சென்னையில் கார் ஓட்டுநராக வேலை செய்யும் சமுத்திரக்கனி, அளவான குடும்பம்,வருமானத்திற்கு ஏற்ற வாழ்க்கை, என்று மகிழ்ச்சியாக இருப்பினும், சொந்த வீடு மற்றும் சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்ற தனது ஆசையை நிறைவேற்றும் முயற்சியில் கடனாளியாகி விடுகிறார். அவசரத்திற்கு கடன் வாங்க தொடங்கும் சமுத்திரக்கனி, அதையே தனது ஆசையை நிறைவேற்றுவதற்கான வழியாக மாற்றிக் கொள்ளும் போது, அவரை பெரும் சிக்கல் சூழ்ந்து கொள்கின்றனது. அதுல இருந்து அவர் மீண்டாரா? இல்லையா? என்பதை, பல்வேறு ஆசைகளை வளர்த்துக்கொண்டு அதன் மூலம் நிறைவேற்ற என்று அதுல அவதிப்படும் நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலாக சொல்வது தான் “கார்மேனி செல்வம்”. திரைப்பட கதைக்களம். இருப்பதை வைத்து நிறைவாக வாழாமல், நிறைவை தேடி…தேடி… சென்று வாழ்க்கையை தொலைத்து விடக்கூடாது, என்ற மெசஜை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். இயக்குநர் ராம் சக்ரி.
சமுத்திரக்கனி, செல்வம் என்ற கதாபாத்திரத்தில்,அவரது மனைவியாக
நடித்திருக்கிறார் லக்ஷ்மி பிரியா, முதலாளியாக நடித்திருக்கிறார். கெளதம் வாசுதேவ் மேனன், அவரது
மனைவியாக நடித்திருக்கிறார். அபிநயா, சமுத்திரக்கனியின் மகனாக நடித்திருக்கிறார்
1988-ம் ஆண்டு இலங்கை உள்நாட்டு போரின் பின்னணியில் அமைந்த கதை. ஒரு சாதாரண தமிழ் குடும்பத்தில் நடக்கும் திருமண விழா – சிரிப்பு, உறவு, மகிழ்ச்சி…
ஆனால் சில மணி நேரங்களில் அந்த இடம்: திடீரென போரின் மையமாக மாறுகிறது. இந்திய அமைதிப்படை மற்றும் போராளிகள் இடையே சிக்கிக் கொள்கிற குடும்பம் என்ன ஆகிறது என்பதே கதை.
ஆக மாறுகிறது.
Indian Peace Keeping Force (IPKF) மற்றும் ஆயுதப்படைகள் இடையே நடக்கும் மோதலில் சிக்கிக் கொள்கிற குடும்பத்தின் நிலை – இதுதான் core narrative.
படம் “யார் நல்லவன் / கெட்டவன்?” என்று தீர்ப்பளிக்காது “போரில் சிக்கிய மனிதர்கள் எப்படி உடைந்து போகிறார்கள்?” என்பதையே காட்டுகிறது
நவீன் சந்திரா வலுவான performance மிக இயல்பான காட்சிகள், உண்மை சம்பவம் போல feel எந்த பக்கம் bias இல்லாமல் சொல்லியிருப்பது பெரிய plus
War பாதிப்பு, குடும்பத்தின் பயம், helplessness நல்லா காட்டப்பட்டுள்ளது படம் முடிந்த பிறகும் மனதில் இருக்கும் வகை Cinematography & Music: இரவு காட்சிகள், tension atmosphere super
ஒரு குடியிருப்பில் சிறுமி காணாமல் போகும் சம்பவம் வழியாக தொடங்கும் படம், அதே இடத்தில் நடைபெறும் பல மர்ம மரணங்களுடன் கூடிய சிக்கலான விசாரணையாக மாறுகிறது. போலீஸ் அதிகாரி (பரத்) இந்த வழக்கை விசாரிக்கும்போது பல twists & suspects வந்து கதையை திருப்புகிறது திரைக்கதை
சென்னையில் புறநகர். சென்னையில் உள்ள ஐநூறு -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அபர்ணதி – அனந்த் நாக், தம்பதியின் 4 வயது பெண் குழந்தை காணாமல் போகிறது. குழந்தையை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் பரத் மற்றும் பவானி ஸ்ரீ விசாரணையில், அதே குடியிருப்பில் வசிக்கும் இளைஞர் அஜய் கார்த்தி மீது சந்தேகம் எழுகிறது. அவரை கைது செய்து விசாரித்துக் கொண்டிருக்கும் போது, காணாமல் போன குழந்தையின் சடலம் கிடைக்கின்றன. இதற்கிடையே, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அஜய் கார்த்திக்கு எதிராக எந்தவித ஆதாரங்களும் இல்லாததால், அவரை வழக்கறிஞர் பிரகாஷ்ராஜ் காப்பற்றி அழைத்துச் சென்று விடுகிறார். குழந்தையின் இறப்புக்கு காரணம் யார் ? என்பதை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டும் பரத்தின் புலன் விசாரணை ஒரு பக்கமும், அஜய் கார்த்தி தான் குற்றவாளி என்று நிரூபிக்க போராடும் பவானி ஸ்ரீ, அதிரடியாக பயணித்துக் கொண்டிருக்கும் போது, அதே அடுக்குமாடி குடியிருப்பில் மேலும்ஒரு சிறுமி மர்மமான முறையில் உயிரிழக்கிறார். இதனால், குடியிருப்பு வாசிகளிடத்தில் அச்சம் அதிகரிக்கிறது.இந்த மர்ம மரணங்களின் பின்னணி என்ன ?, இதற்கு பின்னணியில்
இருக்கும் உண்மையான குற்றவாளி யார் ?என்பதை பரத் எப்படி கண்டுபிக்டிக்கிறார், என்பதை பரபரப்பாக சொல்வது தான் “காளிதாஸ் -2 “ பரத் நடிப்பு: படம் முழுவதையும் தாங்கும் அளவுக்கு நல்ல performance கிளைமாக்ஸ் ட்விஸ்ட்: படம் முழுக்க எதிர்பார்க்காத திருப்பம் BGM: சில காட்சிகளில் tension build செய்ய உதவுகிறது முதல் பாதி மெதுவாக நகரும் கதை predictable ஆக இருக்கும் இடங்கள் கேரக்டர்கள் முழுமையாக develop ஆகவில்லை
மாஸ் ஹீரோக்கள் நடிக்க வேண்டிய கதையை தைரியமாக Legent சரவணனை வைத்து இயக்கி வென்றுள்ளார் இயக்குனர் R.S.துரை செந்தில்குமார்.
