Breaking
September 16, 2026

deccanwebtv

Romeo Pictures – Aviate Pictures இணையும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

பிரம்மாண்ட திரைப்படத் தயாரிப்பிலும், வெற்றிகரமான விநியோகத்திலும் முத்திரை பதித்த தயாரிப்பாளர் ராகுலின் Romeo Pictures நிறுவனம், தனது புதிய படத்தினை Aviate Pictures கோகுல் ஸ்ரீனிவாசனுடன் இணைந்து தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே துவங்கியது. ‘ரைட்டர்’ பட இயக்குநரும், ‘DC’ படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இப்படத்தை இயக்குகிறார்.

இளைய திலகம் பிரபு மற்றும் விஜய் வர்மா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில், நடிகை ஷிவாத்மிகா ராஜசேகர் கதாநாயகியாக நடிக்கிறார். Romeo Pictures ராகுல் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடிக்கிறார். டார்க் ஹியூமர் ஜானரில், வித்தியாசமான கதைக்களத்தில், திரில்லர் கலந்த காமெடி திரைப்படமாக இப்படம் உருவாகவுள்ளது.

படப்பிடிப்பின் முதல் நாளான இன்று, நடிகர் விக்ரம் பிரபு மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் படப்பிடிப்புத் தளத்திற்கு நேரில் வருகை தந்து, படக்குழுவினரை சந்தித்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இவர்களின் வருகை படக்குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.

இப்படத்தில் முத்துக்குமார், ரமேஷ் திலக், திலீப் சுப்பராயன், தீனா, அருண் மாதேஸ்வரன், கவிதா பாரதி மற்றும் அவினாஷ் ரகுதேவன் உள்ளிட்ட பலர் முன்னணி நட்சத்திரங்களாக இணைந்து நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்ய, பிரசன்னா G.K படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். P.C. ஸ்டன்ட்ஸ் சண்டைப் பயிற்சியைக் கவனிக்க, யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். நவ்ஷாத் அகமது ஆடை வடிவமைப்பையும், சக்தி வெங்கட்ராஜ் M கலை இயக்கத்தையும் மேற்கொள்கின்றனர்.

வித்தியாசமான கதைக்களத்தில், அனுபவம் வாய்ந்த நடிகர் பிரபு மற்றும் இளம் தலைமுறை நடிகர்கள் இணையும் இந்தப் புதிய படம், ரசிகர்களுக்கு ஒரு புதுமையான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் தலைப்பு மற்றும் இதர முக்கிய தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளன.

‘மூன்வாக்’ – 2026 தீபாவளி விருந்தாக திரைக்கு வருகிறது

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் (Behindwoods Productions) பெருமையுடன் வழங்கும் ‘மூன்வாக்’ திரைப்படம் 2026 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. நடனப் புயல் பிரபுதேவா மற்றும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோரின் புகழ்பெற்ற கூட்டணியில் உருவாகி உள்ள இத்திரைப்படம், பார்வையாளர்களுக்கு சிரிப்பும், மறக்க முடியாத குடும்ப தருணங்களும் நிறைந்த ஒரு பிரம்மாண்டமான திருவிழா அனுபவத்தைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரையரங்குகளை கொண்டாட்டமாக மாற்றும் ‘மூன்வாக்’ திரைப்படம், வயது வித்தியாசமின்றி அனைத்து பிரிவு பார்வையாளர்களுக்கும் நிச்சயம் மிகச்சிறந்த அனுபவத்தை வழங்கும்

ஏ.ஆர். ரஹ்மானின் கலக்கலான இசை அமைப்பில் உருவாகியுள்ள ‘மூன்வாக்’ திரைப்படத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், சாட்ஸ், நிஷ்மா, சுஷ்மிதா, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன், டாக்டர் சந்தோஷ் ஜேக்கப், தீபா சங்கர் மற்றும் ராம்குமார் நடராஜன் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தின் மிக முக்கியமான சிறப்பம்சமாக, இசைஅமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஒரு ஜாலியான சிறப்புத் தோற்றத்தில் நடிகராக அறிமுகமாகிறார். மேலும், நடிகர் யோகி பாபு 16 வித்தியாசமான கதாபாத்திரங்களில் தோன்றுவது படத்தின் மற்றொரு பெரிய ஹைலைட் ஆகும்!

2026-ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக உருவாகியுள்ள ‘மூன்வாக்’, நகைச்சுவை, இசை மற்றும் நடனம் ஆகியவற்றை தடையின்றி ஒன்றிணைத்து ஒரு கலகலப்பான திரைப்பட அனுபவத்தை வழங்குகிறது. குடும்பங்கள் ஒன்றாகக் கண்டு மகிழக்கூடிய பொழுதுபோக்குத் திரைப்படங்கள் தேவைப்படும் இந்தக் காலத்தில், பண்டிகைக் காலத்திற்காகவே சிறப்புமிக்க ஒரு புத்துணர்ச்சியூட்டும் அனுபவமாக ‘மூன்வாக்’ வருகிறது.

இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் ஊடக நிறுவனமான பிஹைண்ட்வுட்ஸ் (Behindwoods)-ன் நிறுவனர் (Founder & CEO) மனோஜ் என்.எஸ் இத்திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

இந்த அறிவிப்பு குறித்து இயக்குநர் மனோஜ் என்.எஸ் கூறுகையில்: “தீபாவளி என்பது குடும்பங்களை ஒன்று சேர்க்கும் ஒரு திருவிழா, அதே வேலையை எங்களுடைய ‘மூன்வாக்’ திரைப்படமும் செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்த படம் மகிழ்ச்சி, சிரிப்பு, இசை மற்றும் நடனத்தின் கொண்டாட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தீபாவளிக்கு, குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக வந்து, முகம் நிறைய சிரிப்போடு திரையரங்கை விட்டு வெளியேறும் ஒரு திரைப்பட அனுபவத்தைப் பெற ‘மூன்வாக்’ குழுவின் சார்பில் அன்புடன் அழைக்கிறோம்.”

இப்படத்திலிருந்து ஏற்கனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள ‘ஏத்து’
(Yethu), ‘டிங்கா’ (Tinga) மற்றும் ‘மகரினா’ (Macarena) ஆகிய மூன்று பாடல்களும் உலகெங்கிலும் உள்ள இசை மற்றும் நடனப் பிரியர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. இதைத் தொடர்ந்து, ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபுதேவா இணைந்து நடித்துள்ள ‘மயிலே’ (Mayile) என்ற நான்காவது பாடல் விரைவில் வெளியாகவுள்ளது.

ஆற்றல் மிக்க இசை, பொழுதுபோக்கு நிறைந்த கதைக்களம் மற்றும் மனதை மகிழ்விக்கும் அம்சங்களுடன், 2026 தீபாவளிப் பண்டிகையைச் சிரிப்பால் நிரப்பும் ஒரு சிறப்பான குடும்பக் கொண்டாட்டமாக ‘மூன்வாக்’ அமையவுள்ளது.

