Breaking
May 12, 2024

’அயலான்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா!

இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீதி சிங் நடிப்பில் 24ஏ.எம். தயாரிப்பில் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் திரைப்படம் ‘அயலான்’. இதன் டீசர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்து கொள்ள நேற்று மாலை சென்னையில் நடந்தது.

நிகழ்வில் முதலாவதாக கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் எக்ஸிகியூடிவ் புரொடியூசர் சவுந்தர் பைரவி பேசியதாவது, “இந்த விழாவிற்கு வருகை தந்துள்ள இயக்குநர் ரவிக்குமார், நடிகர் சிவகார்த்திகேயன், படக்குழுவினர் அனைவரையும் வரவேற்கிறோம்” என்றார்.

நடிகர் பாலசரவணன் பேசியதாவது, “இவ்வளவு நாள் எதற்காக காத்திருந்தோமோ அது நடக்கிறது. இந்தப் படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்த இயக்குநர் ரவிக்குமாருக்கும், சிவகார்த்திகேயன் பிரதருக்கும் படக்குழுவினருக்கும் நன்றி”.

பாடலாசிரியர் விவேக் பேசியதாவது, “ஒருத்தருக்கு வெற்றி கஷ்டப்பட்டு கிடைக்கும்போதுதான் அது வரலாறாக மாறும். அதுபோன்ற ஒரு பாதையில் வந்தவர்தான் சிவகார்த்திகேயன். அதுபோலதான் ‘அயலான்’ படமும் கஷ்டப்பட்டு வந்துள்ளது. நிச்சயம் வெற்றி பெறும். ’மாவீரன்’ போன்ற படத்தை எடுத்து நடிக்க ஒரு தைரியம் வேண்டும். சமூக கருத்துகளை முன்னிறுத்தும் இதுபோன்ற படங்களை சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் எடுத்து நடிக்க வேண்டும். இந்தப் படத்தில் வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் ரவிக்குமார், ரஹ்மான், சிவகார்த்திகேயனுக்கு நன்றி. படக்குழுவினருக்கு வாழ்த்துகள்!”

பாடலாசிரியர் மதன் கார்க்கி, “இதுபோன்ற வெவ்வேறு ஜானர்களில் படங்கள் எடுப்பது அரிது. அதனால், இயக்குநர் ரவிக்குமார் இந்த கதையை சொன்னதும் மகிழ்ச்சியாக இருந்தது. நடிகர் என்பதையும் தாண்டி சக பாடலாசிரியராக சிவகார்த்திகேயனுக்கு பாடல் எழுதுவது மகிழ்ச்சி. ரஹ்மான் சார், விவேக் சார் இவர்களுடன் பணிபுரிந்தது கூடுதல் மகிழ்ச்சி”.

கலை இயக்குநர் முத்துராஜ், “இதுபோன்ற ஒரு படத்தில் வேலை பார்த்ததில் மகிழ்ச்சி. ரவிக்குமார் பொறுமையாகவும் தனக்கு என்ன வேண்டும் என்ற தெளிவும் கொண்டவர். அவரின் பொறுமைக்காகவே இந்தப் படம் பெரும் வெற்றி பெறும். சிவகார்த்திகேயன் மீது எனக்கு பெரிய மரியாதை உண்டு. கமர்ஷியலாக எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் என்றில்லாமல் பொறுப்பாக செய்வார். படக்குழுவினர் சிறப்பாக செய்துள்ளனர்”.

நடிகர் ஷரத், “இந்தப் படத்தில் நடித்தது எனக்கு மகிழ்ச்சி. ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளேன். சிவா சாரின் ‘மாவீரன்’ பார்த்தேன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படத்தில் நிறைய ஆக்‌ஷன் உள்ளது. உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்”.

