deccanwebtv

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் ‘ஹார்ட் பீட் – ரிதம் ஆஃப் லைஃப்’ சீரிஸை அறிவித்துள்ளது !!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் சீரிஸுக்கு ஹார்ட் பீட் என்று பெயரிட்டுள்ளது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வெளியீடாக, சமீபத்தில் வெளியிடப்பட்ட, ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்களான “மத்தகம் மற்றும் லேபிள்” சீரிஸ்கள், பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில், பெரும் வரவேற்பைக் குவித்தது. இந்நிலையில், தற்போதைய புதிய சீரிஸான ‘ஹார்ட் பீட்’ சீரிஸுக்கு, ரசிகர்களிடம் இப்பொழுதே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த சீரிஸின் டைட்டிலை ஒரு அழகான சிறிய வீடியோவில், டைட்டில் தொடரின் பெயர் மற்றும் அதன் கவர்ச்சியான, ‘ரிதம் ஆஃப் லைஃப்’ எனும் டேக் லைனுடன் வெளியிட்டது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த சீரிஸ் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி:
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முந்தைய ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்களின் பொழுதுபோக்கு முறையை மாற்றியுள்ளது – அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்வுகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது மற்றும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது

“ஜெய் ஹனுமான்”

இயக்குநர் பிரசாந்த் வர்மா, ராமர் கோவில் திறப்பு விழாவினை முன்னிட்டு இந்த அற்புத சந்தர்ப்பத்தில், PVCU யுனிவர்ஸிலிருந்து மற்றொரு காவிய, சாகசத்திரைப்படமான, “ஜெய் ஹனுமான்” படத்தின் முன் தயாரிப்பு பணிகளை துவங்கியுள்ளார் !!

ராமர் கோவில் திறப்பு நன்நாளில், PVCU யுனிவர்ஸிலிருந்து, அடுத்த அதிரடியாக “ஜெய் ஹனுமான்” பட முன் தயாரிப்பு பணிகள் துவக்கம் !!

பிரசாந்த் வர்மா ஜெய் ஹனுமான் எனும் அடுத்த படத்தின் தலைப்பை தற்பொது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ஹனுமான்’ படத்தின் முடிவில் அறிவித்திருந்தார். பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் ஹனுமான் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஸ்கிரிப்டை இயக்குநர் ஏற்கனவே முழுமையாக தயார் செய்துவிட்டார். பிரமாண்டமான ஃபேண்டஸி உலகில், சூப்பர்மேன் சாகஸ கதைகளைச் சொல்லும் இப்படம், மிகப்பெரும் பட்ஜெட்டில் உலத்தரமான தொழில்நுட்ப அம்சங்களுடன், முன் எப்போதும் இல்லாத, புதுமையான திரை அனுபவத்தை வழங்கும்.

இயக்குநர் பிரசாந்த் வர்மா இப்படத்தின் ப்ரீ-புரொடக்‌ஷனைத் தொடங்க, அற்புதமான சந்தர்ப்பத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார். அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவின் முக்கிய நாளில், பிரசாந்த் வர்மா ஹைதராபாத்தில் உள்ள ஹனுமான் கோவிலில் நடந்த யாகத்தில் பங்கேற்றார். படத்தின் ஸ்கிரிப்ட் அனுமன் சிலையின் முன் வைக்கப்பட்டு, இத்திரைப்படத்திற்காக ஆசீர்வாதம் வாங்கப்பட்டது. முன் தயாரிப்பு பணிகளைத் தொடங்க, இதைவிட சிறந்த சந்தர்ப்பம் கிடைக்காது என்பதில், படக்குழு உற்சாகமாக உள்ளனர்.

இந்நிகழ்விலிருந்து ஒன்றிரண்டு போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. அப்புகைப்படங்களில் ஒன்று, பிரசாந்த் வர்மா தெய்வத்தின் முன் நின்று ஸ்கிரிப்டை வைத்திருப்பதைக் காட்டினால், மற்றொன்று அதன் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்ட ‘ஹனுமான்’ படத்தின் கடைசி காட்சியைக் காட்டுகிறது.

இப்பிரம்மாண்ட படைப்பினை பற்றிய மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவுக்கப்படும்.

“ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான்” – ஒரு சொல்லப்படாத காவியம்.

“ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான் – ஒரு சொல்லப்படாத காவியம்!! “ திரைப்படத்தின் போஸ்டர், ராமர் கோவில் திறப்பு விழா நாளில் வெளியிடப்பட்டது!!

இப்படத்தின் வசீகரிக்கமிக்க போஸ்டரை, சுரேஷ் ஆர்ட்ஸ் நிறுவனம், அயோத்தியின் வரலாற்று நிகழ்வையொட்டி, வெளியிட்டது.

சுரேஷ் ஆர்ட்ஸ் நிறுவனம் அதன் தயாரிப்பில், உருவாகும் மகத்தான படைப்பான “ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான்” திரைப்படத்தின் புதுமையான போஸ்டரை, அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவின் புனித நாளில், பெருமையுடன் வெளியிட்டுள்ளது. கன்னடம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வரவிருக்கும் இந்தத் திரைப்படம், மதிப்புமிக்க ராமாயணத்தின் சொல்லப்படாத அம்சங்களை கூறுவதோடு, காவியக் கதையின் தனித்துவமான கண்ணோட்டத்தை வழங்கும்.

