Breaking
July 18, 2026

Cinema

மலையாள ZEE5, பேட்ரியாட் திரைப்படத்தின் டிஜிட்டல் பிரீமியரை ஜூன் 5 அன்று அறிவித்துள்ளது

இந்தியா, 22 மே 2026: மலையாள ZEE5, புகழ்பெற்ற இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கிய பரபரப்பான அரசியல் திரில்லர் திரைப்படமான பேட்ரியாட் -ஐ ஜூன் 5 அன்று வெளியிடத் தயாராக உள்ளது. இப்படம் மலையாளம், இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகும்.

18 ஆண்டுகளுக்குப் பிறகு மலையாள திரையுலகின் இரு மிகப்பெரிய நட்சத்திரங்களான மம்முட்டி மற்றும் மோகன்லாலை மீண்டும் ஒன்றிணைக்கும் இந்தப் படத்தில், நயன்தாரா, ஃபஹத் ஃபாசில் மற்றும் குஞ்சாக்கோ போபன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

உளவு, அரசியல், தொழில்நுட்பம் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான நாடக அம்சங்களை இணைக்கும் பேட்ரியாட், ரகசியமும் அதிகாரமும் நிறைந்த ஒரு அமைப்பில் கட்டுப்பாடற்ற கண்காணிப்பின் ஆபத்தான விளைவுகளை ஆராய்கிறது.

இந்தக் கதையின் மையத்தில், நாட்டைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் ஒரு அதிநவீன அரசு கண்காணிப்பு திட்டத்தை உருவாக்க உதவிய மனிதர் ஒருவர் உள்ளார். ஆனால், அந்த அமைப்பு குற்றமற்ற குடிமக்களுக்கு எதிராக சூழ்ச்சி, மிரட்டல் மற்றும் கட்டுப்பாட்டின் மூலம் ஆயுதமாக பயன்படுத்தப்படுவதை அவர் கண்டறியும் போது, அவர் நம்பிய அனைத்தையும் கேள்வி கேட்கத் தள்ளப்படுகிறார்.

தான் உருவாக்க உதவிய அதே அமைப்புக்கு எதிராக அவர் திரும்பும் போது, பேட்ரியாட், தேசபக்திக்கும் துரோகத்திற்கும் இடையிலான மங்கலான கோட்டைப் பற்றி பேசுவதுடன், உண்மையை வெளிப்படுத்துவது ஒருவரை துரோகியா அல்லது உண்மையான தேசபக்தரா ஆக்குகிறது என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

இந்திய சமூக-அரசியல் பின்னணியில் அமைந்திருந்தாலும், கண்காணிப்பு மற்றும் தனியுரிமை குறித்த உலகளாவிய கவலைகளை மையமாகக் கொண்ட பேட்ரியாட், மிகப்பெரிய சதித் திட்டத்தை உணர்ச்சிப்பூர்வமான சினிமா அனுபவமாக மாற்றுகிறது.

மகேஷ் நாராயணனின் கூர்மையான கதை சொல்லலும், மம்முட்டி, மோகன்லால், நயன்தாரா, ஃபஹத் ஃபாசில் மற்றும் குஞ்சாக்கோ போபன் ஆகியோரின் சக்திவாய்ந்த திரைநிகழ்வும் இணைந்து, இப்படம் தீவிரமான மற்றும் சிந்திக்க வைக்கும் அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தில் ரேவதி, ராஜீவ் மேனன், தர்ஷனா ராஜேந்திரன் மற்றும் ஸரின் ஷிஹாப் உள்ளிட்ட பலரும் முக்கிய துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

இயக்குநர் மகேஷ் நாராயணன் கூறியதாவது:

“பேட்ரியாட் என்பது நாம் இன்று வாழும் காலத்தின் அச்சங்களை பிரதிபலிக்கும் ஒரு கதை. மக்களை பாதுகாக்க உருவாக்கப்பட்ட தொழில்நுட்பமே, பயமும் கட்டுப்பாடும் ஏற்படுத்தும் கருவியாக மாறும் உலகை இது பேசுகிறது. இந்தக் கதையில் என்னை அதிகமாக ஈர்த்தது அதன் மையத்தில் இருக்கும் உணர்ச்சிப்பூர்வமான மோதல் — ஒருகாலத்தில் முழுமையாக நம்பிய ஒன்றின் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் ஒரு மனிதனின் பயணம். நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்கள் பேட்ரியாட் திரைப்படத்தை மலையாள ZEE5-ல் அனுபவிப்பதை நான் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.”

மம்முட்டி கூறியதாவது:

“பேட்ரியாட் திரைப்படத்தை வலுவானதாக மாற்றுவது, அதன் பிரம்மாண்ட அளவுக்கும் அரசியல் பதற்றத்திற்கும் அடியில், இது மனசாட்சி, பொறுப்பு மற்றும் தைரியம் பற்றிய மிகவும் ஆழமான மனிதக் கதையாக இருப்பதுதான். இந்தப் படம் கடினமான கேள்விகளை எழுப்புவதோடு உணர்ச்சிப்பூர்வமாகவும் நெருக்கமாகவும் இருக்கும். மலையாள ZEE5-ல் பார்வையாளர்கள் இதைப் பார்க்கவிருப்பதை நான் எதிர்பார்க்கிறேன்.”

மோகன்லால் கூறியதாவது:

“பேட்ரியாட் நாம் இன்று வாழும் உலகைப் பற்றி பேசுகிறது, அங்கு உண்மையும் அதிகாரமும் தொடர்ந்து மோதிக்கொண்டே இருக்கின்றன. சினிமாத்தன்மையும் ஆழமான பொருத்தத்தையும் கொண்ட ஒரு படத்தின் பகுதியாக இருப்பது மிகவும் உற்சாகமாக இருந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு மம்முட்டியுடன் இப்படிப்பட்ட கதைக்காக மீண்டும் இணைந்தது இந்த அனுபவத்தை இன்னும் சிறப்பாக மாற்றியது.”

மலையாளம், இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகும் பேட்ரியாட் திரைப்படத்தை ஜூன் 5 முதல் மலையாள ZEE5-ல் தவறவிடாமல் பாருங்கள்!

