Breaking
April 26, 2025

Cinema

அதிரடி ஆஃபரை ( தள்ளுபடியை) அறிவித்திருக்கும் பிரைம் வீடியோ

‘கடைசி உலகப் போர் -ஸ்வாக் – லைக் எ டிராகன்: யாகுசா ஆகிய மூன்று படைப்புகளையும் பிரைம் வீடியோவில் ஆஃபருடன் காணத்தவறாதீர்கள்

இந்த வார இறுதியில் பிரைம் வீடியோவின் சமீபத்திய ஆஃபர்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!. பரபரப்பான டிஸ்டோபியன் தமிழ் ஆக்சன் திரில்லர் திரைப்படமான ‘கடைசி உலகப் போர் ‘ – தெலுங்கு மொழியில் வெளியான நகைச்சுவை நாடகமான ‘ஸ்வாக்’ மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜப்பானிய மொழியில் வெளியான கிரைம் ஆக்சன் தொடரான ‘லைக் எ டிராகன்: யாகுசா’. இந்த மூன்று புதிய வெளியீடுகளை தவற விடாதீர்கள்!

கடைசி உலகப் போர் : 2028 ஆம் ஆண்டில் நடைபெறுவது போல் அமைக்கப்பட்ட ஒரு டிஸ்டோபியன் அறிவியல் புனைவு கதை மற்றும் தமிழ் அதிரடி திரில்லர் திரைப்படமாகும். கதை- அரசியல் மோதல், உள்நாட்டு அமைதியின்மை மற்றும் டிஸ்டோபியன் எதிர்காலத்தில் சுதந்திரத்திற்கான போராட்டம் ஆகியவற்றை கருப்பொருளாக ஆராய்கிறது. ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கத்தில் அனகா எல். கே., நாசர், நடராஜன் சுப்பிரமணியம், அழகம்பெருமாள் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த அதிரடியான ஆக்சன் திரில்லர் திரைப்படம் தற்போது இந்தியாவில் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

தெலுங்கு நகைச்சுவை நாடகமான ‘ஸ்வாக்’ – இந்த திரைப்படத்தில் மனமுடைந்த போலீஸ் அதிகாரியான எஸ்ஐ பவபூதி – தான் ஒரு செல்வந்தரின் வாரிசாக இருப்பதை கண்டுபிடித்து, குழப்பமான பரம்பரை போருக்கு செல்ல வேண்டும். நகைச்சுவை மற்றும் சூழ்ச்சிகளுக்கு இடையில் அவர் எதிர்பாராத வகையில் நட்பை உருவாக்கிக் கொண்டு, இழந்த உரிமையை மீட்பதற்கான வாய்ப்பு உள்ளதை கண்டறிகிறார். பார்வையாளர்களை வெகுவாக ஈர்க்கும் இந்த தெலுங்கு நகைச்சுவை நாடகம் தற்போது பிரைம் வீடியோவின் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

‘லைக் எ டிராகன்: யாகுசா’ எனும் திரைப்படம் 1995 மற்றும் 2005 ஆம் ஆண்டு என இரண்டு காலகட்டங்களில் பின்னணியில் உருவானது. இது ஒரு அசல் கிரைம் சஸ்பென்ஸ் ஆக்சன் தொடராகும். பயமுறுத்தும் வகையிலும், ஒப்பற்ற நிலையிலும்.. யாகுசா போர் வீரரான கசுமா கிரியுவின் வாழ்க்கையையும், அவரது குழந்தை பருவ நண்பர்கள் மற்றும் அவர் எடுக்கும் முடிவுகளின் விளைவுகள் ஆகியவற்றையும் விவரிக்கிறது. நீதி- கடமை- மனிதாபிமானத்தின் வலுவான உணர்வு – ஆகியவற்றை கொண்டிருக்கும் ஜப்பானிய ஒரிஜினல் தொடரான இந்தத் தொடர் தற்போது பிரைம் வீடியோவில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி டப்பிங்குடன் ஜப்பானிய மொழியில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

மும்பை /அக்டோபர் 24 : பிரைம் வீடியோ இந்த வாரம் பார்வையாளர்களுக்கு பலதரப்பட்ட கன்டென்டுகளை கொண்டு வருகிறது.

கடைசி உலக போர்: ‘தி லாஸ்ட் வேர்ல்டு வார் ‘ என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சீனா, ரஷ்யா மற்றும் இந்தியாவின் அண்டை நாடுகள் உட்பட 72 நாடுகளால் உருவாக்கப்பட்ட குடியரசு எனும் புதிய சர்வதேச அமைப்பை சுற்றி இப்படத்தின் கதை அமைந்திருக்கிறது. இது உலகில் மிகப்பெரிய அரசியல் எழுச்சிக்கும் வழி வகுக்கிறது. இந்தியாவில் தமிழ்நாட்டை சேர்ந்த அனாதையான தமிழரசன்- முதலமைச்சரின் மகள் கீர்த்தனாவை காதலிக்கிறார். கீர்த்தனா தனது அரசியல் பயணத்தில் செல்வதற்கு தமிழ் உதவுவதால்… குடியரசு மற்றும் உள்நாட்டு அரசியல் சதிகளால் அவர்கள் பல சவால்களை எதிர்கொள்கிறார்கள். இந்த பரிசோதனை ரீதியிலான திரைப்படம் ..ஆக்சன் -நாடகம் -காதல்- ஆகியவற்றை ஒருங்கிணைத்து, உள்ளூர் கண்ணோட்டத்தில் உலகளாவிய நெருக்கடியை பற்றி தனித்துவமான பார்வையை வழங்குகிறது. அனகா எல். கே., நாசர், நடராஜன் சுப்பிரமணியம், அழகம்பெருமாள் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படத்தில் தமிழரசன் எனும் முக்கிய வேடத்தில் நடித்து ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படம் தற்போது பிரைம் வீடியோவில் இந்தியாவில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

