May 10, 2025

deccanwebtv

’ஹிட் – தி தேர்ட் கேஸ்’ திரைப்பட விமர்சனம்

அடர்ந்த காடு பகுதிகளில் கொலை ஒன்று நடக்க அந்த கொலை வழக்கை விசாரிக்க தொடங்கும் போது காவல்துறை அதிகாரி கதாநாயகன் நானிக்கு, ஒரே மாதிரியான உலகில் இந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலர் கொடூரமாக முறையில் கொலை செய்யப்படுவதாக தகவல் கிடைக்கிறது.

பலர் கொடூரமாக முறையில் கொலை செய்யப்படுவதாக உள்ள அந்த வழக்குகள் பற்றி விசாரிக்கும் தொடங்கியதும், அதன் பின்னணியில் கொடூரமான கருப்பு உலகம் ஒன்று இருப்பது கதாநாயகன் நானிக்கு தெரிய வருகிறது.

அந்த கருப்பு உலகம் எங்கிருக்கிறது?, அந்தக் கருப்பு உலகத்தில் தலைவர் யார்?, அவர்கள் அரங்கேற்றம் கொடூரமான கொலைகளுக்கான நோக்கம் என்ன?, அந்த கருப்பு உலகத்தின் தலைவனை கண்டு பிடிக்க களத்தில் இறங்கும் கதாநாயகன் நானி குற்றவாளிகளை கண்டுபிடித்தார் கண்டுபிடிக்கவில்லையா என்பதுதான் இந்த ‘ஹிட் – தி தேர்ட் கேஸ்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘ஹிட் – தி தேர்ட் கேஸ்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நானி நடித்திருக்கிறார்.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் கதாநாயகன் நானி காக்கி சாட்டை அணியாத காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தாலும் , காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் வகையில் சிறப்பாகவும் கம்பீரமாகவும், ஆக்ரோஷமாகவும் நடித்திருக்கும் கதாநாயகன் நானி நடிப்பு மற்றும் வித்தியாசமான மேனரிஷம் மூலம் பார்வையாளர்களை ரசிக்க வைத்திருக்கிறார்.

இந்த ‘ஹிட் – தி தேர்ட் கேஸ்’ திரைப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீரிநிதி ஷெட்டி நடித்துள்ளார்.

கதாநாயகி ஸ்ரீரிநிதி ஷெட்டிக்கு திரைப்படத்தில் பெரிய அளவில் வேலை ஒன்றும் இல்லை என்றாலும், அவரையும் திரைக்கதையோடு பயணிக்க வைக்க மேற்கொண்ட முயற்சிகள் திரைப்படத்திற்கு பெரிய அளவில் பலமாக அமைந்திருக்கிறது.

சூர்யா ஸ்ரீநிவாஸ், அதில் பாலா, ராவ் ரமேஷ், சமுத்திரகனி, கோமளி பிரசாத், மகந்தி ஸ்ரீநாத், ரவீந்திர விஜய், பிரதீக் பாபர், அமித் சர்மா என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் மிகவும் பொருத்தமான தேர்வாக அமைந்துள்ளார்கள்.

ஒளிப்பதிவாளர் சானு ஜான் வர்கீஸ் திரைபபடத்திற்கு மிகப்பெரிய பலம். சண்டைக்காட்சிகளும், வன்முறை காட்சிகள் அதிக அளவில் திரைப்படத்தில் இருந்தாலும், அதை ஒளிப்பதிவு மூலம் அருமையாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இசையமைப்பாளர் மிக்கி ஜே.மேயரின் பின்னணி இசை திரைக்கதையின் வேகத்தையும், விறுவிறுப்பையும் பல மடங்கு இசையால் உயர்த்திருக்கிறார்.

கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரை, கமர்ஷியல் மாஸ் ஆக்‌ஷன் திரைப்படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் சைலேஷ் கோலானு,

நவீன் சந்திரா நடிக்கும் ‘லெவன்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

திரையுலக பிரபலங்கள் இணைந்து வெளியிட்ட நவீன் சந்திரா நடிக்கும் ‘லெவன்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்

‘லெவன்’ டிரெய்லரை உலக நாயகன் கமல் ஹாசன் சமூக வலைதளங்களில் வெளியிட்டார்

ஏ.ஆர். என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகியுள்ள ‘ லெவன் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லெவன்’ திரைப்படத்தில் நவீன் சந்திரா, ரியா ஹரி, அபிராமி, திலீபன், ரித்விகா, ‘ஆடுகளம்’ நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ ஆர் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

‘லெவன்’ டிரெய்லரை உலக நாயகன் கமல் ஹாசன் சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே ‘லெவன்’ முன்னோட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை சுஷ்மா சினி ஆர்ட்ஸ் ஜி என் அழகர்சாமியும், தெலுங்கு வெளியீட்டு உரிமையை ருச்சிரா என்டர்டெய்ன்மென்ட்ஸ் என் சுதாகர் ரெட்டியும், மலையாள உரிமையை E4 என்டர்டெய்ன்மென்ட் முகேஷ் ஆர் மேத்தாவும், கர்நாடகா உரிமையை ஃபைவ் ஸ்டார் கே செந்திலும் பெற்றுள்ளனர்.

மே 16 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர் கே,பாக்யராஜ், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ் தாணு, டி.ஜி. தியாகராஜன், டி. சிவா, இணை தயாரிப்பாளர் கோபாலகிருஷ்ணன், இயக்குநர்கள் அமீர், செல்வராகவன், பிரபு சாலமன், ஏ. எல் விஜய் , விநியோகஸ்தர்கள் ஃபைவ் ஸ்டார் செந்தில், அழகர்சாமி, அருள்பதி , சரிகம ஐஸ்வர்யா, சஞ்சய் வாத்வா, முகேஷ் மேத்தா, மீனா சாப்ரியா, கிருஷ்ண ரெட்டி, பி. எல். தேனப்பன், கதிரேசன், ராஜ் டிவி ரவி, ரகுநந்தன், இயக்குநர்கள் விஷால் வெங்கட், பத்ரி, ரமேஷ் கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்த விழாவிற்கு வருகை தந்திருந்த அனைவரையும் எழுத்தாளர் செல்வேந்திரன் வரவேற்றார். இப்படத்தின் இசையை இயக்குநர் கே. பாக்யராஜ் மற்றும் தயாரிப்பாளர் எஸ் தாணு வெளியிட, இயக்குநர் ஏ.எல். விஜய், தயாரிப்பாளர்கள் கதிரேசன், டி சிவா, தியாகராஜன், பி. எல். தேனப்பன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து இப்படத்தின் முன்னோட்டத்தை இயக்குநர்கள் அமீர் – செல்வராகவன் இணைந்து வெளியிட, விநியோகஸ்தர்கள் சஞ்சய் வாத்வா, அழகர்சாமி, செந்தில், முகேஷ் மேத்தா ஆகியோர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு பேசுகையில், ” நண்பர் அக்பரின் வாரிசான அஜ்மல் கான் இப்படத்தை தயாரித்திருக்கிறார். ரசிகர்களை இருக்கை நுனிக்கு வரவழைக்கும் அளவிற்கு காட்சிகள் திரில்லிங்காக இருக்கிறது. இமானின் இசை படத்திற்கு கூடுதல் சிறப்பு. இந்நிறுவனம் தயாரித்த இந்த மூன்றாவது திரைப்படமும் வெற்றி பெறும் என வாழ்த்துகிறேன்,” என்றார்.

தயாரிப்பாளர் தியாகராஜன் பேசுகையில், ”நீண்ட நாட்கள் கழித்து அரசாங்க அருங்காட்சியகத்தில் உள்ள இந்த கலையரங்கத்தில் நடைபெறும் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டிருக்கிறேன். இந்த விழாவின் நாயகன் இசையமைப்பாளர் இமான். அவர் எப்போதும் தயாரிப்பாளர்களுக்கு நண்பராக இருப்பவர். இந்தப் படத்தின் பாடல்களை கேட்டேன். சிறப்பாக இருக்கிறது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கலந்து கொடுத்திருக்கும் பாட்டும் நன்றாக இருக்கிறது. இப்படத்தின் நாயகன் நவீன் மிகச் சிறந்த திறமைசாலி. அவருடைய திறமையை தமிழ் திரையுலகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இப்படத்தின் இயக்குநரை மனதாரப் பாராட்டுகிறேன். முன்னோட்டத்தில் சில காட்சிகளை பார்த்த உடனே இவருடைய திறமை வெளிப்பட்டது.‌ இந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” என்றார்.

தயாரிப்பாளர் கதிரேசன் பேசுகையில், ” லெவன் திரைப்படத்தை நான் பார்த்து விட்டேன். இன்ட்ரஸ்டிங்கான திரில்லர் திரைப்படம். இப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கும், பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், நடித்த நடிகர், நடிகைகளுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். படத்தைப் பார்க்கும்போதுதான் படத்திற்கு ஏன் ‘லெவன்’ என பெயர் வைத்திருக்கிறார்கள் என்பது தெரியவரும். இந்தத் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் திரைப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் டிக்கெட்டை வாங்கி பார்க்கிறார்கள். ஆனால் பத்து கோடி ரூபாய் முதலீட்டில் எடுக்கும் சிறிய முதலீட்டு திரைப்படங்களுக்கு அனைவரும் ஒன்று கூடி விவாதித்து டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும். நல்ல படமாக இருந்தாலும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பல சங்கடங்கள் இருக்கிறது. ஆந்திராவுடன் ஒப்பிடும்போது ஒரு நல்ல படத்திற்கு தமிழ்நாட்டில் வசூல் சதவீதம் குறைவாகவே இருக்கிறது. சினிமாவைப் பொறுத்தவரை வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை – இந்த மூன்று நாட்களில் தான் ரசிகர்களின் வருகை அதிகமாக இருக்கிறது. அதனால் சிறிய முதலீட்டில் உருவாகும் திரைப்படங்களுக்கு 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயித்தால் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய கோரிக்கை. இதனை மூன்று அல்லது நான்கு மாதங்கள் வரை பரீட்சார்த்தமாக சோதனை செய்ய வேண்டும் என்றும், இது தொடர்பாக திரையுலகினர் அனைவரும் ஒன்று கூடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

நடிகை ரித்விகா பேசுகையில், “இந்தத் திரைப்படத்தில் நானும் ஒரு பங்காக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த தயாரிப்பு நிறுவனம் இதற்கு முன் உருவாக்கிய‌ ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்திலும் நான் நடித்திருக்கிறேன். அதற்கு ரசிகர்களிடத்தில் பெரிய வரவேற்பு இருந்தது. இந்தப் படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன், ” என்றார்.

தயாரிப்பாளர் டி . சிவா பேசுகையில், ”தயாரிப்பாளர் அக்பர் தைரியமானவர். தொடர்ந்து படங்களை தயாரிக்கிறார். அவர் தயாரித்த இந்த திரைப்படமும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். இந்த அரங்கத்தில் படப்பிடிப்பு நடத்துவதற்கான அனுமதி நிறுத்தப்பட்டிருந்தது. இப்போது மீண்டும் வழங்கியிருக்கிறார்கள். இதற்காக படக்குழுவினரை வாழ்த்துகிறேன். ‘லெவன்’ திரைப்படம், ‘ராட்சசன்’ படத்தை போல் மிகப் பெரிய வெற்றியை பெறும் என்று நம்புகிறேன்.

