Breaking
March 7, 2026

Cinema Reviews

அக்யூஸ்ட் – அரசியல், காவல், குற்றம் கலந்த பதட்டப் பயணம்!

ஜெய்ஷன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீ தயாகரன் சினி புரொடக்ஷன், எம்ஐஒய் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள அக்யூஸ்ட், ஒரு கைதியின் பயணத்தில் மறைந்து கிடக்கும் அரசியல் மற்றும் குற்றச் சூழலை நெருடலுடன் வெளிப்படுத்துகிறது. இயக்குநர் பிரபு ஸ்ரீனிவாஸ், கதை, திரைக்கதை, இயக்கம் மூன்றிலும் தன் தடத்தை பதித்துள்ளார்.

📝 கதை சுருக்கம்
புழல் சிறையில் உள்ள ரவுடி கைதி கணக்கு (உதயா) சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். பிரபல அரசியல் கட்சி மாவட்ட செயலாளர் குணசேகரன் கொலை வழக்கு என்பதால் பாதுகாப்பு கடுமையாக அமையும் நிலையில், கான்ஸ்டபிள் வேந்தன் (அஜ்மல்) தலைமையில் மூன்று போலீஸ்காரர்கள் அவரை அழைத்துச் செல்கின்றனர்.

பாதையில் ரவுடி கும்பலின் தாக்குதலில் சிக்கி, வேந்தன் கணகுவை மீட்டு வேலூரின் ஓர் ஊரில் பாதுகாப்பாக வைத்திருக்கிறார். ஆனால், போலீஸின் உத்தரவுப்படி என்கவுண்டர் திட்டம் நடப்பதை அறிந்ததும், கணகுவை காப்பாற்ற வேந்தன் வியூகம் தீட்டுகிறார்.

ரவுடிகள், போலீஸ் என்கவுண்டர், அரசியல் விளையாட்டு என பல தடைகளை தாண்டி, வேந்தன் தனது கடமையை நிறைவேற்றி நீதிமன்றம் வரை கணகுவை அழைத்துச் செல்ல முடியுமா? குணசேகரன் கொலையின் பின்னணியில் யார்? உண்மையை வெளிச்சமிடுவாரா? என்பதே க்ளைமாக்ஸ்.

🎭 நடிப்பு

  • உதயா ரவுடி கணக்குவாக, ஆக்ஷனிலும் நகைச்சுவையிலும் சிறந்து விளங்குகிறார்.
  • அஜ்மல் நேர்மையான போலீஸ்காரராக, சாலையிலான சவால்களில் அமைதியான அழுத்தமான நடிப்பைக் கொடுத்துள்ளார்.
  • யோகிபாபு தனது நகைச்சுவை பாணியில் சிரிப்பூட்டுகிறார்.
  • ஜான்விகா கலகேரி, சாந்திகா, பவன் உள்ளிட்டோரின் நடிப்பும் படத்திற்கு வலு சேர்க்கின்றது.

🎥 தொழில்நுட்பம்

  • ஸ்டண்ட் சில்வா பஸ் சண்டை உள்ளிட்ட ஆக்ஷன் காட்சிகளை உயர்தரமாக வடிவமைத்துள்ளார்.
  • மருதநாயகம் ஒளிப்பதிவில் சாலைப் பயண காட்சிகளை நெருடலுடன் காட்சிப்படுத்தியுள்ளார்.
  • நரேன் பாலகுமார் இசையில் பாடல்கள், பின்னணி இசை சராசரி அளவுக்கு உதவுகின்றன.
  • கே.எல். பிரவீன் எடிட்டிங் படத்தின் வேகத்தை கட்டுப்படுத்தி, கதையை உறுத்தும் படி வடிவமைத்துள்ளார்.


அரசியல், குற்றம், காவல் நடவடிக்கைகள் கலந்த பதட்டமான சாலைப் பயணத்தை, திருப்பங்களும் த்ரில்லும் சேர்த்து இயக்குனர் பிரபு ஸ்ரீனிவாஸ் , அக்யூஸ்ட் நிரபராதி கைதியின் வாழ்க்கையை அரசியல் பின்னணியோடு சுவாரஸ்யமாக சொல்லும் நேர்மையான முயற்சி.


“தலைவன் தலைவி” திரைவிமர்சனம்

ஒரு படத்துல ஒரு ஹிஸ்டரியாபேசன்ட் இருக்கலாம் ,இல்ல ரெண்டு ஸ்டீரியா பேசன்ட் இருக்கலாம், ஆனால் இந்த படத்துல வர்றவங்க போறவங்க எல்லாம் ஹிஸ்டரிய பேசன்ட்டுங்களா இருந்தா பாக்குற நாம என்ன பேசன்டா மாறுவோம் அப்படின்னு சொல்ல வருவது தான்
தான் “தலைவன் தலைவி”
மதுரை ஒத்தக்கடையில் ஒரு சிறிய ஹோட்டல் நடத்தி வரும் விஜய் சேதுபதி அண்ட் கோ பேமிலி, அவருக்கு பெண் தேடுகிறார்கள், அவ்வாறு தேடும் பொழுது ஆர் கே சுரேஷின் தங்கைநித்யா மேனனை பெண் பார்க்கிறார்கள். காதல் பிறக்கிறது விஜய் சேதுபதியின் கொத்து புரோட்டாவில் மயங்கி நித்யா மேனன் குடும்பம் விஜய் சேதுபதிக்கு பெண் தர முடிவெடுக்கிறார்கள். இதற்கிடையே விஜய் சேதுபதி அம்மாவுக்கு யாரோ ஒரு ஜோசியக்காரன் நித்யா மேனன் உங்க வீட்டுக்கு வந்தா மாமனார், மாமியாரை ஒரு மூளையில் உட்கார வைத்து விடுவாள் என்று கூற, விஜய் சேதுபதி அம்மவோ அந்த பெண் வேண்டாம் என்று கூறுகிறார், ஆனால் விஜய் சேதுபதி வம்படியாக நித்தியாமேனனை தூக்கி வந்து திருமணம் செய்கிறார் இந்த திருமணத்தில் ஆர் கே சுரேஷ், விஜய் சேதுபதி இருவருக்கும் மோதலை உண்டாக்குகிறது.இவ்வாறு திருமணம் செய்துவிட்டு இருவரும் ஒற்றுமை இல்லாமல் அடிக்கடி சண்டை போடுவதும் கத்திக் கொண்டே இருப்பதும் அம்மா வீட்டிற்கு கோபித்துக் கொண்டு செல்வதுமாக நித்யா மேனன் இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் நிரந்தரமாக பிரிந்து செல்ல அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு தந்தைக்கு தகவல் தெரிவிக்காமல் மொட்டை அடிக்கும் பங்க்ஷன் நடக்கிறது. அங்கு வரும் விஜய் சேதுபதி அவர்களிடம் சண்டை போட்டு அடிக்கடி பிளாஷ் பைக்கில் கதைகளை சொல்லி அவர்கள் சண்டைக்காண காரணத்தை சொல்லி, இதெல்லாம் ஒரு காரணமா என்று நம்மை எண்ண வைத்து நம்மையும் கிறுகிறுக்க பிடிக்க வைத்து திரைக்கதை எழுதியவர்கள் கிறுகிறுத்து இந்த திரைப்படத்தை இருவரையும் சேர்த்து முடிக்கிறார்கள். அப்பாடா முடிந்து விட்டது என்று பார்த்தால் மீண்டும் சண்டை ஆரம்பித்து கோர்ட்டுக்கு செல்கிறார்கள், சரி டைவர்ஸ் தான் வாங்கி விட்டார்கள் என்று பார்த்தால் மீண்டும் ஒன்றாக பரோட்டா பிசைந்து கொண்டிருக்கிறார்கள் இதுதான் இந்த தலைவன் தலைவி படத்தின் கதை.

.இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹிஸ்டரியாபேசன்ட் போல் எப்போதும் கத்திக் கொண்டே இருக்கிறார் மனைவியிடம் சாப்பிடுங்க மேடம், சாப்பிடுங்க மேடம், ஓகே மேடம் ,சொல்றது பத்து தெருவிற்கு தள்ளி கேட்பது போல் தான் பேசுகிறார் இவர்கள் சாதாரணமாக பேசினாலே இப்படி இருக்கும் போது, சண்டை போட்டால் ஊரில் இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள் ஆனால் இவர்கள் சண்டை போடும் காரணம் எல்லாம் பைத்தியக்கார குடும்பத்தில் கூட இந்த மாதிரி சண்டை போட மாட்டார்கள், அந்த மாதிரியான காரணங்களை தான் காட்டியிருக்கிறார்கள் ஒரே ஒரு காட்சியும் கூட நமக்கு மனதில் பதியும் அளவிற்கு படத்தில் இல்லை என்பதுதான்,

யோகி பாபு இந்த படத்தில் படம் ஆரம்பிப்பதற்கு, முடிப்பதற்கு மட்டுமே உதவி இருக்கிறார் மத்த படத்தில் செட் ப்ராப்பர்ட்டி போல் ஆங்காங்கே வந்து போகிறார் இதே மாதிரி நிறைய கதாபாத்திரங்கள்.
படத்தில் நித்தியாமனின் அம்மாவாக வருபவரும், விஜய் சேதுபதி அம்மாவாக வருபவரும் நடிப்பின் வில்லத்தனம் மட்டும் தான் நம்மால் ரசிக்க முடிகிறது ஓரளவிற்கு.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கிடைப்பதெல்லாம் போட்டு அடித்து இசையமைத்திருக்கிறார் படம் முழுவதும் நமக்கு சவ்வு கிழிந்தது நிச்சயம்.

கத்துவது ஒரு பக்கம் இருந்தாலும் இந்த இசை ஒரு பக்கம் நம் காது ஜவ்வு கிழிகிறது
இந்தப் படத்தின் பாராட்டக்கூடிய ஒரே விஷயம் இந்த படத்தின் லொகேஷன் ஒரு கோவிலுக்குள் அதுவும் அந்த கிராமத்து சூழ்நிலையில் இருக்கும் அந்த கோவிலை செட்டாக பயன்படுத்தி அந்த இடத்தில் எடுத்திருப்பது மிகவும் பாராட்டக்கூடிய விஷயம் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது
தலைவன் தலைவி இந்த படத்திற்கு பொருத்தமான தலைப்போ இல்லையோ நமக்கு தெரியவில்லை????????????

“மகா அவதார் நரசிம்மா” திரை விமர்சனம்

பெருமாளின் ஒன்பது அவதாரங்களில் மூன்றாவது அவதாரம் மற்றும் நான்காவது அவதாரம் வராக, நரசிம்ம அவதாரம் இந்த இரண்டு அவதாரங்களை வைத்து அனிமேஷன் மூலமாக சொல்லப்பட்ட கதை மகா அவதார் நரசிம்மா.
காசிபர் முனிவர் மற்றும் திதி ஆகியோரின் மகன்களாக இரண்யகசிபுவும், இரண்யாட்சனும்பிறக்கிறார்கள். ஒரு தவறான நேரத்தில் அவர்கள் இருவரும் இணைவதால் அரக்கர்களின் வரம் பெற்று குழந்தைகளாக பிறக்கிறார்கள் அவர்கள் பிறக்கும் பொழுது அவர்கள் அனைத்து தேவர்களையும் அடிமைப்படுத்தி ஆள்வார்கள் என்றும் அவர்கள் பெருமாளின் அவதாரத்தால் தான் வதம் செய்யப்படுவார்கள் என்பதும் நாம் அறிந்த கதை.
அவ்வாறுஇரண்யகசிபுவும், இரண்யாட்சனும் தேவர்களை நோக்கி கடும் தவம் புரிந்து பல வரங்களைப் பெற்று கொடுங்கோல் ஆட்சி செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் இரண்யாட்சன் பூமாதேவியை கடலுக்குள் ஒளித்து வைத்து சிறை பிடிக்கிறான். அப்பொழுது அனைத்து தேவர்களும் பிரம்மனிடம் சென்று முறையிட அவருடைய தும்மலையிலிருந்து வராக அவதாரமாக உருவெடுத்து பூமிதேவியை காப்பாற்றுகிறார் இரண்யாட்சனையும் கொல்கிறார். தன் தம்பியின் மறைவுக்கு விஷ்ணு தான் காரணம் விஷ்ணுவை நான் வதம் செய்வேன் என்றும் இரண்யகசிபு சபதம் செய்துஇறைவனிடம் நான் காலையிலும் சாகக்கூடாது, இரவிலும் சாகக்கூடாது ,வானிலும் சாகக்கூடாது நீரிலும் சாகக்கூடாது, பூமியிலும் சாகக்கூடாது, மிருகங்களாலும் சாகக்கூடாது, ஆயுதங்களாலும் சாகக்கூடாது, வீட்டிற்கு உள்ளே என் சாகக்கூடாது, வெளியேயும் சாகக்கூடாது, என்று வரம் பெறுகிறான். இந்த வரத்தின் பிறகு அவன் ஆடும் அனைத்து கோரத்தாண்டவம் அதே நேரத்தில் அவனுக்கு பிறக்கும் மகன் விஷ்ணுவின் சீடனாக விஷ்ணுவின் பக்தனாக விஷ்ணுவை அடைய நினைப்பவனாக வளரும் பிரகலாதன் ஒரு கட்டத்தில் இரண்யகசிபு தன்மகன்பிரகலாதனையே கொல்ல நினைக்கிரான் ஆனால் அவனுடைய திட்டம் எதுவும் நிறைவேறாமல் விஷ்ணு பிரகலாதனை காப்பாற்றுகிறார் .

