Breaking
October 18, 2024

பிரபாஸின் ஸ்பிரிட் 2024 ல் வெளிவருகிறது

அனிமல் திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் நிலையில் படக்குழு எட்டுதிக்கும் பறந்து புரமோசனில் ஈடுபட்டு வருகிறது. நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அன்ஸ்டாப்பபிள் வித் என்பிகே படக்குழு கலந்துகொண்டபோது, அவர் இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா அடுத்து பிராபாஸை வைத்து இயக்கவிருக்கும் ஸ்பிரிட் படத்தின் அப்டேட் குறித்து கேட்டது தற்போது வைரலாகி வருகிறது.

அன்ஸ்டாப்பபிள் வித் என் பி கே நிகழ்ச்சியில், தொகுப்பாளராக இருக்கும் நந்தமுரி பாலகிருஷ்ணா, சந்தீப் ரெட்டி வாங்காவிடம், “எனது பேரன் தேவன்ஷ் பிரபாஸின் ஸ்பிரிட் திரைப்படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறார். படப்பிடிப்பு எப்போது தொடங்கவுள்ளது ?” எனக்கேட்க, அதற்கு இயக்குநர், “ ஸ்பிரிட் படம் செப்டம்பர் 2024ல் திரைக்கு வரும்” என்றார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், பத்திரிக்கையிடம் பேசிய தயாரிப்பாளர் பூஷன் குமார், “இப்போது, பார்வையாளர்களுக்கு அனிமல் படத்தை நல்ல முறையில் தர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதன் பிறகே, நாங்கள் ஸ்பிரிட் படத்தை தொடங்குவோம், ஐந்து முதல் ஆறு மாதங்கள் இடைவெளி எடுத்துக்கொண்டு, பிறகு ஸ்பிரிட்டைத் தொடங்குவோம். என்றார். மேலும் இந்த பேட்டியின் போது, ரன்பீர் கபூர் பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் பங்குபெற வேண்டும் என்ற தனது விருப்பர்தையும் தெரிவித்தார்.

இந்நிலையில் நடிகர் ரன்பீர்கபூர் , “அவரது (சந்தீப் ரெட்டி வங்கா) அடுத்த படம் பிரபாஸுடன், அப்படத்தில் அவர் எனக்காக ஒரு சிறிய பாத்திரம் உருவாகினால், நான் அதன் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைவேன். என்றார்.

பிராபஸின் பிரம்மாண்டமான ஸ்பிரிட் படத்தின் புதிய அப்டேட்களால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

தமிழக முதல்வர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நடிகர் ராஜ்குமாரின் திருமணம்

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ எனும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ராஜ்குமாருக்கும், கோயம்புத்தூரை சேர்ந்த சஜு என்ற பெண்ணிற்கும் சென்னையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் இன்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு தமிழக முதல்வர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களுக்கு ஆசி வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

திருமணத்தை நடத்தி வைத்த பிறகு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பேசுகையில், ”
”திருமங்கலம் கோபால் அவர்களின் மனைவியார் சரோஜினி அவர்கள்
நன்றி உரை ஆற்றுகையில் சில செய்தியினை சொன்னார். அதாவது திருமங்கலம் கோபாலின் திருமணத்தையும் தலைவர் கலைஞர் தலைமையேற்று நடத்தி வைத்தார். அவரது மூன்று பிள்ளைகளின் திருமணத்தையும் தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்றது என்று குறிப்பிட்டார். அவரது நான்காவது மகனான ராஜ்குமாரின் திருமணம் என் தலைமையில் நடைபெறுகிறது. இனி அவரது வாரிசுகளுக்கு பேரனோ.. பேத்தியோ.. அவர்களுக்கும் என் தலைமையில் திருமணத்தை நடத்தி வைப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு நிச்சயம் இருக்கிறது. அந்த அளவிற்கு நாங்கள் உரிமை பெற்றவர்கள். அந்த அளவிற்கு எங்கள் மீதும் கழகத்தின் மீதும் ஈடுபாடு கொண்டவர்கள் திருமங்கலம் கோபால் குடும்பத்தினர். திருமங்கலம் கோபால் கட்சிக்காக பாடுபட்டு அரும் தொண்டாற்றியவர். அவர் எப்போதும் மிடுக்காகவே இருப்பார்.

தலைவர் கலைஞர் அவர்களும், பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்களும் திமுகவின் துணை அமைப்பாக இளைஞர் அணி என்ற ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று தீர்மானித்தனர். அதற்காக நான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது ..ஏறத்தாழ 30 சதவீத அளவிற்கு எனக்கு பாதுகாப்பாக என்னுடன் பயணித்தவர் தான் திருமங்கலம் கோபால்.

மதுரை திருமங்கலம் கோபால் மற்றும் திருமதி சரோஜினி தம்பதியினரின் இளைய வாரிசான ராஜ்குமாருக்கும், கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சாகுல் அமீது மற்றும் ஷகிலா பானு தம்பதியரின் மகள் சஜு என்ற பெண்ணிற்கும் திருமணம் செய்ய பெற்றோர்கள் நிச்சயித்தனர். இவர்களது திருமணம் சென்னையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது தமிழக முதல்வர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே. என். நேரு, டி. ஆர். பாலு, சேகர் பாபு, சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் சிற்றரசு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி, திமுகவின் செய்தி தொடர்பாளர் டி. கே. எஸ். இளங்கோவன், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், கன்னியாகுமரி தொகுதி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், திரைப்பட இயக்குநர்கள் புஷ்கர் -காயத்ரி, பாலாஜி தரணிதரன், டெல்லி பிரசாத் தீனதயாள், நடிகர் பக்ஸ் என்ற பகவதி பெருமாள், நடிகை காயத்ரி, இயக்குநர் கார்த்திக், ஒளிப்பதிவாளர் சரஸ் காந்த், இயக்குநரும், தயாரிப்பாளருமான ராஜ், படத்தொகுப்பாளர் கோவிந்த், இயக்குநர் அமிர்தராஜ் உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தி வில்லேஜ் சீரிஸின் சிறப்புக் காட்சி….

