Breaking
February 24, 2025

deccanwebtv

Two School Students from Tamil Nadu Won the Championship at National Finals of SIP Arithmetic Genius Contest held in Chennai

  • 300 young arithmetic champions from 23 states to compete for the prestigious “Arithmetic Genius” title in Chennai

The Grand National Finals of the much-awaited SIP Arithmetic Genius Contest 2024 held at Hotel Green Park, Vadapalani, Chennai, on Sunday, 19th January 2025. The 9th edition of this contest, conducted by SIP Academy India, witnessed participation from over 750,000 children across 1,500 schools in 23 states. The multi-tiered competition aims to strengthen the mathematical foundation of children in Classes 1 to 5 while nurturing a healthy competitive spirit.

The contest progresses through four rounds: School Round, City Round, State Round, and the Grand National Finals. Out of 2,33,000 students in Round 2 and 37,000 participants in the State Finals, 300 students have qualified for the National Finals and they participated in the National Finals held in Chennai.

The winners from each class crowned at “Arithmetic Genius 2024”, with attractive cash prizes for the top three positions in each class:

  • Champion: ₹25,000
  • 1st Runner-up: ₹15,000
  • 2nd Runner-up: ₹10,000

Winner Details

Name of the ChildSchool NameClassStatePrize
Sanjukta DSri Arunachala Matric Hr Sec School1st stdBhuvanagiri /Tamil NaduChampion
P DhiganthSri Chaitanya Techno School5th StdNamakkal / Tamil NaduChampion

Mr. Dinesh Victor, Managing Director of SIP Academy India Pvt. Ltd., expressed his excitement: “We are delighted to offer young children an opportunity to build a solid foundation in mathematics and earn recognition at an early age. The overwhelming participation from students across the country is a testament to their enthusiasm and the growing importance of arithmetic skills in shaping their future.”

He also highlighted that SIP Academy India has trained over 1 million children across its 1,000+ centres in 350 cities across 24 states. The academy’s programs aim to equip children with essential life skills to help them face challenges with confidence.

விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஏஸ் ‘

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கதையின் நாயகனாக அதிரடியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ ஏஸ் ‘ (ACE) எனும் திரைப்படத்தின் பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ ஏஸ்’ (ACE) எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி. எஸ். அவினாஷ் , திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஃபென்னி ஆலிவர் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ஏ.கே. முத்து கவனித்திருக்கிறார். கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 7CS என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆறுமுக குமார் பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் டைட்டிலுக்கான டீசர் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்தது. இந்த தருணத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு, ஏஸ் ( ACE) படத்தின் பிரத்யேக காணொளியை படக் குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். இதில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து மலேசிய நாட்டின் விமான நிலையத்திற்குள் நடந்து செல்வதும்…பின் அங்கு பிரபலமான வணிக வளாகங்களில் அதிரடி சண்டை காட்சியில் ஈடுபடுவதும்… ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களில் உற்சாகமாக நடனமாடுவதும், சாலையில் துணிச்சலுடன் செல்வதும்… காட்சிப்படுத்தப்பட்டிருப்பதால் அவருடைய ரசிகர்களை உற்சாகமடைய செய்திருக்கிறது. அத்துடன் இந்த காணொளி மூலம் ‘ஏஸ்’ திரைப்படம் நூறு சதவீதம் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகி இருக்கிறது என்பதும் தெளிவாக தெரிய வருகிறது.
மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரத்தின் பெயர் ‘போல்டு கண்ணன்’ என்பதால்.. அந்த கதாபாத்திரம் குறித்த ஆவலுடன் கூடிய எதிர்பார்ப்பும் ரசிகர்களிடத்தில் ஏற்பட்டிருக்கிறது.

இந்திய ரசிகர்களை மட்டுமல்லாமல் சீன நாட்டின் ரசிகர்களையும் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் கவர்ந்திருக்கும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஏஸ்’ (ACE) படத்திற்கு தமிழக ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்தியா, மலேசியா மற்றும் சர்வதேச ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சூரி நடிக்கும் ‘மாமன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

‘விலங்கு’ எனும் இணைய தொடரை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாமன் ‘ எனும் திரைப்படத்தில் சூரி, ராஜ் கிரண், ஐஸ்வர்யா லட்சுமி சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை கணேஷ் சிவா மேற்கொள்ள, கலை இயக்கத்தை ஜி. துரை ராஜ் கவனிக்கிறார். தாய் மாமன் உறவைப் பற்றி மண் மணம் கமழும் படைப்பாக தயாராகும் இந்த திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கிறார்.

