Breaking
July 18, 2026

deccanwebtv

‘ப்ராமிஸ் ‘ திரைப்பட விமர்சனம்…

அருண்குமார் சேகரன்,
நதியா சோமு ,
சுஜன், அம்ரிஷ், பிரதாப், கோகுல், குணா, சுந்தரவேல்,கார்த்திக் ஸ்மித் ,ராஜா, டாக்டர் இவின், ராஜ்குமார்,கலைவாணி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் கதாநாயகனாக நடித்துப் படத்தை இயக்கியுள்ளார் அருண்குமார் சேகரன். வினோத் குமார் பி.எஃப்.டி. ஒளிப்பதிவு செய்துள்ளார் .
சரவண தீபன் இசையமைத்துள்ளார்.பாடல்களைப் பாலா எழுதியுள்ளார் .
ஸ்ரீராம் விக்னேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்.
என்.நாகராஜ் பெருமையுடன் வழங்க
சங்கமித்ரன் புரொடக்ஷன்,அம்மன் ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில்
நாராயண நாகராஜ் , அருண்குமார் சேகரன் தயாரித்துள்ளனர்.

சங்கமித்ரன் என்கிற மித்ரன் கல்லூரி மாணவி லட்சுமியைக் காதலிக்கிறான். அவன் ஒரு டைல்ஸ் விற்பனை நிறுவனத்தில் வேலை பார்க்கிறான். காதலில் விழுந்ததால் வேலையில் கவனம் இல்லாமல் இருக்கிறான். ஒழுங்காக வேலைக்குச் செல்வதில்லை.
லட்சுமியிடம் அவன் காதலைச் சொல்லத் தயங்கிக் கொண்டிருக்கிறான். நண்பர்கள் உந்துதலில் நெருங்கிக் கேட்கும் போது அவன் தன்னைக் காதலிப்பது தனக்குத் தெரியுமே என்கிறாள். அவன் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறான். பிறகு இருவரும் காதல் வானில் சிறகடித்துப் பார்க்கிறார்கள். டூயட் பாடுகிறார்கள் .லட்சுமி குடும்பத்தினருக்கு இதில் சம்மதம் இல்லை. இருந்தாலும் அவள் மித்ரன் தனக்கே சொந்தம் என்று நினைக்கிறாள்.

அவனுக்கு நண்பர்கள் மூலம் குடிப்பழக்கம் அறிமுகமாகிறது.
ஒரு நாள் லட்சுமி அவன் குடிப்பதைக் கண்டித்து இனிமேல் குடிக்கக் கூடாது என்று ப்ராமிஸ் செய்யச் சொல்லி சத்தியம் வாங்குகிறாள்.

ஒரு நாள் சில வாலிபர்கள் ஒரு பெண்ணைப் பாலியல் சீண்டல் செய்யும் போது மித்ரன் அந்தப் பெண்ணைக் காப்பாற்றி அவள் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான். இதைத் தொலைவில் இருந்து பார்த்த லட்சுமி தவறாகப் புரிந்து கொள்கிறாள்.அவன் மீது கோபம் கொள்கிறாள்.இந்த நிலையில் விரக்தியுற்றவன், மேலும் குடிக்கிறான்.அவனுடன் பேசாமல் இருப்பதால் , தன்னை மறந்து விட்டாளோ என்று வருத்தப்படுகிறான்.அவளுக்கு வீட்டில் திருமண நிர்ப்பந்தம் நெருக்கிக் கொண்டிருக்கிறது.ஒரு நாள் தன் தோழியின் மூலம் மித்ரனை மலைக் கோயிலுக்கு வரச் சொல்கிறாள்.நண்பர்களுடன் அங்கே குழப்பத்துடன் செல்கிறான்.ஆனால் எல்லா ஏற்பாட்டுடன் வந்த அவள் திடீரென மாலை மாற்றி தாலி கட்டச் சொல்கிறாள். மித்ரனும் இந்தத் திடீர் திருமணத்தில் சற்றே அதிர்ச்சி அடைந்தாலும் வேறு வழி இல்லாமல் தாலிகட்டி விடுகிறான். திருமணம் முடிந்து விடுகிறது. மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கையில் லட்சுமி கருவுறுகிறாள். ஆனால் கணவன் மனைவி இருவருக்கும் மருத்துவ சோதனை செய்ததில் அவனுக்கு மட்டும் ஹெச்ஐவி பாசிட்டிவ் இருப்பது தெரிய வருகிறது. இதை எண்ணி அவன் அதிர்ச்சி அடைகிறான். வேறொரு பரிசோதனை செய்து சோதித்த போதும் அதே முடிவு தான் வருகிறது. தான் ஒரு எய்ட்ஸ் நோயாளி என்று மனம் உடைந்து போகிறான்.அவளிடமிருந்து விலகி இருக்கிறான். அவளிடம் இதைச் சொல்லத் தயங்குகிறான் .பிறகு அவள் வற்புறுத்திக் கேட்டதும் சொல்கிறான் .அதிர்ச்சி அடைந்த அவள், சற்றே அதில் இருந்து மீள்கிறாள்.ஒரு நிலையில் அவன் மீது ஒரு பரிவு வருகிறது.மருத்துவ சிகிச்சை செய்யலாம் என்று கூறுகிறாள்.
இதை அறிந்து கொண்ட லட்சுமியின் பெற்றோர் அவனுக்குத் தவறான தொடர்பால் தான் இது வந்தது என்று திட்டி அவமானப்படுத்துகிறார்கள்.அவள் விலைமாதிடம் சென்றது உண்மையா என்று அவனிடம் கேட்கிறாள் .அவன் தான் சென்றது உண்மை ஆனால் எதுவும் நடக்கவில்லை என்கிறான்.அவள் மிகவும் வருத்தப்படுகிறாள்.ஒரு கட்டத்தில் பெற்றோர் அவளைப் பிரித்து அழைத்துச் செல்கின்றனர்.லட்சுமி வயிற்றில் உள்ள கரு கலைக்கப்படுகிறது. மித்ரன் அவளைச் சந்திக்க விடாமல் தடுக்கின்றனர். தொடர்பு கொள்ள முயன்று தோற்றுப் போனவன் , அவளுக்கு வீடியோவில் பேசி ஒரு மெசேஜ் அனுப்புகிறான். அதில் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் அவள் மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஒரு ப்ராமிஸ் செய்கிறான்.

