Breaking
May 12, 2025

Cinema

Sasikumar-Lijo Mol Jose starrer Thriller flick set in 90s.

Pandian Parasuram of Vijayaganapathy’s Pictures is producing a thriller drama, featuring Sasikumar and Lijo Mol Jose as the lead characters, directed by Sathyasiva. The shooting of this film is progressing at a brisk pace. The film, an edge-of-seat thriller is based on a real-life event that happened in the 90s. The makers are planning to announce the film’s title soon.

The film’s screenplay laced with twists and turns is based on real-life incidents that happened in the 90s.

Since the story is set in the period of 90s, the crew is making scrutinizing efforts to deliver a realistic output. A grand set of works has been erected across the East Coast Road in Chennai to offer an authentic 90s feel to the audiences.

Actor Sasikumar playing the protagonist will be seen as a never-seen-before character. Lijo Mol Jose, who captured our interest with a stupendous performance in Jai Bhim is performing the female lead character. Bollywood’s most promising actor Sudev Nair will be seen as the antagonist in this film, which has an ensemble star cast of Paruthiveeran Saravanan, KGF Malavika, Bose Venkat, Mu. Ramasamy, Ramesh Khanna & many others.

Pandian Parasuram, who had worked as Executive Producer in many grand movies is embarking on his journey as producer in this movie with his banner Vijayaganapathy’s Pictures.

This yet-to-be-titled movie is produced in grandeur and is currently shot in and around the exotic locales of Chennai.

The official announcement on the film’s teaser, trailer, and audio launch will be out soon.

Technical Crew

Banner: Vijayaganapathy’s Pictures
Producer: Pandian Parasuram
Direction: Satyasiva
Music: Ghibran
DOP: NS Udhayakumar
Editor: Srikanth NB

இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் திரில்லர் டிராமா !!

சசிகுமார் & லிஜோ மோல் ஜோஷ் நடிப்பில், 90களில் நடக்கும் திரில்லர் டிராமா பரபரப்பான படப்பிடிப்பில் !!

Vijayaganapathy’s Pictures சார்பில் பாண்டியன் பரசுராம் தயாரிப்பில், சசிகுமார் மற்றும் லிஜோ மோல் ஜோஷ் நடிப்பில், கழுகு புகழ் சத்யசிவா இயக்கத்தில் உருவாகும் புதிய திரில்லர் டிராமா திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 90களில் நடந்த உண்மைச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வரும் இப்படத்தின் தலைப்பினை விரைவில் படக்குழு அறிவிக்கவுள்ளது.

கழுகு படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா 90களில் உண்மையாக நடைபெற்ற ஒரு சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார். விறுவிறுப்பான திரில்லர் டிரமாவாக இப்படம் உருவாகிறது.

90 கால கடத்தில் நடக்கும் கதை என்பதால் அந்த கால கட்டத்தைத் திரையில் கச்சிதமாகக் கொண்டுவரப் படக்குழு கடுமையாக உழைத்து வருகிறது. 90 களின் காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கிழக்கு கடற்கரைச் சாலையில் மிகப்பெரும் பொருட்செலவில் ஒரு பிரம்மாண்டமான செட் அமைத்துப் படத்தின் காட்சிகளைப் படக்குழு படமாக்கி வருகிறது.

இயக்குநர் நடிகர் சசிக்குமார் இப்படத்தில் நாயகனாக, மாறுபட்ட வேடத்தில் இப்படத்தில் நடிக்கிறார். ஜெய்பீம் படத்தில் கவனம் ஈர்த்த லிஜோமோல் ஜோஸ் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். பாலிவுட் படங்களில் மிரட்டும் சுதேவ் நாயர் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் பருத்திவீரன் சரவணன், கேஜிஎஃப் மாளவிகா, போஸ்வெங்கட், மு ராமசாமி, ரமேஷ் கண்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

தமிழில் பல பிரமாண்ட படங்களில் நிர்வாகத் தயாரிப்பாளராக பணியாற்றிய பாண்டியன் பரசுராம், முதல் முறையாக Vijayaganapathy’s Pictures சார்பில் பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இப்படத்தினைத் தயாரிக்கிறார். இன்னும் தலைப்பிடப்படாத இப்படப்பின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் தலைப்பு, டீசர் , டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

