Breaking
October 19, 2024

பிரபல எலும்பு முறிவு மருத்துவர் டாக்டர் ஜே எஸ் ராஜ்குமார் அவர்களின் பிறந்த நாள் விழா ஆயிரக்கணக்கான மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

சென்னை அசோக் நகரில் உள்ள குமரன் எலும்பு முறிவு சிறப்பு மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ஜே எஸ் ராஜ்குமார் அவர்களின் பிறந்தநாள் விழா சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் வளாகத்தில் நடைபெற்றது பிறந்த தினத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகள் செய்து பொதுமக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் 60 வயதுக்கு மேற்பட் முதியவர்களுக்கு அர்த்த கிரந்தி திட்டத்தின் மூலம் பத்தாயிரம் ரூபாய் காண பென்ஷன் 60 கோடி மக்களுக்கு இந்திய அரசு வழங்கி வரும் திட்டம் நான்காயிரம் பேர் ஆயிரம் பேருக்கு இலவச பரிசோதனை ஒரே இடத்தில் அமர்ந்து காணக்கூடிய மங்கி பாத் நிகழ்ச்சி 5000 ஏழை எளிய மக்களுக்கு அறுசுவை உணவு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஓவியப் போட்டிகள் நடத்தி அவர்களுக்கு பரிசுகளை வழங்கி வருகின்றனர் ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு வேஷ்டி சேலை போன்றவை இந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில் நடைபெற்றது எலும்பு முறிவு சிறப்பு மருத்துவராக இதுவரை எண்ணற்ற எலும்பு முறிவு அறுவை சிகிச்சைகளை செய்து அசத்தி வரும் டாக்டர் ஜே எஸ் ராஜ்குமார் அவர்களின் சமூகப் பணி தொடர்ந்து செய்து வருவதில் முன்னோடியாக திகழ்ந்து வருகிறார்

நிதின், வெங்கி குடுமுலா, மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும் “ராபின்ஹூட்”

முன்னணி நட்சத்திர நடிகர் நிதின், இயக்குநர் வெங்கி குடுமுலா இருவரும் இரண்டாவது முறையாக ஒரு மிகப்பெரும் திரைப்படத்தில் இணைகின்றனர். இப்படத்தினை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அட்டகாசமான கூட்டணியில் இப்பட அறிவிக்கப்பட்ட கணத்திலேயே, ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை விதைத்துள்ளது. தயாரிப்பு தரப்பு குடியரசு தின நன்னாளில் இப்படத்தின் டைட்டிலை வெளியிட்டுள்ளனர்.

இத்திரைப்படத்திற்கு ராபின்ஹுட் என்று பெயரிடப்பட்டுள்ளது. அனைத்து இந்தியர்களையும் தனது சகோதர சகோதரிகளாகக் நினைத்து, அவர்களிடமிருந்து பணத்தைத் திருட அனைத்து உரிமைகளும் தனக்கு இருப்பதாக நினைக்கும் நிதின் கதாப்பாத்திரத்தை அறிமுகப்படுத்தும், இந்த ராபின்ஹுட் டைட்டில் அந்த கதப்பாத்திரத்திற்கு மிகப்பொருத்தமானதாக அமைந்துள்ளது.

எல்லாத் தீமைகளுக்கும் அடிப்படை பணம்தான்

யாராவது பணம் என்ன செய்யும் எனக் கேட்டால் ?
குடும்பத்திற்கு இடையே சண்டை மற்றும் பிரிவினையை ஏற்படுத்தும் என்பேன்
அதைத் தான் பணம் செய்கிறது

ஒட்டுமொத்த தேசமும் எனது குடும்பம்
பணக்கார ஆண்கள் அனைவரும் எனது சகோதரர்கள், பணக்கார பெண்கள் அனைவரும்
என் சகோதரிகள்

எனக்கு தேவை இருந்ததால் அவர்களின் பாக்கெட்டிலிருந்து கொஞ்சம் எடுத்துக்கொள்வேன்

ஆனால் அவர்கள் என் மீது கொள்ளையடித்தாக புகார் செய்கிறார்கள்

அதற்காக நான் வருத்தப்படவில்லை, ஏனென்றால் என் குடும்பத்திடமிருந்து பணம் எடுக்க எனக்கு உரிமையிருக்கிறது . இந்தியா எனது நாடு இது எனது அடிப்படை உரிமை. இந்தியர்கள் அனைவரும் எனது சகோதர சகோதரிகள்.
இந்த அழுத்தமான வசனத்தை பேசியபடி நிதின் கதாப்பத்திரம் வீடியோவில் அறிமுகமாகிறது.

இந்த வீடியோவில் நிதினின் கெட்-அப் மற்றும் அவரது தோற்றம் மிக வித்தியாசமாக இருக்கிறது. நிதின் தனது பையில் நிறைய பணம் மற்றும் தங்கத்துடன் சாண்டா கிளாஸாக நுழைகிறார். பைக்கின் முன்பகுதியில், ‘நான் இந்தியன்’ என்று எழுதப்பட்டுள்ளது, பின்பகுதியில், நான் அரிதானவன் என எனக்குத் தெரியும் என்று எழுதப்பட்டிருக்கிறது. கடைசியாக, பணத்தை மறைவானதொரு இடத்தில் மறைத்து வைக்கிறார்.

நடிகர் நிதின், நவநாகரீக உடையில் ஸ்டைலான லுக்கில், மிகக் கூலாக வருகிறார். தனது முதல் இரண்டு படங்களில் வித்தியாசமான முயற்சியில் அசத்தலான படங்கள் தந்த இயக்குநர் வெங்கி குடுமுலா, இந்த முறையும் ஒரு புதிய முயற்சியுடன் வந்திருப்பது அறிமுக வீடியோவில் தெரிகிறது. டைட்டில் வீடியோவிலேயே தனது முத்திரையை பதித்துள்ளார் இயக்குநர். நிச்சயமாக இந்த டைட்டில் வீடியோ, மிக வித்தியாசமான ஐடியாவாக முத்திரை பதிக்கிறது. காட்சியின் வடிவமைப்பு, பின்னணி, உடை வடிவமைப்பு, தொழில்நுட்ப நேர்த்தி அத்தனையிலும் பிரம்மாண்டமும், கச்சிதமும் மின்னுகிறது.

