Breaking
June 28, 2026

Cinema

புஷ்கர் & காயத்ரி – வால்வாட்சர்  ஃபிலிம்ஸ் (Wallwatcher Films)   – A.சற்குணம் – கூட்டணியின் ‘எக்ஸாம் – EXAM’

பிரைம் வீடியோ – புஷ்கர் & காயத்ரி – வால்வாட்சர்  ஃபிலிம்ஸ் (Wallwatcher Films)   – A.சற்குணம் – கூட்டணியின் ‘எக்ஸாம் – EXAM’ தமிழ் ஒரிஜினல் இணையத் தொடரின் முன்னோட்டம் வெளியீடு

இந்தியா முழுவதும் பெரிதும் விரும்பப்படும் பொழுது போக்கு தளங்களில் முதன்மையானதாக திகழும் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் மே மாதம் 15 ஆம் தேதி முதல் வெளியாகவுள்ள ‘எக்ஸாம் –  EXAM’ எனும் சஸ்பென்ஸ் திரில்லரான இணைய தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

வால் வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் புஷ்கர் & காயத்ரி ஆகியோரின் தயாரிப்பில் தேசிய விருதை வென்ற இயக்குநரான ஏ சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எக்ஸாம் –  EXAM’   இணைய தொடரில் துஷாரா விஜயன், அதிதி பாலன், அப்பாஸ் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

ஏழு அத்தியாயங்களாக தயாராகி இருக்கும் இந்த இணையத் தொடர் எதிர்வரும் மே 15 ஆம் தேதி முதல் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. சஸ்பென்ஸ் திரில்லரான EXAM இணைய தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர்கள் புஷ்கர் – காயத்ரி – இயக்குநர் ஏ. சற்குணம் – துஷாரா விஜயன் – அதிதி பாலன் – ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் புஷ்கர் பேசுகையில், ” நாங்கள் ‘வா குவாட்டர் கட்டிங் ‘எனும் திரைப்படத்தின் பணியை தொடங்குவதற்கு முன் ஏ சற்குணம் இயக்கத்தில் உருவான ‘களவாணி’ திரைப்படம் வெளியாகி வெற்றியை பெற்றிருந்தது. சிறிய பட்ஜெட்டில் உருவாகி மிகப்பெரிய வெற்றியை பெற முடியும் என்ற சாதனையை ஏ சற்குணம் படைத்திருந்தார்.‌ இதைத்தான் நாங்கள் தயாரிப்பாளர்களிடத்தில் குறிப்பிட்டு, ‘பெரிய ஸ்டார்ஸ் தேவையில்லை. சின்ன பட்ஜெட்டில் நடிகர்களை வைத்து பெரிய வெற்றியை பெற முடியும்’ என எடுத்துச் சொன்னோம்

சினிமாவில் ஒரு ஹீரோவின் கதையைத்தான் சொல்கிறோம்.‌ ஆனால் டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் இணைய தொடர் நீண்ட வடிவம் கொண்டதால்.. அதைக் கடந்து சில விசயங்கள் அவசியமாக தேவைப்படும்.‌ ‘எக்ஸாம்’ தொடரின் முன்னோட்டத்தை பார்க்கும் போது ஜான்சி மற்றும் மரமல்லி எனும் இரு கதாபாத்திரங்களுக்கு இடையேயான ஒரு சம்பம்  … ஜான்சி சிக்குவாளா.. சிக்கமாட்டாளா ? என்ற ஒரு டென்ஷன் இருந்து கொண்டே இருக்கும்.. இதைக் கடந்து எக்ஸாம் என்ற போட்டி தேர்வு மோசடி குறித்த கதையும் உள்ளது.‌

சற்குணம் எங்களிடம் முதலில் கதையை சொல்லும்போது இந்த விசயங்கள் எல்லாம் அதில் இருந்தது.‌ கதையைக் கேட்டவுடன் இது நீண்ட வடிவத்திற்கானது என்பதை புரிந்து கொண்டோம். உண்மையைச் சொல்லப்போனால் நாங்கள் வெளியில் இருந்து வந்த ஒரு திரைக்கதையை படித்து ஓகே சொன்னது சற்குணத்தின் கதையை மட்டும் தான்.  ‘வதந்தி’ தொடரை எழுதிய ஆண்ட்ரூஸ்-ஐ, எங்களுக்கு முதலில் இருந்தே தெரியும்.

நாங்கள் கதையைக் கேட்டவுடன் ஆறு ஏழு அல்லது எட்டு அத்தியாயங்கள் வரை விறுவிறுப்பாக செல்லக்கூடிய அம்சங்கள் இருக்கிறதா? என்பதை தான் பார்ப்போம். அந்த விசயத்தில் இயக்குநர் சற்குணம் மிகவும் தெளிவாக இருந்தார்.

நிறைய வெப் சீரிஸ்களை பார்த்திருந்தால்.. அவை சினிமாவாக தயாராகி இருக்கலாம். இருந்தாலும் அதனை அங்கங்கே சற்று இழுத்து வெப்சீரிஸாக மாற்றி இருப்பார்கள். ஆனால் இயக்குநர் சற்குணம் முதலிலேயே தெளிவாக இது நீண்ட வடிவத்திற்கான கதையாகத்தான்  என்று  சொன்னார்.

இணைய தொடருக்கான படப்பிடிப்பு என்பது மிகவும் தெளிவான திட்டமிடலுடன் இருக்க வேண்டும்.‌ அந்த விசயத்திலும் இயக்குநர் சற்குணம் மிகத் தெளிவான திட்டமிடலுடன் பணியாற்றினார்.  அந்த விசயத்திலும் சற்குணம் கிரேட். ” என்றார்.

இயக்குநர் காயத்ரி பேசுகையில், ” அவர் எங்களிடம் சொன்ன கதை மிக நன்றாக இருந்தது. ஒரு திரைப்படத்தை தயாரிப்பதற்கும்… ஒரு இணையத் தொடரை தயாரிப்பதற்கும்… சில இலக்கணங்கள் உண்டு. அதற்காக பிரத்யேகமாக எழுத வேண்டும்.‌ நாங்கள் கதையைப் பற்றி விவாதிக்கும் போது அதை அவர்கள் திறந்த மனதுடன் நாங்கள் சொல்லும் விசயத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். அது இயக்குநர் சற்குணத்திடம் இருந்தது. அவர் எப்போது படைப்பு குறித்து எந்த ஆலோசனைகள் சொன்னாலும்… குறிப்புகள் வழங்கினாலும்… மறுக்காமல் கேட்டுக் கொண்டு அதற்கான விளக்கத்தை அளிப்பார்.

