Breaking
June 5, 2026

deccanwebtv

கௌதம் கார்த்திக் வெளியிட்ட ‘பாதாம்கீர்’

முன்னணி நடிகர் கௌதம் கார்த்திக் வெளியிட்ட ‘பாதாம்கீர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் !!

ரொமான்ஸ் கலந்த காமெடி என்டர்டெய்னராக உருவாகும் ‘பாதாம்கீர்’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களின் கவனம் கவனத்தை ஈர்த்துள்ளது !!

லார்ட்ஸ் பி தி இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ் (LORDS P The international Production) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெய் சக்தி பிரகாஷ் இயக்கத்தில், உருவாகி வரும் ரொமான்ஸ் காமெடி திரைப்படமான ‘பாதாம்கீர்’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை முன்னணி நடிகர் கௌதம் கார்த்திக் தனது சமூக வலைத்தள பக்கங்கள் வழியாக வெளியிட்டுள்ளார். போஸ்டர் வெளியாகியதுடன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

வண்ணக்கலவை நிறைந்த பின்னணியில், கையில் இசை வாத்தியங்களுடன் நடிகர்கள் சிவகுமார், சதீஷ் மற்றும் டேனியல் ஆன்னி போப் ஆகியோர் கையில் இசை வாத்தியங்களுடன் தோன்றும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக், பார்ப்பவர்களின் முகத்தில் இயல்பாக புன்னகையை வரவழைக்கிறது. கலர்ஃபுல் மற்றும் ஜாலியான டிசைனில் உருவாக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர், படம் முழுக்க முழுக்க குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய ரொமான்ஸ் காமெடி என்டர்டெய்னராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தில் சிவகுமார் மற்றும் ஆன் ஷீத்தல் நாயகன் – நாயகியாக நடிக்கின்றனர். இவர்களுடன் சதீஷ், டேனியல் ஆன்னி போப் , பிரதீப் ஜோஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். மேலும் யோகிபாபு மற்றும் TM கார்த்திக் முக்கியமான கேமியோ கதாப்பாத்திரங்களில் தோன்றுகின்றனர். மதுமிதா, பிரதீப் ஜோஷ், வழக்கு எண் முத்துராமன் மற்றும் லிஜா உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சென்னை, பாண்டிச்சேரி மற்றும் மூணாறு உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. தற்போது இறுதிக்கட்ட பின்னணி பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் டீசர் மற்றும் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜெய் சக்தி பிரகாஷ் எழுதி இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைக்க, ஒளிப்பதிவை A. குமரன் மேற்கொண்டுள்ளார். லினு.M படத்தொகுப்பை கவனித்துள்ளார். அனுபவம் மிக்க தொழில்நுட்பக் குழுவுடன் உருவாகி வரும் ‘பாதாம்கீர்’, ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான ரொமான்டிக் காமெடி அனுபவத்தை வழங்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பாளர் – பிரதீப் ஜோஸ். K
கதை, திரைக்கதை & இயக்கம் – ஜெய் சக்தி பிரகாஷ்
இசையமைப்பாளர் – விஷால் சந்திரசேகர்
ஒளிப்பதிவு – A. குமரன்
படத்தொகுப்பு – லினு. M
சவுண்ட் எஃபெக்ட்ஸ் – C. சேது
புரொடக்ஷன் எக்ஸிக்யூட்டிவ் – K. சடகோபன்
கலை இயக்கம் – A. பழனிவேல்
நடன அமைப்பு – கல்யாண்

‘நாக பந்தம்’ படத்தின் கவுண்ட் டவுன் தொடங்கியது

இந்திய சினிமாவில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் புராண அதிரடி சாகச படமான ‘நாக பந்தம்’ படத்தின் கவுண்ட் டவுன் தொடங்கியது

நாடு தழுவிய பார்வையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் ‘நாக பந்தம்’. எதிர்வரும் ஜூலை மாதம் 3 ஆம் தேதியன்று வெளியாகும் இப்படத்திற்கான கவுண்ட் டவுன் அதிகாரப்பூர்வமாக தொடங்கி விட்டது

அபிஷேக் நாமா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நாக பந்தம்’- புராணம் – சாகசம் – பண்டைய ரகசியங்கள்- தெய்வீக சக்தி மற்றும் அதிரடி சண்டை காட்சிகளை கொண்ட ஒரு பிரம்மாண்டமான காட்சி அமைப்பில் உருவாகி, இதுவரை கண்டிராத தனித்துவமான சினிமா அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் என உறுதியளிக்கிறது.

NIK ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் அபிஷேக் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பாளர்கள் கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி ஆகியோர் ‘நாக பந்தம்’ படத்தை தயாரித்துள்ளனர். இந்த திரைப்படம் ஒரு பிரம்மாண்டமான தயாரிப்பு மற்றும் உலக தரம் வாய்ந்த தொழில்நுட்ப தரத்துடன், ஒரு உண்மையான பான் இந்திய அளவிலான பிரம்மாண்ட படைப்பாக உருவாக்கப்படுகிறது.

சக்தி வாய்ந்த முன்னணி கதாபாத்திரத்தில் நடிகர் விராட் கர்ணா நடிக்கிறார். அவருடன் நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன், ஜெகபதி பாபு , மகேஷ் மஞ்சரேக்கர், ரிஷப் சாவ்னி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் இந்திய சினிமாவில் புராண சாகச வகையிலான படைப்புகளின் எல்லையை மறு வரையறை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட போஸ்டர்.. சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படத்திற்கான வீடியோவில் ஒரு பிரம்மாண்டமான பழங்குடி இன மக்களின் கடல் போர் மற்றும் தீவிரமான சாகச சண்டை காட்சிகள்.. அது தொடர்பான பிரமிக்க வைக்கும் காட்சி…இப்படத்தின் பிரம்மாண்டமான அளவு – சினிமாவின் கம்பீரம் மற்றும் அதிரடியான சண்டைக் காட்சிகள் இடம் பிடித்துள்ளதை வெளிப்படுத்துகிறது. இது ஒரு முழுமையான திரையரங்க அனுபவத்திற்கும் உறுதியளிக்கிறது.‌