”அடுத்த பிறவியில் உனக்கு மகனாக நான் பிறப்பேன். பிறக்கும் குழந்தைக்கு என் பெயரை வைத்து விடு . நீ இதைப் பார்க்கும் போது நான் உயிருடன் இருக்க மாட்டேன்”என்று பேசி வீடியோ அனுப்பி விடுகிறான்.அதிர்ச்சி அடைந்தவள் அவனைப் பார்க்க ஓடிய போது அவனை உயிரற்ற உடலாகத்தான் பார்க்க முடிந்தது.இதற்குப் பிறகு இந்தக் கதை எப்படிச் செல்கிறது என்பதைச் சொல்கிற படம் தான் ‘ப்ராமிஸ்’.

இந்தப் படத்தை இயக்கி இருக்கும் இயக்குநர் அருண்குமார் சேகரன் சங்கமித்ரன் பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
சுமாரான தோற்றம் சுமாரான உடல்மொழி என்றாலும் அந்தப் பாத்திரத்திற்கு தன்னைப் பொருத்திக் காட்டியுள்ளார்.
நடுத்தர வர்க்கத்து அல்லாட்டங்களையும் தடுமாற்றங்களையும் தனது நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு நடிகர் நடித்தது போலத் தெரியாமல் தன்னால் முடிந்த அளவிற்கு முக பாவனைகள் காட்ட முயற்சி செய்துள்ளார்.
குறிப்பாகக் குடிக்கும் காட்சிகளில் எச்ஐவி வந்த பிறகு வருத்தப்படும் காட்சிகளில் அவருடைய நடிப்பு கவனிக்க வைக்கிறது.

கதாநாயகி லட்சுமியாக நடித்துள்ள நதியா சோமு திராவிட முகத்தில் இருந்தாலும் ஆரம்பத்தில் சுமாரான முக பாவனைகள் காட்டினாலும் போகப் போக கதையின் தீவிரத்தில் தனது நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இந்தக் கதையில் துணைக் கதாபாத்திரங்களில்
சுஜன், அம்ரிஷ், பிரதாப், கோகுல், குணா, சுந்தரவேல்,கார்த்திக் ஸ்மித் ,ராஜா, டாக்டர் இவின், ராஜ்குமார்,கலைவாணி போன்றோர் நடித்திருக்கிறார்கள்.

கதாநாயகனின் நண்பர்களாக வருபவர்கள், கடை முதலாளி, நாயகனின் தாய் தந்தை, நாயகியின் தாய் , எதிர்மறைப் பாத்திரத்தில் லிங்கேஸ்வரனாக நடித்திருப்பவர் என அனைவரும் மண்ணின் மைந்தர்கள் போல் தெரிகிறார்கள். ஆபத்துக்கு கிடைத்த அவர்களைப் பயன்படுத்திக் கொண்டது போல் உள்ளது .

இந்தக் கதை வேலூர் மாவட்டத்தில் நடக்கிறது. எனவே அந்த வேலூரின் வெம்மை பூமியையும் இருப்புப் பாதைகளில் ரயில் செல்வதையும் காட்டி அந்த நிலக்காட்சியை நம்மை உணர வைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் வினோத் குமார். இசையமைப்பாளர் தீபச்செல்வனின் இசையில் பாடல்கள் புரிகிற வரிகளில் உள்ளது பெரும் ஆறுதல்.குறிப்பாக ‘தேன்மழை சாரலே ‘, ‘உதிர்கிறேன் நானடி ‘பாடல்கள் கவனிக்க வைக்கின்றன.

முடிந்தவரை தொய்வில்லாமல் காட்சிகளைத் தொகுத்துள்ளார் படத்தொகுப்பாளர்
ஸ்ரீராம் விக்னேஷ்.

படத்தில் புகைப்பிடிப்பது மது அருந்துவது போன்ற காட்சிகள் அதிக இடங்களில் வருவதைத் தவிர்த்து இருக்கலாம்.

மது போதையில் திடீர் முடிவெடுக்கும் மனநிலை கொண்டு செல்லும் ஆபத்தைப் பற்றி இந்தப் படத்தில் கூறியிருக்கிறார்கள் .வாக்கு கொடுப்பவர்கள்,
சத்தியம் செய்பவர்கள் அதைக் காப்பாற்ற வேண்டும்.
எதற்கெடுத்தாலும் ப்ராமிஸ் ப்ராமிஸ் என்று சத்தியம் செய்வது பெரிதல்ல. அதைக் காப்பாற்றுவதில் பொறுப்பு உள்ளது என்பதை உணரும் வகையில் காட்சிகள் உள்ளன.

