Cinema Reviews

“டிமான்டி காலனி 2” திரைவிமர்சனம்…..

அஜய் ஞானமுத்து இயக்கத்தின் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன் மற்றும் பலர் நடித்த திரைப்படம் டிமான்டி காலனி 2.

பிரியா பவானி சங்கரின் கணவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைக்கும் நிலையில்,திடீர் என்று மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார்.அவருடைய ஆத்மா, பிரியா பவானி சங்கரிடம் எதோ சொல்ல வருவதாக மனதளவில் உணர்கிறார். அதற்காக புத்த துறவிகள் உதவியை நாடி அவர்கள் மூலமாக கணவர் மரணத்தில் இருக்கும் பின்னணியை அறிய முயற்சி செய்கிறார்.அது ஒரு பக்கம் இருக்க ஐதராபாத்தில் வசிக்கும் அண்ணன் கதாநாயகன் அருள்நிதி தனது தந்தையின் சொத்தை அடைய முயற்சி செய்கிறார்.ஆனால், அதில் தம்பி அருள்நிதி சென்னையில் இருப்பதாகவும் அவருடைய கையெழுத்தை பெற நினைக்க தேடி சென்னைக்கு வருகிறார்முதல் பாகத்தில் இறந்துப் போன தம்பிதான் அருள்நிதி’ ஆனால் சாகவில்லை கோமாவில் தான் இருக்கிறார்.தன் தம்பி அருள்நீதியை கொல்வ போகும் போதுதான், தம்பி இறந்தால் தானும் இறந்துவிடுவோம் என்ற உண்மையை புரிந்துக் கொள்கிறார்.பிரியா பவானி சங்கர், தன்னுடைய கணவன், இறப்பிற்கும், அருள்நிதி சாவின் விழிம்பில் இருப்பதற்கும் டிமான்ட்டி காலனிக்கும் உள்ள தொடர்பை கண்டுப் பிடிக்கிறார்.6 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் இந்த சம்பவம், சாத்தானுக்கு மனிதர்களை பலியிடும் வழக்கத்தை ஒரு குழு வைத்துள்ளனர்.இந்த முறை இந்த பலிக்கு ஆளாக போவது அருள்நிதி மற்றும் கதாநாயகி பிரியா பவானி சங்கர் இருவரும், சாத்தானின் பிடியில் இருந்து தப்பித்தார்களா? தப்பிக்கவில்லையா? என்பதுதான் டிமான்டி காலனி 2 திரைப்படத்தின் மீதிக்கதை.

அருள்நிதி இந்த கதைக்கு எந்த அளவிற்கு நடிப்பை கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு மிக அருமையாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.திகில் காட்சிகளில் நடிப்பின் மூலம் இன்னும் கொஞ்சம் கூடுதலாக கவனம் செலுத்தி இருக்கலாம்.

பிரியா பவானி சங்கர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.அமானுஷ்யத்திற்கு பயப்படும் காட்சிகளிலும், தனது காதல் கணவனை இழந்த துக்கத்திலும் பரிதவிக்கும் காட்சிகளில் மிகப்பெரிய அளவில் ஸ்கோர் செய்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற அர்ச்சனா ஒரு சில காட்சிகளில் வந்தாலும் மனதில் பதிந்துவிடுகிறார்.

அட்வகேட் கதாபாத்திரத்தில் வரும் முத்துக்குமார் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவின் மூலம் ரசிகர்களை திகிலடைய செய்ய முயற்சி செய்துள்ளார்.

இசையமைப்பாளர் சாம் சி. எஸின் பின்னணி இசை திரைப்படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது.

வழக்கமான ஹாரர் திரைப்படத்தில் வரும் சம்பவங்கள் இல்லாமல்,  இந்த கதைக்கு தேவை இல்லாத பாடல்கள், , பேய்க்கு பிளாஷ்பேக் இல்லாமல் இருப்பது மிகச் சிறப்பு.

கதையின் முதல் பாதியில் திரைக்கதை மிகச்சிறப்பாக அமைந்தாலும், இரண்டாம்  பாதியில் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் நிரைப்படம் இன்னும் சிறப்பாக அமைந்து இருக்கும்.

“ரகு தாத்தா” திரைவிமர்சனம்…..

சுமன் குமார் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் எம் எஸ் பாஸ்கர் ரவீந்திர விஜய் முதன்மை பாத்திரத்தில் நடித்திருக்கும் “ரகு தாத்தா”

1960 காலகட்டத்தில் வள்ளுவன் பேட்டை என்னும் கிராமத்தில் கீர்த்தி சுரேஷ் தாத்தா எம்எஸ் பாஸ்கர் மற்றும் அண்ணன் தாய் ஐயருடன் வசித்து கீர்த்தி சுரேஷ் அந்த ஊரில் உள்ள வங்கியில் வேலை பார்த்து வருகிறார். கதாநாயகி கீர்த்தி சுரேஷ் அந்த ஊரில் உள்ள வங்கியில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் அந்த கிராமத்தில் உள்ள ஹிந்தி பிரச்சார சபாவை எதிர்த்து போராட்டம் செய்து, அந்த ஆசிரியரையும் சபாவையும் மூடுகின்றனர்.மேலும் கீர்த்தி சுரேஷ் க. பா. என்ற புனை பெயரில் பத்திரிகைகளில் பெண்ணியம் சார்ந்த கதைகள் எழுதிக் கொண்டிருக்கிறார். ரவீந்தர் விஜய், கீர்த்தி சுரேஷை ஒருதலையாக காதலித்து,முற்போக்கு சிந்தனையாளராக தன்னை சித்தரித்து கொள்கிறார். இந்நிலையில் தாத்தா எம்எஸ் பாஸ்கருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் திருமணமே வேண்டாம் என்று இருக்கும் கீர்த்தி சுரேஷ், திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளும் கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்.

இந்நிலையில் தனக்கு நீண்ட நாள் பழக்கமான ரவீந்திர விஜய் என்பவரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து ஒத்துக் கொள்கிறார். ஆனால் திருமணத்திற்கு முன்பே தனக்கு வரப்போகும் கணவர் முற்போக்கு சிந்தனைவாதி இல்லை, அவன் ஆணாதிக்க சிந்தனை கொண்டவன் என்றும், பெண்களை மதிக்காதவன் என்றும் தெரிய வருகிறது. இதை தெரிந்து கீர்த்தி சுரேஷ் தான் ஒத்துக்கொண்ட திருமணத்தை நிறுத்த எடுக்கும் முயற்சிகளும் அதை சுற்றி நடக்கும் சம்பவங்களுமாக திரைக்கதை நகர்கிறது.