இத்திரைப்படத்திற்கு அனூப். வி. ஷைலஜா ஒளிப்பதிவு செய்ய, சேகர் வி.ஜே மற்றும் பியூஷ்-ஷாஜியா நடன இயக்கம் செய்துள்ளனர். ஷனூ கலை இயக்குநராகவும், திவ்யா ஜார்ஜ் மற்றும் ஸ்வேதா ராஜு ஆடை வடிவமைப்பாளர்களாகவும் பணியாற்றியுள்ளனர்.

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் மனோஜ் என்.எஸ், திவ்யா மனோஜ் மற்றும் பிரவீன் எலக் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள ‘மூன்வாக்’ திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தின் சர்வதேச திரையரங்கு விநியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் (Romeo Pictures) பெற்றுள்ளது, மேலும் இசை உரிமையை லஹரி (Lahari Music) நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

ஒரிஜினல் மான்ஸ்டர்: மும்பையில் நட்சத்திரங்கள் பங்கேற்ற பிரம்மாண்ட நிகழ்வில் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் வெளியீடு

மும்பை, ஆகஸ்ட் 28, 2026:

மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகி வரும் ஒரிஜினல் மான்ஸ்டர் திரைப்படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர், ஆகஸ்ட் 28 அன்று மும்பையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் வெளியிடப்பட்டது. இதன் மூலம், தனது தாய்த் திரையுலகைத் தாண்டி பார்வையாளர்களுக்கு இப்படம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டதுடன், பான் இந்தியா பயணத்திற்கான எதிர்பார்ப்பும் தொடங்கியுள்ளது.

இந்நிகழ்வில் படத்தின் முக்கிய உறுப்பினர்கள் மட்டுமின்றி, இந்திய திரையுலகின் மிகவும் மதிக்கப்படும் பல முன்னணி பிரபலங்களும் கலந்து கொண்டனர். இயக்குநர் ஆர். சந்துரு, புகழ்பெற்ற தயாரிப்பாளரும் வழங்குநருமான திரு. ஆனந்த் பண்டிட், பான் இந்தியா சூப்பர் ஸ்டார் டாக்டர். சிவராஜ்குமார், திருமதி. கீதா சிவராஜ்குமார், பிரபல நடிகர் சுனில், இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் மற்றும் ஒளிப்பதிவாளர் ஏ.ஜே. ஷெட்டி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு, ஒரிஜினல் மான்ஸ்டர் படக்குழுவிற்கு இந்த மாலை நேரத்தை மறக்க முடியாததாக மாற்றினர்.

மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த மோஷன் போஸ்டர், டாக்டர். சிவராஜ்குமார், ஆர். சந்துரு, ஆனந்த் பண்டிட், கீதா சிவராஜ்குமார் மற்றும் படத்தின் முக்கியக் குழுவினரின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இதன் மூலம், ஒரிஜினல் மான்ஸ்டர் என்ற தலைப்பு முதன்முறையாக பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த வெளியீட்டிற்கு அங்கு கூடியிருந்தவர்களிடையே உற்சாகமான வரவேற்பு கிடைத்தது. இப்படத்தின் சிறப்பான கூட்டணி மற்றும் படைப்பாற்றல் பார்வையின் கொண்டாட்டமாக இந்த நிகழ்வு அமைந்தது. சுனில், அஜனீஷ் லோக்நாத் மற்றும் ஏ.ஜே. ஷெட்டி போன்ற பாராட்டுக்குரிய திறமையாளர்களின் பங்கேற்பு, இப்படத்தின் பின்னணியில் உள்ள பல்வேறு திறமைகளைக் கொண்ட சிறப்பான படைப்புக் குழுவையும் எடுத்துக்காட்டியது.

மும்பையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டருக்கு ஊடகங்கள், விருந்தினர்கள் மற்றும் நிகழ்வில் கலந்து கொண்ட திரையுலகைச் சேர்ந்தவர்களிடமிருந்து சிறப்பான வரவேற்பு கிடைத்த நிலையில், மிகுந்த உற்சாகமான சூழலில் நிறைவடைந்தது.

தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஒரிஜினல் மான்ஸ்டர் திரைப்படம் தனது அடுத்தகட்ட விளம்பரப் பயணத்தைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள பார்வையாளர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மும்பை வெளியீட்டு நிகழ்வு, பான் இந்தியா அளவில் தனது இருப்பை நிலைநிறுத்தும் நோக்கில் இப்படம் எடுத்து வைக்கும் முதல் முக்கியமான அடியாக அமைந்துள்ளது.

எம். எஸ். பாஸ்கர் நடிப்பில் ‘விடியும் காத்திரு’

‘விடியும் காத்திரு’… எம்.எஸ். பாஸ்கர் நடிக்கும் புதிய க்ரைம் திரில்லர்!

எம்.எஸ். பாஸ்கர் நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘விடியும் காத்திரு’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Friends Production House நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை பி.எம். ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். அயோத்தி வளர்மதி இணைத் தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். இயக்குநர்கள் பாலா மற்றும் மிஷ்கின் படங்களின் கதை விவாதங்களில் பங்காற்றிய ஆர். அரவிந்த ராஜன், தனது முதல் திரைப்படமாக ‘விடியும் காத்திரு’ படத்தை இயக்கியுள்ளார்.

எம்.எஸ். பாஸ்கர் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் அம்ஜதா ஷெரின் முதன்மை பெண்கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், காவலர் கதாபாத்திரத்தில் கோபி அயோத்தி, பேபி ஶ்ரீஜிதா, ராகேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சுவாரஸ்யமான க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படம், ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைக்கும் வகையிலான பரபரப்பான திரைக்கதையுடன், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படமாக உருவாகி வருகிறது. ஒரு கொலை நடந்த வீட்டிற்குள் செல்லும் இரண்டு காவல் அதிகாரிகளுக்கு அங்கு நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதை பின்னப்பட்டுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக்கில், பெரிதாக்கப்பட்ட கதவு சாவித் துவாரத்தின் வழியே பயத்தில் விரியும் எம்.எஸ். பாஸ்கரின் முகம் கவனம் ஈர்க்கிறது. மேலும், கதவில் இடம்பெற்றுள்ள “You Are Next” என்ற வாசகம் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் மர்மத்தையும் அதிகரித்துள்ளது.

இப்படத்திற்கு சி. சத்யா இசையமைக்கிறார். ஜி. தாமோதரன் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். சண்டைக் காட்சிகளை மெட்ரோ மகேஷ் அமைக்க, ஐஸ்வர்யா நடன அமைப்பாளராக பணியாற்றுகிறார். ராஜன் வழிவிட்டான் கலை இயக்கத்தை கவனிக்கிறார்.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

‘விடியும் காத்திரு’ திரைப்படத்தை உத்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் செ. ஹரி உத்ரா, தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.

ஜிவி பிரகாஷ் நடிக்கும் “இம்மார்டல்”

AK Film Factory சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் மற்றும் கயாது லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஃபேண்டஸி திரில்லராக உருவாகியுள்ள “இம்மார்டல்” திரைப்படத்தின் முன் வெளியீட்டு விழா உற்சாகமாக நடைபெற்றது.