ZEE5 பற்றி

ZEE5 என்பது இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாகும். இது கோடிக்கணக்கான பொழுதுபோக்கு ரசிகர்களுக்கான பன்மொழி கதை சொல்லும் தளமாக விளங்குகிறது. உலகளாவிய உள்ளடக்க சக்தியாக விளங்கும் ZEE Entertainment Enterprises Limited நிறுவனத்தின் ஒரு பகுதியாக ZEE5 செயல்படுகிறது.

வீடியோ-ஆன்-டிமாண்ட் தளங்களில் முன்னணி தேர்வாக விளங்கும் ZEE5, 4,071+ திரைப்படங்கள், 1,800+ டிவி நிகழ்ச்சிகள், 422+ வெப் ஒரிஜினல்கள், 4,492+ இசை வீடியோக்கள் மற்றும் 1.35 லட்சம் மணிநேரங்களுக்கு மேற்பட்ட ஆன்-டிமாண்ட் உள்ளடக்கங்களைக் கொண்ட விரிவான நூலகத்தை வழங்குகிறது.

இந்த தளம் இந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, மலையாளம், கன்னடம், மராத்தி, ஆங்கிலம், ஒடியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி உள்ளிட்ட 12 மொழிகளில் 7 தனிப்பயன் மற்றும் ஹைப்பர்-லோக்கல் சந்தா தொகுப்புகளை வழங்குகிறது. இதில் ஒரிஜினல் தொடர்கள், இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான உள்ளடக்கம், செய்திகள் மற்றும் Live TV ஆகியவை அடங்கும்.

உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் வலுவான டீப்-டெக் அமைப்பின் மூலம், ZEE5 பல்வேறு சாதனங்கள், சூழல்கள் மற்றும் இயக்க முறைமைகளில் இடையறாத அனுபவத்தை வழங்குகிறது.

Facebook, Instagram, LinkedIn மற்றும் X தளங்களில் ZEE5-ஐ பின்தொடருங்கள்.

“தத் த்வம் அஸி” (2026) படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது!!

ஆன்மீகம், பக்தி மற்றும் ஆக்சன் கலந்த பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாகும் “தத் த்வம் அஸி” (2026) படத்தின் படப்பிடிப்பு நேற்று (மே 26) இனிதே துவங்கியுள்ளது. தந்த்ரா ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படம், அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில், சரியாக மூன்று மாதங்களுக்குள் அனைத்து திட்டமிடல்களும் நிறைவு செய்யப்பட்டு இன்று படப்பிடிப்பு துவங்கியுள்ளது. திரைப்பட உலகில் இத்தகைய துல்லியமான திட்டமிடல் படக்குழுவின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.

படப்பிடிப்பு துவக்க நிகழ்வில் இயக்குநர் வெங்கட் பிரபு கிளாப் அடிக்க, இயக்குநர் பொன்ராம் கேமராவை ஆன் செய்து படக்குழுவை வாழ்த்தினார். ஆன்மீக சூழலில் நடைபெற்ற இந்த தொடக்க விழா படக்குழுவிற்கு சிறப்பான தொடக்கமாக அமைந்தது.

மலையாளத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற “மாளிகப்புரம்” படத்தின் இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இந்த திரைப்படத்தை இயக்குகிறார். ஆன்மீக கதைகளை உணர்வுபூர்வமாக காட்சிப்படுத்தும் அவரது அனுபவம், “தத் த்வம் அஸி” திரைப்படத்திற்கு பெரிய பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் வைபவ் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் அரவிந்த் ஆகாஷ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர்.

பக்தி, நம்பிக்கை மற்றும் ஆன்மீக உணர்வுகளை மையமாகக் கொண்டு, அதனுடன் ஆக்சன் மற்றும் உணர்ச்சி கலந்த பொழுதுபோக்கு அம்சங்களையும் சேர்த்து இந்த திரைப்படம் உருவாக்கப்படவுள்ளது. குடும்ப ரசிகர்களையும் இளைஞர்களையும் ஒருசேர கவரும் வகையில் இப்படத்தின் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தை JK சரவணா மற்றும் JK சதீஷ் தயாரிக்கின்றனர். இசையை பிரேம் ஜி அமரன் அமைக்கிறார். ஒளிப்பதிவை யுவன் செல்வா கவனிக்க, படத்தொகுப்பை பிரவீன் KL மேற்கொள்கிறார். கலை இயக்குநராக சூர்யா ராஜிவன் பணியாற்றுகிறார். சண்டைக் காட்சிகளை சக்தி சரவணன் வடிவமைக்கிறார்.

எழுத்தாளர்களாக ஆதித்யா தங்கீராலா, நந்தகுமார் தமிழ்செல்வன் மற்றும் ப்ருத்வி ஆதித்யா இணைந்துள்ளனர்.

மேலும், தந்த்ரா ஃபிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ள மற்றொரு முக்கியமான திரைப்படமான “ஆர்ய கேரள வர்மன்” படமும் வரலாறு மற்றும் ஆன்மீக பின்னணியில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த வருடம் ஐயப்ப மண்டல காலத்தை முன்னிட்டு “தத் த்வம் அஸி” திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆன்மீக உணர்வுகளுடன் மாஸ் அம்சங்களும் கலந்த இந்த படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராம் சரணுக்கு தேசிய விருது வாங்கித்தரும் படமாக உருவாகும் “ பெத்தி  ” – சிவராஜ்குமார் நம்பிக்கை!!

*கிளைமாக்ஸ் முதல் கதாபாத்திரங்கள் வரை “பெத்தி” படத்தில் பல ஆச்சரியங்கள்  காத்திருக்கிறது – சிவராஜ்குமார் !!*

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள “பெத்தி” திரைப்படம் குறித்து அவர் பகிர்ந்துள்ள கருத்துகள் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள இந்த கிராமத்து ஆக்ஷன் திரைப்படத்தை இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் வழங்கும் இப்படத்தை, விருத்தி சினிமாஸ் நிறுவனம் சார்பில் வெங்கட சதீஷ் கிலாரு மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். ஏற்கனவே வெளியான பாடல்கள் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் படம் வெளியாகிறது.

