தில் ராஜு – சிரிஷ் (Dil Raju and Shirish )தயாரிப்பில், ரவி கிரண் கோலா (Ravikiran Kola,) இயக்க, ஸ்டார் ஹீரோ விஜய் தேவரகொண்டாவின் புதிய படம் பிரம்மாண்டமாக துவங்கியது !!
ஸ்டார் ஹீரோ விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படம், பிரபலமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் 59வது தயாரிப்பாக, ஹைதராபாத் நகரில் சிறப்பாக நடைபெற்ற பூஜை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இந்த படத்தை முன்னணி தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் சிரிஷ் தயாரிக்கின்றனர்.
‘ராஜா வாரு ராணி காரு’ படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இயக்குநர் ரவி கிரண் கோலா இந்த படத்தை இயக்குகிறார்.
இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
முஹூர்த்தக் காட்சிக்காக பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் கிளாப் அடிக்க, தயாரிப்பாளர் நிரஞ்சன் ரெட்டி கேமராவை ஆன் செய்தார். இயக்குநர் ஹனு ராகவபுடி முதல் காட்சியை இயக்கினார்.
கிராம பின்னணியிலான ஆக்சன் டிராமா கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் வழக்கமான படப்பிடிப்பு அக்டோபர் 16 முதல் தொடங்குகிறது.
இந்த பிரமாண்டமான படத்தை அடுத்த ஆண்டு வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
செல்வராகவன் – ஜீ வி பிரகாஷ் குமார் கூட்டணியில், ரசிகர்களை மயக்கவுள்ள ‘மெண்டல் மனதில்’ பட பாடல்கள்
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜீ. வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்க, மாறுபட்ட ரொமான்ஸ் திரைப்படமாக உருவாகி வரும் படம் ‘மெண்டல் மனதில்’. இப்படத்தின் பாடல்கள் குறித்து ஜீவி பிரகாஷ் பெருமிதமாக பகிர்ந்த தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக நடிகை மாதுரி ஜெயின் நடிக்கிறார். இவர்களுடன் முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள். அருண் ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பாலாஜி கவனிக்க, கலை இயக்கத்தை ஆர்.கே. விஜய் முருகன் மேற்கொள்கிறார். தினேஷ் குணா எக்சிக்யூட்டிவ் புரொடியுசராக பொறுப்பேற்றிருக்கும் இந்தத் திரைப்படத்தை பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜீ. வி. பிரகாஷ் குமார் தயாரிக்கிறார்.
முன்னதாக “ஆயிரத்தில் ஒருவன்” மற்றும் “மயக்கம் என்ன” என வெவ்வேறு விதமான களங்களில், இப்போது வரை கொண்டாப்படும் இரண்டு பிளாக்பஸ்டர் ஆல்பங்களை தந்த கூட்டணி, மீண்டும் இணைந்திருப்பதால், இப்படத்தின் இசை ஆல்பம் குறித்து, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில், ஜீவி பிரகாஷ் படத்தின் ஆல்பம் பற்றிய தகவலைப் பகிர்ந்து, அவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.
படப்பிடிப்பு புகைப்படத்தை பகிர்ந்து ஜீவி பிரகாஷ் தெரிவித்துள்ளதாவது..,
“ஜீனியஸ் ஒன் அண்ட் ஒன்லி செல்வராகவன் சாருடன் ஷீட்டிங்கில் இருக்கிறேன். “மெண்டல் மனதில்” என் மனதுக்கு மிக நெருக்கமான படம். இந்த ஆல்பம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல், ரசிகர்களுக்கும் இது புதிய அனுபவமாக இருக்கும்.”
இப்படத்தின் முதல் மூன்று கட்ட படப்பிடிப்புகள் முடிந்த நிலையில், தற்போது நான்காவது கட்ட படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் முதல் சிங்கிள், டீசர் பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
முன்னணி நட்சத்திர நடிகர் நிவின் பாலி தனது பிறந்தநாளைக் கொண்டாடும் இவ்வேளையில், அவரது ரசிகர்கள் அவருடைய திரை வாழ்க்கையின் ஒளிமிகு கட்டத்தை கொண்டாடுகிறார்கள். வரவிருக்கும் ஆண்டு, நிவின் பாலிக்கு மிகச்சிறந்த ஆண்டாக பல்வேறு வகை படங்களால் நிரம்பியுள்ளது. இது ஆவலுடன் காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.
நிவின் பாலியின் அடுத்தடுத்த படங்கள் ஒவ்வொன்றும், வெவ்வேறு ஜானர்களில், வெவ்வேறு கதைக் களங்களில், ஆச்சரியம் தரும் பட வரிசையைக் கொண்டுள்ளது.
முதலில், 2025 கிறிஸ்மஸில் வெளியாகவிருக்கும் “சர்வம் மாயா” என்ற ஹாரர்-காமெடி திரைப்படம் மூலம் நிவின் பாலி, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஜு வர்கீஸுடன் மீண்டும் இணைந்துள்ளார். இதைத்தொடர்ந்து, பிரேமலு படக்குழுவின் “பெத்லகேம் குடும்ப யூனிட்” என்ற ரொமான்ஸ் காமெடி படம் வெளியாகிறது. இதில் மமிதா பைஜு நாயகியாக நடிக்கிறார். இப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த ஒரு முழுமையான நிவின் பாலி எண்டர்டெய்னராக அமையும்.