படக்குழுவினர், திரையுலக பிரபலங்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்ட இந்த விழாவில், “இம்மார்டல்” திரைப்படம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்கள் பகிரப்பட்டன. படத்தின் உருவாக்கம், கதைக்களம் மற்றும் படக்குழுவினரின் அனுபவங்கள் விழாவை மேலும் சிறப்பாக்கின.

தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன் பேசியதாவது..,

இந்தக் கதையை இயக்குநர் மாரியப்பன் சின்னா முதன்முதலில் என்னிடம் கூறியபோது, ‘இது ஹாலிவுட் படம் போன்று இருக்கிறது. இதை எப்படி சாத்தியப்படுத்த முடியும்?’ என்ற எண்ணம்தான் எனக்கு ஏற்பட்டது. குறிப்பாக, அவர் கூறிய விஷுவல் கிரியேஷன்கள் மிகப் பெரிய சிஜி பணிகளைக் கொண்டதாக இருந்தன. ஆனால், இயக்குநர் சுமார் ஏழு மாதங்கள் வெளிநாட்டில் உள்ள ஸ்டூடியோவில் பணியாற்றி, படத்தின் விஷுவல் மாடலைத் தயாரித்து என்னிடம் கொண்டு வந்தார். ‘சார், நீங்கள் இதுவரை பார்த்த சாதாரண தமிழ் படம் போல் இது இருக்காது. ஹாலிவுட் தரத்தில் இதை உருவாக்க முடியும்’ என்ற அவரது நம்பிக்கையே என்னையும் இந்தப் படத்தை தயாரிக்கத் தூண்டியது.

படப்பிடிப்பிற்கு முன்பாகவே நீண்ட காலம் முன் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டோம். அந்தத் தயாரிப்புப் பணிகள் மூலம் படத்தின் காட்சிகள் மற்றும் சிஜி தொடர்பான விஷயங்களை மிகவும் கவனமாகத் திட்டமிட்டோம். அதன் பிறகு ஜி.வி. பிரகாஷ் குமார் இந்தப் படத்தில் இணைந்தார். அவர் மிகுந்த உற்சாகத்துடனும் முழு அர்ப்பணிப்புடனும் படப்பிடிப்பில் பங்கேற்று எங்களுக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பை வழங்கினார். நான் தனிப்பட்ட முறையில் ஜி.வி. பிரகாஷ் சாரின் ரசிகன். அவர் இந்தப் படத்தில் இணைந்தது எங்களுக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. இந்தப் படத்தின் கதாநாயகி தேர்விலும் இயக்குநர் மிகவும் கவனமாக செயல்பட்டார். சமூக வலைதளங்கள் மூலமாக கயாது லோஹரை பார்த்து, இந்தக் கதாபாத்திரத்திற்கு அவர் சரியாக இருப்பார் என்ற நம்பிக்கையில் அவரை அணுகினோம். படத்தில் அவர் மிகவும் பொருத்தமான நடிப்பை வழங்கியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பில் பெரும்பாலான காட்சிகள் சவாலான சூழ்நிலைகளில் படமாக்கப்பட்டன. குறிப்பாக, பல்வேறு ஆக்‌ஷன் மற்றும் ஃபேண்டஸி காட்சிகளை உருவாக்குவதில் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் முழுமையாக உழைத்துள்ளனர். ஒரு தயாரிப்பாளராக கலைஞர்கள் பாதுகாப்பாகவும், அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளுடனும் பணியாற்ற வேண்டும் என்பதில் நான் மிகுந்த கவனம் செலுத்தினேன்.

‘இம்மார்டல்’ ஒரு சாதாரண திரைப்படமாக இருக்காது என்பதை இப்போதே உறுதியாகச் சொல்ல முடியும். காட்சியமைப்பு, விஷுவல் எஃபெக்ட்ஸ், இசை, கிரியேஷன் என அனைத்திலும் ஹாலிவுட் தரத்தை நோக்கி படத்தை உருவாக்கியுள்ளோம். இதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழில்நுட்ப வசதிகளையும் பயன்படுத்தியுள்ளோம். குறிப்பாக, விஷுவல்ஸ் மற்றும் சிஜி பணிகளுக்காக படக்குழு மிக நீண்ட காலமாக உழைத்துள்ளது. இந்தப் படம் உருவாக கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கும் மேலான உழைப்பு உள்ளது. இயக்குநர் மாரியப்பன் சின்னா இந்தப் படத்திற்காக தனது முழு முயற்சியையும் அர்ப்பணித்துள்ளார். அவரது கனவு மற்றும் உழைப்பின் விளைவாக இந்தப் படம் இன்று மிகச் சிறப்பாக உருவாகியுள்ளது. படத்தின் ஒளிப்பதிவு, இசை, சவுண்ட், எடிட்டிங், விஷுவல் எஃபெக்ட்ஸ் என ஒவ்வொரு துறையிலும் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தங்களின் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர். இந்தப் படத்தின் உருவாக்கத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை எங்களுடன் இருந்து ஆதரவு அளித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘இம்மார்டல்’ திரைப்படம் இந்திய அளவில் மட்டுமல்லாமல், தொழில்நுட்ப ரீதியாகவும் விஷுவல் அனுபவத்திலும் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும். படம் வெளியான பிறகு உங்கள் அனைவரின் ஆதரவும், கருத்துகளும் எங்களுக்கு மிகவும் முக்கியம். இந்தப் படத்தை வெற்றிபெறச் செய்ய அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்,” என்றார்.

நடிகர், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் பேசியதாவது..,

“இது மிகவும் வித்தியாசமான படம். இந்திய சினிமாவிற்கு புதிதான வாம்பயர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படம், ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும். சுமார் ஒரு வருடம் உழைத்து சிஜி மற்றும் மான்ஸ்டர் காட்சிகளை உருவாக்கியுள்ளோம். இது ஒரு சர்வைவல் திரில்லராகவும் இருக்கும். சுமார் நான்காயிரம் ஆண்டுகள் வாழும் ஒரு கதாபாத்திரத்தைச் சுற்றியும் கதை நகர்கிறது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தப் படத்தை மிகுந்த அர்ப்பணிப்புடன் கொண்டு சென்றுள்ளார். புதிய தயாரிப்பாளர் மற்றும் புதிய இயக்குநர் இணைந்து பெரிய கனவுடன் உருவாக்கியுள்ள இந்தப் படத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும். இயக்குநர் மாரியப்பன் சின்னா கூறிய கதை ஹாலிவுட் தரத்தில் இருந்ததால் எனக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது. இது எந்தப் படத்தின் காப்பியும் இல்லை; முற்றிலும் புதிய அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் முயற்சி.

கயாது லோஹர் இந்தப் படத்தில் தனது சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். அவரது ரசிகர்கள் நிச்சயம் இந்தப் படத்தை ரசிப்பார்கள். மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக கார்த்தி அவர்களின் கதாபாத்திரம் திரையரங்கில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும்.

ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணனுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது. சாம் சி.எஸ். இந்தப் படத்தின் பின்னணி இசைக்காக மிகுந்த உழைப்பை வழங்கியுள்ளார். அவருடைய பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும்.

‘இம்மார்டல்’ படத்தை குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் திரையரங்கில் சென்று பார்க்கலாம். டிரெய்லருக்கு கிடைத்துள்ள வரவேற்பைப் போலவே படத்திற்கும் ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும். மேலும், புதிய இயக்குநர்கள் மற்றும் புதிய தயாரிப்பாளர்களுடன் பணியாற்றுவதில் எனக்கு எப்போதும் மகிழ்ச்சி. நான் நடித்த பல படங்களில் அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வகையில், மாரியப்பன் சின்னா மற்றும் தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரனுக்கும் ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்,” என்றார்.

இயக்குநர் மாரியப்பன் சின்னா பேசியதாவது..,

“இந்தக் கதையை உருவாக்கியதில் இருந்து படமாக்குவது வரை ஏராளமான சவால்களை சந்தித்தோம். இது வழக்கமான திரைப்படம் அல்ல என்பதால், ஒவ்வொரு காட்சியையும் புதிதாக யோசித்து உருவாக்க வேண்டியிருந்தது. இந்தப் படத்தின் மீது நம்பிக்கை வைத்து, எனக்கு முழு சுதந்திரத்தையும் ஆதரவையும் வழங்கிய தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரனுக்கு முதலில் நன்றி. ஜி.வி. பிரகாஷ் சார் கதையைக் கேட்டதும் நம்பிக்கை வைத்து இந்தப் படத்தில் இணைந்தார். ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன் ஒவ்வொரு காட்சியையும் மேலும் சிறப்பாக உருவாக்குவதற்காக அதிகம் யோசித்து உழைத்தார். எடிட்டர் சான் லோகேஷ், பின்னர் இணைந்த ராஜேஷ் ஆகியோரும் படத்தின் உருவாக்கத்தில் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

கயாது லோஹர் இந்தக் கதாபாத்திரத்திற்காக மிகப்பெரிய முயற்சியை எடுத்துள்ளார். தமிழில் ஒரு வார்த்தைகூட தெரியாத நிலையிலும், ஒவ்வொரு வசனத்தையும் புரிந்துகொண்டு சரியாகப் பேசுவதற்காக கடுமையாக உழைத்தார். சவாலான படப்பிடிப்பு சூழல்களிலும் ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்ட நடிகர்கள் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றினர். குறிப்பாக ஆக்‌ஷன் மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் படமாக்கப்பட்டன. இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., சவுண்ட் டிசைன் குழுவினர் மற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் இந்தப் படத்திற்கு தங்களின் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

‘இம்மார்டல்’ ஒரு புதிய அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் படம். இதுவரை தமிழ் சினிமாவில் அதிகம் பார்க்காத வகையிலான விஷுவல் மற்றும் சவுண்ட் அனுபவத்தை உருவாக்க முயற்சித்துள்ளோம். திரையரங்கில் படத்தைப் பார்க்கும்போது, ஒவ்வொருவரின் உழைப்பும் ரசிகர்களுக்கு நிச்சயம் தெரியும்,” அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ். பேசியதாவது..,

இம்மார்டல் எனக்கு மிகவும் முக்கியமான படம், சில படங்கள் செய்யும்போது இது தனித்துவமாக இருக்குமென நமக்கு தெரியும் அந்த வகையில் இது எனக்கு மிகவும் பிடித்த படம்.

“இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அருண்குமார் மிகவும் எனர்ஜியான மற்றும் பாசிட்டிவான மனிதர். ஒரு படத்தை சிறப்பாக உருவாக்க வேண்டும் என்ற அவரது ஆர்வமும், படக்குழுவினர் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கையும்தான் இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம். அவர் செய்யும் உதவிகளைக்கூட வெளியே சொல்லிக்கொள்ள விரும்பாத நல்ல மனிதர். ஜி.வி. பிரகாஷ் எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர்களில் ஒருவர். இசையமைப்பாளராக மட்டுமல்லாமல், நடிகராகவும் இந்தப் படத்தில் அவர் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். குறிப்பாக படத்தின் இரண்டாம் பாதியில் அவரது நடிப்புக்கு அதிக முக்கியத்துவமும், ஸ்கோப்பும் உள்ளது. அவர் அதை மிகவும் அழகாக செய்திருக்கிறார்.

இயக்குநர் மாரியப்பன் சின்னாவும் இந்தப் படத்திற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளார். ஒவ்வொரு இயக்குநருடனும் பணியாற்றும் அனுபவம் வித்தியாசமானது. அந்த வகையில், இந்தப் படத்தின் ஒட்டுமொத்த குழுவும் ஒரே நோக்கத்துடன் இணைந்து உழைத்திருப்பது திரையில் நிச்சயம் தெரியும். என்னுடன் இந்தப்படத்தில் உழைத்த அனைத்து குழுவினருக்கும் நன்றி. கண்டிப்பாக இப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் அனைவரும் படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

சக்தி ஃபிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் பேசியதாவது..,

“இந்தப் படத்தின் டிரெய்லரைப் பார்த்தபோது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இது மிகப்பெரிய பட்ஜெட்டில், உயர்தர தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள படம். ஒவ்வொரு ஃப்ரேமிலும் நடிகர்கள், ஒளிப்பதிவு, எடிட்டிங், விஷுவல் எஃபெக்ட்ஸ் என படக்குழுவினரின் நேர்மையான உழைப்பும் அர்ப்பணிப்பும் தெரிகிறது.

குறிப்பாக, தமிழ் சினிமாவில் அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகளை இவ்வளவு தரமாக உருவாக்கியிருப்பது பாராட்டுக்குரியது. ஜி.வி. பிரகாஷ் எப்போதும் தனது பணியில் அபாரமான ஆற்றலுடன் செயல்படுபவர். எத்தனை படங்களில் நடித்தாலும், எத்தனை படங்களுக்கு இசையமைத்தாலும் அவரது உழைப்பும் வேகமும் குறைவதில்லை. அவர் வாங்காத தேசிய விருது இல்லை ஆனாலும் ஓடிக்கொண்டே இருக்கிறார். அதேபோல், தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரனின் விஷனும் மிகப்பெரியது. ஒரு தயாரிப்பாளராக அவர் இந்தப் படத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையும், பிரமாண்டமாக படத்தை உருவாக்கி விளம்பரப்படுத்தும் முயற்சியும் பாராட்டுக்குரியது. நல்ல இயக்குநர்கள் மற்றும் புதிய முயற்சிகளுக்கு வாய்ப்பளிக்கும் தயாரிப்பாளராக அவர் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இடத்தைப் பெறுவார் என்று நம்புகிறேன்.