கடைசியில் விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து எப்படி இரண்யகசிபு வை வதம் செய்கிறார் என்பதுதான் இந்த மகா அவதார் நரசிம்மா.
.இந்தப் படத்தின் அனைத்து கதாபாத்திரங்களின் வடிவமைப்பும் அவர்களின் முகபாவனையும் மிகச் சிறப்பாக காட்டியிருக்கிறார்கள் கிராபிக்ஸ் குழுவினர் குறிப்பாக கிளைமாக்ஸ்சில் வரும் நரசிம்மா அவதாரத்தின் சண்டைக் காட்சி மிகவும் பிரம்மாண்டம் ஒருவேளை இதை நிஜ கதாபாத்திரங்களை வைத்து படமாக்கி இருந்தால் நிச்சயம் பிரம்மாண்டமாக காட்டி இருக்கலாம் ஆனாலும் அதைவிட இந்த அனிமேஷன் படம் மிகச் சிறப்பாக நமக்கு நரசிம்மர் அவதாரத்தின் கதையை மிகச் சிறப்பாக எடுத்துரைக்கிறார்கள் நிச்சயம் குழுவினருக்கு ஒரு பாராட்டுக்கள் தான்

“மாரீசன்” திரைவிமர்சனம்

சின்ன சின்ன திருட்டுகளில் அடிக்கடி சிறைக்குச் செல்லும் தயாளன் என்னும் பகத் பாசில் ஒருநாள் சிறையில் இருந்து வெளியில் வருந்து ஒரு வண்டியை திருடிக் கொண்டு செல்லும் அவன், ஒரு வீட்டில் திருடன் திட்டமிடுகிறான் அந்த வீட்டிற்குள் சென்று திருடும்பொழுது அந்த வீட்டில் அல்சைமர் என்னும் நினைவு இழப்பு நோயால் பாதிக்கப்பட்டு வேலாயுதம் பிள்ளை எனப்படும் வடிவேலு அங்கு சங்கலியால் கட்டி வைக்கப்பட்டு இருக்கிறார்.

அவரிடம் வடிவேலு என்னை காப்பாற்றினால் உனக்கு 25 ஆயிரம் ரூபாய் பணம் தருவதாக பேரம் பேசுகிறார். பணம் கிடைக்கிறது என்பதால் வடிவேலுவை அவரும் விடுவித்து கூட்டி செல்க, ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போது வடிவேலின் அக்கவுண்டில் 25 லட்சம் இருப்பதைபார்க்கும் பகத் பாஸில் அதை எப்படியாவது திருடன் நினைக்கிறார்.

அல்சைமரல் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் வடிவேலு அடிக்கடி அனைத்தையும் மறந்து விடுகிறார், தான் செல்லும் ஊரே மறந்து விடுவார் ஒரு தடவை திருவண்ணாமலை என்கிறார் அதை பிறகு பாலக்காடு என்கிற இப்படி தனக்கு வாயில் வந்த ஊர் பெயர் எல்லாம் சொல்லும் வடிவேலு அவரை நம்பி பகத் பாசில் இருவரும் பயணப்படுகிறார்கள்.

வழியில் பகத் பசில் 25 லட்சம் திருடினாரா? அல்லது வடிவேலு ஏமாற்றப்பட்டாரா? என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை
இந்த படத்தில் முக்கிய நாயகர்களுக்காக வடிவேலு மட்டும் பகத் பாஸில் வடிவேலுக்கு அல்சைமர் நோய் இருக்கும் என்பதை காட்டும் இயக்குனர் ஆரம்பத்திலேயே அவர் நடிக்கிறார் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது அந்த அளவிற்கு திரை கதையில் தெளிவாக எழுதி இருக்கிறார். மேலும் இவர்கள் பயணப்படும் பொழுது இவர்கள் இருவரும் மட்டுமே சுமார் ஒன்றரை மணி நேரம் பயணப்பட்டு இடைவேளைக்கு முன் ஒரு மூன்று பேர் இறந்து கிடப்பதாக திடீரென காட்டுகிறார்கள். அது காட்டும்போதே தெரிந்து விட்டது அதை செய்ததெல்லாம் வடிவேலு தான் என்று இனி அவர் வேறு யாரையோ ஒருவர் கொலை செய்யத்தான் இரண்டாம் பாகத்தில் பயணப்பட போகிறார் என்பதும் தெரியும்.

அந்தப் பயணத்தில் பகத் பாஸில் திருடனாக இருந்து திருந்தி அந்த நான்காவது நபரை இவர்தான் கொலை செய்வார் என்பது ஆரம்பித்த உடனே நம்மால் யுகம் செய்ய முடிகிறது இந்த அளவுக்கு ஒரு எந்த சஸ்பென்சும் இல்லாமல் ஒரு சஸ்பென்ஸ் கதையை இயக்கி இருக்கிறார் இயக்குனர். மேலும் இந்த படத்தில் இந்த கொலைகளை ஏன் வடிவேலு செய்கிறார் என்பதற்கு ஒரு வலுவான காரணம் இருந்தும் அது நம்மை ஒரு நிமிடம் கூட கண்கலங்க வைக்கவில்லை, ஒரு நெருடலை ஏற்படுத்தவில்லை, அந்த காட்சிகள் முக்கியமாக ஒரு பெண் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகம் விஷயத்தை அவருடைய தாய் கூறும் போது ஏதோ டயலாக்கை மனப்பாடம் செய்து பள்ளியில் ஒப்படைக்கும் ஒரு மாணவியை போல் கேமராவை பார்த்து ஒப்படைத்துக் கொண்டிருக்கிறார். அவர் மகள் இறந்துவிட்டாள் என்ற ஒரு துளி கவலையும் அந்த முகத்தில் காட்டவில்லை இந்த மாதிரியான ஒரு விஷயம் இந்த படம் சொதப்பலுக்கு காரணமாக இருக்கிறது.

