Breaking
August 28, 2026

February 2026

வித் லவ் ( With Love )” திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment  இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’  இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா  ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள,  “வித் லவ் ( With Love )” திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தின் முன் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது

இந்நிகழ்வினில்..,

உடை வடிவமைப்பாளர் ப்ரியா ரவி பேசியதாவது.., 

இப்படத்தில் நானும் ஒரு பங்காக இருப்பது மகிழ்ச்சி. வாய்ப்பு தந்த இயக்குநர் தயாரிப்பாளருக்கு நன்றி. அபிஷன், அனஸ்வரா உங்கள் எல்லோருடன் வேலை பார்த்தது இனிமையான அனுபவம். ஒரு குடும்பம் போல இருந்த குழுவிற்கு நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

எடிட்டர் சுரேஷ் பேசியதாவது..,

வித் லவ் படத்தில் என்னை அறிமுகப்படுத்தி வைத்தது மதன், வாய்ப்பு தந்த இயக்குநர் தயாரிப்பாளருக்கு நன்றி. படம் அருமையாக வந்துள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள். நன்றி

ஒளிப்பதிவாளர் ஷ்ரேயாஸ் கிருஷ்ணா பேசியதாவது…, 

இப்படத்தின் கதையை மிக அழகாக ஸொன மதனுக்கு நன்றி. கதை சொன்னபோது மறுக்கவே தோணவில்லை. திரையிலும் மிக அழகாக வந்துள்ளது. தயாரிப்பாளர் சௌந்தர்யா ரஜினிகாந்த் மேடம், மகேஷ் இருவருக்கும் நன்றிகள். அபிஷந்த், அனஸ்வரா, மற்றும் நடிகர் குழுவிற்கு நன்றி. படத்தை எடுக்கும் போது ஸ்கூல் நினைவுகள் எல்லாம் வந்தது. படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகர் ஹரீஷ் பேசியதாவது…, 

எனக்கு மதன் ரொம்ப நாளா தெரியும். அபிஷந்தும் நானும் முன்னாடியே ஒன்றாக வேலை செய்துள்ளோம்.  மதன் எனக்கு கால் பண்ணி இந்த கதை சொல்லிட்டு, “அபிஷந்த் இதில் நடிக்கிறார்”னு சொன்னதுமே…எனக்கு சொல்ல வார்த்தையே கிடைக்கல. ரொம்ப சந்தோஷமா இருந்தது. மதன் எனக்கு கொடுத்த ரோல் உண்மையிலேயே சூப்பராக  இருந்தது. இந்த படத்தில் நான் நடித்தது மிக மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படக்குழுவிற்கும், மதனுக்கு, மகேஷ் அண்ணா, சௌந்தர்யா மேம் – எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. நீங்க எங்களுக்கு கொடுத்த சப்போர்ட்  எங்களுக்கு ரொம்பவே முக்கியமானது. அனைவருக்கும் நன்றி.

நடிகர் சச்சின் பேசியதாவது..

ஹரி சொன்ன மாதிரி, இந்த படம் ஒரு குடும்ப படம்  மாதிரி தான். ஷூட்டிங்க்கு போற மாதிரி இல்லாம, தினமும் காலைல சுற்றுலாவுக்கு போற மாதிரி ஃபீல் இருந்தது. மதன் உட்கார்ந்து சிரிச்சுக்கிட்டே வேலை செய்வார்.மகேஷ் அண்ணா, சௌந்தர்யா மேடம்  எல்லா சின்ன சின்ன விஷயங்களுக்கும் பெரிய ஆதரவாக இருந்ததற்கு நன்றி.  ஷூட்டிங் ஸ்பாட்டில் நாங்கள் கொண்டாடியதை,  திரையரங்கில் நீங்களும் கொண்டாடுவீர்கள் எண நம்புகிறேன். என் உடன் நடித்த நடிகர்கள், பிரியா உட்பட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி.  இந்த படத்தை பார்க்கும்போது ஒரு பாஸிடிவ் எனர்ஜி  உங்களுக்கும் வந்து சேரும். நன்றி

நடிகை காவ்யா பேசியதாவது..,

இது எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நாள், மிக முக்கியமான தருணம். இப்படத்தில் நானும் ஒரு பங்காக இருப்பது மகிழ்ச்சி.  இந்த வாய்ப்பை வழங்கிய மதன், தயாரிப்பாளர்கள் மகேஷ் அண்ணா,  சௌந்தர்யா மேடம் ஆகியோருக்கு நன்றி. என்னுடன் இணைந்து நடித்த அபிஷந்த், அனஸ்வரா, சச்சின், ஹரிஅனைவருக்கும் என் நன்றிகள். கண்டிப்பாக இப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