நடிகர் நவீன் சந்திரா மிகப்பெரிய திறமைசாலி. அவருக்கு இந்த திரைப்படம் தமிழில் மிகப் பெரிய வாய்ப்பினை வழங்கும் என்று நம்புகிறேன். திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கும் இமானுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். ஃபாஸ்டஸ்ட் – எக்கனாமிக்- பிரண்ட்லி- லவ்லி – மியூசிக் டைரக்டர் இமானுக்கு இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை வழங்க வேண்டும்,” என்றார்.

நடிகை ரியா ஹரி பேசுகையில், ”திரையுலகில் உள்ள அனைத்து தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் இந்த மேடையில் இருக்கிறார்கள். இதற்கு காரணம் அக்பர் சார்தான்.‌ அவர் மீதான அன்பின் காரணமாகவே அனைவரும் இங்கு வருகை தந்திருக்கிறார்கள். நானும் அவருடைய பார்ட்னர் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த திரைப்படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய விழா நாயகன் இசையமைப்பாளர் இமான் சாரை பார்க்கும்போது உற்சாகமாக இருக்கும். அவருடனான சந்திப்பின்போது எப்போதும் ஒரு பாசிட்டிவிட்டியை பரவச் செய்து கொண்டிருப்பார். அவரை நிறைய முறை சந்தித்து இருக்கிறேன். ஆனால் பேசியதில்லை.
அவருடைய இசையில் முதல் பாடல் உருவான‌ போது இதுதான் என்னுடைய ஃபேவரிட்டான பாடல் என சொன்னேன்.‌ இரண்டாவது பாடல் உருவான போது இந்தப் பாடல் தான் எனக்கு அதிகம் பிடித்திருக்கிறது என்றேன். அதன் பிறகு காத்திருங்கள் தொடர்ச்சியாக பாடல்கள் வந்து கொண்டிருக்கிறது அனைத்து பாடல்களையும் கேளுங்கள் என்றனர். எனக்கு எல்லா பாடல்களும் பிடித்திருக்கிறது. ரசிகர்களுக்கும் அனைத்து பாடல்களும் பிடிக்கும். இதற்காக சரிகம நிறுவனத்திற்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நவீன் அவர்களை இப்படத்திற்கான போட்டோ ஷூட்டின் போது முதன்முதலாக சந்தித்தேன். எனக்கு இருந்த தயக்கத்தை உடைத்து இயல்பாக பழகினார். படப்பிடிப்பு தளத்தில் எனக்கு சிறிய நுட்பமான பல விஷ‌யங்களை கற்றுக் கொடுத்திருக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் ஒட்டுமொத்த படக்குழுவையும் இயல்பாக வைத்திருப்பார். அவருடன் இணைந்து பணியாற்றிய தருணங்கள் மறக்க முடியாதது. இதற்காக அவருக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தில் ஒரு மேஜிக் இருக்கிறது. இந்த திரைப்படத்தை பார்க்கும்போது உங்களுக்குள் நிபந்தனையற்ற அன்பு இருப்பதை உணர்வீர்கள். அந்த அதீத அன்பு ஒரு மேஜிக்கை நிகழ்த்தி இருக்கிறது. இந்த திரைப்படம் திரில்லராக இருந்தாலும் எமோஷனலான படம். மே 16அன்று வெளியாகும் இந்த திரைப்படத்தை அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

இயக்குநர் கே. பாக்யராஜ் பேசுகையில், ”நான் திரைப்படத்தை இயக்குவதற்கும், திரைப்படத்தை பார்ப்பதற்கும் சம்பந்தமே இருக்காது. எனக்கு கிரைம் ஆக்ஷன் திரைப்படங்கள் தான் மிகவும் பிடிக்கும். இது போன்ற படங்களை பார்க்கும் போது மூளைக்கும் கொஞ்சம் வேலை கொடுக்கும் விஷ‌யம் இருக்கும். அடுத்து என்ன என்ற இன்ட்ரஸ்ட் இருக்கும். ‘விடியும் வரை காத்திரு’, ‘ஒரு கைதியின் டைரி’ என இரண்டு திரைப்படங்களை தான் இந்த வகையில் இயக்கியிருக்கிறேன். ‘லெவன்’ திரைப்படம் கிரைம் திரில்லர் என்று சொன்னவுடன் ஆர்வம் ஆகிவிட்டேன்.‌ இந்தப் படத்தை 16ம் தேதி அன்றே பார்க்க வேண்டும் என்று ஆவலும் ஏற்பட்டிருக்கிறது. ரசிகர்களிடமும் வரவேற்பு இருக்கும். படக் குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

நடிகை அபிராமி பேசுகையில், ”மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இயக்குநர் லோகேஷ் அஜில்ஸின் தொடக்கப் பயணத்தில் என்னையும் இணைத்துக் கொண்டதற்கு நன்றி. இந்தத் திரைப்படத்தில் அழகான பாடல்களை வழங்கியதற்காக இசையமைப்பாளர் இமானுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தயாரிப்பாளர் அஜ்மலுடன் இணைந்து பணியாற்றுவது அனைத்து நட்சத்திரங்களுக்கும் இயல்பாக இருக்கும். அவருடைய அக்கறையும், அன்பும் அதிகம். இந்தப் படத்தில் என்னுடன் இணைந்து நடித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

இயக்குநர் அமீர் பேசுகையில், ”இப்படத்தின் நாயகன் நவீன் சந்திராவிற்கும், இன்றைய விழா நாயகன் இசையமைப்பாளர் இமானுக்கும், தயாரிப்பாளர் அஜ்மலுக்கும் என் வாழ்த்துக்கள். ஒட்டுமொத்த திரையுலகத்தையும் அவ‌ர் மேடையில் ஒன்றிணைத்திருக்கிறார்.

நான் ஊதா கலர் ரிப்பனின் ரசிகன். நான் எல்லா தருணத்திலும் முணுமுணுக்கும் பாடல் அது. இங்கு மேடையில் பேசிய விநியோகஸ்தர் மதுரை அழகர் எந்த திரைப்படத்தையும் அவ்வளவு எளிதாக பாராட்ட மாட்டார். அவர் இந்தத் திரைப்படத்தை விநியோகிக்கிறார் என்றால், இந்த படம் உண்மையிலேயே நன்றாக இருக்கிறது என்று அர்த்தம்.‌ அத்துடன் பிரபு சாலமன்- இமான் ‍ அக்பர் – இணைந்திருக்கிறார்கள் என்றால்.. அந்த படம் நன்றாக தான் இருக்கும். அக்பர் ஆடிட்டர் என்றாலும் சினிமாவை அளவு கடந்து நேசிப்பவர். அதனால் தான் படத்தை தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தின் முன்னோட்டமும் , பாடல்களும் நன்றாக இருந்தன‌. ‘போர் தொழில்’, ‘ராட்சசன்’ போன்ற படங்கள் ரசிகர்களை எப்படி இருக்கை நுனியில் வைத்திருந்தனவோ அதேபோல் இந்த படமும் இருக்கும் என்று நம்புகிறேன், வெற்றி பெற வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்,” என்றார்.

இசையமைப்பாளர் டி. இமான் பேசுகையில், ” மிகவும் மகிழ்ச்சி.‌ தயாரிப்பாளர்கள் அக்பர் – அஜ்மல் கான் ‍- ரியா ஹரி ஆகியோர்களுக்கு முதலில் நன்றி. திரையுலகில் 23 ஆண்டுகளாக பணியாற்றிக் கொண்டிருந்தாலும் இதுவரை கிரைம் திரில்லர் ஜானரிலான திரைப்படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது.‌ அந்த வகையில் ‘லெவன்’ என்னுடைய இசையில் வெளியாகும் முதல் கிரைம் திரில்லர் திரைப்படம்.‌ இதற்காக இயக்குவர் லோகேஷ் அஜில்ஸுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓ டி டியில் படங்களை பார்க்கும் போது ஏராளமான க்ரைம் திரில்லர் திரைப்படங்களை தான் விரும்பி பார்ப்பேன். உச்சகட்ட காட்சி வரை ஆர்வம் குறையாமல் பார்க்கலாம்.

நான் இயக்குநர் சுந்தர் சி உடன் எட்டு படங்களில் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். அந்த தருணத்தில் அவருடைய உதவியாளர்களும் இருப்பார்கள். அவர்களும் படத்தை இயக்கும் போது எனக்கு வாய்ப்பளித்திருக்கிறார்கள். அந்த வகையில் லோகேஷ் என்னை சந்தித்து நான் சுந்தர் சி உதவியாளர். ஒரு கதையை உங்களிடம் சொல்ல வேண்டும் என கேட்டபோது, நான் மாஸான கமர்ஷியல் என்டர்டெய்னராக தான் இருக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் கதையை கேட்கும் போது பக்காவான க்ரைம் திரில்லர் ஜானரில் இருந்தது. கதை கேட்டு முடித்ததும் அவரிடம் முதலில் இந்த கதைக்கு என்னை எப்படி யோசித்தீர்கள் எனக் கேட்டேன். இதுவரை நீங்கள் இந்த ஜானருக்கு இசை அமைக்கவில்லை. நீங்கள் இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன் என்றார். இது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

இந்த திரைப்படத்தில் ஒளிப்பதிவாளர் கார்த்திக் அசோகனின் பங்களிப்பு மிகச் சிறப்பாக இருந்தது. இந்த படம் வெளியான பிறகு அவர் பேசப்படுவார்.‌

இயக்குநர் லோகேஷ் அஜில்ஸின் எழுத்து சிறப்பானதாக இருந்தது. படத்தை நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறார். படத்தைப் பார்த்த பிறகு அவரை போனில் பாராட்டினேன்.‌ இந்தப் படத்தில் வரும் சைலன்ஸ் கூட ரசிகர்களுக்கு பிடிக்கும்.

இந்தப் படத்தில் ஒரு பாடலை பாடகர் மனோ பாடியிருக்கிறார்.‌ இதுவரை எத்தனையோ பாடல்களுக்கு நான் இசையமைத்திருந்தாலும் எனது இசையில் மனோ பாடியதில்லை. இந்தப் படத்தில் அது நடந்து இருக்கிறது. இதற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.‌ இந்தத் திரைப்படம் மே 16ம் தேதி அன்று வெளியாகிறது.‌ ‘போர் தொழில்’, ‘ராட்சசன்’ போன்று இந்த திரைப்படமும் இருக்கும் என்பது என்னுடைய நம்பிக்கை. படத்தை திரையரங்கத்தில் பார்த்துவிட்டு உங்களுடைய அன்பையும் ஆதரவையும் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

இயக்குநர் பிரபு சாலமன் பேசுகையில், ”தயாரிப்பாளர் அக்பருடன் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறேன்.‌ இந்தப் படத்தின் கதையை கேட்டதும் பிடித்திருந்தது. கதைக்குப் பொருத்தமான நடிகர்களை தேடத் தொடங்கினோம். அந்தத் தருணத்தில் அற்புதமான நடிப்புத் திறமை உள்ள நவீன் சந்திரா இந்த கதைக்குள் வந்தார். கதாபாத்திரத்தை திரையில் கச்சிதமாக காட்சிப்படுத்துவதில் திறமையானவர் நடிகர் நவீன் சந்திரா என்பதை படம் பார்த்த பிறகு நீங்கள் அனைவரும் சொல்வீர்கள். அதன் பிறகு ஒவ்வொருவராக படத்திற்குள் வந்தனர்.

இந்த படத்தை எனக்கு நெருக்கமாக உணர வைத்தது கார்த்திக் அசோகனின் ஒளிப்பதிவு தான். இதுபோன்ற திரைப்படங்களுக்கு ஒளி சூழல் முக்கியமானது.‌ அவருக்கு சினிமாவில் மிகப்பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது.