நிவின் பாலியின் பன்முக திறமை இத்தோடு முடிவடையவில்லை. இந்த நவம்பரில் வெளியாகவிருக்கும் “பேபி கேர்ள்” என்ற திரில்லர் படத்தில், நிவின் பாலி தனது தீவிரமான அழுத்தமிகு நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதேசமயம், தமிழ் திரைப்பட உலகிலும் அவரது பங்கு மேலும் வலுப்பெற்று வருகிறது. இயக்குநர் ராம் இயக்கியுள்ள “ஏழு கடல் ஏழு மலை” என்ற சைக்கலாஜிகல் ரொமான்ஸ் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
தமிழ் திரையுலகின் அடுத்தக்கட்ட மிகப்பெரிய அங்கீகாரமாக, 2026-ல் வெளியாகும் “பென்ஸ்” திரைப்படத்தில், நிவின் பாலி லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் (LCU)-இல் வில்லன் வால்டர் என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். அவரது இந்த சக்திவாய்ந்த பட வரிசையின் உச்சமாக, இயக்குநர் B.உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில், கோகுலம் மூவீஸ் தயாரிக்கும் ஒரு அதிரடி பொலிட்டிக்கல் திரில்லர் திரைப்படமும் உருவாகி வருகிறது.
திரை உலகைத் தாண்டியும், நிவின் பாலியின் படைப்பாற்றல் மேலும் விரிவடைந்துள்ளது . அவர் தனது முதல் வெப் சீரிஸ் “Pharma” மூலம் டிஜிட்டல் துறையிலும் அறிமுகமாகிறார். இது மெடிக்கல் எக்ஸிக்யூட்டிவ் உலகின் பின்னணியில் ஒரு தீவிரமான அதிரடி திரில்லர் டிராமா தொடராக உருவாகி வருகிறது.
தனது தயாரிப்பு நிறுவனமான Pauly Jr. Pictures மூலம், அவர் பல பெரிய முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார் — அதில் பான்-இந்திய சூப்பர்ஹீரோ படம் “மல்டிவெர்ஸ் மன்மதன்” ( Multiverse Manmadhan ) மற்றும் நயன்தாரா நடிக்கும் “டியர் ஸ்டூடண்ட்ஸ்” ஆகியவை முக்கியமானவை.
நிவின் பாலி, ரசிகர்கள் அவரிடம் பெரிதும் நேசிக்கும், வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து தனது திறமையை நிரூபித்ததோடு, புதிய சவால்களையும் தைரியமாக ஏற்று வருகிறார். அவரது ரசிகர்களுக்கு, இந்த பிறந்தநாள் ஒரு புதிய சினிமா திருவிழாவின் தொடக்கமாக அமைந்துள்ளது
நடிகர் விக்ரம் பிரபு & L.K.அக்ஷய் குமார் நடிப்பில் “சிறை” (Sirai) படம், வரும் டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று உலகமெங்கும் வெளியாகிறது!!
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு & L.K அக்ஷய் குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள “சிறை” படம், வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். மற்றும் இப்படத்தின் சேட்டிலைட் & ஒடிடி உரிமைகளை Zee நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
டாணாக்காரன் இயக்குநர் தமிழ், தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை இயக்கியுள்ளார்.
ஒரு காவலதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையம்.
நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, ஜோடியாக நடிகை அனந்தா (Anantha ) நடித்துள்ளார். இப்படத்தில் தயாரிப்பாளர் SS லலித் குமார் மகன் LK அக்ஷய் குமார் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக அனிஷ்மா (Anishma) நடித்துள்ளார்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் SS லலித்குமார் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். ஸ்டண்ட் காட்சிகளை பிரபு வடிவமைத்துள்ளார். நிர்வாக தயாரிப்பாளராக அருண் K மற்றும் மணிகண்டன் பணியாற்றியுள்ளனர்.
முன்னதாக ஒரு நீதிமன்ற பின்னணியில் கதாப்பாத்திரங்களின் உணர்வுகளை, அழுத்தமாக வெளிப்படுத்தும்படி வெளியான, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், படக்குழு தற்போது வெளியீட்டு தேதியை ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது. இது ரசிகர்களை பெரிதும் உற்சாகப்படுத்தியுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் டீசர் இசை மற்றும் டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது
இங்கு வந்த அனைத்து ஊடக நண்பர்களுக்கும் என் அன்பான நன்றி. இந்த படத்துக்கு “கம்பி கட்டுன கதை” என்று தலைப்பு வைத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. கதை அமைப்பை மேலும் சிறப்பாக உருவாக்க, பல விவாதங்களை நடத்தினோம். இந்தப் படம் கடந்த 22 ஆண்டுகளாக என்னுடன் பயணித்து வந்த ஒரு கனவு.
ஒரு காமெடி சாமியாரை மையமாகக் கொண்டு கதை உருவாக்கியிருந்தோம். நட்டி சார் இப்படத்திற்கு ஒப்புதல் அளித்ததும், நாங்கள் எழுதிய கதையே முழுமையாக மாறிவிட்டது. எல்லாருடைய வாழ்க்கையும் இப்படத்தில் மாறுபட்ட வகையில் வெளிப்பட்டிருக்கிறது. இந்த படம் எனது நண்பர்களுக்காக ஒரு வாய்ப்பாக அமைந்தது. ஆனால் இவர்கள் அனைவருமே அவர்களது துறைகளில் சிறந்தவர்கள்.
