Breaking
March 7, 2026

Cinema Reviews

“க்ராணி” திரைவிமர்சனம்

வெளிநாட்டில் இருந்து மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் ஒரு கிராமத்தில் பழைய வீட்டினை ஒன்றை வாங்கி அங்கு செட்டிலாக நினைக்கிறார் நாயகன் அப்பொழுது அந்த வீட்டிற்கு வரும் அந்த ஊர் பெரியவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு வயதான பாட்டி நடக்க முடியாமல் அந்த வீட்டிலே வந்து விழுகிறார் அவரை காப்பாற்ற நினைக்கும் நாயகன் அதே நேரத்தில் அந்த கிராமத்தில் நடக்கும் ஒரு மர்ம கொலை ஒம்போது வயது குழந்தையின் இதயத்தை மட்டும் அறுத்து எடுத்துச் சென்றிருக்கிறார்கள் அதை விசாரிக்க வரும் திலீப் பணம் சிங்கம் புலியும் காவல் அதிகாரிகளாக பயணப்படுகிறார்கள்
அந்த கொலையை விசாரிக்க அதை செய்தது ஒச்சாயி என்னும் கிழவியும் அவருடைய சூனிய தந்திரமும் தான் என்று சொல்கிறார்கள் முதல் இதை கேட்க நம்ப மறுக்கும் அவர்கள் அதன் உண்மையை தெரிந்து அந்த கிழவியை தேடி வர அந்த வீட்டில் உள்ள அந்த கிழவி அந்த இரண்டு மேல் குழந்தைகளையும் கொண்டு இதயத்தை எடுத்தாரா தனது சூனியத்தை சாதித்தாரா அந்த சூனியக்கார கிழவி யார் அந்த சூனியத்தின் பின்னணியில் நடப்பது என்ன அந்த கதையின் பின்புறம் என்ன என்பதும், அவர்கள் எவ்வாறு அந்த கிழவியின் சூனியத்திலிருந்து தப்பித்தார்கள் என்பதை படத்தின் திரைக்கதை.
இந்த மாதிரி திரைப்படங்கள் எல்லாம் பேய் படமாக தான் வரும் ஆனால் இது பேய் படம் இல்லை இது ஒரு மந்திர தந்திரங்களை பற்றிய ஒரு படமாக எடுக்க நினைத்திருக்கிறார்கள் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் சூனியக்கார கிழவியாக வடிவுக்கரசி முழுவதும் ஆக்கிரமிப்பாக அவர் மட்டுமே

காவல் அதிகாரியாக வரும் திலீபன் சிங்கம்புலி சிங்கம் புலியின் காட்சிகள் வழக்கமான காமெடி கலந்த காட்சிகள் திலீபன் சீரியஸான காவல் அதிகாரி ஆகும் நடித்திருக்கிறார்கள் அவ்வளவே
இரண்டு குழந்தைகள் காது கேட்க முடியாமல் வாய் பேச முடியாமல் அவர்கள் நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது
படத்தின் மிகப்பெரிய காமெடி ஊர் தலைவராக வரும் கஜராஜா கத்தியை தூக்கிக்கொண்டு ஓடுகிறார் ஏதேதோ கதை சொல்லுகிறார் ஆனால் எதற்கும் பெரிதாக பயன்படவில்லை
பொதுவாக இந்த மாதிரி திரைப்படங்களுக்கு பின்னணி இசை என்பது திகிலூட்டும் படமாகவும் பார்ப்பவர்களை பயமுறுத்துவம் செய்ய வேண்டும் அது ஏனோ இந்த படத்தில் மிஸ் ஆகிறது ஒளிப்பதிவும் நம்மை மிரட்டவில்லை

