deccanwebtv

Turkish Airlines Launches “Tomorrow On-Board”Sustainability Brand

Chennai,6 June, 2024: Turkish Airlines, the airline flying to more countries than any other, has launched its sustainability brand “Tomorrow On-Board” on June 5, World Environment Day, with a special event at the carrier’s hub, Istanbul Airport. In line with “Tomorrow On-Board,” the event presented a display of sustainable in-flight products and services, along with the exhibition of items made from repurposed aircraft parts.

The national flag carrier’s sustainability brand “Tomorrow On-Board” represents the scope of its future goals and aims to present this comprehensive vision to passengers and investors as part of the corporate culture. “Tomorrow On-Board” was created with several key objectives: enhancing the brand image, delivering a unified message and visual framework for all sustainability statements, systematically communicating sustainability activities to investors, and ensuring passengers have the opportunity to take part in sustainability initiatives. “Tomorrow On-Board” will serve as a brand guiding all the company’s sustainability practices and communication efforts.

Commenting on the launch, Chief Invesment & Strategy Officer of Turkish Airlines, Mr. Levent Konukcu, said: “Tomorrow On-Board initiative embodies our commitment to reducing our environmental impact and enhancing sustainability practices across all our operations to leave a better world for future generations. Through this platform, we emphasize our dedication to offering transparent information and data, ensuring that our sustainability efforts are consistently clear and easily accessible to all stakeholders.”

Honoring the launch, an exhibition titled “41.2607° North and 28.7424° East” is showcasing a curated selection of artworks, including paintings, sculptures, and installations by four different artists and will welcome visitors for two weeks at Istanbul Airport. The artworks, created by interdisciplinary artists from items such as parts from a decommissioned aircraft, flight crew uniforms and bags, cabin carpets, and seat fabrics, emphasize the goal of a better world.

Find out more about ‘Tomorrow On-Board”
https://www.turkishairlines.com/en-int/sustainability-at-turkish-airlines/

இசை வழியே என் தந்தையுடன் இணைந்திருப்பது பெரும் மகிழ்ச்சி

இசை வழியே என் தந்தையை கௌரவித்தது, எனக்கு கிடைத்த பெருமை – நடிகை ஸ்ருதிஹாசன் !!

இசைக் கலைஞரும், முன்னணி பாடகியும், முன்னணி நட்சத்திர நடிகையுமான ஸ்ருதிஹாசன் அண்மையில் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு, அவருடைய தந்தை கமல்ஹாசனை கொண்டாடும் விதமாக அவரது ஹிட்டான பாடல்களை தொகுத்து ஒரு இசை நடன நிகழ்வை அரங்கேற்றினார்.

ஸ்ருதிஹாசன் தனது தந்தையின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பாடல்களை, தொகுத்து அதை தன் இசை மற்றும் நடனத்தால் மெருகேற்றி பார்வையாளர்களை கவர்ந்தார். அவரது குழுவுடன் அவர் இணைந்து பாடி நடனமாடியது.. இசை வெளியீட்டு விழாவை மேலும் மிளிரச் செய்தது. இந்த தருணத்தை தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் விதமாக, காணொளி ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

அந்த காணொளியில் ஸ்ருதிஹாசன் தன் தந்தை கமல்ஹாசனின் பாதங்களை தொட்டு வணங்கி அவரது ஆசீர்வாதத்தை பெறுகிறார். அதே தருணத்தில் கமல்ஹாசன், ஸ்ருதிஹாசனை ஆரத்தழுவி அவரது அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்துகிறார். மேலும் இது தொடர்பாக சில அரிய புகைப்படங்களையும் ஸ்ருதிஹாசன் பகிர்ந்துள்ளார்.

இந்நிகழ்வு குறித்து ஸ்ருதிஹாசன் கூறுகையில்.., ” என் தந்தையின் திரை வாழ்வை கௌரவப்படுத்துவது எனக்கு கிடைத்த கௌரவம். அதுவும் இசையால் அதை நிகழத்துவது எனக்குப் பெருமை. அவரது திரைப்படங்களில் இடம்பெற்ற வெற்றிப்பாடல்களில் சிலவற்றை திறம்பட ஒன்றிணைத்து, தொகுத்து, ஒரு அற்புதமான மெலடியாக தயாரித்து வழங்கியதற்கு பெரு உதவியாக இருந்த எனது குழுவினருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை ரசிகர்கள் முன் இந்நிகழ்வை அரங்கேற்றியது இன்னும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் மேடையில் பாடி நடனம் ஆடும் போது என் தந்தையின் வசீகர சிரிப்பை கண்டு அளவற்ற மகிழ்ச்சி அடைந்தேன். அவரது அன்பும், ஆதரவும், தான் என்னை இசையமைப்பாளராக வளர்த்தது. மேலும் பல இசை நிகழ்வுகளை எனது குழுவுடன் இணைந்து அரங்கேற்றுவேன்” என்றார்.

