Profit After Taxincreases to Rs. 14.67 Crores in FY2025 from Rs. 10.85 Crores in FY2024 (35.21 % growth)
Revenue increases to Rs 1504.5 Crores in FY 2025 from Rs 1085.7 Crores in FY 2024 (38.57 % growth)
Revenue from HR Services and HR Platforms increased 37.71 % YoY and 61.69% YoY, respectively
Chennai, May 27, 2025: CIEL HR Services, India’s only company offering a complete suite of tech-driven HR solutions, covering the entire employee lifecycle, reported its audited financial results for FY25. The company’s approach of providing a bouquet of HR solutions has helped it deliver significantly higher growth rates than the industry average.
CIEL HR Services continues to maintain a robust financial performance for the year ended on 31 March 2025 (FY25). The company’s revenue from operations rose to Rs. 1504.5 Crores for FY25, as against Rs. 1085.7 Crores in FY24. The company’s profit after tax stood at Rs. 14.67 Crores for FY25, showcasing an impressive growth of 35+% YoY vis-a-vis Rs. 10.85 Crores in the previous financial year.
The growth in revenue from the HR Services business segment increased by 37.71 % YoY, while revenue from HR Platforms also increased by 61.69 % YoY.
The company has continued its inorganic growth through the financial year 2024-25. In line with its track record of successful integrations, the company acquired two businesses in FY25 to strengthen its HR-tech platform capabilities as well as to expand its portfolio of solutions. The Group has integrated these entities with the overall organisation and is actively working to leverage its inherent synergies to foster growth across individual business units.
The company continues to run its asset-light business model and has expanded its operations along the length and breadth of the country, taking its geographical presence to 85 offices across 38 locations.
HR Tech Platforms:
During the year, we are building AI Agentic platforms that harness cutting-edge Deep Tech including autonomous AI agents, Machine Learning, Large Language Models (LLMs), Computer Vision, Generative AI, and Blockchain. These platforms orchestrate intelligent workflows, enable hyper-personalised experiences, scale automation, and unlock real-time workforce intelligence.
By embedding these technologies into every component of the HR value chain — from background verification, recruitment and onboarding to learning, compliance, payroll, and employee engagement — we empower our clients to achieve greater efficiency, agility, and stakeholder satisfaction.
Our sustained R&D investments ensure we stay ahead of industry shifts, continually building agile, self-learning HR solutions that are shaping the future of work and accelerating human capital development in the organised sector.
Financial Highlights:
Commenting on the Annual report, Mr K Pandiarajan, Chairperson and Executive Director of CIEL HR Group, said, “From our roots in 1992 to this moment of high performance, we have always been guided by our belief in human potential and the power of reinvention. CIEL’s results represent the strength of our collective spirit. ‘Soaring High TOGETHER’ reflects the way we rise with each other, for each other and as one united CIEL HR Group. Together, we’re shaping the future of work with agility, innovation, and determination to deliver the best to our stakeholders.”
Adding to this, Mr Aditya Narayan Mishra, MD & CEO of CIEL HR, said, “At CIEL, we thrive at the intersection of transformation of businesses, talent, and technology. Our growth in FY25 is a testament to the synergy between our teams, partners, and clients. With our unique blend of tech-enabled services and deep industry insight, we are committed to helping organisations build future-ready workforces while delivering value at every step.”
Mr. Doraiswamy Rajiv Krishnan, Executive Director of CIEL HR says “The CIEL HR model is based on a realistic integration of services and platforms in a way that mirrors and addresses real needs of clients to smoothen last mile wrinkles and deliver value.”
About CIEL HR
CIEL HR is India’s only company offering a complete suite of tech-driven HR solutions, covering the entire employee lifecycle. With 85 offices across 38 locations and more than 1360 employees, CIEL has served 5000+ companies as of March 2025.
Our HR Services
Exec Search, Selection, RPO, Value Staffing, NAPS & NATS by CIEL HR, Aargee Staffing
Professional IT & Engineering Staffing by CIEL Technologies
HR Advisory by Ma Foi Strategic Consultants, People Metrics
HR Managed Services (payroll/compliance) by Ma Foi Strategic Consultants
Skilling by CIEL Skills & Careers
Background Verification by Vibrant Screen
Our HR Tech Platforms
Talent Assessment & Development by Jombay, Thomas Assessments
Talent Engagement by Jombay
HRMS by HfactoR
Learning Solutions by Courseplay
Statutory Compliance by eZYCOMP
Fresher Upskilling by ProSculpt
Automated Background Verification by Vibrant Screen
விக்ராந்த் – சோனியா அகர்வால் கூட்டணியில் உருவான ‘ வில் ‘பட டீஸர் வெளியீடு
தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திரங்களான விக்ராந்த்- சோனியா அகர்வால் முக்கியமான வேடங்களில் நடித்திருக்கும் ‘வில் ‘எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரான அருண் விஜய் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் எஸ். சிவராமன் இயக்கத்தின் உருவாகியுள்ள ‘வில்’ திரைப்படத்தில் விக்ராந்த், சோனியா அகர்வால், அலேக்யா, பதம் வேணு குமார், மோகன் ராமன் , ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். டி. எஸ். பிரசன்னா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நடிகை சோனியா அகர்வாலின் சகோதரரான சௌரப் அகர்வால் இசையமைத்திருக்கிறார். நீதிமன்ற பின்னணியில் நடைபெறும் இந்த திரைப்படத்தை ஃபுட் ஸ்டெப்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மற்றும் கோத்தாரி மெட்ராஸ் இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஒரு பாடல் ஆகியவை வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்.. இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
டீஸர் குறித்து இயக்குநர் பேசுகையில், ” வில் படத்தின் டீஸரில் ஒரு கதாபாத்திரம் சனாதனம் வேண்டுமா? திராவிடம் வேண்டுமா? இந்த இரண்டும் வேண்டுமா? வேண்டாமா? என்பது தொடர்பாக விமர்சிக்கும் வகையில் உரையாடல் ஒன்று இடம் பிடித்திருக்கிறது. இதற்கு தணிக்கை குழுவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் சர்ச்சையை ஏற்படுத்தும் அந்த இரண்டு சொற்களையும் நீக்க வேண்டும் என்றார்கள். இதற்கு உரிய விளக்கம் அளித்த பிறகு, மும்பையில் உள்ள தணிக்கை குழுவினர் ஆய்வு செய்து டீஸரில் இடம் பிடிப்பதற்கு அனுமதி அளித்தனர். மேலும் இந்தத் திரைப்படத்தில் தற்போதைய நீதிமன்றத்தின் நடைமுறைகளை யதார்த்தமாகவும், இயல்பை மீறாமலும் பதிவு செய்திருக்கிறோம். உயர் நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராக பணியாற்றி வருவதால்.. மக்களுக்கு நன்மை செய்வதில் நீதிமன்றத்தின் பங்களிப்பு குறித்த விவரங்களை முழுமையாக விவரித்திருக்கிறேன். நீதி மன்றத்தில் பரபரப்பாக நடைபெறும் வழக்கு குறித்த விவரங்களை விவாதமாகவும், விமர்சனமாகவும் பேச்சுரிமை மற்றும் கருத்துரிமை சுதந்திரத்தின் அடிப்படையில் முன் வைத்திருக்கிறோம். சொத்து வைத்திருப்பவர்கள் உயில் எழுதும் போது ‘வில்’ என்ற நீதிமன்ற மற்றும் சட்டப்பூர்வமான விசயத்தை மேற்கொள்ள வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்தும் விரிவாக விளக்கமளித்திருக்கிறோம். சொத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்கு சட்டத்திற்கு உட்பட்ட முறையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் தெளிவு படுத்தி இருக்கிறோம். ஒரு தலைமுறையினருக்கான சொத்து.. அடுத்த தலைமுறைக்கு எப்படி சட்டபூர்வமாக உரிமையாகிறது என்பது தொடர்பான சட்ட நுணுக்கங்களையும் இடம்பெறச் செய்திருக்கிறோம். ஒருவர் தன்னுடைய சொத்தை.. தன் விருப்பத்திற்குரிய ஒருவருடைய பெயருக்கு எழுதி வைக்கிறார் என்றால்… அது அவருக்கு சட்டபூர்வமாக எப்படி சென்று சேரும் என்பது குறித்த குழப்பத்தை நீக்கும் வகையில் இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதனை நேரடியாக விவரிக்காமல் .. ஒரு குடும்பத்திற்குள் நிகழும் உணர்வு பூர்வமான சம்பவங்கள் மூலம் கமர்சியல் அம்சங்கள் கலந்து அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையில் உருவாக்கி இருக்கிறோம். இதில் நீதியரசர், சொத்து தொடர்பான சிக்கல்களுக்கு புலன்விசாரணை மேற்கொள்ளும் விசயம் ரசிகர்களுக்கு புதுவித திரை அனுபவத்தை வழங்கும். மேலும் இந்த டீஸர்- படத்தின் கதை அம்சத்தை முழுவதுமாக பிரதிபலிக்கிறது.” என்றார்.
