Cinema Reviews

‘EMI’ (மாத தவணை) திரைவிமர்சனம்

கதாநாயகி சாய் தன்யாவை பார்த்தவுடன்  காதல் கொள்ளும் கதாநாயகன் சதாசிவம் சின்னராஜ் காதலித்து திருமணம் செய்து கொண்டு, இல்லற வாழ்க்கையை மிகவும் சந்தோஷமாக நடத்தி வரும் கதாநாயகன் சதாசிவம் சின்னராஜ், திடீரென செய்து கொண்டிருந்த வேலை போய் விடுகிறது.

தனது காதலிக்காக இருசக்கர வாகனம் தனது தனது காதல் மனைவிக்காக காரும் மாதத் தவணையில் வாங்குகிறார்.

இதனால் செய்து கொண்டிருந்த வேலையும்  வருமானமும் இல்லாததால், தன் காதல் மனைவிக்காக வாங்கிய இருசக்கர வாகனம், கார் உள்ளிட்டவைகளுக்கான மாத தவணை கட்டமுடியாமல் கதாநாயகன் சதாசிவம் சின்னராஜ், அசிங்கப்பட்டு கொண்டிருக்கிறார்.

தன் காதல் மனைவிக்காக வாங்கிய பைக்கும் காரும் கட்ட வேண்டிய மாதத்தவனை கட்ட முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் கதாநாயகன் சதாசிவம் சின்னராஜ் மாதத் தவணை கட்டினாரா? கட்டவில்லையா? என்பதுதான் இந்த EMI மாத தவணை திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த EMI மாதத் தவணை திரைப்படத்தில் சதாசிவம் சின்னராஜ் புதுமுக கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

நடிப்பு என்பது எதார்த்தமாக இருக்க வேண்டும் இந்த திரைப்படத்தில் புதுமுக கதாநாயகனாக நடித்திருக்கும் சதாசிவம் சின்னராஜ் செயற்கை தனமாக நடித்திருக்கிறார்.

இந்த EMI மாதத் தவணை திரைப்படத்தில் கதாநாயகியாக சாய் தான்யா நடித்துள்ளார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் சாய் தன்யாவுக்கு இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு பெரிய அளவில் வாய்ப்பு இல்லை.

கதாநாயகியின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் பேரரசு மொத்தத்தில் சுமாராக நடித்திருக்கிறார்.

கதாநாயகனின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் செந்தி குமாரி வழக்கம் போல் வந்து போகிறார்.

கதாநாயகனின் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிளாக் பாண்டி, மாத தவணை வசூலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சன் டிவி ஆதவன் ஓ.ஏ.கே.சுந்தர், லொள்ளு சபா மனோகர் ஆகியோறும் நடிப்பு ஓகே ரகம்.

ஒளிப்பதிவாளர் பிரான்ஸிஸ் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்தை கலர்புல்லாக காட்சிப்படுத்திருப்பது திரைப்படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.

இசையமைப்பாளர் ஸ்ரீநாத் பிச்சையின் இசையில்,  பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறது.

வங்கியை நம்பி கார் வீடு  இருசக்கர வாகனம் வீட்டு உபயோக பொருள்கள் வரை அனைத்தையும் எளிதில் வாங்க கூடிய மாத தவணை திட்டத்தில் மாட்டிக்கொள்ளும் மக்களை எப்படி எல்லாம் வங்கியில் உள்ளவர்கள் தவணை பசுபிக்கிறேன் என்ற பெயரில் மக்களை சின்ன பின்னமா ஆக்குகிறது என்பதையும் வங்கி கடன் உள்ளிட்டவைகளால் நடுத்தர குடும்பத்தினர் எப்படி கஷ்ட்டப்படுகிறார்கள் என்பதை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சதாசிவம் சின்னராஜ்.

‘எம்புரான்’ திரை’விமர்சனம்

2019ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற “லூசிஃபர்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து L2 எம்புரான் இரண்டாம் பாகமான வெளிவந்திருக்கிறது.

இரண்டாம் பாகத்தில் டோவினோ தாமஸ் நல்லாட்சி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஊழலில் மட்டுமே அதிகரித்துள்ளது.ஐந்து வருடங்களை நிறைவு செய்த டோவினோ தாமஸ், தந்தையின் பாதையிலிருந்து ஒரு மாற்றத்தை செய்ய தயாராகிறார்.ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகளிடமிருந்து தப்பிக்க, அபிமன்யு சிங் தலைமையிலான மதவாதக் கட்சியோடு கைகோர்த்து, தன் சொந்தக் கட்சியிலிருந்தே விலகி, டோவினோ தாமஸ் தனியாகக் அதாவது தன் தந்தை வழிநடத்திய கட்சியை விட்டு புது கட்சியை தொடங்குகிறார்.முதல்வர் டோவினோ தாமஸ் கட்சியை தொடங்கியதால் கேரளத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என அனைவரும் அஞ்சுகிறார்கள்.

முதல்வர் டோவினோ தாமஸின் இந்த நடவடிக்கையால் கேரளாவில் மத வெறுப்பும், கலவரமும் எந்நேரமும் வெடிக்க காத்திருக்கிறதுஇப்படியான சூழலில், சர்வதேச அளவில் போதைக் கும்பல்களால் உலகளவிலும் பிரச்னைகள் எழ, இரண்டையும் சரி செய்ய, கேரளாவின் ஒரே நம்பிக்கையாக கருதப்படும் கதாநாயகன் மோகன்லால் பத்திரிகையாளர் இந்திரஜித் சுகுமாரன் முயற்சியால் மீண்டும் கதாநாயகன் மோகன்லால் களமிறங்குகிறார்.