கீர்த்தி சுரேஷ் ஹிந்தி கற்று ப்ரோமோஷன் வாங்கிக்கொண்டு கல்கத்தாவில் உள்ள வங்கி கிளைக்கு சென்று விட்டால், நடக்கவிருக்கும் இந்த திருமணம் நின்று போகும் என்ற எண்ணத்தில் ஹிந்தி கற்று கொள்ள ஆரம்பிக்கிறார்.கீர்த்தி சுரேஷ் ஹிந்தியை எதிர்ப்பவர் ஹிந்தி கற்றுக்கொண்டு கல்கத்தாவில் உள்ள வங்கி கிளைக்கு சென்றாரா? செல்லவில்லையா?
அவர் நினைத்தது போல் திருமணம் நின்றதா? என்பதுதான் ‘ ரகு தாத்தா திரைப்படத்தின் மீதிக்கதை.

ரவீந்திர விஜய் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

கீர்த்தி சுரேஷ் பெண்ணியம் பேசும் கதாபாத்திரத்தில் நடிப்பை துறுதுறுவெனவும் அதே சமயம் தன்னம்பிக்கையுடன் நடித்து இருக்கிறார்.

தாத்தா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எம்.எஸ் பாஸ்கர் அவரின் நடிப்பை சற்று வீணடித்து இருப்பது போல் இருக்கிறது. அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராஜேஷ் பாலச்சந்திரன் அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார்.அண்ணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருக்கும் இஸ்மத் பானு ரசிகர்கள் மனதில் பதிந்துள்ளார்.

மாமி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் தேவதர்ஷினி மிகவும் அளவான நகைச்சுவையை வெளிப்படுத்தியுள்ளார். வங்கி மேலாளரின் நடிப்பு, ஹிந்தி வாத்தியாரின் நடிப்பு மற்றும் பலரின் நடிப்பு செயற்கை தனமாகவே இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் யாமினி யாக்னாமூர்த்தியின் ஒளிப்பதிவு 60களில் காலகட்டத்திற்கு நம்மை இழுக்கவில்லை இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசை ஏனோ மனதை வருடவில்லை  

ஹிந்தி எதிர்ப்பையும் ஹிந்தி திணைப்பையும் வைத்து இயக்கி இருக்கும் இந்த படத்தின் திரைக்கதையை இன்னும் ஆழமாக அமைத்திருந்தால் படம் நிச்சயம் நம்மை கவர்ந்திருக்கும்.

படத்தின் மிகப்பெரிய பலம் இரட்டை அர்த்தங்கள் இல்லாமல் கவர்ச்சிகள் இல்லாமல் படமாக்கி இருப்பது.

 ரகு தாத்தா திரைக்கதை ஓட்டத்தில் ஓய்ந்து போன தாத்தா!!!!!!!!

இந்தியன் || திரைவிமர்சனம்

ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் , சித்தார்த் மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் இந்தியன் ||

சென்னையில் சித்தார்த் மற்றும் நண்பர்கள் இணைந்து பார்கிங் டாக் என்னும் யூடியூப் சேனலை நடத்தி அதன் மூலம் நாட்டில் நடக்கும் ஊழல் குற்றங்களை மக்களுக்கு நையாண்டி தனமாக எடுத்து கூறி நாட்டை திருத்த பார்க்கிறார்கள் ஆனால் இவர்களால் மாட்டும் குற்றவாளிகள் தண்டனை அடையாமல் ஊழல் மூலமாக நாட்டில் சுதந்திரமாக இருக்கிறார்கள் இதனை கண்ட வெகுண்டெழும் சித்தர்த் குரூப், பல ஆண்டுகளுக்கு முன்பு ஊழலை ஒழிக்க போராடி பெற்ற மகனையே கொன்றுவிட்டு வெளிநாட்டிற்கு தப்பி சென்ற இந்தியன் தாத்தாவை திரும்ப அழைக்க முடிவெடுத்து கம்பேக் இந்தியன் என்னும் ஹாஸ்டேக் உருவாக்கி அதை வைரல் ஆக்குகிறார்கள் அதை பார்த்து இந்தியன் தாத்தா வந்து நாட்டை காப்பாற்றுவர்கள் என்று நினைக்கிறார்கள், அவர்கள் நினைத்த மாதிரியே தாய் பே என்னும் நாட்டில் அமைதியாக வாழ்ந்து வரும் இந்தியன் தாத்தா பொங்கி எழுந்து அங்கு வரும் ஒரு ஊழல் பெருச்சாளியை கொன்று தன் கணக்கை துவக்கி இந்தியா வருகிறார்.

இங்கே இவரை பிடிக்கும் காவல் அதிகாரியாக பாபி சிம்ஹா தாத்தாவை விமான நிலையத்தில் கைது செய்ய சென்று அவரை பிடித்து கைது செய்ய சொன்னால் வயதான தன் அப்பாவை கூட்டி சென்று இந்தியன் தாத்தாவிடம் அடகு வைத்து தப்பிக்க விடும் காமடி காவல் அதிகாரியாக வருகிறார் அங்கிருந்து தப்பி செல்லும் தாத்தா கத்தியை தூக்கு வார் என்று எதிர்பார்த்தால் பேஸ்புக் லைவில் வந்து ஊழலை ஒழிக்க வேண்டுமானால் முதலில் வீட்டை திருத்த வேண்டும் எனவே வீட்டில் யாராவது ஊழல் செய்தால் அவர்களை வீட்டில் உள்ளவர்களே அரசிடம் காட்டி தர வேண்டும் என்று கூற, அதை கேட்கும் சித்தார்த் அண்ட் கோ அவர் அவர் வீட்டில் இருக்கும் ஊழல்வாதிகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறார்கள். இதற்கிடையே இந்தியன் தாத்தா இந்தியா முதுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று தன் களை எடுக்கும் பணியை செய்கிறார். இப்படி சீரியசாக எடுக்க வேண்டிய படத்தை படுகாடுமடியாக, அபத்தமாக எடுத்திருக்கிறார் இயக்குனர்.
இது ஷங்கர் படமா என்று சந்தேகமாக இருக்குமளவிற்கு இருக்கிறது.

இந்தியன் முதல் பாகத்தில் தாத்தா கெட்டப் எவ்வளவு கம்பீரமாக இருந்தது. ஆனால் இதில் நேபாளி படத்தில் வரும் நாயகனை போல் மேக்கப்பில் சொதப்பி இருக்கிறார்கள். சும்மா கிடந்த தாத்தாவை கூட்டி வந்து ஓடவிட்டு அடிக்கிறார்கள். அவரும் வடிவேலு ஒரு படத்தில் தாவுடா செவல தாவுடா என்று கூறிகொண்டு ஓடுவதை போல் தாத்தாவையும் ஒடவிட்டிருக்கிறார்கள்.
சித்தார்த்தை சொஞ்சம் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
படத்தில் ஊழல் அதிகாரிகளை பார்த்தால் வெறுப்புதான் வர வேண்டும் ஆனால் இங்கு சிரிப்பு தான் வருகிறது.