தொழில்நுட்ப குழு விபரம்

தயாரிப்பு நிறுவனம் – Vijayaganapathy’s Pictures
தயாரிப்பாளர் – பாண்டியன் பரசுராம்
இயக்கம் – சத்ய சிவா
இசை – ஜிப்ரான்
ஒளிப்பதிவு – NS உதயகுமார்
எடிட்டர் – ஶ்ரீகாந்த் NB

புது வேதம் திரைவிமர்சனம்

காக்கா முட்டை விக்னேஷ் ரமேஷ் இமான் அண்ணாச்சி மற்றும் பலர் நடிப்பில் ராசா விக்ரம் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் புது வேதம்.

கதைச்சுருக்கம்,
தந்தையை இழந்த விக்னேஷ் மற்றும் அவரது தாய் பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்து வாழ்க்கையை தருகிறார்கள் அந்த நேரத்தில் விக்னேஷின் தாயை பாலியல் வன்புணர்வு செய்ய சிலர் முயற்சிக்கும் பொழுது ஒருவர் அவர்களை காப்பாற்றுகிறார் , மேலும் அவர் விக்னேஷின் தாயாரிடம் உன் மகனை நீ இங்கேயே விட்டு விட்டு வந்துவிடு நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூற அந்த தாயும் பெற்ற மகன் என்று பாராமல் அந்த பேருந்து நிலையத்திலேயே அனாதையாக விட்டுவிட்டு அந்த நபருடன் கிளம்பிச் சென்று. அதன் பின்பு சாப்பாட்டிற்கு வழியில்லாமல் அலையும் பொழுது ரமேஷ் நட்பு கிடைக்க, இரண்டு கால்களையும் இழந்த அவன் குப்பை மேட்டில் குப்பைகளை பொறுக்கி வாழ்ந்து கொண்டிருக்கிறான் அவனுடன் சேர்ந்து விக்னேஷும் அங்கு மேலும் பலரும் அந்த குப்பைகளை பொறுக்கி வளர்கிறார்கள். இவர்களுக்கு இடையே ஏற்படும் பந்தங்களும் பாசங்களும் அவர்கள் வாழ்க்கை எவ்வாறு பயணப்படுகிறது என்பதையும் இயக்குனர் ராசா விக்ரம் குப்பை மேட்டு கதையாக இருந்தாலும் ஒரு நேர்மையாக எடுத்திருக்கிறார் இயக்குனர்.


குப்பைகளை எடுத்துக் கொண்டு வருபவர்களும் அதை வாங்கி விற்று பெரும் பணக்காரராக மாறும் இமான் அண்ணாச்சி குப்பைகளில் கிடக்கும் காலாவதியான மருந்துகளை மெடிக்கல் ஷாப்பில் ரீலேபிள் செய்து விற்று கோட்டீஸ்வரராக பல கோடிகளில் வியாபாரம் செய்கிறார்.
அந்த குப்பை மேட்டில் வரும் ஒரு பாட்டி மற்றும் வயதுக்கு வந்த ஒரு பேத்தி அந்த பேதின் மேல் விக்னேஷ் ஒருதலையாக காதல் கொண்டு வருகிறார் ஆனால் அவள் வேறு ஒரு லாரி டிரைவரை நம்பி ஏமாந்து வயிற்றில் பிள்ளையை சுமந்து கொண்டு வருகிறார் அவருக்கு அரணாக வருகிறார் விக்னேஷ் அந்த நிலையிலும் அவர் மேல் கொள்ளும் காதல் விக்னேஷ் தன் மனிதநேயத்தை வெளிப்படுத்தி.
ஊரிலிருந்து வேலை தேடி வந்து சிசர் மனோகர் தன் பணத்தை இழந்து அவரும் இவருடன் சேர்ந்து குப்பை பொறுக்கும் கதாபாத்திரமாக வாழ்ந்து இருக்கிறார் அவருடைய மகளின் கல்யாணத்தின் பொழுது பணத்திற்காக தடுமாறும் பொழுது ஒரு தந்தையாக கண்முன் நிற்கிறார்.
மேலும் வரும் பல கதாபாத்திரம் அவர்களுக்கு அளிக்கப்பட்ட கதை பத்திரங்களை சிறப்பாக அளித்திருக்கிறார்கள்.
படத்தின் கிளைமாக்ஸ் நிச்சயம் யாரும் எதிர்பாராத முடிவு அதை இயக்குனர் அழகாக அளித்திருக்கிறார்.
சென்னை போன்ற பெரு நகரங்களில் பெற்றவர்களை இழந்து பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்டு தவறான வழிகளில் பிறந்து அனாதைகளாக எந்த வாழ்வாதாரமும் இல்லாமல் சுற்றி தெரியும் பலர் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு நம்மால் கொட்டப்படும் குப்பை மேடுகள் நமக்கு அது குப்பைகளாக இருக்கலாம் ஆனால் அது அவர்களின் வாழ்வாதாரம் என்பதை அங்கேயே, அந்த சாக்கடை அந்த துர்நாற்றம் ஆகியவற்றை சகித்துக் கொண்டு அங்கேயே வாழ்ந்து இந்த படத்தை எடுத்த இயக்குனருக்கும் நடிகர்களுக்கும் நிச்சயம் கைத்தட்டல் தந்தே ஆக வேண்டும் .

