Breaking
October 19, 2024

விஸ்வம்பரா படத்தில் மெகாஸ்டார் சிரஞ்சீவி ஜோடியாக நடிகை த்ரிஷா

மெகாஸ்டார் சிரஞ்சீவி தனது அடுத்த பிரம்மாண்ட படமான “விஸ்வம்பரா” படத்திற்காக, சில நாட்களுக்கு முன்பு தான், ஹைதராபாத்தில் ஒரு பிரம்மாண்ட செட்டில் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இந்த பிரம்மாண்ட படத்திற்காக ஹைதராபாத்தில் மொத்தம் 13 பிரம்மாண்ட செட்களை படக்குழு அமைத்துள்ளது. இதற்கிடையில், இப்படத்தில் மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷா கிருஷ்ணனை தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

நடிகை த்ரிஷா இன்று நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். மெகா ஸ்டார் சிரஞ்சீவி, இயக்குநர் வசிஷ்டா மற்றும் தயாரிப்பாளர்கள் அனைவரும் இணைந்து நடிகை திரிஷாவுக்கு பெரும் வரவேற்பு அளித்தனர். முன்னதாக நடிகை திரிஷா, மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் “ஸ்டாலின்” படத்தில் பணிபுரிந்துள்ளார். தற்போது மெகா மாஸ் ஃபேண்டஸி உலகை காட்டும் “விஸ்வம்பரா” படத்தில், சிரஞ்சீவியுடனான மேஜிக் கெமிஸ்ட்ரியை ரசிகர்கள் மீண்டும் எதிர்பார்க்கலாம்.

UV கிரியேஷன்ஸ் சார்பில் விக்ரம், வம்சி மற்றும் பிரமோத் ஆகியோர் இணைந்து பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படம், சிரஞ்சீவி திரை வாழ்க்கையில் மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகும் திரைப்படமாக உருவாகிறது.

இப்படத்திற்கு எம்எம் கீரவாணி இசையமைக்க, சோட்டா கே நாயுடு ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.எஸ்.பிரகாஷ் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், சுஷ்மிதா கொனிடேலா ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்.

கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் மற்றும் சந்தோஷ் காமிரெட்டி எடிட்டர்களாக பணியாற்றவுள்ளனர். ஸ்ரீ சிவசக்தி தத்தா மற்றும் சந்திரபோஸ் ஆகியோர் பாடலாசிரியர்களாகவும், ஸ்ரீனிவாஸ் கவிரெட்டி, காந்தா ஸ்ரீதர், நிம்மகத்தா ஸ்ரீகாந்த் மற்றும் மயூக் ஆதித்யா ஆகியோர் ஸ்கிரிப்ட் அசோசியேட்டுகளாகவும் பணியாற்றுகின்றனர்.

2025 ஆம் ஆண்டு சங்கராந்தி கொண்டாட்டமாக ஜனவரி 10 ஆம் தேதி இப்படத்தை வெளியிடுவதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

நடிப்பு : மெகா ஸ்டார் சிரஞ்சீவி

தொழில்நுட்பக் குழு:
எழுத்தாளர் மற்றும் இயக்குநர்: வசிஷ்டா தயாரிப்பாளர்கள்: விக்ரம், வம்சி, பிரமோத்
பேனர்: UV கிரியேஷன்ஸ்
இசை: எம்.எம்.கீரவாணி
ஒளிப்பதிவு : சோட்டா கே நாயுடு
தயாரிப்பு வடிவமைப்பாளர்: ஏ.எஸ்.பிரகாஷ்
ஆடை வடிவமைப்பாளர்: சுஷ்மிதா கொனிடேலா
எடிட்டர்: கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ், சந்தோஷ் காமிரெட்டி
வசனங்கள்: சாய் மாதவ் புர்ரா
பாடல் வரிகள்: ஸ்ரீ சிவசக்தி தத்தா மற்றும் சந்திரபோஸ்
ஸ்கிரிப்ட் அசோசியேட்ஸ்: ஸ்ரீனிவாஸ் கவிரெட்டி, காந்தா ஸ்ரீதர், நிம்மதி ஸ்ரீகாந்த் மற்றும் மயூக் ஆதித்யா
நிர்வாகத் தயாரிப்பாளர்: கார்த்திக் சபரீஷ்
லைன் புரடியூசர்: ராமிரெட்டி ஸ்ரீதர் ரெட்டி
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் நடிக்கும் புதிய படம் !!

VJF – Vaishak J Films தயாரிப்பில், சைட் ஏ சைட் பி படங்களின் வெற்றி இயக்குநர் ஹேமந்த் M ராவ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் நடிக்கும் புதிய படம் !!

சப்த சாகரதாச்சே எல்லோ சைட் ஏ சைட் பி படங்களின் வெற்றி இயக்குநர் ஹேமந்த் M ராவ், சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் எனும் சிவண்ணா உடன் இணைந்து அடுத்த படத்தை துவங்குகிறார் இப்படத்தினை VJF – வைஷாக் J பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில், டாக்டர் வைஷாக் J கவுடா தயாரிக்கிறார்.

இயக்குநர் ஹேமந்த் M ராவ் கூறியதாவது..,

ஒரு நடிகராக சிவராஜ்குமார் சாரின் அனுபவம் மிகப்பெரியது, அவர் தனது முழு வாழ்க்கையிலும் மாறுபட்ட பல பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். ஒரு இயக்குநராக என்னையும், அவரையும் உற்சாகப்படுத்தும் ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். அவருடன் பணியாற்றுவது எனக்கு கிடைத்திருக்கும் ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு.

மேலும் இயக்குநர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எனது 5வது படத்தில் லெஜண்ட் டாக்டர் சிவராஜ்குமாருடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் பெருமையாக உள்ளது. நான் எப்போதுமே ஒவ்வொரு படத்தையும் என்னுடைய முதல் மற்றும் கடைசிப் படம் போல நினைத்தே பணியாற்றிவருகிறேன்; #VaishakJGowda இந்த பயணத்தை மேற்கொள்வதில் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அறிமுக தயாரிப்பாளரான வைஷாக் J கவுடா கூறுகையில்.., ‘சிறுவயதில் இருந்தே நான் சிவண்ணாவின் தீவிர ரசிகன். அவர் நடிக்கும் ஒரு படத்தின் மூலம் நான் திரையுலகில் நுழைய வேண்டும் என்று விரும்பினேன். எங்கள் முதல் திரைப்படத்திற்காக ஹேமந்த் M ராவ் மற்றும் சிவண்ணாவுடன் இணைந்து பணியாற்றுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எல்லோருக்கும் பெருமை சேர்க்கும் ஒரு படத்தை வழங்க வேண்டிய பொறுப்பு, இப்போது எங்களுக்கு பத்து மடங்காக அதிகரித்துள்ளது.

படத்தின் ஜானர் மற்றும் நடிகர்கள் என படத்தின் தகவல்கள் குறித்து எந்த விசயத்தையும் படக்குழுவினர் பகிரவில்லை. கூடிய விரைவில் ஒவ்வொன்றாக படம் குறித்த தகவல்கள் வெளியிடப்படும் என இயக்குநர் ஹேமந்த் M ராவ் தெரிவித்துள்ளார்.