தெலுங்கு நகைச்சுவை நாடகமான ஸ்வாக் : எஸ் ஐ பவபூதி எனும் போலீஸ் அதிகாரியின் வாழ்க்கையை மையப்படுத்தி, இப்படம் உருவாகி இருக்கிறது. அவரது தனிப்பட்ட வாழ்க்கை… மனைவியை பிரிந்த பிறகு அவரது வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் ஏற்படுகிறது. ஆறுதலுக்காகவும் மற்றும் ஒரு புதிய தொடக்கத்தை தேடி.. ஷ்வாகனிக் வம்சத்தின் வழித்தோன்றலான இவர் குடும்பத்தின் செல்வத்திற்கு உரிமை கோருவதற்காக அதாவது அவருக்கு உரிமை உண்டு என்பதை தெரிவிக்கும் வகையிலான கடிதத்தை பெறுகிறார். பவபூதி தனது சூழ்நிலையின் சிக்கல்களை வழிநடத்தும் மற்றும் விசித்திரமான நபர்கள் அடங்கிய குழுவை சந்திப்பதால்.. திரைப்படம் ஒரு பரபரப்பான நகைச்சுவை படைப்பாக விரிவடைகிறது. தன்னை பற்றி அறிந்து கொள்ளுதல், நட்பு மற்றும் செல்வத்தின் மீட்பு உள்ளிட்ட விசயங்களை இப்படம் ஆராய்கிறது. இது நகைச்சுவை மற்றும் சஸ்பென்ஸின் தனித்துவமான கலவையை கொண்டிருக்கிறது. ஹாசித் கோலி எழுதி இயக்கியுள்ள இந்த நகைச்சுவை திரைப்படத்தில் ஸ்ரீ விஷ்ணு, ரிது வர்மா, சுனில், மீரா ஜாஸ்மின், தக்க்ஷா நகர்கர், ரவி பாபு ,கெட் அப் சீனு, கோபராஜு ரமணா, சரண்யா பிரதீப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் . இந்த நகைச்சுவை நாடகம் தற்போது பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக உலகம் முழுவதும் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

‘லைக் எ டிராகன் : யாகுசா’ எனும் திரைப்படம் சாகா ( SEGA )வின் உலகளாவிய ஹிட்டடித்த கேம். இந்த விளையாட்டினை தழுவி லைவ் ஆக்சன் திரைப்படமாக உருவான திரைப்படம் இது.. மேலும் 2005 ஆம் ஆண்டில் சாகா( SEGA) வால் வெளியிடப்பட்டது. யாகுசா கேம் தொடர் பெரியவர்களுக்கான பொழுதுபோக்கு விளையாட்டாக உலகம் முழுவதும் கருதப்பட்டது. இது அதன் இலக்கு பார்வையாளர்களிடையே பெரும் ஆரவாரத்தையும் ஏற்படுத்தியது. இந்தத் தொடர் தீவிரமானதாகவும், உணர்ச்சிவசப்பட்டதாகவும் உள்ள கேங்ஸ்டர்களின் வாழ்க்கையை சித்தரிக்கிறது. இது ஒரு பெரிய பொழுதுபோக்கு மாவட்டத்தில் வாழும் கமுரோச்சா – வன்முறை ஷின்ஜுகு வார்டின் சுபகிச்சோவின் மாதிரியாக வடிவமைக்கப்பட்ட ஒரு கற்பனையான மாவட்டமாகும்.. லைக் எ டிராகன்: யாகுசா எனும் இந்தத் திரைப்படம் விளையாட்டினை மையப்படுத்தியது. நவீன ஜப்பானையும், கடந்த கால விளையாட்டுகளால் ஆராய முடியாத பழம் பெரும் கசுமா கிரியு போன்ற தீவிரமான கதாபாத்திரங்களின் நாடகத் தன்மையை கதைகளாக காட்சி படுத்துகிறது. Kengo Takimoto & Masaharu Take ஆகிய இயக்குநர்கள் இணைந்து இயக்கிய இந்தத் தொடரில், Ryoma, Takeuch, Kento, Kaku, Munetaka, Aoki, Toshiaki , Karasawa ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜப்பான் மொழியில் உருவான ஒரிஜினல் கிரைம் ஆக்சன் தொடரான இந்த திரைப்படம் தற்போது பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

சிறப்பம்சங்கள்:

கடைசி உலகப் போர்: அக்டோபர் 24

டிஸ்டோபியன் எதிர்காலத்தில் சர்வதேச சக்திகளின் வர்த்தக முற்றுகை காரணமாக இந்தியாவில் அரசியல் மோதல்கள் எழுகின்றன. இதன் விளைவாக உள்நாட்டு அமைதியின்மை ஏற்படுகிறது.

ஸ்வாக்: அக்டோபர் 25

போலீஸ் அதிகாரி பவபூதி தனது மனைவிக்கு குழந்தைகளை பெறுவதை தடுத்து பிரிவினையை ஏற்படுத்துகிறார். மன சோர்வடைந்த அவர்.. ஒரு பரம்பரையை பற்றி அறிந்து கொள்கிறார். அவர் அந்த பரம்பரைக்கான உரிமையைக் கோர செல்கிறார். ஆனால் அங்கு வாரிசு என கூறப்படும் பிற வாரிசுகளையும் காண்கிறார்.