இந்த படம் மங்காத்தா பிக்சர்ஸ் தளத்தில் மிகவும் வலிமையாக உருவாகியுள்ளது. அனைவரும் மிகச் சிறப்பாக வேலை செய்துள்ளனர். இது ஒரு லாஜிக் இல்லாத கதை அல்ல – பகுதி 2 எடுக்கப்படும் அளவிற்கு வாய்ப்பு உள்ளது. எல்லோரும் இதைப் பார்த்து உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள். 15 நாட்களில் படம் வெளியாகும். அனைவருக்கும் என் நன்றிகள்.
இங்கு வந்த அனைவருக்கும் வணக்கம். இங்கு இருக்கிற ஒவ்வொருவரும் என் நண்பர்கள்தான். இந்த படத்தை பற்றி சொல்ல வேண்டியது நிறைய இருக்கிறது. நாங்கள் இந்த கதையை உருவாக்கியதில் பெருமை கொள்கிறேன். இது ஒரு நல்ல முயற்சி. எல்லோரும் உறுதியாக இந்த படத்தை பார்த்து ஆதரிக்க வேண்டும். நன்றி!
🎤 கதாநாயகன் நட்டி அவர்கள் பேசியது:
அனைவருக்கும் வணக்கம். தயாரிப்பாளர் ஐயாவிற்கு நன்றி. தயாரிப்பு நிறுவனம் மங்காத்தா மூவீஸ் – இவர்களுக்கு நன்றி.
முதலாம் படம் எடுக்கிறதுன்னால, பட்ஜெட் குறைக்க முயற்சி பண்ணுவாங்க. ஆனா எதுவும் குறையாம பண்றவங்க – அவருதான் இந்த தயாரிப்பாளர். ஒரு சாதாரண விஷயம் தான், கதை இங்கே இருந்தது – ஆனா ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் படம் உருவானது.
ஆர்ட் டைரக்டர் சிவா, கேமராமேன் ஜெய் அவர்களுக்கு நன்றி. இந்த படத்துக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி.
முருகானந்தம் சார், சிங்கம் புலி, தயாரிப்பாளர், இயக்குனர் கொடுத்த ஆதரவுதான் இந்த படத்தை வெற்றியாக்கியிருக்கு.
ஸ்ரீரஞ்சினி, ஷாலினி – நீங்கள் இருவரும் அருமையாக நடித்தீர்கள். வாழ்த்துகள்! முத்துராமன் சார், மகேஷ் சார், சாம்ஸ் சார், கோதண்டம் சார் – அனைவருக்கும் நன்றி.
இந்த படத்தில் ஸ்கிரிப்ட் என்ன வேண்டும் என்றதோ அதைத்தான் நாங்கள் செய்தோம். அனைத்து டெக்னீஷியன்களுக்கும் நன்றி.
மாஸ் ஆடியோ அவர்களுக்கும், உத்தரா புரொடக்ஷன்ஸ் அவர்களுக்கும் நன்றி. பத்திரிகையாளர், ஊடக நண்பர்களுக்கும் நன்றி.
இந்த படம் தீபாவளிக்கு திரையரங்கில் வெளியாகிறது – கண்டிப்பா வந்து பாருங்க. நன்றி. குறிப்பாக இசையமைப்பாளர் சதீஷ் அவர்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்துகள். இசை அமைப்பாளர் சதீஷ் அவர்கள் பேசியது:
எல்லோருக்கும் வணக்கம்.
இன்று எனக்கு ஒரு சிறப்பான நாள். இது எனது வாழ்க்கையில் ஒரு மைல்கல் நாள்.
இந்தப் படத்தை நான் செய்ததில்லை; இந்த படமே என்னை தாண்டி வந்து என்னை உருவாக்கியது.
“ஏதும் இல்லா எல்லாம்” பாடலுக்காக எனது குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
பாடலாசிரியர் கார்த்தி, பாடகர்கள் வி.வி. பிரசன்னா மற்றும் சஹானா அவர்களுக்கும் நன்றிகள்.
மாஸ் ஆடியோ உரிமையை வாங்கியவர்களுக்கு நன்றிகள்.
முக்கியமாக, என் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த நன்றிகள். 🙏
🎬 இயக்குனர் மற்றும் நடிகர் சிங்கம்புலி அவர்கள் பேசியது:
“கம்பி கட்டும் கதை” தீபாவளிக்கு வெளிவரவுள்ளது. இந்த சிறப்பு விழாவில் பங்கேற்கும் இயக்குநர் அவர்களுக்கு வணக்கம், தயாரிப்பாளர் அவர்களுக்கு என் நன்றிகள்.
இந்தப் படத்தில் நாமும் ஒரு சிறிய பங்களிப்பு செய்ய இருக்கிறோம். நடிகர் நட்டி சர் உடன் நடிக்கப்போகிறோம்.
எனக்கு முருகானந்தம் அவர்களை மிகவும் பிடிக்கும் – நல்ல மனுசன், நல்ல பேச்சாளி.
நட்டி சர், நீங்களும் எனக்கு மிகவும் பிடித்தவர்கள். “மிளகா”யிலிருந்து “மகாராஜா” வரைக்கும் எனது பயணத்தில் நீங்களும் இருந்தீர்கள்.
இந்தப் படத்தில் உள்ள அனைவரும் மிகச் சிறந்த வேலை செய்துள்ளனர் – இசையமைப்பாளர் சதீஷ் அவர்களுக்கு வாழ்த்துகள், எடிட்டர் ஃபாசில் அவர்களுக்கு நன்றி.
நடிகர் சாம்ஸ், நாயகி மற்றும் இரண்டாம் நாயகி ஆகியோர் எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கின்றனர்.
இந்த உலகம் எங்களுக்குக் கொடுக்கிற ஒரு வித்தியாசமான வாய்ப்பு இது. மக்கள் அளிக்கும் புகழே நமக்கு பாராட்டு.
