்குநராக உணரும் பொறுப்பு குறித்துப் பேசிய ராகவ் ரங்கநாதன், தனது உத்வேகத்தைப் பகிர்ந்து கொண்டார்: “எனக்கு ‘எந்திரன்’ படத்தில் சில காட்சிகளில் நடித்த வாய்ப்பு கிடைத்தது, அதைப் பற்றி இன்றும் பலர் பேசுகிறார்கள். அல்லது ‘நஞ்சுபுரம்’ போன்ற ஒரு படம், அது வெளிவந்த போது பலரை சென்றடையவில்லை என்றாலும், இன்று அதன் இசை, கதை, ஆத்மாவுக்காக பாராட்டப்படுகிறது. இருந்தாலும், இந்தப் படம் எனக்கு வேறுபட்டதாகத் தோன்றுகிறது. ஏனெனில், இந்த முறை எல்லாமே என் மீதுதான். முழுப் பொறுப்பும் சுமையும் என் மீதுதான்.”
இது அவரை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் தைரியத்தை நினைவுபடுத்தியது: “இது என்னை ஒருவரிடம் கொண்டு செல்கிறது. அவருடைய தைரியம் என்னை மிகவும் ஊக்கப்படுத்தியது. அவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தனது திரைப்பயணத்தில் ஒரு சவாலான காலகட்டத்தில், அவர் ‘நாடோடி மன்னன்’ என்ற படத்துக்காக அனைத்தையும் முதலீடு செய்தார்… பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பிரபலமாக சொன்னதுண்டு: ‘இந்தப் படம் தோற்றால் நான் நாடோடியாகிறேன். வெற்றி பெற்றால் மன்னனாகிறேன்’.” அத்தகைய நம்பிக்கைதான் தனக்கு இப்போது உத்வேகமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் திருவள்ளுவர் வாக்கையும் அவர் குறிப்பிட்டார்: “தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்.”
தனது நம்பிக்கையுடன் அவர் நிறைவு செய்தார்: “தமிழ் திரைப்படத் துறையில் வெற்றிக் கதவுகளை நான் நீண்டகாலமாகத் தட்டிக் கொண்டே இருக்கிறேன். ஆனால் ‘நாக் நாக்’ மூலம்… அந்தக் கதவு இறுதியாகத் திறக்கும் என நம்புகிறேன். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த உங்களுக்கு நன்றி. இந்தப் படத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்.”
முக்கிய கதாபாத்திரங்களில்:
இப்படத்தில் திறமையான நட்சத்திர பட்டாளம் இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளவர்கள்:
கார்த்திக் குமார் சனம் ஷெட்டி லக்ஷ்மிப்ரியா சந்திரமௌலி பப்லு பிரித்விராஜ் வட்சன் சக்கரவர்த்தி ஐஸ்வர்யா கலை
இல்லுஷன்ஸ் இன்ஃபினிட் நிறுவனம் சார்பாக இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒளிப்பதிவை ராஜா பட்டாச்சார்ஜியும், இசையமைப்பை நவீன் சுந்தரும் கவனித்துள்ளனர். ஃபர்ஸ்ட் லுக்கில் பிரதிபலிக்கும் வகையில், படத்தின் மர்மம் மற்றும் ஃபேன்டஸிக்கு உயிர் கொடுக்கும் விதத்தில் இசை அமைந்துள்ளது.
இப்படத்தின் வெளியீட்டு தேதியை விரைவில் முடிவு செய்து அறிவிப்பதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடர்ந்த காடு பகுதிகளில் கொலை ஒன்று நடக்க அந்த கொலை வழக்கை விசாரிக்க தொடங்கும் போது காவல்துறை அதிகாரி கதாநாயகன் நானிக்கு, ஒரே மாதிரியான உலகில் இந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலர் கொடூரமாக முறையில் கொலை செய்யப்படுவதாக தகவல் கிடைக்கிறது.