நவீன் யெர்னேனி மற்றும் Y ரவிசங்கர் ஆகியோர் இப்படத்தினை தயாரிக்கிறார்கள், முக்கிய கதாபாத்திரங்களில் முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கவுள்ளனர். மிகச் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் இப்படத்தில் பணியாற்றவுள்ளனர். தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார், சாய் ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, பிரவின் புடி படத்தொகுப்பாளராகவும், ராம் குமார் கலை இயக்குநராகவும் பணியாற்றுகிறார்கள் .

நடா கிரீட்டி ராஜேந்திர பிரசாத் மற்றும் வெண்ணிலா கிஷோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

நடிகர்கள்: நிதின், ராஜேந்திர பிரசாத், வெண்ணெலா கிஷோர் மற்றும் பலர்

தொழில்நுட்பக் குழு:
எழுத்தாளர், இயக்குநர்: வெங்கி குடுமுலா
தயாரிப்பு நிறுவனம் : மைத்ரி மூவி மேக்கர்ஸ்
தயாரிப்பாளர்கள் : நவீன் யெர்னேனி மற்றும் ஒய் ரவிசங்கர்
CEO : செர்ரி
இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்
ஓளிப்பதிவு : சாய் ஸ்ரீராம்
கலை இயக்குநர்: ராம் குமார்
நிர்வாக தயாரிப்பாளர்: ஹரி தும்மலா
லைன்புரடியூசர் : கிரண் பல்லாபள்ளி
விளம்பர வடிவமைப்பாளர்: கோபி பிரசன்னா
மக்கள் தொடர்பு – யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

Nithiin, Venky Kudumula, Mythri Movie Makers Film Titled Robinhood, Intriguing Title Glimpse Revealed

Hero Nithiin and talented maker Venky Kudumula joined forces for the second time for a bigger project being made on a larger scale with the leading production house Mythri Movie Makers backing it. This crazy project in the blockbuster combination grabbed the attention on the day it was announced. The makers, on the occasion of Republic Day, came up with a title reveal glimpse.

The movie is titled Robinhood and it’s an apt one judging by the glimpse that is meant to introduce the character of Nithiin who treats all Indians as his brothers and sisters, so that he feels he has all rights to steal money from them.

“Dabbu Chaala Cheddadi… Roopayi Roopayi Nuv Em Chesthaav Ante… Annadammula Madhya Akka Chellella Madhya Chichu Pedathanu Antadi… Annatte Chesindi… Desham Antha Kutumbam Naadi… Asthulunnollantha Naa Annadammulu… Abharanalesukunnollantha Naa Akka Chellellu… Avasaram Koddi Valla Jebullo Chethulu Pedithe… Family Member Ani Kuda Chudakunda Naa Meeda Case Lu Peduthunnaaru… Aynaa Nenu Hurt Avvaledu… Andukante Aina Valla Daggara Dabbulu Theesukovadam Naa Hakku… My Basic Right… Because India Is My Country… All Indians Are My Brothers and Sisters…” Nithiin introduces himself with this humorous dialogue.

His get-up and actions are also amusing and absorbing. Nithiin makes an entry as Santa Claus with loads of money and gold in his bag. While the front portion of the bike reads, ‘I’m an Indian’, the back portion reads, I’m aware that I’m rare. Finally, he hides the money in a hideout place.

Nithiin underwent a stylish makeover and he looks uber cool in a modish attire. Director Venky Kudumula depicted a serious scene in his style of entertaining format. Venky who attempted two different subjects in his first two movies is coming up with yet another intriguing project and he showed his mark in the title teaser cut. The concept video is a unique idea for sure and he has presented Nithiin in a first-of-its-kind role. This kickass title reveal glimpse makes a strong impact. The production design looked grand.

Naveen Yerneni and Y Ravi Shankar are the producers of the movie which will have a stellar cast in prominent roles and top-notch technicians taking care of different crafts. The movie has music by National Award Winner GV Prakash Kumar who provided the fascinating score for the glimpse. Sai Sriram handles the cinematography, while Prawin Pudi is the editor and Raam Kumar is the art director.

Nata Kireeti Rajendra Prasad and Vennela Kishore are playing important roles in the movie.

Cast: Nithiin, Rajendra Prasad, Vennela Kishore and others

Technical Crew:
Writer, Director: Venky Kudumula
Banner: Mythri Movie Makers
Producers: Naveen Yerneni and Y Ravi Shankar
CEO: Cherry
Music: GV Prakash Kumar
DOP: Sai Sriram
Art Director: Raam Kumar
Executive Producer: Hari Tummala
Line Producer: Kiran Ballapalli
Publicity Designer: Gopi Prasanna
PRO: Yuvraaj
Marketing: First Show

தொடர் வெற்றிப்படங்களுடன், பாராட்டுக்களை குவித்து வரும் லிசி ஆண்டனி !!

தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருக்கும் அற்புதமான குணச்சித்திர நட்சத்திரம் லிசி ஆண்டனி !!

சமீபத்திய தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில், தன்னுடைய நடிப்பு திறமையால், தனித்து தெரியும் நடிகை லிசி ஆண்டனி திரையுலகில் 10 வருடத்தை கடந்திருக்கிறார். தான் ஏற்கும் ஒவ்வொரு பாத்திரத்திலும் அசத்தி வரும் லிசி, தற்போதைய ப்ளூஸ்டார் திரைப்படத்தில் அம்மாவாக கலக்கியிருக்கிறார். மொத்தப்படத்திலும் கவனம் ஈர்க்கும் அவரது நடிப்பிற்கு, பல இடங்களிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளியான தங்க மீன்கள் படம் மூலம் அறிமுகமானவர் லிசி ஆண்டனி. முதல் படத்திலேயே நடிக்கத் தெரிந்த நடிகை என பெயரெடுத்தவர், தொடர்ச்சியாக பல வித்தியாசமான குணச்சித்திர பாத்திரங்களில் நடித்து, ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு தனியிடம் பிடித்துள்ளார்.