இசை என்னத்த சொல்ல இந்தியன் வெற்றிக்கு முக்கிய கரணம் AR ரஹமான் இசை, ஆனால் இந்த படத்தின் முதல் எதிரி இசைதான். பல எமோஷனலான காட்சிக்கு இசையமைக்கு சொன்னால் கருமம் என்னத்தையோ வாசித்து இருக்கிறார் . தாத்தாவை வரவேற்க பாடலை போட சொன்னால் தாத்தவராரு கலக்க போறாருன்னு பிக்காலி பசங்க பாட்டா போட்டிருக்காங்க.இசை வரவில்லை. என்றால் வேறு வேலைபார்க்கலாமே
படத்தின் இரண்டு நல்ல விஷயம் ஒளிபதிவு, செட் அமைப்பு.

ஷங்கர் தன் தன் பிரம்மாண்ட எண்ணத்தை வேண்டும். அதேபோல் தன் கதைவிவாத குழுவையும் மாற்ற வேண்டும்

இந்தியன் || தாத்தாவிற்கு ஓய்வுதந்திருக்கலாம்

’கல்கி 2898 கி.பி’ திரைவிமர்சனம்

மகாபாரத குருசேத்திர போர் நடந்து முடிந்து 6000 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் கல்கியின் கதையை திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

உலகம் பலவிதமான அழிவுகளுக்கு பிறகு கலிகாலம் தொடங்கி உலகம் முற்றிலும் அழிந்துவிட்டது.கடைசியாக காசி என்ற ஒரு நகரம் மட்டுமே மிஞ்சி இருக்கிறது.மிச்சம் இருக்கும் உயிர்களை சுப்ரீம் என அழைக்கப்படும் கமல்ஹாசன் மட்டும் அனைவரையும் கொடுங்கோள் ஆட்சி நடத்தி வாழ்ந்து வருகிறார்.

மறுபக்கம் பணம் மற்றும் வசதி படைத்த மக்கள் மட்டும் செல்வ செழிப்பான எல்லா வசதிகளும் உடைய `காம்பிளக்ஸ்’ என்ற தனி உலகில் வாழ்ந்து வருகின்றனர்.இந்த உலகில் பணம் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

பிரபாஸ், காசியில் வாழ்ந்து வரும் நிலையில் தன் எப்படியாவது அதிகளவில் பணத்தை சேர்த்து எப்படியாவது காம்பிளக்ஸ் உலகில் நுழைந்து விடவேண்டும் என கனவுடன் வாழ்ந்து வருகிறார்.இதற்காக எந்த ஒரு எல்லைக்கும் சென்று பணம் சம்பாதிப்பதற்கு தயாராக இருக்கிறார்.

இதற்கிடையே காம்பிளக்ஸ் உலகில் தன்னிடம் அடிமையாக உள்ள பெண்களின் கருவில் தொடர்புகளை சுமக்க வைத்து அந்தக் கருவில் இருக்கும் சீரத்தை சுப்ரீம் கமல்ஹாசன் 150 நாட்களுக்கு மேல் கருவில் இருக்கும் சீரத்தை தேடி வருகிறார். கமல்ஹாசன் தேடும் சீரம் கதாநாயகி தீபிகா படுகோனேவின் கருவில் இருப்பதை அறியும் அந்த சீரத்தை எடுக்க முயற்சிக்கிறார்கள்.அந்த நிலையில் தீபிகா படுகோனே தப்பித்து விடுகிறார்.

தீபிகா படுகோனை எப்படியாவது கண்டுப்பிடித்து கொடுப்பவர்களுக்கு காம்ப்ளெக்ஸ் சுப்ரீம் கமல்ஹாசன் மிகப்பெரிய தொகைத்தரப்படும் என அறிவிக்க, பிரபாஸ் கதாநாயகி தீபிகா படுகோனை தேடி கண்டுபிடித்து சுப்ரீமிடம் ஒப்படைத்து அறிவிக்கப்பட்ட மிகப்பெரிய தொகையை பெற்றுக்கொண்டு காம்ப்ளக்ஸில் நுழைய வேண்டும் என்ற அவருடைய நீண்ட நாள் கனவை அடைய நினைக்கிறார்.

கதாநாயகி தீபிகா படுகோனேவை பிடித்து கொடுத்து காம்ப்ளக்ஸ் என்ற உலகத்திற்கு கதாநாயகன் பிரபாஸ் நுழைந்தாரா? நுழையவில்லையா? கதாநாயகி தீபிகா படுகோனேவின் கருவில் இருக்கும் சீரத்தை சுப்ரீம் உலக நாயகன் கமலஹாசன் அடைய நினைக்க காரணம் என்ன? என்பதுதான் இந்த கல்கி 2898 AD திரைப்படத்தின் மீதிக்கதை.

கல்கி 2898 AD திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் உலகநாயகன் கமலஹாசன் நடித்திருக்கிறார்கள்.

இந்த வயதிலும் அமிதாப் பச்சனின் நடிப்பு திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்கள்.

கதாநாயகி தீபிகா படுகோன் அடிமைத்தனமாக வாழும் கர்ப்பிணி கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டியுள்ளார்.

தன் கருவில் இருக்கும் தனது குழந்தைக்கு ஏன் இவ்வளவு ஆபத்து என்று தெரியாமல் பதறும் காட்சியில் கவனிக்க வைத்து இருக்கிறார்.

திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா, துல்கர் சல்மான், ராஜமௌலி ராமகோபால் வர்மா உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் கவுரவ தோற்றத்தில் ஓரிரு காட்சிகளில் வருகின்றனர்.

ஒளிப்பதிவாளர் டிஜோர்ட்ஜே ஸ்டோஜில்கோவிச் ஒளிப்பதிவு முலம் மிகப்பெரிய அளவில் அசத்தியிருக்கிறார்

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்து இருக்கிறார்.

மகாபாரதம் கதைகளுக்குள் இதிகாசக் கதையை சைன்ஸ் ஃபிக்‌ஷன் காட்சி அமைப்புகளோடு இணைத்து நம்பவே முடியாத அளவிற்கு ஒரு திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் நாக் அஸ்வின்.

மேட்மேக்ஸ், பிளாக் பாந்தர் போன்ற ஹாலிவுட் திரைப்படத்தின் இருந்து சாயல்களை இந்தத் திரைப்படத்திலும் அதிகளவில் காணமுடிகிறது.

இந்த திரைப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள், பிரமிக்க வைக்கும் அளவிற்கு ஒரு நகரத்தை வடிவமைப்பு மக்களை ஆச்சரியப்படும் வகையில் அமைந்திருப்பதற்கு இந்த திரைப்படத்தில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு மிகப்பெரிய அளவில் அமைந்திருக்கிறது.