பழைய கதைதான். திரைக்கதை புதிதாக விறுவிறுப்பாக உள்ளது.
படம் துவங்கிய 1st ஃபிரேமிலிருந்தே திரைக்கதை பரபரவென வேகமெடுக்கிறது.
இடைவேளை வந்ததே தெரியாத அளவுக்கு செம ஸ்பீட்.
இன்டர்வெல் பிளாக் செம…
2nd ஹாஃப் துவங்கி சற்றே தடுமாறினாலும் பிறகு மீண்டும் வேகமெடுக்கும் திரைக்கதை படத்தை காப்பாற்றி விடுகிறது.
படம் ஆரம்பித்ததில் இருந்து கிளைமாக்ஸ் வரை நிறைய டிவிஸ்டுகள் நம்மை ஆச்சர்ய படுத்திக்கொண்டே இருக்கிறது.
இவ்வளவு டிவிஸ்டுகள் இருந்தும் திகட்டவில்லை.
படம் நெடுகிலும் வரும் சின்ன சின்ன காமெடிகள் புன்னகைக்க வைக்கிறது.
படத்தின் முதல் ஹீரோ திரைக்கதை என்றால் 2nd ஹீரோ இசையமைப்பாளர் ஜிப்ரான் தான்.
பின்னணி இசையில் மனிதர் பட்டையை கிளம்பி உள்ளார்.
அடுத்து ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ்.S கலக்கலாக படம் பிடித்து அசத்துகிறார்.
அதே போல சண்டை பயிற்சியாளர் மகேஷ் மேத்யூ ஆக்க்ஷன் காட்சிகளில் அதகளம் செய்கிறார்.
அதுவும் Legend சரவணனை இப்படியான சண்டை காட்சிகளை எடுத்து ரசிக்கவைப்பதெல்லாம் வேற லெவல்…
படத்தில் லாஜிக் மிஸ்டேக்ஸ் மற்றும் சின்ன சின்ன குறைகள் இல்லாமல் இல்லை. ஆனால், அவைகளை எல்லாம் திரைக்கதையின் வேகம் மறக்கடித்து விடுகிறது.
ஹீரோவுக்கு இணையான வேடத்தில் ஷாம் கச்சிதமான நடிப்பை கொடுத்துள்ளார்.
ஹீரோவின் மகளாக வரும் இயல் நடிப்பு இயல்பாக சிறப்பாக உள்ளது.
படத்தில் நடித்துள்ள ஆண்ட்ரியா, ஹீரோயின் பாயல் ராஜ்புத், வில்லன் சந்தோஷ் பிரதீப், லால், அம்ரிதா அயர், உட்பட எல்லோரும் அவரவர் வேடத்தை சிறப்பாக செய்துள்ளார்கள்.
பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த ஹிந்தி KILL படத்தை நினைவு படுத்தும் கடைசி அரைமணி நேர ரத்தக்களரியான கிளைமேக்ஸ் ஃபைட் கொஞ்சம் ஓவராக இருந்தாலும் ரசிக்க வைக்கிறது.
இந்த சண்டைக்காட்சியில் பிரதீப் E. ராகவ் எடிட்டிங்கில் அட்டகாசம் செய்துள்ளார்.
ஹீரோவாக அல்ல ஆக்க்ஷன் ஹீரோவாகவும் வெற்றி பெற்றுவிட்டர் லெஜன்ட் சரவணன்.
எல்லோருக்கும் பிடிக்கும்படியான சென்டிமென்ட் கலந்த ஆக்க்ஷன் + Spy Thriller படமாக வந்துள்ள இந்த லீடர்
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் S. S. லலித் குமார் தயாரிப்பில், நடிகர்கள் பஸில் ஜோசப் & L. K. அக்ஷய் குமார் நடிக்கும் ‘ராவடி’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது.