இப்படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய் மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக இப்படம் தயாராகி வருகிறது. அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்தினருடன் திரையரங்கத்திற்கு வருகை தந்து ரசிக்கும் வகையில் ஃபேமிலி என்டர்டெய்னராக ‘மாமன்’ உருவாகி வருகிறது” என்றார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சூரியின் தோற்றம் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது. மேலும் இந்த திரைப்படம் எதிர்வரும் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாக படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே ‘கருடன்’ எனும் வெற்றி படத்திற்குப் பிறகு மீண்டும் நடிகர் சூரி- தயாரிப்பாளர் கே. குமார் ஆகியோர் இணைந்திருப்பதால், ‘மாமன்’ திரைப்படத்திற்கு ரசிகர்களிடையேயும், திரையுலக வணிகர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சீயான் விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்- பார்ட் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கும் ‘ வீர தீர சூரன் – பார்ட் 2 ‘ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கல்லூரூம்..’ எனும் முதல் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.‌

முன்னணி நட்சத்திர இயக்குநரான எஸ். யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ வீர தீர சூரன்- பார்ட் 2’ எனும் திரைப்படத்தில் சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு , துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஜி.கே. பிரசன்னா கவனிக்க, கலை இயக்கத்தை சி. எஸ். பாலச்சந்தர் மேற்கொண்டிருக்கிறார். ஆக்சன் திரில்லர் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தற்போது முழு வீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் கிளிம்ப்ஸ் மற்றும் டீசர் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருந்தது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ‘ கல்லூரூம்..’ எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத, பின்னணிப் பாடகி ஸ்வேதா மோகன் மற்றும் பின்னணி பாடகர் ஹரிசரண் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். இசை அசுரனின் மயக்கும் மெலோடியாக உருவாகி இருக்கும் இந்த பாடலுக்கு இசை ரசிகர்களிடத்தில் ஆதரவும், வரவேற்பும் கிடைத்து வருகிறது.

ராணா டகுபதி வெளியிட்ட விராட் கர்ணா நடிக்கும் ‘ நாக பந்தம் ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

நடிகர் விராட் கர்ணா – அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி – NIK ஸ்டூடியோஸ் – அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ‘ நாக பந்தம் ‘ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்.

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் பான் இந்திய திரைப்படமான ‘ நாக பந்தம் ‘ எனும் திரைப்படத்தில் ருத்ரா எனும் கதாபாத்திரத்தில் நடிக்கும் இளம் நாயகன் விராட் கர்ணாவின் பிரீ – லுக் அண்மையில் வெளியிடப்பட்டது. இது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாதற்கு முன்னரே ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. திரைப்பட தயாரிப்பாளர் அபிஷேக் நாமா இயக்கியுள்ள இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ராணா டகுபதி வெளியிட்டார்.

இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விராட் கர்ணா அற்புதமான மற்றும் முரட்டுத்தனமான தோற்றத்தில் தோன்றுகிறார். சுருள் முடி- தாடி- நேர்த்தியான உடல் அமைப்பு- சட்டை இல்லாத தோற்றம் – ரத்தக் களரி என பல அம்சங்கள் இடம் பிடித்திருக்கும் இந்த போஸ்டரில் அவருடைய சிக்ஸ் பேக் உடல் அமைப்பும் இடம் பிடித்திருக்கிறது. அவரின் இந்த துணிச்சலான அவதாரத்தில், கடலில் அச்சுறுத்தும் முதலையுடன் அச்சமின்றி போராடுவதையும் சித்தரிக்கிறது. அதே தருணத்தில் கைகள் மற்றும் கயிறு மூலம் அந்த உயிரினத்தின் வாயைத் திறந்து வைத்திருக்கும் ருத்ராவின் துணிச்சல் மற்றும் வலிமையும் தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடத்தில் ஆர்வத்தை உண்டாக்கி இருக்கிறது.