பாடலாசிரியர் மோகன்ராஜன் பேசியதாவது

மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சௌந்தர்யா மேடம் பாடல் எல்லாம் நன்றாக வந்துள்ளது என சொன்னார்கள். நன்றி. அபி முதன் முதலில் டூரிஸ்ட் ஃபேமிலி படக்கதை சொன்ன போதே வியந்தேன் அவர் சீக்கிரமே ஹீரோவாக மாறுவார் என நினைத்தேன் ஆனல் அடுத்த படத்திலேயே ஆகிவிட்டார். மதனை டூரிஸ்ட் ஃபேமிலி படத்திற்கு முன்பிருந்தே தெரியும். அவர் ரசனையும் என் ரசனையும் ஒன்றாக இருக்கும். இப்படத்தில் உமா தேவி ஒரு பாடல் எழுதியுள்ளார் அதுவும் நன்றாக வந்திருக்கும் என நம்புகிறேன். இப்படத்தில் எனக்கு ஷான் ரோல்டன் இசையில் அற்புதமான பாடல்கள் அமைந்துள்ளது அவருடன் மீண்டும் மீண்டும் வேலை பார்க்க ஆசைப்படுகிறேன். அனஸ்வரா படம் பார்க்கும் எல்லோரும் எனக்கும் இப்படி பெண் கிடைத்தாள் எப்படி இருக்கும் என நினைப்பார்கள். அற்புதமாக நடித்திருக்கிறீர்கள். இப்படம் இந்த வருடத்தின் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும். அனைவருக்கும் வாழ்த்துக்கள். நன்றி.

இயக்குநர் தேசிங் பெரியசாமி  பேசியதாவது.., 

சிவாஜி திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில்தான் தயாரிப்பாளர் மகேஷ்ராஜ் அவர்களை முதன்முறையாக சந்தித்தேன். அன்றிலிருந்து நாங்கள் நல்ல நண்பர்களாகிவிட்டோம். அப்போது இவர் இப்படியொரு திறமையான, முன்னணி தயாரிப்பாளராக வளர்வார் என்று நான் நினைக்கவே இல்லை”  இப்போது அற்புதமான படங்கள் செய்கிறார். சௌந்தர்யா மேடம் இந்தப் படத்தை ரசிகர்களுக்கு பிடிக்க வேண்டுமென, ஒவ்வொரு அம்சத்தையும் பார்த்து பார்த்து செய்துள்ளார். அவரின் அந்த நேர்மை காரணமாகவே இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும்”. இயக்குநர் மதன் அவர்களின் முதல் படம்  போலவே தெரியவில்லை. மிகச் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார். அபிஷந்த் அபாரமான நடிப்பை வழங்கியுள்ளார். எதிர்காலத்தில் அவர் ஒரு பெரிய ஹீரோவாக வருவார். அனஸ்வரா ராஜன்  மிக அருமையாக நடித்துள்ளார் . ஷான் ரோல்டன் மிக அழகான இசையைத் தந்துள்ளார். படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி பேசியதாவது.., 

வித் லவ் ஒரு பக்காவன ஹிட் திரைப்படம். அபிஷந்த் அனஸ்வரா ஜோடி, மிகவும் க்யூட்டாக இருக்கிறது. காவ்யா அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.இந்தப் படத்தின் எடிட்டிங் சிறப்பாக இருக்கிறது. அவரது முதல் படம் போலவே தெரியவில்லை. எடிட்டருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்த திரைப்படம் நிச்சயம் மிகப் பெரிய வெற்றியைப் பெறும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இயக்குநர் சிபி சக்கரவர்த்தி பேசியதாவது..,

படம் பார்த்துவிட்டேன் மிக அருமையாக உள்ளது. சௌந்தர்யா மேடம் பெரிய ஹீரோவை வைத்து இப்படத்தை எடுத்திருக்கலாம். ஆனால் அவர் இந்த புது டீமை நம்பி தயாரித்துள்ளார்.   தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் என்னிடம் இந்தப் படம் எப்படி இருக்கிறது என்று கேட்டார். நான் அவரிடம், “படம் அருமையாக இருக்கிறது; பணம் மழையாகப் பொழியப் போகிறது” என்று சொன்னேன். அதை கேட்ட உடனே தயாரிப்பாளர் கனவு காண ஆரம்பித்துவிட்டார். இயக்குநர் மதன் மிகவும் நம்பிக்கை தரும் இயக்குநராக இருக்கிறார். இன்றைய இளைஞர்கள் இந்தப் படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கும் வகையிலான படமாக இது இருக்கும்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

தயாரிப்பாளர் அருண் விஷ்வா பேசியதாவது..,

ஒரு உண்மையான சினிமா ரசிகனுக்கு, படம் மூலம் கிடைக்கும் பணத்தை விட, ஒரு நல்ல படத்தை பார்த்த பிறகு மனதில் உருவாகும் திருப்திதான் பெரியது. அந்த படத்தை பார்த்து, அதை மனதில் அசைபோட்டு யோசிக்கும் ஒரு நிறைவு கிடைக்கும். அந்த உணர்வை நான் சிறை படத்தை பார்த்த பிறகு அனுபவித்தேன். அதே உணர்வு வித் லவ் படத்தை பார்த்த பிறகும் மீண்டும் கிடைத்தது. தயாரிப்பாளர் மகேஷ்ராஜ் தொடர்ந்து புதுமுக இயக்குநர்களுக்கு ஆதரவளித்து வருகிறார். மகேஷ் போன்ற தயாரிப்பாளர்கள் வெற்றி பெறும்போதுதான், மேலும் மேலும் புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். ஆகவே, இப்படிப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு நாம் அனைவரும் முழுமையான ஆதரவு வழங்க வேண்டும். தயாரிப்பாளர் சௌந்தர்யா மேடமுக்கு என் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

