Breaking
October 17, 2024

‘அர்ஜுன் சக்ரவர்த்தி – ஜர்னி ஆஃப் அன் சங் சாம்பியன்’ திரைப்படத்தின் முதல் பார்வை.



ஸ்ரீனி குப்பலா தயாரிப்பில் விக்ராந்த் ருத்ரா எழுத்து மற்றும் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படமான ‘அர்ஜுன் சக்ரவர்த்தி, ஜர்னி ஆஃப் எ அன்சாங் சாம்பியன்’ முதல் பார்வை (ஃபர்ஸ்ட் லுக்) வெளியாகி உள்ளது.

விஜய ராமராஜு மற்றும் சிஜா ரோஸ் முதன்மை வேடங்களில் நடித்துள்ள இப்படத்தில் அஜய், தயானந்த் ரெட்டி, அஜய் கோஷ் மற்றும் துர்கேஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் தோன்றுகின்றனர்.

‘அர்ஜுன் சக்ரவர்த்தி’ திரைப்படம் 1980களில் இந்தியாவுக்காக விளையாடிய கபடி வீரரின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது. ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கையில் ஏற்படும் போராட்டங்கள் மற்றும் வெற்றிகளை திரையில் காட்டும் படமாக இது அமையும்.

இன்று வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக்கில் அர்ஜுன் சக்ரவர்த்தி ஸ்டேடியத்தின் நடுவில் கையில் பதக்கத்துடனும் முகத்தில் பெருமிதத்துடனும் இருப்பதைக் காணலாம். இந்திய கபடியில் அர்ஜுன் சக்ரவர்த்தியின் தாக்கம் 1980களில் இந்திய கிரிக்கெட்டில் கபில்தேவின் தாக்கத்திற்கு இணையாக உள்ளது என்ற வாசகம் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது. விஜய ராமராஜு இந்த பாத்திரத்திற்காக தன்னுடைய உடலை சிறப்பாக கட்டமைத்துள்ளார்.

சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் இப்படத்திற்காக இணைந்துள்ளனர். விக்னேஷ் பாஸ்கரன் இசையமைக்க, ஜெகதீஷ் சீக்கட்டி ஒளிப்பதிவு செய்ய, சுமித் படேல் கலை இயக்கத்தை கவனிக்க பிரதீப் நந்தன் படத்தொகுப்புக்கு பொறுப்பேற்றுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள ‘அர்ஜுன் சக்ரவர்த்தி’, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு பான்-இந்தியா படமாக வெளியாக உள்ளது.

‘அர்ஜுன் சக்ரவர்த்தி: ஜர்னி ஆஃப் எ அன்சாங் சாம்பியன்’ குறித்து பேசிய தயாரிப்பாளர் ஸ்ரீனி குப்பலா, “இது ஒரு திரைப்படமாக  மட்டுமில்லாமல், சவால்களை தாண்டி நம் அனைவரையும் ஊக்குவிக்கும் மனிதர்களின் அசைக்க முடியாத மன உறுதிக்கான எடுத்துக்காட்டாக அமையும். கனவை நனவாக்க முழு மூச்சாக உழைத்தால் இலக்கை எட்டிவிடலாம் என்பதை இப்படம் வெளிப்படுத்தும்,” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஒரு குழுவாக இணைந்து நாங்கள் உருவாக்கியுள்ள இப்படம் குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இதற்காக அயராது பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்ப குழுவினர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. அர்ஜுன் சக்ரவர்த்தியின் வாழ்க்கையை இப்படம் வெளிச்சம் போட்டுக் காட்டுவதால், இந்த பயணத்தில் எங்களுடன் சேர அனைவரையும் அழைக்கிறோம். இது சொல்லப்பட வேண்டிய கதையாகும்,” என்று தெரிவித்தார்.

இயக்குநர் விக்ராந்த் ருத்ரா கூறுகையில், “‘அர்ஜுன் சக்ரவர்த்தி: ஜர்னி ஆஃப் அன்சாங் சாம்பியன்’ படத்தை இயக்கியது பெருமையாக உள்ளது. அர்ஜுன் சக்கரவர்த்தியின் கதையை திரையில் உயிர்ப்பிக்கும் பயணம் சவாலாக இருந்தது. அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றிலிருந்து வெற்றி பிறக்கிறது என்ற பழமொழிக்கு அர்ஜுன் சக்ரவர்த்தியின் வாழ்க்கை ஒரு சான்றாகும். எங்களின் ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் புரிந்து கொண்டு பகிர்ந்து கொள்ளும் திறமையான நடிகர்கள் மற்றும் குழுவினருடன் பணியாற்றியது மிக்க மகிழ்ச்சி,” என்றார்.