இந்த அதிரடியான சண்டைக் காட்சிகளை கண்களுக்கு விருந்தாகவும் தொழில்நுட்ப ரீதியாக தீவிரமான சண்டை காட்சிகளை வடிவமைப்பதில் உலக அளவில் பிரபலமாகி, சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்ற சண்டை பயிற்சி இயக்குநர் விளாட் ரிம்பர்க் வடிவமைத்துள்ளார். இப்படத்தில் பிரம்மாண்டமான முறையிலான பழங்குடியினரின் சண்டைகள்- கடல் போர் காட்சிகள்- நீருக்கு அடியில் நடைபெறும் சண்டை காட்சிகள் – என இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத பிரம்மாண்டமான சாகச காட்சிகளும் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரமிக்க வைக்கும் காட்சிகளையும் பார்வையாளர்களை கவர்ந்து இழுக்கும் சினிமா தருணங்களையும் வழங்குவதற்காக.. பல முன்னணி ஸ்டுடியோகள் இரவு பகலாக உழைத்து வருகின்றன. அத்துடன் போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் வி எஃப் எக்ஸ் – VFX பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. பழங்கால கோயில்கள்- மாய உலகங்கள் முதல் பிரம்மாண்டமான போர்க்காட்சிகள் மற்றும் தெய்வீக அம்சங்கள் வரை- ஒரு உலகளாவிய சினிமா அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்கும் நோக்கத்தில் அதிநவீன விசுவல் எபெக்ட்ஸ்களுடன் இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

சமீபத்திய ஆண்டுகளில் இந்திய சினிமாவில் இருந்து வெளிவந்த மிகப்பெரிய காட்சி மொழியிலான படைப்புகளில் ஒன்றாக நாக பந்தம் படம் இருக்கும் என்று திரையுலக வட்டாரங்கள் ஏற்கனவே விவரித்து வருகின்றன.

இந்த உற்சாகத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் முன்னணி பொழுதுபோக்கு நிறுவனமான ஜீ ஸ்டுடியோஸ் இப்படத்தின் வட இந்திய திரையரங்கு விநியோக உரிமைகளை பெற்றுள்ளது. அத்துடன் இந்தப் படத்தை இந்தி பேசும் மக்களை கவர்வதற்காக.. அவர்களுக்கான சந்தையில் இப்படத்தை பிரம்மாண்டமாக வெளியிட ஜீ ஸ்டுடியோஸ் திட்டமிட்டுள்ளது. இந்த கூட்டணி ‘நாக பந்தம்’ படத்திற்கு நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய வரவேற்பை அளித்து, இந்த ஆண்டின் மிகப்பெரிய பான் இந்திய வெளியீடுகளில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் வீடியோ பெற்றுள்ளது. இவை இப்படத்தின் மீது திரையுலக வணிகர்கள் கொண்டுள்ள வலுவான நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.‌

பண்டைய ரகசியங்கள் – மறைக்கப்பட்ட புதையல்கள்- தெய்வீக சக்திகள் – மறக்கப்பட்ட புராணக் கதைகளின் பின்னணியில் அமைந்திருக்கும் ‘நாக பந்தம்’ திரைப்படம் – இந்திய புராணங்கள் மற்றும் கலாச்சாரத்தில் வேரூன்றிய, உணர்வு பூர்வமான மற்றும் கண்களுக்கு விருந்தளிக்க கூடிய காட்சிகளைக் கொண்ட ஒரு அற்புதமான பயணத்தை பார்வையாளர்களுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் பிரம்மாண்டம்- வியக்க வைக்கும் காட்சி அமைப்புகள் – விறுவிறுப்பான சண்டை காட்சிகள் – கற்பனைக்கு அப்பாற்பட்ட சாகச காட்சிகள் – சக்தி வாய்ந்த இசை – சுவராசியமான கதைக்களம் – என பல அம்சங்கள் இடம் பிடித்திருப்பதால், இந்த திரைப்படம் 2026 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

இதன் காரணமாக இப்படத்தைக் காண்பதற்கான காத்திருக்கும் கால கட்டம் குறைந்து வருகிறது. அதே தருணத்தில் இப்படத்தை பார்ப்பதற்கான ஆர்வம் அதிகரித்து வருகிறது.

மிகவும் எதிர்பார்க்கப்படும் புராண அதிரடி சாகச படைப்பான நாக பந்தம் திரைப்படம்- திரை அரங்குகளில் வெளியாக இன்னும் 44 நாட்களே மீதமுள்ளன. அதனால் இப்படத்திற்கான கவுண்ட் டவுன் தொடங்கி விட்டது. இந்தத் திரைப்படம் உலகெங்கிலும் எதிர்வரும் ஜூலை மாதம் மூன்றாம் தேதியன்று வெளியாகிறது.

இணைய தொடர்களுக்கு புதிய வடிவம் தரும் புஷ்கர் – காயத்ரி !!

சுழல் மற்றும் வதந்தி முதல் எக்ஸாம் வரை: தமிழ் இணையத் தொடர் கதையாடலுக்கு புதிய முகம் கொடுக்கும் புஷ்கர் – காயத்ரி !!

தமிழில் நீளமான கதையாடல்களில் தனித்துவமான படைப்பாற்றல் கொண்ட இயக்குநர் ஜோடியாக புஷ்கர் மற்றும் காயத்ரி உருவெடுத்துள்ளனர். பல்வேறு அடுக்குகள் நிறைந்த எழுத்து நடை மற்றும் முழுமையாக உயிர்ப்புடன் தோன்றும் கதைக்களம் தான் அவர்களின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகின்றன.

புஷ்கர் – காயத்ரியை வேறுபடுத்துவது, அவர்கள் உருவாக்கும் கதை உலகங்கள் மிகவும் இயல்பாகவும் வாழ்ந்து கொண்டிருப்பதுபோலவும் தோன்றினாலும், அதே நேரத்தில் வணிகரீதியான திரில்லர் அம்சங்களின் பரபரப்பையும் சுவாரஸ்யத்தையும் தக்க வைத்திருப்பதுதான். சிறிய நகரங்களின் இயல்பான பின்னணி, சிக்கலான மனித மனங்கள், மெதுவாக பரவும் மர்மங்கள் ஆகியவற்றின் மூலம், உள்ளூர் கதைகளும் உலகளாவிய தரத்தில் பேசக்கூடியவை என்பதை அவர்கள் தொடர்ந்து நிரூபித்து வருகின்றனர். அந்த படைப்பாற்றல் பார்வை சுழல்: தி வோர்டெக்ஸ் சீசன் 1 மற்றும் 2, வதந்தி: தி ஃபேபிள் ஆஃப் வெலோனி, தற்போது எக்ஸாம் போன்ற படைப்புகள் மூலம் வெளிப்பட்டுள்ளது.

தமிழ் OTT உலகில் முக்கியமான திருப்பமாக அமைந்தது சுழல்: தி வோர்டெக்ஸ். இரு சீசன்களும் அதன் ஆழமான கதையாடல், நம் மண் சார்ந்து வேரூன்றிய கதை பின்னணி, உணர்ச்சிபூர்வமான மர்மம் ஆகியவற்றுக்காக பெரும் வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக இரண்டாம் சீசன், சமூக ரீதியாக சிக்கலான காளிபட்டணம் என்ற உலகத்தை மையமாகக் கொண்டு, ஒரு மரணம் முழு ஊரின் அமைதியையே சிதைக்கும் வகையில் நகரும் பரபரப்பான திரில்லராக உருவெடுத்தது. குடும்பம், தியாகம், பழிவாங்குதல், ஒழுக்கம் போன்ற கருக்கள் கலந்து, அந்த தொடர் ரகசியங்களும் மன அழுத்தங்களும் நிறைந்த உலகிற்குள் பார்வையாளர்களை இழுத்துச் சென்றது.