அந்த குப்பை மேட்டின் வாழ்க்கையை எதார்த்தமாக படம் பிடித்த கேவி ராஜன், ரவி தேவேந்திரன் இசை படத்திற்கு பலமாக.


புது வேதம் குப்பை மேட்டில் வாழும் ஒரு நேர்மை.

பாலகிருஷ்ணா நடிக்கும் ‘பகவந்த் கேசரி’

பாலகிருஷ்ணா நடிக்கும் ‘பகவந்த் கேசரி’ திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள நாக்ஸ் ஸ்டுடியோஸ்

சென்னையை சேர்ந்த தயாரிப்பு நிறுவனமான நாக்ஸ் ஸ்டுடியோஸ் திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளது.

நாக்ஸ் ஸ்டுடியோஸ் அதன் முதல் வெளியீடாக பாலகிருஷ்ணா, காஜல் அகர்வால், அர்ஜுன் ராம்பால், மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு திரைப்படமான ‘பகவந்த் கேசரி’யின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது. இத்திரைப்படம் வரும் அக்டோபர் 19 அன்று வெளியாகிறது.

தமிழில் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கும் அதிரடி ஆக்ஷன் திரைப்படம் குறித்த அறிவிப்பையும் நாக்ஸ் ஸ்டுடியோ விரைவில் வெளியிட உள்ளது.

தரமான பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட சிறந்த திரைப்படங்களை தமிழ் ரசிகர்களுக்கு வழங்குவதே நாக்ஸ் ஸ்டுடியோவின் நோக்கமாகும். நாக்ஸ் ஸ்டுடியோவின் இதர திரைப்படங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்.

பிரபல தெலுங்கு இயக்குநர் அனில் ராவிப்பூடி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பகவந்த் கேசரி’ திரைப்படத்தின் அதிரடி டிரைலர் ரசிகர்களிடையே பலத்தை எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ள நிலையில் இப்படத்தை அக்டோபர் 19 அன்று தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியிட நாக்ஸ் ஸ்டுடியோ தயாராகி வருகிறது.

Mauritius rolls out red carpet to Tamil filmmakers with attractive subsidies, scintillating free locations and more

Indian film producer Kalol Das hosted a Producers Meet with The Economic Development Board of Mauritius (EDBM). At the interactive session organised in Chennai, various advantages of Mauritius as a destination for film shooting were highlighted.

The event attended by Honorary Consul of Mauritius Malaiappan Nagalingam saw the participation of many leading producers and other stakeholders of Tamil film industry.

During the event, it was explained to the producers that Mauritius is not just a picturesque place with many wonderful locations for film shoot, but the country also offers unparalleled benefits to filmmakers.

Welcoming Tamil film producers and directors to shoot their projects in Mauritius, EDBM officials said that Mauritius government will give a subsidy of 30-40 percent of the total budget of the film shot there.