இந்நிகழ்வில் மேடையில் ஸ்ருதிஹாசனுடன் இசையமைப்பாளரும், பாடகருமான அனிருத் ரவிச்சந்தர், இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் மற்றும் மகள் அதிதி ஆகியோரும் இசை மற்றும் நடன நிகழ்வுகளை அரங்கேற்றினர்.

‘இந்தியன் 2’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் எதிர்வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தத் திரைப்படம் 1996 ஆம் ஆண்டில் வெளியான ‘இந்தியன்’ திரைப்படத்தின் தொடர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியன் படத்தின் மூன்றாம் பாகம் இந்த ஆண்டில் இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிப்பில், ஸ்ருதிஹாசன் தெலுங்கு நடிகர் ஆத்வி ஷேஷ் நடிக்கும் தெலுங்கு திரைப்படமான டகோயிட் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் பல அற்புதமான திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார். அவரது உருவாக்கத்தில் சமீபத்தில் வெளியான சுயாதீன இசை ஆல்பம் “இனிமேல்” மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வழங்கும்- BAD BOYS: RIDE OR DIE

‘பேட் பாய்ஸ்’ பட வரிசையில் நான்காவது பாகமான இது, ‘பேட் பாய்ஸ் ஃபார் லைஃப் (2020)’ படத்தின் தொடர்ச்சியாகும்.
ஒரு போலீஸ் அதிரடி நகைச்சுவை படமான பேட் பாய்ஸ் (1995), ‘பேட் பாய்ஸ் 2 (2023)’ படத்திற்கு வழி வகுத்தது (2003).
இந்தப் புகழ்பெற்ற பட வரிசையின் முதல் 2 படங்களை மைக்கேல் பே இயக்கியிருந்தாலும், 3 ஆவது படத்தை Adil & Bilall இயக்கியுள்ளனர். இந்த 4 ஆவது படத்தையும் அதே இரட்டையர்கள் இயக்கியுள்ளனர்! 4 மடங்கு அதிரடி மற்றும் 4 மடங்கு பொழுதுபோக்கு என்ற வாக்குறுதியுடன், இந்தியாவில் ஒரு நாள் முன்னதாகவே, ஜூன் 6 ஆம் தேதி படம் வெளியிடப்படுவதால் இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியடையலாம்.

உலக சினிமா ரசிகர்களின் விருப்பத்துக்குரிய ‘பேட் பாய்ஸ்’ அவர்களின் ட்ரேட் மார்க்கான, இருக்கை நுனியில் அமர வைக்கும் அதகளமான ஆக்சனுடனும் அட்டகாசமான நகைச்சுவையுடனும் திரும்பி வந்துள்ளனர் ஒரு சுவாரசியமான திருப்பத்துடன். மியாமியின் மிகச் சிறந்த டிடெக்ட்டிவ்ஸ் இம்முறை துரத்தப்படுகின்றனர்.

துப்பறியும் நிபுணர்கள் மைக் லோரி (வில் ஸ்மித்) மற்றும் மார்கஸ் பர்னெட் (மார்ட்டின் லாரன்ஸ்) ஆகியோர் மியாமி காவல் துறைக்குள் நிலவும் ஊழல் குறித்து விசாரிக்கின்றனர். மறைந்த கேப்டன் கான்ராட் ஹோவர்ட் (ஜோ பான்டோலியானோ) ருமேனிய மாஃபியாவுடன் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. மேலும் விசாரணை முன்னேறும்போது, துப்பறியும் நிபுணர்கள் துரத்தப்படுபவர்களாக மாறுவதால் , வழக்கை முடிப்பதற்காக சட்டத்தின் எல்லைக்கு வெளியே வேலை செய்யும் நிர்பந்தத்துக்கு உள்ளாகிறார்கள்.

படக்குழு:-

நடிகர்கள்: Vanessa Hudgens, Alexander Ludwig, Paola Nuñez, Eric Dane, Ioan Gruffudd, Jacob Scipio, Melanie Liburd, Tasha Smith ​​with Tiffany Haddish and Joe Pantoliano.

இயக்கம்: Adil & Bilall

தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும், IMAX இலும், ஜூன் 6, 2024 அன்று இந்தியாவில் இப்படத்தை வெளியிடுகிறது சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா.

கல்கி 2898 கிபி திரைப்பட டிரெய்லர் ஜூன் 10, 2024 இல் வெளியாகிறது!!