தரமணி படத்திலும், பரியேறும் பெருமாள் படத்திலும் இவர் ஏற்ற பாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பேசப்பட்டது. ஓடிடியில் வெளியான ‘ராங்கி’ படம் இவருக்கு வேறொரு முகம் தந்தது. பெயரே தெரியாமல் இவரை ரசித்துப்பாராட்டியவர்கள் அதிகம்.

பலர் ஏற்கத் தயங்கும் பாத்திரத்தைக் கூட, மிக அனாயசமாக ஏற்று, குணச்சித்திர நடிப்பில் கலக்கி வருகிறார் லிசி. இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் இவர் ஏற்ற அம்மா பாத்திரம், தமிழ் சினிமா இதுவரை கண்டிராதது. ரைட்டர், சாணி காயிதம், நட்சத்திரம் நகர்கிறது, கட்டா குஸ்தி என தொடர் வெற்றிப்படங்களில் இவர் ஏற்ற ஒவ்வொரு பாத்திரமும் வித்தியாசமானது.

துணை நடிகை, அம்மா என டிபிக்கலான பாத்திரங்களில் மட்டும் சிக்கிக்கொள்ளாமல் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டும் இவரது நடிப்பு, ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், விமர்சகர்களிடமிருந்தும் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. 2013 ல் அறிமுகமான இவர், தற்போது 10 வருடத்தை கடந்து தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவராக நிலைபெற்றுள்ளார்.

இந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் ப்ளூஸ்டார் படத்தில் ஒரு கீழ்தட்டு கிராமத்து அம்மாவை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் லிசி. ஏசுவின் வசனம் சொல்லிக்கொண்டு, மகன்களின் மேல் பாசத்தை கொட்டும் அம்மாவாக கலக்கியிருக்கும் லிசியின் நடிப்பு பல பக்கங்களிலிருந்தும் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருக்கும் அற்புதமான குணச்சித்திர நடிகை என விமர்சககர்கள் கொண்டாடி வருகிறார்கள். இப்போதைய ப்ளூஸ்டார் படம் இவரை தவிர்க்க முடியாத நடிகையாக தமிழ் சினிமாவில் நிலை நிறுத்தியுள்ளது.

கொஞ்ச நாள் பொறு தலைவா !

ALVI Digitech மற்றும் Giant Films இணைந்து வழங்கும்
“ தேனிசைத் தென்றல் ” தேவாவின் இசைக்கச்சேரி முதல்முறையாக கோயம்புத்தூரில்.

கோயம்புத்துரில் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி, மக்களின் மனம் கவர்ந்த நமது தேனிசை தென்றல் தேவாவின் இசைக்கச்சேரி நடைபெறவுள்ளது. ALVI Digitech மற்றும் Giant Films நிறுவனங்கள் இணைந்து, மிகப்பிரம்மாண்டாமான முறையில், கோயம்புத்தூரின் கொடிசியா மைதானத்தில், இந்நிகழ்ச்சியை நடத்தவுள்ளது.

தமிழ் சினிமா வரலாற்றில் பல ப்ளாக்பஸ்டர் இசை ஆல்பங்களை வழங்கி, கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்தவர்
“தேனிசை தென்றல் “ தேவா.

கானா என்றாலே தேவா எனும் பெயர் மட்டுமே நினைவுக்கு வரும், அந்தளவிற்கு தமிழ் சினிமா இசையில் எளியோர்களின் இசையை கேட்கச் செய்த ஆளுமையாளர். மெல்லிசையிலும் தன்னை மிஞ்ச ஆளில்லை என்பதை நிரூபித்து, இன்னிசைத்தென்றல் எனப் பெயரெடுத்தவர்.

பல கோடி ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், இன்னிசைக் கச்சேரி நிகழ்ச்சியை தமிழகமெங்கும் துவங்கியிருக்கிறார் தேனிசைத் தென்றல் தேவா. சென்னை, பாண்டிச்சேரியில் வெற்றிகரகமாக இசை நிகழ்ச்சியை முடித்த நிலையில், அடுத்ததாக கோயம்புத்தூரில் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி இசை நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார்.

ALVI Digitech மற்றும் Giant Films நிறுவனங்கள் இணைந்து இந்த இசை நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்தவுள்ளன.

இந்த இசை நிகழ்ச்சியில் திரை இசை பிரபலங்கள் சபேஷ் முரளி, அனுராதா ஶ்ரீராம், SPB சரண், உண்ணி மேனன்,
மற்றுன் விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் பாடகர்கள் உட்பட பல பிரபல இசை கலைஞர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

தேனிசைத் தென்றல் தேவாவின் ரசிகர்களுக்கு, இனிப்பான செய்தியாக வந்துள்ள இந்த இசை நிகழ்ச்சி, இப்போதே ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை விதைத்துள்ளது. இசையமைப்பாளர் தேவா அவர்களுக்கு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைத்து வயதிலும் பெரும் ரசிகர் பட்டாளம் உண்டு. இன்றும் சமூக வலைதளங்களான யூடுயூப், இன்ஸ்டா,

ஸ்பாட்டிஃபை என அனைத்து தளங்களில் அவரது பாடல்களுக்கு பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த இசை நிகழ்ச்சி இப்பொழுதே ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

கோயம்புத்துரில் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட் மற்றும் நிகழ்ச்சி குறித்தான விவரங்கள், பிப்ரவரி மாத இறுதியில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும்.

இராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டீன்ஸ்’

இசையமைப்பாளர் D. இமானின் பிறந்தநாளை ‘டீன்ஸ்’ குழுவினர் உற்சாகத்துடன் கொண்டாடினர்

நடிகரும் இயக்குந‌ருமான இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் புதிய திரைப்படமான ‘டீன்ஸ்’, தணிக்கை சான்றிதழுடன் திரையரங்குகளில் முதல் பார்வை வெளியான முதல் படம் என்ற புதிய உலக சாதனையை படைத்துள்ளது. இந்த சாதனைக்கான சான்றிதழை புதன்கிழமை (ஜனவரி 24) சென்னையில் நடைபெற்ற விழாவில் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் மற்றும் படக்குழுவினருக்கு உலக சாதனைகளின் அதிகாரப்பூர்வ பதிவு அமைப்பான‌ வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் யூனியன் அலுவலர்கள் வழங்கினர்.

இந்த நிகழ்வில், இசையமைப்பாளர் D. இமானின் பிறந்தநாளை ‘டீன்ஸ்’ படக்குழுவினர் உற்சாகமாகக் கொண்டாடி, இமான் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். இமானின் தந்தை ஜெ. டேவிட், மனைவி அமேலியா மற்றும் மகள் நேத்ரா ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய இமான், இன்ப அதிர்ச்சிக்கு பார்த்திபனுக்கு நன்றி தெரிவித்ததோடு, தனது 23 வருட சினிமா பயணத்தில் இந்த பிறந்தநாள் மறக்க முடியாததாக இருக்கும் என்றார். “இத்தனை வருடங்களில் நான் பல ஏற்ற தாழ்வுகளைக் கண்டிருக்கிறேன். சில பிறந்தநாள்கள் மகிழ்ச்சியாக இருந்தன, சில அப்படி இருந்ததில்லை, ஆனால் இந்த பிறந்தநாள் என் இதயத்தில் என்றென்றும் நிலைத்திருக்கும்,” என்று அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “பார்த்திபன் சாருடன் பணியாற்றுவது கடினம் என்று பலர் சொன்னார்கள், ஆனால் அவர் மிகவும் கூலாக‌ இருக்கிறார். சினிமா மீதான அவரது அர்ப்பணிப்பும் ஆர்வமும் அசாதாரணமானது. ‘டீன்ஸ்’ படத்திற்கு ஓரிரு பாடல்கள் மட்டும் போதும் என்று முதலில் நினைத்தோம், கடைசியில் எட்டு பாடல்களை உருவாக்கி உள்ளோம். அவற்றில் பெரும்பாலானவை பார்த்திபன் சாரே எழுதியவை. நாங்கள் இருவருமே வித்தியாசத்தை விரும்புவர்கள், எனவே நாங்கள் மிக்க மகிழ்ச்சியுடன் இணைந்து பணியாற்றினோம். சில பாடல்களில் அவர் திருப்தி அடைந்த பிறகும், நான் அவற்றை மேலும் மேலும் மெருகேற்றுவேன். பத்திரிகையாளர்கள் தங்களின் ஆக்கபூர்வமான விமர்சனங்கள் மற்றும் பாராட்டுகளால் இத்தனை ஆண்டுகளாக என்னை ஆதரித்து வருகிறார்கள். ‘டீன்ஸ்’ படத்திற்கு ஆதரவு தருமாறு அவர்களை கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

உலக சாதனைகள் அமைப்பின் அலுவலர் ஷெரிபா கூறுகையில், “திரைப்படத்துறையில் புதிய சாதனையை ‘டீன்ஸ்’ படைத்துள்ளது. இதற்காக படக்குழுவினரை மனதார வாழ்த்துகிறோம். இது ஒரு பெரிய சாதனை,” என்றார்.

உலக சாதனை அமைப்பின் பிராந்திய தலைமை அலுவலர் கிறிஸ்டோபர் டெய்லர் கிராஃப்ட் கூறுகையில், “இந்த சாதனைக்கான சான்றிதழை ‘டீன்ஸ்’ குழுவினருக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறோம். உலகத்திலேயே முதல் முறையாக இத்தகைய ஒரு முயற்சியை ‘டீன்ஸ்’ குழு வெற்றிகரமாக‌ மேற்கொண்டுள்ளது. இந்தியாவுக்கு அவர்கள் பெருமை சேர்த்துள்ளனர். அவர்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துகள்” என்றார்.

‘டீன்ஸ்’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ரஞ்சித் தண்டபாணி, இசையமைப்பாளர் இமானுக்கு பிறந்தநாள் வாழ்த்தும் உலக சாதனை படைத்ததற்காக‌ ‘டீன்ஸ்’ குழுவுக்கு வாழ்த்தும் தெரிவித்தார்.

தயாரிப்பாளர் கால்டுவெல் வேள்நம்பி பேசுகையில், “இமானின் பிறந்தநாளைக் கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். ‘டீன்ஸ்’ படத்துக்கு சிறப்பான பங்களிப்பை அவர் அளித்துள்ளார். பார்த்திபன் மற்றும் அவரது குழுவினர் 10 படங்களுக்கு தேவையான உழைப்பை இந்த ஒரு படத்திற்கு கொடுத்துள்ளனர். அவரது கடின உழைப்பு என்றென்றும் தொடர வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்,” என்றார்.