மெகா ஸ்டார் சிரஞ்சீவி “விஸ்வம்பரா”

மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஹைதராபாத்தில் “விஸ்வம்பரா” படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார், இப்படம் ஜனவரி 10, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது !!

மெகாஸ்டார் சிரஞ்சீவி தான் அடுத்ததாக நடிக்கவிருக்கும் பிரம்மாண்டமான படைப்பான “விஸ்வம்பரா” படத்தின் டைட்டில் டீஸர் மூலம் தனது ரசிகர்களை மகிழ்வித்தார், மிகச்சிறப்பான தொழில்நுட்பத் தரத்துடன் உருவாகியிருந்த இந்த டீசர், நாடு முழுவதும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதன் விஷுவல் எஃபெக்ட்ஸ் உலக சினிமாவுக்கு இணையாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்தனர். பிரபஞ்சத்திற்கு அப்பால் மெகா மாஸ் உலகை உருவாக்க, படக்குழு 13 பெரிய செட்களை அமைத்தது, படத்தின் காட்சிகளை படமாக்கி வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் கடைசி வாரத்தில் தொடங்கினாலும், சிரஞ்சீவி நேற்று விஸ்வம்பராவின் மாயாஜால உலகத்தில் கால் பதித்துள்ளார். மெகாஸ்டார் சிரஞ்சீவி படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். ஹைதராபாத்தில் மிகப்பெரும் பொருட்செலவில் உருவான ஒரு பெரிய செட்டில், இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடந்து வருகின்றன. படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டர், சிரஞ்சீவி விஸ்வம்பரா உலகில் காலடி எடுத்து வைப்பதை காட்டுகிறது. ரசிகர்களை மயக்கும் வகையில் அட்டகாசமாக அமைந்திருக்கிறது இந்த போஸ்டர்.

UV கிரியேஷன்ஸ் சார்பில் விக்ரம், வம்சி மற்றும் பிரமோத் ஆகியோர் இணைந்து பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படம், சிரஞ்சீவி திரை வாழ்க்கையில் மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகும் திரைப்படமாக உருவாகிறது.

இப்படத்திற்கு எம்எம் கீரவாணி இசையமைக்க, சோட்டா கே நாயுடு ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.எஸ்.பிரகாஷ் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், சுஷ்மிதா கொனிடேலா ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்.

கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் மற்றும் சந்தோஷ் காமிரெட்டி எடிட்டர்களாக பணியாற்றவுள்ளனர். ஸ்ரீ சிவசக்தி தத்தா மற்றும் சந்திரபோஸ் ஆகியோர் பாடலாசிரியர்களாகவும், ஸ்ரீனிவாஸ் கவிரெட்டி, காந்தா ஸ்ரீதர், நிம்மகத்தா ஸ்ரீகாந்த் மற்றும் மயூக் ஆதித்யா ஆகியோர் ஸ்கிரிப்ட் அசோசியேட்டுகளாகவும் பணியாற்றுகின்றனர்.

2025 ஆம் ஆண்டு சங்கராந்தி கொண்டாட்டமாக ஜனவரி 10 ஆம் தேதி இப்படத்தை வெளியிடுவதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

24 Hours Toyota Hackathon – A Road SafetyInitiative Aimed to Instil ‘Road Safety Sense’ and Promote‘Positive Behavioural Change in the Youths and the Community’

Chennai, 4 th February 2024: Reinforcing the road safety and coinciding with the ‘Road Safety Month
(18 th Jan – 17 th Feb 2024), Toyota Kirloskar Motor (TKM) today announced the successful culmination of
24 hours Toyota Hackathon, held at the RV Institute of Technology and Management, Bangalore. The
stage event of the 24 Hours-Hackathon was presided by the Chief Guests – Shri. H C Balakrishna,
MLA Magadi & Chairman – Karnataka Road Development Limited, Government of Karnataka, Shri.
Sharath Bache Gowda, Chairman – Karnataka State Electronics Development Corporation Limited
(KEONICS), Government of Karnataka, Guest of Honour – Shri. J. Purushotham, Additional
Commissioner for Transport & Director – Road Safety Cell, Transport Department, Government of
Karnataka, Special Invitee – Mr Brijesh Agarwal, Vice President- Operations at Consero Global &
Assistant Chief Traffic Warden, along with TKM’s Senior Executive – Mr. Sudeep S. Dalvi, Chief
Communication Officer & Senior Vice President and Director, and other key dignitaries.
Education and Road Safety is one of the key pillars of TKM’s core CSR. Through this initiative, TKM
focuses to drive the inventive minds of the students (class 9th to 12th standard) from across various
private and government schools as well as colleges based in Bangalore. The Toyota Hackathon
provided a dynamic platform, divided into three engaging phases, where students showcased their
creativity, innovation, and prototype development of practical digital solutions aimed to promote road
safety. Further, this program underscores the strong efforts of the company’s contribution to the vision
of ‘Zero Road Fatalities’ through ingenuity of young minds, by empowering future generations to
develop actionable road safety solutions.
India with its vast population and diverse road networks, experiences a high number of road accidents
annually. The report for calendar year 2022* reveals that the number of road accidents, the number of
persons killed, and the number of injuries has increased compared to previous years by 11.9%, 9.4%
and 15.3% respectively. Further, young adults in the age group of 18 – 45 years accounted for 66.5
per cent of the fatal road accident victims during 2022.
(*As per the publication ‘Road Accidents in India 2022’, Ministry of Road Transport and Highways – Transport Research Wing,
Govt. of India)
In this direction, the Toyota Hackathon (initiated in 2018) acts as a catalyst to include road safety in
the school & college curriculums, and thereby encourage children to become critical thinkers, further
develop solutions for modern-day road safety challenges. This helps to unlock the hidden talents of
young minds, empowering them to make significant contributions to the vital cause of road safety.
Further, by actively engaging students, it seeks to develop them to become ‘Change Agents’, playing
a crucial role in bringing about a positive behavioural change in the community at large. Furthermore,
this initiative provides an ideal platform, encouraging the future generation to leverage their
knowledge and technical expertise to address high-priority issues effectively.

Sharing his views about the Toyota Hackathon, Shri. H C Balakrishna, MLA Magadi &
Chairman – Karnataka Road Development Limited, Government of Karnataka, said, “It is
important to identify and tackle the root causes of road accidents in a comprehensive manner and the
youths can play a critical role as change makers and become road safety champions. I am truly
impressed by the innovative spirit and dedication showcased through the ideation and prototypes
developed by the students at participating schools and colleges at Toyota Hackathon. Further, it is
commendable to witness TKM’s commitment towards fostering road safety by creating the right
platform to engage and empower the young minds and at grassroot level.