“காந்தி டாக்ஸ்” திரை விமர்சனம்

மும்பையின் ஒரு குடிசைப் பகுதியில் வாழும் வேலை இல்லாமல் ஒருவேளை சாப்பாட்டுக்காக கஷ்டப்படும் விஜய் சேதுபதி, உடல் நலம் சரியில்லாத தனது தாயாரை பார்க்க மிகவும் சிரமப்படுகிறார். அதே நேரத்தில் இன்னொரு பக்கம் மிகப்பெரிய கன்ஸ்ட்ரக்ஷன் அதிபர் அரவிந்த்சாமி தொழிலில் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டு, கோர்ட் மூலமாக அனைத்து சொத்துகளையும் இழந்தவர், இவர்கள் இருவரும் தங்கள் நிலையை காத்துக் கொள்ள தங்கள் நிலையிலிருந்து வெளியில் வர என்ன செய்கிறார்கள், இவர்கள் இருவரும் ஒரே நேர்கோட்டில் எப்பொழுது சந்திக்கிறார்கள், அதன் பிறகு என்ன நடக்கிறது? என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை.
பணம் பத்தும் செய்யும்
பணம் தான் இந்த உலகில் எல்லாவற்றையும் நினைக்கிறது, நீதியை உட்பட நியாயத்தை உட்பட என்பதை நறுக்கென்று சொல்லி இருக்கிறார் இயக்குனர் அந்த பணத்தை பாதுகாக்க பணக்காரன் எப்படி போராடுகிறான், அந்த பணத்தை சம்பாதிக்க ஒரு ஏழை எப்படி கஷ்டப்படுகிறான், என்பதை “காந்தி டாக்ஸ்” என்னும் திரைப்படத்தின் மூலம் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
இந்த படத்தின் மிகப்பெரிய பலமே இந்த படத்தில் எந்தவிதமான வசனங்களும் கிடையாது உடல் மொழி மூலம் மட்டுமே நடிப்பையும் அந்த நடிப்பின் மூலம் கதையையும் சொல்ல இயக்குனர், அதற்கு இரண்டு மிக சிறந்த நடிகர்களை களத்தில் இறக்கி இருக்கிறார்கள் அவர்கள் வேறு யாரும் இல்லை ,விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி இருவரும் தங்களது கதாபாத்திரத்தில் தங்களுடைய முகபாவனைகள் மூலமும் அவ்வளவு அருமையாக எடுத்து சொல்கிறார்கள். இவர்களை தவிர இந்த திரைப்படத்திற்கு வேறு யாரும் சரியாக புரிந்து இருக்க மாட்டார்கள் என்று தான் படம் பார்க்கும் நமக்கு தோன்றுகிறது.
கதாநாயகியாக அதிதி ராவ் இவருடைய நடிப்பும் மிகவும் அருமையாக உள்ளது.
இந்த மாதிரி சிக்கலான திரைக்கதையில் நகைச்சுவையையும் நகைச்சுவை கதாபாத்திரங்களும் இணைத்து இருப்பது மிகப்பெரிய பலம் காட்சி. அமைப்புகள் அதற்கு ஏற்றார் போல் மிகவும் அருமையாக ஒவ்வொரு இடத்தையும் அந்த சூழலுக்கு ஏற்ப மிகவும் அருமையாக வைத்திருக்கிறார்கள்.
இந்த மாதிரியான படத்தின் மிகப்பெரிய பலம் இசை அந்த இசை ஏ ஆர் ரகுமானை தவிர வேறு யாராலும் தந்திருக்க முடியாது இசை தான் இந்த படத்தை அனைத்தையும் பேச வைக்கிறது.
இந்தப் படத்தின் இயக்குனர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் கிட்டத்தட்ட இரண்டு மணி நேர திரைப்படத்திற்கு எந்த வசனமும் இல்லாமல் திரைக்கதையில் விறுவிறுப்பை கொடுத்திருக்கிறார் இயக்குனர் அவரது முயற்சி மிகப் பெரிய சபாஷ்.


காந்தி டாக்ஸ் அதாவது காந்தி படம் போட்ட பேப்பர் நம்மிடையே கிடைக்க எவ்வளவு போராட்டமோ அந்த போராட்டத்தை காந்தி டாக்ஸ் மூலம் எடுத்துக் கூறியிருக்கிறார்