இராதாகிருஷ்ணன் பார்த்திபன் தனது உரையில், “நான் கடந்த 33-34 வருடங்களாக சினிமா துறையில் இருக்கிறேன். வித்தியாசமான படங்களை உருவாக்குகிறேன் என்று எல்லோரும் சொல்கிறார்கள். சினிமாவில் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு செய்கிறேன். அதனால், ‘ஒத்த செருப்பு’, ‘இரவின் நிழல்’ படங்களுக்குப் பிறகு இப்போது ‘டீன்ஸ்’ செய்கிறேன். இந்தப் படத்தின் முதல் பார்வையை திரையரங்குகளில் வெளியிட நினைத்தேன், ஆனால் அதற்கு சென்சார் சான்றிதழ் தேவைப்பட்டது. சென்சார் அதிகாரிகளை நான் அணுகியபோது, ஒரு படத்தின் முதல் பார்வைக்கு சான்றிதழ் அளிப்பது இதுவே முதல்முறை என்றார்கள். உடனடியாக நான் அதை பெறுவதற்கான வேலையை செய்தேன், இப்படித்தான் இது சாத்தியமானது,” என்றார்.

அவர் மேலும் கூறியதாவது: “இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் தான் ‘டீன்ஸ்’ உருவாவதற்கு முக்கிய காரணம். ‘இரவின் நிழல்’ படத்தை அவர்கள் தான் தயாரித்தனர். முதல் நான்-லீனியர் சிங்கிள்-ஷாட் படம் என்ற அங்கீகாரத்தை அது எனக்குக் கொடுத்தாலும், அவர்களுக்கு அதிகப் பணத்தை ‘இரவின் நிழல்’ ஈட்டித் தர‌வில்லை. ஆனாலும் எனக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ‘டீன்ஸ்’ படத்தைத் தயாரிக்க முன்வந்தார்கள். இந்தப் படம் அவர்களுக்கு லாபம் தரும் என்று நம்புகிறேன். ஏனென்றால் 13 குழந்தைகளை முக்கிய வேடத்தில் நடிக்க‌ வைத்து குழந்தைகளுக்காக இந்தப் படத்தைத் உருவாக்கியுள்ளேன்.
இந்தப் படம் சோதனை முயற்சியாக‌ இருக்காது, அதே சமயம் முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

இளையராஜா சார், ஏ.ஆர். ரஹ்மான் சார் மற்றும் சி. சத்யா சார் ஆகியோருடன் நான் பணிபுரிந்திருக்கிறேன். இமானுடன் நீண்ட காலமாக பணியாற்ற விரும்பினேன், அது இப்போது தான் நடந்துள்ளது. ‘மைனா’ நாட்களில் இருந்து அவரை நான் ர‌சிக்கிறேன். பாடல் வரிகளுக்கு அதிக முக்கியத்துவத்தை இமான் கொடுக்கிறார். ‘டீன்ஸ்’ படத்தின் தூண்களாக‌ ஒளிப்பதிவாளர் காவ்மிக் ஆரியும் மற்றும் இமானும் திகழ்கிறார்கள். முதல் பார்வையில் அசத்தலான காட்சிகளை பார்த்திருப்பீர்கள். ஏழு சிறந்த பாடல்களை இமான் கொடுத்துள்ளார். பின்னணி இசையில் அவர் என்ன செய்யப் போகிறார் என்று பார்க்க ஆவலாக உள்ளேன். எனது அடுத்த படத்திற்கு வேறு ஒரு இசையமைப்பாளருடன் இணைந்து பணியாற்ற நினைத்தேன், ஆனால் இப்போது இமானுடன் தொடர்ந்து பணிபுரிய‌ முடிவு செய்துள்ளேன். அவருடைய அர்ப்பணிப்பு அவ்வாறனது. இத்தனை ஆண்டுகளில் எனது ஒவ்வொரு முயற்சியையும் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து ஆதரித்து வருகிறார்கள். ‘டீன்ஸ்’ படம் வெளியாவதற்கு முன்பே உலக அளவில் அங்கீகாரம் பெற்றிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.”

கால்டுவெல் வேள்நம்பி, டாக்டர் பாலசுவாமிநாதன், டாக்டர் பின்ச்சி ஸ்ரீநிவாசன் மற்றும் ரஞ்சித் தண்டபாணி ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். பயாஸ்கோப் டிரீம்ஸ் எல் எல் பி மற்றும் அகிரா ப்ரொடக்ஷன்ஸ் பேனரில் ‘டீன்ஸ்’ தயாராகியுள்ளது. கீர்த்தனா பார்த்திபன் அக்கினேனி இதன் கிரியேட்டிவ் தயாரிப்பாளர். படத்தொகுப்புக்கு ஆர். சுதர்சன் பொறுப்பேற்றுள்ளார்.

தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையில் முதல் முறையாக முருகன் பாடல்

யோகிபாபு மற்றும் நட்டி வெளியிட்ட பக்தி பரவசமூட்டும் ‘முருகனே செல்ல குமரனே’ பாடலை தைப்பூசத்தை முன்னிட்டு வர்ஷேனியம் ரிகார்ட்ஸ் உலகமெங்கும் வெளியிடுகிறது

சமீபத்தில் தேசிய விருது பெற்று தமிழ் திரையுலகுக்கு பெருமை சேர்த்த பிரபல இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, முருகப்பெருமான் குறித்த பக்தி பரவசமூட்டும் பாடல் ஒன்றுக்கு முதல் முறையாக இசையமைத்துள்ளார்.

தேசிய விருது பெற்ற இயக்குந‌ர் பவண் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலை தைப்பூசத்தை முன்னிட்டு வர்ஷேனியம் ரிகார்ட்ஸ் உலகமெங்கும் வெளியிடுகிறது. முன்னதாக, ஆடியோவாகவும், வீடியோவாகவும் சிறப்பாக உருப்பெற்றுள்ள இந்த பாடலை பிரபல நடிகரும் முருக பக்தருமான யோகிபாபுவும், பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர் நட்டியும் வெளியிட்டனர்.

‘சூப்பர் சிங்கர்’ வெற்றியாளர் ஸ்ரீநிதா மற்றும் சூப்பர் சிங்கர் ‘செல்லக்குட்டி பேபி’ அக்ஷரா லஷ்மி பாடியுள்ள ‘முருகனே செல்ல குமரனே’ பாடல் உலகெங்கும் வாழும் முருக பக்தர்கள் மெய் சிலிர்த்து கொண்டாடும் வகையில் உருவாகியுள்ளது.