கதாநாயகன் மோகன்லால் தனது கேரளா மாநிலத்தில் மீண்டும் அமைதியை கொண்டு வர முடிந்ததா? முடியவில்லை? என்பதுதான் இந்த ‘L2 எம்புரான்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதாநாயகனாக நடித்திருக்கும் மோகன்லால், தனக்கே உரிய பாணியில் நடிப்பை கொடுத்து அசத்தியிருக்கிறார்.

கதாநாயகன் மோகன்லால் உதவியாளராக கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிருத்விராஜ், கமாண்டோ கதாபாத்திரத்திற்கு மிகவும் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.

கதாநாயகன் மோகன்லால் மற்றும் பிருத்விராஜ் இருவருமே ஆக்சன் காட்சிகளில் மாஸ் காண்பித்து இருக்கிறார்கள்.

மஞ்சு வாரியர் அரசியல் கட்சியில் இணையும் போது அவர் போடும் நான்கு கட்டளைகள் சபாஷ் போட வைக்கிறது.

ஸ்டைலிஷ்னா முதல்வர் கட்சித் தலைவர் என டோவினோ தாமஸ்.
ரசிகர்களை கவனம் பெற்று இருக்கிறார்

வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அபிமன்யு சிங் பார்வையிலேயே மிரட்டி இருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவனின் ஒளிப்பதிவு மூலம் காட்சிகள் அனைத்தும் ஹாலிவுட் தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர் தீபக் தேவின் இசையுலகில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலம் ஸ்டண்ட் சில்வாவின் ஆக்சன் காட்சிகள். காட்டில் நடக்கும் சண்டைக்காட்சியும், கிளைமாக்சில் நடக்கும் சண்டைக் காட்சியும் மிகப்பெரிய அளவில் பிரம்மிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

லூசிஃபர் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக எல் 2 எம்ரான் திரைப்படத்தை முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மாஸாகவும் மிரட்டலாகவும் இயக்கியிருக்கிறார் இயக்குனர் பிருத்விராஜ் சுகுமாரன்.

’ஜென்டில்வுமன்’ திரை விமர்சனம்

திருமணம் நடந்து மூன்று மாதங்களான கதாநாயகன் ஹரி கிருஷ்ணனுடன் மற்றும் மனைவி கதாநாயகி லிஜோமோல் ஜோஸ், இருவரும் சென்னையில் உள்ள அப்பார்ட்மெண்டில் வாழ்ந்து வரும் நிலையில் மனைவி கதாநாயகி லிஜோமோல் ஜோஸ், மீது கதாநாயகன் ஹரி கிருஷ்ணன் அளவுக்கு அதிகமான பாசத்தோடு இருக்கிறார் என நினைக்கும் போது, தனது கணவர் கதாநாயகன் ஹரி கிருஷ்ணனின் செல்போன் மூலம் மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது தெரிய வருகிறது.

தனது கணவர் மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது தெரிய வந்தவுடன் கடும் கோபமடையும் கதாநாயகி லிஜோமோல் ஜோஸ், கணவர் கதாநாயகன் ஹரி கிருஷ்ணனை கொலை செய்து விடுகிறார்.

இரத்த வெள்ளத்தில் கணவர் கதாநாயகன் ஹரி கிருஷ்ணன் இறந்ததை பார்த்து பயமில்லாமலும் கொஞ்சம் கூட களங்கம் இல்லாமலும், கணவர் கதாநாயகன் ஹரி கிருஷ்ணனின் உடலை குளிர்சாதன பெட்டியில் மறைத்து வைத்துவிட்டு, சர்வசாதாரணமாக தனது வேலையை பார்க்க தொடங்கி விடுகிறார்.

இதற்கிடையே, கதாநாயகன் ஹரி கிருஷ்ணனை காணவில்லை என அவருடைய காதலி மற்றொரு கதாநாயகி லஸ்லியா காவல்துறையில் புகார் ஒன்றை கொடுக்கிறார்.

மற்றொரு கதாநாயகி லஸ்லியா கொடுத்த புகாரின் பேரில் விசாரணையை தொடங்குகின்றனர்.

இந்த நிலையில் தனது கணவர் கதாநாயகன் ஹரி கிருஷ்ணனை கொலை செய்துவிட்டு மிக சர்வ சாதாரணமாகவும் மிக சகஜமாகவும் உலா வரும் கதாநாயகி லிஜோமோல் ஜோஸ் காவல்துறையிடம் இருந்து தப்பித்தாரா? தப்பிக்கவில்லையா?

காவல்துறையினர் கதாநாயகன் ஹரி கிருஷ்ணனை கண்டுபிடித்தார்களா?, கண்டுபிடிக்கவில்லையா?
என்பதுதான் இந்த ‘ஜென்டில்வுமன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ஜென்டில் உமன் திரைப்படத்தில் கதையின் நாயகியாக லிஜோமோல் ஜோஸ், நடித்திருக்கிறார்.

கதையின் நாயகியாக நடித்திருக்கும் லிஜோமோல் ஜோஸ், தனது கணவன் செய்த மிகப்பெரிய துரோகத்தை அறிந்து சாதாரண பெண் போல் கலங்கினாலும், அடுத்த கணமே சற்றும் எதிர்ப்பார்க்காத விதமாக மிகப்பெரிய அளவில் ஒரு முடிவு எடுத்து அதை செய்து திரைப்படம் பார்க்கும் பார்வையாளர்களை பதற வைத்துவிடுகிறார்.

