deccanwebtv

ஓடிடி தளங்களில் வெற்றி நடை போடும் “வாஸ்கோடகாமா”

ஆர்.ஜி கிருஷ்ணன் இயக்கத்தில் நகுல்,அர்த்தனா பின்னு,கே எஸ் ரவிக்குமார், ஆனந்த்ராஜ், வம்சி கிருஷ்ணா, முனிஸ்கான் மற்றும் பலர் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வந்து வெற்றி நடை போட்ட வாஸ்கோடகாமா திரைப்படம் தற்பொழுது பிரைம் வீடியோ மற்றும் ஆகா ஆகிய ஓடிடி தளங்களில் வெளியாகி பல லட்சம் பார்வையாளர்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது

இந்த கலியுகத்தில் இருக்கும் மனிதர்கள் அனைவரும் கெட்டவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு மத்தியில் ஒருவன் நல்லவனாக எப்படி வாழ முடியும் என்னும் ஒரு வித்தியாசமான கதை களத்தை கையில் எடுத்த இயக்குனர் அதைத் திறம்பட திரைக்கதை அமைத்து இயக்கி அதில் வெற்றியும் கண்டார் இப்பொழுது இந்த படம் ஓடிடி தளங்களிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது

“ஹிட்லர்” திரைப்பட முன் வெளியீட்டு விழா!!

“ஹிட்லர்” திரைப்படம் உலகம் முழுதும் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகிறது !!

Chendur film international தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படமான “ஹிட்லர்” திரைப்படம் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையொட்டி. படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில். படக்குழுவினர் பல விளம்பர நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர்.

இன்று தனியார் மாலில், மிகப்பெரும் மக்கள் திரள் நிரம்பியிருக்க, படக்குழுவினர் கலந்துகொள்ள, ஹிட்லர் படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் விஜய் ஆண்டனி, அங்கிருந்த மக்கள் அனைவரையும், மேடைக்கு ஒவ்வொருவராக அழைத்து, அவர்களுடன் பாடல் பாடி, நடனமாடி, அவர்களின் ஆசைகளைக் கேட்டு நிறைவேற்றினார். அங்கிருந்த 5 வயது குழந்தையுடன் அவர் சேர்ந்து பாடிய பாடலைக் கேட்டு, அங்கிருந்த மக்கள் உற்சாகத்தில் கூக்குரலிட்டு வாழ்த்தினர்.

இந்நிகழ்வினில் கலந்துகொண்ட

நடிகை ஐஸ்வர்யா தத்தா பேசியதாவது…,
உங்கள் அனைவரையும் பார்த்ததில் மகிழ்ச்சி. சென்னை வந்து 13 வருடம் ஆகிவிட்டது, நல்ல படம் பண்ணனும், நல்ல இயக்குநரோடு, நடிகரோடு நடிக்க ஆசைப்பட்டேன். அந்த வகையில் இந்தப்படம் கிடைத்தது மகிழ்ச்சி. தனா சாருக்கும், ராஜா சாருக்கும் நன்றி. நான் பார்டி போனால் விஜய் ஆண்டனியின் மஸ்காரா பாட்டுக்குத் தான் ஆடுவேன், இப்போது அவர் படத்தில் நடனமாடியிருப்பது மகிழ்ச்சி. இந்தப்படம் எல்லோருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும். தனா சார் படம் அருமையாக எடுத்துள்ளார். இப்படத்தில் எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது…
ஒரு நல்ல எண்டர்டெயினர் திரைப்படம் 27 ஆம் தேதி வருகிறது. எல்லோரும் திரையரங்கில் பார்த்து என்ஜாய் செய்யுங்கள். விஜய் ஆண்டனி, ஆக்சன், மாஸ், சொசைட்டிக்கு தேவைப்படுற மெசேஜ் எல்லாம் சேர்த்து, இந்தப்படத்தை நம்மிடம் கொண்டு வந்துள்ளார். சஞ்சய்க்கும் அவர் தந்தை ராஜாவுக்கும் இந்தப்படம் நல்ல லாபம் தரட்டும், நன்றி.