மே 16 இப்படம் திரையரங்கில் வெளியாகும் போது அதற்கான அங்கீகாரத்தை ரசிகர்கள் வழங்குவார்கள் எனும் நம்பிக்கை இருக்கிறது,” என்றார்.

நடிகர் நவீன் சந்திரா பேசுகையில், ”ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ‘சரபம்’ என்றொரு தமிழ் படத்தில் நடித்தேன்.‌ அதன் பிறகு தமிழில் ‘லெவன்’ திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறேன்.
இந்த விழாவுக்கு வருகை தந்த அனைவருக்கும் முதலில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மிகவும் உணர்வுபூர்வமான தருணம் இது. இந்த கதையை கேட்ட பிறகு இதில் நடித்தால் எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. தயாரிப்பாளர் அக்பர், இயக்குநர் லோகேஷ், ஒளிப்பதிவாளர் கார்த்திக் ஆகிய மூவரும் சேர்ந்து படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளை நேர்த்தியாக உருவாக்கினர். அதனால் இந்த திரைப்படத்தை அவர்களால் எளிதாக உருவாக்க முடிந்தது.

இந்த திரைப்படத்தை ஒரு படமாக இல்லாமல் இரண்டு படமாக படப்பிடிப்பு நடத்தினோம். இதன் போது நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றினர். இந்தப் படம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. மே 16ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.‌ மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.

நான் இமானின் தீவிர ரசிகன். படத்தில் எல்லா பாடல்களும் நன்றாக இருக்கின்றன‌. இதற்காக அவருக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

‘விருமாண்டி’ படத்தில் அபிராமி அவர்களின் நடிப்பை பார்த்து வியந்து இருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் அவர்களுடன் இணைந்து நடிக்கும் நாட்களுக்காக காத்திருந்தேன், நட்பாக பழகினார். காட்சிகளில் நடிக்கும்போது அவருடைய திறமையை நேரில் பார்த்து வியந்தேன். அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது.‌

ரியா ஹரி படப்பிடிப்பு தளத்தில் எனக்கு நம்பிக்கை அளித்தவர். அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவமும் மறக்க முடியாதது. எதிர்காலத்தில் அவர் மிகச்சிறந்த நடிகையாக வலம் வருவார். அதற்காக அவரை வாழ்த்துகிறேன், தெலுங்கு திரையுலகம் சார்பாக அவரை வரவேற்கிறேன்.

‘லெவன்’ படம் நன்றாக உருவாகியுள்ளது, படத்தை சிறப்பான தருணத்தில் வெளியிட வேண்டும் என்பதற்காக காத்திருந்தோம். ரசிகர்களுக்கு நல்லதொரு படத்தை வழங்க வேண்டும் என தீர்மானித்து மே 16ம் தேதி இப்படம் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் பேசுகையில், ” இங்கு வருகை தந்த அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு படத்திற்கு நடிகர்கள் அமைந்துவிட்டால் பாதி வெற்றி உறுதியாகி விடும் என்று சொல்வார்கள் அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி. நவீன், திலீபன், ரியா, அபிராமி, ரித்விகா ஆகியோர் இந்தப் படத்தில் இணைந்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மிடில்கிளாஸ் மாதவன் படத்தில் அபிராமியின் ரசிகன் நான்.

என்னுடைய முதல் படம் தமிழ்- தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இயக்க வேண்டும் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்ற போது தொடக்கத்தில் சற்று பதற்றமாக இருந்தது. ஆனால் வெற்றிகரமாக நிறைவு செய்ததற்கு என்னுடன் பணியாற்றிய நடிகர்களும் நடிகைகளும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் தான் காரணம். அவர்கள் கொடுத்த முழு ஒத்துழைப்பின் காரணமாகத்தான் படத்தினை திட்டமிட்டபடி நிறைவு செய்தேன். அதற்காக இந்த தருணத்தில் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நானும், கார்த்திக்கும் நண்பர்கள். நான் உதவி இயக்குநராகவும், அவர் உதவி ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி பயணத்தை தொடங்கிய தருணத்திலிருந்தே நண்பர்கள். அவன் தான் இந்தப் படத்திற்கு முதுகெலும்பு. படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது எனக்கு கூட சில தருணங்களில் சோர்வு எட்டிப் பார்க்கும். ஆனால் கார்த்திக் சோர்வே இல்லாமல் சுறுசுறுப்பாக பணியாற்றிக் கொண்டே இருப்பார். இந்தப் படத்தின் டீசர் வெளியானவுடன் வேறொரு படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய ஒப்பந்தமானார்.

இமான் சார் எனக்கு கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம். படத்தில் பாடல்களிலும், பின்னணி இசையிலும் அவர் கடுமையாக உழைத்திருக்கிறார். அதிலும் இடைவேளை தருணத்தில் அவர் வழங்கி இருக்கும் பின்னணி இசை நிச்சயம் பேசப்படும். இமான் சாரின் 2.0 வெர்ஷ‌னை இப்படத்தில் பார்க்கலாம்.‌

தயாரிப்பாளர் அக்பர் – படத்திற்கு நிதி அளிப்பதோடு மட்டும் இல்லாமல் இப்படத்திற்காக நாங்கள் எவ்வளவு கடுமையாக உழைப்பை கொடுத்தோமோ, அதற்கு நிகராக அவரும் உழைத்தார். அவர் ஒருபோதும் தயாரிப்பாளராக இருந்ததில்லை, படத்திற்காக அனைத்து பணிகளையும் அவர் செய்தார். அவரைப் பார்க்கும்போது எனக்கு சற்று பொறாமையாக தான் இருக்கிறது. ஏனெனில் அவ்வளவு ஸ்ட்ராங்கஸ்ட் பெர்சன்.‌ அவருக்காகவே இந்த திரைப்படம் பெரிய வெற்றியை பெறும், வெற்றி பெற வேண்டும். ஒரு தயாரிப்பாளர் வெற்றி பெற்றால் தான் ஒரு திரைப்படம் வெற்றி பெறும் என நம்புபவன். அந்த வகையில் இந்த திரைப்படம் பெரிய வெற்றியை பெறும் என்று நம்புகிறேன்.‌

நடிகர் நவீன் ஒரு கதாபாத்திரத்திற்குள் வந்துவிட்டால் அந்த கதாபாத்திரமாகவே இருப்பார். கேரக்டரை எழுதும்போது திரையில் எப்படி தோன்றும் என்று நினைத்து எழுதுவதில்லை.‌ ஆனால் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று விரும்புவோம். படம் பார்த்த அனைவரும் படம் எப்படி நன்றாக இருக்கிறது என்று ஒருமித்த குரலில் சொன்னார்களோ, அதேபோல் அனைவரும் நவீன் சந்திராவின் நடிப்பையும் பாராட்டினார்கள். இந்தப் படம் நவீன் சந்திராவிற்கு தமிழ் திரையுலகத்தில் நல்ல பெயரை சம்பாதித்து தரும். நிறைய வாய்ப்புகளும் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

மே 16 அன்று ‘லெவன்’ படம் பார்க்கும் ரசிகர்களுக்கு அற்புதமான திரையரங்க அனுபவம் காத்திருக்கிறது. அதைக் காண திரையரங்கத்திற்கு வாருங்கள்,” என்றார்.


Beat the Heat with Samsung’s Fab Grab Fest – Huge Discounts on Gadgets & Appliances!

• Up to 41% off on select models of Galaxy S series, Z series, and A series smartphones

• Up to 65% discounts on select models of tablets, accessories and wearables

• Up to 43% off on select refrigerators and washing machines and up to 58% off on WindFreeTM ACs 

• Up to 48% off on television models such as Neo QLED 8K, Neo QLED, OLED, QLED, The Frame, Crystal 4K UHD

CHENNAIMay 1, 2025 Samsung, India’s largest consumer electronics brand, is turning up the heat this summer with the return of its blockbuster sale — Fab Grab Fest! Kicking off on May 1, this much-anticipated shopping extravaganza brings sizzling, limited-time deals on a wide range of Samsung’s cutting-edge products, available exclusively on Samsung.com, Samsung Shop App and Samsung Exclusive Stores.

Fabulous Smartphone and Laptop Deals up for Grabs

As the sale kicks off, customers can enjoy up to 41% off on select models of Samsung Galaxy S, Galaxy Z, and Galaxy A smartphone series. Whether it is the latest foldables or powerful camera-centric models, there is something for every tech enthusiast. In addition, select Galaxy tablets, accessories and wearables will be available at discount ofup to 50% off, making it the perfect time to complete your Galaxy ecosystem.

Not just that, users seeking a seamless and versatile tablet-like experience can avail up to 35% off on select Galaxy Book5 and Book4 laptops and elevate their workflow with Galaxy AI.

Customers purchasing the all-new Galaxy Tab S10FE series will get 45W charger without cable worth INR 2999 free. 

Big Screen Luxury at Incredible Prices

Unmissable deals on Samsung’s flagship TVs are also lined up in this edition. Customers can expect up to 48% off on popular models including the Neo-QLED 8K, Neo QLED, OLED, QLED, The Frame, and Crystal 4K UHD series. Those looking to turn their walls into a confluence of art and technology can choose The Frame TV. With a flush fit, Samsung’s Frame seamlessly transcends into an art piece when turned off – and now, with an instant cart discount of up to INR 11000, premium design and cinematic experiences are more accessible than ever. Additionally, customers can avail benefits of up to INR 5000 exchange bonus on purchase of select TVs.

Smart Savings on Digital and Premium Home Appliances

Samsung is also rolling out exclusive offers on its full suite of digital appliances. Shoppers can enjoy deals across refrigerators, washing machines, microwaves, air conditioners, and monitors.

For those seeking top-tier performance and design, select models of side-by-side refrigerators, French-door refrigerators will be up for grabs at an exclusive deal of up to 43% off.

Select models of washing machines will be available at up to 43% off. Additionally, they will get a generous 20-year warranty on the Digital Inverter Motor for both Fully Automatic Front Loading and Fully Automatic Top Loading machines. For easy access, the affordable EMI option is also available starting at just INR 1590 for Fully Automatic Front Loading, INR 990 for Fully Automatic Top Loading, and INR 890 for Semi-Automatic Washing Machines.

To beat the heat this summer, select WindFree™ AC models can be availed at a fabulous deal of 58% off, with an additional 5% discount on the purchase of two or more units. These ACs also include a 5-year warranty on the PCB part and a 10-year warranty on the compressor, delivering both savings, comfort and peace of mind.

Step into Luxury with Samsung’s ‘Buy More, Save More’ Offers

Customers can continue to indulge in a premium experience through our ‘Buy More Save More’ deals. Shoppers purchasing two or more smart home appliances via Samsung.com or the Samsung Shop App will receive an additional discount of 5%. The programme invites users to handpick their own personalized bundles from a variety ofdigital appliances that suit their needs, while maximizingsavings.

Select Samsung monitors will be available at discounts of up to 60%. Customers purchasing Galaxy Book Series laptops can avail a multi-buy offer on monitors – where pairing the two together will mean more savings.Additionally, Samsung is offering an instant cart discount of up to INR 7000 on gaming monitors.

Easy Financing and Cashback Offers

Customers can avail cashback of up to 22.5% using debit and credit cards from leading banks including HDFC Bank and ICICI Bank. The maximum cashback available during the Fab Grab Fest is INR 25000, adding an extra layer of affordability to the existing unbeatable offers.