இந்த பாடலைப் பற்றி ஸ்ரீகாந்த் தேவா கூறுகையில், “வர்ஷேனியம் ரிகார்ட்ஸ் மூலம் வெளியாக உள்ள ‘முருகனே செல்ல குமரனே’ பாடல் முருக கடவுளின் பாடல்களில் வரும் காலங்களில் முக்கிய இடத்தை பெறும். முருகப்பெருமானைப் பற்றி குழந்தைகள் கூட பக்தியோடு பாட வேண்டும் என்ற நோக்கத்தில் எளிய மெட்டில், எளிய தமிழில் இதை உருவாக்கியிருக்கிறோம். இந்த பாடலை கேட்டு தைப்பூசத்தில் முருகனை தரிசனம் செய்து, முருக பக்தியில் எந்நாளும் திளைத்திடுவோம்,” என்றார்.

பாடலை எழுதிய இயக்குநர் பவண், “இந்த வாய்ப்பை மிகப்பெரிய பாக்கியம் என்றே சொல்ல வேண்டும். சொல்ல சொல்ல இனிக்கும், அள்ள அள்ள அருளும் முருகப்பெருமானை பற்றிய அருமையான பாடல் அவன் அருளாலே மிகவும் சிறப்பாக உருப்பெற்றுள்ளது. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா,” என்றார்.

நடிகர் யோகிபாபுவும், நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டியும் வர்ஷேனியம் ரிகார்ட்ஸ் லேபிளில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையில் உருவாகியுள்ள ‘முருகனே செல்ல குமரனே’ பாடலை வெளியிட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.

பொங்கல் விழாவில் உசிலம்பட்டி மக்களை மகிழ்வித்த இசையமைப்பாளர் இமானுக்கு 6 இயக்குநர்கள் இணைந்து வழங்கிய நினைவுப் பரிசு!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடந்த FRIENDS FILM FACTORY & BUTTERFLY NETWORK இணைந்து நடத்திய BUTTERFLY CARNIVAL விழாவிற்கு வருகை தந்து உசிலம்பட்டி கிராம மக்களை சந்தோஷப்படுத்தி விருதுகள் வழங்கி ஊர் மக்களை மகிழ்ச்சியடைய செய்தார் இசையமைப்பாளர் D.இமான்.

அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று தைப்பூச திருநாளில் இயக்குநர் ராஜேஷ்.M, பொன்ராம், செல்லாஅய்யாவு, குருரமேஷ், ஆனந்த் நாராயண், M.P.கோபி ஆகிய 6 இயக்குநர்கள் சேர்ந்து ஆறு படை முருகனை வேண்டி FRIENDS FILM FACTORY TEAM சார்பாக அவருக்கு நன்றி தெரிவித்து நினைவு பரிசு கொடுத்தார்கள்.

இதை பெற்று கொண்ட இசையமைப்பாளர் D.இமான் அவர்கள், “என் அம்மா இப்போது எங்களுடன் இல்லை, ஆனால் இந்த நினைவு பரிசு மூலமாக என் அம்மா என் குடும்பத்தார்களுடன் இன்னும் வாழ்ந்துகொண்டு இருப்பது போல் உணர்கிறேன்” என்று நெகிழ்ந்து பெருமிதம்கொண்டார், மேலும் நினைவு பரிசு கொடுத்த 6 இயக்குநர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

நடிகர் நரேன் மிரட்டும் மிஸ்டரி ஹாரர் திரில்லர்  “ஆத்மா”!!

இயக்குநர் சுசீந்திரன் வெளியீட்டில், நடிகர் நரேன் நடிப்பில், ஹாரர் திரில்லர் “ஆத்மா”!!

KADRIS ENTERTAINMENT UAE நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நஜீப் காதிரி தயாரிப்பில், நடிகர் நரேன் நடிப்பில், மாறுபட்ட ஹாரர் மிஸ்டரி திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் ஆத்மா இப்படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. இப்படத்தினை தமிழகமெங்கும் பிரபல இயக்குநர் சுசீந்திரன் வெளியிடுகிறார்.

ஆட்டிசம் பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு, தான் தங்கும் வீட்டில் ஒரு குரல் கேட்கிறது. அதன் பின்னால் உள்ள மர்மத்தை அவன் தேட ஆரம்பிக்க, அதன் தொடர்ச்சியாக, பல மர்ம முடிச்சுகள் அவிழ ஆரம்பிக்கிறது. பரப்பரபான பல திருப்பங்களுடன், ஹாரர் கலந்த, மிஸ்டரி திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.  

ராகேஷ் சங்கர் கதை திரைக்கதை எழுத, இயக்குநர் சுகீத் இப்படத்தினை இயக்கியுள்ளார்.  K சந்துரு இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார்.

கேள்விக்கான விடைகளை தேடும் நாயகனை மையப்படுத்தி, வெளியாகியுள்ள மாறுபட்ட ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடமும், திரை ஆர்வலர்களிடமும் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது.

கைதி, விக்ரம் படங்களின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு,  ஆட்டிசம் பாதித்த இளைஞனாக இப்படத்தில் முதன்மைப்பாத்திரத்தில் அசத்தியுள்ளார்  நடிகர் நரேன். நாயகியாக தில்லுக்கு துட்டு 2 புகழ் ஷ்ரத்தா ஷிவதாஸ் நடித்துள்ளார். பால சரவணன் காளி வெங்கட், கனிகா, விஜய் ஜானி ஆகியோர் முக்கிய   வேடங்களில் நடிக்க,  ஃபிலிப்பினோவைச் சேர்ந்த  நடிக்கைகள் ஷெரீஸ் ஷீன் அகாட், கிறிஷ்டீன் பெண்டிசிகோ ஆகியோர் திருப்புமுனை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.  