“அர்ஜுன் சக்ரவர்த்தியாக விஜய் ராமராஜூவின் உழைப்பு உண்மையிலேயே அசாதாரணமானது. அர்ஜுன் சக்ரவர்த்தியின் பாத்திரத்தை சிறப்பாக வெளிப்படுத்தும் வகையில் எட்டு விரிவான உடல் மாற்றங்களுக்கு தன்னை அவர் உட்படுத்திக் கொண்டார். அவரது நடிப்பால் பார்வையாளர்கள் ஈர்க்கப்படுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மன உறுதி, உழைப்பு மற்றும் ஒருவரின் கனவுகளின் அசைக்க முடியாத நாட்டம் ஆகியவற்றின் கதை இது. இந்த சினிமா பயணத்தின் ஒரு அங்கமாக இருந்து எங்களை ஆதரிக்குமாறு ரசிகர்களை கேட்டுக் கொள்கிறேன் என்று இயக்குநர் விக்ராந்த் ருத்ரா கூறினார்.

“‘டைகர் 3’யின் ஆக்சன் காட்சிகளுக்காக 2 மாதங்கள் வரை என்னை தயார்படுத்தி கொண்டேன்” ; கத்ரீனா கைப்

யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் வரிசை படங்களில் முதன் பெண் உளவாளியான, கத்ரீனா கைப் நடிக்கின்ற சோயா என்கிற கதாபாத்திரம் தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ராவல் ஒவ்வொரு ஒரு அடியிலும் ஆணுக்கு சமமாக காட்டப்பட்டு வருகிறது.. சண்டை என வந்துவிட்டால் எந்த அளவுக்கும் இறங்கி ஒரு கை பார்க்கும் அளவுக்கு அவள் கடுமையான, புத்திசாலித்தனமான மற்றும் கொடுமையான உளவாளி.

கத்ரீனா சோயா கதாபாத்திரத்தை தானாகவே சொந்தமாக உருவாக்கியிருக்கிறார் என்பதுடன் தயாரிப்பாளர்கள் ஒவ்வொரு டைகர் படத்திலும் அவரது கதாபாத்திரத்தை தவறாமல் உச்சநிலைக்கு எடுத்து செல்கிறார்கள். நம்பமுடியாத சண்டை காட்சிகளை செய்துள்ளதற்காக கத்ரீனா கைப் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். மேலும் இதுவரை வெள்ளித்திரையில் வேறெந்த பெண்ணும் செய்திராத அளவுக்கு ஒத்தைக்கு ஒத்தை மோதும் ஆக்சன் காட்சிகளையும் செய்திருக்கிறார். ‘டைகர் 3’யில் இந்த மிகப்பெரிய ஆக்சன் காட்சிகளில் நடிப்பதற்கு தயாராவதற்கு கிட்டத்தட்ட 60 நாட்கள் வரை அவர் பயிற்சியும் ஒத்திகையும் எடுத்துக்கொண்டு தயாராகியுள்ளார்.

கத்ரீனா கூறும்போது, “தன்னுடைய குடும்பத்தையோ அல்லது நாட்டையோ அல்லது மனித நேயத்தையோ காப்பாற்றவேண்டும் என்கிற நிலை வரும்போது ஒரு பெண்ணால் செய்ய முடியாதது என எதுவுமில்லை என்பதைத்தான் ‘டைகர் 3’ காட்டுகிறது. வளர்ப்பவர்களாக மட்டுமல்ல கடுமையான பாதுகாவலர்களாகவும் பெண்களால் இருக்க முடியும் என்பதை மக்களிடம் சொல்வதற்கு சோயா போன்ற ஒரு கதாபாத்திரம் முக்கியமானது மற்றும் அவசியமானதும் கூட.. என்னுடைய திரையுலக பயணத்தில் சோயா அதிகப்படியாக போற்றப்படக்கூடிய கதாபாத்திரங்களில் ஒன்றாக இருக்கும்.” என்கிறார்.

மேலும் அவர் கூறுகையில், “ அவளது மன உறுதியாலும் தைரியத்தாலும் எந்த ஒருவருடனும் அவள் எப்படி பொருத்திக்கொள்ள முடிகிறது என்பதை நான் ரசிக்கிறேன். அவள் ஒரு சண்டையிலிருந்து எப்போதும் பின்வாங்கியதில்லை. ஆக்சன் என வரும்போது ஆணை விட மிகச்சிறப்பாக அவளால் செயல்பட முடியும். சோயாவின் ஆக்சன் ஸ்டைல் என்பது தனித்துவமானது. இந்த டிரைலரில் நீங்கள் பார்த்த சில காட்சிகளை போல மிகவும் சிக்கலான சண்டைக்காட்சிகளை கூட அவளால் எளிதாக மேற்கொள்ள முடியும். சோயா மொத்த எதிரி படைகளையும் எதிர்ப்பவள் மட்டுமல்ல, அவளே அனைவருடன் தானாகவே சண்டையிட கூடியவள்” என்கிறார்.

