Breaking
June 6, 2026

Moonwalk திரைப்படத்தின் ‘Yethu’ பாடலுக்கு ஆப்பிரிக்கன குழந்தைகளின் இசைக்குழு நடமாடி வீடியோ பதிவிட்ட நிலையில் அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் கமெண்ட் செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

மூன்வாக் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஏத்து’ வீடியோ பாடல் இன்ஸ்டாகிராமை அதிர வைத்துள்ளது. இது ஒரு பெரிய நடன ட்ரெண்டாக மாறி, உலகம் முழுவதும் வேகமாக வைரலாகி வருகிறது.

ஆப்பிரிக்கா, ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரான்ஸ், ஸ்வீடன் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த ட்ரெண்டில் உற்சாகமாக கலந்து கொண்டு, பாடலின் உணர்வை காப்பாற்றியபடி அதிக ஆற்றலுடன் ரீல்ஸ் செய்து பதிவிட்டு வருகின்றனர்.

Yethu பாடல் வெளியான இரண்டு வாரங்களிலேயே யூடியூபில் 11 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. மேலும், சர்வதேச விமர்சகர்கள் Yethu பாடலை பார்த்து ஆர்வத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது சமூக ஊடகங்களில் “Yethu” பாடலை கொண்டு செய்யப்பட்ட ரீல்கள் 100 மில்லியன் பார்வைகளை கடந்து படுவைரலாகி வருகிறது.

ஜனவரி 27ஆம் தேதி தொடங்கிய இந்த ட்ரெண்ட், இன்றளவும் சற்றும் குறையாமல் தொடர்ந்து வேகமெடுத்து வருகிறது. நடனக் கலைஞர்களைத் தாண்டி, இசைக்கலைஞர்கள் மற்றும் வாத்தியக்கலைஞர்களும் “Yethu” பாடலுக்கு ரீல்ஸ் செய்து அசத்தி வருகின்றனர்.

ஆப்பிரிக்காவின் பிரபலமான “Hypers Kids Africa” என்ற குழந்தைகள் இசைக்குழு “Yethu” பாடலுக்கு நடன ரீமேக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த வைரல் அலைக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில், புகழ்பெற்ற இசையமைப்பாளர் A R ரஹ்மான் அவர்களே அந்த வீடியோவில் “Thank you for the love. You guys are terrific” என கமெண்ட் செய்துள்ளார். அதற்கு பதிலளித்த குழந்தைகள் குழு, “Happy to see your comment. We love you too” என்று தெரிவித்துள்ளது. இந்த தருணம் ரசிகர்கள் மற்றும் இப்பாடலுக்கு மேலும் reels தயாரிப்பவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி, இப்பாடல் கலாச்சாரம் தாண்டி எல்லோராலும் கொண்டாடப்படுகிறது என்பதை உறுதிப்படுத்திருக்கிறது

“Yethu” பாடலில் நடனப்புயல் பிரபுதேவா மிகவும் கடினமான நடன அசைவுகளை எளிதாக ஆடி அசத்திய விதத்திற்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
A R Rahman அவர்களின் துள்ளலான இசையுடன் கூடிய பிரபுதேவாவின் அதிரடி நடனம், பாடலின் ஒளிப்பதிவு அமைப்பு — இவை அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இப்பாடல் உலகமெங்கும் வைரல் லிஸ்டில் இணைந்துள்ளது.

இப்பாடலின் மீது ஈர்ப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ‘Yethu’ ஒரு உலகளாவிய நடன கீதமாக மாறி வருகிறது. தாளம், ஒற்றுமை மற்றும் எல்லைகளை தாண்டிய படைப்பாற்றலை கொண்டாடும் ஒரு திருவிழாவாக மாறியுள்ளது “Yethu” பாடல்

தமிழக முதல்வரைச் சந்தித்த “வித் லவ்” படத் தயாரிப்பாளர்கள்

‘வித் லவ்’ – வெற்றிப் பயணம் தொடரும் நிலையில் முதல்வரை சந்தித்த தயாரிப்பாளர்கள்

திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘வித் லவ் (With Love)’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் இன்று மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்க, பசிலியான் நாசரேத் மற்றும் மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில் உருவான இப்படம், வெளியான நாளிலிருந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த வெற்றியின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் இன்று தயாரிப்பாளர்கள் தமிழக முதல்வரைச் சந்தித்தனர்.

முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் தயாரிப்பாளர்களுடன் சிறிது நேரம் உரையாடி, ‘வித் லவ்’ திரைப்படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, படக்குழுவின் முயற்சியையும் பாராட்டினார். இந்த சந்திப்பு படக்குழுவினருக்கு மேலும் உற்சாகம் அளித்துள்ளது.

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடித்துள்ள ‘வித் லவ்’, 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இன்றைய இளைஞர்களின் உலகம், அவர்களின் உணர்வுகள் மற்றும் காதலை மையமாக வைத்து உருவான இப்படம், ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் விமர்சகர்களிடமும் பாராட்டுகளை குவித்துள்ளது.

‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன், இப்படத்தின் இயக்குநராக அறிமுகமாகி, தனது நேர்த்தியான கதை சொல்லலால் கவனம் ஈர்த்துள்ளார்.

இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். K. சுரேஷ் குமார் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். ராஜ்கமல் கலை இயக்கம் செய்துள்ளார். உடை வடிவமைப்பாளராக ப்ரியா ரவி பணியாற்றியுள்ளார்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான மகேஷ் பாபு , காலத்திற்கு அப்பாற்பட்ட ஒரு மயக்கும் காவிய கதைக்கு சாட்சியான ‘நாகபந்தம் ‘ (Nagabandham) திரைப்படத்தின் டீசரை வெளியிட்டார்.

நீண்ட காத்திருப்பு நிறைவடைந்தது. தயாரிப்பாளர்கள் கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி ஆகியோரின் தயாரிப்பில் அபிஷேக் நாமா ( Abhishek Nama) இயக்கத்தில் விராட் கர்ணா நடிப்பில் புராண ஆக்சன் படமான ‘நாக பந்தம்’ திரைப்படத்தின் எதிர்பார்க்கப்பட்ட டீசர், புனித நாளான மகா சிவராத்திரி நாளில் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்தத் திரைப்படம் உலகத் தரம் வாய்ந்த அளவிலான பிரம்மாண்டமான தயாரிப்பாக உருவாகி இருக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் தயாரிப்பு வடிவமைப்பு பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. படக்குழுவின் துணிச்சலான பார்வை ஒவ்வொரு காட்சியிலும் பிரதிபலிப்பதுடன்.. ஆன்மீகத்தின் ஆழமும் காட்சி மொழிகளில் கலந்திருக்கிறது.

முன்னணி நட்சத்திர நடிகரான ‘டோலிவுட் பிரின்ஸ்’ மகேஷ்பாபு இப்படத்தின் டீசரை வெளியிட்ட உடன், படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ஏராளமான உற்சாகத்துடன் புதிய உயரங்களுக்கு உயர்ந்தது. அத்துடன் நாடு முழுவதும் மிக பெரிய அளவில் எதிர்பார்ப்பு அலையையும் உண்டாக்கியது.

மர்மங்கள் அடங்கிய இமயமலையின் பனி படர்ந்த பரப்பில் அமைக்கப்பட்ட இந்த டீசர்.. காலத்தை விட பழமையான ஒரு ரகசியம் புதைந்து கிடக்கும் ஒரு உலகத்தின் நுழைவாயிலை திறக்கிறது. ஒரு மனிதனின் பேராசை இந்த பிரபஞ்ச உண்மையை அம்பலப்படுத்த அச்சுறுத்தும் போது.. விதி அதன் போர் வீரனை தேர்ந்தெடுக்கிறது.

அப்தாலி தலைமையிலான வரலாற்று ரீதியான ஆப்கானிய படையெடுப்பால் ஓரளவு ஈர்க்கப்பட்ட இந்தக் கதை, புராணம், வரலாறு மற்றும் ஆன்மீகப் போர் ஆகியவற்றை இணைத்திருக்கிறது. கலாச்சார எதிர்ப்பு மற்றும் தெய்வீக பாதுகாவலர் ஆகியவற்றின் சந்திப்பில்.. நடைபெறும் மோதல் வடிவத்தை முன்னிறுத்துகிறது.

இந்த காவியத்தின் மையத்தில் புனிதமான நாகபந்தம் கோயில் உள்ளது‌. இது – வான சக்திகளால் பாதுகாக்கப்பட்டு வரும் ஒரு பண்டைய அண்ட சக்தியை பாதுகாப்பதாக நம்பப்படுகிறது. ரகசியமான இமயமலை பாதைகளுக்குள் ஆழமாக அமைந்திருக்கும் இந்தக் கோயில் , தவறானவர்களின் கைகளில் விழுவது கற்பனை செய்ய முடியாத பேரழிவைத் தூண்டும் அளவிற்கு மகத்தான சக்தியை கொண்டுள்ளது.

பிரம்மாவின் படைப்பிலிருந்து பிறந்து … விஷ்ணுவின் தர்மத்தால் பாதுகாக்கப்பட்டு … மகா தேவ்- வின் கோபத்தால் இயக்கப்படுகிறது… இந்த குறிப்பிடத்தக்க வரிகள்… நாகபந்தத்தின் ஆன்மாவை மிகச் சரியாகப் படம் பிடிக்கிறது. தெய்வீகம்- விதி மற்றும் அழிவு ஆகியவை மோதும் ஒரு சரித்திரம் தான் இது.

இயக்குநர் அபிஷேக் நாமா- துணிச்சலான இலட்சியத்தையும், தெளிவான பார்வையையும் வெளிப்படுத்துகிறார். விதிவிலக்குடைய தொழில்நுட்ப செயலாக்கத்தால் உயர்த்தப்பட்ட அவரது புராணம், செயல் மற்றும் ஆன்மீக ஆழம் ஆகியவற்றின் கலவை..இந்த நாகபந்தம் படத்தின் டீசருக்கு ஒரு மகத்தான அனுபவத்தை வழங்குவதில் உறுதி அளிக்கிறது. அத்துடன் ஒரு சக்தி வாய்ந்த சினிமாவுக்கான அடையாளத்தையும் அளிக்கிறது. ஒரு உரையாடல் கூட இல்லாமல்… டீசர் அதன் வெளிப்படையான காட்சி மொழி ஆற்றல் மற்றும் வாழ்க்கையை விட பெரிய கதை சொல்லல் மூலம் பார்வையாளர்களை வசீகரிக்கிறது.