Fab Grab Fest Offers:

Available on Samsung.com, Samsung Shop App and Samsung Exclusive Stores
Products/CategoryConsumer Offer Highlight Models
SmartphonesUp to 41% off on MRP 
24 months NCEMI on Galaxy Foldables & up to 12 months NCEMI on Galaxy S series 
Galaxy Z Fold6, Galaxy Z Flip6, Galaxy S25 Ultra, Galaxy S25+, Galaxy S25, Galaxy S24 Ultra, Galaxy S24, Galaxy S24 FE,  Galaxy A56 5G, Galaxy A36 5G, Galaxy A55 5G, Galaxy A35 5G,  Galaxy M16, Galaxy M06, Galaxy F16, Galaxy F06
LaptopsUp to 35% off on MRP
Up to INR 17490 bank cashback 
Galaxy Book5 Pro 360, Galaxy Book5 Pro, Galaxy Book5 360, Galaxy Book4, Galaxy Book4 Pro
Tablets, Accessories & WearablesUp to 65% off on MRP
Up to INR 16000 bank cashback on Galaxy Watch 
Galaxy Tab S10 Series, Galaxy Tab S10 FE, Galaxy Tab S9 FE & FE+, Galaxy Tab A9+, Galaxy Tab A9, Galaxy Watch7 Series, Galaxy Watch Ultra, Galaxy Buds3 Pro,Galaxy Fit3
TVs Up to 48% off on MRPFree Soundbar or TV on purchase of select TVsBank cashback of 20% up to INR 20000Up to INR 11000 Instant Cart Discount on Frame TV1 + 1 year warranty Buy More Save More: Buy 2 get 5% extra Off*Get additional Trade-In benefit up to INR 5000* on select SKUs Neo QLED 8K, Neo QLED, OLED, QLED, The Frame, Crystal 4K UHD
RefrigeratorsUp to 43% off on MRP
Up to INR 5000 Instant Cart Discount on Side-by-Side & French Door Refrigerators
Up to INR 2500 Instant Cart Discount on Double Door Refrigerators 
Buy More Save More: Buy 2 get 5% extra Off*
20 Years warranty on Digital Inverter Compressor
Lowest EMI option starting INR 3990/mo.* with Bajaj Finserv
Side-by-Side & French Door Refrigerators
Washing MachinesUp to 43% off on MRPUp to INR 3000 Instant Cart Discount on Bespoke AI LaundryBuy More Save More: Buy 2 get 5% extra Off*EMI options starting INR 990/mo.* on Fully Automatic Top Load Washing MachinesEMI options starting INR 890/mo.* on Semi-Automatic Washing MachinesEMI options starting INR 1590/mo.* on Fully Automatic Front Load Washing Machines20 years warranty on Digital Inverter Motor on FATL & FAFLFront Load >= 8Kg | Top Load > =8Kg Washing Machines
MicrowavesUp to 39% off on MRP
Buy More Save More: Buy 2 get 5% extra Off*
10 year warranty on Ceramic Enamel Cavity
Convection Microwave Owens >= 28L
MonitorsUp to 60% off on MRP
Multi Buy offer on Monitors with purchase on Galaxy Book Series Laptops: Get up to 60% off on MRP of Monitors 
Up to INR 7000 Instant Cart Discount on Gaming Monitors
Buy More Save More: Buy 2 get 5% extra Off*
M5 FHD Smart Monitor, M7 UHD 4K Smart Monitor, Neo GG9 Gaming Monitor with Dual UHD resolution, FHD Monitor with IPS Panel
Air ConditionersUp to 58% off on MRP
EMI options starting INR 1990/mo.* with Bajaj Finserv
Buy More Save More: Buy 2 get 5% extra Off*
5 years comprehensive warranty, 10 year warranty on compressor
WindFree™ Series
Bank CashbackUp to 22.5% cashback with HDFC, ICICI and other leading bank debit and credit cards (Up to INR 17490) #
Up to 22.5% cashback with ICICI, HDFC, SBI and other leading bank cards (Up to INR 25000)^
# Smartphones, tablets, wearables, and laptops. 
^ Select TVs & Digital Appliacnces

“ரெட்ரோ|”திரை விமர்சனம்

சட்டவிரோத செயல்களை செய்துவரும் ஜோஜு ஜார்ஜ் மிகப்பெரிய தாதாவாக வளம் வந்து ஜோஜு ஜார்ஜ் தாய், தந்தை இல்லாத கதாநாயகன் சூர்யாவை வளர்த்து வருகிறார்.தனது காதலி கதாநாயகி பூஜா ஹெக்டேவுக்காக வெட்டு குத்து அடிதடியை விட்டுவிடுவதாக சூர்யா கதாநாயகி பூஜா ஹெக்டேவிடம் உறுதி கூறுகிறார்.

பூஜா ஹெக்டேவை சூர்யா திருமணம் செய்து கொண்டு அமைதியாக வாழ வேண்டும் என விரும்புகிறார்.ஆனால், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பூஜா ஹெக்டேவிறகாக தனது வளர்ப்பு தந்தையின் கையை துண்டாக வெட்டி விட, அவரது தந்தையின் ஆட்களையும் கொலை செய்து விடுகிறார்.

இதனால், சூர்யாவிடம் இருந்து இருந்து பூஜா ஹெக்டே தனது காதலில் இருந்து விலகிச் சென்று விடுகிறார். சூர்யா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

கதாநாயகி பூஜா ஹெக்டே அந்தமானில் இருக்கும் தகவல் சூர்யாவுக்கு தெரிய வர பூஜா ஹெக்டேவை சமாதானப்படுத்தி அவர் விரும்பியது போல், அடிதடி இல்லாத அமைதியான புதிய வாழ்க்கையை தொடங்குவதற்காக அந்தமான் செல்லும் சூர்யாவுக்கு, அங்கே மிகப்பெரிய பொறுப்பும், யுத்தமும் காத்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் சூர்யாவின் வாழ்க்கை என்னவானது?, பூஜா ஹெக்டே ,சூர்யா இருவரும் இணைந்தார்களா? இணையவில்லையா? என்பதுதான் இந்த ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் மீதிக்கதை.

தன்னை வளர்க்கும் தந்தையாக இருந்தாலும், அவருக்காக எதை வேண்டுமானாலும் செய்யும் துணிச்சல் மிக்க மகனாகவும், காதல் தோல்வியால் இது வந்து போகும் காதலனாகவும் அதன், பிறகு தன்னுடைய இனத்தின் விடுதலைக்காக போரிடும் போராளியாகவும், என ஒரே கதாபாத்திரத்திற்கு சூர்யாவின் நடிப்பின் மூலம் சிரிக்காமலேயே நடனம் ஆடுவது, ஆக்‌ஷன் காட்சிகளை ஸ்டைலிஷாக கையாள்வது என்று திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை காட்சிக்கு காட்சி ரசிக்க வைத்திருக்கிறார்.

கதாநாயகி பூஜா ஹெக்டே, கதையின் மையப்புள்ளியாகவும், கதையை நகர்த்திச் செல்லும் வழக்கமான கதாநாயகியாக அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை நிறைவாக செய்திருக்கிறார்.

வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜோஜு ஜார்ஜ் தனது இயல்பான நடிப்பை கொடுத்து தமிழ் திரைப்பட ரசிகர்களை மிரட்டியிருக்கிறார்.

கிங் மைக்கல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர், நாசர், பிரகாஷ்ராஜ், கருணாகரன் என மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் கொடுத்த வேலையை மிகச் சிறப்பாக எந்த ஒரு குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

“டூரிஸ்ட் ஃபேமிலி” திரைவிமர்சனம்

சசிகுமார் மற்றும் மனைவி சிம்ரன் அவர்களுடைய இரண்டு மகன்கள் இவர்கள் குடும்பத்துடன் விலைவாசி ஏற்றத்தால் இலங்கையில் வாழ முடியாமல் தமிழகத்துக்கு கள்ளத் தோனியில் ராமேஸ்வரம் வந்து இறங்கிய அவர்களை யோகி பாபு  சென்னைக்கு அழைத்து வந்து, கேசவ நகரில் உள்ள ஒரு காலனியில் வீட்டை வாடைக்கு எடுத்துக் கொடுத்து அவர்களை தங்க வைக்கிறார். சசிகுமார் குடியிருக்கும் வீட்டிற்கு எதிரில் உள்ள எம்.எஸ. பாஸகரிடம் கார் ஓட்டுனர் பணி புரிந்து கொண்டு தன் குடும்பத்தை காப்பாற்றி  வருகிறார்.

ஒரு பக்கம் இருக்க  இலங்கையில் இருந்து தமிழகத்தில் அகதிகளாக வந்தவர்கள் என்பதை மறைத்து வாழ வேண்டிய சவால் இந்த குடும்பத்துக்கு, மற்றொரு பக்கம்  ராமேஸ்வரத்தில் நிகழும் ஒரு குண்டு வெடிப்புக்கு காரணமானவர்களை பிடிக்க வேண்டிய சவால் காவல்துறைககு .

குண்டுவெடிப்புக்கு காரணமான குற்றவாளிகளை காவல் துறையினர் கைது செய்தார்களா? கைது செய்யவில்லையா?

இலங்கையில் இருந்து வந்த அகதிகள் என்ற அடையாளம் தெரியாமல் வாழ்ந்தார்களா?

என்பதுதான் “டூரிஸ்ட் பேமிலி”  திரைப்படத்தின் கதை.

திரைப்படத்தில் தர்ம தாஸ் என்ற கதாபாத்திரத்தில் மனைவிக்கு நல்லதொரு கணவனாக, இரண்டு மகன்களுக்கு நல்லதொரு தந்தையாக, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு நல்லதொரு சிறந்த மனிதனாக என தனது கதாபாத்திரத்தை உணர்ந்து மிகச் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.“அயோத்தி” திரைப்படத்திற்கு பின் இந்த டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் நடிகர் சசிக்குமாருக்கு மிகப்பெரிய பேரைப் பெற்று தரும் என்பது உறுதி.

வசந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்த சிம்ரனும் தனது கதாபாத்திரத்திற்கு எந்த விதமான குறையும் இல்லாமல் தனது நடிப்பின் மூலம் சிறப்பு சேர்த்திருக்கிறார்.

தந்தை மகனுக்குமான  நடக்கும் பாச உரையாடல் திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் கண்களில் ஈரம் எட்டிப் பார்க்க வைத்து விடுகிறது. இரண்டாவது மகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மாஸ்டர் கமலேஷ் ஜெகன் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.

இளங்கோ குமரவேல் மற்றும் ஸ்ரீஜா ரவி இருவருக்குமிடையே இருக்கும் காதல் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை  கண்கலங்க வைக்கிறது.

இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் தன் தாயை இழந்து தனிமையில் வாடும் ஒரு இளைஞனாக மிகச் சிறப்பான நடிப்பை கொடுத்து கதாபாத்திரமாகவே  வாழ்ந்திருக்கிறார.

கண்டிப்புடன் கூடிய அன்பு கொண்டவராக எம் எஸ் பாஸ்கர், காவல்துறை ஆய்வாளராக பக்ஸ், அவரது மனைவியாக நடித்தவர் இவர்களது மகள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்  யோகலெக்‌ஷ்மி என அனைவரும் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு மிகச் சரியான பொருத்தமாக பொருந்தியிருக்கிறார்கள்.

தமிழ் திரைப்பட உலகில் எந்த ஒரு இயக்குனரிடமும் உதவி இயக்குனராக பணிபுரியாமல் இப்படியொரு தரமான படைப்பைக் கொடுத்து தமிழ் திரை உலகை உள்ள  அனைவரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த்.