இந்த படத்தில் “கௌர்நாயுடு” என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள சிவராஜ்குமார், இப்படத்தின் கதை தான் தன்னை மிகவும் கவர்ந்ததாக தெரிவித்துள்ளார். குறிப்பாக தனது கதாபாத்திரத்திற்கு தெளிவான நோக்கம் மற்றும் வலுவான உணர்வுப்பூர்வமான பின்னணி இருப்பதால், இப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைந்ததாக கூறியுள்ளார். மேலும், பெத்தி மற்றும் கௌர்நாயுடு இடையிலான பாசமும் உணர்ச்சி பந்தமும் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேபோல், ராம் சரண் நடித்த விதம் குறித்து அவர் மிகவும் பெருமையாக பேசியுள்ளார். இந்த படத்திற்காக ராம் சரண் தேசிய விருது வெல்வார் என்ற நம்பிக்கை தனக்குள்ளதாகவும், அவரது உடல் மாற்றம் மற்றும் அர்ப்பணிப்பு அளவிட முடியாதது என்றும் கூறியுள்ளார். இரண்டு ஆண்டுகளாக முழுமையான ஈடுபாட்டுடன் அந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளார் என்றும், மிக நேர்மையாக நடித்துள்ளார் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.

இயக்குநர் புச்சி பாபு சனா  பற்றி பேசுகையில், கதைக்கு தேவையான அனைத்தையும் மிகச் சிறப்பாக திரையில் கொண்டு வந்துள்ளார் என்றும், அவரது கதை சொல்லும் பாணி மற்றும் மேக்கிங் தரம் அசத்தலாக இருப்பதாகவும் சிவராஜ்குமார் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜகபதி பாபு  உட்பட அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், ஒளிப்பதிவாளர் R. ரத்னவேலு உருவாக்கிய காட்சிகள் ரசிகர்களை மெய்மறக்கச் செய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.

பல விளையாட்டுகளை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில், ஒவ்வொரு விளையாட்டும் கதையுடன் நெருக்கமாக இணைந்திருப்பதாகவும், குறிப்பாக கிளைமாக்ஸ் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். “பெத்தியின் பயணம் மிகவும் விசேஷமானது; அதை திரையரங்கில் அனுபவிக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தயாரிப்பாளர் சதீஷ் குறித்து பேசுகையில், மிகுந்த ஆர்வத்துடன் உயர்ந்த தயாரிப்பு தரத்தில் இப்படத்தை உருவாக்கியுள்ளார் என்றும் பாராட்டியுள்ளார். தற்போது ஜெயிலர் 2 மற்றும் “கும்மடி நரசய்யா ” உள்ளிட்ட படங்களில் நடித்து வருவதாக தெரிவித்த சிவராஜ்குமார், நல்ல கதைகள் கிடைத்தால் மேலும் தெலுங்கு படங்களில் நடிக்க விருப்பம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

பெத்தி படம் குறித்து அவர் பகிர்ந்துள்ள  தகவல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை வெகுவாக அதிகரித்துள்ளது.

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே நடிக்கும் #DQ41 படத்தின் முக்கியமான படப்பிடிப்பு கட்டம் kநிறைவடைந்துள்ளது !!*

*துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே நடிக்கும் #DQ41 படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது!!* 

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே, ரவி நேலகுதிடி, சுதாகர் செருகூரி, எஸ்எல்வி சினிமாஸ் ( SLV Cinemas ) தயாரிப்பில் உருவாகும் பான் இந்தியா திரைப்படமான #DQ41, #SLV10 படத்தின் முக்கியமான படப்பிடிப்பு கட்டம் நிறைவடைந்தது. கவர்ச்சிகரமான படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகியுள்ளது !

பன்முகத் திறமை கொண்ட நட்சத்திரமான துல்கர் சல்மான் தற்போது தனது புதிய திரைப்படமான #DQ41 படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் ரவி நேலகுதிடி இயக்குகிறார். வெற்றி தயாரிப்பாளர் சுதாகர் செருகூரி தலைமையிலான எஸ்எல்வி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தத் திரைப்படம், அந்த நிறுவனத்தின் 10வது தயாரிப்பாக #SLV10 என உருவாகி வருகிறது. தற்போது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தில், பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மனித உணர்வுகளும் காதலும் கலந்த இனிமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இது உருவாகி வருகிறது.

பனிமூட்டம் சூழ்ந்த மலைப்பகுதிகளில் நடைபெற்ற முக்கியமான  படப்பிடிப்பின் ஒரு கட்டத்தை  படக்குழு வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. அங்கிருந்து வெளியான புகைப்படங்கள் மனதை கவரும் விதமாக அமைந்துள்ளன. குளிர்கால உடைகளில் தோன்றும் துல்கர் சல்மான் தனது இயல்பான கவர்ச்சியால் அனைவரையும் ஈர்க்க, ஹாட் லுக்  உடைகளில் அழகாக தோன்றும் பூஜா ஹெக்டே தனது இயல்பான ஸ்டைலில் கவனம் பெற்றுள்ளார்.

வெளியான புகைப்படங்கள் வழக்கமான போஸ் ஸ்டில்களாக இல்லாமல், படப்பிடிப்பு தளத்தின் இயல்பான தருணங்களை பதிவு செய்கின்றன. ஒரு புகைப்படத்தில், மழைத்தூறலில் குடைகளை பிடித்தபடி சுற்றியுள்ள படக்குழுவினருடன் இணைந்து சிரித்துக்கொண்டிருக்கும் துல்கர் மற்றும் பூஜா காணப்படுகின்றனர். மற்றொரு புகைப்படத்தில் பயணப் பைகள், தொலைவில் தெரியும் கயிற்று பாலம் மற்றும் காற்றில் பறக்கும் மலைப்பகுதி பிரார்த்தனை கொடிகள் சேர்ந்து ஒரு பயணத்தின் உணர்வை தருகின்றன. மேலும், அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ள கோவிலின் முன் முழு படக்குழுவும் ஒன்றாக நிற்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது. துல்கர் சல்மான் மற்றும் பூஜா ஹெக்டே முதல் முறையாக இணைந்து நடிக்கும் நிலையில், இருவருக்குமிடையேயான இயல்பான நெருக்கம் படத்தின் உணர்வை ஏற்கனவே வெளிப்படுத்துகிறது.