நாக பந்தம் சாகசம் கலந்த காவிய படமாக உருவாகி வருகிறது. இதன் டேக் லைன் ‘தி சீக்ரெட் ட்ரெஷர் ‘. இது பார்வையாளர்களுக்கு சிலிர்ப்பூட்டும் பயணத்தை குறிப்பதாக இருக்கிறது. இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை அபிஷேக் நாமா எழுதி இருக்கிறார். இதனை NIK ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கிஷோர் அன்னபு ரெட்டி , அபிஷேக் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். மேலும் இந்தத் திரைப்படத்தை லட்சுமி இரா மற்றும் தேவன்ஷ் நாமா ஆகியோர் இணைந்து பெருமையுடன் வழங்குகிறார்கள்.

நாக பந்தம் என்பது ஆன்மீக மாயவாதத்தையும், சிலிர்ப்பூட்டும் சாகசத்தையும் இணைக்கும் ஒரு இந்திய காவியமாகும். இதில் நபா நடேஷ் , ஐஸ்வர்யா மேனன், ஜெகபதி பாபு , ஜெயப்பிரகாஷ், முரளி சர்மா, பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இந்தியாவின் பண்டைய விஷ்ணு கோயில்களின் மறைக்கப்பட்ட ரகசியத்தை இந்த திரைப்படம் ஆய்வு செய்கிறது. குறிப்பாக நாக பந்தத்தின் புனித நடைமுறையை மையமாகக் கொண்டிருக்கிறது. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி மற்றும் பூரி ஜெகன்னாத் போன்ற ஆலயங்களில் சமீபத்திய புதையல் கண்டுபிடிப்புகளால் ஈர்க்கப்பட்டு, இந்த கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த தெய்வீக இடங்களை சுற்றியுள்ள வசீகரிக்கும் வகையிலான புராணங்களின் அடிப்படையிலும் .. அவற்றை பாதுகாக்க வடிவமைக்கப்பட்டிருக்கும் புதிரான சடங்குகளையும் பிரதிபலிக்கிறது. இந்த திரைப்படம் ஒரு பழமையான மர்மங்களை புதிய நவீன கதையம்சத்துடன் உயிர்ப்பிக்கிறது.

எஸ். சௌந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு அபே இசையமைக்கிறார். படத்தின் வசனங்களை கல்யாண் சக்கரவர்த்தி எழுத, ஆர். சி. பனவ் படத்தொகுப்பு பணிகளை கையாள்கிறார். அசோக் குமார் கலை இயக்குநராக பங்களிப்பு செய்கிறார்.

நாக பந்தம் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி, இந்த ஆண்டில் வெளியாகும்.

நடிகர்கள் :
விராட் கர்ணா , நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன், ஜெகபதி பாபு , ஜெயப்பிரகாஷ், முரளி சர்மா , பி. எஸ். அவினாஷ் மற்றும் பலர்.

தொழில்நுட்பக் குழு :

தயாரிப்பு நிறுவனம் : NIK ஸ்டுடியோஸ் & அபிஷேக் பிக்சர்ஸ்
வழங்குநர் : லட்சுமி இரா & தேவன்ஷ் நாமா
கதை, திரைக்கதை & இயக்கம் : அபிஷேக் நாமா
தயாரிப்பாளர் : கிஷோர் அன்னபு ரெட்டி
ஒளிப்பதிவு : எஸ். சௌந்தர்ராஜன்
இசை : அபே
வசனம் : கல்யாண் சக்கரவர்த்தி
படத்தொகுப்பு : ஆர் சி பனவ்
சண்டை பயிற்சி : வெங்கட் & விளாட் ரிம்பர்க்
ஆடை வடிவமைப்பாளர் : அஸ்வின் ராஜேஷ்
தலைமை நிர்வாக அதிகாரி : வாசு பொதினி
தயாரிப்பு வடிவமைப்பாளர் : அசோக் குமார்
நிர்வாக தயாரிப்பாளர் : அபிநேத்ரி ஜக்கல்
ஸ்கிரிப்ட் டெவலப்மென்ட் : ஷ்ரா 1- ராஜீவ் என். கிருஷ்ணா
VFX – தண்டர் ஸ்டுடியோஸ்
VFX சூப்பர்வைசர் : தேவ் பாபு காந்தி ( புஜ்ஜி )
விளம்பர வடிவமைப்பு : கானி ஸ்டுடியோ
மக்கள் தொடர்பு : யுவராஜ்