வதந்தி: தி ஃபேபிள் ஆஃப் வெலோனி தொடரில் க்ரியேட்டிவ் புரடியூசர்களாக இருந்த புஷ்கர் – காயத்ரி, உணர்ச்சிகளும் மனித பார்வைகளும் மையமாக இருக்கும் அடுக்குகள் நிறைந்த கதையாடலை உருவாக்கி தந்துள்ளனர். “வதந்தி” என்ற தலைப்புக்கேற்றவாறு, அந்த தொடர் வெலோனி என்ற இளம் பெண்ணின் வாழ்க்கையைச் சுற்றி பரவும் வதந்திகள், சந்தேகங்கள் மற்றும் மாறுபட்ட உண்மைகள் குறித்து பேசுகிறது. உண்மையையும் பொய்யையும் பிரிக்க போராடும் காவல்துறை அதிகாரி விவேக், அந்த கதையின் மையமாக இருந்தார். ஒரு சிறிய நகரத்தின் இயல்பான பின்னணியில் நகரும் இந்த தொடர் மூலம், உணர்ச்சிகள் நிரம்பிய நீளமான கதையாடல்களை உருவாக்கும் தங்களின் திறனை இந்த படைப்பாளிகள் மீண்டும் நிரூபித்தனர்.

அதேபோல், எக்ஸாம் தொடரிலும் புஷ்கர் – காயத்ரி தங்களின் படைப்பாற்றல் பார்வையை தொடர்கிறார்கள். நுழைவுத் தேர்வுகளைச் சுற்றியுள்ள கடுமையான போட்டி மற்றும் அதனைச் சூழ்ந்துள்ள ஊழலை மையமாகக் கொண்ட இந்த தொடர், பெரிய மோசடியை வெளிச்சத்திற்குக் கொண்டு வர முயலும் ஜான்சி மற்றும் அவரது வழிகாட்டியான ஜெயச்சந்திரன் ஆகியோரின் பயணத்தை பின்தொடர்கிறது. அதே நேரத்தில் DSP மரமல்லியும் இந்த பதற்றமான சம்பவங்களின் முக்கிய அங்கமாக மாறுகிறார். பரபரப்பு, உணர்ச்சி ஆழம் மற்றும் சமூக முக்கியத்துவம் ஆகியவற்றை இணைக்கும் கதைகளுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் அவர்கள், இந்த தொடரின் மூலமும் தங்களின் நீளமான கதையாடல் பார்வையை மேலும் வலுப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், வதந்தி சீசன் 2-ஐ எதிர்நோக்கும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு பெருமளவில் அதிகரித்து வருகிறது. சுழல், வதந்தி மற்றும் தற்போது எக்ஸாம் ஆகியவை அனைத்தும் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள நிலையில், புஷ்கர் – காயத்ரி தொடர்ந்து நம் மண்ணில் வேரூன்றிய, உணர்ச்சிப்பூர்வமான மற்றும் பரந்த ரசிகர்கள் விரும்பும் வகையிலான தமிழ் கதைகளுக்கு புதிய பரிமாணம் கொடுத்து வருகிறார்கள்.

OTT உலகை கலக்கும் ‘மாடர்ன் பெண் போலீஸ்’

துஷாரா விஜயனின் ஜான்சி முதல், பூமி பட்னேக்கரின் ரிட்டா பெரேரா, மற்றும் சோனாக்ஷி சின்ஹாவின் அஞ்சலி பாட்டி வரை : OTT உலகை கலக்கும் ‘மாடர்ன் பெண் போலீஸ்’ கதாபாத்திரங்களின் பல முகங்கள் !!

இந்தியாவெங்கும் OTT உலகை கலக்கும் ‘மாடர்ன் பெண் போலீஸ்’ கதாபாத்திரங்கள் ! ப்ரைம் வீடியோவில் இப்பொது கண்டுகளியுங்கள்!!

புஷ்கர் – காயத்ரியின் எக்ஸாம் தற்போது பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள நிலையில், அந்த தளத்தில் கடந்த சில ஆண்டுகளில் உருவாகியிருக்கும் பல அடுக்குகள் நிறைந்த குற்றத் தொடர்கள், பெண் போலீஸ் கதாபாத்திரங்களை எப்படி புதிய கோணத்தில் சித்தரித்து வருகின்றன என்பதைக் கவனிக்க வேண்டிய நேரமாக இது தோன்றுகிறது. இந்த கதைகளில் வரும் பெண் போலீஸ் அதிகாரிகள் வெறும் சீருடையில் இருக்கும் அதிகாரிகளாக அல்ல; அவர்கள் உணர்ச்சிகளால் சிக்குண்ட மனிதர்கள், தங்களின் தனிப்பட்ட சுமைகளுடன் வாழ்பவர்கள், முறைகேடான அமைப்புகளுக்கு எதிராக போராடுபவர்கள், தவறுகளையும் மன அழுத்தங்களையும் சுமந்து செல்லும் நபர்கள். இந்த அணுகுமுறை பாரம்பரிய ‘ஹீரோயிக்’ போலீஸ் சித்திரிப்புகளை விட மிகவும் நிஜமாக உணரப்படுகிறது. அந்த மாற்றத்தை பிரதிபலிக்கும் ஐந்து முக்கியமான படைப்புகளை பார்க்கலாம்.

சுழல் : தி வோர்டெக்ஸ் – ஷ்ரேயா ரெட்டி நடித்த இன்ஸ்பெக்டர் ரெஜினா தாமஸ், சமீபத்திய OTT உலகில் மிகவும் நினைவில் நிற்கும் பெண் போலீஸ் கதாபாத்திரங்களில் ஒன்றாக திகழ்கிறது. சம்பலூரில் நடைபெறும் மயான கொள்ளை திருவிழாவை பின்னணியாகக் கொண்ட இந்த தொடரில், ஒரு இளம் பெண் காணாமல் போன வழக்கை விசாரிக்கும் ரெஜினா, அதே நேரத்தில் தனது மகனையும் இழக்கிறார். இதனால் அவரது தொழில்முறை வாழ்க்கையும், தனிப்பட்ட வாழ்க்கையும் ஒன்றாக கலக்கின்றன. அதுவே இந்த கதாபாத்திரத்தின் பலம். ரெஜினா ஒரு கண்டிப்பான அதிகாரியாக அல்லாமல், மன உளைச்சல், கோபம், தாய்மையின் பயம் ஆகியவற்றோடு வாழும் மனிதராக எழுதப்பட்டிருக்கிறார்.