மீடியா நண்பர்களே – இந்தப் படத்தை ஆதரிக்கவும். இது ஒரு நல்ல கதை, ஒரு நல்ல படைப்பு. அனைவருக்கும் அது கொண்டு சேரட்டும் என வாழ்த்துகிறேன்.
அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!
✍️ பாடல்வரிகள் எழுதிய கு. கார்த்திக் அவர்கள் பேசியது:
அன்னை தமிழ் மற்றும் நம் மொழிக்குப் பெருமை சேர்க்கும் வகையில் இந்த படத்தில் பாடல் எழுத வாய்ப்பு கிடைத்தது. கம்பி கட்டுன கதை ஒரு குடும்பத்துக்கு ஏற்ற படம். தீபாவளி வெளியீடாகும் இப்படத்திற்கு நான்கு பாடல்களை எழுதியிருக்கிறேன். தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவிற்கு என் நன்றிகள். பத்திரிகை நண்பர்கள் இந்த படத்தை மக்களிடம் நல்ல முறையில் கொண்டு சேர்க்க வேண்டுகிறேன். என்னை இந்த படத்துக்காக அணுகிய சசி செல்வம் அவர்களுக்கு நன்றி!
✍️ பாடல்வரிகள் எழுதிய ஆப்பா ராஜா அவர்கள் பேசியது:
அனைவருக்கும் வணக்கம். இந்த இசைவெளியீட்டு விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி. இப்போது தமிழ் பாடல்கள் குறைந்து வருவதால் இந்த மாதிரியான படங்களுக்கு உங்கள் ஆதரவு மிகவும் தேவையாக இருக்கிறது. நன்றி!
🎨 கலை இயக்குநர் சிவகுமார் அவர்கள் பேசியது:
அனைவருக்கும் என் நன்றிகள். இந்தப் படத்திற்கு நீங்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்.
🎥 கேமராமேன் MRM ஜெய் சுரேஷ் அவர்கள் பேசியது:
இங்கு வந்த பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றி. கம்பி கட்டுன கதை ஒரு சிறந்த தீபாவளி ட்ரீட். எல்லோரும் இதைப் பார்த்து ஆதரிக்க வேண்டும். தயாரிப்பாளர் ரவி சார் மற்றும் உத்திரா புரொடக்ஷன்ஸ் குழுவிற்கு நன்றி. நட்டி சார், சிங்ம் புலி சார், சாம் சார் ஆகியோர்களுடன் பணியாற்றிய அனுபவம் சிறப்பாக இருந்தது. நன்றி!
🎭 நடிகர் KPY Kothandam அவர்கள் பேசியது:
மேடையில் அமர்ந்துள்ள ஜாம்பவான்களுக்கு வணக்கம். இந்த படம் வெற்றிபெறும். ரசிகர்களுக்கு நன்றி. எல்லோரும் மொத்தமாக இதில் வேலை செய்திருக்கிறோம்.
📱நாம டப்பிங் பண்ணிக்கிட்டே இருந்தோம் – நமக்கு பேசற மொழியே தெரியாம போச்சு! ஆனா இந்த படத்தை பற்றி நாம பேச வேண்டியது தான். ஒரு நடிகனாக நான் என்ன பண்றேன்னு கேட்டா, அது உங்கள் எதிர்பார்ப்புக்கு மேல இருக்கும். இந்தப் படத்தை ஹார்ட் ஒர்க் போட்டு செஞ்சிருக்கார் நட்டி சார். நேரமும் பணமும் இழந்துதான் இந்த படத்தை மேடை ஏற்றிருக்கிறார். எல்லோரும் தியேட்டர்ல வந்து பாருங்க. நன்றி.
🎭 நடிகர் முத்துராமன் அவர்கள் பேசியது:
இங்கு வந்த அனைவருக்கும் வணக்கம். மங்காத்தா மூவிஸ் மற்றும் உத்திரா புரொடக்ஷன்ஸ் குழுவிற்கு நன்றி. கம்பி கட்டுன கதை ஒரு நல்ல காமெடி படம். பாத்து நல்லா சிரிச்சிட்டு வீடு போங்க. நன்றி!
🎬 இயக்குநர் ராஜநாதன் பெரியசாமி அவர்கள் பேசியது:
அனைவருக்கும் வணக்கம். இங்கு வந்த அனைவருக்கும் நன்றி. எலிசபெத் தலையில கம்பி இருக்கிறது – அதாவது காமெடியா வைச்சிருக்கோம். இந்த படத்தை அவ்வளவு மாஸாகவே செஞ்சிருக்கோம். இசை உரிமைகள் வாங்கிய நிறுவனத்திற்கும் நன்றி. ஹரி உத்திரா அவர்களுக்கு நன்றி. இன்னும் நிறைய பேச வேண்டியது இருக்கிறது. இப்போது சொல்ல முடியாத நிலை. நன்றி!
🎤 முதல் கதாநாயகி ஸ்ரீரஞ்சினி அவர்கள் பேசியது:
அனைவருக்கும் வணக்கம். இங்கு இருக்கிறதற்கே எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. மலையாளத்தில் மூன்று படங்களில் நடித்திருக்கிறேன். தமிழில் இது எனது முதல் படம்.
எல்லாரும் எனக்கு மிகவும் நல்ல ஆதரவு தந்தார்கள். இந்த குழுவுடன் பணியாற்றியது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அனைவருக்கும் நன்றி. தயவுசெய்து இந்த படத்தை திரையரங்குகளில் வந்து பார்த்து ஆதரவு அளியுங்கள். நன்றி!