The highlight is ‘Above The Line’ subsidy known as ATL, which covers the cast and crew including Actors and heads of departments like Art Director, Director, Director of Photography, and Production Manager.

Not just that, Mauritius government will also offer free locations to the film crews at its own properties. Line production services will be provided by Kalol Das.

The subsidy process is very simple and it will be processed within 60 days after submitting the accounts. For project approval, it will take around 45 days.

Tamil cinema personalities who attended the event were impressed by the facilities and financial assistance provided by Mauritius and expressed interest in shooting their films there.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் மொரிஷியஸ்

கவர்ச்சிகரமான மானியங்கள், கண்கவர் இலவச படப்பிடிப்பு தளங்கள் மற்றும் பல வசதிகளுடன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் மொரிஷியஸ்

மொரீஷியஸ் நாட்டில் படப்பிடிப்புகளை நடத்துவதில் உள்ள எண்ணற்ற நன்மைகள் குறித்து விளக்குவதற்காக மொரீஷியஸ் பொருளாதார மேம்பாட்டு வாரியம் (EDBM) மற்றும்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் இடையேயான கலந்துரையாடல் ஒன்றை இந்திய திரைப்பட தயாரிப்பாளர் கலோல் தாஸ் சென்னையில் நடத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் மொரீஷியஸ் நாட்டின் கெளரவ தூதர் மலையப்பன் நாகலிங்கம் மற்றும் தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வின் போது, படப்பிடிப்புக்கேற்ற அற்புதமான பல இடங்களைக் கொண்ட அழகிய நாடாக மட்டுமல்லாமல், திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு இணையற்ற நன்மைகளையும்
மொரீஷியஸ் வழங்குகிறது என்று விளக்கப்பட்டது.

மொரீஷியஸில் படப்பிடிப்பை நடத்துமாறு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களை வரவேற்ற EDBM அதிகாரிகள், அங்கு படமாக்கப்படும் திரைப்படங்களின் மொத்த பட்ஜெட்டில் 30-40 சதவிகிதத்தை மானியமாக மொரீஷியஸ் அரசு வழங்கும் என்று தெரிவித்தனர்.

ஏ டி எல் (ATL) எனப்படும் ‘அபோவ் தி லைன்’ மானியத் திட்டத்தின் கீழ், நடிகர்கள், இயக்குநர், ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர், தயாரிப்பு மேலாளர் போன்ற முக்கிய குழுவினருக்கும் சிறந்த பலன்கள் கிடைக்கும்.

அதுமட்டுமின்றி, மொரீஷியஸ் அரசுக்கு சொந்தமான பல்வேறு கண்கவர் இடங்களில் இலவசமாக படப்பிடிப்புகளை நடத்திக் கொள்ளலாம். லைன் புரொடக்ஷன் சேவையை கலோல் தாஸ் கவனிப்பார்.

மொரீஷியஸ் அரசின் திரைப்பட மானியச் செயல்முறை மிகவும் எளிமையானது என்று தெரிவித்த அதிகாரிகள், கணக்குகளைச் சமர்ப்பித்த 60 நாட்களுக்குள் மானியம் வழங்கப்படும் என்றும் திட்ட ஒப்புதலுக்கு சுமார் 45 நாட்கள் ஆகும் என்றும் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ் திரைப்பட பிரமுகர்கள், மொரீஷியஸ் அரசு வழங்கும் வசதிகள் மற்றும் நிதியுதவிகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்ததோடு, தங்களது படப்பிடிப்புகளை அந்நாட்டில் நடத்த விருப்பம் தெரிவித்தனர்.

‘Aatish single-mindedly wants to destroy Tiger, his family’ : Emraan Hashmi on how menacing his role is in Tiger 3

Aditya Chopra had kept Emraan Hashmi’s presence in Tiger 3 as a big secret and after seeing the blockbuster trailer of the film, we surely know why! Emraan is the biggest surprise of YRF Spy Universe’s latest offering Tiger 3, a cold-blooded nemesis of Salman Khan aka super agent Tiger aka Avinash Singh Rathore! The merciless mercenary is a wily character, whom Emraan describes as ‘cerebral, his mind is his greatest weapon and he also wields immense power over authorities across countries.’