சாணிக் காயிதம் – இந்த குற்ற அதிரடி படத்தில் கீர்த்தி சுரேஷின் பொன்னி, பாரம்பரிய பெண் போலீஸ் சித்திரிப்பிலிருந்து மிகவும் விலகிய கதாபாத்திரம். குடும்பத்தை காப்பாற்ற முயலும் ஒரு காவலராக ஆரம்பிக்கும் அவள், வாழ்க்கையை சிதைக்கும் அளவிலான கொடூரமான அனுபவத்தை சந்திக்கிறார். அதன் பிறகு நடப்பது வழக்கமான நீதிக்கான போராட்டமல்ல; பழிவாங்கலுக்கான கொதிக்கும் பயணம். இந்த பட்டியலில் மிகவும் வன்முறையான கதாபாத்திரமாக இருந்தாலும், போலீஸ் சீருடையின் பின்னாலுள்ள உடைந்த மனிதரை மிகவும் நேர்மையாக காட்டியவராகவும் பொன்னி திகழ்கிறார்.

தஹாட் – சோனாக்ஷி சின்ஹாவின் SI அஞ்சலி பாட்டி, இந்தி OTT உலகில் பெண் போலீஸ் கதாபாத்திரங்களுக்கு புதிய தொனியை கொண்டு வந்தார். அவர் மென்மையான நாயகி அல்ல. நேராக பேசுபவர், தன்னம்பிக்கையுடன் செயல்படுபவர், குற்றவாளிகளோடு மட்டுமல்ல தனது துறையினரிடமிருந்தும் எதிர்ப்புகளை சந்திப்பவர். தொடர்ச்சியான மர்ம மரணங்களை மையமாகக் கொண்ட இந்த தொடரில், அஞ்சலி பாட்டி ஒரு ஆபத்தான விசாரணையின் மையத்தில் நிற்கிறார். ஆனால் அந்த வழக்கு மட்டுமல்ல அவரது கதை; தொடர்ந்து தனது அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கும் உலகில் தன்னுடைய இடத்தை உறுதியாக பிடித்துக் கொண்டிருப்பதே இந்த கதாபாத்திரத்தை தனித்துவமாக்குகிறது.

டல்டல் – பூமி பட்னேக்கரின் ரிட்டா பெரேரா, வழக்கமான போலீஸ் அதிகாரி அல்ல. கூர்மையான உள்ளுணர்வும் திறமையும் கொண்டிருந்தாலும், தன்னைச் சுற்றியிருக்கும் இருண்ட உலகின் மன அழுத்தங்களை சுமந்து வாழும் நபர். இந்த உளவியல் குற்றத் திரில்லரில், ரிட்டா ஒரு தொடர் கொலைகாரனை தேடுவதோடு, தனது கடந்தகாலத்தின் சுமைகளையும் எதிர்கொள்கிறார். இளம் வயதிலேயே மும்பை குற்றப்பிரிவை வழிநடத்தும் அவர், கடுமையான அதிகாரியாகவும் உடைந்த மனிதராகவும் இரு நிலைகளில் தொடர்ந்து இயங்குகிறார். அந்த இரட்டைத் தன்மையையே இந்த தொடர் மிகவும் நுட்பமாக பயன்படுத்துகிறது.

எக்ஸாம் – இயக்குநர் A. சற்குணத்தின் முதல் வெப் தொடரான எக்ஸாம், இந்த விவாதத்திற்கு புதிய பரபரப்பை சேர்த்துள்ளது. குறிப்பாக துஷாரா விஜயனின் ஜான்சி மற்றும் அதிதி பாலனின் DSP மரமல்லி ஆகிய இரு கதாபாத்திரங்கள் அதன் மையமாக உள்ளன. தைக்கரா என்ற மலைநகரத்தை பின்னணியாகக் கொண்ட இந்த தொடர், போட்டித் தேர்வுகளைச் சுற்றியுள்ள பெரிய மோசடியை வெளிச்சத்திற்குக் கொண்டு வர போராடும் DSP மரமல்லியாக நடிக்கும் ஜான்சியை பின்தொடர்கிறது. ஆனால் அந்த சதி அவள் நினைத்ததைவிட மிகப்பெரியது என்பதை பின்னர் உணர்கிறாள். தற்போது பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள எக்ஸாம், ஜான்சி மற்றும் மரமல்லி இடையேயான மனப்போரின் மூலம் OTT உலகில் பெண் போலீஸ் கதாபாத்திரங்களின் புதிய பரிணாமத்தை சுவாரஸ்யமாக பதிவு செய்கிறது.

இந்த எல்லா கதைகளையும் இணைப்பது, பெண்கள் போலீஸ் அதிகாரிகள் சீருடையில் இருப்பது மட்டும் அல்ல. அவர்கள் எழுதப்படும் விதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்தான். இந்த கதாபாத்திரங்கள் பிழையற்ற நேர்மையாளர்கள் அல்ல. அவர்கள் தவறுகள் செய்கிறார்கள். உணர்ச்சி சுமைகளை சுமக்கிறார்கள். முறைகேடான அமைப்புகளுக்குள் வாழ்கிறார்கள். அந்த அமைப்புகளே அவர்களை வடிவமைக்கின்றன. அதனால் தான், பழைய ஒரே மாதிரியான சித்திரிப்புகளை விட இவர்கள் மிகவும் நிஜமானவர்களாக தோன்றுகிறார்கள். OTT உலகில் இந்த மாற்றம் இன்னும் எங்கு செல்லப் போகிறது என்ற எதிர்பார்ப்பையும் உருவாக்குகிறது.

மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிக்கும் #Chiru158 படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது

‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி – இயக்குநர் பாபி கொல்லி – கே வி என் புரொடக்ஷன்ஸ்- கூட்டணியில் தயாராகும்’ #ChiruBobby2- #Chiru158′ திரைப்படத்தின் பிரம்மாண்டமான தொடக்க விழாவில் ‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண் மற்றும் நாகபாபு ஆகியோர் கலந்து கொண்டனர். இப்படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்குகிறது

திரையுலகில் சில கூட்டணிகள் உடனடியாக பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவியும் , வெற்றிகரமான திரைப்பட இயக்குநர் பாபி கொல்லியும் மீண்டும் கூட்டணி அமைத்திருப்பது.. ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று என்பதில் ஐயமில்லை. இவர்களின் கூட்டணியில் உருவான ‘வால்டர் வீரய்யா’ திரைப்படம்- சிரஞ்சீவி அவரது உச்சகட்டமான ‘மாஸ்’ அவதாரத்தில் வெளிப்படுத்தி, ஒரு மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட் வெற்றி படமாக அமைந்தது. தற்போது இந்த ஜோடி மற்றொரு பிரம்மாண்டமான படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர்.