இப்படத்தின் டீசர் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் இணையவாசிகளின் கவனத்தைக் கவர்ந்து பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் அபய் சிங் மற்றும் வேலவன் செந்தில்குமார் வெற்றி பெற்றனர்
பெண்கள் இரட்டையர் பிரிவில் அபய் சிங் மற்றும் ஜோஷ்னா சின்னப்பா வெற்றி பெற்றனர்
கலப்பு இரட்டையர் பிரிவில் அபய் சிங் மற்றும் அபய் சிங் வெற்றி பெற்றனர்
வெற்றியாளர்களுக்கு ₹3,30,000 பரிசுத் தொகை வழங்கப்பட்டது சென்னை, மே 23, 2025: உலகளாவிய முன்னணி நிறுவனமான HCL குழுமம், இந்திய ஸ்குவாஷ் ராக்கெட்ஸ் கூட்டமைப்பு (SRFI) உடன் இணைந்து, சென்னையில் உள்ள இந்திய ஸ்குவாஷ் அகாடமியில் HCL ஸ்குவாஷ் இரட்டையர் தேசிய சாம்பியன்ஷிப்பின் இரண்டாவது பதிப்பை வெற்றிகரமாக முடித்தது. இந்தப் போட்டி மே 20 முதல் மே 23, 2025 வரை நடைபெற்றது. இந்த சாம்பியன்ஷிப் ஜூன் மாத இறுதியில் மலேசியாவில் நடைபெறும் 2வது ஆசிய இரட்டையர் சாம்பியன்ஷிப்பிற்கான தேசிய தேர்வு நிகழ்வாகவும் இருந்தது.
2024 தொடக்கப் பதிப்பில் கட்டமைக்கப்பட்ட வலுவான உத்வேகத்தைத் தொடர்ந்து, சாம்பியன்ஷிப் விரைவில் இந்தியாவின் ஸ்குவாஷ் நாட்காட்டியில் ஒரு வழக்கமான அம்சமாக மாறியுள்ளது. இரட்டையர் வடிவத்தை ஊக்குவிப்பதும், நாடு முழுவதும் விளையாட்டில் பரந்த பங்கேற்பை ஊக்குவிப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. நான்கு நாள் போட்டி ஜோஷ்னா சின்னப்பா, அனஹத் சிங், அபய் சிங் மற்றும் வேலவன் செந்தில்குமார் உள்ளிட்ட இந்தியாவின் சிறந்த ஸ்குவாஷ் வீரர்களை ஒன்றிணைத்தது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் அபய் சிங் மற்றும் வேலவன் செந்தில்குமார் 11-5, 11-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றனர். பெண்கள் இரட்டையர் பிரிவில் அபய் சிங் மற்றும் ஜோஷ்னா சின்னப்பா 11-4, 11-9 என்ற கணக்கில் வெற்றி பெற்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் அபய் சிங் மற்றும் அபய் சிங் 11-9, 5-11, 11-9 என்ற கணக்கில் வெற்றி பெற்றனர். வெற்றியாளர்களை தலைமை விருந்தினரான பத்மஸ்ரீ, புகழ்பெற்ற பீல்ட் ஹாக்கி வீரரும் முன்னாள் இந்திய பயிற்சியாளருமான திரு. வி. பாஸ்கரன் பாராட்டினார். HCL இன் இணை துணைத் தலைவர் மற்றும் பிராண்ட் தலைவர் ரஜத் சந்தோலியா மற்றும் SRFI இன் பொதுச் செயலாளர் சைரஸ் போஞ்சா ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவு விழாவில் அனைத்து வெற்றியாளர்களுக்கும் அவர்களின் கோப்பைகள் மற்றும் மொத்த பரிசுத் தொகையான ₹3.3 லட்சத்தில் ஒரு பங்கு வழங்கப்பட்டது.
“எச்.சி.எல் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்குவாஷ் விளையாட்டை ஆதரித்து வருகிறது, மேலும் இந்திய வீரர்கள் உலகளவில் ஒரு முத்திரையைப் பதிப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த ஆண்டு ஆசிய இரட்டையர் சாம்பியன்ஷிப்பில் கலப்பு மற்றும் ஆண்கள் இரட்டையர் இரண்டிலும் எங்கள் விளையாட்டு வீரர்கள் தங்கத்தை வீட்டிற்கு கொண்டு வந்தனர், மேலும் இந்த போட்டியின் போது நாங்கள் கண்ட ஆற்றல் நாங்கள் இப்போதுதான் தொடங்குகிறோம் என்பதைக் காட்டுகிறது. எச்.சி.எல்-ல், திறமையை மேம்படுத்துவது, வாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் இந்திய ஸ்குவாஷை புதிய உயரத்திற்கு உயர்த்துவது எங்கள் குறிக்கோள்.”
இந்திய ஸ்குவாஷ் ராக்கெட்ஸ் கூட்டமைப்பின் (SRFI) பொதுச் செயலாளர் திரு. சைரஸ் போஞ்சா கூறுகையில், “HCL ஸ்குவாஷ் இரட்டையர் தேசிய சாம்பியன்ஷிப் 2025 இன் முடிவு, சர்வதேச இரட்டையர் வடிவத்தில் இந்தியாவின் போட்டித்தன்மையை வளர்ப்பதில் மற்றொரு முக்கியமான படியைக் குறிக்கிறது. கடந்த சில நாட்களாக நாம் கண்ட செயல்திறன் ஊக்கமளிப்பதாகவும் ஊக்கமளிப்பதாகவும் உள்ளது. இந்தப் போட்டி நமது சிறந்த திறமையாளர்களை அடையாளம் காண உதவுவது மட்டுமல்லாமல், வரவிருக்கும் ஆசிய இரட்டையர் சாம்பியன்ஷிப்பிற்கான அவர்களின் தயார்நிலையையும் கூர்மைப்படுத்துகிறது. HCL உடன் இணைந்து, விளையாட்டு வீரர்கள் உலக அரங்கில் செழிக்க சரியான சூழலையும் வெளிப்பாட்டையும் வழங்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.” சாம்பியன்ஷிப் 2025 ஒரு உயர்ந்த குறிக்கோளுடன் முடிவடைந்தது, இந்த ஆண்டு இறுதியில் கண்ட அரங்கில் இந்திய வீரர்களின் வலுவான செயல்பாட்டிற்கு மேடை அமைத்தது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும், சத்யராஜ் – காளி வெங்கட் கூட்டணியில் உருவாகியுள்ள, ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படம், ஜூன் 6 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது
மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில், சத்யராஜ், காளி வெங்கட் நடிப்பில், மிடில் கிளாஸ் வாழக்கையை பிரதிபலிக்கும், அழகான டிராமாவாக உருவாகியுள்ள ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படம் வரும் ஜூன் 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் லுக் மூலம் ரசிகர்களிடம் பரபரப்பைக் கிளப்பியிருக்கும் இப்படத்தின் திரையரங்கு வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
மிடில் கிளாஸ் வாழ்வியலை, அதன் அழகியலை, ஒரு மாறுபட்ட தளத்தில், அற்புதமாக காட்சிப்படுத்தியிருக்கும் இப்படம், அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ளது.