“ஜாக்கி”திரை விமர்சனம்

மதுரை சுற்றி நடைபெறும் கிடா சண்டையை மையப்படுத்தி வந்திருக்கிற திரைப்படம் தான் ஜாக்கி இந்த படத்தில் ராமர் தனது ஆடாத காளியுடன் ஒரு கிடா சண்டைக்கு வருகிறார் அங்கு ஏற்கனவே பல ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றி பெற்று வரும் காப்ரா கார்த்திக் அவரின் ஆடான காளியுடன் சண்டை பற்றிஇதனால் இருவருக்கும் இடையே ஏற்படும் ஈகோ பிரச்சனையும் நீ பெரியவனா நான் பெரியவனா என்னும் சண்டையில் என்ன நடக்கிறது இருவரும் எப்படி மோதி கொள்கிறார் இவர்கள் இடையில் சிக்கிக் கொள்ளும் அந்த ஆடுகள் என்ன பாடுபடுகிறது என்பதுதான் ஜாக்கி படத்தின் திரைக்கதை
பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த கிடா சண்டை முழுமையாக எடுக்க வேண்டும் என இயக்குனர் மிகவும் என கேட்டிருக்கிறார் எதற்காக இரண்டு நாடுகளை வாங்கி 3 ஆண்டுகளாக இந்த படத்தின் நடிப்பவர்களுடன் பழகி நாயகனையும் வில்லனையும் ஜாக்கியாகவே உருவெடுக்க வைத்திருக்கிறார் இயக்குனர் அதற்காக அவருக்கு ஒரு பாராட்டுதல்கள்
மேலும் இந்த படத்தில் வரும் காளி என்னும் ஆடு உண்மையாகவே ஒரு கெடா சண்டையில் கலந்து வெற்றியடைந்து மெடல் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதுஅவர் கூறியிருப்பது இந்த வளர்ப்பு கிடாக்கள் தனது முதலாளியின் மனதுவத்தை அப்படியே பிரதிபலிக்கும் என்பதுதான்


மேலும் இந்த படத்தின் நாயகியாக அபு அபிராமி காதல் காட்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு இருக்கிற வேறு எதற்காகவும் இல்லை
படத்தின் ஒளிப்பதிவு அந்த மண் சார்ந்த அமைப்பில் ஓரளவுக்கு எடுத்துக்காட்டு முயற்சித்து இருக்கிறார்
மேலும் இந்த படத்தின் இசையும் படத்தின் விறுவிறுப்புதுணை நிற்கிறது
ஜாக்கி திரைப்படத்தை உண்மை கதைக்களமாக எடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் ஆனாலும் படம் முழுவதும் ஆடு சண்டையாகவே இருப்பதால் கொஞ்சம் கதையில் தொய்வு தான் வருகிறது இன்னும் அந்த

சண்டையில் விறுவிறுப்பு காட்டி இருந்தால் ஆடு முட்டும் பொழுது பார்க்கும் நமக்கும் நிச்சயம் அடிபட்டிருக்கும்

“HOTSPOT 2” திரை விமர்சனம்

தயாரிப்பாளரிடம் கதை சொல்லும் அறிமுக இயக்குநரின் நான்கு பேரின் வெவ்வேறு கதைகள்சொல்லும் ‘ஹாட் ஸ்பாட்’ படத்தின் தொடர்ச்சி தான் ‘ஹாட் ஸ்பாட் 2’.முதல் பாகத்தைப் போலவே , அதே தயாரிப்பாளரிடம் அறிமுக இயக்குநர் கதை சொல்ல வருகிறார். அவரது நோக்கமும் முதல் பாகத்தின் இயக்குநருடையது தான் என்றாலும், அவர் பேச இருக்கும் விஷயம் தனிப்பட்ட ஒருவருக்கானது அல்ல, ஒரு சமூகத்திற்கானது. அது என்ன ? அதன் மூலம் மக்களுக்கு இயக்குநர் எதைபுரிய வைக்கிறார் ? என்பது தான் கதைக்களம்.
“ஹாட் ஸ்பாட் 2”.

மொத்தத்தில், Hotspot 2 என்பது அனைவருக்கும் ஏற்ற பொழுதுபோக்கு படம் அல்ல. இது குறிப்பிட்ட பார்வையாளர்களை மட்டுமே குறிவைக்கும், பெரியவர்களுக்கான (Adult-oriented) திரைப்படம். துணிச்சலான கருத்துகளை நேரடியாகக் காண விரும்பும் பார்வையாளர்களுக்கு இது ஒரு முறை பார்க்கக்கூடிய அனுபவமாக இருக்கும்; ஆனால் வலுவான கதைக்களம் மற்றும் ஆழமான திரைக்கதை எதிர்பார்ப்பவர்களுக்கு இது முழு திருப்தியை அளிக்காமல் போகலாம்.