தன் கணவனை கொலை செய்து உடலை குளிர்சாதன பெட்டியில் மறைத்து வைத்துவிட்டு எந்த ஒரு பதட்டத்தையும் வெளிக்காட்டாமல் ஒவ்வொரு நாட்களையும் கடந்து செல்வது திரைப்படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருந்தாலும், அதை நடிப்பின் மூலம் ரசிகர்களிடம் கைதட்டல் பெறுகிறார்.

இந்த ஜென்டில்வுமன் திரைப்படத்தில் கதாநாயகனாக ஹரி கிருஷ்ணன் நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் ஹரி கிருஷ்ணன், கடவுள் மீது அதிக பக்தி, நெற்றியில் பட்டை என்று நல்லவனாக இருந்தாலும், பெண்கள் விசயத்தில், பசுந்தோல் போத்திய பன்னாடை எனக் கூறும் அளவுக்கு பெண் பித்தனா வலம் வந்திருக்கிறார்.

இந்த ஜென்டில்வுமன் திரைப்படத்தில் மற்றொரு கதாநாயகியாக லாஸ்லியா நடித்திருக்கிறார்.

மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் லாஸ்லியா, தன் கதை பத்திரத்தை விழுந்து மிகச் சரியாக சிறப்பாக நடித்திருக்கிறார்.

கதாநாயகி லிஜோமோல் ஜோஸின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தாரணி, காவல்துறை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராஜிவ் காந்தி, காவல்துறை இணை ஆணையராக நடித்திருக்கும் ஸ்டண்ட் மாஸ்டர் சுதேஷ், காவலர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வைரபாலன் என திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் சரியாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் எஸ் காத்தவராயன், அப்பார்ட்மெண்ட் க்குள் வைத்தே பல காட்சிகளை திரைப்படமாக்கியிருந்தாலும், கதாபாத்திரங்களின் மன போராட்டங்களை திரைப்படம் பார்க்கும் பார்வையாளர்கள் மனதில் பதியும் அளவிற்கு காட்சிப்படுத்தி இருக்கிறார்.

இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் சிறப்பு பின்னணி இசை கதைக்களத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் மிகச் சிறப்பாக பயணித்திருக்கிறார்.

பெண்கள் எந்த நிலைக்கு சென்றாலும், அவர்களை ஆண்கள் தங்களுக்கு கீழே தான் வைத்திருக்கிறார்கள், உள்ளிட்ட வசனங்கள் மூலம் பெண்ணியம் பேசினாலும், அதை கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் சேர்த்து கமர்ஷியலாக மிகச் சிறப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குநர் ஜோஸ்வா சேதுராமன்,

‘எமகாதகி’ திரை விமர்சனம்

தஞ்சை மாவட்டம் அருகில் அந்த ஒரு அழகிய கிராமத்தில் மேல் ஜாதியும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் சிலர், பொருளாதாரத்தில் பின் தங்கி இருப்பவர்களை கீழ் ஜாதியும் என்று எண்ணி அவர்களை எடுபிடி வேலைக்கு வைத்துக் கொள்வது அக்கிராமத்தில் பழக்கமாக இருந்து வருகிறது.

அந்த கிராமத்தின் முன்னாள் ஊர் தலைவர் மற்றும் கோவில் தர்மகர்த்தாவாக இருந்த, தனது மகன் வேறு ஒரு சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் தன்னால் அந்த கிராமத்தில் தலைநிமிர்ந்து நடக்க முடியவில்லை என்று எண்ணி வருந்தி கொண்டிருக்கிறார்.

அந்த கிராமத்தில் தலைவராக இருக்கும் ராஜூ ராஜப்பன். அவருடைய மனைவி கீதா கைலாசம். இவர்களுக்கு ஒரு மகள் கதாநாயகி ரூபா கொடுவாயூர் ஒரு மகன் சுபாஷ் ராமசாமி இருக்கிறார்கள்.

சிறு வயது முதலே அவ்வப்போது மூச்சு விடுவதில் சிரமம் இருந்து வருகிறது கதாநாயகி ரூபா கொடுவாயூர். இதனால், இவர் சுவாச மருந்தை எடுத்துக் கொண்டு வருகிறார்.

ஊர் தலைவர் ராஜூ ராஜப்பன்.
மகன் சுபாஷ் ராமசாமிக்கு திருமணம் முடிந்து அவருடைய மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

ஊர் தலைவர் ராஜூ ராஜப்பன்.
மகன் சுபாஷ் ராமசாமி மற்றும் நண்பர்கள் சேர்ந்து ஊர் கோவிலில் இருக்கும் சாமியின் கிரீடத்தைத் திருடி தொழில் தொடங்கி, அந்த தொழிலும் நஷ்டத்தில் முடிந்து விடுகிறது.

இன்னும் இரு வாரத்தில் ஊர்த் திருவிழா நடைபெற இருப்பதால் ஊர் தலைவர் ராஜூ ராஜப்பன்.
மகன் சுபாஷ் ராமசாமிக்கு அவருடைய நண்பர்களும் அடமானம் வைத்த ஊர் கோவிலில் இருந்து எடுத்த சாமியின் கிரீடத்தைத் எப்படியாவது மீட்டெடுக்க வேண்டும் என்று ஓடிக் கொண்டிருக்கின்றனர்.