முதல் ஃபிரேமில் இருந்து நாகபந்தம், ஒரு பிரம்மாண்டமான காட்சி காவியமாக நிலை நிறுத்துகிறது. ஒளிப்பதிவாளர் சௌந்தர்ராஜன். எஸ் வியக்க வைக்கும் இயற்கைக் காட்சிகளை அற்புதமான நேர்த்தியுடன் படம் பிடித்து உயர்தரமான வி எஃப் எக்ஸ் அளவையும், காட்சியையும் மேம்படுத்துகிறார்.

காட்சிப்படுத்தலுக்கு உறுதுணையாக அசோக் குமாரின் தயாரிப்பு வடிவமைப்பு – ஜுனைத் குமாரின் பிரமிப்பூட்டும் பின்னணி இசை மற்றும் R C பிரணவின் நேர்த்தியான எடிட்டிங் ஆகியவை பார்வையாளர்களின் பக்தி, போராக மாறும் மற்றும் நம்பிக்கை கோபமாக மாறும் ஒரு பிரபஞ்சத்திற்குள் அழைத்துச் செல்கின்றன.

தயாரிப்பாளர்களின் முதல் தயாரிப்பாக இருந்தாலும் படைப்பிற்கான சமரசமற்ற அணுகுமுறை படம் முழுவதும் தெளிவாகத் தெரிகிறது. இயக்குநர் அபிஷேக் நாமாவின் இலட்சியப் பார்வையை வலிமையாக ஆதரித்திருக்கிறார்கள். பிரம்மாண்டமான அரங்கங்களை அமைப்பதில் இருந்து… வி எஃப் எக்ஸ் மற்றும் ஒவ்வொரு தொழில்நுட்பத் துறையிலும் விரிவாக – ஆழமாக கவனம் செலுத்துவது வரை.. படத்தின் தயாரிப்பு மதிப்புகள், இந்திய சினிமாவின் அளவுகோல்களை மறு வரையறை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளனர்

கதையை வழிநடத்தும் விராட் கர்ணா ஒரு கடுமையான மாற்றத்தை ஏற்படுத்தும் அவதாரத்தில் காட்சி தருகிறார். அவரது கட்டளையிடும் தோரணையுடன் கூடிய திரை இருப்பு குறிப்பாக முதலையுடனான சண்டைக் காட்சிகளை விட அதிர்ச்சியூட்டும் வகையில் சிவனாக தோன்றுவது டீசரின் சிறப்பு அம்சமாகும். சிவனை சித்தரிப்பது ஒருபோதும் எளிதானது அல்ல, ஆனால் விராட் கர்ணா அந்த குறிப்பிடத்தக்க பாத்திரத்தை நம்பிக்கையுடன் வெளிப்படுத்துகிறார். தீவிரம்- உடல் மாற்றம் – உணர்வுபூர்வமான ஆழம் – ஆகியவை என ஒரு வாழ்க்கையை வரையறைக்கும் நடிப்பை குறிக்கின்றன.

நடிகர்களின் தேர்வு – இப்படத்தின் மற்றொரு முக்கிய பலம் என சொல்லலாம். இதில் நபா நடேஷ் , ஐஸ்வர்யா மேனன், மகேஷ் மஞ்சரேக்கர், ஜெகபதி பாபு , ரிஷப் சாவ்னி, கருடா ராம், ஜெயப்பிரகாஷ், முரளி சர்மா ,அனுசுயா பரத்வாஜ் மற்றும் பி. எஸ். அவினாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பெரும் பாராட்டுக்கள் குவிந்து வருவதால்… ‘நாகபந்தம்’ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பான் இந்திய படங்களில் ஒன்றாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது, அதற்கு படத்தின் டீசர் தான் அறிகுறி. இதனை உறுதிப்படுத்தும் வகையில் நம்பிக்கை- சீற்றம் மற்றும் விதி.. ஆகியவற்றை ஒரு காவிய அளவிலான மறக்க முடியாத சினிமா பயணத்திற்காக பார்வையாளர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

இந்த டீசர் ஹைதராபாத்தில் உள்ள நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய பிரசாத் PCXல் திரையிடப்பட்டது. வாழ்க்கையை விடப் பெரிய கதை சொல்லலால் இந்த டீசர் எதிர்பார்த்ததை விட கூடுதலான பாராட்டுகளைப் பெற்றது. டீசரைப் பார்த்த பத்திரிகையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று கை தட்டி பாராட்டினர்.

இந்த கோடையில் தர்மம் உயர்ந்து.. அழிவு நடுங்கும் வகையில்..ஒரு காலமற்றப் போரை காணத் தயாராகுங்கள்.