‘இம்மார்டல்’ ஒரு அழகான ரொமான்டிக் கதையுடன், பிரமிப்பூட்டும் விஷுவல்ஸ் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்ட படமாக உருவாகியுள்ளது. திரையரங்கில் ரசிகர்கள் இந்தப் படத்தைப் பார்த்தால், ஒவ்வொரு ஃப்ரேமின் பின்னாலும் படக்குழுவினர் செய்திருக்கும் உழைப்பை ரசிப்பார்கள். படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்,” என்றார்.

நடன இயக்குநர் சபரீஷ் பேசியதாவது..,

“இந்தப் படம் எனக்கு மிகவும் சிறப்பான படம். குறிப்பாக, இது எனது முதல் படத்தைப் போன்ற ஒரு உணர்வை எனக்குக் கொடுக்கிறது. அதே நேரத்தில், இது எங்களின் இரண்டாவது திரைப்படமாகும் என்பதால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய அருண் அண்ணா, இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி படம் வெளியாகிறது. அனைவரும் திரையரங்குகளில் சென்று படத்தைப் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். உங்கள் அன்பும் ஆதரவும் எங்களுக்கு மிகவும் தேவை. அனைவருக்கும் நன்றி,” என்றார்.

எடிட்டர் ராஜேஷ் பேசியதாவது..,

“இந்தப் படத்தில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, எனக்கு முழு ஆதரவு அளித்து ஊக்கப்படுத்திய தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினருக்கு மிகப்பெரிய நன்றி. இந்தப் படத்தின் பணிகளில் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். அவர்களுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது.

மேலும், எனது குரு மற்றும் அவருடன் பணியாற்றிய அசோசியேட் நண்பர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் வழிகாட்டுதலும் ஆதரவும் எனது பயணத்தில் மிகவும் முக்கியமானது. ‘இம்மார்டல்’ திரைப்படம் செப்டம்பர் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ரசிகர்கள் அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து படத்தைப் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். இது அனைவரும் இணைந்து உழைத்த படம் என்பதால், உங்கள் ஆதரவு எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தரும்.

நடிகர் டி.எம். கார்த்தி பேசியதாவது..,

“சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநர் இந்தக் கதையை என்னிடம் கூறினார். அப்போது பேசிய கதாபாத்திரத்தை தற்போது இன்னும் விரிவுபடுத்தி முழு நீள கேரக்டராக உருவாக்கியிருந்ததால், இந்தப் படத்தில் நடிக்க உடனே ஒப்புக்கொண்டேன்.

பல வருடங்களுக்கு முன்பு ஒரு இசைப் போட்டியில் ஜி.வி. பிரகாஷ் எனக்கு பரிசு வழங்கியது இன்னும் நினைவில் உள்ளது. இப்போது அவருடன் இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி.

‘இம்மார்டல்’ மிகவும் வித்தியாசமான படமாக உருவாகியுள்ளது. இதில் வழக்கமான மாஸ் என்ட்ரி இருக்காது, ஆனால் மாஸ் ரசிகர்கள் உட்பட அனைவரும் ரசிக்கும் வகையில் படம் இருக்கும். தயாரிப்பாளர், இயக்குநர், ஜி.வி. பிரகாஷ் மற்றும் முழு படக்குழுவினருக்கும் நன்றி. படம் வெற்றி பெற வாழ்த்துகள்,” என்றார்.

நடிகர் குமார் நடராஜன் பேசியதாவது..,

“பெரும்பாலும் சின்ன சின்ன கேரக்டர்களில்தான் நடித்து வருகிறேன். ஆனால் இந்தப் படத்தில் எனக்காகவே மனதில் வைத்து எழுதப்பட்ட ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தக் கேரக்டரை நான் மிகவும் ரசித்து நடித்திருக்கிறேன்.

இந்தப் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் என அனைவரின் ஒத்துழைப்பும் மிகச் சிறப்பாக இருந்தது. குறிப்பாக, தமிழ் தெரியாத நிலையிலும் நாயகி தமிழ் வசனங்களை மிகவும் அழகாகப் பேசி நடித்தது என்னை வெகுவாக கவர்ந்தது.

இது மொபைல், டிவி அல்லது ஓடிடியில் சாதாரணமாக பார்க்க வேண்டிய படம் அல்ல. ஹாலிவுட் ஸ்டைலில் உருவாகியுள்ள இந்தப் படத்தை கண்டிப்பாக திரையரங்கில் சென்று பார்த்து அனுபவிக்க வேண்டும். பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்” என்றார்.

ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன் பேசியதாவது..,

‘“ஜி.வி. பிரகாஷ் சார் எப்போதும் வித்தியாசமான முயற்சிகளை ஆதரிப்பவர். இந்தக் கதையைக் கேட்டதுமே இது ஒரு எக்ஸ்பெரிமென்டல் முயற்சி என்பதால் கண்டிப்பாக நீ செய்ய வேண்டும் என்று கூறினார்.

படப்பிடிப்பின்போது பல சவால்களை எதிர்கொண்டோம். குறிப்பாக சில இடங்களில் படப்பிடிப்பு மிகவும் சவாலாக இருந்தது. இருந்தபோதும், தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன் எந்தவிதமான தயாரிப்பு ரீதியான தடையும் ஏற்படுத்தாமல், எவ்வளவு நாட்கள் எடுத்தாலும் படத்தை தரமாக உருவாக்க வேண்டும் என்று முழு ஆதரவும் சுதந்திரமும் அளித்தார். அதுவே இந்தப் படம் இவ்வளவு தரமாக உருவாக முக்கிய காரணம்.

படத்தின் நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினர், இசையமைப்பாளர் சாம் சி.எஸ். மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. அனைவரும் ‘இம்மார்டல்’ படத்தைப் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும்,” என்றார்.

ஜிவி பிரகாஷ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், “டிராகன்” திரைப்படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த கயாது லோஹர் நாயகியாக நடித்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நுழையும் ஒரு பெண்ணைத் தொடர்ந்து ஏற்படும் அமானுஷ்ய சம்பவங்களை மையமாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் அம்சங்களுடன் கலக்கலான கமர்ஷியல் படமாக “இம்மார்டல்” திரைப்படத்தை உருவாக்கி வருகிறார் அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா.

சென்னை மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. ஃபேண்டஸி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில் சிஜி மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் முக்கிய இடம் பெறுகின்றன.

பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சக்தி ஃபிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.