ஒரு ப்ராஜெக்ட் என்றால் நிறைய விசயங்கள் ஒன்றாக கூடி வரவேண்டும். அதிலும் குறிப்பாக நடிகர்களுடைய விசயத்தில் நாங்கள் தெளிவாக இருந்தோம்.  திறமையான நடிகர்களாக-  கலைஞர்களாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். இந்த விசயத்தில் துஷாராவும், அதிதியும் எங்களது முதன்மையான தேர்வாக இருந்தது. குறிப்பாக அதிதியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஏற்கனவே திட்டமிட்டிருந்தோம்.

இந்தத் தொடரில் முக்கியமான ஒரு கேரக்டர் இருக்கிறது. இதற்கு யார் பொருத்தமாக இருப்பார்? என்று யோசித்துக் கொண்டே இருந்தோம். ஒரு வருடத்திற்கு முன் நடிகர் அப்பாஸ் திடீரென்று வீடியோ காலில் வந்து மீண்டும் நடிக்கலாம் என்று நினைக்கிறேன் என்றார். அவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உண்டு. அவரை அந்த கேரக்டருக்காக தேர்வு செய்தோம். அவரும் அற்புதமாக நடித்திருக்கிறார்.

திறமையான தொழில்நுட்ப கலைஞர்கள் எங்களுடைய தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள். ஒளிப்பதிவாளருக்கு இதுதான் முதல் படைப்பு. கலை இயக்குனருக்கும் இதுதான் முதல் படைப்பு. அதனால் இயக்குநர் சொன்னதை போல் எக்ஸாம் தொடரின் தொடக்கத்தில் இருந்து இப்போது வரை அனைவரும் உற்சாகத்துடன் மகிழ்ச்சியாக உழைத்து வருகிறோம்.‌

பிரைம் வீடியோ நிறுவனத்தினை சார்ந்த அனைவரும் இதற்காக அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார்கள். நாங்கள் இணையத் தொடரை உருவாக்கினாலும் அதனை ரசிகர்களிடத்தில் சென்றடைய செய்ய வேண்டிய அனைத்து பணிகளையும் பிரைம் வீடியோ நிறுவனத்தில் பணியாற்றும் அனைவரும் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். இதற்காக அவர்களுக்கும் இந்த தருணத்தில் எங்களின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இயக்குநர் ஏ.சற்குணம் பேசுகையில், ” சங்கர் ஐ ஏ எஸ் அகாடமியின் நிறுவனரான சங்கர் என் நண்பர். போட்டி தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து வழக்கு தொடுப்பதற்காக சென்று இறுதியில் வக்கீலாக மாறியவரும் என் நண்பர். தமிழக அரசு தேர்வுகளுக்காக பயிற்சி பெறும் நிறைய நண்பர்கள் எனக்கு தெரியும். இவர்கள் அனைவரும் தான் இந்த இணைய தொடரை உருவாக்குவதற்கு முதல் காரணம்.

நடுத்தர வர்க்கத்து மக்களின் மிகப்பெரிய கனவு தான் அரசு பணிக்கான தேர்வு. அதில் நடைபெற்ற முறைகேடுகளை அப்படியே பதிவு செய்யாமல்… அதனை ஒரு திரில்லர் மோடில் அடுத்து என்ன ? அடுத்து என்ன ? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்ற வகையில் ஒரு திரைக்கதை உருவாக்கப்பட்டு… ஏழு அத்தியாயங்களாக இந்த எக்ஸாம் தொடர் உருவாகி இருக்கிறது.

நான் இயக்குநர்கள் புஷ்கர் & காயத்ரி அவர்களிடம் கதையை சொல்லும் போது.. அவர்கள் என்னிடம் சொன்ன ஒரே விசயம்.. அடுத்து என்ன? அடுத்து என்ன? என்ற பரபரப்பு ஒவ்வொரு காட்சியிலும் இருக்க வேண்டும். இதில் நாம் ஒரு நல்ல விசயத்தை சொல்கிறோம் என்ற எல்லையைக் கடந்து… பொழுது போக்கு அம்சங்களுடன் அடுத்து என்ன நடக்கும் என்ற திரில்லிங்கான தருணங்களாகவும் இருக்க வேண்டும் என்பதை எப்போதும் நட்புணர்வுடன் பகிர்ந்து கொண்டே இருந்தனர்.  இந்த தொடருக்கு அவர்களின் இந்த ஆலோசனையும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது.‌

அதன் பிறகு அவர்கள் எனக்கு கொடுத்த சுதந்திரம். கதையைக் கேட்டவுடன் ஓகே சொல்லாமல்… உடன் இருந்து அந்த திரைக்கதையை முழுவதுமாக படிக்கிறார்கள். மீண்டும் என்னை அழைத்து அது தொடர்பாக விவாதிக்கிறார்கள்.‌

அதே தருணத்தில் தயாரிப்பு விசயத்தில் எந்த ஒரு சமரசமும் செய்து கொள்ளாமல் தரமான படைப்பாக உருவாக்கினார்கள்.

எனக்கு மிகவும் பிடித்த ஒரு விசயம் என்னவென்றால் …ஒரு படத்தை தொடங்கும் போது தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நல்ல புரிதல் இருக்கும். ஆனால் அந்தப் படம் நிறைவடையும் போது தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் இடையே கருத்து முரண் எழுந்திருக்கும்.‌ இப்படி ஒரு அனுபவம் இல்லாமல் நான் மகிழ்ச்சியுடன் பணியாற்றிய முதல் படைப்பு வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான எக்ஸாம் தான். இதற்காக இவர்கள் இருவருக்கும் நான் மீண்டும் ஒருமுறை நன்றி சொல்கிறேன்” என்றார்.
 