The government acknowledges the importance of collaborative efforts in
addressing road safety challenges, and initiatives like these is essential to deploy the creative
potential of our future road users and drive a impactful positive change amongst the community as
well”.
Present at the Toyota Hackathon, Shri. Sharath Bache Gowda, Chairman, Karnataka State
Electronics Development Corporation Limited (KEONICS) – Government of Karnataka, said,
“We commend Toyota Kirloskar Motor for their proactive efforts in promoting road safety through their
well-designed initiative like the Toyota Hackathon, encouraging the youths to express their innovative
ideas and develop prototypes which can support to address the road safety challenges faced in
today’s world.
The government recognizes the pivotal role that collaborative initiatives like this play in leveraging the
creativities and engaging the young minds to influence the society in positive way with good road
behaviour. Such endeavours contribute significantly to the shared goal of reducing road accidents &
ensuring the safety of the citizens, and Toyota’s efforts in this direction is truly appreciated”.
During the academic year 2023-24, 62 students comprising of 31 teams registered for the Toyota
Hackathon. The program’s innovation themes actively covered a broad spectrum of seven road safety
challenges – “Road Safety Awareness and Education”; “Community Engagement for Safety”; “School
Zone Safety”; “Road Infrastructure and Pollution”; “IoT/ICT in Road Safety”; “Traffic Easement” &
“Making Roads Inclusive”.
The first phase of the Toyota Hackathon 2024, kicked off with students submitting a 200-word concept
note about their new ideas on road safety. Out of which, the qualifying students consisting of 25
teams were invited to an onsite, one-day boot camp in Bangalore during Jan 2024, where they honed
their best ideas and presentation skills, preparing for the on-ground Hackathon. In the second phase,
students further re-submitted a 300-word revised concept note, showcasing the evolution and
refinement of their initial proposed ideas. The culminating phase featured the 2-day onsite, 24 hours
Hackathon held in Bangalore, which offered technical mentorship by experts and industry professional
to build prototype basis the ideation submitted during the first phase of the Hackathon. The jury
members comprised of representatives and officials from Bangalore Traffic Police; Mindzwork
Bangalore; Transportation Systems Engineering (TSE); IISc Sustainable Transportation Lab (IST
Lab); R V Institute of Technology and Management – Bangalore; Bruhat Bengaluru Mahanagara
Palike (BBMP); Traffic Training & Road Safety Institute; Infosys; Media and Centre for Infrastructure,
Sustainable Transportation and Urban Planning (CiSTUP).
Out of 10 competing teams, three final top winning teams were announced that constituted Delhi
Public School (1 st prize winners – Dev Vats & Eshaan Godbole) – Bangalore; Delhi Public School (2 nd
prize winners – Anay Lohani & Angad S.K) – Bangalore; and Karnataka Public School (3 rd prize
winners – Apoorva A.S & Asha A.R) – Bangalore. The consolation prize winners consisted of
Soundarya Central School, Bangalore (1 st Consolation – Abhishek Gowda B.S & Amogh Rao) and
Podar International School, Bangalore (2 nd Consolation – Naresh Patel & Kushal V).
Commenting on the Toyota Hackathon initiative, Mr. Sudeep S. Dalvi, Chief Communication
Officer and Senior Vice President & Director, Toyota Kirloskar Motor, said, “At Toyota, our
commitment to road safety extends beyond manufacturing of safe cars; we strive to grow in tandem
with society and enrich the lives of the communities we serve by promoting road safety and instilling
behavioural change in them. Our journey towards raising awareness on road safety dates to 2007,
reaching 790,000 students thus far through various road safety initiatives, focusing on school
children, and developing them to become ‘road safety ambassadors’, thereby inculcating the positive
change amongst the people. In this direction, Toyota Hackathon is an extended program aimed to
provide a platform to school children (class 9 th – 12 th ) to emerge as ‘Solution Providers’, to promote
road safety. This unique road safety initiative contributes to enhance a strong connect with the
young minds to demonstrate their creativity, developing solutions towards improving road safety and
advance their sustainable development as future safety champions.

As we mark the successful culmination of the 24-Hours Toyota Hackathon, we are
truly inspired by the creativity and dedication displayed by the school and college students. This
important initiative stands as a testament to our unwavering commitment to ensuring ‘People’s
Safety on Road’. Our heartfelt thanks to all the students, teachers, faculties, educational institutes,
and esteemed authorities for joining hands with us and their strong encouragement and
participation in this important Toyota Hackathon program”.
During the awarding ceremony, the key dignitaries along with TKM senior executive presented the
‘Certificate of Participation’ and exciting ‘Prizes’ to the top 10 finalists and top three winning teams of
Toyota Hackathon, appreciating the students’ enthusiasm and contributions as road safety
champions.
Going forward, TKM will further evaluate the incubation support to the Toyota Hackathon finalists’ and
continue to explore the possibilities of the prototype implementation, thereby promote road safety.

‘சிக்லெட்’ திரைவிமர்சனம்

சிறு வயது முதல் நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா இவர்கள் மூவரும் இணைபிரியாத தோழிகளாக , ஒரே பள்ளியில் இவர்கள் மூவரும் படித்து வருகிறார்கள்.இவர்கள் மூவருடைய பெற்றோர்களும் நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.

பிள்ளைகளை பெற்ற ஒவ்வொரு பெற்றோர்களுக்குமதங்கள் பிள்ளைகள் மீது மிகப்பெரிய அளவில் கனவு ஒன்று இருக்கும்.

அதே சமயம், பள்ளி படிப்பை முடிக்கும் மூவரும் தங்களது வயது கோளாறில் காரணமாக காதல், டேட்டிங் போன்ற பலவிதமான விசயங்களில் ஈடுபாடு அதிக அளவில் காட்டுகிறார்கள்.

அதன்படி முவரும் தங்களது மனதுக்கு பிடித்த ஆண் நண்பர்களை தேர்வு செய்து அவர்களுடன் ஊர் சுற்றி உல்லாசம் அனுபவிப்பதற்காக தனது பெற்றோர்களிடம் தமது தோழிக்கு திருமண வரவேற்பு என பொய் சொல்லிவிட்டு தன் ஆண் நண்பர்களுடன் செல்கிறார்கள்.

தான் பெற்ற பிள்ளைகள் மீது நம்பிக்கை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு தப்பான வழிக்கு சென்று இருக்கிறார்கள் என உண்மை தெரிய வருகிறது, தங்களது பிள்ளைகளை தேடி மூன்று பெற்றோர்களும் அவர்களை தேடி செல்கிறார்கள்.

இறுதியில், கதாநாயகிகள் மூவரின் ஆசை நிறைவேறியதா? அல்லது பெண் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்களின் கனவு பலித்ததா? என்பதுதான் இந்த ‘சிக்லெட்ஸ்’. திரைப்படத்தின் மீதி கதை.

இந்த சிக்லெட்ஸ் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வருண் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாத்விக் வர்மா, சிக்கு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜாக் ராபின்சன் மற்றும் ஆரோன்

டீன் ஏஜ் வயது கோளாறில் கூத்து கும்பலம் என ஜாலியாக வாழ நினைக்கும் இளசுகள் அனைவரும் பேசும் வசனங்களில் நிறைந்திருக்கும் இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகள், உடல் மொழியில் கவர்ச்சி என திரைப்படம் முழுவதும் காம வசனங்களை மட்டுமே பேசி நடித்திருக்கிறார்கள்.