”வணங்கான்”திரைவிமர்சனம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வாய் பேச முடியாமலும் காது கேட்க முடியாமலும் அருண் விஜய், சின்ன சின்ன வேலைகளை செய்து கொண்டு தனது தங்கை ரிதாவுடன் வாழ்ந்து வருகிறார். தனது கண்ணெதிரே எந்த ஒரு தவறு நடந்தாலும், அது யாராக இருந்தாலும், தட்டிக் கேட்கும் முரட்டுத்தனமான சுபாவம் கொண்டவர்.அருண் விஜயின் கோபத்தை குறைப்பதற்காக ஒரு நிரந்தரமான வேலை ஒன்று ஏற்பாடு செய்ய முடிவு செய்யும் தங்கை ஆதரவற்ற மாற்றுத்திறனாளி பெண்கள் காப்பகத்தில் வாட்ச்மேன் வேலை வாங்கிக் கொடுக்கிறார்.

தன்னைப் போன்று குறைபாடு இருந்தாலும் மனதளவில் மகிழ்ச்சியாக இருப்பவர்களுக்கு மத்தியில் காப்பகத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும் சொந்த அண்ணன் போல் தனது பணியை செய்து வரும் கதாநாயகன் அருண் விஜய்.காப்பகத்தில் தன்னைப்போல் உள்ள தனது தங்கைகளுக்கு நடந்த ஒரு அநீதியைக் பார்த்து கடுமையாக கோபம் கொள்வதோடு, அநீதி செய்தவர்களை மிகப்பெரிய அளவில் தண்டனை தருகிறார்.

அருண் விஜய்யின் வாழ்க்கை என்னவானது? என்பதுதான் இந்த ‘வணங்கான்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதாநாயகனாக நடித்திருக்கும் அருண் விஜய், மாற்றுத்திறனாளியாக நடித்து ரசிகர்களை அசர வைத்து இருக்கிறார்.ஆக்ஷன் காட்சிகளில் கவனிக்க வைத்தது மட்டுமல்லாமல் தங்கையின் மீது வைத்திருக்கும் பாசத்தில் நெகிழ வைத்து இருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் ரோஷினி பிரகாஷின் அறிமுகம் மிக அமர்க்களமாக இருந்தாலும், அடுத்தடுத்த காட்சிகளில் கதாநாயகன் அருண் விஜய்யை ஒருதலையாக காதலிப்பது, அவரது கதாநாயகனின் முரட்டுத்தனத்தை ரசிப்பது, அவருக்காக கண்ணீர் சிந்துவது, என திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது இருக்கிறார்.

அருண் விஜயின் தங்கையாக கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரிதா, அண்ணனின் பாசத்திற்காக ஏங்கும் காட்சிகளில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை கலங்க வைத்துவிடுகிறார்.

சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் இயக்குநர்கள் மிஷ்கின் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோரது திரை இருப்பு திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.

டாக்டர்.யோஹன் சாக்கோ, சண்முகராஜா, அருள்தாஸ், தருண் மாஸ்டர், தயா செந்தில், பாண்டி ரவி, சேரன் ராஜ், கவிதா கோபி, பாலா சிவாஜி, முனிஷ்குமரன், பிருந்தா சாரதி, தீபிகா என மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் நடிப்பு மற்றும் வசன உச்சரிப்பு மூலம் கன்னியாகுமரி மாவட்ட மக்களாக வாழ்ந்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு மூலம் சாதாரண மக்களின் வாழ்வியலையும், அவர்களது உணர்வுகளையும் மிகவும் எதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் முலம் கதைக்களத்தை பலம் சேர்த்திருக்கிறார்.

இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்-ன் பின்னணி இசை திரைக்கதைக்கு ஏற்ப அளவாக பயணித்திருக்கிறது.