தொழில்நுட்பக் குழு:

எழுத்து, இயக்கம் – மாரியப்பன் சின்னா
தயாரிப்பு – அருண்குமார் தனசேகரன்
தயாரிப்பு நிறுவனம் – AK Film Factory
ஒளிப்பதிவு – அருண் ராதாகிருஷ்ணன்
இசை – சாம் சி.எஸ்.
எடிட்டிங் – ஷான் லோகேஷ்
கலை இயக்கம் – சிவசங்கர்
ஸ்டண்ட் – சக்தி சரவணன்
விளம்பர வடிவமைப்பு – கோபி பிரசன்னா
நடனம் – சபரீஷ்
ஆடை வடிவமைப்பு – வினோத் சுந்தர், தமிழ்செல்வன் U
DI – Get In Dream Studio
கலரிஸ்ட் – ஸ்ரீராம்
VFX – R. மஹி
ஸ்டில்ஸ் – இ. ராஜேந்திரன்
காஸ்ட்யூமர் – ரவி தேவராஜ்
ஒப்பனை – P. மாரியப்பன்
மக்கள் தொடர்பு – AIM சதீஷ்

இந்துஸ்தான் கலை & அறிவியல் கல்லூரி : ஆசிரியர் தினம் – முதலாண்டு மாணவர் வரவேற்பு விழா – HCAS இன்ஃப்ளுயன்சர் பாடத்திட்ட அறிமுகம்

சென்னை ஆகஸ்ட் 30 2026: சென்னையைச் சார்ந்த இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி – HCAS , (2026 ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி) வளாகத்தில் நேற்று ஆசிரியர் தின கொண்டாட்டம்- 2026 முதலாம் ஆண்டு மாணவர் வரவேற்பு விழா- (Fresher’s Day ) மற்றும் HCAS இன்ஃப்ளூயன்சர் எனும் புதிய பாடத்திட்டத்தின் தொடக்க விழா ஆகியவற்றை உள்ளடக்கிய முப்பெரும் விழா நடைபெற்றது.

ஆசிரியர் தின கொண்டாட்டம் காலை பத்து மணியளவில் எம் ஜி ஆர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பள்ளிக்கரணை மாவட்ட காவல் உதவி ஆணையர் திரு. எஸ். ஜான் விக்டர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். HCAS இன் இயக்குநர் டாக்டர். சூசன் வர்கீஸ், இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். இவருடன் கல்லூரி நிர்வாகம் மற்றும் உயர் கல்வித் துறையைச் சார்ந்த முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக HCAS இன் முப்பது ஆண்டுகால பயணத்தை விவரிக்கும் வகையில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. அத்துடன் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்பை பாராட்டும் வகையில் விருதுகளும் வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவர் வரவேற்பு விழாவும், HCAS இன்ஃப்ளூயன்சர் எனும் புதிய பாடத்திட்டத்தின் தொடக்க விழாவும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாணவ மாணவிகள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள்- முதலாம் ஆண்டு மாணவகளுக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் HCAS இன் துணை இயக்குநர் திரு. டேவிட் ரயன் வரவேற்புரையை நிகழ்த்தினார்.

மாணவர்கள், தங்கள் படைப்பாற்றல் – தகவல் தொடர்பு திறன்- டிஜிட்டல் திறமைகள் – ஆகியவற்றை வெளிப்படுத்துவதற்கான ஒரு தனித்துவமான தளத்தை வழங்கும் நோக்கத்தில் HCAS இன்ஃப்ளூயன்சர் எனும் புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. சமூக ஊடகங்கள் வாயிலாக கல்லூரி.. சமூகத்துடன் தீவிரமாக ஈடுபடுவதற்கும், HCAS இன் துடிப்பான வளாக கலாச்சாரத்தை முன்னிறுத்துவதற்கும்… மாணவர்களை இன்ஃப்ளூயன்சர்களாக வலிமைப்படுத்துவது தான் இந்த பாடத்திட்டத்தின் நோக்கமாகும்.

இந்த கொண்டாட்டங்கள் அனைத்தும் உயர்கல்வி – மாணவர் திறமை- படைப்பாற்றல்- தலைமைத்துவம்- வளர்ந்து வரும் டிஜிட்டல் திறன்கள்- ஆகியவற்றின் மீது HCAS கொண்டுள்ள எல்லைகளற்ற ஈடுபாட்டை பிரதிபலிக்கின்றன.

ஒரிஜினல் மான்ஸ்டர்: மும்பையில் நட்சத்திரங்கள் பங்கேற்ற பிரம்மாண்ட நிகழ்வில் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் வெளியீடு

மும்பை, ஆகஸ்ட் 28, 2026:

மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகி வரும் ஒரிஜினல் மான்ஸ்டர் திரைப்படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர், ஆகஸ்ட் 28 அன்று மும்பையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் வெளியிடப்பட்டது. இதன் மூலம், தனது தாய்த் திரையுலகைத் தாண்டி பார்வையாளர்களுக்கு இப்படம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டதுடன், பான் இந்தியா பயணத்திற்கான எதிர்பார்ப்பும் தொடங்கியுள்ளது.

இந்நிகழ்வில் படத்தின் முக்கிய உறுப்பினர்கள் மட்டுமின்றி, இந்திய திரையுலகின் மிகவும் மதிக்கப்படும் பல முன்னணி பிரபலங்களும் கலந்து கொண்டனர். இயக்குநர் ஆர். சந்துரு, புகழ்பெற்ற தயாரிப்பாளரும் வழங்குநருமான திரு. ஆனந்த் பண்டிட், பான் இந்தியா சூப்பர் ஸ்டார் டாக்டர். சிவராஜ்குமார், திருமதி. கீதா சிவராஜ்குமார், பிரபல நடிகர் சுனில், இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் மற்றும் ஒளிப்பதிவாளர் ஏ.ஜே. ஷெட்டி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு, ஒரிஜினல் மான்ஸ்டர் படக்குழுவிற்கு இந்த மாலை நேரத்தை மறக்க முடியாததாக மாற்றினர்.

மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த மோஷன் போஸ்டர், டாக்டர். சிவராஜ்குமார், ஆர். சந்துரு, ஆனந்த் பண்டிட், கீதா சிவராஜ்குமார் மற்றும் படத்தின் முக்கியக் குழுவினரின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இதன் மூலம், ஒரிஜினல் மான்ஸ்டர் என்ற தலைப்பு முதன்முறையாக பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த வெளியீட்டிற்கு அங்கு கூடியிருந்தவர்களிடையே உற்சாகமான வரவேற்பு கிடைத்தது. இப்படத்தின் சிறப்பான கூட்டணி மற்றும் படைப்பாற்றல் பார்வையின் கொண்டாட்டமாக இந்த நிகழ்வு அமைந்தது. சுனில், அஜனீஷ் லோக்நாத் மற்றும் ஏ.ஜே. ஷெட்டி போன்ற பாராட்டுக்குரிய திறமையாளர்களின் பங்கேற்பு, இப்படத்தின் பின்னணியில் உள்ள பல்வேறு திறமைகளைக் கொண்ட சிறப்பான படைப்புக் குழுவையும் எடுத்துக்காட்டியது.

மும்பையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டருக்கு ஊடகங்கள், விருந்தினர்கள் மற்றும் நிகழ்வில் கலந்து கொண்ட திரையுலகைச் சேர்ந்தவர்களிடமிருந்து சிறப்பான வரவேற்பு கிடைத்த நிலையில், மிகுந்த உற்சாகமான சூழலில் நிறைவடைந்தது.

தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஒரிஜினல் மான்ஸ்டர் திரைப்படம் தனது அடுத்தகட்ட விளம்பரப் பயணத்தைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள பார்வையாளர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மும்பை வெளியீட்டு நிகழ்வு, பான் இந்தியா அளவில் தனது இருப்பை நிலைநிறுத்தும் நோக்கில் இப்படம் எடுத்து வைக்கும் முதல் முக்கியமான அடியாக அமைந்துள்ளது.

ஒன்ஸ் மோர் (Once More) – திரைப்பட விமர்சனம்

“முதல் பாதியில் காதல்… இரண்டாம் பாதியில் கொஞ்சம் சலிப்பு!”

விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர், சோனா ஒலிக்கல் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஒன்ஸ் மோர்’, காதல், பிரிவு, மனக்காயம் மற்றும் மீண்டும் காதலிக்கத் துணியும் மனநிலையை மையமாகக் கொண்ட ரொமான்டிக் டிராமா. ஆகஸ்ட் 28, 2026 அன்று வெளியான இப்படத்தின் மையக்கரு, கடந்த காதலின் வலியிலிருந்து மீண்டு புதிய வாழ்க்கையைத் தொடங்கும் ஒருவரின் பயணம்.

முதல் காதலில் ஏற்பட்ட காயத்தால் காதலையே வெறுக்கும் ரகுவின் வாழ்க்கையில் அஞ்சலி நுழைகிறார். ரகுவின் மனதை மாற்றி, மீண்டும் காதலை உணர வைக்க அஞ்சலி மேற்கொள்ளும் முயற்சிகள்தான் படத்தின் முதல் பாதியை சுவாரஸ்யமாக்குகின்றன. எளிமையான இந்தக் கதையை அழகான காதல் காட்சிகள் மற்றும் நகைச்சுவையுடன் நகர்த்தியிருப்பது ரசிக்க வைக்கிறது.

அர்ஜுன் தாஸ் வழக்கமான மாஸ் ஹீரோ இமேஜிலிருந்து விலகி, மனதுக்குள் காதல் வலியை சுமந்து செல்லும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது இயல்பான நடிப்பும், அமைதியான உடல்மொழியும் ரகுவின் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கிறது. அதிதி ஷங்கர் படத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒருவர். துறுதுறுப்பான நடிப்பாலும், புன்னகையாலும் அஞ்சலி கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கிறார்.

ஹேஷம் அப்துல் வஹாபின் இசை படத்தின் காதல் உணர்வுகளுக்கு நல்ல துணையாக அமைந்துள்ளது. குறிப்பாக முதல் பாதியின் இலகுவான மனநிலையை இசை மேலும் அழகாக்குகிறது. ஒளிப்பதிவும் காதல் காட்சிகளுக்கு தேவையான மென்மையான தோற்றத்தை வழங்குகிறது.

ஆனால் இரண்டாம் பாதியில்தான் படம் தடுமாறுகிறது. ரகுவின் கடந்தகால காதல் தொடர்பான பகுதிகள் கதையின் வேகத்தை குறைக்கின்றன. அந்தக் காதல் மற்றும் அதற்கான பிரச்சினை பார்வையாளர்களிடம் எதிர்பார்த்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஏற்கனவே பார்த்த பல காதல் திரைப்படங்களின் சாயல் சில இடங்களில் தெரிகிறது என்றும் விமர்சனங்கள் குறிப்பிடுகின்றன.

திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் புதுமையும் அழுத்தமான மோதலும் இருந்திருந்தால் படம் சிறப்பாக அமைந்திருக்கும். குறிப்பாக இரண்டாம் பாதியின் பிரச்சினையை வலுவாக எழுதி, கிளைமாக்ஸை இன்னும் உணர்ச்சிப்பூர்வமாக அமைத்திருந்தால் ‘ஒன்ஸ் மோர்’ நல்ல காதல் படமாக உயர்ந்திருக்கும்.

இருப்பினும், காதல் தோல்விக்குப் பிறகு மீண்டும் காதலிக்க மனதைத் திறப்பது, கடந்த காலத்தை விட்டுவிட்டு முன்னேறுவது போன்ற உணர்வுகளை படம் அழகாகப் பேசுகிறது. இதனால் காதல் திரைப்படங்களை விரும்புபவர்களுக்கு படம் ஒரு முறை பார்க்கக்கூடிய அனுபவமாக இருக்கும்.

மொத்தத்தில், ‘ஒன்ஸ் மோர்’ புதுமையான காதல் கதையை சொல்லவில்லை என்றாலும், அதிதி ஷங்கரின் துறுதுறுப்பான நடிப்பும் அர்ஜுன் தாஸின் இயல்பான நடிப்பும் முதல் பாதியை ரசிக்க வைக்கின்றன. ஆனால் பலவீனமான ஃப்ளாஷ்பேக் மற்றும் இரண்டாம் பாதி திரைக்கதை படத்தின் வேகத்தை குறைக்கிறது.

மதிப்பீடு: 3/5

“காதல் மீண்டும் வரலாம்… ஆனால் இந்த ‘ஒன்ஸ் மோர்’ இன்னும் கொஞ்சம் வலுவாக இருந்திருக்கலாம்!”

ஹாய் (Hi) – திரைப்பட விமர்சனம்

“காதல், காமெடி, குடும்ப உணர்வு… மனதை லேசாக்கும் ‘ஹாய்’!”

கவின், நயன்தாரா முதல் முறையாக இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’, பாடலாசிரியர் விஷ்ணு எடவன் இயக்குநராக அறிமுகமாகியுள்ள காதல் மற்றும் நகைச்சுவை கலந்த குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படம். ஆகஸ்ட் 28, 2026 அன்று திரையரங்குகளில் வெளியான இப்படம், பெரிய திருப்பங்கள் இல்லாமல் எளிமையான காதல் கதையை சொல்ல முயற்சிக்கிறது.

திருமணம் மற்றும் காதல் தொடர்பான குழப்பங்களுக்குள் சிக்கிக் கொள்ளும் கதாபாத்திரங்களை மையமாக வைத்து கதை நகர்கிறது. கவின்–நயன்தாரா இடையிலான சந்திப்பு, அவர்களுக்குள் உருவாகும் நட்பு, பின்னர் அது காதலாக மாறும் விதம் என முதல் பாதி இலகுவாக நகர்கிறது. கதையை சீரியஸாக எடுத்துச் செல்லாமல், நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளுடன் அணுகியிருப்பது படத்தின் முக்கியமான பலம்.

கவின் தனது இயல்பான நடிப்பாலும் முகபாவனைகளாலும் கதாபாத்திரத்தை எளிதாக நம்முடன் இணைக்கிறார். குறிப்பாக காமெடி காட்சிகளில் அவரது டைமிங் நன்றாக வேலை செய்கிறது. நயன்தாராவும் தேவயானி கதாபாத்திரத்தில் அழகாகவும் இயல்பாகவும் நடித்துள்ளார். இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரிதான் படத்தின் மிகப்பெரிய பலம் என்று சொல்லலாம்.