சென்னை மற்றும் ஒகேனக்கலில் படப்பிடிப்பு நடந்து முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.
நடிகர்கள் பஸில் ஜோசப் – L. K. அக்ஷய் குமார் ஆகியோர் இணைந்து நடிக்கும் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் ‘ராவடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை மற்றும் ஒகேனக்கல் பகுதியில் படமாக்கப்பட்டுள்ளன. இயற்கை அழகுடன் கூடிய ஒகேனக்கல் லொக்கேஷன், படத்திற்கு வித்தியாசமான காட்சியமைப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், ஜான் விஜய், சத்யன், ஜாபர் சாதிக், நோபல் K. ஜேம்ஸ், அருணாச்சலேஸ்வரன் PA, ஷாரீக் ஹாஸன், ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்திற்கு லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜென் மார்ட்டின் இசையமைக்க, படத்தொகுப்பை பரத் விக்ரமன் மேற்கொள்கிறார். கலை இயக்கத்தை P. S. ஹரிஹரன் கவனிக்கிறார்.
காமெடி என்டர்டெய்னராக உருவாகியுள்ள இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் S. S. லலித் குமார் தயாரித்துள்ளார். இணை தயாரிப்பாளராக L. K. விஷ்ணு குமார் பணியாற்றியுள்ளார்.
தற்போது ‘ராவடி’ திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எடிட்டிங், பின்னணி இசை, VFX உள்ளிட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், வரும் கோடை காலத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்த படத்தின் அப்டேட்கள் ரசிகர்களிடையே ஏற்கனவே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில், கோடை வெளியீடு ரசிகர்களுக்கு ஒரு முழு என்டர்டெயின்மெண்ட் அனுபவமாக இருக்கும்.
நடிகர் டொவினோ தாமஸ் நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் தமிழ் பதிப்பிற்கான பத்திரிகையாளர் சந்திப்பு
வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் மற்றும் சி கியூப் ப்ரோஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் தயாராகி, ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் தமிழ் பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இப்படத்தில் டொவினோ தாமஸ், கயாடு லோஹர், விஜயராகவன், பாபு ராஜ், அலெக்சாண்டர் பிரசாந்த், சுதீர் கராமனா, டி.ஜி.ரவி,, ஜான் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசைமமைத்திருக்கிறார். 1957ஆம் ஆண்டின் பின்னணியில் கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் மற்றும் சி கியூப் ப்ரோஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் நௌஃபல், பிரிஜீஷ், சானுக்யா – சைதன்யா- சரண் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் சக்ரா பிக்சர்ஸ் வெளியிடுகிறது.
தமிழ்ப் பதிப்பிற்காக சென்னையில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், நடிகர் டொவினோ தாமஸ், நடிகை கயாடு லோஹர், இணை தயாரிப்பாளர் மேகா ஷ்யாம், சக்ரா பிக்சர்ஸ் வெற்றி, தயாரிப்பாளர் சைதன்யா, சரண் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இணை தயாரிப்பாளர் மேகா ஷ்யாம் பேசுகையில்,
”திரையுலகில் 14 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். இப்போதுதான் முதல் முறையாக இணை தயாரிப்பாளர் என்ற முறையில் மேடை ஏறி இருக்கிறேன். இது எனக்கு மறக்க முடியாத தருணம். என்னுடைய சகோதரர்கள் சானுக்யா – சைதன்யா – சரண் ஆகியோரை பாராட்டுகிறேன். படக்குழுவினரை பாராட்டுகிறேன். படத்தைப் பற்றி நான் அதிகம் பேசப் போவதில்லை. இந்தப் படம் எமோஷனல் ஆக்சன் என்டர்டெய்னர். இந்தப் படத்தை உலகம் முழுவதும் வெளியிடுகிறோம். டொவினோ தாமஸ், கயாடு லோஹர் தங்களுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள். இயக்குநரும் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளார் படத்தை அனைவரும் திரையரங்கில் பார்த்து ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
சக்ரா பிக்சர்ஸ் வெற்றி பேசுகையில்,
”இது எங்களுக்கு முதல் திரைப்படம். இந்தத் திரைப்படம் மிகச் சிறப்பாக இருக்கிறது. கன்டென்ட் உள்ள படம். ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தாருங்கள்,” என்றார்.
தயாரிப்பாளர் சரண் பேசுகையில்,
”இந்தப் படம் எங்கள் நிறுவனத்திற்கு முதல் திரைப்படம். நாங்கள் மூன்று சகோதரர்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறோம். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி அன்று இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளை தொடங்கினோம். தற்போது வெளியிடுகிறோம். இந்தத் திரைப்படத்தின் மூலம் நாங்கள் 1950 களில் கேரளாவில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை மறு உருவாக்கம் செய்து சொல்லி இருக்கிறோம். இதுபோன்றதொரு படத்தை நாங்கள் முதலில் தயாரித்ததற்காக பெருமிதம் கொள்கிறோம்,” என்றார்.