ஒளிப்பதிவாளர் அனய் ஓம் கோஸ்வாமி இயற்கை வெளிச்சத்தை அழகாக பதிவு செய்துள்ளதுடன், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையும், அவினாஷ் கொல்லா உருவாக்கிய காட்சியமைப்பும் சேர்ந்து நெருக்கமான, அழகான மற்றும் உணர்வுப்பூர்வமான ஒரு உலகத்தை உருவாக்குகின்றன.

பிரம்மாண்டமான பான் இந்தியா வெளியீடாக உருவாகும் இந்த திரைப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

*நடிகர்கள்* 

துல்கர் சல்மான்

பூஜா ஹெக்டே

*தொழில்நுட்பக் குழு*

கதை, இயக்கம் – ரவி நேலகுதிடி

தயாரிப்பு –சுதாகர் செருகூரி

தயாரிப்பு நிறுவனம் – எஸ்எல்வி சினிமாஸ்

இணை தயாரிப்பாளர் – கோபிச்சந்த் இன்னமூரி

தலைமை நிர்வாக அதிகாரி – விஜய் குமார் சாகண்டி

இசை – ஜி.வி. பிரகாஷ் குமார்

ஒளிப்பதிவு – அனய் ஓம் கோஸ்வாமி

தயாரிப்பு வடிவமைப்பு – அவினாஷ் கொல்லா

மக்கள் தொடர்பு – யுவராஜ்

நடிகர் சத்ய தேவ் நடிக்கும் ‘சமவர்த்தி’

Screenshot

நடிகர் சத்ய தேவ் நடிக்கும் 16வது படமான ‘சமவர்த்தி’ பரபரப்பான ஆக்சன் திரில்லராக தயாராகிறது

நடிகர் சத்ய தேவ் நடிக்கும் ‘சமவர்த்தி’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

பல்வேறு கதாபாத்திரங்களை தேர்வு செய்து ஒரு கதாநாயகனாக தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியதற்காக ரசிகர்களால் பாராட்டப்படும் திறமையான இளம் நடிகர் சத்யதேவ் கஞ்சரானா – புதிதாக நடிக்கும் திரைப்படத்திற்கு, ‘சமவர்த்தி’ என பெயரிட்டு, அதன் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். அவரது திரை பயணத்தில் கதாநாயகனாக நடிக்கும் 16ஆவது திரைப்படம் இதுவாகும்.‌

ருத்ரா பிக்சர்ஸ் மற்றும் பஞ்சபூதா புரொடக்ஷன்ஸ் நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் சிவசரண் ரெட்டி – ஜக்கிடி மற்றும் சசிதர் ரெட்டி படமடி ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள். இந்த திரைப்படத்தை அஜய் நாக் வி இயக்குகிறார். ‘சமவர்த்தி’ ஒரு சூழலியல் சார்ந்த ஆக்சன் திரில்லராக உருவாக்கி, தமிழ்- தெலுங்கு- கன்னடம்- மலையாளம்- ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.‌

சமவர்த்தியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பார்வையாளர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் கோடாரிகள் மற்றும் கத்திகளுடன் ஆயுதம் ஏந்திய பல நபர்கள் அவரை நோக்கி பாய்ந்து வரும் போது.. சத்ய தேவ் தனது ஹெட் போனில் அமைதியாக இசையை கேட்டுக் கொண்டிருப்பதை போல் தோன்றுகிறார்.

இயற்கை மற்றும் வனத்தின் சாராம்சம் நிறைந்த ப்ரீ லுக் போஸ்டரை தொடர்ந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பின்னணியில் உள்ள புலி ஆகியவை.. ஆர்வத்தை தூண்டும் வகையில் இயற்கையின் நுட்பமான குறிப்புகளை பிரதிபலிக்கிறது.

இப்படத்தின் தலைப்பும், போஸ்டரும் சத்ய தேவின் திரை வாழ்க்கையில் மிகவும் தீவிரமான – அதிரடியான திரைப்படங்களில் ஒன்றாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்கனவே உருவாக்கியுள்ளது.

சுற்றுச்சூழல் அதிரடி திரில்லர் என்ற ஜானரில் புதிய உருவாக்கம் என்பதால்.. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.

சத்யதேவ் இந்த படத்தின் மூலம் முற்றிலும் புதிய தளத்திற்குள் அடி எடுத்து வைக்கிறார். தனது உடல் வலிமையையும், அதன் தோற்றத்தையும் அதிகரிக்கும் ஒரு முழுமையான அதிரடி ஆக்சன் களத்திற்குள் அவர் திட்டமிட்டு நுழைகிறார்.

இயற்கையின் கட்டுக்கடங்காத சக்திகளின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் படைப்பு .. சுற்றுச்சூழலுக்கு எதிராக நிகழும் அதிக ஆபத்துக்கள் நிறைந்த விசயங்களுடன் ஆழமாக பின்னிப் பிணைந்திருக்கும் ஒரு வகையான சுற்றுச்சூழல் அதிரடி திரில்லராக தயாராகிறது.

தொழில்நுட்பக் குழு :

கலை இயக்குநர் : மன்ட்ரூ ரவிக்குமார்
ஆடை வடிவமைப்பாளர் : பிரியங்கா ரெபாக்கா ஸ்ரீநிவாஸ்
தயாரிப்பு வடிவமைப்பாளர்: உல்லாஸ் ஹைதுர்
படத்தொகுப்பு : ஆதித்யா திவாரி
ஒளிப்பதிவு : ஹர்ஷா மல்லிகார்ஜுன் – தேவ் தீப் காந்திகுண்டு
இசை : சிஞ்சித் யெர்மில்லி
கிரியேட்டிவ் புரொடியூசர் : வினய் ரெட்டி மமிடி.
நிர்வாகத் தயாரிப்பு : உஜ்வல் பி. எம்.
தயாரிப்பாளர்கள் : சிவசரண் ரெட்டி – ஜக்கிடி – சசிதர் ரெட்டி படமடி
இயக்கம் : அஜய் நாக் வி
மக்கள் தொடர்பு : யுவராஜ்.

i

கௌதம் கார்த்திக் வெளியிட்ட ‘பாதாம்கீர்’

முன்னணி நடிகர் கௌதம் கார்த்திக் வெளியிட்ட ‘பாதாம்கீர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் !!