சுரேகா வாணி, ஸ்ரீமன், அறந்தை ராஜகோபால் மற்றும் பாட்டி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் டப்பிங் ஜானகி .

ஒளிப்பதிவாளர் கொளஞ்சி குமாரின் ஒளிப்பதிவு பெரும்பாலும் கதாநாயகிகள் மூவரின் உடலை சுற்றியே வலம் வருவதோடு, திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் அனைவரையும் பெருமூச்சு விட வைக்கும் விதத்தில் அவர்களுடைய அங்கங்கள் அனைத்தையும் மிக அருமையாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இசை பாலமுரளி பாலு

இந்த திரைப்படத்தில் பலான பலான மேட்டர்கள் பற்றி, வசனம் மற்றும் காட்சிகள் மூலம் சொல்லிவிட்டு, இறுதியில் இதெல்லாம் தப்பு என்று வழக்கமான பாணியில் பயணிப்பதோடு, திரைப்படம் முழுவதும் ஆபாசமான காட்சிகளையும், அருவருப்பான வசனங்களையும் வைத்து இளைஞர்களை ஈர்க்க நினைத்திருக்கிறார் இயக்குநர் முத்து.

சிக்லெட் மெல்லாமலே துப்பி விடலாம் அந்த அளவுக்கு உள்ளது.

சி. சத்யா இசையமைத்து பாடியுள்ள அன்பை போதிக்கும் வள்ளலாரின் ‘மனு முறை கண்ட வாசகம்’ பாடல்

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலாரின் வழி நடக்கும் இசை அமைப்பாளர் சி. சத்யா இசையமைத்து பாடியுள்ள அன்பை போதிக்கும் வள்ளலாரின் ‘மனு முறை கண்ட வாசகம்’ பாடல்

“வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்” என்று பிரகடனம் செய்து தமிழகத்தில் இருந்து ஒட்டு மொத்த உலகத்திற்கும் அன்பையும் பண்பையும் போதித்த திரு அருட்பிரகாச வள்ளலார் அருளிய ‘மனு முறை கண்ட வாசகம்’ பாடலை பிரபல இசை அமைப்பாளர் சி. சத்யா இசையமைத்து பாடியுள்ளதோடு காணொலியாகவும் தயாரித்துள்ளார்.

வள்ளலாரின் வழிகாட்டுதல்களை தனது வாழ்க்கை முறையாக பின்பற்றி வரும் சத்யா, அவரது ஸ்டூடியோவில் கடந்த 14 வருடங்களாக அணையா விளக்கை பராமரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

‘மனு முறை கண்ட வாசகம்’ பாடலுக்கு இசை அமைக்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் உணர்வு இந்த வருட தைப்பூசத்தின் போது நிறைவேறியுள்ளதாக நெகிழ்ச்சியுடன் கூறிய சத்யா, இப்பாடல் வெகு விரைவில் வெளியாகும் என்று கூறினார்.

இது குறித்து பேசிய அவர், “வள்ளலார் நமக்கு வழங்கியுள்ள அற்புதமான வழிகாட்டு பாடல்களில் ஒன்று தான் ‘மனு முறை கண்ட வாசகம்’. ‘நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ! நட்டாற்றிற் கையை நழுவவிட்டேனோ!’ என்று செல்லும் இப்பாடலின் அறநெறிகளை பின்பற்றினாலே போதும், உலகில் அன்பு சூழ்ந்து அமைதி நிலவும். எனவே, இந்த பாடலை இன்னும் அதிகமானோருக்கு எடுத்து செல்லும் வகையில் இசையமைத்து பாடியுள்ளேன்,” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய இசை அமைப்பாளர் சத்யா, “அன்பும் அறமும் மட்டுமே உலகத்தையும் மக்களையும் தழைக்க செய்யும் மந்திரங்கள். எத்தனையோ வருடங்களுக்கு முன்பு வள்ளலார் போதித்த இவை இன்றைய நவீன உலகத்திற்கும் மிகவும் பொருத்தமாக உள்ளன. இப்பாடலை வள்ளலார் வழி நடப்போர் மட்டுமின்றி அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று வேண்டுகிறேன்,” என்று தெரிவித்தார்.

சி. சத்யா இசையமைத்து பாடி தயாரித்துள்ள அன்பை போதிக்கும் வள்ளலாரின் ‘மனு முறை கண்ட வாசகம்’ பாடல் காணொலி வடிவில் உலகமெங்கும் விரைவில் வெளியாக உள்ளது.

“மெட்ராஸ்காரன்” திரைப்படத்தில் இணைந்த தெலுங்கு நாயகி நிஹாரிகா !!

SR PRODUCTIONS சார்பில் B. ஜகதீஸ் தயாரிப்பில், ரங்கோலி படப்புகழ் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகாம், கலையரசன் இணைந்து நடிக்க, புதுமையான திரில்லர் டிராமாவாக உருவாகும் திரைப்படம் “மெட்ராஸ்காரன்” இப்படத்தில் தெலுங்கு நட்சத்திர குடும்பத்து நடிகை நிஹாரிகா இணைந்துள்ளார்.

தெலுங்குத் திரையுலகின் மிகப்பெரும் நட்சத்திரக்குடும்பமான சிரஞ்சீவி குடும்பத்திலிருந்து, தமிழுக்கு வந்திருக்கிறார் நாயகி நிஹாரிகா. தெலுங்கில் நாயகியாக அறிமுகமான நிஹாரிகா ஒரு நடிகையாக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் கலக்கி வருகிறார். வெப் சீரிஸ்கள் என பல படைப்புகளை தயாரித்து வருகிறார்.

தற்போது தமிழில் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகாம் ஜோடியாக “மெட்ராஸ்காரன்” திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஒரு சிறு ஈகோ, ஒருவனின் வாழ்வை எந்த எல்லைக்கு கூட்டிச்செல்லும் என்பதே இப்படத்தின் மையம். ரங்கோலி படம் மூலம், பள்ளிச் சிறுவர்களின் வாழ்வியலை வண்ணங்களாக தீட்டிய, இயக்குநர் வாலி மோகன் தாஸ், இப்படத்தில் ஒரு சிறு சம்பவம் பெரும் பிரச்சனையாக, இருவர் வாழ்க்கையை புரட்டி எடுப்பதை, பரபரப்பான திரைக்கதையாக படைத்துள்ளார்.

மலையாளத்தில் புகழ்பெற்ற கும்பளாங்கி நைட்ஸ், ஆர் டி எக்ஸ், இஷ்க் படப்புகழ் நடிகர் ஷேன் நிகாம், இப்படம் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார். நடிகர் கலையரசன் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் இணைந்து நடிக்கிறார். ஷேன் நிகாம் ஜோடியாக நிஹாரிகா நடிக்கிறார்.