மித்ரனுக்கு எப்படி எச்ஐவி வந்தது என்பதற்கான தெளிவான விளக்கம் இல்லாமல் இருக்கிறது. விலை மகள் வீட்டுக்குச் சென்று இருந்தாலும் அங்கு எந்தத் தொடர்பும் ஏற்படவில்லை என்றாலும் எச்ஐவி எப்படி வந்தது என்பதற்கான தெளிவான விடை இல்லை.

குடும்பத்தில் நிகழும் முக்கியமான முரண்பாட்டு மோதல்களின் போது கதாநாயகனின் பெற்றோர்கள் எங்கே சென்றார்கள்? அவர்களது பதில் வினை என்ன என்பதைச் சரியாக காட்டவில்லை.

மொத்தத்தில் குடிப்பழக்கத்தின் விளைவுகளையும் அவசர முடிவுகள் தரும் ஆபத்தையும் மனம்விட்டுப் பேசாத மனநிலை தரும் சிக்கல்களையும் எளிய முறையில் இந்தப் படத்தில் கூறி இருக்கிறார்கள் என்று கூறலாம்.

கான் சிட்டி திரைப்பட விமர்சனம்…

அர்ஜுன் தாஸ், அன்னா பென், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ள கான் சிட்டி ஒரு வித்தியாசமான கிரைம்-காமெடி திரைப்படமாக உருவாகியுள்ளது. பணத்திற்காக மோசடி செய்யத் தொடங்கும் சாதாரண மனிதர்கள், அதே மோசடிகளின் வலையில் சிக்கிக் கொள்வதே படத்தின் மையக் கதை.

கடனில் சிக்கித் தவிக்கும் சரவணன், தனது வாழ்க்கையை மாற்றும் நோக்கில் மோசடி உலகில் கால் பதிக்கிறார். அவருடன் இணையும் பல கதாபாத்திரங்களின் வாழ்க்கையும் எதிர்பாராத விதமாக ஒன்றுடன் ஒன்று இணைகிறது. ஒவ்வொரு மோசடியும் புதிய சிக்கல்களை உருவாக்க, அதிலிருந்து தப்பிக்க அவர்கள் எடுக்கும் முயற்சிகளே படத்தின் சுவாரஸ்யமாக மாறுகின்றன.

அர்ஜுன் தாஸ் தனது வழக்கமான ஆக்ஷன் இமேஜிலிருந்து விலகி, சாதாரண மனிதராகவும் பின்னர் தந்திரமான மோசடிக்காரராகவும் சிறப்பாக நடித்துள்ளார். அன்னா பென் தனது கதாபாத்திரத்திற்கு தேவையான உணர்ச்சிகளை அழகாக வெளிப்படுத்துகிறார். யோகி பாபு மற்றும் வடிவுக்கரசி இணையும் காட்சிகள் படத்திற்கு நல்ல நகைச்சுவை அம்சத்தை சேர்க்கின்றன.

படத்தின் முதல் பாதி கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துவதில் சற்று மெதுவாக நகர்ந்தாலும், மோசடிகள் தொடங்கிய பிறகு திரைக்கதை வேகம் பெறுகிறது. எதிர்பாராத திருப்பங்கள், சுவாரஸ்யமான சம்பவங்கள் மற்றும் நகைச்சுவை கலந்த காட்சிகள் ரசிகர்களை ஈர்க்கின்றன.

ஷான் ரோல்டனின் இசை சில இடங்களில் கதைக்கு உதவினாலும், சில உணர்ச்சிகரமான காட்சிகளில் பின்னணி இசை அதிகமாக இருப்பது தாக்கத்தை குறைக்கிறது. மேலும், இரண்டாம் பாதியில் சில காட்சிகள் நீளமாக இருப்பதும், வில்லன் கதாபாத்திரத்திற்கு போதிய முக்கியத்துவம் இல்லாததும் படத்தின் குறைகளாக அமைகின்றன.

மொத்தத்தில், கான் சிட்டி ஒரு வழக்கமான கிரைம் திரைப்படம் அல்ல. நகைச்சுவை, குடும்ப உணர்வு மற்றும் மோசடி சம்பவங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படம், வார இறுதியில் குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய ஒரு பொழுதுபோக்கு திரைப்படமாக அமைகிறது. அர்ஜுன் தாஸின் வித்தியாசமான நடிப்பும், சுவாரஸ்யமான திரைக்கதையும் படத்தின் முக்கிய பலமாக இருக்கின்றன.

ரேட்டிங்: 3/5 ⭐⭐⭐

அங்கீகாரம் திரைப்பட விமர்சனம்…

உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள அங்கீகாரம், விளையாட்டு துறையில் நிலவும் அரசியல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் திறமையான வீரர்கள் சந்திக்கும் அநீதிகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ஒரு ஸ்போர்ட்ஸ் கோர்ட்ரூம் டிராமா. இயக்குநர் தென்பதியன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம், ஒரு சாதாரண வீரனின் போராட்டத்தை உணர்வுப்பூர்வமாக பதிவு செய்கிறது.