மெட்ராஸ் மஹால் என்ற த்ரில்லர் திரைப்படத்தின் பூஜை

மெட்ராஸ் மஹால் என்ற த்ரில்லர் திரைப்படத்தின் பூஜை வெகு விமர்சையாக இன்று பிரசாத்லேபில் நடைபெற்றது .

BASAVA புரொடக்ஷன் வழங்கும் மெட்ராஸ் மஹால் இயக்குனர் ஜீ வி சீனு இயக்குகிறார் கதை திரைக்கதை வசனம் இயக்கம் இதற்கு முன் பானு என்கிற திரைப்படத்தை எடுத்து வெற்றிகண்டார். புது முகங்கள் நடிக்கும் நான்கு கதாநாயகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது. கதாநாயகியாக அக்ஷரா அவர்கள் நடிக்கிறார். கிழக்கு வாசல் பொண்ணுமணி, இதயம் இது போன்ற படங்களில் ஒலிப்பதிவு செய்த கேமராமென் அவர்கள் இப்படத்திற்கு ஒலிப்பதிவு மேற்பார்வையும் ம் அதேபோல் முக்கிய தோற்றத்தில் நடிக்கிறார். காமெடி நடிகர்கள் தேர்வு நடைபெறுகிறது. துளசிராமன் இசையமைக்கிறார். தயாரிப்பு வினோத் நம்பியார் எஸ் முருகன் அவர்கள் தயாரித்துள்ளார்.

படத்தின் பூஜையில் கலந்து கொண்ட நடிகர், மற்றும், தயாரிப்பாளர், காலேஜ் சேர்மேன் அட்வகேட் Mercury சத்யா பேசியதாவது,
அனைவருக்கும் வணக்கம், இன்று பிரசாத் லேப்பில் மெட்ராஸ் மஹால் என்ற புதிய படத்தின் துவக்க விழா இன்று அமோகமாக நடைபெற்றுள்ளது. அதற்கு நமக்கு வருகை தந்துள்ள மெயின் விஜயமுரளி அண்ணன் அவர்களுக்கும், கில்டு துரை அண்ணன் அவர்களுக்கும், சக்ரவர்த்தி, கேரளாவிலிருந்து வந்திருக்கிறார் தயாரிப்பாளர் விநோத் அவர்களுக்கும், திருவெற்றியூர் முருகன் அவர்கள், துணை தலைவர் சம்பத், இதனுடைய மேலாளர் தங்கவேலு அவர்களுக்கும், இசையமைப்பாளர் துளசிராமன் அவர்களுக்கும், மாதவன் சந்தோஷ் அவர்களுக்கும், துளசிராமன் அவர்களுக்கும், கதாநாயகி அக்ஷனா, கதாநாயகன் சீனு அவர்களுக்கும் இந்த நிகழ்ச்சியை சிறப்பித்த அனைவருக்கும் என் முதலில் என் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

பெருமையாக கூறிக்கொள்வது சிறிய தயாரிப்பாளர்கள் கிடைப்பது மிகவும் சிரமம். கோடி கோடியாக வைத்து எடுக்கவில்லை, அனைத்து நாடி நரம்புகளை வைத்து நம்முடைய சீனு இந்த படத்தை எடுக்கிறார்கள். தூண்களான விளங்கிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்றும், இந்தப் படம் வடசென்னை சார்ந்ததாகவும், மாணவர்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் திரைப்படமாக அமையும், மிகப்பெரிய படம் எல்லாம் வந்திருக்கலாம், ஆனால் சீனு எழுதி தயாரித்த இந்த படம் மக்களுக்கு சென்றடையும், மாணவாகள் சமுதாயம் தற்போது சீரழிந்து வரும் நிலையில் அதனை எவ்வாறு அவர்கள் சீரழிந்து மீண்டும் நல்ல வழிக்கு திருந்தி நமது பெற்றோர்களுக்கு நல்ல பேரை எடுத்து நம்ம மக்களுக்கும் எடுத்துக்காட்டாக இந்த படம் அமையும் இந்த படத்தை கண்டிப்பாக அனைவரும் வரவேற்பார்கள் ஆகையினால் இந்த சிறப்பு அக்ஷயதிருதி அன்று இப்படத்தின் பூஜையை போட்டதற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அனைத்து பிஆர்,ஓ சார்பாக வந்த அனைவருக்கும், ஊடகத்துறை அனைவர்களுக்கும், பத்திரிக்கை துரை நண்பர்களுக்கும், உங்களின் உதவி வேண்டி உங்கள் பொற்பாதங்களை தொட்டு வணங்குகிறோம் என்றார்.

விஜயமுரளி அவர்கள் பேசியதாவது:

மெட்ராஸ் மஹால் படம் மிகப்பெரிய படமாக வெற்றியடையனும். கோபியின் முதல் படம் மெட்ராஸ் மஹால் படம் பி.ஆர்.ஓ. பண்றாங்க. கோபிக்காக இந்த படம் பெரிய படமாக அமையும். சத்யா சார் சொன்னார்கள், லட்சங்கள் படம் எடுக்குறனு சொன்னாங்க. இந்த படம் லட்சியம் படமாக அமையனும், சிறு முதலீட்டு படம் தான் சினிமாவை வாழ வைக்கிறது. எல்லாருக்கும் வேலை கொடுக்குது. ஆகவே இந்த படத்திற்கு அனைவரும் உதவி பெரிய அளவில் ஓடவைக்கனும். லாபம் கிடைக்கிற அளவிற்கு சினிமா வரவேற்கனும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

வினோத் அவர்கள் பேசியதாவது :

சீனு அவர்கள் என்னுடைய நண்பர், அவரை நம்பி நான் வந்திருக்கேன். இந்த மெட்ராஸ் மஹால் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய வேண்டுக்கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி கலந்துக்கொண்ட அனைவருக்கும் நன்றி. உங்களின் ஆதரவு எங்களுக்கு தேவை என்றார்.

கில்டு செயலாளர் துரைசாமி அவர்கள் பேசியதாவது :

இந்த படம் மெட்ராஸ் மஹால் திரைப்படம் இன்று பூஜை நடந்தது. இந்த விழாவிற்கு வந்துள்ள ஊடக நண்பர்கள், பத்திரிக்கை நண்பர்கள், படத்தின் குழுவினர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மெர்குரி சத்யா அனைத்தையும் கூறிவிட்டார் பொதுவாகவே வர படம் தயாரிப்பில் இருக்கும்போது பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கும். இந்த பூஜையிலே பார்த்திங்கனா பெரிய அளவிலே இருந்தது. இந்த மெட்ராஸ் மஹால் படத்தின் போஸ்டரே அவ்வளவு ஈர்ப்பை கொடுத்துள்ளது. பெரிய எதிர்ப்பார்ப்பை கொண்டுள்ளது. சீனு அவர்கள் அருமையான டிசைன் செய்து இந்த படத்தின் மூலமாக அனைவரும் பெரிய அளவில் சேரனும், இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்றும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை கூறுகிறேன் என்றார்.

கில்டு துணை தலைவர் அவர்கள் பேசியதாவது :
அனைவருக்கும் வணக்கம் இன்றைக்கு தொடங்கப்பட்டிருக்கிற கில்டு துணை தலைவர் என்ற முறையில் எங்களது அமைப்போட வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். மெர்குரி சத்யா அவர்கள் ஏற்கனவே சொல்லிட்டாங்க இந்த திரைப்படத்தினுடைய வெப்பத்தை சமுதாயத்தினுடைய தாக்கத்தை எப்படி ஏற்படுத்த போதுனு மெர்குரி சத்யா அடையாளப்படுத்தியிருக்கிறார். ரொம்ப அருமையான தலைப்பு மெட்ராஸ் மஹால் ஒரு சென்னைக்குள்ள என்னல்லாம் நடக்குனு மட்டுமல்ல, வடசென்னைக்குள்ள நுட்பமா உள்ள புகுந்து ஒரு கதை களைப்ப அமைத்து ஒரு சாதாரண மனிதனுடைய விவரமான செய்திகளை நுட்பமான செய்திகளை தனது அடையாளத்தை வெளியீடுது, சிறு முதலீடு படம் என்று சொன்னார்கள், எவ்வளவு பெரிய கார் வாங்கினாலும், சின்னதாக இருக்கிற போல்டு நட் தான் முக்கியம், அந்த போல் நட் போல இயக்கக்கூடிய இயங்கிக்கொண்டிருக்கற அத்தனைக்கும் உறுதுணையாக இருக்கிற அச்சானியாக மெட்ராஸ் மஹால் இருக்க போகிறது என்பதிலை ஐயமில்லை. துரை அண்ணன் சொன்னாங்க தன்னுடைய படத்தின் பர்ஸ் லுக் அனைத்து மக்களிடமும் பெரிய அளவில் போய் சேர போகிறது என்பதில் எந்தஒரு மாற்றமில்லை. அப்படிப்பட்ட ஒரு சாதனையாக இந்த படம் தொடங்கப்பட்டிருக்கிறது. எதிர்காலத்தில் வம்சியை போல உருவாக்கும் என்பதில்லை ஐயமில்லை. இயக்குனர் சீனு அவர்கள் நேர்த்தியாக எடுத்துக்காட்டுவார்கள். இந்த ஊடகத்துறை நண்பர்கள் தான் சரியான முறையில் படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பீர்கள் என்று கேட்டுக்கொண்டு இந்த படத்தின் குழுவிற்கு எங்களது கில்டு சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.

அனைத்து உறவுகளுக்கு வணக்கம்,
இந்த மெட்ராஸ் மஹால் படம் மிகப்பெரிய படமாக அமையும் என்றும் சிறு முதலீட்டு படம் என்று சொல்லாமல் இந்த படத்தை இயக்குனர் கொடுத்திருக்கிறார், படக்குழுவினர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

மெட்ராஸ் மஹால் இந்த படம் வடசென்னையை வைத்து எடுத்த படம், இந்த படத்தை அனைவரும் பார்க்கவேண்டும் ஒரு நான்கு நபர்களை வைத்து எடுத்திருக்கிறார்கள் அனைவரும் சப்போர்ட் பண்ண வேண்டும் என்று கூறினார்.

ஹீரோயின் அக்ஷரா கார்த்திக் அவர்கள் பேசியதாவது:
மெர்குரி சத்யா அவர்களுக்கு நன்றி, சீனு அவர்களுக்கும் நன்றி அனைவரும் இப்படத்தை வாழ்த்தி பாராட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இசையமைப்பாளர் துளசிராமன் அவர்கள் பேசியதாவது

இந்த படத்தில் இரண்டு பாடல்கள் உள்ளது. மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன், தயாரிப்பாளர் அவர்களுக்கும், இந்த படத்திற்கு வாய்ப்பு கொடுத்ததற்கு மிகவும் நன்றி. பத்திரிக்கையாளர் தயவு செய்து இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

ஹீரோ சஞ்சய் அவர்கள் பேசியதாவது :
மெட்ராஸ் மஹால் படத்தை அனைவரும் வாழ்த்தி முக்கியமாக தயாரிப்பாளர் அவர்களுக்கும், இயக்குனர் அவர்களுக்கும், நன்றி, தியேட்டரில் பார்த்து இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்குமாறு பத்திரிக்கையாளரிடம் கேட்டுக்கொள்கிறேன்.