இந்த படம் முழுக்க முழுக்க வடிவேலு மட்டும் பகத் பாசிலை மட்டுமே நம்பி எடுக்கப்பட்டிருக்கிறது இருவரும் நடிப்பில் மிகப்பெரிய அரக்கர்கள் ஆனால் அந்த அரக்கத் தன்மையை திரைக்கதையில் கோட்டை விட்டு விட்டார்கள்.

ஒளிப்பதிவு அருமை அவர்கள் செல்லும் பயணத்தை மிகவும் அருமையாக காட்டுகிறது இது ஒன்று மட்டும் தான் இந்த படத்திற்கு மிகவும் பக்கபலமாக இருக்கிறது.

மாரீசன் அந்த கதாபாத்திரத்தின் பெயரில் இருக்கும் சூட்சுமம் திரைக்கதையில்இல்லை

“ஹரிஹர வீர மல்லு” திரைவிமர்சனம்

ஹரிஹர வீர மல்லு 1650 ஆரம்பிக்கும் கதையானது,ஒளரங்கசீப் தன்னுடைய கொடுங்கோல் ஆட்சியில் தன் சொந்த மதத்தை பரப்பவும், இந்து மதத்தை அழிக்கவும்,தன்னை எதிர்க்கும் மன்னர்களையும் மக்களையும் கொன்று குவிக்கும் கொடுமையான அரசனாக இருக்கிறார் ஒளரங்கசீப். அதே நேரத்தில் 1650 இல் பிறந்து 1659 இல் வளர்ந்து பெரியாளாகி பெரிய திருடனாக இருக்கும் வீரமல்லு(பவன் கல்யாண்) இவர் ஒரு போராளி இவர் குழந்தையாக இருக்கும் பொழுது சத்யராஜிடம் இருந்து அனைத்தையும் கற்று பணக்காரர்களிடம் இருந்து திருடி ஏழைகளுக்கு கொடுக்கும் ராபின் ஹூட்டாக வருகிறார்.

இந்த நிலையில் ஒரு குறுநில பிரபுவுடன் ஒரு ஒப்பந்தத்தின் பெயரில் வைரம் கொள்ளை அடிக்கும் திட்டத்தை போடுகிறான் வீரமல்லு. அந்த நிலையில் அந்த குறுநில மன்னனின் பிடியில் இருக்கும் நிதி அகர்வாலை காதலிக்கிறார். அவரும் காதலிக்கிறார் பின் நிதி அகர்வாலின் சூழ்ச்சியால் அந்த வைரக்திருட்டில் கோல்கொண்டா மன்னரால் பிடிபடுகிறான். அங்கே கோல்கொண்டா மன்னருடன் ஒப்பந்தம் செய்து கோகினூர் வைரத்தை ஒளரங்கசீப்பிடம் இருந்து திருட திட்டமிட்டு டெல்லிக்கு செல்கிறார். அங்கு கோஹினூர் வைரத்தை கொள்ளையடித்தார்களா? அல்லது வீர மல்லுவின் பின் கதை என்ன அவருக்கு பின்னணியில் என்ன நடக்கிறது? என்பதுதான் கதை
உலக சினிமாவில் இந்த மாதிரி ஒரு வரலாற்று படத்தை எவ்வளவு ……………… எடுக்க தெலுகு இன்டஸ்ட்ரியல் மட்டுமே முடியும் ஏன் உலக அளவில் ஓடிய கிளாடியேட்டர் போன்ற படங்களும் இவர்களுக்கு முன்னால் நிற்காது. அந்த அளவுக்கு ஒரு வரலாற்று கதையை எவ்வளவு ……………..க எடுக்க முடியுமோ அந்த அளவுக்கு எடுத்து வைத்திருக்கிறார்கள் இந்த ஹரிஹர வீர மல்லு திரைப்படத்தை.

இந்த திரைப்படமானது கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக எடுத்துக் கொண்டிருந்தார்கள் ஏன் என்றால் பவன் கல்யாண் அரசியல் பிரவேசம் அது இது என்று படத்திற்கு ஏகப்பட்ட தடங்கல்கள். ஆனால் ஒரு கட்டத்தில் பவன் கல்யாண் பிஜேபியுடன் சேர்ந்த பிறகு இந்த படத்தின் திரைக்கதையில் ஏகப்பட்ட ஹிந்து மதத்தை முன்னணியில் வைத்து முஸ்லிம்களை வில்லன்களாக சித்தரித்து வெறும் ஹிந்து மதவாதிகளை மட்டுமே மனதில் வைத்து எடுக்க முயற்சித்து இருக்கிறார். இந்த முயற்சியின் காரணமாக என்னவோ இந்த படத்தை சிறிது காலம் க்ரிஷ் இயக்கி விட்டு விலகிவிட்டார் .அதன் பிறகு நம்மூர் ஏ எம் ரத்தினத்தின் மகன் ஜோதி கிருஷ்ணா இந்த படத்தை இயக்கி இருக்கிறார.

இத்தனை ஆண்டுகள் இவர்கள் காத்திருந்தது ஒரு சிறப்பான கிராபிக்ஸ் காட்சி வரும் என்று இல்லை எவ்வளவு மொக்கையான காட்சிகளை எடுத்து வைக்க எப்படி தான் மனசு வந்தது அதுவும் இந்த படத்தில் அடிக்கடி வீரமல்லியின் காலை க்ளோசபில் காட்டுகிறார்கள் அதை பார்க்கும் பொழுது ஒரு படத்தில் வடிவேலு தீப்பொறி திருமுகமாக வருவார் அந்த காட்சி தான் நமக்கு நினைவில் வருகிறது

மொத்தத்தில் ஹரிஹர வீர மல்லு ஒருவருக்கே வீரம் இருப்பதாக மல்லு கட்டுகிறது, திரைக்கதையிலும் மல்லு கட்டுகிறது

“கெவி” திரைவிமர்சனம்

பொதுவாக கெவி என்னும் வார்த்தை மலைப்பிரதேசங்களில் உள்ள பள்ளத்தாக்கை குறிக்கும் வார்த்தை.