இந்தநிலையில், கடும் கோபத்துடன் வீட்டிற்கு வரும் ஊர் தலைவர் ராஜூ ராஜப்பன் தனது மனைவியுடன் சண்டை போட்டு அவரை கைநீட்டி அடித்து விட
அம்மாவை எதற்காக அடித்தீர்கள்.? என்று கேள்வியெழுப்ப ஊர் தலைவர் ராஜூ ராஜப்பன் கதாநாயகி ரூபா கொடுவாயூரை அடித்து விடுகிறார்.

இதனால், மனம் உடைந்த
கதாநாயகி கதாநாயகி ருபா கொடுவாயூர் அழுது கொண்ட தனது ரூமிற்கு சென்று விடுகிறார்.

இதனை தொடர்ந்து நடு இரவில் எழுந்த அம்மா கீதா கைலாசம், தனது மகள் ரூமுக்கு செல்ல அங்கு மகள் கதாநாயகி ருபா கொடுவாயூர் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்ததைக் பார்த்து அதிர்ச்சியடைகிறார்.

கதாநாயகி ருபா கொடுவாயூர்
தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட விஷயம் நம் கிராமத்திற்கு தெரிந்தால், குடும்ப கெளரவம் மற்றும் மனம் போய்விடும் மூச்சுத் திணறலால் கதாநாயகி ருபா கொடுவாயூர் இறந்து விட்டதாக குடும்பத்தினர் கூறிவிடுகின்றனர்.

கதாநாயகி ருபா கொடுவாயூர் இறந்துவிட்ட செய்தியறிந்து அந்த கிராமமே துக்கத்தில் மூழ்கி விடுகிறது.

இந்த நிலையில், இறுதி சடங்கு நடத்துவதற்காக கதாநாயகி ருபா கொடுவாயூர் உடலை கிராமத்துஇளைஞர்கள் சிலர் தூக்க முயல, இறந்த உடல் கனக்க, அவர்களால் அந்த உடலை தூக்க முடியவில்லை.

இருந்த உடல் அசைவதைக் கண்டு இளைஞர்கள் அனைவரும் பயந்து ஓடுகின்றனர்.

கதாநாயகி ருபா கொடுவாயூர் உடலை வீட்டை விட்டு வெளியே எடுத்துச் செல்ல முடியாத அளவிற்கு தடுத்து நிறுத்தும் அமானுஷ்ய சக்தி யார்? கதாநாயகி ருபா கொடுவாயூர் தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டாரா.? வேறு யாராவது கொலை செய்து தூக்கில் மாட்டி விட்டார்களா? என்பது தான் இந்த எமகாதகி திரைப்படத்தின் மீதிக்கதை

இந்த “எமகாதகி” திரைப்படத்தில் கதாநாயகனாக நரேந்திர பிரசாத், நடித்திருக்கிறார்

அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நரேந்திர பிரசாத்,
மிகவும் கனகச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.

அறிமுக நடிகராக நரேந்திர பிரசாத் மிக அருமையாக கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்ததால் நம்மால் ஏற்றுக் கொள்ளவும் முடிகிறது.

இந்த எமகாதகி திரைப்படத்தில் கதாநாயகியாக ரூபா கொடுவாயூர் நடித்துள்ளார்.

காதல், அழுகை, கோபம், குறும்புத்தனம் என பல காட்சிகளில் தனது முக பாவனைகளை மிக அழகான நடிப்பை கொடுத்து லீலா கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.

அதிலும், பிணமாக இருக்கும் காட்சியில் அழகாகவும் அருமையாகவும் நடித்திருக்கிறார்.

கதாநாயகி ரூபா கொடுவாயூர் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கீதா கைலாசம், அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுபாஷ் ராமசாமியும் அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராஜூ ராஜப்பன் ஊர் தலைவர் கதாபாத்திரத்தில் மிக அருமையாக பொருந்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களுமே மிகவும் இயல்பாகவே தங்களது கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்து முடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங்க் இவரின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்திருக்கிறது.

இசையமைப்பாளர் ஜெசின் ஜார்ஜின் இசையில் மூன்று பாடல்களும் அருமை பின்னணி இசை கதையோடு பயணிக்க வைத்திருக்கிறார்.

தமிழ் திரைப்பட உலகில் வித்தியாசமான கதைகளத்துடன் அனைவரும் திரும்பி பார்க்கும்படியான ஒரு படைப்பு படைத்திருக்கிறார் இயக்குனர் பெப்பின் ஜார்ஜ் ஜயசீலன்.

’கிங்ஸ்டன்’ திரை விமர்சனம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமத்தில் இருக்கும் மக்கள் அனைவரும் மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் அந்த கிராம மக்களால், கடலுக்குள் சென்று மீன்பிடிக்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் என்ன காரணம், என்றால் பேராசை பிடித்த ஒருவரின் அமானுஷ்ய ஆன்மா அந்த கடல் முழுவதையும் ஆக்கிரமித்து அங்கு மீன் பிடிக்க வருபவர்களை கொன்று குவிப்பது வருகிறது.

அதனால், அந்த கிராமத்திலுள்ள மக்கள் சுமார் 40 ஆண்டுகளாக தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதோடு, கிடைக்கும் வேலைகளை இந்த கிராம மக்கள் செய்து வருகிறார்கள்.