சபரி நாதன் அவர்கள் பேசியதாவது :

வணக்கம், இந்த படத்திற்கு எனக்கு வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி

Samsung Opens Registration for its New Vision AI Televisions in India

CHENNAI– April 29, 2025: Samsung, India’s largest consumer electronics brand, today announced that customers registering interest for its new range of Neo QLED, OLED and QLED AI televisions can avail INR 5000 discount, along with other launch offers. Samsung is likely to announce its new range of Vision AI televisions early next month.

Samsung Vision AI represents a paradigm shift in how consumers interact with televisions. By incorporating on-device AI capabilities, Vision AI enables televisions to become aware of their surroundings, adapt to user preferences, and act autonomously to enhance the viewing experience.

Samsung has been the global leader in the television market for 19 consecutive years, according to market research firm Omdia. This continued success is driven by the company’s commitment to premium and ultra-large screen innovation, as well as the introduction of cutting-edge, AI-powered televisions.

Consumers interested in purchasing Samsung’s new range of AI televisions should register themselves on Samsung.com.After registration, customers can avail INR 5000 discount and other launch offers, while purchasing the television.


For more information, please visit – 

Samsung Vision AI TV – Register for Exclusive Benefits | Samsung India

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் ‘சாண்டல்வுட் டைனமோ’ விஜய் குமார்

இயக்குநர் பூரி ஜெகன்னாத்- ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் புதிய பான் இந்திய திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவின் கவனத்தை கவர தயாராகி வருகிறார். பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் பூரி ஜெகன்னாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோர் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகை தபு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

தற்போது இந்தத் திரைப்படத்தில் ‘சாண்டல்வுட் டைனமோ’ விஜய்குமார் இணைந்திருக்கிறார். ‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்திற்கு பின்னர் விஜயகுமார் நடிக்கும் படம் இது.‌ இவர் திரை தோற்றத்திலும் .. தரமான நடிப்பிலும் பெயர் பெற்றவர்.

விஜய் சேதுபதி அவருடைய திரையுலக பயணத்தில் புதிய தளத்தை உருவாக்கும் வகையில் துணிச்சலான வேடத்தில் நடிக்கிறார். ஒரு சக்தி வாய்ந்த கதாபாத்திரத்தின் மூலம் நடிகை தபு மீண்டும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் நடிக்கிறார். இவர்களுடன் விஜய் குமார் இணைந்து நடிக்கவிருக்கிறார். கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான இவர் .. தன்னுடைய புதிய தோற்றத்தில் மின்னும் கதாபாத்திரத்தில் நடிப்பதால்… பல அற்புதமான தருணங்களை எதிர்பார்க்கலாம்.

பூரி எழுதிய கதையுடன் டிராமா -அதிரடி ஆக்சன் – உணர்வுபூர்வமான காட்சிகளைக் கொண்ட துடிப்பான படைப்பு – என இப்படம் உறுதி அளிக்கிறது. இது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் இந்தி ஆகிய மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் வழக்கமான படப்பிடிப்பு எதிர்வரும் ஜூன் மாதம் தொடங்குகிறது.

நடிகர்கள் :
விஜய் சேதுபதி, தபு ,விஜய்குமார்

தொழில்நுட்பக் குழு :
எழுத்து & இயக்கம் : பூரி ஜெகன்னாத்
தயாரிப்பாளர்கள் : பூரி ஜெகன்னாத் – சார்மி கவுர்
தயாரிப்பு நிறுவனம் : பூரி கனெக்ட்ஸ்
தலைமை நிர்வாக அதிகாரி : விஷு ரெட்டி
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஹேஷ்டாக் மீடியா

‘குற்றம் தவிர் ‘படத்தின் முன்னோட்டம்

ஸ்ரீசாய் சைந்தவி கிரியேஷன்ஸ் சார்பில் பாண்டுரங்கன் தயாரிப்பில், கஜேந்திரா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘குற்றம் தவிர்’.இப்படத்தில்
ரிஷி ரித்விக் நாயகனாகவும் ஆராதியா நாயகியாகவும் நடிக்க,சித்தப்பு சரவணன், வினோதினி, ஆனந்த் பாபு,செண்ட்ராயன், ஜார்ஜ் விஜய்,சாய்தீனா , மீசை ராஜேந்திரன் ,ராணுவ வீரர் காமராஜ்,குழந்தை சாய் சைந்தவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ரோவின் பாஸ்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.எடிட்டிங் ரஞ்சித். பாடல்கள் கு.கார்த்திக்.

‘குற்றம் தவிர் ‘ படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்களை கங்கை அமரன் வெளியிட்டார். விழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அதிமுக கட்சியை சேர்ந்த ஈ. . புகழேந்தி, ஆன்மீகவாதி ஜெய்பிரகாஷ் குருஜி,தொழிலதிபர் பிரகாஷ் பழனி ,இயக்குநர்கள் ஆர்.அரவிந்தராஜ், பேரரசு,பவித்ரன், ராஜகுமாரன், நடிகர் சித்தப்பு சரவணன் மற்றும் படக்குழுவினர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.

படத்தின் தயாரிப்பாளர் பாண்டுரங்கன் அனைவரையும் வரவேற்றுப் பேசும்போது.

“நாங்கள் பெங்களூரில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்திருந்தாலும் படப்பிடிப்புகள் பெரும்பாலும் அங்கே நடந்திருந்தாலும் தமிழ்நாட்டு நடிகர்களையே முழுதாகப் பயன்படுத்திப் படம் எடுத்து இருக்கிறோம்.

ஒரு திரைப்படத்தின் மூலம் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்க முடிகிறது .அவர்கள் குடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடிகிறது .இந்தப் படத்தை வெற்றி பெற வைத்தால் மீண்டும் படமெடுப்பேன். அதேபோல் நான் பலருக்கும் வேலை வாய்ப்பு கொடுப்பேன்.எனவே இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

முன்னோட்டம் மற்றும்
பாடல்களை வெளியிட்டு இயக்குநர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் கங்கை அமரன் பேசும்போது,

“முதலில் கர்நாடகத்திலிருந்து படம் எடுக்க வந்துள்ள இவர்களை வரவேற்கிறேன்.

இங்கே கதாநாயகன் நாயகி தோன்றிய காட்சிகளைப் பார்த்தேன்.
பொதுவாக இதுபோல வெளியீட்டு நிகழ்ச்சிகளில் படத்தின் பாடல்களைப் போடுகிறார்கள், சண்டைக் காட்சிகளைப் போடுகிறார்கள். ஆனால், சென்டிமெண்ட் காட்சிகளையோ நகைச்சுவைக் காட்சிகளையோ போடுவதில்லை .
இனி அதையும் போட்டுக் காட்ட வேண்டும் . அதையும் சேர்த்துக் காட்டுங்கப்பா .அதைப் பார்க்கும் போது தான் நடிகர்களுக்கு நடிப்புக்கான மதிப்பெண் கொடுக்க முடியும். இது ஒரு அறிவுரை என்று எடுத்துக் கொள்ள வேண்டாம்.எப்போதும் நான் வெளிப்படையாகப் பேசுவேன். ஏதாவது குறை இருந்தாலும் சொல்வேன். எனக்கு மனதில் தோன்றியதைச் சொன்னேன் .
அந்தச் சுவைகளுடன் இந்தச் சுவைகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும்.

இந்தப் படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா நன்றாக இசையமைத்துள்ளார் .அவர் எனது உறவினர் தான். நம்ம வீட்டுப் பிள்ளை. இந்தப் படத்தின் தயாரிப்பாளரின் நண்பர் சுவாமிஜி இங்கே வந்திருக்கிறார். அவருக்கும் எனக்கும் நல்ல பழக்கம். என்னை அழைத்து அங்கே பெரிய மரியாதை எல்லாம் செய்தார்கள்.

இங்கே செண்ட்ராயன் வந்திருக்கிறார் அவர் எங்கள் பக்கத்து ஊர்க்காரர் தான். அவர் பிக் பாஸ் ரகசியங்களை இங்கே சொல்ல வேண்டும்.
பெங்களூரில் இருந்து படம் எடுக்க இங்கே வந்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்”என்றவர் ‘மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே ‘என்ற மூகாம்பிகைப் பாடலை முழுதாகப் பாடி முடித்துப் படக் குழுவினரை வாழ்த்தினார்.

இயக்குநர் கஜேந்திரா பேசும்போது,

“இது எங்களுக்கு முதல் படம்.நாங்கள் புதிதாகப் படம் எடுக்க வந்திருக்கிறோம் அனைத்து நடிகர்களையும் சென்னையில் இருந்து வரவழைத்து ஒரு தமிழ்ப் படத்தை எடுத்திருக்கிறோம். இதற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் .தயாரிப்பாளர் இல்லாமல் திரைப்படம் எடுக்க முடியாது. படப்பிடிப்பில் எந்தக் குறையும் இல்லாமல் அவர் எங்கள் அனைவரையும் நன்றாகப் பார்த்துக் கொண்டார்” என்றார்.

கதாநாயகனாக நடிக்கும் ரிஷி ரித்விக் பேசும்போது,

” நான் வில்லனாக நடித்து வந்தேன் .இப்போது இதில் கதாநாயகனாக நடிக்க வைத்திருக்கிறார்கள். பெங்களூரிலிருந்து படம் எடுக்க வந்திருக்கிறார்கள் என்ற போது நான் முதலில் யோசித்தேன். ஆனால் தயாரிப்பாளர் உடனே ஒரு லட்ச ரூபாய் எனக்கு அட்வான்ஸ் கொடுத்து புக் செய்தார்கள். எந்தப் பிரச்சினையும் இல்லாமல் படப்பிடிப்பு மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது .உடன் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. பருத்திவீரன் படத்தில் பார்த்து நான் வியந்த சரவணன் சார் இப்படத்தில் நடித்தது பெருமையாக இருக்கிறது. ஒளிப்பதிவாளர் பாஸ்கர், எடிட்டர் ரஞ்சித் போன்றவர்களின் ஈடுபாடும் உழைப்பும் சாதாரணமானதல்ல.அனைவரும் சேர்ந்து விருப்பத்தோடு சிரமப்பட்டு எடுத்திருக்கிறோம்.
படம் ஒரு நல்ல கருத்தைப் பற்றிப் பேசுகிறது . இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்றார்.

கதாநாயகி நடிகை ஆராதியா பேசும்போது,

” ஒவ்வொரு படத்தையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியைச் சிறப்பாகச் செய்யும் ஊடகங்களுக்கு நன்றி .இந்தப் படத்தையும் கொண்டு செல்லுங்கள் . ‘மதிமாறன்’ படத்தில் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது .அதன் மூலம் என்னை அனைவருக்கும் தெரிய வைத்த இயக்குநர் மந்த்ரா சாருக்கு நன்றி .நான் இதுவரை 12 படங்கள் நடித்திருக்கிறேன். ஒன்றுதான் வெளியாகி இருக்கிறது. மற்றவை வெளிவர உள்ளன. இந்தப் படத்தில் தயாரிப்பாளர்,அவரது குழுவினர் எங்களை நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள்.
முதன் முதலில் இதில் நடனமாடி நடித்திருக்கிறேன். அந்தக் காட்சியைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி “என்றார்.