ரொமான்ஸ் கலந்த காமெடி என்டர்டெய்னராக உருவாகும் ‘பாதாம்கீர்’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களின் கவனம் கவனத்தை ஈர்த்துள்ளது !!

லார்ட்ஸ் பி தி இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ் (LORDS P The international Production) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெய் சக்தி பிரகாஷ் இயக்கத்தில், உருவாகி வரும் ரொமான்ஸ் காமெடி திரைப்படமான ‘பாதாம்கீர்’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை முன்னணி நடிகர் கௌதம் கார்த்திக் தனது சமூக வலைத்தள பக்கங்கள் வழியாக வெளியிட்டுள்ளார். போஸ்டர் வெளியாகியதுடன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

வண்ணக்கலவை நிறைந்த பின்னணியில், கையில் இசை வாத்தியங்களுடன் நடிகர்கள் சிவகுமார், சதீஷ் மற்றும் டேனியல் ஆன்னி போப் ஆகியோர் கையில் இசை வாத்தியங்களுடன் தோன்றும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக், பார்ப்பவர்களின் முகத்தில் இயல்பாக புன்னகையை வரவழைக்கிறது. கலர்ஃபுல் மற்றும் ஜாலியான டிசைனில் உருவாக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர், படம் முழுக்க முழுக்க குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய ரொமான்ஸ் காமெடி என்டர்டெய்னராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தில் சிவகுமார் மற்றும் ஆன் ஷீத்தல் நாயகன் – நாயகியாக நடிக்கின்றனர். இவர்களுடன் சதீஷ், டேனியல் ஆன்னி போப் , பிரதீப் ஜோஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். மேலும் யோகிபாபு மற்றும் TM கார்த்திக் முக்கியமான கேமியோ கதாப்பாத்திரங்களில் தோன்றுகின்றனர். மதுமிதா, பிரதீப் ஜோஷ், வழக்கு எண் முத்துராமன் மற்றும் லிஜா உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சென்னை, பாண்டிச்சேரி மற்றும் மூணாறு உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. தற்போது இறுதிக்கட்ட பின்னணி பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் டீசர் மற்றும் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜெய் சக்தி பிரகாஷ் எழுதி இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைக்க, ஒளிப்பதிவை A. குமரன் மேற்கொண்டுள்ளார். லினு.M படத்தொகுப்பை கவனித்துள்ளார். அனுபவம் மிக்க தொழில்நுட்பக் குழுவுடன் உருவாகி வரும் ‘பாதாம்கீர்’, ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான ரொமான்டிக் காமெடி அனுபவத்தை வழங்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பாளர் – பிரதீப் ஜோஸ். K
கதை, திரைக்கதை & இயக்கம் – ஜெய் சக்தி பிரகாஷ்
இசையமைப்பாளர் – விஷால் சந்திரசேகர்
ஒளிப்பதிவு – A. குமரன்
படத்தொகுப்பு – லினு. M
சவுண்ட் எஃபெக்ட்ஸ் – C. சேது
புரொடக்ஷன் எக்ஸிக்யூட்டிவ் – K. சடகோபன்
கலை இயக்கம் – A. பழனிவேல்
நடன அமைப்பு – கல்யாண்

‘நாக பந்தம்’ படத்தின் கவுண்ட் டவுன் தொடங்கியது

இந்திய சினிமாவில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் புராண அதிரடி சாகச படமான ‘நாக பந்தம்’ படத்தின் கவுண்ட் டவுன் தொடங்கியது

நாடு தழுவிய பார்வையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் ‘நாக பந்தம்’. எதிர்வரும் ஜூலை மாதம் 3 ஆம் தேதியன்று வெளியாகும் இப்படத்திற்கான கவுண்ட் டவுன் அதிகாரப்பூர்வமாக தொடங்கி விட்டது

அபிஷேக் நாமா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நாக பந்தம்’- புராணம் – சாகசம் – பண்டைய ரகசியங்கள்- தெய்வீக சக்தி மற்றும் அதிரடி சண்டை காட்சிகளை கொண்ட ஒரு பிரம்மாண்டமான காட்சி அமைப்பில் உருவாகி, இதுவரை கண்டிராத தனித்துவமான சினிமா அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் என உறுதியளிக்கிறது.

NIK ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் அபிஷேக் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பாளர்கள் கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி ஆகியோர் ‘நாக பந்தம்’ படத்தை தயாரித்துள்ளனர். இந்த திரைப்படம் ஒரு பிரம்மாண்டமான தயாரிப்பு மற்றும் உலக தரம் வாய்ந்த தொழில்நுட்ப தரத்துடன், ஒரு உண்மையான பான் இந்திய அளவிலான பிரம்மாண்ட படைப்பாக உருவாக்கப்படுகிறது.