இந்தியாவெங்கும் ரசிகர்கள் பேராவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் கல்கி படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் & திஷா பதானி ஆகியோர் நடித்துள்ள “கல்கி 2898 கிபி” சயின்ஸ் பிக்சன் படத்தின் அதிரடியான டிரெய்லர் ஜூன் 10, 2024 அன்று வெளியிடப்படவுள்ளது. அமேசான் பிரைமில் புஜ்ஜி & பைரவா என்ற தலைப்பில், படத்தின் கதாப்பாத்திரங்களை அறிமுகப்படுத்தும் அனிமேசன் வீடியோ வெளியான பிறகு, உலகம் முழுவதிலும் இப்படத்தின் மீதான அறிவிப்பு அதிகரித்துள்ளது.

படத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கம், புதன்கிழமை காலை டிரெய்லர் வெளியீட்டு செய்தியைப் பகிர்ந்து கொண்டது:

“ஒரு புதிய உலகம் காத்திருக்கிறது

Kalki2898AD டிரெய்லர் ஜூன் 10 முதல்.”

டிரெய்லர் வெளியீட்டு தேதி, சுவாரஸ்யமான ஒரு புதிய போஸ்டருடன் அறிவிக்கப்பட்டது, அந்த போஸ்டரில், ஒரு மலையின் உச்சியில் பைரவவான பிரபாஸ் நிற்கிறார், “எல்லாம் மாறப்போகிறது” என்ற வாசகம் அதில் உள்ளது.

கல்கி 2898 கிபி படத்தில், இந்திய அளவில் முன்னணி நட்சத்திர நடிகர்களான அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடிப்பதால் இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இப்படம் 2024 ஜூன் 27ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

‘P T சார்’ திரைப்பட வெற்றி விழா !!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி K கணேஷ் தயாரிப்பில், ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்க, இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில், கடந்த மே 24ஆம் தேதி, கலக்கலான கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினராக வெளியான திரைப்படம் ‘P T சார்’. ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் பாராட்டினில் பெரும் வரவேற்பைக் குவித்த இப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், படக்குழுவினர் பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்களைச் சந்தித்தனர்.

இந்நிகழ்வினில்…

ஆர்ட் டைரக்டர் அமரன் பேசியதாவது…
இயக்குநர் கார்த்திக் அவர்களுக்கு என் முதல் நன்றி. அவர் சொன்ன கதை எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. நாம் தினமும் கடந்து போகும் நிகழ்வை, நாம் தவறவிடுவதை, நம் மனதைத் தாக்கும் நிகழ்வை மையமாக வைத்து, அழகான திரைக்கதை அமைத்திருந்தார். இந்த படத்தை தயாரித்த டாக்டர் ஐசரி K கணேஷ் அவர்களுக்கு நன்றி. என்னுடன் உழைத்த சக கலைஞர்களுக்கு நன்றி. ஆண் எனும் கர்வம் அழியவேண்டும் என நினைப்பவன் நான், நம்மைச் சுற்றி நடக்கும் விசயங்களைக் கவனிக்கையில் நான் ஆணாக இருப்பதை நினைத்து வெட்கப்படுகிறேன். நாம் வாழும் சமூகத்தைப் பிரதிபலிக்கும் படம் தான் இது. இப்படத்தைப் பாராட்டி வரவேற்ற அனைவருக்கும் நன்றி

ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம் பேசியதாவது..
இந்தப்படத்தை எல்லோரிடமும் சேர்த்த பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. இந்த வாய்ப்பு கிடைக்கக் காரணமாக இருந்த ஹிப்ஹாப் ஆதி, இயக்குநருக்கு நன்றி. இந்த படத்தைத் தயாரித்த டாக்டர் ஐசரி K கணேஷ் அவர்களுக்கு நன்றி. என்னுடன் உழைத்த சக கலைஞர்களுக்கு நன்றி.

இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் பேசியதாவது…
ஆதி பிரதருக்கு நன்றி. நான் யோசித்ததை ஏற்று, அதைக் கதையாகக் கொண்டு சேர்த்தது அவர் தான். அதே போல் நான் கேட்டதையெல்லாம் தந்து, இப்படத்தைப் பெரிய அளவில் கொண்டு சேர்த்த ஐசரி சாருக்கு பெரிய நன்றி. மேலும் இப்படத்தில் உழைத்த என் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இளவரசு சார் இப்படத்தில் தந்த நடிப்பு, படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தது, அவருக்கு என் நன்றி. முனீஷ்காந்த் மிக அட்டகாசமான நடிப்பைத் தந்தார். இரண்டாம் பாதி கோர்ட் டிராமாவாக ஆகிவிடக்கூடாது என்பதால் ஜட்ஜாக பாக்யராஜ் அவர்களை அணுகினேன், அவர் வந்த பிறகு இந்தப்படம் இன்னும் சிறப்பாக அமைந்தது. இந்தக்கதை யோசித்த போது ஹராஸ்மெண்ட் பற்றி எல்லோரும் சொல்லிவிட்டார்கள் ஆனால் அதன் பிறகு பெண்கள் படும் கஷ்டத்தைச் சொல்லலாம் என நினைத்தேன். நிறையப்பேர் படம் பார்த்துவிட்டு எங்களுக்கும் இது நடந்துள்ளது இப்படம் நல்ல தெளிவைத் தந்துள்ளது என்று கூறுகிறார்கள் மிகப்பெரிய மகிழ்ச்சி. படத்தை வெற்றி பெறச்செய்த அனைவருக்கும் நன்றி.

நடிகர் முனீஷ் காந்த் பேசியதாவது…
தயாரிப்பாளர், இயக்குநர், ஹீரோவுக்கு நன்றி. படத்தை வெற்றி பெறச்செய்த அனைவருக்கும் நன்றி. என் கதாபாத்திரத்தைப் பாராட்டிய அனைவருக்கும் நன்றி.

நடிகர் இளவரசு பேசியதாவது…
இயக்குநர் வேணுகோபாலுக்கு நான் தான் நன்றி சொல்ல வேண்டும். பல படங்களில் நடிக்கக் கேட்கும்போது நாமும் வீட்டு பில் கட்ட வேண்டுமென்பதால் தான் போக வேண்டும். ஒரு சில இயக்குநர்கள் நமக்கு சிறப்பான கதாப்பத்திரத்தை தருவார்கள். அப்படி கார்த்திக் எனக்கு நல்ல கதாபாத்திரத்தைத் தந்துள்ளார். இந்த மாதிரி அப்பா மகளை மையப்படுத்திய கதையை, இன்றைய காலத்தில் சொல்ல ஒரு ஹீரோ தேவைப்படுகிறது. சினிமாவைத் தாண்டிய இமேஜ் உள்ள ஹிப்ஹாப் ஆதி இப்படத்தைச் செய்ததற்கு நான் நன்றி சொல்லிக்கொள்கிறேன். தனக்கு ஒரு வியாபாரம் இருக்கும் சூழ்நிலையில் இம்மாதிரி கதையை தேர்ந்தெடுத்த அவருக்கு நன்றி. சினிமாவில் சில நேரம் நல்ல விதைகள் விழும். அந்த வகையில் கார்த்தி மிகச்சிறப்பான இயக்குநர். காலேஜ் சேர்மனை வில்லனாகக் காட்டும் கதை என நினைக்காமல், கல்லூரி நடத்தும் ஐசரி கணேஷ் சார் இப்படத்தைத் தயாரித்ததற்கு என் நன்றி. எந்நாளும் எனக்கு வாத்தியாராக இருக்கும் பாக்யராஜ் சாருக்கு நன்றி. என் கதாபாத்திரத்தை விமர்சனத்தில் பாராட்டிய அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் பாக்யராஜ் பேசியதாவது…
ஹீரோ ஹிப்ஹாப் ஆதிக்கு என் முதல் நன்றி, அவர் நடிக்க நல்ல கதை தேர்ந்தெடுக்க வேண்டுமென்று நினைக்காமல், நல்ல கதையைத் தயாரிப்பாளரிடம் எடுத்துச் சென்று, அந்த இயக்குநருக்கு வாழ்வை ஏற்படுத்தித் தந்ததற்கு நன்றி. ஐசரி இந்தக்கதையைத் தேர்ந்தெடுத்துத் தயாரித்ததற்கு நன்றி. கார்த்திக் வேணுகோபால் நான் பிறந்த ஊரிலிருந்து வந்திருக்கிறார் என்பது மகிழ்ச்சி. நல்ல கதையைச் சிறப்பான திரைக்கதையில் தந்துள்ளார் வாழ்த்துக்கள். படத்தில் உழைத்த கலைஞர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