பிரைம் வீடியோவில் தமிழ் திகில் திரைப்படமான தி வில்லேஜ் சீரிஸின் சிறப்புக் காட்சி சென்னையில் நடைபெற்றது !!

புஷ்கர்-காயத்ரி முதல் சுதா கொங்கரா வரை, தமிழ்த் திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் தொலைக்காட்சி பிரபலங்கள் வரை பலர் கலந்துகொண்டனர் !!

பிரைம் வீடியோ மிகவும் எதிர்பார்ப்பிலிருக்கும் தமிழ் திகில் ஒரிஜினல் சீரிஸான, தி வில்லேஜ் சீரிஸின் சிறப்புக் காட்சியைச் சென்னையில் நடத்தியது. இந்நிகழ்வில் நடிகர்கள் மற்றும் படைப்பாளர்களுடன், தமிழ்த் திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் தொலைக்காட்சித் துறையைச் சேர்ந்த பிரபல முகங்களும் கலந்து கொண்டனர், அவர்கள் இந்த திகில் தொடரைப்ப்பார்த்து முழு மனதுடன் தங்கள் ஆதரவையும் அன்பையும் தெரிவித்தனர்.

தி வில்லேஜ் சீரிஸை மிகவும் ரசித்து, முதல் 3 எபிசோட்களைப் பார்த்த திரை படைப்பாளிகள் புஷ்கர்-காயத்ரி …“தி வில்லேஜின் முதல் மூன்று எபிசோட்களை நாங்கள் பார்த்துவிட்டோம், இது மிகவும் சுவாரஸ்யமான படைப்பு. இப்போது பிரைம் வீடியோவில் எல்லா எபிசோட்களும் இருப்பதால், உடனடியாக மீதமுள்ளவற்றைப் பார்க்க மிகவும் ஆவலாக உள்ளோம், இதுவே இதைப் பற்றிச் சொல்லக்கூடிய சிறந்த விஷயம் !”

இயக்குநர் சுதா கொங்கரா, சீரிஸ் இயக்குனர் மிலிந்த் ராவைப் பற்றிய ஒரு வேடிக்கையான விசயத்தைப் பகிர்ந்துகொண்டார், “மிலிந்துக்கு திகில் பிடிக்கும் என்று எனக்குத் தெரியும், அவர் நடு இரவில் தான் எப்போதும் திகில் படங்களைப் பார்ப்பார்! அவன் திகில் படைப்புகளை கண்டிப்பாக சிறப்பாக தருவான் என்று எனக்குத் தெரியும்!” என்றார்.

நடிகர் சிபி சத்யராஜ் கூறுகையில், “இந்தத் சீரிஸ் மிகவும் சிறப்பான தமிழ் சீரிஸாக உள்ளது. மிலிந்தின் முதல் படமான அவள் திகில் ட்ரெண்ட் செட்டராக இருந்தது. அதே போல் இந்தத் சீரிஸை நீங்கள் அனைவரும் பார்த்து மகிழ்வீர்கள் என்று நம்புகிறேன்.

நடிகரும் பாடகருமான விஜய் யேசுதாஸ் கூறுகையில், மிலிந்தின் இயக்கம் குறித்துப் பாராட்டினார், “இந்த கதையை 6 அத்தியாயங்களில் எடுப்பது எளிதான விஷயம் அல்ல, மிலிந்த் அதை நன்றாகச் செய்துள்ளார். முழு குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள். ”

தயாரிப்பாளர் ஜி தனஞ்செயன் கூறுகையில், “தி வில்லேஜ் ஒரு புது யுக அனுபவம். OTT இல் மிகவும் தனித்துவமான ஒன்றைக் கொண்டு வந்த பிரைம் வீடியோவிற்கு வாழ்த்துகள்.” என்றார்

தி வில்லேஜ் சிறப்புத் திரையிடலில் படக்குழுவினருடன் புஷ்கர்-காயத்ரி, சுதா கொங்கரா, ஆண்ட்ரூ லூயிஸ், கார்த்திக் சுப்பராஜ், சிபிராஜ், இயக்குநர் பிரியா, விஜய் யேசுதாஸ், குமரன் தங்கராஜன், சாருகேஷ் சேகர் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

MSME Minister Thiru. T.M. Anbarasan Launches ‘Startup Tamizha’ Reality TV Showfor a Wide Range of Startups