ராமர் கோயில் திறப்பு விழாவினையொட்டி வெளியிடப்பட்டுள்ள கவர்ச்சிகரமான போஸ்டர், அயோத்தியில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்களை எதிரொலிக்கும் வகையில், ரசிகர்களிடம் வரவேற்பை குவித்துள்ளது. ‘ராமாயணத்தின் சொல்லப்படாத இதிகாசம்’ என்ற டேக்லைன், ராமாயணம் குறித்து இதுவரை ஆவணப்படுத்தப்படாமல் இருக்கக்கூடிய அம்சங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் படமாக, இப்படம் இருக்குமென்பதைக் குறிக்கிறது.

மலைகள், நெருப்பு, நீர் மற்றும் ராமர் மற்றும் அனுமன் தெய்வீக இரட்டையர் போன்ற கூறுகளைக் கொண்ட இந்த போஸ்டர், அயோத்தியில் இந்த மகிழ்ச்சியான தருணத்தின் சாரத்தை படம்பிடித்து காட்டுவதாக அமைந்துள்ளது. இயக்குநர் அவதூத் இயக்கும் ‘ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான்’ படம், அதிரடி மிகுந்த ஆக்சன் காட்சிகளுடன், காலத்தால் அழிக்க முடியாத காவியத்தை உயிர்பிக்கும்.

கன்னடத்தில் பாராட்டுகளைக் குவித்த பிரபல தயாரிப்பாளர் K. A.சுரேஷ், சுரேஷ் ஆர்ட்ஸ் பேனரின் கீழ், இந்த லட்சியத் திரைப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். பல மொழிகளில் இருந்து மதிப்புமிக்க முன்னணி நட்சத்திர நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றவுள்ளனர், இது ஒரு மாறுபட்ட மற்றும் புகழ்மிகு ஒருங்கிணைப்பாக இருக்கும்.

தற்போது ஸ்டோரிபோர்டிங் மற்றும் VFX ஆரம்ப பணிகள் நடந்து வருகின்றன. “ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான்” படத்தின் தயாரிப்பு மற்றும் கதைக்களம் பற்றிய கூடுதல் விவரங்கள் வரும் நாட்களில் அதிகாரப்பூரவமாக அறிவிக்கப்படும். மொழித் தடைகளைத் தாண்டி எதிரொலிக்கும் மாறுபட்ட கதைகளை வழங்குவதில், பான் இந்தியா சினிமாவின் அர்ப்பணிப்புக்கு, இந்தப் படம் ஒரு சான்றாக இருக்கும்.

ZEE5 தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்த ‘கூச முனிசாமி வீரப்பன்’ டாக்குமெண்ட்ரி சீரிஸ் !!

மக்கள் கருத்தில் ‘கூச முனிசாமி வீரப்பன்’ நல்லவனா ? கெட்டவனா ? ZEE5 தளம் நிகழ்திய ஷோ !!

‘கூச முனிசாமி வீரப்பன்’ சீரிஸைக் கொண்டாடும் வகையில் தள்ளுபடி அறிவித்தது ZEE5 தளம்!!

இந்தியாவின் முன்னணி ஸ்ட் ரீமிங் தளமாக ரசிகர்களால் கொண்டாடப்படும் Zee5 தளத்தில் சமீபத்தில் வெளியான ‘கூச முனிசாமி வீரப்பன்’ டாக்குமெண்ட்ரி சீரிஸ் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து, சாதனை படைத்துள்ளது.

இந்தியாவையே அதிரவைத்த வனக் கொள்ளைக்காரன் கூச முனிசாமி வீரப்பனின் வாழ்க்கையை, அவரது வாக்குமூலத்துடன் அலசும் இந்த சீரிஸ் பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்துள்ளது. ரசிகர்கள் மட்டுமல்லாது விமர்சகர்களும் இந்த சீரிஸை கொண்டாடி வருகின்றனர். தமிழின் இதுவரையிலும் மிகச்சிறந்த டாக்குமெண்ட்ரி சீரிஸ் என அனைத்துத் தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த சீரிஸ் வனக் கொள்ளைக்காரன் கூச முனிசாமி வீரப்பனின் வாழ்க்கை மற்றும் அவரது குற்றச் சரித்திரம் பற்றிய நெருக்கமான பார்வையை நமக்கு வழங்குகிறது. அவரது நிஜ வாழ்க்கைக் காட்சிகள் அவரது வாக்குமூலம் வழியாகவும், அவருக்கு நெருக்கமான நபர்கள் மற்றும் அவரைப் பிடிக்க அயராது முயன்ற அதிகாரிகளின் நேரடி வாக்குமூலங்கள் ஆகியவற்றின் மூலம், இந்த சீரிஸ் வீரப்பனின் ஆளுமை மற்றும் அவரது குற்றப் பின்னணியைத் தெளிவாகச் சித்தரிக்கிறது.

இந்த சீரிஸின் தனிச்சிறப்பு என்னவென்றால், இது முதன்மையாக வீரப்பனின் வார்த்தைகளில், அவரது முழு வாழ்க்கைக் கதையையும் விவரிக்கிறது. வீரப்பன் பற்றி இதுவரை வெளிவராத உண்மைகள் பலவற்றை வெளிக்கொண்டு வந்துள்ள, இந்த சீரிஸ் இதுவரையிலும் வெளியான வீரப்பன் பற்றிய டாக்குமெண்ட்ரியிலிருந்து மாறுபட்டதாகவும் தனித்துவமானதாகவும் அமைந்துள்ளது.