லைக் எ டிராகன் : யாகுசா அக்டோபர் 25

1995 மற்றும் 2005இல் காலகட்டத்தின் பின்னணியில் இவை உருவாக்கப்பட்டிருக்கிறது. யாகுசா போர் வீரனின் வாழ்க்கை, அவரது குழந்தை பருவ உறவுகள் மற்றும் அவரது சமரசமற்ற நீதி, கடமையின் விளைவுகள்.. ஆகியவற்றை விவரிக்கிறது.

சசிகுமாரின் ‘நந்தன்’ படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

நடிகர் எம். சசிகுமார் நடிப்பில், இயக்குநர் இரா. சரவணன் எழுதி, இயக்கி, தயாரித்த திரைப்படம் ‘நந்தன்’. இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னும், வெளியான பின்னும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும்… ‘ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகார பகிர்வு குறித்த யதார்த்த நிலையை நந்தன் துணிச்சலுடனும் எடுத்துரைத்திருக்கிறார்’ என பாராட்டினர். விமர்சகர்களும் ‘நந்தன்’ திரைப்படத்தை கொண்டாடினர். ரசிகர்கள் – விமர்சகர்கள்- திரையுலகினர் – திரையுலக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரின் ஏகோபித்த பாராட்டைப் பெற்ற ‘நந்தன்’ திரைப்படம் , அண்மையில் டிஜிட்டல் தளத்தில் வெளியானது.

‘நந்தன்’ திரைப்படத்தை டிஜிட்டல் தளத்தில் பார்வையிட்ட பல முன்னணி பிரமுகர்களும் தங்களது பாராட்டை தெரிவித்து வருகின்றனர். இதன் உச்சமாக தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தை டிஜிட்டல் தளத்தில் பார்வையிட்டு தன்னுடைய பாராட்டை தெரிவித்திருக்கிறார்.‌

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்தப் படத்தை பார்வையிட்டவுடன் நடிகர் சசிகுமார் – இயக்குநர் இரா . சரவணன் – விநியோகஸ்தர் ட்ரைடன்ட் ரவி ஆகியோரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, ‘நந்தன் மிகத் தரமான.. தைரியமான… படம்’ என மனம் திறந்து பாராட்டினார். இதனால் படக்குழுவினர் உற்சாகமடைந்திருக்கிறார்கள். ‘நந்தன்’ திரைப்படம் டிஜிட்டல் தளத்தில் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களின் வரவேற்பை பெற்று தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் திரு M.செண்பகமூர்த்தி அவர்கள் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

திரு M.செண்பகமூர்த்தி அவர்கள் தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துகளை பெற்றார்

பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் இயக்குனர் திரு மாரி செல்வராஜ், நடிகர்கள் திரு ஆர்யா, திரு சூரி, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் திரு R.அர்ஜுன் துரை, Head of Lyca Productions திரு GKM தமிழ் குமரன், தயாரிப்பாளர் Romeo Pictures திரு.ராகுல், Dawn Pictures திரு ஆகாஷ் பாஸ்கரன், இயக்குனர் நடிகர் திரு சந்தோஷ் P ஜெயகுமார், நடிகை பிரியாலயா, தயாரிப்பாளர் திரு தாய் சரவணன், Shakthi Film Factory திரு B.சக்திவேலன், தயாரிப்பாளர் திரு கமல் நயன், தயாரிப்பாளர் திரு குமார், தயாரிப்பாளர் திரு K.V.துரை, விநியோகஸ்தர்கள் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மஜீத் இயக்கத்தில், விமல், யோகிபாபு நடிக்கும் புதிய திரைப்படம்

CONFIDENT FILM CAFE சார்பில் அப்துல் மஜீத் தயாரித்து இயக்க, நடிகர் விமல், யோகிபாபு நடிப்பில், முழுக்க முழுக்க காமெடி சரவெடியாக உருவாகியுள்ள புதிய படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், படக்குழு தற்போது இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்த நவீன உலகத்தில் எல்லாமே புரோக்கர் வழியாக என்றாகிவிட்டது. பல வகையான புரோக்கர்களின் வழியாகவே நம் அன்றாட வாழ்க்கை நடக்கிறது. அந்த புரோக்கர்களால் நிகழும் நல்லதும் கெட்டதும் கலந்த சம்பவங்களை, சிரித்து மகிழும் அருமையான திரைக்கதையாக கோர்த்து, இப்படத்தை உருவாக்கியுள்ளார் தமிழன் படப்புகழ் இயக்குநர் அப்துல் மஜீத்.

இப்படத்தில் முன்னணி நடிகர் விமல் நாயகனாக நடித்துள்ளார், சாம்பிகா டயானா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், ஜான் விஜய், சாம்ஸ், நமோ நாராயண், ஞானசம்பந்தம், பவர் ஸ்டார், ரங்கநாதன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 55 நாட்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில் போஸ்ட் புரொடக்க்ஷன் பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது.