இந்த கெவி திரைப்படமானது கொடைக்கானலில் வெள்ளக் கெவி என்னும் கிராமம், பல நூறு வருடங்களுக்கு முன்பு ஒரு கொடுங்கோல் மன்னர் ஆட்சியில் இருந்து தப்பித்து வரும் மக்கள், அந்த பள்ளத்தாக்கில் கெவி என்னும் கிராமத்தை உருவாக்கி வாழ்கிறார்கள்.

பல வருடங்கள் கழித்து இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்ட பொழுது அவர்கள் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல், மலைப்பிரதேசங்களில் தங்க முடிவு செய்கிறார்கள். அவர்கள் அவ்வாறு தேடி செல்லும் ஒரு மலையில் கெவி என்னும் கிராமத்தை அடைகிறார்கள் .அந்த மக்களை டோலி கட்டி சுமக்கும் மக்களாக பயன்படுத்தி அந்த பள்ளத்தாக்கிலிருந்து மேலே சென்று ஒரு நகரத்தை உருவாக்குகிறார்கள். அந்த நகரம் தான் இப்பொழுது பிரபலமாக இருக்கும் கொடைக்கானல்.

காலங்கள் எவ்வளவு கடந்தாலும் இந்த கெவி பள்ளத்தாக்கில் வாழும் மக்கள் இன்னமும் டோலி சுமந்து கொண்டு அவர்களுக்கான அடிப்படை தேவைகள் ஏதும் இன்றி வாழும் வழியினை கூற வருவதுதான் இந்த கெவி படத்தின் திரைக்கதை.
பல தலைமுறைகளாக வாழ்வாதாரத்திற்கு போராடி வரும் இந்த கிராமத்து மக்களுக்கு அரசின் எந்த திட்டங்களும் முழுமையாக இன்னமும் சென்று சேராத சூழல்தான் இருக்கிறது .இப்படி இருக்கும் சூழலில் இதற்கு முந்தைய காலகட்டங்களில் எத்தனை வருடங்களாக அவர்கள் எவ்வாறு வாழ்ந்திருப்பார்கள் என்பதை நம் கண் எதிரே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் இந்த படத்தில் நடித்திருக்கும் கதாபாத்திரங்கள். இந்த கெவியில் வாழும் ஆதவன், ஷீலா கணவன் மனைவியாக வாழ்கிறார்கள் ஒரு நாள் இரவில் ஒரு மண் சரிவில் பலர் இறந்து விட அவர்களில் சிலரை காப்பாற்ற டோலி கட்டி தூக்கிச் செல்லும் பொழுது எதிரில் வரும் அந்த ஊரின் அரசியல்வாதியை எதிர்த்து கேள்வி கேட்கும் சூழலுக்கு தள்ளப்படுகிறான் நாயகன். அந்த சூழலில் அந்த அந்த சூழலில் அரசியல்வாதியை அடித்து விடுகிறான் காவல்துறையினர் மீது செருப்பும் வீசப்படுகிறது. இதை வஞ்சம் வைத்துக் கொண்டு காவல்துறை நாயகனை கொல்ல துடிப்பதும் ,,அதே நேரத்தில் பிரசவ வழியில் துடிக்கும் அவரது மனைவி ஷீலாவை அங்கே இருக்கும் மக்கள் டோலிகட்டி பல கிலோமீட்டர் பயணம் செய்த மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்கள், இடையில் அந்த மருத்துவமனையில் உள்ள மருத்துவர் அந்த கிராமத்திற்கு எல்லாம் வந்து என்னால் வைத்தியம் பார்க்க முடியாது உயிரோடு இருந்தால் கொண்டு வாருங்கள் ,இல்லை வரும் வழியில் செத்தால் புதைத்து விடுங்கள் என்று திமிராக பேசுகிறார் இந்த சூழ்நிலையில் அந்த குழந்தை பிறந்ததா? காவல்துறையின் தாக்குதலில் இருந்து ஆதவன் தப்பித்தாரா? அவர்களுக்கு தேவையான விஷயங்கள் கிடைத்ததா? என்பதுதான் இந்த கெவி படத்தின் திரைக்கதை
இதுவரை நாம் எவ்வளவு மலை சார்ந்த படங்களை பார்த்திருந்தாலும் இந்த படம் முழுக்க முழுக்க இரவில் படமாக்கி இருப்பது இந்த படத்தின் சிறந்த சாரம்சம் .இதுவரை நாம் பகலிலேயே மலையின் அழகு ரசித்தோம் இரவில் மலையின் துயரத்தை நாம் இதுவரை அனுபவிக்கவில்லை அதை இந்த திரைப்படம் நம் ரத்தத்தை உரையை செய்யும் வகையிலும் வந்துள்ளது,அந்த இரவு காட்சிகளை படம் பிடித்த ஒளிப்பதிவாளருக்கு நிச்சயம் பாராட்டுக்கள்
படத்தில் சில விஷயங்கள் உடன் படாமல் இருந்தாலும் சில முக்கியமான காட்சிகளில் சில பரபரப்பான காட்சிகளில் அந்த கதாபாத்திரங்கள் நின்று நிதானமாக வசனங்கள் பேசிக் கொண்டிருப்பது அந்த பரபரப்பை சற்றே துவள செய்கிறது அது இல்லாமல் இருந்தால் இன்னும் திரைக்கதை வேகமாக இருந்திருக்கும்.
நிச்சயம் இந்த கெவி திரைப்படம் அந்த மலைவாழ் மக்களின் வலியை வெளியுலகத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதை எந்த சந்தேகமும் இல்லை .

நிச்சயம் இந்த அரசியல் ஒரு புரியாத புதிரே

“ட்ரெண்டிங்” திரைவிமர்சனம்

கலையரசன் பிரியாலயா .மற்றும் பல நடிப்பில் வெளி வந்திருக்கும் திரைப்படம் ட்ரெண்டிங்

இன்றைய காலகட்டத்தில் ட்ரெண்டிங் என்ற போதையில் சிக்கி கோடி கோடியாக பணம் சம்பாதிக்கலாம் என்ற பேராசையில் சிக்கி சின்னாபின்னமாகும் ஒரு இளம் தம்பதியினரின் வாழ்க்கை தான் இந்த ட்ரெண்டிங் படத்தின் கதை.