எடிட்டர் ரூபன், “’அயலான்’ படம் இன்னும் முடியவில்லை. வேலை போய்க்கொண்டுதான் இருக்கிறது. சினிமாவில் இன்று நிறைய ஜானர்ஸ் வருகிறது. இந்த ஜானர் குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பிடிக்கும். அப்படிதான், ரவி செய்துள்ளார். அவரின் பொறுமைக்கு மிகப்பெரிய நன்றியும் மரியாதையும். இந்தப் படத்தை ஆரம்பித்து வைத்த சிவகார்த்திகேயனுக்கும் தயாரிப்புத் தரப்புக்கும் நன்றி. இந்த டீசர் இரண்டு வருடங்களுக்கு முன்பு எடிட் செய்தது. பொறுமையாக இருந்த ரசிகர்களுக்கும் நன்றி. ஹாலிவுட் இயக்குநர்கள் போல ரவியும் எட்டு வருடமாக இந்தப் படம் செய்துள்ளார். படம் இப்போதும் புதிதாக உள்ளது. எல்லோருக்கும் நன்றி”.

இஷா கோபிகர், “நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் கோலிவுட்டில் இருக்கிறேன் என்பது மகிழ்ச்சி. இயக்குநர் ரவிக்குமாருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் நன்றி. நீங்கள் இவ்வளவு நாள் காத்திருந்ததற்கு நிச்சயம் படம் சூப்பராக இருக்கும். என்னையும் இந்தப் படத்தில் அழைத்ததற்கு நன்றி”.

ஃபேன்தம் சி.ஈ.ஓ பிஜாய், “’அயலான்’ படத்தை உங்கள் அனைவரிடமும் காட்டுவதற்காக ஏழெட்டு வருடங்களாக் காத்திருக்கிறோம். சிவகார்த்திகேயன் சார் இல்லாமல் இந்தப் படம் சாத்தியம் இல்லை. ‘இன்று நேற்று நாளை’ படம் முடிந்த சமயத்தில் இதை ஆரம்பித்தோம். ஒவ்வொரு பரிமாணத்திலும் இந்தப் படத்தைப் பார்த்துள்ளோம். ஹாலிவுட் தரத்தில் இந்தப் படத்தைக் கொண்டு வர முயற்சி செய்தோம். இந்திய சினிமாவில் இப்படி ஒரு படம் வெளிவரவில்லை என இதன் தரத்தை பல ஹாலிவுட் கம்பெனி பாராட்டியுள்ளது”.

இயக்குநர் ரவிக்குமார், “’அயலான்’ படத்திற்கு காத்திருந்த காலக்கட்டம் குறித்து அனைவரும் பேசினார்கள். இதை மிதமாக கடந்து வர உதவியர்கள் என் குடும்பமும் நண்பர்களும்தான். இதற்கு பின்பு மிகப்பெரிய நம்பிக்கையாக இருந்தவர் சிவகார்த்திகேயன். அவர் இந்தக் கதையின் மீது வைத்த நம்பிக்கையில்தான் இத்தனை வருடம் பல சவால்களைக் கடந்து பயணித்து வந்தோம். நீரவ் ஷா, முத்துராஜ் சார் போன்ற பெரிய மாஸ்டர்கள் இந்தப் படத்தில் வேலை பார்த்துள்ளது எனக்குப் பெருமை. அவர்கள்தான் என்னை வழிநடத்தினார்கள். ரஹ்மான் சார்தான் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் என்று சொன்னபோது மகிழ்ச்சியாகவும் பதட்டமாகவும் இருந்தது. ரஹ்மான் சார் நிறைய சுதந்திரம் கொடுத்துள்ளார். ரஹ்மான் சாரின் ரசிகன் நான். அவர் என் படத்திற்கு இசையமைத்திருப்பது மகிழ்ச்சி. வி.எஃப்.எக்ஸ். பிஜாய்க்கு நன்றி. நடிகர்கள் யோகிபாபு, பாலசரவணன், ஷரத் எல்லோருக்கும் நன்றி. என்னுடைய இயக்குநர் குழுவுக்கும் நன்றி” என்றார்.

நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது, “‘அயலான்’ படம் தீபாவளிக்கு வருவதாக சொல்லி இருந்தோம். ஆனால், சிஜி பணிகளுக்கு இன்னும் சில காலம் இருந்தால் இன்னும் சிறப்பாக புதிய விஷயங்களை சேர்க்கலாம் என சிஜி பணிகள் செய்யும் நிறுவனத்திடம் இருந்து ரெக்வஸ்ட் வந்தது. அதனால், பொங்கலுக்கு வெளியீட்டை மாற்றினோம். நீங்கள் தற்போது டீசரில் பார்க்கும் ஏலியன் வேர்ல்ட் இப்போது உருவாக்கியது. தீபாவளியை விட பொங்கல் விடுமுறை இன்னும் சிறப்பாக உள்ளது. ‘இன்று நேற்று நாளை’ படத்தை திருச்சியில் பார்த்தபோது ரசிகர்கள் டைம் மிஷின் என்ற கான்செப்ட்டை அவ்வளவு ரசித்துக் கொண்டாடினார்கள். அதைப் பார்த்துவிட்டு இயக்குநர் ரவிக்குமாருக்கு வாழ்த்து செய்தி அனுப்பினேன். அதன் பிறகு அவரை சந்தித்து கதை கேட்டேன். இந்த ஏலியன் கதையை ஐந்து நிமிடங்கள் சொன்னார். உடனே சம்மதம் சொன்னேன். முதல் படத்தில் குறைந்த பட்ஜெட்டில் சிறப்பான படத்தை அவர் கொடுத்த நம்பிக்கையில்தான் இந்தப் படத்தில் அவருடன் இணைந்தேன். அவர் தமிழ் மீடியத்தில் படித்தவர். கல்லூரி படிப்பை கரஸில் முடித்தார். படிப்புக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை என்பதை நிரூபித்துவிட்டார் ரவிக்குமார். படத்தை 95 நாட்களில் எடுத்து முடித்து விட்டார். அவ்வளவு பிரிப்பரேஷன். இந்தப் படத்திற்கு ரஹ்மான் சார் இசை இருந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. அவரும் கதைக் கேட்டு உடனே சம்மதம் சொன்னார். ஐந்து வருடங்களுக்கு முன்னால் ரஹ்மான் சாருக்கு என்ன சம்பளம் கொடுத்து கமிட் செய்தோமோ அதையே இப்போது வரை ஓகே சொல்லி எங்களுக்காக புதிய டியூன் இப்போது வரை போட்டுக் கொடுத்தார். அது அவருடைய பெருந்தன்மை. டீசர் பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாக சொன்னார். இந்தியாவில் லார்ஜ் ஃபார்மேட் கேமராவில் எடுத்த முதல் படம் ‘அயலான்’தான். நீரஜ் சார், முத்துராஜ் சார் என பல ஸ்ட்ராங் டெக்னீஷியன்ஸ் இதில் உள்ளார்கள். இதேபோன்று ஏலியன், ஸ்பேஸ் ஷிப் வைத்து இதற்கு முன்பு எம்.ஜி.ஆர். ஒரு படம் முயற்சி செய்தார். அதற்கு பிறகு நீங்கள் தான் என சொன்னார்கள். அதனால், எம்.ஜி.ஆர்.க்கு அப்புறம் சிவகார்த்திகேயன் தான் என யூடியூப் தலைப்பு வைத்து விடாதீர்கள். அதுபோன்ற கன்செப்ட் என்றுதான் சொன்னேன். படத்தில் 4600 வி.எஃப்.எக்ஸ் ஷாட்ஸ் உள்ளது. இந்தப் படத்தின் மொத்த டெக்னீஷியன்ஸூம் தமிழ் சினிமாவை சேர்ந்தவர்கள். சிஜி கம்பெனி அம்பத்தூரில்தான் உள்ளது. இதற்கு வெளிநாடு போக வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்தப் படம் முடித்தவுடன் நானும் ரவிக்குமாரும் சேர்ந்து இன்னொரு படம் செய்கிறோம். ஒருக்கட்டத்தில் படத்திற்கு நிதி தேவை என்ற நிலை வந்தபோது, நான் சம்பளம் வேண்டாம், படம் சிறப்பாக வர வேண்டும் என்று சொன்னேன். ரவிக்குமாரின் நேர்மைக்காக அவர் ஜெயிப்பார். இதுபோன்ற சிறந்த வி.எஃப்.எக்ஸ்ஸோடு சிறந்த படம் இந்தியாவில் இல்லை என்பதை நம்பிக்கையோடு சொல்வேன். ’அயலான்’ படத்தைக் குடும்பத்தோடு திரையரங்குகளில் பொங்கலுக்கு போய் பார்க்கலாம்” என்றார்.

‘Jawan’ Collects 1117.36 Cr. globally.

Despite new film releases, ‘Jawan’ maintains an incredible hold in its 5th weekend! Collects 1117.36 Cr. globally!