சாதாரண ஏழை எளிய மக்களையும், அவர்களது வாழ்க்கை மற்றும் வலிகளை திரைப்படத்தில் கொண்டு வருவதோடு, அவர்களுக்கு எதிராக நடக்கும் அநீதியை எதிர்த்து நிற்கும் கதாநாயகனையும் எளிய மக்களின் ஒருவனாக சித்தரித்து அவர்களை முன்னிலைப்படுத்துவதை மிக அருமையாக இயக்கி உள்ளார் இயக்குநர் பாலா,

”களம் சேஞ்சர்” திரைவிமர்சனம்

ஆந்திர மாநிலத்தில் முதல்வராக இருக்கும் ஸ்ரீகாந்துக்கு இரண்டு மகன்கள். பெரிய மகன் ஜெயராம் சின்ன மகன் எஸ் ஜே சூர்யா தனது தந்தைக்குப் பிறகு ஆந்திர மாநிலத்தில் முதல்வர் பதவி யாருக்கு? என்பதில் இருவருக்கும் இடையே மிகப்பெரிய போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், ஆந்திரா மாநிலத்திற்கு புதிதாக பதவி ஏற்கும் மாவட்ட கலெக்டர் ராம்சரண், தனது அதிரடி நடவடிக்கைகள் மூலம் மோசடியில் ஈடுபடுபவர்களை விழி பிதுங்க வைக்கிறார்.அவருடைய நடவடிக்கைகளால் முதல்வரின் இளைய மகன் அமைச்சர் எஸ்.ஜே.சூர்யாவுக்கும், அவருக்கும் இடையே மிகப்பெரிய அளவில் மோதல் ஏற்படுகிறது.

இதற்கிடையே, உடல்நலக் குறைவால் ஆந்திரா மாநிலத்தில் முதல்வர் ஸ்ரீகாந்த உயிரிழக்க, அடுத்த முதல்வர் அவருடைய இளைய மகன் எஸ்.ஜே.சூர்யா பதவி ஏற்க தயாராவதோடு, முதல்வர் பதவி ஏற்று முதல் வேலையாக தன்னை அவமானப்படுத்திய கலெக்டர் கதாநாயகன் ராம்சரணை பழிவாங்க வேண்டும் என நினைக்கிறார்.

இந்த நிலையில், முதல்வர் ஸ்ரீகாந்த் இறப்பதற்கு முன்பு தன்னுடைய அரசியல் வாரிசாக ராம்சரணை அறிவிப்பதோடு, அவர் தான் தனக்கு இறுதிச் சடங்கு செய்ய வேண்டும் என்ற தனது கடைசி ஆசையோடு, அவர் தான் ஆந்திர மாநிலத்திற்கு அடுத்த முதல்வர், என்றும் அறிவித்த வீடியோ ஒன்று வெளியாகிறது.

இதனால், எஸ்.ஜே.சூர்யா முதல்வர் ஆவதில் சிக்கல் ஏற்பட, அதே சமயம் கதாநாயகன் ராம்சரணையும் முதல்வராக விடாமல் பலவிதமான முயற்சிகளில் எஸ்.ஜே.சூர்யா ஈடுபடுகிறார்.

இறுதியில், கதாநாயகன் ராம்சரண் ஆந்திரா மாநிலத்திற்கு முதல்வர் ஆனாரா? ஆகவில்லையா? என்பதுதான் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கேம் சேஞ்சர் திரைப்படத்தில் நாயகனாக ராம்சரண் நடித்திருக்கிறார்

தந்தை கதாபாத்திரத்தில் மக்கள் பிரச்சனைக்காக போராடுபவர்களாகவும், மகன் கதாபாத்திரத்தில் அரசு அதிகாரிகளின் பலம் என்ன? என்பதை வெளிக்காட்டும்
இரண்டு கதாபாத்திரங்களில் அமர்க்களமாக நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் கியாரா அத்வானி, வழக்கமான இயக்குனர் ஷங்கர் இயக்கம் திரைப்படங்களில் வரும் கதாநாயகிகளுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் கூட இல்லாமல் சில காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலுல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.

அப்பா ராம்சரணுக்கு ஜோடியாக நடித்திருக்கும் அஞ்சலியின் கதாபாத்திரத்தில் வெளிப்படுத்திய நடிப்பு திரைக்கதைக்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறது.

வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா, தனது வழக்கமான பாணியில் நடித்திருந்தாலும், அவரது நடிப்பு காட்சிகளை மிக அருமையாக பயணித்திருக்கிறார்.

முதல்வரின் மூத்த மகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெயராம், சிரிக்க வைக்கிறார்.

பிரமானந்தம் ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, சுனில், நவீன் சந்திரா அச்யுத் குமார், வெண்ணிலா கிஷோர், என மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களின் அனைவரும் திரைக்கதை ஓட்டத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் திரு ஒளிப்பதிவு மூலம் காட்சிகளை கலர் புல்லாகவும்ம், பிரமாண்டமாகவும் காட்சிப்படுத்தி இருக்கிறார்.