‘கூச முனிசாமி வீரப்பன்’ சீரிஸுக்கு கிடைத்திருக்கும் பார்வையாளர்களின் வரவேற்பைக் கொண்டாடும் வகையில் ஒரு வித்தியாசமான ஷோவை ZEE5 மக்கள் கூடியிருக்கும் Urban Square இல் அரங்கேற்றியுள்ளது. மக்கள் கருத்தில் ‘கூச முனிசாமி வீரப்பன்’ நல்லவனா ? கெட்டவனா ? என்பதைத் தெரிவிக்கும் வகையில், அவர்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கோடுகளால் வரையப்பட்ட வீரப்பனின் ஓவியத்திற்கு, தங்கள் கருத்தையொட்டிய வண்ணங்களைத் தீட்டலாம்.

இந்நிகழ்வில் மக்கள் பலரும் ஆர்வமுடன் கலந்துகொண்டு, வண்ணங்களைத் தீட்டி வீரப்பன் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்தனர். மேலும் ZEE5 தளத்திற்கு தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

இது குறித்தான வீடியோ லிங்க்

‘கூச முனிசாமி வீரப்பன்’ ஒரிஜினல் டாக்குமெண்ட்ரி சீரிஸை தீரன் புரடக்சன்ஸ் சார்பில் நக்கீரன் பிரபாவதி இந்த டாக்கு சீரிஸைத் தயாரித்துள்ளார். இந்த சீரிஸ் டிசம்பர் 8 ஆம் தேதி முதல் பிரத்தியேகமாக ZEE5 இல் திரையிடப்படப்பட்டு வருகிறது.

‘கூச முனிசாமி வீரப்பன்’ 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்ததைக் கொண்டாடும் வகையில், ZEE5100 எனும் தள்ளுபடி கூப்பனை ZEE5 தளம் அறிவித்துள்ளது. இந்த கூப்பன் மூலம் நீங்கள் ZEE5 தளத்தின் சந்தாவில் 100 ரூபாய் தள்ளுபடி பெறலாம்.

ZEE5 தளம் அதன் அஜய் கர்துர்வார் நடிப்பில் ‘அஜய் காடு’

~ அஜய் கர்தூர்வார் இயக்கியிருக்கும் இப்படத்தை, அஜய் குமார் புரொடக்ஷன்ஸ் மற்றும் சந்தனா கோபிசெட்டி இணைந்து தயாரித்துள்ளனர் ~

இந்தியா, ஜனவரி 12, 2024: இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5 தளம், தனது நேரடி-டிஜிட்டல் தெலுங்கு திரைப்படமான ‘அஜய் காடு’ படத்தினை ஜனவரி 12 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் செய்து வருவதாக அறிவித்துள்ளது. சந்தனா கோபிசெட்டியுடன் இணைந்து அஜய் குமார் புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் அஜய் கர்தூர்வர் இப்படத்தை இயக்கி, தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தில் பன்முக நடிகர் அஜய் குமார், தெலுங்கு பிக் பாஸ் புகழ் பானு ஸ்ரீ மற்றும் ரோடீஸ் வெற்றியாளர் ஸ்வேதா மேத்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் திறமைமிகு நடிகர்களான பிராச்சி தாக்கர், அபய் பெத்திகாண்டி, ஜெயஸ்ரீ கரு மற்றும் யதம் ராஜு ஆகியோரும் நடித்துள்ளனர்.

‘அஜய் காடு’ அஜய் எனும் நடுத்தர வர்க்க இளைஞன் , பணம், புகழ் மற்றும் காதல் என அனைத்தும் புது வடிவமெடுக்கும் வேகமான உலகத்திற்கு ஏற்ப, மாற முயற்சிக்கும் கதையை விவரிக்கிறது. வாழ்வின் மீதான வெறுப்பில் நம்பிக்கையைக் கைவிடும் அஜய், போதைக்கு அடிமையான மருத்துவரான ஸ்வேதாவை சந்திக்கிறான். அவன் வாழ்வு மாற்றத்திற்குள்ளாகிறது. அஜய் தனது உள் மனப் போராட்டங்களை எதிர்கொள்வதையும் மற்றும் வெளி உலகத்தால் முன்வைக்கப்படும் சவால்களை எதிர்த்துப் போராடுவதையும் ஒரு நெகிழ்ச்சி மிகு பயணமாக இப்படம் சொல்கிறது. ZEE5 இல் ஜனவரி 12 முதல் படம் இலவசமாக ஸ்ட்ரீம் செய்யப்பட்டு வருகிறது.