நடிகர்கள் :

விராட் கர்ணா , நபா நடேஷ் , ஐஸ்வர்யா மேனன், ரிஷப் சாவ்னி, ஜெகபதி பாபு , கருடா ராம், மகேஷ் மஞ்சரேக்கர் , ஜெயப்பிரகாஷ் ,முரளி சர்மா, அனுசுயா பரத்வாஜ், பி. எஸ் .அவினாஷ் மற்றும் பலர்

தொழில்நுட்பக் குழு :

கதை ,திரைக்கதை, இயக்கம் : அபிஷேக் நாமா
தயாரிப்பாளர்கள் : கிஷோர் அன்னபுரெட்டி & நிஷிதா நாகிரெட்டி
ஒளிப்பதிவு : சௌந்தர்ராஜன் .எஸ்
இசை : அபே – ஜுனைத்குமார்
தயாரிப்பு வடிவமைப்பு : அசோக் குமார்
படத்தொகுப்பு : R C பிரணவ்
CEO : வாசு பொதினி
மக்கள் தொடர்பு : யுவராஜ்

விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ படத்தின் டீசர் வெளியானது

Malali Manvi Movie Makers, D Studios, சன்னி டென்வி (Denvi Productions) தயாரிப்பில், பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பில், விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ திரைப்படத்தின் டீசர் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

முன்னணி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் முன்னதாக வெளியிட்ட பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், புதுமையான காதல் கதையைச் சொல்லும் இப்படத்தின் டீசர், சமூக வலைத்தளங்களில் வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகிறது.

ஒரு அழகான காதல் கதையாகத் தொடங்கும் டீசர், ‘ரீசெட்’ – ‘ரிபீட்’ என்ற தலைப்புக்கேற்றவாறு, எதிர்பாராத திருப்பங்கள், உணர்ச்சி பூர்வமான காட்சிகள் மற்றும் புதுமையான கதை சொல்லல் பாணியுடன் பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. இது ஒரு சாதாரண காதல் கதை அல்ல, எந்த மாதிரியான காதல் கதை என்பதே புரியாத வகையில் பல ஆச்சரியங்களைத் தரும் படமாக ‘காதல் ரீசெட் ரிபீட்’ இருக்கும் என்பதை டீசர் உறுதி செய்கிறது.

இப்படத்தில் மதும்கேஷ், ஜியா சங்கர் ஜோடியோடு மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரமான அர்ஜுன் அசோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களோடு எம்.எஸ். பாஸ்கர், ஜெயபிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். குறிப்பாக, பல புதுமுக திறமைகளைத் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தி வரும் இயக்குநர் விஜய், இத்திரைப்படத்தின் மூலம் மதும்கேஷ் – ஜியா சங்கர் ஜோடியை அறிமுகப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் காதலும் உணர்ச்சியும் கலந்த இசை ரசிகர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா காட்சிகளுக்கு அழகிய காட்சித் தன்மையை வழங்கியிருக்கிறார், ஆண்டனி படத்தொகுப்பை மேற்கொண்டிருக்க, கலை இயக்கத்தை சரவணன் வசந்த், சண்டை இயக்கத்தை மனோகர் வர்மா, உடை வடிவமைப்பை ருச்சி முனோத் கவனித்துள்ளனர். பாடல் வரிகளை வைரமுத்து, கார்கி, ஆர்கஸ் ஆர்யன் ஆகியோர் எழுதியுள்ளனர். இப்படத்தின் இசை உரிமையை T Series நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

டீசர் தற்போது இணையம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், படத்தைத் திரையரங்குகளுக்குக் கொண்டு வரும் பணிகளில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

மார்ச் 6 அன்று ‘காதல் ரீசெட் ரிபீட்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை தமிழகமெங்கும் Romeo Pictures நிறுவனம் வெளியிடுகிறது. விரைவில் இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் டிடிரைலர் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளும் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

காதல் ரீசெட் ரிபீட் திரைப்படம் வரும் மார்ச் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

TEASER LINK : https://www.youtube.com/watch?v=MntwVt7nJg4

“தெரிஞ்சா காதலிங்க” திரை விமர்சனம்

சென்னையில் ஒரே இடத்தில் வசிக்கும் மூன்று நண்பர்கள் அதில் ஒருவன் ஆன்மீகத்தை நோக்கி செல்ல நினைக்கிறான் மற்ற இருவரும் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க ஜாலியாக இருக்க நினைக்கிறார்கள் இதே நேரத்தில் ஒரு கிராமத்தில் வாழும்ஒரு பெண் தாய் தந்தை இல்லாமல் தனது தாத்தாவுடன் வாழ்ந்து வருகிறார்.
அந்த நேரத்தில் ஆன்மீகத்தை தேடி வரும் நாயகன் அவர்கள் இருக்கும் இடத்தை வரும் பொழுது பசிய மயக்கத்தில் பாறையில் இருந்து விழுந்துதலையில் அடிபட்டு சுயநினைவை இழக்கிறான் அவர்களை காப்பாற்றும் தாத்தாவும் பேத்தியும் அவன் நார்மல் நிலைக்கு வரும் பொழுது அந்த பெண்ணை காதலிக்க தொடங்குகிறான்.ஒரு கட்டத்தில் தாத்தா ஒரு சொத்து பிரச்சனையில் அவர்கள் உறவினர்களாக கொல்லப்பட இந்த பெண்ணையும் கொலை செய்ய தேடுகிறார்கள் இந்த சூழலில் நாயகன் அவர்களை காப்பாற்றி சென்னைக்கு அழைத்து வருகிறான்.சென்னைக்கு வரும் அவன் அந்த பெண்ணின் மேல் உள்ள காதலில் தன் நண்பர்களை சந்தேகப்பட்டு அந்த சந்தேகம் ஒரு கொலையிலும் சென்று முடிகிறது இந்த நிலையில் அந்த இடத்தில் இருந்து வெளியேறும் நாயகி தனது சிறு வயது காதலனை கரம் பிடிக்கிறாள் இதுதான் தெரிஞ்சா காதலியே என்னும் திரைப்படத்தின் கதை.
திரைப்படத்தில்உங்கள் அனைவருமே புதுமுகம் என்பதால் அனைவருக்கும் நடிப்பு சற்று சிரமமாகத்தான் வருகிறது இருந்தாலும் கதைக்கான களம் அந்த கிராமத்து சூழ்நிலை மிகவும் அருமையாக அமைந்துள்ளது ஆனால் அதற்கு ஏற்றார் போல் திரைக்கதை கொஞ்சம் விறுவிறுப்பாக இருந்திருந்தால் நிச்சயம் தெரிஞ்சா காதலுங்க படம் பார்க்கிற மாதிரி இருந்திருக்கும்