நடிகர் மணிகண்டன் பேசியதாவது..,

நான் இரண்டு நாள் முன்னால் இந்தப் படத்தை பார்த்தேன். உண்மையிலேயே படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. காரணம், இதோட சிம்பிளிஸிட்டி. சின்ன சின்ன எமோஷன்ஸை எவ்வளவு அழகா, பிரமாண்டமா படமாக்கியிருக்காங்கன்னு பார்க்கும்போது ஆச்சர்யமா இருந்தது. பெர்ஃபார்மன்ஸ், ரைட்டிங், சினிமேட்டோகிராஃபி, எடிட்டிங்—எல்லாமே ஸ்கிரிப்ட்டுக்காக வேலை செய்திருக்கிறார்கள். எதுவுமே ஸ்கிரிப்ட்டை கெடுக்காமல் மிக அழகாக இணைந்திருந்தது இந்தப் படத்தோட பெரிய பலம். அபிஷந்த் நடிப்பு , அனஸ்வராவின் நடிப்பு, ஜாஃபர் பண்ணிய கேரக்டர், அனிஷா ரோல்—எல்லாமே ரொம்ப பிரமாதம். குறிப்பா ஒரு சீன், இரண்டு நாள் கழிச்சும் மனசை விட்டு போக வில்லை. இயக்குநர் மதன், மோகன் ராஜ் ஐயா, ஷான் ஐயா, புரொட்யூசர்ஸ்—எல்லாருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்த வெற்றிகள் தொடர்ந்து வரட்டும் வரணும். இந்த படம் ஒரு பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது..,

இந்தப் படத்தில் பணியாற்றிய ஒருவராகச் சொல்கிறேன், இந்த படம் பல காரணங்களுக்காக எனக்கு மிகவும் நெருக்கமானது. டூரிஸ்ட்ஃபேமிலி படத்தின் கதையை முதலில் அபிஷன் சொல்ல வந்த போது, கொஞ்சம் தயக்கமாக இருந்தார். ஆனால் கதை சொல்ல ஆரம்பித்ததும், அவர் ஒரு புதிய ஆளாக மாறிவிட்டார். ஒவ்வொரு காட்சியையும் நடித்துக் காட்டுவார். கண்டிப்பாக ஒரு நடிகராக அவர் மிகப் பெரிய உயரத்திற்கு செல்வார். ஒரு பெண் கதாபாத்திரத்திற்காக நான் விசில் அடிப்பேன் என்று நான் நினைத்ததே இல்லை. ஆனால் இந்தப் படத்தில் அனஸ்வராவின் நடிப்பு என்னை அவரின் ரசிகனாக மாற்றிவிட்டது. எனக்கு ரொம்-காம் படங்கள் மிகவும் பிடிக்கும். ஆனால் இவ்வளவு ஆழமான விஷயத்தை பேசிக்கொண்டே, அதே நேரத்தில் லேசான, ரசிக்கத்தக்க எண்டர்டெய்னராக உருவான ஒரு ரோம்-காம் படமாக இப்படம்  இருக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. படம் மிக அருமையாக வந்துள்ளது. சௌந்தர்யா ரஜினிகாந்த் மேம், ரஜினி சார்க்கு மகளாக  இருப்பது அத்தனை எளிதல்ல. அவருக்கு எந்தவிதமான ஆடம்பரமும் இல்லை. சினிமா துறையில் எனக்கு கிடைத்த ஒரு உண்மையான நண்பர் அவர். அவருக்கு என் நன்றி. இப்படம் கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.

