Breaking
February 26, 2025

Cinema

தேவராக நடிப்பது எனக்கு கிடைத்த பாக்கியம்! – ‘தேசிய தலைவன்’ நாயகன் பஷீர் நெகிழ்ச்சி

முத்துராமலிங்கத் தேவைன் வாழ்க்கை திரைப்படமாக உருவாகும் ‘தேசிய தலைவர்’ திரைப்படத்தில் முத்துராமலிங்க தேவர் கதாபாத்திரத்தில் ஜே.எம்.பஷீர் நடிக்கிறார். மேலும், இயக்குநர் பாரதிராஜா, ராதாரவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

எம்.எம்.பாபு, எஸ்.எஸ்.ஆர் பிக்சர்ஸ் சத்யா, ஜி.ஜெயந்தினி ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை ஆர்.அரவிந்த ராஜ் இயக்க, இளையராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் தணிக்கை பணி விரைவில் நடைபெற இருக்கிறது. அப்பணி முடிந்த பிறகு படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவிக்க உள்ளது.

இந்த நிலையில், அக்டோபர் 12 ஆம் தேதி ‘தேசிய தலைவர்’ நாயகன் ஜே.எம்.பஷீர் பிறந்தநாள் கொண்டாடினார். எளிமையாக கொண்டாடப்பட்ட இந்த பிறந்தநாளை ‘தேசிய தலைவர்’ படக்குழுவினர் பிரம்மாண்டமான விழாவாக நடத்தி பஷீருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

பிறந்தநாள் விழாவில் பேசிய நடிகர் ஜே.எம்.பஷீர், “தேவராக நடிப்பது இறைவன் கொடுத்த வரமாகவே நான் கருதுகிறேன். நான் ஒரு இஸ்லாமியனாக இருந்தாலும் தேவர் கதாபாத்திரத்தில் நடிப்பது என் பாக்கியம். இதற்கு காரணம் என் நண்பன் செளத்ரி தான், அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்கள் மூன்று பேர் சேர்ந்து தான் இந்த படத்தை தயாரித்தார்கள். சில தடைகள் வந்தது, ஆனால் அந்த தடைகளை தகர்த்து தற்போது படத்தை இந்த அளவுக்கு கொண்டு வந்தது எஸ்.எஸ்.ஆர் பிக்சர்ஸ் சத்யா தான், அவருக்கும் என் நன்றி. இந்த நிகழ்ச்சிக்கு விஜயகுமார் அண்ணன் வந்தது சந்தோஷம் அளிக்கிறது. பூபதி ராஜா அண்ணனை நான் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன், இன்று அவரும் இங்கு வந்திருப்பது கூடுதல் மகிழ்ச்சி. இது அனைத்துக்கும் காரணம் நண்பன் செளத்ரி தான்.

என் பிறந்தநாளை எளிமையாக நடத்த முடிவு செய்தேன், ஆனால் இவர்கள் சிறப்பான விழாவாக மாற்றி விட்டார்கள். தேசிய தலைவர் படத்திற்கு சில தடைகள் வரலாம், ஆனால் தேவரின் ஆசி அந்த தடைகளை போக்கி எங்களை வெற்றி நடை போட செய்கிறது. நிச்சயம் படம் மிகப்பெரிய வெற்றி பெறும், விரைவில் வெளியீட்டு தேதியை அறிவிப்போம்.” என்றார்.

தயாரிப்பாளர் செளத்ரி பேசுகையில், “பஷீருடன் நான் பத்து வருடங்களாக பயணிக்கிறேன், அவரை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்று தான் விரும்பினேன். அப்போது அவர் முகத்தில் ஏதோ ஒரு தலைவர் தெரிவதை நான் உணர்ந்தேன், அதை உற்று கவனித்த போது தான் அது தேவர் ஐயாவின் அடையாளமாக தெரிந்தது. உடனே தேவர் ஐயாவை பற்றி படம் எடுக்க நாங்கள் முடிவு செய்தோம். தேவராக நடிக்க நடிக்க தெரிந்தவர்களால் முடியாது, தைரியமானவர்களால் மட்டும் தான் முடியும், துணிச்சல் மிக்கவர்களால் மட்டும் தான் முடியும். அந்த துணிச்சலும், தைரியமும் பஷீரிடம் இருக்கிறது, அதனால் தான் அவரால் தேவராக நடிக்க முடிந்தது.