ChiruBobby2 / #Chiru158 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தை கே வி என் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் வெங்கட் கே. நாராயணா தயாரிக்கிறார். தமிழ், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமான பட்ஜெட் படங்களை தயாரித்து வழங்கிய பிறகு கே வி என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தெலுங்கில் தயாரிக்கும் முதல் திரைப்படம் இதுவாகும்.

இந்த படத்தைப் பற்றிய தொடர்ச்சியான அறிவிப்புகள் மூலம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில்.. இன்று அப்படத்தின் தொடக்க விழா பிரம்மாண்டமான பூஜையுடன் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் ‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண்- நாக பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதன் காரணமாக இந்த விழா ‘மெகா’ நிகழ்வாக மாறியது. இந்த மூன்று மெகா நட்சத்திரங்களும் ஒரே மேடையில் தோற்றமளித்தது … ரசிகர்களுக்கு ஒரு கண் கொள்ளா காட்சியாக அமைந்தது.

பவன் கல்யாண் ‘கிளாப் போர்டு’ – ( Clap Board) அடித்து, படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். சுஸ்மிதா கொணிதெல கேமராவை இயக்கி வைத்தார். முதல் காட்சியை இயக்கும் கௌரவத்தை வி வி விநாயக் ஏற்றார். பி. கோபால் – கோதண்டராமி ரெட்டி மற்றும் நாகபாபு ஆகியோர் இப்படத்தின் திரைக்கதையை தயாரிப்பு குழுவினரிடம் வழங்கினர். இவ்விழாவில் திரையுலகை சார்ந்த பல முக்கிய இயக்குநர்களும் , தயாரிப்பாளர்களும் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். கே வி என் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தை சார்ந்த லோகித் மற்றும் அவரது குழுவினரும் இவ்விழாவில் பங்கேற்றனர்.

வெகுஜன மக்களின் ரசனையை மிகத்துல்லியமாக புரிந்து கொண்ட இயக்குநர் பாபி கொல்லி – இம்முறை இன்னும் பிரம்மாண்டமான ஒரு கதையை உருவாக்கியுள்ளார். இது மிகப்பெரிய வீச்சையும்.. தீவிரத்தையும்.. கண் கவர் காட்சிகளையும் வழங்கும் என உறுதி அளிக்கிறது. பல ஆண்டுகளாக எண்ணற்ற மறக்க முடியாத கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்ற ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி – இத்திரைப்படத்தில் தனது கதாபாத்திரத்தில் தீவிரத் தன்மையுடன் தோன்ற உள்ளார். இதற்காக அவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று அண்மையில் வெளியானது. இதில் அவரது உடல் தோற்றத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையும் வெளிப்படுத்தியது. அவரது இந்த முயற்சி.. இந்த திரைப்படத்திற்காக அவர் எந்த அளவு அர்ப்பணிப்புடன் உழைத்து வருகிறார் என்பதை அனைவருக்கும் உணர்த்துகிறது.

இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க.. மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.இப்படத்தின் வழக்கமான படப்பிடிப்பு நாளை முதல் ஹைதராபாத்தில் தொடங்குகிறது.

ChiruBobby2- திரைப்படத்தில் மிகச்சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களும் இணைந்துள்ளனர். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, எஸ். தமன் இசையமைக்கிறார். அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், ஆண்டனி ரூபன் பட தொகுப்பாளராகவும் பொறுப்பேற்றிருக்கிறார்கள். திரைக்கதையை கோனா வெங்கட் மற்றும் கே. சக்கரவர்த்தி ரெட்டி எழுதியுள்ளனர். கூடுதல் திரைக்கதையை எழுத்தாளர்களான ஹரி மோகன கிருஷ்ணா மற்றும் வினீத் பொட்லூரி ஆகியோர் எழுதியுள்ளனர். பானு- நந்து ஆகியோர் நகைச்சுவை பகுதிக்கான உரையாடல்களை எழுதியுள்ளனர்.

நடிகர்கள் : ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி , அனஸ்வரா ராஜன்

தொழில்நுட்பக் குழு :

எழுத்து& இயக்கம் : பாபி கொல்லி

தயாரிப்பாளர் : வெங்கட் கே. நாராயணா

தயாரிப்பு நிறுவனம் : கே வி என் புரொடக்ஷன்ஸ்

இசை : எஸ். தமன்

திரைக்கதை : கோனா வெங்கட் & கே. சக்கரவர்த்தி ரெட்டி

கூடுதல் திரைக்கதை : ஹரி மோகன கிருஷ்ணா & வினீத் பொட்லூரி

ஒளிப்பதிவு : விஜய் கார்த்திக் கண்ணன்

படத்தொகுப்பு : ஆண்டனி ரூபன்

தயாரிப்பு வடிவமைப்பு : அவினாஷ் கொல்லா

VFX மேற்பார்வையாளர் : யுகாந்தர் .டி

வசனங்கள் – பானு & நந்து

நிர்வாக தயாரிப்பாளர் : சரண்யா பொட்லா

மக்கள் தொடர்பு : யுவராஜ்

மார்க்கெட்டிங் : ஹேஷ்டேக் மீடியா

‘தி இந்தியா ஸ்டோரி (The India Story) ஜூலை 24ஆம் தேதி திரைப்படம் வெளியாகிறது

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி (The India Story) படத்தின் டீசர் விரைவில் வெளியீடு : ஜூலை 24ஆம் தேதி திரைப்படம் வெளியாகிறது

MIG புரொடக்ஷன் & ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் இந்த திரைப்படத்தை வழங்குகிறது .

அனைவரது கவனத்தையும் கவரும் வகையில் பிரத்யேக போஸ்டரை வெளியிட்டதை தொடர்ந்து, தற்போது ‘தி இந்தியா ஸ்டோரி- The India Story ‘ படத்தின் தயாரிப்பாளர்கள்- அப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

காஜல் அகர்வால், ஷ்ரேயாஸ் தல்படே ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த சமூக மற்றும் தேசிய அளவிலான திரைப்படம்.. அதன் விறுவிறுப்பான கதைக் களம் மற்றும் ஈர்க்கக்கூடிய காட்சி அமைப்புகளுக்காக ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

MIG புரொடக்ஷன் & ஸ்டுடியோஸ் உடன் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் வழங்கும் இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

சேட்டன் DK இயக்கத்தில், சாகர் B. ஷிண்டே கதை எழுதி தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி : ஸ்லோ பாய்சன் இன் ப்ராக்ரஸ்‘ (The India Story: Slow Poison in Progress) திரைப்படம், ரசாயன பொருட்களின் தவறான பயன்பாட்டினால் ஏற்படும் ஆபத்தான பக்க விளைவுகளை, குறிப்பாக பூச்சிக்கொல்லி மருந்து சார்ந்த விவசாயத்தில், அதன் தாக்கம் மற்றும் பொது சுகாதாரத்தின் மீதான விளைவுகளை பற்றி இப்படம் உரக்க பேசுகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டர்- இப்படம் கையாளவிருக்கும் அதே தருணத்தில் மிகவும் முக்கியமானதும் மனதை உருக்கும் வகையில் அமைந்திருக்கும் விஷயங்களை பற்றிய ஒரு முன்னோட்டத்தை வழங்கியது.