“சீதா பயணம்” திரைவிமர்சனம்……

சென்னையின் மிகப்பெரிய பிசினஸ்மேன் சத்யராஜ் அவரது ஒரே மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் திருமணமே வேண்டாம் என்று இருக்கும் ஐஸ்வர்யா அர்ஜுன் ஒரு நிகழ்வில் கலந்து கொள்ள மதுரைக்கு சாலை வழியே காரில் செல்கிறார் செல்லும் வழியில் நிரஞ்சன் லெஃப்ட் கேட் ஏறிக்கொள்ள இருவரும் பயணப்படுகிறார்கள் வழியில் அவர்கள் பார்க்கும் சம்பவம் நிகழ்வுகள் இந்த நிகழ்வுகளால் அவர் சேர வேண்டிய இடத்திற்கு சில நொடிகள் தாமதமாக செல்ல அந்த தாமதம் அவரது உயிரை காப்பாற்றுகிறது அவர் செல்ல வேண்டிய இடம் வெடித்து அனைவரும் இறந்து விட இவர் அந்த ஒரு சில நொடிகள் தாமதத்தால் தப்பிக்கிறார்
அவ்வாறு தப்பிக்கும் அவர் தான் வந்த வழியில் ஒவ்வொரு இடத்திலும் ஒரு ஒரு சம்பவத்தால் சில நொடிகள் தாமதமாக அந்த தாமதம் தான் தனது உயிரை காப்பாற்றியதாக நினைத்து அவர்களுக்கு நேரில் சென்று நன்றி சொல்ல செல்கிறார் இதற்கு இடையில் நிரஞ்சன் உடன் ஒரு காதல் நிறைந்தவரின் குடும்பத்தாருடன் நெருங்கி பழக அவர்கள் குடும்பத்தையும் பிடித்து போகிறது இவ்வாறு அவர்களது பயணத்தில் அனைவரையும் சென்று நன்றி சொன்னாரா? நிரஞ்சனுக்கும் ஐஸ்வர்யா அர்ஜுனுக்குமான காதல் நிறைவேறியதா என்பதுதான் இந்த சீதா பயணம்.
இந்த சீதாப்பயணம் திரைப்படத்தை ஆக்சன் கிங் அர்ஜுன் கதை திரைக்கதை இயக்கம் செய்திருக்கிறார் தயாரித்தும் இருக்கிறார் தன் மகளுக்காக மேலும் இந்த படத்தில் ஒரு கெஸ்ட் ரோலும் செய்து இருக்கிறார்.
படத்தில் ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் நிரஞ்சனி நடிப்பு ஓரளவுக்கு கதையுடன் பொருந்தி போகிறது மேலும் இந்த படத்தில் குரு சார்ஜா ஒரு கெஸ்ட் ரோலும் பிரகாஷ்ராஜ் நாயகனின் தாத்தாவாகவும் கோவை சரளா ஒரு ஹோட்டல் வைத்திருக்கும் பெண்மணியாகவும் மற்றும் பலரும் நடித்திருக்கிறார்கள் அனைவருக்கும் ஒரு சிறு கதைகளை இயக்குனர் தந்திருக்கிறார் அந்த கதைகள் இந்த படத்தின் திரைக்கதையை இணைக்கிறது.
படத்தின் ஒளிப்பதிவும் இசையும் படத்திற்கு ஏற்றவாறு செல்கிறது.
என்னதான் அர்ஜுன் தன் மகளுக்காக இந்த படத்தை எழுதியிருந்தாலும் முதல் பாதையில் சற்றே தலை தொடங்குகிறது நமக்கு கதையில் விறுவிறுப்பு இல்லாமல் மிகவும் ஸ்லோவாக செல்கிறது இரண்டாம் பாதியில் அதை நிவர்த்தி செய்து வருகிறார்.

