deccanwebtv

அக்யூஸ்ட் – அரசியல், காவல், குற்றம் கலந்த பதட்டப் பயணம்!

ஜெய்ஷன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீ தயாகரன் சினி புரொடக்ஷன், எம்ஐஒய் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள அக்யூஸ்ட், ஒரு கைதியின் பயணத்தில் மறைந்து கிடக்கும் அரசியல் மற்றும் குற்றச் சூழலை நெருடலுடன் வெளிப்படுத்துகிறது. இயக்குநர் பிரபு ஸ்ரீனிவாஸ், கதை, திரைக்கதை, இயக்கம் மூன்றிலும் தன் தடத்தை பதித்துள்ளார்.

📝 கதை சுருக்கம்
புழல் சிறையில் உள்ள ரவுடி கைதி கணக்கு (உதயா) சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். பிரபல அரசியல் கட்சி மாவட்ட செயலாளர் குணசேகரன் கொலை வழக்கு என்பதால் பாதுகாப்பு கடுமையாக அமையும் நிலையில், கான்ஸ்டபிள் வேந்தன் (அஜ்மல்) தலைமையில் மூன்று போலீஸ்காரர்கள் அவரை அழைத்துச் செல்கின்றனர்.

பாதையில் ரவுடி கும்பலின் தாக்குதலில் சிக்கி, வேந்தன் கணகுவை மீட்டு வேலூரின் ஓர் ஊரில் பாதுகாப்பாக வைத்திருக்கிறார். ஆனால், போலீஸின் உத்தரவுப்படி என்கவுண்டர் திட்டம் நடப்பதை அறிந்ததும், கணகுவை காப்பாற்ற வேந்தன் வியூகம் தீட்டுகிறார்.

ரவுடிகள், போலீஸ் என்கவுண்டர், அரசியல் விளையாட்டு என பல தடைகளை தாண்டி, வேந்தன் தனது கடமையை நிறைவேற்றி நீதிமன்றம் வரை கணகுவை அழைத்துச் செல்ல முடியுமா? குணசேகரன் கொலையின் பின்னணியில் யார்? உண்மையை வெளிச்சமிடுவாரா? என்பதே க்ளைமாக்ஸ்.

🎭 நடிப்பு

  • உதயா ரவுடி கணக்குவாக, ஆக்ஷனிலும் நகைச்சுவையிலும் சிறந்து விளங்குகிறார்.
  • அஜ்மல் நேர்மையான போலீஸ்காரராக, சாலையிலான சவால்களில் அமைதியான அழுத்தமான நடிப்பைக் கொடுத்துள்ளார்.
  • யோகிபாபு தனது நகைச்சுவை பாணியில் சிரிப்பூட்டுகிறார்.
  • ஜான்விகா கலகேரி, சாந்திகா, பவன் உள்ளிட்டோரின் நடிப்பும் படத்திற்கு வலு சேர்க்கின்றது.

🎥 தொழில்நுட்பம்

  • ஸ்டண்ட் சில்வா பஸ் சண்டை உள்ளிட்ட ஆக்ஷன் காட்சிகளை உயர்தரமாக வடிவமைத்துள்ளார்.
  • மருதநாயகம் ஒளிப்பதிவில் சாலைப் பயண காட்சிகளை நெருடலுடன் காட்சிப்படுத்தியுள்ளார்.
  • நரேன் பாலகுமார் இசையில் பாடல்கள், பின்னணி இசை சராசரி அளவுக்கு உதவுகின்றன.
  • கே.எல். பிரவீன் எடிட்டிங் படத்தின் வேகத்தை கட்டுப்படுத்தி, கதையை உறுத்தும் படி வடிவமைத்துள்ளார்.


அரசியல், குற்றம், காவல் நடவடிக்கைகள் கலந்த பதட்டமான சாலைப் பயணத்தை, திருப்பங்களும் த்ரில்லும் சேர்த்து இயக்குனர் பிரபு ஸ்ரீனிவாஸ் , அக்யூஸ்ட் நிரபராதி கைதியின் வாழ்க்கையை அரசியல் பின்னணியோடு சுவாரஸ்யமாக சொல்லும் நேர்மையான முயற்சி.


ReGen 2025 Conference on Regenerative Medicine Begins with Launch of India’s First Guidelines for Platelet-Rich Plasma Therapy

Chennai, 02 August 2025: The second edition of ReGen 2025, a two-day international conference on regenerative medicine, orthobiologics, pain management, and sports injury rehabilitation, commenced today in Chennai, drawing over 500 healthcare professionals from across India and abroad. The event marked a significant milestone in India’s medical landscape with the launch of the country’s first-ever Platelet-Rich Plasma (PRP) Guidelines, a standardised, evidence-based framework for PRP therapy, a transformative blood-based treatment for orthopedic, sports-related, and degenerative conditions.

Regenerative Medicine is a field of medicine that focuses on repairing, regenerating, or replacing damaged cells, tissues, or organs using the body’s natural healing processes. PRP therapy uses a concentrated dose of a patient’s own platelets to accelerate healing of injured tissues.

The conference featured more than 60 speakers and panellists, including global stalwarts in regenerative medicine, and hosted over 25 high-impact plenary and interactive sessions on various aspects of regenerative medicine, which focuses on harnessing the body’s natural healing abilities to repair or replace damaged cells, tissues, and organs with growing promise across orthopedic, neurological, and musculoskeletal applications.

As part of the ReGen 2025 conference, a one-day hands-on workshop was conducted yesterday at the Tamil Nadu Government Multi Super Speciality Hospital in the city, offering participants direct exposure to imaging-guided regenerative treatment procedures, case-based discussions, and live demonstrations of best practices in regenerative therapy.