யஷ்ராஜ் பிலிம்ஸ் சோயா கதாபாத்திரத்தை ஒவ்வொரு படத்திலும் மிகவும் கடுமையாக உருவாக்கி இருக்கிறார்கள் என்கிற உண்மையை கத்ரீனா ரசிக்கிறார். அவர் கூறும்போது, “ஒரு ஜானராக ஆக்சனை நான் விரும்புவதுடன் ஒரு உளவாளியாக நடிக்கவேண்டும் என்கிற என் கனவும் நனவாகியுள்ளது. என்னுடைய பெருமையான அடையாளங்களில் ஒன்றாக இது இருக்கப்போகிறது என்பதை நான் அறிந்திருக்கிறேன். அதனால் என்னுடைய 200 சதவீத உழைப்பை இந்த மூன்றாம் பாகத்திற்கு கொடுத்துள்ளேன். ஒவ்வொரு டைகர் படமும் சோயா கதாபாத்திரத்தை ஒவ்வொரு கட்டமாக உச்சத்திற்கு எடுத்து செல்கிறது. அதற்காக அவள் கடுமையாக போராடி இருக்கிறாள் என்பதுடன் அது ரத்தக்களறியாகவும் இருந்திருக்கிறது. அது தான் நான் எப்போதும் நேசிக்கின்ற இந்த கதாபாத்திரத்தின் உயிர்மூச்சு” என்கிறார்.

கத்ரீனா கூறும்போது, “’டைகர் 3’யின் ஆக்சன் காட்சிகளுக்காக குறைந்தது இரண்டு மாதங்களாவது என்னை தயார்படுத்திக்கொண்டேன். ஒரு சுறுசுறுப்பானவளாக, அதிவேகம் கொண்டவளாக, மிகப்பெரிய பலம் கொண்டவளாக சோயா இருக்கவேண்டும் என நாங்கள் விரும்பினோம். சோயா செய்திருக்கும் ஆக்சன் காட்சிகளை நீங்கள் பார்க்கும்போது உண்மையிலேயே நானும் அதனுடன் சேர்ந்து சுழல வேண்டி இருந்தது என்பதையும் என்னுடைய திரையுலக பயணத்திலேயே மிகவும் கடினமான பயிற்சியாகவும் அது இருந்தது என்பதையும் இதுபோன்ற காட்சிகள் இதற்கு முன்னாள் எந்த ஒரு பெண்ணும் முயற்சித்ததில்லை என்பதையும் நீங்கள் உணர்வீர்கள்” என்கிறார்.

மேலும் அவர் கூறும்போது, “உலகிலேயே மிகச்சிறந்த சண்டைப்பயிற்சி குழுவால் செயல்படுத்தப்பட்ட இந்த ஆக்சன் காட்சிகளை பெரிய திரையில் பார்வையாளர்கள் பார்த்து ரசிக்க இருப்பதை நினைத்து நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்” என்கிறார்.

ஆதித்யா சோப்ராவால் தயாரிக்கப்பட்டு, மனீஷ் சர்மாவால் இயக்கப்பட்டுள்ள இந்தப்படம் வரும் தீபாவளி வெளியீடாக நவ-12 ஞாயிறன்று வெளியாக இருக்கிறது. தனது அடையாள கதாபாத்திரமான யஷ்ராஜ் பிலிம்ஸின் ‘ஓஜி’யான சூப்பர் ஏஜென்ட் டைகராக நடித்துள்ள சல்மான் கானுக்கு ஜோடியாக கத்ரீனா நடித்துள்ளார்.

Phoenix Marketcity Hosts Orphan Children on a Life-Changing Journey along with Round Table India 100 and 20.