Calling Shah Rukh Khan’s Jawan an unstoppable force won’t be any wrong. Starring King Khan, the film is indeed ruling the box office like a king. As the film is running in its 5th week now, it seems to have seen no effect of the new releases. Even after the arrival of many films, Jawan is standing strong with its rising box-office collection with 1117.36 Cr. gross box office collection globally and 626.37 Cr. in India.

Jawan has successfully proved itself a strong player at the box office in India. Its collection figures are continually making a stronghold at the box office. With a monstrous collection of 626.37 Cr. in India, Jawan has become the highest-grossing Hindi film in the history of cinema (Original language). It collected a record-breaking 566.33 Cr. in Hindi and a fabulous 60.04 Cr. in Dubs. Additionally, looking at its collection overseas, the film is standing strong with a total of $45.39 million. Internationally, Jawan has collected 1117.36 Cr. gross box office collection.

‘Jawan’ is a Red Chillies Entertainment presentation directed by Atlee, produced by Gauri Khan, and co-produced by Gaurav Verma. The film was released worldwide in theaters on September 7th, 2023, in Hindi, Tamil, and Telugu.

‘ஜவான்’ இதுவரையில் உலகளவில் 1117.36 கோடி வசூல்.

புதிய திரைப்படங்கள் வெளியான போதிலும், ‘ஜவான்’ அதன் 5வது வார இறுதியில் நம்பமுடியாத வசூல் சாதனை படைத்து வருகிறது! இதுவரையில் உலகளவில் 1117.36 கோடி வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது.!

நடிகர் ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தை, தடுக்க முடியாத சக்தி என்று அழைப்பதில் தவறில்லை. கிங் கான் நடித்த இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் ஒரு ராஜாவைப் போல் ஆட்சி செய்து வருகிறது. இப்படம் தற்போது 5வது வாரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையிலும், புதிய வெளியீடுகளால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பல படங்கள் வந்த பிறகும், ஜவான் உலகளவில் மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூலில் 1117.36 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் வசூலில் வலுவாக உள்ளது. மற்றும் இந்தியாவில் மட்டும் 626.37 கோடியை வசூலித்துள்ளது.

ஜவான் இந்தியா பாக்ஸ் ஆபிஸில் தன்னை ஒரு வலுவான வீரராக வெற்றிகரமாக நிரூபித்துள்ளது. அதன் வசூல் எண்ணிக்கை 626.37 கோடி வசூலுடன் தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் அசைக்க முடியாத கோட்டையாக இருந்து வருகிறது. இந்தியா சினிமா வரலாற்றில் (அசல் மொழி) அதிக வசூல் செய்த இந்தித் திரைப்படமாக ஜவான் வரலாறு படைத்துள்ளது. இப்படம் இந்தியில் 566.33 கோடி வசூலித்து சாதனை படைத்தது. மற்றும் பிற மொழிகளில் 60.04 கோடி வசூல் செய்தது. கூடுதலாக, வெளிநாடுகளில் அதன் வசூலைப் பார்க்கும்போது, படம் மொத்தம் 45.39 மில்லியன் டாலர்களுடன் வலுவான நிலையில் உள்ளது. சர்வதேச அளவில் ஜவான் மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூலாக 1117.36 கோடி வசூல் செய்துள்ளது.

“ஜவான்” திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது.

‘தி ரோடு’திரை விமர்சனம்

திரிஷா,டான்சிங் ரோஸ்,சபீர் சந்தோஷ் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் தி ரோடு