இப்படத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி ஹரி பிரியன், ஷெல்லி, விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா, மதுமிதா, சாம்ஸ், கீதா கைலாசம், பானுப்பிரியா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
ஆனந்த் ஜி. கே. ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே. சி. பாலசாரங்கன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை சதீஷ்குமார் சமுஸ்கி மேற்கொள்ள, கலை இயக்க பொறுப்புகளை ஜாக்கி ஏற்றிருக்கிறார். இந்த திரைப்படத்தை மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. மொமெண்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் எக்ஸிகியூடிவ் புரொடக்ஷன் பணிகளை மேற்கொடுள்ளது. இந்த திரைப்படத்தை முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்குகிறது.
இப்படம் வரும் ஜூன் 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
‘ ராமாயணா’ படத்தில் ரன்பீர் கபூர் – யாஷ் திரையில் இணைந்து தோன்றும் நேரம் குறைவாக இருக்கும். அது ஏன்? என்பதற்கான காரணம் இதுதான்..
தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ராவின் ஆதரவுடன் தயாராகும் ‘ ராமாயணா ‘ எனும் திரைப்படம் – சமீபத்திய காலங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகும். தொழில் துறையில் சில சிறந்த திறமையாளர்கள் – உலக தரம் வாய்ந்த VFX குழு – நட்சத்திர நடிகர்கள் – பிரம்மாண்டமான மற்றும் அதிவேகமாக உருவாக்கப்படும் அரங்கங்கள் – என ‘ ராமாயணா ‘ இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு திரைமொழியாகவும் மற்றும் உணர்வு பூர்வமான படைப்பாகவும், உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் இரண்டு சூப்பர் ஸ்டார்களான ரன்பீர் கபூர் ராமராகவும், யாஷ் ராவணனாகவும் நடித்திருந்தாலும்… அவர்கள் ஒன்றாக திரையில் தோன்றும் நேரம் குறைவு என சொல்லப்படுகிறது.
”இப்படத்தின் தயாரிப்பாளர்கள் – பெரும்பாலான காவியங்களில் ராமரும், ராவணனும் ஒருவரை ஒருவர் சந்திப்பதில்லை என்ற அசலான வால்மீகி உரைக்கு உண்மையாக இருப்பது என்பதை தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்களின் உலகங்கள் தனித்தனியாகவே உள்ளன. உச்சக்கட்ட போரில் விதி அவர்களை நேருக்கு நேர் கொண்டு வரும் வரை அவர்களின் கதைகள் இணையாகவே விரிவடைகின்றன. அசல் கதையின் படி, சீதை கடத்தப்பட்ட பின்னரே ராமர்- ராவணனின் இருப்பை பற்றி அறிந்து கொள்கிறார். மேலும் இலங்கையில் போர்க்களத்தில் மோதல் ஏற்படும் வரை இருவரும் ஒருபோதும் ஒருவரை ஒருவர் சந்திக்க மாட்டார்கள்.”
ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் கதாபாத்திரங்களை தனித்தனியாக வைத்திருக்க நிதிஷ் திவாரி மற்றும் குழுவினரின் படைப்பு தேர்வு – ராமாயணத்திற்கு ஒரு விருப்பத்திற்குரிய கதை ஆழத்தை உருவாக்குகிறது. அவர்களின் தனித்தனியான பயணங்களை ஒன்று தர்மத்தையும், நல்லொழுக்கத்தையும் உள்ளடக்கியதாகவும்…. மற்றொன்று ஈகோ மற்றும் சக்தியால் இயக்கப்படுவதாகவும் … பட்டியலிடுவதன் மூலம் இந்த திரைப்படம் – அவர்களின் இறுதி மோதலுக்கான உற்சாகத்தை அதிகரிக்கிறது. இந்த தாமதமான மோதல் அவர்களின் கதாபாத்திரத்தை சுயாதீனமாக உருவாக்க அனுமதிக்கிறது. இதனால் அவர்களின் இறுதி மோதலை இன்னும் சக்தி வாய்ந்ததாக மாற்றுகிறது. ராவணனான யாஷ், சீதாவாக நடிக்கும் சாய் பல்லவி மற்றும் அனுமனாக நடிக்கும் சன்னி தியோலுடன் திரை நேரத்தை பகிர்ந்து கொள்ளும் அதே தருணத்தில்.. ரன்பீர் கபூர் உடனான காட்சிகள் நிச்சயமற்றதாகவே உள்ளன. ரன்பீர் கபூர் தற்போது சஞ்சய் லீலா பன்சாலியின் லவ் & வார் படத்தில் விக்கி கௌசல் மற்றும் ஆலியா பட் ஆகியோருடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் அந்த படத்திற்காக அவர் பராமரிக்கும் குறிப்பிட்ட தோற்றம் அவரது பங்களிப்பு தருணங்கள் கிடைப்பதை கட்டுப்படுத்துகிறது. இதன் காரணமாக தயாரிப்பு, தாமதங்கள், திட்டமிடல் ஆகியவற்றை மேலும் சிக்கலாக்கியுள்ளன. இதனால் இந்தக் கட்டத்தில் ராமாயணத்திற்காக அவர் தனது தோற்றங்களை மாற்றிக் கொள்வது என்பது சாத்தியமற்றது.
படத்தின் தயாரிப்பு பணிகள்- தற்போது நகரத்தில் உள்ள பிரம்மாண்டமான அரங்க வடிவமைப்புப் பணிகளாக நடந்து வருகிறது. இந்தத் திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாரிக்கப்படுகிறது. முதல் பாகம் 2026 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையிலும், இரண்டாவது பாகம் 2027 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையிலும் வெளியாகிறது. ரன்பீர் கபூர் ஏற்கனவே தனது பகுதிகளை நிறைவு செய்து விட்ட நிலையில்… மே மாத தொடக்கத்தில் உஜ்ஜயினியில் உள்ள மகாமல் ஆலயத்திற்கு சென்ற பிறகு, யாஷ் தனது பகுதிகளில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
முன்னணி கதாபாத்திரங்களுக்கு இடையில் பகிரப்பட்ட திரை நேரத்தை குறைப்பதற்கான தேர்வு.. நவீன சினிமா திரை மொழியை காட்சியாக வடிவமைக்கும் போது, அசல் காவியத்தின் சாரம்சத்தை மதிக்கும் தயாரிப்பாளர்களின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. நட்சத்திரங்கள் நிறைந்த படங்கள் – பெரும்பாலும் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்க , பெரிய பெயர்களுக்கு இடையிலான தொடர்புகளை கட்டாயப்படுத்தும் ஒரு காலத்தில் …இராமாயணம் என்பது மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட கதை சார்ந்த பாதையை பிரதிபலிக்கிறது. இது நம்பகத் தன்மைக்கு முன்னுரிமை அளிக்கிறது மற்றும் புராணக் கதையை ஆழமாக மறுபரிசீலனை செய்வதை உறுதி அளிக்கிறது.
ராமாயணம் சந்தேகத்திற்கு இடமின்றி அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் மிகப்பெரிய படங்களில் ஒன்றாகும். நமித் மல்ஹோத்ரா தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி ,யாஷ் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் பிரம்மாண்டம்- மெகா ஸ்டார் நடிகர்களுடன் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் தெய்வீக புராண இதிகாசத்தை அற்புதமான முறையில் வழங்குவதற்கும், இதற்கு முன் எப்போதும் இல்லாத ஒரு சினிமா அதிசயத்தை உருவாக்குவதற்கும், இந்தப் படம் உறுதியளிக்கிறது.