ஒரு தனி நபரின் அல்லது ஒரு குடும்பத்தின் கதை என்ற எல்லையைக் கடந்து.. இப்படம் நாடு முழுவதும் உள்ள எண்ணற்ற மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் ஒரு மிகப்பெரிய நெருக்கடியை எதிரொலிக்கிறது. தொழில் துறை சார்ந்த அலட்சியத்தால் ஏற்படும் மறைமுகமான ஆபத்துகளையும்.. அது தொடர்பான விழிப்புணர்வு மற்றும் பொறுப்புணர்விற்கான அவசர தேவையையும்… இப்படம் முன்னிலை படுத்த முயற்சிக்கிறது.

தி இந்தியா ஸ்டோரி (The India Story) படத்தின் மூலம் விவரிக்கப்படும் அதி தீவிரமான உலகத்தை.. ரசிகர்கள் மேலும் அழுத்தமாக புரிந்து கொள்ளும் வகையில் டீசர் இருக்கும் என்றும், இது இப்படத்தின் முக்கியத்துவம் வாய்ந்த கதைக்களம் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் என்றும் தயாரிப்பாளர்கள் சூசகமாக தெரிவித்துள்ளனர். காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே ஆகியோர் முதன் முறையாக திரையில் இணைந்து நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் தங்களுடைய அழுத்தமான நடிப்பின் மூலம் கதைக்கு உணர்வு பூர்வமான ஆழத்தையும், தீவிரத்தையும் ரசிகர்களுக்கு கடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுமித் பாகடே -அனிதா ஜாதவ்- விநாயக் சைதானி- கல்பேஷ் ஷா – தேவ்யானி கொராடே மற்றும் பிரேம் ஜோஷி ஆகியோர் இப்படத்திற்கு இணை தயாரிப்பாளர்களாக பங்களிப்பு செய்துள்ளனர். நிஷாந்த் பக்வத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மங்கேஷ் தாக்டே இசையமைத்திருக்கிறார். ஆஷிஷ் மாத்ரே படத்தொகுப்பு பணிகளையும், ஷகீல் அஜாமி பாடலாசிரியராகவும், அன்மோல் பாவே ஒலி வடிவமைப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார்கள். மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இதனை ஜீ ஸ்டுடியோஸ் உலக அளவில் வெளியிடுகிறது

“கான் சிட்டி” வரும் ஜூன் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது !!

“கான் சிட்டி” திரைப்படத்தின் டீசர், முதல் மற்றும் இரண்டாம் சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள ரிலீஸ் தேதி அறிவிப்பு ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. அர்ஜூன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள “கான் சிட்டி” திரைப்படம் வரும் ஜூன் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை ஒரு அதிரடி போஸ்டருடன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். பட அறிவிப்பின் ஆரம்பத்திலிருந்தே இப்படத்தின் வித்தியாசமான கதைக்களம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், வெளியான டீசரும் அதற்கான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

குறிப்பாக “ரா ரா ரங்கையா” முதல் சிங்கிள் பாடல் வெளியானவுடனே சமூக வலைதளங்களில் வைரலானது. அதைத்தொடர்ந்து வெளியாகிய “நான் தான் கிங்கு” பாடலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஷான் ரோல்டன் இசையில் உருவான இந்தப் பாடல்கள், அதன் தனித்துவமான மேக்கிங் , ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

“கான் சிட்டி” படம் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தை மையமாக வைத்து பரபரப்பான கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ளது. புதுமையான கதைக்களத்தில் உருவாகும் “கான் சிட்டி” படம், நகர வாழ்க்கையில் கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் கதையை மையமாகக் கொண்டு, குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, பரபரப்பு ஆகிய அனைத்தும் கலந்த ஒரு முழுமையான ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ளது.

மங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பல பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமையை Netflix நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

டீசர், முதல் மற்றும் இரண்டாம் சிங்கிள் பாடல்கள் என தொடர்ந்து வெளியாகிய ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியான ஜூன் 26 ரிலீஸ் தேதி அறிவிப்பு “கான் சிட்டி” படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.

தொழில்நுட்ப குழு

எழுத்து, இயக்கம்: ஹரிஷ் துரைராஜ்
தயாரிப்பு: பவர் ஹவுஸ் பிக்சர்ஸ்
ஒளிப்பதிவு: அரவிந்த் விஸ்வநாதன்
எடிட்டிங்: அருள் மோசஸ்
இசை: ஷான் ரோல்டன்
கலை இயக்கம்: ராஜ் கமல்
உடை வடிவமைப்பு: நவா ராம்போ ராஜ்குமார்
ஸ்டண்ட்: ஆக்ஷன் சந்தோஷ்
மக்கள் தொடர்பு: யுவராஜ்

முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை கௌரவப்படுத்தும் பிரமாண்ட நிகழ்ச்சி

சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்களின் கைவண்ணத்தில் மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை கௌரவப்படுத்தும் பிரமாண்ட நிகழ்ச்சி நடிகர் சஞ்சீவ் மற்றும் சென்னைஸ் அமிர்தா கல்விக்குழும நிறுவனர் பூமிநாதன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள, சென்னைஸ் அமிர்தா ஏவியேஷன் பயிற்சி மையத்தில், முதலமைச்சர் விஜய்யின் திரைப்பயணம் முதல் அரசியல் பயணம் வரையிலான நிகழ்வுகளை சித்தரிக்கும் வகையில், சென்னைஸ் அமிர்தா ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்கள் காய்கறி மற்றும் பழங்களில் திரு. ச. ஜோசப் விஜய்யின் உருவங்களை சிற்பமாக செதுக்கி அசத்தியுள்ளனர்.

இந்நிகழ்ச்சி சென்னைஸ் அமிர்தா கல்விக்குழுமங்களின் நிறுவன தலைவர் திரு. பூமிநாதன் மற்றும் முதலமைச்சரின் நண்பரும் நடிகருமான சஞ்சீவ் ஆகியோர் முன்னிலையில் பொதுமக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு. திரு. ச.ஜோசப் விஜய் அவர்களை கெளரவிக்கும் விதமாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அவர் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமான நாளைய தீர்ப்பு திரைப்படம் முதல் ஜனநாயகன் திரைப்படம் வரையிலான 69 சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த சிற்பங்களை சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்கள் 10 நாட்களாக கடின உழைப்பில் உருவாக்கி உள்ளனர். இந்த சிற்பங்களைப் பார்வையிட்டு ரசித்த, நடிகர் சஞ்சீவ் இவற்றை உருவாக்கிய மாணவர்களை வெகுவாக பாராட்டினார். மேலும் பல்வேறு முயற்சிகள் மூலம் மாணவர்களின் எதிர்காலத்திற்கு வலுவான அடித்தளம் அமைத்து கல்விச்சேவை வழங்கிவரும் சென்னைஸ் அமிர்தா கல்விக்குழுமங்களின் நிறுவனர் திரு. பூமிநாதன் அவர்களுக்கும் வாழ்த்துகள் தெரிவித்தார்.