‘Flight of Fantasy’ – First time flying clubbed with an inspirational mall experience
Chennai, October 29, 2023 – In a heartwarming collaboration, Phoenix Marketcity, one of Chennai’s
premium malls, joined hands with Madras Round Table India 100 to provide a remarkable and life-
changing experience for underprivileged orphan children from Seva Nilayam NGO, Coimbatore. This special
initiative, orchestrated by Round Table India 100 and 20, Ladies Circle 11, in association with Phoenix
Marketcity, marked a significant milestone for these children, as they embarked on their very first flights,
departing from Coimbatore to Chennai and returning to Coimbatore after a day filled with fun and
laughter.
The day long event not only offered the children an unforgettable first-time flight experience, but also an
array of elating cinema shows, entertainment programs, unique shopping activities and indulging in fine
dining experiences at the mall, ensuring the creation of cherished memories that will last a lifetime.
Mr. Sabari Nair, Centre Director of Phoenix Marketcity, expressed his delight, saying, “The aim was not
just to give them wings, but to imbue their lives with unforgettable memories. We are extremely delighted
and proud to be associated with offering a unique experience to these underprivileged kids and
empowering them by providing our one-of-a-kind mall offerings, making it truly an inspirational experience
for them.”
Tabler Nitin Vimal, Chairman of Madras Round Table 100, and Tabler Rahul Rajan , Chairman of
Coimbatore Round Table 20, remarked, “We sincerely thank Phoenix Marketcity’s support in this initiative
to making a difference in the lives of these children. The kids were filled with awe and wonder as they
soared above the clouds, an experience that is often taken for granted. To make the day even more
special, Phoenix Marketcity, known for its unique shopping experience, extended its full-hearted support
by organizing a series of fun-filled activities through the day along with relishing dining experiences.”
The mall resonated with laughter, joy, and innocent exuberance as the children enjoyed their first 7D
cinema experience followed by having a blast at Snow World, Jungle Adventure, and shopping at Mini So.
Popular restaurants at the mall – Karaikudi, Mad Over Donuts and the Rajdhani also hosted them for
special dining experiences for lunch and dinner.
This marks the third consecutive year that Round Table 100 & 20 and the Ladies Circle 11 have
collaborated to carry out this heartwarming initiative. The collaboration of Madras Round Table India with
Phoenix Marketcity serves as a testament to the power of the community coming together to create such
magical moments for underprivileged children. This extraordinary event underscores the belief that every
child deserves to dream big and reach for the skies, and it is a testament to the unwavering dedication of
Round Table India and the incredible generosity of Phoenix Marketcity Chennai.

எம்.எஸ். மன்சூர் வழங்கும் ‘சிரோ’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

மில்லியன் ஸ்டுடியோஸின் எம்.எஸ்.மன்சூர், திரைப்பட ஆர்வலர்களுக்கு இதுவரை இல்லாத சினிமா அனுபவத்தை அளிக்கும் வகையில் ’வெப்பன்’ திரைப்படத்தைத் தயாரித்துள்ளார். தற்போது அவரின் தயாரிப்பில் ‘சிரோ’ திரைப்படம் அடுத்ததாக உருவாக இருக்கிறது. இந்தத் திரைப்படம் பேண்டசி ஜானரில் சிறந்த தொழில்நுட்பத் தரத்துடன் உருவாக இருக்கிறது. மலையாளத்தில் ’பதினெட்டாம் பாடி’, ’வாலாட்டி’, ’பிரார்த்தனா சாப்ரியா’ போன்ற பிளாக்பஸ்டர் ஹிட்கள் மூலம் பிரபலமான அக்ஷய் ராதாகிருஷ்ணன் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். கமர்ஷியல் பைலட்டான பிரார்த்தனா சப்ரியா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க ரோகிணி, ’போர்தொழில்’ படப்புகழ் லிஷா சின்னு, ’சூப்பர் டீலக்ஸ்’ புகழ் நோபல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 27 – காலை எளிய பூஜையுடன் தொடங்கியது. இந்தப் பூஜையில் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். விவேக் ராஜாராம் இந்தப் படத்தை எழுதி இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு விளம்பரப்படங்கள் இயக்குவது மற்றும் டிசைனராகவும் பணிபுரிந்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகிறார்.

படம் குறித்து தயாரிப்பாளர் எம்.எஸ்.மன்சூர் கூறும்போது, “எங்கள் ‘சிரோ’ படத்தின் படப்பிடிப்பு எளிய பூஜையுடன் தொடங்கியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஒரே ஷெட்யூலில் முழு படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டுள்ளோம். மில்லியன் ஸ்டுடியோவில் உள்ள நாங்கள் எப்போதும் உயர்தர தொழில்நுட்ப அம்சத்துடன் நல்ல கதையம்சம் சார்ந்த திரைப்படங்களையே உருவாக்க விரும்புகிறோம். எங்களின் முதல் தயாரிப்பான ’வெப்பன்’ படத்தில் சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் புரோமோ ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அதுபோலவே, ‘சிரோ’ திரைப்படமும் மூலம் சிறந்த திரையரங்க அனுபவத்தை பார்வையாளர்களுக்குக் கொடுப்பதற்காக சிறந்த சிஜி மற்றும் விஎஃப்எக்ஸ்/அனிமேஷன் கலைஞர்களை இந்தப் படத்தில் பணிபுரிய வைத்துள்ளோம்” என்றார்.