🌟 இரண்டாவது ஹீரோயின் ஷாலினி அவர்கள் பேசியது:
வணக்கம் அனைவருக்கும். பத்திரிகையாளர் மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றி. உங்கள் ஆதரவு மிகவும் தேவை. என் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் அவர்களுக்கு நன்றி. இந்த படத்தில் நான் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இது என் கரியரில் ஒரு முக்கிய படியாக இருக்கும் என்று நம்புகிறேன். நன்றி!
இவ்வாறு, “கம்பி கட்டுன கதை” படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பலர் உரையாற்றி, படத்துக்கான ஆதரவை பகிர்ந்துகொண்டனர். படம் தீபாவளிக்கு வெளியாகிறது. அனைவரும் திரையரங்கில் சென்று படத்தை பார்த்து ஆதரியுங்கள்!
🎤 விநியோகஸ்தர், உத்தரா புரொடக்ஷன்ஸ் ஹரி உத்தரா அவர்கள் பேசியது:
‘கம்பி கட்டுன கதை’ தீபாவளிக்கு வெளியாகிறது. இந்த படத்தை எங்களுக்கு கொடுத்த மங்காத்தா மூவீஸ் அவர்களுக்கு நன்றி. இந்த படத்தை எடுத்துக் கொண்டதற்கு என்பது பெருமை.
இது ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமா இருக்கும் என்று நம்புகிறேன். நாங்கள் இதற்கு முன்பு ‘வெப்’ என்னும் படத்தை வெளியிட்டோம். அந்த மாதிரியே இந்த படத்தையும் அனைவரும் ஒட்டுமொத்தமாக எடுத்துக்கணும்.
பல தமிழ்ச் சொற்கள் (ஸ்லாங்) இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மொத்தமாக இந்த படத்தை வெளியிடுவது, இதற்கு நிறைய முதலீடு செய்யப்பட்டிருக்கிறது என்பதில் நாங்கள் பெருமையடைகிறோம். இதில் நகைச்சுவை மிகுந்த அளவில் இடம் பெற்றுள்ளது. ‘ஜாவா’ சுந்தர்ரேசன் சார் நடித்திருக்கிறார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறேன். நன்றி!
🎤 இரண்டாவது நாயகன் முகேஷ் ரவி அவர்கள் பேசியது:
இங்கு வந்துள்ள அனைவருக்கும் வணக்கம். ‘கம்பி கட்டுன கதை’ என் முதல் படம். இந்த படத்தின் நடிகர், தொழில்நுட்பக் குழுவுடன் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது.
நேரலையில் (ஸ்பாட்ல) வசனம் பேசினேன். அந்த வாய்ப்பை வழங்கிய இயக்குனர் ராஜநாதான் பெரியசாமி சார் அவர்களுக்கு நன்றி. இந்த வாய்ப்பு கொடுத்ததற்காக நன்றி. அனைவருக்கும் நன்றிகள்.
🎤 திரைக்கதை ,வசனம் எழுத்தாளரும் ஆன நடிகர் முருகானந்தம் அவர்கள் பேசியது:
அனைவருக்கும் வணக்கம். குறுகிய கால கட்டத்தில் இந்த படத்தை எடுத்தது மிகச் சிறப்பான விஷயம். ஃபாசில் அவர்களுக்கு நன்றி.
அலுவலகம் போனதுமே 11 பேர் கொண்ட குழு இருந்தாங்க, அதில கொஞ்சம் பேசினாங்க. அப்படி தானே இந்த பயணம் துவங்கியது.
‘ஹீரோ யாருனு கேட்டாங்களே, நட்டி சார் சொன்னாங்க’—அப்படியே இந்த படம் துவங்கியது. கதை ஒத்துக்கொண்டதும், வண்டியை பிடிச்சு ஊருக்கு போய் படத்தையும் எடுத்தோம். அனைவரையும் குடும்பமா கவனிச்சீங்க. நீங்க நல்லா இருக்கணும்.
சதீஷ் இசையமைப்பாளர், நட்டி சார் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. பி.ஆர்.ஓ. ஷேக் அவர்களுக்கு நன்றி. சிங்கம் புலி அண்ணா, முத்துராமலிங்கம் சார், ஷாலினி, கோதண்டம், நட்டி சார், ரவி சார், மகேஷ் சார் எல்லாருக்கும் நன்றி.
இந்த படத்துக்குப் பிறகு ‘சதுரங்க வெட்டைக்கு முன், சதுரங்க வேட்டைக்கு பின்’னு நினைக்கிறேன். நன்றி!
🎤 ‘ஜாவா’ சுந்தரேசன் அவர்கள் பேசியது:
ஊடக நண்பர்களுக்கு வணக்கம். அருமையான ‘ரோசாப்பூவை’ குடுத்து வரவேற்றது நலமாக இருக்கிறது. நல்ல படம் எடுத்திருக்காங்க. சின்னதா, பெரியதா இல்ல – நல்ல படம் எடுக்கணும், மக்களிடம் சேரணும் என்பதுதான் முக்கியம்.
இந்த மாதிரி ஒரு நல்ல வேடம் கொடுத்த தயாரிப்பாளர், இயக்குனருக்கு நன்றி. இந்த படத்தை எடுத்துப் பார்த்து மக்களை சிரிக்க வைக்கணும் என்பதே அவருடைய நோக்கம் – அது ஒரு பெரிய விஷயம்.