ஸ்வஸ்திக் விசன்ஸ் தயாரிப்பில், கதை நாயகனாக அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் (KJR) நடிக்க, இயக்குனர் பா.இரஞ்சித்திடம் துணை இயக்குனராக பணிபுரிந்த JP.தென்பாதியான் இயக்கத்தில் உருவாகும் ‘ அங்கீகாரம் ‘ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.
பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில், தடகள விளையாட்டை மையமாக கொண்டு உருவாகி வரும் இத்திரைப்படம், விளையாட்டு வீரர்களின் இன்னல்களையும், விளையாட்டுத்துறையின் அவலங்களையும் முன்னிறுத்துகிறது. இந்த திரைப்படத்தில் அறம், க/பெ ரணசிங்கம், டாக்டர், அயலான் போன்ற கதையம்சம் உள்ள திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் K.J.R கதையின் நாயகனாக அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது. அவருடன் இணைந்து சிந்தூரி விஸ்வநாத் , விஜி வெங்கடேஷ், ஆண்டனி, ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், மோகன்ராம் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைக்கும் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவு A.விஸ்வநாத், சண்டை காட்சி பீட்டர் ஹெயின், படத்தொகுப்பு ஷான் லோகேஷ், கலை இயக்கம் ராமு தங்கராஜ், ஒலி வடிவமைப்பு சம்பத் ஆழ்வார், நடனம் ஷெரீப், போன்ற முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்போடு உருவாகிவரும் அங்கீகாரம் திரைப்படத்தை ஸ்வஸ்திக் விஷன்ஸ் நிறுவனம் சார்பில் பிரசாந்த் – அஜித்பாஸ்கர் – அருண்முருகன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
அங்கீகாரம் திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திரைப்படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனப்படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Global Star Ram Charan is all set to ignite the big screen with his upcoming pan-India spectacle, PEDDI, a film that’s already stirring excitement across the country, with phenomenal response for the First Shot Glimpse. Helmed by National Award-winning director Buchi Babu Sana, this ambitious project marks a colossal collaboration between top creative forces and is shaping up to be a landmark moment in Indian cinema. Presented by the leading production houses Mythri Movie Makers and Sukumar Writings, and produced on a massive scale by Venkata Satish Kilaru under his banner Vriddhi Cinemas, PEDDI begins its lengthy and crucial schedule in a gigantic village set in Hyderabad.
PEDDI delves into a raw, earthy aesthetic, and the production team has gone to great lengths to ensure an immersive cinematic experience. Production Designer Avinash Kolla, along with his team, erected a massive village set, where the makers will be canning a pulse-pounding stunt sequence, and also some talkie portion.
With 30% of the shoot already completed, this new schedule will cover a significant portion of the film.
After the success of Uppena, Buchi Babu Sana returns with renewed ambition, overseeing every detail with precision. With a massive budget, the film is being mounted on an epic scale.
Ram Charan has undergone a stunning transformation for the role, sporting a rugged, rural look with long hair, a thick beard, and a nose ring. Janhvi Kapoor is the leading lady, while Shiva Rajkumar, Jagapathi Babu, and Divyendu Sharma are the other prominent cast.
R Rathnavelu is in charge of the cinematography, while the Academy Award-winning composer AR Rahman scores the music. The editing is by National Award-winning technician Navin Nooli, while the production design is by Avinash Kolla.
The movie is scheduled for release on March 27, 2026, on Ram Charan’s birthday.
Cast: Global Star Ram Charan, Janhvi Kapoor, Shiva Rajkumar, Jagapathi Babu, Divyendu Sharma
Technical Crew: Writer, Director: Buchi Babu Sana Presents: Mythri Movie Makers, Sukumar Writings Banner: Vriddhi Cinemas Producer: Venkata Satish Kilaru Music Director: AR Rahman DOP: R Rathnavelu Production Design: Avinash Kolla Editor: Navin Nooli Production Design: Avinash Kolla Executive Producer: V. Y. Praveen Kumar Marketing: First Show
விஜய் சேதுபதி தன்னுடைய பழைய அடையாளங்களை மறைத்து மக்களோடு மக்களாக புதிய வாழ்க்கை வாழ்வதற்காக மலேசியா செல்கிறார்.யோகி பாபு மூலம் திவ்யா பிள்ளை உணவகத்தில் வேலைக்கு சேருகிறார். ருக்மணி வசந்துடன் விஜய் சேதுபதியுடன் நட்பு ஏற்பட, நாளடைவில் காதலாக மாறுகிறது.இதற்கிடையே ருக்மணி வசந்தக்கு விட்டை உடனடியாக மீட்க பணம் தேவை ஏற்படுகிறது. வீட்டை மீட்க பணம் தேவை என்பதால் கடன் வாங்க சென்ற இடத்தில் சூதாடி, ஒரு கோடி ரூபாய்க்கு விஜய் சேதுபதி கடனாளியாகி விடுகிறார். கடன் பட்ட ஒரு கோடி ரூபாயை திரும்ப செலுத்தவில்லை என்றால் உயிர் போய்விடும் என்ற சூழ்நிலையில், வங்கியில் கொள்ளையடிக்க விஜய் சேதுபதி திட்டம் போடுகிறார்.
போடப்பட்ட திட்டத்தில் வெற்றி பெற்றாரா? வெற்றி பெறவில்லையா? என்பதுதான் கதை.
விஜய் சேதுபதி போல்ட் கண்ணன் என்ற கதாபாத்திரத்தை வழக்கம் போல் நடிப்பின் மூலம் ரசிகர்கள் ரசிக்கும்படி அசத்தியிருக்கிறார்.
கதாநாயகியாக ருக்மணி வசந்த், அழகு மற்றும் நடிப்பு இரண்டிலும் ஸ்கோர் செய்து அசத்துகிறார்.
யோகி பாபுவின் காமெடி காட்சிகள் சிரிப்புக்கு உத்தரவாதம்…..???????????????
திவ்யா பிள்ளை, மற்றும் வில்லன்களாக நடித்திருக்கும் பப்லு பிரித்விராஜ், பி.எஸ்.அவினாஷ், ராஜ்குமார் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக அமைந்திருக்கிறார்கள்.
இதுவரை வந்த திரைப்படங்களில் காட்டப்படாத மலேசியாவில் உள்ள லொக்கேஷன்களை தேடிப்பிடித்து காட்சிப்படுத்தி காட்சிகளை கலர்புல்லாகவும், கமர்ஷியலாகவும் திரைப்படமாக்கியிருக்கிறார்.
இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகர்…………………..??????????????????
இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்-ன் பின்னணி இசை ……………????????????
வங்கி கொள்ளை கதைகள் பல நாம் பார்த்திருந்தாலும், அவற்றில் இருந்து எந்தவிதத்திலும் இந்த படம் ??????????????????????????
டி ஆர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜின் -தி பெட் திரைப்படத்தில் முகேன் ராவ், பவ்யா தரிகா, டத்தோ ராதா ரவி, பால சரவணன், இமான் அண்ணாச்சி, நந்து ஆனந்த், வடிவுக்கரசி, ‘நிழல்கள்’ ரவி, வினோதினி வைத்தியநாதன், ஜார்ஜ் விஜய் , ரித்விக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விவேக்- மெர்வின் இசையமைத்திருக்கிறார்கள். படத்தொகுப்பு பணிகளை தீபக் கவனிக்க கலை இயக்கத்தை வி. எஸ். தினேஷ்குமார் மேற்கொண்டிருக்கிறார். காமெடி ஹாரர் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இப்படத்தை டி ஆர் பாலா மற்றும் அனில் குமார் ரெட்டி தயாரிப்பில் வெங்கடாச்சலம் இணைத் தயாரிப்பில் ஃபேரி டேல் பிக்சர்ஸ், ஏ ஆர் டூரிங் டாக்கீஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் விஜிவி கிரியேஷன்ஸ் மற்றும் சினிமாரஸா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து வழங்குகின்றன.