இயக்குநர் மதன் பேசியதாவது..,

இந்தப் படத்திற்கு உறுதுணையாக நின்ற முழு உதவி இயக்குநர்கள் குழுவிற்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் அபிஷந்தின் டூரிஸ்ட் ஃபேமிலி  படத்தில் பணியாற்றினேன். அப்போது அவர் அந்தப் படத்தில் வேலை செய்து கொண்டிருந்த சமயத்தில், என்னுடைய இந்தக் கதையை வாசித்தார். கதையைப் படித்த பிறகு, ‘ரொம்ப நல்ல ஸ்கிரிப்ட்’ என்று சொன்னார். நான் அவரிடம் இந்தப் படத்தில் நாயகனாக நடிப்பீர்களா என்று கேட்டபோது, அதை லைட்டாக எடுத்துக்கொண்டு, ‘கதை நல்லா இருக்கு… ஒரு நல்ல நடிகரை நடிக்க வை’ என்று சொன்னார். அந்த நேரத்தில் அவர் தனது முதல் படத்தின் ரிலீஸுக்காக ஒரு இயக்குநராகவே பெரிய மன அழுத்தத்தில் இருந்தார். அதற்குப் பிறகு, நாயகனைத் தேட ஆரம்பித்தேன். பலரைப் பார்த்தோம்… ஆனால் எதுவுமே சரியாக அமையவில்லை. இதற்கிடையில் டூரிஸ்ட்ஃபேமிலி   படம் வெளியானது, அதன்பிறகு அபிஷந்த் ஒரு பெரிய இயக்குநராக உருவெடுத்தார். அதனால் அவரை மீண்டும் அந்த கதாபாத்திரத்திற்காக அணுக கூட எனக்குத் தயக்கமாக இருந்தது. .ஒரு நாள் நான் மனம் தளர்ந்த நிலையில் இருந்தபோது, என் நண்பர் பாலாவை சந்தித்தேன். ஸ்கிரிப்ட்டை மதிப்பிடுவதில் அவரை நான் மிகவும் உயர்வாக மதிக்கிறேன். அவர் என் ஸ்கிரிப்ட்டை வாசித்து, மிகவும் பாராட்டினார். அதே நேரத்தில், ‘இந்த கதைக்கு அபிஷந்த்தான் சரியான தேர்வு’ என்று சொன்னார். அதற்கு நான், ‘இப்போ அவர் பெரிய இயக்குநர் ஆகிட்டாரே’ என்று கூறினேன். அதற்கு பாலா, ‘நான் உன் சார்பாக அவரிடம் பேசுகிறேன்’ என்றார். பாலா பேசினதும், அபிஷந்த் மிக சந்தோசமாக ஒப்புக் கொண்டார். ஆனால், ‘முதலில் மதனுக்கு  ஓகேவா  கேளுங்க’ என்று பாலாவிடம் சொன்னார். நான் முழு மனதோடு சம்மதம் தெரிவித்தேன்.அபிஷந்தை நாயகனாக முடிவு செய்த பிறகு, தயாரிப்பாளர் மகேஷ் அண்ணாவை சந்தித்து இந்தப் படத்தை தயாரிக்க கேட்டோம். அவர் ஸ்கிரிப்ட்டை மிகவும் ரசித்தார். ஆனால், ‘இந்தப் படத்தை நான் சௌந்தர்யா ரஜினிகாந்த் மேடம் உடன்தான் செய்யப்போகிறேன். அவருக்கு ஸ்கிரிப்ட் பிடித்தால்தான் நான் தயாரிப்பேன்’ என்று கூறினார்.அதற்கு பிறகு, சௌந்தர்யா மேடமிடம் கதை சொல்ல ஆரம்பித்தோம். இரண்டாம் பாதியை நான் சொல்ல ஆரம்பிப்பதற்குள், ‘இந்தப் படத்தை நாம பண்ணலாம்’ என்று அவர் சொன்னது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருந்தது. உடனே பரபரப்பாக ஆரம்பித்தோம், ஒரே வேகத்தில் படம் முடிந்துவிட்டது. எல்லோரது உழைப்பு தான் காரணம். மேனேஜர் பிரசாந்த், சுரேஷ் எனக்கு மிக உதவியாக இருந்தார்கள். எல்லோரும் தங்கள் சொந்தப்படம் போல வேலை பார்த்தார்கள். ஷான் ரோல்டன் மிக அற்புதமான இசையைத் தந்துள்ளார். அபிஷந்திற்கு என்னைப் பிடிக்கும், அவர் என்னை உடனே படம் செய்யுங்கள் என ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார். அவர் எனக்கு மிக நெருங்கிய நண்பராகிவிட்டார். அனஸ்வரா மிக நன்றாக நடித்துள்ளார். இந்தப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகை அனஸ்வரா ராஜன் பேசியதாவது.., 

“என் முழு குழுவிற்கும் ஒரு பெரிய நன்றியை சொல்லிக்கொள்கிறேன். மதன் என்னிடம் கதை சொல்ல வரும் போது, ஒரு காட்சியை படமாக்கி காட்டினார் அது எனக்கு மிகவும் பிடித்தது உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன். இப்படத்தில் என்னுடன் நடித்த அனைவரும் மிகச்சிறப்பான ஒத்துழைப்பைத் தந்தனர். காவ்யா உங்களை தமிழ் ரசிகர்கள் நிச்சயம் மனதார காதலிப்பார்கள்.இந்த குழு என்னை நிறைய சிரிக்க வைத்தது. இந்த சினிமா துறையும், இந்த நகரமும் எனக்கு இன்னும் அதிகமாக பிடிக்கக் காரணமாக இருந்தது இந்த அனுபவம் தான். சௌந்தர்யா மேடம் எனக்கு ஒரு பெரிய அக்கா போல அன்பும் ஆதரவையும் வழங்கினார்.