இப்படத்தை பெரும் பொருட்செலவில், சார்பில் அப்துல் மஜீத் தயாரித்து இயக்குகிறார். ஒளிப்பதிவு கே. கோகுல், எடிட்டிங் ஏ.ஆர்.சிவராஜ், இசை பைஜூ ஜேக்கப், EJ ஜான்சன், நிர்வாக தயாரிப்பு மு. தென்னரசு, எம்.ரகு. கிரியேட்டிவ் ஆர்கனைஸேசன் பாஸ்கர் ஆகியோர் தொழில் நுட்ப குழுவில் பணியாற்றுகிறார்கள். மக்கள் தொடர்பு
வேலு.

பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைத்து தரப்பினரும் கொண்டாடும் வகையிலான கலக்கலான கமர்ஷியல் காமெடிப்படமாக இப்படம் இருக்கும். இப்படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

“போகுமிடம் வெகு தூரமில்லை” படக்குழுவை பாராட்டிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி !!

அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில், 70 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து, சாதனை படைத்த “போகுமிடம் வெகு தூரமில்லை” திரைப்படம் !!

Shark 9 pictures சார்பில் சிவா கிலாரி தயாரிப்பில், நடிகர் விமல் மற்றும் கருணாஸ் நடிப்பில், அறிமுக இயக்குநர் மைக்கேல் K ராஜா இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், மனதை உருக வைக்கும் அழகான திரைப்படமாகத் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற “போகும் இடம் வெகு தூரம் இல்லை” திரைப்படம், தற்போது ப்ரைம் ஓடிடி தளத்தில் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. படத்தைப் பார்வையிட்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி படக்குழுவை பாராட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவின் வழக்கமான கமர்சியல் அம்சங்களிலிருந்து மாறுபட்டு, ஒரு வித்தியாசமான களத்தில், மனதில் புன்னகை வர வைக்கும், வாழ்க்கை அனுபவங்களுடன், அழகான படைப்பாக, 2024 ஆகஸ்ட் 23 அன்று திரையரங்குகளில் வெளியானது. விமர்சகர்கள் ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றது. இந்நிலையில் கடந்த இப்படம் அக்டோபர் 8 ஆம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது.

அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான வேகத்தில், இப்படம் பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று, பல புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. அமேசான் தளத்தில் இந்திய அளவிலான டாப் டாப் 4 படங்களில் இடம்பிடித்து சாதனைப் படைத்துள்ளது. மேலும் இப்படம், வெளியான சில நாட்களுக்குள், 70 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

இப்படம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி மொழி பார்வையாளர்களையும் கவர்ந்திழுத்து, பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இப்படத்தினை பார்வையிட்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, படக்குழுவினரை நேரில் அழைத்து, அவர்களுடன் படம் குறித்து உரையாடி, விமலின் நடிப்பைப் பாராட்டி, படக்குழுவினருக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். படத்திற்குக் கிடைத்து வரும் பாராட்டுக்களும் வரவேற்பும், படக்குழுவினரை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அறிமுக இயக்குநர் மைக்கேல் K ராஜா இயக்கத்தில் உருவான இப்படத்தில், இதுவரையிலான திரைப்பயணத்தில் தான் ஏற்றிராத வித்தியாசமான பாத்திரத்தில் நாயகனாக விமல் நடித்துள்ளார். கருணாஸ் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் மேரி ரிக்கெட்ஸ், ஆடுகளம் நரேன், மனோஜ்குமார், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், சார்லஸ் வினோத், வேல ராமமூர்த்தி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப வல்லுநர்கள் விபரம்

இயக்குநர்: மைக்கேல் K ராஜா
தயாரிப்பாளர்: சிவா கிலாரி (Shark 9 pictures)
இசையமைப்பாளர்: N.R.ரகுநந்தன்
ஒளிப்பதிவாளர்: டெமில் சேவியர் எட்வர்ட்ஸ்
தொகுப்பாளர்: M.தியாகராஜன்
கலை இயக்குநர்: சுரேந்தர்
ஸ்டண்ட் டைரக்டர்: மெட்ரோ மகேஷ்
நடன மாஸ்டர்: ரிச்சி ரிச்சர்ட்சன்
தயாரிப்பு ஒருங்கிணைப்பு : ராகேஷ் ராகவன்
கிரியேட்டிவ் புரோடியுசர் – விஜய் கவுடா
நிர்வாக தயாரிப்பாளர்: வெங்கி மகி
மக்கள் தொடர்பு – சதீஸ், சிவா (AIM)

ஆக்சன் கிங் அர்ஜுன் சர்ஜா இயக்கத்தில், ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும்  நிரஞ்சன் சுதீந்திரா  நடிக்கும் சீதா பயணம் !!

ஸ்ரீராம் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில், பிரபல நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருமான ஆக்சன் கிங் அர்ஜுன் சர்ஜா நீண்ட இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் இயக்குநராகக் களமிறங்குகிறார்.
மனதை இலகுவாக்கும் ஒரு மென்மையான படைப்பாக உருவாகும்  இப்படத்திற்கு ‘சீதா பயணம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

சீதை எனும் பாத்திரத்தில் வலிமை, நெகிழ்ச்சி மற்றும் கருணை ஆகியவற்றின் உருவமாக நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கிறார். இவர் தெலுங்கில் அறிமுகமாகும் முதல்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.  இந்தப் படத்தில் கன்னட நடிகர் உபேந்திராவின் உறவினர் நிரஞ்சன் சுதீந்திரா கதாநாயகனாக தமிழுக்கு அறிமுகமாகிறார்.