பருத்திவீரன் சரவணன் பேசும் போது,

“நான் இதில் வில்லனாக நடித்திருக்கிறேன்.
இந்த படப்பிடிப்பு பெங்களூர், கர்நாடகா பகுதி என்று நடந்தது. தமிழ்நாட்டில் இருந்து படப்பிடிப்புக்காக அங்கே செல்கிறோம் எப்படி இருக்குமோ என்று தயங்கியபடியே சென்றேன். ஆனால் ஏர்போர்ட்டில் இறங்கியது முதல் அவர்கள் என்னை வரவேற்று அழைத்துச் சென்று தங்க வைத்து உபசரித்தது வரை மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.படப்பிடிப்பின் போதும் நன்றாகக் கவனித்துக் கொண்டார்கள்,இப்படிக் கடைசி வரை நடந்து கொண்டார்கள்.

அவர்களின் அந்த நல்ல மனதிற்காக இந்தப் படம் வெற்றி பெற வேண்டும். பாடல்கள் சிறப்பாக உள்ளன.தயாரிப்பாளருக்கு வாழ்த்துக்கள்” என்றார்

நடிகர் செண்ட்ராயன் பேசும்போது,

“இந்தப் படத்தில் எனக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார்கள். தயாரிப்பாளர் நல்ல சம்பளம் கொடுத்தார் .பாக்கி வைக்காமல் அவ்வப்போது செட்டில் செய்து கொண்டே இருந்தார்கள்.நான் பெங்களூர் படப்பிடிப்பு என்றதும் கர்நாடகாவில் இருப்பவர்களுக்குத் தமிழ் தெரியாதே என்று சில கன்னட வார்த்தைகளை எல்லாம் கஷ்டப்பட்டுக் கற்றுக் கொண்டு போனேன். ஆனால் அங்கே போய்ப் பார்த்தால் எல்லாருமே தமிழ் பேசினார்கள். பெங்களூரில் உள்ளவர்கள் தமிழ், கன்னடம், இந்தி, தெலுங்கு எல்லாமும் பேசுகிறார்கள். அது ஒரு பேன் இந்தியா நகரமாகத் தோன்றியது .அனைவரும் ஒன்றாக இருக்கிறார்கள்”
என்றார்.

நடிகர் மீசை ராஜேந்திரன் பேசும்போது,

“பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொடங்கிய சினிமா எத்தனையோ வளர்ச்சியைப் பெற்று இன்று வளர்ந்து இருக்கிறது. இந்தப் படத்தில் எனக்கு ஒரு நல்ல பாத்திரத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர். பெரிய நட்சத்திரங்கள் இருந்தாலும் கதை இருந்தால் தான் படம் ஓடும் .இதில் கதையை நம்பி படம் எடுத்திருக்கிறார்கள்.இயக்குநர் தான் எதிர்பார்த்தது வரும் வரை விட மாட்டார் .அந்த அளவிற்கு மெனக்கெடுவார்.இந்தப் படத்தில் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம்” என்றார்.

நடிகர் சாய் தீனா பேசும்போது,

” பொதுவாக படப்பிடிப்புகளில் பேச வேண்டிய வசனங்களை பேப்பரில் காண்பிப்பார்கள், தருவார்கள்.இந்த இயக்குநர் படப்பிடிப்பில் டயலாக் பேப்பரையே காட்டியதில்லை. அதை அவர் கையில் நான் பார்த்ததே கிடையாது .ஆனால் இப்படி இருந்தே ஒரு முழுப்படத்தையும் முடித்து விட்டார்”என்றார்.

நடிகை வினோதினி பேசும்போது,

“இயக்குநருக்கு தமிழ் எழுதவே தெரியாது அதனால்தான் டயலாக் பேப்பர் எழுதவில்லை.இருந்தாலும் இந்தப் படத்தைச் சிறப்பாக முடித்தார். திரைப்படத்திற்கு தயாரிப்பாளர் தான் அடித்தளம் . முதலில் தயாரிப்பாளரைப் பார்த்தபோது இந்த படத்தை எப்படி எடுப்பாரோ? என்று நினைத்தேன் .இந்தப் படத்தை எப்படிக் கொண்டு போய் சேர்ப்பாரோ என்று கேள்வி இருந்தது. ஆனால் அவர் அனைத்தையும் தேர்ந்தெடுத்து தேர்ந்தெடுத்து, திட்டமிட்டுச் செய்தார் .அனைத்தையும் தொடர்ச்சியாகப் பின்பற்றி வந்தார். திட்டமிட்டுச் செயல்படுவதில் அவர் என்னை ஆச்சரியப்படுத்தினார்.

ஒரு திரைப்பட விழாவுக்கு இத்தனை பேர் வந்திருக்கிறார்கள் . அந்த அளவிற்கு அவர் உறவுகளைச் சேர்த்து வைத்துள்ளார் .இந்த உறவுகளே அவருக்கு வெற்றியைத் தேடித் தரும் .இந்தப் படத்தில் நான் ஒரு அம்மா பாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.பழம்பெரும் நடிகர் நாகேஷின் மகன் ஆனந்த் பாபு உடன் இணைந்து நடித்திருக்கிறேன்.

அந்தக் குழந்தை சைந்தவி கூட நடித்தது மறக்க முடியாது. முதல் படம் போலவே தெரியவில்லை, சிறப்பாக நடித்தாள். நான் நடித்த அம்மா பாடல் சிறப்பாக வந்துள்ளது.அனைவருக்கும் நன்றி “என்றார்.

ராணுவ வீரரும் நடிகருமான காமராஜ் பேசும்போது,

” இதுவரை தைரியம், ஐ, மெர்சல், சிங்கம் 3 ,சுல்தான் போன்ற படங்களில் நான் நடித்திருக்கிறேன் .,நான் இந்திய ராணுவத்தில் பணியாற்றுகிறேன் .எனது முகநூல் பார்த்து ஐ பட வாய்ப்பு கொடுத்த ஷங்கர் அவர்களை மறக்க முடியாது.
இந்தப் படத்தில் நான் ஒரு பாத்திரத்தில் வருகிறேன்.
சினிமா ஆர்வம்தான் என்னை இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. சினிமா அனைத்தையும் கற்றுக் கொடுக்கும் வாரம் ஒரு சினிமாவைக் குழந்தைகளுக்குக் காட்டுங்கள்” என்றார்.

பிக் பாஸ் புகழ் டேனியல் பேசும்போது,

” என் நண்பர்கள் நடித்திருப்பதால் நட்புக்காக நான் இங்கே வந்தேன். இந்தத் தயாரிப்பாளரைப் பார்க்கும்போது அவர் அழைத்தால் காலண்டரில் தேதி இல்லை என்றால் கூட கால்ஷீட் கொடுத்து நடிப்பேன்.சம்பளம் பெரிதல்ல.எவ்வளவு பெரிய உச்ச நடிகர்களுக்கும் சிறிய சாதாரண நடிகர்களுக்கும் சம்பளத்தில் வித்தியாசம் இருக்கலாம் ஆனால் மனம் ஒன்றுதான் ” என்றார்.

ஜெயபிரகாஷ் குருஜி பேசும் போது,

“எனக்குத் திரை உலகில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். நான் கலந்து கொள்ளும் விழாக்கள் பிற விழாக்கள் பத்து என்றால் சினிமா விழாக்கள் நூறு என்று இருக்கும்.
அந்த அளவிற்குத் திரையுலகில் உள்ளவர்கள் எனக்கு நண்பர்களாக இருக்கிறார்கள் .கங்கை அமரன் அப்படி ஒரு நண்பர். தினம் என்னுடன் பேசுபவர். இந்தப் படத்தை வேறு மொழியிலும் வெளியிடுங்கள். வெற்றி பெறும் ” என்றார்.

அதிமுகவைச் சேர்ந்த அரசியல்வாதி ஈ. புகழேந்தி பேசும்போது,

” குற்றம் தவிர் என்ற படத்தின் தலைப்பே அழகாக இருக்கிறது இந்த தலைப்புக்காக இந்தப் படம் ஓட வேண்டும். வெற்றியைத் தேடித்தரும்.

இங்கே ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். ‘ரத்தக்கண்ணீர் ‘படம் அந்த காலத்தில் எம் ஆர் ராதா அவர்கள் நடிப்பில் வெற்றி பெற்ற படம் .அது வெளியாகி 60 -70 ஆண்டுகளுக்குப் பிறகு கன்னடத்தில் ரத்தக்கண்ணீரு என்று எடுத்தார்கள்.அதை எடுத்தவர் எனது நண்பர்.
நான் அங்கு போய் பார்த்தபோது திரையங்குகளில் எல்லாம் போலீஸ் தடியடி நடக்கும் அளவிற்குக் கூட்டம் அலைமோதியது. படம் பெரிய வெற்றி.

இதைக் கேள்விப்பட்டு திருவாரூர் தங்கராசு பெங்களூர் வந்திருந்தார். என்னைக் கேட்காமல் என் அனுமதி இல்லாமல் எப்படி கன்னடத்தில் எடுக்கலாம் என்று சத்தம் போட்டார்.அந்தப் படம் எடுத்தவர் நண்பர் மிகவும் நல்லவர். தெரியாமல் செய்துவிட்டேன் என்று அவர் திருவாரூர் தங்கராசு காலைத் தொட்டு கும்பிட்டார்.எவ்வளவு பணம் கேட்டாலும் தருகிறேன் .ஆனால் இந்தப் படத்தை கர்நாடகா முழுதும் கொண்டு சேர்த்த எனது மகிழ்ச்சி பெரியது என்றார்.இருவருமே எனக்குத் தெரிந்தவர்கள் . நான் இருவரையும் சமாதானம் செய்து வைத்தேன்.

சினிமா தான் தலைவர்களை கொடுத்தது. சினிமாவில் ஜெயிப்பது நீச்சல் தெரியாதவன் நீச்சல் போட்டிக்கு வருவது போல. எம்ஜிஆர் பாடல் எங்கு பார்த்தாலும் ஒலிக்கிறது. எப்போதும் அவரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்.
எம்ஜிஆர் படங்களில் குற்றவாளியைப் போலீஸ் கைது செய்வது போல் தான் இருக்கும் .தண்டிப்பது போல கொலை செய்வது போல இருக்காது .ஆனால் இப்போது படங்களில் எல்லாம் கதாநாயகர்கள் கத்தியைத் தூக்கிக்கொண்டு வருகிறார்கள்” என்றார் ஆதங்கத்துடன்.

இயக்குநர் அரவிந்தராஜ் பேசும்போது ,

பெங்களூரில் இருந்து படம் எடுக்க வந்து நம் இயக்குநர் குடும்பத்தில் ஒருவராகி உள்ள புதிய இயக்குநரை வரவேற்கிறேன். ஸ்கிரிப்ட் இல்லாமல் படம் எடுத்தார்கள் என்று சொன்னார்கள். அந்த அளவிற்கு மனதில் கதையைப் பதிய வைத்துள்ள இயக்குநரின் ஈடுபாட்டை நான் பாராட்டுகிறேன்.

வில்லனிலிருந்து கதாநாயகனாக இந்த கதாநாயகன் உயர்ந்து இருக்கிறார் .அவர் வெற்றி பெறுவார். இங்கே சினிமா துறையில் ஆன்மிகத் துறையினரும் இணைந்து இருப்பதை இந்த மேடையில் பார்க்கிறேன். அவர்களை இணைத்துள்ளது இந்த படம். எனக்குத் தெரிந்த ஆன்மிகம் சினிமா தான் “என்றார்.