நடிகை துஷாரா விஜயன் பேசுகையில், ‘ இந்த இணைய தொடர் மூலம் நான் முதன் முதலாக டிஜிட்டல் தளத்தில் அறிமுகமாகிறேன். எனது நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படமும் நேரடியாக பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில்தான் வெளியானது. இந்த வகையில் நான் மிகப் பெரிய அதிர்ஷ்டசாலி.

எக்ஸாம் இந்த தொடர்- நான் கண்ணை மூடிக்கொண்டு நம்பிக்கையுடன் ஒப்புக்கொண்ட ஒரு ப்ராஜெக்ட்.‌ புஷ்கர் காயத்ரி என்று சொன்னவுடன் ஓகே சொன்னேன். அதிலும் இயக்குநர் ஏ சற்குணம் என்று சொன்னவுடன் டபுள் ஓகே சொல்லிவிட்டேன்.‌

ஜான்சி கதாபாத்திரம் கடினமானது. அவள் ஒரு அப்பாவியான பெண். ஆனால்  கடினமான முடிவுகளை எடுக்கக் கூடியவள். அப்படித்தான் அந்த கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருந்தது.

இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் போது எனக்கு சவாலானதாக இருந்தது என்னவென்றால் ..அவள் முடிவெடுக்கும் தருணம்….ஆனால் அதைப் பற்றி எல்லாம் அதிகம் கவலைப்படாமல் நான் இருந்ததற்கு இயக்குநர் சற்குணம் தான் முழு காரணம்.

நிச்சயமாக இந்த இணைய தொடர் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.

நான் எப்போதும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை உள்ளவள்.‌ அதுபோன்ற கதை தான் எக்ஸாம்.

இதை நான் தேர்ந்தெடுத்ததை விட அந்த கதாபாத்திரம் தான் என்னை தேர்ந்தெடுத்தது என்று நம்புகிறேன் இதுபோன்ற கதைகளில் தான் நான் தொடர்ந்து நடித்து வருகிறேன் இனிமேலும் தொடர்ந்து நடிப்பேன்.

இந்த குழுவினருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. குறிப்பாக ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் உடன் பணியாற்றியது மறக்க முடியாது. இந்தப் படத்தில் நான் சண்டைக் காட்சிகளில் நடித்திருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் அந்த காட்சிகளில் நடிப்பது தான் சற்று கடினமானதாகவும் சவாலானதாகவும் இருந்தது. ஜான்சி கதாபாத்திரத்திற்கு என்னை தேர்வு செய்து வாய்ப்பளித்ததற்காக அனைவருக்கும் நன்றி” என்றார்.

நடிகை அதிதி பாலன் பேசுகையில், ”  மரமல்லி  கதாபாத்திரத்திற்கு என்னை தேர்வு செய்து வாய்ப்பளித்ததற்காக இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி மற்றும் சற்குணத்திற்கு நன்றி.  மரமல்லி  கதாபாத்திரத்திற்காக உடல் ரீதியாக சில முன் தயாரிப்புகளை மேற்கொள்ள வேண்டியது இருந்தது. சண்டை காட்சிகளுக்காக நாங்கள் நிறைய ஒத்திகையும் பயிற்சியையும்  மேற்கொள்ள வேண்டியதிருந்தது.‌ நான் முதல் முறையாக சண்டை காட்சிகளில் நடிப்பதால் அதனை மகிழ்ச்சியோடும் சந்தோஷத்துடனும் பணியாற்றினேன். நிறைய அடிபட்டது. அடி வாங்கினேன். நாங்கள் இருவரும் தான் (துஷாராவும் அதிதியும்)  அடித்துக் கொண்டோம்.‌

இந்த கேரக்டர் தொடங்கும் போது சற்று வில்லத்தனமாகத் தான் தொடங்கும். அதற்கு மேல் எதையும் நான் தற்போது சொல்ல இயலாது. இயக்குநர் சற்குணம் சார் இந்த கேரக்டரை பற்றி என்னிடம் விவரித்த போது நான் இதற்கு முன் இது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்கவில்லை என்பதால்.. ஒப்புக்கொண்டேன். அதற்கு முன் நான் இயக்குநர் சற்குணத்தின்‌ மிகப்பெரிய ரசிகை.அவருடைய படங்களை பார்த்திருக்கிறேன். எல்லோருடனும் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது” என்றார்.

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

Zee Studios வழங்க, MIG Production & Studios இணைந்து தயாரித்துள்ளது.

ஒரு தீவிரமான சமூக – தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர். இப்படம் வரும் ஜூலை 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை சேட்டன் DK இயக்க, சாகர் B ஷிண்டே எழுதி தயாரித்துள்ளார். இந்த படம் தேசிய அளவில் தாக்கம் ஏற்படுத்தும் முக்கியமான பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

‘தி இந்தியா ஸ்டோரி’ The India Story (அல்லது The India Story: Slow Poison) என்ற பெயரிலும் அறியப்படும் இப்படம், குறிப்பாக பூச்சிக்கொல்லி விவசாயத்தில் இரசாயனங்களின் தவறான பயன்பாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள சர்ச்சைகளை வெளிச்சமிட்டு காட்டுகிறது. ஒரு குடும்பத்தின் கதையை மட்டுமே கூறாமல், பொதுமக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை பாதிக்கும் மிகப் பெரிய பிரச்சினையாக இந்த விவகாரத்தை இக்கதை விரிவாக எடுத்துரைக்கிறது. மேலும், இந்த நிலைமையைத் தடுப்பதற்கான கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் சட்டங்கள் தேவையென்பதையும் இப்படம் சுட்டிக்காட்டுகிறது.

இப்படம் உருவானதற்கான காரணத்தைப் பற்றி தயாரிப்பாளர் சாகர் B ஷிண்டே கூறியதாவது..,

“நாட்டின் பல பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியும் பெரும்பாலும் கவனிக்கப்படாத ஒரு உண்மையை இந்தக் கதை வெளிப்படுத்துகிறது. பூச்சிக்கொல்லி விவசாயத்தில் இரசாயனங்களின் தவறான பயன்பாடு சுற்றுச்சூழல் பிரச்சினை மட்டுமல்ல, மனித வாழ்வையே பாதிக்கும் மிகப்பெரிய பிரச்சினை. இந்த படத்தின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பொறுப்புணர்வை உருவாக்கவும் நாங்கள் விரும்புகிறோம்.”

உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கதை, சுவாரஸ்யமான கதையம்சத்தையும் சமூகப் பொறுப்பையும் சமநிலைப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. தொழில்துறை அலட்சியத்தின் காரணமாக ஏற்படும், பொதுவாக கவனிக்கப்படாமல் போகும் விளைவுகளை இந்தப் படம் வெளிச்சத்திற்கு கொண்டு வருவதோடு, அதிகாரம் வாய்ந்த நிறுவனங்களின் பொறுப்புணர்வையும் கேள்விக்குறியாக்குகிறது.

இயக்குநர் சேட்டன் DK கூறியதாவது..,

“இந்தக் கதைக்கு உண்மைத்தன்மையை கொடுக்க குழுவில் உள்ள ஒவ்வொருவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். காஜல் மற்றும் ஷ்ரேயாஸ்இருவரும் மிகவும் நுணுக்கமான நடிப்பை வழங்கியுள்ளனர். அவர்கள் காட்டிய ஈடுபாடு படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.”

பல்வேறு கதாபாத்திரங்களில் தன்னை நிரூபித்துள்ள காஜல் அகர்வால் மற்றும் பல்வேறு வகை கதாபாத்திரங்களில் பாராட்டுக்களைக் குவித்தஷ்ரேயாஸ் தல்படே முதல் முறையாக இணைந்து நடிக்கின்றனர். இந்த புதிய ஜோடி, கதைக்கு உணர்ச்சி ஆழத்தையும் தீவிரத்தையும் கூட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய பார்வையாளர்கள் சிறந்த கருத்துக்களை மையப்படுத்திய திரைப்படங்களை அதிகம் விரும்பும் சூழலில், ‘தி இந்தியா ஸ்டோரி’ ஒரு பொருத்தமான மற்றும் சிறப்பான திரை வெளியீடாக திகழ்கிறது. சமூக பொறுப்புணர்வை தூண்டும் இந்த படம், சினிமாவைத் தாண்டி முக்கியமான விவாதங்களை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.

இந்தப்படத்தில் இணை தயாரிப்பாளர்களாக சுமித் பாகடே, அனிதா ஜாதவ், விநாயக் சைதானி, கல்பேஷ் ஷா, தேவ்யானி கொராடே மற்றும் பிரேம் ஜோஷி ஆகியோர் பணியாற்றியுள்ளனர். ஒளிப்பதிவாளர் நிஷாந்த் பக்வத், இசையமைப்பாளர் மங்கேஷ் தாக்டே, எடிட்டர் ஆஷிஷ் மாத்ரே, பாடலாசிரியர் ஷகீல் அஜாமி மற்றும் ஒலி வடிவமைப்பாளர் அன்மோல் பாவே ஆகியோரின் பங்களிப்பும் இப்படத்தை மேலும் உயர்த்தியுள்ளது.
இந்த திரைப்படம் தமிழ், இந்தி, மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது.

ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் உலகளாவிய அளவில் வெளியிடுகிறது.

மே 15 முதல் பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam)

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது

வால்வாட்சர் ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A.சற்குணம் எழுதி இயக்கியுள்ள இந்த சஸ்பென்ஸ் டிராமாவில், துஷாரா விஜயன் மற்றும் அதிதி பாலன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், அப்பாஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்

‘எக்ஸாம்’ சீரிஸ் மே 15 முதல் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகும். இந்த சீரிஸ் தமிழில் வெளியாவதுடன், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும், ஆங்கிலம் உட்பட 15 மொழிகளில் சப் டைட்டில்களுடன் வெளியாகும்

சென்னை, இந்தியா—ஏப்ரல் 27, 2026—இந்தியாவின் மிகவும் பிரபலமான பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, தனது அடுத்த தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘எக்ஸாம்’ சீரிஸ் மே 15 அன்று உலகளவில் வெளியிடப்படும் என்று இன்று அறிவித்துள்ளது. வால்வாட்சர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி இணைந்து உருவாக்கியுள்ள இந்த ஏழு எபிசோட்கள் கொண்ட சீரிஸை, தேசிய விருது பெற்ற இயக்குநர் A.சற்குணம் எழுதி இயக்கியுள்ளார். போட்டித் தேர்வுகளின் அழுத்தம் நிறைந்த சூழலை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த சஸ்பென்ஸ் டிராமா, உணர்ச்சி மிகுந்த மற்றும் பதட்டம் நிறைந்த கதையாக உருவாகியுள்ளது. துஷாரா விஜயன் மற்றும் அதிதி பாலன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த சீரிஸில், அப்பாஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். “எக்ஸாம்” தொடர் இந்தியாவைத் தாண்டி 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.

பிரைம் வீடியோ இந்தியாவின் ஒரிஜினல்ஸ் பிரிவு தலைவர் நிகில் மாதோக் கூறியதாவது: ‘எக்ஸாம்’ என்பது இன்றைய காலத்திற்கு மிகவும் பொருத்தமான ஒரு கதை. போட்டித் தேர்வுகளில் இருக்கும் உணர்ச்சி அழுத்தத்தை மிகச் சிறப்பாக ஒரு திகில் நிறைந்த கதையாக மாற்றுகிறது. இந்த கதை கோடிக்கணக்கான மக்களின் மனதைத் தொடும் என்று நாங்கள் நம்புகிறோம். ‘சுழல் — தி வோர்டெக்ஸ்’ (சீசன் 1 மற்றும் 2) மற்றும் ‘வதந்தி — தி ஃபேபிள் ஆஃப் வேலோனி’ ஆகிய தொடர்களின் வெற்றிக்குப் பிறகு, புஷ்கர் மற்றும் காயத்ரியுடன் மீண்டும் இணைவது எங்களுக்கு பெருமையாகும். இந்த கதையை மே 15 அன்று உலகம் முழுவதும் உள்ள எங்கள் பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல ஆவலாக இருக்கிறோம்.”

கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி கூறியதாவது: ‘எக்ஸாம்’ தொடரின் மூலம், மனிதர்களின் ஆசை, அநீதி, மற்றும் கடைசி கட்டத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் நெறிமுறை சிக்கல்கள் ஆகியவற்றை சொல்ல முயன்றோம். இந்தக் கதையின் மையத்தில், சிக்கலான சூழ்நிலையில் தன்னை பலவீனமாக்கி கொள்ளாமல், துணிந்து போராடும் ஒரு இளம் பெண் இருக்கிறார். ஒரு அநீதி நிறைந்த அமைப்புக்கு எதிராக நின்று அவள் போராடுவது தான் இந்த கதை. எங்கள் கதைகளை உலகளவில் கொண்டு செல்ல பிரைம் வீடியோ எங்களுக்கு சிறந்த கூட்டாளியாக இருந்து வருகிறது. அதுபோலவே எக்ஸாம் சீரிஸையும் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல இது சரியான தளமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.”

‘எக்ஸாம்’ சீரிஸை மே 15 முதல் ப்ரைம் வீடியோவில் கண்டுகளியுங்கள்.

பியாண்ட் பிக்சர்ஸ் (Beyond Pictures) தயாரிப்பில், கவின் ஹீரோ – புதிய இயக்குனருடன் வித்தியாசமான குடும்ப படம்!

கவின் 11வது படம் அறிவிப்பு – குடும்பக் கதையுடன் Beyond Pictures புதிய முயற்சி!

தமிழ் திரைப்பட உலகில் தொடர்ந்து புதிய முயற்சிகளை மேற்கொண்டு வரும் பியாண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம், தனது இரண்டாவது தயாரிப்பை மிகுந்த உற்சாகத்துடன் அறிவித்துள்ளது. இப்படத்தை சுஷ்மா சினி ஆர்ட்ஸ் (Sushma Cine Arts) இணைந்து வழங்குகிறது இந்த புதிய திரைப்படத்தில் இளம் நடிகர் கவின் ஹீரோவாக நடிக்கிறார். இது அவர் நாயகனாக நடிக்கும் 11வது திரைப்படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. காதல், நகைச்சுவை என பல்வேறு கதாபாத்திரங்களில் தன்னை நிரூபித்துள்ள கவின், இந்த முறை முழுக்க குடும்பத்தை மையமாகக் கொண்ட கதையில் நடிக்க உள்ளார்.

இந்த திரைப்படம் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. சமகால வாழ்க்கை முறையையும், உறவுகளின் நுணுக்கங்களையும் பேசும் இப்படம், எல்லா தரப்பினரையும் கவரும் வகையில் அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடன் உருவாகவுள்ளது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு மே மாத இறுதியில் தொடங்கும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இத்திரைப்படத்தை, தேசிய விருது பெற்ற பார்க்கிங் திரைப்படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் அவர்களின் முதன்மை அசோசியேட்டாக பணியாற்றிய பிரவீன் பரமசிவன் இயக்குகிறார்.

மேலும், திறமையான நடிகர்கள் மற்றும் அனுபவமிக்க தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்த திரைப்படத்தில் இணையவுள்ளனர். இப்படத்தை பற்றிய மற்ற அறிவிப்புகள் விரைவில் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகும் என்றும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. பெரும் பொருட்செலவில் பிரம்மாண்ட படைப்பாக பியாண்ட் பிக்சர்ஸ் மற்றும் சுஷ்மா சினி ஆர்ட்ஸ் (Sushma Cine Arts ) இணைந்து வழங்கும் இப்படத்தை ஜெய்வர்தா தயாரிக்கிறார். மற்றும் ரெடாக்டட் ஸ்டுடியோஸ் (Redacted Studios) சஞ்சன் இணை தயாரிப்பாளராக இணைந்துள்ளார்.

மொத்தத்தில், பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களின் அடுத்த படைப்பை சிறப்பாக வடிவமைத்து கொண்டு வருவது தெளிவாக தெரிகிறது. கவின் நடிப்பில் உருவாகும் இந்த குடும்பக் கதையம்சம் கொண்ட திரைப்படம், ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்

‘ கன்னக்குழியா ‘ வைரலாகிவரும் “ஹாய்” படத்தின் முதல் சிங்கிள் !

நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” திரைப்படம் வெளியீட்டுக்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறது.

“கன்னக்குழியா புதைகுழியா குழப்புறயே” என தொடங்கும் இந்த கலக்கலான காதல் மெலடி, இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையில் உருவாகி, ஜிவி பிரகாஷின் இனிமையான குரலில் உயிர் பெற்றுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மனதை வருடும் ஒரு மென்மையான காதல் பாடலாக இது உருவாகியுள்ளது. கேட்கக் கேட்க இதமாக மனசை தொடும் இந்த பாடல், அதன் கவித்துவமான வரிகளாலும், துள்ளலான மெலடியாலும் ரசிகர்களை உடனே கவர்ந்து விடுகிறது.

காட்சியமைப்பிலும் பாடல் தனி மெருகை பெற்றுள்ளது. முதன்முறையாக திரையில் இணையும் நயன்தாரா – கவின் ஜோடி, இந்த பாடலில் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இருவரின் ரசனையான கெமிஸ்ட்ரி (chemistry) பாடலின் காதல் உணர்வை மேலும் உயர்த்துகிறது. பாடலின் ஒவ்வொரு ஃப்ரேமும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், இது இசையுடன் சேர்ந்து ஒரு முழுமையான காதல் அனுபவமாக மாறியுள்ளது.

Z ஸ்டூடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் “ஹாய்” படத்தை விஷ்ணு எடவன் எழுதி இயக்குகிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் “கைதி”, “மாஸ்டர்”, “விக்ரம்” போன்ற படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட விஷ்ணு எடவன், இந்த படத்தின் மூலம் தனித்துவமான காதல் மற்றும் குடும்ப கதையை கொண்டு வருகிறார்.

இந்தப் படத்தில் நயன்தாரா, கவின் ஆகியோருடன் கே.பாக்யராஜ், பிரபு, ராதிகா, சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கான குடும்ப கதையில் உண்மையான காதலை சொல்லும் வகையில் உருவாகி வருகிறது. முதல் சிங்கிள் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ள “ஹாய்” படம், அடுத்தடுத்த அப்டேட்களால் மேலும் எதிர்பார்ப்பை கூட்டி வருகிறது. நயன்தாரா – கவின் காம்பொ ஜென் மார்டின் இசை, மற்றும் விஷ்ணு எடவனின் புதிய கதை சொல்லும் முறையுடன், இந்த படம் ஒரு உணர்ச்சி மிக்க காதல் அனுபவமாக மாறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

LINK : https://youtu.be/XXo-VzYUIjo

ராக்கிங் ஸ்டார் யாஷ்: ‘டாக்ஸிக்’ ஒரு புதுமையான கேங்ஸ்டர் சினிமா அனுபவம்!