தேவர் பற்றி சரியாக அறியாதவர்கள் அவரை சாதி தலைவராக சித்தரித்து விட்டார்கள், ஆனால் அவர் பல புரட்சிகரமான விசயங்களை செய்திருக்கிறார், அவர் ஒரு தேசிய தலைவர், அதை சொல்லும் ஒரு திரைப்படமாக ‘தேசிய தலைவர்’ படம் இருக்கும். இந்த படத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிச்சயம் வரிச்சலுகை வழங்குவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.” என்றார்.

Natural Star Nani, Mrunal Thakur, Shouryuv, Vyra Entertainments ‘Hi Nanna’

Witness Tide Of Emotions- Natural Star Nani, Mrunal Thakur, Shouryuv, Vyra Entertainments Hi Nanna Teaser Unveiled, Theatrical Release On December 7th

Sunday means family time and this Sunday is going to be more special for them with Natural Star Nani offering a small treat by releasing a teaser of his Pan India film Hi Nanna where we witness a tide of emotions.

Starts as a father-daughter story with a beautiful journey between Nani and Baby Kiara Khanna, it then follows the love journey of Nani and Mrunal Thakur. Is she, his daughter? Did Nani meet Mrunal before? Why did Mrunal propose to Nani just before her wedding with someone else? You need to watch the movie to know the answers to all these questions.

Director Shouryuv has done the magic with his very first movie. For a debutant, it’s not easy to handle a compound script with a lot of emotions. But Shouryuv showed maturity in the very first movie. He rightly balanced both emotions. While the father-daughter bonding will connect to every father, the love saga of Nani and Mrunal is blissful.

Nani, as usual, nailed it with his superb performance. It’s good to see him in such an emotional character after a long time. He appeared in two different get-ups. While he looked very young in one get-up, he portrayed a middle-aged man in another portion. Mrunal Thakur brings that charm to the narrative with her presence. Baby Kiara Khanna is cute.

Every frame captured by Sanu John Varughese ISC is full of life, while Hesham Abdul Wahab gave life to the visuals with his soothing score. Avinash Kolla’s production design deserves a special mention. Produced by Mohan Cherukuri (CVM) and Dr Vijender Reddy Teegala under the banner of Vyra Entertainments, the production values are first class.

On the whole, the teaser looks promising and increases prospects for the next set of promotions.

Praveen Anthony is the editor and Avinash Kolla is the production designer. Satish EVV is the executive producer.

Hi Nanna is scheduled for release in Tamil, Telugu, Kannada, Malayalam, and Hindi languages on December 7th, this year.

Cast: Nani, Mrunal Thakur, Baby Kiara Khanna

Technical Crew:
Director: Shouryuv
Producers: Mohan Cherukuri (CVM) and Dr Vijender Reddy Teegala
Banner: Vyra Entertainments
DOP: Sanu John Varughese ISC
Music Director: Hesham Abdul Wahab
Production Designer: Avinash Kolla
Editor: Praveen Anthony
Executive Producer – Satish EVV
Costume Designer: Sheetal Sharma
PRO: Nikil Murukan

நேச்சுரல் ஸ்டார் நானி, மிருணாள் தாக்கூர் நடிக்கும் ‘hi நான்னா’

வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் ஷௌர்யுவ் இயக்கத்தில் நேச்சுரல் ஸ்டார் நானி, மிருணாள் தாக்கூர் நடிக்கும் ‘hi நான்னா’ திரைப்படத்தின் உணர்வுப்பூர்வமான டீசர் வெளியீடு

‘hi நான்னா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டிசம்பர் 7 அன்று உலகெங்கும் வெளியாகிறது

நேச்சுரல் ஸ்டார் நானி மற்றும் மிருணாள் தாக்கூர் முதன்முறையாக ஜோடி சேரும் பான்-இந்தியா திரைப்படமான ‘hi நான்னா’ ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் நிலையில், ஞாயிற்றுக்கிழமையை குடும்பத்துடன் கொண்டாடும் ரசிகர்களுக்கான பரிசாக இப்படத்தின் உணர்வுபூர்வமான டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