நடிகை கயாடு லோஹர் பேசுகையில்,
”இது என்னுடைய மூன்றாவது மலையாள திரைப்படம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தின் மூலம் மலையாளத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தின் கதாபாத்திரம் வித்தியாசமானது. என் இதயத்திற்கு நெருக்கமான கதாபாத்திரமும் கூட. இதுபோன்ற கதாபாத்திரத்தை எனக்கு வழங்கியதற்காக இயக்குநருக்கும் , தயாரிப்பாளருக்கும் நன்றி. நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தது. இந்தப் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். நாங்கள் அனைவரும் கூட்டணியாக இணைந்து கடுமையாக உழைத்து ஃபேமிலி என்டர்டெய்னராகவும் உருவாக்கி இருக்கிறோம். டொவினோ தாமஸ் சிறந்த திறமையுள்ள சக நடிகர் அவருக்கும் நன்றி,” என்றார்.
நடிகர் டொவினோ தாமஸ் பேசுகையில்,
”இப்படத்தின் கதையை நாங்கள் 2018 ஆம் ஆண்டில் விவாதித்தோம். நீண்ட விவாதத்திற்குப் பிறகு திரைக்கதையை சிறப்பாக வடிவமைத்து 2025 ஆம் ஆண்டில் தான் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கினோம். இயக்குநரும், நானும் வேறு படங்களில் பணியாற்றிக் கொண்டிருந்ததால், அவை அனைத்தையும் நிறைவு செய்துவிட்டு இப்படத்தில் இணைந்தோம். அதன் காரணமாகவும் இப்படத்தின் பணிகள் சற்று தாமதமானது. இப்படத்தின் கதாசிரியர் சுரேஷ்பாபு திரைக்கதையை செழுமைப்படுத்தினார். நான் முதன்முதலாக கேட்ட கதை வடிவத்தை விட.. இந்தக் கதை அமைப்பு சிறந்ததாக இருந்தது.
நூறு நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடந்தது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான நடிகர்களுடன் படப்பிடிப்பு நடைபெற்றது. இது எளிதான காரியம் அல்ல. இதற்கு கடின உழைப்பும் தேவை. திட்டமிடலும் தேவை. இது ஒரு பீரியட் மூவி. 1957- 58 கால கட்டத்தை சார்ந்த படம். அந்த காலகட்டத்தில் கேரளாவில் இருந்த சமூக அரசியல் கட்டமைப்பு, பின்னணியில் இடம்பெறும்.
இது உண்மைச் சம்பவம் அல்ல. ஆனால் சில சம்பவங்களை தழுவி நிறைய கற்பனையான கதாபாத்திரங்களுடன் இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் படத்தை தயாரிப்பாளர்கள் பார்த்து விட்டனர். அவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். நான் இந்த படத்தை ரசிகர்களுடன் திரையரங்குகளில் காண்பதற்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். திரையரங்குகளில் ரசிகர்கள் இப்படத்தை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை அவர்களுடன் இருந்து பார்த்து அனுபவிக்க வேண்டும் என்பதற்காக காத்திருக்கிறேன்.
எனக்கு முழுமை அடையாத திரைப்படங்களை பார்த்து கணிக்கத் தெரியாது. ரசிகர்களுடன் திரைப்படத்தின் முழு வடிவத்தை திரையரங்குகளில் பார்ப்பது தான் எனக்கு பிடிக்கும். அதனால் இந்த படத்திற்காக நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்தப் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதே போல் படமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறேன். நிச்சயம் இந்த படம் ரசிகர்களை ஏமாற்றாது. ” என்றார்.
விமல் – நட்டி இணையும் ‘வடம்’ சன் NXT-இல் பிரம்மாண்ட வெளியீடு: மஞ்சு விரட்டின் பரபரப்பை நம் கண் முன் நிறுத்தும் பாண்டிமுனி
சில கதைகள் வெறும் பொழுதுபோக்காக மட்டுமே இருக்கும். ஆனால் ‘வடம்’ அதைவிட ஆழமான அனுபவமாக மாறுகிறது — அது பார்வையாளர்களை முழுமையாக உள்ளிழுத்து, உணர்ச்சிகரமாகத் தொடந்து, நீண்ட நேரம் மனதில் நிற்கும் ஒரு சினிமாப் பயணம்.
தற்போது சன் NXT-இல் ஸ்ட்ரீமிங் ஆகி வரும் ‘வடம்’, எதற்கும் அடங்காத மஞ்சு விரட்டின் அதிரடி நிறைந்த உலகத்தை இயல்பாகவும் வலிமையாகவும் உயிர்ப்பிக்கிறது. இந்த மண்ணின் வாசனைமிக்க கதையின் மையத்தில் நிற்பது நாம் மறக்கவும் மறுக்கவும் முடியாத ஒரு சக்தி – பாண்டிமுனி. ஒரு கண்ணில் மட்டுமே பார்வை கொண்ட இந்த காளை, அறுக்கப்படும் நிலையிலிருந்து தோல்வியறியா சாம்பியனாக உயர்ந்த அதிசயமான பயணத்தை வெளிப்படுத்துகிறது.