கணவர் மற்றும் மகன் மூன்று மாத கர்ப்பமாக வாழ்ந்து வரும் திரிஷா, இவர்கள் வாழ்க்கையில் திடீரென ஒரு விபத்து, அந்த விபத்தில் கணவர் மற்றும் குழந்தையை பறிகொடுத்து விடுகிறார். அவர்கள் இறந்த இடத்தில் அஞ்சலி செலுத்த வரும் திரிஷா, அங்கு நடக்கும் தொடர் விபத்துகளை கண்டு அதிர்ச்சி அடைகிறார். தனி ஒரு ஆளாக அந்த விபத்துக்கள் ஏன் நடக்கிறது என்று துப்பறிய இறங்குகிறார். இறுதியில் என்ன நடக்கிறது என்ற கதையை திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் அருண் வசீகரன்.
திரிஷா எப்பொழுதும் போல் இளமையாக, ஒரு குழந்தைக்கு தாயாக, கணவருக்கு காதல் மனைவியாக,ஒரு அழகான குடும்பத் தலைவியாக,வாழ்ந்து, பின்பு துப்பறியும் பணியில் இறங்கி காவல்துறை அதிகாரிகளை தூக்கி சாப்பிடும் தோரணையில் வலம் வருகிறார்.
டான்சிங் ரோஸ் சபீர் பெண்கள் கல்லூரியில் பேராசிரியராக வந்து அமைதியான அப்பாவியாக இருக்கும் பொழுதும், அங்கு தன்னிடம் படிக்கும் பெண்ணின் ஒரு தலை காதலை ஏற்க மறுத்து இந்தப் பெண்ணால் துரோகத்துக்கு ஆளாகி அவமானப் படும் பொழுது, அந்த அவமானத்திலிருந்து மீள அவர் தேர்ந்து எடுக்கும் வழி சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை நினைவுபடுத்தும் விதமாக அமைக்கப்பட்டிருக்கிறது அவரது கதாபாத்திரம்.
தந்தையாக வேலராமமூர்த்தி எப்பொழுதும் முரட்டுத்தனமாகவே நடிக்கும் இவருக்கு இந்த படத்தில் ஒரு பாசமான அப்பாவாக கண்கலங்க வைக்கிறார்.
தோழியாக வரும் மியா ஜார்ஜ் துப்பறியும் புலிக்கு அசிஸ்டன்ட் புலியாக வருகிறார்.
காவல்துறை இன்ஸ்பெக்டராக வரும் எம் எஸ் பாஸ்கர் அவருக்கு வழக்கமான நடிப்பு அதை திறம்பட வழங்கி இருக்கிறார்.
செம்மலர் அன்னம் வித்தியாசமான வேடம் அதை திறம்பட வழங்க தன்னால் முடிந்த வரை முயற்சி செய்து இருக்கிறார்.
சாம் சி எஸ் இன் இசையும் படத்திற்கு பலம் சேர்க்கிறது கே ஜி வெங்கடேசன் ஒளிப்பதிவு ஹைவே ரோடு வேகத்திற்கு செல்கிறது.
படத்தில் ஹைவே வில் வரும் ஏகப்பட்ட திருப்பங்களை போல் காட்சிக்கு காட்சி திருப்பங்கள் வந்தாலும் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமலே, சீரான வேகத்தில் படம் ஓடவில்லை

தி ரோடு ஏகப்பட்ட குண்டு குழிகளுடன் பயணம் செய்யலாம்.

OVER ALL RATTING———2/5

‘இந்தக் கிரைம் தப்பில்லை’ திரைவிமர்சனம்

ஊட்டியில் இருந்து சென்னை வரும் கதாநாயகி மேக்னா மொபைல் விற்பனை செய்யும் கடையில் பணியில் சேர்கிறார்.

அந்த மொபைல் கடைக்கு வரும் மூன்று இளைஞர்களை வேறு வேறு பெயரில் காதலிப்பது போல் நடித்து தனது பின்னால் சுற்ற வைக்கிறார் கதாநாயகி மேக்னா.

ரிட்டையர்ட் ராணுவ வீரரான ஆடுகளம் நரேன் தலைமையில் சைலண்டாக பாண்டி கமல் மற்றும் இவரது கூட்டாளிகள் சேர்ந்து இன்ஸ்பெக்டர் ,வக்கீல் என அடுத்தடுத்து ஆப்ரேஷன் ஒன்றிற்கு ப்ளான் செய்து வருகிறார்.

கதாநாயகி மேக்னா எதற்காக அந்த மூன்று இளைஞர்களை தன் பின்னால் சுற்ற வைக்க வேண்டும்.? ஆடுகளம் நரேன் ஆப்ரேஷன் ஒன்றிற்கு ப்ளான் எதற்காக செய்து வருகிறார்.

ரிட்டையர்ட் ராணுவ வீரரான ஆடுகளம் நரேன் யாரை டார்கெட் செய்கிறார் என்பதுதான் இந்த இந்தக் கிரைம் தப்பில்லை திரைப்படத்தின் மீதி கதை.

முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆடுகளம் நரேன் நடித்திருக்கிறார்.

ஆடுகளம் நரேன் எதார்த்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் நாயகி மேக்னா கொடுத்த வேலையை மிகவும் சரியாக செய்திருக்கிறார்.

சின்னத்திரை நடிக்கும் நடிகர் பாண்டி கமல் முதல் முறையாக வெள்ளித்திரையில் இந்து திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் பாண்டி கமல் முடித்தவரை தனது கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு என்ன தேவையோ அதை மிகவும் சரியாக செய்திருக்கிறார்.

இந்தத் திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கொடுத்த வேலையை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் AMM. கார்த்திகேயன் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றவாறு பக்க பலமாக அமைந்திருக்கிறது.

இசையமைப்பாளர் பரிமளவாசன் இசையில் பாடல்கள் கதை ஓட்டத்திற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது.

பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய பக்க பலமாக இருக்கிறது.

பாலியல் குற்றங்கள் பற்றி நிறைய படங்கள் வந்திருந்த்தாலும் இந்த திரைப்படத்தில் பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு என்ன மாதிரியான தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை மிகவும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் தேவகுமார்.

இந்த கதையை யோசித்த இயக்குனர் தேவகுமார் திரைக்கதையில் இன்னும் அதிகளவில் கவனம் செலுத்தி இருந்திருக்கலாம்.

இந்த கிரைம் தப்பில்லை திரைப்படத்தில் பல குறைகள் இருக்கத்தான் செய்கின்றன.

குறைகளை தவிர்த்து திரைப்படத்தை பார்த்தால் இது ஒரு நல்ல திரைப்படம்.

இந்த திரைப்படத்தில் அனைத்து விஷயங்களிலும் கவனம் செலுத்தி இருந்தால் இந்த திரைப்படம் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அமைந்திருக்கும்.

நடிகர் & நடிகைகள் :- ஆடுகளம் நரேன், பாண்டி கமல், மேக்னா ஏலன், முத்துக்காளை, வெங்கட் ராவ், கிரேசி கோபால், காயத்ரி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- தேவகுமார்.

ஒளிப்பதிவாளர் :- AMM. கார்த்திகேயன்.

படத்தொகுப்பு :- ராஜேஷ்.

இசையமைப்பாளர் :- பரிமளவாசன்.

தயாரிப்பு நிறுவனம் :- மதுரியா புரொடக்ஷன்ஸ்.

தயாரிப்பாளர் :- மனோஜ் கிருஷ்ணசாமி.

ரேட்டிங் :- 2./ 5.

Jawan becomes the first film to cross the $16 Million collection in the UAE.

Emerged as the #1 Indian film in the Middle East, Jawan becomes the first film to cross the $16 Million collection in the UAE

It’s almost a month since Shah Rukh Khan’s action entertainer Jawan has been released but its craze among the audience doesn’t seem to settle down at any cost. One after the other, the film is creating new records at the box office not just in India but also across the world. Having set its strong feet in different parts of the world, Jawan has now made a distinctive mark in the UAE market as well, as the film has emerged as the #1 Indian film in the Middle East with its phenomenal collection figures.

Talking about the same, Nelson D’souza, Vice President International Distribution, said, Jawan has been received exceptionally well in international markets and continues to perform exceptionally well, becoming the first Indian film to cross $16 Million in the Middle East and emerging as the #1 Indian Film while raking in an outstanding 44.43 million in overseas till date. There is nothing quite like this we have seen before and we are now looking forward to even more exciting times ahead with Dunki! – Nelson D’Souza, Vice President, International Distribution

Jawan is spreading its magic in the UAE market. The film has become the first film to cross the whooping collection of $16 Million and has made it the #1 Indian film in the Middle East. Well, among many, this is indeed yet another example of its success and the unprecedented love that the film is receiving from the audience. Well, as we see, Jawan is constantly on the rise, it would be interesting to see how the film will create more records in the future.

‘Jawan’ is a Red Chillies Entertainment presentation directed by Atlee, produced by Gauri Khan, and co-produced by Gaurav Verma. The film was released worldwide in theaters on September 7th, 2023, in Hindi, Tamil, and Telugu.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் $16 மில்லியன் வசூலைக் கடந்த முதல் படம் ஜவான்.