தொழில்நுட்பக்குழு விவரம்:
ஒளிப்பதிவு: கிஷன் சி.வி,
எடிட்டிங்: கோபி கிருஷ்ணா,
தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்: சிவகுமார்,
நிர்வாக தயாரிப்பாளர்கள்: சக்திவேல் & ரிஸ்வான்,
விளம்பர வடிவமைப்பாளர்: தினேஷ் அசோக்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன்

‘கூழாங்கல்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

நயன்தாரா- விக்னேஷ்சிவனின் ரெளடி பிக்சர்ஸ் வழங்கும் அறிமுக இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் யுவன் ஷங்ஜர் ராஜா இசையில் ‘கூழாங்கல்’ படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் அக்டோபர் 27 ஆம் தேதி நேரடியாக வெளியாகி இருக்கிறது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று நடந்தது.

இயக்குநரும் தயாரிப்பாளருமான விக்னேஷ்சிவன், “’ரெளடி பிக்சர்ஸ்’ என்ற பேனரை ஆரம்பிக்கலாம் என்று நினைத்த போது நாங்கள் எடுத்த முதல் படம் ‘கூழாங்கல்’தான். இயக்குநர் ராம் சார் என் குரு போன்றவர். அவர்தான் இந்தப் படம் குறித்து என்னிடம் கூறினார். இந்தப் படம் பார்த்ததும் எங்களுக்கும் பிடித்திருந்தது. உலகளவில் பல திரைப்பட விருது விழாக்களில் பார்வையாளர்களுக்குத் திரையிட்ட போது அவர்களுக்குப் பிடித்திருந்தது. எங்களுக்கு அதிக பெருமையை ஈட்டிக் கொடுத்தப் படம் இது. இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவாக எங்களின் முதல் படம் தேர்வாகி இருந்ததன் மகிழ்ச்சியை வார்த்தையால் சொல்ல முடியாது. அதேபோல, ஸ்பிரிட் அவார்டிலும் இந்தப் படம் நாமினேட் ஆனது. இப்படி பலவற்றை இந்தப் படம் சாதித்துக் கொடுத்தது. எங்கள் முதல் படத்திற்கே இத்தனை அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்பது பெருமை. இதை உருவாக்கிய இயக்குநர் வினோத்திற்கும், படத்தில் நடித்த கருத்தடையான், செல்லபாண்டி ஆகியோருக்கும் நன்றி. பல திரைப்பட விருது விழாக்களுக்கும் சென்ற பிறகே வெளியிட வேண்டும் என முடிவு செய்திருந்தோம். திரையரங்கில் வெளியிட வேண்டும் என்பதுதான் விருப்பம். ஆனால், அதற்கான நேரம் தாண்டி போய்க் கொண்டே இருந்ததால் சோனி லிவ் ஓடிடியில் இப்போது வெளியிடுகிறோம். மிகப்பெரிய இயக்குநர்கள், நடிகர்களின் அறிமுகம் கிடைக்கவும் இந்தப் படம் உதவியது. இதை சாத்தியப்படுத்திக் கொடுத்த இயக்குநர் வினோத்திற்கு நன்றி. உங்கள் அன்பும் ஆதரவும் எங்களுக்கு வேண்டும்” என்றார்.

இயக்குநர் வினோத்ராஜ் பேசியதாவது, “’கூழாங்கல்’ படத்தை முடித்து விட்டு அடுத்து இதை எப்படி எடுத்து செல்லலாம் என பார்த்துக் கொண்டிருந்தபோது, ராம் அண்ணன் கோவா திரைப்பட விழாவில் படத்தைப் பார்த்துவிட்டு ஊக்கப்படுத்தி எங்களை நயன் மேம் விக்னேஷ் சிவன் சாரிடம் அறிமுகப்படுத்தினார். அவர்களுக்கும் படம் பிடித்துப் போய் பல உயரங்களுக்கு ‘கூழாங்கல்’லை எடுத்துச் சென்றார்கள். அவர்களுக்கும் என் படக்குழுவினருக்கும் நன்றி. படம் பார்த்துவிட்டு நீங்கள் என்ன கருத்து சொன்னாலும் ஏற்றுக்கொள்கிறோம். நன்றி!” என்றார்.