. This novel initiative has already garnered funding commitment to the tune of Rs. 200 crore
from reputed entrepreneurs, and angel investors
.To be broadcast on a premier TV channel, this show will host the pitches of 50 finalists
per season, who will be selected by an eminent jury
Chennai, November 24, 2023
Thiru. T.M. Anbarasan, Hon’ble Minister for MSME, launched ‘Startup Tamizha’, Tamil Nadu’s first
Business Pitch Reality TV show, which aims to identify 50 promising startups from across the state and to
facilitate funding for their ventures from reputed entrepreneurs, and angel investors.
Startup Tamizha has already generated a funding commitment to the tune of Rs. 200 crore from reputed
entrepreneurs and angel investors. Refex Group has committed to invest Rs. 100 crore, while Dr.
Velumani of Thyrocare and Pontaq are investing Rs. 50 crore and Rs. 25 crore respectively. Besides,
Native Lead Angels is bringing in Rs. 10 crore – and the rest comes from other investors.
A novel initiative of StartupTN, the Government of Tamil Nadu’s nodal agency for Startup and
innovation, the show will have three seasons. The first season is set to go into production by February
2024, and will be telecast on a popular Tamil TV channel. The show will be produced and managed by
Brand Avatar, Blue Koi, and Refex Capital.
The launch event witnessed the special addresses by Tmt. Archana Patnaik, I.A.S., Secretary to
Government, MSME Department, Mr. V. Arun Roy, I.A.S., Secretary to Government, Industries
Department, and Mr. V. Vishnu, I.A.S., MD & CEO of Guidance Tamil Nadu. Thiru. Sivarajah
Ramanathan, Mission Director & CEO, StartupTN, set the tone for the initiative and the event. Dr. A.
Velumani, Founder, Thyrocare, delivered the keynote address. Among the dignitaries who took part in
the event were Mr. Hemachandran L., Founder & CEO, Brand Avatar, Mr. Balachandar R., Founder,
Blue Koi, and Mr. Dinesh Kumar Agarwal, Group CEO, Refex Group.
Commenting about the initiative, Mr. Sivarajah Ramanathan said, “Startup Thamizha exemplifies the
collective commitment of the Tamil Nadu Government through StartupTN in fostering a thriving startup
ecosystem, fostering economic growth and realising the Hon’ble Chief Minister’s vision for a prosperous
Tamil Nadu. A pioneering initiative, the Startup Thamizha platform aims to augment a conducive
ecosystem for grassroots level, impact, and women entrepreneurship and to bring together founders,
investors, mentors and support system partners for a synergised growth.”
Aspiring entrepreneurs who are interested in being a part of this transformative journey can
visit www.startupthamizha.tv and register their names. The applying startups will undergo a rigorous
five-stage screening process, engaging industry experts, investors and key ecosystem members. From
this pool, 50 startups will be shortlisted, each poised for mentorship and training on presenting their
ideas on mainstream television to primetime audiences.

பிரவீன் கிரி இயக்கத்தில் ‘மான்குர்த்’

ஜியோ மாமி விருது பெற்ற பிரவீன் கிரி இயக்கத்தில் அன்ச்செயின்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் மும்பையை பின்னணியாக கொண்ட விறுவிறுப்பான திரைப்படம் ‘மான்குர்த்’ வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

பல்வேறு விருதுகளை பெற்ற குறும்படங்களை இயக்கியுள்ள பிரவீன் கிரி, இயக்குநர் இமயம் திரு பாரதிராஜா முதன்மை வேடத்தில் நடிக்கும் திரைப்படம் ஒன்றிலும் பணியாற்றி இருக்கிறார்.

அவரது ‘மான்குர்த்’ திரைப்படம் மும்பையின் பரபரப்பான வீதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. அங்கு வசிக்கும் இரண்டு சாதாரண சிறுபான்மையினர் ஒரு அசாதாரண அரசியல் விளையாட்டில் அவர்களுக்கே தெரியாமல் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இடைத்தேர்தலை முன்னிட்டு ஒரு அரசியல் கட்சி செய்யும் சதியில் முகமதும் அவரது மகள் நிஷாவும் பலிகடா ஆகிறார்கள். என்ன செய்வது என்று அவர்கள் தவிக்கும் நிலையில், நல்லெண்ணம் கொண்ட தலைவர் ஒருவர் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறார். வஞ்சகர்கள் வலையில் இருந்து அவர்களால் தப்பிக்க முடிந்ததா இல்லையா என்பதை பரபரப்பாக சொல்லும் வகையில் ‘மான்குர்ட்’ உருவாகி உள்ளது.

மதங்களை தாண்டிய மனிதநேயத்தை பேசும் இப்படத்திற்கு ஹரிஷ் ராஹித்யா இசையமைத்துள்ளார், விஷ்வா ஒளிப்பதிவு செய்துள்ளார், ப்ரியன் பிரசாத் படத்தொகுப்பை கவனிக்க, ரிகேஷ் குமார் கலை இயக்கத்தை கையாண்டுள்ளார்.

படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ‘மேதகு’ புகழ் ராஜா, சௌந்தர்யா மனோகரன், சையத் பாஷா மற்றும் அல்கா சக்சேனா ஆகியோர் நடித்துள்ளனர். பாரதி கோலப்பன், எம்.ராஜா மற்றும் அம்மு பைரவி ஆகியோர் முக்கிய பங்களித்துள்ளனர். பன்முகத்தன்மை மிக்க ‘மான்குர்த்’ கதையில் தமிழ், இந்தி, மராத்தி போன்ற பல்வேறு மொழியினர் நடித்துள்ள நிலையில் பன்மொழித் திரைப்படமாக இது உருவாகி உள்ளது.

திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பங்களிப்போடு சுயாதீன திரைப்படமாக தயாராகியுள்ள ‘மான்குர்த்’, உலகெங்கும் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடபட இருக்கிறது.

Witness Magic Of Love- Theatrical Trailer Of Natural Star Nani, Mrunal Thakur, Shouryuv, Vyra Entertainments Hi Nanna is out now

The day has arrived. The theatrical trailer of Natural Star Nani’s highly anticipated Pan India film Hi Nanna directed by debutant Shouryuv with Vyra Entertainment bankrolling it has been unleashed just a while ago.