சென்னைஸ் அமிர்தா கல்விக்குழும நிறுவனர் திரு. பூமிநாதன் உரையாற்றுகையில், ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் ஏவியேஷன் துறையில் மிகச்சிறப்பான பங்களிப்பை வழங்கி, சர்வதேச அளவில் பெருநிறுவனங்களில் மாணவர்களை கொண்டு சேர்ப்பதில் தங்கள் நிறுவனம் சமரசம் இன்றி செயல்படுவதாக தெரிவித்தார். மேலும் இது போன்று மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தி கவனம் பெறச் செய்யும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துவதில் பெருமை கொள்வதாகவும் அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சி முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை பெருமைப் படுத்தியதோடு, சென்னைஸ் அமிர்தா மாணவர்களின் திறமைகளையும் வெளிப்படுத்தியது.

அமானுஷ்ய மர்மங்களுடன் வரும் “தாழ் திறவா”

திகில் மற்றும் மர்மம் கலந்த கதைக்களத்தில் உருவாகி வரும் “தாழ் திறவா” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

உலகளவில் திரை ரசிகர்களால் கொண்டாடப்படும் கேன்ஸ் திரைப்பட விழாவில், “தாழ் திறவா” படத்தின் டீசர் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. Barman Pictures தயாரிப்பில், பரணி சேகரன் இயக்கத்தில், ஆதவ் கண்ணதாசன் மற்றும் வாணி போஜன் நடித்துள்ள இப்படம், மாறுபட்ட களத்தில் உருவாகும் ஹாரர் திரில்லராக அமைந்துள்ளது.

இப்படத்தின் டீசர் மே 19ஆம் தேதி கேன்ஸ் திரைப்பட விழாவின் இந்தியன் பவிலியனில் திரையிடப்பட்டு ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்றுள்ளது. உலகளவில் மிக உயர்ந்த மதிப்பும் கவனமும் பெற்ற கேன்ஸ் திரைவிழாவில் ஒரு தமிழ்ப்படத்தின் டீசர் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெறுவது, தமிழ் சினிமாவிற்கே பெருமை சேர்க்கும் முக்கிய தருணமாக பார்க்கப்படுகிறது.

ஒரு கிராமத்தில் கண்டெடுக்கப்படும் பழமையான எழுத்துக்கள் மற்றும் அதன் பின்னணியில் மறைந்திருக்கும் மர்மமான ஆபத்துகளே இப்படத்தின் மையக் கதையாக அமைந்துள்ளது. தமிழில் அகழ்வாராய்ச்சியை மையமாகக் கொண்டு, அதனுடன் ஹாரர் மற்றும் அமானுஷ்ய அம்சங்களை இணைத்து உருவாகும் அரிய முயற்சியாக இப்படம் உருவாகியுள்ளது.

இன்று தமிழ் ரசிகர்களுக்காக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

வெளியான இரண்டு போஸ்டர்களிலும் திகில் நிறைந்த காட்சிகள் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளன. முதல் போஸ்டரில், இருள் சூழ்ந்த அறையில் சுவரிலிருந்து நீளும் மர்மக் கைகள் வாணி போஜனை இழுத்துச் செல்ல முயல, அவரைக் காப்பாற்ற ஆதவ் கண்ணதாசன் பதட்டத்துடன் ஓடி வருவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.

இரண்டாவது போஸ்டரில், பழமையான மாளிகை, மர்மம் நிறைந்த சூழல், அமானுஷ்ய சம்பவங்களை கண்டு அதிர்ச்சியடையும் குழந்தைகள் மற்றும் ஒரு ரகசிய கதவை திறக்க முயலும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. பயத்துடனும் பதட்டத்துடனும் நிற்கும் கதாபாத்திரங்களின் தோற்றம், இப்படம் வித்தியாசமான ஹாரர் அனுபவத்தை தரப்போகிறது என்பதை உணர்த்துகிறது.

இப்படத்தில் ஆதவ் கண்ணதாசன், வாணி போஜன்ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளதுடன், சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு, ஷ்யாம் பிரசாத் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் குழந்தை நட்சத்திரங்களான லிஷா மற்றும் லலித் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.

படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள இப்படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீடு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது.

தொழில்நுட்பக் குழு :

தயாரிப்பு – பார்மன் பிக்சர்ஸ்
இணை தயாரிப்பாளர் – விவேக் கே.ஆர்
கதை, திரைக்கதை, இயக்கம் – பரணி சேகரன்
இசை – ஓஷோ வெங்கட்
ஒளிப்பதிவு – சாலமன் போஸ் டி.எஸ் / ஜபெஸ் கே கணேஷ்
கலை இயக்கம் – K.A. ராகவ குமார்
எடிட்டிங் – மணிகண்டன் எஸ்
ஆடை வடிவமைப்பு – சுகிர்தா பி
உடை அலங்காரம் – கோபால்
மேக்கப் – வினோத் சுகுமாரன்
சண்டைக்காட்சிகள் – ரக்கர் ராம்
VFX – சோசோ ஸ்டுடியோ
VFX – மேற்பார்வை – வெங்கடேஷ்
SFX – சிங்க் சினிமா
DI – ஃபயர்ஃபாக்ஸ் ஸ்டுடியோஸ்
தயாரிப்பு மேற்பார்வை – சௌந்தரராஜன் / தமிழ்ச்செல்வன்
தயாரிப்பு நிர்வாகம் – முகேஷ் ஷர்மா
விளம்பர வடிவமைப்பு – நெக்ஸ்ட்ஜென் ஸ்டுடியோ
மக்கள் தொடர்பு – யுவராஜ்

ராம் சரணின் “பெத்தி” பட அதிரடி டிரெய்லர் வெளியானது…

மெகா பவர் ஸ்டார் ராம் சரண், புச்சி பாபு சனா, வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள “பெத்தி” திரைப்படத்தின் பிரம்மாண்ட டிரெய்லர் வெளியீடு!