படத்தின் பிரீமியர் குறித்து அஜய் கர்துர்வார் கூறியதாவது.., “‘அஜய் காடு’ படத்திற்காக நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராகச் செயல்பட்டது இன்னுமே நம்பமுடியாத த்ரில் பயணமாக இருந்தது. இந்த திரைப்படம் என் இதயத்திற்கு மிக நெருக்கமான, ஒரு சிறப்பு மிகு படைப்பாகும். இந்த அற்புதமான அனுபவத்தை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள மிக ஆர்வமாக உள்ளேன், டிரெய்லர், படத்தின் சிறு அறிமுகத்தைத் தரும் படத்தில் இன்னும் நிறைய இருக்கிறது! சண்டைக்காட்சிகள், உணர்ச்சிகள் மற்றும் காதல் ஆகியவற்றின் கலவையாக ஒரு தீவிரமான படைப்பை உங்களுடன் பகிர்வதில், உற்சாகமாக உணர்கிறேன். இந்த துடிப்பு மிகு காதல் கதையை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்குக் கொண்டு செல்லும், ZEE5 உடனான இந்த ஒத்துழைப்பு ஒரு கேம் சேஞ்சர் என்று நான் நம்புகிறேன். ஒரே நாளில் உலகளாவிய பார்வையாளர்களைச் சென்றடைய இது மிகப்பெரிய பாலமாக அமையும். ‘அஜய் காடு’ அனைவரும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் படைப்பாக இருக்கும்.”

இப்படத்தில் நல்லமல்லா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை பானு ஸ்ரீ கூறியதாவது.., ” ஒரு அருமையான படைப்பில் அஜய் கர்தூர்வாருடன் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தனித்துவமான பாத்திரங்கள் மற்றும் அழுத்தமான திரைக்கதைகளால் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும் அவரது திறன் ஏற்கனவே என் ஆர்வத்தைத் தூண்டியது. படத்தில், பிரியா என்ற ஒரு துடிப்பான மற்றும் சுதந்திரமான இளம் பெண்ணாக நான் நடிக்கிறேன். இப்பாத்திரம் கதைக்கு ஒரு தனித்துவமான சுவை கூட்டும், மேலும் ZEE5 இல் திரைப்படத்திற்குப் பார்வையாளர்கள் தரும் வரவேற்பைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.

ZEE5 பற்றி
ZEE5 என்பது இந்தியாவின் முன்னணி ஓடிடி தளம் மற்றும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களுக்கு பன்மொழியில்  கதைசொல்லும் ஒரு தளமாகும். ZEE5 ஆனது Global Content Powerhouse, ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்தில் இருந்து உருவானது. அனைவருக்கும் பிடித்தமான ஒரு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக, நுகர்வோருக்கு இந்த தளம் இருந்து வருகிறது; இது 3,500 படங்களுக்கு மேல் உள்ளடக்கிய ஒரு விரிவான தளம் மற்றும் பலவிதமான கதைகள்  கொண்ட ஒரு பெரும் திரை  நூலகத்தை இது பார்வையாளர்களுக்கு வழங்குகிறது; 1,750 டிவி நிகழ்ச்சிகள், 700 ஒரிஜினல் மற்றும் 5 லட்சம் மணிநேர உள்ளடக்கங்கள். 12 மொழிகளில் (ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி) சிறந்த ஒரிஜினல் படங்கள், இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை, குழந்தைகள் நிகழ்ச்சிகள், Edtech, Cineplays, செய்திகள், Live TV, மற்றும் ஆரோக்கியம், வாழ்கை முறை சார்ந்த உள்ளடக்கங்கள் இதில் உள்ளன. உலகளாவிய தொழில்நுட்ப அமைப்பாளர்களின் கூட்டாண்மையிலிருந்து உருவான ஒரு வலுவான மற்றும் ஆழமான தொழில்நுட்ப அடுக்கு இது.  பல சாதனங்கள் மற்றும் பல சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்றவாறு  12 மொழிகளில் தடையற்ற மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கத்தைப் பார்க்கும் அனுபவத்தை ZEE5  வழங்குகிறது.

மேலும் சமூகவலைதளங்களில் ZEE5 ஐ தொடர :
Facebook – https://www.facebook.com/ZEE5
Twitter – https://twitter.com/ZEE5India
Instagram – https://www.instagram.com/zee5/

ஹனு மான் திரைவிமர்சனம் 

சிறு கிராமத்தில் தன் அக்கா வரலக்ஷ்மியுடன் வாழும் கதாநாயகன் தேஜா சஜ்ஜா ஜாலியான சின்ன சின்ன திருட்டு செயல்களை செய்து கொண்டு எந்த ஊரில் வேலை வெட்டி இல்லாமல் வெட்டியாக ஊரைச் சுற்றி திரிகிறான்.

தலைவரான ராஜ் தீபக் ஷெட்டி கிராமத்து மக்கள் அனைவரிடமும் வரி வாங்கி கொண்டு ஊரை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்கிறார்..

யாராவது கிராமத்து தலைவரான ராஜ் தீபக் ஷெட்டி எதிர்த்து பேசினாலோ அல்லது வரி கட்டவில்லை என்றாலும் மல்யுத்த என்ற போட்டி மூலம் எதிர்ப்பவரை கொல்வது அவர் வழக்கமாக வைத்திருக்கிறார்.

இந்நிலையில் கதாநாயகன் தேஜா சஜ்ஜாவின் பள்ளி பருவ காதலியான கதாநாயகி அமிர்தா நாயர் அந்த கிராமத்துக்கு மருத்துவராக வருகிறார்

ஒரு கட்டத்தில் கதாநாயகி அமிர்தா நாயரை கொள்ளையர்கள் தாக்க அவரை காப்பாற்ற கதாநாயகன் தேஜா சஜ்ஜா கொள்ளையர்களிடம் போராடும் போது கொள்ளையர்கள் தாக்கியதில் மயக்கமான நிலையில் இருக்கும் கதாநாயகன் தேஜா சஜ்ஜாவிடம் ஹனுமானின் ரத்த துளியால் உருவான சக்தி வாய்ந்த கல்லான ருத்ர கல் ஒன்று கதாநாயகன் தேஜா சஜ்ஜா கையில்
கிடைக்கிறது.