தற்போது படத்தின் முன் தயாரிப்பு பணிகள் துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் பிப்ரவரி மாதம், இப்படத்தின் படப்பிடிப்பை சென்னை, மதுரை, கொச்சி ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்க, படக்குழு திட்டமிட்டுள்ளது.

படம் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

பெரும் பொருட்செலவில், உயர்தர தொழில் நுட்ப கலைஞர்களுடன் தரமானதொரு படைப்பாக SR PRODUCTIONS சார்பில் B. ஜகதீஸ் இப்படத்தை தயாரிக்கிறார்.

‘லவ்வர்’ படத்தின் இசை வெளியீடு.

அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘லவ்வர்’. இதில் மணிகண்டன், ஸ்ரீகெளரி ப்ரியா, கண்ணா ரவி, ஹரினி, நிகிலா, ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். ராஜ்கமல் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கும் இந்த படத்தின் படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொண்டிருக்கிறார். காதலை மையப்படுத்தி தயாராகியிருக்கும் இந்த படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் நாசரேத் பஸ்லியான், மகேஷ்ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

பிப்ரவரி மாதம் ஒன்பதாம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இந்த படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதற்காக நடைபெற்ற பிரத்யேக வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் ரஞ்சித் ஜெயக்கொடி, விநாயக், விநியோகஸ்தர் சக்திவேலன் மற்றும் படக்குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விநியோகஸ்தர் சக்திவேலன் பேசுகையில்,“ லவ்வர் படக்குழுவினர் இதற்கு முன் குட் நைட் எனும் வெற்றிப்படத்தினை வழங்கியவர்கள். அப்படத்தின் வெற்றியைக் கொண்டாடவில்லையா? என கேட்ட போது, அவர்கள் அடுத்த படத்தின் படபிடிப்பில் இருந்தனர். அந்தளவிற்கு நம்பிக்கையுடன் இந்த படக்குழுவினர் பணியாற்றினர்.

இந்த படத்தைப் பற்றிய செய்திகள் வெளியானவுடன் ஏராளமான விநியோகஸ்தர்கள் இந்த படத்தை வெளியீடுவதற்கு முன்பணத்துடன் படக்குழுவினரை அணுகினார்கள். நான் கூட இந்த அளவிற்கு ‘லவ்வர்’ படம் வெளியாகும் முன்பே வணிகம் நடைபெற்றால்.. அதனை ஏற்றுக்கொள்ளுங்கள் என வேண்டுகோள் வைத்தேன். ஆனால் அவர்களோ இந்த படத்தினை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி மூலமாக வெளியிடவே திட்டமிட்டிருக்கிறோம் என்று தயாரிப்பாளர்கள் உறுதியுடன் தெரிவித்தனர். இதற்காக தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் கடந்த வாரம் இந்த படத்தைப் பார்த்தேன். எக்ஸலாண்ட்டான மூவி. இப்படத்தின் பின்னணியிசையை ஷான் ரோல்டன் மிகச்சிறப்பாக இசையமைத்திருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் பேசப்படும்.

இந்த படத்தின் டிரைலரில் மணிகண்டன் பேசும் ஒரு வசனம் இடம்பெற்றிருக்கிறது. அவருடைய நடிப்பை விட அவருடைய குரல் மூன்று மடங்கு கூடுதலாக நடித்திருக்கிறது. மணிகண்டன் தமிழ் திரையுலகில் இன்னும் கூடுதலான உயரத்திற்கு செல்லும் தகுதியும், திறமையும் பெற்ற நடிகர். ஒரு சாதாரண காட்சியைக் கூட தன்னுடைய நடிப்பால் உயிர்ப்புள்ளதாக்கும் வலிமைக் கொண்டவர்.

‘லவ் டுடே’ எப்படி வெற்றியைப் பெற்று வரலாறு படைத்ததோ.. அதை விட கூடுதலாக வசூலித்து இந்த படம் சாதனை படைக்கும். இந்த படம் ஒட்டுமொத்த பார்வையாளர்களுக்கான படம். இதில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு விசயமும் ரசிகர்களுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புடையதாக இருக்கும்.” என்றார்.

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி பேசுகையில்,“ இந்த படத்தைப் பற்றி சொல்லவேண்டும் என்றால் பாப்லா நெரூடாவின் ஒரு கவிதையைத்தான் குறிப்பிடவேண்டும். ‘காதல் சிறியவிசயம் தான். ஆனால் அதிலிருந்து விட்டுவிலகுவது தான் கடினமான விசயம்’. இது தான் இப்படத்தின் அடிநாதம். இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமென்றால், ‘என்னை நீயும், உன்னை நானும் யார் முதலில் இழப்பது என்பது தான்…’ இப்படத்தின் அடிநாதமாக இருக்கிறது. இந்த படத்தின் திரைக்கதையை படிக்கும் போது இயக்குநர் பிரபுராம் வியாஸின் எழுத்து, நாவலை வாசிக்கும் உணர்வைக் கடந்து எமோஷனலாக அதனுடன் இணைந்துவிட்டேன். இதில் கமர்சியல் எலிமெண்ட்டுகளை லாவகமாக இணைத்து எழுதியிருந்தார். அதனால் பிரபுராம் வியாஸ் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இந்த படத்தில் இடம்பெறும் பாடல்களில் பாடலாசிரியர் மோகன் ராஜன், ஜென் தத்துவங்களை எளிதான வரிகளாக எழுதி மனதில் இடம்பிடிக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.” என்றார்.

தயாரிப்பாளர் மகேஷ்ராஜ் பஸ்லியான் பேசுகையில்,“ தேன்சுடரே..’ என்ற பாடல் வெளியானவுடன் நாயகன் மணிகண்டனுக்கு போன் செய்து, குறிப்பிட்ட குகை காட்சியில் எப்படி நடித்தீர்கள்? என கேட்டபோது, ‘அதற்கு அவர் வாழ்க்கையில் வெற்றியே கிடைக்காத ஒருவர் இருட்டில் நடந்து வரும் போது திடிரென்று ஒரு வெளிச்சம் வந்தால் எப்படியிருக்கும்? அதை மனதில் நினைத்துக கொண்டு தான் நடித்தேன்’ என எளிதாக விளக்கமளித்தார். இது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.

இந்த படத்தை நானும் பார்த்துவிட்டேன். ஃபன்டாஸ்டிக் மூவி. படத்தில் நடித்திருந்த அனைத்து நடிகர்களும் நன்றாக நடித்திருந்தார்கள்.

‘குட்நைட்’ படத்தின் படபிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது இயக்குநர் பிரபுராம் இப்படத்தின் கதையை சொன்னார். ஆனால் இது தொடர்பாக யுவராஜ் தான் முடிவெடுப்பார் என்று சொன்னேன். ஏனெனில் திரைத்துறையைப் பொறுத்தவரை எனக்கு யுவராஜ் தான் வழிகாட்டி. அவர் செய்யும் விசயங்கள் எனக்கு பல சமயங்களில் பிரமிப்பைத் தரும்.