நட்டி சார், ஹீரோ முகேஷ், சக நடிகர்கள், இசையமைப்பாளர் சதீஷ் – எல்லாருக்கும் நன்றி. தீபாவளிக்கு ‘கம்பி கட்டுன கதை’ படத்தை திரையரங்கில் வந்து பார்த்து ஆதரவு அளியுங்கள். நன்றி!
தென் இந்தியாவின் முன்னணி OTT தளங்களில் ஒன்றான சன் நெக்ஸ்ட், தனது அடுத்த நேரடி OTT வெளியீடாக “ராம்போ” திரைப்படத்தை, வரவிருக்கும் தீபாவளி சிறப்பு படமாக அக்டோபர் 10ஆம் தேதி வெளியிடுகிறது.
அருள்நிதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தை, கொம்பன், குட்டிப்புலி, புலிக்குத்தி பாண்டி, விருமன் போன்ற அழுத்தமான கிராமப்புற கமர்ஷியல் படங்களைத் தந்த, புகழ் பெற்ற இயக்குநர் முத்தையா இயக்கியுள்ளார். தன் வழக்கமான பாணியிலிருந்து விலகி, இம்முறை நகர வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கியுள்ள “ராம்போ” நகர பின்னணியில் ஒரு அதிரடி ஆக்சன் கமர்ஷியல் பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளது.
ஒரு தைரியமான இளம் குத்துச்சண்டை வீரன், ஒரு பெண்ணுக்கு (தன்யா ரவிச்சந்திரன்) உதவ முயற்சிக்கும் போது தொடங்கும் கதை, அதன்பின் அவன் வாழ்க்கையில் நடக்கும் அதிரடி சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. முத்தையாவின் முத்திரை இயக்கத்தில், உணர்வுப்பூர்வமான அம்சங்களுடன், அதிரடி, ஆக்சன் நிரம்பிய அழுத்தமான படமாக இப்படம் வெளிவரவுள்ளது.
படம் குறித்து இயக்குநர் முத்தையா கூறியதாவது.., “இந்தப் படம் எனது பாணியிலிருந்து மாறுபட்டு, ஒரு புதிய கதையை வேறு பாணியில் சொல்லும் வாய்ப்பை எனக்கு வழங்கியது. அருள்நிதியுடன் இணைந்து பணிபுரிந்தது உற்சாகமான அனுபவமாக இருந்தது. ‘ராம்போ’ படத்தை கண்டிப்பாக ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன்.”
பிக் பாஸ் புகழ் ஆயிஷா இந்த படத்தின் மூலம் பெரிய திரைக்கு அறிமுகமாகிறார். மேலும் மலையாள நடிகர் ரஞ்சித் சஜீவ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஹரீஷ் பேரடி மற்றும் VTV கணேஷ் முக்கியமான வேடங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
பிரபல ஒளிப்பதிவாளர் R.D. ராஜசேகர் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார், முன்னணி இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். நகரப் பின்னணியில் ஆக்சன், அதிரடி மற்றும் உணர்ச்சிரமான பொழுதுபோக்கு படமாக “ராம்போ” உருவாகியுள்ளது.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டிரெய்லர் ஏற்கனவே ரசிகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
MISHRI ENTERPRISES திரு செயின்ராஜ் ஜெயின் அவர்களின் தயாரிப்பில் ஆக்சன் கிங் அர்ஜூன் நடிப்பில் மாபெரும் வெற்றிபெற்ற “ஜெய்ஹிந்த்” (முதல் பாகம்) மற்றும் சமீபத்தில் வெளியான “அஷ்டகர்மா” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ரஜினி கிஷன் தயாரித்து நடிக்க, இயக்குநர் M ரமேஷ் பாரதி இயக்கத்தில் கலக்கலான ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் “ரஜினி கேங்”.
நேற்று வெளியான இப்படத்தின் புதுமையான ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
மறைந்த எஸ். செயின்ராஜ் ஜெயின் அவர்களால் நிறுவப்பட்ட MISHRI ENTERPRISES, மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக திரைப்பட பைனான்ஸ், விநியோகம் மற்றும் தயாரிப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஜெய் ஹிந்த், அஷ்டகர்மா ஆகியவற்றின் வெற்றிக்குப் பிறகு, ரஜினி கேங் அவர்களின் மூன்றாவது பெரிய தயாரிப்பாக, பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
ஊரை விட்டு ஓடிப்போகும் ஒரு காதல் ஜோடி, கல்யாணம் செய்துகொள்ளும் நிலையில், அவர்கள் எதிர்பாராவிதமாக சந்திக்கும் அமானுஷ்ய அனுபவங்கள், அதை தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் என கலகலப்பான திரைக்கதையில், கமர்ஷியல் ஹாரர் காமெடியாக இப்படம் உருவாகியுள்ளது.
பிஸ்தா திரைப்படம் மற்றும் உப்பு புளி காரம், கனா காணும் காலங்கள் போன்ற வெப் சீரிஸ்களை இயக்கிய இயக்குநர் M ரமேஷ் பாரதி இப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் ரஜினி கிஷன் நாயகனாக நடித்துள்ளார், அவருக்கு ஜோடியாக திவிகா நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், ராம் தாஸ்,கூல் சுரேஷ், கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ப்ளூ எனும் நாய் படம் முழுக்க வரும் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் அசத்தியுள்ளது.
பொறியாளன், போங்கு, சட்டம் என் கையில் போன்ற படங்களின் இசையமைப்பாளர் M.S. ஜோன்ஸ் ரூபர்ட் இசையில் 4 அற்புதமான பாடல்கள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளது.