ஒரு நல்ல திரைப்படத்திற்கு மிக மிக முக்கியம் ஒரு நல்ல கதை அதன்பிறகு அந்த கதையில் உள்ள கதாபாத்திரங்களை வாழவைப்பதற்கு நடிகர்கள் அந்த நடிகர்களுக்கு கதையில் உருவாக்கப்பட்டுள்ள கதாபாத்திரங்களின் தோற்றங்கள் மற்றும் உடைகள் இது மிக மிக முக்கியமானது.

இந்த கல்கி 2898 கிபி திரைப்படத்தில் 6000 வருடங்களுக்கு முன் நடக்கும் கதையில் கதாநாயகன் மற்றும் நடிகர்கள் அனைவருமே தற்போது உள்ள காலகட்டங்கள் போல் இருக்கிறார்கள் இது இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய மைனஸ் ஆக அமைந்திருக்கிறது.

“பயமறிய பிரம்மை” திரைவிமர்சனம்

சிறை சாலையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் கொலை குற்றவாளியான ஜே.டி. ஜெகதீஷ் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதுவதற்காக பத்திரிக்கையாளர் வினோத் சாகர் அவரை சந்தித்து அவருடைய வாழ்க்கையைப் பற்றி உரையாடுகிறார்.இருவருக்குமான உரையாடலின் போது, “புத்தகங்கள் மனிதர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்” வினோத் சாகர் கூறுகிறார்.

அது எப்படி நடக்கும்? என கொலை குற்றவாளியான கதாநாயகன் ஜே.டி. ஜெகதீஷ் கேட்க கேள்விக்கான பதிலாக, அவரது வாழ்க்கையையே புத்தக வாசகர்களின் கண்ணோட்டத்தில் திரையில் காட்சிகளாக மாறி இருப்பது ‘பயமறியா பிரம்மை’ திரைப்படத்தின் மீதி கதை.

இந்த திரைப்படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் ஜே.டி.ஜெகதீஷ் ,மற்றும் குரு சோமசுந்தரம், ஹரிஷ் உத்தமன், சாய் பிரியங்கா ரூத், ஹரிஷ் ராஜு, ஜாக் ராபின் ஆகிய ஆறு பேர் ஜே.டி ஜெகதீஷ் கதாபாத்திரமாக உருமாறி நடித்திருக்கிறார்கள்.

மாறன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜான் விஜய் மற்றும் ஏ.கே, எழுத்தாளர் கபிலன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வினோத் சாகர், ஜே.டி.ஜெகதீஷின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திவ்யா கணேஷ் என இந்த பயமறியா பிரம்மை திரைப்படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவரும் தங்களது வேலை மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர்கள் பிரவின் மற்றும் நந்தா ஒளிப்பதிவின் மூலம் இந்தத் திரைப்படத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் கே -வின் இசையும் பாடல்களும் பிண்ணனி இசையும் கதைக்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறார்.

ஒரு கதையை புத்தகமாக பதிவு செய்வார்கள் ஆனால் இந்த திரைப்படத்தில் ஒரு புத்தகத்தை கதையாக வித்தியாசமான திரைக்கதையை அமைத்து, வித்தியாசமான முறையில் கதை சொல்கிறேன் என்ற பெயரில், கொலையை கலையாக சித்தரித்து அதிர வைத்தவர் அதை புரியும் படியாக பதிவு செய்திருக்கலாம் இயக்குனர் ராகுல் கபாலி .

மொத்தத்தில் பயமறியா பிரம்மை—– பயமும் கம்மி, பிரம்மையும் கம்மி…………

“கருடன்”திரைவிமர்சனம்

இயக்குநர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் கதையின் நாயகனாக சூரி, மற்றும் சசிக்குமார், உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி இன்று திரையரங்கில் வெளியாக இருக்கும் திரைப்படம்தான் “கருடன்”.
சூரி மற்றும் சசிக்குமார், உன்னி முகுந்தன் மூவரும் சிறு வயதிலிருந்தே நண்பர்கள் இவர்கள் மூவரையும் சிறு வயது முதல் வளர்த்து வருபவர் வடிவுக்கரசி.

கோம்பை அம்மன் கோவில் நிர்வாக தலைவராக வடிவுக்கரசி இருந்து வருகிறார்.

கதாநாயகன் சூரி மற்றும் சசிக்குமார், உன்னி முகுந்தன் ஆகிய மூவரும், அந்த கோவிலின் நிர்வாகத்தில் இருக்கிறார்கள்.

தாய் தந்தை இல்லாத தன்னை வளர்த்த உன்னி முகுந்தனுக்கு நண்பனாக மட்டுமல்லாமல் நல்லதொரு விசுவாசியாகவும் கதாநாயகன் சூரி இருந்து வருகிறார்.

தேனி மாவட்ட கிராமத்தில் லாரி பிஸ்னஸ், செங்கல் சூளை, கோம்பை அம்மன் கோயில் சொத்தை பராமரிப்பது எனக் குடும்பமாக, ஊரின் முக்கியப் புள்ளிகளாக கதாநாயகன் சூரி மற்றும் சசிக்குமார், உன்னி முகுந்தன் ஆகிய மூவரும், வலம் வரும் இவர்கள் பராமரித்து வரும் கோம்பை அம்மன் கோவில் நிலம் ஒன்று சென்னையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அமைச்சர் ஆர் வி உதயகுமார் அதற்காக அந்த கோவிலுக்கு வைக்கப்பட்டுள்ள பட்டயம் ஒன்றை கைப்பற்ற நினைக்கிறார்.

அதனால், அந்த அமைச்சர் ஆர் வி உதயகுமாரின் ஆளான மைம் கோபி கோவிலின் நிர்வாகத்திற்குள் அனுப்ப நினைக்கிறார்.

அந்த ஊருக்கு புதிதாக இடமாற்றம் செய்யப்பட்டு வரும் காவல்துறை உயர் அதிகாரியான சமுத்திரக்கனி வைத்து அமைச்சர் ஆர்.வி உதயகுமார் காய் நகர்த்த கதாநாயகன் சூரி மற்றும் சசிக்குமார், உன்னி முகுந்தன் ஆகிய மூவருக்கும் கொஞ்சம் கொஞ்சமாக பிரச்சனைகளும் பிளவுகளும் ஏற்படுகிறது.

அமைச்சர் ஆர்.வி உதயகுமார் உன்னி முகுந்தனுக்கு பணத்தாசையை காண்பிக்க தன் மனைவியின் பணத்தாசையிலும் திசை மாறி செல்கிறார்.