சூரிய சக்தியால் அந்த ருத்ர கல்லில் மூலம் மாபெரும் சக்தியில் மிகப்பெரிய பலசாலியாக உருவெடுப்பதோடு மட்டுமல்லாமல் அந்த கிராமத்து தலைவரான ராஜ் தீபக் ஷெட்டியை அடித்து பந்தாடி அந்த கிராமத்து மக்களை கதாநாயகன் தேஜா சஜ்ஜா காப்பாற்றுகிறார் .

இந்த ருத்ர கல்லின் சக்தியை தெரிந்துக்கொள்ளும் வில்லன் வினய். கல்லுடன் சேர்த்து மாபெரும் சக்தியை கைப்பற்ற கதாநாயகன் தேஜா சஜ்ஜாவை இருக்கும் கிராமத்துக்கு தேடி வருகிறார்.

இறுதியில் கதாநாயகன் தேஜா சஜ்ஜாவிடம் ஹனுமானின் சக்திவாய்ந்த ருத்ர கல்கிடைத்ததற்கான காரணம் என்ன ?

கதாநாயகன் தேஜா சஜ்ஜாவிடமிருந்து அந்த ருத்ர கல்லை கைப்பற்ற நினைத்த வில்லன் வினய்யின் சதி திட்டம் பலித்ததா ? பலிக்கவில்லையா ? என்பதுதான் இந்த ‘ஹனு-மான்’. திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘ஹனு-மான்’ திரைப்படத்தில் கதாநாயகனாக தேஜா சஜ்ஜா நடித்திருக்கிறார்.

நாயகனாக நடிக்கும் தேஜா சஜ்ஜா துறுதுறு இளைஞனாக நடிப்பின் மூலம் அசத்தி இருக்கிறார்

ஹனுமந்து கதாபாத்திரத்திரமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் வகையில் சக்தி கொண்ட சூப்பர் ஹீரோவாக நடிப்பில் ஜொலிக்கிறார் 

ருத்ர கல்லின் சக்தி மூலம் அவர் செய்யும் சாகசங்களை காமெடி கலந்த நடிப்பில் தெலுங்கு கதாநாயகர்கள் திரைப்படங்களில் செய்வதை சொல்லும்போது முடிவில் தெலுங்கு ஸ்டார் பாலகிருஷ்ணாவை போல ரயிலை நிறுத்துவதற்காக கிளம்பும் காட்சியில் விசில் சத்தத்தில் தியேட்டரே அதிர்கிறது.

இந்த ஹனு-மான் திரைப்படத்தில் கதாநாயகியாக அமிர்தா ஐயர் நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் அமிர்தா ஐயர் கதைக்கேற்றபடி சிறப்பான நடிப்பை கொடுத்து அசத்தி இருக்கிறார்.

கதாநாயகன் தேஜா சஜ்ஜாவின்அக்காவாக நடிக்கும் வரலட்சுமி சரத்குமார் வழக்கம்போல் மிகவும் அருமையாக அவருடைய கதாபாத்திரத்தை உணர்ந்து மிரட்டி இருக்கிறார்.

ஸ்டைலிஷ் வில்லனாக மிரட்டும் வினய் ராய்,கிராமத்து தலைவராக பயமுறுத்தும் ராஜ் தீபக் ஷெட்டி, சிரிக்க வைக்கும் வெண்ணிலா கிஷோர் ,
சமுத்திரக்கனி என அனைத்து கதாபாத்திரங்களில்  நடித்தவர்களும் மிகவும் இயல்பாக நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவாளர் தாசரதி சிவேந்திரனின் ஒளிப்பதிவு மூலம் கதைக்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறார்

இசையமைப்பாளர்கள் ஹனுதீப் தேவ், கெளரஹரி, கிருஷ்ணா செளரப் ஆகியோரது இசையும், மற்றும் பாடல்கள் பிண்ணனி இசை அனைத்து அருமையாக இருக்கிறது.

படத்தொகுப்பாளர் சாய் பாபு தலாரியின் படதொகுப்பு திரைப்படத்திற்கு பக்க பலமாய் இருக்கின்றது.

ஒரு கிராமத்தில் கதாநாயகனுக்கு சக்தி கிடைத்த பின் அந்த சக்தியினால் சூப்பர் ஹீரோவாக உருமாறி அவர் நிகழ்த்தும் சாகசங்களை கதையாக கொண்டு ஆன்மிகம் கலந்த விறு விறுப்பான திரைக்கதையுடன் குழந்தைகள் முதல் அனைவரும் சிரித்து மகிழ பேசிக்கொண்டே குரங்கு வரும் காட்சிகளும் ஹாலிவுட் திரைப்பட பாணியில் வடிவமைக்கப்பட்ட சிறப்பான காட்சிகளுடன் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் ஆன்மீகம் கலந்த ஃபேண்டஸி திரைப்படமாக திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் பிரசாந்த் வர்மா.