வரும் 30ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘ ஜின் -தி பெட்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழாவில் படக்குழுவினருடன் நீதியரசர் எஸ் கே கிருஷ்ணன், ஓய்வு பெற்ற காவல் துறை உயரதிகாரி பன்னீர்செல்வம் ஐபிஎஸ், ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு, தயாரிப்பாளர் கேயார், ஃபெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, இயக்குநர் சங்க தலைவர் ஆர். வி. உதயகுமார் , செயலாளர் பேரரசு , துணைத் தலைவர் ஆர் . அரவிந்தராஜ், கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். வருகை தந்த அனைவரையும் தமிழ்நாடு திரைப்பட கல்லூரியின் முதல்வரும் இயக்குநருமான திருமலை வேந்தன் வரவேற்றார்.
ஃபெப்சி தலைவர் ஆர். கே. செல்வமணி பேசுகையில், ”இப்படத்தின் இயக்குநரின் தந்தையான திருமலை வேந்தன் திரைப்படக் கல்லூரியில் எனக்கு ஜூனியர். அவருடன் எனக்கு 40 ஆண்டுகால நட்பு இருக்கிறது. அவருடைய வரவேற்புரையும் , வாழ்த்துரையும் சுருக்கமாகவும் , சிறப்பாகவும் இருந்தன.
இயக்குநரின் தாயாரான ராஜேஸ்வரி அம்மாவை பார்த்தால் பலருக்கு பயம். உண்மையில் அவர்தான் புரட்சிகரமான போராளி. அவருடன் பழகத்தொடங்கினால் ஒன்று எதிரியாகி விடுவார்கள், இல்லையென்றால் நட்பாகி விடுவார்கள். ஆனால் அவர் ஒருபோதும் யாருக்கும் துரோகியானதில்லை.
இப்படத்தின் பாடல்களையும் முன்னோட்டத்தையும் பார்த்தபோது தமிழ் திரையுலகுக்கு அற்புதமான திறமை மிக்க குழு கிடைத்திருப்பதாகவே நினைக்கிறேன்.
நாங்கள் எல்லாம் நாயகியை தேர்வு செய்யும்போது அந்தப் பெண்ணின் புன்னகையையும், கண்களையும் மட்டும் தான் கவனிப்போம். அந்த வகையில் இந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் பவ்யாவிடம் அழகான புன்னகை இருக்கிறது. பார்ப்பதற்கு சமந்தா போல் இருக்கிறார். அவருக்கு தென்னிந்திய திரைப்படத்துறையில் சிறந்த எதிர்காலம் இருக்கிறது.
வளர்ந்த நட்சத்திரங்களுக்கு ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறேன். இயக்குநரிடமும், எழுத்தாளர்களிடமும் நீங்களே நேரடியாக கதையை கேளுங்கள். நடிகர்களின் மேலாளர்களும், உதவியாளர்களும் கதை கேட்க தொடங்கியதால் தான் சினிமா சீரழிகிறது.
இதனால் திரைத்துறையில் ஆரோக்கியமான நட்பு ஏற்படுவதில்லை. எப்போது ஒரு நாயகனுக்கும்.. நாயகிக்கும் இயக்குநருக்கும் இடையே ஒரு புரிதலும், நட்பும் இல்லையோ, அப்போதே அந்தப் படம் தோல்வியை தழுவுகிறது. இதை என் படத்தினை ஆய்வு செய்து தெரிந்து கொண்டிருக்கிறேன்.
தயாரிப்பாளர் கேயார் ஒரு ஜீனியஸ். அவர் நினைத்தால் தற்போது திரைத்துறையில் நடைபெற்று வரும் பிரச்சனைக்கு தீர்வை சொல்ல முடியும். அவர் மீது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது.
இன்றைய தேதியில் ஒரு நாளைக்கு திரையரங்குகளில் ஏழு முதல் எட்டு லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகின்றன. இதன் மூலம் திரையரங்க உரிமையாளர்களுக்கு நாளொன்றுக்கு இரண்டு கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. ஒரு மாதத்திற்கு அறுபது கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இவை அனைத்தும் படத்தின் தயாரிப்பாளர்கள் மூலம் தான் அவர்களுக்கு கிடைக்கிறது. ஆனால் இந்த வருமானம் தயாரிப்பாளர்களுக்கு கிடைக்கிறதா என்றால் இல்லை. படம் ஓடவில்லை என்றால் தயாரிப்பாளருக்கு மட்டும்தான் நஷ்டம் ஏற்படுகிறது.
என்னுடைய தயாரிப்பாளர் நண்பர் ஒருத்தர் ‘மத கஜ ராஜா’ படம் வெளியாகி ஐந்து மாதங்கள் ஆகிவிட்டான, இன்னும் அதற்கான வசூல் முழுமையாக வந்து சேரவில்லை என குறிப்பிட்டார். இதுதான் தயாரிப்பாளர்களின் இன்றைய நிலை. அதனால் தயாரிப்பாளர்கள் சங்கம் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி நல்லதொரு முடிவை அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
திரையுலகம் நன்றாக இருக்க வேண்டும். திரையுலகத்தில் தொழிலாளர்கள் தான் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நீடிப்பதில்லை. சில தயாரிப்பாளர்கள் மட்டுமே 30 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் வெற்றிகரமாக செயல்படுகிறார்கள்.
எங்களுடைய பெப்சி பொதுக்குழுவில் தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால்தான் தொழிலாளர்களாகிய நாம் நன்றாக இருக்க முடியும் என்று சொல்லி இருக்கிறேன். தற்போதுள்ள தயாரிப்பாளர்களில் 80 சதவீதத்தினர் தொழிலாளர்களை சிறப்பான மரியாதையுடன் நடத்துகிறார்கள். அதனால் அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நாங்களும் பிரார்த்திக்கிறோம்.
தயாரிப்பாளர் கேயார் ஒரு ஃபார்முலாவை வைத்திருக்கிறார். அதனைப் பயன்படுத்தி தற்போது நிலவும் பிரச்சனைகளுக்கு அவர் தீர்வு காண வேண்டும். நாங்கள் தவறு
செய்திருந்தாலும் அதனை அவர் சுட்டிக் காட்டலாம். நாங்கள் திருத்திக் கொள்ள தயாராக இருக்கிறோம்.
படத்தின் இயக்குநர் பாலா எதிர்காலத்தில் சிறந்த இயக்குநராக வருவார்.
பெற்றெடுத்த குழந்தையை கையில் ஏந்திக் கொள்ளும் போது கிடைக்கும் உணர்வை போல் இசை இருக்க வேண்டும். அப்படித்தான் கதையும் இருக்க வேண்டும். இப்போதுள்ள ஹீரோக்களுக்கு கதையை சொல்ல வேண்டும் என்றால் மெயிலில் அனுப்புங்கள் என்கிறார்கள். இது குழந்தையை மெயிலில் அனுப்புவது போல் இருக்கிறது. கதையை இயக்குநர் விவரிக்கும் போது தான் எதிரில் இருப்பவர்கள் கதையில் எந்த தருணத்தை ரசிக்கிறார், எதனை ரசிக்கவில்லை என்பதை இயக்குநரால் தெரிந்து கொள்ள முடியும். கதையை மெயிலில் அனுப்ப சொன்னால் அது கடினமானது. முதலில் கதையை ஆங்கிலத்தில் எப்படி மொழியாக்கம் செய்வது என்று யோசிக்க வேண்டும்.
இதுவரை பேய் படம் என்றால் ஒரு பயம் இருந்தது. ஆனால் அந்த பேயை ஒரு செல்லப்பிராணியாக மாற்றி அதனை வளர்க்கலாம் என்று இந்த படம் சொல்கிறது. அதனால் இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும்,” என்றார்.
ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு பேசுகையில், ”என்னுடைய பெற்றோர்கள் முதலில் சென்னையில் தான் வணிகம் செய்தார்கள். அதில் நஷ்டம் ஏற்பட்டதும் சொந்த ஊருக்கு திரும்பி விட்டார்கள். நான் முதன் முதலாக 19 வயதில் சென்னைக்கு வந்தபோது, எனக்கு அறையை கொடுத்து, உணவளித்து, தினசரி ஊதியமும் கொடுத்து, அவருடைய இயக்கத்தில் வேலை செய்வதற்கான வாய்ப்பு கொடுத்து ஆதரித்தவர் டி ஆர் பாலா. என் பின்னணி தெரியாமல் என்னிடம் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்று கண்டுபிடித்தவர் டி ஆர் பாலா. இவர் திறமையான இயக்குநர். இவர் இதற்கு முன் ‘தேர்ட்டீன்’ என்ற குறும்படத்தை இயக்கியிருக்கிறார். இவருடைய வாழ்வியலை மையப்படுத்தி ‘சென்னை பிரம்மாக்கள்’ என்ற ஒரு குறும்படத்தை நான் இயக்கினேன். இதன் பிறகு எங்களுடைய நட்பு இன்று வரை தொடர்கிறது. அதன் பிறகு தவிர்க்க முடியாத காரணத்தினால் ஆன்மீகத்தின் பக்கம் என்னுடைய கவனம் திரும்பியது.
படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். எனது நண்பர் டி ஆர் பாலா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஜின் -தி பெட்’ திரைப்படத்திற்கு உங்களது ஆதரவை வழங்குமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
இயக்குநர் ஆர். அரவிந்தராஜ் பேசுகையில், ”16 குட்டி சாத்தான்களுக்கு தலைவர் ஒரு பூதம். 16 பூதத்திற்கு தலைவர் ஒரு பேய். 16 பேய்களுக்கு தலைவர் ஒரு ஜின். என நான் வாசித்திருக்கிறேன். இந்த ‘ஜின்’ திரைப்படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போது, எனக்கு ‘பட்டணத்தில் பூதம்’ திரைப்படம் நினைவுக்கு வந்தது. எனவே இந்தத் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெறும்.
பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ள திரைப்படங்கள் வந்து நாளாகி விட்டது. அதுவும் குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு அம்சங்களுடன் ஒரு திரைப்படம் வருகிறது என்றால் அது வரவேற்கக் கூடியது. இன்றைக்கு குழந்தைகள் பேய் படங்களை பார்த்து பேயை ரசிக்கிறார்கள்.
இந்தத் திரைப்படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
தயாரிப்பாளர் கேயார் பேசுகையில், ”ஒரு திரைப்படத்திற்கு தலைப்பு முக்கியம். ஒரு தலைப்பு வைத்தால் அந்தத் தலைப்பு அனைத்து தரப்பினரையும் சென்றடைய வேண்டும். தற்போது ஓ டி டியில் அனைத்து மொழியினரும் படத்தை பார்ப்பதால் அவர்களுக்கும் பிடிக்கும் வகையில் படத்தை தலைப்பை வைக்க வேண்டியதிருக்கிறது. இதையெல்லாம் நன்றாக சிந்தித்து, இந்தப் படத்திற்கு இயக்குநர் டி ஆர் பாலா ‘ஜின்’ என்று பெயர் வைத்ததை பாராட்டுகிறேன்.
இப்படத்தின் முன்னோட்டத்தை அண்மையில் பார்த்தேன். பார்த்தவுடன் அதன் தரம் புரிந்தது. ஹீரோ-ஹீரோயின் காம்பினேஷன் சூப்பராக இருந்தது. ஜின் என்பது புது கான்செப்ட். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் ‘ஈ டி’ என்றொரு படம் வந்தது. அதை அடிப்படையாக வைத்து தான் ‘மை டியர் குட்டிச்சாத்தான்’ உருவானது. அந்த வகையில் குழந்தைகளை கவரும் வகையில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ‘ஜின்’.
இப்படத்தின் ஆடியோ உரிமை, டிஜிட்டல் உரிமை என அனைத்தும் விற்பனை செய்யப்பட்டு விட்டது என கேள்விப்பட்டதும் மகிழ்ச்சி அடைந்தேன். அதனால் இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே வெற்றியை பெற்றிருக்கிறது. எந்த அளவிற்கு வெற்றியை பெறுகிறது என்பதை 30ம் தேதி முதல் திரையரங்குகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இந்தப் படத்தின் இயக்குநர் டி ஆர் பாலா லோகேஷ் கனகராஜ், நெல்சன் போல் முன்னணி நட்சத்திர இயக்குநராக வருவார். அந்த அளவிற்கு திறமைசாலியாக இருக்கிறார். அது படத்தின் முன்னோட்டத்திலேயே தெரிந்து விட்டது,” என்றார்.
இணை தயாரிப்பாளர் ராகவேந்திரா பேசுகையில், ” எனக்கு சினிமா மீது ஆசை இருக்கிறது. படத்தை தயாரிக்கலாம் என்று நினைத்தபோது இப்படத்தின் கதை கிடைத்தது. படத்தின் கதை பிடித்து போனதால் இணை தயாரிப்பாளராக இந்த குழுவுடன் இணைந்தேன்.
இந்த திரைப்படத்தின் முன்னோட்டத்தில் இடம் பிடித்திருப்பது ஒரு கதை. ஆனால் படத்தில் மற்றொரு கதையும் உண்டு. அது சிறப்பானதாக இருக்கும். இது என்னுடைய முதல் படம். இவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
இப்படத்தின் மூலம் இயக்குநருக்கு சிறப்பான எதிர்காலம் கிடைக்க வேண்டும், கிடைக்கும் என நம்புகிறேன். இந்த திரைப்படத்தை திரையரங்கத்தில் பத்துக்கு மேற்பட்ட முறை பாருங்கள். பலருக்கு பகிருங்கள், ஆதரவிற்கு நன்றி,” என்றார்
தயாரிப்பாளர் திருமதி ராஜேஸ்வரி வேந்தன் பேசுகையில், ”ஐந்து ஆண்டுகளுக்கு முன் என் மகன் என்னிடம் ‘ஜின்’ என்றொரு தலைப்பை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்ய வேண்டும் என கேட்டார். அதன் பிறகு தயாரிப்பாளர் சங்கத்தில் பேசி ஜின் என்ற தலைப்பை பதிவு செய்தேன். அதன் பிறகு இந்த ஜின் என் குடும்பத்தை சின்னாபின்னமாக்கிவிட்டது. என் மகன் இந்த டைட்டிலையும், கதையையும் வேறொரு நிறுவனத்திற்கு சொல்கிறார், நன்றாக இருக்கிறது என சொன்னார்கள் ஆனால்
மேற்கொண்டு எந்த பணியும் நடைபெறவில்லை. அதன் பிறகு முன்னணி பட தயாரிப்பு நிறுவனம் மற்றும் முன்னணி நட்சத்திர நடிகர் நடிப்பதற்காக இந்த டைட்டிலும் கதையையும் சொன்னார். கதை விவாதம் எல்லாம் நடந்தது. ஆனால் படப்பிடிப்பு நடைபெறவில்லை. இந்த தருணத்தில் இப்படத்தின் டைட்டில் வேறு ஒரு நிறுவனத்திற்கு சொந்தமானது. அதன் பிறகு அந்த டைட்டிலை அந்த நிறுவனத்திடம் கேட்டோம். அவர்கள் தர மறுத்து விட்டார்கள். அதன் பிறகு தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்து ‘ஜின் தி பெட்’ என டைட்டில் வைத்தோம். இதன் பிறகு எங்கள் குடும்பம் தொடர்ந்து உயர்வை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
கடவுள் இருக்கிறார் என்று ஒரு பிரிவினர் சொல்கிறார்கள். கடவுள் இல்லை என்று ஒரு பிரிவினர் சொல்கிறார்கள். ஆனால் ஜின் நிச்சயமாக இருக்கிறது. ‘ஜின்- தி பெட்’ என்று பெயர் வைத்த பிறகுதான் எங்களுக்கு நல்லது நடந்திருக்கிறது. இந்த ஜின்னை மலேசியாவில் வளர்க்கிறார்கள்.. அதன் பின்னணியில் உருவானது தான் இப்படத்தின் கதை,” என்றார்.