இறுதியில் அமைச்சர் அறிவு உதயகுமாரின் கோவில் நிலத்தை அபகரிக்கும் திட்டம் நிறைவேறியதா? நிறைவேறவில்லையா? சசிகுமார், உன்னி முகுந்தன் நட்பு என்ன ஆனது? விசுவாசத்திற்கும் நியாயத்திற்குமான போராட்டத்தில் கதாநாயகன் சூரி யாருக்கு சாதகமாக செயல்பட்டார்? என்பதுதான் இந்த கருடன் திரைப்படத்தின் மீதிக்கதை.

சூரி சொக்கன் கதாபாத்திரத்தில் நடிகர் உன்னி முகுந்தனின் மீது அதீத அன்பு கொண்ட அடிமையாகவும் விசுவாசியாகவும் மிகவும் அருமையாகவும் நடித்திருக்கிறார்.

கதாநாயகி ரேவதி ஷர்மா அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து ரசிகர்களுக்கு மனதில் இடம் பிடித்து விட்டார்.

இந்த கருடன் திரைப்படத்தில் ஆதி என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சசிகுமார், நட்புக்கு அடையாளமாகவும் நட்புக்கு இலக்கணமாகவும் நடித்து ரசிகர்களின் மனதில் பதிந்துவிட்டார்.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி,

அமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆர் வி உதயகுமார், மைம் கோபியின் நடிப்பு மிக மிக அருமையாக நடித்திருக்கிறார்.

ஸ்வேதா நாயர் தன் கணவர் சசிகுமார் நினைத்து உருகும் காட்சிகளில் ரசிகர்களை கண்கலங்க வைத்து விட்டார்.

ஒளிப்பதிவாளர் ஆர்தர் ஏ வில்சனின் தேனியின் வறண்ட பகுதிகளையும், காதல் பாடலில் மலைப்

பகுதியின் குளுமையையும், நட்பு, துரோகம் என உணர்வுக்கேற்றபடி திரை அனுபவத்தையும் ஒளிப்பதிவின் மூலம் பதிவு செய்துள்ளது

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஓகே ரகமாக தென்பட்டாலும், பின்னணி இசையில் மிகப்பெரிய அளவில் மாஸ் காண்பித்திருக்கிறார்.

தமிழகத்தில் அரசியல்வாதிகள் செய்து கொண்டிருக்கும் கோவில் நிலத்தை அபகரிக்க நினைக்கும் அரசியல்வாதிகளின் சூழ்ச்சியை மையமாக வைத்து இந்த கருடன் திரைப்படத்தை மிகச் சிறப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஆர்.ஏஸ் துரை செந்தில்குமார்.

கருடன் இன்னும் கூர்மையாக பார்த்திருக்கலாம்

“இங்க நான் தான் கிங்கு” திரைவிமர்சனம்

தாய் தந்தை இழந்து அனாதையான கதாநாயகன் சந்தானம் சென்னையில் உள்ள தனியார் மேட்ரிமோனி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.தனக்கு திருமணம் நடக்க வேண்டும் என்றால் சொந்தமாக வீடு இருக்க வேண்டும் என்பதற்காக தனது நண்பரிடம் கடன் வாங்கி கதாநாயகன் சந்தானம், ஒரு மிகப்பெரிய குடியிருப்பில் ப்ளாட் ஒன்றை வாங்குகிறார்.யார் இந்த 25 லட்சம் ரூபாய் கடனை யார் தருகிறார்களோ அவர்களது மகளை திருமணம் செய்து கொள்வதென்று முடிவெடுத்து பெண் தேடும் படலத்தை ஆரம்பிக்கிறார்.பெண் தேடும் படலத்தில் இருக்கும் போது புரோக்கர் மனோபாலா மூலமாக கதாநாயகன் சந்தானத்திற்கு இரத்தினபுரம் ஜமீனின் பெண் சம்மந்தம் கிடைக்க ஜமீன் குடும்பத்தால் கதாநாயகன் சந்தானத்தின் 25 லட்சம் ரூபாய் கடன் பிரச்சனை தீர்ந்து விடும் என்று எண்ணுகிறார்.

இரத்தினபுரம் ஊரில் உள்ள அனைவரும் கதாநாயகன் சந்தானத்தை மிகப்பெரிய அளவில் ராஜ மரியாதையோடு அவரை வரவேற்று கதாநாயகன் சந்தானத்திற்கு மிகப்பெரிய அளவில் மரியாதை செய்கின்றனர்.இரத்தினபுரம் ஜமீனுக்கு தம்பி ராமையாவுக்கு ஒரு மகன் பால சரவணன் ஒரு மகள் கதாநாயகி ப்ரியாலயா குடும்பமாக இருந்து வருகிறார்கள்.அந்த ஜமீன் தம்பி ராமையாவின் மகள் கதாநாயகி ப்ரியாலயாவின் தாலி கட்டிய மறுகணம் தான் கதாநாயகன் சந்தானத்திற்கு தெரிகிறது ஜமீன் பங்களா மீதே பல கோடிகளுக்கு கடன் இருக்கிறது என்று. அதற்காக திருமணம் முடிந்ததும் ஜமீன் பங்களாவை வாங்கிய கடனுக்காக பேங்க் அதிகாரிகள் சீல் வைத்து விடுகிறார்கள்.இதனை அறிந்து மனம் உடைந்த கதாநாயகன் சந்தானம். வேறு வழி இல்லாமல், தனது மனைவி கதாநாயகி ப்ரியாலயா, மாமனார் தம்பி ராமையாவையும் பால சரவணனை அழைத்துக் கொண்டு சென்னை திரும்புகிறார்.

தன் மனைவி கதாநாயகி ப்ரியாலயாவிடம் வேண்டா வெறுப்புடன் வாழ்ந்து வரும் கதாநாயகன் சந்தானம், இவர்களை வைத்துக் கொண்டு இவர்களை எப்படி சமாளிக்கிறார்.நண்பர்களிடம் வாங்கிய 25 லட்ச ரூபாய் கடனை பிரச்சனையை சமாளித்தாரா? சமாளிக்க வில்லையா? என்பதுதான் மீதிக்கதை.

கதாநாயகன் சந்தானம், தான் தமிழ் திரைப்பட உலகில் ஒரு காமெடி கிங் மேக்கர் என மீண்டும் இந்த இங்கு நான் தான் கிடங்கு திரைப்படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார்.தன் மாமனார் தம்பி ராமையாவை கலாய்க்கும் இடங்கள் அனைத்தும் திரைப்படத்தின் காமெடி ஓட்டத்திற்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது.

அறிமுக கதாநாயகியாக நடித்திருக்கும் ப்ரியாலயா அழகான நடிப்பை அளவாகவே கொடுத்து ஒவ்வொரு காட்சிக்கு கொடுத்திருக்கிறார்.