மதன் நான் வேலை செய்த இயக்குநர்களில் மிகவும் க்யூட்டானவர். அதே சமயம், அவர் என் அம்மாவிற்கு மிகவும் பிடித்தவர், எனக்கு அவர் தந்த மோனிஷா பாத்திரம் ரொம்பவே பிடிக்கும். அந்த கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்ததற்கு நன்றி. மோனிஷா, சத்யா  இடையேயான கெமிஸ்ட்ரி திரையில் வேலை செய்ததற்குக் காரணம், திரைக்கு வெளியே  நடிகர் அபிஷந்த் உடன் எனக்கு இருந்த நட்பு தான். மிகச்சிறந்த ஒத்துழைப்பு தந்த அபிஷந்திற்கு நன்றி. படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. வித் லவ் பிப்ரவரி 6 ஆம் தேதி வருகிறது அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியான் பேசியதாவது.., 

“8 மாதங்களுக்கு பிறகு மீடியாவை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. நாங்கள் ஒரு நல்ல படத்தை உருவாக்கியிருக்கிறோம். அதை பிப்ரவரி 6-ஆம் தேதி மக்களிடம் கொண்டு செல்கிறோம். மக்கள் இந்தப் படத்தை ஆதரித்து, பாதுகாப்பார்கள் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைத்து விருந்தினர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. அபிஷந்த் எதிர்காலத்தில் ஒரு மிகப் பெரிய இயக்குநராக உருவெடுப்பார். அபிஷன் ஒரு தூய மனம் கொண்டவர். அவர் மாறாமல் அப்படியே இருக்க வேண்டும். சௌந்தர்யா அக்காவின் பெயருக்கு பக்கத்தில் என் பெயர் வருவதையே நான் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் நினைக்கிறேன். வித் லவ் படத்திற்கு முன் நீங்கள் பார்த்த சௌந்தர்யா அக்கா, இந்தப் படத்திற்கு பிறகு நீங்கள் பார்க்கும் சௌந்தர்யா அக்காவிலிருந்து வேறுபட்டவராக இருப்பார்” என்றார்.

அபிஷந்திற்குள் இருந்த ஒரு insecurity-யை மாற்றியதற்காக ரஜினிகாந்த் சாருக்கு என் நன்றிகள்.இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து உதவி இயக்குநர்களுக்கும், இயக்கத்தில் வாய்ப்புகள் கிடைக்கும்படி நாம் ஏதாவது செய்ய வேண்டும்” என்று சௌந்தர்யா அக்காவிடம் கேட்டுக் கொள்கிறேன். இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

சௌந்தர்யா ரஜினிகாந்த்  பேசியதாவது.., 

நான் உண்மையிலேயே மிகுந்த உணர்ச்சிவசப்பட்டுள்ளேன். கோவா படம் வெளியாகி இன்றுடன் 16 ஆண்டுகள் ஆகிவிட்டன. தயாரிப்பாளர் என்ற பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டதற்கும் 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.சிபி மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. #Thalaivar173 ஒரு மிகப் பெரிய பொறுப்பு உங்களிடம் உள்ளது. அந்தப் படம் டெட்லியாக இருக்கும். மதன் எதிர்காலத்தில் ஒரு பெரிய இயக்குநராக உருவெடுப்பார்” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார். அபிஷந்த் உள்ளே ஒரு இயக்குநர் இருந்தாலும், இந்த படம் 100 சதவீதம் மதனின் படம் தான். மதன் மிக இனிமையானவர், அந்தக் கணத்தில் வாழத் தெரிந்தவர்.  படத்தில் நிறைய ஆச்சரியங்கள் இருக்கிறது அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகர் அபிஷந்த் ஜீவிந்த் பேசியதாவது..,

“என் முதல் நன்றிகள் அனைத்தும் ரஜினிகாந்த் சாருக்கே. நான் நடிப்பை தொடரலாமா என்ற பல சந்தேகங்கள் எனக்குள் இருந்த காலத்தில், சூப்பர் ஸ்டார் என்னை அவருடைய வீட்டுக்கு அழைத்தார். அப்போது அவர், ‘நீ நடி கண்ணா’ என்று சொன்னார். அந்த ஒரு வார்த்தையிலேயே என் எல்லா இன்செக்யூரிட்டிகளும் உடைந்துவிட்டது. அன்றே — என்ன நடந்தாலும் இந்தப் படத்தை நான் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். இந்தப் படத்தின் வெற்றியை முழுவதுமாக சூப்பர் ஸ்டாருக்கே அர்ப்பணிக்கிறேன்.இயக்குநர் மதனுக்கு  நன்றி , டூரிஸ்ட்ஃபேமிலி பட ஷீட்டிங் போதே என்னை நடிக்கக் கேட்டார்,  “இந்தப் படத்தை நான் செய்ததற்காக எப்போதும் பெருமைப்படுவேன். டூரிஸ்ட்ஃபேமிலி படத்துக்குப் பிறகு எனக்கு நிறைய மரியாதை கிடைத்தது. ஆனால் இந்த படம் வெளியான பிறகு, மதனுக்கு அதைவிட இரட்டிப்பு மரியாதை கிடைக்கும். மகேஷ் அண்ணா ஒரு தயாரிப்பாளர் அல்ல எனக்கு எப்போதும் என் அண்ணன் தான். சௌந்தர்யா மேடம் டூரிஸ்ட்ஃபேமிலி படத்தின் போதே என்னை ஒரு ஸ்டார் என வாழ்த்தினார் அவர் நம்பிக்கையை காப்பாற்றி விட்டேன் என நம்புகிறேன். ஷான் எனக்காக வந்தார் அவருக்கு  நன்றி. அனஸ்வரா பெயர் தான் முதலில் வர வேண்டும் அத்தனை அற்புதமாக நடித்துள்ளார். படத்தில் நடித்த மற்ற அனைவருமே சூப்பராக நடித்துள்ளனர். படம் மிக சிறப்பாக வந்துள்ளது அனைவருக்கும் நன்றி.

முழுக்க முழுக்க நவீன கால இளைஞர்களை கவரும், அருமையான  காதல் கதையாக உருவாகிவரும் “வித் லவ் ( With Love )”  படத்தில்,  டூரிஸ்ட் ஃபேமிலி படம் மூலம் கவனம் ஈர்த்த அபிஷந்த் ஜீவிந்த் நாயகனாக நடிக்கிறார்.   “லவ்வர்,  டூரிஸ்ட் ஃபேமிலி” படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் இயக்கி உள்ளார்

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களில், தொடர் வெற்றிப்   படங்களை வழங்கி வரும் MRP Entertainment நிறுவனம், குட் நைட், லவ்வர் மற்றும் இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிப்படமான டுரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ஹாட்ரிக்  வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்தை தயாரிக்கிறது. Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் இப்படத்தை இணைந்து வழங்குகிறார்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். K.சுரேஷ் குமார் எடிட்டிங் பணிகளை செய்கிறார். ராஜ்கமல் கலை இயக்கம் செய்துள்ளார். உடை வடிவமைப்பாளராக ப்ரியா ரவி பணியாற்றியுள்ளார்.

இப்படம் வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Sri Balaji Vocational & Skill Development Academy Achieves World Record and Empowers Special Children & Women

Chennai, February 1, 2026:

Sri Balaji Vocational & Skill Development Academy marked a historic and socially impactful milestone by successfully organizing a World Record Event at the Anna Centenary Auditorium, Chennai, in association with the World Records Union and the Asia Book of Records.

As part of this grand achievement, 400 Montessori Teacher Training students collectively handcrafted the Montessori Pink Tower and demonstrated 10 different Pink Tower activities within 15 minutes, highlighting exceptional practical skills, creativity, precision, and mastery of Montessori teaching methodology. This remarkable performance set a new benchmark in hands-on learning and early childhood education.

Adding greater social value to the event, the Academy also provided free stalls for Special Children, creating a dedicated platform for them to showcase their talents, creativity, and skills. These special stars received encouragement, visibility, and equal opportunities, reinforcing the belief that every child deserves recognition and empowerment.

Sri Balaji Vocational & Skill Development Academy has been a strong pillar of women empowerment, having trained and empowered over 7,000 women through vocational education, skill development, and self-reliance programs. The institution continues its mission to uplift women, special children, and marginalized communities through inclusive education and practical training.

This combined initiative of world record achievement, special children empowerment, and women skill development reflects the Academy’s deep commitment to social responsibility, inclusive growth, and nation-building through education.

The Academy congratulates all participants and special children for being part of this remarkable and inspiring event, which stands as a symbol of excellence, empowerment, and hope.

US-Based Dr. Baskaran Pillai Launches “Tamil AI” in Chennai; Unveils New Platform www.perarivu.ai

Chennai: The Tamil speaking world heard the keynote address of research scholar Dr Baskaran Pillai, on the most important and evolving topic: “Tamil AI’s Super-Intelligence jb Supersedes ASI (Artificial Super-Intelligence)”, when he referred to “Tolkappiyam and AI”, “Nannool and AI”, “Tirukkural and AI” to base his opinion of how Tamil AI has its roots in our own works of literary and semantic value.

Dr Pillai, who introduced Tamil AI with Super Intelligence, at a grand function in Chennai on January 30, among Indian and foreign scholars, noted that his research has the potential to impact the Tamil diaspora across the globe as Tamil is considered to be a divine language (coming from Lord Shiva and several other Siddhars) as the word agaram gets closer to quantum intelligence and connected to atomic science apart from expounding the spiritual significance.
Stating that Kalladam happens to be the source of AI well back 1100 years ago, Dr Pillai remarked that though everyone wants to get the benefit of Super Intelligence, It may not happen immediately, but there is a possibility of it happening in another decade or so.

Key Announcement: Website Launch
A central highlight of the initiative is the launch of the official Tamil AI platform. The public and researchers can now access tools and information at: www.perarivu.ai

Comparison of AI and RI

It may be noted that in the rapidly evolving landscape of technology, the comparison between Artificial Intelligence (AI) and Real Intelligence gets attention with both forms of intelligence exhibiting impressive capabilities. Both fundamentally differ in their origins, processes, and applications.

Artificial Intelligence is the product of human ingenuity, built through programming and algorithms to perform tasks that typically require human intelligence. Its development involves coding, data input, and machine learning processes. AI operates within the confines of its programming and the data it has been trained on.

Real Intelligence: Human intelligence, on the other hand, is a natural phenomenon resulting from biological evolution. It encompasses cognitive processes such as learning, reasoning, problem-solving, and emotional understanding.

Here comes the groundbreaking theory of Dr. Baskaran Pillai, founder of Phonemic Intelligence, a Tamil language-based AI program which would help the general public of Tamil Nadu as well as AI researchers across the spectrum.

AI scientists and medical researchers from the US and Australia attended the meet and shared their views on the evolution and technology involved in AI.

The international speakers, who shared their views, included:

Stacey Lawson, MBA — Benevolent AI Specialist and Co-Founder, Center for Entrepreneurship, University of California, Berkeley, spoke at length on ”Benevolent AI”

Jessica Srikantia Field, PhD — Academic Director, Institute of Transformational Leadership, Georgetown University, handled the topic: “The Future of AI for Students”

Laura Lin, Esq. — Retired Law Professor, Northwestern University and Corporate Lawyer, touched upon “Legal Issues and AI”

Becky Prostko, MD — Internal Medicine Physician, Private Practice, Florida, dealt on the topic: “Impact of Phonemic Intelligence on STAR Math Results in Detroit Public School Students”.

A. Gowthaman Annamalai, MBBS, MS (Biotechnology) — Physician-Scientist, Perth, Australia,
handled the topic: “fMRI and Brainwave Studies Using Phonemic Intelligence”.

Deepa Boppana, PhD, LLB — Scientific Advisor, Patent Attorney, Chennai, India, analysed the topic “Impact of AI on Intellectual Property Rights”

All you need to know about the founder

Dr. Baskaran Pillai is a US-based inventor, entrepreneur, scientific researcher, and global thought leader. He is the founder of Phonemic Intelligence, a brain-based educational technology researched through fMRI, EEG, and educational studies at institutions, including
Harvard, Brain Science International, SRM University Chennai, and the Detroit Public School System, and implemented statewide in Goa’s 800+ public schools.

Super Intelligence

Dr. Pillai’s Tamil AI initiative (Dr. Pillai Tamil AI YouTube Channel) explores the intersection of Tamil language, ancient wisdom, and modern Artificial Intelligence to foster “Super Intelligence”. It suggests that the inherent intelligence within Tamil letters (beginning with ‘அ’) can be leveraged to boost human brainpower, consciousness, and creativity.

Key concepts of Dr. Pillai Tamil AI:
Tamil and Super Intelligence: Dr. Pillai posits that the Tamil language contains hidden intelligence (psychological and technological) that can be unlocked.
Third Eye and AI: The initiative merges AI with the power of the “third eye” to enhance human awareness, problem-solving, and creativity.
Educational Content: The YouTube channel and associated materials focus on meditation, spiritual training, and using AI to understand complex, non-linear knowledge.
Goal: To help individuals achieve a “Quantum Mind” and utilize AI for self-improvement and higher consciousness.

“க்ராணி” திரைவிமர்சனம்

வெளிநாட்டில் இருந்து மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் ஒரு கிராமத்தில் பழைய வீட்டினை ஒன்றை வாங்கி அங்கு செட்டிலாக நினைக்கிறார் நாயகன் அப்பொழுது அந்த வீட்டிற்கு வரும் அந்த ஊர் பெரியவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு வயதான பாட்டி நடக்க முடியாமல் அந்த வீட்டிலே வந்து விழுகிறார் அவரை காப்பாற்ற நினைக்கும் நாயகன் அதே நேரத்தில் அந்த கிராமத்தில் நடக்கும் ஒரு மர்ம கொலை ஒம்போது வயது குழந்தையின் இதயத்தை மட்டும் அறுத்து எடுத்துச் சென்றிருக்கிறார்கள் அதை விசாரிக்க வரும் திலீப் பணம் சிங்கம் புலியும் காவல் அதிகாரிகளாக பயணப்படுகிறார்கள்
அந்த கொலையை விசாரிக்க அதை செய்தது ஒச்சாயி என்னும் கிழவியும் அவருடைய சூனிய தந்திரமும் தான் என்று சொல்கிறார்கள் முதல் இதை கேட்க நம்ப மறுக்கும் அவர்கள் அதன் உண்மையை தெரிந்து அந்த கிழவியை தேடி வர அந்த வீட்டில் உள்ள அந்த கிழவி அந்த இரண்டு மேல் குழந்தைகளையும் கொண்டு இதயத்தை எடுத்தாரா தனது சூனியத்தை சாதித்தாரா அந்த சூனியக்கார கிழவி யார் அந்த சூனியத்தின் பின்னணியில் நடப்பது என்ன அந்த கதையின் பின்புறம் என்ன என்பதும், அவர்கள் எவ்வாறு அந்த கிழவியின் சூனியத்திலிருந்து தப்பித்தார்கள் என்பதை படத்தின் திரைக்கதை.
இந்த மாதிரி திரைப்படங்கள் எல்லாம் பேய் படமாக தான் வரும் ஆனால் இது பேய் படம் இல்லை இது ஒரு மந்திர தந்திரங்களை பற்றிய ஒரு படமாக எடுக்க நினைத்திருக்கிறார்கள் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் சூனியக்கார கிழவியாக வடிவுக்கரசி முழுவதும் ஆக்கிரமிப்பாக அவர் மட்டுமே

காவல் அதிகாரியாக வரும் திலீபன் சிங்கம்புலி சிங்கம் புலியின் காட்சிகள் வழக்கமான காமெடி கலந்த காட்சிகள் திலீபன் சீரியஸான காவல் அதிகாரி ஆகும் நடித்திருக்கிறார்கள் அவ்வளவே
இரண்டு குழந்தைகள் காது கேட்க முடியாமல் வாய் பேச முடியாமல் அவர்கள் நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது
படத்தின் மிகப்பெரிய காமெடி ஊர் தலைவராக வரும் கஜராஜா கத்தியை தூக்கிக்கொண்டு ஓடுகிறார் ஏதேதோ கதை சொல்லுகிறார் ஆனால் எதற்கும் பெரிதாக பயன்படவில்லை
பொதுவாக இந்த மாதிரி திரைப்படங்களுக்கு பின்னணி இசை என்பது திகிலூட்டும் படமாகவும் பார்ப்பவர்களை பயமுறுத்துவம் செய்ய வேண்டும் அது ஏனோ இந்த படத்தில் மிஸ் ஆகிறது ஒளிப்பதிவும் நம்மை மிரட்டவில்லை

“காந்தி டாக்ஸ்” திரை விமர்சனம்

மும்பையின் ஒரு குடிசைப் பகுதியில் வாழும் வேலை இல்லாமல் ஒருவேளை சாப்பாட்டுக்காக கஷ்டப்படும் விஜய் சேதுபதி, உடல் நலம் சரியில்லாத தனது தாயாரை பார்க்க மிகவும் சிரமப்படுகிறார். அதே நேரத்தில் இன்னொரு பக்கம் மிகப்பெரிய கன்ஸ்ட்ரக்ஷன் அதிபர் அரவிந்த்சாமி தொழிலில் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டு, கோர்ட் மூலமாக அனைத்து சொத்துகளையும் இழந்தவர், இவர்கள் இருவரும் தங்கள் நிலையை காத்துக் கொள்ள தங்கள் நிலையிலிருந்து வெளியில் வர என்ன செய்கிறார்கள், இவர்கள் இருவரும் ஒரே நேர்கோட்டில் எப்பொழுது சந்திக்கிறார்கள், அதன் பிறகு என்ன நடக்கிறது? என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை.
பணம் பத்தும் செய்யும்
பணம் தான் இந்த உலகில் எல்லாவற்றையும் நினைக்கிறது, நீதியை உட்பட நியாயத்தை உட்பட என்பதை நறுக்கென்று சொல்லி இருக்கிறார் இயக்குனர் அந்த பணத்தை பாதுகாக்க பணக்காரன் எப்படி போராடுகிறான், அந்த பணத்தை சம்பாதிக்க ஒரு ஏழை எப்படி கஷ்டப்படுகிறான், என்பதை “காந்தி டாக்ஸ்” என்னும் திரைப்படத்தின் மூலம் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
இந்த படத்தின் மிகப்பெரிய பலமே இந்த படத்தில் எந்தவிதமான வசனங்களும் கிடையாது உடல் மொழி மூலம் மட்டுமே நடிப்பையும் அந்த நடிப்பின் மூலம் கதையையும் சொல்ல இயக்குனர், அதற்கு இரண்டு மிக சிறந்த நடிகர்களை களத்தில் இறக்கி இருக்கிறார்கள் அவர்கள் வேறு யாரும் இல்லை ,விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி இருவரும் தங்களது கதாபாத்திரத்தில் தங்களுடைய முகபாவனைகள் மூலமும் அவ்வளவு அருமையாக எடுத்து சொல்கிறார்கள். இவர்களை தவிர இந்த திரைப்படத்திற்கு வேறு யாரும் சரியாக புரிந்து இருக்க மாட்டார்கள் என்று தான் படம் பார்க்கும் நமக்கு தோன்றுகிறது.
கதாநாயகியாக அதிதி ராவ் இவருடைய நடிப்பும் மிகவும் அருமையாக உள்ளது.
இந்த மாதிரி சிக்கலான திரைக்கதையில் நகைச்சுவையையும் நகைச்சுவை கதாபாத்திரங்களும் இணைத்து இருப்பது மிகப்பெரிய பலம் காட்சி. அமைப்புகள் அதற்கு ஏற்றார் போல் மிகவும் அருமையாக ஒவ்வொரு இடத்தையும் அந்த சூழலுக்கு ஏற்ப மிகவும் அருமையாக வைத்திருக்கிறார்கள்.
இந்த மாதிரியான படத்தின் மிகப்பெரிய பலம் இசை அந்த இசை ஏ ஆர் ரகுமானை தவிர வேறு யாராலும் தந்திருக்க முடியாது இசை தான் இந்த படத்தை அனைத்தையும் பேச வைக்கிறது.
இந்தப் படத்தின் இயக்குனர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் கிட்டத்தட்ட இரண்டு மணி நேர திரைப்படத்திற்கு எந்த வசனமும் இல்லாமல் திரைக்கதையில் விறுவிறுப்பை கொடுத்திருக்கிறார் இயக்குனர் அவரது முயற்சி மிகப் பெரிய சபாஷ்.


காந்தி டாக்ஸ் அதாவது காந்தி படம் போட்ட பேப்பர் நம்மிடையே கிடைக்க எவ்வளவு போராட்டமோ அந்த போராட்டத்தை காந்தி டாக்ஸ் மூலம் எடுத்துக் கூறியிருக்கிறார்