சக்தி வாய்ந்த முன்னணி கதாபாத்திரத்தில் நடிகர் விராட் கர்ணா நடிக்கிறார். அவருடன் நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன், ஜெகபதி பாபு , மகேஷ் மஞ்சரேக்கர், ரிஷப் சாவ்னி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் இந்திய சினிமாவில் புராண சாகச வகையிலான படைப்புகளின் எல்லையை மறு வரையறை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட போஸ்டர்.. சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படத்திற்கான வீடியோவில் ஒரு பிரம்மாண்டமான பழங்குடி இன மக்களின் கடல் போர் மற்றும் தீவிரமான சாகச சண்டை காட்சிகள்.. அது தொடர்பான பிரமிக்க வைக்கும் காட்சி…இப்படத்தின் பிரம்மாண்டமான அளவு – சினிமாவின் கம்பீரம் மற்றும் அதிரடியான சண்டைக் காட்சிகள் இடம் பிடித்துள்ளதை வெளிப்படுத்துகிறது. இது ஒரு முழுமையான திரையரங்க அனுபவத்திற்கும் உறுதியளிக்கிறது.‌

இந்த அதிரடியான சண்டைக் காட்சிகளை கண்களுக்கு விருந்தாகவும் தொழில்நுட்ப ரீதியாக தீவிரமான சண்டை காட்சிகளை வடிவமைப்பதில் உலக அளவில் பிரபலமாகி, சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்ற சண்டை பயிற்சி இயக்குநர் விளாட் ரிம்பர்க் வடிவமைத்துள்ளார். இப்படத்தில் பிரம்மாண்டமான முறையிலான பழங்குடியினரின் சண்டைகள்- கடல் போர் காட்சிகள்- நீருக்கு அடியில் நடைபெறும் சண்டை காட்சிகள் – என இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத பிரம்மாண்டமான சாகச காட்சிகளும் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரமிக்க வைக்கும் காட்சிகளையும் பார்வையாளர்களை கவர்ந்து இழுக்கும் சினிமா தருணங்களையும் வழங்குவதற்காக.. பல முன்னணி ஸ்டுடியோகள் இரவு பகலாக உழைத்து வருகின்றன. அத்துடன் போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் வி எஃப் எக்ஸ் – VFX பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. பழங்கால கோயில்கள்- மாய உலகங்கள் முதல் பிரம்மாண்டமான போர்க்காட்சிகள் மற்றும் தெய்வீக அம்சங்கள் வரை- ஒரு உலகளாவிய சினிமா அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்கும் நோக்கத்தில் அதிநவீன விசுவல் எபெக்ட்ஸ்களுடன் இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

சமீபத்திய ஆண்டுகளில் இந்திய சினிமாவில் இருந்து வெளிவந்த மிகப்பெரிய காட்சி மொழியிலான படைப்புகளில் ஒன்றாக நாக பந்தம் படம் இருக்கும் என்று திரையுலக வட்டாரங்கள் ஏற்கனவே விவரித்து வருகின்றன.

இந்த உற்சாகத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் முன்னணி பொழுதுபோக்கு நிறுவனமான ஜீ ஸ்டுடியோஸ் இப்படத்தின் வட இந்திய திரையரங்கு விநியோக உரிமைகளை பெற்றுள்ளது. அத்துடன் இந்தப் படத்தை இந்தி பேசும் மக்களை கவர்வதற்காக.. அவர்களுக்கான சந்தையில் இப்படத்தை பிரம்மாண்டமாக வெளியிட ஜீ ஸ்டுடியோஸ் திட்டமிட்டுள்ளது. இந்த கூட்டணி ‘நாக பந்தம்’ படத்திற்கு நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய வரவேற்பை அளித்து, இந்த ஆண்டின் மிகப்பெரிய பான் இந்திய வெளியீடுகளில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் வீடியோ பெற்றுள்ளது. இவை இப்படத்தின் மீது திரையுலக வணிகர்கள் கொண்டுள்ள வலுவான நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.‌

பண்டைய ரகசியங்கள் – மறைக்கப்பட்ட புதையல்கள்- தெய்வீக சக்திகள் – மறக்கப்பட்ட புராணக் கதைகளின் பின்னணியில் அமைந்திருக்கும் ‘நாக பந்தம்’ திரைப்படம் – இந்திய புராணங்கள் மற்றும் கலாச்சாரத்தில் வேரூன்றிய, உணர்வு பூர்வமான மற்றும் கண்களுக்கு விருந்தளிக்க கூடிய காட்சிகளைக் கொண்ட ஒரு அற்புதமான பயணத்தை பார்வையாளர்களுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் பிரம்மாண்டம்- வியக்க வைக்கும் காட்சி அமைப்புகள் – விறுவிறுப்பான சண்டை காட்சிகள் – கற்பனைக்கு அப்பாற்பட்ட சாகச காட்சிகள் – சக்தி வாய்ந்த இசை – சுவராசியமான கதைக்களம் – என பல அம்சங்கள் இடம் பிடித்திருப்பதால், இந்த திரைப்படம் 2026 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

இதன் காரணமாக இப்படத்தைக் காண்பதற்கான காத்திருக்கும் கால கட்டம் குறைந்து வருகிறது. அதே தருணத்தில் இப்படத்தை பார்ப்பதற்கான ஆர்வம் அதிகரித்து வருகிறது.

மிகவும் எதிர்பார்க்கப்படும் புராண அதிரடி சாகச படைப்பான நாக பந்தம் திரைப்படம்- திரை அரங்குகளில் வெளியாக இன்னும் 44 நாட்களே மீதமுள்ளன. அதனால் இப்படத்திற்கான கவுண்ட் டவுன் தொடங்கி விட்டது. இந்தத் திரைப்படம் உலகெங்கிலும் எதிர்வரும் ஜூலை மாதம் மூன்றாம் தேதியன்று வெளியாகிறது.

மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிக்கும் #Chiru158 படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது

‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி – இயக்குநர் பாபி கொல்லி – கே வி என் புரொடக்ஷன்ஸ்- கூட்டணியில் தயாராகும்’ #ChiruBobby2- #Chiru158′ திரைப்படத்தின் பிரம்மாண்டமான தொடக்க விழாவில் ‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண் மற்றும் நாகபாபு ஆகியோர் கலந்து கொண்டனர். இப்படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்குகிறது

திரையுலகில் சில கூட்டணிகள் உடனடியாக பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவியும் , வெற்றிகரமான திரைப்பட இயக்குநர் பாபி கொல்லியும் மீண்டும் கூட்டணி அமைத்திருப்பது.. ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று என்பதில் ஐயமில்லை. இவர்களின் கூட்டணியில் உருவான ‘வால்டர் வீரய்யா’ திரைப்படம்- சிரஞ்சீவி அவரது உச்சகட்டமான ‘மாஸ்’ அவதாரத்தில் வெளிப்படுத்தி, ஒரு மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட் வெற்றி படமாக அமைந்தது. தற்போது இந்த ஜோடி மற்றொரு பிரம்மாண்டமான படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர்.