சீதா மிகப் புதுமையான ஆற்றல் மிகு பாத்திரம், உணர்வுரீதியாக மிக அழுத்தமான தைரியமான பாத்திரம், இப்பாத்திரத்தில் தன் தனித்துவமான நடிப்பின், முழுத்திறமையையும் வெளிப்படுத்தி நடித்து வருகிறார் ஐஸ்வர்யா அர்ஜுன். அவரது பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் ஒரு நிரந்தர தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஐஸ்வர்யாவின் பாத்திரத்திற்குக் கூடுதல் முக்கியத்துவம் சேர்க்கும் வகையில்,  அவரது தந்தை ஆக்சன் கிங் அர்ஜுன் சர்ஜா இப்படத்தை தயாரித்து இயக்குகிறார். ஐஸ்வர்யா அர்ஜுன் தனது அற்புதமான பாத்திரம் மூலம் தெலுங்கு ரசிகர்களின் இதயங்களை வெல்லவும் தயாராகி வருகிறார். 

சீதா பயணம் படத்தில் மேலும் பல முக்கிய நட்சத்திரங்கள் மற்றும் மிகச்சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைந்து பணியாற்றுகின்றனர்.  தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக  வெளியாக இருக்கிறது.

பிரபாஸின் பிறந்தநாளில் ‘தி ராஜா சாப்’ மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது !!

ஹாரர் காமெடி ஜானரில் கலக்கும் பிரபாஸ், ‘தி ராஜா சாப்’ மோஷன் போஸ்டர் வெளியானது !!

மிகவும் எதிர்பார்ப்பிலிருக்கும் பான்-இந்தியா திரைப்படமான ‘தி ராஜா சாப்’ படத்தின் மீதான உற்சாகம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது, தயாரிப்பாளர்கள் படத்தின் முன்னணி சூப்பர்ஸ்டாரான பிரபாஸின் பிறந்தநாளில், அவர் இடம்பெறும் அசத்தலான மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். ரசிகர்களுக்கு விருந்தாக பகிரப்பட்ட இந்த மோஷன் போஸ்டர், தற்போது இணையம் முழுக்க வைரலாக பரவி வருகிறது. முதல் முறையாக ஹாரர் காமெடி ஜானரில் பிரபாஸ் களமிறங்குகிறார். இது படத்தின் மீதான ஆவலை உச்சத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.

2 நிமிட மோஷன் போஸ்டர் காட்டின் நடுவில் பியானோவில் ஒலிக்கும் “ஹேப்பி பர்த்டே” ட்யூனுடன் துவங்குகிறது. பின்னர், ஒரு மர்ம உருவம் காடுகளில் சுற்றித் திரிவதைப் பிந்தொடர்ந்து, பார்வையாளர்களை விண்டேஜ் அரண்மனைக்கு அழைத்துச் செல்கிறது, அங்கு இறுதியாக பிரபாஸின் பிரமாண்ட தோற்றம் காண்பிக்கபடுகிறது. பழங்கால அரண்மனையின் பிரமாண்ட பின்னணியில், கறுப்பு உடையில் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் பிரபாஸை வெளிப்படுத்தும் இந்த போஸ்டர், சூப்பர் ஸ்டாரின் கவர்ச்சியை மிகச்சரியாகப் படம்பிடிக்கிறது. ராஜாவாக உடையணிந்து, சுருட்டுப் பிடித்தபடி, பிரபாஸ் ஒரு சக்திவாய்ந்த, ஏக்கம் நிறைந்த அதிர்வை வெளிப்படுத்துகிறார், இது ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த போஸ்டரில் “ஹாரர் இஸ் தி நியூ ஹ்யூமர்” என்ற டேக்லைனும், அதைத் தொடர்ந்து “ஹேப்பி பர்த்டே, ரெபெல் சாப்” என்பதும் இடம்பெற்றுள்ளது.

பிரபாஸ் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் போஸ்டரைப் பகிர்ந்து…, “இது திரில்லுடன் ஜில் செய்யும் நேரம் இது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஏப்ரல் 10, 2025 அன்று திரையரங்குகளில் சந்திப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ட்விட்டரில் பிரபாஸ் ரசிகர்கள் இணையத்தையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டார்கள். #RajaSaabBirthdayCelebrations என்ற ஹேஷ்டேக் உலகளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது, ரசிகர்கள் சமூக ஊடகங்களில் வழியே, பிரபாஸ் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.

தொடர்ந்து ஆக்‌ஷன் நிரம்பிய பாத்திரங்களில் மாஸாக வலம் வந்த பிரபாஸ், முதல் முறையாக ஹாரர் -காமெடி ஜானரில், தி ராஜா சாப் மூலம் புதிய பரிமாணத்தில் தோன்றவுள்ளார். இந்த புத்துணர்ச்சியூட்டும் மாற்றத்தை, ரசிகர்கள் பரபரப்பாக பகிர்ந்து வருகிறார்கள், இந்த போஸ்டர் அவரது பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு சரியான கிக்ஆஃப் ஆகும்.

இப்படத்தில் மாளவிகா மோகனன், நித்தி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தை இயக்குநர் மாருதி இயக்க, பீப்பிள் மீடியா ஃபேக்டரி பேனரின் கீழ் விஸ்வ பிரசாத் தயாரிக்கிறார், தமன் எஸ் இசையமைக்கிறார். இப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் ஏப்ரல் 10, 2025 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

திரையிலும், திரைக்கு அப்பாலும் ரசிகர்களின் இதயங்களை வெல்லும் இந்தியாவின் சூப்பர் ஸ்டாரான பிரபாஸ்..!

இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டாரான பிரபாஸ் இன்று பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவர் நாடு முழுவதும் மட்டுமில்லாமல் உலக நாடுகள் முழுவதும் பரவியிருக்கும் அவரது ரசிகர்களையும், பார்வையாளர்களையும் தொடர்ந்து கவர்ந்து வருகிறார். மக்கள் கூட்டத்தை ஈர்க்கும் அவரது திறமை- அவரின் ஈடு இணையற்ற செல்வாக்கை எடுத்துக்காட்டுகிறது. அவரது பணிவு- ரசிகர்களுடன் உண்மையான அக்கறையுடன் கூடிய தொடர்பு – இதனால் அவர் ரசிகர்களிடம் அசைக்க முடியாத ஆதரவை பெற்றிருக்கிறார். இதன் காரணமாகவே பாக்ஸ் ஆபீஸ் வெற்றியையும் தொடர்ந்து உறுதி செய்கிறார். ‘பாகுபலி’ முதல் ‘கல்கி’ வரை பிரபாஸ் தொடர்ந்து மிகப்பெரிய ஓப்பனிங்கை வழங்குகிறார். தயாரிப்பாளர்களின் முதலீட்டிற்கு.. கணிசமான வருவாய் உத்திரவாதம் அளிப்பதன் மூலம் தயாரிப்பாளர்கள் இவரை நம்பி பிரம்மாண்டமான படைப்புகளை உருவாக்குகிறார்கள். அவருடைய திரைப்படங்கள்- பொழுது போக்கு மற்றும் எமோஷனின் கலவையாக இருப்பதால், அவர் ஒரு சூப்பர் ஸ்டார் அந்தஸ்திற்கு உயர்ந்திருக்கிறார். மேலும் பிராந்திய அளவிலான புகழில் இருந்து உலகளாவிய நட்சத்திர நடிகர் என்ற எல்லை வரை பிரபாஸின் பயணம் விரிவடைந்திருக்கிறது. இது அவரது திறமையையும், கடின உழைப்பையும் வெளிப்படுத்துகிறது.

பிரபாஸ் உண்மையில் ஒரு உணவுப் பிரியர். படப்பிடிப்பு தளங்களிலும் கூட தன்னுடன் பணியாற்றும் சக கலைஞர்களுக்கு உணவளித்து மகிழ்ச்சி அடைகிறார். மக்களுக்கு உணவளிக்க வேண்டும் என்ற அவரது சிந்தனையாலும், செயலாலும், அக்கறையாலும் அவருடன் பணியாற்றும் நபர்களிடமிருந்து அவர் பெறும் மரியாதை தனித்துவமானது. ‘கல்கி 2898 கிபி’ படத்தின் விளம்பர நிகழ்வில் போது தீபிகா படுகோன் போன்ற சக கலைஞரிடமிருந்து உணவு பரிமாறும் விசயங்களில் பாராட்டுகளை பெற்றிருக்கிறார்.

மகத்தான வெற்றியைப் பெற்றாலும் பிரபாஸ் பணிவுடன் இருப்பதை பின்பற்றுபவர். ‘கல்கி 2898 கிபி’ படத்தின் வசூல் ஆயிரம் கோடியை கடந்த போது மிக மிக எளிமையான ஒரு போஸ்டரை மட்டுமே பகிர்ந்து கொண்டார். அவரது இந்த பணிவான செயல்.. ரசிகர்களிடம் எதிரொலித்தது. இதன் காரணமாகவே அவரின் பணிவை பலரும் பாராட்டினார்கள்.

பிரபாஸ் எப்போதும் தனது ரசிகர்களை ‘டார்லிங்’ என்று அன்புடன் குறிப்பிடுவார். இதிலிருந்து அவர் ரசிகர்கள் மீதும், ரசிகர்களுக்கு அவர் மீதும் இருக்கும் அன்பும், நன்றியும் பிரதிபலிக்கிறது. அவரது அபிமானத்திற்கு உரியவர்களிடம் அவரின் உண்மையான தொடர்பு.. அவரை ஒரு நட்சத்திரமாக மட்டுமல்ல அன்பிற்குரிய நபராகவும் மாற்றுகிறது.

பிரபாஸ் அர்ப்பணிப்பின் உருவம் என்று குறிப்பிடலாம். ‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்களிலும் அவரது கதாபாத்திர தோற்றத்திற்காக அவர் எடுத்துக்கொண்ட அசைக்க முடியாத அர்ப்பணிப்பு – இதற்கு சிறந்த சான்றாகும். இந்த படத்திற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்களை அவர் அர்ப்பணித்தார். மேலும் கடுமையான உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டார். சிக்கலான… நுட்பமான… அதிரடி காட்சிகளில் நடிப்பதற்காகவும் தேர்ச்சி பெற்றார். அத்துடன் அந்த திரைப்படம் எடுத்துரைக்கும் காவிய உலகில் தன்னை ஒரு கதாபாத்திரமாகவே மூழ்கடித்து கொண்டார். இன்றைய வேகமான தொழில்துறையில் இந்த அளவிலான அர்ப்பணிப்பு என்பது மிகவும் அரிதானது. பிரபாஸின் இடைவிடாத சிறப்பான ஈடுபாடு.. அவரது வாழ்க்கையில் என்றும் நிலையானது. இது அவரை பின்பற்ற நினைக்கும் ஆர்வமுள்ள நடிகர்களுக்கு உண்மையான உத்வேகத்தையும் அளிக்கிறது.