இப்படம் முழுமையாக துபாய் நாட்டில்  படமாக்கப்பட்டுள்ளது. துபாயில் முழுக்க முழுக்க படமாக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம்  இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

பெரும் பொருட்செலவில், KADRIS ENTERTAINMENT UAE. நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நஜீப் காதிரி இப்படத்தினை தயாரித்துள்ளார். தமிழகமெங்கும் பிரபல இயக்குநர் சுசீந்திரன் இப்படத்தினை வெளியிடுகிறார்.

முழு படப்பிடிப்பும் முடிந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் டீசர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகும்.

தொழில் நுட்பக் குழு
இயக்கம் –  சுகீத்
கதை திரைக்கதை –  ராகேஷ் N சங்கர் ,
வசனம் –  K சந்துரு
இசை – மங்கள் சுவர்னன், சஸ்வதி சுனில்குமார்
ஒளிப்பதிவு – விவேக் மேனன்
எடிட்டிங் – நவீன் விஜயன்
தயாரிப்பு – நஜீப் காதிரி
எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் – பதேருதீன் பனக்கட்
மக்கள் தொடர்பு – சதீஷ் ( AIM )

75வது குடியரசு தினத்தை முன்னிட்டு, சாம் பகதூர் திரைப்படத்தை வெளியிடும் ZEE5 !!

அற்புத அனுபவத்திற்குத் தயாராகுங்கள் :

~ ரோனி ஸ்க்ரூவாலா தயாரித்துள்ள இப்படத்தை, இயக்குநர் மேக்னா குல்சார் இயக்கியுள்ளார் மற்றும் சாம் பகதூர் கதாபாத்திரத்தில் விக்கி கௌஷல் நடித்துள்ளார்.

~ இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, இன்று ஜனவரி 26 அன்று, குடியரசு தினத்தை முன்னிட்டு, விக்கி கௌஷல் நடித்த, சாம் பகதூர் படத்தின் பிரத்தியேக டிஜிட்டல் பிரீமியரை அறிவித்திருக்கிறது. இயக்குநர் மேக்னா குல்சார் இயக்கியுள்ள இப்படத்தை, ரோனி ஸ்க்ரூவாலாவின் RSVP production நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் சாம் மானெக்ஷாவின் அசாதாரண வாழ்க்கையை, அவரின் நம்ப முடியாத போர் சாகசங்களை விவரிக்கிறது, அவரது ஆரம்ப நாட்களில் இராணுவத் தளபதியாக இருந்து, அவரது ஓய்வு வரை, அவரது புகழ்பெற்ற பயணத்தின் மைல்கற்கள் மற்றும் வெற்றிகளை இப்படம் விரிவாக சொல்கிறது. விக்கி கௌஷலுடன் பாத்திமா சனா ஷேக், ஷான்யா மல்ஹோத்ரா, முகமது போன்ற நட்சத்திர நடிகர்களுடன் ஜீஷன் அய்யூப் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சாம் பகதூர் திரைப்படம் சாம் மானெக்ஷாவின் புகழ்பெற்ற வாழ்க்கை மற்றும் பீல்ட் மார்ஷல் பதவிக்கு உயர்த்தப்பட்ட முதல் இந்திய இராணுவ அதிகாரியாக அவர் ஆவதற்கான, அவரது பயணத்தின் ஏற்ற இறக்கங்களை, உண்மையாக ஆராய்கிறது. இப்படம். 75வது குடியரசு தின நன்நாளில், ஒரு அஞ்சலியாக இந்த சினிமா உருவாகி வந்துள்ளது. ஒரு தலைசிறந்த படைப்பை அனுபவிப்பது மட்டுமல்லாமல் ஒரு உண்மையான ஹீரோவின் ஆத்மாவிற்கு மரியாதை செலுத்தும் அஞ்சலியாக இப்படம் இருக்கும். நான்கு தசாப்தங்களில் ஐந்து போர்களில் கலந்துகொண்டு சேவை செய்த, இந்திய இராணுவத்தின் ஒரு அடையாளமான சாம் மானெக்ஷாவின் பிரமிப்பான பயணத்தை இப்படம் விவரிக்கிறது.

இந்த வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் மானெக்ஷாவின் இணையற்ற இராணுவ பங்களிப்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது, அவரது வீரம், புத்திசாலித்தனம் மற்றும் தேசத்திற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் காட்டுகிறது. இந்தத் திரைப்படம் இராணுவ மற்றும் அரசியல் உறவுகளின் சிக்கலான இயக்கங்களையும் கூடவே ஆராய்கிறது. தேசத்திற்காக சாம் மானெக்ஷா தந்த பங்களிப்புகளைப் பற்றிய விரிவான புரிதலை வழங்குகிறது. விக்கி கௌஷலின் மிகச்சிறப்பான நடிப்பு அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளது.