Megastar Chiranjeevi, Vassishta, UV Creations – Mega Mass Beyond Universe – #Mega156 Titled Vishwambhara,

Megastar Chiranjeevi provided a full meal feast to his fans and movie buffs for the last Sankranthi with Waltair Veerayya. Megastar doesn’t have any theatrical release for the festival this year, but the makers of his magnum opus #Mega156 provided a perfect Sankranthi presentation by unveiling its title through a spellbinding glimpse.

The glimpse begins with transporting us into a heavenly world, where someone locks a magical box, which accidentally falls. It passes through a black hole and crashes into an asteroid. After many such disruptions and obstacles, the magical object finally reaches the earth which is symbolically shown with a large Hanuman statue. A crater appears as it crashes into the earth, yet nothing happens to the magic box. Finally, the title of the movie is revealed as Vishwambhara.

The Mega Mass Beyond The Universe is beyond our imagination and the journey of the magical box gives us some lucidity on the kind of cinematic experience we are going to witness. The VFX work is top notch. More importantly, the title Vishwambhara sounds extremely effectual.

The mega fantasy adventure is directed by Vassishta of Bimbisara fame under the leading production house UV Creations. Vikram, Vamsi, and Pramod are producing the movie on a high budget which is going to be the costliest film for Chiranjeevi to date.

MM Keeravani scores the music, while Chota K Naidu is the cinematographer. AS Prakash is the production designer, while Sushmita Konidela is the costume designer.

Kotagiri Venkateswara Rao and Santhosh Kamireddy are the editors for the film. Sri Siva Shakthi Datta and Chandrabose are the lyric writers, while Srinivas Gavireddy, Ganta Sridhar, Nimmagadda Srikanth, and Mayukh Adithya are the script associates.

The shoot of the movie is in the initial stages. The makers also announced the release of the movie for Sankranthi in 2025.

Cast: Megastar Chiranjeevi

Technical Crew:
Writer & Director: Vassishta
Producers: Vikram, Vamsi, Pramod
Banner: UV Creations
Music: MM Keeravani
DOP: Chota K Naidu
Production Designer: AS Prakash
Costume Designer: Sushmita Konidela
Editor: Kotagiri Venkateswara Rao, Santhosh Kamireddy
Lyrics: Sri Siva Shakthi Datta and Chandrabose
Script Associates: Srinivas Gavireddy, Ganta Sridhar, Nimmagadda Srikanth, and Mayukh Adithya
Ex-Producer: Karthik Sabareesh
Line Producer: Ramireddy Sridhar Reddy
PRO: Yuvraaj
Marketing: First Show

மெகாஸ்டார் சிரஞ்சீவியின் மெகா156 “விஸ்வம்பரா”.

மெகாஸ்டார் சிரஞ்சீவி, வசிஷ்டா, UV கிரியேஷன்ஸ் – இணைந்து வழங்கும், கற்பனைக்கு அப்பாற்பட்ட மெகா மாஸ் ஃபேண்டஸி திரைப்படம் – மெகா156 #Mega156 விஸ்வம்பரா என தலைப்பிடப்பட்டுள்ளது!! அதிர வைக்கும் டைட்டில் க்ளிம்ப்ஸேவுடன் , 2025 ஆம் ஆண்டு சங்கராந்திக்கு இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. !!

மெகாஸ்டார் சிரஞ்சீவி கடந்த சங்கராந்திக்கு ‘வால்டர் வீரய்யா’ படம் மூலம் தனது ரசிகர்களுக்கும், திரையுலக பிரியர்களுக்கும் அறுசுவை விருந்தளித்தார். இந்த ஆண்டு மெகாஸ்டாருக்கு எந்த திரையரங்கு வெளியீடும் இல்லை என்றாலும், அவரது பிரம்மாண்டமான திரைப்படமான #Mega156 இன் தயாரிப்பாளர்கள், படத்தின் தலைப்பை அற்புதமான க்ளிம்ப்ஸேவுடன் வெளியிட்டதன் மூலம், ரசிகர்களுக்கு இந்த சங்கராந்தியை கொண்டாட்டமாக மாற்றியுள்ளனர்.

தற்செயலாக விழும் மாயாஜாலப் பெட்டியை யாரோ ஒருவர் பூட்டி வைக்க, ஒரு பரலோக உலகத்திற்கு நம்மைக் கொண்டு செல்வதில் இருந்து இந்த கிளிம்ப்ஸே வீடியோ தொடங்குகிறது. அப்பெட்டி கருந்துளை வழியாகச் சென்று சிறுகோள் மீது மோதி, பல இடையூறுகள் மற்றும் தடைகளுக்குப் பிறகு, இறுதியாக பூமியை அடைகிறது, இது ஒரு பெரிய அனுமன் சிலையுடன் அடையாளமாக காட்டப்பட்டுள்ளது. பூமியில் மோதும்போது ஒரு பள்ளம் தோன்றுகிறது, ஆனால் மாயப் பெட்டிக்கு எதுவும் நடக்கவில்லை. இறுதியாக, படத்தின் தலைப்பு “விஸ்வம்பரா” என கண்களுக்கு விருந்தாக விரிகிறது.