வெற்றி என்பவரால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்ட பாண்டிமுனி, ஒரு விலங்காக மட்டுமல்ல — அது பெருமை, பொறுமை மற்றும் அவரது அடையாளத்தின் உருவகமாக திகழ்கிறது. பலமும் பாரம்பரியமும் சோதிக்கப்படும் அரங்குகளில், பாண்டிமுனி எதிர்பார்ப்புகளை முறியடித்து, மரியாதையை வென்று, உடைக்க முடியாத மனவலிமையின் சின்னமாக மாறுகிறது. இது வெற்றிகளைப் பற்றிய கதை மட்டுமல்ல — ஒற்றுமை, நம்பிக்கை, மனிதன் மற்றும் காளை இடையேயான உறவைப் பற்றிய கதை.
தமிழ்நாட்டின் கிராமப்புறத்தின் உணர்ச்சிகரமான பின்னணியில் அமைந்துள்ள ‘வடம்’, மஞ்சு விரட்டின் பாரம்பரியத்தையும், பரபரப்பையும் இதுவரை இல்லாத அளவில் பதிவு செய்கிறது. பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் இவ்உலகில், ஒவ்வொரு சவாலும் உணர்ச்சிபூர்வமானது, ஒவ்வொரு வெற்றியும் பாரம்பரியத்தின் பாரத்தை சுமக்கிறது. பாண்டிமுனி மற்றும் வெற்றியின் பயணம், வெறுமனே பார்வையாளர்கள் பார்ப்பதற்காக மட்டும் அல்ல அது ஒரு அனுபவத்தை கொடுக்கும் ஓர் உண்மையான அண்டர்டாக் கதையாக விரிகிறது.
விமல், நட்ராஜ் சுப்பிரமணியம் (நட்டி), பாலசரவணன், சனஷ்கா ஸ்ரீ ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை இயக்குனர் கேந்திரன் இயக்கியுள்ளார். டி. இமான் இசையமைப்பில், உணர்ச்சி, உற்சாகம் மற்றும் கலாச்சார ஆழம் இணைந்துள்ளன.
விமல் கூறுகையில்: “இந்தப் படத்தில் காளையுடன், குறிப்பாக பாண்டிமுனியுடன் பணியாற்றியது எனக்கு முற்றிலும் புதிய அனுபவம். காலப்போக்கில் உண்மையான ஒரு பந்தம் உருவானது — அது நடிப்பு அல்ல, வாழ்ந்த அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பு முடிந்த நாள் எனக்கு மிகவும் உணர்ச்சிகரமானது. இந்தப் படம் என் மனத்திற்கு மிகவும் நெருக்கமானது.”
இயக்குனர் கேந்திரன் கூறுகையில்: “‘வடம்’ உருவாக்கத்தின் நோக்கம், நமது கலாச்சாரத்தின் வேர்களை உண்மையாகச் சொல்லி, அதன் உணர்ச்சி பரிமாணத்தை வெளிப்படுத்துவதாகும். நடிகர்களையும் காளையையும் அந்த அளவிற்கு தயார்ப்படுத்துவது மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஆனால் அதுவே இந்தப் படத்தின் தனித்தன்மை.”
நட்டி கூறுகையில்: “‘வடம்’ எனக்கு மிகவும் நெருக்கமான படம். இது நமது கலாச்சாரத்தையும் அடையாளத்தையும் பிரதிபலிக்கும் ஒரு அனுபவம். உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இப்போது சன் NXT மூலம் இதைப் பார்க்க முடிவது மகிழ்ச்சியான விஷயம்.”
டி. இமான் கூறுகையில்: “இந்தப் படத்தின் இயல்புத்தன்மை, இசைக்கும் ஒலிக்கும் ஒரு புதிய அணுகுமுறையை தேவைப்படுத்தியது. மஞ்சு விரட்டு என்பது பார்க்கப்படுவது மட்டும் அல்ல — அது உணரப்பட வேண்டியது. அந்த ஆற்றல், குழப்பம் மற்றும் புயலுக்கு முன் நிலவும் அமைதியை இசையில் பதிவு செய்வது சவாலாக இருந்தாலும் சுவாரஸ்யமாக இருந்தது.”
‘வடம்’ படத்தின் உண்மைக்கு நெருக்கமான திரைக்கதையை அதனை வேறுபடுத்திக் காட்டுகிறது. அது கலாச்சாரத்தை நமக்கு அதன் வாழ்வியலோடு இயல்பாகக் காட்டுகிறது. பாண்டிமுனியின் உயர்வும், அதைச் சுற்றியுள்ள மனித உணர்ச்சிகளும், மஞ்சு விரட்டின் பாரம்பரியத்திற்கு ஒரு சக்திவாய்ந்த மரியாதையாக இந்தப் படம் திகழ்கிறது.
‘வடம்’ தற்போது சன் NXT-இல் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது… காணுங்கள், எங்கேயும்… எப்போதும்…
சன் NXT பற்றி:
சன் NXT, இந்தியா முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு விருப்பமான முன்னணி OTT தளமாக திகழ்கிறது. 4000-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், 44-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்கள், 7-க்கும் மேற்பட்ட மொழிகளில் உள்ளடக்கங்கள் ஆகியவற்றுடன், உயர்தர தென்னிந்திய பொழுதுபோக்கை வழங்குகிறது.
திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நேரலை ஒளிபரப்புகள் மற்றும் விரைவான வெளியீடுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான உள்ளடக்கங்களை வழங்கி வருகிறது.