எழுதி இயக்கியிருக்கிறார் விக்னேஷ் கார்த்திக்,
சூடான விஷயங்களை சுவைபட சொல்வதுடன், அதுல இருக்கும் இரு தரப்பினர் பக்கம் இருக்கும்
நியாயத்தை சமமாக பேசி, அனைத்து தரப்பினரையும் சிந்திக்க வைக்க முயற்சித்திருக்கிறார்

ஒரே பாணியில், ஒரு நிலையான தீர்வு சொல்லாமல் தொடர்வது பார்வையாளர்களை கொஞ்சம் சோர்வடைய வைக்கின்றன.
படம்

வங்காள விரிகுடா திரை விமர்சனம்

தூத்துக்குடியில் வாழும் மக்கள் செல்வாக்கு மிக்க தொழிலதிபரான குகன் சக்ரவர்த்தி ஒருநாள் தனிமையில் கடற்கரை ஓரத்தில் அமர்ந்திருக்க அங்கு அவரது முன்னாள் காதலி தற்கொலை செய்ய முயற்சி செய்கிறார். அதை தடுத்து அவளை காப்பாற்றும் குகன் தன்னைப் போலவே தன் முன்னாள் காதலின் வாழ்க்கையும் கெட்டு இருப்பதாக நினைத்து அதற்கு உதவி செய்ய கொலை செய்கிறார், அவரது முன்னாள் கணவனை கொலை செய்கிறார். திடீரென்று ஒரு நாள் இரவு இறந்து போன அந்த முன்னாள் கணவன் தொலைபேசியில் அவர்களிடம் பேசி மிரட்ட, அதிர்ச்சி அடையும் குகன் இறந்த ஒருவன் எப்படி திரும்ப போனில் வந்து பேச முடியும் என யோசிக்கிறார்.

அதை யார் அது என்ன என்பதை கண்டறியும் முயற்சியில் இறங்கும் குகன் அதை கண்டறிந்தாரா? அவர்கள் யார் இவரை மிரட்டுகிறார் அதிலிருந்து அவர் எவ்வாறு மீண்டு வருகிறார்? என்பதுதான் வங்காள விரிகுடாபடத்தின் திரைக்கதை

இந்தப் படத்தின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் பாடல்கள் இசை என 24 கிராப்டுகளையும் இவர் ஒருத்தரை கையாண்டு இந்த படத்தை எடுத்திருக்கிறார்

மனைவி மற்றும் முன்னாள் காதலி பாடல்கள் மற்றும்
காதல் காட்சிகளுக்கு மட்டும் பயன்படுத்தாமல், கதைக்கு
கதாபாத்திரங்
களாக பயணித்திருக்
கின்றனர்கள்.


வறுமையில் பிறந்து மிகப்பெரிய கோடீஸ்வரராகிய ஊருக்கே வாரி வழங்கும் வள்ளலாக மாறி இருக்கும் குகன் இந்த படத்தில் திரைக்கதையை இது பேய் படமாமுயற்சி செய்து இரண்டு பரிமாணங்களில் எடுத்து இருக்கிறார்
கிளைமாக்ஸ் இல் தான் செய்யும் அனைத்து தவறுகளையும் அப்துல் கலாம் அவர்களின் பெயரை வைத்து திருந்துவது தான் படத்தின் மிகப்பெரிய ஹைலைட் ஒரே நபர் அனைத்து கிராப்டுகளையும் கையாண்டால் படம் இப்படி தான் வரும் என்பது வங்காள விரிகுடா படம் மூலம் நிறுபனம் ஆகிறது