இயக்குநர் பவித்ரன் பேசும் போது,

” சென்னையில் இருந்து பெங்களூர் அழைத்து என்னை ஒரு படம் எடுக்க வைத்தார்கள். அந்தப் படம் தமிழில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’. அது செப்டம்பர் 30-ல் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது .இந்தத் தயாரிப்பாளர் நல்ல சமூக சேவகராக இருக்கிறார் .ஒரு நல்ல படம் எடுத்தால் ஊடகங்கள் அதைக் கொண்டாடுவார்கள் . நீங்கள் ஒரு வேலையைச் சிறப்பாகச் செய்தால் அதைப் பத்து மடங்கு கொண்டு சேர்ப்பார்கள். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று கூறி படக் குழுவினரை வாழ்த்தினார்.

பாடலாசிரியர் கு. கார்த்திக் பேசும் போது ,

“இந்தப் படத்தில் ஒரு கானா பாடல் உட்பட நான்கு பாடல்கள் எழுதி இருக்கிறேன்.பாடலாசிரியர்களுக்கு உரிய சம்பளம் கிடைப்பது கடினம். இதில் அதைச் சரியாகக் கொடுத்திருக்கிறார்கள்.இந்தப் படத்தின் இயக்குநர் தனக்கு எது வேண்டுமோ அதைச் சரியாகக் கேட்டுப் பெற்றுக் கொள்பவர் ,அவ்வளவு தெளிவானவர்.
பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன மகிழ்ச்சி” என்றார்.

தொழிலதிபர் பிரகாஷ் பழனி பேசும் போது,

” இந்தப் படத்தை பெரிய இடத்திற்கு எடுத்துக் கொண்டு செல்லுங்கள்’ என்று கூறி வாழ்த்தினார்.

இயக்குநர் ராஜகுமாரன் பேசும்போது.

” குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பார்கள். குற்றம் தவிர் என்பது இந்த படத்தின் பெயர். உறவுகளில் குற்றம் பார்க்கக் கூடாது. தவிர்க்க வேண்டும் தயாரிப்பாளர் அனைவருக்கும் சம்பளத்தை பாக்கி இல்லாமல் கொடுத்தார் என்றார்கள் அதனால் தான் இயக்குநர் சிறந்த படமாக எடுத்திருக்கிறார். அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். பெங்களூரில் இருந்து வந்து படம் எடுத்திருக்கும் தயாரிப்பாளர் வெற்றி பெறட்டும். பல தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கட்டும்” என்று வாழ்த்தினார்.

நடிகர் ஜார்ஜ் விஜய் பேசும் போது,

“இந்தப் படத்தின் போஸ்டர் ட்ரெண்டிங்கில் வந்தது. அதை வெளியிட வேண்டும் என்று முன்னணி நடிகர்களை அணுகிய போது யாருமே கண்டு கொள்ளவில்லை.ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டால் தான் சினிமா முன்னுக்கு வரும். நான் கவலையோடு இருந்த போது எனக்கு ஒரு வாசகம் வந்தது. ‘என் கிருபை உனக்குப் போதும்’ என்றது அப்படி பல பெரியவர்களின் கிருபை இங்கே இந்தப் படக் குழுவிற்கு வந்துள்ளது”என்றார்.

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேசும்போது,

“நான் ஒரு பாடல் காட்சியில் ஆடி நடித்தேன்.அதன் படப்பிடிப்பு இரவு 7 மணிக்கு தொடங்கி 10 மணி வரை சென்றது. ஒரு குடிசைப்பகுதியில் நடந்தது. சுற்றிலும் மக்கள் கூடி இருந்தார்கள்.பத்து மணிக்கு சாப்பாடு வந்திருந்தது.ஆடிய களைப்பு பசியாக இருந்தது.சாப்பிடலாம் என்று திரும்பிப் பார்த்தபோது சாப்பாடு எங்கள் கைக்கு வரவில்லை. தயாரிப்பாளர் பாண்டுரங்கன் அதை எல்லாம் கூடி இருந்த மக்களுக்குக் கொடுத்து விட்டார்.சில நிமிடங்கள் பொறுத்து இருங்கள் என்று எங்களுக்குப் புதிதாக வரவழைத்துக் கொடுத்தார்.அப்படிப்பட்ட நல்ல மனதுக்காரர் பாண்டுரங்கன்.
இந்தப் படத்திற்காக சிவகாசி மாதிரி பாடல்களைக் கேட்டு வாங்கிக் கொண்டார்கள்.
அந்த சிவகாசி வாய்ப்பை கொடுத்த பேரரசு சார் இங்கே வந்திருக்கிறார். என்னை விஜய் படம் கொடுத்துப் பெரிய ஆளாக்கி விட்ட வர் அவர்.
இந்தப் படத்தில் அப்பா பாடல் பாடியது சிறப்பானது. படம் வெற்றிபெறும் என்று வாழ்த்துகிறேன் “என்றார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது,

“இங்கே பேசியவர்கள் பலரும் எம்ஜிஆர் பற்றிப் பேசினார்கள். எம்ஜிஆர் மட்டும் தான் வில்லனைக் கொல்ல மாட்டார். எந்தப் படத்திலாவது அவர் நம்பியாரைக் கொன்றிருக்கிறாரா?கெட்டது செய்பவர்களைக் கூட திருந்தத் தான் வைப்பார்.
அதனால்தான் அவரைப் பற்றி இங்கே பேசிக் கொண்டிருக்கிறோம்.இப்போதெல்லாம் பழிவாங்க உடனே சுட்டு விடுகிறோம்.

கர்நாடகாவில் பல மொழி பேசுகிறார்கள் என்றார் செண்ட்ராயன். அப்படியானால் அவர் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு தருகிறார் என்று கூறலாமா?

சினிமாதான் அனைத்து துறையினரையும் ஒன்றிணைத்து வாழவைக்கும் துறை. இங்கே பாருங்கள் ஆன்மீக துறையினர், அரசியல் துறையினர், ராணுவத்தினர், காவல்துறையினர், ஊடகத் துறையினர் என அனைவரும் இணைந்து இருக்கிறார்கள்.
ஒரு துறை விழா என்றால் அந்தத் துறை சார்ந்தவர்கள்தான் கலந்து கொள்வார்கள். ஆனால் சினிமாவில் தான் எல்லாத்துறையினரும் இணைகிறார்கள்.

இங்கே ஸ்ரீகாந்த் தேவா வந்திருக்கிறார் பாடல்கள் சிறப்பாக கொடுத்திருக்கிறார். அவர் சிவகாசி படத்திற்குப் போட்ட பாடல்கள் வெற்றி பெற்றன.

அப்போதெல்லாம் இசையமைப்பாளர்களை மலேசியா, சிங்கப்பூர், பாங்காக் என்று அழைத்துக் கொண்டு போய் மெட்டுப்போட வைப்பார்கள்.அவருக்கும் வெளிநாடு செல்லலாம் என்று ஆசை இருந்தது. கேட்டுக் கொண்டே இருந்தார்.
தருமபுரி படத்தில் பணியாற்றி வந்த போது விஜயகாந்த் கட்சி தேர்தல் என்று பரபரப்பாக இருந்தார். படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்தது. அங்கே வரவழைத்து கேரவனிலேயே மெட்டுப்பட வைத்தேன். மூன்று பாடல்கள் அங்கேயே போட்டுக்கொடுத்தார் . பழனி படம் வந்தபோது பழனிக்கும் திருவண்ணாமலை சமயத்தில் திருவண்ணாமலைக்கும் வரவழைத்து மெட்டுகளை வாங்கினேன் .உள்ளூர் பெயரை வைத்துக் கொண்டு உலக நாடுகளுக்கு ஏன் செல்ல வேண்டும் என்று கேட்டேன். கடைசி வரை அவரது வெளிநாடு கனவு பலிக்கவே இல்லை.

குற்றங்களைத் தவிர்க்க வேண்டும் .திரையரங்குகளில் படங்களைப் பார்க்க முடியாமல் இறுகப்பற்று, எம காதகி போன்ற படங்களை ஓபிடியில் பார்க்கும்போது எனக்குக் குற்ற உணர்ச்சியாக இருக்கும். அதுபோன்ற குற்றங்களை இனி தவிர்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

பாடல் காட்சிகளைப் பார்த்தோம்.கதாநாயகன் ரிஷியும் நாயகி ஆராதியாவும் நன்றாக ஆடினார்கள்.பாடல்களைப் பாடும் போது ஆராதியாவுக்கு லிப் மூவ்மெண்ட் சரியாக இருந்தது. ஆனால் ரிஷிக்கு சரியாக அமையவில்லை.கதாநாயகியின் இடுப்பைப் பார்த்துக் கொண்டே ஆடியதால் அதாவது ‘ஹிப்’பைப் பார்த்ததால், ‘லிப்’பைக் கோட்டை விட்டுவிட்டார்.
இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்’ என்றார்.

விழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்களுக்கும் படக் குழுவினருக்கும் தயாரிப்பாளர் பாண்டுரங்கன் பொன்னாடை போர்த்தி வரவேற்று கர்நாடகத்துப் பாரம்பரிய முறையில் தலைப்பாகை அணிவித்து மரியாதை செய்தது , எந்தவொரு தமிழ் திரைப்பட திருவிழாவிலும் காண முடியாத பண்பாட்டுச் செயல் பாடாக இருந்தது.

Sun TVயின் YouTube சேனல் 30 மில்லியன் ஃபாலோயர்ஸை பெற்றுள்ளது!!

இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி சேனலாகவும், உலகின் மிக அதிகமாக பார்வையிடப்படும் தமிழ் தொலைக்காட்சி சேனலாகவும் திகழும் Sun TV, தனது பெருமைக்கு மேலும் ஒரு மகுடம் சூட்டிக்கொண்டுள்ளது.

உலகளவில் மிகவும் பிரபலமான இந்த தொலைக்காட்சி நெட்வொர்கின் YouTube சேனல், Sun TV, தற்போது 30 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை பெற்றுள்ளது.

இந்த சாதனையில் ஆச்சரியம் ஏதுமில்லை ஏனெனில் Sun TVயின் YouTube சேனலில் தினமும் 100க்கும் மேற்பட்ட வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன! இதில் Sun TVயில் ஒளிபரப்பப்படும் பல பிரபலமான நிகழ்ச்சிகளின் வீடியோக்கள் அடங்கியுள்ளன, உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்களை, இந்த நிகழ்ச்சிகள் ஈர்த்து வருகின்றன.

இதற்கு மேலாக, Sun Pictures தயாரிக்கும் திரைப்படங்களின் பாடல்கள், டிரெய்லர்கள் மற்றும் டீசர்களும் இந்த பிரபலமான நெட்வொர்கின் YouTube சேனலில் பிரத்யேகமாக வெளியிடப்படுகின்றன.

Sun TV YouTube சேனலில் பல வீடியோக்கள் பல வாரங்களாக டிரெண்டாகி வந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது! உதாரணமாக, விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படத்தின் ‘அரபிக் குத்து’ பாடலும், ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ பாடலும் இதில் குறிப்பிடத்தக்கவை. இதில் முன்னோடியான ‘அரபிக் குத்து’ பாடல் 700 மில்லியன் பார்வைகளைத் தாண்டியது, ‘காவாலா’ பாடல் 300 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது!

உலகளாவிய அளவில் பெரும் எண்ணிக்கையிலான ரசிகர்களைக் கொண்டுள்ள Sun TV YouTube சேனல், தினமும் கோடிக்கணக்கான பார்வைகளைப் பெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய ஃபாலோயர்ஸை இணைத்துக் கொண்டு, ஏற்கனவே இணைந்திருக்கும் ரசிகர்களின் நம்பிக்கையையும் நிலைநிறுத்தி வருகின்றது.

Sun TV YouTube சேனலின் இணைப்பு – https://www.youtube.com/@suntv