Breaking
March 8, 2026

Cinema

நடிகர் அருண் விஜய்-யின் “ரெட்ட தல” திரைப்படம் 2025 டிசம்பர் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!!

நடிகர் அருண் விஜய்-யின் “ரெட்ட தல” திரைப்படம் 2025 டிசம்பர் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!!

BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, முன்னணி நட்சத்திரம் அருண் விஜய் நடிப்பில், “மான் கராத்தே” இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஸ்டைலிஷ் ஆக்ஷன் படம் “ரெட்ட தல”, வரும் 2025 டிசம்பர் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

படத்தின் அறிவிப்பு வெளியாகிய தருணத்திலிருந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்தின் டீசர், திரை ஆர்வலர்களிடமும் ரசிகர்களிடமும் அபாரமான வரவேற்பைப் பெற்றது. தற்போது, படக்குழு அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை அறிவித்து, ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

முழுக்க முழுக்க ஸ்டைலிஷ் ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் கலந்த கலர்ஃபுல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள இப்படத்தில், அருண் விஜய் மாறுபட்ட இரண்டு விதமான கதாப்பாத்திரங்களில் இரட்டை வேடத்தில் மிரட்டியுள்ளார்.

அருண் விஜய் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், சித்தி இத்னானி அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

டேட்டா பிரைவசி, சைபர் தடயவியல் உள்ளிட்ட மென்பொருள் துறையில் உலகளவில் பெயர் பெற்ற திரு. பாபி பாலச்சந்திரன், BTG Universal நிறுவனம் மூலம் தமிழ் திரைத்துறையில் கால் பதித்துள்ளார்.

முன்னதாக, இந்நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி நடித்த “டிமாண்டி காலனி 2” ஹாரர் திரைப்படம் ப்ளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. அடுத்து, இயக்குநர் விக்ரம் ராஜேஸ்வர் இயக்கத்தில், வைபவ் மற்றும் அதுல்யா நடித்த “சென்னை சிட்டி கேங்ஸ்டர்” திரைப்படமும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த இரண்டு வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் திரு. பாபி பாலச்சந்திரன், BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, மிகப்பெரும் பொருட்செலவில், அருண் விஜய் அவர்களின் திரை வாழ்க்கையில் பிரம்மாண்டமான படைப்பாக “ரெட்ட தல” திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளன.
இப்படம் 2025 டிசம்பர் 18ஆம் தேதி, உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்

தயாரிப்பு: BTG Universal
தயாரிப்பாளர்: பாபி பாலச்சந்திரன்
இயக்கம்: கிரிஷ் திருக்குமரன்
இசை: சாம் C.S.
ஒளிப்பதிவு: டிஜோ டாமி
எடிட்டிங்: ஆண்டனி
ஸ்டண்ட்: P.C. ஸ்டண்ட்ஸ்
கலை இயக்கம்: அருண்சங்கர் துரை
உடை வடிவமைப்பு: கிருத்திகா சேகர்
நடன அமைப்பு: சுரேன் R., பாபி ஆன்டனி
பாடல் வரிகள்: கார்த்திக் நேதா, சாம் C.S., விவேகா
VFX மேற்பார்வை: H. மோனேஷ்
நிர்வாக தயாரிப்பாளர்: மணிகண்டன்
தயாரிப்பு மேற்பார்வை: S.R. லோகநாதன்
DI: ஸ்ரீஜித் சாரங்க்
ஒலி வடிவமைப்பு: T. உதயகுமார் (Sound Vibe)
பப்ளிசிட்டி டிசைனிங்: பிரதூல் N.T.
பப்ளிசிட்டி போட்டோகிராஃபர்: வெங்கட் ராம்
ஸ்டில்ஸ்: மணியன்
மக்கள் தொடர்பு: சதீஷ் (AIM)

“வட்டக்கானல்” – திரைப்பட விமர்சனம்

வட்டக்கானல் படம் பார்க்கும் முன்பே ஒரு மெல்லிய கவிதையை வாசிக்க தயாராகும் மனநிலையோடு செல்ல வேண்டும். இது கமர்ஷியல் சினிமாவுக்கான வேகம் அல்ல. மலைக்காற்று போல மெதுவாக, மௌனங்களுக்கு இடையே பேசும் ஒரு திரைக்கதை. கொடைக்கானலின் இன்னும் அதிகம் அறியப்படாத முகமான வட்டக்கானலை, வெறும் லோகேஷனாக அல்லாமல் ஒரு கதாபாத்திரமாகவே இயக்குநர் மாற்றி வைத்திருக்கிறார். மேகத்தின் இடையே மறையும் மலை, இரவு நேரத்தில் பேசும் நிசப்தக் குளிர், பச்சை மரங்களின் பின்னால் ஒளிந்திருக்கும் தனிமை என ஒவ்வொரு ஃபிரேமும் ஒரு ஆழமான உணர்வை கடத்துகிறது.