” ரெட்ட தல” திரை விமர்சனம்

பாண்டிச்சேரியில் பெற்றோர்கள் இல்லாமல் தனியாக வளரும் அருண் விஜய், அவரைப் போலவே பெற்றோர் இல்லாமல் தனிமையில் இருக்கும் சித்தி இத்னானியை அருண் விஜய் காதலிக்கிறார். ஆனால், சித்தி இத்னானி அருண் விஜயை விட பணத்தின் மீது அதீத மோகம் கொண்டவராக வாழ நினைக்கிறாள்.அவளை சந்தோஷப்படுத்து
வதற்காக கண்ணுக்கு தெரியாத நிறைய தப்புகள் அதிகமான பணம் சம்பாதிக்கும்வேண்டிய சூழ்நிலையில் ஈடுபடுகிறார் .அருண் விஜய்க்கு, அப்போது தீரென பணக்கார அருண் விஜயின் நட்பு கிடைக்கிறது.இது‌ தீடீரென சந்திப்பு அதுவும் விபத்தில் தான் நடக்கிறது. பணக்காரன் வசதிப்படைத்த அருண் விஜயின் பணத்தின் மீது அதிக ஆசைப்படும், சித்தி இத்னானி தனது காதலர் அருண் விஜய் மூலம் அவரதுபணத்தை அடைய திட்டம் போடுகிறார். பிறகு என்ன நடக்கிறது?. என்பதை விறுவிறுப்பாக சொல்வது‌ தான் திரைப்பட கதையின் கதைக்களம்
“ரெட்ட தல”.
இரட்டை பிறவி போல் இரு வேடங்களில் நடித்திருக்கிறார் அருண் விஜய்,
கதாநாயகியாக நடித்திருக்கிறார் சித்தி இத்னானி,
தன்யா ரவிச்சந்திரன், ஜான் விஜய், ஹரிஷ் பெராடி, பாலாஜி முருகதாஸ், யோகி சாமி ஆகியோர் கதாபாத்திரங்
களுக்கு ஏற்ப சிறப்பாக நடித்துள்ளார்கள்.


முதல் பாதி படம் முழுவதும் வேகமாகவும், பல்வேறு திருப்பங்களுடன்பயணிப்பது போல் இரண்டாம் பாதி பயணிக்க வில்லை படத்தை கொஞ்சம் பலவீனம் ஆக்‌ஷன் காட்சிகள் அந்த பலவீனத்தை மறைத்து விடுகிறார்கள்.

“சிறை” திரை விமர்சனம்

சிவகங்கை மாவட்டத்தில் சார்ந்த கொலை வழக்கு ஒன்றில் விசாரணை கைதியாக வேலூர் மத்திய சிறையில் பல வருடங்களாக இருக்கும் எல்.கே.அக்‌ஷய் குமாரை, சிவகங்கை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு விக்ரம் பிரபு தலைமையிலான காவலர் குழுவுக்கு வழங்கப்படுகிறது. போகும் வழியில் காவலர்கள் சில பிரச்சனைகளில் சிக்கிக்கொள்ள , அதன் மூலம் கைதி அக்‌ஷய் குமாரை தொலைத்து விடுகிறார்கள். போலீஸ் துப்பாக்கியுடன் அவர்களிடம் இருந்து தப்பித்த அக்‌ஷய் குமார் மீண்டும் பிடிபட்டாரா ?, கொலை குற்றவாளியான அவரது பின்னணி

என்ன ?, அவர் யாரை எதற்காக கொலை செய்தார்? , இதனால் விக்ரம் பிரபு எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன ?

தனது தாயை அடித்தவனை தள்ளி விடும் போது அது கொலையாக மாறுகிறது. இந்த உண்மை சம்பவத்தை விறுவிறுப்பாகவும் உண்மைக்கு நெருக்கமாகவும் சொல்வது தான் “சிறை”. கதைக்களம்.
ஒரு நடிகர் என்பதை தாண்டி, ஒரு காவலராக பார்வையாளர்கள் மனதுக்குள் விக்ரம் பிரபு பதிந்து விடுகிறார். மற்றொரு நாயகனாக நடித்திருக்கிறார் அறிமுக இளம் நடிகர் எல்.கே.அக்‌ஷய் குமார்நாயகியாக நடித்திருக்கிறார் அனிஷ்மா அனில்குமார்

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து தமிழ் எழுதிய கதை சாதாரணமாக இருந்தாலும், அதை தனது திரைக்கதை மற்றும் இயக்கம் மூலம் மிக வலிமையான படைப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி.