இப்படத்தின் டைட்டில் டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து 2.5 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையின் படப்பை, மறைமலைநகர் போன்ற பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த வருட இறுதியில் இப்படத்தைத் திரைக்குக் கொண்டுவரப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
தொழில் நுட்ப குழு இயக்கம் : M. ரமேஷ் பாரதி இசை : M.S. ஜோன்ஸ் ரூபர்ட் எடிட்டிங் : R K . வினோத் கண்ணா ஒளிப்பதிவு : N. S. சதீஷ்குமார் மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)
இந்தியாவெங்கும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “விருஷபா” திரைப்படம் வரும் நவம்பர் 6, 2025 அன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியிடப்படவிருப்பதாக தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். காதல், விதி, பழி ஆகியவை ஒன்றாக கலந்த ஒரு காவியமாக உருவாகியுள்ள இந்தப் படம், தந்தை–மகன் பந்தத்தின் ஆழத்தையும் உணர்வையும் வலியுறுத்துகிறது.
இப்படத்தின் தயாரிப்பாளரான ஏக்தா R கபூர் கூறியதாவது:
“எங்களின் மிக பிரம்மாண்ட படைப்பான ‘விருஷபா’ நவம்பர் 6 அன்று வெளியாக இருப்பதை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இது என் மனதுக்கு நெருக்கமான கதை – அழுத்தமான எமோஷன், டிராமா, காதல் ஆகிய அம்சங்களுடன் இந்திய சினிமாவின் மாபெரும் காவியமாக உருவாகியுள்ளது. இப்படத்தை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு கொண்டு வர வெகு ஆவலாக உள்ளோம்.”
இயக்குநர் நந்த கிஷோர் கூறியதாவது..,
“விருஷபா மூலம் எமோஷன் நிறைந்த பிரம்மாண்ட காவியத்தை உருவாக்க விரும்பினோம். இது உறவுகள், தியாகம், விதி ஆகியவை மோதிக்கொள்ளும் ஒரு உணர்ச்சி மிகுந்த கதை. இப்படம் உருவாக படக்குழு முழுவதும் மிகக் கடுமையாக உழைத்துள்ளனர். நவம்பர் 6, 2025 அன்று உலகம் முழுவதும் இதை பார்வையாளர்கள் காணப்போகிறார்கள் என்பது எனக்கு பெரு மகிழ்ச்சி தருகிறது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட டீசர், போர்வீர அரசராக மோகன்லால் அவர்களை வலிமையான தோற்றத்தில் காட்டியது. “When Destiny Calls, Blood Must Answer” என்ற வாக்கியமும், “Reborn Love – A Love So Strong, It Defies Death” என்ற உணர்ச்சி பூர்வமான டேக்லைனும் ரசிகர்களை கவர்ந்தன. டீசரின் இறுதியில் கடந்தகாலம் மற்றும் நிகழ்காலம் ஒன்றிணையும் காட்சிகள் கதையின் இரு உலகங்களையும் சுவாரஸ்யமாக வெளிப்படுத்தியுள்ளது.
இப்படத்தில் மோகன்லாலுடன் சமர்ஜித் லங்கேஷ், ராகினி திவேதி, நயன் சரிகா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். மேலும் பல முக்கிய நடிகர்களும் இணைந்துள்ளனர். இசை – சாம் C.S., ஒலி வடிவமைப்பு – ரசூல் பூக்குட்டி, வசனம் – SRK, ஜனார்த்தன் மகரிஷி, கார்த்திக், ஸ்டண்ட் இயக்கம் – பீட்டர் ஹெய்ன், ஸ்டண்ட் சில்வா, நிகில்.
கனெக்ட் மீடியா ( Connekkt Media )மற்றும் பாலாஜி டெலிபிலிம்ஸ் (Balaji Telefilms Ltd), அபிஷேக் S வியாஸ் ஸ்டுடியோஸ் (Abishek S Vyas Studios) நிறுவனங்கள் இணைந்து வழங்கும் இப்படத்தை, ஷோபா கபூர், ஏக்தா R கபூர், CK பத்மகுமார், வருண் மாதுர், சௌரப் மிஸ்ரா, அபிஷேக் S. வியாஸ், ப்ரவீர் சிங், விஷால் குர்னானி, ஜூஹி பாரேக் மேத்தா ஆகியோர் தயாரிக்கின்றனர்.
“விருஷபா” ஒரு தந்தை–மகன் பந்தத்தை மையமாகக் கொண்ட உணர்ச்சி பூர்வமான ஆக்ஷன் அதிரடி திரைப்படம். கதை சொல்லல், டிராமா, எமோஷன், காட்சியமைப்பு ஆகிய அனைத்திலும் இது மறக்க முடியாத சினிமா அனுபவமாக உருவாகியுள்ளது.
இப்படம் மலையாளம் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு, தமிழ், இந்தி மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியிடப்படுகிறது. இப்படம் உலகம் முழுக்க வரும் நவம்பர் 6, 2025 வெளியாகிறது.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சம்யுக்தா நடிப்பில், பூரி ஜெகன்நாத், சார்மி கௌர், JB நாராயணராவ் கொண்ட்ரொல்லா, பூரி கனெக்ட்ஸ், JB மோஷன் பிக்சர்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் #PuriSethupathi படத்தில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், இணைந்துள்ளார்.