The trailer opens with Nani narrating a tale of a king, and when there’s no mother character in it, the girl requests him to narrate her mother’s story. He narrates everything but hides something about her mother. There is so much emotion in the story, thus the girl doesn’t want to stress his father about her mother. The intriguing factor in the story is she imagines the new friend Yashna (Mrunal) as her mother. However, Shruti Haasan was later revealed as Viraj’s wife and Mahi’s mother.

As the trailer divulges, there are many layers in the story. There is magic in the love story, whereas the father-daughter emotion will make everyone sentimental. Director Shouryv checked all the boxes of a wholesome family entertainer. He presented the story in a very new pattern, which sets it apart from regular family entertainers.

It’s again new to see Nani in a completely family man role, after a mass character in Dasara. The actor scores more than distinction for the character arc as a loverboy to a father of a kid. His brilliant performance makes this extra appealing. Mrunal Thakur has given a soulful performance, whereas Shruti Haasan is a surprise package. Baby Kiara Khanna is a doll and her expressions are just adorable.

Be it romantic sequences or emotional episodes, you will find some top-notch camera angles as well as lighting, thanks to cinematographer Sanu Varghese. The picturesque locations of Goa, Coonoor, etc. are presented in the most beautiful possible way. Hesham Abdul Wahab’s background score definitely adds to the class as well as the emotional connection elegantly. The production values of Vyra Entertainments are exceptional. The production deign of Avinash Kolla is another positive aspect.

On the whole, Hi Nanna trailer offers an emotional ride with some great performances and superlative technical work with a mix of commercial elements. Surely, Hi Nanna is going to shake the box office when it arrives in cinemas.

Mohan Cherukuri (CVM) and Dr Vijender Reddy Teegala produced the movie on a high budget. Praveen Anthony is the editor and Satish EVV is the executive producer.

Hi Nanna is slated for release in Tamil, Telugu, Kannada, Malayalam, and Hindi languages on December 7th.

Cast: Nani, Mrunal Thakur, Baby Kiara Khanna

Technical Crew:
Director: Shouryuv
Producers: Mohan Cherukuri (CVM) and Dr Vijender Reddy Teegala
Banner: Vyra Entertainments
DOP: Sanu John Varughese ISC
Music Director: Hesham Abdul Wahab
Production Designer: Avinash Kolla
Editor: Praveen Anthony
Executive Producer – Satish EVV
Costume Designer: Sheetal Sharma
PRO: Nikil Murukan

அமீர் அறிக்கை.

சென்னை
24.11.2023

மரியாதைக்குரிய பத்திரிகை, தொலைக்காட்சி, வலைத்தள, வலை ஒளி, வானொலி, பண்பலை மற்றும் அனைத்து ஊடக நண்பர்களுக்கு வணக்கம்.!
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா என் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கும், பரப்பிய அவதூறுகளுக்கும், என்னைப் பற்றிக் கூறிய வரம்புமீறிய வார்த்தைகளுக்கும், உண்மைக்குப் புறம்பான செய்திகளுக்கும் பதிலளிக்க கோரி என்னிடம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்க கூடிய அனைத்து ஊடக நண்பர்களுக்காகவே இந்த அறிக்கை.
”பருத்திவீரன்” தொடர்பான வழக்கு, இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்ற காரணத்தினால், வழக்கறிஞரின் அறிவுறுத்தலின் பேரிலேயே நான் இன்னும் பதிலளிக்காமல் இருக்கிறேன். அதன் காரணமாகவே, ஊடக நண்பர்களைச் சந்திக்காமலும் இருக்கிறேன். இதில், வேறு எந்த காரணமும் கிடையாது. இருந்தாலும், தொடர்ச்சியாக இப்பிரச்னை ”YOUTUBE” உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் சென்று கொண்டிருக்கின்ற காரணத்தினால், சில விளக்கங்களை அளிக்க நான் விரும்புகிறேன்.
“பருத்திவீரன்” தொடர்பாகவும், என்னுடைய திரைப்பயணம் தொடர்பாகவும், ஞானவேல்ராஜா கூறிய கருத்துகளில் ஒன்றில் கூட உண்மையில்லை. அனைத்தும், புனையப்பட்ட பொய்கள். இது முழுக்க முழுக்க சமூகத்தில் எனக்கு இருக்கும் கண்ணியத்தைக் குறைக்கும் நோக்கத்தோடும், திரைத்துறையில் என்னுடைய பயணத்தை தடைசெய்யும் நோக்கத்தோடும் திட்டமிட்டு நடத்தப்படும் பொய்ப்பிரசாரமே.
”பருத்திவீரன்” திரைப்படம் தொடர்பாக, எனக்கும் ஞானவேல்ராஜா அவர்களுக்கும் இடையே எந்த ஒரு ஒப்பந்தமும் போடப்படவில்லை. எனவே, இல்லாத ஒப்பந்தத்தை நான் மீறவும் இல்லை. படத்தின், முதல் கட்டப் படப்பிடிப்புக்கு அவர் வழங்கிய தொகையைத் தவிர அடுத்தடுத்த காலகட்டங்களில் படப்பிடிப்புக்கான தொகையைத் தராமல் படத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு காணமல் போனவர் அவர்.
அதன் பின்னரே, நான் எனது “TEAMWORK PRODUCTION HOUSE” நிறுவனத்தின் மூலம் அந்தப் படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி முடித்தேன்.
மேலும், “பருத்திவீரன்” படப்பிடிப்புச் சூழல் முழுவதையும் முற்றாக அறிந்த, இன்றைக்கு திரைத்துறையில் உயர்ந்த இடத்தில் இருக்கும் என் சகோதரர்களும், பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இப்பிரச்னையில், அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது எனக்கு வியப்பளிக்கிறது.