Heartily Battery- Review

Heartily Battery என்பது இன்றைய தலைமுறையின் உணர்ச்சி உலகம், உறவுகளின் சிக்கல்கள், மனநிலை ஏற்றத் தாழ்வுகள் ஆகியவற்றை எளிய கதைச்சரட்டில் பேசும் ஒரு தமிழ் வெப் சீரிஸ். தலைப்பு சொல்வதுபோலவே, மனிதர்களின் emotional battery எப்போது சார்ஜ் ஆகிறது, எப்போது காலியாகிறது என்பதையே மையக் கருவாக எடுத்துக்கொள்கிறது.

கதையின் அமைப்பு மிகச் சிக்கலானது அல்ல. தினசரி வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் வேலை அழுத்தம், காதல், தோல்வி, எதிர்பார்ப்பு, ஏமாற்றம் போன்ற உணர்ச்சிகளே எபிசோடுகளின் அடிப்படை. இதனால் பார்வையாளர்களுக்கு கதாபாத்திரங்களுடன் உடனடி தொடர்பு ஏற்படுகிறது. “இது நம்ம வாழ்க்கை மாதிரி இருக்கே” என்ற உணர்வை உருவாக்குவதில் தொடர் வெற்றி பெறுகிறது.

நடிப்பு தரப்பில் இயல்புத்தன்மையே முக்கிய பலம். அதிகப்படியான டிராமா அல்லது செயற்கை வசனங்கள் இல்லாமல், underplayed performances மூலம் கதாபாத்திரங்கள் நம்பகத்தன்மையுடன் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இளைஞர்களின் மனநிலையை பிரதிபலிக்கும் காட்சிகள் நன்றாக வேலை செய்கின்றன.

இயக்கம் மற்றும் திரைக்கதை ரீதியாக, தொடர் மெதுவான வேகத்தில் நகர்ந்தாலும் அது களைப்பை தருவதில்லை. குறுகிய எபிசோடுகள், எளிய காட்சியமைப்பு, நெருக்கமான ஃப்ரேம்கள் ஆகியவை கதையின் உணர்ச்சி ஆழத்தை அதிகரிக்கின்றன. பின்னணி இசையும் மிகக் குறைவாக பயன்படுத்தப்பட்டு, காட்சிகளின் உணர்வுகளை திணிக்காமல் துணைபுரிகிறது.

ஆனால் சில இடங்களில் திரைக்கதை இன்னும் கூர்மையுடன் இருந்திருக்கலாம். குறிப்பிட்ட உணர்ச்சிகள் மீண்டும் மீண்டும் சொல்லப்படுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அதே நேரத்தில், இதுவே தொடரின் slice-of-life தன்மைக்கு பொருந்துகிறது என்பதையும் மறுக்க முடியாது.

மொத்தத்தில், Heartily Battery ஒரு பெரிய திரைக்கதை அதிசயம் அல்ல. ஆனால் மனதை மெதுவாகத் தொடும், சிந்திக்க வைக்கும், குறிப்பாக இளம் பார்வையாளர்களை நேரடியாகப் பேசும் ஒரு வெப் சீரிஸ். வேகமான திருப்பங்கள் அல்லது பரபரப்பை எதிர்பார்க்காமல், அமைதியான மனநிலையில் பார்க்க விரும்புவோருக்கு இது ஒரு பொருத்தமான அனுபவம்.

” நிர்வாகம் பொறுப்பல்ல” திரைவிமர்சனம்

கார்த்தீஸ்வரன், பலவழிகளில் தனியார் ஃபேங்க்கில் சில முறை கேடுகள் செய்து அதன் மூலம் மோசடி செய்து குறைந்த பட்சம் ரூ.5.ஆயிரம் கோடி சம்பாதித் திருக்கிறார். சம்பாதித்த பணத்தை எடுத்துக் கொண்டு வெளிநாட்டுக்குபறந்து விட நினைக்கும் போது, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீநிதியிடம் சிக்கிக்கொள்கிறார். அவர்‌ நாயகனை தொடர்ந்து பாலோ செய்துக் கொணஂடிருந்த போது திடீரென்று போலீஸிடம் சிக்கிக் கொண்டகார்த்தீஸ்வரன் தப்பித்தாரா? இல்லையா?, அவர் செய்த மோசடிகள்எத்தனைகள் என்ன ? அதை அவர் எப்படி சாமர்த்தியமாக செய்கிறார், அவர்இப்படி செய்வதற்கு என்ன காரணம் ?, என்பதை ஆகிய கேள்விகளுக்கான விடை தான் படத்தின் கதைக்களம்.