இயக்குநர் தனா பேசியதாவது…
என் படம் உணர்வுப்பூர்வமானதாக இருக்கும். ஆனால் இப்படம் கொஞ்சம் மாறுபட்ட ஆக்சன் படமாக இருக்கும். எனக்கு எல்லாவிதமான படமும் செய்ய வேண்டும் என ஆசை, அந்த வகையில் தான் இந்த ஆக்சன் படம் செய்துள்ளேன், விஜய் ஆண்டனி சாரை இதில் வித்தியாசமாகப் பார்க்கலாம். ரசிகர்களுக்குப் புதுமையான அனுபவமாக இருக்கும்.

நடிகர் விஜய் ஆண்டனி பேசியதாவது…
“இந்தப்படத்தைத் தயாரித்த நண்பர் ராஜாவுக்கு நன்றி. படத்தில் என்னுடன் நடித்த கலைஞர்கள், மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என் நன்றிகள். இந்தப்படத்தில் இயக்குநர் தனா அருமையான மெசேஜ் வைத்திருக்கிறார். ரசிகர்களுக்குப் பிடிக்கும் ஆக்சன் படமாக இப்படம் இருக்கும். தியேட்டரில் எல்லோரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

பரபரப்பு திருப்பங்களுடன் ஒரு அழகான காதலும் கலந்த திரைக்கதையில், அனைவரும் ரசிக்கும் வகையிலான, திரைப்படமாக இப்படம் இருக்கும்” என்றார்.

இப்படத்தில் விஜய் ஆண்டனி, ரியா சுமன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்கள். நீண்ட இடைவேளைக்குப்பிறகு நடிகர் சரண்ராஜ் இப்படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் கலக்கியுள்ளார். நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ளார். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குநர் தமிழ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் விவேக், மெர்வின் இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளைக் கன்னடத்தின் வெற்றிப் படமான மப்டி படத்தின் ஒளிப்பதிவாளர் நவீன்குமார் செய்துள்ளார். கலை இயக்கத்தை உதயகுமார் செய்துள்ளார். Chendur film international சார்பில் T.D.ராஜா, D.R.சஞ்சய் குமார், பிரமாண்ட பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், பட வெளியீட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது.

Automotive manufacturers Pvt  ltd [ AMPL] unveils the most awaited THE SUV : The Thar ROXX

Chennai, 19th September, 2024: Mahindra & Mahindra Ltd., India’s leading SUV manufacturer, proudly presents Thar ROXX – ‘THE’ SUV, a category disruptor set to break norms and redefine the SUV landscape in the country. With a starting price of ₹ 12.99 Lakh, the Thar ROXX embodies

the Mahindra boldness and unconventional spirit. Designed and engineered to turn heads and deliver a refined drive and powerful yet safe performance, the Thar ROXX conquers all terrains while offering an array of luxurious features.

Built on Mahindra’s All-New M_GLYDE platform, the Thar ROXX delivers an exceptionally smooth ride with crisp handling and class leading dynamics. It effortlessly blends Thar’s outdoor DNA with modern sophistication, offering a premium SUV experience that caters to those who demand the finest in every aspect of their lives. 

The Thar ROXX has been rigorously tested in extreme conditions across diverse terrains and altitudes, including the scorching sand dunes of the Thar desert at +50°C, the high altitudes of Umling La, tricky muddy surfaces in Coorg and the freezing cold of -20°C in Kaza. This extensive testing guarantees that the Thar ROXX is a robust and reliable choice for the Global Indian – people who are Indian at heart but have a global mindset.

The Thar ROXX has been launched for Chennai Customers by Automotive Manufacturers Pvt Ltd, Chennai (AMPL) on Sep 19th infront of 300+ Customer in a grand way. They are taking customer’s interest for Booking & offering Test Drives to the customers. The official Bookings Open will be from 3rd Oct for The SUV.

FPL MG Ambattur  Unveils MG Windsor, India’s 1st Intelligent CUV

  • MG Windsor starts from INR 13,49,800 (Ex-Showroom)

Chennai ,  September 22  2024: JSW MG Motor India today announced the prices for the recently launched MG Windsor, starting at INR 13,49,800 (Ex-Showroom). India’s 1st Intelligent CUV combines the comfort of a sedan and the expanse of an SUV offering a luxurious business-class experience to customers.