”பருத்திவீரன்” திரைப்படம் எந்த சூழலில் தொடங்கப்பட்டது? தொடங்குவதற்கான காரணம் என்ன? என்ற உண்மையை அறிந்த பெரிய மனிதர்களும், எனக்கு வாக்கு கொடுத்து ”படத்தை நீங்களே வெளியிடுங்கள்” என்று சொன்னவர்களும்,
அன்றும் வேடிக்கை பார்த்தார்கள்.! இன்றும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.!
”பருத்திவீரன்” திரைப்படத்தின் இறுதிக்கட்ட பஞ்சாயத்தை, நடத்தியவர்களும், முடித்து வைத்தவர்களும், சாட்சிக் கையெழுத்திட்டவர்களும் இன்றளவும் அமைதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில், 17 வருடங்களுக்கு முன்பு என் கை பிடித்து வாக்கு கொடுத்தவரின் அன்புக்கு கட்டுப்பட்டு வேலை செய்த நான், இன்று சமூகத்தில் குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருக்கிறேன்.
நடந்த உண்மைகளைச் சொல்வதற்கு எனக்கு சில மணி நேரங்களே போதுமானது. ஆனால், அது பலருடைய வாழ்க்கையில் புயலைக் கிளப்பி விடும் என்ற காரணத்தினாலும், ஒட்டு மொத்த திரையுலகத்தையும் திசை திருப்பி விடும் என்ற காரணத்தினாலுமே நான் அமைதி காக்கிறேன். வேறு எதற்காகவும் அல்ல.!
உண்மை இப்படியிருக்க, ஞானவேல் என்னைப் பற்றி கூறிய விசயங்களால் நான் அடைந்த மன உளைச்சலை விட, என் குடும்பத்தாரே அவரால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற போதிலும், நானும், என் குடும்பத்தாரும் இதையெல்லாம் கடந்து வந்து விடுவோம், துளியும் அவரது சூழ்ச்சிக்கு பலியாக மாட்டோம் என்பதைத் தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், அவரை வழிநடத்தும் பெரியவர்கள், ”இதுபோல் யாரையும் அவதூறாக பொதுவெளியில் பேச வேண்டாம்,” என அவருக்கு அறிவுறுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
பூமியில், “அநியாயமும், அக்கிரமங்களும், அநீதியும் தலை விரித்தாடுகின்ற போது கண்ணன் அவதாரம் எடுப்பார்..” என்ற கீதையின் வாசகத்தைப் போல, தமிழகத்தில் நடக்கும் இந்நிகழ்வுகளுக்கு, அமெரிக்காவில் இருந்து நடந்த உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த என்னுடைய நண்பரும், தயாரிப்பாளருமாகிய திரு.கணேஷ் ரகு அவர்களுக்கு என் உளப்பூர்வமான, கோடானகோடி நன்றிகள்.!

“பருத்திவீரன்” தொடர்பான வழக்கு மற்றும் விபரங்கள் அனைத்தும் 17 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாலும், அதில் தொடர்புடைய ஒரு சிலருக்கு மட்டுமே உண்மை தெரியும் என்கிற நிலையில், என் பக்கம் நியாயம் இருக்கும் என்ற நம்பிக்கையோடு எனக்கு ஆதரவளித்து, எனக்காக குரல் கொடுத்த, என்னைத் தெரியாத, என்னோடு உறவாடாத அனைத்து செய்தியாளர்களுக்கும், என் மீது அன்பு கொண்ட பொதுமக்களுக்கும் நிச்சயமாக நான் நன்றிக்கடன் பட்டவனாக இருக்கிறேன். என்றென்றும் அவர்களுக்கு நன்றி.!
”பருத்திவீரன்” பட பிரச்னை மீண்டும் மீண்டும் ’YOUTUBE” உள்ளிட்ட சமூக வளைத்தளங்களில் தொடராமல் இருக்க வேண்டும் என்பதே என் ஆசை.
நான், “மாயவலை” படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் இருப்பதால், இனியும், இந்த பிரச்னை தொடர்பாக என்னை யாரும் அணுக வேண்டாம் என்று பணிவோடு ஊடக நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.!
”வீழ்ந்து விடாத வீரம், மண்டியிடாத மானம்..”
”இறைவன் மிகப் பெரியவன்”

அன்புடன்,

அமீர்.

Dunki Drop 2 – Lutt Putt Gaya’s sweet melody wins hearts, garners 30 million views, making it the most watched video worldwide in the past 24 hours

The soulful vocals by Arijit and music by Pritam brings back the magic of falling in love!

Dunki Drop 2 – Lutt Putt Gaya is the new melody of love that is ruling the hearts of the audience. Bringing back the innocence of love in a song that is bound to be n your playlist.

Garnering 30 million views in just 24 hours, the first song from the film has indeed come as an absolute treat for the audiences who have been eagerly looking forward to seeing more of the endearing world of Rajkumar Hirani.

The loved song left fans with a lot of curiosity around the film and their favourite superstar SRK, and it was certainly witnessed on the #AskSrk session conducted post the launch , where the fans were seen expressing their love for the song to the superstar.

Dunki features an ensemble cast, with colourful characters portrayed by exceptionally talented actors, Boman Irani, Taapsee Pannu, Vicky Kaushal, Vikram Kochhar, Anil Grover, starring along with Shah Rukh Khan. A JIO Studios, Red Chillies Entertainment, and Rajkumar Hirani Films presentation, produced by Rajkumar Hirani and Gauri Khan. Written by Abhijat Joshi, Rajkumar Hirani, and Kanika Dhillon, Dunki is a Christmas release, hitting theatres on the 21st of December 2023.