கதை மிக எளிமையானது. ஆனால் எளிமைக்குள் ஒளிந்திருப்பது மனித மனங்களின் சிக்கல். நகரத்தில் இருந்து தப்பி ஒரு தனிப்பட்ட விடுதலைக்காக மலைகளுக்குள் வரும் கதாபாத்திரங்கள், அங்கு இயற்கையுடன் மட்டுமல்ல, தங்களுக்குள்ளும் உரையாட தொடங்குகிறார்கள். வசனங்கள் அளவாகவே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. பல இடங்களில் கண்களும், பின்னணி இசையும் பேசிவிடுகின்றன. இசை இங்கே ஒரு துணை அல்ல, ஓர் உணர்ச்சி மொழி. குறிப்பாக வயலினும், மென்மையான நேட்டிவ் ஃப்ளூட்டும் சேரும் தருணங்கள், படத்தை அடுத்த பரிமாணத்திற்கு தூக்கி செல்கின்றன.

ஒளிப்பதிவு குறித்து தனியாக பேச வேண்டும். மழைக்குப் பிந்தைய ஈர மண்ணின் மணம் கூட திரையில் தெரியும் அளவுக்கு அழகியல் நிரம்பி வழிகிறது. காலை மூடுபனியின் ஊடே நடக்கும் காட்சிகள், இரவு வெளிச்சம் இல்லாத காட்டின் ஒலி மட்டும் நிரம்பிய காட்சிகள், பயம் தராமல் உள்ளே ஏதோ ஒன்றை உலுக்கும் உணர்வை தருகின்றன. எடிட்டிங் மெதுவான ரிதமில் பயணித்தாலும், அது கதைக்கு தேவையான ஓர் அமைதி. அதில் அவசரப்பட எதுவும் இல்லை.

நடிகர்கள் இயல்பாக வாழ்ந்திருக்கிறார்கள். கதாநாயகன், அந்த மலையின் தனிமையை கண்களில் சுமந்து நடக்கிறார். அவருடைய அமைதி கூட ஒரு வசனமாகவே ஒலிக்கிறது. பெண் கதாபாத்திரம் வெறும் காதல் பிம்பமாக கடந்து போகாமல், படத்தின் ஆத்மாவை சமநிலைப்படுத்தும் இன்னொரு தூணாக நிற்கிறார். துணை கதாபாத்திரங்கள் கூட தேவையில்லாமல் திணிக்கப்படவில்லை. இயக்குநரின் கைவண்ணம் சிறிய சிறிய தருணங்களில்தான் அதிகம் வெளிப்படுகிறது. தேநீரின் ஆவி, பழைய கேசட் பாடலின் இரைச்சல், திடீரென பெய்யும் மழையில் யாரோ மறைக்கும் புன்னகை என இவைதான் படத்தை ஞாபகத்தில் நிறுத்துகின்றன.

குறை என்று சொன்னால் – இது பொறுமை இல்லாத பார்வையாளர்களுக்கான படம் அல்ல. வேகம், திருப்பங்கள், அல்லது திடுக்கிடும் திரைக்கதை ட்விஸ்ட்கள் தேடுபவர்களுக்கு இது பிடிக்காமல் போகலாம். இது ஒரு அனுபவ சினிமா. பார்த்து புரிந்துகொள்வதல்ல, உணர்ந்து கடந்து வர வேண்டியது. ஆனால் அதே மெதுவில் தான் இந்த படம் அதன் பலத்தையும் வைத்திருக்கிறது. இறுதியில், படம் முடிந்த பிறகு நம்மோடு ஒட்டிக்கொள்வது கதை அல்ல, அது கடத்திய தனிமையும், இயற்கை ஏற்படுத்தும் சிறிய வாழ்வு புரிதல்களும்.

திரையரங்கை விட்டு வெளியே வரும்போது ஒரு உணர்வு மட்டும் தான் மேலோங்கி நிற்கும் – வட்டக்கானல் ஒரு இடம் அல்ல, அது ஒரு மனநிலை. அதை பார்ப்பவர் உருவாக்கிக் கொள்ள வேண்டிய மனநிலை.

” Others” திரை விமர்சனம்

“Others” திரைப்படம் சமூகத்தின் புறக்கணிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஒரு சமூக திரில்லர் வகை படம். கதையின் நோக்கம் நன்றாக இருந்தாலும், சொல்லும் விதத்தில் சில குறைகள் தென்படுகின்றன. கதை மனித நேயம், சமத்துவம், சமூக பார்வை போன்றவற்றை பேச முயற்சிக்கிறது, ஆனால் திரைக்கதையின் ஒட்டுமொத்த ஓட்டம் சீராக இல்லாததால் அந்த தாக்கம் குறைந்து விடுகிறது. முதல் பாதி சற்று சுவாரஸ்யமாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதி மெதுவாகி சலிப்பை ஏற்படுத்துகிறது.

நாயகன் தனது பாத்திரத்தை நம்பகத்தன்மையுடன் செய்திருக்கிறார். சில காட்சிகளில் அவரது நடிப்பு உணர்ச்சியுடன் பொருந்துகிறது. ஆனால் நாயகியின் நடிப்பு படத்தின் பலவீனமாகவே தெரிகிறது. முக்கியமான காட்சிகளில் அவரின் முகபாவனைகளில் தேவையான உணர்ச்சி புலப்படவில்லை; உரையாடல் சொல்லும் விதமும் இயல்பாக இல்லை. இதனால் பல காட்சிகள் எதிர்பார்த்த தாக்கத்தை அளிக்கவில்லை. சில இடங்களில் அவரின் நடிப்பு கதையின் ஓட்டத்தை தளரச் செய்கிறது.