CinemaCon 2026 விழாவில் கவனம் ஈர்த்த “டாக்ஸிக்” திரைப்படம் !!

CinemaCon 2026 விழாவில் லாஸ் வேகாஸ் நகரில் இந்திய சினிமா உலகளவில் கவனம் ஈர்த்த வேளையில், நடிகர் யாஷ் தனது ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ ( Toxic: A Fairy Tale for Grownups ) படம் குறித்து பகிர்ந்த கருத்துகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. நமித் மல்ஹோத்ரா உடன் கலந்து கொண்ட அவர், இந்த படம் கேங்ஸ்டர் ஜானருக்கு புதிய வண்ணம் தரும் படைப்பாக இருக்குமென தெரிவித்தார்.

படத்தைப் பற்றி யாஷ் கூறியதாவது:

“எங்கள் திரைத்துறையில் முதன்முறையாக இந்த படத்தை ஆங்கிலத்திலும் எடுத்துள்ளோம். இந்த படத்தின் கான்செப்ட் பல அடுக்குகள் கொண்டது. இது சாதாரண கேங்ஸ்டர் ஆக்ஷன் படம் அல்ல. வெளிப்படையாக பார்த்தால் இது ஒரு ஆக்ஷன் நிறைந்த கேங்ஸ்டர் படம் போல தோன்றும். ஆனால் இதில் ஆழமான சைக்கலாஜிகல் அம்சங்களும், மனித வாழ்க்கையின் சுவாரஸ்யமான கோணங்களும் உள்ளன. ஒரு டார்க் கதாபாத்திரத்தை மிகவும் தனித்துவமான முறையில் காட்டியுள்ளோம் என்று நான் நினைக்கிறேன்.”

இயக்குநர் கீது மோகன் தாஸ் மற்றும் தொழில்நுட்பக் குழுவுடன் பணியாற்றிய அனுபவத்தைப் பற்றி அவர் கூறுகையில் :

“அது மிகவும் உற்சாகமான அனுபவமாக இருந்தது. எங்கள் இயக்குநர் கீது மோகன் தாஸ் கேங்ஸ்டர் படங்களுக்கு ஒரு புதிய பார்வையை கொண்டு வந்துள்ளார். நான் இதை மிகவும் ரசித்தேன். இதன் காட்சி ரசிகர்களுக்கு ஒருவிருந்தாக இருப்பதோடு, பார்வையாளர்களின் மனதிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.”

இந்திய சினிமாவின் வளர்ச்சியைப் பற்றி பேசும்போது.., இந்தியா ஒரு தனி உலகம் போல உள்ளது — சில நூறு கிலோமீட்டர் சென்றாலே மொழியும் கலாச்சாரமும் மாறிவிடும் என்று அவர் கூறினார். டப்பிங் மற்றும் பான்-இந்தியா கதைகள் மூலம் இப்போது அனைத்து பிராந்தியங்களிலும் உள்ள பார்வையாளர்களை இணைக்கும் நிலை உருவாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் டாக்ஸிக் Toxic இந்த மாற்றத்தின் பிரதிபலிப்பாகும் — இந்திய உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டாலும், உலகளாவிய பார்வையாளர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு படம். அனைவருக்கும் பிடிக்கும் வகையில், அதே சமயம் ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்கும் படம் இது,” என்று அவர் முடித்தார்.

கீது மோகன் தாஸ் இயக்கத்தில், கே வி என் புரொடக்ஷன்ஸ் ( KVN Productions ) மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் (Monster Mind Creations) தயாரிப்பில் உருவாகியுள்ள ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன் -அப்ஸ்’ ( Toxic: A Fairy Tale for Grownups ) படத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த், மற்றும் தாரா சுதாரியா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் உலகம் முழுவதும் 2026 ஜூன் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது

‘ஜோ’ இயக்குநருடன் கைகோர்க்கும் ஜி.வி.பிரகாஷ்

லார்க் ஸ்டூடியோஸ் – பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் இணையும் புதிய படம்

லார்க் ஸ்டூடியோஸ் மற்றும் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக நடித்து இசையமைக்க உள்ளார். இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

‘கருடன்’ மற்றும் ‘மாமன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் படமாக இது உருவாகிறது. இதன் ஆரம்பகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தினை ‘ஜோ’ வெற்றி படத்தினை இயக்கிய ஹரிஹரன் ராம் இயக்கவுள்ளார். அவர் சொன்ன கதையைக் கேட்டுவிட்டு நாயகனாக நடிப்பது மட்டுமன்றி இசையமைத்து, தயாரிப்பாளராக இணையவும் முடிவு செய்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். அவரது நடிப்பில் இதுவரை வெளியான படங்களில் இருந்து வேறுபட்டு, முழுக்க வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதற்காக தீவிர பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார்.

’ஜோ’ படத்தில் தனது நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த மாளவிகா மனோஜ், இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர் பணிபுரியவுள்ளார். ‘கர்ணன்’, ‘வாழை’ உள்ளிட்ட பல படங்களுக்கு தனது ஒளிப்பதிவின் மூலம் மெருகூட்டியவர் இப்படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தின் இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ளது. இதற்கான படப்பிடிப்பு இடங்களைத் தேர்வு செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

ஹாலிவுட் தரத்தில் சாம் CS இசை – “மகா அவதார் பரசுராம்” மீது உச்ச எதிர்பார்ப்பு!

250+ கலைஞர்களுடன் உலகத் தர இசை – சாம் CS அவர்களின் புதிய முயற்சி !!

சாம் சி.எஸ். இசையில் உருவாகும் “மகா அவதார் பரசுராம்” – புதிய சினிமா அனுபவம்!