டெல்லி தெருக்களை அதிர விட்ட அனிமல் படக்குழு

ரன்பீர் கபூர், ரஷ்மிகா மந்தனா, பாபி தியோல், பூஷன் குமார், சந்தீப் ரெட்டி வங்கா மற்றும் அனிமல் படக்குழுவினர், டெல்லி தெருக்களில் மக்கள் கூட்டத்தோடு இணைந்து பிரமாண்டமான முறையில் அனிமல் டிரெய்லர் வெளியீட்டு விழாவினை கொண்டாடினர்.

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கும் அனிமல் திரைப்படம், ரசிகர்களின் உச்சகட்ட எதிர்பார்ப்பில் உள்ளது. இதுவரை வெளியான பாடல்கள் மற்றும் டீசர் மூலம் ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அனிமல் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை மேலும் கவர்ந்துள்ளது. அனிமல் பட டிரெய்லர் வெளியீட்டு விழா, டெல்லி இதுவரை கண்டிராத மிகப்பெரிய நிகழ்வாக நடந்தேறியுள்ளது.

ஒரு பிரமாண்டமான வெளியீட்டு நிகழ்வின் மூலம் டெல்லி தெருக்களை புயலாய் தாக்கி கொண்டாட்ட மனநிலைக்கு கொண்டு சென்றுள்ளது அனிமல் படக்குழு. ரன்பீர் கபூர், ரஷ்மிகா மந்தனா, பாபி தியோல், பூஷன் குமார், சந்தீப் ரெட்டி வங்கா மற்றும் படக்குழு 11 சகோதரர்களுடன் டெல்லி தெருக்களில் நுழைந்ததால் ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளினர் . இது மட்டுமல்ல, ரன்பீரும் பாபியும் திடீரென மேடையில் நுழைந்து ரசிகர்களுடன் உரையாட, அங்கு கூடியிருந்த பெரும் கூட்டம் கூக்குரலிட்டது. அனிமல் டிரெய்லர் வெளியீட்டு விழா டெல்லி நகரம் கண்ட மிகப்பெரிய நிகழ்வாகும். 100 க்கும் மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் அனிமல் டிரெய்லர் வெளியிடப்பட்டது. முழுக் குழுவும் கருப்பு உடையில் இருந்தது, வெளியீட்டு நிகழ்வில் அனிமல் போட்டோ ஆப் அங்கு அமைக்கப்பட்டிருந்தது சிறப்பம்சமாக இருந்தது.

பூஷன் குமார் மற்றும் கிரிஷன் குமாரின் டி-சீரிஸ், முராத் கெடானியின் சினி1 ஸ்டுடியோஸ் மற்றும் பிரனய் ரெட்டி வாங்காவின் பத்ரகாளி பிக்சர்ஸ் ஆகியோர் இணைந்து அனிமல் படத்தை தயாரித்துள்ளனர். க்ரைம் டிராமா வகையைச் சேர்ந்த இப்படம், டிசம்பர் 1, 2023 அன்று பார்வையாளர்களை நெஞ்சம் அதிரும் பரபரப்பான பயணத்தில் அழைத்துச் செல்லும்.

‘தி வில்லேஜ்’, இந்தியாவின் 54 ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் காலா பிரீமியரில் திரையிடப்பட்டது.

தயாரிப்பாளர் பி. எஸ். ராதாகிருஷ்ணனின் ஸ்டுடியோ சக்தி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் மிலிந்த் ராவ் எழுதி இயக்கியிருக்கும் இணையத் தொடர் ‘தி வில்லேஜ்’. இந்திய அளவிலான ஸ்ட்ரீமிங்கில் இதுவரை கண்டிராத திகில் ஜானரிலான படைப்பை இந்த தொடர் ஆராய்கிறது.

‘தி வில்லேஜ்’ எனும் நீண்ட வடிவிலான தமிழ் ஒரிஜினல் திகில் இணையத் தொடரில் நடிகர் ஆர்யா முதன் முதலாக அறிமுகமாகிறார். இவருடன் திவ்யா பிள்ளை, ஆழியா, ‘ஆடுகளம்’ நரேன், எம். ஜார்ஜ், ‘பூ’ ராம், முத்துக்குமார், கலைராணி, ஜான் கொக்கன், பூஜா, ஜெயப்பிரகாஷ், அர்ஜுன் சிதம்பரம், ‘தலைவாசல்’ விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

நவம்பர் 24ஆம் தேதி முதல் இந்தியாவிலும், உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் பிரைம் வீடியோவில்‌ ‘தி வில்லேஜ்’ திரையிடப்படவுள்ளது.

கோவா -இந்தியா- நவம்பர் 22 2023- இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் பொழுது போக்கு தளமான பிரைம் வீடியோ, இன்று நடைபெற்று வரும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் 54ஆவது பதிப்பில் மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் தமிழ் ஒரிஜினல் தொடரான ‘தி வில்லேஜ்’ எனும் இணையத் தொடரின் முதல் அத்தியாயம் திரையிடப்பட்டது. ஆசியாவின் பழமையான மற்றும் இந்தியாவின் மிகச்சிறந்த சர்வதேச திரைப்பட விழாவில் ஆர்யா, திவ்யா பிள்ளை, இயக்குநர் மிலிந்த் ராவ், பிரைம் வீடியோ ஒரிஜினல்ஸ் இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் தலைவரான அபர்ணா புரோகித் ஆகியோர் அடங்கிய குழுவினருடன் இந்த சர்வதேச திரைப்பட விழாவின் நிர்வாக இயக்குவரான ஸ்ரீ பிருதுல் குமார் மற்றும் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் இணை செயலாளர் (திரைப்படங்கள் பிரிவு) இந்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் ஆகியோருக்கும் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ”இந்திய கதைகள் மற்றும் கதை சொல்லிகள் தங்கள் திறமையையும், பணியையும் வெளிப்படுத்த ஒரு அற்புதமான தளத்தை உருவாக்கியதற்காக இந்திய சர்வதேச திரைப்பட விழா அமைப்பாளர்களுக்கு சிறப்பு நன்றி”யை தெரிவித்து பிரத்யேக அமர்வை அபர்ணா புரோகித் தொடங்கி வைத்தார்.
அதனுடன் வருகை தந்திருந்த பார்வையாளர்களுக்கு நிகழ்ச்சியை பற்றிய சுருக்கமான அறிமுகத்தையும் அவர் வழங்கினார்.‌

இதனையடுத்து விறுவிறுப்பான ‘தி வில்லேஜ்’ எனும் இணையத் தொடரின் முன்னோட்டம் திரையிடப்பட்டது. அதனுடன் இந்த இணையத் தொடரின் முதல் அத்தியாயமும், பிரத்யேக ஸ்னீக் பிக்கும் பார்வையாளர்களுக்கு திரையிடப்பட்டது. இதனைக் கண்டு ரசித்த திரை ஆர்வலர்கள் கரவொலி எழுப்பி தங்களது பாராட்டை தெரிவித்தனர். மேலும் இந்தத் தொடர் பார்வையாளர்களிடையே திகிலான அனுபவத்தை வழங்கியது என்பதற்கு சான்றாகவும் இருந்தது.

இத்தொடரை பற்றிய எதிர்பார்ப்பை உற்சாகத்துடன் அதிகரிக்க படக்குழுவினர் பிரத்யேக உரையாடலிலும் ஈடுபட்டனர்.‌ இதன் போது இந்தியாவில் இதுவரை ஸ்ட்ரீமிங் தளத்தில் முயற்சிக்கப்படாத ஒரு உயிரின திகில் தொடரில் பணிபுரிந்த சவால்கள் மற்றும் அனுபவங்கள் பற்றி பல சுவாரசியமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர். பிறகு கோவாவின் என்டர்டெய்ன்மென்ட் சொசைட்டியின் தலைமை நிர்வாக அதிகாரியான அங்கிதா மிஸ்ரா ஐஏஎஸ் அவர்களாலும் இந்த தொடர் பாராட்டப்பட்டது.‌

‘தி வில்லேஜ்’ எனும் இந்த தமிழ் ஒரிஜினல் திகில் தொடர் குறித்து பிரைம் வீடியோ ஒரிஜினல்ஸ் இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் தலைவரான அபர்ணா புரோகித் பேசுகையில், ” தி வில்லேஜ் வழக்கமான திகில் நிகழ்ச்சிகளை கடந்து, யதார்த்தத்திற்கும் அப்பாற்பட்ட ஒரு உலகத்தை உருவாக்குகிறது. அதிலும் அதிவேகமான உலகத்தை உருவாக்குகிறது. அழுத்தமான கதை… சிறந்த ஒளிப்பதிவு… மற்றும் இணையற்ற நிகழ்ச்சிகள்… இதில் இடம் பிடித்திருக்கிறது. இயக்குநர் மிலிந்த் ராவ் உண்மையான தொலைநோக்கு பார்வையுடையவர். அவருடன் இணைந்து திரைக்கதையை உயிர்ப்பித்தது விதிவிலக்கான அனுபவமாக இருந்தது. நடிகர் ஆர்யா உற்சாகத்துடன் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய பொழுதுபோக்கு துறைகளை சேர்ந்த நட்சத்திர கலைஞர்களுடன் இணைந்து இந்த நீண்ட வடிவிலான ஒரிஜினல் தொடரில் அவர் அறிமுகமானது வரவேற்கத்தக்கது. எங்களின் தொடக்க தமிழ் ஒரிஜினல் திகில் தொடரான ‘தி வில்லேஜை’ எழுச்சியூட்டும் வகையில் திரையிடுவதற்கான வாய்ப்பை வழங்கியதற்காக இந்திய சர்வதேச திரைப்பட விழா குழுவினருக்கும், அமைப்பாளர்களுக்கும் நன்றி. உலகெங்கிலும் உள்ள சினிமா கலைஞர்களின் பார்வையாளர்கள் எங்கள் வாடிக்கையாளர்கள். இந்த தனித்துவமான திகில் தொடரை ரசிப்பார்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். நாங்கள் பிரைம் வீடியோவில் உங்கள் அனைவருக்கும் இந்த தொடரை கொண்டு வருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார்.‌