வேல்ஸ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி K கணேஷ்
‘P T சார்’ படத்தின் மூன்றாவது நிகழ்ச்சி இது. படம் வெளியாகி மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இன்றைய காலத்தில் சினிமாக்கள் இரண்டு நாள் ஓடுவது கடினமாக இருக்கிறது. அதற்கு நிறையக் காரணங்கள் இருக்கிறது. ஓடிடி தளங்கள் வந்த பிறகு சினிமா மாறிவிட்டது. அதையெல்லாம் தாண்டி ‘P T சார்’ நன்றாகப் போகிறது. அதிலும் பலர் ஒரு நல்ல சினிமாவை எடுத்திருக்கிறார்கள் என்று பாராட்டினார்கள் அது பெரிய மகிழ்ச்சி. வெற்றிப்படம் என்றாலும் திருப்தி இருக்க வேண்டும் அதற்குக் காரணமாக இருந்த இயக்குநர் கார்த்திக் அவர்களுக்கு நன்றி. அவர் சிறந்த இயக்குநராக வருவார். அவரது அடுத்த படத்தையும் நானே தயாரிக்கிறேன். புது இயக்குநர்கள் சிக்கனமாகப் படமெடுங்கள், நல்ல படமெடுங்கள். ஹிப்ஹாப் ஆதி தான் இந்தப்படத்தை என்னிடம் கொண்டு வந்தார். அவர் இசையும் இதில் நன்றாக இருந்தது. பாக்யராஜ் சார் க்ளைமாக்ஸில் கலக்கிவிட்டார். படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. படத்தைப் பாராட்டிய உங்களுக்கு என் நன்றிகள்

நடிகர் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி பேசியதாவது…
ஒவ்வொரு பத்திரிக்கை நண்பர்களுக்கும் எங்கள் படத்தைச் சரியாகக் கொண்டு சேர்த்ததற்காக என் நன்றி. இன்று வரை படம் நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது அதற்குக் காரணம் நீங்கள் தான். உங்கள் பாராட்டுக்கு நன்றி. உங்கள் அறிவுரையின் படி நல்ல படங்களைத் தொடர்ந்து செய்வேன். ஒரு கல்வியாளராக இருந்துகொண்டு இந்தப்படத்தைத் தயாரித்ததற்காக ஐசரி சாருக்கு நன்றி. பெண்கள் வேலை பார்க்கும் மில்லில் இரண்டு ஸ்பெஷல் ஷோ போட்டார்கள் என்று சொன்ன போது, படம் வசூலித்தது என்பதை விட அதிகம் சந்தோசப்பட்டார் அது எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. தொடர்ந்து உங்களுடன் படம் செய்ய ஆவலுடன் இருக்கிறேன். இந்தப்படத்தை நம்பி வந்த ஆர்டிஸ்ட் அனைவருக்கும் நன்றி. கோர்ட் ரூம் சின்ன போர்ஷன் அதை நம்பி வந்து, எங்களுக்காக நடித்து தந்த பாக்யராஜ் சாருக்கு நன்றி. இளவரசு அண்ணன் ஒரு பாத்திரமாக வாழ ஆரம்பித்து விடுகிறார். ஷீட்டிங்கில் அவ்வளவு அர்ப்பணிப்புடன் நடிப்பதைப் பார்த்து அவரிடம் நிறையக் கற்றுக்கொண்டேன். பிரபு சார், பட்டிமன்றம் ராஜா சார், தேவதர்ஷிணி மேடம், என பெரிய பெரிய ஜாம்பவான்கள் இருந்தார்கள். பெரும் ஒத்துழைப்பு தந்தார்கள். இதையெல்லாம் ஒழுங்கு படுத்தி, நல்ல டைரக்டர், சிக்கனமான டைரக்டர் என்று பெயரெடுத்த கார்த்திக்கிற்குப் பாராட்டுக்கள். இந்தப்படத்தில் என்னை நாயகனாக்கியதற்கு நன்றி கார்த்திக். இந்தப்படத்தில் அனைத்து கலைஞர்களும் முழு அர்ப்பணிப்புடன் உழைத்தார்கள் அவர்கள் அனைவருக்கும் நன்றி. முனீஷ் அண்ணாவுடன் திரும்ப நடித்தது மகிழ்ச்சி. இந்தப்படத்தின் வெற்றியை விட எனக்கு மனதளவில் மிகப்பெரிய திருப்தியை இந்தப்படம் தந்துள்ளது அனைவருக்கும் நன்றி.

இந்த படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நாயகனாக நடிக்க, காஷ்மிரா பர்தேசி, அனிகா, பாக்கியராஜ், பிரபு, தியாகராஜன், பாண்டியராஜ், திவ்யதர்ஷிணி, உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் திரைக்கதை எழுதி இயக்க, வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி K கணேஷ் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளார். ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். இந்தப் கடந்த மே 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

பாயல் கபாடியாவின் ஆல் வி இமேஜின் அஸ் லைட் திரைப்படம், வரலாற்றில் முதல் முறையாக ஒரு இந்திய திரைப்படமாக, கேன்ஸில் கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்றுள்ளது.