Emraan also reveals the name of his character in Tiger 3! He says, “I had an amazing time creating Aatish – a man who is fuelled by rage and will go to any length to finish Tiger. I play a very distinctively different villain that is rare in Hindi cinema. He is cerebral, his mind is his greatest weapon and he also wields immense power over authorities across countries to bring his devious plans into motion.”

Emraan adds, “He single-mindedly wants to destroy Tiger, his family and by doing that, he wants to take out the biggest super agent of India. He knows Tiger will always be the last man standing for India and he wants him removed at any cost.”

The actors’ villainous turn is being lauded unanimously since yesterday, when the trailer of Tiger 3 dropped online. Emraan says he relished being the anti-hero of this YRF Spy Universe offering.

He says, “The anti-heroes of the YRF Spy Universe have been the trump cards. They hit you hard by surprise and Aditya Chopra was clear that he wanted my character to also catch people by surprise. So, an elaborate plan was made to keep me under wraps.”

Emraan adds, “I was dying to tell people about Tiger 3 but couldn’t, knowing very well that the pay off would be immense when my character is unveiled to the people. The decision was clear to bring the anti-hero to spotlight with the trailer of Tiger 3 and I’m happy that people are loving my menacing turn!”

Emraan has always felt that villains make for really memorable roles that people fondly remember for a long, long time!

He says, “Anti-heroes are always fun to play because you get to essay someone who doesn’t care a damn about rules. Instead, they create their own rules. So, I jumped at the opportunity because I knew that I will have the freedom to create a villain that people will hopefully remember for a long, long time.”

He adds, “I’m thankful to Maneesh Sharma for being a guide to bring Aatish to life. It was his vision for the character that I was sold on. He helped me craft a character that I’m immensely proud of.”

Tiger 3 starring Salman Khan & Katrina Kaif is set to release this Diwali, November 12th, Sunday. The adrenaline-pumping action spectacle has been directed by Maneesh Sharma.

டைகர்-3 படத்தில் தனது அச்சுறுத்தும் கதாபாத்திரம் குறித்து விவரிக்கும் இம்ரான் ஹாஸ்மி

”ஆதிஷ் ஒரே மனதாக டைகரையும் அவருடைய குடும்பத்தையும் அழிக்க விரும்புகிறான்” ; டைகர்-3 படத்தில் தனது அச்சுறுத்தும் கதாபாத்திரம் குறித்து விவரிக்கும் இம்ரான் ஹாஸ்மி

‘டைகர்-3’யில் இம்ரான் ஹாஸ்மி நடிப்பதை ஒரு பெரிய ரகசியமாகவே வைத்திருந்தார் ஆதித்யா சோப்ரா. படத்தின் பிளாக்பஸ்டர் டிரைலரை பார்த்த பின்னர் அது ஏன் என்பதை நாம் தெரிந்து கொள்வோம். யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் வரிசையில் லேட்டஸ்ட்டாக உருவாகியிருக்கும் ‘டைகர் 3’யில் ஒரு சூப்பர் ஏஜென்ட் ஆன டைகர் என்கிற அவினாஷ் சிங் ரத்தோரின் கொடூரமான வில்லனாக, இம்ரான் ஒரு மிகப்பெரிய சர்ப்ரைஸ் தான். பெருமூளை என இம்ரானை விவரிக்கும் விதமாக இரக்கமற்ற கூலித்தொழிலாளியாக தந்திரமான கதாபாத்திரம் அவருடையது.. அவனது மனம் தான் அவனது மிகப்பெரிய ஆயுதம். மேலும் அவன் நாட்டை சுற்றியுள்ள அதிகாரிகள் மீது மகத்தான சக்தியை பயன்படுத்துகிறான்.