இயக்குனர் சமூகச் செய்தியை வெளிப்படுத்தும் முயற்சி செய்திருந்தாலும், திரைக்கதையில் ஒருங்கிணைப்பு குறைவாக உள்ளது. சில காட்சிகள் மட்டும் நினைவில் நிற்கும் வகையில் அமைந்துள்ளன. இசை மற்றும் பின்னணி இசை சாதாரணமாகவே இருந்தது; சிறப்பான புதிய முயற்சிகள் எதுவும் காணப்படவில்லை. ஒளிப்பதிவு சில காட்சிகளில் பாராட்டுக்குரியதாக இருந்தாலும், எடிட்டிங் மேலும் கூர்மையாக இருந்தால் படம் சுறுசுறுப்பாக இருந்திருக்கும்.

மொத்தத்தில், “Others” ஒரு நல்ல நோக்கம் கொண்ட திரைப்படம் என்றாலும், அதை வெளிப்படுத்தும் விதத்தில் பல குறைகள் இருப்பதால் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஈர்க்கவில்லை. நாயகியின் நடிப்பு மற்றும் திரைக்கதையின் மெதுவான போக்கு படத்தின் பலத்தை குறைத்துள்ளது. படம் சிந்திக்க வைக்கும் முயற்சி கொண்டதாய் இருந்தாலும், அதற்குத் தேவையான உணர்ச்சி ஆழம் வெளிப்படவில்லை.

பரிசு திரைப்பட விமர்சனம்

கலா அல்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள பரிசு படம், ராணுவப் பின்னணியில் ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பயணத்தை மையமாகக் கொண்ட கதை. ஜன்விகா நடித்திருக்கும் நாயகி, பெற்றோரின் விருப்பத்தின்படி ராணுவத்தில் சேரும் ஒரு சாதாரண மாணவியாக துவங்கி, கடுமையான பயிற்சிகள், சமூகக் கருத்துகள், மன அழுத்தங்கள் ஆகியவற்றை எதிர்கொண்டு தன்னம்பிக்கையால் வெற்றி பெறும் கதையாக இது நகர்கிறது. படத்தின் முக்கியமான கரு “பெண்ணுக்கு பெருமை சேர்க்கும்” என்ற நோக்கத்துடன் உருவாகியுள்ளது.

திரைப்படத்தின் சிறப்புகளில் ஒன்று, ஒளிப்பதிவு மற்றும் காட்சிப்பதிவில் காணப்படும் இயற்கைச் சூழல்களின் அழகு. குறிப்பாக ராணுவப் பயிற்சி பகுதிகளில் எடுக்கப்பட்ட காட்சிகள் நிஜத்தன்மையுடன் காட்சியளிக்கின்றன. சில காட்சிகள் உணர்வுபூர்வமாக உருவாகியுள்ளன, குறிப்பாக நாயகியின் உளவியல் போராட்டங்கள் நன்றாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. தொழில்நுட்ப ரீதியாக படம் சுமார் நிலை பெற்றுள்ளது.

ஆனால், கதை சொல்லும் முறையில் சில குறைகள் உள்ளன. கதை சில இடங்களில் மெதுவாக நகர்கிறது; சில நிகழ்வுகள் லாஜிக்கற்றதாகவும் நீளமாகவும் தோன்றுகின்றன. காமெடி மற்றும் இசை அம்சங்கள் பல இடங்களில் சுவாரஸ்யமின்றி போகின்றன. பாடல்கள் நினைவில் நிற்கவில்லை; பின்னணி இசை சில சமயங்களில் உணர்வை தளர்த்துகிறது. மேலும், சில துணை கதாபாத்திரங்களின் நடிப்பு இயல்பாக இல்லாததாக விமர்சனங்கள் குறிப்பிடுகின்றன.

மொத்தத்தில், பரிசு என்பது ஒரு நல்ல கருத்தை முன்வைக்கும், பெண்களின் மன உறுதியையும் சாதனையையும் பேசும் படம். ஆனால் அதனை திரையில் உணர்ச்சிமிக்கவாறு சொல்லும் திறனில் சிறிதளவு குறைபாடு தெரிகிறது. நல்ல முயற்சியாக இருந்தாலும், முழுமையான தாக்கம் ஏற்படுத்தாத ஒரு மிதமான திரைப்படமாக பரிசு சொல்லப்படுகிறது.

எஸ்.எஸ். ராஜமௌலி – மகேஷ் பாபு இணையும் திரைப்படம்………

எஸ்.எஸ். ராஜமௌலி – மகேஷ் பாபு இணையும், இன்னும் தலைப்பிடப்படாத மாபெரும் திரைப்படம் “Globe Trotter”உலகிலிருந்து, பிரித்விராஜ் சுகுமாரனின் ‘கும்பா’ கதாப்பாத்திர போஸ்டர் வெளியானது !

பாகுபலி மற்றும் RRR என இரண்டு உலகளாவிய பிளாக்பஸ்டர் வெற்றிகளுக்குப் பிறகு, மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா நடிப்பில், இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில், இந்திய சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரியதாக உருவாகி வரும் புதிய படம் — “Globe Trotter”.

நீண்ட நாட்களாக காத்திருந்த அந்த தருணம் வந்துவிட்டது! ரசிகர்களின் மனதை மயக்கும் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி, மகேஷ் பாபு நடிப்பில், உருவாகும் மாபெரும் படைப்பிலிருந்து பிரித்விராஜ் சுகுமாரன் நடித்துள்ள கும்பா (KUMBHA) கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அது ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே – தீவிரமானதாகவும், சக்திவாய்ந்ததாகவும், சினிமா அழகியலோடும் அமைந்துள்ளது.