அர்ஜுன், மீரா இருவரும் காதல் தம்பதிகள் இன்ஸ்டாகிராமில் தாங்கள் காலையில் தூங்கி எழுந்ததிலிருந்து இரவு தூங்கும் வரை அனைத்து நிகழ்வுகளையும் ரீல்ஸ்கலாக செய்து போட்டு லட்சங்களின் பணம் சம்பாதித்து கோடிகளில் வீடு வாங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கென்று நிலையான ஒரு வேலையும் இல்லை. இந்த நேரத்தில் திடீரென்று அவர்களது instagram பக்கம் ஹேக் செய்யப்படுகிறது .அதை சற்றும் எதிர்பாராத அவர்கள் அதிலிருந்து வரும் பணத்தை வைத்து தான் மாதாமாதம் இஎம்ஐ உட்பட அனைத்திலும் இருந்தும் தப்பிக்க வேண்டும் என்று நினைத்து யோசிக்கிறார்கள். புதியதாக ஒரு பக்கத்தை ஓபன் செய்தாலும் விரைவில் பணத்தை சம்பாதிக்க முடியாதுஎன்பதால் கொஞ்சம் துவண்டு போகிறார்கள்.

அந்த நேரத்தில் கடனுக்கு பணம் கொடுத்தவர்கள் வந்து வட்டி கேட்டு மிரட்டி விட்டு செல்கிறார்கள் இந்த நிலையில் அவர்களுக்கு தொலைபேசியில் ஒரு அழைப்பு வருகிறது. அதில் உங்களுக்கு நாங்கள் பணம் தருகிறோம் ஒரு கேம் விளையாடுவோம் என்று கூறுகிறார்கள். முதலில் ஒத்துக் கொள்ளாவிட்டாலும் பிறகு ,அவர்கள் கூறும் கண்டிஷன்களை கேட்டு இந்த கேம் நம்ம வீட்டுக்குள்ளே தான் நடக்கிறது நாம் இருவர் மட்டும்தான் இருக்கிறோம் பெரிதாக பிரச்சனை இல்லை பணம் வந்தால் தொடர்வோம், ,இல்லை என்றால் அந்த கேமில் இருந்து வெளிவந்து விடுவோம் என்று அந்த விளையாட்டிற்கு அடிபணிகிறார்கள் .ஆனால் போகப் போக அது அவர்களுடைய ஆரம்பகால வாழ்க்கையும், நிகழ்கால வாழ்க்கையிலும் பல பிரச்சனைகளை உண்டு செய்கிறது. அவர்களுடைய பழைய காதலகள் துவங்கி அனைத்து பிரச்சினைகளிலும் சிக்கி அவர்கள் அதிலிருந்து மீண்டார்களா? இல்லை மீண்டும் அந்த விளையாட்டில் தொடர்கிறார்களா ?அல்லது பணம் சம்பாதித்தார்களா? இல்லையா? என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதை.

இப்படி ஒரு வித்தியாசமான கதை கையில் எடுத்த இயக்குனர் படத்தில் இந்த இரண்டு கேரக்டர்களை மட்டுமே முன்வைத்து அனைத்து காட்சிகளையும் எடுத்திருக்கிறார்.

2 மணி நேரம் இவர்கள் இருவரது முகத்தை மட்டுமே பார்க்க முடியவில்லை அட்லீஸ்ட் அந்த விளையாட்டை நடத்தும் முகத்தை யாவது நமக்கு காட்டி இருந்தால் கொஞ்சம் விறுவிறுப்பாக இருந்திருக்கும். அதுவும் யார் என்று தெரியவில்லை, திரைக்கதையில் ஆரம்பத்தில் தோசை சுடுவது போல் சாதாரணமாக அந்த விளையாட்டு ஆரம்பித்தாலும் ,பின் செல்லச் செல்ல அவர்களுக்கு பல சிக்கல்களை கொண்டு செல்கிறது அவர்களுக்குள் பல ஈகோ உருவாக்கிறது, ஒருவரை பற்றி ஒருவருடைய நிஜ உருவங்களை தெரிந்து கொள்ள நேர்கிறது .அவ்வாறு நிஜ உணர்வை தெரிந்து கொள்ளும்போது இது ஏதோ பழிவாங்கும் கதையாக யாரோ இவர்களை இயக்குகிறார்கள் என்று நமக்கு தோன்றுகிறது. இதையெல்லாம் தெளிவாக எடுத்து இயக்கியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் இந்த ட்ரெண்டிங் திரைப்படம்


இதில் அந்த இருப்பது 2 கேரக்டர் மட்டுமே என்பதால் பெரிதாக நாம் எதுவும் சொல்ல தேவை இல்லை கலையரசன் கணவனாகவும் பிரியாலயா மனைவியாகும் நடித்திருக்கிறார்கள் அவ்வளவுதான் இசையும் நம் இந்த மாதிரியான ஒரு சஸ்பென்ஸ் திரைப்படத்திற்கு ஏற்றவாறு அமைத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது

ட்ரெண்டிங் புதிதாக ஏதோ ட்ரெண்டிங் செய்ய நினைத்திருக்கிறார் இயக்குனர்

“சட்டம் நீதியும்” விமர்சனம்

பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில் சரவணன்,நம்ரிதா மற்றும் பலரது நடிப்பில் Zee 5OTT தளத்தில் வெளிவந்திருக்கும் வெப் சீரியஸ் சட்டமும் நீதியும்.

கோர்ட்டில் சாதாரண நோட்டரி ஆக இருக்கும் சரவணன் அவருடைய சிபாரிசின் பெயரில் பல வக்கீல்களிடம் ஜூனியர் ஆக சேர முயற்சிக்கிறார் நம்ரிதா. ஆனால் யாரும் அவரை ஜூனியராக சேர்த்துக் கொள்ளாத நிலையில் ,மீண்டும் சரவணன் இடமே வந்து உங்களிடமே ஜூனியர் ஆக சேருகிறேன் என்று கூறுகிறார்.ஆனால் அவர் எனக்கே வேலை இல்லை இதில் நீ எங்கே எனக்கு ஜுனராக என்று நிராகரிக்கிறார். இந்த சூழ்நிலையில் அந்த கோர்ட் வளாகத்தில் குப்புசாமி என்பவர் தன் மகளை காணவில்லை அவரை கண்டுபிடித்து தர வேண்டும் எனக்கு நீதி வேண்டும் என்று கூறி தீக்குளித்து இறக்கிறார்.