பெங்களூரு, இந்தியா, XX மார்ச் 2026: கே. ராமகிருஷ்ணன் தொழில்நுட்பக் கல்லூரி (KRCT), புதுமையான சிம்பிள்லெர்ன் லேர்னிங் ஹப்+ (SLH+) தளத்தின் மூலம், தொழில்துறைக்குத் தேவையான பாடத்திட்டத்தை வழங்கி, மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த உள்ளது. இது, கல்விசார் கற்றலுக்கும் தொழில்துறைத் தேவைகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைகிறது. மேலும், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல், கணினி அறிவியல் மற்றும் பொறியியல், மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு, அவர்களின் முதல் ஆண்டு முதல் பட்டப்படிப்பு முடியும் வரை, அதிகத் தேவையுள்ள டிஜிட்டல் திறன்களை இது வழங்குகிறது. சமீபத்திய தொழில்துறை அறிக்கை ஒன்றின்படி, இந்தியப் பட்டதாரிகளில் 42.6% மட்டுமே வேலைக்குத் தகுதியானவர்களாக உள்ளனர்; இது 2023-ல் 44.3% ஆக இருந்தது. அதே சமயம், 62% வணிகத் தலைவர்கள் பாரம்பரிய வணிக இலக்குகளை விட செயற்கை நுண்ணறிவு ஒருங்கிணைப்புக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். KRCT மாணவர்கள், கல்வித் தகுதிகள் மற்றும் வேலை வழங்குநர்கள் தீவிரமாகத் தேடும் வேலைக்குத் தயாரான டிஜிட்டல் திறன்கள் ஆகிய இரண்டையும் பெற்றுப் பட்டம் பெறுவதை உறுதி செய்வதன் மூலம், இந்த முக்கியமான இடைவெளியை இது நிவர்த்தி செய்கிறது. KRCT மாணவர்கள், Simplilearn-இன் விரிவான கற்றல் திட்டங்களை வழங்கும் ‘சிம்பிளி லேர்ன் கற்றல் மையம்+’ (SLH+) தளத்திற்கான முழுமையான அணுகலைப் பெறுகின்றனர். இத்தளமானது ஆண்டுதோறும் 30,000 மணிநேரத்திற்கும் அதிகமான நேரடி வகுப்புகளையும், 40-க்கும் மேற்பட்ட பணி சார்ந்த கற்றல் பாதைகளில் அமைந்த 550-க்கும் மேற்பட்ட திட்டங்களையும் கொண்டுள்ளது. மேலும், தொழில் துறையினரால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் திட்டங்களையும் அணுகும் வாய்ப்பை மாணவர்கள் பெறுகின்றனர். செயற்கை நுண்ணறிவு (AI) & தரவு அறிவியல் (Data Science), மென்பொருள் உருவாக்கம், கிளவுட் & DevOps, இணையப் பாதுகாப்பு (Cybersecurity), டிஜிட்டல் செயல்பாடுகள் மற்றும் டிஜிட்டல் வணிகம் போன்ற அதிக தேவை உள்ள துறைகளில், தங்கள் கல்வி அட்டவணைகளுக்கு ஏற்றவாறு நெகிழ்வான மற்றும் முடிவுகளை மையமாகக் கொண்ட பயிற்சிகளை மாணவர்கள் மேற்கொள்ளலாம். Simplilearn-இன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) திரு. கிருஷ்ணா குமார் அவர்கள் இதுகுறித்துத் தெரிவிக்கையில்: “நாளைக்கான பணியாளர்களை உருவாக்குவதில்
உயர்கல்வி நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன; இருப்பினும், பல மாணவர்கள் வேலை வழங்குநர்கள் எதிர்பார்க்கும் நடைமுறை சார்ந்த மற்றும் தொழில் துறைக்கு ஏற்ற திறன்கள் இல்லாமலேயே பட்டம் பெற்று வெளியேறுகின்றனர். கே. ராமகிருஷ்ணன் தொழில்நுட்பக் கல்லூரியுடனான (KRCT) எங்கள் கூட்டாண்மை, கல்விசார் சிறப்பை அதிநவீன டிஜிட்டல் திறன் பயிற்சிகளுடன் எவ்வாறு தடையின்றி ஒருங்கிணைக்க முடியும் என்பதை நிரூபிக்கிறது. ஒரே ஆண்டில் 130-லிருந்து 900-க்கும் மேற்பட்ட கற்பவர்கள் என்ற நிலைக்கு எட்டியுள்ள இந்த வியக்கத்தக்க வளர்ச்சி, முடிவுகளை மையமாகக் கொண்ட கல்வியின் மீது மாணவர்களுக்கு உள்ள தீவிர ஆர்வத்தைப் பிரதிபலிக்கிறது. எங்கள் சிம்பிளி லேர்ன் கற்றல் மையம்+’ தளத்தின் வாயிலாக, KRCT மாணவர்கள் அடிப்படைப் பயிற்சிகள் முதல் AI, கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் இணையப் பாதுகாப்பு ஆகியவற்றில் மேம்பட்ட சான்றிதழ்கள் வரை விரிவான திறன் தொகுப்புகளை உருவாக்க நாங்கள் உதவுகிறோம். இதன் மூலம், மாணவர்கள் வெறும் பட்டங்களுடன் மட்டுமல்லாமல், தங்கள் தொழில் வாழ்க்கையில் நேரடி வெற்றியை ஈட்டித் தரக்கூடிய நிரூபிக்கத்தக்க திறன்களுடனும் வேலைவாய்ப்புச் சந்தையில் நுழைவதை நாங்கள் உறுதி செய்கிறோம்,” என்று கூறினார். KRCT நிறுவனம் தொடக்கத்தில், சிம்பிள்லெர்ன் -இன் இணையவழித் தரவு அறிவியல் திட்டங்களை வழங்கும் ஒரு முன்னோடித் திட்டத்தைத் (Pilot Program) தொடங்கியது; இத்திட்டத்திற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து அமோகமான மற்றும் நேர்மறையான வரவேற்பு கிடைத்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, கல்வி நிறுவனம் தனது ஈடுபாட்டை 2024-ஆம் ஆண்டில் 130 கற்பவர்கள் என்ற நிலையிலிருந்து, 2025-ஆம் ஆண்டில் 900-க்கும் மேற்பட்ட கற்பவர்கள் என்ற நிலைக்கு விரிவுபடுத்தியது. இது, தொழில் துறைக்கு ஏற்ற மற்றும் முடிவுகளை மையமாகக் கொண்ட பயிற்சிகளுக்குச் சந்தையில் உள்ள வலுவான தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