‘தி வில்லேஜ்’ மூலம் ஒரிஜினல் ஸ்ட்ரீமிங் தளத்தில் அறிமுகமாகும் பிரபல நடிகர் ஆர்யா இது தொடர்பாக பேசுகையில், ” இந்த தொடரின் மூலம் நீண்ட வடிவத்திலான ஓ டி டி எனும் டிஜிட்டல் தளத்தில் அறிமுகமாவதில் நான் பெருமிதம் அடைகிறேன். திறமையான இயக்குநர் மிலிந்த் ராவ் மற்றும் பிரைம் வீடியோவின் குழுவினருடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். ‘தி வில்லேஜ்: எனக்கு ஒரு தொடர் அல்ல. கௌதம் எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ஒரு புதிய வகையிலான ஜானரை ஆராயவும், சிறந்த நடிகர்கள் மற்றும் குழுவினருடன் பணியாற்றவும் எனக்கு வாய்ப்பளித்தது. இந்தத் தொடரில் ஒருவரை அச்சத்தில் உறைய வைக்கும் தருணங்கள் நிறைய உள்ளன. ஆனால் அது ஒரு உணர்ச்சி ஆழத்தையும், அடிப்படையான சமூக செய்தியையும் கொண்டிருக்கிறது.‌ ஒரு நடிகராக எல்லைகளைக் கடந்து மக்களுடன் இணைந்திருக்கும் மற்றும் நீடித்த நினைவுகளை உருவாக்கும் கதைகளின் ஒரு பகுதியாக இருப்பதற்கு நாங்கள் பெரும் அதிர்ஷ்டசாலிகள். இது நாம் அனைவரும் நம்ப முடியாத அளவிற்கு பெருமிதம் கொள்ளும் ஒரு நிகழ்ச்சியாகும். நாங்கள் அதை உருவாக்கி மகிழ்ந்ததை போலவே…. நீங்களும் இந்த தொடரை திரையில் காணும் போது பார்த்து மகிழ்வீர்கள் என நம்புகிறேன்” என்றார்.

இந்த தொடர் குறித்து நாயகியாக நடித்திருக்கும் நடிகை திவ்யா பிள்ளை பேசுகையில், ” திறமையான நடிகரான ஆர்யாவுடன் இணைந்து இயக்குநர் மிலிந்த் ராவ் வழிநடத்தும் இந்த திட்டத்தில் நான் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.‌‌ ‘தி வில்லேஜ்’ என் இதயத்தில் ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது. பணக்கார… நடுத்தர… மற்றும் ஆழமான மனித கதாபாத்திரங்களை ஆராய்வதற்கான கதை சொல்லலின் நுணுக்கங்களை ஆராய… இந்த படைப்பு எங்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளது. எங்கள் இயக்குநர் மிலிந்த் ராவை பற்றி நான் அதிக அளவு பேச இயலாது. இந்த திட்டத்திற்கான அவரது பார்வையும், ஆர்வமும் உண்மையிலேயே வியப்பளிக்கிறது.‌ அவர் கருணையுடனும், அசையாத அர்ப்பணிப்புடனும் எங்களை எல்லாம் வழிநடத்திச் சென்றுள்ளார். ஒவ்வொரு நாளும் நம்முடைய திறமைகளின் எல்லைகளை மறு வரையறை செய்வதற்கான வாய்ப்பை அமைத்துக் கொடுக்கிறார். ‘தி வில்லேஜ்’ எனும் இந்த திகில் இணையத் தொடரில் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.‌ மேலும் 54 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இதன் முதல் அத்தியாயத்தை காண்பது எனக்கு மிகுந்த பெருமையை அளிக்கிறது. உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் நவம்பர் 24ஆம் தேதி அன்று இதனை காண்கிறார்கள். ” என்றார்.

இந்தத் தொடர் குறித்து இயக்குநர் மிலிந்த் ராவ் பேசுகையில், ” இந்த தனித்துவமான கதையை உலகிற்கு கொண்டு வந்ததற்காக நான் பெருமிதம் கொள்கிறேன் மற்றும் நன்றி உணர்வை உணர்கிறேன். ‘தி வில்லேஜ்’ ஒரு கிரியேச்சர் ஹாரர் தொடர். இது இந்தியாவில் மிக அரிதாகவே அலசப்படும் ஒரு வகையான ஜானர்.‌

ஒரு தந்தை தனது குடும்பத்தை சொல்லொணாக் கொடுமைகளிலிருந்து காப்பாற்ற பாடுபடும் ஒரு பயங்கரமான இரவில் இந்த தொடர் நடைபெறுகிறது. இந்த முன் கணிப்புதான் என்னை கதைக்குள் ஈர்த்தது. மேலும் அது ஆழமான உலக கட்டமைப்பையும், நுட்பமான கதையையும் அனுமதித்தது. நீண்ட வடிவிலான கதை சொல்லலுக்கு இது சிறந்ததாக இருக்கும் என உணர்ந்தேன். நிச்சயமாக ப்ரைம் வீடியோ மற்றும் ஸ்டுடியோ சக்தியின் ஆதரவு இல்லாமல் இது எதுவும் சாத்தியமில்லை. அவர்கள் முதல் நாளிலிருந்து எனது பார்வையை முழுமையாக ஆதரித்தனர். மேலும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு தேவையான அனைத்தையும் கொடுத்தனர். திறமையான நடிகர்கள் இந்த நிகழ்ச்சியை பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் நாங்கள் அனைவரும் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறோம். மேலும் 54 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்த தொடரின் முதல் அத்தியாயத்தை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.” என்றார்.

இந்தத் தொடர் தமிழில் பிரத்யேகமாகவும், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, ஆங்கிலத்தில் சப் டைட்டில்களுடன் நவம்பர் 24ஆம் தேதியன்று இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இந்த தொடர் திரையிடப்படவுள்ளது.

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பிரைம் வீடியோ பங்கேற்பது இந்தியாவின் ஆக்கபூர்வமான பொருளாதார வளர்ச்சியை செயல்படுத்துவதில் வீடியோ ஸ்ட்ரீமிங் துறையின் முக்கிய பங்கிற்கு ஒரு சான்றாகும். மேலும் இந்தியக் கதைகள், திறமைகள் மற்றும் திறமையான படைப்பாளிகளை உலக அரங்கில் வெளிப்படுத்த ஒரு வலுவான தளமாகவும் செயல்படுகிறது.