நமது பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி ஜி, கேரளா மற்றும் பல மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள பல முன்னணி திரையுலகப் பிரபலங்கள் #PayalKapadia பாயல் கபாடியா மற்றும் படத்தில் பங்குகொண்ட நடிகர்களான கனி குஸ்ருதி, திவ்ய பிரபா, ஹிருது ஹாரூன், சாயா கதம் மற்றும் அஜீஸ் ஆகியோருக்கு தனிப்பட்ட முறையில் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில், ஆல் வி இமேஜின் அஸ் லைட் திரைப்படத்தின் நடிகர்களில் ஒருவரான ஹிருது ஹாரூன் இது குறித்து கூறுகையில்… இயக்குநர் #PayalKapadia, தயாரிப்பாளர்கள் மற்றும் குழுவினர், எனக்கு வழிகாட்டியாக விளங்கிய அனைவருக்கும், ஆதரவு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்த ஒவ்வொருவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

முன்னதாக பிருந்தா மாஸ்டரின் தமிழ் படமான தக்ஸ் திரைப்படத்தில், ஹிருது ஹாருன் நாயகனாக நடித்திருந்தார். மேலும் விஜய் சேதுபதி நடிப்பில், சந்தோஷ் சிவன் இயக்கிய மும்பைக்கார் படத்திலும், அமேசான் வெப் சீரிஸ் க்ராஷ் கோர்ஸிலிம் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்போது பாயல் கபாடியாவின் இயக்கத்தில், இவரது நடிப்பில் உருவாகியுள்ள “ஆல் வி இமேஜின் அஸ் லைட்” படத்தின் இவரது நடிப்பு பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

தற்போது ஹிருது ஹாரூன் வெற்றிமாறன் தயாரிப்பில் ஒரு தமிழ் படத்திலும், கப்பேலா புகழ் மலையாள இயக்குநர் முஸ்தபா இயக்கத்தில் ஒரு படத்திலும், நடித்து முடித்துள்ளார்.

70-Year-Old Patient Successfully Treated for Uncontrolled Hypertension Through Renal Denervation Therapy

A 70-year-old gentleman, who had been suffering from chronichigh blood pressure and uncontrolled hypertension for the past six years, was successfully treated at Kauvery Hospital, Radial Road, through a procedure called renal denervation. 

The patient had been battling with hypertension since 2019. Despite taking five different medicines for high blood pressure and even after increasing the dosage over a period of time, his blood pressurecontinued to be as high as 200/120mm Hg and the associated symptoms like frequent headaches and palpitations affected his quality of life. 

With such uncontrolled hypertension posing the risk of many serious health conditions like stroke, heart attack and kidney failure, Prof Dr Ajith Pillai, Chief Cardiologist and Head of Department, recommended the latest electrically modulated renal denervation (RDN) treatment. This procedure was performed in the Cath Labunder local anesthesia, using radiofrequency ablation to control the patient’s renal nerve excitability. This effective treatment option is not only minimally invasive but also reduces nerve activity to achieve long-term stabilisation of blood pressure.

Following the procedure, the patient was discharged after 48 hours.Depending on the health status, some patients can also be discharged even within 24 hours. A month later, the patient’s blood pressure is well under control, with readings consistently in the range of 140/80mm Hg. He is free from the symptoms he experienced earlier and has been able to reduce the BP medicines significantly. 

“The Heart Institute at Kauvery Hospital, Radial Road, is a tertiary centre of excellence that offers high-end care and runs an active hypertension screening and treatment program. It is one of the referral centres for RDN therapy, which would benefit patients who have uncontrolled blood pressure,” said Prof Dr Ajith Pillai. 

Kauvery Hospital, Radial Road, is a leading healthcare institution offering advanced treatments and surgical interventions in neurology, cardiology, women and child wellness, gastroenterology, orthopaedics, joint reconstruction, urology, nephrology and other specialities. With a dedicated team of experts and state-of-the-art medical facilities including 50+ critical care beds, 20+ NICU beds, 7+ operation theatres, advanced Cath labs, cutting-edge neuro diagnostic equipment like 3T MRI and 4K + 3D neuro microscope, transplant facilities and 24/7 dialysis unit, it provides world-class medical care to patients from around the globe.

இயக்குநர் பா. ரஞ்சித் வெளியிட்ட ‘பயமறியா பிரம்மை’ பட ஃபர்ஸ்ட் லுக்!