தனித்துவமான இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணையும் பான்-இந்தியா திரைப்படமான இன்னும் பெயரிடப்படாத #PuriSethupathi பட படப்பிடிப்பு வெகு வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை பூரி ஜெகன்நாத் தனது பூரி கனெக்ட்ஸ், (Puri Connects) நிறுவனத்தின் மூலம், சார்மி கௌர் மற்றும் JB நாராயணராவ் கொண்ட்ரொல்லா (JB Motion Pictures) ஆகியோருடன் இணைந்து தயாரித்து வருகிறார்.
தெலுங்கு திரையுலகின் அதிர்ஷ்ட நாயகி சம்யுக்தா, இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இத்திரைப்படத்தின் நடிகர், தொழில்நுட்பக் குழுவின் விபரங்களை படக்குழு ஒவ்வொன்றாக வெளியிட்டு வரும் நிலையில், சமீபத்தில் “அர்ஜுன் ரெட்டி”, “கபீர் சிங்”, “அனிமல்” போன்ற படங்களில் தனது இசையால் ரசிகர்களைக் கவர்ந்து பிரபலமான தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், இப்போது #PuriSethupathi படத்திற்காக இசையமைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எமோஷன் (Emotion) ஆக்ஷன் மற்றும் மாஸ் என அனைத்தும் கலந்த புதுமையான இசை அனுபவத்திற்குத் தயாராகுங்கள்.
நடிகை தபு மற்றும் விஜய் குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில், பிரம்ஹாஜி மற்றும் VTV கணேஷ் நகைச்சுவை வேடங்களில் தோன்றுகின்றனர்.
படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்கவுள்ளது, இதில் முக்கிய நடிகர்கள் பங்கேற்கிறார்கள்.
இந்த பான்-இந்தியா எண்டர்டெய்னர் #PuriSethupathi படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது.
நடிகர்கள் : விஜய் சேதுபதி, சம்யுக்தா, தபு, விஜய் குமார்
தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்குநர் : பூரி ஜெகன்நாத் வழங்குபவர் – சார்மி கௌர் தயாரிப்பாளர்கள்: பூரி ஜெகன்நாத், சார்மி கௌர் தயாரிப்பு நிறுவனம் : பூரி கனெக்ட்ஸ், JB மோஷன் பிக்சர்ஸ் இசை: ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் CEO : விசு ரெட்டி மக்கள் தொடர்பு : யுவராஜ் மார்க்கெடிங் : ஹேஷ்டேக் மீடியா
நயன்தாரா மற்றும் கவின் இணைந்து நடிக்கும் “ஹாய்” (Hi) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
Z ஸ்டூடியோஸ் (Z Studios), தி ரவுடி பிக்சர்ஸ் (The Rowdy Pictures) மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) மூன்று நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கும் ‘ஹாய்’ (Hi) படத்தை விஷ்ணு எடவன் (Vishnu Edavan)எழுதி இயக்குகிறார். இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாராவும் கதாநாயகனாக கவினும் நடிக்கிறார்கள்.
மேலும், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் இயக்குனர் கே.பாக்யராஜ், பிரபு, ராதிகா, சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி மற்றும் பலர் நடிக்கிறார்கள்
அறிமுக இயக்குனர் விஷ்ணு எடவன் இவர் கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களில் இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் அஸோஸியேட் டைரக்டராக பணியாற்றியவர் இவர் ஹாய் படத்தை எழுதி இயக்குகிறார்.
இப்படத்தை பற்றி இயக்குனர் விஷ்ணு எடவன் கூறும்போது : ஹாய்’ முழுக்க முழுக்க பொழுதுபோக்கான குடும்ப கதையில் உண்மையான காதலையும் கூறும் படமாக உருவாகி வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நடந்து வருகிறது. 20 நாட்கள் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (08.10.2025) வெளியிடப்பட்டுள்ளது. இதன் பிறகு தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறும். இப்படத்தில் மொத்தம் 7 பாடல்கள் உள்ளன. அதில் இரண்டு பாடல்கள் முழுமையாக காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.
நயன்தாராவும், கவினும் இணைந்து நடிப்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேபோல், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
தயாரிப்பாளர்கள் உமேஷ் குமார் பன்சால் நயன்தாரா, விக்னேஷ் சிவன் எஸ்.எஸ். லலித் குமார்
இணை தயாரிப்பாளர்கள் அக்ஷய் கெஜ்ரிவால் & கே.எஸ். மயில்வாகனன்
தொழில் நுட்ப கலைஞர்கள் :
இசை – ஜென் மார்ட்டின் ஒளிப்பதிவாளர் – ராஜேஷ் ஷுக்லா எடிட்டர் – பிலோமின்ராஜ் கலை இயக்குனர் – சேகர்.பி நடனம் – பிருந்தா சண்டை பயிற்சி – தினேஷ் காசி ஆடை வடிவமைப்பாளர் – காவ்யா ஸ்ரீராம் விளம்பர வடிவமைப்பாளர் – வியாகி புகைப்படங்கள் – ஆகாஷ் பாலாஜி கூடுதல் திரைக்கதை & உரையாடல்கள் – சி.யூ. முத்துசெல்வன் இணை இயக்குனர் – டி.எஸ். வினோபாலா உதவி இயக்குனர்கள் – பத்மன்.எம், தங்கவேல்.எஸ் தயாரிப்பு நிர்வாகி – ஜி. முருகபூபதி தயாரிப்பு கட்டுப்பாட்டாளர் – எஸ். கிருஷ்ணராஜ் தயாரிப்பு நிர்வாகம் – டிவ்ஸ் வேணுகோபால் லைன் தயாரிப்பாளர் – குபேந்திரன் வி.கே கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – வினோத் சி.ஜே மக்கள் தொடர்பு – யுவராஜ்