ஏழ்மையான பின்னணியில் இருந்து வரும் ஆதிரன் என்ற ஓட்டப்பந்தய வீரர், இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற கனவுடன் வாழ்கிறார். ஆனால் விளையாட்டு அமைப்புகளில் நிலவும் ஊழல் மற்றும் அரசியல் காரணமாக அவரது வாய்ப்பு பறிக்கப்படுகிறது. தனது உரிமையை மீட்டெடுக்க அவர் நீதிமன்றத்தை நாடுகிறார். அதன் பிறகு நடைபெறும் சட்டப் போராட்டமே படத்தின் மையக்கதை.

நாயகனாக அறிமுகமாகும் கே.ஜே.ஆர் தனது முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். விளையாட்டு வீரராகவும், நீதிமன்றத்தில் தனது உரிமைக்காக போராடும் இளைஞராகவும் அவர் நம்பகமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். வசுந்தரா காஷ்யப், விஜி வெங்கடேஷ், ரங்கராஜ் பாண்டே மற்றும் மன்சூர் அலிகான் ஆகியோரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு வலு சேர்த்துள்ளனர்.

கோர்ட்ரூம் காட்சிகள் படத்தின் மிகப்பெரிய பலமாக அமைகின்றன. விளையாட்டு நிர்வாகங்களில் நடைபெறும் அரசியல், திறமையான வீரர்கள் எதிர்கொள்ளும் தடைகள் மற்றும் அதிகார அமைப்புகளின் செயல்பாடுகளை படம் நேரடியாக பேசுகிறது. வசனங்களும் சில இடங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

கிப்ரானின் பின்னணி இசை பல காட்சிகளுக்கு கூடுதல் வலிமையை அளிக்கிறது. ஒளிப்பதிவும், விளையாட்டு காட்சிகளின் அமைப்பும் தரமாக உள்ளன. முதல் பாதி கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துவதில் செலவிடப்பட்டாலும், இரண்டாம் பாதியில் நீதிமன்ற காட்சிகள் படத்தை சுவாரஸ்யமாக முன்னேற்றுகின்றன.

இருப்பினும், சில காட்சிகள் வழக்கமான விளையாட்டு திரைப்படங்களின் பாணியை நினைவுபடுத்துகின்றன. சில துணைக் கதாபாத்திரங்களுக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. படத்தின் வேகம் சில இடங்களில் குறைவாக உணரப்படுவதும் ஒரு சிறிய குறையாக அமைகிறது.

மொத்தத்தில், அங்கீகாரம் வெறும் விளையாட்டு திரைப்படமாக இல்லாமல், திறமைக்கு அங்கீகாரம் கிடைக்க போராடும் இளைஞர்களின் குரலாக மாறுகிறது. சமூக கருத்தும், உணர்ச்சியும், நீதிமன்ற பரபரப்பும் இணைந்த இந்தப் படம் ஒரு நல்ல முயற்சியாக திகழ்கிறது.

ரேட்டிங்: 3.5/5 ⭐⭐⭐

சிங் கீதம் திரைப்பட விமர்சனம்…

94 வயதிலும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளத் தயங்காத இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ், சிங் கீதம் மூலம் மீண்டும் ஒரு முறை தனது கற்பனை உலகத்தை திரையில் கொண்டு வந்துள்ளார். முழுக்க முழுக்க பாடல்களின் வழியே நகரும் இந்த இசை-கற்பனை திரைப்படம் இந்திய சினிமாவில் அரிதாக காணப்படும் ஒரு முயற்சியாக அமைந்துள்ளது.

குபேரபுரம் என்ற கிராமத்தில் நடக்கும் கதை, தங்க சுரங்கத்திற்காக இயற்கையை அழித்த மனிதர்களின் பேராசையையும், கடைசியாக எஞ்சியிருக்கும் மரத்தை காப்பாற்றும் போராட்டத்தையும் மையமாகக் கொண்டுள்ளது. ஊரே பாடல்களின் மூலம் பேசும் தனித்துவமான அமைப்பு ஆரம்பத்தில் புதுமையாக தோன்றினாலும், சில நேரங்களில் அது சற்று மீளுருவாக்கமாகவும் உணரப்படுகிறது.

அயான் மற்றும் அஹில்யா ஆகிய புதிய நடிகர்கள் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பை வழங்கியுள்ளனர். இருப்பினும், சில இடங்களில் அனுபவக் குறைபாடு தெரிகிறது. தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. பாடல்கள் மட்டுமல்லாமல், பின்னணி இசையும் காட்சிகளுக்கு உயிரூட்டுகிறது.

ஒளிப்பதிவு, கலை இயக்கம் மற்றும் கிராமத்தின் கற்பனை உலகம் படத்திற்கு தனித்துவமான தோற்றத்தை வழங்குகின்றன. இயற்கை பாதுகாப்பு, பேராசையின் விளைவுகள் மற்றும் மனிதநேயத்தைப் பேசும் படத்தின் மையக்கரு மனதில் நிற்கிறது.

ஆனால் இரண்டாம் பாதியில் சில காட்சிகள் நீளமாக உணரப்படுகின்றன. பாடல்களாகவே உரையாடல்கள் தொடர்வது சிலருக்கு சலிப்பை ஏற்படுத்தக்கூடும். உச்சக்கட்ட காட்சியும் அனைவரையும் ஒரே அளவில் திருப்திப்படுத்தாது.