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான்-இந்தியா திரைப்படமான “பெத்தி”, வெளியீட்டுக்கு முன்பே நாடு முழுவதும் பரபரப்பை கிளப்பி வருகிறது. இயக்குநர் புச்சி பாபு சனா, கிராமத்து பின்னணியுடனான இந்த ஆக்ஷன்–ஸ்போர்ட்ஸ் கதையை மண் வாசனை மிக்க உணர்வுகளுடன் உருவாக்கியுள்ளார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், கதாபாத்திர அறிமுகங்கள், மற்றும் மனதை கவரும் பாடல்கள் ஆகியவை ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளன. வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில், விருத்தி சினிமாஸ் நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் திரையரங்க டிரெய்லர், மும்பையில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது.

ஹீரோ அறிமுகத்தை தவிர்த்து, “பெத்தி” டிரெய்லர் ஒரு விரிவான கிராமத்து உலகத்தை முன்வைக்கிறது. தீரா உழைப்பு, போராட்டம் மற்றும் விளையாட்டின் மீதான தீராத காதல் ஆகியவற்றால் நிரம்பிய வாழ்க்கையை மையமாகக் கொண்ட இந்தக் கதையில், “பெத்தி” என்ற கதாபாத்திரம் பல திறமைகள் கொண்ட விளையாட்டு வீரராக வருகிறார். கிரிக்கெட், மல்யுத்தம், ஓட்டப்பந்தயம் என எந்த விளையாட்டாக இருந்தாலும், தனது உடல் வலிமை மற்றும் கடின உழைப்பால் வாழ்வாதாரம் ஈட்டும் மனிதராக அவர் காட்சியளிக்கிறார். குழந்தைகளின் அன்பையும், கிராம மக்களின் மரியாதையையும் பெறும் அவரது வளர்ச்சி, குறிப்பாக ஒரு ஆதிக்கம் செலுத்தும் ஜமீன்தாரின் பொறாமையை தூண்டுகிறது.

இயக்குநர் புச்சி பாபு சனா உருவாக்கிய இந்த பிரம்மாண்ட உலகம் மிகத் தெளிவாகவும் வலிமையாகவும் தெரிகிறது. டிரெய்லர் முழுவதும் இதயத் துடிப்பைப் போல தடதடவென ஓடுகிறது – அமைதியான தருணங்களில் மென்மையாகவும், ஆக்ஷன் காட்சிகளில் இடியென வெடிப்பதுபோலும் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஃப்ரேமும் மிகத் துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், பார்வையாளர்கள் உண்மையான மற்றும் பரந்த உலகத்திற்குள் இழுக்கப்படுகிறார்கள். வழக்கமான விளையாட்டு படங்களின் பாணியை பின்பற்றாமல், “பெத்தி” தனது விளையாட்டு காட்சிகளில் பெரும் தீவிரத்தையும் பரபரப்பையும் உருவாக்குகிறது. ரயில் நிலைய மேடைகளில் நடக்கும் மாபெரும் மோதல்கள், இயற்கையை மீறும் அளவிலான ஸ்டண்ட்கள், அதிரடியான சண்டைக் காட்சிகள் ஆகியவை விளையாட்டும் உயிர் பிழைப்பும் ஒன்றாக கலந்த உலகத்தை சுட்டிக்காட்டுகின்றன. குறிப்பாக கிரிக்கெட் மற்றும் மல்யுத்தத்தை இணைத்து வடிவமைக்கப்பட்ட ஒரு அசாதாரண காட்சி உடனடியாக கவனத்தை ஈர்க்கிறது.

ராம் சரண், மிகவும் கடினமான உடற்திறன் பயிற்சியுடன், ஒரு வலிமையான விளையாட்டு வீரராக காட்சியளிக்கிறார். கிரிக்கெட் மைதானத்தில் அனல் பறக்க வெளிச்சங்களின் கீழ் பேட்டை சுழற்றும் தருணங்களிலிருந்து, சேறு கலந்த  மல்யுத்தப் போட்டிகளில் மிரட்டலாக மோதும் காட்சிகள் வரை, “பெத்தி”யாக அவர் முழுமையாக மாறியிருப்பது தெரிகிறது. உடல் மொழியிலும், உணர்ச்சிகளிலும் ஆழமான மாற்றத்தை அவர் வெளிப்படுத்துகிறார்.

ஜான்வி கபூர் தனது கதாபாத்திரத்தில் அழகான நளினத்தையும், பாரம்பரிய கவர்ச்சியையும் கொண்டு வந்துள்ளார். மேலும் சிவராஜ்குமார், ஜகபதி பாபு, திவ்யேந்து சர்மா, பொமன் இரானி உள்ளிட்ட பலரும் கதைக்கு வலிமை சேர்க்கும் வகையில் தோன்றுகின்றனர்.

தொழில்நுட்ப ரீதியாக “பெத்தி” இந்திய சினிமாவின் பிரம்மாண்டத்தை மறுபரிசீலனை செய்யும் படமாகத் தெரிகிறது. தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா உருவாக்கிய கிராமப்புற உலகம் இயல்பும் நுணுக்கமும் நிறைந்ததாக உள்ளது. ஒளிப்பதிவாளர் R. ரத்னவேலு காட்சிகளை வண்ணமயமான நிறங்களுடனும், பரந்த ஃப்ரேம்களுடனும், உயிரோட்டமிக்க கேமரா இயக்கத்துடனும் பதிவு செய்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மானின் இசை, உணர்ச்சிகளையும் ஆக்ஷன் தருணங்களையும் மேலும் உயர்த்துகிறது.

படத்தின் தயாரிப்பு தரம் சர்வதேச அளவுக்கு இணையானதாக உள்ளது. ஒவ்வொரு ஃப்ரேமும் பெரிய திரைக்காக செதுக்கப்பட்டதுபோல் அமைந்துள்ளது. சமீப காலங்களில் வந்த எந்த டிரெய்லரையும் விட மாறுபட்டதாக மிக அற்புதமானதாக  இந்த டிரெய்லர் அமைந்துள்ளது. இதனால், இன்னும் சில வாரங்களில் வெளியாக இருக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தை எட்டியுள்ளது

நடிகர்கள் :
குளோபல் ஸ்டார் ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு, திவ்யேந்து சர்மா

தொழில்நுட்பக் குழு :
இயக்கம், திரைக்கதை: புச்சி பாபு சானா
வழங்குபவர்கள் : மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ்
தயாரிப்பு நிறுவனம்: விருத்தி சினிமாஸ்
தயாரிப்பாளர்: வெங்கட சதீஷ் கிலாரு
இணை தயாரிப்பாளர்: ஈஷான் சக்சேனா
இசை: A.R. ரஹ்மான்
ஒளிப்பதிவு: R. ரத்னவேலு
தயாரிப்பு வடிவமைப்பாளர்: அவினாஷ் கொல்லா
படத்தொகுப்பு: நவீன் நூலி
நிர்வாக தயாரிப்பாளர்: V.Y. பிரவீன் குமார்
மார்க்கெட்டிங்: ஃபர்ஸ்ட் ஷோ
மக்கள் தொடர்பு : யுவராஜ்