ஜமீனாக நடித்திருக்கும் தம்பி ராமையா, அவருடைய அனுபவ மிக அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

இரண்டு கதாபாத்திரத்தில் வரும் விவேக் பிரசன்னாவின் மிகவும் அற்புதமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.அதுவும் தீவிரவாதியாக வரும் விவேக் பிரசன்னா இறந்து நடித்த காட்சிகளில் அருமையான நடிப்பை கொடுத்து அசர வைத்திருக்கிறார்.

மனோபாலாவின் நடிப்பு திரைப்படத்தின், காமெடி காட்சிகளுக்கு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது.

முனிஷ்காந்த், பாலசரவணன், லொள்ளு சபா மாறன், லொள்ளு சபா சுவாமிநாதன், கூல் சுரேஷ் லொள்ளு சபா சேஷு, என திரைப்படத்தின் மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்த அனைவரும் மிக சிறப்பான நடிப்பைக் கொடுத்திருந்தனர்.

ஒளிப்பதிவாளர் ஓம் நாராயண ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றவாறு கை கொடுத்திருக்கிறது.

இசையமைப்பாளர் இமானின் இசை மற்றும் பாடல்கள் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.

தீவிரவாதிகளின் காட்சிகள் அனைத்தும் இந்த திரைப்படத்திற்கு எந்த ஒரு இடத்திலும் சப்போர்ட் இல்லாமல் தனியாக இருப்பதால் திரைப்படத்தில் அது ஒரு மிகப்பெரிய குறையாக அமைந்திருக்கிறது.

இந்த இங்கு நான் தான் கிடங்கு திரைப்படத்தில் என்னதான் சில குறைகள் இருந்தாலும் காமெடி கலாட்டாகளில் திரையரங்கம் முழுவதும் மக்களின் சிரிப்பு அலை அதிர வைத்திருப்பதால் பல குறைகள் அனைத்தும் நிறைவாக இருக்கிறது.

இங்கு நான் தான் கிங்,கிங்கின் கர்ஜனை இன்னும் பலமாக இருந்திருக்கலாம்

எலக்சன் திரைவிமர்சனம்

வேலூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தில் கதாநாயகன் விஜய் குமார், தந்தை ஜார்ஜ் மரியன் மற்றும் தாயுடன் வாழ்ந்து வருகிறார்.

அக்கிராமத்தில் சுமார் 40 வருட காலமாக மாநில கட்சியில் விஜய் குமாரின் தந்தை ஜார்ஜ் மரியன், அந்த கட்சியில் தீவிர விசுவாசியாக இருந்து வருகிறார்.தனது கட்சிக்கு விசுவாசமாக இருந்து, அங்கு நடக்கும் தேர்தலில் கட்சியின் மேலிடத்திற்கு கட்டுப்பட்டு அக்கட்சிக்காக ஜார்ஜ் மரியன் பணிபுரிகிறார்.தனியார் நிறுவனத்தில் பணிபுரிய, காதல் தோல்வி ஒன்று நடக்க, தொடர்ந்து வீட்டில் பார்த்த பெண் கதாநாயகி பிரீத்தி அஸ்ரனி திருமணம் செய்து கொள்கிறார்.

இந்நிலையில், அந்த ஊரில் உள்ளாட்சி தேர்தல் வரும் நிலையில், கதாநாயகன் விஜய் குமார் தந்தையான ஜார்ஜ் மரியனை அவமானப்படுத்தப்பட அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கதாநாயகன் விஜய் குமார் தேர்தலில் நிற்கிறார். வீட்டை அடமானம் வைத்து அந்த பணத்தை தேர்தலுக்காக செலவு செய்கிறார். தேர்தலில் தோல்வியடைந்து பணம் மட்டுமல்லாமல், ஒரு உயிர், போகிறது அதனால் அனைத்தையும் இழந்து நிம்மதியை இழந்து மனதளவில். பாதிப்படைகிறார்.

மீண்டும் உள்ளாட்சி தேர்தலில் நின்று விஜய்குமார் வெற்றி பெற்றாரா? வெற்றி பெறவில்லையா.? தனது இழப்பை எப்படி பழி தீர்த்தார்.?? என்பதுதான் இந்த எலக்சன் திரைப்படத்தின் மீதிக் கதை.

கதாநாயகனாக நடித்திருக்கும் விஜயகுமார் சில சில காட்சிகளில் நீண்ட வசனத்தை பேசி தனது திறமையை நிரூபிக்க முயற்சி செய்திருக்கிறார்.ஆனால், ஒரு சில காட்சிகளில் நடிப்பு எதார்த்தமாக இல்லை எனவும் கதையை தாங்கும் அளவிற்கான கதாபாத்திரத்திற்கு கதாநாயகன் விஜய்குமார் பொருத்தமாக இல்லையே என்ற சந்தேகம் எழுகிறது.

கதாநாயகியாக ப்ரீத்தி அஸ்ரா நடித்துள்ளார். தனக்குக் கொடுக்கப்பட்டதை அளவாக செய்து இருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் ப்ரீத்தி அஸ்ரா க்யூட்டான சில காட்சிகளில் எக்ஸ்ப்ரஷன்களைக் கொடுத்து கதைக்கேற்ற கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார்.

ஜார்ஜ் மரியான் தனது அனுபவ நடிப்பால் அசத்தியிருக்கிறார்.இவர்களைத் தொடர்ந்து பவல் நவகீதன் மற்றும் திலீபன் இருவரும் போட்டிப் போட்டுக் கொண்டு நடித்து தங்களது கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை உணர்ந்து மிக அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் மகேந்திரன் ஜெயராஜுவின் ஒளிப்பதிவு சண்டைக் காட்சியில் மிக அருமையாக கேமராவை கையாண்டு இருக்கிறார்.

இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டும் திரைப்படத்திற்கு மிக அருமையாக கைகொடுத்திருக்கிறது.

கிராமங்களில் நடக்கும் உள்ளாட்சி தேர்தலை மையப்படுத்தி கதை இருப்பதால் ஆங்காங்கே சில காட்சிகளில் இன்னும் கொஞ்சம் தெளிவான விளக்கத்தைக் கொடுத்து கதையை நகர்த்தியிருக்கலாம் என தோன்றியது.

மேலும், உள்ளாட்சி தேர்தல் கதையை கையில் எடுத்த இயக்குனர் உள்ளாட்சி தலைவருக்கு அதிகாரம் என்னவென்று தெரிந்து கொண்டு இந்த கதையை அழுத்தமான திரைக்கதையில் கொஞ்சம் மாற்றம் செய்து விளக்கமாகவே கொடுத்திருந்திருக்கலாம்.

எலக்சன் நடக்கும் போது இருக்கும் பரபரப்பு திரைக்கதையில் இல்லாமல் போனது!!!!!!!!