நடிகை பவ்யா தரிகா பேசுகையில், ”2022 நவம்பர் 20ம் தேதியன்று நான் என்னுடைய தோழியின் வீட்டில் இருந்தேன். அப்போதுதான் என்னுடைய தோழிகள் ‘ஜின் ‘என்ற ஒரு விஷயத்தை பற்றி சொன்னார்கள். அதைப்பற்றி அப்போது நான் அவ்வளவாக நம்பவில்லை. ஒரு வார்த்தையை சொல்லி அதனை அடிக்கடி சொல் அதனுடைய எனர்ஜி கிடைக்கும் என்றார்கள். அதனையும் நான் சாதாரணமாக எடுத்துக் கொண்டேன். அங்கிருந்து நான் நள்ளிரவு 2.30 மணிக்கு கிளம்பினேன். அதன் பிறகு ஏதோ ஒரு விஷயத்திற்காக தோழியின் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினேன். அந்தத் தருணத்தில் என் முதுகு பின்னாடி இருந்து’ பவ்யா என்ற குரல் ஒலித்தது. அதைக் கேட்டவுடன் பயம் ஏற்பட்டது.
அதன் பிறகு அடுத்த நாள் காலை என்னுடைய சமூக வலைதளத்தை பார்வையிடுகிறேன். அப்போது ஜின்ஷா என்றொரு ஃபாலோயர் நிறைய லைக்குகளை போட்டு கவனத்தைக் கவர்ந்தார். இது எனக்கு மேலும் பயத்தை ஏற்படுத்தியது இதனால் உடனடியாக கோவில், சர்ச், தர்கா, குருத்வாரா ஆகிய இடங்களுக்கு சென்று வந்தேன், மூன்று மாதங்கள் கழித்து இயல்பானேன். அதன் பிறகு என்னிடம் ஒரு ஸ்கிரிப்ட் வருகிறது. அதன் டைட்டில் ‘ஜின்’. எனக்குள் ஆச்சரியம் ஏற்பட்டது.
இயக்குநர் பாலா என்னை சென்னையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் சந்தித்தார். அப்போது ஜின்னை பற்றிய எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை அவரிடம் பகிர்ந்து கொண்டேன். அவருக்கும் ஆச்சரியம் ஏற்பட்டது. அதனால் தானோ என்னவோ இப்படத்தில் நான் நாயகியாக நடித்திருக்கிறேன். ஜின்னுடைய தொடர்பு எனக்கும் இருக்கிறது என நம்புகிறேன்.
இயக்குநர் பாலா மிகவும் அமைதியானவர். பொறுமையானவர். படப்பிடிப்பு தளத்தில் அவர் நட்பாக பழகக் கூடியவர். கலைஞர்களுக்கு நிறைய சுதந்திரம் கொடுப்பார். அது எனக்கு பிடித்திருந்தது. அதனால் படப்பிடிப்பு தளத்தில் மட்டுமல்ல படத்தில் நடிக்கும் போதும் இயல்பாக இருந்தேன். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தில் நல்லதொரு பாசிட்டிவான வைப் இருக்கிறது. ஜின் எனக்கு என் வாழ்க்கையில் ஆசியை வழங்கி இருக்கிறது. இந்தப் படம் ஒரு ஃபேமிலி என்டர்டெய்னர். அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும். மே 30ம் தேதி என்று அனைவரும் திரையரங்கத்திற்கு வாருங்கள் படத்திற்கு ஆதரவு தாருங்கள்,” என்றார்.
இசையமைப்பாளர்கள் விவேக் – மெர்வின் பேசுகையில், ”நீண்ட நாள் கழித்து கமர்ஷியல் என்டர்டெய்னர் திரைப்படத்தில் பணியாற்றி இருக்கிறோம். இப்படத்தின் பாடல்களைப் பற்றியும், பின்னணி இசையை பற்றியும் குறிப்பிட்டு பாராட்டிய அனைவருக்கும் நன்றி. படத்தின் இயக்குநர் டி ஆர் பாலா உடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாததாக இருந்தது. பணியாற்றிய பாடலாசிரியர்களுக்கும் நன்றி. திரைப்படத்தை திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து சந்தோஷமடைய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
‘ஜின் தி பெட்’ ஃபேமிலி என்டர்டெய்னர். படத்திற்கு பின்னணி இசையை அமைக்கும் போது உற்சாகத்துடன் பணியாற்றினோம். இந்தப் படத்தின் மூலம் டி ஆர் பாலா என்ற அருமையான நண்பர் எங்களுக்கு கிடைத்திருக்கிறார். அவருடைய முதல் படம் இது, கடுமையாக உழைத்திருக்கிறார். இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘குட்டி மா…’ என்ற பாடலுக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பிற்கு நன்றி. இந்தப் படத்தின் நாயகனான முகேன்
மல்டி டேலன்டட் பெர்சன். நாங்கள் கேட்டுக் கொண்டதற்காக ஒரு பாடலை பாடியிருக்கிறார். அதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்,” என்றார்.
இயக்குநர்-தயாரிப்பாளர் டி ஆர் பாலா பேசுகையில், ”கடவுளுக்கு நன்றி. சின்ன வயதில் இருந்து எனக்கு நம்பிக்கையை ஊட்டி வளர்த்தவர் என் அம்மா தான். வீட்டிலிருந்து வெளியே சென்று நம்பிக்கையுடன் இந்த உலகத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று சொன்னவர் அவர். அதற்கான அனைத்து விஷயங்களை கற்றுக் கொடுத்தவரும் என் அம்மா தான். இந்த படத்தை தயாரித்திருக்கும் ஃபேரிடேல் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்குவதற்கும் என் அம்மா கொடுத்த ஊக்கம் தான் காரணம். இப்படி ஒரு மேடைக்காக நீண்ட காலமாக காத்திருந்தேன். இன்று கிடைத்திருக்கிறது. இந்த தருணத்தில் என் பெற்றோர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கும், வாழ்த்திய நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.
இந்த படத்தின் இணை தயாரிப்பாளர்களான அனில் குமார் ரெட்டி மற்றும் ரகு அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தின் தயாரிப்பிற்காக முதலீடு செய்த அனைத்து முதலீட்டாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் குழுவுடன் இசையமைப்பாளர்கள் விவேக் – மெர்வின் இணைந்த பிறகு படத்தின் தரம் உயர்ந்தது. அவர்களும் கடுமையாக உழைத்து ஹிட் பாடல்கள் வழங்கி இருக்கிறார்கள். இப்படத்திற்கு அருமையாக பின்னணி இசையும் அமைத்திருக்கிறார்கள். அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், கலை இயக்குநர், கிராபிக்ஸ், ஸ்கிரிப்ட் டாக்டர், சண்டைப் பயிற்சி இயக்குநர், நடன இயக்குநர், பாடலாசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ராதாரவி, முகேன் ராவ், பவ்யா தரிகா, பால சரவணன், வினோதினி, ஜார்ஜ் விஜய், ரித்விக், இமான் அண்ணாச்சி என இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து நட்சத்திர நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் படப்பிடிப்பு தளத்தில் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள்.