மத்திய கிழக்கில் #1 இந்தியப் படமாக உருவெடுத்த ஜவான், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் $16 மில்லியன் வசூலைக் கடந்த முதல் படம் என்ற பெருமையைப் பெற்றது.

நடிகர் ஷாருக்கானின் ஆக்‌ஷன் எண்டர்டெய்னர் படமான ஜவான் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு மாதமாகிய நிலையில், பார்வையாளர்கள் மத்தியில் படத்தின் மீதான கிரேஸ் எந்த வகையிலும் குறையவில்லை. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் படம் ஒன்றன் பின் ஒன்றாக புதிய சாதனைகளை படைத்து வருகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் தனது வலுவான முத்திரையை பதித்த ஜவான், தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சந்தையிலும் ஒரு தனித்துவமான முத்திரையைப் பதித்துள்ளது. இப்படம் மத்திய கிழக்கில் #1 இந்திய திரைப்படமாக வசூலில் சாதனை படைத்துள்ளது.

சர்வதேச விநியோக சந்தையின் துணைத் தலைவர் நெல்சன் டிசோசா இது குறித்து கூறுகையில்.., ஜவான் சர்வதேச சந்தைகளில் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது மற்றும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு, மத்திய கிழக்கில் $16 மில்லியனைத் தாண்டிய முதல் இந்தியத் திரைப்படமாக சாதனை படைத்துள்ளது. இன்றுவரை வெளிநாடுகளில் 44.43 மில்லியன் வசூல் செய்து #1 இந்திய திரைப்படமாக வரலாற்று சாதனை படைத்துள்ளது. இத்தனை பெரிய வரவேற்பையும் வசூலையும் இதற்கு முன்பு பார்த்ததே இல்லை, மேலும் ஷாருக்கான் நடிப்பில் அடுத்த வரக்கூடிய டன்கி இன்னும் பல புதிய சாதனைகள் படைக்குமென எதிர்பார்க்கிறோம்! என்றார்.

ஐக்கிய அரபு அமீரக சந்தையில் ஜவான் தனது மாயாஜாலத்தை நிகழ்த்தி வருகிறது. இப்படம் $16 மில்லியனைத் தாண்டிய முதல் படமாகி, மத்திய கிழக்கு நாடுகளில் #1 இந்தியப் படமாக மாறியுள்ளது. . ‘ஜவான்’ பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதுடன், பல புதிய மைல்கற்களை எட்டி வருவது, நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களிடமிருந்து பெற்ற அபரிமிதமான அன்பை காட்டுகிறது. ‘ஜவான்’ சந்தேகத்திற்கு இடமின்றி திரையுலகில் ஒரு வரலாற்று சாதனையாக மிளிர்கிறது.

“ஜவான்” திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது.

MS Dhoni’s and Ram Charan’s images takes the internet by storm !

Global star Ram Charan recently made his way to Mumbai for a brand shoot, setting the stage for an unforgettable meeting with the legendary former Indian cricket captain, Mahendra Singh Dhoni.

In a delightful Instagram post, Ram Charan shared this moment with his fans with the caption, “So happy to meet India’s pride.” This meeting India’s two remarkable players, one on field and one on screen, resonated deeply with fans across the nation.

The photograph captured Ram Charan in a sleek army green shirt and Mahendra Singh Dhoni in a casual blue polo, both sharing genuine smiles.

Fans were elated by this memorable moment, as they commented “Two gods in one frame” and “Two GOATS of India.”

As fans eagerly await Ram Charan’s upcoming movie, ‘Game Changer,’ alongside the talented Kiara Advani, this meeting underscores the exceptional talent and pride that both Indian cricket and Indian cinema bring to the nation. It’s a moment of celebration and recognition for these two iconic figures, symbolizing their remarkable achievements.

‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண் – எம் எஸ் தோனி சந்திப்பு.

‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண், இந்திய கிரிக்கெட்டின் நாயகனான மகேந்திர சிங் தோனியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் பல்வேறு வியப்பில் ஆழ்த்தும் பின்னூட்டங்களுடன் வைரலாகி வருகின்றன.