இயக்குனர் அர்ஜுன் முதல்பாதியில் இன்னும் சிறப்பாக செய்திருந்தால் இரண்டாம் பாதி மனதில் நிச்சயம் நீங்காத பயணமாக அமைந்திருக்கும் இந்த “சீதா பயணம்”

“மைலாஞ்சி” திரைவிமர்சனம்

ஊட்டியில் தாய் தந்தை இல்லாமல் சித்தி சித்தப்பா ஆதரவில் வசித்து வரும் கிருஷா குரூப்.நிறைய சொத்துக்கள் இருக்கும் இவரை சித்தி சொத்திற்காக ஆசைப்பட்டு தனது தம்பிக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கிறார்.குடித்துவிட்டு கும்மாளம் அடித்துக்கொண்டு ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் அவரை பிடிக்காமல் பக்கத்து வீட்டு ஒரு பெரிய மனிதனிடம் ஐடியா கேட்டு யாரையாவது காதலித்து இந்த ஊரை விட்டு ஓடி விட வேண்டும் என்று முடிவு எடுக்கிறார் கிருஷா குரூப்.அவர் தேர்ந்தெடுக்க நம்பர் தன் வீட்டில் தங்கியிருக்கும் ஒரு ஈபி இன்ஜினியரை ஆனால் அவரோ திடீரென்று ஒரு நாள் வீட்டை காலி செய்துவிட்டு சென்னைக்கு சென்று வருகிறார்.சோகமடையும் நாயகி அவர் எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற முயற்சியில் இருக்கிறார்.
இதே நேரத்தில் சென்னையில் வைட் லைஃப் போட்டோகிராபராக இருக்கும் ஸ்ரீராம் கார்த்திக் ஊட்டியில் இருக்கும் ஒரு அரிய வகை பறவையை படம் பிடிக்க வருகிறார் அங்கே நாயகி உடன் நட்பு ஏற்பட அந்த நட்பு அந்த நட்பு பின்பு ஒரு தலை காதலாக மாறுகிறது ஸ்ரீராம் கார்த்திக் இருக்கு.சொல்ல நினைக்கும் வேலையில் நாயகியோ நான் ஒருவனே காதலிக்கிறேன் அவனுடன் என்னை சேர்த்து வை என்று ஸ்ரீராம் கார்த்திக் இடம் உதவி கேட்கிறார்.
உங்களை சேர்த்து வைத்தாரா இல்லை இவர்களது காதல் சேர்ந்ததா என்பது தான் மயிலாஞ்சி படத்தின் திரைக்கதை
இந்த மாதிரியான ஒரு முக்கோண காதல் கதையை எடுத்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் அஜயன் பாலா இவர் ஒரு பிரபல எழுத்தாளர் பல படங்களுக்கு பணிபுரிந்திருக்கும் அஜயன் பாலா தனது படத்திற்கான திரைக்கதையில் கோட்டை விட்டு இருக்கிறார்.
மேலும் இந்த படத்தில் ஸ்ரீராம் கார்த்திகை நடிப்பு மிகவும் செயற்கை தனமாகவே உள்ளது அவர்அவர் நடிப்பு காதலிலும் சரி, சோகத்திலும் சரி எந்த ஒரு ஃபீலிங் இல்லாமல் ஒரே மாதிரியாக உள்ளது நடிப்பில் மெருகேற வேண்டும் ஸ்ரீராம் கார்த்திக்.
கிரிஷா குரூப் இந்த கதாபாத்திரத்தை என குழந்தைத்தனமாகவே வடிவமைத்து இருக்கிறார்.
மேலும் இந்த படத்தில் சிங்கம் புலி முனீஸ் காந்த் இன்னும் நிறைய பேர் வருகிறார்கள் போகிறார்கள் அவ்வளவே
இந்த படத்தில் பணியாற்றிய டெக்னிஷிகள் அனைவரும் மிகவும் அனுபவசாலிகள் ஒளிப்பதிவாளர் செழியன் படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்,இசை இளையராஜா,இப்படி பலர் இருந்தாலும் பல சொதப்பல்கள் தான் இவர்கள் அனைவருமே
மைலாஞ்சி இன்னும் சற்று மைலேஜ் தந்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்

‘தி டார்க் ஹெவன் ‘ஏப்ரலில் 3 -ல்

நாட்டார் கதையை மையமாக்கி உருவாகியுள்ள திரைப்படம் ‘தி டார்க் ஹெவன் ‘
ஏப்ரலில் 3 -ல் வருகிறது ‘தி டார்க் ஹெவன் ‘ !

‘ தி டார்க் ஹெவன் ‘ டப்பிங் தொடங்கியது !

மேக்கரை என்ற மலைக் கிராமத்தில் நடக்கும் தொடர் கொலைகளைப் பற்றிய ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம் ஏப்ரல் 3 ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது!

மக்களிடம் மரபு வழியாகப் பரவிச் செல்வாக்கு பெற்ற தொன்மம் சார்ந்த கதைகளுக்கு தனி நிறமுண்டு. அவ்வகையில் சமூகத்தில் நிலவும் ஒரு நாட்டார் கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கியிருக்கும் க்ரைம் த்ரில்லர் திரைப்படமாக ‘தி டார்க் ஹெவன்’ உருவாகியுள்ளது. இந்தப் படம் ஒரு மலைக் கிராமத்தில் ஏழு வருடங்களுக்கு ஒரு முறை வருகிற ஜூலை மாதங்களில் நடக்கும் தொடர் கொலைகளை விசாரிக்கும் ஒரு போலீஸ்காரரைப் பற்றியது.