அதில் சில இளைஞர்கள் மட்டும் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த இளைஞர்களில் ஒருவரான கதாநாயகன் ஜி.வி.பிரகாஷ்குமார் கொஞ்ச நாட்கள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டாலும், அதன் உண்மையான பின்னணி என்னவென்று தெரிந்ததும் அதில் இருந்து விலகுவதோடு, தனது கிராம மக்கள் இழந்த வாழ்வாதாரதை மீட்டுக் கொடுக்க முடிவு செய்கிறார்.

அதன்படி, மர்மம் சூழ்ந்த அந்த கடலுக்குள் சென்று அமானுஷ்ய ஆத்மாவின் பிரச்சனையை தீர்க்க நினைக்கும் கதாநாயகன் ஜிவி பிரகாஷ் குமார், தனது நண்பர்களுடன் கடலுக்குள் செல்ல, கதாநாயகன் ஜிவி பிரகாஷ் குமாரும் மற்றும் நண்பர்களும் உயிருடன் திரும்பி கரைக்கு உயிருடன் வந்தார்களா? உயிருடன் வரவில்லையா?, என்பதுதான் ‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த கிங்ஸ்டன் திரைப்படத்தில் கதையின் நாயகனாக ஜிவி பிரகாஷ் குமார் நடித்திருக்கிறார்.

மீனவ கிராமத்து இளைஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார், தோற்றம் மற்றும் நடிப்பு இரண்டிலும் மிக அருமையாக நடித்திருக்கிறார்.

இந்த கிங்ஸ்டன் திரைப்படத்தில் கதாநாயகியாக திவ்யபாரதி நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் திவ்ய பாரதிக்கு திரைப்படத்தில் பெரிய அளவில் வேலை இல்லை என்றாலும், திவ்ய பாரதி சில காட்சிகளில் திணிப்பதற்காகவே திரைப்படத்தில் திணித்திருக்கிறார்கள்.

அழகம்பெருமாள், சேத்தன், குமரவேல், வில்லனாக நடித்திருக்கும் சாபுமோன் அப்துசாமத், ஆண்டனி, ராஜேஷ் பாலச்சந்திரன், அருணாச்சலேஸ்வரன். பி.ஏ, பிரவீன், பயர் கார்த்திக் என மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் தங்களது வேலையை மிகவும் சிறப்பாக சரியாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய், ஒளிப்பதிவு மூலம் கடலின் அழகு, மற்றும் ஆபத்து மற்றும் பிரமாண்டம் என அனைத்தையும் திரையில் மிக அருமையான காட்சிப்படுத்தி இருக்கிறார்.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார்,இசையில் பாடல்கள் பின்னணி இசை மிக அருமையாக அமைந்திருக்கிறது.

கடலில் நடக்கும் திகில் கதையை மிகவும் ஃபேண்டஸியாக கொடுக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், அழுத்தமான கதை மற்றும் மிக அருமையான திரைக்கதை இல்லாததால், அவருடைய ஃபேண்டஸி மற்றும் திகில் யோசனைகள் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களிடையே எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுத்தவில்லை

‘நிறம் மாறும் உலகில்’ திரைவிமர்சனம்

தனது பிறந்தநாள் விழாவில் தன் தாயுடன் சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறும் லவ்லின் சந்திரசேகர் ரயிலில் பயணிக்கும் போது டிடிஆர் ஆன யோகி பாபுவை சந்திக்கும்போது லவ்லின் சந்திரசேகரின் நிலைமையை புரிந்துக்கொள்ளும் யோகி பாபு, தாய் என்பவர் எவ்வளவு முக்கியம் என்பதை லவ்லின் சந்திரசேகருக்கு உணர்த்தும் வகையில் நான்கு கதைகள் கூறுகிறார்.

தாய் கனிகா இறந்த துக்கத்தில் தாய் பாசத்திற்காக ஏங்கும் மும்பை தாதா, நட்டி நடராஜ் குழந்தைகளை நல்லபடியாக வளர்த்து ஆளாக்கினாலும் கடைசி காலத்தில் பசியோடு இறக்கும் தாய், தந்தை பாரதிராஜா வடிவுக்கரசி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட தன் தாயை காப்பாற்ற முடியவில்லை மகன் ரியோ ராஜ் சோகம், தாய் ஆதிரா என்ற உறவுக்காக எதை வேண்டுமானாலும் தூக்கி எரிய தயாராக இருக்கும் ஆதரவற்ற இளைஞன், சாண்டி, துளசி என நான்கு விதமான நல்ல கதைகளும், அதில் பயணித்த கதாபாத்திரங்களின் தாய் மீதான பாசப் போராட்டம் தான்

லவ்லின் சந்திரசேகரிடம் யோகி பாபு கூறும் அந்த நான்கு கதைகளுக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை ’தாய்’ என்ற உறவு மட்டுமேதான் என அனைவரும் கொடுத்த கதாபாத்திரங்களை உணர்ந்து நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

இவர்களுடன் இணைந்து நடித்திருக்கும் ரிஷிகாந்த், ஏகன், விக்னேஷ்காந்த், காவியா அறிவுமணி, அய்ரா கிருஷ்ணன், முல்லை அரசி, மைக் கோபி, விஜி சந்திரசேகர், ஆடுகளம் நரேன், சுரேஷ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி என அனைத்து கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு மிகச் சிறப்பான நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர்கள் மல்லிகா அர்ஜுனன் மற்றும் மணிகண்ட ராஜு ஆகியோரது ஒளிப்பதிவு மூலம் நான்கு கதையிலும் மிக நேர்த்தியான ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் தேவ் பிரகாஷ் ரீகனின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறார்.