பலர் கொடூரமாக முறையில் கொலை செய்யப்படுவதாக உள்ள அந்த வழக்குகள் பற்றி விசாரிக்கும் தொடங்கியதும், அதன் பின்னணியில் கொடூரமான கருப்பு உலகம் ஒன்று இருப்பது கதாநாயகன் நானிக்கு தெரிய வருகிறது.
அந்த கருப்பு உலகம் எங்கிருக்கிறது?, அந்தக் கருப்பு உலகத்தில் தலைவர் யார்?, அவர்கள் அரங்கேற்றம் கொடூரமான கொலைகளுக்கான நோக்கம் என்ன?, அந்த கருப்பு உலகத்தின் தலைவனை கண்டு பிடிக்க களத்தில் இறங்கும் கதாநாயகன் நானி குற்றவாளிகளை கண்டுபிடித்தார் கண்டுபிடிக்கவில்லையா என்பதுதான் இந்த ‘ஹிட் – தி தேர்ட் கேஸ்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘ஹிட் – தி தேர்ட் கேஸ்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நானி நடித்திருக்கிறார்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் கதாநாயகன் நானி காக்கி சாட்டை அணியாத காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தாலும் , காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் வகையில் சிறப்பாகவும் கம்பீரமாகவும், ஆக்ரோஷமாகவும் நடித்திருக்கும் கதாநாயகன் நானி நடிப்பு மற்றும் வித்தியாசமான மேனரிஷம் மூலம் பார்வையாளர்களை ரசிக்க வைத்திருக்கிறார்.
இந்த ‘ஹிட் – தி தேர்ட் கேஸ்’ திரைப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீரிநிதி ஷெட்டி நடித்துள்ளார்.
கதாநாயகி ஸ்ரீரிநிதி ஷெட்டிக்கு திரைப்படத்தில் பெரிய அளவில் வேலை ஒன்றும் இல்லை என்றாலும், அவரையும் திரைக்கதையோடு பயணிக்க வைக்க மேற்கொண்ட முயற்சிகள் திரைப்படத்திற்கு பெரிய அளவில் பலமாக அமைந்திருக்கிறது.
சூர்யா ஸ்ரீநிவாஸ், அதில் பாலா, ராவ் ரமேஷ், சமுத்திரகனி, கோமளி பிரசாத், மகந்தி ஸ்ரீநாத், ரவீந்திர விஜய், பிரதீக் பாபர், அமித் சர்மா என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் மிகவும் பொருத்தமான தேர்வாக அமைந்துள்ளார்கள்.
ஒளிப்பதிவாளர் சானு ஜான் வர்கீஸ் திரைபபடத்திற்கு மிகப்பெரிய பலம். சண்டைக்காட்சிகளும், வன்முறை காட்சிகள் அதிக அளவில் திரைப்படத்தில் இருந்தாலும், அதை ஒளிப்பதிவு மூலம் அருமையாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
இசையமைப்பாளர் மிக்கி ஜே.மேயரின் பின்னணி இசை திரைக்கதையின் வேகத்தையும், விறுவிறுப்பையும் பல மடங்கு இசையால் உயர்த்திருக்கிறார்.
கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரை, கமர்ஷியல் மாஸ் ஆக்ஷன் திரைப்படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் சைலேஷ் கோலானு,
சட்டவிரோத செயல்களை செய்துவரும் ஜோஜு ஜார்ஜ் மிகப்பெரிய தாதாவாக வளம் வந்து ஜோஜு ஜார்ஜ் தாய், தந்தை இல்லாத கதாநாயகன் சூர்யாவை வளர்த்து வருகிறார்.தனது காதலி கதாநாயகி பூஜா ஹெக்டேவுக்காக வெட்டு குத்து அடிதடியை விட்டுவிடுவதாக சூர்யா கதாநாயகி பூஜா ஹெக்டேவிடம் உறுதி கூறுகிறார்.