இப்படம் பற்றி, படத்தைத் தயாரித்து இயக்கும் இயக்குநர் பாலாஜி பேசும் போது,

“இந்த படம், தடயங்களே இல்லாமல் நடக்கும் தொடர் கொலைகளை, காவல் அதிகாரி எப்படிக் கையாள்கிறார் என்பதை மையமாகக் கொண்டது.

இப்படத்தின் கதாநாயகனாக சித்து நடித்துள்ளார்.பிக்பாஸ் புகழ் தர்ஷிகா கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் நிழல்கள் ரவி, வேல ராமமூர்த்தி, ரித்விகா, அருள் ஜோதி, ஜெயகுமார் ஜானகிராமன் போன்றவர்களும் நடித்திருக்கிறார்கள். இதுவரை நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்து வந்த சாப்ளின் பாலு இதில் புதுவிதமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று எடுத்துக் கொண்டால்
எனது முதல் படத்தில் பணியாற்றிய மணிகண்டன் பிகே இதிலும் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்திருக்கிறார். அதே போல் எடிட்டிங் ராஜா ஆறுமுகம் செய்துள்ளார்.இசையமைப்பாளராக ‘ஜாக்கி’ படத்தில் பணியாற்றிய சக்தி பாலாஜி பணிபுரிந்துள்ளார்.இவர்கள் அனைவரும் என் நண்பர்கள் .

இதன் படப்பிடிப்பு வண்டிபெரியார், அச்சன் கோவில், தென்மலை, ஏற்காடு, பத்துகாணி, தென்காசி மற்றும் முக்கூடல் போன்ற சவாலான பகுதிகளில் படமாக்கப்பட்டு
படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டது.டப்பிங் வேலைகள் தொடங்கிவிட்டன. இறுதிக்கட்ட மெருகேற்றும் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. இப்படம் ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி உலகெங்கும் வெளியாக இருக்கிறது ” இவ்வாறு இயக்குநர் பாலாஜி கூறினார்.

“மைலார்ட்” திரைவிமர்சனம்

சமீபத்தில் தமிழகத்தில் ஒரு பிரபல அரசியல் கட்சியை சேர்ந்த ஒரு ஒரு நபர் முறைகேடான கிட்னி திருட்டில் ஈடுபட்ட சம்பவத்தை மையப்படுத்தி இந்த படத்தை எழுதி இயக்கி இருக்கிறார் எழுத்தாளர் இயக்குனர் ராஜமுருகன்.

இந்த அரசியல் கிட்னி திருட்டு சம்பவத்தை வெளியில் கொண்டு வந்ததற்கு ராஜமுருகனுக்கு ஒரு பாராட்டு அதுவும் இன்றைய அரசியல் சூழலில்…


தமிழகத்தின் தென் பகுதியில் வாழும் சசிகுமார் அவரது மனைவி சைத்ரா இருவரும் இறந்து விட்டதாக போலிச் சான்றிதழ் வந்து அவர்களது ரேஷன் கார்டு உள்ளிட்ட முக்கியமான அரசு ஆவணங்கள் அனைத்தும் பதிவாகிவிட்டது. அதை மீட்க அவர் ஊரெங்கும் போஸ்டர் அடித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு உறுதுணையாக லோக்கல் பத்திரிகையாளராக குரு சோமசுந்தரம்.
லோக்கல் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து லோக்கல் மருத்துவமனையில் அனைவரும் அந்த கவுன்சிலருக்கு உதவுகிறார்கள் கவுன்சிலின் முக்கிய வேலையை ஏழை மக்களை மூளைச்சலவை செய்து அவர்களுக்கே தெரியாமல் அவர்களது உடல் உறுப்புகளை விற்பது தான்.
இந்த சூழலில் மத்திய அமைச்சராக இருக்கும் ஆஷா சரத்திற்கு இரண்டு சிறுநீரகம் செயல் இழந்து விட அதை முறைகேடாக எடுத்து வைக்க ஒரு புரோக்கரை நியமிக்கிறார்கள். அவர் ஒத்துப் போகும் கிட்னி சசிகுமார் மட்டும் தான் இருப்பது என்பதை கண்டறிந்து அவரை எப்படி முறைகேடாக அழைத்துச் சென்று கிட்னியை எடுத்து வைக்க முயற்சி செய்கிறார்கள். இந்த முயற்சியை பயன்படுத்தி சசிக்குமாறும் அவரது நண்பருமான பத்திரிகையாளர் குரு சோமசுந்தரம் இருவரும் இணைந்து சசிகுமாரின் டெத் சர்டிபிகேட்டை கேன்சல் செய்து அவருக்கு ரேஷன் கார்டு முதல் கொண்டு அனைவரையும் வாங்க வைக்கிறார்கள் அரசியல் பலத்தை பயன்படுத்தி,
அதே நேரத்தில் கோபி நயினார் மூலம் இந்த முறைகேடான சம்பவத்தை கோர்ட் மூலம் வெளி கொண்டு வர நினைக்கிறார்கள், இதில் ஆஷா சரத் தண்டனை பெறுகிறாரா? சசிகுமார் என்ன முடிவு செய்கிறார்? என்பதுதான் படத்தின் திரைக்கதை.