இந்திய சினிமாவின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவரான ராம்சரண் அண்மையில் தனியார் நிறுவனத்தின் விளம்பரப் படப்பிடிப்பிற்காக மும்பைக்கு சென்றிருந்தார். அப்போது இந்திய கிரிக்கெட்டின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனியை சந்தித்தார். மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ராம் சரண் பகிர்ந்திருந்தார். அதனுடன் ‘இந்தியாவின் பெருமையை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி’ என்றும் பதிவிட்டிருந்தார்.

ராம்சரனின் ரசிகர்கள் அவர் நடிப்பில் தயாராகி வரும் ‘கேம் சேஞ்சர்’ எனும் படத்தைப் பற்றிய புதிய தகவல்களை எதிர்பார்த்து காத்திருந்த தருணத்தில்.. ராம் சரணும், எம் எஸ் தோனியும் சந்தித்து கொண்ட தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியானதால், அதனை கொண்டாடி வருகின்றனர்.‌

அந்த புகைப்படத்தில் ராம் சரண் -இந்திய ராணுவ வீரர்கள் அணியும் பச்சை வண்ண சட்டையும், மகேந்திர சிங் தோனி -நீல வண்ண சட்டையும் அணிந்து தோன்றுவது ரசிகர்களை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.

இதனைக் கண்ட இருவரது ரசிகர்களும் ‘ஒரே சட்டகத்தில் இரண்டு கடவுள்கள்’ என்றும், ‘இந்திய சினிமாவின் பெருமையும், இந்திய கிரிக்கெட்டின் பெருமையும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்றும், ‘வெள்ளித்திரை நாயகனும், மைதான நாயகனும் ஒருவரை ஒருவர் சந்தித்திருக்கிறார்கள்’ என்றும், ‘இந்தியாவின் இரண்டு ராசியான ஜொலிக்கும் நட்சத்திரங்கள்’ பல்வேறு பின்னூட்டங்களை பதிவிட்டு தங்களது பேரன்பை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

‘ஹர்காரா’ திரைப்படம் அமேசான் ப்ரைமில் .

இந்தியாவின் முதல் தபால் மனிதனின் கதையை நமது வாழ்வியலோடு அழகாக சொல்லும் ஹர்காரா திரைப்படம், ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இப்படத்தின் காட்சித்துணுக்குகள் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

KALORFUL BETA MOVEMENT தயாரிப்பில், அருண் காஸ்ட்ரோ இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், காளி வெங்கட், அருண் காஸ்ட்ரோ நடிப்பில் வெளியான திரைப்படம் “ஹர்காரா”. இப்படம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து அக்டோபர் 1 ஆம் தேதி இப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

அமேசான் ப்ரைம் தளத்தில் இந்திய அளவில் ஹர்காரா திரைப்படம் டாப்டென்னில் நன்காம் இடம்பிடித்து, மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஓடிடி தளத்தில் குடும்ப பார்வையாளர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். தமிழில் மட்டுமல்லாமல் இந்தியாவெங்கும் இப்படம் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.

இந்தியாவின் முதல் தபால் மனிதனின் கதை சொல்லும் இந்தப்படம், இப்போதைய நகர வாழ்வியலின் சிக்கல்களையும், தொழில்நுட்பம் புகாத மலை கிராமத்தின் அழகிய வாழ்வியலையும், நாம் மறந்து போன இயற்கையோடு இணைந்த வாழ்க்கையையும் அழகாகச் சொல்கிறது.

இப்படத்தில் இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்வின் பெருமையை சொல்லும் ஒரு காட்சியை அனைவரும் கொண்டாடி பகிர்ந்து வருகிறார்கள். படத்திலிருந்து சில காட்சித்துணுக்குகள் பல்வேறு தளங்களில் பகிரப்பட்டு, பல மில்லியன் பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.

இயக்குநர் ராம் அருண் காஸ்ட்ரோ மற்றும் காளி வெங்கட் இப்படத்தில் நாயகர்களாக நடித்துள்ளனர். நாயகியாக கௌதமி நடித்துள்ளார். பிச்சைக்காரன் ராமமூர்த்தி,ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மனதை மயக்கும் அழகான டிராமாவாக உருவாகியுள்ள “ஹர்காரா” படத்தை அமேசான் ப்ரைம் தளத்தில் கண்டுகளியுங்கள்.