இந்திய சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படத்தின் முதல் அம்சமாக, வில்லனாக நடிக்கும் பிரித்விராஜ் கதாப்பாத்திரத்தின் போஸ்டர் தற்போது வெளிவந்துள்ளது. மலையாள முன்னணி நட்சத்திர நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் “Globe Trotter” எனும் உலகில் “கும்பா”வாக மாறியுள்ளார். இந்தப் படத்தில் அவர் இதுவரை நாம் பார்த்ததற்கு மாறாக, கொடூரமான, இரக்கமற்ற, கட்டுப்படுத்தும் திறமை கொண்ட வில்லனாக தோன்றுகிறார். போஸ்டரில் அவர் ஒரு ஹைடெக் வீல் சேரில் அமர்ந்தபடி காணப்படுகிறார் – கதாப்பாத்திர போஸ்டர் லுக் புதிய நியூ ஏஜ் வில்லனாக அவரை அறிமுகப்படுத்துகிறது.

“Globe Trotter” என்பது ராஜமௌலி மற்றும் மகேஷ் பாபுவின் கூட்டணியில் உருவாகும், மிகப்புதுமையான ஒரு சாகச உலகம் ஆகும். இந்த இருவரின் கூட்டணியை ரசிகர்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்து காத்திருந்தனர், தற்போது அந்த எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது. ராஜமௌலி ஏற்கனவே இந்திய சினிமாவை உலக வரைபடத்தில் பதித்துள்ளார், இப்போது தென்னிந்திய முன்னணி நட்சத்திரமான மகேஷ் பாபுவுடன் இணையும் இந்தக் கூட்டணி, அடுத்த பெரிய நிகழ்வாக மாறியுள்ளது. மேலும் தற்போதைய நிகழ்வு படத்தின் புரமோசன் பயணத்தின் தொடக்கமாக அமைந்துள்ளது.

இந்த கதாப்பாத்திர போஸ்டர் ராஜமௌலி எப்போதும் எதிலும் தனிச்சிறப்பு கொண்டவர். இந்த போஸ்டர் அவரது தனித்துவமான முத்திரையுடன் வெளியாகியுள்ளது. தற்போது அதைக் காட்டிலும் அதிகமான ஹைப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது. உலகளாவிய அளவில் புகழ்பெற்ற, ஆஸ்கர் வென்ற RRRக்கு பிறகு வெளியாகும் இந்தப் படம் குறித்து, எதிர்பார்ப்பு மிக அதிகமாகவுள்ளது. Globe Trotter லாஞ்ச் நிகழ்ச்சி இந்திய சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரிய நிகழ்வாக இருக்கப் போகிறது. அது நவம்பர் 15 அன்று ஹைதராபாத்தின் ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற உள்ளது. அந்த நாளுக்கான தயாரிப்புகள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருவதால், ரசிகர்கள் ஏற்கனவே அந்த உற்சாகத்தை உணரத் தொடங்கியுள்ளனர்.

முன்னதாக ராஜமௌலி தனது X (Twitter) பக்கத்தில் கதாப்பாத்திரங்களின் போஸ்டர் விரைவில் வெளியாகும் என அறிவித்திருந்தார், தற்போது அது வெளியானதும் இணையம் முழுவதும் தீயாக பரவி பாராட்டுக்களை பெற்று வருகிறது. பிரித்விராஜின் அந்த தீவிரமான மற்றும் மிரட்டும் வகையிலான தோற்றம், ராஜமௌலியின் அடுத்த உலக அளவிலான சாகச கற்பனைக்குப் மிகப் பொருத்தமானதாக வெளிப்படுகிறது.

இந்த கும்பா கதாப்பாத்திர போஸ்டர் வெளியீடு, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் #GlobeTrotter நிகழ்ச்சிக்கு சில நாட்களுக்கு முன்பாக வெளிவந்துள்ளது. அந்த நிகழ்ச்சி நவம்பர் 15 அன்று ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற உள்ளது.

முன்னதாக ராஜமௌலி தனது பதிவில்..,

“மூன்று முக்கிய கதாபாத்திரங்களுடன் கிளைமேக்ஸ் ஷூட் நடந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் #GlobeTrotter நிகழ்வுக்கான தயாரிப்புகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை எப்போதும் செய்யாத அளவுக்கு ஒன்றை முயற்சி செய்கிறோம். நவம்பர் 15 அன்று அதை நீங்கள் அனுபவிப்பதை காண ஆவலுடன் காத்திருக்கிறேன் .”

இயக்குநர் தெரிவித்ததாவது, தற்போது நடந்து வரும் கிளைமேக்ஸ் காட்சி மூன்று முக்கிய கதாப்பாத்திரங்கள் பங்கேற்க மிகப்பெரிய அளவில் எடுக்கப்படுகிறது, மேலும் GlobeTrotter நிகழ்வுக்கான தயாரிப்புகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. தயாரிப்பு குழுவின் தகவல்படி, இது ராஜமௌலி திரைப்படங்களில் இதுவரை எடுக்கப்பட்ட மிக விரிவான, மிகப்பெரிய காட்சிகளில் ஒன்றாக இருக்கும்.