வசந்தபாலன் இயக்கத்தில் இந்த தலைமை செயலகம் வலைத்தொடர் 8 ZEE5 இணையத்தில்

இம்மாதம் 2024 மே 17 ஆம் தேதி அன்று இந்த தலைமைச் செயலகம் வலைத்தொடர் தமிழக அரசியல் களத்தின் நடந்த பின்னணியில் லட்சியம், துரோகம் மற்றும் போராட்டம் வழக்கு மிகுந்த ஒரு பெண்ணின் அதிகார வேட்கையின் கதையைச் சொல்கிறது.

வட இந்தியாவில் மிகப்பெரிய ஒரு கொடூரமான கூட்டம், ஒன்று பெண்ணின் முகம் காட்டப்படாத அந்த பெண்ணை அடித்து ரத்த  வெள்ளத்தில் மிதக்க விட்டு சித்திரவதை செய்யப்பட்டு கைகளை கட்டி  தரதரவென்று இழுத்து வந்து ஊர் மத்தியில், இந்தப் பெண்ணை மிகவும் கொடூரமாக தாக்கி ஒரு குடிசையில் அடைகிறார்கள்.ஒரு நிலையில் அந்தப் பெண் தன்னை தாக்கிய மொத்த கும்பலையும் வெட்டி  வீழ்த்திவிட்டு தமிழகத்துக்கு  தப்பி சென்று விடுகிறார்.

தமிழக முதல்வராக இருக்கும் கிஷோர் மீது ஒரு ஊழல் வழக்கு ஒன்று மத்திய பிரமுகர் சுப்பிரமணி சுவாமி போல் இருக்கும் ஒருவரால் ஆந்திரா மாநிலத்தில் வழக்கு தொடரப்பட்டு, சில வருடங்களாக அந்த வழக்கும் நடத்தப்பட்டு வருகிறது.முதல்வர் கிஷோர்   இரண்டு மகள்கள் மூத்த மகள் ரம்யா நம்பீசன் தன் தந்தையை பின்பற்றி அரசியலில் பயணப்படுகிறார் .இளைய மகளுக்கு திருமணம் ஆகி கணவன் நிரூப் நந்தகுமார் தனது மாமனார் முதல்வர் என்பதால் அரசியல் அதிகாரம்,  காண்ட்ராக்ட், என பல கோடிகளை சம்பாதித்து கொண்டு இருக்கிறான்.

தமிழக முதல்வரோடு ஒன்றாக கட்சி ஆரம்பித்த காலத்திலிருந்து  பழம் பெரும் மூத்த அரசியல்வாதியான சந்தான பாரதி கட்சியில் பொது செயலாளர் பதவியில் சுயநலம் இல்லாமல் கட்சிக்கு விசுவாசமாக இருந்து கொண்டிருக்கிறார்.

தமிழக முதல்வர் கிஷோரின் நெருங்கிய தோழியமான கட்சியின் ஆலோசகரான ஸ்ரேயா ரெட்டி இருந்து வருகிறார்.

தமிழக முதல்வர் கிஷோருக்கு சாட்சிகள் அனைத்தும் எதிராக திரும்ப, தீர்ப்பும் முதல்வருக்கு எதிராக தான் வர வாய்ப்புள்ளதாக அனைவரும் அறிகின்றனர்.தமிழக முதல்வர் கிஷோர் மீதான ஊழல் வழக்கு நிரூபிக்கப்பட்டு அவர் சிறைசாலைக்கு சென்று விட்டால், தமிழக முதலமைச்சர்  நாற்காலியை பிடிப்பதற்காக சில கழுகுகள் வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன..

தமிழக முதல்வர் கிஷோரின் மூத்த மகள் அமைச்சருமான ரம்யா நம்பீசன், தமிழக முதல்வர் கிஷோரின் இரண்டாவது மருமகனான நிரூப் நந்தகுமார் இருவரும் முதல்வர் பதவிக்கு வர ஆசைப்படுகிறார்கள்.இந்த சூழலில், தமிழக முதல்வர் கிஷோரின் நெருங்கிய தோழியமான கட்சியின்  ஆலோசகருமான ஷ்ரேயா ரெட்டியும் அந்த முதல்வர் நாற்காலிக்கு குறி வைக்கிறார்.

தமிழக முதல்வர் கிஷோரின் நெருங்கிய தோழியமான கட்சியின்  ஆலோசகருமான ஷ்ரேயா ரெட்டியும் மீது இருக்கும் நட்பாலும் நம்பிக்கையாலும் ஷ்ரேயா ரெட்டி சொல்வதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார் தமிழக முதல்வர் கிஷோர்.அதேசமயம், தனது தந்தை தமிழக முதல்வர் கிஷோரை எப்படியாவது இந்த ஊழல் வழக்கிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்றும் ஓடிக் கொண்டிருக்கிறார் ரம்யா நம்பீசன்.

காவல்துறை அதிகாரியான பரத் தமிழகத்தில் நடக்கும் கொலை ஒன்றை விசாரிக்கிறார்.அந்த கொலை வழக்கானது ஒரே நேர்கோட்டில் நூல் பிடித்தது போல் செல்ல இவை அனைத்தும் ஒரு புள்ளிகளிடம் வந்து சேர்கிறது.

அந்த பெரும்புள்ளி யார் மீது வந்து நிற்கிறது.? தமிழக முதல்வர் கிஷோருக்கு ஊழல் வழக்கிலிருந்து விடுபட்டாரா?  தண்டனை வழங்கப்பட்டதா.? இல்லையா? அடுத்த முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்.? என்பதுதான் இந்த தலைமை செயலகம் வலைத்தொடரின் நீதி கதை.

இந்த தலைமைச் செயலகம் வலைத்தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் கிஷோர் தன் கதாபாத்திரத்தின்  முக்கியத்துவத்தை உணர்ந்து, நடிப்பின் மூலம் கதாபாத்திரத்தை வாழ வைத்திருக்கிறார்.

இந்த தலைமைச் செயலகம் வலைத்தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் ஸ்ரேயா ரெட்டி முக்கிய தூணாக வந்து நிற்க இப்படிப்பட்ட ஒரு  கதாபாத்திரத்தை செய்வதற்கு தமிழ் திரைப்பட உலகில் இவரைத் தவிர வேறு யார் இருக்கிறார் என்று சொல்லும் அளவிற்கு “கொற்றவை” கதாபாத்திரத்திற்கு ஆகப் பொருத்தமாகவும் கதாநாயகி ஷ்ரேயா ரெட்டி கதாபாத்திரத்தை உணர்ந்து மிக அருமையாக நடித்திருக்கிறார்.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் பரத், இந்த கதாபாத்திரத்திற்கு மிகவும் மிகப்பொருத்தமாக இருக்கிறார்.சிபிஐ அதிகாரியாக கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆதித்யா மேனனின் விசாரணை செய்யும் தோரணையை நடிப்பின் மூலம் ரசிக்க வைத்திருக்கிறார்.ரம்யா நம்பீசன் அமைச்சராக கதாபாத்திரத்தில் மிகவும்  இறுக்கமான முகத்தோடு அவருடைய நடிப்பின் மூலம்  கைதட்டல் வாங்கி இருக்கிறார்.