மொத்தத்தில், சிங் கீதம் ஒரு சாதாரண வணிகப் படம் அல்ல. இது இசை, கற்பனை மற்றும் சமூகக் கருத்துகளை இணைக்கும் துணிச்சலான முயற்சி. வித்தியாசமான சினிமாவை விரும்புபவர்களுக்கும், சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவின் படைப்புகளை ரசிப்பவர்களுக்கும் இந்த படம் ஒரு புதிய அனுபவமாக இருக்கும்.

ரேட்டிங்: 3.5/5 ⭐

ஹார்ட்டின் திரைப்பட விமர்சனம்: மனதைத் தொடத் தவறிய காதல் கதை

காதல், நினைவுகள் மற்றும் வாழ்க்கையின் எதிர்பாராத திருப்பங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ஹார்ட்டின் திரைப்படம், ஒரு மென்மையான காதல் கதையை திரையில் சொல்ல முயற்சிக்கிறது. ஜெய்ப்பூரில் தமிழ் உணவகம் நடத்தும் சிவாவின் வாழ்க்கையில் ஏற்படும் காதல், பிரிவு மற்றும் நினைவிழப்பு சம்பவங்களை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது.

நாயகனாக நடித்துள்ள சனந்த் தனது கதாபாத்திரத்திற்கு தேவையான இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார். மடோனா செபாஸ்டியனும் தனது அனுபவமான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். இருப்பினும், கதாபாத்திரங்களுக்கு ஆழம் குறைவாக இருப்பதால் அவர்களின் உணர்வுகள் பார்வையாளர்களை முழுமையாகக் கவர முடியவில்லை.

படத்தின் மிகப்பெரிய பலம் ராஜேஷ் முருகேசனின் இசை. பாடல்களும் பின்னணி இசையும் காதல் காட்சிகளுக்கு நல்ல உணர்வை அளிக்கின்றன. ஒளிப்பதிவில் ஜெய்ப்பூரின் அழகான இடங்கள் ரசிக்க வைக்கின்றன. காட்சியமைப்பிலும் படக்குழு சிறப்பாக செயல்பட்டுள்ளது.

ஆனால் திரைக்கதையில் புதுமை இல்லாதது படத்தின் பெரிய குறையாக மாறுகிறது. பல இடங்களில் கதை முன்கூட்டியே யூகிக்கக்கூடியதாக உள்ளது. குறிப்பாக இரண்டாம் பாதியில் கதை மெதுவாக நகர்வதால் சுவாரஸ்யம் குறைகிறது. நினைவிழப்பு போன்ற முக்கியமான அம்சம் கதையில் இடம்பெற்றிருந்தாலும், அதற்கான உணர்ச்சி தாக்கம் போதுமான அளவில் வெளிப்படவில்லை.

மொத்தத்தில், ஹார்ட்டின் ஒரு மென்மையான காதல் திரைப்படமாக இருந்தாலும், மனதில் நீண்ட நேரம் நிற்கும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துவதில் தவறுகிறது. காதல் திரைப்படங்களை விரும்புபவர்களுக்கு ஒரு முறை பார்க்கக்கூடிய படமாக இது அமைகிறது.

ரேட்டிங்: 2.5/5 ⭐⭐⭐

மம்மட்டியான் ஸ்டார்ஸ் வெப் சீரிஸ் விமர்சனம்….

கிரிக்கெட்டை உயிராக நேசிக்கும் மூன்று நண்பர்களின் கனவுப் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள வெப் சீரிஸ்தான் Mammattiyaan Stars. சிறிய ஊரில் வசிக்கும் இளைஞர்கள் தங்கள் விருப்பமான கிரிக்கெட் வீரரின் கடைசி போட்டியை நேரில் பார்க்க சென்னைக்கு செல்ல முடிவு செய்கிறார்கள். ஆனால் அந்தப் பயணம் பல எதிர்பாராத சம்பவங்களையும் சவால்களையும் சந்திக்கிறது.

சின்னா, ஷகில் மற்றும் அவர்களது நண்பர்கள் கிரிக்கெட்டின் மீது கொண்டுள்ள தீவிர ஆர்வத்தால் சென்னைக்கு கிளம்புகிறார்கள். சாதாரண ரசிகர்களின் கனவு பயணமாகத் தொடங்கும் இந்த பயணம், நட்பு, நம்பிக்கை, தியாகம் மற்றும் வாழ்க்கைப் பாடங்களை கற்றுத் தரும் அனுபவமாக மாறுகிறது.

Vaibhav Murugesan தனது கதாபாத்திரத்தில் இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார்.
Lavanya Anbazhagan மற்றும் Vivek Prasanna ஆகியோரின் நடிப்பும் கதைக்கு பலம் சேர்க்கிறது. குறிப்பாக நகைச்சுவை மற்றும் உணர்ச்சி காட்சிகளில் நடிகர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

இயக்குனர் சவிர் சுதாகர், கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வுகளையும் நண்பர்களுக்கிடையேயான உறவையும் எளிமையாக காட்சிப்படுத்தியுள்ளார். பின்னணி இசையும் ஒளிப்பதிவும் பயணத்தின் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துகின்றன.