ChiruBobby2 / #Chiru158 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தை கே வி என் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் வெங்கட் கே. நாராயணா தயாரிக்கிறார். தமிழ், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமான பட்ஜெட் படங்களை தயாரித்து வழங்கிய பிறகு கே வி என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தெலுங்கில் தயாரிக்கும் முதல் திரைப்படம் இதுவாகும்.

இந்த படத்தைப் பற்றிய தொடர்ச்சியான அறிவிப்புகள் மூலம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில்.. இன்று அப்படத்தின் தொடக்க விழா பிரம்மாண்டமான பூஜையுடன் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் ‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண்- நாக பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதன் காரணமாக இந்த விழா ‘மெகா’ நிகழ்வாக மாறியது. இந்த மூன்று மெகா நட்சத்திரங்களும் ஒரே மேடையில் தோற்றமளித்தது … ரசிகர்களுக்கு ஒரு கண் கொள்ளா காட்சியாக அமைந்தது.

பவன் கல்யாண் ‘கிளாப் போர்டு’ – ( Clap Board) அடித்து, படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். சுஸ்மிதா கொணிதெல கேமராவை இயக்கி வைத்தார். முதல் காட்சியை இயக்கும் கௌரவத்தை வி வி விநாயக் ஏற்றார். பி. கோபால் – கோதண்டராமி ரெட்டி மற்றும் நாகபாபு ஆகியோர் இப்படத்தின் திரைக்கதையை தயாரிப்பு குழுவினரிடம் வழங்கினர். இவ்விழாவில் திரையுலகை சார்ந்த பல முக்கிய இயக்குநர்களும் , தயாரிப்பாளர்களும் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். கே வி என் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தை சார்ந்த லோகித் மற்றும் அவரது குழுவினரும் இவ்விழாவில் பங்கேற்றனர்.

வெகுஜன மக்களின் ரசனையை மிகத்துல்லியமாக புரிந்து கொண்ட இயக்குநர் பாபி கொல்லி – இம்முறை இன்னும் பிரம்மாண்டமான ஒரு கதையை உருவாக்கியுள்ளார். இது மிகப்பெரிய வீச்சையும்.. தீவிரத்தையும்.. கண் கவர் காட்சிகளையும் வழங்கும் என உறுதி அளிக்கிறது. பல ஆண்டுகளாக எண்ணற்ற மறக்க முடியாத கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்ற ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி – இத்திரைப்படத்தில் தனது கதாபாத்திரத்தில் தீவிரத் தன்மையுடன் தோன்ற உள்ளார். இதற்காக அவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று அண்மையில் வெளியானது. இதில் அவரது உடல் தோற்றத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையும் வெளிப்படுத்தியது. அவரது இந்த முயற்சி.. இந்த திரைப்படத்திற்காக அவர் எந்த அளவு அர்ப்பணிப்புடன் உழைத்து வருகிறார் என்பதை அனைவருக்கும் உணர்த்துகிறது.

இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க.. மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.இப்படத்தின் வழக்கமான படப்பிடிப்பு நாளை முதல் ஹைதராபாத்தில் தொடங்குகிறது.

ChiruBobby2- திரைப்படத்தில் மிகச்சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களும் இணைந்துள்ளனர். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, எஸ். தமன் இசையமைக்கிறார். அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், ஆண்டனி ரூபன் பட தொகுப்பாளராகவும் பொறுப்பேற்றிருக்கிறார்கள். திரைக்கதையை கோனா வெங்கட் மற்றும் கே. சக்கரவர்த்தி ரெட்டி எழுதியுள்ளனர். கூடுதல் திரைக்கதையை எழுத்தாளர்களான ஹரி மோகன கிருஷ்ணா மற்றும் வினீத் பொட்லூரி ஆகியோர் எழுதியுள்ளனர். பானு- நந்து ஆகியோர் நகைச்சுவை பகுதிக்கான உரையாடல்களை எழுதியுள்ளனர்.

நடிகர்கள் : ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி , அனஸ்வரா ராஜன்

தொழில்நுட்பக் குழு :

எழுத்து& இயக்கம் : பாபி கொல்லி

தயாரிப்பாளர் : வெங்கட் கே. நாராயணா

தயாரிப்பு நிறுவனம் : கே வி என் புரொடக்ஷன்ஸ்

இசை : எஸ். தமன்

திரைக்கதை : கோனா வெங்கட் & கே. சக்கரவர்த்தி ரெட்டி

கூடுதல் திரைக்கதை : ஹரி மோகன கிருஷ்ணா & வினீத் பொட்லூரி

ஒளிப்பதிவு : விஜய் கார்த்திக் கண்ணன்

படத்தொகுப்பு : ஆண்டனி ரூபன்

தயாரிப்பு வடிவமைப்பு : அவினாஷ் கொல்லா

VFX மேற்பார்வையாளர் : யுகாந்தர் .டி

வசனங்கள் – பானு & நந்து

நிர்வாக தயாரிப்பாளர் : சரண்யா பொட்லா

மக்கள் தொடர்பு : யுவராஜ்

மார்க்கெட்டிங் : ஹேஷ்டேக் மீடியா

‘தி இந்தியா ஸ்டோரி (The India Story) ஜூலை 24ஆம் தேதி திரைப்படம் வெளியாகிறது

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி (The India Story) படத்தின் டீசர் விரைவில் வெளியீடு : ஜூலை 24ஆம் தேதி திரைப்படம் வெளியாகிறது

MIG புரொடக்ஷன் & ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் இந்த திரைப்படத்தை வழங்குகிறது .