மேலும் இம்ரான் டைகர்-3யில் தனது கதாபாத்திர பெயர் குறித்தும் தெரிவிக்கிறார். அவர் கூறும்போது, “ஆத்திரத்தால் தூண்டப்பட்ட மற்றும் டைகரை அழிப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய ஒரு மனிதனான ஆதிஷை உருவாக்குவதார்காக மிகச்சிறந்த நேரத்தை நான் பெற்றிருந்தேன். ஹிந்தி சினிமாவிலேயே அரிதான ஒரு தனித்துவமான வித்தியாசமான வில்லனாக நான் நடித்திருக்கிறேன். அவன் தான் ‘பெரு மூளை’, அவனது மனம் தான் மிகப்பெரிய ஆயுதம் மற்றும் அவனது வஞ்சகமான திட்டங்களை செயல்படுத்துவதற்காக நாட்டை சுற்றியுள்ள அதிகாரிகள் மீது மகத்தான சக்தியை பயன்படுத்துகிறான்.

மேலும் இம்ரான் கூறும்போது, “அவன் ஒரே மனதாக டைகரையும் அவரது குடும்பத்தையும் அழிக்க விரும்புகிறான். அதை செய்வதன் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஏஜென்ட்டை இல்லாமல் செய்ய விரும்புகிறான். இந்தியாவுக்காக கடைசி வரை நிற்கும் மனிதனாக டைகர் இருப்பார் என்பது அவனுக்கு தெரியும் என்பதால் எந்த விலை கொடுத்தேனும் அவரை இல்லாமல் செய்வதற்கு அவன் விரும்புகிறான்” என்கிறார்.

‘டைகர் 3’ டிரைலர் ஆன்லைனில் வெளியானதை தொடர்ந்து நேற்று முதல் இம்ரான் ஹாஷ்மி வில்லனாக மாறியது ஒருமனதாக பாராட்டப்பட்டு வருகிறது. யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸில் வில்லனாக இருப்பதற்காக மகிழ்ச்சியடைவதாக இம்ரான் கூறுகிறார்..

மேலும் இம்ரான் கூறும்போது, “யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸின் வில்லன்கள் துருப்புச்சீட்டுக்களாக இருந்திருக்கின்றனர். அவர்கள் உங்களை ஆச்சர்யத்தால் அசத்தியுள்ளனர். மேலும் என்னுடைய கதாபாத்திரம் ரசிகர்களை ஆச்சர்யத்தால் பிடித்து இழுக்க வேண்டும் என விரும்பிய ஆதித்ய சோப்ரா அதில் தெளிவாக இருந்தார். அதனால் தான் படம் முடியும் வரை என்னை மறைத்து வைக்கும் விதமான விரிவான திட்டமும் உருவாக்கப்பட்டது” என்கிறார்

மேலும், “டைகர் 3 பற்றி மக்களுக்கு சொல்வதற்காக நான் துடித்துக்கொண்டிருந்தேன்.. அப்படி என் கதாபாத்திரம் குறித்து மக்களிடம் வெளிப்படுத்தினால் அது உடனடியாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மிக நன்றாகவே தெரியும் என்பதால் அப்படி செய்ய முடியவில்லை.. டைகர் 3 டிரைலர் வெளியாகும்போதுதான் வில்லனை வெளிச்சத்திற்கு கொண்டுவரவேண்டும் என்கிற முடிவில் தெளிவாக இருந்தோம். அதற்கேற்ப ரசிகர்கள் தற்போது எனது அச்சுறுத்தும் இந்த திருப்பத்தை நேசிக்கின்றார்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி” என்கிறார் இம்ரான்.

வில்லன்கள் எப்போதுமே மறக்க முடியாத கதாபாத்திரங்களை உருவாக்க வேண்டும்.. அவை மக்களால் நீண்ட காலத்திற்கு நினைவில் வைத்திருக்கப்பட வேண்டும் என்பதை இம்ரான் எப்போதும் உணர்ந்தே இருக்கிறார்.

அவர் கூறும்போது, “எந்த ஒரு விதிமுறைகளை பற்றியும் கவலைப்படாத ஒருவனை பற்றி சொல்கிறோம் என்பதால் எப்போதுமே வில்லன்களாக நடிப்பதற்கு ஜாலியாகத்தான் இருக்கும். பதிலாக அவர்கள் தங்களுக்கென தனி விதிகளை உருவாக்குவார்கள். அதனால் இந்த வாய்ப்பு வந்ததும் அந்தப்பக்கம் தாவிவிட்டேன். ஏனென்றால் மக்கள் நீண்டகாலத்திற்கு ஞாபகத்தில் வைத்திருக்க கூடிய ஒரு வில்லனை உருவாக்குவதற்கான சுதந்திரத்தை நான் பெற்றிருக்கிறேன் என்பது எனக்கு தெரியும்” என்கிறார்.