சில இடங்களில் கதை முன்னறிவிக்கக்கூடியதாக உள்ளது. சில துணைக் கதாபாத்திரங்களுக்கு போதுமான முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. திரைக்கதை இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கலாம்.

மம்மட்டியான் ஸ்டார்ஸ் கிரிக்கெட்டை விட நட்பு மற்றும் கனவுகளைப் பற்றிப் பேசும் ஒரு எளிமையான பயணக் கதையாக உருவாகியுள்ளது. பெரிய திருப்பங்களோ அதிரடி சம்பவங்களோ இல்லாவிட்டாலும், உணர்வுகளையும் நட்பின் அர்த்தத்தையும் ரசிக்க விரும்பும் பார்வையாளர்களுக்கு இந்த வெப் சீரிஸ் ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். குறிப்பாக கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது நெருக்கமான அனுபவத்தை வழங்குகிறது.

ரேட்டிங்: 3/5 ⭐

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வை உயிர்ப்பிக்கும்; ஜூன் 26 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

சவிர் சுதாகர் இயக்கத்தில், எஸ்.எஸ். குழுமத்தின் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள மம்மட்டியான் ஸ்டார்ஸ், நட்பு, கனவுகள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களின் அசைக்க முடியாத ஆர்வத்தை கொண்டாடும் மனதை வருடும் விளையாட்டு நாடகத் தொடர்.

இந்தியா, 23 ஜூன் 2026: இந்தியாவின் முன்னணி உள்நாட்டு ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, மம்மட்டியான் ஸ்டார்ஸ் என்ற உணர்வுப்பூர்வமான மற்றும் பொழுதுபோக்கு நிறைந்த விளையாட்டு நாடகத் தொடரை ஜூன் 26 முதல் பார்வையாளர்களுக்கு வழங்கவுள்ளது. சவிர் சுதாகர் இயக்கத்தில், எஸ்.எஸ். குழுமத்தின் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள இந்த ஆறு அத்தியாயங்கள் கொண்ட தமிழ் ஒரிஜினல் தொடர், கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அவர்கள் நேசிக்கும் விளையாட்டிற்காக அவர்கள் மேற்கொள்ளும் அசாதாரண முயற்சிகளுக்கும் செலுத்தப்படும் மனமார்ந்த அஞ்சலியாக உருவாகியுள்ளது.

சவிர் சுதாகர், நவீன் ராஜ்குமார், கலை செல்வன் மற்றும் வினு கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ள இந்த தொடரில் வைபவ் முருகேசன், லாவண்யா அன்பழகன், வெங்கட பாலமுரளி, ஜகபர் சாதிக், நான் கடவுள் ராஜேந்திரன் மற்றும் விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பி.எம். ராஜ்குமார் ஒளிப்பதிவு, பவித்ரன் படத்தொகுப்பு மற்றும் தமிழ்செல்வன் BFA கலை இயக்கத்தில் உருவாகியுள்ள மம்மட்டியான் ஸ்டார்ஸ், தமிழ்நாட்டின் கிரிக்கெட் கலாச்சாரத்தை வரையறுக்கும் உற்சாகம், உணர்வு மற்றும் தோழமையை அழகாகப் பதிவு செய்கிறது.

மம்மட்டியான் ஸ்டார்ஸ், ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த தீவிர கிரிக்கெட் ரசிகர்கள் குழுவை மையமாகக் கொண்டு நகர்கிறது. அவர்கள் தங்கள் ஹீரோவின் கடைசி போட்டியை நேரில் காண சென்னை நோக்கி மறக்க முடியாத ஒரு பயணத்தைத் தொடங்குகிறார்கள். ஒரு கனவுப் பயணமாக தொடங்கும் இந்த அனுபவம், விரைவில் நட்பு, உணர்வுகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களால் நிரம்பிய சாகசமாக மாறுகிறது. அந்தப் பயணத்தில், அவர்களின் உறுதியை சோதிக்கும் பல சவால்களை அவர்கள் எதிர்கொள்வதோடு, இலக்கை விட பயணமே மறக்க முடியாததாக மாறக்கூடும் என்பதை உணர்கிறார்கள். நம்பிக்கை, சேர்ந்திருக்கும் உணர்வு மற்றும் அனைத்து தரப்பு மக்களையும் கிரிக்கெட் இணைக்கும் வலிமையான பிணைப்பை கொண்டாடுவதே மம்மட்டியான் ஸ்டார்ஸ் தொடரின் மையக்கருவாகும்.

ZEE5 தமிழ் & மலையாளத்தின் மார்க்கெட்டிங் – தென்னகத்தின் மூத்த துணைத் தலைவர் மற்றும் வணிகத் தலைவர் லாயிட் சேவியர் கூறுகையில், “இந்தியாவில் கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டை விட மிகப் பெரிய உணர்வு; அது தலைமுறைகள், சமூகங்கள் மற்றும் எண்ணற்ற நினைவுகளை இணைக்கிறது. மம்மட்டியான் ஸ்டார்ஸ், ரசிகர்களின் ஆர்வத்தையும், வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் அந்த தருணத்தை அனுபவிக்க அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளையும் அழகாகப் பதிவு செய்கிறது. தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய கதாபாத்திரங்கள், மனதைத் தொடும் உணர்வுகள் மற்றும் ரசிகத்தனத்தின் இயல்பான சித்தரிப்பை மையமாகக் கொண்ட இந்த தொடர், தமிழ்நாடு மட்டுமின்றி அதற்கு அப்பாலும் உள்ள பார்வையாளர்களின் மனதில் ஒலிக்கும் ஒரு கதையாக இருக்கும்” என்றார்.