நான்கு கதைகளையும் தாய் செண்டிமெண்டோடு சொன்னது தவறில்லை, ஆனால் நான்கு கதைகளிலும் அளவுக்கு அதிகமான சோகத்தை கொடுத்திருப்பது தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை இருந்தாலும் மிக அருமையாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் பிரிட்டோ ஜே.பி.

2K லவ்ஸ்டோரி திரை விமர்சனம்

கதாநாயகன் ஜெகவீர் மற்றும் கதாநாயகி மீனாட்சி கோவிந்தராஜன் சிறு வயது முதல் பள்ளிக்கூடத்தில் இருந்து கல்லூரி வரை இருவரும் ஒன்றாக படித்து வரும் நிலையில் அதன் பிறகு இருவரும் ஒன்றாக இணைந்து வெட்டிங் போட்டோகிராபி கம்பெனி ஒன்றை தொடங்குகிறார்கள்.

கதாநாயகன் ஜெகவீர் மற்றும் கதாநாயகி மீனாட்சி கோவிந்தராஜன் இவர்கள் எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாக இணைந்து செல்வார்கள் இவர்களை பார்க்கும் அனைவரும் இருவரும் காதலர்கள் என கூறுகிறார்கள்.

கதாநாயகன் ஜெகவீர் மற்றும் கதாநாயகி மீனாட்சி கோவிந்தராஜன் ஆனால் இவர்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பு மட்டுமே உள்ளது.

இப்படி உள்ள நிலையில் பவித்ரா என்பவரை கதாநாயகன் ஜெகவீர் காதலிக்க ஆரம்பிக்கிறார்.

கதாநாயகி மீனாட்சி கோவிந்தராஜனிடன் நெருங்கி பழகுவது நட்பு வைத்துக் கொள்வது என்பது பவித்ராவிற்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை.

இதனால் கதாநாயகன் ஜெகவீரிடம் கதாநாயகி மீனாட்சி கோவிந்தராஜனுடன் இருக்கும் நட்பை பவித்ரா விட வேண்டும் என கூறுகிறார்.

கதாநாயகன் ஜெகவீர் கதாநாயகி மீனாட்சி கோவிந்தராஜனுடன் நட்பை தொடரக்கூடாது என பவித்ரா கூற அதை செய்ய மறுக்கிறார்.

நட்புக்கும் காதலுக்கும் என்ன வித்தியாசம் என தெரியாமல் பவித்ரா கூறும் நிலையில் காதலுக்கும் நட்புக்கும் இடையே சிக்கித் தவிக்கிறார் கதாநாயகன் ஜெகவீர்.

இதற்கு அடுத்து என்ன ஆனது? கதாநாயகன் ஜெகவீர் காதலிக்கும் பவித்ராவுடன் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? சேரவில்லையா? கதாநாயகன் ஜெகவீர் காதலுக்கு கை கொடுத்தாரா? இல்லை நட்புக்கு கை கொடுத்தாரா? என்பதுதான் இந்த 2K லவ்ஸ்டோரி திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த 2K லவ் ஸ்டோரி திரைப்படத்தில் ஜெகவீர் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் ஜெகவீர் முடிந்த அளவுக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

கதாநாயகி மீனாட்சி கோவிந்தராஜன் அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.

சிங்கம்புலி, ஜெய பிரகாஷ், நந்தினி, பால சரவணன், ஜி.பி முத்து மற்றும் சிங்கம்புலி, ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி, லத்திகா பாலமுருகன், ஆகியோரின் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஒளிப்பதிவாளர் வி.எஸ் ஆனந்த கிருஷ்ணனின் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

இசையமைப்பாளர் டி இமானின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக அமைந்துள்ளது.

இசையமைப்பாளர் டி இமானின் பின்னணி இசை சுமாராக உள்ளது.

இந்த காலத்தில் உள்ள இளைஞர்களின் காதல், நட்பு அவர்கள் மேற்கொள்ளும் எமோஷனை மையமாக வைத்து திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் சுசீந்திரன்.

நல்ல கதையை கையில் எடுத்த இயக்குனர் திரைக்கதையில இன்னும் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம்.

தண்டேல் திரைப்பட விமர்சனம்

மீனவ குடும்பத்தைச் சார்ந்த கதாநாயகன் நாக சைதன்யா, மற்றும் கதாநாயகி சாய் பல்லவி சிறு வயது முதல் உயிருக்கு உயிராக காதலித்து வருகிறார்கள்.
நாக சைதன்யா தன்னுடைய மீனவக் கிராமத்தில் உள்ள நண்பர்களோடு சேர்ந்து சுமார் பல ஆயிரம் கி.மீ.க்கு தொலைவில் இருக்கும் குஜராத் கடற்கரைக்குச் சென்று, மீன்பிடிக்கச் செல்கிறார்கள்.

மீனவக் குடும்பத்தில் உள்ள அனைவரும் வருடத்தில் ஒன்பது மாதங்கள் மட்டுமே கடலுக்குள் சென்று மீன்பிடிப்பது இவர்களுடைய வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

கடலுக்குள் சென்று 9 மாதங்கள் மீன்பிடிக்கும் இவர்கள் மூன்று மாதங்கள் மட்டுமே தனது குடும்பத்தோடு சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள்.

கதாநாயகன் நாக சைதன்யா மீது உயிரையே வைத்திருக்கும் கதாநாயகி சாய் பல்லவி இப்படி ஒன்பது மாதங்கள் பார்க்காமல் பேசாமல் இருப்பதை கதாநாயகி சாய் பல்லவி தாங்கி கொள்ள முடியவில்லை.