இந்திய சினிமாவில் தனித்துவமான பின்னணி இசை மற்றும் சவுண்ட் டிசைன் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ள இசையமைப்பாளர் சாம் CS தற்போது “மகா அவதார் பரசுராம்” படத்தின் மூலம் மீண்டும் இசை ரசிகர்களுடைய கவனத்தின் மையமாகியுள்ளார்.

“மகாவாதார் நரசிம்மா” படத்தின் மிகப்பெரிய கமர்ஷியல் மற்றும் விமர்சன வெற்றிக்குப் பிறகு, அதன் யூனிவர்ஸை விரிவுபடுத்தும் இந்த புதிய படத்தில் அவர் தொடர்ந்து பணியாற்றுவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தின் மிகப்பெரிய சிறப்பு என்னவெனில், சாம் CS வழக்கமான முறையை மாற்றி, கதைக்கு முன்கூட்டியே இசையமைத்து முடித்துள்ளார். பொதுவாக காட்சிகள் தயாரான பிறகே இசை அமைப்பது வழக்கம் என்றாலும், இங்கு அதற்கு மாறாக இசையே முதலில் உருவாக்கப்பட்டு, அதனை அடிப்படையாகக் கொண்டு அனிமேஷன் மற்றும் காட்சிகள் வடிவமைக்கப்படுகின்றன. இந்த “music-first” அணுகுமுறை இந்திய சினிமாவில் அரிதாக காணப்படும் ஒன்றாகும். இதனால், இந்த படத்தின் இசை வெறும் பின்னணி இசையாக இல்லாமல், முழுக் கதையின் ஓட்டத்தையும் உணர்வையும் வழிநடத்தும் மைய சக்தியாக மாறியுள்ளது.

மேலும், இந்த படத்தின் தொழில்நுட்ப தரம் மிகப்பெரிய அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. உலகத் தரத்தில் பணியாற்றிய அனுபவமுள்ள ஹாலிவுட் இசைக் கலைஞர்கள் உட்பட 250-க்கும் மேற்பட்ட சர்வதேச தொழில்நுட்ப நிபுணர்கள் இதில் இணைந்துள்ளனர். இத்தகைய பிரம்மாண்டமான அணியில் சாம் CS தனது இசையை உலகத் தரத்தில் வடிவமைத்து வருகிறார். மிகப்பெரிய ஆர்கெஸ்ட்ரேஷன், ஆழமான சவுண்ட் லேயரிங் மற்றும் விஷுவலுடன் நேரடியாக இணையும் இசை அமைப்பு ஆகியவை இந்த படத்தின் முக்கிய பலங்களாக இருக்கின்றன.

“மகா அவதார் பரசுராம்” படத்தில் முந்தைய பகுதிகளை விட முழுக்க புதிய விஷுவல் மாடல்கள் மற்றும் மேம்பட்ட கிராஃபிக்ஸ் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதற்கேற்ப, சாம் CS ன் இசையும் புதிய பரிமாணத்தில் உருவாகி வருகிறது.

இப்படத்தில் சாம் CS ஒரு சாதாரண இசையமைப்பாளராக அல்லாமல், கதையின் உணர்வுகளை முன்கூட்டியே வடிவமைக்கும் முக்கிய படைப்பாளராக செயல்படுகிறார். இசையை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம், இந்திய சினிமாவில் புதிய முயற்சியாகவும், இசை மற்றும் அனிமேஷன் இணையும் ஒரு வித்தியாசமான அனுபவமாகவும் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சமீபமாக பின்னணி இசைக்கு பெயர் பெற்ற சாம் CS பாடல்களிலும் கலக்கி வருகிறார். அவரது இசையில் சமீபத்தில் வெளியான பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தனித்துவமான இசை மற்றும் உணர்வுகளை நுட்பமாக வெளிப்படுத்தும் மெலடிகள் மூலம் தமிழ் மட்டுமல்லாது இந்தியாவின் பல மொழி ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். பாலிவுட் தொடங்கி பல மொழிகளில் உருவாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் தற்போது அவர் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

அதில் முக்கியமாக புஷ்கர் காயத்ரி இயக்கும் அடுத்த திரைப்படம், ரவிமோகனின் “கராத்தே பாபு”, கார்த்தியின் “சர்தார் 2” படங்களில் பணியாற்றி வருகிறார். மேலும் இயக்குநர் H. வினோத் மற்றும் நடிகர் தனுஷுடன் பணியாற்றவுள்ளார். மேலும் பாலிவுட், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் பல புதிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும் எதிர்பார்ப்பிலிருக்கும் “29” திரைப்படத்தை வரும் மே 8 ஆம் தேதி White Carpet Films தமிழகமெங்கும் வெளியிடுகிறது !!

கார்த்திக் சுப்புராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில், ரத்னகுமார் இயக்கியுள்ள “29” திரைப்படத்தை White Carpet Films K விஜய் பாண்டி தமிழகமெங்கும் வெளியிடுகிறார் !!

White Carpet Films K விஜய் பாண்டி வெளியீட்டில் “29” திரைப்படம் தமிழகமெங்கும் வெளியாகிறது !!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளையும் தரமான தயாரிப்புகளையும் வழங்கி முன்னேறி வரும் தயாரிப்பு நிறுவனமாக White Carpet Films திகழ்கிறது. குறுகிய காலத்திலேயே தனித்துவமான படைப்புகளால் கவனம் ஈர்த்துள்ள இந்த நிறுவனம், தற்போது தனது அடுத்த முக்கிய வெளியீடாக “29” திரைப்படத்தை ரசிகர்களுக்கு கொண்டு வரத் தயாராகியுள்ளது. இத்திரைப்படம் வரும் மே 8 2026 ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியிடப்படவுள்ளது. இந்த வெளியீட்டை இந்நிறுவனம் சார்பில் K விஜய் பாண்டி முன்னின்று மேற்கொள்கிறார்.