நானி மற்றும் கியாரா கண்ணா ஆகியோருக்கு இடையேயான அழகான தந்தை-மகள் கதையாக ஆரம்பிக்கும் இந்த டீசர், பின்னர் நானி மற்றும் மிருணாள் தாக்கூர் ஜோடியின் காதல் கதையை திரையில் காட்டுகிறது. கியாரா உண்மையிலேயே நானியின் மகளா, நானியும் மிருணாளும் இதற்கு முன் சந்தித்துள்ளார்களா, வேறொருவர் உடன் தனக்கு திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் மிருணாள் ஏன் நானியிடம் தன் காதலை சொல்கிறார் போன்ற கேள்விகளுக்கான விடைகளை தெரிந்து கொள்ள நீங்கள் திரைப்படத்தை பார்க்க வேண்டும்.

பல்வேறு உணர்வுகள் நிறைந்த சவாலான கதையை தனது முதல் படத்திலேயே இயக்குநர் ஷௌர்யுவ் மிகவும் அழகாக கையாண்டுள்ளார் என்பது டீசரில் புலனாகிறது. நானி மற்றும் கியாரா கண்ணாவின் தந்தை-மகள் பந்தம் ஆகட்டும், நானி மற்றும் மிருணாள் தாக்கூர் ஜோடியின் காதல் ஆகட்டும், அனைத்தையும் மிகவும் சிறப்பாக இயக்குநர் சமன் செய்துள்ளார்.

தனது சிறப்பான நடிப்பின் மூலம் நானி நம்மை கவர்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு உணர்வுப்பூர்வமான ஒரு பாத்திரத்தில் அவரை பார்க்க முடிகிறது. சில காட்சிகளில் இளைஞர் ஆகவும் சில காட்சிகளில் நடுத்தர வயது ஆணாகவும் அவர் ஜொலிக்கிறார். தனது இருப்பின் மூலமும் நடிப்பின் மூலமும் காட்சிகளை மிளிர வைக்கிறார் மிருணாள் தாக்கூர்.

சானு ஜான் வர்கீஸ் ஐஎஸ்சி-யின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியும் உயிரோட்டத்துடன் திகழ்கிறது. ஹேஷாம் அப்துல் வஹாப்பின் இசை கதைக்கும் காட்சிகளுக்கும் வலு சேர்க்கிறது. அவினாஷ் கோலாவின் தயாரிப்பு வடிவமைப்பும் குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தை பெரும் பொருட்செலவில் வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் மோகன் செருக்கூரி (சிவிஎம்) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா தயாரிப்பதால் காட்சிகளின் பிரம்மாண்டம் கண்களை கவர்கிறது.

மொத்தத்தில் மிகவும் சுவாரஸ்யமாக அமைந்துள்ள இந்த டீசர் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை வெகுவாக அதிகரிக்கிறது.

முழு நீள குடும்ப படமான ‘hi நான்னா’, பிரவீன் அந்தோணியின் படத்தொகுப்பில் உருவாகிறது. சதீஷ் ஈ வி வி நிர்வாக தயாரிப்பாளர் ஆவார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் பான்-இந்தியா திரைப்படமாக இந்த ஆண்டு டிசம்பர் 7 அன்று ‘hi நான்னா’ வெளியாகிறது.

படக்குழுவினர்:

நடிகர்கள்: நானி, மிருணால் தாக்கூர், பேபி கியாரா கண்ணா

இயக்கம்: ஷௌர்யுவ்
தயாரிப்பு: மோகன் செருக்கூரி (சிவிஎம்) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா
தயாரிப்பு நிறுவனம்: வைரா என்டர்டெயின்மென்ட்ஸ்
ஒளிப்பதிவு: சானு ஜான் வர்கீஸ்
இசை: ஹேஷாம் அப்துல் வஹாப்
தயாரிப்பு வடிவமைப்பு: அவினாஷ் கொல்லா
படத்தொகுப்பு: பிரவீன் அந்தோணி
நிர்வாகத் தயாரிப்பாளர் – சதீஷ் ஈ.வி.வி
ஆடை வடிவமைப்பாளர்: ஷீத்தல் ஷர்மா
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

Gopuram Films’ G.N. Anbuchezhian produces Santhanam-starrer new film on a grand scale

G.N. Anbuchezhian’s Gopuram Films is known for producing successful movies including ‘Vellaikara Durai’, ‘Thangamagan’ ‘Marudhu’, and ‘Aandavan Kattalai’. It is now bankrolling a new film starring Santhanam in the lead role.