பிரபாஸ் பெருந்தன்மை மிக்கவர். சமூக காரணங்களுக்காக தாராளமாக நன்கொடைகளை வழங்கி தன் பங்களிப்பை சிறப்பாக செய்து வருகிறார். அண்மையில் கேரளா – ஆந்திரா- தெலுங்கானா – ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட பேரிடரின் போது நிவாரண நிதியாக நான்கு கோடி ரூபாயை நன்கொடையாக அளித்தார்.

பிரபாஸின் தோற்றம் மற்றும் அவரது கவர்ச்சி ஒரு சூப்பர் ஸ்டாராகவே காணத் தோன்றுகிறது. சிக்ஸ் பேக் … மெலிந்த உடல்… என எந்த தோற்றத்தில் திரையில் தோன்றினாலும் அவரது வசீகரம்… பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கின்றன. இதனுடன் அவருடைய எளிமையான இயல்பும், அவரது தோற்றமும் அவர் சார்ந்த தொழில்துறையில் ஒரு தனித்துவமான ஆளுமையாக்குகிறது.

திறமை – பணிவு – அசைக்க முடியாத அர்ப்பணிப்பு – தாராளமான நன்கொடை- என பல்வேறு அம்சங்களால் இந்திய அளவில் இந்திய சூப்பர் ஸ்டாராக ஜொலித்து, தேசம் முழுவதும் உள்ள பார்வையாளர்களின் இதயத்தை வெல்கிறார். வென்று வருகிறார்.

‘சலார் 2 முதல் கல்கி 2’ வரை … 2,100 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாகும் சூப்பர் ஸ்டார் பிரபாஸின் பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படங்கள்..!

பிரபாஸின் பிறந்த நாளில் ‘சலார் 2 முதல் கல்கி 2’ வரை அடுத்தடுத்த பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படங்கள்.. 2,100 கோடி ரூபாய் வசூலிக்கும் என பந்தயம் கட்டப்பட்டிருக்கிறது.

முதல் பான் இந்திய சூப்பர்ஸ்டாரான பிரபாஸ், அவருடைய தொழில் சார் வாழ்க்கையில் புதிய உச்சத்தில் இருக்கிறார். இதனால் அவரது பிறந்த நாளை நடிகராக மட்டுமல்லாமல் இந்திய சினிமாவை மாற்றி அமைத்த நட்சத்திரமாகவும் கொண்டாடுகிறார்கள்.

முதல் பான் இந்திய சூப்பர் ஸ்டாரான பிரபாஸின் நடிப்பில் வெளியான ‘பாகுபலி’, ‘சலார்’, ‘கல்கி 2898 கிபி’ போன்ற படங்கள் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சாதனை படைத்து இந்திய சினிமாவில் மறுக்க இயலாத சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். பார்வையாளர்கள் மீது அவர் வைத்திருக்கும் தீராத விசுவாசம் பிளாக்பஸ்டர் ஹிட்டிற்கு பிறகும் தொடர்ந்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை வழங்குவதை உறுதி செய்கிறது. இதனால் தயாரிப்பாளர்கள் அவருடைய திரைப்படங்களில் பிரம்மாண்டமான முறையில் முதலீடு செய்வது எளிதாகிறது.

பெரிய திரையில் பிரபாஸ் ஏற்று நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும்.. அதற்கான தோற்றமும்.. அவருடைய நடிப்பும் …ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்களின் அபரிமிதமான அன்பையும், பாராட்டையும் பெறுகிறது. இது அவரது கவர்ச்சிக்கும், நட்சத்திர சக்திக்கும் ஒப்பிட முடியாத அளவில் இருக்கிறது. அதே தருணத்தில் அவர் இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக உயர்ந்திருக்கிறார். திரை துறை வணிகர்களின் தரவுகளின் படி, தயாரிப்பாளர்கள் அவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு பெரிய அளவில் முதலீடுகளை செய்து ஆதரிக்கவும் தயாராக உள்ளனர்.

இந்த வரிசையில் அவர் நடிப்பில் தயாராகி வரும் படங்களின் பட்டியலை தொடர்ந்து காண்போம்.

‘சலார் 2’ : இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் ஹை- வோல்டேஜ் ஆக்சன் என்டர்டெய்னர் திரைப்படம் இது. இந்த திரைப்படத்தை ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் பிரபல தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரபாஸுடன் பிருத்விராஜ் சுகுமாறன், ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

ஸ்பிரிட்: இந்தி சினிமாவில் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய படமாக ‘ஸ்பிரிட்’ இருக்கிறது. இந்தப் படத்தில் முதன்முறையாக பிரபாஸ் – பரபரப்பிற்கு பெயர் பெற்ற இயக்குநரான சந்தீப் ரெட்டி வங்காவுடன் இணைந்திருக்கிறார்.

இயக்குநர் ஹனு ராகவ புடி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் பிரபாஸ் நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படம்- 1940 ஆம் ஆண்டுகளில் பின்னணியில் சரித்திர புனைவு கதையாக தயாராகிறது. இந்தத் திரைப்படத்திற்கு சுதீப் சட்டர்ஜி ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் மேற்கொள்கிறார்.