அந்த வழக்கை பொதுநல வழக்காக தொடர்கிறார் சரவணன் .அந்த வழக்கை விசாரிக்க செல்லும் போது அவருக்கு பல திடக்கிடும் தகவல்கள் வருகிறது,ஏனென்றால் குப்புசாமி 20 வருடங்களாக மனநல காப்பகத்தில் இருந்து வெளிவந்தவர் என்றும்,அவருடைய மகள் காணாமல் போய் 20 ஆண்டுகள் ஆகிறது என்றும் தெரிய வருகிறது, இந்த மாதிரி பல இடியாப்ப சிக்கல்கள் கொண்ட வழக்கில் பல வருடங்கள் கழித்து வழக்கிற்காக அங்கிஅணியும் சரவணன் இந்த வழக்கில் ஜெயிக்கிறாரா? அந்த சாதாரண குப்புசாமிக்கு நீதி கிடைக்கிறதா? என்பதுதான் இந்த தொடரின் கதை சாராம்சம்,

பாலிவுட்டில் இதே மாதிரி பல டைப்பான ஹிந்தி வெப் சீரியஸ்கள் பல வந்து கொண்டிருக்கின்றன. இந்த சூழ்நிலையில் தமிழில் ஒரு கோர்ட் தொடர்பான ஒரு நெடுந்தொடர் வந்திருப்பது இதுவே முதல் முறை .

இது எப்படி இருக்கிறது இந்த கதையை கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் பல இடங்களில் கதையில் ஏதோ ஒரு குறை தெரிகிறது கதையை இன்னும் பலமாக அமைத்து இருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும் .வக்கீலாக நடித்துள்ள சரவணன் தன் உடல் மொழியை அதற்கு ஏற்றார் போல் மாற்றி நடித்திருக்கிறார் நம்ரிதாவின் நடிப்பும் எங்கும் ஏற்ற இறக்கம் இல்லாமல் ஒரே நேர்கோடாக தான் செல்கிறது.

சரவணனுக்கு ஆப்போசிடாக வாதாடும் அருள் டி தாஸ் அவருடைய நடிப்பு வீணடிக்கப்பட்டுள்ளது என்று சொல்லலாம் படத்தில் பல கேரக்டர்கள் இருந்தும் சரவணன் நடிப்பு மட்டுமே பார்க்க வைக்கிறது இந்த வெப் சீரியஸில் மிகவும் பலமான விஷயம் என்றால் ஒவ்வொரு தொடரும் 20 நிமிடங்களில் முடிவடைகிறது மொத்தம் ஏழு எபிசோடுகளும் கிட்டத்தட்ட2.45 மணி நேரத்துக்குள் முடிந்து விடுவதால் எந்த ஒரு தொய்வும் இல்லாமல் படம் பார்க்க நேர்கிறது OTT தளம் என்பதால் சற்று போர் அடிக்காமல் ஓடும் என்பது தான் நிச்சயம்

MRS&MR திரைவிமர்சனம்

வனிதா விஜயகுமார் கதை திரைக்கதை வசனத்தில் ராபர்ட் ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் படம் மிசஸ் அண்ட் மிஸ்டர்.

தாய்லாந்தில் பேக்கரி கடை வைத்திருக்கும் வனிதா ராபர்ட் தம்பதியினர் திருமணம் ஆகி 20 வருடங்கள் கழித்து தங்களது 40 வது வயதுக்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்ள நினைக்கிறார்கள். இதற்கு ராபர்ட் ஒத்துக்கொள்ள வில்லை ,ஆனால் வனிதா வம்படியாக எனக்கு குழந்தை வேண்டும் என்று கேட்கிறார். இந்த சூழ்நிலையில் ஒரு நாள் வனிதா கர்ப்பமாக இருப்பது ராபர்ட்க்கு தெரிய வர ராபர்ட் கோபித்துக் கொண்டு வனிதாவை தரம் தாழ்த்தி பேசுகிறார். இதனால் வனிதா மனதளவில் பாதிக்கப்பட்டு தன் தாயிடமே வந்து விடுகிறார்.

அங்கிருந்து திடீரென கிளம்பி தங்களது பூர்வீகமான சித்துருக்கு வந்து அங்கு அவருக்கு தனது மாமாவான ஸ்ரீமனை திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். அவ்வாறு நடக்கும் பொழுது அங்கு அவர்களை தேடி வரும் ராபர்ட் நான் ஏன் அப்படி பேசினேன் அதற்கு என்ன காரணம் என்று கூறுகிறார். அதைக் கேட்கும் ஸ்ரீமன் ராபர்ட் இடம் இதுதான் இந்த வார்த்தைக்காக தான் நாங்கள் இவ்வளவு நாள் காத்திருந்தோம் இதை நீ தாய்லாந்தில் சொல்லி இருந்தால் எங்களுக்கு டிக்கெட் செலவு மிச்சம் .நாங்கள் சித்தூருக்கு வந்திருக்க மாட்டோம் என்று கூற,

மருத்துவமனையில் வனிதாவிற்கு குழந்தை பிறக்கிறது, குழந்தையும் வனிதாவும் இறந்துவிட்டார்கள் என்று சொல்ல அந்த குழந்தை வனிதாவின் மேல் போடுகிறார்கள் திடீரென நின்று போன இதயம் துடிக்க ஆரம்பித்து மருத்துவமனையில் உள்ள மிஷினில் நேராக ஓடிய கோடு குறிக்கும் நடக்குமாக ஓடி அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்று காட்டுகிறது.
இப்படியாக இந்த படம் முடிகிறது கதை திரைக்கதை வசனம் இயக்கம் எல்லாமே வந்து நம்ம வனிதா விஜயகுமார் தான்.
இந்தப் படத்தில் வனிதாவை பாராட்ட வேண்டியது என்னவென்றால் தன்னுடைய நண்பர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து நடிக்க வைத்திருக்கிறார். ஆனால் அவர்களையெல்லாம் பார்க்கும் பொழுது எப்சி முடிந்து போன வண்டியை போலீஸ் ஸ்டேஷனிலிருந்து ஏலத்தில் எடுத்து பெயிண்ட் அடித்து ஊரில் ஓட்ட விடுவது போல் எல்லாம் ரிட்டையர்டு பார்ட்டிகளாக கொண்டு வந்து நடிக்க வைத்திருக்கிறார்.


ஏன் வனிதா உனக்கு இந்த வேலை உனது வயதுக்கு ஏற்றவாறு இந்த படத்தில் நடித்திருக்கலாம் ,இந்த வயதில் உனக்கு இந்த கிளாமர் தேவையா உனக்கு வயது வந்த ஒரு பெண் இருக்கிறது அதை மனதில் வைத்தாவது இந்த படத்தை ஒரு கண்ணியமாக எடுத்திருக்கலாம் .ராபர்ட் அவரும் மிகவும் பல்க்காக இருக்கிறார் எதற்கு டபுள் மீனிங் பேசிக்கொண்டு,

ஏன் இந்த படம் என்றே தோன்றுகிறது நிச்சயம் இந்த படம் பார்த்து விட்டு வந்து எங்களுக்கே ஒரு நிமிடம் யாராவது எங்களை தவறாக பார்த்து விடுவார்கள் என்ற தியேட்டர் வாசலில் தான் தோன்றுகிறது அந்த மாதிரியான ஒரே அடல்ட் கன்டென்ட் .