இந்த படத்தை இயக்கியிருக்கிறார் எஸ்.கார்த்தீஸ்வரன் கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார். எல்லோரிடம் அப்பாவி முகம், வைத்து சாதுவான தோற்றம் என்று சாதாரணமாக வலம் வந்த கார்த்தீஸ்வரன் செய்யும் மோசடிகள் அனைத்தும்,அடங்கப்பா யாருக்கும் தெரியாத அளவுக்கு ரகசியம் ரகங்களாகவும்,எல்லாருக்கும் அதிர்ச்சியளிக்கின்றன. கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார் கார்த்தீஸ்வரன்,பலவித கெட்டப்புகளில் தோன்றியதுடன், அவற்றுக்குபொருத்தமாக கனகச்சிதமாக செய்திருக்கிறார்.
அவர் செய்தது . இல்லாதது சற்று வருத்தமளிக்கிறது.இருந்தாலும், ஒரு நடிகராக நடிப்பு, நடனம், காமெடி, ஆக்‌ஷன் என அனைத்தையும் கனகச்சிதமாக சரியாக செய்திருக்கிறார்.

போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கிறார் ஸ்ரீநிதி இன்ஸ்பெக்டர் ரோல் கம்பீரமாகவும்,கவர்ந்திழுக்கும் அழகோடும் வலம் வருகிறார்

கார்த்தீஸ்வரனின் மோசடி குழு உறுப்பினராக
நடித்திருக்கும்ஆதவன், லிவிங்ஸ்டன், பிளாக் பாண்டி, மிருதுலா சுரேஷ், அகல்யா வெங்கடேசன் என அனைவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.இயக்குநர் எஸ்.கார்த்தீஸ்வரன்,

திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால்,நிச்சயம் இன்னொரு சதுரங்க வேட்டை படத்தைப் பார்த்த மாதிரி ஆடியிருக்கலாம்.

“ரஜினி கேங்க்” திரை விமர்சனம்

ரஜினி கிஷனும்,த்விவிகாவும் இருவரும் ஊரை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்துக் கொள்ளுகிறார்கள். அவர்களுக்கு முனீஷ்காந்த் தனது காரில் லிப்ட் கொடுக்கிறார்.வழியில் திருடனான கல்கியும் அந்த காரில்ஏறிக்கொண்டு பயணிக்கிறார்.பயணிக்கும் போது இவர்கள், ஏதோ ஒரு இடத்திற்கு சென்று விடுகிறார்கள்.பல்வேறு தரப்பினர், பலகாரணங்களுக்காக இவர்களை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கிடையே, ரஜினி கிஷன் – த்வ்விவிகாவுக்கு திருமணம் நடக்கிறது. திருமணத்திற்குப் பிறகு படம் திடீரென்று வேறு ஒரு ஜானரில் பயணிக்க தொடங்குகிறது. அது என்ன ஜானர் ?, என்பதை தான் படத்தின் மீதிக்கதைக்களம்.

நாயகனாக நடித்திருக்கிறார் அறிமுக நடிகர் ரஜினி கிஷன், காமெடி ஜானர் படத்திற்கு பொருந்தும் முகம். நாயகியாக நடித்திருக்கிறார் த்விவிகா, காமெடி மற்றும் காதல் பாடல்கள் என அளவாக நடித்திருக்கிறார்.

முனீஷ்காந்த் காமெடி என்ற பெயரில் ஒரே மாதிரியான ரியாக்‌ஷனை கொடுத்து சலிப்படைய செய்கிறார்.

கூல் சுரேஷ், மொட்டை ராஜேந்திரன், கல்கி ஆகியோர்வரும் காட்சிகளிலும் காமெடி நெடி குறைவ இருக்கிறது.

காட்சிகளின் நீளத்தில் கூடுதல் கவனம் செலுத்திகுறைத்து
இருக்கலாம்.

எழுதி இயக்கியிருக்கிறார் எம்.எஸ்.ரமேஷ் பாரதி, பார்வையாளர்கள்

எந்தவித லாஜிக்கையும் பார்க்காமல் சிரிக்க வேண்டும் என்பதில் அதிகம் மெனக்கெட்டிருக்கிறார் இயக்குநர் .