மம்மட்டியான் ஸ்டார்ஸ் இயக்குநர் சவிர் சுதாகர் கூறுகையில், “தங்களின் ஹீரோக்கள் விளையாடுவதை நேரில் பார்க்க வேண்டும் என்று கனவு கண்ட ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகருக்கும் இந்த தொடர் ஒரு அஞ்சலி. கிரிக்கெட் இந்தக் கதையின் பின்னணியாக இருந்தாலும், மம்மட்டியான் ஸ்டார்ஸ் தொடரின் இதயம் நட்பு, லட்சியங்கள் மற்றும் வாழ்க்கைப் பயணத்தில் நம்மை வடிவமைக்கும் மறக்க முடியாத அனுபவங்களில்தான் உள்ளது. நேர்மையான, உணர்வுப்பூர்வமான மற்றும் கொண்டாட்டம் நிறைந்த ஒரு கதையை சொல்ல வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். இந்த பயணத்தில் ZEE5 மூலம் பார்வையாளர்களும் இணையவிருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி” என்றார்.

நட்பு, உணர்வுகள், சாகசம் மற்றும் கிரிக்கெட் ஆகியவை ஒன்றிணையும் மறக்க முடியாத பயணமான மம்மட்டியான் ஸ்டார்ஸ், ஜூன் 26 முதல் ZEE5-ல் பிரத்தியேகமாக ஒளிபரப்பாகிறது.

ZEE5 பற்றி:

ZEE5 என்பது பாரதத்தின் மிகப்பெரிய உள்நாட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாகவும், கோடிக்கணக்கான பொழுதுபோக்கு ரசிகர்களுக்கான பன்மொழி கதை சொல்லியாகவும் திகழ்கிறது. உலகளாவிய உள்ளடக்க சக்திமிக்க நிறுவனமான ZEE Entertainment Enterprises Limited (ZEEL)-இன் ஒரு பகுதியாக செயல்படும் ZEE5, வீடியோ ஆன்-டிமாண்ட் தளங்களில் முன்னணி தேர்வாக விளங்குகிறது. பல இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வெப் ஒரிஜினல்கள், இசை வீடியோக்கள் மற்றும் 1.35 லட்சம் மணிநேரத்திற்கும் அதிகமான ஆன்-டிமாண்ட் உள்ளடக்கங்களை கொண்ட விரிவான மற்றும் பல்வகை நூலகத்தை இது வழங்குகிறது.

சாம் சி எஸ் இசையில் ரசிகர்களை முணுமுணுக்க வைக்கும் “லவ் யூ லவ் யூ காட்டேரி” பாடல்

இசையமைப்பாளர் Sam C. S. தொடர்ந்து வித்தியாசமான இசை அனுபவங்களை வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், தற்போது AK Film Factory சார்பில் Arunkumar Dhanasekaran தயாரிப்பில், ஜிவி பிரகாஷ், கயாடு லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவாகும் ‘இம்மார்டல்’ (Immortal) திரைப்படத்திலிருந்து வெளியாகியுள்ள “லவ் யூ லவ் யூ காட்டேரி” பாடல் இசை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஃபேண்டஸி திரில்லர் ஜானரில் உருவாகி வரும் இப்படத்திற்கு இசையமைத்துள்ள சாம் சி எஸ், இந்தப் பாடலில் தனது தனித்துவமான இசை பாணியை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். கேட்டவுடன் மனதில் பதியும் மெலடி, டார்க் தீமில் வடிவமைக்கப்பட்ட இசை அமைப்பு மற்றும் புதுமையான சவுண்ட் டிசைன் ஆகியவை பாடலுக்கு தனி அடையாளத்தை வழங்குகின்றன.

இந்தப் பாடலை சாம் சி எஸ் மற்றும் Reshma Shyam இணைந்து பாடியுள்ளனர். பாடல் வரிகளை Shali C எழுதியுள்ளார். காதலியை ஒரு “காட்டேரி”யாக கற்பனை செய்து வர்ணிக்கும் இந்தப் பாடல், வழக்கமான காதல் பாடல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை வழங்குகிறது.

சிவப்பு நிற பின்னணியில், டார்க் விஷுவல் டோனில், அழகான நடன அசைவுகளுடன் பாடல் படமாக்கப்பட்டுள்ளது. இசை, காட்சிகள், நடனம் ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று கலந்த விதம் பாடலின் ஈர்ப்பை மேலும் அதிகரிக்கிறது. குறிப்பாக இளைஞர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாடல், வெளியான குறுகிய நேரத்திலேயே சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.

இசை என்பது கதையின் உணர்வுகளை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் மொழி என்பதை பலமுறை நிரூபித்துள்ள சாம் சி எஸ், இந்தப் பாடலிலும் புதுமையான மெலடி மற்றும் நவீன இசை அமைப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார். பாடல் முடிந்த பிறகும் அதன் தாளம் மற்றும் மெலடி மனதில் நீடிக்கும் வகையில் அமைந்துள்ளது.