In her comments at the inaugural session of the conference, Dr. Sharmila Tulpule, Consultant Orthopedic Surgeon & Regenerative Medicine Specialist and Founder Director – Orthobiologix Clinic, and the Chairperson of ReGen 2025 said, “We are proud to host ReGen 2025, a landmark gathering that brings together some of the brightest minds in regenerative medicine from India and across the world. As regenerative medicine rapidly evolves into one of the most promising frontiers in healthcare, conferences like this play a vital role in accelerating research, clinical adoption, and policy alignment. ReGen 2025 proved itself as a dynamic platform for knowledge exchange, hands-on learning, and global collaboration. From keynote lectures on gene editing and tissue engineering to live workshops, research sessions, and an innovation showcase, ReGen 2025 is designed to shape the future of biologic therapies in India. The unveiling of India’s first PRP guidelines at the conference is a major milestone.”

In his comments, Dr. G. K. Kumar, Professor and Head, Department of Anesthesia & Pain Medicine, Tamil Nadu Government Multi Super Speciality Hospital, Chennai, said, “The launch of India’s first-ever PRP guidelines marks a turning point for regenerative medicine in the country. Though PRP therapy has become a cornerstone of biologic treatment worldwide, the standardised protocols were absent in India. It led to inconsistent practices and outcomes. However, these newly released guidelines fill that critical gap by providing a comprehensive, evidence-based framework. With a strong focus on patient-centered care, the guidelines also emphasise informed consent and long-term follow-up. Rigorously developed by 17 leading experts and validated through, this landmark document sets a new benchmark for clinical excellence in India’s regenerative practices with the highest global standards.”

Talking about the conference, Mr. Niteen Tulpule, Co-Founder & Director, Orthobiologix Biotech Pvt. Ltd,, said, “The topics covered included cutting-edge regenerative procedures and technologies, including autologous blood products, which are therapies derived from the patient’s own blood to stimulate healing; allogenic cell therapy, which refers to the use of donor cells to repair or regenerate tissue; growth factor therapies that are applications of bioactive proteins to promote tissue regeneration, and bone marrow aspirate concentrate, a potent source of stem cells used in musculoskeletal and cartilage repair. These technologies are rapidly reshaping clinical protocols by offering minimally invasive, personalised solutions to chronic pain, sports injuries, and degenerative diseases, reducing recovery time and improving long-term outcomes.”

In his address, Dr A Navaladishankar, Senior Consultant Orthopaedic Surgeon, Apollo Hospital Chennai, said, “The release of these PRP guidelines at ReGen 2025 is not just a scientific achievement. It’s a rallying point for India’s entire regenerative medicine ecosystem. With our vast clinical expertise and growing patient base, India is uniquely positioned to lead in the global regenerative movement. These guidelines lay the foundation for safe, standardised, and evidence-based care. We urge clinicians, researchers, and policymakers to embrace this moment as a turning point in how we approach healing and patient care.”

Max Fresh Showcases Smart, Stylish Kitchenware at Vibrant India Expo 2025

Chennai, 1st August 2025: Max Fresh, a premium brand name in stainless-steel cookware and smart kitchen solutions, showcasing its next-generation cookware line at the Vibrant India 2025 Exhibition, being held at the Chennai Trade Centre till August 3rd, 2025.

Recognised as India’s largest and most comprehensive exhibition, Vibrant India 2025 is featuring top houseware, kitchenware, home appliances and gift décor brands. At the expo, Max Fresh is presenting a curated selection of products that have long-lasting value and unparalleled cooking convenience for Indian households, including home cooks and professionals.

A flagship brand of Shree Vallabh Metals, Max Fresh is known for redefining the culinary experience in modern Indian homes through its innovative product line of stainless-steel cookware, designed for today’s fast-paced lifestyle and smart kitchens. The company is exhibiting a versatile line-up at the expo, including triple cookware and steamers, as well as hot pots, fry pans, and lunch boxes, all crafted for everyday utility, while maintaining aesthetic excellence and safety protocols.

Speaking on the event, a top executive from Max Fresh Ltd stated, “Being a consumer-focused company, Max Fresh always looks for opportunities to connect with its invaluable customers and stakeholders through interactive platforms like Vibrant India 2025 so that they can explore its new line of products. Our product range not only exhibits functionality and elegance but also makes cooking fun. This edition of the Vibrant India Expo is a perfect platform of opportunities for both sellers and consumers.”

The company representatives even shared insights into how Max Fresh was leveraging its robust dealer network and pan-India reach to emerge as a preferred brand for modern households during a press meet which was organised on the opening day of the exhibition for media personnel, industry stakeholders, and retail partners. The press-meet also gave them a chance to grab a firsthand look at Max Fresh’s evolving product portfolio and provide an engaging platform for interaction.

The brand’s continuous passion for enhancing kitchen experiences, drive it to create sustainable kitchen solutions featuring practical elements. Max Fresh is eyeing its growth across urban and emerging markets with this new set of collection, which promises to make every cooking moment special.

For more, visit: www.maxfresh.co.in

1 மில்லியன் பார்வைகளைக் கடந்த “போகி” டிரெய்லர் !!

மாறுபட்ட களத்தில் ரசிகர்களை மகிழ்விக்க வரும் “போகி” ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் !!

Vi CINEMA GLOBAL NETWORKS & LIKE வழங்கும், போகி

இயக்குநர் விஜயசேகரன் இயக்கத்தில், புதுமுகங்களின் நடிப்பில், சமூக அக்கறை மிக்க அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள படம் “போகி”.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வெளியான வேகத்தில் 1 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

நம் இந்திய சமூகத்தையே உலுக்கிய இரண்டு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து, பரபரப்பான க்ரைம் திரில்லர் பாணியில் அழுத்தமான சமூக படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில் நபி நந்தி, ஷரத், “லப்பர் பந்து” ஸ்வாசிகா, பூனம் கவுர், வேல ராமமூர்த்தி, கவிஞர் சினேகன் சங்கிலி முருகன், மொட்ட ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், முருஸ்டார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. PGP. ENTERPRISES சார்பில் P.G.பிச்சைமணி தென்னிந்தியா முழுவதும் வெளியிடுகிறார்.

இயக்கம்: விஜயசேகரன். S
ஒளிப்பதிவு இயக்குனர்: ராஜா C சேகர்
இசையமைப்பாளர்: மரியா மனோகர்
எடிட்டர்: சுரேஷ் அர்ஸ்
பாடல்கள்: கவிஞர் சினேகன்
வசனம் : S.T.சுரேஷ்குமார்
கலை: A.பழனிவேல்
சண்டை பயிற்சி: அன்பறிவ்
மக்கள் தொடர்பு : புவன் செல்வராஜ் & சதீஷ் (AIM)
டிரெய்லர் எடிட்டர்: ஜென் முத்துராஜ்

பிளாக்பஸ்டர் “மாமன்” திரைப்படம், வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி ZEE5 ல் ………

ரசிகர்களே தயாராகுங்கள் ‘மாமன்’ ஆகஸ்ட் 8 ஆம் தேதி, உலக டிஜிட்டல் பிரீமியராக, ZEE5 இல் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமாகவுள்ளது.

~ இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் எழுத்து இயக்கத்தில், சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்த ப்ளாக்பஸ்டர் ‘மாமன்’ திரைப்படம், ஆகஸ்ட் 8, 2025 அன்று ZEE5 இல் பிரத்தியேகமாகத் திரையிடப்படுகிறது. ~

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமான ‘மாமன்’ ஆகஸ்ட் 8, 2025 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியராக வெளியாகவுள்ளதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. உணர்ச்சிப்பூர்வமான கதை மற்றும் அற்புதமான நடிப்பு என பார்வையாளர்களைக் கவர்ந்த இந்தத் திரைப்படம், டிஜிட்டல் ப்ரீமியர் மூலம், உலகம் முழுக்க உள்ள பார்வையாளர்கள் ரசிக்கும் வகையில் தமிழ் ஸ்ட்ரீமிங்கில் கிடைக்கும்.

பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில், நடிகர் சூரி நாயகனாக நடித்துள்ள ‘மாமன்’ திரைப்படம், மாமனுக்கும் அக்கா மகனான மருமகனுக்கும் இடையிலான பாசப்பிணைப்பை மையமாக வைத்து உருவாகியுள்ளது. ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் நடிகர் ராஜ்கிரண் இணைந்து நடித்துள்ள இந்தப் படம், அழகான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக அனைத்து வயதினரையும் ஈர்க்கும் என்பது உறுதி.

ZEE5 இன் தமிழ் மற்றும் மலையாள வணிகத் தலைவரும், தென்னக மார்க்கெட்டிங் மூத்த துணைத் தலைவருமான லாயிட் C சேவியர் கூறியதாவது… ,
“எங்கள் ZEE5 சந்தாதாரர்களுக்கு ‘மாமன்’ திரைப்படத்தைப் பிரத்தியேகமாகக் கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தப் படம் குடும்ப உறவுகளின் பாசம் அன்பு மற்றும் சிக்கலான உணர்வுகளின் கலவையாக, பார்வையாளர்கள் விரும்பும் குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படம். இதன் பிளாக்பஸ்டர் திரையரங்க வெற்றியே அதற்குச் சான்றாகும். ZEE5 தளத்தில் இப்படம் உற்சாகமான வரவேற்பைப் பெறும், நாடு முழுவதும் இப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என்று நாங்கள் நம்புகிறோம்.”

OTT வெளியீடு குறித்து இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டதாவது..,
“மாமன்” என் மனதுக்கு நெருக்கமான படம், இப்படம் குடும்ப உறவுகளின் ஆழத்தையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் அற்புதமான கதை. இப்படத்தை மிகச்சரியான முறையில் உருவாக்கியதில் முழுப்பங்களித்த எங்கள் குழுவை நினைத்துப் பெருமைப்படுகிறேன், மேலும் கதாபாத்திரத்திற்கு இவ்வளவு ஆழத்தைக் கொண்டு வந்த சூரி அண்ணாவின் அற்புதமான நடிப்புக்கு நான் நன்றி கூறிக்கொள்கிறேன். ZEE5 மூலம் இப்படம் பரந்த அளவில், உலகம் முழுக்க உள்ள பார்வையாளர்களைச் சென்றடையும், மேலும் மனித இதயங்களைத் தொடும் மற்றும் குடும்ப பிணைப்புகள் பற்றிய உரையாடல்களைத் தூண்டும் என்று நம்புகிறேன்.”

தனது நுட்பமான நடிப்பிற்காக பெரும் பாராட்டுகளைப் பெற்ற நடிகர் சூரி பகிர்ந்துகொண்டதாவது…,
“உண்மையான வெற்றி என்பது, உறவுகள் மற்றும் உணர்ச்சிகளை நேர்மையாகப் பாராட்டுவதில் உள்ளது, மேலும் ‘மாமன்’ திரைப்படம் அந்த அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்டது. இந்தப் படம் உண்மையில் நடந்த சம்பவங்களின் உணர்ச்சிப்பூர்வமான பயணம், மேலும் இது எத்தனை பேரின் மனங்களைத் தொட்டுள்ளது என்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த உணர்வுகளை ஒரு துடிப்பான படமாகத் திறமையாக உருவாக்கிய இயக்குநர் பிரசாந்திற்கு எனது மனமார்ந்த நன்றி. ‘மாமன்’ ZEE5 இல் ஸ்ட்ரீமாவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன், இதனால் அதிகமான குடும்பங்கள் இந்தக் கதையைப் பார்த்து அனுபவிக்கவும், தங்கள் சொந்த பிணைப்புகளைப் போற்றவும் முடியும்.”

அற்புதமான நடிப்பு, மனதைத் தொடும் தருணங்கள் என “மாமன்” திரைப்படம், குடும்ப உறவுகளின் நெகிழ்ச்சியான, உணர்வுப்பூர்வமான படமாக இருக்கும்.

இந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படத்தை ZEE5 இல் வரும் ஆகஸ்ட் 8 ஆம் பிரத்தியேகமாக அனுபவிக்கத் தயாராகுங்கள்

 எஸ். ஆர். பிரபாகரன் தயாரித்து இயக்கும் ‘றெக்கை முளைத்தேன்’ ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில்

ஸ்டோன் எலிபெண்ட் கிரியேஷன்ஸ் பேனரில் எஸ். ஆர். பிரபாகரன் தயாரித்து இயக்கும் விறுவிறுப்பான கிரைம் திரில்லர் ‘றெக்கை முளைத்தேன்’ ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது

‘சுந்தரபாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’, ‘சத்ரியன்’, ‘கொம்பு வெச்ச சிங்கம்டா’ படங்கள் மற்றும் ‘செங்களம்’ இணையத் தொடருக்கு பிறகு எஸ் ஆர் பிரபாகரன் இயக்கும் முற்றிலும் புதிய ஜானர் ‘றெக்கை முளைத்தேன்’ படத்தில் தன்யா ரவிச்சந்திரன் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார்

‘சுந்தரபாண்டியன்’ திரைப்படத்தில் கிராமத்து நட்பு, ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தில் நகைச்சுவை மற்றும் காதல், ‘சத்ரியன்’ படத்தில் ஆக்ஷன், ‘கொம்பு வெச்ச சிங்கம்டா’ படத்தில் கிராமத்து வீரம் மற்றும்  ‘செங்களம்’ இணையத் தொடரில் அரசியல் ஆழம் எனப் பல்வேறு வகைப் படைப்புகளில் முத்திரை பதித்த இயக்குநர் எஸ். ஆர். பிரபாகரன், ‘றெக்கை முளைத்தேன்’ படத்தின் மூலம் இன்னுமொரு புதிய களத்தில் புகுந்துள்ளார்.

இது வரை அவர் செய்த படங்களிலேயே முற்றிலும் மாறுபட்ட விறுவிறுப்பான கிரைம் திரில்லர் ஜானரை சேர்ந்த ‘றெக்கை முளைத்தேன்’ படத்தை எழுதி, இயக்கி இருப்பதோடு தனது ஸ்டோன் எலிபெண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் எஸ். ஆர். பிரபாகரன் தயாரித்தும் உள்ளார்.

தன்யா ரவிச்சந்திரன், பிரபா, குருதேவ், நித்திஷா, மெர்லின்,
ஜெய்பிரகாஷ், ‘ஆடுகளம்’ நரேன்,
கஜராஜ், மீராகிருஷ்ணன் மற்றும்
ஸ்ரீ ரஞ்சனி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படம் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

‘றெக்கை முளைத்தேன்’ படம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்ட இயக்குநர் எஸ். ஆர். பிரபாகரன், “இத்தகைய படங்களைத் தான் இவர் எடுப்பார் என்ற சுழலில் சிக்காமல் ஒவ்வொரு படத்திலும் புதிதாக முயற்சிக்க வேண்டும் என்ற எனது லட்சியத்தின் வெளிப்பாடு தான் ‘றெக்கை முளைத்தேன்’. கல்லூரியில் சேர்ந்த உடன் புதிய சிறகுகள் கிடைத்தாக உணரும் மாணவர்கள் ஒரு புறம், அதிரவைக்கும் குற்றத்தை விசாரிக்கும் காவல் அதிகாரியாக தன்யா ரவிச்சந்திரன் மறுபுறம் என்று தொடக்கம் முதல் இறுதி வரை பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத வகையில் இப்படம் இருக்கும்,” என்றார்.

‘றெக்கை முளைத்தேன்’ படத்திற்கு தரண்குமார் பின்னணி இசை அமைக்க, கணேஷ் சந்தானம் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை பிஜு வி. டான்போஸ்கோ கையாளுகிறார்.
பாடலுக்கான இசையை தீசன் வழங்கி உள்ளார்.
கலை இயக்கம்: பிரேம்,
ஸ்டில்ஸ்: சி.எச். பாலு, ஆடை வடிவமைப்பாளர்: திவ்யா பிரபு
தயாரிப்பு நிர்வாகி: கார்த்திக் துரை,
தயாரிப்பு மேலாளர்: அமிர்தராஜ் மற்றும் சுரேஷ், விளம்பர வடிவமைப்பு: சிவகுமார்.

ஸ்டோன் எலிபெண்ட் கிரியேஷன்ஸ் பேனரில் எஸ். ஆர். பிரபாகரன் தயாரித்து இயக்கியுள்ள ‘றெக்கை முளைத்தேன்’ திரைப்படம் கிரைம் திரில்லர் வகையில் புதிய தடத்தை பதிக்கும் வகையில் உருவாகியுள்ளது.

ராக் ஸ்டார் ‘ அனிருத் வெளியிட்ட #Hukum சென்னை இசை நிகழ்ச்சியின் அப்டேட்ஸ்

இசை ரசிகர்களுக்கு கூடுதலான வசதிகளுடன் பிரமாண்டமாக அரங்கேறும் அனிருத்தின் #Hukum சென்னை இசை நிகழ்ச்சி

‘ராக் ஸ்டார்’ அனிருத்தின் இசை நிகழ்ச்சி இதற்கு முன் கண்டிராத வகையில்… பிரம்மாண்டமான முறையில் நடைபெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும், முன்பதிவு பற்றிய விவரங்களையும் அனிருத் வெளியிட்டுள்ளார்.

பான் இந்திய இசையமைப்பாளரான அனிருத் – ரசிகர்களின் தொடர் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, சென்னையில் இதற்கு முன் இசை ரசிகர்கள் பார்த்திராத வகையில் புதிய இசை அனுபவத்தை வழங்குவதற்காக தயாராகிறார். இந்த இசை நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதியன்று கிழக்கு கடற்கரை சாலையில் கூவத்தூர் எனும் பகுதியில் அமைந்துள்ள மார்க் சொர்ணபூமி ( MARG SWARNABHOOMI ) எனும் இடத்தில் நடைபெறுகிறது.

பல்லாயிரக்கணக்கில் திரளும் இசை ரசிகர்களின் பாதுகாப்பு.. பார்க்கிங்.. என ஏராளமான வசதிகளுடன் பிரம்மாண்டமான முறையில் இசை நிகழ்ச்சி நடைபெறும் வகையில் விரிவான ஏற்பாடுகளை இசை நிகழ்ச்சியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை அனிருத் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் இந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை District எனும் பிரத்யேக ஆப்( App)பில் வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி மாலை 3 மணி அளவில் தொடங்குகிறது. அதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.‌

இசை ரசிகர்கள் இதற்கு முன் இப்படியொரு பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி அனுபவத்தை அனுபவித்திராத வகையில் பிரத்யேக ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் இசை கலைஞர்கள் செய்து வருகிறார்கள். குறிப்பாக ஏராளமான இசை ரசிகர்களின் வாகனங்களுக்கான பார்க்கிங் வசதி விசாலமாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் இசை ரசிகர்களின் உற்சாகத்தையும், கொண்டாட்டத்தையும் உளவியல் ரீதியாக மேம்படுத்தும். மேலும் இந்த நிகழ்ச்சி – இசை ரசிகர்களுக்கான ஆகச் சிறந்த முன்னுதாரணமாக திகழும் என்றும் ஒருங்கிணைப்பாளர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள்.

‘ராக்ஸ்டார்’ அனிருத் – பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் – பிரம்மாண்டமான மற்றும் கூடுதலான வசதிகள் – ஒப்பற்ற இசை அனுபவம் – ஆகியவை ஒன்றிணைந்திருப்பதால் அனிருத்தின் #Hukum மிகப் பிரம்மாண்டமான வெற்றியை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே பல உலக நாடுகளில் நடைப்பெற்ற ‘ராக்ஸ்டார்’ அனிருத்தின் #Hukum இசை நிகழ்ச்சியின் ஃபைனல் சென்னையில் நடைபெறுவதால் மிகப் பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக ஒருங்கிணைப்பாளர்கள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Dalmia Bharat Foundation Inaugurates its 24th DIKSHa Centre in Chennai in partnership with Athulya Senior Care

Chennai, July 25, 2025: Dalmia Bharat Foundation (DBF), the Corporate Social Responsibility (CSR) arm of leading cement company, Dalmia Bharat Ltd, inaugurated a new Skill Development Centre – DIKSHa (Dalmia Institute of Knowledge and Skill Harnessing)inChennai in partnership with Athulya Assisted Living Private Limited, a leader in senior care services.

As part of the inauguration, a virtual signing of the Memorandum of Understanding (MoU) was held between Mr. Ashok Kumar Gupta, CEO, DBF and Mr. Srinivasan G, Founder & CEO Athulya Senior Care to formalize the partnership and its shared goal of creating career-ready healthcare professionals.  

The centre will begin with training 150 youth annually in the General Duty Assistant (GDA) role through a blend of 30 days of classroom instruction and 60 days of on-the-job training at Athulya’s assisted living facilities. The program is aligned with NSDC standards and includes accommodation, meals, uniforms, and stipends during the internship. Upon successful completion, trainees will receive NSDC certification and formal job offers with starting salaries between ₹12,000 and ₹18,000 per month. The inauguration program was attended by the management of Athulya Assisted Living Private Limited, Dr. Venkatesan, Principal, Dr. Kiran Kumar, Programme Director and Mr. Paneer Chelvam, VP, HR and officials of Dalmia Cement (Bharat) Limited.

Reinforcing its commitment to skill-based education and sustainable livelihoods, Mr. Ashok Gupta, CEO Dalmia Bharat Foundation said “This initiative is a testament to our belief that meaningful partnerships can drive long-term social change. With Chennai’s healthcare sector on a steady growth trajectory, this DIKSHa centre will be a step towards bridging the skill gap while creating dignified employment opportunities for the youth”

Currently, 23 DIKSHa centres operate across India, offering training in sectors such as healthcare, beauty therapy, electrical work, data entry, and solar installation. To date, over 25,000 youth have been trained under the program, with approximately 75% securing employment or becoming self-employed. Notably, over half the trainees are women, reflecting DIKSHa’s emphasis on inclusive development. The DIKSHa centre in Chennai marks not just the expansion of DBF’s skilling footprint, but a shared commitment to building a resilient, job-ready healthcare workforce rooted in community and care.

About Dalmia Bharat Foundation:

Dalmia Bharat Foundation focuses on building Sustainable Livelihoods and ensure Rural Development in its program areas. These programs combine in-depth, long-term plans and strategies along with medium- and short-term initiatives and campaigns. Owing to the great differences across locations, DBF has adopted a flexible, multi-intervention approach that allows programs and people to grow together and sustain each other. The two focus areas have been derived from the felt needs of the community and issues material to the business. Visit us at http://www.dalmiabharatfoundation.org.

விஜய் ஆண்டனி நடிப்பில், அருண் பிரபு இயக்கத்தில் “சக்தித் திருமகன்”

விஜய் ஆண்டனி நடிப்பில், அருண் பிரபு இயக்கத்தில், ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவில், பாத்திமா விஜய் ஆண்டனி கம்பெனி, விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பாக மீரா விஜய் ஆண்டனி வழங்கும் படம் “சக்தித் திருமகன்”. இப்படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் டீசர் விஜய் ஆண்டனியின் பிறந்த நாளான இன்று 24.07.2025 பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

இவ்விழாவில் விஜய் ஆண்டனி, அருண் பிரபு, தனஞ்செயன், கார்த்திக் நேத்தா, திருப்தி, அரவிந்த் ராஜ் மற்றும் படக்குழுவில் பலரும் கலந்துக் கொண்டு இவ்விழாவிற்கு சிறப்பு சேர்த்தனர்.

நிகழ்ச்சியில் விஜய் ஆண்டனி பேசுகையில், “நான் எப்போதுமே வேலை வேலை என்று வேலையில் கவனம் செலுத்துவதனால் எனக்கு பத்திரிகை நண்பர்களை சந்திப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அதனால் தான் நான் சமீபத்தில் கொடுக்கும் அனைத்து நேர்காணல்களிலும் மிகவும் காமெடியாகவும், ஜாலியாகவும் பதிலளித்துக் கொண்டிருக்கிறேன்.

தமிழ் சினிமாவில் நான் டாப் 5 படங்களில் அருவி ஒரு படம். அதே போல் இந்திய அளவில் டாப் 3 இயக்குனர்களில் அருண் பிரபு ஒருவர். சர்வதேச அளவில் படம் எடுக்கக் கூடிய வல்லமை அவருக்கு இருக்கிறது. எப்போது அருண் வந்தாலும் விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் அவருக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும். அவருக்காக நான் என்ன செய்ய வேண்டும் என்றாலும் அதற்கு தயாராக இருக்கிறேன்.

ஷெல்லியின் சப்போர்ட் இல்லாமல் அருண் பிரபு அவர்களால் அருவியை செய்திருக்க முடியாது. சில்லி அருணுக்கு மனைவி போன்றவர். இவர்கள் இருவரும் இணைந்து பெரிய அளவில் படங்களை உருவாக்க வேண்டும் என்று வேண்டுகிறேன். அருண் பிரபு அடுத்து இயக்கும் படம் பெரிய படமாக தான் இருக்க வேண்டும். கார்த்திக் நேத்தா அவர்களுடன் இணைந்து பணியாற்றியது எப்போதுமே மகிழ்ச்சியான தருணமாக தான் இருந்திருக்கிறது. நான் சில காலமாக இசையமைப்பதில் கவனம் செலுத்தவில்லை. சக்தித் திருமகன் படத்தின் வெளியீட்டிற்கு பின்பு நான் மீண்டும் இசையில் கவனம் செலுத்தவுள்ளேன் அப்போது மீண்டும் கார்த்திக் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவேன்.

அருண் பிரபு எப்போதுமே கதாநாயகியை தேர்வு செய்வதில் தனித்தன்மையாக இருப்பார். அவர் படங்களில் இருக்கும் நாயகிகள் பக்கத்து வீட்டு பெண்கள் போல தான் இருப்பார்கள். அதுபோலத்தான் இந்த படத்திற்கும் யாரை தேர்வு செய்வார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு நாள் திருப்தியை வீட்டிற்கு அழைத்து வந்தார். அவரும் மிகவும் நன்றாக இப்படத்தில் பணியாற்றி இருக்கிறார். அவர் மென்மேலும் வளர வாழ்த்துகள். இப்படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர் நடிகைகள் அனைவருக்கும் வாழ்த்துகள்.” என்றார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், “தமிழ் சினிமாவின் விடாகண்டன், கொடா கண்டன் விஜய் ஆண்டனி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். மார்கன் படத்தின் வெற்றிக்கு வாழ்த்துகள். விஜய் ஆண்டனி அவர்களை பற்றி நான் பல முறை சொல்லியிருக்கிறேன். விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் தயாரித்த எந்த படமும் தோல்வி அடைந்ததில்லை.

விமர்சக ரீதியாக வெற்றியடையாவிட்டாலும், வணிக ரீதியாக வெற்றியடையும். தமிழ் சினிமாவில் படங்களை பிஸினஸ் செய்யும் நுட்பம் யாருக்கும் தெரியாது. ஆனால், விஜய் ஆண்டனியின் படங்கள் அனைத்தும் வியாபார ரீதியாக சிறப்பாக கையாண்டுவிடுவார். இப்படத்தின் திரையரங்கு உரிமையை தவிர மற்ற அனைத்து உரிமைகளையும் விற்றுவிட்டார் விஜய் ஆண்டனி.

நாம் அனைவரும் பார்த்து வியந்த ஒரு இயக்குனர் தான் அருண் பிரபு. இப்படத்தை சிறப்பாக இயக்கியுள்ளார். இதற்கு முன் அவர் இயக்கிய அருவி மற்றும் வாழ் படத்திலிருந்து இப்படம் மாறுபட்டு இருக்கும். இப்படத்தின் மூலம் திருப்தி அறிமுகமாகிறார் அவருக்கு வாழ்த்துகள். ஒரு முழு கமர்ஷியல் படமாக சக்தித் திருமகன் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.” என்றார்.

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசுகையில், “முதலில் விஜய் ஆண்டனி சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவருக்கு இது 25வது திரைப்படம். அவரைப் பற்றி பேசும் போது மலரும் நினைவுகள் தான் வருகிறது. நான் வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கும் போது சூளைமேடு கில் நகரில் அவர் ஸ்டுடியோ வைத்திருந்தார். ‘நெஞ்சாங் கூட்டில் நீயே நிற்கிறாய்’ என்ற பாடல் மிகவும் பிரபலமான காலகட்டம் அது. அந்த சமயத்தில் தான் நான் அவரது ஸ்டுடியோவிற்கு சென்று வாய்ப்பு கேட்டேன். அந்தப் பாட்டையே வேறு மாதிரி எழுதி கொடுங்கள் என்று எனக்கு தேர்வு வைத்தார். நானும் எழுதிக் கொடுத்தேன். அதைப் பார்த்துவிட்டு மெட்டுக்குள் வரும்படி நன்றாக எழுதி இருக்கிறீர்கள். நான் அழைக்கிறேன் என்று கூறினார். சிறிது நாட்களிலேயே ஒரு தொடருக்கு இசையமை இசையமைத்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பாடலுக்கு மெட்டு கொடுத்து எழுத சொன்னார். ‘என்னை தேடி காதல் என்னும் தூது அனுப்பு’ என்ற மெட்டுக்கு நான் எழுதிக் கொடுத்தேன். என்னோடு சேர்ந்து தேன்மொழி தாஸ் என்கிற கவிஞரும் பாடல் எழுதினார். ஆனால் அவருடைய வரிகள் ஆழமாக இருந்ததால் அவருடைய வரிகளையே எடுத்துக் கொண்டார்கள். அதன் பிறகு நான் வாய்ப்பு தேடவில்லை. நிறைய கற்றுக் கொள்ளலாம் என்று இருந்தேன். அப்போது விஜய் ஆண்டனி சார் இசையமைக்கவில்லை ஆனால் அவர் நடித்த கொலை படத்தில் இரண்டு பாடல்களை எழுதும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு ரோமியோ படத்தில் நான் எழுதிய ‘சிடு சிடு’ பாடல் நன்றாக பேசப்பட்டது.

நீண்ட நாட்களுக்கு பிறகு சாருக்கு நான் எழுதும் முதல் படம் இது. அந்த வகையில் எனக்கும் இந்த படம் ஸ்பெஷல் திரைப்படம் தான். அருண் உடைய முதல் இரண்டு படங்களை பற்றி பேச வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அருவி மற்றும் வாழ் போன்ற திரைப்படங்களை நுணுக்கமாக கவனித்தால் நாம் வாழ்கின்ற வாழ்க்கை சமூகமாகவும் அரசியலாகவும் உளவியல் ரீதியாகவும் சரி இல்லை என்று தோன்றுகின்ற படமாக இருக்கும். அதிலும் அருவி நாம் தப்பு தப்பாக வாழ்ந்து கொண்டு சமூகத்தை தவறாக சொல்கிறோம் என்று நம்மை கேள்வி கேட்கும் படமாகவும், சுட்டி காட்டுகின்ற படமாகவும் இருக்கும்.

ஒரு தனி மனிதன் சரியாக இல்லை என்றால் ஒரு சமூகம் சரியாக அமையாது என்பதை மிக அழகாக, ஆழமாக வாழ் படத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கும். இந்த இரண்டு படங்களும் பிடிக்கும் என்பதை தாண்டி நாம் தேடிக் கொண்டிருக்கும் வாழ்க்கையை முன்பும் பின்பும் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். அது நமக்கு புரியவில்லையே என்கிற ஏக்கம் இந்த இரண்டு படங்களிலும் இருந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக வாழ் படத்தை வைத்து சமூகத்தில் நாம் கலந்து ஆலோசத்திருக்க வேண்டிய படம். அந்த வரிசையில் இந்தப் படமும் நியோ பொலிட்டிக்கல் பேசும் படமாக வந்திருக்கிறது என்பது உறுதியாக தெரிகிறது. பாடல் எழுதும் போது இந்த படத்தின் கதை தெரிந்து விட்டது. அதிலும் குறிப்பாக இரண்டாவதாக வந்திருக்கும் வாகேஷின் பாடல் வரிகள் ஆகும் மெட்டாகவும் சிறப்பாக இருக்கிறது. இந்த பாடல் வரிகளை தமிழ் மொழியின் ஆளுமைகளான முருகனும் வந்திருந்ததில் பெரு மகிழ்ச்சி.

நான் எழுதிய வரிகளை பாடிய நண்பருக்கு நன்றிகள். அருணுக்குள் ஆழமான தெளிவான தெளிவான அரசியல் பார்வை இருக்கிறது அடுத்தடுத்த படங்களிலும் அதை செய்வார். இந்த படத்தை பார்த்த பிறகு, நுட்பமான விஷயங்கள் நிறைய இருக்கிறது அது பற்றி பேசலாம். அன்புத்தம்பி தின்சாவுக்கு வாழ்த்துக்கள். நாங்கள் இருவரும் இதற்கு முன்பு மனிதர்கள் படத்தில் ஒன்றாக இணைந்து பணியாற்றினோம். நாம் வாழக்கூடிய நிலத்திற்கு ஏற்ற பல திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதுதான் ஆக்கப்பூர்வமானது. மாநில திரைப்படங்கள் எப்போதும் சர்வதேச திரைப்படங்களாக இருக்கிறது என்பதை நான் நம்புகிறேன். அதை நம் தமிழ் படங்கள் கொடுத்துக் கொண்டிருப்பது பெருமையாக இருக்கிறது. புதிதாக அறிமுகமாகும் கதாநாயகியை தமிழ் சினிமா வரவேற்கிறது. மென்மேலும் வளர வாழ்த்துகள். இப்படத்தில் பணியாற்று அனைவருக்கும் வாழ்த்துகள்.” என்றார்.

ஆடை வடிவமைப்பாளர் அனுஷா மீனாக்ஷி பேசுகையில், “விஜய் ஆண்டனி சாருடன் நான் இணைந்து பணியாற்றும் 5 வது படம் இது. எனக்கு மிகவும் நெருக்கமான ஒரு படம், காரணம் இது விஜய் ஆண்டனி சாரின் 25 வது படம். இப்படத்தில் நாங்கள் சந்தோஷமாக பணியாற்றினோம். வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி,” என்றார்.

மாஸ்டர் கேசவ் பேசுகையில், “சக்தித் திருமகன் என்னுடைய இரண்டாவது படம், இப்படத்தில் நான் நடித்தது எனக்கு கிடைத்தது பெரிய வாய்ப்பாக பார்க்கிறேன். இப்படத்தின் மூலம் எனக்கு நிறைய நினைவுகள் கிடைத்துள்ளது. எனக்கு வாய்பளித்த அருண் சார் மற்றும் விஜய் ஆண்டனி சார் அவர்களுக்கு நன்றி.” என்றார்.

நாயகி திருப்தி பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம், நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். இந்த வாய்ப்பளித்த விஜய் ஆண்டனி சாருக்கு நன்றி. காஸ்டியும், லைட், கேமரா என அனைத்து திரையினரும் மிக ஒழுக்கமாக இருந்தனர். ஷெல்லி சார் இப்படத்திற்காக நிறைய உழைதிருக்கிறார். விஜய் ஆண்டனி சார் இப்படத்தின் செட்டில் என்னை சிறப்பாக கவனித்துக் கொண்டார். அருண் பிரபு சாருக்கு நன்றி.” என்றார்.

ஒளிப்பதிவாளர் ஷெல்லி காலிஸ்ட் பேசுகையில், “10 ஆண்டுகளுக்கு முன் நான் அருண் அவர்களிடம் நீ என்ன மாதிரியான படத்தை இயக்க போகிறாய் என்று கேட்டேன். அதற்கு அவர் என் படங்கள் அனைத்திலும் அரசியல் இருக்கும் என்று சொல்லியிருந்தார். அவர் வீட்டிற்கு சென்றால் தினசரி நடக்கும் அரசியல் விஷயங்களை அவர் பதிவு செய்து வைத்திருப்பார். மிக ஆழமான அரசியலை அவர் புரிந்து வைத்துள்ளார். இப்படம் சிறப்பாக வந்துள்ளது, நன்றி.” என்றார்.

இயக்குநர் அருண் பிரபு பேசுகையில்,

“பொதுவாகவே எனக்கு ஜனரஞ்சகமான அரசியல் படம் பார்க்க எனக்கு பிடிக்கும், அப்படிபட்ட படம் தான் சக்தித் திருமகன் படமும். அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடிக்கும் வகையில் இப்படம் இருக்கும். ஒரு கதையை சொல்லும்போது ஒரு பதட்டம் எப்போதுமே இருக்கும். அந்த படத்தில் ஹீரோயிசமும் இருக்கும். அதை இப்படத்தில் நான் இயக்கியுள்ளேன். அருவி படத்தில் எந்த அளவிற்கு உழைத்தோமோ அதே உழைப்பு தான் இப்படத்திலும் செய்திருக்கிறேன். இப்படத்திற்கும் உங்களின் ஆதரவு கிடைக்கும் என்று நினைக்கிறேன் நன்றி.” என்றார்.

35 ஆண்டுக்கு பிறகு தமிழில் வெளியாகும் சாமி படம் “ராகு கேது” !!

தமிழரசன் தியேட்டர் தயாரிப்பில், தமிழ்மாமணி துரை.பாலசுந்தரம் இயக்கத்தில், தமிழில் 35 வருடங்களுக்குப் பிறகு புராணக்கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் “ராகு கேது”. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

தமிழின் புகழ்மிகு இயக்குநர் திரு.A.P.நாகராஜன் அவர்களுக்கு பிறகு, நம் புராணத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. தமிழில் சாமி படங்களும் புராண படங்களும் வரவில்ல எனும் ஏக்கத்தை போக்கும் வகையில் இப்படம் ஆன்மிக ரசிகர்களை மகிழ்விக்கு அருமைமிகு படைப்பாக உருவாகியுள்ளது.

ராகுகேது உருவான வரலாறு, அவர்கள் மனித வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவை அற்புதமான கதையாக இப்படத்தில் சொல்லப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தில் நடிகர் சமுத்திரகனி சிவனாகவும், கஸ்தூரி மேடம் துர்கையாகவும், விக்னேஷ் மகாவிஷ்ணுவாகவும் நடித்துள்ளனர். மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தினை அனைத்து வயதினரும் பார்த்து ரசிக்கும் வகையில் U சான்று வழங்கப்பட்டுள்ளது.

கதை, வசனம், பாடல்கள் எழுதியுள்ளார் கலைமாமணி K.P.அறிவானந்தம். இயக்குந்ர தமிழ்மாமணி துரை.பாலசுந்தரம் இயக்கியுள்ளார். தயாரிப்பாளர் சாந்தி பாலசுந்தரம் தமிழரசன் தியேட்டர் சார்பில் தயாரிக்க, S.ஆனந்த், v.உமாதேவி இணை தயாரிப்பு செய்துள்ளனர்.

தொழில் நுட்ப குழுவில் மோகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர் பரணிதரன் பின்னணி இசையமைத்துள்ளார், கிட்டாரிஸ்ட் சதானந்தம் மூன்று பாட்டுகளுக்கு இசை அமைத்துள்ளார்,
எடிட்டிங் பணிகளை B.லெனின் மேற்கொண்டுள்ளனர்.

இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வரும் ஆகஸ்ட் மாதம் 8 தேதி வெளியாகிறது.