Santhanam’s characterisation in this movie will be enjoyed and loved by all youngsters. Also, the film will be a celebration for Santhanam’s fans.

Priyalaya is debuting as the heroine opposite Santhanam. Thambi Ramaiah plays a key role and Manobala will be seen in an interesting role. Along with them, Munishkanth, Vivek Prasanna, Bala Saravanan, Maran, Cool Suresh and others are also part of the cast.

Ezhichur Aravindan, who has written story and dialogues for many successful films, has penned the story, screenplay and dialogues of this film. Three songs have taken shape very well in D. Imman’s music. Lyrics have been penned by director Vignesh Shivan and Muthamil.

Cinematography – Om Narayan
Editing – M. Thiyagarajan
Art Direction – M. Sakthiee Venkatraj Stunt – Miracle Michael

Brindha – Baba Bhaskar have choreographed and directed the grand song sequences.

Shooting for the movie was carried out in and around Chennai. While the final post-production works are on in full swing, the title, first look and release date of the film will be announced soon.

Anand Narayan is directing the film, which is going to be a grand commercial production blended with comedy. Producer: Gopuram Films’ G.N. Anbuchezhian

கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் பிரம்மாண்ட தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்

G.N. அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம், ‘வெள்ளைக்கார துரை’, ‘தங்கமகன்’ ‘மருது’, ‘ஆண்டவன் கட்டளை’, உள்ளிட்ட வெற்றி படங்களை தொடர்ந்து சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ஒன்றை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது.

அனைத்து இளைஞர்களும் ரசித்து கொண்டாடும் விதமாக சந்தானத்தின் கதாபாத்திரம் உருவாகியுள்ளது. மேலும், சந்தானத்தின் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் படம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.

சந்தானத்தின் ஜோடியாக பிரியாலயா கதாநாயகியாக அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் தம்பி ராமையாவும், சுவாரஸ்யமான வேடத்தில் மனோபாலாவும் நடித்துள்ளனர். இவர்களுடன், முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், மாறன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

பல வெற்றி படங்களுக்கு கதை, வசனம் எழுதிய எழிச்சூர் அரவிந்தன் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். D. இமானின் இசையில் மூன்று பாடல்கள் மிக சிறப்பாக வந்துள்ளன. பாடல் வரிகளை இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் முத்தமிழ் எழுதியுள்ளனர்.

ஒளிப்பதிவு – ஓம் நாராயண் எடிட்டிங் – எம். தியாகராஜன்
கலை – எம். சக்தி வெங்கட்ராஜ் ஸ்டண்ட் – மிராக்கிள் மைக்கேல்.

பிரமாண்டமான பாடல் காட்சிகளுக்கு நடனம் அமைத்து இயக்கியுள்ளனர் பிருந்தா – பாபா பாஸ்கர்.

சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. முழுவீச்சில் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் வெளியிடும் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.

கதையம்சத்தோடு நகைச்சுவை கலந்த கமர்ஷியல் பிரம்மாண்ட படைப்பாக உருவாகும் இப்படத்தை ஆனந்த் நாராயண் இயக்குகிறார். தயாரிப்பு: கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன்

Vijay Deverakonda, Parasuram, Dil Raju’s VD13/SVC54 official naamakaranam with small title teaser on October 18th

The Vijay Deverakonda’s upcoming film under the banner of Sri Venkateswara Creations’ shoot progressing at a fast pace. Mrunal Thakur of Sita Ramam fame is playing the female lead in this film tentatively titled VD 13. This is SVC’s 54th film. Director Parasuram Petla is making it with the story of a family entertainer. This movie is being produced by ace producer Dil Raju and Shirish. Vasu Varma is acting as the creative producer.