சமீபத்தின் தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்ட கிட்னி திருட்டும் அதற்குப் பின்னணியில் இருந்த ஒரு லோக்கல் அரசியல்வாதி என்று பேசப்பட்டார் அவரது பின்புலத்தை பயன்படுத்தி அரசை எதிர்த்து படம் எடுத்திருக்கும் ராஜமுருகனுக்கு உண்மையிலே பாராட்டுகள்.
இந்த படத்தில் முத்து சிற்பியாக சசிகுமார் அவருக்கு வழக்கமான நடிப்பு தான் இது எனவே அதிலேயே நடித்துவிட்டு போகிறார்.
மனைவியாக வரும் சைத்ரா சுசிலா கேரக்டரில் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்
குரு சோமசுந்தரம் தனக்கு வழக்கமான நடிப்புதான்.
மேலும் இந்த படத்தில் நீதிபதியாக ஜெயப்பிரகாஷ் அரசியல்வாதியாக ஆஷா சரத் இப்படி பலரும் அவர்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ப பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

படத்தின் மிகப்பெரிய குறையே படத்தில் வரும் கோர்ட் சீன்களை மிகவும் ஸ்ட்ராங்காக்கி கோபி நாயனார் அவரது கேரக்டரை பலப்படுத்தி இருக்க வேண்டும் அவர் ஏதோ வசனங்களை மனப்பாடம் செய்து ஒப்பிப்பது போல் ஒப்பித்துக் கொண்டிருக்கிறார் இதை மட்டும் சரியாக கையாண்டு இருந்தால் மை லார்ட் என்னும் தலைப்பிற்கு படம் மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும்.

“பூக்கி” திரைவிமர்சனம்

இன்றைய காலகட்டத்தில் இளம் காதலர்கள் தங்களுக்குள் அர்த்தமில்லாமல் ஏதாவது ஒரு பெயரை வைத்து எப்படி செல்லமாக கூப்பிட்டு கொள்வார்களோ அப்படி ஒரு வார்த்தை தான் “பூக்கி”இந்த வார்த்தையை வைத்து வெளி வந்திருக்கும் திரைப்படம் தான் இந்த படம்.
அஜய் திஷன்,ஆர் கே தனுஷா இருவரும் ஆறு வருடங்களாக காதலித்து ஒரு சிறு பிரச்சனையில் சாலையில் ஒருவரை ஒரு அடித்துக் கொண்டு பிரிந்து போகிறார்கள். இதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்ப, அது தீயாக பரவுகிறது இருவரும் தங்கள் காதல்களை மறக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். நாயகன் ஒரு பக்கம் ஜிம்முக்கு செல்வதும், குடிப்பதும் இப்படி பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகிறார். நாயகி ஒருபுறம் ஆன்மீகம், வேலை , வேறு ஒரு லவ் என்ற பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள் .

இவர்களது முயற்சி வெற்றி பெற்று இருவரும் பிரிந்தார்களா? இல்லை தங்கள் பழைய காதலை மறக்க முடியாமல் ஒன்று சேர்ந்தார்களா? என்பது தான் படத்தின் திரைக்கதை

இந்தப் படத்தின் கதை கரு சிறியதாக இருந்தாலும் ஆனால் இதற்காக இவர்கள் வடிவமைத்திருக்கும் திரைக்கதை,இன்றைய இன்ஸ்டாகிராம் ,பேஸ்புக், யூடியூப் போன்றவற்றில் வரும் ரீல்களை வைத்து அதை திரை கதையில் கொண்டு வந்திருப்பது இன்றைய இளைய தலைமுறை பசங்களை ரசிக்க வைக்குமாறு எடுத்திருக்கிறார் இயக்குனர் அது அவருக்கு வெற்றியும் கூட தரும்.

அஜய் திஷன் இது இவருக்கு இரண்டாவது படமாக இருந்தாலும் தனது நடிப்பில் மிக பலமாக நிற்கிறார் எதார்த்தமாகவும் நடித்திருக்கிறார். நாயகியும் அவருக்கு ஈடாகவே நடித்து இருக்கிறார்
படத்தில் பாண்டியராஜன், சுனில்,லட்சுமி மஞ்சு, மற்றும் விவேக் பிரசன்னா பலர் காட்சிகளை நகர்த்த ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இந்த படத்தின் தயாரிப்பு மற்றும் இசை விஜய் ஆண்டனி விஜய் ஆண்டனி இசை அவரது ஸ்டைலயே உள்ளது படத்தில் பெரும்பான்மையான பாடல்களை அவரே பாடியுள்ளார்
இயக்குனர் இன்றைய இளைய தலைமுறை இளைஞர்களை மனதில் வைத்து களம் இறங்கி அதில் வெற்றியும் காண முயற்சித்திருக்கிறார்.


“பூக்கி”சமூக வலைத்தளங்களில் இருந்து மொத்த பூக்களையும் எடுத்து தொடுத்த ஒரு பூ மாலை