ராகுல் கபாலி இயக்கும், அறிமுக நாயகன் ஜேடி நடிக்கும் ‘பயமறியா பிரம்மை’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

புதுமுக நடிகர் ஜேடி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘பயமறியா பிரம்மை’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநரும், தயாரிப்பாளரும், தமிழ் திரையுலகின் படைப்புலக ஆளுமையுமான பா. ரஞ்சித் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

அறிமுக இயக்குநர் ராகுல் கபாலி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பயமறியா பிரம்மை’ எனும் திரைப்படத்தில் ஜேடி, குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், விஸ்வாந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நந்தா- வி. பிரவீண் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே இசையமைத்திருக்கிறார்.‌ சதீஷ் கலை இயக்கத்தை கவனிக்க, படத்தின் படத்தொகுப்பு பணிகளை அகில் பிரகாஷ் மேற்கொண்டிருக்கிறார். ஒலி வடிவமைப்பை விஜய் ரத்னமும், ஒலி கலவையை ரஹ்மத்துல்லாவும் கையாண்டிருக்கிறார்கள். கிரைம் திரில்லர் வகையிலான இந்த திரைப்படத்தை 69 எம் எம் ஃபிலிம் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெகதீஷ் மற்றும் ராகுல் கபாலி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” படத்தின் கதை 90 மற்றும் 2000ஆம் ஆண்டில் நடைபெறுவது போல் அமைக்கப்பட்டிருக்கிறது. அனைத்து கதாபாத்திரங்களும் முன்னுரிமை கொடுத்து படத்தின் திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது. கிரைம் திரில்லர் வகையிலான படைப்பில் ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை ‘பயமறியா பிரம்மை’ தரும்” என்றார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதுமாக நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்களின் தோற்றம் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றிருக்கிறது.

மேலும் ‘பயமறியா பிரம்மை’ எனும் இந்த திரைப்படம் இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் நடைபெற்ற ஆறுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல விருதுகனை வென்றிருக்கிறது என்பதும், இந்த ஆண்டு கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டு, பலரின் பாராட்டுகளை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

“கருடன்”திரைவிமர்சனம்

இயக்குநர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் கதையின் நாயகனாக சூரி, மற்றும் சசிக்குமார், உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி இன்று திரையரங்கில் வெளியாக இருக்கும் திரைப்படம்தான் “கருடன்”.
சூரி மற்றும் சசிக்குமார், உன்னி முகுந்தன் மூவரும் சிறு வயதிலிருந்தே நண்பர்கள் இவர்கள் மூவரையும் சிறு வயது முதல் வளர்த்து வருபவர் வடிவுக்கரசி.

கோம்பை அம்மன் கோவில் நிர்வாக தலைவராக வடிவுக்கரசி இருந்து வருகிறார்.

கதாநாயகன் சூரி மற்றும் சசிக்குமார், உன்னி முகுந்தன் ஆகிய மூவரும், அந்த கோவிலின் நிர்வாகத்தில் இருக்கிறார்கள்.

தாய் தந்தை இல்லாத தன்னை வளர்த்த உன்னி முகுந்தனுக்கு நண்பனாக மட்டுமல்லாமல் நல்லதொரு விசுவாசியாகவும் கதாநாயகன் சூரி இருந்து வருகிறார்.

தேனி மாவட்ட கிராமத்தில் லாரி பிஸ்னஸ், செங்கல் சூளை, கோம்பை அம்மன் கோயில் சொத்தை பராமரிப்பது எனக் குடும்பமாக, ஊரின் முக்கியப் புள்ளிகளாக கதாநாயகன் சூரி மற்றும் சசிக்குமார், உன்னி முகுந்தன் ஆகிய மூவரும், வலம் வரும் இவர்கள் பராமரித்து வரும் கோம்பை அம்மன் கோவில் நிலம் ஒன்று சென்னையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அமைச்சர் ஆர் வி உதயகுமார் அதற்காக அந்த கோவிலுக்கு வைக்கப்பட்டுள்ள பட்டயம் ஒன்றை கைப்பற்ற நினைக்கிறார்.

அதனால், அந்த அமைச்சர் ஆர் வி உதயகுமாரின் ஆளான மைம் கோபி கோவிலின் நிர்வாகத்திற்குள் அனுப்ப நினைக்கிறார்.

அந்த ஊருக்கு புதிதாக இடமாற்றம் செய்யப்பட்டு வரும் காவல்துறை உயர் அதிகாரியான சமுத்திரக்கனி வைத்து அமைச்சர் ஆர்.வி உதயகுமார் காய் நகர்த்த கதாநாயகன் சூரி மற்றும் சசிக்குமார், உன்னி முகுந்தன் ஆகிய மூவருக்கும் கொஞ்சம் கொஞ்சமாக பிரச்சனைகளும் பிளவுகளும் ஏற்படுகிறது.