‘சீயான் 62’ பட அறிவிப்பு காணொளி வெளியீடு

சீயான் விக்ரம் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படமான ‘சீயான் 62’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தொடர்பான காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.

‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’, மற்றும் அண்மையில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்ற ‘சித்தா’ திரைப்படத்தை இயக்கிய S. U. அருண்குமார் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படத்திற்கு ‘சீயான் 62’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார்.

இயக்குநர் S. U. அருண்குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகும் புதிய திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு காணொளி வடிவில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த காணொளியில் இடம் பிடித்திருக்கும் அனைத்து அம்சங்களும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

‘துருவ நட்சத்திரம்’, ‘தங்கலான்’ ஆகிய படங்களின் புதிய அப்டேட்டுகளால் உற்சாகமடைந்திருக்கும் சீயான் விக்ரமின் ரசிகர்களுக்கு, ‘சீயான் 62’ படத்தை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பின் காணொளி வெளியாகி இருப்பது மேலும் உற்சாகத்தை அளித்திருக்கிறது.

‘லேபில்’ நவம்பர் 10 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில்.

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நடிகர்கள் ஜெய் மற்றும் தன்யா ஹோப் ஆகியோரின் நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘லேபில்’ ஒரிஜினல் சீரிஸை நவம்பர் 10, 2023 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.

வித்தியாசமான களங்களில், அழுத்தமான படைப்புகளை வழங்கி வரும், இயக்குநர் அருண்ராஜா இயக்கும் முதல் வெப் சீரிஸ் என்பதால், ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சமீபத்தில் வெளியான “லேபில்” சீரிஸின் டிரெய்லர் திரை ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்களை குவித்திருப்பதுடன், பொதுப்பார்வையாளர்களிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த சீரிஸை இயக்கியதோடு, இதன் திரைக்கதையையும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். கூடுதல் திரைக்கதை மற்றும் வசனங்களை ஜெயச்சந்திர ஹாஷ்மி எழுதியுள்ளார்.

லேபில் சீரிஸை முத்தமிழ் படைப்பகம் தயாரித்துள்ளனர். இசையமைப்பாளர் சாம் CS இந்த சீரிஸிக்கு இசையமைத்துள்ளார் மற்றும் ஒளிப்பதிவை தினேஷ் கிருஷ்ணன் செய்துள்ளார். B.ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பாளராகவும், வினோத் ராஜ்குமார் கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர்.

யுகபாரதி, மோகன் ராஜா, லோகன் மற்றும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் உட்பட நான்கு பாடலாசிரியர்கள் இந்த சீரிஸுக்கு பாடல்களை எழுதியுள்ளனர். நடன அமைப்பை அசார் மேற்கொள்ள, சண்டைக்காட்சிகளை சக்தி சரவணன் அமைத்துள்ளார்.

இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் வெப் சீரிஸில் ஜெய் மற்றும் தன்யா ஹோப் தவிர, நடிகர்கள் மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன், இளவரசு மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோரும் இணைந்து நடித்துள்ளனர்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி:
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முந்தைய ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்களின் பொழுதுபோக்கு முறையை மாற்றியுள்ளது – அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்வுகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது மற்றும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது.

‘மார்கழி திங்கள்’ திரைவிமர்சனம்

பாரதிராஜா, ரக்ஷனா மற்றும் ஷியாம் செல்வம் அறிமுகத்தில் சுசீந்திரனின் திரைக்கதையில்,மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் இளையராஜாவின் இசையில் வெளிவந்திருக்கும் படம் மார்கழி திங்கள்.