KRCT-யின் தலைவர் டாக்டர் கே. ராமகிருஷ்ணன் கூறியதாவது: “எங்கள் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரிடமிருந்து கிடைத்த வரவேற்பு மிகச் சிறப்பாக உள்ளது. சிம்பிள்லெர்னின் SLH+ தளத்தின் வழியான நேரடிக் கற்றல் மாதிரியானது, நெகிழ்வுத்தன்மைக்கும் கட்டமைக்கப்பட்ட வழிகாட்டுதலுக்கும் இடையே ஒரு சரியான சமநிலையை வழங்குகிறது. துறைசார் வல்லுநர்களை அணுகுதல், செய்முறைத் திட்டங்கள் மற்றும் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்கள் ஆகியவற்றை மாணவர்கள் பெரிதும் பாராட்டுகின்றனர். இந்தக் கூட்டாண்மை, எங்கள் வேலைவாய்ப்பு முடிவுகளையும் மாணவர் திருப்தியையும் கணிசமாக மேம்படுத்தியுள்ளது. இது சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் ஒரு வெற்றி-வெற்றி சூழ்நிலையாக அமைகிறது.” இந்த விரிவான தீர்வானது, மேற்பார்வையிடப்பட்ட கோடிங் மதிப்பீடுகள், MCO-க்கள் மற்றும் திறனாய்வுத் தேர்வுகள் அடங்கிய ஒரு மதிப்பீட்டுத் தளத்தை உள்ளடக்கியுள்ளது. இது, துறைசார் தரநிலைகளுடன் ஒப்பிடப்பட்ட விரிவான, திறன் அடிப்படையிலான அறிக்கையிடலையும்
குறியீட்டுத் தரப் பகுப்பாய்வையும் வழங்குகிறது. மேலும், நிஜ வாழ்க்கைச் சூழல்களை உருவகப்படுத்தி, பதில்களின் அடிப்படையில் கேள்விகளைத் தானாகவே மாற்றியமைத்து, வரம்பற்ற பயிற்சி வாய்ப்புகளை வழங்கும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலமான மாதிரி நேர்காணல்கள் மூலம் மாணவர்கள் பயனடைகின்றனர். இது அவர்களை வேலைவாய்ப்பு செயல்முறைகளுக்கு முழுமையாகத் தயார்படுத்துகிறது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டதிலிருந்து, 40,000-க்கும் மேற்பட்ட நேரடி வகுப்பு நேரங்கள், மாணவர்களால் பெறப்பட்ட 550-க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள், 2,500-க்கும் மேற்பட்ட திட்டப்பணிகள் மற்றும் 86 என்ற நிகர ஊக்குவிப்பு மதிப்பெண் (Net Promoter Score) உள்ளிட்ட ஈர்க்கக்கூடிய முடிவுகளை வழங்கியுள்ளது. இது மாணவர்களின் மிக உயர்ந்த திருப்தியைக் குறிக்கிறது. இந்த நெகிழ்வான கற்றல் மாதிரியானது, மாணவர்கள் அடிப்படைப் படிப்புகளில் தொடங்கி, AI பொறியாளர், தரவு விஞ்ஞானி, பயன்பாட்டு உருவாக்க AI, ஜாவா முழு அடுக்கு உருவாக்குநர், இணையப் பாதுகாப்பு போன்ற பணி சார்ந்த திட்டங்களுக்கு முன்னேற அனுமதிக்கிறது. எளிதில் அணுகக்கூடிய, தொழில்துறைக்கு ஏற்ற டிஜிட்டல் திறன் பயிற்சி மூலம் உயர்கல்வியை மாற்றுவதற்கான சிம்பிள்லெர்னின் அர்ப்பணிப்பை இந்தக் கூட்டாண்மை எடுத்துக்காட்டுகிறது. கல்விசார் கடுமையையும் நடைமுறைத் திறன்களையும் இணைப்பதன் மூலம், KRCT மாணவர்கள் வெறும் பட்டதாரிகளாக மட்டுமல்லாமல், இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் சிறந்து விளங்கத் தேவையான திறன்களுடன், வேலைக்குத் தயாரான தொழில் வல்லுநர்களாக இருப்பதை இந்தக் கூட்டு முயற்சி உறுதி செய்கிறது. சிம்பிள்லெர்ன் ஃபார் கேம்பஸ், தனது முதன்மைத் தயாரிப்பான சிம்பிள்லெர்ன் லேர்னிங் ஹப்+ மூலம், AI, தரவு அறிவியல், கிளவுட் கம்ப்யூட்டிங், இணையப் பாதுகாப்பு, டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் திட்ட மேலாண்மை போன்ற துறைகளில் தொழில்துறைக்கு ஏற்ற திட்டங்கள் வழியாக, பல்கலைக்கழகங்கள் தங்கள் மாணவர்களின் டிஜிட்டல் திறன் மேம்பாட்டை விரைவுபடுத்த உதவுகிறது. எங்களின் நேரடி மற்றும் செயல்முறைக் கற்றல் மாதிரியானது, கல்வித்துறைக்கும் தொழில்துறைக்கும் இடையிலான இடைவெளியை இணைத்து, வேலைக்குத் தயாரான திறன்களையும் தன்னம்பிக்கையையும் வளர்க்கிறது. வேலைவாய்ப்பை மேம்படுத்தவும், தங்களின் டிஜிட்டல் கற்றல் சூழலமைப்பை வலுப்படுத்தவும், டியூக் பல்கலைக்கழகம், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம், மிசோரி-செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழகம் (UMSL), யூட்டா வேலி பல்கலைக்கழகம் மற்றும் கே. ராமகிருஷ்ணன் தொழில்நுட்பக் கல்லூரி உட்பட 50-க்கும் மேற்பட்ட முன்னணிப் பல்கலைக்கழகங்கள் எங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளன.