இவர்களைத் தொடர்ந்து , கனி குஸ்ருதி, நிரூப் நந்தகுமார், தர்ஷா குப்தா, சாரா, சித்தார்த் விபின், ஒ ஜி மகேந்திரன்,  சந்தான பாரதி, கவிதா பாரதி உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களும் அளவோடு செய்து கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர்  வொய்டு ஆங்கிள் ரவிஷங்கரின் ஒளிப்பதிவு வளைத்தொடருக்கு மிகப்பெரிய அளவில் பலமாக அமைந்திருக்கிறது.

இசையமைப்பாளர் ஜிப்ரானின் பின்னணி இசை கதையின் ஓட்டத்திற்கு மிக அருமையாக பயணித்திருக்கிறார்.

இதுவரை நாம் பார்த்த இந்திய அரசியல், தமிழக அரசியல் இரண்டையும் கலந்து ஒரு அரசியல் சதுரங்க ஆட்டத்தை மிகவும் நேர்த்தியான படைப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் வசந்த பாலன்.

தலைமைச் செயலகம் இது குடும்ப அரசியலில் நடக்கும் தலைமைச் செயலகத்தின் அரசியல் விளையாட்டு

ஸ்டார் திரைவிமர்சனம்

கவின் நடிப்பில் இளன் இயக்கத்தில் “ஸ்டார்” திரைப்படத்தில் நடித்திருக்கிறார். “பியார் ப்ரேமா காதல்” திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இளன் இரண்டாவது திரைப்படமாக “ஸ்டார்” திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்.

திரைப்பட உலகில் நடிகராக சாதிக்க வேண்டும் என நடிப்பின் உள்ள மோகத்தால் தனது சொந்த ஊரைவிட்டு ஓடி வந்த லால், அதில் திரைப்பட உலகில் சாதிக்க முடியாமல் புகைப்பட கலைஞராக ஆகிறார்.கவின் தந்தை லால் சிறு வயது முதலே தன் மகனுக்கு நடிப்பின் மீது அதிகளவில் ஆர்வத்தை ஆர்வத்தை ஊட்டி வளர்த்து வருகிறார். கவினும் நடிப்பில் ஆர்வம் கொண்டு தன் சிறுவயதிலிருந்தே நடிப்பின் மீது தீராக்காதல் கொண்ட அதில் தீவிர கவனம் செலுத்துகிறார்.அதன் பின்னர் கதாநாயகன் கவின் எப்படியாவது திரைப்படத் துறையில் நடிகனாக வேண்டும் என பெரும் முயற்சிகள் எடுத்து வருகிறார்..

அது ஒரு புறம் இருக்க கல்லுரிபில் படிக்கும் கொண்டிருக்கும் போது தனக்கு படிப்பு இரண்டாம் பட்சம்தான் வாழ்ந்தவரும் கவின ப்ரீத்தி முகுந்தனை காதலித்து வருகிறார்.நடிப்பு பயிற்சி கற்றுக் கொள்வதற்காக மும்பையில் உள்ள திரைப்படக் நடிப்பு பயிற்சி பட்டறையில் சென்று சேர விரும்பி அங்கு சென்று தோல்வியை சந்திக்கிறார்.இந்நிலையில் எதிர்பாராத விதமாக மிகப்பெரிய விபத்தில் சிக்கும் கதாநாயகன் கவினுக்கு அதிக அளவில் முகத்தில் காயங்கள் ஏற்பட முகத்தில் தழும்பாக மாறுகிறது.அதன் பிறகு கதாநாயகன் கவின் நடிகனாகும் கனவு தகர்ந்து போகிறது.

தான் உயிருக்கு உயிராக காதலித்த காதலி ப்ரீத்தி முகுந்தனை கதாநாயகன் கவினை விட்டு புரிந்து சென்று விடுகிறார்.நண்பர்கள் மற்றும் குடும்பம் மட்டுமே உடன் இருக்க அதன் பின்னர் கதாநாயகன் கவின் உடன் கல்லூரியில் படித்த கதாநாயகி அதிதி போஹங்கர் கதாநாயகன் கவிணை காதலித்து ஆரம்பிக்கிறார்.இறுதியில் கதாநாயகன் கவின் நடிகராக ஆனாரா? நடிகனாக வில்லையா? மீண்டும் காதலில் வெற்றி பெற்றாரா? காதலில் வெற்றி பெறவில்லையா? என்பதுதான் இந்த ஸ்டார் திரைப்படத்தின் மீதிக்கதை.

கவின், முதல் பாதியில் சாக்லேட் பாயாகவும், லவ்வபல் பாயாகவும் இரண்டாம் பாதியில் சாதிக்க துடிக்கும் இளைஞராகவும் நடித்து மனதில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் மனதில் பதிந்து இருக்கிறார்.

கதாநாயகியாக நடித்து இருக்கும் பிரீத்தி முகுந்தன் கதாநாயகன் கவினின் காதலியாக வந்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.மற்றொரு கதாநாயகியாக வரும் அதிதி போஹங்கர், கவினின் முயற்சிக்கு உறுதுணையாக வந்து ரசிகர்கள் மனதில் நிற்கிறார்.

கவின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லால், எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நடிப்பு திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கீதா கைலாசம், தன் மகனை நினைத்து வருந்துவது, மற்றும் கண்டிப்பது என்று நடிப்பில் பளிச்சிடுகிறார்.

ஒளிப்பதிவாளர் K.எழில் அரசு ஒளிப்பதிவு மூலம் 1980 கால கட்டத்திற்கு ஏற்றாற்போல் அழகாக திரைப்படம் ஆக்கியிருக்கிறார்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை மற்றும் பாடல்கள் பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார்.

இயக்குனர் இளன் கதைக்களத்தை காதல் ஆக்சன் சென்டிமென்ட் என அனைத்து தரப்பையும் கவரும் விதத்தில் இருக்கிறார்.

கிளைமாக்ஸ்சில் அவர் வைத்திருக்கும் திருப்பம் சிறு குழப்பத்தை ஏற்படுத்தினாலும் அரங்கை விட்டு வெளி வரும்போது அது ரசிகர்களிடையே பேசும் பொருளாக மாறி பட்டிமன்றமாக கூட மாறி விடுகிறது.

ஸ்டார் ஏனோ ஜொலிக்காமல் மினுமினுத்த படி எரிகிறது