இசையமைப்பாளர் தமன்.எஸ் இசையில் பாடல்கள் புதிதாக இல்லை என்றாலும் பின்னணிசையிலும் புதிதாக ஒன்றும் இல்லை என்பது தான் உண்மை.

சமூக பிரச்சனைகளை கமர்ஷியலாக சொல்வதோடு, கலகலப்பாகவும் தனது வழக்கமான பாணியில் இந்த திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.

“மெட்ராஸ்காரன்” திரைவிமர்சனம்

சென்னையைச் சேர்ந்த கதாநாயகன் ஷேன் நிகம், தமது திருமணத்தை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமத்தில் நடத்த வேண்டும் என விரும்புகிறார். திருமணத்திற்கான ஏற்பாடுகளை பெரிய அளவில் நடந்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், எதிர்பாராமல் நடக்கும் விபத்து மூலம் ஷேன் நிகமின் வாழ்க்கை தடம் புரள்கிறது அதனால் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார். என்பதுதான் இந்த ‘மெட்ராஸ்காரன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

மெட்ராஸ்காரன் திரைப்படத்தில் நாயகனாக ஷேன் நிகம் அறிமுகமாகியிருக்கும் முதல் திரைப்படத்திலேயே ஆக்‌ஷன் காட்சிகளில் அசால்டாக நடித்திருக்கிறார்.

தாயிடம் பாசம் காட்டி பேசுவதும், அத்தைகளிடம் ஐஸ் வைத்து பேசுவதும், தனது காதலியிடம் கெஞ்சி கொஞ்சுவது என்று துறுதுறு என்று நடிப்பின் மூலம், அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.

நிஹாரிகாவின் ஒரு வார்த்தை தான் அனைத்து பிரச்சனைக்கும் காரணம் என்றாலும் திரைப்படத்தில் காட்சிகள் மிக குறைவே உள்ளது.

கலையரசன், தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் மிக அருமையாக நடித்திருக்கிறார்.

ஐஸ்வர்யா தத்தா, சில காட்சிகளில் வந்தாலும் திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.

கதாநாயகனின் தாய் மாமன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கருணாஸ், தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாண்டியராஜன், தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கீதா கைலாசம், அத்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தீபா, நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லல்லு என திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் தங்களது பங்களிப்பை மிகப்பெரிய அளவில் வழங்கியிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ்.குமாரின் ஒளிப்பதிவு மூலம் காட்சிகளின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில், ஆக்‌ஷன் காட்சிகளை மிக மிரட்டலாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் பின்னணி இசை கொஞ்சம் சத்தமாக இருந்தாலும், வேகமான திரைக்கதைக்கும், ஆக்‌ஷன் காட்சிகளுக்கும் பொருத்தமாக இருக்கிறது.

சிறு விசயத்தை வைத்துக் கொண்டு திரில்லர் ஆக்‌ஷன் ஜானரை ராவான காட்சிகள் மூலம் எழுதி இயக்கியிருக்கும் வாலி மோகன் தாஸ், மிரட்டலாக கொடுத்திருக்கிறார்

அதர்வா முரளி நடிக்கும் ‘டி என் ஏ’

தனுஷ் வெளியிட்ட அதர்வா முரளியின் ‘டி என் ஏ’ பட டீசர்

தமிழின் முன்னணி நட்சத்திர நடிகரான அதர்வா முரளி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ டி என் ஏ ‘ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் பன்முக ஆளுமையான தனுஷ் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