குட்நைட் படத்தின் வெற்றிவிழாவில் மில்லியன் டாலர் ஸ்டூடியோசும், எம்ஆர்பி எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தரமான படங்கள் வழங்கும் என சொன்னேன். தற்போது ‘லவ்வர்’ படத்தை உருவாக்கியிருக்கிறோம். இதுவும் தமிழ் ரசிகர்களுக்கான தரமான படம்.

2015 ஆம் ஆண்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் டிசைன் விசயமாக யுவராஜ் எனக்கு அறிமுகமானார். அதன் பிறகு அவருடன் பழகி வருகிறேன். தற்போது எங்களுடைய இரண்டாவது படம் வெளியாகும் சமயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி சார் சிறப்பு தோற்றத்தில் நடித்த ‘லால் சலாம்’ படமும் வெளியாகிறது. இதுவே எங்களுக்கு கிடைத்த ஆசியாக கருதுகிறோம். இந்த இரண்டு படங்களும் வெற்றிபெற வேண்டும்.” என்றார்.

தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் பேசுகையில்,“ திரைத்துறையில் டிசைனிங் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த போது தயாரிப்பாளராக திட்டமிட்டேன். அந்த தருணத்தில் பலரும் படத்தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டது குறித்து எதிர்நிலையான கருத்துகளைச் சொல்லிக்கொண்டிருந்தனர். யாரும் எனக்கு ஆதரவாக பேசவேயில்லை. அப்போது சபரி எனும் நண்பர் உதவி செய்தார். அதன் பிறகு சக்திவேலன் எங்களைத் தொடர்பு கொண்டார். நல்ல கன்டெண்ட் இருந்தால்.. அதனை ஆதரிக்க இங்கே ஆட்கள் இருக்கிறார்கள் என்பதையும் தெரிந்துகொண்டேன்.

இந்த படத்தை கடந்த ஆகஸ்ட்டில் தான் தொடங்கினேன். அதற்குள் இந்த படத்தின் பணிகளை நிறைவு செய்து திரைக்குக் கொண்டுவந்திருக்கிறோம். இதற்காக கடுமையான உழைத்த என்னுடைய குழுவினருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘லவ்வர்’ திரைப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.” என்றார்.

நடிகர் கண்ணா ரவி பேசுகையில்,“ குட் நைட் படத்திற்கு ஊடகமும், ரசிகர்களும் ஆதரவளித்ததால் தான் அப்படம் வெற்றிப் பெற்றது. அத்துடன் அந்த படம் நிறைய பொக்கிஷங்களை கொடுத்தது. அதைத் தொடர்ந்து தற்போது ‘லவ்வர்’ என்ற படமும் தயாராகியிருக்கிறது. இதுவும் வெற்றிப்படம் தான். தயாரிப்பாளர் யுவராஜிடம் எந்தமாதிரியான படங்களை தயாரிப்பதில் விருப்பம் இருக்கிறது? என கேட்டபோது, எனக்கு பிடித்த படமாக அமையவேண்டும். அந்த படம் அந்த ஆண்டின் டாப் ஐந்து படங்களில் ஒன்றாக இடம்பெறவேண்டும். அந்த வகையில் தற்போது அவரின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘லவ்வர்’ படமும் டாப் ஐந்து படங்களில் ஒன்றாக இருக்கும். இந்த படத்தின் இயக்குநரான பிரபுராம் வியாஸ் மீது தயாரிப்பாளர்கள் மிகப் பெரிய நம்பிக்கையை வைத்துள்ளார்கள்.

இயக்குநர் பிரபுராம் வியாஸ், அவர் இயக்கிய குறும்படத்தின் மூலம் எனக்கு அறிமுகமானார். அதற்கு பிறகு ‘லிவ் இன்’ எனும் வெப் சீரிஸில் சந்தித்தோம். அந்த தொடரின் வெற்றிக்கு பிறகு ஏராளமான தயாரிப்பாளர்கள் ‘லிவ் இன்’ தொடரின் அடுத்த பாகத்தை இயக்குங்கள் என கேட்டனர். அதற்கு மறுப்பு தெரிவித்த வியாஸ், உடனே இயக்காமல், மீண்டும் நேர்மையாக உழைத்து உருவாக்கிய திரைக்கதை தான் ‘லவ்வர்’. அதனால் இந்த படமும் வெற்றிப் பெறும். இந்த படத்தை பார்த்துவிட்டு சாதாரணமாக கடந்து போய்விட முடியாது. இந்த படம் உங்களைப் பற்றியும், உங்களுடைய காதலைப் பற்றியும், காதலரைப் பற்றியும் மேலும் பல புரிதல்களை உங்களுக்குள் ஏற்படுத்தும். பேசி தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை எந்த வகையான புரிதலுடன் பேசி வாழ்க்கையை சந்தோஷமாக எதிர்கொள்ளவேண்டும் என்பதையும் கற்றுக்கொடுக்கும்.” என்றார்.

நடிகை ஸ்ரீ கௌரி ப்ரியா பேசுகையில்,“ பெருமிதமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.லவ்வர் என்றொரு படத்தில் எனக்கு இப்படியொரு வாய்ப்பு கிடைத்திருப்பதும். என்னுடைய கனவு குழுவினருடன் பணியாற்ற கிடைத்த வாய்ப்பையும் எனக்கு கிடைத்த ஆசியாக கருதுகிறேன். ‘மாடர்ன் லவ் சென்னை’ எனும் படைப்பில் நடிக்கத் தொடங்கியிருந்த போது எனக்கு இந்த அளவிற்கு தமிழ் பேசத் தெரியாது. ஆனால் எனக்கு தமிழ் மொழி மீது, தமிழ் மக்கள் மீது. தமிழ் திரைப்படங்கள் மீது.. இருக்கும் ஈர்ப்பால் எப்படியாவது தமிழில் பேசிவிடவேண்டும் என்று முயற்சியெடுத்தேன்.

லவ்வர் என்னுடைய திரையுலக பயணத்தில் மிக முக்கியமான படம். இந்த படத்திற்காக நடிக்க ஒப்புக்கொள்ளும் போது என்னுடைய அம்மா காலமாகிவிட்டார். அந்த தருணத்தில் நான் இருந்த மனநிலையில் இருந்து, என்னை முழுமையாக மீட்டு பணியாற்றவைத்தனர் இந்த படக்குழுவினர். அதனால் இந்த தருணத்தில் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நேர்மையாகவும், கடினமாகவும் உழைத்து இந்த படத்தை உருவாக்கியிருக்கிறோம். எங்களின் கடின உழைப்பும், நேர்த்தியும் உங்கள் மனதைத் தொடும் என நம்புகிறேன். பிப்ரவரி 9 ஆம் தேதியன்று திரையரங்குகளுக்கு வருகைத்தந்து ஆதரவளிக்கவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். ” என்றார்.