The CUV is offered with futuristic aerodynamic design, spacious and opulent interiors, reassuring safety, smart connectivity, driving comfort, and many hi-tech features. In addition, customers are ensured complete peace of mind through various initiatives such as a lifetime warranty on the battery for the first owner, assured 60% buyback after three years, and one-year free charging at public chargers using the eHUB by MG app. The Windsor will be available in four colour options: Starburst Black, Pearl White, Clay Beige, and Turquoise Green.

The Windsor features an AeroGlide design language, which is futuristic and transcends the concept of traditional segmentation. The interiors are opulent and luxurious with spacious Aero Lounge seats that can be reclined to 1350, coupled with the expansive Infinity View Glass Roof, adding to the business class experience. Immersive entertainment and smart connectivity features are powered by a massive 15.6” GRANDVIEW Touch Display in the central console.

MG Windsor comes with a 38 kWh Li-ion battery pack, which is IP67 certified, delivering an impressive performance of 100KW (136ps) power and 200Nm Torque through four driving modes (Eco+, Eco, Normal and Sport) that results in a 332 km  ARAI certified range on a single charge.

“கோழிப்பண்ணை செல்லதுரை” திரை விமர்சனம்

சீனுராமசாமி இயக்கத்தில் ஏகன், யோகிபாபு. பிரகிடா மற்றும் பலர் நடித்திருக்கும் திரைபடம் கோழி பண்ணை செல்லதுரை
நாயகனும் அவன் தங்கையும் சிறு வயதாக இருக்கும் போது அவர்ளுடைய தாய் உன் கள்ளகாதலுடன் ஓடிவிட, அப்பாவோ அவள் மேல் உள்ள கோபத்தில் பிள்ளைகளை அனாதையாக விட்டுவிட்டு அவனும் சென்று விட, அதே ஊரில் கோழி பண்ணை வைத்திருக்கும் யோகிபாபு அரவணைப்பில் 12 ஆண்டுகள் பாடுபட்டு வளர்ந்து தன் தங்கைக்கு திருமணம் முடித்து தானும் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று நினைக்கும் போது, ஓடி போன தாய் பைத்தியமாக வந்து நிற்க, அவளை காப்பாற்ற போகும் போது. விட்டு போன தந்தை இரண்டு கிட்னியும் செயலிழந்து ஒற்றை மகளுடன் வந்து நிற்க அவருக்கு தன் ஒரு கிட்னி தந்து காப்பாற்றி நாயகன் தியாகியாகும் கதைதான் இந்த கோழி பண்ணை செல்லதுரை.

நாயகனாக ஏகன் பல வேலைகள் செய்து தங்கையை வளர்க்கும் கதாபாத்திரம்.நிறைய தியாகத் தன்மையோடும் அமைக்கப்பட்டு இருக்கும் கதாபாத்திரம், தங்கையாக சத்யா தேவி அண்ணனே தெய்வம் என வாழ்ந்திருக்கிறார்.
பிரகிடாவிற்கு படத்தில் ஒரே ஒரு வேலைதான நாயகனை காதலிப்பது. யோகி பாபு யாருக்காக, எதற்காக இந்த படத்தில் வந்தார் என்று தெரியவில்லை. கடமைக்கு வருகிறார். நடிப்பில் எந்த மாற்றமும் இல்லை. ஜீவனும் இல்லை.
இயக்கம் சீனுராமசாமி இந்த மாதிரி ஒரு படத்தை நிச்சயம் நாம் அவரிடம் எதிர்பார்க்கவில்லை ஏமாற்றிவிட்டார. படத்தில் உள்ள காதாபாத்திரங்கள் எல்லாம் விட்டிற்கு உள்ளேயே செல்ல மாட்டேங்குது எல்லாம் வெளிலேயே பேசுகிறார்கள். பெண் பார்க்கும் காட்சி கூட வீட்டின் போர்டிகோவில் தான் பேசுகிறார்கள். படம் பயங்கர பட்ஜெட் படம் போல.
தேனி மாவட்டத்தில் நடக்கும் கதை என்று கூறிவிட்டு ஒரு காதாப்பாத்திரம் கூட வட்டார மொழி பேசவில்லை ஏனோ இயக்குநர் அதை கவணிக்கவில்லை.

இசை உயிரோட்டமாக இல்லை.

கோழி பண்ணை செல்லதுரை கதையில் பறவை காய்ச்சல் வந்தது போல் ஆகிவிட்டது.

“கடைசி உலகப்போர்” திரை விமர்சனம்

ஹிப்பாப் ஆதி தயாரிப்பு மற்றும் கதை, திரைகதை, எழுதி இயக்கி இருக்கும் படம் கடைசி உலக போர்.

கதைக்களம் 2028 ஆம் ஆண்டில் தொடங்குகிறது.தமிழகத்தில் முதலமைச்சராக நாசர் பதிவில் இருந்து வருகிறார்.பினாமியாக, இருக்கும் அவருடைய மச்சான் நட்டி நடராஜ் கூறும் அனைத்து ஐடியாக்களை நம்பி நாசர் செயல் பட்டு வருகிறார்.நட்டி நடராஜ்தான் தமிழக ஆட்சியையே உருவாக்கி இருப்பது போல தன்னை நினைத்து கொள்கிறார்.ரிபப்ளிக் நாடுகள், மற்ற நாடுகள் என இரண்டாக பிரிந்துள்ளது.இந்தியாவை கைபற்ற ரஷிய மற்றும் இதர ரிபப்ளிக் நாடுகள், மற்ற நாடுகள் என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.இந்தியாவை கைபற்ற ரஷிய மற்றும் இதர ரிபப்ளிக் நாடுகள் முயற்சித்து வருகின்றனர்.

இந்த சூழலில் கதாநாயகன் ஹிப் ஹாப் ஆதியை தமிழக முதல்வராக இருக்கும் நாசரின் மகள் காதலித்து வருகிறார்.ரிப்பப்ளிக் நாடுகள் இந்தியா மீது தாக்குதல் நடத்துகின்றனர்.தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் அனைத்து மக்களும் என்ன நடக்கிறது என்று அவதிப்படுகிறார்கள்..சென்னை மாகாணம் மொத்தமும் குண்டுகள் வீசி தரைமட்டமாக அழிக்கப்படுகிறது.

இதற்கு பிறகு என்ன ஆனது? ரிபப்ளிக் நாடு சென்னையை கைப்பற்றியதா? கைப்பற்றவில்லையா? என்பதுதான் இந்த கடைசி உலகப் போர் திரைப்படத்தின் மீதிக்கதை.

கதாநாயகனாக ஹிப் ஹாப் ஆதி அமைதியான முறையில் மிக அருமையாக அரசியல் பேசுகிறார்.காதல் காட்சிகளில் கவனம் செலுத்தாமல் ஆக்சன் காட்சிகள் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தி ரசிகர்களை கவர்கிறார்.

நாயகியாக அனகா கொடுத்த கதாபாத்திரத்தை செய்திருக்கிறார்.

நட்டி நட்ராஜ், தன்னை ஒரு கிங் மேக்கர் என்று சொல்லிக் கொண்டு ஆட்சியாளர்களை ஆட்டுவிக்கும் வேலையை நடிப்பின் மூலம் காண்பித்திருக்கிறார்.வழக்கமான பாணி தான் என்றாலும் கதாபாத்திரம் திரைப்படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.

நாசர் தனது அனுபவ நடிப்பு கொடுத்து திரைப்படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

புலிப்பாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அழகம்பெருமாள், சினிமா நடிகர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஷாரா முனீஷ்காந்த், சிங்கம்புலி, ஹரீஷ் உத்தமன், கல்யாண், தலைவாசல் விஜய், குமரவேல், இளங்கோ குமணன் ஆகியோர் கொடுத்த கதாபாத்திரத்தை மிகவும் சரியாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உடன் இணைந்து திரையில் மிகப்பெரிய அளவில் பிரமாண்டமான ஒளிப்பதிவின் மூலம் மாயாஜாலத்தை நிகழ்த்தி இருக்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம் இசையமைத்து இயக்கி தயாரித்திருக்கும் ஹிப் ஹாப் ஆதி, மிகவும் வித்தியாசமான முயற்சி மட்டும் இன்றி விபரீதமான முயற்சியும் இந்தத் திரைப்படத்தின் மூலம் எடுத்துள்ளார்.

Dr Agarwals Eye Hospital Organises 17th Edition of Kalpavriksha Annual Ophthalmology Educational Workshop

Chennai, 21 September 2024: Kalpavriksha 2024, the 17th edition of the two-day postgraduate continuing medical education (CME) program for ophthalmology students, organised annually by Dr Agarwals Eye Hospital and Eye Research Centre, the research and educational wing of the hospital, commenced today, with the participation of about 30 renowned faculty and over 250 students from across the country.

Mr. Rajesh Lakhani IAS, Chairman, Tamil Nadu Electricity Board, inaugurated the CME , in the presence of Prof. Athiya Agarwal, Director, Dr. Agarwals Group of Eye Hospital, and organising secretaries: Dr. Soundari. S, Dr. Dhivya Ashok Kumar, and Dr. Preethi Naveen from Dr Agarwals Eye Hospital.\

Modeled on a crash course for postgraduates, the program comprises expert talks in exam-related topics in ophthalmology, a wet lab session on day one and a quiz program on day two. Registered PGs can present exam cases, and the best presented clinical case will be awarded Dr. (Mrs.) T. Agarwal Award for Best Case Presentation.

In his comments, Mr. Rajesh Lakhani said, “I am honoured to inaugurate the 17th edition of Kalpavriksha. It is inspiring to see a program that offers young ophthalmology students the chance to engage with distinguished experts and gain valuable insights from their presentations on clinical cases. I am confident that this initiative will enhance the skills of the participating ophthalmologists, enabling them to provide even better care and service to the broader community and their patients.”

On the benefits of the CME, Prof. Dr. Athiya Agarwal said, “Since its inception in 2007, Kalpavriksha has established itself as a leading National Postgraduate CME Program for ophthalmology students across the country. This year, we are pleased to have over 250 students from more than 35 medical colleges and institutes participating. The program offers a valuable opportunity for students to engage with and learn from top experts in ophthalmology. A distinctive feature of this event is the engaging case presentations on the second day, where students receive direct insights and practical tips from faculty on presenting and discussing clinical cases.”

“லப்பர்” பந்து திரைவிமசர்னம்.

சாதியை சாப்பாடாகவும் கதையை ஊருகாயாகவும் வைத்து படம் எடுத்து பணம் சம்பாதிக்கும் இயக்குநர்களுக்கு மத்தியில், சாதியை ஊறுகாயாகவும் நல்ல கதை களத்தை சாப்பாடாகவும் வைத்து பரிமாறி இருக்கிறார் இயக்குநர்.

தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரீஷ் கல்யாண் அவாசிகா, சஞ்சனா மற்றும் பலர் நடத்திருக்கும் படம் லப்பர் பந்து

வேலை வெட்டிக்கு செல்லாமல் கிரிகெட் விளையாடி கொண்டு இருக்கும் ஒரு குடும்ப தலைவனுக்கும். சாதி பாட்டால் திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் , கிடைக்கும் அணிகளில் விளையாடி கொண்டிருக்கும் ஒரு இளந்தாரி பயலுக்கும் இடையே நடக்கும் ஈகோ தான் கதைகளம். படத்தில் சாதி இருந்தாலும் அதை கையாண்டிருக்கும் இயக்குனர் ஒரு நல்ல ஆரோக்கியமான திரைகதை அமைத்து இது வழக்கமான சாதி படமல்ல அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் படம் என்று தைரியமாக இயக்கி இருக்கிறார்.

கிரிகெட்டில் கெத்தாக விளையாடி கெத்து காட்டும் கெத்தாக அட்டகத்தி தினேஷ். கிரிகெட்டுக்காக ஊரை சுற்றி அதற்காக மனைவியிடம் திட்டு வாங்கி, பெட்டி பாம்பாக அடங்கும் காதல் கணவனாக, ஒரு அழகான பெண்ணுக்கு, பாசமிகு அப்பா தினேஷ். ஒரு இடத்தில் இவருக்கு எதிராக கிரிக்கெட் விளையாடி அவரது ஈகோவை சம்பாதித்து, தினேஷின் வெறுப்பில் வீழ்ந்து, ஒரு கட்டத்தில் அவருடைய மகளுடன் காதலில் விழுந்து. அவருடனேயே கிரிக்கெட் விளையாடி , காதலில் கரை சேர்வதே கதை.

தன் வயதுக்கு மீறிய நடுத்தர மனிதனாக, நாயகிக்கு அப்பாவாக தினேஷ் நடிப்பில் முத்திரை பதிக்கிறார். மனைவிக்கு பயந்து, அவர் காதலில் வீழ்ந்து மனைவி முன் ஒரு வார்த்தை பேசாமல், உடல் மொழியால் நடிப்பை அருமையாக தந்திருக்கிறார்.

அன்புவாக ஹரீஷ் கல்யாண் காதலில் ஜெயிக்கும் வேகத்தை விட, மாமனாரின் ஈகோவில் இருந்து வெளிவர படும் பாடுகளை . சிறப்பாக வெளிபடுத்தி இருக்கிறார்.

சுவாசிகா தினேஷின் மனைவியாக.பார்வையிலே நடத்திருக்கிறார். அவர் உடல் மொழி அருமையான நடிப்பை வெளிபடுத்துகிறார்.

மகளாக சஞ்சனா அப்பாவின் பாசத்திலும், காதலிலும் சிக்கி அளவான அழகான நடிப்பை வெளிபடுத்தி இருக்கிறார்.

நண்பர்களாக வரும் பால சரவணன், ஜென்சன் நடிப்பு கதையுடன் அழகை ஒன்றி வெளிபட்டிருக்கிறது.

வழக்கமான சாதி கதையாக செல்லாமல் மாமனார்,மருமகனுக்கு இடையேயான கிரிக்கெட் ஈகோவாக திரைக்கதை அமைத்திருப்பது படத்தின் மிக பெரிய பலம். இதனால் இயக்குநருக்கு குடுக்கலாம் ஒரு சபாஷ்.


லப்பர் பந்து நிச்சயம் பெளண்டரி பறக்கும்.

“நந்தன்” திரைவிமர்சனம்

இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார், ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல் மற்றும் பலர் நடித்திருக்கும் திரைபடம் நந்தன்

காலம் காலமாக எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் போட்டியின்றி ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பஞ்சாயத்து தலைவராக இருந்து வரும் வணங்கான் குடி கிராமத்தை திடீரன தனித்தொகுதியாக மாற்ற, ஏற்கனவே தலைவராக இருக்கும் பாலாஜி சக்திவேல் தன் வீட்டில் வேலை செய்யும் தலித்தை சேர்ந்த சசிகுமாரை நிற்க வைத்து தனக்கு அடிமையாக்கி தானே அதிகாரத்தில் இருக்க நினைக்கிறார்.

அது நிறைவேறியதா? இல்லை சசிகுமார் அடிமை தனத்தில் இருந்து வெளியே வந்தாரா? என்பது தான் கதை.
வணங்கான் குடி தலைவராக பாலாஜி சக்திவேல், அவரின் அடிமை கூல் பானையாக சசிகுமார்.
பொது தொகுதியாக இருக்கும் தனது ஊரை தனித்தொகுதியாக மாற்றியதும் கோபப்படும் பாலாஜி சக்திவேல், தனக்கு ஒரு அடிமை தலைவரை தேர்ந்தடுக்க காட்டும் படபடப்பு, அவன் கை மீறும் போது காட்டும் கோபம், அந்த ஊரின் நிரந்தர தலைவர் தான் மட்டுமே என்று நினைக்கும் ஆணவம் என பல்வேறு நடிப்பு பரிமாணத்தில் நிற்கிறார்.
கூல்பாணை அம்பேத்குமாராக சசிகுமார். அந்த கதாபாத்திரமாக மாற அவர் முயற்ச்சி செய்திருந்தாலும் படத்தில் ஒட்டாமலே இருக்கிறது. நடிப்பு மிகையாக தெரிகிறது. அவருடைய கதாபாத்திரம் அறிவாளியாக இல்லாமலும், முட்டாளாக காட்ட முடியாமலும் தினறுகிறார் இயக்குநர். சசிகுமார் தன் நடிப்பை மெருகேற்ற வேண்டும். கூல் பாணை மனைவியாக ஸ்ருதி பெரியசாமி நடிப்பு ஓகே ரகம். சிலகாட்சிகளில் அதிக நடிப்பும், சிலகாட்சிகளில் அளவான நடிப்பும் தந்திருக்கார்.
படத்தில் வரும் ஒரு மாப்பிள்ளை கேரக்டர் கத்திகத்தி பேசுகிறது.
இரா சரவணன் ,, பொது தொகுதி தனி தொகுதியாக மாறிஅங்கு வரும் தலித் தலைவர்களை மற்ற சாதியினர் படுத்தும் அவமானத்தை மையப்படுத்தி எடுத்திருக்கும் கதை களம் நிச்சயம் புரட்சி வெடித்திருக்க வேண்டும். ஆனால் அவர் அமைத்திருக்கும் திரைகதையில் ஒரு சுனக்கம் ஏற்படுகிறது. தலித் மக்களை காட்டினால் அவர்களை கருப்பாகவும், குளிக்கதவர்களாகவும் தான் காட்ட வேண்டும் என்பது கட்டாயமில்லை.

BDO அதிகாரியாக வரும் சமுத்திரகனி, ஊனமுற்ற அதிகாரிகள் தான் நேர்மையாக இருப்பார்கள் என்று காட்டி இருப்பது ஏன்.?


ஜிப்ரானின் இசை படத்திற்கு சற்றே பலம்.


மக்களிடம் சாதி ஒழிந்தாலும் அரசியல் தலைவர்கள் நிச்சயம் அதை ஒழிக்க விடமாட்டார்கள், எத்தனை திரைப்படம் வந்தாலும் மாறாது அதிகாரமும், அரசியலும்.

நந்தன் பெருக்கேற்ற வீரியம் அதிகமாக இருந்திருக்கலாம்.

Youneek Pro Science Enhances Sun Safety with Advanced SPF 50+ PA+++

Sunscreen and Lip Balm

Chennai, 18 th September, 2024 – National: Youneek Pro Science, an innovative digital first beauty brand,
proudly presents two innovative additions to sun care routines: a high-performance Sunscreen with SPF 50+
PA+++ and a nourishing Lip Balm with SPF 50+ PA+++. These products are designed to elevate sun
protection, combining cutting-edge science with natural ingredients to offer superior defence against the
sun’s harmful rays.
The newly formulated Youneek Pro Science Sunscreen Cream is designed for all-day wear, providing
advanced protection against sun damage. Ideal for daily use, it hydrates the skin while shielding it from
harmful UV rays with a unique blend of ingredients, including Sea Buckthorn Oil, Diethylamino
Hydroxybenzoyl Hexyl Benzoate , and specialized UV filters that also defend against blue light. This
sunscreen goes beyond typical sunblock by serving as a comprehensive skin defence system, preventing
sunburn, tanning, premature aging, and reducing fine lines and wrinkles. Furthermore, it ensures extensive
broad-spectrum UVA coverage, essential for long-term skin health. Crafted with a water-light texture, it
absorbs easily into the skin, leaving no sticky residue or white cast, and ensuring a smooth, comfortable
finish. The product is available in an attractive 50ml bottle and is priced at Rs.999/-.
Complementing the sunscreen, the Youneek Pro Science Lip Balm with SPF 50+ PA+++ is enriched with
Murumuru and Mango Butter to deliver powerful sun protection while deeply nourishing and moisturizing
the lips. It provides instant hydration, shields against sun damage, and helps reduce lip pigmentation.
Validated to exceed SPF 50+ with an equivalent protection of SPF 87.38, this lip balm offers balanced
defense against both UVA and UVB rays. The PA+++ rating ensures high-level UVA protection, crucial for
maintaining healthy lips, while its natural ingredients guarantee both safety and effectiveness. The lip balm
is available in a convenient and compact 8g pack and is priced at Rs.649/-.
With the advanced SPF 50+ PA+++ Sunscreen and nourishing Lip Balm, Youneek Pro Science continues to set
new standards in sun care. These innovative products, crafted with a blend of cutting-edge science and
natural ingredients, offer comprehensive protection and care for the skin and lips. Now available for
purchase online, these essentials are designed to meet the needs of modern consumers seeking high-
performance sun protection. Experience the ultimate defence against the sun’s harmful rays by visiting
https://youneekproscience.com/.