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் விக்ரம் பிரபுவின் 26வது

யுவன் சங்கர் ராஜா இசையில் விக்ரம் பிரபு – அறிமுக இயக்குநர் சித்தார்த் கூட்டணி; புதிய கமர்ஷியல் படம் தொடக்கம்!

தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வித்தியாசமான படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் தயாரிப்பாளர் ராகுல் அவர்களின் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம், தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கும் இந்த புதிய படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது.

தங்க மார்க்கெட் பின்னணியில் நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், விறுவிறுப்பான திரைக்கதை, அதிரடி மற்றும் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த, ஆக்சன் திரில்லர் படைப்பாக உருவாக உள்ளது. சென்னையில் முதல் கட்ட படப்பிடிப்புகளை நடத்த படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது படத்தில் நடிக்கவுள்ள நடிகர், நடிகையர் தேர்வு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

நடிகர் விக்ரம் பிரபு, தனது தனித்துவமான கதைத்தேர்வுகள் மூலம் ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறார். குறிப்பாக டாணாக்காரன் மற்றும் சிறை போன்ற படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு அவர் தேர்வு செய்யும் கதைகளின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்த வரிசையில் உருவாகும் இந்த புதிய திரைப்படம், விக்ரம் பிரபுவின் திரைப்பயணத்தில் 26வது படமாக அமைந்துள்ளது. வித்தியாசமான களத்தில் உருவாகும் இந்த படம் அவரது திரை வாழ்க்கையில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து தரமான திரைப்படங்களை தயாரித்தும், வெற்றிகரமாக விநியோகம் செய்தும் வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம், இந்த புதிய படத்தையும் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்கவுள்ளது. தரமான தொழில்நுட்பம் மற்றும் வலுவான கதையம்சத்துடன் உருவாகும் இப்படம், ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஒளிப்பதிவை கார்த்திக் ஷராஜ் கவனிக்க, படத்தொகுப்பை அருள் மோசஸ் மேற்கொள்கிறார்.

மேலும், ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ரவி மோகன் நடிப்பில் ஒரு படமும், ஆகாஷ் முரளி நடிப்பில் மற்றொரு படமும், தற்போது தயாரிப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Rotary Club of Madras East Donates State-of-the-Art Neonatal Ambulance to Kanchi Kamakoti CHILDS Trust Hospital

Chennai. June 26, 2026: The Rotary Club of Madras East (RID 3234), in association with the Rotary Club of Irvine and Rotary district 5320, Irvine, USA, inaugurated Project SHISHU (Global Grant #2683839) – a Rotary Global Grant project marking the donation of a state-of-the-art Neonatal Ambulance to the Kanchi Kamakoti CHILDS Trust Hospital, Nungambakkam, Chennai. The inauguration ceremony was held at the hospital premises on 26th June 2026. This ambulance is to safely move critically ill newborn babies to the hospital.

The ambulance was handed over by Rtn AKS Er Muruganandam M (MMM), the Chief Guest, RI Vice President 2026-27 and RI Director 2025-27, and Chairman of Excel Group of Companies in the presence of The Guest of Honour, Rtn AKS Vinod Saraogi, District Governor, RID 3234 and many Rotarians.

Dr. Janani Sankar, Medical Director, Kanchi Kamakoti CHILDS Trust Hospital expressed her gratitude to Rotary Club of Madras East for their kind gesture and added that the ambulance is fully equipped to manage critically ill neonates while being transported from other hospitals to our NICU. This Ambulance, valued at ₹72 lakhs, is equipped with a transport incubator, neonatal ventilator and advanced life support systems, bringing NICU level care directly to newborns during transport. Designed as a “Neonatal ICU on wheels”, this ambulance ensures uninterrupted critical care for the sick extreme premature neonates as +early as 24 weeks and neonates weighing less than 600 grams from the moment they leave the hospital till they reach our NICU, especially involving long distance inter-state transports. Our NICU is a State-of-the-Art centre which deals with many challenging neonatal problems. Neonates as low as 600 gms are treated in our NICU and we provide 24/7 coverage and care by trained Neonatologists.

Speaking at the event Rtn Balaji Sreenivasan, President – RC of Madras East said: Since our charter in 1985, RCME has stood as a pillar of community service in Chennai. With 200 committed Rotarians, the club has always believed that true service means reaching those who need it most. Project SHISHU is a proud reflection of that belief – a neonatal ambulance that will ensure no newborn loses the battle simply because help arrived too late. At RCME, we do many projects with focus on maternal and child health, women empowerment, and youth services to name a few”

He further highlighted RCME’s extensive work in healthcare, including initiatives focused on neonatal care, paediatric cardiac surgeries, cancer care, vision restoration, mental health, and community wellness.

Project SHISHU – an acronym reflecting the Rotary commitment to the well-being of newborns – addresses one of the most critical challenges in neonatal healthcare: the safe transfer of critically ill newborns. The donated neonatal ambulance is equipped with advanced life-support systems purpose-built for neo-natal care, enabling the safe transport of premature and critically ill infants to and from the CHILDS Trust Hospital.

Project SHISHU is funded through Rotary International’s prestigious Global Grant mechanism (Grant #2683839), made possible through an international partnership between the Rotary Club of Madras East (RID 3234, Chennai) and the Rotary Club of Irvine (USA). The project reflects the power of cross-border Rotary collaboration in delivering high-impact humanitarian outcomes.

For further information contact: Sankar Ramani, KKCTH – 94422-00444