ஒரு திரைப்படத்தின் வெற்றி பல்வேறு முனைகளில் அதன் ஒட்டுமொத்த ஈர்க்கும் தரம், ஆகிய அனைத்தையும் கொண்டுள்ள இப்படம், வரலாற்றினை மீண்டும் உயிர்ப்பிக்கும் திறனில் அந்த வெற்றியை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துகிறது. இப்படம் பார்வையாளர்களுக்கு மிகச்சிறந்த அனுபவமாக அமையும். சாம் பகதூர் திரைப்படத்தின் உலக டிஜிட்டல் பிரீமியராக ZEE5 இல் ஜனவரி 26 ஆம் தேதி பிரத்தியேகமாக வெளியாகிறது. ZEE5 இன் தலைமை வணிக அதிகாரி மணீஷ் கல்ரா கூறுகையில், “ஒவ்வொரு இந்தியருக்கும் குடியரசு தினம் என்பது ஒரு ஆழமான உணர்வைத் தரக்கூடியது. இந்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி, குடியரசு நன்நாளில் சாம் பகதூர் படத்தின் டிஜிட்டல் பிரீமியரை அறிவிப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். நம் தேசத்தின் உணர்வோடு எதிரொலிக்கும் இதுபோன்ற சொல்லப்படாத கதைகளை, எங்கள் பார்வையாளர்கள் விரும்புகிறார்கள், மேலும் அவர்களுக்குப் பொருத்தமான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் பொழுதுபோக்குகளை வழங்கவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இந்தப் படம் ஒரு உண்மையான நிஜவாழ்வு ஹீரோவுக்கு அஞ்சலி செலுத்தும் படம். ரோனி ஸ்க்ரூவாலா புரொடக்‌ஷன்ஸ் உடனான எங்கள் கூட்டணி மிகவும் மகிழ்ச்சிகரமானது. அவர்களுடனான கூட்டணி, தேஜஸ் மற்றும் சாம் பகதூர் போன்ற தேசபக்தி திரைப்படங்களை மீண்டும் வழங்க எங்களுக்கு உதவியது. சாம் பகதூர் திரைப்படம் திரையரங்குகளில் பெரும் வெற்றியைக் குவித்த பிறகு, பார்வையாளர்கள் எங்கள் தளத்திலும் இந்தப் படத்தைப் பார்த்து மகிழ்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

தயாரிப்பாளர் ரோனி ஸ்க்ரூவாலா கூறுகையில், “சாம் பகதூர் திரைப்படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். நான் இண்டஸ்ட்ரியில் இருந்து ஒதுங்கியிருந்த காலகட்டத்தில் இந்தப் படத்தின் ஐடியா எனக்குள் வந்தது, இப்போது இந்த திரைப்படத்தில் ஒரு அங்கமாக இருப்பது, எனக்கு மிகுந்த பெருமையை அளிக்கிறது. ஐகான்கள் அதிகம் உள்ள நம் நாட்டில், அவர்களின் கதைகளைக் கொண்டாட நாம் அடிக்கடி மறந்து விடுகிறோம். துணிச்சலான ஹீரோவான சாம் மானெக்ஷாவின் உத்வேகம் தரும் கதையை வெளிக்கொணரவும், அதை உலகத்துடன் பகிர்ந்து கொள்ளவும் எனது தாழ்மையான முயற்சி தான் இந்த படம். ZEE5 உடன் இணைந்து இந்த அழகான கதையை, உலகமெங்கும் உள்ள ரசிகர்களுக்கு வழங்குவது மகிழ்ச்சி. இந்த படத்தின் மூலம் நாங்கள் மேற்கொண்ட பயணத்தை, பார்வையாளர்கள் பாராட்டுவார்கள் என்று நம்புகிறேன்.

இயக்குநர் மேக்னா குல்சார் கூறுகையில், “இந்த வாழ்க்கை வரலாற்றுப் படத்தை உருவாக்குவது எனக்கு ஒரு வாழ்க்கையை மாற்றும் அனுபவமாக இருந்தது, அதை நான் ஒரு ஆசீர்வாதமாகக் கருதுகிறேன். சாம் பகதூர் கதை பார்க்கும் அனைவருக்கும் ஒரு சிறந்த உத்வேகமாக இருக்கும். ஆரம்பத்திலேயே, விக்கி கௌஷல் அந்த பாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமானவர் என்பதை நான் அறிந்தேன். ஈடு இணையற்ற நம்பகத்தன்மை மற்றும் அர்ப்பணிப்புடன் அந்த கதாபாத்திரத்திற்கு அவர் உயிர் தந்துள்ளார். இலட்சியங்களும் அதை வாழ்ந்து காட்டும் முன்மாதிரிகளும் காலத்தைக் கடந்தவர்கள், யாராவது ஒருவர் உண்மை மற்றும் நேர்மையுடன் வாழ்ந்தால், அது காலத்தைக் கடந்து நிற்கும் என்று உறுதியாக நம்புகிறேன். ZEE5 மூலம் இந்த சொல்லப்படாத கதையை இன்னும் அதிகமான பார்வையாளர்களிடம் கொண்டு செல்வதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இப்படம் என்னையும் சாம் பகதூரின் ஒட்டுமொத்த குழுவையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியதைப் போல், பார்வையாளர்களின் மனதிலும் ஆழமாக எதிரொலிக்கும் என்று நம்புகிறேன்.

நடிகர் விக்கி கௌஷல் கூறியதாவது.., “சாம் மானெக்ஷாவின் கதாபாத்திரத்தில் நடித்தது, மிகவும் பெருமையும் மரியாதையும் நிறைந்த ஒரு நம்பமுடியாத பயணமாகும். அத்தகைய துணிச்சலான மற்றும் புகழ்பெற்ற ஆளுமையைத் திரையில் பிரதிபலிப்பது மிகப்பெரிய பொறுப்பு. அதற்காகக் கிடைத்த அன்பு மற்றும் ஆதரவிற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இப்படத்தின் திரையரங்க வெளியீட்டின் போது ரசிகர்கள் கதாபாத்திரத்தின் மீது பாச மழை பொழிந்தனர்.

ZEE5 இல் நிகழும் இப்படத்தின் டிஜிட்டல் பிரீமியர், இக்கதையைப் பரந்த பார்வையாளர்களுக்குக் கொண்டு செல்ல உதவும். எனவே 75வது குடியரசு தினத்தில் சாம் பகதூர் படம் மூலம் நம் தேசத்திற்கு அழியாத அஞ்சலி செலுத்துவதில் பெருமிதம் கொள்கிறேன். இது ஒரு படம் மட்டுமல்ல; இது பார்வையாளர்களுடன் பகிரப்படும் ஒரு பெரும் பயணம், இப்படம் மூலம் பார்வையாளர்கள் உத்வேகம் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.” 26 ஜனவரி 2024 முதல் ZEE5 இல் சாம் பகதூர் ஸ்ட்ரீமிங்கைப் கண்டுகளிக்கலாம்.