The makers today revealed that the film’s official naamakaranam will be announced through a small title teaser on October 18th at 6.30 PM. Makers wrote, “From the pair that brought you humongous blockbuster entertainer Geetha Govindam. You will witness something even more special. The official Naamakaranam for this special project will be announced through a small title teaser. Date- October 18, Time- 18:30.

VD13 is going to be released in a grand way for the upcoming Sankranti festival. After a super hit like Geetha Govindam, Vijay Deverakonda and director Parasuram Petla’s combination film and it has huge expectations. The blockbuster brand of Sri Venkateswara Creations banner is also raising the craze on this project. The title and first look of the film will be released soon.

Starring: Vijay Deverakonda, Mrunal Thakur

Technical team
Cinematography : KU Mohanan
Music : Gopisunder
Art Director : AS Prakash
Editor : Marthand K Venkatesh
PRO : GSK Media, Vamsi Kaka
Creative Producer : Vasu Varma
Producers : Raju – Sirish
Written and directed by Parasuram Petla

லியோவோடு மோதும் திரையின் மறுபக்கம்

தமிழ் சினிமா ரசிகர் சத்யமூர்த்தி ஓரு விவசாயி.அவர் வாயால் வடை சுடுகிற இயக்குனர் செந்திலிடம் ஏமாந்து அவர் நிலத்தை வைத்து ஓரு படம் தயாரிக்கிறார்.

  இயக்க வழி தெரியாமல் திறமை இல்லாத செந்தில் சத்ய மூர்த்தியின் வீட்டை திரைப்பட பைனான்சியர் அன்பரசியிடம் அடமானம் வைக்கிறார்.

இயக்குனர் செந்தில் படம் பண்ணுவதில் பயங்கரமாக சொதப்ப விவசாயி சத்யமூர்த்தி செந்திலை நீக்கி விட்டு படத்தின் ஹிரோ ,துணை இயக்குனர் உதவியோடு படத்தை முடிக்கிறார்.அன்பரசியின் கழுகுப்பிடியிலிருந்து சத்யமூர்த்தி தப்பினாரா ..? படத்தை எப்படி வெளியே கொண்டு வரப்போகிறார் என்பதே கதை.

திரையின் மறுபக்கம் எனும் திரைப்படம் உண்மையும் நகைச்சுவையும் சார்ந்த கதை.இப்படத்தை நிதின் சாம்சன் (Nitin Samson ) இயக்கியதோடு மட்டுமல்லாமல் கதை,திரைக்கதை, வசனம் ,தயாரிப்பு ஆகிய பணிகளை மேற்கொண்டு உள்ளார்.சென்னை,செங்கல்பட்டு,அமெரிக்கா(புளோரிடா) ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தி உள்ளார்.அக்டோபர் 20 ந்தேதி முதல் தமிழகமெங்கும் 60 தியேட்டர்களில் ரீலீசாகிறது.

Cast: Mohammed Ghouse, Manigandan, Hema Genelia, Nitin Samson, Sree Risha, Jyothi, Yazar, Sathyaannadurai etc.

Direction, Story, Camera, producer- Nitin Samson

Music- Anil N C

Editing-Nishanth JNS

BGM-JKV Rithik Madhavan

DI -Pankaj Haldher

PRO-Sivakumar

Vrushabha -The Warriors Arise starring Mohanlal, Shanaya Kapoor, & Roshann Meka.

Vrushabha -The Warriors Arise starring Mohanlal, Shanaya Kapoor, & Roshann Meka, commence the second schedule shoot in Mumbai today, The makers will announce the release date on Dussehra

The highly anticipated pan-India movie ‘Vrushabha – The Warriors Arise’, headlined by the legendary Mohanlal, co-starring Shanaya Kapoor, Zahrah Khan, and Roshann Meka, commenced the second schedule of their shoot under the masterful direction of Nanda Kishore, in Mumbai today. The second schedule will be shot over October – November 2023.

When the legendary star Lalettan Mohanlal shared a sneak peek into his character and look, from the on-location shoot of the first schedule, the anticipation surrounding the movie skyrocketed to new heights. ‘Vrushabha’ an action entertainer, a high-octane father-son drama, centered around the conflict between two extreme ends of emotions Love vs Revenge, has captured the imagination of cinema lovers worldwide, and this second schedule promises to be yet another milestone in its making.

Vrushabha is set to redefine the standards of storytelling and cinematic excellence. The film’s team is known for their unwavering commitment to quality, and this venture is expected to be no exception.

Brace yourselves for an epic action-packed entertainer directed by Nanda Kishore, that will leave you in awe. Touted to be one of the biggest films of 2024, the film will be releasing over 4500 screens worldwide in Malyalam, Telugu, Kannada, Tamil and Hindi.

The makers will announce the worldwide theatrical release date on the auspicious day of Dussehra 2023.

Vrushabha is the Pan-India Epic Action Entertainer, starring Lalettan Mohanal & Roshann Meka, Shanaya Kapoor and Zahrah S Khan in the lead along with Srikanth Meka, Ragini Dwivedi and Neha Saxena. The film is a high-octane father-son drama transcending generations and is big on action, emotions and VFX. It’s touted to be one of the biggest films of 2024.
 
Vrushabha is presented by Connekkt Media and Balaji Telefilms in association with AVS Studios. The film is directed by Nanda Kishore and is produced by (for Connekkt Media) Varun Mathur and Saurabh Mishra, produced by (for Balaji Telefilms) Ektaa R Kapoor and Shobha Kapoor and (for AVS) Vishal Gurnani, Juhi Parekh Mehta, and Abhishek Vyas. The film is being shot simultaneously in Telugu & Malayalam and will release in Telugu, Malayalam, Hindi, Kannada and Tamil.

மோகன்லால் – ஷனாயா கபூர்- ரோஷன் மேகா ஆகியோர் நடித்துள்ள ‘விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்’

மோகன்லால் – ஷனாயா கபூர்- ரோஷன் மேகா ஆகியோர் நடித்துள்ள ‘விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்’ எனும் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி இருக்கிறது. இதனுடன் இப்படத்தின் வெளியீட்டு தேதியை நவராத்திரி திருவிழாவின் போது தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்கள்

ஷனாயா கபூர், சஹரா எஸ். கான் மற்றும் ரோஷன் மேகா ஆகியோருடன் மலையாள முன்னணி நட்சத்திர நடிகரான மோகன்லால் இணைந்து நடித்திருக்கும் ‘விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் பான் இந்திய திரைப்படமாகும். இயக்குநர் நந்தகிஷோர் இயக்கத்தில் தயாராகி வரும் இப்படத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி இருக்கிறது. இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் வரை நடைபெறுகிறது.

மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான மோகன்லால் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பின் போது படப்பிடிப்பு தளத்திலிருந்து அவரது கதாபாத்திரம் மற்றும் தோற்றம் குறித்த ஒரு கண்ணோட்டத்தை பகிர்ந்து கொண்ட போது… இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியது.‌ காதல் மற்றும் பழிக்கு பழி வாங்கும் உணர்வு என இரண்டு தீவிர நேர் எதிர் முனைகளுக்கு இடையேயான மோதலை மையமாகக் கொண்ட இந்த ‘விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்’ பிரம்மாண்டமான ஆக்சன் என்டர்டெய்னராகும். அப்பா- மகன் இடையிலான உறவை மையப்படுத்தி தயாராகும் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள சினிமா ஆர்வலர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த திரைப்படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு இப்படத்தின் முக்கியமான மைல் கல்லாக இருக்கும் என உறுதி அளிக்கிறது.

‘விருஷபா தி வாரியர்ஸ் அரைஸ்’- திரைப்படம் கதை சொல்லல் மற்றும் சினிமாவின் சிறப்பம்சத்தை.. அதன் தரத்தை மறு வரையறை செய்யும் படைப்பாக அமைந்துள்ளது. பட குழுவினர் தரமான உருவாக்கத்தில் சமரசமில்லாமல் முழு ஈடுபாட்டுடன் உழைத்து வருகிறார்கள்.‌

நந்தகிஷோர் இயக்கத்தில் தயாராகும் ஒரு காவிய ஆக்சன் நிரம்பிய பொழுதுபோக்கு படைப்பிற்காக காத்திருங்கள். இது உங்களை பிரமிக்க வைக்கும். 2024 ஆம் ஆண்டின் மிகப்பெரிய படங்களில் ‘விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்’ ஒன்றாக இருக்கும். மேலும் இந்த திரைப்படம் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் உலகம் முழுவதும் நான்காயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.‌

நவராத்திரி திருவிழாவின் போது ஒரு நல்ல நாளன்று இப்படத்தின் தயாரிப்பாளர்கள்.. ‘விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்’ படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்கள்.