பிரித்விராஜ் சுகுமாரனின் கதாப்பாத்திர போஸ்டர் வெளியீடு இந்த வார “அனவுன்ஸ்மெண்ட் வீக்” ( Announcement week) உடைய தொடக்கமாகும், இதில் ராஜமௌலி கூறியபடி, நவம்பர் 15 நிகழ்வுக்கு முன் பல அப்டேட்களும் சர்ப்ரைஸ்களும் வெளியாகவுள்ளன.

இந்தப் படத்தின் புரோமோஷன் அப்டேட்கள் பல கட்டங்களாக வெளியிடப்படவுள்ளது, முதலில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், அதன் பிறகு ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெறும் “மாபெரும் கொண்டாட்ட நிகழ்வில்” முடிவடையும் என்று உள் வட்டாரங்கள் கூறுகின்றன.

Sony Pictures Entertainment India releases trailer of action-thriller, Sisu: Road to Revenge

Sony Pictures Entertainment India releases trailer of action-thriller, Sisu: Road to Revenge; releases on 21st November, 2025 in English, Hindi, Tamil and Telugu

Sony Pictures Entertainment India has unveiled the trailer of their upcoming action-thriller, titled Sisu: Road to Revenge. The film is a wall-to-wall cinematic action event, a sequel to the original sleeper hit SISU. The film is set to hit the Indian theatres on 21st November 2025 in English, Hindi, Tamil and Telugu.

Returning to the house where his family was brutally murdered during the war, “the man who refuses to die” (Jorma Tommila) dismantles it, loads it on a truck, and is determined to rebuild it somewhere safe in their honor. When the Red Army commander who killed his family (Stephen Lang from Don’t Breathe) comes back hellbent on finishing the job, a relentless, eye-popping cross-country chase ensues – a fight to the death, full of clever, unbelievable action set pieces.

Written and directed by Jalmari Helander, and produced by Mike Goodridge and Petri Jokiranta, the film stars Jorma Tommila, Richard Brake, and Stephen Lang among others.

Sony Pictures Entertainment India will exclusively release the film in Indian theatres on 21st November, 2025.

ஆக்சன் கிங்’ அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும், ‘தீயவர் குலை நடுங்க’

ஆக்சன் கிங்’ அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும், ‘தீயவர் குலை நடுங்க’ படம் வரும் நவம்பர் 21 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது!

‘தீயவர் குலை நடுங்க’ திரைப்படம், உலகமெங்கும் வரும் நவம்பர் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரிப்பில், ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அதிரடி ஆக்சன் திரில்லராக உருவாகியிருக்கும் ‘தீயவர் குலை நடுங்க’ திரைப்படம் வரும் நவம்பர் 21 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

‘ஆக்சன் கிங்’ அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்முதலாக இணைந்து நடிப்பதால் இப்படத்திற்கு பார்வையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. மேலும் சமீபத்தில் வெளியான டீசர் படத்தின் மீது பெரும் ஆவலைத் தூண்டிய நிலையில், தற்போது அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை வெளியிட்டு, படக்குழு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

சட்டத்தை தாண்டி நியாயம் இருக்கும், நியாயத்தை தாண்டி தர்மம் இருக்கும், ஆனால் இறுதியில் தர்மமே ஜெயிக்கும் எனும் கருத்தை மையமாகக் கொண்டு, ஒரு அதிரடி ஆக்சன் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

‘ஆக்சன் கிங்’ அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில், பிக் பாஸ் அபிராமி வெங்கடாசலம், பிரவீன் ராஜா, லோகு. Npks, ராம் குமார், தங்கதுரை, பேபி அனிகா, பிராங்க்ஸ்டர் ராகுல், பிரியதர்ஷினி, சையத், G.K. ரெட்டி, P.L. தேனப்பன், O.A.K. சுந்தர், வேலா ராமமூர்த்தி, பத்மன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ்,
சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் ஆசிவகன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை லாரன்ஸ் கிஷோர் மேற்கொள்ள, கலை இயக்கத்தை அருண்சங்கர் துரை கவனித்திருக்கிறார்.

விரைவில் இப்படத்தின் இசை, டிரெய்லர் வெளியீடு குறித்த அறிவிப்பு, அதிகாரப்பூர்வமாக வெளியாகும். நவம்பர் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

“ஆர்யன்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, இயக்குநர் பிரவீன் K இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் இணைந்து நடிக்க, இன்வஸ்டிகேடிவ் திரில்லராக, கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “ஆர்யன்”.

விமர்சகர்கள் பாராட்டில் மற்றும் ரசிகர்களின் பெரும் வரவேற்பில், இப்படம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

இதனைத்தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து, அவர்களுடன் உரையாடி, படத்திற்கு ஆதரவளித்ததற்கு நன்றி தெரிவித்தனர்.

இந்நிகழ்வினில்

எடிட்டர் சான் லோகேஷ் பேசியதாவது..,
ஆர்யன் படத்திற்குத் தந்த பாராட்டுக்களுக்கும் நல்ல விமர்சனங்களுக்கும் நன்றி. அனைவருக்கும் நன்றி.

இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசியதாவது..,
ஒரு திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது இப்போதைய நிலையில் மிகவும் முக்கியம். ஆர்யன் படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்ததற்குப் பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி. இப்படத்தில் மியூசிக்கில் ஒரு புதுவிதமான முயற்சி செய்தோம். ஒன்று பாராட்டுவார்கள், இல்லை திட்டுவார்கள் என நினைத்தோம். அனைவரும் புதிய முயற்சியைக் குறிப்பிட்டுப் பாராட்டினீர்கள் நன்றி. இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்த பிரவீனுக்கு நன்றி. விஷ்ணுவைப் பற்றி சொல்ல வேண்டும். அவர் அர்ப்பணிப்பு பிரமிப்பானது. எப்போது கூப்பிட்டாலும் தயாராகவே இருப்பார். சினிமாவை நேசிக்கும் அவருக்கு வாழ்த்துக்கள். அனைவருக்கும் நன்றி.

நடிகை மானசா சௌத்திரி பேசியதாவது..,
மிகப்பெரிய அன்பைத் தந்த பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. அனிதா என் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான ரோல், இந்த வாய்ப்பைத் தந்த பிரவீன் சாருக்கு நன்றி. விஷ்ணு சாருடன் நடித்தது மிகச்சிறந்த அனுபவம் அவருக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.

நடிகை ஷ்ரத்தா ஶ்ரீநாத் பேசியதாவது..,
இப்படத்தின் மீது நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. நம்பிக்கை இருந்தது. இந்த அளவு பாராட்டுக்கள் எதிர்பார்க்கவில்லை. நல்ல கதை ஜெயிக்கும் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டீர்கள். எல்லாவற்றையும் இணைத்த இந்த யுனிவர்ஸுக்கு நன்றி. இந்த மூன்று வருடத்தில் பல தடைகள் வந்தாலும், நாங்கள் நினைத்த திரைப்படத்தை கொண்டுவர முடிந்தது. பிரவீன் முதல் படத்திலேயே தன் திறமையை நிரூபித்துவிட்டார். விஷ்ணு மிகப் பொறுமையாக இருந்து இப்படத்தை உருவாக்கினார். ஆர்யன் படத்திற்கும், டயானா பாத்திரத்திற்காகவும், விஷ்ணுவிற்கு நன்றி. எல்லோருக்கும் நன்றி.

இயக்குநர் பிரவீன் பேசியதாவது..,
இப்படத்தைத் திரையரங்கில் சென்று பார்த்த அனைவருக்கும் நன்றி. இப்படத்திற்கு முழு ஆதரவைத் தந்த பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. இந்த வாய்ப்புக்கும் உடன் இருந்ததற்கும் விஷ்ணுவிற்கு நன்றி. படத்தின் நடிகர்கள் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.

நடிகர், இயக்குநர் செல்வராகவன் பேசியதாவது..,
நல்ல படம் எடு, நாங்கள் கொண்டு போய் சேர்க்கிறோம் என செயல்பட்டு வரும் பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. யாருமே கண்டுகொள்ளாத துள்ளுவதோ இளமை எனும் முதல் படத்திலிருந்து என்னைத் தூக்கிப்பிடித்து, இப்போது வரை ஆதரவளித்து வருகிறீர்கள், அதற்கு நன்றி. விஷ்ணு மற்றும் பிரவீன் அவர்களின் பரந்த மனதிற்கும் அன்பிற்கும் நன்றி.

நடிகர், தயாரிப்பாளர் விஷ்ணு விஷால் பேசியதாவது ..,
ஆர்யன் எனக்கும் மிகவும் ஸ்பெஷலான படம். என்னுடைய மகனின் பெயரில் எடுத்த படம். விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸில் எடுத்த மூன்றாவது தொடர் வெற்றிப்படம் . இது தமிழ் சினிமாவில் மிகவும் அரிது. என் மகனும் படம் பார்த்து மிகவும் சந்தோசப்பட்டார். படம் பார்த்துவிட்டு என்னைக் கட்டிப்பிடித்தார், அது எனக்கு மிகப்பெரிய விருது. 2023 ரிலீஸ் தேதி வைத்துவிட்டு இந்தப்படம் ஆரம்பித்தோம், ஆனால் சில காரணங்களால் அது தள்ளிப்போனது. ஆனால் இந்த இடைவெளியில் முழு உழைப்பைத் தந்து, இயக்குநர் பிரவீன் மிகப்புதுமையான படத்தைத் தந்துள்ளார். இந்தப்படத்தைப் பற்றி சில மாறுபட்ட கருத்துகளும் வந்தது, என்ன கிளைமாக்ஸ் வைப்பது என எங்களுக்குள் நிறைய விவாதங்கள் நடந்தது. அது பற்றிய விமர்சனங்கள் எங்களுக்கு உதவியாக இருந்தது. இனி படம் பார்ப்பவர்கள் புது க்ளைமாக்ஸை பார்ப்பார்கள், அது தான் பிரவீன் வைத்திருந்த கிளைமாக்ஸ். என் படங்கள் திரையரங்கத்தைத் தாண்டி ஓடிடியில் நல்ல வெற்றி பெறுகிறது. இது படத்திற்குப் படம் மாறுபடும். ஆர்யன் படமும் ஓடிடியில் நல்ல வரவேற்பைப் பெறும். தியேட்டரிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. என் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய ஓபனிங் இந்த படம் தான். இந்தப்படத்தில் எடிட்டிங் மிக முக்கியம் அதை சான் லோகேஷ் சிறப்பாக செய்தார். ஜிப்ரான் சார் கடைசியில் தான் வந்தார், இப்போது மாற்றிய க்ளைமாக்ஸுக்கு கூட மீண்டும் சிறப்பாக வேலை செய்து தந்தார். மானசா சௌத்திரி தந்த ஒத்துழைப்புக்கு நன்றி. நான் வேலை பார்த்ததில் என்னுடைய ஃபேவரைட் நடிகை ஷ்ரத்தா. மிக வித்தியாசமானவர். நிறைய சினிமா பற்றிப் பேசுவோம் அவருக்கு நன்றி. செல்வா சார் இப்படத்தில் நடிக்கப்போகிறார் என்பதே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. அவர் நடிப்பு பிரமிப்பைத் தந்தது. சைக்கோவிற்கு இருக்கும் வரைமுறைகளை தன் நடிப்பால் உழைத்துள்ளார். நான் எதிர்பார்த்ததை விட 2000 மடங்கு சிறப்பான உழைப்பத் தந்துள்ளார். இயக்க்குநர்பிரவீனை இவ்வளவு காலம் காக்க வைத்தற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அடுத்த படம் விரைவாகச் செய்ய வாழ்த்துக்கள். கட்டா குஸ்தி 2 விரைவில் வருகிறது. என் தம்பியுடன் ஒரு படம் செய்யவுள்ளேன், இயக்குநர் அருண்ராஜா காமராஜுடன் ஒரு படம் செய்கிறேன். அடுத்தடுத்து உங்களுக்குப் பிடித்த மாதிரி படங்கள் செய்வேன். அனைவருக்கும் நன்றி.