‘ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’, ‘ ஃபர்ஹானா ‘ போன்ற வெற்றி படைப்புகளை இயக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ டி என் ஏ ‘ எனும் திரைப்படத்தில் அதர்வா முரளி, நிமிஷா சஜயன், பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக் , விஜி சந்திரசேகர் , சேத்தன், ரித்விகா , கே பி , சுப்பிரமணியம் சிவா, கருணாகரன், ‘பசங்க ‘ சிவக்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பார்த்திபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் ஹரிஹரன் – சத்ய பிரகாஷ் – அனல் ஆகாஷ் – பிரவீண் சைவி – சஹி சிவா- ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். படத்தொகுப்பு பணிகளை வி.ஜே.சபு ஜோசப் கவனிக்க, கலை இயக்கத்தை சிவசங்கர் மேற்கொண்டிருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்கர் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் எஸ். அம்பேத்கர் வழங்குகிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் குறிப்பிடுகையில், ” திவ்யா – ஆனந்த் எனும் இரண்டு முதன்மையான கதாபாத்திரங்களின் உளவியலும், வாழ்வியலும் தான் இப்படத்தின் பிரதான அம்சம். இவர்கள் இருவரும் தினமும் பல காரணங்களால் இந்த சமூகத்தினரால் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.‌ காயப்படுத்தப்பட்ட இந்த இரண்டு ஆன்மாக்களும் உணர்வுபூர்வமான தருணத்தில் சந்திக்கிறார்கள். அதன் பிறகு என்ன நடக்கிறது? என்பதுதான் இப்படத்தின் கதை. ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகி இருக்கும் இந்தத் திரைப்படத்தில் ஐந்து இசையமைப்பாளர்களுடன் முதன்முறையாக பணியாற்றிருக்கிறேன். அனைத்து பாடல்களும், பின்னணி இசையும் சிறப்பாகவும், தனித்துவமாகவும் அமைந்திருக்கிறது. அதனால் படத்தின் இசை அனைத்து தரப்பு ரசிகர்களையும் நிச்சயம் கவரும். ” என்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த டீசரில் இடம்பெற்றிருக்கும் காட்சிகளும், இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இதனால் இதற்கு பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பும், ஆதரவும் கிடைத்து வருகிறது.

‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு

ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் ‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு

நடிகர் தனுஷ் வெளியிட்ட ஜீ. வி. பிரகாஷ் குமாரின் ‘கிங்ஸ்டன்’ படத்தின் முன்னோட்டம்

2025 மார்ச் 7 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது ‘கிங்ஸ்டன் ‘

இசையமைப்பாளரும் , நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘கிங்ஸ்டன் ‘ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.‌ இதனை தமிழில் முன்னணி நட்சத்திர நடிகரான தனுஷ் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கிங்ஸ்டன்’ எனும் திரைப்படத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமார், திவ்ய பாரதி, அழகம் பெருமாள், ‘மேற்கு தொடர்ச்சி மலை’ ஆண்டனி, சேத்தன், குமரவேல், சபுமோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் உரையாடல்களை தீவிக் எழுத, ஷான் லொகேஷன் படத் தொகுப்பாளராக பணியாற்றியிருக்கிறார். கலை இயக்கத்தை எஸ். எஸ். மூர்த்தி கவனிக்க, அதிரடி சண்டை காட்சிகளை திலீப் சுப்பராயன் அமைத்திருக்கிறார். கடல் பின்னணியில் ஃபேண்டஸி அட்வென்ச்சர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. தினேஷ் குணா கிரியேட்டிவ் புரொடியுசராக பொறுப்பேற்றிருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சில தினங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தது. தற்போது இப்படத்தின் டீசர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த டீசரில் பரந்து விரிந்த கடலின் பிரமிப்பையும், கடலில் மிதக்கும் கப்பல் ஒன்றின் பிரம்மாண்டமும், அதில் ஜீ.வி. பிரகாஷ் குமாரின் தோற்றமும், காட்சிகளை மேம்படுத்தும் அதிரடியான பின்னணி இசையும், ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. மேலும் இந்த டீசரில் VFX காட்சிகள் சர்வதேச தரத்தில் அமைந்து.. பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் படத்தின் தயாரிப்பில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் பார்வையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்க வேண்டும் என்ற தயாரிப்பு நிறுவனங்களின் நோக்கம் வெற்றி பெற்றிருக்கிறது. மேலும் ‘கிங்ஸ்டன்’ பார்வையாளர்களுக்கு பரவசமிக்க உணர்வை வழங்கும் என்பதையும் உறுதியளிக்கிறது.

‘கிங்ஸ்டன்’ படத்தின் இந்தி பதிப்பு டீசரை முன்னணி பாலிவுட் நட்சத்திர நடிகையுமான கங்கணா ரணாவத் வெளியிட்டார். தெலுங்கு பதிப்பு டீசரை முன்னணி நட்சத்திர நடிகரான நாகார்ஜுனா வெளியிட்டார்.

‘கிங்ஸ்டன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்- டீசர் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தின் டீசரில் இந்தத் திரைப்படம் எதிர்வரும் மார்ச் மாதம் 7 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகிறது.