Breaking
June 7, 2026

Cinema

காந்தாரா திரைப்படத்திலிருந்து ருக்மணி வசந்தின் ‘கனகவதி’

வரமஹாலக்ஷ்மி திருவிழாவின் இந்த புண்ணிய நாளில், ஹோம்பாலே பிலிம்ஸ்,
ருக்‌மிணி வசந்தை ‘கனகவதி’ (Kanakavathi) எனும் கதாபாத்திரமாக, காந்தாரா அத்தியாயம் 1 படத்திலிருந்து அறிமுகப்படுத்தியுள்ளது.

இப்படம் உலகம் முழுவதும் 2 அக்டோபர் 2025 அன்று வெளியாகிறது.

இந்திய கலாச்சாரத்தில் புனிதமும் பண்பாட்டு முக்கியத்துவமும் கொண்ட வரமஹாலக்ஷ்மி திருநாளில், வரவிருக்கும் மாபெரும் திரைப்படமான “காந்தாரா அத்தியாயம் 1” இன் நாயகியாக நடிக்கும் நடிகை ருக்‌மிணி வசந்தின் ‘கனகவதி’ (Kanakavathi) கதாப்பாத்திர ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, ஹோம்பாலே பிலிம்ஸ் பெருமையுடன் வெளியிட்டுள்ளது.

இப்படத்தை எழுதி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார் ரிஷப் ஷெட்டி. நம் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் கதைக்களத்தில் 2022ஆம் ஆண்டு வெளியாகி, மக்களிடமும் விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களைக் குவித்த “காந்தாரா” படத்தின் முன்கதையைச் சொல்லும் (Prequel) படமாக இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

இவ்வருடத்தின் தொடக்கத்தில், நாயகன் ரிஷப் ஷெட்டியின் கதாப்பாத்திர ஃபர்ஸ்ட் லுக், அவரது பிறந்தநாளன்று வெளியிடப்பட்டு, சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து, படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்டதை அறிவித்த “Wrap -Up” வீடியோ, படத்தின் பிரம்மாண்டத்தை வெளிப்படுத்தி, படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இப்போது, கனகவதி கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியீடு, ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காந்தாரா அத்தியாயம் 1 படத்தின் கதை, இந்திய பாராம்பரியத்தின் வேர்களைப் பற்றிய ஆழமான கதையைச் சொல்வதோடு, விஷுவலாக வேறொரு உலகத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும். ஒளிப்பதிவாளர் அர்விந்த் S . காஷ்யப் (Arvind S. Kashyap’s)உடைய கண்கவர் ஒளிப்பதிவும், B. அஜநீஷ் லோக்நாத் (Ajaneesh
Loknath) வழங்கியுள்ள ஆன்மாவை வருடும் இசையும், ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் விஜய் கிரகந்தூரின் ( Vijay Kiragandur) பிரம்மாண்ட தயாரிப்பும், இப்படத்தை இதுவரை இல்லாத பேரனுபவமாக உருவாகியுள்ளது.

“காந்தாரா அத்தியாயம் 1” உலகம் முழுவதும் 2 அக்டோபர் 2025 அன்று, கன்னடம், தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், பெங்காலி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் வெளியாகிறது.

இன்றைய தினம் நாடு முழுவதும் மகாலட்சுமி தேவியின் அருளைப் பெறும் நேரத்தில்,
உலகம் முழுவதும் பார்வையாளர்களின் மனங்களில் அழியாத இடத்தைப் பெறவிருக்கும் கனகவதி பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ஹோம்பாலே பிலிம்ஸ் பெருமையுடன் வழங்குகிறது.

எப்போதும் கதைதான் ஹீரோ. சொல்லப்படாத..வியப்பூட்டும் கதைகள்

இயக்குனர் தீரன் அருண்குமார் கூறுவது:

எப்போதும் கதைதான் ஹீரோ. சொல்லப்படாத..வியப்பூட்டும் கதைகள் இங்கு நிறைய உண்டு. நம் அன்றாட வாழ்வில் சாதாரணமாக கடந்து போகும் சில விசயங்கள் கூட மிகப்பெரிய வணிகம்,நிழல் உலகிற்கு தொடர்புடையதே..இதுவரை யாரும் சொல்லாத..அறிந்திடாத ஒரு புது உலகம் “பிளாக் கோல்டு” திரைப்படத்தின் கதைக்களம். இப்படத்தின் கதையே நடிகர் வெற்றியை தீர்மானித்தது. தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் வெற்றிக்கு இப்படம் பெரிய திருப்பத்தை கொடுக்கும். நாயகி பிரியாலயா,லிவிங்ஸ்டன்,துளசி,A.வெங்கடேஷ்,அருள் D சங்கர்,பிக்பாஸ் அபிராமி,விஜய் டிவி ராமர்,அஜித் விக்னேஷ் மற்றும் அனைத்து கதாபாத்திரங்களும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். “பிளாக் கோல்டு” திரைப்படம் இந்த வருடம் ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பு அற்புதமாக நடந்து முடிந்தது. விரைவில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கும். ராம்ஜியின் உதவியாளரான சந்தோஷ்குமார் கேமராமேனாக அறிமுகமாகிறார். “ஸ்மைல்மேன்” புகழ் கவாஸ்கர் அவினாஷ் இசையமைக்க..ராவணன் படத்தொகுப்பை கவனிக்க..”வீர திர சூரன்” c.s.பாலசந்தர் கலை யக்குனராகவும்..”மெட்ரோ” மகேஷ் சண்டைப்பயிற்சியாளராகவும் அவர்களது சிறப்பான பணியை செய்து கொண்டிருக்கிறார்கள். நீண்ட வருடங்களுக்கு பின் நிஜ “சுருள் வாள்” ஆயுதத்தை பயன்படுத்தி ஒரு சண்டைக்காட்சி எடுக்கப்பட்டது.சில நிமிட அக்காட்சிக்கு 10 நாட்கள் ஒத்திகை பார்க்கப்பட்டு படமாக்கப்பட்டது. MM ஸ்டுடியோஸ் சார்பில் M.மூர்த்தி அவர்கள் பிரமாண்டமாக தயாரிக்கிறார்.படப்பிடிப்பு பரபரப்பாக தொடர்ந்து நடந்து வருகிறது.

‘அக்யூஸ்ட்’ தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினர் மனமார்ந்த நன்றி

ஜேஷன் ஸ்டுடியோஸ் சச்சின் சினிமாஸோடு இணைந்து, ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என். பன்னீர்செல்வம், எம். தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரித்த பிரம்மாண்ட திரைப்படம் ‘அக்யூஸ்ட்’ கடந்த வாரம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.

வெளியான நாள் முதல் நேர்மறை விமர்சனங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் பாராட்டு, மற்றும் ரசிகர்களின் ஆதரவை பெற்று வரும் ‘அக்யூஸ்ட்’, திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது. 

இதன் காரணமாக, காட்சிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள தயாரிப்பாளர்கள் ஏ.எல்.உதயா, தயா என். பன்னீர்செல்வம் மற்றும் எம். தங்கவேல் உள்ளிட்ட படக்குழுவினர் பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர். 

தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா மற்றும் கர்நாடகாவிலும் ‘அக்யூஸ்ட்’ வசூல் சிறப்பாக அமைந்துள்ளதால் அங்கும் காட்சிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. படக்குழுவினர் மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், திருப்பூர், செங்கல்பட்டு ஆகிய ஊர்களில் உள்ள திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களுடன் படம் பார்த்தபோது அவர்கள் படத்தில் நடித்தவர்களை அவரவர் கதாபாத்திரங்களின் பெயர்களை வைத்தே அழைத்து மகிழ்ந்தனர். குறிப்பாக நாயகன் உதயாவை அவரது கதாபாத்திரமான கணக்கு என்று அழைத்து மகிழ்ச்சி தெரிவித்தனர். 

இந்த அளவிற்கு படம் ரசிகர்களிடம் தாக்கத்தை உருவாக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் 10 நிமிடம் போனதே தெரியவில்லை என்று ரசிகர்கள் படக்குழுவினரிடம்  தெரிவித்தனர். பஸ் சண்டை காட்சி உள்ளிட்ட பல காட்சிகளை அவர்கள் நினைவு கூர்ந்து பாராட்டினார்கள். 

இது குறித்து பேசிய உதயா, “இந்த வெற்றியை ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கின்றோம். இதற்கு காரணமான படக்குழுவினர், பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை காணிக்கை ஆக்குகின்றோம்,” என்றார். 

‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் முதல் முறையாக உதயா, அஜ்மல் மற்றும் யோகி பாபு இணைந்து  நடித்துள்ளனர். நடிகர் உதயாவின் வெள்ளி விழா ஆண்டு திரைப்படமான ‘அக்யூஸ்ட்’, உதயாவின் படங்களிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பட்ஜெட்டில் உருவானது குறிப்பிடத்தக்கது. 

இப்படத்தை கன்னட திரையுலகில் வெற்றி படங்களை இயக்கிய பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்கியுள்ளார். பிரபல கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடித்துள்ளார். 

‘அக்யூஸ்ட்’ படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைக்க, மருதநாயகம்.ஐ ஒளிப்பதிவு செய்ய, முன்னணி எடிட்டரான கே.எல்.பிரவீன் படத் தொகுப்பை கையாண்டுள்ளார். கலை இயக்கம் – ஆனந்த் மணி, மக்கள் தொடர்பு – நிகில் முருகன். 

அறிமுக நடிகர் வினோத் நடிக்கும் ‘பேய் கதை’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

ஜெர்ரி’ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பேய் கதை’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது.  இவ்விழாவில் இசையமைப்பாளர்கள் சபேஷ் – முரளி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, படக்குழுவினர் பெற்று கொண்டனர். 

‘பேய் கதை’ திரைப்படத்தில் வினோத், ஆர்யலட்சுமி, கானா பல்லவ், சுகன்யா, ஆஷ் மெலோ, செல்வா, எலிசபெத் சுராஜ், ஜீ.வி. மகா, மைக்கேல், ஸ்ரீசுமந்த், ஆஷிக் பீட்டர், ரோடஸ், ஜீவிதா, ருச்சி பிங்க்லே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் பிரவீண் எஸ். ஜி. ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு போபோ சசி இசையமைத்திருக்கிறார். கலகலப்பும் திகிலும் நிறைந்த குதூகல திரில்லராக தயாராகி இருக்கும் இப்படத்தை ஜெர்ரி’ஸ் ஜர்னி இன்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனம் சார்பில் ஜெர்ரி தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சுரேஷ் வழங்குகிறார்.

ஆகஸ்ட் 29ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘பேய் கதை’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் படத்தின் இயக்குநர் ஜுன் மோசஸ் பேசுகையில், ”இப்படத்திற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கு முதலில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருக்கிறேன் என நம்புகிறேன். 

படத்தின் இசையமைப்பாளரான போபோ சசி என்னுடைய பால்ய கால நண்பர். அவரும் நானும் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். இந்த விழாவிற்கு இசையமைப்பாளர்கள் சபேஷ் – முரளி அவர்களை சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தோம். அவர்களும் இங்கு வருகை தந்திருக்கிறார்கள். இதற்காக அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

இப்படத்தில் இணைந்து பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தை பார்த்து உற்சாகமடைந்து தமிழகம் முழுவதும் வெளியிடும் ஸ்ரீ தேனாண்டாள் சுரேஷூக்கும் நன்றி. 

‘பேய் கதை’ கம்ப்ளீட் ஃபேமிலி என்டர்டெய்னர். திரில்லர்-காமெடி -சஸ்பென்ஸ் என ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த படங்களில் ரத்தம், வன்முறை, பயங்கரம் ஆகியவை இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் அவை எதுவும் இருக்காது.  குழந்தைகள் கூட இந்த படத்தை தாராளமாக பார்க்கலாம். அவர்களுக்கும் இது ஒரு திரில்லிங்கான தருணமாக இருக்கும். இப்படத்தின் திரைக்கதையில் புதிய முயற்சிகளை செய்திருக்கிறோம். கதை சொல்லும் பாணியிலிருந்தும், அதனை விவரிக்கும் வகையிலும், அதில் உள்ள தொழில்நுட்ப விஷயங்கள் வரை புதிதாக முயற்சித்து இருக்கிறோம். திரையரங்க அனுபவத்திற்காக பல விஷயங்களை புதிதாக செய்திருக்கிறோம். படத்தில் எட்டு நிமிட அளவிற்கு வி ஆர் மோஷன் (V. R. Motion) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கிறோம். தற்போதுள்ள குழந்தைகள் வி ஆர் மோஷன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள். அவர்களை கவர்வதற்காக தொடர்ந்து எட்டு நிமிட அளவிற்கு இந்த தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி இருக்கிறோம். படம் முழுவதும் எதிர்பாராத சுவாரசியமான திருப்பங்கள் இருக்கின்றன. இது ரசிகர்களை உற்சாகப்படுத்தும். 

இந்தப் படத்தில் பார்வையாளர்கள் முகம் சுழிக்கும் வகையில் எந்த காட்சியும் இடம்பெறவில்லை. சிறிய முதலீட்டில் உருவாக்கப்பட்ட நல்லதொரு முயற்சி. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து இந்த படத்திற்கு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார். 

வசனகர்த்தா நவீன் பேசுகையில், ”இந்தப் படத்திற்காக வசனம் எழுதிய அனுபவமும், அதற்கான பயணமும் வித்தியாசமாக இருந்தது.‌ இயக்குநர் என்னிடம் ரசிகர்களின் கோணத்திலிருந்து உரையாடலை எழுது என்றார். முதல் 15 நிமிடங்களை மட்டும் தான் என்னிடம் எழுதுவதற்காக வழங்கினார்கள். பத்து நாட்கள் எடுத்துக்கொண்டு எழுதிக் கொடுத்தேன். அதன் பிறகு படத்தின் முதல் பாதி வரை எழுதிக் கொடுங்கள் என கேட்டனர்.‌ அப்போதும் நான் குழம்பினேன். அதன் பிறகு இரண்டாம் பாதி கதையை முழுவதுமாக என்னிடம் விவரித்தார். அதைக் கேட்டவுடன் எனக்கு ஆச்சரியம் அதிகமாகி விட்டது. ஏனெனில் இந்த படத்தில் திரில்லர், சஸ்பென்ஸ் என நிறைய விஷயங்கள் இருக்கின்றன.‌ அனைவரும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பார்க்கும் வகையில் அமைந்திருக்கிறது. 

இதுவரை தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு மட்டுமே உரையாடல்களை எழுதி வந்த எனக்கு முதன் முதலாக பெரிய திரையில் உரையாடல் எழுத வாய்ப்பு அளித்துள்ளனர். இதற்காக இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார். 

பாடலாசிரியர் யூகி பிரவீண் பேசுகையில், ”2017ம் ஆண்டில் வெளியான ‘அட்டு’ படத்திற்கு அனைத்து பாடல்களையும் எழுதி இருந்தேன். போபோ சசி எனக்கு எல்லா பாடல்களையும் எழுதுவதற்கு வாய்ப்பளித்தார். நான் இதுவரை 30 பாடல்களை எழுதி இருக்கிறேன். இதில் 20 பாடலை போபோ சசிக்காக எழுதியிருக்கிறேன். எங்கள் கூட்டணியில் இன்னும் ஏராளமான ஹிட் பாடல்கள் வரவேண்டும் என  பிரார்த்திக்கிறேன். இந்த படத்திலும் எல்லா பாடல்களையும் எழுதும் வாய்ப்பை போபோ சசி அளித்திருக்கிறார். இதற்கு ஒப்புதல் அளித்த இயக்குநருக்கும் , தயாரிப்பாளருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார். 

நடிகை ஆஷ் மெலோ பேசுகையில், ”கன்னடத்தில் நடிகர் துனியா விஜய் உடன் நடித்திருக்கிறேன். தமிழில் நான் நடித்திருக்கும் முதல் படம் இது. இதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் எனக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள். 29ம் தேதி அன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார். 

நடிகை எலிசபெத் பேசுகையில், ”இந்தப் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. இளம் திறமைசாலிகள் இணைந்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இப்போது இளம் திறமைசாலிகள் பலரும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்கள். எங்களைப் போன்ற மூத்த நடிகைகளை மறந்து விடுகிறார்கள். இந்தப் படத்திற்கு இசை மிக சிறப்பாக அமைந்திருக்கிறது, படமும் நன்றாக வந்திருக்கிறது, நாயகனுக்கு அம்மாவாக நடித்திருக்கிறேன். அனைவரும் பார்த்துவிட்டு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார். 

நடிகை ஜீ.வி.மகா பேசுகையில், ”இந்தப் படத்தின் மூலமாகத்தான் நான் நடிகையாக அறிமுகமாகிறேன். இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய இயக்குநருக்கும் , படக்குழுவினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் என்னுடைய நண்பராக இருந்தாலும் ஆடிஷன் வைத்து தான் குறிப்பிட்ட கதாபாத்திரத்துக்கு என்னை தேர்வு செய்தார். அத்துடன் எனக்கு அவர் அளித்த ஊக்கம் காரணமாகவே இப்படத்தில் நடித்திருக்கிறேன்.‌ 

இந்த திரைப்படம் ஏனைய பேய் படங்களை போல் இல்லை, புதுமையான நாகரீகமான நல்லதொரு ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகி இருக்கிறது. ஆகஸ்ட் 29 திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் வருகை தந்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார். 

இசையமைப்பாளர் போபோ சசி பேசுகையில், ”வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநரும், நானும் 25 ஆண்டு கால நண்பர்கள். நாங்கள் இருவரும் ஏற்கனவே இணைந்து பணியாற்றி இருக்க வேண்டும். ஆனால் அதற்கான தருணம் தற்போது தான் அமைந்திருக்கிறது. ‘பேய் கதை’ படத்தை தனித்துவமாக உருவாக்கியிருக்கிறார். தற்போது தான் இப்படத்திற்கான பின்னணி இசை சேர்ப்பு பணிகளை நிறைவு செய்தேன். படம் சிறப்பாக வந்திருக்கிறது, பாடல்களும் சிறப்பாக இருக்கின்றன,” என்றார். 

இசையமைப்பாளர் சபேஷ் பேசுகையில், ”படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போது இயக்குநர் எதையோ புதுமையாக செய்திருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு எழுகிறது. படம் சிறப்பாக இருக்கிறது. இந்த விழாவிற்கு அழைப்பு விடுப்பதற்காக இயக்குநர் எங்களை சந்தித்தார். அப்போது நான் உங்களை பார்த்திருக்கிறேன் என அவர் கூறினார் அப்போது அவரிடம் நாங்கள் வருடத்திற்கு 25 திரைப்படங்களில் பணியாற்றினோம். அப்போது கழுத்தை திருப்பி பக்கத்தில் யார் இருக்கிறார்கள் என்று பார்ப்பதற்கு கூட நேரம் இருக்காது. எங்கள் பார்வை முழுவதும் திரையிலும், கீ போர்டிலும் தான் இருக்கும் என்று விளக்கம் அளித்தேன். 

எங்கள் குடும்பத்தை சேர்ந்த இசையமைப்பாளர் போபோ சசி இதில் பணியாற்றி இருக்கிறார். தற்போதெல்லாம் ஒரு பாடல் நிலைத்து நிற்கிறது என்றால் அது வெஸ்டர்ன் பாணியிலான பாடலாக இருந்தாலும் அதில் சிறிதளவு மெலோடி இடம்பெற்றிருக்க வேண்டும். மெலோடி இருந்தால்தான் அந்தப் பாடல் ஹிட் ஆகும். இது நூறு சதவீதம் போபோ சசி பாடல்களில் இருக்கிறது. அதனால் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும்,” என்றார். 

இசையமைப்பாளர் முரளி பேசுகையில், ”இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போது இசையும், ஒளிப்பதிவும் சிறப்பாக இருக்கிறது. இந்த திரைப்படம் ஹாலிவுட் தரத்தில் இருக்கிறது. அதற்கு ஏற்றாற் போல் பின்னணி இசையும், பாடல்களும் அமைந்திருக்கின்றன.  

இயக்குநர் ஜுன் மோசஸை சிறிய வயதில் இருந்தே பார்த்திருக்கிறேன். அவர் எப்போதும் எங்களுடைய வீட்டில் போபோ சசியுடன் தான் இருப்பார். இந்த இருவரும் சின்ன வயதிலிருந்து எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள். அதனால் தான் தற்போது இருவரும் திரையில் ஜொலிக்கிறார்கள். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்,” என்றார். 

நாயகன் வினோத் பேசுகையில், ”இந்தத் திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

நான் இசையமைப்பாளர்கள் சபேஷ் – முரளியின் ரசிகன். ஏனெனில் ‘வாலி’ படத்திற்கு பின்னணி இசையமைத்தது இவர்கள்தான். அவர்கள் இங்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்து வாழ்த்தியமைக்கு நன்றி. 

இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் ஸ்ரீ தேனாண்டாள் சுரேஷுக்கும் நன்றி. அவருடன் தொடர்ந்து பயணிக்க விரும்புகிறேன்.

இயக்குநர் ஜுன் மோசஸ் என்னுடைய நண்பர் தான். நானும் அவரும் பிசினஸ் பார்ட்னர்ஸ். ஒரு நாள் சாதாரணமாக பேசிக் கொண்டிருக்கும்போது திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற என் விருப்பத்தை சொன்னவுடன் அவர் ஒரு வரியில் கதையை சொன்னார்.‌ அதன் பிறகு அதனை விரிவுபடுத்தி பணியாற்றத் தொடங்கி அந்தப் பணி தற்போது இங்கு வரை வந்திருக்கிறது. அவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். 

நான் கார்ப்பரேட் நிறுவனத்தில் 22 ஆண்டு காலம் பணியாற்றி இருக்கிறேன். அங்கு கற்றுக் கொள்ளாத பல விஷயங்களை  சினிமாவில் ஒரே வருடத்தில் கற்றுக் கொண்டேன்.  

‘பேய் கதை’ திரைப்படம் 29ம் தேதி அன்று வெளியாகிறது. ஊடகங்களும், ரசிகர்களும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

துல்கர் சல்மான் நடிக்கும் #DQ 41 – #SLV 10 படம் – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்

துல்கர் சல்மான் – ரவி நெலகுடிடி (Ravi Nelakuditi)- சுதாகர் செருகுரி (Sudhakar Cherukuri) – SLV சினிமாஸ்- கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படமான #DQ 41 – #SLV 10 பூஜையுடன் படப்பிடிப்பும் தொடங்கியது. ‘நேச்சுரல் ஸ்டார் ‘ நானி கிளாப் அடித்து தொடங்கி வைக்க, வழக்கமான படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது.

பன்முக திறமை கொண்ட நட்சத்திரமான துல்கர் சல்மான் தனது அற்புதமான திரைக்கதை தேர்வுக்கு பெயர் பெற்றவர். புத்துணர்ச்சி- தனித்துவம் மற்றும் ஒரு நடிகராக சவாலான கதாபாத்திரங்களில் நடிப்பதை எப்போதும் விரும்புபவர். அவரது 41 வது திரைப்படத்தில் #DQ 41 அறிமுக இயக்குநர் ரவி நெலக்குடிடியுடன் இணைகிறார். சமகால காதல் கதையாக வளமான நாடகத்தன்மையுடன் தயாராகும் இந்த திரைப்படத்தை எஸ் எல் வி சினிமாஸ் நிறுவனம் சார்பில் வெற்றிகரமான தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிக்கிறார். இந்தத் திரைப்படம் இந்த நிறுவனத்தின் சார்பில் தயாராகும் பத்தாவது திரைப்படம் #SLV 10 என்பது- இந்நிறுவனத்தின் புதிய மைல் கல்லை குறிக்கிறது.

இந்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. ஹைதராபாத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான தொடக்க நிகழ்வில் பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். சுப முகூர்த்த படப்பிடிப்பிற்கு ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி கலந்துகொண்டு கிளாப் போர்டு அடித்தார். இயக்குநர் புச்சிபாபு சனா (Buchi Babu Sana) கேமராவை இயக்கினார்.‌ குன்னம் சந்தீப் (Gunnam Sandeep), நானி மற்றும் ரம்யா குன்னம் ஆகியோர் இப்படத்தின் ஸ்கிரிப்ட்டை படக் குழுவினரிடம் ஒப்படைத்தனர். இப்படத்தின் முதல் காட்சியை ரவி நெலகுடிடி இயக்கினார்.

‘தசரா’ மற்றும் ‘தி பாரடைஸ்’ படத்தின் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒதெலாவும் (Srikanth Odela) இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் .இதனைத் தொடர்ந்து இப்படத்தின் வழக்கமான படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது.

மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் வலுவான வெற்றியை வழங்கி வரும் துல்கர் சல்மானை சமாதானப் படுத்துவது எளிதான சாதனை அல்ல .இருப்பினும் இயக்குநர் ரவி நெலகுடிடி துல்கர் சல்மானின் ஆர்வத்தை தூண்டும் வகையில் ஒரு தனித்துவமான மற்றும் புதிய கதையை கொண்டு வந்துள்ளார்.

இந்தப் படத்தின் தயாரிப்பு தரம் மற்றும் தொழில்நுட்பம் சர்வதேச தரம் என உறுதி அளிக்கிறது. மேலும் இந்தத் திரைப்படத்தில் அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுனர்களும் இடம் பிடித்திருக்கிறார்கள் அனய் ஓம். கோஸ்வாமி (om Goswamy) ஒளிப்பதிவை கையாள தேசிய விருதை வென்ற ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் .அவினாஷ் கொல்லா (Avinash Kolla) தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.‌

இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் , இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது.

இப்படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர்கள்’ நடிகைகள் பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடப்படும்.‌

நடிகர்கள்: துல்கர் சல்மான்

தொழில்நுட்ப குழு :

எழுத்து & இயக்கம் : ரவி நெலகுடிடி
தயாரிப்பாளர் : சுதாகர் செருகுரி
தயாரிப்பு நிறுவனம் : எஸ் எல்‌ வி சினிமாஸ்
இணை தயாரிப்பாளர் : கோபிசந்த் இன்னா முரி
சி இ ஓ – ( CEO) விஜயகுமார் சாகந்தி
இசை :ஜீ. வி பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு : அனய் ஓம் கோஸ்வாமி.
தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா
மக்கள் தொடர்பு: ‌யுவராஜ் .

நடிகர் எம். எஸ். பாஸ்கர் – ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் இணையும் ‘கிராண்ட் ஃபாதர் ‘

நடிகர் எம். எஸ். பாஸ்கர் – ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் இணையும் ‘கிராண்ட் ஃபாதர் ‘ ( GRAND FATHER) படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘கிராண்ட் ஃபாதர் ‘ படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதினை வென்றிருக்கும் நடிகர் எம் .எஸ். பாஸ்கருக்கு.. குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் எம் எஸ் பாஸ்கர் – ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் நடிப்பில் தயாராகி வரும்’ கிராண்ட் பாதர் ‘ ( GRAND FATHER) படக் குழுவினர் வாழ்த்து தெரிவித்து, அப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

நடிகரான ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் இயக்குநராக அறிமுகமாகும் ‘ கிராண்ட் ஃபாதர்’ ( GRAND FATHER) எனும் திரைப்படத்தில் எம். எஸ். பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இவர்களுடன் ஸ்மீகா ,அருள் தாஸ் , முனீஸ்காந்த் ,ஸ்ரீநாத் ,சிவா அரவிந்த் , பிரியதர்ஷினி , அஞ்சலி ராவ் , அபிநயா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்கிறார். திவாகர் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க கலை இயக்கத்தை பிரேம் மேற்கொள்கிறார்.‌ ஷிஜூ அலெக்ஸ் நிர்வாக தயாரிப்பாளராக பொறுப்பேற்று, காமெடி வித் ஹாரர் ஃபேண்டஸி படமாக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை குட்டி ஸ்டோரீஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் புவனேஷ் சின்னசாமி தயாரித்து வருகிறார். மெட்ரோ முரளி மற்றும் மெட்ரோ கிரி ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாகி இருக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ‘பார்க்கிங்’ எனும் திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதினை வென்றிருக்கும் எம். எஸ். பாஸ்கருக்கு படக் குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் அவரை கௌரவிக்கும் வகையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்டுள்ளனர். இதில் எம். எஸ். பாஸ்கரின் தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

“மதராஸி” படத்திலிருந்து சாய் அபயங்கர் குரலில் “சலம்பல”

அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில், ஏ.ஆர்.முருகதாஸின் “மதராஸி” படத்திலிருந்து சாய் அபயங்கர் குரலில் அழகான “சலம்பல” பாடல் வெளியிடப்பட்டுள்ளது!!

“மதராஸி” படத்தின் முதல் சிங்கிள் “சலம்பல” பாடல் வெளியானது !!

டைம்ஸ் மியூசிக்கின் ஒரு பிரிவான ஜங்லீ மியூசிக், ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படமான “மதராஸி” படத்திலிருந்து முதல் பாடலான “சலம்பல” பாடலை வெளியிட்டுள்ளது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்த இந்தப் பாடல், இந்த ஜோடியின் 8வது படத்தில், ரசிகர்களின் ஃபேவரைட்டாக வெளியாகியுள்ளது.

துடிப்பான குரல் மற்றும் பன்முக வித்தகராக, வளர்ந்து வரும் சக்தி வாய்ந்த இளம் திறமையாளர், சாய் அபயங்கர் தனது பிரத்யேகமான குரலில், துடிதுடிப்பான “சலம்பல” பாடலை பாடியுள்ளார். அனிருத்தின் முத்திரை இசையில், அதிரடி டியூனில், மனதை அதிரடிக்கும் தாளத்தில், அழுத்தமான பிரேக்அப் பாடலாக இப்பாடல் அமைந்துள்ளது.

“மதராஸி” படத்தின் இசையமைப்பாளர் அனிருத் கூறுகையில்,
நாங்கள் வழக்கமான பிரேக்அப் பாடல் மனநிலையிலிருந்து விடுபட்டு “சலம்பல” பாடலை, மாறுபட்ட பாடலாக உருவாக்க விரும்பினோம். இது வித்தியாசமான, கணிக்க முடியாத பாடலாக இருக்கும், மேலும் SK உடன் இணைவது எப்போதும் மிரட்டலான ஒன்றாக இருக்கும். இயக்குநர் முருகதாஸின் தொலைநோக்குப் பார்வை மிகத் தெளிவாக இருந்தது. இது மிகப்பெரியதாக இருக்க வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருந்தார். இந்தப்பாடல் கண்டிப்பாக அனைவரையும் கவரும்.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறுகையில்…,
“மதராஸி உணர்ச்சிப்பூர்வமான கதையுடன், பரபர ஆக்சனுடன் உருவாக்கப்பட்டுள்ளது. “சலம்பல” அந்த பரபரப்புக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும் என்று விரும்பினோம். நாங்கள் ஒரு வழக்கமான பிரேக்அப் பாடலை உருவாக்க விரும்பவில்லை. மனதை ஆழமாகத் தாக்கும் மற்றும் உங்களை நெகிழ வைக்கும் ஒன்றை உருவாக்க விரும்பினோம். அனிருத் அந்த நெருப்பைக் கொண்டு வந்தார், சிவகார்த்திகேயன் அதற்கு வலு சேர்த்தார். இந்தப் பாடல் வரவிருக்கும் அதிரடிகளுக்கு ஒரு முன்னோட்டமாக இருக்கும்.

டைம்ஸ்/ஜங்லீ மியூசிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மந்தர் தாக்கூர் கூறுகையில்..,
“அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் சக்திவாய்ந்த மிகப்பெரிய கூட்டணி. “சலம்பல” என்பது மீண்டும் மீண்டும் கேட்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு பாடல். இது முதல் நொடியிலேயே உங்களை ஈர்க்கும். இந்த அற்புதமான பாடலுடன் “மதராஸி” படத்தின் இசையை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.”

மேலும் ருக்மிணி வசந்த் மற்றும் வித்யுத் ஜம்வால் ஆகியோரும் இணைந்து நடித்திருக்கும் “மதராஸி” திரைப்படம், வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. “சலம்பல” இப்போது அனைத்து தளங்களிலும் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. முழு வீடியோவையும் YouTube ல் பாருங்கள்.

Watch it on YouTube: https://youtu.be/vB7Y2wcBAZw?si=Ve-iweqBWv-7L4zN

Bhoghee தமிழ் திரைப்பட விமர்சனம்…..

மலைப்பகுதி பின்னணியில் குடும்பம், கல்வி, சமூக பிரச்சினைகள் கலந்து உருவாக்கப்பட்ட கதை. நடிப்பு, இயக்கம், தொழில்நுட்ப அம்சங்கள், குறைகள் அனைத்தும் விவரமாக.

கதை சுருக்கம்

மலைப்பகுதி கிராம வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான படம். அலகார் (நாபி நந்தி) தனது சகோதரி கவிதா (ஸ்வஸிகா விஜய்) வழியே மருத்துவக் கல்வி கனவு காண்கிறார். ஆனால் கவிதாவின் திடீர் மரணம் கதையை மர்மமும் உணர்வும் கலந்த பாதையில் இட்டுச் செல்கிறது.


நடிப்பு

நாபி நந்தி, அலகாரின் கோபம், வேதனை, மனக்குழப்பம் ஆகியவற்றை உணர்ச்சியுடன் வெளிப்படுத்தியுள்ளார். ஸ்வஸிகா விஜய், குறுகிய திரைப் பரப்பிலேயே பாதிப்பை ஏற்படுத்துகிறார். வேலா ராமமூர்த்தி மற்றும் மொட்டைக் ராஜேந்திரன் ஆகியோர் துணை வேடங்களில் ஓரளவு வலிமையை கூட்டுகின்றனர்.


இயக்கம் மற்றும் திரைக்கதை

இயக்குனர் எஸ். விஜயசேகரன், உணர்ச்சி மற்றும் சமூகச் செய்தியை இணைக்க முயற்சித்தாலும், திரைக்கதை பல இடங்களில் சீரற்றதாக இருக்கிறது. முதல் பாதி சுவாரஸ்யமாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் கதை மெதுவாக நகர்வதால் சலிப்பு ஏற்படுகிறது. சில காட்சிகள் தேவையற்ற நீளத்தைக் கொடுக்கின்றன.


தொழில்நுட்ப அம்சங்கள்

ஒளிப்பதிவு மலைப்பகுதி அழகை சிறப்பாகப் பதிவு செய்துள்ளது. பின்னணி இசை காட்சிகளுடன் பொருந்துகிறது. ஆனால் பாடல்கள் மற்றும் எடிட்டிங் தரம் சராசரி மட்டுமே.


முக்கிய அம்சங்கள் (Positive & Negative)

  • நல்லவை: உணர்ச்சிமிக்க கதை, மலைப்பகுதி பின்னணி, நம்பகமான நடிப்பு, ஒளிப்பதிவு.
  • குறைபாடுகள்: சீரற்ற திரைக்கதை, மெதுவான இரண்டாம் பாதி, தேவையற்ற காட்சிகள், பாடல்கள் நினைவில் நிற்காதது.

முடிவு

Bhoghee சமூகச் செய்தியையும், குடும்ப உணர்வையும் பேசும் முயற்சியாக உள்ளது. ஆனால் சீரற்ற திரைக்கதை மற்றும் மெதுவான கதை ஓட்டம் காரணமாக படம் முழுமையான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பார்வையாளர்களுக்கு இது ஓரளவு திருப்தி தரும் சராசரி அனுபவமாகும்.

ஹவுஸ் மேட்ஸ் சினிமா விமர்சனம் – அறிவியல் புனைகதை & திகில் கலந்த புதிய தமிழ் த்ரில்லர்

🎬 தயாரிப்பு: சுவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ், ப்ளே ஸ்மித் ஸ்டியோஸ், சவுத் ஸ்டியோஸ்
🎥 தயாரிப்பாளர்கள்: சிவகார்த்திகேயன், எஸ். விஜய பிரகாஷ்
✍️ இயக்கம் & திரைக்கதை: டி. ராஜவேல்
முக்கிய நடிகர்கள்: தர்ஷன், காளி வெங்கட், அர்ஷா சாந்தினி பைஜு, வினோதினி


ஹவுஸ் மேட்ஸ் படத்தின் கதைச் சுருக்கம்

மழை பெய்யும் இரவில் இடி மின்னல் தாக்கியதில் 2012 மற்றும் 2022 ஆகிய இரண்டு காலகட்டங்களில் ஒரே F1 பிளாக்கில் வசிக்கும் இரண்டு குடும்பங்கள், டெசரக்ட் என்ற அறிவியல் விதியின் விளைவாக ஒரே வீட்டில் வாழ்வது போல அதிசயமான சம்பவங்களை சந்திக்கின்றனர்.

கார்த்திக் (தர்ஷன்) தனது காதலி அனுவை (அர்ஷா சாந்தினி பைஜு) திருமணம் செய்து புதிய வீட்டில் குடியேறுகிறார். ஆனால் அங்கே அமானுஷ்ய நிகழ்வுகள் அவர்களைச் சூழ்கின்றன. சுவற்றில் தோன்றும் மர்மமான கிறுக்கல்கள், எழுதப்பட்ட கேள்விகள் – இவை அனைத்தும் ரமேஷ் (காளி வெங்கட்) மற்றும் அவரது குடும்பத்துடன் தொடர்புடையவை என்பது தெரியவருகிறது.

அறிவியல் விளக்கம் கொண்ட இந்த சம்பவங்கள் இரு குடும்பங்களின் வாழ்க்கையை எப்படி மாற்றுகின்றன? எதிர்காலத்தில் நடக்க இருக்கும் விபத்தை அவர்கள் தடுப்பார்களா? என்பதே படத்தின் மையக்கரு.


நடிப்பு & கதாபாத்திரங்கள்

  • தர்ஷன், காளி வெங்கட் – தங்களது கதாபாத்திரங்களை இயல்பாகவும் நம்பகத்தன்மையுடனும் வெளிப்படுத்தியுள்ளனர்.
  • அர்ஷா சாந்தினி பைஜு, வினோதினி – உணர்ச்சிகரமான காட்சிகளில் வலிமையான நடிப்பு.
  • தீனா, அப்துல் லீ, மாஸ்டர் ஹென்ரிக் – கதை ஓட்டத்திற்கு வலிமை சேர்த்த துணை நடிகர்கள்.

தொழில்நுட்ப தரம்

🎼 இசை – ராஜேஷ் முருகேசனின் பின்னணி இசை திகிலும் உணர்ச்சியும் கலந்த அனுபவத்தை அதிகரிக்கிறது.
📸 ஒளிப்பதிவு – எம்.எஸ். சதீஷ் ஒரே வீட்டை இரண்டு காலகட்டங்களில் சுவாரஸ்யமாகக் காட்டியுள்ளார்.
✂️ எடிட்டிங் – ஏ. நிஷார் ஷரீஃப் சவாலான எடிட்டிங்கை நன்றாக கையாள்ந்துள்ளார்.
🎨 கலை – என்.கே. ராகுலின் கலை வடிவமைப்பு கதைக்கு வலிமை சேர்க்கிறது.


விமர்சன பார்வை

இயக்குனர் டி. ராஜவேல், டெசரக்ட் விதியை அடிப்படையாகக் கொண்டு தமிழ் சினிமாவில் வித்தியாசமான அறிவியல் புனைகதை த்ரில்லரை வழங்கியுள்ளார்.

  • பாசிட்டிவ்ஸ்: வித்தியாசமான கதை, நடிப்பு, தொழில்நுட்ப தரம்.
  • நெகட்டிவ்ஸ்: க்ளைமாக்ஸ் பகுதியில் சிறிது குழப்பம், தீர்வுகள் முழுமையாக திருப்தி அளிக்காதது.

மொத்தத்தில்

ஹவுஸ் மேட்ஸ் – அறிவியல் புனைகதை மற்றும் திகில் கலந்த வித்தியாசமான தமிழ் த்ரில்லர். சுவாரஸ்யமான கதைகளையும் விஞ்ஞான அடிப்படையிலான திரைக்கதைகளையும் விரும்பும் பார்வையாளர்களுக்கு நல்ல அனுபவமாக இருக்கும்.

சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம் : தடுமாறும் த்ரில்லர்

சின்னத்தம்பி புரொடக்ஷன் சார்பில் மகேஸ்வரன் தேவதாஸ் தயாரித்திருக்கும் சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம் படத்தை அனிஷ் அஷ்ரஃப் எழுதி இயக்கியுள்ளார்.

கதை சுருக்கம்
க்ரைம் நாவல் எழுத்தாளரின் மகனான பிரபாகரன் (வெற்றி), தந்தையின் வாழ்க்கையை தொடராக எழுத சென்னைக்கு வருகிறார். பத்திரிகையாளரான சுவாதி (ஷில்பா மஞ்சுநாத்) அந்த தொடரை எழுதும் வேளையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமையா (தம்பி ராமையா) மற்றும் திருடன் மின்னல் ராஜா (கிங்ஸ்லி) ஆகியோருடன் பிரபாகரன் பழகுகிறான். திடீரென பல கொலைகள் நிகழ, ராமையாவுக்கு உதவியாக பிரபாகரன் விசாரணையில் ஈடுபடுகிறார். இதன் பின்னணியில் இருக்கும் சைக்கோ கொலைகாரன் யார் என்பதே கதை.

நடிப்பு
வெற்றி தனது வழக்கமான பாணியிலிருந்து விலகி, விசாரணை காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். ஷில்பா மஞ்சுநாத் கதாநாயகியாக இருந்தும் அதிக பங்களிப்பு இல்லாமல் சில காட்சிகளில் மட்டுமே தோன்றுகிறார். தம்பி ராமையா நகைச்சுவை காட்சிகளில் சிரமப்பட்டாலும், உணர்ச்சி காட்சிகளில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். வில்லனாக மகேஷ் தாஸ் அச்சுறுத்தும் தோற்றத்துடன் பங்கேற்றுள்ளார். ரெடின் கிங்ஸ்லியின் நகைச்சுவை காட்சிகள் தேவையற்றதாக தோன்றுகின்றன.

தொழில்நுட்பம்
ஏ.ஜே.ஆர் இசையமைப்பு காட்சிகளுக்கு ஏற்றபடி அமைந்துள்ளது. அரவிந்தின் ஒளிப்பதிவு மற்றும் விஷாலின் எடிட்டிங் படத்தை வேகமாக நகர்த்த உதவுகின்றன.

விமர்சனம்
அனிஷ் அஷ்ரஃப், பெண்களுக்கு எதிரான குற்றங்களை மையமாகக் கொண்டு சைக்கோ த்ரில்லரை உருவாக்கியுள்ளார். ஆனால், கதாநாயகனின் விசாரணை பங்கேற்பு இயல்பாக இல்லாமல், கதையின் வலிமையை குறைக்கிறது. போலீஸ் அதிகாரியாக அவரை வடிவமைத்திருந்தால் சுவாரஸ்யம் அதிகரித்திருக்கும். சீரியஸான காட்சிகளில் நகைச்சுவை சேர்த்திருப்பது பரபரப்பை தளர்த்துகிறது.

முடிவு
சைக்கோ த்ரில்லர் முயற்சியாக வந்த சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம் சீரான திரைக்கதை இல்லாமல் தடுமாறுகிறது.