மோகன்லால், ரோஷன் மேகா, ஷனாயா கபூர், சஹரா எஸ். கான் ஆகியோருடன் ஸ்ரீகாந்த் மேகா, ராகினி திரிவேதி, நேகா சக்சேனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘விருஷபா தி வாரியர்ஸ் அரைஸ்’ எனும் திரைப்படம்- பான் இந்தியா அளவிலான காவிய ஆக்சனாகும். இந்தத் திரைப்படம் தலைமுறைகளைக் கடந்த அப்பா மற்றும் மகன் இடையேயான டிராமா, ஆக்சன் எமோஷனல் மற்றும் வி எஃப் எக்ஸ் ஆகியவற்றுடன் அடுத்த ஆண்டிற்கான மிகப்பெரிய படைப்புகளில் ஒன்றாக இருக்கும்.

இந்த திரைப்படத்தை கனெக்ட் மீடியா- பாலாஜி டெலிஃபிலிம்ஸ் – ஏவிஎஸ் ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் வருண் மாத்தூர், சௌரவ் மிஸ்ரா, ஏக்தா ஆர் கபூர், சோபா கபூர், விஷால் குர்னானி, ஜூஹி பரேக் மேத்தா, அபிஷேக் வியாஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். நந்த கிஷோர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் ஒரே தருணத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

விக்ரம் பிரபு நடிப்பில், இயக்குநர் முத்தையா வசனத்தில் உருவாகியுள்ள ‘ரெய்டு’

விக்ரம் பிரபு நடிப்பில், இயக்குநர் முத்தையா வசனத்தில் உருவாகியுள்ள ‘ரெய்டு’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது!

‘டாணாக்காரன்’ மற்றும் சமீபத்தில் வெளியான ‘இறுகப்பற்று’ போன்ற படங்களில் தனது அற்புதமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் இதயங்களை வென்ற நடிகர் விக்ரம் பிரபு அடுத்து வரவிருக்கும் தனது ‘ரெய்டு’ படம் மூலம் இன்னும் அதிக அளவிலான பார்வையாளர்களைக் கவர உள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.

சமீப காலமாக வெளியாகியுள்ள விக்ரம் பிரபுவின் படங்கள் பாராட்டுகளைப் பெற்று வருவதால் அவரது நட்சத்திர அந்தஸ்து மேலும் உயர்ந்துள்ளது. இது ’ரெய்டு’ படத்திற்குமான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும், விக்ரம் பிரபுவின் ஸ்டைலான தோற்றத்தாலும், நேர்த்தியான டீசராலும் இப்படம் ஏற்கனவே அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. குடும்ப பார்வையாளர்கள் மற்றும் சினிமா விரும்பிகளுக்கு ஏற்ற வகையில், அனைத்தும் இந்தப் படத்தில் இருப்பதால் நிச்சயம் தீபாவளி விடுமுறைக்கு இது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என படக்குழுவினர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

இருக்கை நுனியில் அமரும்படியான ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக ‘ரெய்டு’ உருவாகியுள்ளது. இந்தப் படத்தை கார்த்தி இயக்கி இருக்க, எஸ்.கே. கனிஷ்க் மற்றும் ஜிகே @ மணிகண்ணன் ஆகியோர் தயாரித்து இருக்கின்றனர். ஸ்ரீதிவ்யா நாயகியாக நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு இயக்குநர் முத்தையா வசனம் எழுதியுள்ளார். இந்த படத்தில் அனந்திகா, ரிஷி ரித்விக், சௌந்தரராஜா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கதிரவன் ஒளிப்பதிவும், மணிமாறன் படத்தொகுப்பும், கே.கணேஷ் ஆக்‌ஷன் காட்சிகளையும் கவனித்திருக்க இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.