இயக்குநர் பிரபுராம் வியாஸ் பேசுகையில்,“ 2019 ஆம் ஆண்டில் நான் மணிகண்டனுக்கு போன் செய்து, உங்களுக்காக கதை ஒன்றை தயார் செய்திருக்கிறேன். சந்திக்கலாமா? எனக் கேட்டேன். அன்று மாலையே வணிக வளாகம் ஒன்றில் சந்தித்து பேசினோம். அந்த முதல் சந்திப்பிலேயே எனக்கு சௌகரியமான சூழலை உருவாக்கினார். அவரிடம் என்னுடைய திரைக்கதையை கொடுத்துவிட்டு வந்தேன். மறுநாளே அந்த கதையை வாசித்துவிட்டு, அதைப் பற்றி நிறைய நேரம் பேசினார். நானும் இந்த கதையை எழுதிய பிறகு முதலில் அவரைத் தான் தொடர்பு கொண்டேன். அவருக்கும் இந்த கதை புரிந்து.. அதிலுள்ள நுட்பமான விசயங்களைப் பற்றி பேசியபோது, என்னுடைய எழுத்திற்கு கிடைத்த அங்கீகாரமாகவே அதனை எடுத்துக் கொண்டேன். அதனால் மணிகண்டனுக்கு என்னுடைய முதல் நன்றி.

நானும், மணிகண்டனும் இணைந்து இந்த கதையை ஏராளமான பட நிறுவனங்களிடம் எடுத்துச்சொல்லியிருக்கிறோம். அதன் பிறகு ஒரு நாள் ‘குட் நைட்’ படத்தின் படபிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கும் சமயத்தில் மணிகண்டன் போன் செய்து, ‘உங்களுடைய கதையை குட்நைட் தயாரிப்பாளரிடம் சொன்னேன். அவர் உணர்வு பூர்வமாக கதையைக் கேட்டு உங்களை சந்திக்கவேண்டும்’ என்றார். உடனே தயாரிப்பாளர் யுவராஜ் கணேசனைச் சந்தித்தேன். அதன் பிறகு இந்த படத்தின் பணிகள் தொடங்கியது.

நான் எந்த இயக்குநரிடம் உதவியாளராக பணியாற்றியதில்லை.. இந்த படத்தில் அது தொடர்பான அனைத்து விசயங்களையும் கற்றுக்கொண்டேன். இதற்கு வழிநடத்திய யுவராஜுக்கு நன்றி. இந்த படத்திற்கு பேருதவி அளித்த தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் நடிகைகள் என அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த படத்தில் ஒரு கதாப்பாத்திரத்தில் நடிகர் கண்ணா ரவி நடித்திருக்கிறார். அந்த கதாப்பாத்திரத்தில் அவர் நேர்த்தியாக நடித்திருக்கிறார். படம் வெளியான பிறகு அவர் ரசிகர்களின் மனதில் நிச்சயம் இடம்பிடிப்பார். இப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாப்பாத்திரங்களும் ரசிகர்கள் திரையரங்கை விட்டு வீட்டிற்கு செல்லும் போது அவர்கள் தங்களுடைய மனதில் சுமந்து செல்வார்கள். ” என்றார்.

இசையமைப்பாளரும், பாடகருமான ஷான் ரோல்டன் பேசுகையில்,“ குட்நைட் படத்தின் பணிகள் நிறைவடைவதற்கு முன்னரே இப்படத்தின் பணிகள் தொடங்கிவிட்டது. ‘லவ்வர்’ படத்தில் பணியாற்றிய பாடலாசிரியர்கள். பின்னணி பாடகர்கள், பாடகிகள், நடிகர் சித்தார்த், இசையமைப்பாளர்கள் சந்தோஷ் நாராயணன் மற்றும் ஜீ வி பிரகாஷ் குமார், புஷ்பவனம் குப்புசாமியின் வாரிசான நேகா அகர்வால், இசை கலைஞர்கள் உள்ளிட்ட என்னுடைய இசைக்குழுவினருக்கும், நடித்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருக்கும் இந்த தருணத்தில் முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நம் சமூகத்தில் பொதுவாக அறிவாளிகள் கஷ்டப்படுவார்கள். அறிவாளியாக பிறந்தாலே நம்மூரில் சிக்கல் தான்.சிந்திக்கிறான் என்றாலே அவனுடன் சேராதே என சொல்பவர்கள் தான் அதிகம். நிறைய யோசித்தால் நீங்கள் உங்களை தனிமைப்படுத்திக்கொள்வீர்கள். இதுபோன்ற அறிவாளிகள் வெற்றிப் பெறவேண்டும் என்பது தான் என்னுடைய இலக்கு. ஏனெனில் நல்ல சிந்தனையாளர்கள் வெற்றிப் பெற்றால் அந்த சமூகம் ஆரோக்கியமாக இருக்கும். சிந்தனையாளர்களை வெற்றிப் பெற வைக்கும் துறையா.. இது? என்று கேட்டால்,. நிறைய பேர் முயற்சிக்கிறார்கள். . அதில் ஐம்பது சதவீதத்தினர் வெற்றி பெறுகிறார்கள். அந்த வரிசையில் இயக்குநர் பிரபுராம் வியாஸ் இன்னும் படங்களை இயக்கி, உயர்ந்த இடத்திற்கு முன்னேறுவார். அவர் நல்ல விசயங்கள் இயல்பாக போகிறபோக்கில் சொல்லக்கூடிய திறமைசாலி.

தயாரிப்பாளர் யுவராஜ் தமிழ் திரையுலகில் போராளி. மற்றொரு தயாரிப்பாளரான மகேஷ் ராஜ் சினிமாவின் மிகப்பெரிய ரசிகன்.

ரசிகர்களாகிய நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறீர்கள். அதற்கு நடுவில் நேரம் கிடைத்தால் இந்த படத்தை தயவு செய்து திரையரங்கத்திற்கு சென்று பாருங்கள். உங்களுடைய வாழ்க்கைக்கு இந்த படம் ஏதேனும் ஒரு விசயத்தை தரும்.” என்றார்.

நடிகர் மணிகண்டன் பேசுகையில்,“ சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் இருக்கிறேன். இந்த படத்தில் நடித்ததற்காக சந்தோஷப்படுகிறேன். நாங்கள் நினைத்த மாதிரி இந்த படத்தை உருவாக்கியதற்கு நிம்மதியாக இருக்கிறேன். 2019 ஆம் ஆண்டில் இந்த கதையை பிரபு சொன்னபோது அவரிடம், ‘நீங்கள் என்னை வைத்து இயக்காவிட்டாலும், வேறு யாரையாவது வைத்து இயக்குங்கள். ஏனெனில் இந்த கதை இந்த சமூகத்திற்கு அவசியம் சொல்லப்படவேண்டிய கதை.’ என்றேன்.

இந்த படத்தை இயக்கியதற்காக இயக்குநர் பிரபுராம் வியாஸை பாராட்டுகிறேன். அதனையடுத்து தயாரிப்பாளர்களைப் பாராட்டுகிறேன். ஏனெனில் இந்த படத்தின் திரைக்கதையில் எந்த இடத்திலும் கமர்சியல் எலிமெண்ட் வேண்டும் என சொல்லாமல், கதையோட்டத்தின் இயல்பை ஏற்றுக்கொண்டு தயாரித்தனர்.