White Carpet Films நிறுவனம் இதற்கு முன்பு திரில்லர் வகையைச் சேர்ந்த “தேஜாவு” திரைப்படத்தையும், முழுக்க கமர்ஷியல் அம்சங்களுடன் உருவான “வித்தைக்காரன்” படத்தையும் தயாரித்து கவனம் பெற்றது. அதேசமயம், விநியோகத் துறையிலும் தங்களது திறனை நிரூபித்துள்ள இந்த நிறுவனம், அஜித் நடித்த “துணிவு” மற்றும் “ஆர் யூ ஓகே பேபி” போன்ற படங்களை விநியோகம் செய்துள்ளது. தயாரிப்பிலும், விநியோகத்திலும் சமநிலையை பேணிக் கொண்டு வளர்ந்து வரும் சிறந்த தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக White Carpet Films இன்று திகழ்கிறது.

“29” திரைப்படம் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் மற்றும் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. “மேயாத மான்”, “ஆடை” போன்ற வித்தியாசமான படங்களை இயக்கியதன் மூலம் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிய இயக்குநர் ரத்னகுமார் இப்படத்தை இயக்கியுள்ளார். 2000களின் காதலை மையப்படுத்திய ஒரு உணர்ச்சிப்பூர்வமான படைப்பாக, அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடன் இப்படத்தை உருவாக்கியுள்ளார்.

இந்த படத்தில் நாயகனாக விது நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான “ரெட்ரோ” படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த அவர், இந்த படத்தில் முழுமையான நாயகனாக புதிய முகமாக ரசிகர்களை கவர இருக்கிறார். கதாநாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். மேலும் மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், பிரேம் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 2000ம் ஆண்டுகளின் காதல் உணர்வுகளை, அந்த காலத்து நினைவுகளையும் மனநிலையையும் அழகாக பிரதிபலிக்கும் விதத்தில் இப்படம் உருவாகியுள்ளது.

மொத்தத்தில், புதிய முயற்சிகளுக்கும் தரமான கதை சொல்லலுக்கும் முக்கியத்துவம் அளித்து வரும் White Carpet Films நிறுவனம், “29” திரைப்படத்தின் மூலம் தனது வளர்ச்சிப் பாதையில் இன்னொரு முக்கியமான படியை எடுத்து வைக்கிறது. காதல், நினைவுகள் மற்றும் உணர்ச்சிகளை இணைக்கும் இந்த படம், மே 8 அன்று திரையரங்குகளில் ரசிகர்களுக்கு ஒரு இனிய அனுபவமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பூரி ஜெகன்நாத் 26 ஆண்டுகள் திரைப்பட பயணம் நிறைவு –“ஸ்லம் டாக்” ஒரு ஸ்பெஷல் படம் விரைவில் திரையில் – விஜய் சேதுபதி பாராட்டு! !!

26 ஆண்டுகள் திரைப்பயணத்தை நிறைவு செய்த பூரி ஜெகன்நாத் – மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பாராட்டு !!

முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்திருக்கும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான்-இந்தியா ஆக்சன் திரில்லர் “ஸ்லம் டாக்” படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. தற்போது அனைத்து மொழிகளிலும் இறுதிக்கட்ட பணிகள் (post-production) வேகமாக நடைபெற்று வருகின்றன. “33 டெம்பிள் ரோடு” என்ற திகில் நிறைந்த டேக் லைனுடன் உருவாகும் இந்தப் படம், அதன் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலமே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தை Puri Connects நிறுவனத்தின் சார்பில் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கௌர் இணைந்து தயாரிக்க, JB Mohan Pictures நிறுவனத்தின் சார்பில் JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா இணைந்து தயாரிக்கிறார்.

பூரி ஜெகன்நாத் தனது இயக்குநர் பயணத்தை பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடித்த “பத்ரி” படத்தின் மூலம் தொடங்கினார். அந்த படத்தின் வெளியீட்டிற்கு பிறகு இப்போது 26 ஆண்டுகளை அவர் நிறைவு செய்துள்ளார்.

இந்த சிறப்பு தருணத்தில், விஜய் சேதுபதி சமூக வலைதளத்தில் தனது இயக்குநருக்கு மனமார்ந்த பாராட்டுகளை பகிர்ந்துள்ளார்:

“இந்த மனிதரின் பயணம் எவ்வளவு அற்புதமானது 26 ஆண்டுகள் என்பது ஒரு மைல்கல் மட்டுமல்ல; தைரியம், நம்பிக்கை, மற்றும் அச்சமற்ற குரல் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு மரபு.

அன்புள்ள பூரி சார், #ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு படத்தில் உங்களுடன் வேலை செய்தது மிகப் பெரிய மகிழ்ச்சி. நடிகர்களாக நாங்கள் எப்போதும் எங்களை நம்பி, எங்களது கம்ஃபர்ட் ஜோனை தாண்டி தள்ளும் இயக்குநர்களை தேடுகிறோம்; நீங்கள் அதை மிகவும் எளிதாக செய்கிறீர்கள்.

இந்த படம் நிச்சயம் எங்களுக்கெல்லாம் ஒரு மிகவும் சிறப்பான படமாக நினைவில் இருக்கும் என்று நான் நம்புகிறேன். உங்கள் பயணம் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகள். என்றும் அன்புடன் ” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தில் சம்யுக்தா விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க, தபு மற்றும் துனியா விஜய் குமார் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர். மேலும் பிரம்ஹாஜீ மற்றும் VTV கணேஷ் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர்.

அர்ஜுன் ரெட்டி, அனிமல் போன்ற படங்களில் துடிப்பான இசையமைப்பை வழங்கிய தேசிய விருது பெற்ற ஹர்ஷவர்தன் ராமேஷ்வர், “ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு” படத்திற்கு இசையமைக்கிறார்.

“ஸ்லம் டாக்” படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாக தயாராகி வருகிறது. தமிழ்நாடு தேர்தல் முடிந்த பின் படத்தின் புரமோஷன் பணிகளை துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

நடிப்பு: விஜய் சேதுபதி, சம்யுக்தா, தபு, துனியா விஜய் குமார்

தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்கம் : பூரி ஜெகன்நாத்
தயாரிப்பாளர்கள்: பூரி ஜெகன்நாத்,சார்மி கௌர் , JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா
வழங்குபவர் : சார்மி கௌர்
தயாரிப்பு நிறுவனங்கள்: Puri Connects
CEO : விஷு ரெட்டி
இசை: ஹர்ஷவர்தன் ராமேஷ்வர்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெடிங் : ஹேஷ்டேக் மீடியா