பிரபு, ராதிகா சரத்குமார், கே.பாக்யராஜ் உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த நடிகர்கள் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறார்கள். குறிப்பாக கே.பாக்யராஜின் வசன உச்சரிப்பும் நகைச்சுவை பாணியும் சில காட்சிகளில் பழைய தமிழ் சினிமாவின் சுவையை நினைவுபடுத்துகிறது.

ஜென் மார்ட்டினின் இசையும் படத்தின் இலகுவான மனநிலைக்கு பொருத்தமாக அமைந்துள்ளது. ‘ரசகுல்லா’ உள்ளிட்ட பாடல்கள் கவனம் ஈர்க்கின்றன. ஒளிப்பதிவும் படத்தின் காதல் மற்றும் குடும்பக் காட்சிகளுக்கு அழகான தோற்றத்தை கொடுக்கிறது.

ஆனால் படத்தின் குறைகளும் இல்லாமல் இல்லை. கதை மிகவும் எளிமையானதாக இருப்பதால், சில இடங்களில் அடுத்து என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடிகிறது. குறிப்பாக இரண்டாம் பாதியில் சில துணைக்கதைகள் கதையின் வேகத்தை குறைக்கின்றன. கதையில் சுவாரஸ்யமான சில அம்சங்களை இன்னும் ஆழமாக கையாண்டிருந்தால், படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

இருப்பினும், ‘ஹாய்’ மிகப்பெரிய புதுமையான காதல் கதையை சொல்லும் திரைப்படம் அல்ல. அதே நேரத்தில், அதை எதிர்பார்க்காமல் சென்றால் கவின்–நயன்தாராவின் கெமிஸ்ட்ரி, இயல்பான நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் மற்றும் மென்மையான காதல் ஆகியவற்றால் ரசிக்க முடிகிறது.

மொத்தத்தில், ‘ஹாய்’ என்பது பெரிய சினிமா அனுபவத்தை தரும் படம் அல்ல; ஆனால் இரண்டு மணி நேரம் மனதை லேசாக்கி, குடும்பத்துடன் ரசித்து வெளியே வரக்கூடிய ஒரு அழகான ஃபீல்-குட் காதல் படம்.

‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ் ‘ 

Toxic: A Fairy Tale for Grown-Ups இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில், யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி உள்ளிட்டோர் நடித்துள்ள கேங்ஸ்டர் ஆக்‌ஷன் திரைப்படம். 2026 ஆகஸ்ட் 26 அன்று வெளியான இப்படம், யஷ் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

1947-ம் ஆண்டு கோவாவை பின்னணியாகக் கொண்டு தொடங்கும் கதை, பல ஆண்டுகளைக் கடந்து செல்லும் கேங்ஸ்டர் உலகத்தைச் சுற்றி நகர்கிறது. யஷ் ராயா மற்றும் டிக்கெட் என இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். தந்தை–மகன் உறவு, அதிகாரம், பழிவாங்குதல், வன்முறை என பல அடுக்குகளை கதை கொண்டிருந்தாலும், அதன் மையத்தில் ராயா கதாபாத்திரமே முழுமையாக ஆதிக்கம் செலுத்துகிறது.

யஷ் வழக்கம்போல் தனது ஸ்கிரீன் பிரசன்ஸால் படத்தைத் தாங்குகிறார். குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளிலும் மாஸ் தருணங்களிலும் அவரது உடல்மொழியும் நடிப்பும் ரசிகர்களை கவரக்கூடியதாக இருக்கிறது. பல விமர்சனங்களிலும் யஷின் நடிப்பும், ஆக்‌ஷன் காட்சிகளும் படத்தின் முக்கிய பலமாக குறிப்பிடப்பட்டுள்ளன.

படத்தின் மற்றொரு பலம் அதன் விஷுவல் ட்ரீட்மென்ட். இருண்ட நிறங்கள், பிரம்மாண்டமான செட்கள், கேங்ஸ்டர் உலகத்தின் வடிவமைப்பு மற்றும் ஆக்‌ஷன் காட்சிகள் ஆகியவை பெரிய திரையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கீது மோகன்தாஸ் தனது தனித்துவமான இயக்குநர் பாணியை ஒரு பெரிய கமர்ஷியல் படத்துக்குள் கொண்டு வர முயன்றிருக்கிறார்.

ஆனால் இங்குதான் படத்தின் மிகப்பெரிய பிரச்சினையும் வருகிறது. பிரம்மாண்டமான காட்சிகளுக்கும் கதையின் ஆழத்துக்கும் இடையே சமநிலை இல்லை. கதை பல இடங்களில் மெதுவாக நகர்கிறது. 3 மணி நேரத்துக்கும் மேலான நீளம் சில காட்சிகளில் சோர்வை ஏற்படுத்துகிறது. கதாபாத்திரங்களின் உணர்வுகளை ஆழமாக பதிவு செய்யாமல், அதிகப்படியான வன்முறை மற்றும் ஸ்டைலிஷ் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதாக விமர்சனங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

பெண் கதாபாத்திரங்களும் எதிர்பார்த்த அளவுக்கு வலுவாக எழுதப்படவில்லை என்ற விமர்சனமும் உள்ளது. குறிப்பாக இத்தனை பெரிய நடிகர்கள் இடம்பெற்றிருந்தும், அவர்களது கதாபாத்திரங்களுக்கான உணர்ச்சிப்பூர்வமான அழுத்தம் குறைவாக இருப்பது படத்தின் குறையாக தெரிகிறது.

Toxic-ன் மிகப்பெரிய சிக்கல் என்னவென்றால், கதை சொல்ல வேண்டிய இடத்தில் ஸ்டைலும், உணர்ச்சியை உருவாக்க வேண்டிய இடத்தில் வன்முறையும் முன்னிலைக்கு வந்துவிடுகிறது. அதனால் ஒரு வித்தியாசமான கேங்ஸ்டர் கதையாக உருவாகியிருக்க வேண்டிய படம், சில நேரங்களில் நீண்ட மாஸ் ஆக்‌ஷன் காட்சிகளின் தொகுப்பாக மாறுகிறது. விமர்சகர்களிடையே படத்திற்கு கலவையான வரவேற்பு கிடைத்திருப்பதற்கும் இதுவே முக்கிய காரணம்.

இருப்பினும், வழக்கமான கமர்ஷியல் சினிமாவைத் தாண்டி ஒரு வித்தியாசமான உலகத்தை உருவாக்க முயன்றிருப்பது பாராட்டுக்குரியது. கீது மோகன்தாஸின் பார்வையும், யஷின் திரை ஆளுமையும் இணைந்திருப்பது படத்தை தனித்துவமாக்குகிறது.

மொத்தத்தில், Toxic ஒரு பிரம்மாண்டமான ஆக்‌ஷன் அனுபவத்தை கொடுக்கிறது. ஆனால் அந்த பிரம்மாண்டத்திற்கு இணையான வலுவான திரைக்கதை இல்லாததால், எதிர்பார்த்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தத் தவறுகிறது.