நடிகர் விஷ்ணு விஷால், ராட்சசன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு மீண்டும் போலீஸ் கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். இவருடன் இயக்குநர் செல்வராகவன் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சௌத்திரி முக்கிய பாத்திரத்தில் நடிக்க, உடன் சாய் ரோனக், தாரக் பொன்னப்பா, மாலா பார்வதி, அவினாஷ், அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

புதுமையான திரைக்கதையில் பரபரப்பான ஆக்சன் இன்வடிகேடிவ் திரில்லரான இப்படத்தை இயக்குநர் பிரவீன் K இயக்கியுள்ளார். விஷ்ணு விஷால் நடித்த “எஃப்.ஐ.ஆர்” படத்தை இயக்கிய மனு ஆனந்த், இந்த படத்தில் இணை எழுத்தாளராக பணியாற்றியுள்ளார்.

புதிய கிளைமாக்ஸுடன் ரசிகர்களின் வரவேற்பில் ஆர்யன் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

தொழில்நுட்ப குழு விபரம்
தயாரிப்பு – விஷ்ணு விஷால் (விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்)
எழுத்து இயக்கம் – பிரவீன் K
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

யாழ்ப்பாணத்தில் “மில்லர்” திரைப்பட தொடக்க விழா:

யாழ்ப்பாணத்தில் “மில்லர்” திரைப்பட தொடக்க விழா:
கவிதையால் கர்ஜித்த பொத்துவில் அஸ்மின்; கண்டு ரசித்த கவிப்பேரரசு வைரமுத்து.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற “மில்லர்” திரைப்படத்தின் தொடக்க விழாவில், பிரபல இலங்கைத் தமிழ் கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான பொத்துவில் அஸ்மின், கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் முன்னிலையில் கவிதை ஆற்றிய சிறப்பை பெற்றார்.

IBC நிறுவனரும் முன்னணி தொழில் அதிபருமான திரு. பாஸ்கரன் கந்தையா அவர்கள் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்தின் தொடக்க நிகழ்வு, அண்மையில் யாழ் வலம்புரி ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் தென்னிந்திய திரைப்படத் துறையின் முக்கிய பிரமுகர்களான இயக்குநர் பாண்டிராஜ், “மஹாராஜா” இயக்குநர் நித்திலன், நடிகர் ரஞ்சித், நடிகர் & இயக்குநர் சிங்கம்புலி, தயாரிப்பாளர் பி. எல். தேனப்பன்
ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இலங்கைத் தமிழ் திரைப்படத் துறை, ஊடகத் துறை மற்றும் கலையுலகின் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் தனது கவிதையை ஆற்றிய பொத்துவில் அஸ்மின், “வைரமுத்து என் தாய்” என்ற மகுடத்தில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு சமர்ப்பித்த வாழ்த்துக் கவிதை, பார்வையாளர்களின் மிகுந்த பாராட்டைப் பெற்றது.

இந்நிகழ்வை குறித்து பேசும்போது பொத்துவில் அஸ்மின் தெரிவித்தாவது.

“கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை நேரில் காண வேண்டும் என்பது பலரின் கனவு.
ஆனால் அவர்முன் நின்று கவிதை பாடும் பாக்கியம் — நான் பெற்ற வரம் என்பேன்.

எனது சிறிய வயதில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை முதன் முதலாக நான் புத்தகங்கள், ஊடகங்கள் வழியேதான் சந்தித்தேன். அவரின் ‘இதுவரை நான்’ என்ற சுயசரிதை என் வாழ்வையும் இலக்கியப் பாதையையும் வடிவமைத்த முக்கிய நூல். அதன் பிறகு, 2013-ல் வெளிவந்த ‘பாம்புகள் குளிக்கும் நதி’ என்ற எனது கவிதைத் தொகுப்பிற்கு அவர் வழங்கிய வாழ்த்துரை எனக்கு மிகப்பெரிய அங்கீகாரம்.

கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு அவர் தொகுத்த ‘கலைஞர் 100 – கவிதைகள்100 ’ நூலில் என் ‘திருக்குவளை சூரியன்’ என்ற கவிதை இடம்பெற்றுள்ளது.

நான் நேசித்த மாபெரும் கவிஞரின் முன்னிலையில், அவரை பற்றிய கவிதையைப் பாடும் பாக்கியம் கிடைத்தது — இது என் இலக்கிய வாழ்வின் உச்ச அங்கீகாரம். இலங்கையில் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலும் பல இளம் கவிஞர்கள் கூட இதுவொரு கனவு மாதிரியான வாய்ப்பு என்பதை நான் நன்றாக அறிவேன்.”

விழாவை ஏற்பாடு செய்து இந்த அரிய கலைச் சந்திப்பை உருவாக்கிய IBC நிறுவனரும் தொழில் அதிபருமான திரு. கந்தையா பாஸ்கரன் அவர்களுக்கு என் மனம் நிறைந்ந நன்றிகள்” என அவர் தெரிவித்தார்.

கும்கி 2 படத்தின் முதல் சிங்கிள் “பொத்தி “பொத்தி உன்ன வச்சு”

டாக்டர் ஜெயந்திலால் காடா (பென் ஸ்டுடியோஸ்) வழங்கும், இயக்குநர் பிரபு சாலமனின் – கும்கி 2 படத்தின் முதல் சிங்கிள் பொத்தி பொத்தி உன்ன வச்சு பாடல் வெளியீடு.

டாக்டர் ஜெயந்திலால் காடா (பென் ஸ்டுடியோஸ்) வழங்க, தவல் காடா தயாரிப்பில், இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “கும்கி 2” படத்திலிருந்து, “பொத்தி பொத்தி உன்ன வச்சு” எனும் முதல் சிங்கிள் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில், பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற படம் “கும்கி”. 13 வருடங்களைக் கடந்தும், இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் அப்படத்தின் மையத்தை வைத்து, இயக்குநர் பிரபு சாலமன் மீண்டும் கும்கி 2 படத்தை உருவாக்கி வருகிறார்.

ஒரு இளைஞன் மற்றும் ஓர் அற்புதமான யானை இடையேயான தூய்மையான, நிபந்தனையற்ற நட்பைப் பற்றியும், அன்பை பற்றியும் இப்படம் பேசுகிறது.

இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா மென்மையான மெலடி இசை மற்றும் மயக்கும் குரலில், பாடலாசிரியர் மோகன் ராஜின் அற்புத வரிகளில், நேற்று வெளியான “பொத்தி பொத்தி உன்ன வச்சு” பாடல், ஒரு சிறுவனுக்கும் யானைக்குமான உறவை, அன்பை, அழகாக வெளிப்படுத்துகிறது.

ஒளிப்பதிவாளர் எம். சுகுமார் அவர்களின் கண்களை குளுமையாக்கும் காட்சிகளும், நிவாஸ் கே பிரசன்னாவின் சொக்க வைக்கும் இசை, யானையோடு விளையாடும் சிறுவனின் கள்ளம் கபடமற்ற அன்பு, இயற்கை எழில் கொஞ்சும் காடு என, இப்பாடல் பார்த்தவுடன் மனதை பறிக்கிறது. வெளியான வேகத்தில் இப்பாடல் இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இப்படத்தில் மதி எனும் அறிமுக நடிகர் நாயகனாக நடித்துள்ளார். காட்டிலும், யானையுடனும் வெகு துணிச்சலாக நடித்து முதல் படத்திலேயே கவர்ந்திழுக்கிறார். அவருடன் இப்படத்தில் ஸ்ரீதா ராவ், ஆண்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ், ஆகாஷ், ஹரீஷ் பெரடி, ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர்.

டாக்டர் ஜெயந்திலால் காடா (பென் ஸ்டுடியோஸ்) வழங்க, தவல் காடா தயாரிப்பில் உருவாகும் கும்கி 2, திரைப்படம் ரசிகர்களையும் புதிய தலைமுறையையும் கவரும் நோக்கில் விரைவில் திரைக்க்கு வரவுள்ளது.

தொழில்நுட்பக் குழு:

இயக்கம் – பிரபு சாலமன்
தயாரிப்பாளர்கள் – டாக்டர் ஜெயந்திலால் காடா, தவல் காடா
இசை – நிவாஸ் கே. பிரசன்னா
ஒளிப்பதிவு – எம். சுகுமார்
எடிட்டிங் – புவன்
கலை இயக்கம் – விஜய் தென்னரசு
சண்டை அமைப்பு – ஸ்டண்ட் சிவா
ஆடை அலங்காரம் – வி.பி. செந்தில் அழகன்
தயாரிப்பு நிர்வாகம் – ஜே. பிரபாகர்
ஸ்டில்ஸ் – சிவா
புரமோஷன் – சினிமாபையன்
மக்கள் தொடர்பு – யுவராஜ்

Link – https://www.youtube.com/watch?v=hqUBThejZk8