மேலும், “ஒரு வழிகாட்டியாக இருந்து இந்த ஆதிஷ் கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுக்க உதவியதற்காக இயக்குநர் மனீஷ் சர்மாவுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கு கொடுக்கப்பட்ட இந்த கதாபாத்திரம் அவரது தொலைநோக்கு பார்வையில் உருவானது தான். நான் பெருமிதப்படும் விதமாக ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கியதில் எனக்கு அவர் உதவி புரிந்திருக்கிறார்” என்கிறார் இம்ரான்.

சல்மான்கான், கத்ரீனா கைப், நடித்துள்ள ‘டைகர் 3’ வரும் நவ-12, ஞாயிறு அன்று தீபாவளி வெளியீடாக ரிலீஸாக இருக்கிறது. அதிரடியான ஆக்சன் காட்சிகளை கொண்ட இப்படத்தை கண்கவரும் விதமாக இயக்கியுள்ளார் மனீஷ் சர்மா.

‘டைகர் 3’ நவம்பர்-12 ஞாயிறன்று வெளியாகிறது

மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ‘டைகர் 3’ டிரைலரை ஆதித்யா சோப்ரா வெளியிட்டதை தொடர்ந்து அது இணையத்தை புயலாக தாக்கி வருகிறது. மேலும் அந்த டிரைலரிலேயே இருக்கையின் நுனியில் அமர வைக்கும் ஆக்சன் திரில்லரான இந்த ‘டைகர் 3’ நவம்பர் 12 ஞாயிறு அன்று வெளியாகும் என்கிற அறிவிப்பையும் யஷ்ராஜ் பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது. டிரைலரை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

தீபாவளிக்கு இந்த படத்தை திரையிடும் விதமாக யஷ்ராஜ் பிலிம்ஸ் தனித்துவமான மற்றும் யுக்தியான சில திட்டங்களை வைத்திருக்கிறது. 2023 என்பது ‘ஆதிக் மாஸ்’ வருடம் என்பதால் பண்டிகை தேதிகள் குறித்த குழப்பங்களுக்கு அழைத்து செல்லக்கூடியது. நவம்பர் 13 புதிய சந்திரன்/ அம்மாவாசை நாள். நவம்பர் 14 கோவர்தன் பூஜாவுடன் சேர்த்து குஜராத்தியின் புது வருடமாகவும் அமைகிறது. நவம்பர் 15ல் பாய் தூஜ் என இவையெல்லாம் சேர்ந்து இந்த பண்டிகை கால விடுமுறை நாட்களில் படத்திற்கான ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஓட்டத்தை கொடுப்பதுடன் அந்த வார வசூலிலும் அதன் தாக்கம் வெளிப்படும்.

மனிஷ் சர்மா இயக்கியுள்ள ‘டைகர் 3’ திரைப்படத்தில் சல்மான்கான் கத்ரீனா கைஃப் மற்றும் இம்ரான் ஹாஸ்மி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். உலகம் முழுவதிலும் ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது.

Yash Raj Films’ Tiger 3 is an action spectacle, set to release on November 12th, Sunday!

Aditya Chopra has dropped the much-awaited trailer of Tiger 3 and it has taken the internet by storm! YRF also revealed the release date of this edge of the seat action spectacle to be Sunday, November 12th in the trailer. Watch the trailer here: (LINK)

Complex release window this Diwali has prompted YRF to devise a strategic and unique release plan. 2023 is the year of ‘Adhik Maas’ which has led to complications regarding festival dates. This year, Monday, November 13 is New Moon/Amavasya and the Govardhan Pooja/Gujarati New Year falls on November 14. Bhai Dooj is on November 15, giving the film an extended run in this crucial holiday period which will aid in collections through the week.

Directed by Maneesh Sharma, Tiger 3 stars Salman Khan, Katrina Kaif & Emraan Hashmi in lead roles. Film is set to release worldwide in Hindi, Tamil & Telugu.