பூஜா ஹெக்டேவை சூர்யா திருமணம் செய்து கொண்டு அமைதியாக வாழ வேண்டும் என விரும்புகிறார்.ஆனால், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பூஜா ஹெக்டேவிறகாக தனது வளர்ப்பு தந்தையின் கையை துண்டாக வெட்டி விட, அவரது தந்தையின் ஆட்களையும் கொலை செய்து விடுகிறார்.
இதனால், சூர்யாவிடம் இருந்து இருந்து பூஜா ஹெக்டே தனது காதலில் இருந்து விலகிச் சென்று விடுகிறார். சூர்யா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
கதாநாயகி பூஜா ஹெக்டே அந்தமானில் இருக்கும் தகவல் சூர்யாவுக்கு தெரிய வர பூஜா ஹெக்டேவை சமாதானப்படுத்தி அவர் விரும்பியது போல், அடிதடி இல்லாத அமைதியான புதிய வாழ்க்கையை தொடங்குவதற்காக அந்தமான் செல்லும் சூர்யாவுக்கு, அங்கே மிகப்பெரிய பொறுப்பும், யுத்தமும் காத்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் சூர்யாவின் வாழ்க்கை என்னவானது?, பூஜா ஹெக்டே ,சூர்யா இருவரும் இணைந்தார்களா? இணையவில்லையா? என்பதுதான் இந்த ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் மீதிக்கதை.
தன்னை வளர்க்கும் தந்தையாக இருந்தாலும், அவருக்காக எதை வேண்டுமானாலும் செய்யும் துணிச்சல் மிக்க மகனாகவும், காதல் தோல்வியால் இது வந்து போகும் காதலனாகவும் அதன், பிறகு தன்னுடைய இனத்தின் விடுதலைக்காக போரிடும் போராளியாகவும், என ஒரே கதாபாத்திரத்திற்கு சூர்யாவின் நடிப்பின் மூலம் சிரிக்காமலேயே நடனம் ஆடுவது, ஆக்ஷன் காட்சிகளை ஸ்டைலிஷாக கையாள்வது என்று திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை காட்சிக்கு காட்சி ரசிக்க வைத்திருக்கிறார்.
கதாநாயகி பூஜா ஹெக்டே, கதையின் மையப்புள்ளியாகவும், கதையை நகர்த்திச் செல்லும் வழக்கமான கதாநாயகியாக அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை நிறைவாக செய்திருக்கிறார்.
வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜோஜு ஜார்ஜ் தனது இயல்பான நடிப்பை கொடுத்து தமிழ் திரைப்பட ரசிகர்களை மிரட்டியிருக்கிறார்.
கிங் மைக்கல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர், நாசர், பிரகாஷ்ராஜ், கருணாகரன் என மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் கொடுத்த வேலையை மிகச் சிறப்பாக எந்த ஒரு குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
சசிகுமார் மற்றும் மனைவி சிம்ரன் அவர்களுடைய இரண்டு மகன்கள் இவர்கள் குடும்பத்துடன் விலைவாசி ஏற்றத்தால் இலங்கையில் வாழ முடியாமல் தமிழகத்துக்கு கள்ளத் தோனியில் ராமேஸ்வரம் வந்து இறங்கிய அவர்களை யோகி பாபு சென்னைக்கு அழைத்து வந்து, கேசவ நகரில் உள்ள ஒரு காலனியில் வீட்டை வாடைக்கு எடுத்துக் கொடுத்து அவர்களை தங்க வைக்கிறார். சசிகுமார் குடியிருக்கும் வீட்டிற்கு எதிரில் உள்ள எம்.எஸ. பாஸகரிடம் கார் ஓட்டுனர் பணி புரிந்து கொண்டு தன் குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.