Chennai, April 2 2026: In a first in India, SRM Prime Hospital performed an Alternate Access Transcatheter Aortic Valve Replacement/Implantation (TAVR/TAVI), a minimally invasive heart valve replacement procedure, through the artery under the right shoulder (right axillary artery), instead of the standard leg artery route, to save a 73-year-old patient with calcific severe aortic stenosis, a condition in which the heart valve narrows due to calcium deposits, restricting blood flow from the heart to the body.
The patient, a retired professional, was discharged the third day after the procedure, and is now able to resume normal daily activities as before.
TAVR/TAVI procedure is used to replace a diseased aortic valve without the need for open-heart surgery. Doctors deliver an artificial valve through a thin tube inserted into a blood vessel (artery) and position it within the narrowed valve to restore normal blood flow. The most common route is through the artery in the leg. However, in this patient, all conventional access routes proved to be unsuitable due to vascular limitations such as narrowing, blockages, or unfavorable anatomy of the blood vessels. As a result, doctors opted for the right axillary artery.
The Procedure was led by Dr. Balamurugan S, Consultant – Interventional Cardiology and supported by Dr. A. Thomas George, Senior Consultant – Internal Medicine & Diabetology, Dr. P Balasubramanian, Senior Consultant – Cardiothoracic and Vascular Surgery, Dr. A. B. Gopalamurugan, Procedure Proctor, Cardiac Anesthetists and Critical Care Intensivist.
In his comments Dr. Balamurugan, said, “The patient exhibited features of decompensated heart failure, where the heart is unable to pump effectively. Our evaluation confirmed calcific severe aortic stenosis, a narrowing of the aortic valve caused by calcium deposits that restrict blood flow. Given his age and condition, we opted for TAVR/TAVI; however, none of the standard access routes such as femoral, transcarotid, transcaval or Left subclavian, were feasible. The only viable option was the right axillary artery. We therefore performed this entirely percutaneous right trans-axillary TAVR, an India-first, using an advanced catheter-based valve delivery system.”
He further added, “Modern treatments like TAVR provide safe and minimally invasive options, as there is less surgical trauma and faster recovery options, especially for elderly patients or those at high risk for open-heart surgery. In this case, it required advanced pre-procedure planning and precise catheter manipulation due to the tortuous course of the artery, along with expertise in alternative vascular access techniques. We are happy that our team, with utmost dedication to the quality outcome, performed the first of the kind procedure in India, and saved the senior citizen’s life.”
In his comments Dr. A. Thomas George said, “Patients undergoing advanced procedures like TAVR are often elderly and have multiple underlying health conditions that need careful medical management. Our focus is on optimising these conditions and ensuring the patient remains stable throughout the treatment journey.”
Aortic stenosis is primarily a disease of the elderly, with an incidence of about 2-7% in people above 65 years. It is usually caused by age-related valve degeneration and can also occur in conditions like chronic kidney disease. While age-related degeneration cannot always be prevented, risk can be reduced by controlling blood pressure and managing cholesterol. Regular cardiac check-ups, especially after age 60, is important.
People should not ignore early warning signs such as fatigue during mild exertion, breathlessness, chest discomfort, and fainting spells. These symptoms may indicate serious valve disease. Early diagnosis allows timely treatment and helps prevent complications such as heart failure and sudden cardiac death.