மேலும், மீன்பிடி தொழில் என்பது மிகவும் ஆபத்தான தொழில் என்று, அதனை கைவிடும்படி கதாநாயகன் நாக சைதன்யாவிடம் மீள்பிடி தொழில் மிகவும் ஆபத்து என்பதால் நீ போக வேண்டாம் என கதாநாயகி சாய் பல்லவி கெஞ்சுகிறார்.

ஆனால், நமது கிராமத்தில் உள்ளவர்களின் வாழ்வாதாரம் என்று கூறி கதாநாயகன் நாக சைதன்யா கதாநாயகி சாய் பல்லவி பேச்சையும் மீறி மீன்வேட்டைக்கு சென்று விடுகிறார்.
இதனைத் தொடர்ந்து சில நாட்களில், கடும் புயலில் வேறு ஒரு படகு கவிழும் நிலையில் கதாநாயகன் நாக சைதன்யா அந்தப் படகில் உள்ள ஒருவரை காப்பாற்றும் நிலையில் மீன் பிடிக்க சென்றவர்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் படகு சென்றுவிட பாகிஸ்தான் கப்பல் காவல் படையிடம் கதாநாயகன் நாக சைதன்யா மற்றும் 21 பேரையும் பாகிஸ்தான் காவல் படையினர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அங்குள்ள சிறைக்குள் அடைக்கப்படுகிறார்கள்..

இறுதியில் கதாநாயகன் நாக சைதன்யா மற்றும் 21 பேரையும் பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுதலை ஆனவர்களா?, விடுதலை ஆகவில்லையா?, என்பதுதான் இந்த தண்டேல் திரைப்படத்தின் மீதிக் கதை.

இந்த தண்டேல் திரைப்படத்தில் கதாநாயகனாக நாக சைதன்யா நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் நாக சைதன்யா, திரைப்படத்திற்கு அதனுடைய கதாபாத்திரம் மூலம் உயிர் கொடுத்திருக்கிறார்.

கதாநாயகன் நாக சைதன்யா ஆக்‌ஷன், காதல், செண்டிமெண்ட், நடனம், எமோஷன்ஸ் என நடிப்பின் மூலம் அசத்தியிருக்கிறார்.

கதாநாயகன் நாக சைதன்யாவிற்கும் கதாநாயகி சாய்பல்லவிக்குமான கெமிஸ்ட்ரி திரைப்படத்தில் நன்றாகவே வொர்க் அவுட் ஆகியிருக்கிறது.

நடிப்பு நடனம் என படிப்பின் மூலம் சாய் பல்லவி அசத்தியிருக்கிறார்.

மேலும், ஆடுகளம் நரேன், பப்லு, கருணாகரன் உள்ளிட்ட மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் மிகவும் நேர்த்தியாக கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஷ்யாம் தத் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு தூணாக அமைந்திருக்கிறார்.

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது.

பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று, மீனவர்கள் கைது செய்யப்பட்டு அங்கு உள்ள சிறைக்குள் அடைபட்டு கிடக்கும் இந்திய மீனவர்கள் எந்த மாதிரியான இன்னல்களுக்கு எப்படி எல்லாம் ஆளாகியிருப்பார்கள் என்பதை வெளிச்சமாக காட்டி நம் கண்களில் ஈரத்தைக் கொண்டு வர வைத்துவிட்டார் இயக்குனர் சந்து மொண்டேட்டி.