ஒரு பக்கம் இருக்க இலங்கையில் இருந்து தமிழகத்தில் அகதிகளாக வந்தவர்கள் என்பதை மறைத்து வாழ வேண்டிய சவால் இந்த குடும்பத்துக்கு, மற்றொரு பக்கம் ராமேஸ்வரத்தில் நிகழும் ஒரு குண்டு வெடிப்புக்கு காரணமானவர்களை பிடிக்க வேண்டிய சவால் காவல்துறைககு .
குண்டுவெடிப்புக்கு காரணமான குற்றவாளிகளை காவல் துறையினர் கைது செய்தார்களா? கைது செய்யவில்லையா?
இலங்கையில் இருந்து வந்த அகதிகள் என்ற அடையாளம் தெரியாமல் வாழ்ந்தார்களா?
என்பதுதான் “டூரிஸ்ட் பேமிலி” திரைப்படத்தின் கதை.
திரைப்படத்தில் தர்ம தாஸ் என்ற கதாபாத்திரத்தில் மனைவிக்கு நல்லதொரு கணவனாக, இரண்டு மகன்களுக்கு நல்லதொரு தந்தையாக, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு நல்லதொரு சிறந்த மனிதனாக என தனது கதாபாத்திரத்தை உணர்ந்து மிகச் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.“அயோத்தி” திரைப்படத்திற்கு பின் இந்த டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் நடிகர் சசிக்குமாருக்கு மிகப்பெரிய பேரைப் பெற்று தரும் என்பது உறுதி.
வசந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்த சிம்ரனும் தனது கதாபாத்திரத்திற்கு எந்த விதமான குறையும் இல்லாமல் தனது நடிப்பின் மூலம் சிறப்பு சேர்த்திருக்கிறார்.
தந்தை மகனுக்குமான நடக்கும் பாச உரையாடல் திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் கண்களில் ஈரம் எட்டிப் பார்க்க வைத்து விடுகிறது. இரண்டாவது மகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மாஸ்டர் கமலேஷ் ஜெகன் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.
இளங்கோ குமரவேல் மற்றும் ஸ்ரீஜா ரவி இருவருக்குமிடையே இருக்கும் காதல் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை கண்கலங்க வைக்கிறது.
இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் தன் தாயை இழந்து தனிமையில் வாடும் ஒரு இளைஞனாக மிகச் சிறப்பான நடிப்பை கொடுத்து கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார.
கண்டிப்புடன் கூடிய அன்பு கொண்டவராக எம் எஸ் பாஸ்கர், காவல்துறை ஆய்வாளராக பக்ஸ், அவரது மனைவியாக நடித்தவர் இவர்களது மகள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யோகலெக்ஷ்மி என அனைவரும் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு மிகச் சரியான பொருத்தமாக பொருந்தியிருக்கிறார்கள்.
தமிழ் திரைப்பட உலகில் எந்த ஒரு இயக்குனரிடமும் உதவி இயக்குனராக பணிபுரியாமல் இப்படியொரு தரமான படைப்பைக் கொடுத்து தமிழ் திரை உலகை உள்ள அனைவரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த்.
Until Dawn is an interactive, interactive horror game published by Sony Computer Entertainment. The game follows a butterfly effect system in which the players either survive or die depending on the choices they make! The players have to make their moves from a third person’s angle which will help them to solve the mystery! This is a screen adaptation of the game… David F. Sandberg, the maker of films as Lights Out, Annabelle Creation etc has directed this horror flick.
Based on the Video Game, Until Dawn of 2015, this is a standalone story set in the same Universe, exploring the mythology of the game series! Clover (Ella Rubin) and her friends set out to the remote valley where her sister, Melanie (Maia Mitchell) disappeared! They realize that they have been trapped in a time loop. They relive the nightmare again and again but with a different killer, each time! They need to survive till Dawn to escape!