அமைச்சர் ஆர்.வி உதயகுமார் உன்னி முகுந்தனுக்கு பணத்தாசையை காண்பிக்க தன் மனைவியின் பணத்தாசையிலும் திசை மாறி செல்கிறார்.

இறுதியில் அமைச்சர் அறிவு உதயகுமாரின் கோவில் நிலத்தை அபகரிக்கும் திட்டம் நிறைவேறியதா? நிறைவேறவில்லையா? சசிகுமார், உன்னி முகுந்தன் நட்பு என்ன ஆனது? விசுவாசத்திற்கும் நியாயத்திற்குமான போராட்டத்தில் கதாநாயகன் சூரி யாருக்கு சாதகமாக செயல்பட்டார்? என்பதுதான் இந்த கருடன் திரைப்படத்தின் மீதிக்கதை.

சூரி சொக்கன் கதாபாத்திரத்தில் நடிகர் உன்னி முகுந்தனின் மீது அதீத அன்பு கொண்ட அடிமையாகவும் விசுவாசியாகவும் மிகவும் அருமையாகவும் நடித்திருக்கிறார்.

கதாநாயகி ரேவதி ஷர்மா அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து ரசிகர்களுக்கு மனதில் இடம் பிடித்து விட்டார்.

இந்த கருடன் திரைப்படத்தில் ஆதி என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சசிகுமார், நட்புக்கு அடையாளமாகவும் நட்புக்கு இலக்கணமாகவும் நடித்து ரசிகர்களின் மனதில் பதிந்துவிட்டார்.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி,

அமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆர் வி உதயகுமார், மைம் கோபியின் நடிப்பு மிக மிக அருமையாக நடித்திருக்கிறார்.

ஸ்வேதா நாயர் தன் கணவர் சசிகுமார் நினைத்து உருகும் காட்சிகளில் ரசிகர்களை கண்கலங்க வைத்து விட்டார்.

ஒளிப்பதிவாளர் ஆர்தர் ஏ வில்சனின் தேனியின் வறண்ட பகுதிகளையும், காதல் பாடலில் மலைப்

பகுதியின் குளுமையையும், நட்பு, துரோகம் என உணர்வுக்கேற்றபடி திரை அனுபவத்தையும் ஒளிப்பதிவின் மூலம் பதிவு செய்துள்ளது

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஓகே ரகமாக தென்பட்டாலும், பின்னணி இசையில் மிகப்பெரிய அளவில் மாஸ் காண்பித்திருக்கிறார்.

தமிழகத்தில் அரசியல்வாதிகள் செய்து கொண்டிருக்கும் கோவில் நிலத்தை அபகரிக்க நினைக்கும் அரசியல்வாதிகளின் சூழ்ச்சியை மையமாக வைத்து இந்த கருடன் திரைப்படத்தை மிகச் சிறப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஆர்.ஏஸ் துரை செந்தில்குமார்.

கருடன் இன்னும் கூர்மையாக பார்த்திருக்கலாம்

Watcher Productions presentsCalcutta I’m Sorry


Multiple Sclerosis is a peculiar disease that casts a drastic impact on the spinal cord as well as the brain which affects the individual’s life to a very drastic extent making them totally dependent. Only a few accept the situation and move on…
The Multiple Sclerosis Society of India is doing tremendous service to those affected and spares no effort to create awareness as well as to extend all possible help to those affected!
The much acclaimed feature film, Calcutta, I’m Sorry, scripted and directed by Harry McClure has its theme set around an Anglo – Indian woman named Amanda Wright who serves as a Music Teacher at Conoor is diagnosed with Multiple Sclerosis, much to her shock!
To create awareness about how such persons affected by Multiple Sclerosis moves on and goes on with their lives, MSSI took the initiative of arranging for the screening of the film which was formally flagged off by Ms. Shreya P. Singh, IAS (Exec. Dir., TN Corporation for Development of Women, State Mission Director, National Urban Livelihoods Mission, TN. Govt.), in the presence of Ann Gonsalvez, Honorary Secretary, MSSI and Harry MacLure, the writer/director.
The screenplay describes the long journey of Amanda in a bicycle from Coonor to Chennai (to meet her daughter) and to Calcutta (to meet her granddaughter).
The film is a lesson – learning process as to how one has to face and overcoming challenges in the journey of one’s life!
CREDITS –Written and Wielded by-Harry MacLure
CAST –Priscilla Corner as Amanda, Gillian Pinto as Sabrina & Gillian Williamson as Calcutta Music & Sound Design-Ganesh Ramanna
Cinematography & Editing by-Nicholas Moses