அனைவரது கவனத்தையும் கவரும் வகையில் பிரத்யேக போஸ்டரை வெளியிட்டதை தொடர்ந்து, தற்போது ‘தி இந்தியா ஸ்டோரி- The India Story ‘ படத்தின் தயாரிப்பாளர்கள்- அப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

காஜல் அகர்வால், ஷ்ரேயாஸ் தல்படே ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த சமூக மற்றும் தேசிய அளவிலான திரைப்படம்.. அதன் விறுவிறுப்பான கதைக் களம் மற்றும் ஈர்க்கக்கூடிய காட்சி அமைப்புகளுக்காக ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

MIG புரொடக்ஷன் & ஸ்டுடியோஸ் உடன் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் வழங்கும் இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

சேட்டன் DK இயக்கத்தில், சாகர் B. ஷிண்டே கதை எழுதி தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி : ஸ்லோ பாய்சன் இன் ப்ராக்ரஸ்‘ (The India Story: Slow Poison in Progress) திரைப்படம், ரசாயன பொருட்களின் தவறான பயன்பாட்டினால் ஏற்படும் ஆபத்தான பக்க விளைவுகளை, குறிப்பாக பூச்சிக்கொல்லி மருந்து சார்ந்த விவசாயத்தில், அதன் தாக்கம் மற்றும் பொது சுகாதாரத்தின் மீதான விளைவுகளை பற்றி இப்படம் உரக்க பேசுகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டர்- இப்படம் கையாளவிருக்கும் அதே தருணத்தில் மிகவும் முக்கியமானதும் மனதை உருக்கும் வகையில் அமைந்திருக்கும் விஷயங்களை பற்றிய ஒரு முன்னோட்டத்தை வழங்கியது.

ஒரு தனி நபரின் அல்லது ஒரு குடும்பத்தின் கதை என்ற எல்லையைக் கடந்து.. இப்படம் நாடு முழுவதும் உள்ள எண்ணற்ற மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் ஒரு மிகப்பெரிய நெருக்கடியை எதிரொலிக்கிறது. தொழில் துறை சார்ந்த அலட்சியத்தால் ஏற்படும் மறைமுகமான ஆபத்துகளையும்.. அது தொடர்பான விழிப்புணர்வு மற்றும் பொறுப்புணர்விற்கான அவசர தேவையையும்… இப்படம் முன்னிலை படுத்த முயற்சிக்கிறது.

தி இந்தியா ஸ்டோரி (The India Story) படத்தின் மூலம் விவரிக்கப்படும் அதி தீவிரமான உலகத்தை.. ரசிகர்கள் மேலும் அழுத்தமாக புரிந்து கொள்ளும் வகையில் டீசர் இருக்கும் என்றும், இது இப்படத்தின் முக்கியத்துவம் வாய்ந்த கதைக்களம் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் என்றும் தயாரிப்பாளர்கள் சூசகமாக தெரிவித்துள்ளனர். காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே ஆகியோர் முதன் முறையாக திரையில் இணைந்து நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் தங்களுடைய அழுத்தமான நடிப்பின் மூலம் கதைக்கு உணர்வு பூர்வமான ஆழத்தையும், தீவிரத்தையும் ரசிகர்களுக்கு கடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுமித் பாகடே -அனிதா ஜாதவ்- விநாயக் சைதானி- கல்பேஷ் ஷா – தேவ்யானி கொராடே மற்றும் பிரேம் ஜோஷி ஆகியோர் இப்படத்திற்கு இணை தயாரிப்பாளர்களாக பங்களிப்பு செய்துள்ளனர். நிஷாந்த் பக்வத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மங்கேஷ் தாக்டே இசையமைத்திருக்கிறார். ஆஷிஷ் மாத்ரே படத்தொகுப்பு பணிகளையும், ஷகீல் அஜாமி பாடலாசிரியராகவும், அன்மோல் பாவே ஒலி வடிவமைப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார்கள். மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இதனை ஜீ ஸ்டுடியோஸ் உலக அளவில் வெளியிடுகிறது

“கான் சிட்டி” வரும் ஜூன் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது !!

“கான் சிட்டி” திரைப்படத்தின் டீசர், முதல் மற்றும் இரண்டாம் சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள ரிலீஸ் தேதி அறிவிப்பு ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. அர்ஜூன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள “கான் சிட்டி” திரைப்படம் வரும் ஜூன் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை ஒரு அதிரடி போஸ்டருடன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். பட அறிவிப்பின் ஆரம்பத்திலிருந்தே இப்படத்தின் வித்தியாசமான கதைக்களம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், வெளியான டீசரும் அதற்கான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

குறிப்பாக “ரா ரா ரங்கையா” முதல் சிங்கிள் பாடல் வெளியானவுடனே சமூக வலைதளங்களில் வைரலானது. அதைத்தொடர்ந்து வெளியாகிய “நான் தான் கிங்கு” பாடலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஷான் ரோல்டன் இசையில் உருவான இந்தப் பாடல்கள், அதன் தனித்துவமான மேக்கிங் , ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

“கான் சிட்டி” படம் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தை மையமாக வைத்து பரபரப்பான கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ளது. புதுமையான கதைக்களத்தில் உருவாகும் “கான் சிட்டி” படம், நகர வாழ்க்கையில் கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் கதையை மையமாகக் கொண்டு, குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, பரபரப்பு ஆகிய அனைத்தும் கலந்த ஒரு முழுமையான ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ளது.

மங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பல பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமையை Netflix நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

டீசர், முதல் மற்றும் இரண்டாம் சிங்கிள் பாடல்கள் என தொடர்ந்து வெளியாகிய ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியான ஜூன் 26 ரிலீஸ் தேதி அறிவிப்பு “கான் சிட்டி” படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.

தொழில்நுட்ப குழு

எழுத்து, இயக்கம்: ஹரிஷ் துரைராஜ்
தயாரிப்பு: பவர் ஹவுஸ் பிக்சர்ஸ்
ஒளிப்பதிவு: அரவிந்த் விஸ்வநாதன்
எடிட்டிங்: அருள் மோசஸ்
இசை: ஷான் ரோல்டன்
கலை இயக்கம்: ராஜ் கமல்
உடை வடிவமைப்பு: நவா ராம்போ ராஜ்குமார்
ஸ்டண்ட்: ஆக்ஷன் சந்தோஷ்
மக்கள் தொடர்பு: யுவராஜ்