பிரபஞ்சத்திற்கு அப்பால் மெகா மாஸ் ஃபேண்டஸி உலகிற்கு அழைத்துச் செல்லும் வகையிலான இந்த வீடியோவில் காட்டப்படும், மாயாஜால பெட்டியின் பயணம், நாம் காணப்போகும் சினிமா அனுபவத்தைப் பற்றிய சிறு தெளிவைத் தருகிறது. இதன் விஷுவல் எஃபெக்ட்ஸ் உலகத்தரத்தில் அமைந்துள்ளது மிக முக்கியமாக, விஸ்வம்பரா எனும் தலைப்பு வெகு கவர்ச்சிகரமாக உள்ளது.

விக்ரம், வம்சி மற்றும் பிரமோத் ஆகியோர் இணைந்து பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படம், சிரஞ்சீவி திரை வாழ்க்கையில் மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகும் திரைப்படமாக இருக்கும். இப்படத்திற்கு எம்எம் கீரவாணி இசையமைக்க, சோட்டா கே நாயுடு ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.எஸ்.பிரகாஷ் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், சுஷ்மிதா கொனிடேலா ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்.

சாய் மாதவ் புர்ரா வசனங்களை எழுதுகிறார், கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் மற்றும் சந்தோஷ் காமிரெட்டி எடிட்டர்களாக பணியாற்றவுள்ளனர். ஸ்ரீ சிவசக்தி தத்தா மற்றும் சந்திரபோஸ் ஆகியோர் பாடலாசிரியர்களாகவும், ஸ்ரீனிவாஸ் கவிரெட்டி, காந்தா ஸ்ரீதர், நிம்மகத்தா ஸ்ரீகாந்த் மற்றும் மயூக் ஆதித்யா ஆகியோர் ஸ்கிரிப்ட் அசோசியேட்டுகளாகவும் பணியாற்றுகின்றனர்.

இப்படத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் துவங்கி, நடைபெற்று வருகிறது. இப்படம் 2025 சங்கராந்தி விருந்தாக திரைக்கு வருமென, தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

நடிப்பு : மெகா ஸ்டார் சிரஞ்சீவி

தொழில்நுட்பக் குழு:
எழுத்தாளர் மற்றும் இயக்குநர்: வசிஷ்டா தயாரிப்பாளர்கள்: விக்ரம், வம்சி, பிரமோத் பேனர்: UV கிரியேஷன்ஸ்
இசை: எம்.எம்.கீரவாணி
ஒளிப்பதிவு : சோட்டா கே நாயுடு
தயாரிப்பு வடிவமைப்பாளர்: ஏ.எஸ்.பிரகாஷ் ஆடை வடிவமைப்பாளர்: சுஷ்மிதா கொனிடேலா எடிட்டர்: கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ், சந்தோஷ் காமிரெட்டி
வசனங்கள்: சாய் மாதவ் புர்ரா
பாடல் வரிகள்: ஸ்ரீ சிவசக்தி தத்தா மற்றும் சந்திரபோஸ்
ஸ்கிரிப்ட் அசோசியேட்ஸ்: ஸ்ரீனிவாஸ் கவிரெட்டி, காந்தா ஸ்ரீதர், நிம்மதி ஸ்ரீகாந்த் மற்றும் மயூக் ஆதித்யா
நிர்வாகத் தயாரிப்பாளர்: கார்த்திக் சபரீஷ்
லைன் புரடியூசர்: ராமிரெட்டி ஸ்ரீதர் ரெட்டி
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

‘கல்கி 2898 AD’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘கல்கி 2898 AD’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படம் எதிர்வரும் மே மாதம் ஒன்பதாம் தேதியன்று வெளியாகிறது.

கண்களுக்கு விருந்தளிக்கும் காட்சி மொழியான சினிமாவை அனைவரும் கொண்டாடுகிறார்கள். அத்தகைய சினிமாவின் தொலைநோக்கு பார்வையாளரான இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவான ‘கல்கி 2898 AD’ படத்தின் வெளியீட்டு தேதியை , தனித்துவமான அறிவிப்பின் மூலம் அனைவரின் கவனத்தையும் படக்குழுவினர் கவர்ந்திருக்கிறார்கள். அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பதானி போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இத்திரைப்படம்.. ஒரு அசாதாரணமான சினிமா அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்கும் என உறுதி அளிக்கிறது. வாரணாசி, மும்பை, டெல்லி, சண்டிகர், சென்னை, மதுரை, ஹைதராபாத், விசாகப்பட்டினம், குண்டூர், பீமாவரம், காஷ்மீர் உள்ளிட்ட இந்தியாவின் பல முக்கியத்துவம் வாய்ந்த மாநகரங்களில் ‘கல்கி 2898 AD’ படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பை தயாரிப்பாளர்கள் பிரம்மாண்டமாக வெளியிட்டனர். இதற்காக விஜயவாடாவில் நடைபெற்ற பிரத்யேக அணிவகுப்பு… பார்வையாளர்களின் கவனத்தைக் கவர்ந்தது. இதன் போது தனித்துவமான மற்றும் அற்புதமான முறையில் படத்தின் வெளியீட்டை, இந்த ஆண்டு மே மாதம் ஒன்பதாம் தேதி என உற்சாகமாக அறிவித்தனர்.