’ராமாயணா : தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா’ பட விமர்சனம்

அயோத்தியின் மன்னனாக பதவி ஏற்க இருக்கும் நிலையில் ராமர், பலவிதமான சூழ்ச்சியின் காரணத்தால் 14 ஆண்டுகள் காட்டுக்கு (வனவாசம்) அனுப்பப் படுகிறார்.
ராவணன் ராமரின் மனைவி சீதாயை கடத்துகிறார்.
கடத்தப்பட்ட சீதையை தேடிச் செல்லும் ராமர், அனுமான் படைகளின் உதவியுடன் இலங்கையில் உள்ள ராவணனை வீழ்த்தி, அங்கு இருக்கும் சீனாவையும் மீட்டதோடு, அங்கு மாட்டிக் கொண்டிருக்கும் அடிமைகளையும் மீட்டது, என ராமாயணத்தின் கதையை அனிமேஷன் மூலம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்கும்படியாக ’ராமாயணா : தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா’ மிக அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இலங்கை மன்னன் ராவணனின் தம்பி கும்பகர்ணனின் பிரமாண்ட உருவம், வடிவமைப்பு சீதையை ராவணன் கடத்திச் செல்லும் போது அவரை காப்பாற்ற முயற்சிக்கும் ஜடாயு பறவை, பிரம்மாண்டமாகவும் மூலிகைக்காக மலையையே எடுத்து வரும் ஹனுமானின் சாகசங்கள் என ராமாயணத்தின் முக்கிய அம்சங்களை அனிமேஷன் மூலம் மிக அருமையாகவும் மிக நேர்த்தியாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
ராமர் கதாபாத்திரத்திற்கு பிண்ணனி குரல் கொடுத்திருக்கும் செந்தில் குமார், சீதா கதாபாத்திரத்திற்கு பிண்ணனி குரல் கொடுத்திருக்கும் டி.மகேஷ்வரி, ராவணனுக்கு கதாபாத்திரத்திற்கு பிண்ணனி குரல் கொடுத்திருக்கும் பிரவீன் குமார், லக்ஷ்மனனுக்கு கதாபாத்திரத்திற்கு பிண்ணனி குரல் கொடுத்திருக்கும் தியாகராஜன், ஹனுமானுக்கு கதாபாத்திரத்திற்கு பிண்ணனி குரல் கொடுத்திருக்கும் லோகேஷ் மற்றும் ராமாயண கதையை வாய்ஸ் ஓவர் ரவூரி ஹரிதா என அனைவரும் தங்களது பணியை மிகவும் சிறப்பாக கையாண்டு இருக்கிறார்கள்.
சிறுவர்களுக்கு பிடித்த 2டி அனிமேஷன் மூலம் போர் நடக்கும் காட்சிகள் மற்றும் அதில் ஈடுபடும் வானரப் படைகளின் செயல்கள் கண்டிப்பாக சிறுவர்களை மகிழ்விக்கும் என்பது உறுதி.
குறிப்பாக, கும்பகர்ணனிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் வானரப் படைகளின் காட்சிகள் சிறுவர்களை திரைப்படத்தை கண்டிப்பாக திரும்ப திரும்ப அனைவரையும் பார்க்க வைக்கும்
இந்திரஜித் மற்றும் லக்ஷ்மன் இடையே நடக்கும் வான் சண்டையும், ராவணனின் புஷ்பக விமானம், கோட்டை என அனைத்துமே அனிமேஷன் மூலம் மிக நேர்த்தியாக காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒலி வடிவமைப்பும் அனிமேஷன் தொழில்நுட்பங்கள் மற்றும் அதில் பயன்படுத்தியிருக்கும் கலர்கள் காட்சி அமைப்பு அனைத்தும் சிறுவர்கள் மட்டுமல்லாமல் அதையும் தாண்டி பெரியவர்களையும் கண்டிப்பாக ரசிக்க வைக்கும் படியாக அமைந்துள்ளது.

’குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ திரை விமர்சனம்

அரசியல்வாதியாக இருக்கும் யோகி பாபுக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கும் போது, வீட்டில் வேலை பார்க்க வந்த வடமாநில பெண்ணுடன் கள்ள உறவு வைத்துக் கொள்கிறார்.இதனால் வடமாநில பெண்ணுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க அந்த வடமாநில பெண்ணை யோகி பாபு மனைவி வீட்டை விட்டு வெளியேற்றி விடுகிறார் .
யோகி பாபுவின் மகன் இமயவர்மன் தன் தந்தையைப் போல் தானும் அரசியல்வாதியாகி ஆட்சி அதிகாரத்தில் உட்கார வேண்டும். என்ற ஆசையோடு வளர்ந்து வருகிறான்.கள்ள உறவில் உள்ள மனைவியின் மகனும் அரசியல்வாதியாகி தந்தையை விட பெரிய இடத்திற்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிறான்
யோகி பாபுவின் இரண்டு மகன்களும் ஒரே பள்ளியில் படிக்க, பள்ளிக் காலம் முதலே, தலைவர், விளம்பரம், தேர்தல், சதி என்று அரசியல்வாதிகளுக்கான அனைத்து அம்சங்களுடன் வளர்ந்து வருகிறார்கள்.
இவர்கள் இருவரும் நினைத்தது போல் இவர்களது எதிர்காலம் அமைந்ததா?, அமையவில்லையா? என்பதுதான் இந்த‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்தக் குழந்தைகள் முன்னேற்ற கழகம் திரைப்படத்தில் கதாநாயகனாக இமய வர்மன் நடித்திருக்கிறார்.யோகி பாபு கதாநாயகனாக நடித்திருந்தாலும், திரைப்படத்தின் சில காட்சிகளில் திடீர் திடீரென்று தலைக்காட்டி விட்டு மறைந்து விடுகிறார்.யோகி பாபு வழக்கம் போல், உடல் கேலி செய்து சிரிக்க வைக்க முயற்சித்து சில காட்சிகளில், பல இடங்களில் அவரது காமெடிக் காட்சிகள் கடியாக மாறி திரைப்படம் பார்க்கும் ரசிகர்களுக்கு வலியை ஏற்படுத்துகிறது.
நகைச்சுவை நடிகர் செந்தில், அரசியல் கட்சித் தலைவராக நடிப்பில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.
அத்வைத் ஜெய் மஸ்தான் இருவரும் கேமரா பயம் இல்லாமல் மிக தைரியமாக நடித்திருக்கிறார்கள்.
சிறுமி ஹரிகா பெடடாவின் திரை இருப்பும், நடிப்பும் திரைப்படத்திற்கு கூடுதலாக பலம் சேர்த்திருக்கிறது.
சுப்பு பஞ்சு, சித்ரா லட்சுமணன், மயில்சாமி, வைகா ரோஸ், அஸ்மிதா சிங், லிஸி ஆண்டனி, சரவணன் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஜெ.லக்ஷ்மண் குமாரின் ஒளிப்பதிவின் மூலம் திரைப்படத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளார்
இசையமைப்பாளர் சாதகப் பறவைகள் சங்கரின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறார்.
தமிழக போட்டி அரசியல் மற்றும் குடும்ப அரசியலை, சிறுவர்கள் எதிர்காலம் ஆகியவற்றை நகைச்சுவையாக சொல்லி பார்வையாளர்களை சிரிக்க வைத்து இருக்கிறார் இயக்குநர் என்.சங்கர் தயாள்.