இளம் பெண் ஒருவர் நடுஇரவில் கடத்தப்படும் நிலையில் இதனை தொடர்ந்து அவருடைய தாய் மற்றும் தாத்தா காவல் நிலையத்திற்கு சென்று புகார் ஒன்றை அளிக்கின்றனர்.புகாரின் அடிப்படையில் உடனடியாக காவல்துறை ஆய்வாளர் சிபிராஜ் உடனடியாக விசாரணை தொடங்குகிறார். வழக்கை சிபிராஜ் விசாரணை செய்து கொண்டு இருக்கும் போதே, காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன் கால் ஒன்று வருகிறது. தனியார் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் ஒரு பெண் ஒருவர் கொடுமைப்படுத்தப்பட்டு அந்தப் பெண்ணை எப்படியாவது காப்பாற்றுங்கள் என ஆண் ஒருவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கிறார்.
இதை அறிந்து அந்த பேருந்தை டோல்கேட் செக்போஸ்டில் காவல்துறையினர் பிடிக்கிறார்கள்.அந்த பேருந்திற்குள் சிபிராஜ் சென்று பார்க்க, அங்கு கால் செய்த நபர் இறந்து கிடக்கிறார்.
ஒரு இளம் பெண் கடத்தப்பட்டு இருப்பதும் ஒரு பெண் ஒருவர் பேருந்தில் கொடுமை செய்யப்படுகிறார் என காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்த நபரும் பேருந்தில் இறந்து கிடக்க என அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவங்களை கதாநாயகன் காவல்துறை ஆய்வாளர் சிபிராஜ், இதற்கெல்லாம் யார் காரணம் என குற்றவாளியை கண்டுபிடித்தாரா? கண்டுபிடிக்கவில்லையா? என்பதுதான் இந்த டென் ஹவர்ஸ் திரைப்படத்தின் மீதிக்கதை.
கதாநாயகனாக நடித்திருக்கும் சிபிராஜ் இதுவரை பல திரைப்படங்களில் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், டென் ஹவர்ஸ் திரைப்படத்தில் சற்று மாறுபட்ட நடிப்பை மிக அருமையாக வெளிப்படுத்தியுள்ளார்.
திரைப்படத்தில் நடித்திருக்கும் கஜராஜ், ஜீவா ரவி ராஜ் அய்யப்பா, முருகதாஸ், திலீபன், உதயா, தங்கதுரை, சரவண சுப்பையா, ஷாருமிஷா, நிரஞ்சனா, ஆகியோரின் நடிப்பும் திரைப்படத்திற்கு மிகச் சிறப்பு சேர்த்து இருக்கிறது.
மேலும், திரில்லர் திரைப்படத்தில் கதை மற்றும் திரைக்கதைக்கு வில்லன்தான் மிகமிகவும் முக்கியம் ஆனால் வில்லனுக்கு உதவியாக வரும் பஸ் டிரைவர் கதாபாத்திரத்தில் இருந்த வலு, வில்லனுக்கு இல்லாதது திரைப்படத்தின் மிகப்பெரிய மைனஸ்.
ஒளிப்பதிவாளர் ஜெய் கார்த்திக்கின் ஒளிப்பதிவு மூலம் காட்சிகள் அனைத்தும் கதைக்கு ஏற்றவாறு மிகச்சிறப்பாக பயணித்திருக்கிறார்.
இசையமைப்பாளர் கே.எஸ். சுந்தரமூர்த்தி யின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.
படத்தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோரின் படத்தொகுப்பு திரைப்படத்தில் இன்னும் கூட கொஞ்சம் வேகமாக இருந்திருக்கலாம்.
தனது அறிமுக இயக்கத்திலேயே அருமையாக கதையை தேர்ந்தெடுத்து ஒரே இரவில் 10 மணி நேரத்தில் ஒரு திரில்லர் கதைக்களத்தை கையில் எடுத்து அருமையான திரைக்கதையை வடிவமைத்து மிகச்சிறப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குநர் இளையராஜா கலியபெருமாள்