நான் விஜய் சார் நடித்த மூன்று படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கிறேன். அந்தத் தருணத்தில் அவர் ‘பொறுமையாக இருக்க கற்றுக்கொள்’ என அறிவுறுத்தி இருக்கிறார். அதனை நான் இன்று வரை உறுதியாக பின்பற்றி வருகிறேன்.
இந்தத் திரைப்படத்தை வாங்கி இருக்கும் விநியோகஸ்தர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் விளம்பர படம் தொடர்பாக மலேசியாவிற்கு சென்றபோது அங்கு என்னுடைய உறவினர் ஒருவர், அவருடைய வீட்டில் ஜின் ஒன்றை செல்லமாக வளர்த்து வந்தார். அவர்கள் தான் இதனை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். இது ஜின், வீடுகளில் நாய், பூனை, பறவை போன்ற செல்லப்பிராணிகளை வளர்ப்பது போல் இதனையும் வளர்க்கலாம். ஆனால் சில நிபந்தனைகள் உண்டு. தண்ணீர் கூடாது. சூரிய ஒளி கூடாது. இரவில் தான் உணவு அளிக்க வேண்டும் என சில நிபந்தனைகளை சொன்ன போது முதலில் ஆச்சரியமடைந்தேன்.
எனக்கு கடவுள் மீது இருக்கும் நம்பிக்கையைப் போல் பேய்கள் மீதும், அமானுஷ்யங்கள் மீதும் நம்பிக்கை உண்டு. ஜின்னை பற்றி அவர்கள் சொல்லும் போது அவர்கள் அதன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை தான் நான் முதலில் பார்த்தேன். இது மலேசியாவில் மட்டுமல்ல இந்தோனேஷியா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் உள்ளதாக சொன்னார்கள். இது தொடர்பாக பிறகு ஆய்வு செய்ய தொடங்கினேன். கூகுளில் ‘டோயோ’ என பதிவிட்டு தேடினால் இதைப்பற்றிய ஏராளமான விஷயங்கள் இடம் பிடித்திருப்பதை காணலாம். இதனை கருவாகக் கொண்டு நான் ஒரு கதையை உருவாக்கினேன்.
இது தொடர்பாக மலேசியாவை சார்ந்த மந்திரவாதி ஒருவரிடம் உரையாடிய போது, ‘ஜின்னை பற்றிய படத்தில் அதனை காமெடியாக காட்சிப்படுத்தாதீர்கள். சீரியஸாக உருவாக்குங்கள்’ என ஆலோசனை சொன்னார். ஆனால் நாங்கள் அதனை காமெடி ஹாரர் திரைப்படமாகத்தான் உருவாக்கியிருக்கிறோம்.
இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலும் ஏராளமான அமானுஷ்ய விசயங்கள் நடைபெற்றன. இப்படத்தில் பங்கேற்ற கலைஞர்களுக்கும் ஜின் தொடர்பான அமானுஷ்ய அனுபவம் கிடைத்ததாக சொன்னார்கள்.
இப்படத்தின் கதையை உருவாக்கிய பிறகு மிகப்பெரிய முன்னணி தயாரிப்பு நிறுவனத்தில் இந்த கதையை சொன்னேன். அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர்களுடைய பரிந்துரையின் பெயரில் முன்னணி நட்சத்திர நடிகர் ஒருவரை சந்தித்து அவரிடமும் கதையை விவரித்தேன். கதையை கேட்டு சிறப்பாக இருப்பதாக பாராட்டினார். அதன் பிறகு பல்வேறு காரணங்களால் இரண்டு ஆண்டுகள் இப்படத்தில் பணிகள் நடைபெறவில்லை. அதன் பிறகு இப்படத்தினை நானே சொந்தமாக தயாரித்து இயக்க தீர்மானித்தேன். இந்தத் திரைப்படம் எதிர்வரும் முப்பதாம் தேதியன்று வெளியாகிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மன அழுத்தத்துடன் இருப்பவர்களுக்கு இந்தத் திரைப்படம் மிகப்பெரிய ஆறுதலையும், மகிழ்ச்சியையும் தரும். இது ஒரு கம்ப்ளீட் ஃபேமிலி எண்டர்டெய்னர். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
நடிகர் முகேன் ராவ் பேசுகையில், ”இங்கு வருகை தந்த அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி. இயக்குநர் டி ஆர் பாலா உடன் ‘ஒற்றைத் தாமரை’ என்ற வீடியோ ஆல்பத்தில் இணைந்து பணியாற்றிருக்கிறேன். என்ன தேவை என்பதில் அவரிடம் ஒரு தெளிவு இருக்கும். இந்த ‘ஜின்’ படத்திலும் அவருக்கு என்ன தேவையோ அதனை நடிகர்களிடமிருந்து பெற்றார். அவர் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் கடுமையாக உழைத்திருக்கிறார். இதற்காகவே அவரை நான் மனதார பாராட்டுகிறேன். இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு அளித்ததற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அவருடன் தொடர்ந்து பயணிக்கவும் விரும்புகிறேன்.
இயக்குநரின் பெற்றோர்களான வேந்தன்-ராஜேஸ்வரி தம்பதிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் அனைத்து கலைஞர்களையும் அக்கறையுடன் கவனித்தனர்.
தொடக்கத்தில் விவேக் மெர்வின் என்பது ஒருவர் என நினைத்துக் கொண்டிருந்தேன். அதன் பிறகு தான் அவர்கள் இருவர் என்று தெரிந்து கொண்டேன். அவர்கள் ஏராளமான ஹிட் பாடல்களை வழங்கி இருக்கிறார்கள். அவர்களுடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.
இயக்குநர் டி ஆர் பாலாவிற்கும், ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவுக்கும் இடையேயான நட்பு எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இவ்விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்ததற்கு அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இந்தத் திரைப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், நடிகர், நடிகைகளுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தில் நான்கு சண்டைக் காட்சிகள் இருக்கின்றன. ஏராளமான திரைப்படங்களை பார்த்து சண்டை காட்சிகளில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. அதனால் சண்டை காட்சிகளின் நடிக்க ஆர்வமாக இருந்தேன். ஆனால் இந்த திரைப்படத்தில் உள்ள நான்கு சண்டையிலும் ‘ஜின்- தி பெட்’டிற்கு தான் முக்கியத்துவம் இருக்கும். அது என்ன? என்பதை நீங்கள் திரையில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு பிறகு நான் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறேன். சில படங்களின் பணிகள் நிறைவடைந்து இருப்பதால் அது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என நம்புகிறேன்.
இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் ஜின்-னும் ஒரு கதாபாத்திரம் தான். அவரும் இங்கு எங்கேயோ தான் இருப்பார். அவருக்கும் நான் நன்றியை சொல்கிறேன். இந்த ‘ஜின் தி பெட்’ படத்தின் கதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் ஃபேமிலி எண்டர்டெய்னராக உருவாகி இருக்கிறது. அனைவரும் மே 30ம் தேதியன்று திரையரங்கத்திற்கு வருகை தந்து இப்படத்தை பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
ரூக்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் அர்ஜுன் தாஸ் – காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘போர் ‘ எனும் திரைப்படத்தைத் தொடர்ந்து, இந்நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகரான யோகி பாபு கதையின் நாயகனாக நடித்திருக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தினை தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படத் தயாரிப்பு நிறுவனம் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளது.
இந்த திரைப்படத்தில் யோகி பாபுவுடன் மேகா தாமஸ், ஜாஸிக், அஞ்சு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இயக்குநர் ஜெய் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு ‘புரொடக்ஷன் நம்பர் 2’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கிறது.
குற்றாலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள அடர்ந்த வனப்பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இருக்கிறது. இன்றைய இளம் தலைமுறையினருக்கான ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரூக்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் பிரபு ஆண்டனி- மது அலெக்சாண்டர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அத்துடன் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியிடப்படும் என்று படத்தைத் தயாரிக்கும் ரூக்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. நரேஷ் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பிஜு சாம் இசையமைத்திருக்கிறார்.