படபிடிப்புத்தளத்தில் நாயகி கௌரி ப்ரியாவின் மனோபலம் எங்கள் அனைவரையும் வியக்கவைத்தது. கண்ணா ரவி தற்போது தனி கதாநாயகனாக நடித்து வருகிறார். இருந்தாலும் இந்த படத்தில் இயக்குநர் சொன்னதற்காக நல்லதொரு கேரக்டரில் கொஞ்சம் கூட முகச்சுழிப்பு இல்லாமல் நடித்து முழு ஒத்துழைப்பை அளித்தார். இவர்கள் மட்டுமல்லாமல் படத்தில் நடித்த அனைவரும் தாங்கள் ஒரு வெற்றிப்படத்தில் நடிக்கிறோம் என்ற எண்ணத்திலேயே நடித்தனர்.

நான் எப்போதும் ஒரு விசயத்தை மட்டும் உறுதியாக சொல்லிக்கொண்டேயிருப்பேன். அதேப்போல் இப்போதும் சொல்கிறேன். ‘இந்த படம் உங்களை ஒருபோதும் டிஸ்ஸாப்பாயின்ட்மென்ட் பண்ணாது.” என்றார்.

‘மறக்குமா நெஞ்சம்’ திரைவிமர்சனம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்கள் அனைவரும் பள்ளி வாழ்க்கையை கடந்து கல்லூரி வாழ்க்கையைக் கடந்து அவரவர் வாழ்க்கையில்  செட்டில் ஆகி விடுகின்றனர்.

இதற்கிடையே பத்து வருடங்களுக்கு முன்பு தான் படிக்கும் பள்ளியில் அதே வகுப்பில் படிக்கும் கதாநாயகி மலினாவை ஒரு தலையாக கதாநாயகன் ரக்‌ஷன் காதலித்து வருகிறார்.

இந்நிலையில் பத்து வருடங்கள் முன்பு படித்த கல்வியாண்டில்   அனைத்து மாணவர்கள் எழுதிய தேர்வில் பாஸ் ஆனது செல்லாது என தீர்ப்பு வருகிறது. நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கண்ட மாணவர்கள் அதிர்ச்சியும், ஆனந்தமும் படுகின்றனர்.

இதனால் மீண்டும் பள்ளிக்கு சென்று மூன்று மாத காலம் வகுப்பில் இருந்து படித்து அந்த அனைத்து மாணவர்கள் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே அந்த மாணவர்களின் தேர்ச்சி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் நீதிமன்றம் கூறுகிறது.

10 வருடங்கள் கழித்து அந்த பள்ளிக்கு வந்த நேரத்தில்,  ரக்‌ஷன்   தனது காதலை எப்படியாவது சொல்லியாக வேண்டும் என்று முடிவெடுக்கிறார்.

 ரக்‌ஷன்   மலீனாவிடம் தன் காதலை  கூறினாரா?  அந்த காதலை கதாநாயகி மலீனா ஏற்றுக் கொண்டாரா? என்பதுதான் இந்த ‘மறக்குமா நெஞ்சம்’ திரைப்படத்தின் கதை.

நடிப்பில் சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் பாராட்டலாம்.

நாயகி மலீனா நடிப்பிலும் முடிந்தவரை நன்றாகவே நடித்து ரசிக்க வைத்திருக்கிறார்.

விஜய் டிவி தீனாவின் காமெடிகள் ஆங்காங்கே ரசிக்க வைத்தது.

ப்ராங் ஸ்டார் ராகுல், பி டி வாத்தியாராக  முனீஸ்காந்த்  அவருடைய மனைவியாக  அகிலா.

கோபி துரைசாமியின் ஒளிப்பதிவு திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

இசையமைப்பாளர் சச்சின் வாரியர் .

மறக்குமா நெஞ்சம் மறக்க முடியாத படி திரைக்கதை அமைத்திருந்தால் நிச்சயம் நமக்கு மறக்குமா நெஞ்சம் அப்படித்தான் இருந்திருக்கும்.

STAR RATTING———-2.5/5

Age No Bar for Major Neuro Surgery – Octogenarian Speaks Again After Four Years!

Kauvery Hospital, Radial Road, performed a successful Microvascular Decompression (MVD) surgery, restoring speech in an 85-year-old patient after four years and relieving symptoms of facial pain caused by trigeminal neuralgia. This surgery stands as a testimony to the surgical excellence at the Institute of Brain and Spine and is yet another example of the advancements in surgery techniques and anaesthesia to ensure safe and fast recovery in an elderly patient.

Mr Veerasamy, 85 years old, was suffering from shock-like pains on the left side of the face for more than four years. The pain progressively increased in intensity and frequency, to the extent he was unable to talk, eat or even brush his teeth and shave. A normally outgoing personality, this made him depressed and changed him so much that he stopped talking, stopped going out and stopped interacting with everyone, including his family. Medications did not work and even some medical procedures he underwent gave him only temporary relief. A chance conversation between his son-in-law and Dr Krish Sridhar gave the family a glimmer of hope.

Mr Veerasamy consulted Dr Krish Sridhar, Senior Neurosurgeon and Group Mentor, Neurosciences, at Kauvery Hospital, Radial Road.

“On listening to the symptoms described by Mr Veerasamy, it was obvious that he needed surgery for his condition – trigeminal neuralgia. The only issue was, considering his age, whether he was medically fit to undergo the surgery,” said Dr Krish Sridhar.

Trigeminal neuralgia is a condition where the patient experiences excruciating pain on the face. It is typically caused by a blood vessel lying in close contact with the trigeminal nerve that transmits sensation from the face to the brain. Due of the constant pulsation of the vessel on the nerve, the latter gets irritated and any sensation is then perceived as pain. If medicines do not work, MVD surgery is the cure.

Dr Krish Sridhar, who has immense experience performing this surgery, said, “MVD surgery is a low-risk surgery which does not destroy any normal structure of the brain. Through surgery, we simply move the offending (albeit normal) vessel away from the nerve.”

Mr Veerasamy underwent the surgery and on waking up from anaesthesia, he was completely free of facial pain. In his words: “I have got a rebirth – I can talk freely, I can eat normally and I can brush my teeth again!” His family is happy that they can hear him speak once again after nearly four years.

Age is not a contraindication for surgery, especially when the patient is suffering from severe pain. Considering the advancements in anaesthesia and modern surgical technologies available, if a patient is medically fit for anaesthesia, the MVD surgery is the best option for a long-term cure for trigeminal neuralgia.

Kauvery Hospital, Radial Road, is a leading healthcare institution offering advanced treatments and surgical interventions in neurology, cardiology, women and child wellness, gastroenterology, orthopaedics, joint reconstruction, urology, nephrology and other specialities. With a dedicated team of experts and state-of-the-art medical facilities including 50+ critical care beds, 20+ NICU beds, 7+ operation theatres, an advanced Cath lab, cutting-edge neuro diagnostic equipment like 3T MRI and 4K + 3D neuro microscope, transplant facilities and 24/7 dialysis unit, it provides world-class medical care to patients from around the globe.