The Raja Saab: இந்த திரைப்படம் – இயக்குநர் மாருதி இயக்கத்தில் உருவாகி வரும் காதலும் காமெடியும் கலந்த திகில் படமாகும். இந்த திரைப்படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது. இதில் பிரபாஸுடன் நிதி அகர்வால் மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

கல்கி 2 : ‘கல்கி 2898 கிபி’ திரைப்படம் கடந்த ஜூன் மாதம் 27 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியானது. பிரபாஸ் ,தீபிகா படுகோன், அமிதாப்பச்சன், கமல்ஹாசன் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தின் தொடர்ச்சியான இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திரைப்படங்கள் அனைத்தும் பிரபாஸின் திறமை மற்றும் அவரது நட்சத்திர பலத்திற்காக தயாராகும் திரைப்படங்கள். இந்த திரைப்படங்களுக்கு தயாரிப்பாளர்கள் 2,100 கோடி ரூபாயை முதலீடு செய்து இருக்கிறார்கள். இது அவரது அற்புதமான ஈர்ப்பு- அவரின் நட்சத்திர சக்தி- சர்வதேச தரம்- பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் திறன்- போன்ற அம்சங்களுக்காகவும், அவருடைய சூப்பர் ஸ்டார் நட்சத்திரத்திற்கான சான்றும் ஆகும். அவரது அயராத பணிக்கு ஆதரவு தெரிவிக்கும் சினிமா ஆர்வலர்களின் ஆசிர்வாதம் இது என்றும் குறிப்பிடலாம். பிரபாஸ் .. கவர்ச்சி- திறமை – மேஜிக் ஆகியவற்றின் சரியான கலவையை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.‌ அவர் நடிக்கும் ஒவ்வொரு படமும் மிகப்பெரிய வெற்றியாக மாற்றம் பெறுவதையும் உறுதி செய்கிறார். இந்த பிறந்த நாளில் பிரபாஸ் மீது நம்பிக்கை வைத்து முதலீடு செய்த 2,100 கோடி ரூபாயும் அவரது ரசிகர்களுக்காக அவர் வழங்கும் அற்புதமான படைப்புகள் ஆகும். இதனையும் அவரது பிறந்தநாளில் கொண்டாடுவோம்

“ஆலன்” திரைவிமர்சனம்

நமது ஆழ் மனதில் எதை அதிகம் விரும்புகிறோமோ அதுவே நமது வாழ்க்கை” என்ற கருத்தை காதல் பின்னணியோடு சொல்ல முயற்சித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் சிவா.ஆர்.

சிறு வயதில் கதாநாயகன் வெற்றியின் கண் முன்னே நடந்த விபத்து ஒன்றில் தனது தாய் மற்றும் தந்தை இழந்து தன் மனப்போராட்டத்தில் இருந்து மீள்வதற்காக காசிக்கு சென்று ஆன்மீகம் கற்றுக்கொண்டு மனப் போராட்டத்தில் இருந்து தப்பிக்கலாம் என நினைக்கிறார்.

எழுத்தாளர் ஆக வேண்டும் என்று 10 வருடங்களாக முயற்சித்தும் ஆன்மீகத்தை மனதளவில் ஏற்க முடியாமல் தவிக்கிறார். எழுத்தாளராக வேண்டும் என்ற  தனது பயணத்தை தொடங்குகிறார்.

அப்போது  அவருக்கு ரயில் பயணத்தில் கிடைக்கும் வெளிநாட்டு பெண்னின் நட்பு, அந்தப் பெண்ணின் நட்பு மூலம் சன்னியாசியாக சுற்றி திரிந்த வெற்றி சாதாரண மனிதராக மாறி எழுத்தாளராக வேண்டும் என்று கனவினை நோக்கி பயணப் படும்போது, மீண்டும் ஒரு கசப்பான சம்பவத்தை கதாநாயகன் வெற்றி எதிர்கொள்கிறார்.

மீண்டும் சன்னியாசியாக மாறும் வெற்றியின் வாழ்க்கை என்னவானது எழுத்துலகில் அவர் சாதித்தாரா? சாதிக்கவில்லையா?, என்பதுதான் இந்த ஆலன் திரைப்படத்தின் மீதிக்கதை.

ஆலன் திரைப்படத்தில் நாயகனாக வெற்றி நடித்திருக்கிறார்.

அமைதியான முகம், அளவான நடிப்பு என சன்னியாசி கதாபாத்திரத்திற்கு மிகவும் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் கதாநாயகன் வெற்றி.தன் சன்னியாசி கதாபாத்திரத்தை களைத்து விட்டு இந்த வெள்ளைக்கார பெண்ணுடன் காதல் வயப்படும் போது, தனது முகத்திலும், உடல் அசைவிலும் வெட்கத்தை வெளிப்படுத்தும் விதம், நடிப்பின் மூலம் அசத்தியிருக்கிறார்.

தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை மற்றும் தமிழ் மொழியை நேசிக்கக் கூடிய ஜெர்மனி நாட்டு பெண்ணாக நடித்திருக்கும் மதுரா, அனைத்து காட்சிகளிலும் சிரித்த முகத்தோடு பார்வையாளர்களை கவர்ந்திழுக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் அனு சித்தாரா ……

விவேக் பிரசன்னா, அருவி மதன், டிட்டோ வில்சன், ஸ்ரீ தேவா, ஹரிஷ் பெராடி என மற்ற கதாபாத்திரங்களில்.

ஒளிப்பதிவாளர் வின்தன் ஸ்டாலின், தனது ஒளிப்பதிவு மூலம் ரிஷிகேஷ் உள்ள ஆன்மீகத் தளங்களுக்கு நேரில் சென்று பயணித்த அனுபவத்தை கொடுக்கிறது.

மொத்தத்தில் இந்த “ஆலன்” சன்னியாசிக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கும்