கதை சுருக்கம்,

திண்டுக்கல் மாவட்டம் நெய்க்காரன்பட்டியில் நடக்கும் கதை. பெற்றோரை இழந்து தாத்தாவின் அரவணைப்பில் வாழும் கவிதா. பத்தாம் வகுப்பு படிக்கும் இவருக்கும் அவருடன் படிக்கும் மாணவரான வினோத்திற்கும் படிப்பில், போட்டி வந்து, அந்த போட்டியே காதலாக மாறி நிற்கிறது ,தாத்தாவிற்கு தான் தான் உலகம் என்று நினைக்கும் கவிதா, தாத்தாவிடம் தன் காதலை சொல்ல அந்த காதலை தாத்தா சேர்த்து வைத்தாரா, அல்லது அல்லது தன் சமூகத்தின் மீதான பயத்தில் என்ன முடிவு எடுக்கிறார் என்பதை படத்தின் திரை கதை.
தாத்தாவாக பாரதிராஜா, வயது முதிர்ந்த தனது தளர்ந்த உடலாலும், குரலாலும் அந்த தாத்தாவின் கதாபாத்திரத்திற்கு அழகாக உயிரூட்டி இருக்கிறார். படத்தின் மிகப்பெரிய பலம் பாரதிராஜா. பேதியாக வரும் நடிகை ரக்ஷனா, கவிதாவாக வாழ முயற்சி செய்திருக்கிறார். தனக்கு அளிக்கப்பட்ட கதாபாத்திரத்தை நிறைவாக வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறார். அந்த வயதிற்கே உரிய காதல் ஏமாற்றம் இயலாமை ஆகியவற்றை தன் நடிப்பால் வெளிப்படுத்தி இருக்கிறார். காதலனாக வரும் ஷியாம் செல்வம் எனும் மனதில் நிற்க மறுக்கிறார், காதல் காட்சிகளிலும் உயிரோட்டம் இல்லாமல் இருக்கிறது. இயக்குனர் சுசீந்திரன் தன்னை படத்தில் வில்லனாக காட்டிக் கொள்ள மிகவும் மெணக்கெடுக்கிறார் .,ஆனால் அவர் வில்லன் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை அவருக்கு அந்த கதாபாத்திரம் ஒட்டவில்லை.
அப்புகுட்டி படம் முழுவதும் வருகிறார் ஒரு சில வசனங்கள் மட்டும் பேசுகிறார் இன்னும் அவரை ஆழமாக அழுத்தமாகவும் காட்டி இருந்தால் அவரது நடிப்பு படத்திற்கு பலமாக இருந்திருக்கும்.


கவிதாவின் தோழியாக வரும் நக்க்ஷா படம் முழுவதும் வருகிறார் அனைவரையும் கவனிக்க வைக்கிறார்.
வாஞ்சிநாதன் முருகேசனின் ஒளிப்பதிவு படத்திற்கு இன்னும் அழகு ஊட்டி இருக்கலாம். கிராமத்தின் அழகை எடுத்துக் காட்டி இருக்கலாம். படத்தொகுப்பு இன்னும் விறுவிறுப்பாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
இசை இளையராஜா ஆனால் இளையராஜாவை இசை நமக்கு ஞாபகப்படுத்தவில்லை.

படத்தின் மிகப்பெரிய பலம் கதை நடக்கும் களம் அந்த கதைகளத்தை மிகவும் கவனமாக கையாண்டு இருக்கிறார்கள் திரைக்கதையில். ஒரு சில காட்சிகள் நாடக பாணியில் இருப்பதை தவிர்த்து இருக்கலாம் அந்த காட்சிகள் படத்திற்கு தொய்வை ஏற்படுத்துகிறது. மேலும் ஒரு கிராமத்தின் சூழலை கையில் எடுத்த இயக்குனர் அந்த கிராம மக்களின் வாழ்க்கையை காட்டி இருக்கலாம் அந்த கிராமத்தில் கதாபாத்திரங்கள் மட்டுமே இருப்பதாக காட்டி இருப்பது சற்று நெருடலாக உள்ளது.
கடைசியில் வரும் 20 நிமிட படத்திற்காக அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதை இன்னும் விறுவிறுப்பாக அமைத்திருந்தால் படம் நிச்சயம் நம் மனதை விட்டு நீங்காமல் இருந்திருக்கும் கண்கலங்க வைத்திருக்கும்.
படத்தின் கிளைமாக்ஸ் காட்சி யாரும் எதிர்பாராத ஒன்று மிகவும் வலியான ஒன்று.

மார்கழி திங்கள் காதலுக்கும் சாதிக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் காதல் நெஞ்சங்கள்

OVEREALL RATTING——–3/5

படத்தின் கடைசி 20 நிமிட காட்சிகளுக்காக மட்டுமே இந்த மதிப்பெண்

HCLFoundation’s Sports for Change athletes secure Silver at Asia Rugby U18 Sevens Championship 2023

CHENNAI, India, Oct 27, 2023— In a remarkable display of talent and determination, NS Akshaya and V Divya, both hailing from Tamil Nadu, achieved international recognition by representing India at the prestigious Asia Rugby U18 Sevens Championship 2023. Their exceptional performance at this global sporting event earned them a well-deserved silver medal, highlighting the excellence of Indian rugby on the world stage.

Akshaya and Divya’s journey into rugby began with their participation in the transformative Sports for Change initiative, a program under HCLFoundation, which delivers the corporate social responsibility agenda of HCLTech in India. The duo made the transition to rugby from kho-kho under the coaching of Guna Sekaran Kumar, a certified rugby coach. Their performance at national tournaments representing Tamil Nadu between 2021 and 2023 caught the attention of selectors, earning them places among the top 27 rugby players in India.

“Making it to the national team was an exceptional feat and hearing our national anthem play during the award ceremony was a moment I’ll forever hold dear,” said V Divya,who playsas the fly-half for the team and is pursuing Bachelor of Science in Sports Biomechanics and Kinesiology.

“Empowering lives through education, sports and holistic development is not merely our mission, but a steadfast commitment to creating a brighter, more inclusive future. At HCLFoundation, we believe in the transformative power of education and sports to uplift communities and foster sustainable growth. Through innovative initiatives, we strive to address critical social challenges, ensuring that individuals have the tools and opportunities they need to thrive and no one is left behind,” said Dr. Nidhi Pundhir, Vice President, Global CSR, HCLFoundation.

Ahead of the Asia Rugby U18 Sevens Championship 2023, Akshaya and Divya underwent a rigorous 45-day training program at KIIT University, Bhubaneshwar, which helped them earn spots in the national rugby team.

From tailored nutrition plans to logistical assistance on and off the field, HCLFoundation’s holistic approach ensured that Akshaya and Divya had every opportunity to excel.

Netafim India Launches Toofan, Economical and Clog Resistance Drip Technology for Farmers

  • Aims to cover 25,000 ha of land and reach 35,000 farmers across India by 2025.
  • Engineered with revolutionary TurbuNext™ Technology for multi-season and multi-crops applications.

Mumbai, 27 October 2023: Netafim India, a leading smart-irrigation solution provider, has launched its groundbreaking product, Toofan, an innovative irrigation technology that promises to transform farming for growers of all scales. Through this product, the company aims to cover 25,000 ha of land and reach 35,000 farmers by 2025 across India to revolutionize sustainable farming. The innovative system with best-in-category anti-clogging technology ensures optimal delivery of water and nutrients. The drip line is 40% more strong with greater tensile strength. Toofan by Netafim India is 20% more affordable than the existing and available thin wall, non-pressure-compensated (NPC) drip lines in the Indian market.

Toofan by Netafim India not only makes modern, efficient irrigation accessible to all but also offers a simplified buying process that transcends subsidy limitations. The cost-effective drip technology is now available to farmers of all scales, from large to small holdings, regardless of subsidy eligibility. The drip line is engineered for swift deployment, allowing farmers to cover up to 10 acres in a single day. This revolutionary feature saves both time and resources.

The digital launch concluded on the social media platforms of Netafim India and witnessed the interest of 10 Lakh farmers and dealers. Mr. Randhir Chauhan, Managing Director, Netafim India and Senior Vice President, Netafim Ltd., unveiled the product during the virtual launch. Toofan by Netafim India is an economical choice engineered with revolutionary TurbuNext™ technology and offers unparalleled durability, thus helping farmers achieve better crop yields. The technology is available for any row crops on flat topographies.

Speaking about the launch, Mr. Randhir Chauhan, Managing Director Netafim India and Senior Vice President Netafim Ltd., said, “Netafim India aims to provide an affordable, high-performance micro irrigation system that not only ensures consistent and uniform yields but also aids in reducing the operational costs of farmers. As a farmer’s anthropologist, we understand the dynamics of Indian agriculture and continuously work to bring solutions that meet the evolving needs of our growers. We are proud to be a part of India’s agricultural growth story and committed to bring innovations that transform the lives of farmers. We are delighted to set new standards in clog resistance and enhance Agri performance with Toofan driplines. Netafim’s Toofan is set to reshape the agriculture landscape, empowering farmers to embrace modern irrigation practices without subsidy constraints and offering an unprecedented installation speed. Our revolutionary patented technology is a testament to our commitment to support one of the largest sectors contributing to Indian GDP”.

Regardless of the water quality, Toofan by Netafim India provides lower flow rates with a large filtration area and ensures a consistent water flow to the crops. The TurbuNext™ dripper labyrinth moves the debris out of the dripper, thus preventing clogging. It maintains a unique geometric tooth-shaped structure that increases turbulence. The lower flow rates allow longer lateral lengths and fewer sub-main pipes and connectors. Thus, ultimately saving on system and labor costs per hectare by 20% and 25%, respectively.

This multi-seasonal system is useful for surface or subsurface (SDI) applications. It promises to usher in a new era of agricultural efficiency and empower Indian farmers for sustainable and quality cultivation. This revolutionary product is available in a convenient 600-meter bundle with a 16 mm diameter and dripper flow rates ranging from 1.0 L/H to 2.2 L/H. With Toofan, farmers will experience a remarkable 40% increase in strength, heightened tensile strength, crack resistance, high elongation properties, and enhanced UV resistance, which extends the product’s lifespan.