இதையெல்லாம் சரி செய்து வனிதா படம் எடுத்திருந்தால் நிச்சயம் ஒரு நல்ல கதையாக தான் வந்திருக்கும்

“குட் டே” திரைவிமர்சனம்

அரவிந்தன் இயக்கத்தில் பிரித்திவிராஜ் ராமலிங்கம், மைனா நந்தினி, காளி வெங்கட் ,மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் குட் டே.


திருப்பூரில் ஒரு கார்மெண்ட்ஸ் கம்பெனியில் வேலை செய்யும் நாயகன், அங்கு வேலை செய்யும் ஒரு பெண்ணை அந்த கம்பெனியின் மேனேஜர் தொல்லை செய்ய அதை தட்டி கேட்கிறார். அந்த மேனேஜரோ அந்த கம்பெனி ஓனருக்கு மச்சான் இருவரும் சேர்ந்து நாயகனுக்கு சம்பளம் தராமல் இழுத்தடிக்கிறார்கள். நாயகனுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் சம்பளம் இல்லாமல் டென்ஷனில் இருக்கும் அவனிடம் மனைவி பணம் கேட்டு நச்சரிக்க, அந்த டென்ஷனில் வீட்டுக்கு வரும் நாயகன் நன்றாக குடிக்கிறான் .குடித்துவிட்டு போதையில் இருக்கும் பொழுது அந்த வீட்டின் ஓனரோ வந்து வாடகையுடன் வீட்டுக்கு முறை வாசல் செய்ய 300 ரூபாய் கேட்டு வருகிறார்,அவரிடம் உங்கள் வீட்டில் கோலம் போட நான் எதற்கு 300 ரூபாய் தர வேண்டும் என்று போதையில் தகராறு செய்து அவரது தலையை உடைத்து, அங்கிருந்து போதையில் வெளியில் வந்து அடுத்தடுத்து பல குற்ற செயல்களில் ஈடுபடுகிறார். பேருந்து நிலையத்தில் நேரக் காப்பாளர் அறையில் தகராறு, தன்னுடன் கல்லூரியில் படித்த பெண்ணிற்கு தற்பொழுது கல்யாணம் செய்து குடும்பத்துடன் வாழும் பெண்ணிற்கு ஃபோன் செய்து அவரை தொந்தரவு செய்து குடும்பத்தில் குழப்பத்தை உண்டு பண்ணுகிறார், மேலும் காளி வெங்கட்டின் ஆட்டோவில் ஏறி அவரை அடிக்கிறார் அவருடன் வம்பு வளர்க்கிறார். இப்படி போகின்ற வழி எல்லாம் வம்பு வளர்க்கும் இவரை காவல்துறை கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வருகிறது .

அங்கும் அவர் போதையில் இன்ஸ்பெக்டரின் சட்டையையும், வாக்கி டாக்கியையும் எடுத்துக் கொண்டு தப்பித்து ஓடுகிறார். அவரை இரவு முழுவதும் காவல்துறை தேட இதே நேரத்தில் திருப்பூரில் ஒரு குழந்தை கடத்தல் நடைபெறுகிறது அதை த் தேடும் காவல்துறை இவரையும் ஒரு பக்கம் தேடுகிறது. ஒரு கட்டத்தில் அதிகாலையில் நாயகனுக்கு போதை தெளிய, அந்த குழந்தையை கடத்தலை இவர் இவர் கண்டுபிடித்து காவல்துறைக்கு தர, இரவு முழுவதும் போதையில் செய்த தவறுகள் அனைத்தும் அந்த ஒரு நல்ல காரியத்தால் மறைந்து போகிறது அவரை காவல்துறை விட்டு விடுகிறது இதுதான் இந்த திரைப்படத்தின் கதை.
இந்த திரைப்படத்தின் நாயகனாக பிரிதிவராஜு ராமலிங்கம் இரவு முழுதும் குடிகாரனாக அவர் செய்ய அலப்பறைகள் நமக்கே ஒரு கட்டத்தில் எரிச்சல் ஊட்டுகிறது என்னடா இப்படி போதையில் ஓவர் அலப்பறை செய்கிறானே என்று.

மேலும் இந்த படத்தில் நடித்திருக்கும் மைனா நந்தினி ஒரு காமெடி கலந்த, தன் கணவரிடமும் தன்னை ஒரு தலையை காதலித்த நாயகனிடம் மாட்டிக் கொண்டு முழிப்பது, கோபம் உள்ளது என்று ரசிக்கும் படியாக செய்துள்ளார் மைனா நந்தினி .

மேலும் இந்த படத்தில் காளி வெங்கட்,ஆடுகளம் முருகதாஸ்,பகவதி பெருமாள் (பக்ஸ்),வேல ராமமூர்த்தி,போஸ் வெங்கட்இப்படி பலர் வந்து போகிறார்கள் அவர் அவர்களுக்கு ஒரு ஒரு சீன் அவர்களும் அவர்களுக்கு தந்த வேலையை சிறப்பாக செய்கிறார்கள் .

இயக்குனர் அரவிந்தன் இந்த படத்தின் திரைக்கதையை எழுதும்போது இன்னும் சிறப்பாக ஒரு இரவில் அந்த திருப்பூரில் நடக்கும் அந்த குழந்தை கடத்தல் மையப்படுத்தி எழுதி இருக்கும்போது இன்னும் விறுவிறுப்பாக காட்டி இருக்கலாம், படம் பார்ப்பதற்கு நன்றாக இருந்திருக்கும் விறுவிறுப்பாகவும் இருந்திருக்கும்
ஒளிப்பதிவு திருப்பூரின் இரவு அழகை அழகாக காட்டுகிறது என்று கூறலாம்

இசை கோவிந்த் வசந்தா


குட் டே படத்தின் திரைக்கதை இன்னும் விறுவிறுப்பாகி இன்னும் சிறப்பாக செய்திருந்தால் கண்டிப்பாக படம் பார்ப்பவர்களுக்கு படம் எடுத்தவர்களுக்கும் அந்த டே டுடேவாக இருந்திருக்கும்