வைஜெயந்தி மூவிஸ் நிறுவனரும், திரைப்பட தயாரிப்பாளருமான சி. அஸ்வினி தத் ‘கல்கி 2898 AD’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு குறித்து பேசுகையில், ” வைஜயந்தி மூவிஸ் நிறுவனம் தனது ஐம்பதாவது ஆண்டை நிறைவு செய்யும் வகையில்.. எங்களுடைய சினிமா பயணத்தில் மே ஒன்பதாம் தேதியின் முக்கியத்துவம் தெளிவாகத் தெரிகிறது. ‘ஜகதேக வீருடு அதிலோக சுந்தரி’ முதல் விருது பெற்ற ‘மகாநதி’ மற்றும் ‘மகரிஷி’ வரை இந்த தேதி எங்கள் வரலாற்றில் தனி இடத்தை பொறித்துள்ளது. இப்போது அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் போன்ற திறமையான நட்சத்திர கலைஞர்களுடன் தயாரான ‘கல்கி 2898 AD’ படத்தின் வெளியீடு எங்களுக்கு ஒரு சிறப்பான தருணத்தை குறிக்கிறது. எங்கள் நிறுவனத்தின் மைல் கல்லான ஐம்பதாவது ஆண்டுடன் இப்படம் இணைந்துள்ளது. மேலும் நாங்கள் எங்கள் பயணத்தை தொடரும்போது ..அதை இந்த திரைப்படம் மேலும் அர்த்தமுள்ளதாக ஆக்குகிறது.” என்றார்

இதனிடையே ‘கல்கி 2898 AD’ கடந்த ஆண்டு சான்- டியாகோவில் உள்ள காமிக்-கானில் அறிமுகம் செய்யும் போது உலகம் முழுவதும் பெரும் அதிர்வை உருவாக்கி, பாராட்டைப் பெற்றது. மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். மேலும் அவர்களை சூழ்ச்சிகள் நிறைந்த எதிர்கால உலகிற்கு அழைத்துச் செல்லவும் ‘கல்கி 2898 AD’ உறுதியளிக்கிறது.

வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவான ‘கல்கி 2898 AD’ ஒரு பன்மொழி திரைப்படமாகும். இது புராணக் கதைகளால் ஈர்க்கப்பட்ட.. எதிர்காலத்தில் நடைபெறும் அறிவியல் புனைவு படைப்பாகும்.

“Junior Chamber International – Chennai Wing of JCI CSK,  Zone XVI celebrated 5thinstallation Ceremony”*

“Junior Chamber International (JCI) is a leadership building community that not only picks up
quality members but is also keen in bringing out the qualities of their members in flying
colours”. JCI Chennai Synergy Kings (JCI CSK) is the prestigious local organization under JCI
INDIA-Zone16  celebrating its 5th installation ceremony; Jc HGF Mohanraj assumes the role of
President of JCI CSK- 2024 in the ceremony.
The ceremony eve was hosted by Jc Sharmila Premkumar with Dias members Jc HGF Mohanraj,
Dr M S R Mariyappan ( Dean-Veltech university), Jc JFM S  Elumalai- ZP 2024 JCI INDIA, Jc
HGF Alpesh Patira PND JCI INDIA, Jc R Vivek Raja (Charter President JCI CSK ), Jc JFM P
Premanand Pandiyan ZD Training-2024,   Jc  Saravanan (IPP 2024), Jc Papuraj S (secretary
2024 JCI CSK), Jc JFM  Lokesh A (ZVP of zone XVI -Region A.
Jc Alpesh Patira PND JCI India while addressing the gathering says  “Human mind attains
immense strength when it gets recognition for good deeds. Hence recognition is given to
Outstanding Youth Personality, Leadership training, book reviews meeting or any contribution
irrespective of small or big. The quality time invested by JC’ians has always fetched good results
to the society and community as well. Be it ‘a pat on shoulder’ or a shoulder for shoulder JCI has
always been there.  Now it’s time for a quantum leap and we all should focus more on national
events and create more entrepreneurs in our nation” says motivationally.
“Tamilians have always got a great potential to excel in any field. Being sworn in on the
occasion of 75th anniversary of Junior Chamber International, and I remember Honorable JC
Kavin Kumaravel, from Tamil Nadu who is the  JCI President-2024 (JCI International) ” says Jc
Mohanraj in a zest voice.
 Jc Elumalai, ZP 2024, Zone-XVI stated that “Having successfully conducted many youth
empowering programs, the future envisage is likely that we improve the scope for JCOM and set
a B2B enabling mechanism and keep the members active in terms of economy, society and
community” says Jc Elumalai, ZP 2024 in a futuristic view.

Dr. Mariappan,( Dean-Veltech university) mentioned that Since I need to maintain rigidity as a
dean of a college, I joined JCI only to entice myself by seeing new people and interacting with
them. Later on I got involved in the team activities and took a role of guiding young blood. JCI is
one of it’s kinds as the gathering of members is a cocktail of alumni meet, business meet,
leadership program and rejuvenation.
Just within five years JCI CHENNAI SYNERGY KINGS gained good momentum in our city
and the name has got familiar to many students and working professionals” says Dr. Mariappan
enthusiastically.
Jc Premanand while addressing the ceremony humorously says “whenever searching is rigorous
one tend to find lot of things which were misplaced long ago. Similarly this JCI is a great place
where I was able to find peoples who are as close as school and college mates. It also creates a
professional base to propel a career and a platform to build leadership qualities.”